கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றுவோம் – கடை அடைப்பு ஆர்ப்பாட்டம் ! | மக்கள் அதிகாரம் மதுரை

சில மாதங்களுக்கு முன்பு 30 வருட ஒப்பந்தத்தை போட்ட டோல்கேட் நிறுவனம் உள்ளூர் வண்டிகளை பரிசோதனை செய்வதாக கூறிக்கொண்டு ஆவணங்களை கேட்டு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருகிறது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை இருபதுக்கும் மேற்பட்ட சங்கங்கள் இணைந்து அகற்ற கோரிக்கை வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு போராட்டத்தை நவம்பர் 22 செவ்வாய் அன்று நடத்த உள்ளனர்.

திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் நான்கு வழி சாலையில் டோல்கேட் செயல்பட்டு வருகிறது. இந்த டோல்கேட் ஆரம்பிக்கப்படும் சமயத்தில் திருமங்கலம் நகர் எல்லைப் பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இருந்ததால் அதனை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி திருமங்கலம் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனை அடுத்து திருமங்கலம் நகர் எல்லைக்கு மிகவும் அருகில் விதிகளுக்கு முரணாக கப்பலூர் டோல்கேட் அமைக்கப்பட்டு இருப்பதை ஒப்புக்கொண்டது தேசிய நெடுஞ்சாலை ஆணையம். அப்போது மக்களின் கடுமையான எதிர்ப்புகளை சமாளிக்கும் வகையில் திருமங்கலம் நகர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண் 28 பயணிக்கும் டீ கல்லுப்பட்டி பேரையூர் பகுதி வரை உள்ளூர் வாகனங்கள் இலவசமாக பயணம் செய்ய அன்றைய ஒப்பந்ததாரர் ஒத்துழைப்புடன் அனுமதி அளித்தது.

படிக்க : நவ.13 டெல்லி பேரணி: பு.ஜ.தொ.மு பயணத்தில் ஒரு மைல்கல்!

சில மாதங்களுக்கு முன்பு 30 வருட ஒப்பந்தத்தை போட்ட டோல்கேட் நிறுவனம் உள்ளூர் வண்டிகளை பரிசோதனை செய்வதாக கூறிக்கொண்டு ஆவணங்களை கேட்டு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருகிறது. தடுப்பு அரண்கள் அமைத்து ரவுடிகளை வைத்துக்கொண்டு சாதாரணமாக பேசுபவர்களையும் கேள்வி கேட்பவர்களையும் மிரட்டும் துணியில் வழிப்பறி செய்து வருகின்றது.

வாகன ஓட்டிகள், அரசு ஊழியர்கள், கார் வைத்திருப்பர் என உள்ளூர் வாசிகள் தினந்தோறும் அவமானப்படுத்தப்பட்டு மிரட்டப்பட்டு எதுவும் செய்ய முடியாத நிலையில் மன உளைச்சலில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் வருகிற 22.11.2022 செவ்வாய்க்கிழமை முழு அடைப்பு மற்றும் 20-க்கும் மேற்பட்ட சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளனர். இதில் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

தனியார் மையக் கொள்கை அமலாக்கப்பட்ட பிறகு மக்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு அடிமையிகளாக மாற்றப்பட்டு வருவதற்கு எதிரான போராட்டம் பல இடங்களில் பல வடிவங்களில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது. அப்படிப்பட்ட போராட்டங்களை ஒன்றிணைக்கும் நோக்கத்தில் இந்த தனியார்மயத்திற்கு எதிரான போராட்டம் என்ற அடிப்படையிலும் அனைத்து ஜனநாயக சக்திகளும் இதில் கலந்து கொள்ள வேண்டும்.

மக்கள் அதிகாரம், மதுரை மண்டலம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க