Friday, February 7, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
681 பதிவுகள் 1 மறுமொழிகள்

உத்தரப்பிரதேசம் கும்பமேளாவில் 40 பேர் பலி! யோகி ஆட்சியின் கொடூரம்!

இவ்வளவு பெரிய நிகழ்வில் இதுபோன்ற சிறு சம்பவம் நடப்பது இயல்புதான் என்று மக்களின் இறப்பை நியாயப்படுத்திப் பேசியிருக்கிறார் உத்தரப் பிரதேசத்தின் மீன்வளத்துறை அமைச்சர் சஞ்சய் நிஷாத்.

வேங்கை வயல்: பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கும் சி.பி.சி.ஐ.டி போலீசு

வேங்கை வயல் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் தலித் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளில் போலீசு ஆதிக்க சாதி வெறியர்களின் பக்கமே செயல்படுகிறது.

டங்ஸ்டன் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்தின் வெற்றியை கொண்டாடுவோம்!

தூத்துக்குடி மண்ணையும் நீரையும் நிலத்தையும் நஞ்சாகிய வேதாந்தா நிறுவனம், இதோ சங்கம் வளர்த்த தமிழ் மண்ணில், மதுரை மண்ணில் மாபெரும் மக்கள் போராட்டத்தின் மூலம் வீழ்த்தப்பட்டிருக்கிறது.

திருப்பரங்குன்றம்: இஸ்லாமியர்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டு!

சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிக்கந்தர் தர்கா வழிபாட்டுரிமையை திமுக அரசின் போலீஸ் தடுத்து இருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

பெரம்பலூர் – வேப்பந்தட்டை தலித் இளைஞர் படுகொலை ! கொலைக்குக் காரணமான போலீசை கைது செய் !

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்ந்து வருவதும், அதற்கு எதிரான உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் தாழ்த்தப்பட்ட மக்களை சிறையில் அடைப்பது, அவர்களுக்காக போராடுகின்றவர்கள் மீது வழக்கு தொடுப்பது என்பதையே தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

டங்ஸ்டன் சுரங்கம்: போராடிய மக்கள் மீது வழக்குப்பதிந்த தி.மு.க. அரசு

டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கூறும் தமிழ்நாடு அரசு, டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக போராடிய பொதுமக்கள் 5000 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வு: தமிழ்நாடு அரசே குற்றவாளி!

அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு முதலில் தமிழ்நாடு அரசு பொறுப்பேற்க வேண்டும். இது தொடர்பாக பல்கலைக் பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அம்பேத்கரை இழிவுபடுத்திய பாசிசக் கும்பலை போராட்டத்தின் மூலம் வீழ்த்துவோம்!

அம்பேத்கரை உயர்த்திப் பிடிப்பதைப் போல நடித்து வந்தாலும், பார்ப்பன பாசிசக் கும்பலின் வன்மம் நிறைந்த உண்மை முகம் என்னவென்பது வெளிப்பட்டே தீரும் என்பதைத்தான் அமித்ஷா-வின் பேச்சு காட்டுகிறது.

திமுக அரசே! எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தை இரத்து செய்!

மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஒருபோதும் அடைய முடியாது.

கார்ப்பரேட்டுக்களுக்காக தமிழ்நாட்டைச் சூறையாடும் பாசிச பாஜக அரசு! காவல்காக்கும் திமுக அரசு!

எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்கம், காட்டுப்பள்ளித் துறைமுகம், பரந்தூர் விமான நிலைய விரிவாக்கம் என கார்ப்பரேட்டுகளின் காவலாளியாக செயல்படும் திமுக அரசு, அணுக்கனிம சுரங்கம் மற்றும் எண்ணெய் - எரிவாயு திட்டத்தை ஒருபோதும் தடுத்து நிறுத்தாது.

ஒரே நாடு! ஒரே தேர்தல்! பாசிசத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஒன்றிய அமைச்சரவை!

வழக்கம் போன்ற சடங்குத்தனமான எதிர்ப்புகள் மூலமாக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது. மாபெரும் மக்கள் போராட்டத்தை கட்டியமைத்து ஆர்எஸ்எஸ் - பாஜக; அம்பானி - அதானி பாசிச கும்பலுக்கு எதிராக மக்களை இயக்கமாக்கி பாசிச கும்பலை வீழ்த்தும் வழியில்தான் இத்திட்டத்தை முறியடிக்க முடியும்.

நெல்லை : அரசு மருத்துவமனையில் தனியார்மயத்தை புகுத்தும் திமுக கார்ப்பரேட் மாடல் அரசு!

மத்தியில் பாசிச மோடி அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது. மாநிலத்தில் திமுக அரசு தனியார்மயத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்துக் கொண்டிருக்கிறது.

பழங்குடியின மக்கள் போராளி ஸ்டேன் சுவாமி பயங்கரவாதியா?

ஆனந்த் தெல்தும்டே, சுதாபரத்வாஜ் , வரவர ராவ் போன்ற மக்களுக்காக போராடிய அறிவுஜீவிகளை சிறையில் அடைத்து மருத்துவ உதவிகள் எதுவும் வழங்காமல் சித்திரவதை செய்தது பாசிச மோடி அரசு.

யு.ஜி.சி-இன் மாணவர் விரோதமான புதிய விதிமுறைகளை திரும்பப் பெறு!

தேசியக் கல்விக் கொள்கை 2019-இன் கூறுகளை பல்வேறு மாநிலங்களிலுள்ள கல்வி நிறுவனங்களில் மறைமுகமாக நடைமுறைப்படுத்திவரும் நிலையில், இந்த அறிவிப்பானது ஒட்டுமொத்த இந்திய கல்வித்துறையையும் சீரழித்து காவி-கார்ப்பரேட் கும்பலிடம் தாரைவார்க்கும் நடவடிக்கையே ஆகும்.

பொட்டலூரணி கிராம மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்திய குமுதம் ரிப்போர்ட்டர்

உண்மையை வெளிஉலகிற்கு கொண்டுவர வேண்டிய பத்திரிகைகள் கழிவு மீன் ஆலைக்கு ஆதரவாக எழுதுவது பொட்டலூரணி மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகும்.