வான வேடிக்கையும் பிக் பாக்கெட்டும்
விதவிதமாய்
பறக்கின்றன
சுகோய்
ரபேல்
பன்னாட்டு விமானங்கள்
இந்திய மானத்தை
காற்றில் பறக்க விட்டுக் கொண்டிருக்கின்றன
கல்லா கட்ட முடிவெடுத்துவிட்டால் கார்ப்பரேட்டுகளுக்கு மானமென்ன
வெட்கம் என்ன?
வித விதமாய்
சுழல்கின்றன
வண்ணங்களை
அள்ளித் தெளிக்கின்றன
பல்லாயிரம் போலீஸ் பாதுகாப்பு
சிறு கடைகள்
மீன் கடைகள்
மீனவர்கள்
வியாபாரிகள்
புறக்கணிப்பு
உழைக்கும் மக்களைப் புறக்கணித்து
யாருக்கு
வான வேடிக்கை ?
நம்முடைய
வேதனைகளும் சோதனைகளும் தான்
அவர்களுக்கு
வான வேடிக்கை
ஒக்கி புயலில்
தத்தளித்த மீனவர்களை
காப்பாற்றாத விமானப்படைகளும்
துப்பாக்கிச் சூட்டிலிருந்து
காப்பாற்றாத
கடற்படைகளும்
மண்ணை
நீரை
வான்வெளியை
நஞ்சாக்கிய
வேதாந்தா –
கார்ப்பரேட்டிடமிருந்து
மக்களைக் காப்பாற்றாத ராணுவமும் போலீசும்
குட்டிக்கரணம்
போட்டுக்
கொண்டிருக்கின்றன
மாணவர்கள்
மீனவர்கள்
பெண்கள்
சிறு தொழில்
வியாபாரிகள்
அனைரையும்
புதைகுழியில்
தள்ளிவிட்டு
வான வேடிக்கைகளை
பார்க்கச் சொல்கிறார்கள்
காஷ்மீரின்
ஆசிபா முதல்
கதுவா உன்னாவ்
வரை எத்தனையோ
அரியலூர் நந்தினிகள்
அனைவரும்
தேசபக்த புதைகுழியில்
முனகுகிறார்கள்
காஷ்மீரமும் மணிப்பூரும்
எரிவது நிற்கவில்லை
பற்ற வைத்தவர்கள்
அல்லவா
வான வேடிக்கை காட்டுகிறார்கள் !
வரிசையாய்
நில்லுங்கள்
ஜிஎஸ்டியில் கேள்வி கேட்போரைக் காலில் விழ வைத்த கதைகளை
மறந்துவிடுங்கள்
பாரத் மாதா கி ஜெய்
என்று முழக்கமிடுங்கள்
லூப்சாலையின்
மீன் கடை நாற்றம் இனி இருக்கப் போவதில்லை
வெடி மருந்துகளின்
வாசனையில்
வாயைப் பிளந்து வானவேடிக்கையில் வாழ்வோம்
வாழ்க்கை
பிக்பாக்கெட்
அடிக்கப்பட்டதை
மறந்தபடி.
தோழர் மருது
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram