பாசிஸ்டுகளின் பாதங்களில் எதிர்க்கட்சிகளின் கொடி-மலர்
சகித்துக் கொள்ள முடியவில்லை
உங்கள் ஜனநாயகப் போராட்டங்களை!
தாங்கிக் கொள்ள முடியவில்லை
உங்கள் (அ)ஹிம்சைகளை!
காந்தியிடம் ஆரம்பித்தது
ராகுல் காந்தியிடமும் தொடர்கிறது…
துரோகத்தால் நாறுகிறது
உங்கள் கைகளிலுள்ள
ரோஜாப்பூ!
துவண்டு கிடக்கிறது
உங்கள் கரங்களில் தேசியக் கொடி!
கொடியினை கம்பத்திலேயே விட்டுவிடுங்கள்..
ரோஜாக்களை செடியிலேயே
மலர விடுங்கள்..
பாசிசத்தின் பாதங்களில்
அவைகளை சமர்ப்பிக்காதீர்கள்!
நரமாமிசம் சுவைக்கும்
பற்களுக்கிடையில்
என்ன தேடுகிறீர்கள்
கருணையா..?
பாசிஸ்டுகளே
முகமூடிகளை கழற்றியபின்
அவர்களுக்கு ஜனநாயக சாம்பல்
பூசாதீர்கள்!
பாசிசம் நெஞ்சில் குத்துகின்ற காயங்களுக்கு குறைவானதல்ல..
நீங்கள் முதுகில் குத்தும் ரணங்கள்!
அதானி பற்றி பேச வேண்டுமா
மக்களோடு பேசுங்கள்!
மணிப்பூருக்கு நீதி வேண்டுமா?
மக்களோடு இறங்குங்கள்!
பாசிசத்தை வீழ்த்த வேண்டுமா?
மக்களோடு கைகோருங்கள்!
நாடாளுமன்றம்…
செங்கோலை நட்டுவைத்த
இந்துராஷ்டிரத்தின் குறியீடு..
‘ஜனநாயகத்தை’ புதைத்த
அந்த கல்லறையில்
இன்னும் என்ன முறையீடு?
கொடியின்
மலரின்
பின்னே ஒளியாதீர்கள்!
நாடாளுமன்றத்தில்
பாசிச மோடியை
பேசச் சொல்லி கெஞ்சாதீர்கள்!
நாடாளுமன்றத்தை
விட்டு வெளியேறுங்கள்..
அதை பாசிஸ்டுகளுக்கே கல்லறையாக்கும்
மக்கள் போராட்டம்!
வீதியிலே பிறக்கிறது கலகம்..
மக்கள் மன்றத்தில் பாசிசம்
ஒருநாள் வீழும்!
செங்குரல்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram