த்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்கள் மறைமுகமாக அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாட்டு நெல் விவசாயிகள் சந்தேகிக்கின்றனர். தமிழ்நாட்டு விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் விதைப்பு – அறுவடை மற்றும் கொள்முதல் நடக்கும் காலங்களில் பருவம் தவறிய மழையினால் பாதிக்கப்படுகின்றனர். நேரடி கொள்முதல் நிலையத்தில் (Direct Procurement Centre DPC) போதுமான சேமிப்பு வசதிகள் இல்லாததால் நெல் மூட்டைகள் நனைந்து போகின்றன. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் (PMFBY) கீழ் கிடைக்கும் பற்றாக்குறையான தாமதமான பயிர் சேதத்திற்கான இழப்பீடு விவசாயிகளை மேலும் கடனுக்குள் தள்ளுவதாக உள்ளது.

அரசு நெல் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யாமல், தனியார் கொள்முதலை நோக்கி உந்தித் தள்ளுவதானது திரும்பப் பெறப்பட்ட வேளாண் சட்டங்களை வேறு வடிவங்களில் நடைமுறைப்படுத்துகிறார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

நெல் கொள்முதல் செய்யப்படும் முறையே விவசாயிகளுக்கு பெரும் பிரச்சனையாகத்தான் உள்ளது. கொள்முதல் செய்வதற்கான போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருப்பது, கொள்முதல் செய்வதை தாமதமாக்குவது, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை கிடங்குக்கு அனுப்புவது என அனைத்தும் விவசாயிகளை பதட்டத்திற்கு ஆளாக்குவதாகவே உள்ளது.

கடந்த அக்டோபர் இரண்டாவது வாரத்தின் போது திடீரென கொட்டி தீர்த்த மழையானது, நேரடி கொள்முதல் நிலையத்திற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த நெல்லை நினைத்துவிட்டது. பருவ மழையும் தொடங்கி விட்டதால், ஈரப்பதம் அனுமதிக்கப்பட்ட அளவிற்க்குள் இருப்பதை உறுதி செய்வதற்காக நெல்லை உலர்த்த வேண்டியுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் பிரச்சினைக்கு ஆளாகிறார்கள்.

அனுமதிக்கப்பட்ட ஈரப்பதத்தின் அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்துமாறு மத்திய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் மத்திய அரசோ அதிகபட்ச ஈரப்பதம் 19 சதவீதம்தான் என முடிவு செய்தது. ஈரப்பதம் 17 சதவீதமாக இருந்தால் சாதாரண ரக நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.2,040 எனவும், சன்ன ரகத்துக்கு ரூ.2,060 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஈரப்பதம் 17-18 சதவீதம் இருந்தால், சாதா ரகத்துக்கு ரூ.2,019.60 எனவும், சன்ன ரகத்துக்கு ரூ. 2,039.40 எனவும், ஈரப்பதம்18-19 சதவீதம் இருந்தால், சாதா ரகத்துக்கு ரூ.1,999.20 எனவும், சன்ன ரகத்துக்கு ரூ.2,018.80 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

படிக்க: மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்தும் சதி எனக்கூறி எம்.எஸ்.பி(MSP) குழுவை நிராகரித்த எஸ்.கே.எம்!

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதை நோக்கமாகக் கொண்ட, மோடி அரசால் மிகவும் மெச்சப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், 2020-21 சம்பா அறுவடை பருவத்தில் பயிர்கள் சேதமடைந்ததற்கே இன்னும் இழப்பீடு வழங்கவில்லை.

“இழப்பீட்டுத் தொகை விநியோகம் அக்டோபர் 11, 2021 அன்று தொடங்கியது. ஆனால் ஒரு வருடம் கடந்தும் இன்னும் கொடுத்து முடிக்கப்படவில்லை. இந்த வகையான தாமதத்தை விவசாயிகளால் எப்படித் தாக்குப்பிடிக்க முடியும்?” என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் (AIKS) தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் செந்தில்குமார் கூறுகிறார். சேதமடைந்த நெல் நாற்றுகளுக்கான இடுபொருள் செலவுக்கு ஏக்கருக்கு ரூ.6,038 மட்டுமே மானியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், AIKS-ன் கோரிக்கையோ ஏக்கருக்கு ரூ.25,000 ஆகும்.

“இடுபொருள் மற்றும் விவசாய கூலிக்கான செலவினங்கள் அதிகரித்ததைக் கருத்தில் கொண்டு, நாங்கள் மானியம் கோரினோம். ஆனால் அரசாங்கம் கோரிய தொகையில் 25 சதவீதத்தை மட்டுமே மானியமாக அறிவித்தது; அந்தத் தொகை கூட இன்னும் வழங்கப்படவில்லை. சேத மதிப்பீட்டிற்கான மத்திய அரசின் குழு பார்வையிட்ட பகுதிகளுக்குக் கூட இழப்பீடு சென்றடையவில்லை” என்று குமார் மேலும் கூறினார்.

“விவசாயிகள் செலுத்திய பிரீமியத்தை தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் உறிஞ்சிக்கொண்டு நல்ல இலாபம் ஈட்டுகின்றன. பல பயிர்களுக்கான பிரீமியங்களை கணக்கிடுவதில் வெளிப்படைத்தன்மையும் இல்லை.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 1.33 லட்சம் விவசாயிகள் 856 வருவாய் கிராமங்களில் இருந்து சுமார் ரூ. 17.94 கோடியை பிரீமியமாக செலுத்தியிருக்கும் நிலையில், ஏழு கிராமங்களுக்கு மட்டும் ரூ. 36 லட்சம் காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் கணக்கிடப்பட்டால், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் ஈட்டும் இலாபத்தை மதிப்பிட்டுக் கொள்ளலாம்” என்றார் அவர்.

படிக்க: வேளாண் சட்டங்கள் வாபஸ் : மோடியை பணியவைத்த விவசாயிகள் போராட்டம்!

இந்திய உணவுக் கழக செயலாளர் அண்மையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கத்தில் பேசிய போது, தனியார் திறம்பட கொள்முதல் செய்யும் போது அரசு ஏன் தலையிட வேண்டும் என்று பேசினார்.

அறுவடை செய்யப்பட்ட 1,22,22,463 டன் நெல்லில் சுமார் 42,55,135 டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது; மேலும் 70 லட்சம் நெல் விவசாயிகளில், 6,72,791 பேர் மட்டுமே நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்றுள்ளனர் என்றும், பெரும்பாலான விவசாயிகள் இன்னும் அரசாங்க கொள்முதல் செயல்முறைக்கு வெளியே உள்ளனர் என்றும் AIKS குற்றம் சாட்டுகிறது.

கொள்முதலைக் குறைத்துக் கொள்ளும் அரசின் இத்தகைய நடவடிக்கைகள் விவசாயத் துறையில் இருந்து அரசு விலகிச் செல்வதையே காட்டுகிறது. இது ரத்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்களை மறைமுகமாக மாற்று வழிகளில் நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறில்லை.


பொம்மி

செய்தி ஆதாரம்: நியூஸ் கிளிக்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க