Wednesday, July 8, 2026

“கிறிஸ்தவ தலித்துக்கு பட்டியல் சாதி அந்தஸ்து பொருந்தாது” – பாசிஸ்டுகளின் ஊதுகுழலாக உச்சநீதிமன்றம்

மதம் மாறுவதாலேயே சாதிய அடையாளம் நீங்கி விடுவதாகச் சட்டம் கருதினால் சாதியத்தின் பிறப்பிடமே இந்து மதம்தான் என்ற உண்மையைச் சட்டம் ஒப்புக்கொள்வதாகப் பொருள். அப்படியெனில் தடை செய்யப்பட வேண்டியது சாதியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் இந்து மதம்தானே தவிர, தலித் கிறிஸ்தவர்களின் உரிமைகள் அல்ல.

பேரிடர் மேலாண்மை (திருத்த) சட்டம், 2025: மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் பாசிச நடவடிக்கை!

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் நிதிச்சுமையைக் காரணம் காட்டிப் பொறுப்பைத் தட்டிக்கழித்த மோடி அரசு, தற்போது சட்டத்தை வளைத்து நீதிமன்றத்தை மக்கள் நாடுவதற்கான வழியை அடைத்துள்ளது.இந்தப் புதிய சட்டத்திருத்தம் ‘நிவாரணம்’ என்பதை மக்களின் அடிப்படை “உரிமை” என்ற உயர்ந்த இடத்திலிருந்து, “பிச்சை” என்ற இழிநிலைக்குக் கீழிறக்குகிறது.

சிறார் நீதிச் சட்டம் – 10 ஆண்டுகள் நிறைவு: எதார்த்தம் என்ன?

சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு வறுமையை மட்டுமே காரணமாகக் கூறுவது ஆபத்தானது. இது குடிசைப் பகுதிகளில் (Slum) மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது போன்ற வகுப்புவாத கருத்துகளுக்கு வழிவகுக்கிறது. வர்க்கப் பாகுபாடு நிறைந்த இத்தகைய பார்வைகள், வேகமான நகரமயமாக்கலினால் ஏற்படும் விளைவுகளைப் புறக்கணிக்கின்றன.

கனிமச் சுரண்டலுக்குச் சலுகைகள் அறிவித்த பா.ஜ.க. பட்ஜெட்!

2025ஆம் ஆண்டே அமெரிக்க, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளின் அழுத்தத்திற்குப் பயந்து இந்திய அணுசக்தித் துறையில் தனியாரை அனுமதிக்கும் சட்டத்தை ஒன்றிய அரசு இயற்றிவிட்டது. தற்போது இந்தியாவில் அணுவுலை அமைக்கப்போகும் நிறுவனங்கள் பலனடையும் வகையில் வரிச்சலுகையும் வழங்கியுள்ளது.

மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள பிப்ரவரி 12 வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம்!

பிப்ரவரி 12 அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் எமது அமைப்பும் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் எமது சங்கத்தின் இணைப்பு மற்றும் கிளைச்சங்கங்கள் பங்கேற்கும் விதமாக வேலைநிறுத்த அறிவிப்பை அந்தந்த நிர்வாகங்களுக்கு தெரிவித்துள்ளன.

SIR உணர்த்துவது என்ன? | வேட்பாளர்களை ஒழித்து கட்ட ED,EC! | வாக்காளர்களை ஒழித்துக் கட்ட SIR

SIR உணர்த்துவது என்ன? வேட்பாளர்களை ஒழித்து கட்ட ED,EC! வாக்காளர்களை ஒழித்துக் கட்ட SIR https://youtu.be/FWb0tNIWZtU காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

பஞ்சாப்: கார்ப்பரேட் ஆதரவு வரைவு மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்!

2
டிசம்பர் 8- ஆம் தேதியன்று சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) தலைமையில் விவசாயிகள் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாநிலத்தின் மின்சார வாரியத்தின் (PSPCL) ஊழியர்களும் விவசாயிகளுடன் இணைந்து வரைவுகளின் நகல்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நான்கு தொழிலாளர் சட்டங்களைத் திரும்பப்பெறு! | ம.அ.க. கண்டனம்

தொழிலாளர்களை, கார்ப்பரேட் முதலாளிகள், காண்ட்ராக்ட் முதலாளிகள், போலீசு கொண்ட ஒரு கும்பலின் அதிகாரத்தின் கீழ் கொத்தடிமைகளாக்கும் இச்சட்டங்களை எதிர்ப்பை மீறி நடைமுறைப்படுத்திய பாசிச மோடி அரசை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

வாக்குத் திருட்டு: இந்துராஷ்டிரத்திற்குள் நியாயமான தேர்தல் சாத்தியமில்லை

இந்துராஷ்டிரத்திற்கேற்ப மறுவார்ப்பு செய்யப்பட்டுவரும் இந்த அரசுக் கட்டமைப்பிற்குள் இருந்து கொண்டும், பாசிஸ்டுகள் தேர்தலில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ள வரையிலும், நியாயமான தேர்தல் என்ற கோரிக்கை பகற்கனவே ஆகும்.

வக்ஃப் திருத்தச் சட்டம்: பாசிச கும்பலின் ‘நில ஜிகாத்’

0
குடியுரிமை திருத்தச் சட்டம், முத்தலாக் தடைச் சட்டம் ஆகியவற்றின் வரிசையிலேயே வக்ஃப் திருத்தச் சட்டத்தையும் வைத்துப் பார்க்க வேண்டும்.

பட்ஜெட் 2025: உழைக்கும் மக்களுக்கு இதில் ஏதுமில்லை | தோழர் அமிர்தா

பட்ஜெட் 2025: உழைக்கும் மக்களுக்கு இதில் ஏதுமில்லை | தோழர் அமிர்தா https://youtu.be/hP5wumON_6I காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தேர்தல் தகிடுதத்தங்களை மறைப்பதற்காகச் சட்டத்தைத் திருத்திய மோடி அரசு

தேர்தல் ஆணையம் என்பது பாசிச கும்பலால், தேர்தல் ஜனநாயகம் என்று சொல்லிக் கொள்வதற்காக ஒரு பொம்மைப் போன்றே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மக்கள் களமே பாசிஸ்டுகளை முடக்கும்! | இணைய போஸ்டர்

மக்கள் களமே பாசிஸ்டுகளை முடக்கும்! அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும், பதவிவிலக வேண்டும், நாடாளுமன்றத்தில் அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் போராடிவந்த நிலையில், ஆளும் பா.ஜ.க. கும்பல் நாடாளுமன்றத்தை திட்டமிட்டே முடக்கி குளிர்கால கூட்டத்தொடரை முடித்துவைத்துள்ளது. முன்னதாக, பா.ஜ.க. எம்.பி-க்கள் மூலம் ரவுடித்தனம் செய்து நாடாளுமன்ற வளாகத்தில் போராடவும் தடை விதித்தது. மோடியின் ஆட்சியில் சொல்லிகொள்ளப்பட்ட நாடாளுமன்ற ஜனநாயகம் அனைத்தும்...

விவசாயிகள் ரயில் முற்றுகை | புகைப்படக் கட்டுரை

பாசிச மோடி அரசிற்கு எதிராக கிசான் மஸ்தூர் மோர்சா, சம்யுக்தா கிசான் மோர்சா விவசாய சங்கங்களின் தலைமையின் கீழ் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் ஹரியானா மாநிலத்தின் ஷம்பு எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் அடுத்த கட்டமாகக் கடந்த 6, 8...

பாசிஸ்டுகளின் பாதங்களில் எதிர்க்கட்சிகளின் கொடி-மலர் | கவிதை

பாசிஸ்டுகளின் பாதங்களில் எதிர்க்கட்சிகளின் கொடி-மலர் சகித்துக் கொள்ள முடியவில்லை உங்கள் ஜனநாயகப் போராட்டங்களை! தாங்கிக் கொள்ள முடியவில்லை உங்கள் (அ)ஹிம்சைகளை! காந்தியிடம் ஆரம்பித்தது ராகுல் காந்தியிடமும் தொடர்கிறது… துரோகத்தால் நாறுகிறது உங்கள் கைகளிலுள்ள ரோஜாப்பூ! துவண்டு கிடக்கிறது உங்கள் கரங்களில் தேசியக் கொடி! கொடியினை கம்பத்திலேயே விட்டுவிடுங்கள்.. ரோஜாக்களை செடியிலேயே மலர விடுங்கள்.. பாசிசத்தின் பாதங்களில் அவைகளை சமர்ப்பிக்காதீர்கள்! நரமாமிசம் சுவைக்கும் பற்களுக்கிடையில் என்ன தேடுகிறீர்கள் கருணையா..? பாசிஸ்டுகளே முகமூடிகளை கழற்றியபின் அவர்களுக்கு ஜனநாயக சாம்பல் பூசாதீர்கள்! பாசிசம் நெஞ்சில் குத்துகின்ற காயங்களுக்கு குறைவானதல்ல.. நீங்கள் முதுகில் குத்தும் ரணங்கள்! அதானி பற்றி பேச வேண்டுமா மக்களோடு பேசுங்கள்! மணிப்பூருக்கு நீதி வேண்டுமா? மக்களோடு...

அண்மை பதிவுகள்