privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்சாமியார் கம்பேனி பிரைவேட் லிமிடெட்!

சாமியார் கம்பேனி பிரைவேட் லிமிடெட்!

-

 

தொழிலதிபர்களே துறவிகளாக, அடிமைத்தனமே ஆன்மீகமாக!

தொழிலதிபர்களே துறவிகளாக, அடிமைத்தனமே ஆன்மீகமாக!

இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம்ஸ் என்ற வெள்ளையர் இலண்டனில் துறைமுக நடவடிக்கைகளை ஒழுங்கு செய்து தரும் ஒரு தரகு நிறுவனத்தை நடத்தி வந்தார். ஓரிரு வருடங்களாக தொழிலில் நட்டத்தைச் சந்தித்து வந்த வில்லியம்ஸ் அதிலிருந்து மீள தனது நண்பரொருவரின் ஆலோசனைப்படி கேரளாவிலிருக்கும் ஒரு சாமியாரைச் சந்திக்க முடிவு செய்கிறார். ஆலோசனை தந்தவர் இலண்டனில் வாழும் ஒரு என்.ஆர்.ஐ மலையாளி. கேரளாவின் கோட்டக்கல்லில் சிவா சிரிங்க ஆஸ்ரமத்தை நடத்தி வந்த ஞானசைதன்யா என்ற சாமியாரை வில்லியம்ஸ் குடும்பத்துடன் சந்திக்கிறார்.

வில்லியம்ஸின் தொழில் சிக்கலுக்கு ஞானசைதன்யாவின் ஆன்மீகத் தீர்வு என்ன? வில்லியம்ஸின் மகள் அமரந்தா முற்பிறப்பில் சைதன்யாவின் மனைவியாக இருந்தவளாம். இப்பிறப்பிலும் அந்த உறவு தொடர்ந்தால்தான் வில்லியம்ஸின் பிரச்சினை தீருமாம். இதை அந்த வெள்ளையர் ஏற்றுக்கொண்டு தனது மகளை சாமியாருக்கு மணமுடிக்கிறார். சீர் வரிசையாக பதினைந்து இலட்சம் பணமும், டாடா சஃபாரி காரும் கொடுக்கப்படுகிறது. நாலைந்து மாதம் குடும்பம் நடத்திய பிறகு சாமியாரின் சித்திரவதை தாங்காமல் அந்த வெள்ளைக்காரப் பெண்மணி ஆசிரமத்திலிருந்து தப்பித்து போலீசாரிடம் புகார் கொடுக்க தற்போது சாமியார் சிறையில்!

சாமியாரின் பூர்வாசிரமப் பெருமைகள் என்ன? சுதாகரன் என்ற பெயர் கொண்ட அந்தச் சாமியார் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று மூவரைக் கொன்ற ஒரு கொலை வழக்கில் பதினான்காண்டுகள் சிறையிலிருந்து பின்னர் ஆசிரமம் ஆரம்பித்து ஞானசைதன்யாவாக அவதாரம் எடுத்தவர்.

வில்லியம்ஸின் கதையை நம்ப முடிகிறதா? சில ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நாகரீக உலகில் வாழும் ஒரு பணக்கார வெள்ளையரது குடும்பம் ஒரு பக்கா கிரிமினலிடம் ஏமாந்ததை என்னவென்று சொல்ல? இதை வெறும் முட்டாள்தனம் என்று மட்டும் புரிந்து கொள்ளக்கூடாது.

மாறிவரும் வாழ்க்கைப் பிரச்சினைகளுடன், வாழ்க்கை குறித்து மக்கள் கொண்டிருக்கும் மாறாத மயக்கத்தை இணைத்து, “ஆன்மீகத்தை அண்டினால் உடனடிப் பயன் கிடைக்கும்’ என்று நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நம்பிக்கையூட்டும்படி மக்களிடம் உபதேசிப்பதுதான் காலத்திற்கேற்பப் புதுப்பிக்கப்படும் மதத்தின் இரகசியம். மதத்தைச் சுரண்டல் லாட்டரி போல மாற்றியிருப்பதுதான் இன்றைய நவீன சாமியார்களின் மிக முக்கியமான சாதனை.

கோடிகளில் புரளும் ஆன்மீக வர்த்தகம்

பங்காரு அடிகளார்
பங்காரு அடிகளார்

இந்தியாவில் உலகமயமாக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இருபது ஆண்டுகளில் தரகு முதலாளிகள் மட்டும் செழிக்கவில்லை, பல பணக்காரச் சாமியார்களும் தலையெடுத்திருக்கிறார்கள். இவர்களின் வர்த்தக மதிப்பு நீங்கள் எதிர்பாராத அளவிலானது.

பெங்களூருக்கு அருகில் ஒரு மலையை அரசிடமிருந்து 99 வருட குத்தகைக்கு எடுத்து “வாழும் கலை’யைக் கட்டணம் வாங்கிக்கொண்டு கற்றுக்கொடுக்கும் ஸ்ரீஸ்ரீ இரவிசங்கரின் வருடாந்திர வர்த்தக மதிப்பு 400 கோடி. டெல்லியில் ஆசிரமம் வைத்து நடத்தும் ஆஸ்ரம் பாபுவின் ஆண்டு வர்த்தகம் 350 கோடி. நாடு முழுவதும் தியான நிலையங்களை நடத்திவரும் சுதன்ஷன் மகராஜூக்கு 300 கோடி.

பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் முதலானவற்றை வர்த்தக நோக்கில் நடத்திவரும் மாதா அமிர்தானந்த மாயியின் ஓராண்டு வரவு செலவு 400 கோடி. வட இந்தியாவில் யோக சிகிச்சை மற்றும் மருந்துகளை விற்பனை செய்யும் பாபா ராம்தேவின் வணிகம் 400 கோடி. பணக்காரர்களுக்காக மட்டும் சில ஆயிரங்களைக் கட்டணமாக வாங்கிக் கொண்டு அருளுரை கூட்டங்கள் நடத்தும் முராரி பாபுவுக்கு 150 கோடி. இவையெல்லாம் ஓராண்டுக்குரிய வரவு செலவு மட்டும்தான். இவர்களின் சொத்து மதிப்பு இதனினும் பல மடங்கு அதிகம். எடுத்துக்காட்டாக அமிர்தானந்த மாயியின் சொத்து மதிப்பு மட்டும் 1200 கோடியைத் தாண்டுகிறது.

பங்காரு சாமியார் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஓட்டல்கள், பல பினாமி தொழில்கள் போக, மேல்மருவத்தூர் எனும் நகரையே தனக்காக உருவாக்கிக் கொண்டவர். ஜெயந்திரனின் சங்கர மடம் மற்றும் சாயிபாபா ஆசிரமங்களின் மதிப்போ சில ஆயிரம் கோடிகளைத் தாண்டும் என்கிறார்கள். மகரிஷி மகேஷ் யோகி ஆழ்நிலை தியான மையங்கள், ரஜினீஷின் ஆசிரமம், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கிளைகள், வேதாத்திரி மகரிஷியின் குண்டலினி மையங்கள், ஜக்கி வாசுதேவ், பிரார்த்தனையிலேயே “குணமாக்கி’ நற்செய்திக் கூட்டங்கள் நடத்தும் டி.ஜி.எஸ் தினகரன் முதலானோரும் மேற்கண்ட கோடீசுவர சாமியார்களின் பட்டியலில் உள்ளவர்கள்தான்.

அமெரிக்காவில் வெள்ளையர்க ளுக்கு ஆழ்நிலை தியானமும், யோகாசனமும் கற்றுத்தரும் தீபக் தாக்கூர், இந்தியாவின் ஆன்மீகப் “பெருமையை’ மேற்குலகில் பல மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்து ஒரே நேரத்தில் ஆன்மீகவாதியாகவும், இளம் தலைமுறையின் தொழில் முனைவராகவும் விளங்குகிறார்.

ஹரித்வார் நகரில் பாபா ராம்தேவின் யோக மையத்தில் உறுப்பினராக்குவதற்கு கட்டணங்களை எழுதி மிகப்பெரிய விளம்பரப் பலகையை வைத்திருக்கிறார்கள். சாதாரண உறுப்பினர் கட்டணம் ரூபாய் 11,000, மதிப்பிற்குரிய உறுப்பினர் கட்டணம் ரூ. 21,000, சிறப்பு உறுப்பினர் கட்டணம் ரூ. 51,000, வாழ்நாள் உறுப்பினர் கட்டணம் ரூ. 1,00,000, முன்பதிவு உறுப்பினர் கட்டணம் 2.51 இலட்சம், நிறுவன உறுப்பினர் கட்டணம் 5 இலட்சம் என்று வெளிப்படையாக ஒரு நகைக்கடை விளம்பரம் போல் கூவி அழைக்கிறார்கள்.

“”எல்லாவற்றையும் இலவசமாக செய்வோமென்று நாங்கள் வாக்குறுதி ஏதும் தரவில்லை. அது சாத்தியமில்லை. வணிகரீதியில்தான் நாங்கள் இயங்க முடியும்” என்று ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் ஒத்துக்கொள்கிறார் பாபா ராம்தேவ். “”நாங்கள் ஒரு பன்னாட்டு நிறுவனம் போலத் தான் இயங்கமுடியும், எங்களை நாடி வரும் பக்தர்களுக்குரிய தரமான வசதிகளை நாங்கள் செய்ய வேண்டியிருக்கிறது” என்று வர்த்தகரீதியாகச் செயல்படுவதை நியாயப்படுத்துகிறார் ரவி சங்கர்.

வாழ்வின் நெருக்கடி சாமியார்களின் வளர்ச்சிப்படி

ஜக்கி வாசுதேவ்
ஜக்கி வாசுதேவ்

ஆன்மீக குருஜீக்களின் ஆசிரமங்கள் பன்னாட்டு நிறுவனங்களைப் போல பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பது எப்படிச் சாத்தியமாயிற்று? பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்க்கையை மெல்லவும், விரைவாகவும், இடத்திற்கேற்ப அரித்தும் அழித்தும் வரும் புதிய பொருளாதாரக் கொள்கை நடுத்தர மக்களுக்கு சில வழிகளில் தற்காலிகமாகவேனும் முன்னேற்றத்தைக் காட்டி வருகிறது. ஆயினும் இது ஒரு பாதிதான். மறுபாதியில் அந்த முன்னேற்றம் வாழ்க்கையில் புதுப்புதுச் சிக்கல்களை அன்றாடம் உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது.

செலவு பிடிக்கும் உயர் கல்வி, மருத்துவ மற்றும் காப்பீட்டுச் செலவுகள், உயர்ந்து வரும் வீட்டுக்கடன் வட்டி, வாழ்க்கைத்தரத்திற்காக வாங்க வேண்டிய வாகனக் கடன்கள் எல்லாம் சேர்ந்து அச்சுறுத்துகின்றன. ஒரு நாளில் நடைபெறும் பங்குச்சந்தையின் குறியீட்டெண் வீழ்ச்சியோ, ரியல் எஸ்டேட்டின் மதிப்புச் சரிவோ இலட்சக் கணக்கான நடுத்தர வர்க்கத்தினரின் சில ஆண்டு நிம்மதியைக் குலைக்க போதுமானது.

ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஏ.எஸ், மருத்துவபொறியியல் படிப்புகள் அரசு பதவிகள், வங்கி வேலைகள், தனியார் நிறுவன உயர் பதவிகள், அதி வருவாய் கிடைக்கும் கணினித் துறையின் முக்கியப் பதவிகள் முதலானவை எல்லாருக்கும் கிடைத்து விடுவதில்லை. ஆயிரக்கணக்கான துணை இயக்குநர்கள் துணை நடிகர்கள் மத்தியில் ஒரு சிலருக்குத்தான் வெள்ளித்திரையின் கடாட்சம் கிடைக்கும்.

எனினும் அனைவருக்குள்ளும் “வாழ்வின் உச்சத்தைத் தொட்டுவிடமுடியும்’ என்ற மாயை நீக்கமற நிரப்பப்பட்டிருக்கிறது. இந்த இலக்கு உருவாக்கும் ஆசை, ஆசை ஏற்படுத்தும் போட்டி, போட்டிக்குப் பின்னான தோல்வி… இறுதியில் சித்தத்தின் சமநிலை சீர் குலைகிறது. கிடைக்காத வாழ்க்கை மாயமானாக ஓடுகிறது. கைக்கெட்டிய வாழ்க்கையோ கறிக்கடையைச் சுற்றி வரும் நாய்போல ஏக்கத்தில் உழல்கிறது.

சமூக இயக்கத்திற்கான உற்சாகத்தைத் தரவேண்டிய ஓய்வு, பரபரப்பாய் பசி அடக்கி பிணியெழுப்பும் நொறுக்கு தீனியாகியிருக்கிறது. வாழ்வின் முன்னேற்றத்தை, பண்பாட்டை கனவு கண்டு, நனவில் படைக்கத் தூண்டவேண்டிய பொழுதுபோக்கு என்பது வக்கிரத்தின் வடிகாலாகப் பரிணமித்திருக்கிறது. மனிதனின் உழைப்பு நேரத்தை மிச்சப்படுத்தி ஓய்வு தந்து அவனது ஆளுமை பரிணமிக்க உதவ வேண்டிய நவீனத் தொழில் நுட்பமோ எதிர்த்திசையில் பயன்படுகிறது. உழைப்பின் சுமையை சகிக்கவொண்ணாதவாறு கூட்டுகிறது.

நகர வாழ்க்கை, பரபரப்பு, வேகம், போட்டி, பொறாமை, சதி, வஞ்சகம்,வெறி, வக்கிரம், இயலாமை, பதட்டம், மன அழுத்தம், மனச்சிதைவு, இரத்த அழுத்தம், முதுமையில் வரவேண்டிய சர்க்கரை நோயும் மாரடைப்பும் இளமையையே காவு கேட்பது…… என முடிவேயில்லாமல் அலைக்கழிக்கிறது வாழ்க்கை என்ற இந்த நச்சுச் சுழல். வாழ்வின் பிரச்சினை சிந்தனையில் சீர் குலைந்து, உடல் நலிவாய் வெளிப்பட்டு, “என்னை மீட்பார் யாருமில்லையா’ என்று புலம்புகிறது, குமுறுகிறது, அழுகிறது, வெடிக்கிறது, சில வேளை தற்கொலையிலோ, வேறு வகை வன்முறைகளிலோ முடிகிறது.

இருப்பினும் ஆகப் பெரும்பான்மையினர் இந்த விஷச்சூழலிலிருந்து சிறிதாகவோ, பெரிதாகவோ பணம் செலவழித்து கடைத்தேறிவிட முடியும் என்ற நம்பிக்கையை நவீன ஆன்மீக ஆளும் வர்க்கம் பரப்பி வருகிறது. நடப்பில் சாதாரணமாகவும், கனவில் அசாதாரணமாகவும் வாழும் நடுத்தர வர்க்கம் இந்த ஆன்மீகச் சந்தையின் வலையில் சிக்கிக் கொள்வதற்குக் காத்திருக்கிறது. தங்களது தனித்துவத்தை மார்க்கெட் செய்துகொள்ளும் திறமை மட்டுமே ஆன்மீகவாதிகளுக்குத் தேவைப்படுகிறது. அவர்கள் தனிநபர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக் காட்ட வேண்டியதில்லை.

சாமியார்களின் தனித்துவம் சோப்புக்கட்டிகள் பலவிதம்!

பாபா ராம்தேவ்
பாபா ராம்தேவ்

மஹரிஷி மகேஷ் யோகியின் சீடராக இருந்த ரவிசங்கர் பிரிந்து வந்து, “வாழும் கலை’ என்ற கவர்ச்சிகரமான “கான்செப்ட்’ஐ உருவாக்கி ஸ்ரீஸ்ரீ ரவி சங்கராக தனது பேரரசைப் பரவச்செய்தார். தியானம், யோகம், அறிவுத் திறன் வகுப்புக்கள் முதலானவற்றைக் கலந்து ஒரு புதிய கட்டமைப்பில் பன்னாட்டு நிறுவனங்கள் விளம்பரப்படுத்தும் புதிய சோப்புக்கட்டி போல அறிமுகப்படுத்தி வெற்றி பெற்றார். இவரது குருவான மரித்துப் போன மகேஷ் யோகி மேலை நாடுகளில் மணிக்கு சில ஆயிரங்கள் டாலர் கட்டணத்தில் ஆழ்நிலை தியானத்தைக் கற்றுக்கொடுத்து பிரபலமானார். இதே சரக்கை ஹாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவன நிர்வாகிகளுக்கு ஏற்ப விற்று, அவர்கள் மூலம் புகழ் பெற்றார் தீபக் தாக்கூர்.

ஒத்த பெயர் கொண்ட ஷிர்டி சாயி பாபாவின் மகிமையைப் பயன்படுத்திக்கொண்டு பஜனைகள் மூலமும், பல நூறு கோடி நன்கொடையின் சிறு பகுதியை தர்ம காரியங்கள் செய்தும், முக்கியமாக மாஜிக் வழியாக லிங்கங்கள், மோதிரங்கள், நகைகளை வினியோகித்தும் பெயர் பெற்றார் சாயி பாபா. இவரது சிறிய நகல்தான் தற்போது கடலூர் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் பிரேமானந்தா.

சாயி பாபாவின் சத்ய நகர் ஆசிரமத்தில் சில ஆண்டுகள் தங்கி பின்பு கேரளாவில் தனி ஆசிரம் ஆரம்பித்தவர் அமிர்தானந்த மாயி. மற்ற குருமார்களைப் போல வாய் சாமர்த்தியம் இல்லாத மாயியை அம்மன் போல அலங்காரம் செய்து, பக்தர்களைக் கட்டிப் பிடிக்கும் டெக்னிக்கைப் பயன்படுத்திப் பிரபலமடைய வைத்தார்கள். கடந்த 30 ஆண்டுகளில் மாயி அரவணைப்பால் “ஆன்மீக ரீசார்ஜ்’ செய்யப்பட்ட பக்தர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியாம்.

வட இந்தியாவில் யோகாசனத்தையும், ஆயுர்வேத மருந்துகளையும் வைத்து எய்ட்ஸைக் கூட குணப்படுத்த முடியும் என்று பிரபலமானவர் பாபா ராம்தேவ். இதை அறிவியலும், மருத்துவர்களும் உண்மையல்ல என்று நிராகரித்து விட்டாலும் மக்களை புற்றீசல் போல இழுப்பதில் ராம்தேவ் தோல்வியடையவில்லை. ஆஸ்ரம் பாபு, சுதன்ஜி மகாராஜ், மற்றும் முராரி பாபு முதலானோர் டெல்லியின் பண்ணை வீடுகளில் பணக்காரர்களுக்கு மட்டும் தலைக்கு ரூபாய் 5,000 முதல் 10,000 ரூபாய் வரை கட்டணம் வாங்கிக்கொண்டு ஆன்மீக வகுப்பு நடத்துகிறார்கள். முடிந்தபின், இதே பண்ணை வீடுகளில் மேட்டுக்குடி குலக்கொழுந்துகள் கேளிக்கைக் கூத்துக்களை நடத்துவது வழக்கம்.

90ஆம் ஆண்டு இறந்து போன ரஜனீஷ் சாமியாரின் நிறுவனம் முன்பு போல் வீச்சாக இயங்கவில்லை என்றாலும் செக்ஸ் குரு என்று செல்லமாக அழைக்கப்பட்ட ரஜனீஷீன் புத்தகங்கள், ஒலிஒளிக் குறுந்தகடுகள் பல பத்து மொழிகளில் இன்றும் கிராக்கியுடன் விற்கப்படுகின்றன. செக்ஸ், நிர்வாணம், தியானம், யோகம் முதலியவற்றைக் கலந்து பிரபலமான ரஜனீஷின் பக்தர்களில் வெளிநாட்டவர் அதிகம். வாழ்வின் வற்றாத இன்பங்களைத் தேடி அலைந்த மேலைநாட்டவருக்கு இவர் வடிகாலாகத் திகழ்ந்தார்.

நடனம், பஜனை, கிருஷ்ண வழிபாடு மற்றும் ஆச்சாரமான பார்ப்பன பண்பாட்டை முன்னிறுத்திய ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கம் 80,90களில் உச்சத்தை அடைந்தது. இவர்களுக்கும் உலகெங்கும் கிளைகள் உண்டு. இயற்கை வாழ்வு, யோகம், தியானம் முதலானவற்றை முன்னிறுத்தி ஈஷா யோக மையத்தை நடத்தி புகழ் பெற்றவர் ஜக்கி வாசுதேவ். “வாழ்க வளமுடன்’ என்ற முத்திரையுடன் பிரபலமானவர் வேதாத்ரி மகரிஷி.

மேல் மருவத்தூரின் பங்காரு சாதரணமக்களை ஈர்க்கும் வண்ணம் சிவப்பாடை, பெண்கள் பூசை, ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம், வருடம் முழுக்க சடங்குகள் என்று வளர்ந்திருக்கிறார். மேல் மருவத்தூர் சென்றால் நோய் தீரும், திருமணம் நடக்கும், வியாபாரம் செழிக்கும் என்று பல கதைகளை பக்தர்களே இலவசமாய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

வசதியான தனிநபர்களின் மன அமைதி, மகிழ்ச்சி, கலைத் தவங்கள் என்று பிரபலமானது பாண்டிச்சேரி அரவிந்த் ஆசிரமம். சங்கர மடம் பற்றி அதிகம் விளக்கத் தேவையில்லை. கல்லூரிகள், மருத்துவமனைகள் போக அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம், முதலாளிகள் முதலான மேல்மட்டத்தின் பிரச்சினைகளைத் தேர்ந்த தரகன் போல தீர்த்து வைத்து தனி சாம்ராச்சியத்தையே உருவாக்கியவர் ஜெயந்திரர்.

நற்செய்திக் கூட்டங்களில் “முடவர்கள் நடக்கிறார்கள், குருடர்கள் பார்க்கிறார்கள்’ என்று சாட்சியங்களை சொல்ல வைத்து, பெரும் மக்கள் கூட்டத்தை நம்பவைத்து பெயரெடுத்தவர் டி.ஜி.எஸ் தினகரன். தொலை பேசி எண்ணில் பிரச்சினைகளைச் சொல்லி கட்டணத்தை அனுப்பி வைத்தால் பிரார்த்தனை செய்து தீர்ப்பதற்கென்றே ஒரு பெரும் அலுவலகத்தை நடத்தி வருகிறார். பரிசுத்த ஆவியை எழுப்பி, அதை வைத்து ஒரு பல்கலைக் கழகத்தையும் சேர்த்து எழுப்பியிருக்கிறார்.

இந்தியாவில் பள்ளிக்கூடங்களை விட கோவில்களும் சாமியார்களும் அதிகம். எனவே, பட்டியலை இம்மட்டோடு நிறுத்திக் கொள்வோம். சாமியார்களில் பழைய பாணி சாமியார்களை விட நவீன பாணி சாமியார்களுக்கு மவுசு அதிகம். இருப்பினும் இரண்டு பாணிகளும் சொல்வது ஒரே மாதிரியான விசயங்களைத்தான்.

“”குரங்கு போல தவ்விச் செல்லும் மனதை கட்டுப்படுத்துங்கள், அதற்கு தியானம் செய்யுங்கள், மனதை வழிக்குக் கொண்டு வர உடலைக் கட்டுப்படுத்துங்கள், அதற்கு யோகாசனம் செய்யுங்கள், பேராசைப் படாதீர்கள், கிடைத்ததைக் கொண்டு வாழுங்கள், சைவ உணவு உண்டு, இயற்கையோடு ஒன்றி வாழுங்கள், வருவாயில் சிறு பகுதியையாவது தர்மம் செய்யுங்கள், பொறாமை, அகங்காரம், கோபம் முதலியவற்றை விட்டொழியுங்கள், செய்யும் தொழிலை ஈடுபாட்டுடன் செய்யுங்கள், உலகுடன் அன்பு எளிமை அழகுடன் உறவு கொள்ளுங்கள்”, முதலான பொத்தாம் பொதுவான விசயங்களைத்தான் அனைத்து குருமார்களும் ஓதுகின்றனர். இது போக சாமியார்களின் மகிமைகளை பக்தர்களே கண் காது மூக்கு வைத்து ஊதிப்பெருக்கிப் பிரச்சாரம் செய்வதும் இயல்பாக நடக்கிறது.

ஆன்மீக “அமைதியும்’ அறிவியல் உண்மையும்!

சாமியார் கம்பேனி பிரைவேட் லிமிடெட் !உண்மையில் பக்தர்கள் தங்களது வாழ்க்கைப் பிரச்சினைகளை மேற்கண்ட சாமியார்களின் விதவிதமான முறைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள முடியுமா? பலராலும் பூடகமாக வியந்தோதப்படும் ஆன்மீகத்தின் பொருள் என்ன? பல்வேறு முறைகளில் பயிற்சி செய்யப்படும் யோகா முறை ஒரு மனிதனுக்கு நிம்மதியைத் தருமா? நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்ட சாமியார்களின் உரைகளில் சீடர்களுக்கு தெளிவு பிறக்க வாய்ப்புள்ளதா?

“மனதைக் கட்டுப்படுத்துதல், கட்டுப்படுத்தினால் இறுதியில் பேரானந்தம்’ என்பது ஆன்மீகம் என்பதற்கு இவர்கள் தரும் இலக்கணம். மனதையே ஆன்மா, ஜீவன், உடலுக்கும் உயிருக்கும் அப்பாற்பட்டது என்றெல்லாம் கற்பித்துக்கொள்கிறார்கள். இத்தகைய அரூபமான விளக்கத்தில் உண்மையோ, பொருளோ இல்லை. அறிவியல்பூர்வமாக மனது என்பது மூளையின் செயல்பாடுகளில் ஒன்று. அதே சமயம் அதற்கென்று தனித்துவமான இடமும் உண்டு. ஆனால் அது தனியாய் பிறந்து வளர்ந்து செயல்படுவதில்லை. மனிதனின் உடற்கூறியலைக் கொண்டு குழந்தையின் மூளை இயல்பாக மனித மூளையாக உருவாகியிருந்தாலும் ஆரம்பத்தில் அது தன்மையில் விலங்குகளின் மூளையைப் போன்று சாதாரணமாகவே இருக்கிறது. புற உலகோடு கொண்டுள்ள தொடர்பால் மட்டுமே அது மனித மூளையின் செயல்பாட்டைப் பெறுகிறது.

உடலுக்கு வெளியே சுயேச்சையாக இயங்கிக் கொண்டிருக்கும் இயற்கையை, சமூகத்தை, முழு உலகைப் புரிந்து கொள்வதாலும், தொடர்பு கொண்டு வினையாற்றுவதன் வாயிலாகவும்தான் தனித்துவத்தைப் பெறுகிறது மனித மனம். சூழ்நிலையும், வாழ்நிலையும்தான் மனதின் அகத்தை வடிவைமைப்பதில் பெரும் பங்காற்றுகின்றன. உணர்ச்சிகளாலும், அறிவுத்திறனாலும், மனிதர்கள் வேறுபடுவதன் காரணமும் இதுதான்.

மனதின் தோற்றமும், இருப்பும், செயல்பாடும் இவையென்றால் அதனால் உருவாகும் பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு? மனதின் பிரச்சினை என்பது மனிதனின் பிரச்சினை; மனிதனின் பிரச்சினை என்பது அவன் வாழ்வதற்காகப் புற உலகோடு கொண்டுள்ள தவிர்க்கமுடியாத உறவினால் ஏற்படும் பிரச்சினை. இத்தகைய பிரச்சினைகளினால் மனிதனிடம் இரண்டுவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒன்று உடல் ரீதியானது. இரண்டாவது கருத்து ரீதியானது. இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தும் பிரிந்தும் வினையாற்றுகின்றன.

உடல் ரீதியாக ஏற்படும் பிரச்சினைகளில் மூளையும், அதனால் பாதிக்கப்படும் ஏனைய உடல் அங்கங்களும் அடக்கம். கருத்து ரீதியான பிரச்சினைகளை அவ்வளவு சுலபமாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஒரு குறிப்பிட்ட சமூக உறவில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் மனிதன், பிரச்சினை வரும்போது சமூகத்தில் தனது இடம் குறித்த குழப்பமும், பயமும், அடைகிறான். இது முற்றும் போது சமூகத்தோடு முரண்படத் துவங்குகிறான். முரண்படுதலின் வீரியத்திற்கேற்ப அவனது சமூக வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

ஆக மனிதனது உடல் நலமும் அல்லது மூளை நலமும், சிந்தனை முறையும் ஒத்திசைந்து இருந்தால் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று பொருள். ஆயினும் வர்க்க சமூகத்தில் இந்த ஒத்திசைவு குலைவது தவிர்க்க இயலாதது. வர்க்கப் பிளவுகளையும் நிச்சயமற்ற தன்மையையும் அதிகரிக்கும் இன்றைய உலகமயமாக்க காலம், மக்கள் ஆன்மீகத்தை நோக்கி ஓடுவதையும், சாமியார்கள் வாழ்க வளமுடன், வாழுவதே கலையென்று ஆடுவதையும் சாத்தியமாக்கியிருக்கிறது. இருப்பினும் மன நலன் மற்றும் சமூக நலன் இரண்டையும் சீரடையச் செய்வதற்குரிய பொருத்தமான மருந்துகள் சாமியார்கள் மற்றும் அவர்களது யோக முறைகளில் நிச்சயம் இல்லை. ஏன்?

வாழ்க்கைப் பிரச்சினைகளால் மனிதனும், மனதும் பாதிக்கப்படுகின்றனர் என்றால் மூளை பாதிக்கப்படுகிறது என்பதே சரி. கோபம், அச்சம், சலிப்பு, சோர்வு, விரக்தி, சோகம், பதட்டம், படபடப்பு, மன அழுத்தம், போன்றவை எல்லோருக்கும் எப்போதாவது ஏற்படக்கூடிய உணர்ச்சிகள். குறிப்பிட்ட காரணங்களால் இவை அடிக்கடி ஏற்பட்டு நாளடைவில் தொடர்ந்து நீடித்தால் மனம் மெல்லமெல்லச் சிதைவது நடக்கிறது. மனச் சிதைவின் விளைவால் மூளையில் உள்ள உயிர்ம வேதியல் சக்திகளின் சமநிலை குலைகிறது. இதன் தொடர் விளைவால் பல உடல் பிரச்சினைகளும், வாழ்க்கை மீதான விரக்தியும் ஏற்படுகிறது. இதற்குத் தீர்வென்ன?

மூளை இழந்து விட்ட சக்திகளை திரும்பப் பெறுவதன் மூலமே புண்ணாண மூளையையும், மனதையும் நேர் செய்ய முடியும். அதை மனித உடலையும், நோய்க்கூறுகளையும் அறிவியல் பூர்வமாக கற்றுக்கொண்ட ஒரு உளவியல் மருத்துவரால்தான் கண்டுபிடித்துக் குணமாக்க முடியும். மாறாக, தியானம் செய்வதன் மூலமாக, மூளை இழந்த பௌதீக ரீதியான சக்திகளைப் பெறமுடியாது.

ஏனெனில், இது வெறும் கருத்துப் பிரச்சினையல்ல. உடல் நோய்வாய்ப்படுவது என்பது பொருளின் பிரச்சினை. பொருளுக்கு கருத்து மருந்தல்ல. எளிமையமாகச் சொல்வதாக இருந்தால் தலைவலி, காய்ச்சல், வயிற்று வலி, எலும்பு முறிவு, மற்றும் எளிதில் குணப்படுத்த இயலாத எய்ட்ஸ் முதலான நோய்களுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்ளுகிறோம். இதை தியானம் செய்வதால் தீர்க்கமுடியாது. மனம் அல்லது மூளையின் பிரச்சினைகளும் அப்படித்தான்.

இருப்பினும், மனம் நோய்வாய்ப்படுவதற்கும், உடல் நோய்வாய்ப்படுவதற்கும் வேறுபாடு உண்டு. உணவின்மை, சத்துக்குறைவான உணவு, சுகாதரச் சீர்கேடுகள், நுண்கிருமிகள் முதலியவற்றால் உடல் நோய்வாய்ப்படுகிறது. ஆனால் மூளையோ, வாழ்க்கைப் பிரச்சினைகளால் குறிப்பிட்ட கருத்து நிலைக்கு தொடர்ந்து ஆட்படுவதால் சக்தியை இழந்து நோய்வாய்ப்படுகிறது.

இத்தகைய பலவீனமான மூளையால் உடலின் சமநிலை குலைந்து ஏனைய உடல் பாகங்களும் பாதிப்படைந்து, செயல்பாடு சீர்கேடு அடைகின்றது. பாதிப்படையும் மனதிற்குப் பின்னே இத்தனை உண்மைகள் இருக்கும் போது, சாமியார்கள் அடிமுட்டாள்தனமாக “குணப்படுத்துவேன்’ என்று திமிராகப் பேசுவது அயோக்கியத்தனம். நியாயமாக இவர்களை போலி மருத்துவர்கள் என்று கைது செய்து உள்ளே தள்ளுவதே சரி.

யோகா போன்ற முறைகளால் நோயைக் குணப்படுத்தமுடியும் என்பதுதான் மூட நம்பிக்கையே தவிர தன்னளவில் அவை ஒரு உடற் பயிற்சிக்குரிய நன்மையைக் கொண்டிருக்கின்றன. உடற்பயிற்சியால் ஒரு மனிதனின் உடல் நலம் பொதுவில் ஆரோக்கியமாக இருக்கும் என்பது உண்மைதான். இருப்பினும் இந்த ஆரோக்கியம் வெறும் உடற்பயிற்சியால் மட்டும் வந்து விடுவதில்லை. அது ஊட்டச் சத்து, சுகாதாரம், போதுமான ஓய்வு, உறக்கம் போன்றவையுடன் தொடர்புள்ளது. சுருக்கமாகச் சொன் னால் வசதி அல்லது வர்க்கம் சம்பந்தப்பட்டது.

அடுத்து, தியானம் என்பது மனம், அதாவது மூளையின் ஒரு பகுதிக்கு அல்லது செயல்பாட்டிற்குச் செய்யப்படும் பயிற்சியாகும். தியானத்தின் மூலம் மட்டுமல்ல, ஒரு நல்ல இசையைக் கேட்பதிலோ, ஒரு குழந்தையைக் கொஞ்சுவதிலோ, இயற்கைக் காட்சியுடன் ஒன்றுவதிலோ கூட மனம் பயிற்சியையும் ஓய்வையும் பெறமுடியும். இவை ஒவ்வொருவரின் விருப்பம், இரசனை, பண்பு, வாழ்க்கையைப் பொறுத்தது. ஆயினும் அழுத்திச் செல்லும் வாழ்க்கையின் இடைவெளிகளில் பலருக்கு இவை சாத்தியப்படுவதில்லை. அதனால் பிரச்சினை வரும்போது ஓய்வு பெறாத மனம் விரைவில் துவண்டு விடுகிறது.

மனதிற்கு அப்படிச் சிறப்பாகப் பயிற்சியையும், ஓய்வையும் தந்திருப்பவர்களுக்குக் கூட வாழ்க்கைப் பிரச்சினைகளால் மனது பாதிக்கப்படுவது நடக்கும். இதிலிருந்து மீள்வதற்கு மருத்துவமே பெருமளவுக்கு உதவும் என்பதையும் தியானம் உதவாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அதேபோல, மனதைச் சிதைத்து வதைக்கும் வாழ்க்கைப் பிரச்சினைகளால் நோயுற்ற ஒரு மனிதனை எல்லா உளவியல் மருத்துவர்களாலும் குணமாக்கி விட முடியாது. “நான்’ எனப்படும் தன்னிலையை வைத்து வாழும் மனிதனின் அடிப்படை, உண்மையில் “நாம்’ எனும் சமூக மையத்தில்தான் சுழல்கிறது. அந்த மையம் மனிதர்களது விருப்பு, வெறுப்பின்படி அமைந்ததல்ல; அது சமூக உறவுகளால் பின்னப்பட்ட ஒரு நிர்ப்பந்தம். இந்த நிர்ப்பந்தத்தின் அழுத்தம் பல இன்னல்களை ஏற்படுத்துகிறது. இதனைப் புரிந்துகொள்ளும் சமூக அறிவியல் கண்ணோட்டம் கொண்ட ஒரு உளவியல் மருத்துவரால்தான் இந்த நோயின் காரணத்தையே புரிந்து கொள்ள இயலும்.

வாழ்வின் சிக்கல்களை அருளுரைகள் தீர்க்காது!

முதலாளிகளின் சம்மேளனத்தில் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர்
முதலாளிகளின் சம்மேளனத்தில் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர்

ஆன்மீகமோ அதன் காரணங்களை அறியக்கூடாது என்பதில்தான் குறியாயிருக்கிறது. விதியும், வினைப்பயனும், மரணத்துக்குப் பிந்தைய சொர்க்கமும் நிகழ்காலத் துயரங்களுக்காக மதம் கட்டியமைத்த கற்பனையான எதிர்காலங்கள். கூடவே விதிக்கப்பட்ட வாழ்வை அல்லது அடிமைத்தனத்தைச் சகித்துக் கொள்வதற்கு மட்டுமின்றி அதனை ஆன்மீக ருசியுடன் இரசிப்பதற்கும் நவீன சாமியார்கள் கற்றுத் தருகிறார்கள். பக்தர்கள் தமக்குக் கிடைத்த வாழ்க்கையை இனிமையாக வாழுவதற்கு சாமியார்கள் தேனொழுகப் பேசுவதெல்லாம் ஆளும் வர்க்கம் அடக்கப்படும் வர்க்கத்திற்குச் செய்யும் உபதேசமேயன்றி வேறல்ல.

ஏற்றத்தாழ்வான, அநீதியான இந்தச் சமூக அமைப்பே மனிதர்களின் துன்ப துயரங்களுக்கு அடிப்படையாக அமைகின்றது. இந்த அமைப்பை மாற்றாத வரை துயரங்களுக்கும் விடிவில்லை. ஆன்மீகவாதிகளோ இதற்கு நேரெதிராக நிலவும் சமூக அமைப்பைத் தக்க வைப்பதில்தான் கருத்தாயிருக்கிறார்கள். அதனாலேயே தனி மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு வக்கற்றும் இருக்கிறார்கள்.

தங்களுக்கு வரும் கோடிக்கணக்கான நன்கொடைப் பணம் எத்தகைய வழிகளில் சம்பாதிக்கப்பட்டது என்பது குறித்து அவர்களுக்குக் கவலையில்லை. ஒருவேளை, “”நேர்மையற்ற முறையில் வரும் பணத்தையும், கருப்புப் பணத்தையும் ஏற்கமாட்டோம்” என்று அவர்கள் அறிவித்தால் அடுத்த கணமே தெருவுக்கு வந்துவிடுவார்கள். ஆன்மீக நிறுவனங்கள் உயிர்வாழ்வதன் அச்சாணியே இதுதானென்றால் தனி மனிதனின் நன்னடத்தைக்கும், நிம்மதிக்கும் எப்படி வழிகாட்ட முடியும்?

பங்குச் சந்தையில் சில சமயம் இலாபமடையும் நடுத்தர வர்க்கம், பல நேரங்களில் இந்தச் சூதாட்டத்தில் சில இலட்சங்களையும் கூடவே நிம்மதியையும் இழக்கிறது. இவர்களுக்கு சாமியார்கள் என்ன தீர்வு தர முடியும்? “”பங்குச் சந்தை என்பது சூதாட்டம், அதில் முதலீடு செய்யாதீர்கள் என்று சாமியார்கள் கூறுவதில்லையே!” “”பேராசைப் படாதீர்கள், சிறிய அளவு இலாபத்துடன் திருப்தி அடையுங்கள், முதலீடு செய்யும் போது சற்று எச்சரிக்ககையாக இருங்கள்” என்றுதானே உபதேசிக்கிறார்கள்?

தற்போது துணை நடிகை பத்மாவின் பாலியல் லீலைகளை பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாக நாறடிக்கின்றன. இவரைப் போன்ற விளம்பர உலகில் இருக்கும் பெண்களுக்கு சாமியார்கள் என்ன நிம்மதியைத் தந்துவிட முடியும்? துகிலுரித்து தோலைக் காண்பிப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கும் இவர்கள் இத்தொழிலை தலைமுழுகினால் மட்டுமே நிம்மதி பெற முடியும் என சாமியார்கள் வழிகாட்டுவதில்லை. மாறாக, பல திரை உலக நடிகர்களைப் பக்தர்களாகப் பெற்று தமது விளம்பரத்திற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்கள் மற்ற பிரிவினரைவிட ஊதியம் அதிகம் பெறுவதோடு ஊக்கத்தொகையாக பிரச்சினைகளையும் கணிசமாகப் பெறுகின்றனர். இரவுப் பணி, முடிவற்ற வேலைப் பளு, இரக்கமற்ற பணியிறக்கம், வேலை நீக்கம், பண்பாட்டுச் சீர்கேடுகள், நுகர்வு வெறி, தனிநபர் வாதம், வாழ்க்கை உறவுகள் நசித்துப் போதல், முதலியனவற்றால் அல்லலுறும் இவர்களுக்குத் தேவைப்படும் தீர்வென்ன? ஒரு துடிப்பான தொழிற்சங்கங்கத்தைக் கட்டியமைத்தால் குறைந்த பட்சமாக பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு சுயமரியாதையுடன் பணியாற்றும் சூழலை உருவாக்கிக் கொள்ளலாம். ஊழியர்களை எந்திரம் போலத் தேய்த்துவரும் முதலாளிகளை அடக்கியும் வைக்கலாம்.

ஆயினும் இந்தத் தீர்வை எந்தச் சாமியாரும் தர இயலாது. மாறாக, ஊழியர்களின் இறுக்கத்தைத் தளர்த்துவதற்காக கேளிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யும் முதலாளிகள், சாமியார்களை வைத்து யோகா, ஆன்மீக வகுப்புக்களையும் நடத்துகின்றனர். மொத்தத்தில் கேளிக்கை என்ற மதுவை ஊட்டி, ஆன்மீகம் எனும் அடிமைத்தனம் கற்றுத்தரப்படுகிறது. தொழிற்சங்கத்தைக் கட்டாமல் இருக்க அடியாட்களை நியமிக்கும் “அநாகரிகம்’ தேவைப்படாமல், தற்போது அந்தப் பணியினை ஆன்மீகவாதிகளை வைத்தே முடித்துக்கொள்கிறார்கள் முதலாளிகள்.

அம்பலமானாலும் ஆன்மீக அடியாட்கள் வீழ்வதில்லை!

ஆன்மீக அடியாட்கள்

அதனால் சாமியார்கள் எவ்வளவுதான் அம்பலப்பட்டுப் போனாலும் ஆளும் வர்க்கம் அவர்களைக் கைவிடுவதில்லை. ஜெயேந்திரனின் வண்டவாளங்கள் சந்தி சிரித்த பின்னும் ஊடகங்கள் அவரை சங்கராச்சாரியார் என்று மரியாதையுடன்தான் அழைக்கின்றன. சீடர்களை பாலியல் உறவு கொள்ளச் சொல்லி ரசித்துப் பார்ப்பதைப் பொழுதுபோக்காகக் கொண்ட ரஜனீஷ் அமெரிக்கா சென்று ரோல்ஸ்ராய்ஸ் காரில் சென்றால் சமாதி நிலை அடைவதாக 96 கார்களை வாங்கிக் குவித்தார். வரி ஏய்ப்பு, இதர மோசடிகளுக்காக அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு மீண்டும் இந்தியா வந்து செத்துப்போன ரஜனீஷின் அருளுரைகள் இன்றும் தமிழில் வெற்றிகரமாக விற்கப்படுகின்றன.

சாயிபாபா குழந்தைகளையும், இளைஞர்களையும் பாலியல் உறவுக்குப் பயன்படுத்தும் வக்கிரம் கொண்டவர் என்பதை இங்கிலாந்தின் டெய்லி டெலிகிராப் பத்திரிக்கையும், ஒரு ஆவணப்படத்தின் மூலம் டென்மார்க் அரசுத் தொலைக்காட்சியும் அம்பலப்படுத்தியிருக்கின்றன. இதன் பொருட்டே ஐ.நா.சபை சாயிபாபா ஆசிரமத்துடன் சேர்ந்து செய்ய விருந்த நலப்பணித் திட்டங்களை ரத்து செய்தது. புட்டபர்த்தியில் பல பாலியல் வக்கிரக் கொலைகளும் நடந்திருக்கின்றன. ஆனாலும் சாயிபாபா இந்திய ஊடகங்களால் இன்றும் பூஜிக்கப்படுகிறார். முன்னாள் அரசவைக் கோமாளி அப்துல் கலாம் பாபாவின் பிறந்த நாளில் கலந்து கொள்கிறார். ஐ.நா.செயலர் பதவிக்குப் போட்டியிட்ட சசி தரூர் பாபாவின் மாஜிக் மோசடிகளை அற்புதங்கள் என்று புகழ்கிறார். கருணாநிதி தன் மனைவியை பாபாவின் காலில் விழச்செய்கிறார்.

மருத்துவக் கல்லூரி சீட்டுக்கு தலா 40 இலட்சம் வாங்கும் அமிர்தானந்த மாயியின் காலில் அத்வானியும், மத்திய அமைச்சர் அந்தோணியும் விழுகிறார்கள். மாயியின் வருமான வரி ஏய்ப்புக்கு அரசே வழி செய்கிறது. வேறெங்கும் வரிசையில் நிற்க விரும்பாத பணக்காரர்கள் மாயியின் “கட்டிப்பிடி’ ஆன்மிகத்திற்காக நீண்ட வரிசையில் நிற்கிறார்கள்.

விதர்பா பகுதியில் கொத்துக்கொத்தாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளுவதற்குக் காரணம் அவர்கள் படிப்பறிவற்றவர்கள் என்று திமிராகப் பேசும் இரவி சங்கரை தகவல் தொழில் நுட்ப யுகத்தின் குரு என்று பத்திரிக்கைகள் செல்லமாக அழைக்கின்றன.

அயோத்திப் பிரச்சினையில் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் இணைந்து நின்ற ராம்விலாஸ் வேதாந்தி, பைலட்பாபா, கீர்த்தி மஹாராஜ் முதலான சாமியார்கள் கமிஷன் வாங்கிக் கொண்டு, பலகோடி ரூபாய் கருப்புப் பணத்தைக் வெள்ளைப் பணமாக மாற்றித் தரும் மோசடியை சி.என்.என்-ஐ.பி.என். தொலைக்காட்சி கையும் களவுமாக அம்பலப்படுத்தியது. ஆயினும் சங்கபரிவாரங்கள் இச்சாமியார்களைக் கைவிடவில்லை.

அம்பலமாகும் சாமியார்கள் அவ்வளவு சீக்கிரம் நீர்த்துப் போவதில்லை. ஒருவேளை இவர்கள் செல்வாக்கிழந்தாலும் புதிய சாமியார்கள் களமிறக்கப்படுவார்கள். எல்லா இன்பங்களையும் காசு கொடுத்துத் துய்க்கும் நடுத்தர வர்க்கம் ஆன்மீகத்தையும் அப்படி நுகர்வதற்குப் பழக்கி விடப்பட்டிருப்பதால் அருளாசி வழங்க நமட்டுச் சிரிப்புடன் எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறார்கள் நவீன சாமியார்கள்.

________________________________________

புதிய கலாச்சாரம், செப்டம்பர் 2007
________________________________________

  1. இந்த போலி சாமியார்களை சொத்தை முடக்கி உள்ளே தள்ளனும் அதை ஒப்புகிறேன்
    பெண்ணியம் பத்தி பேசும் வினவு சவுதியில் பெண்கள் கார் ஓட்டினால் அவர்கள் கைது செய்யபடுகின்றனர்.அதபத்தி எழுதுங்க.பாகிஸ்தான்ல மத துவேஷத்த எதிர்த்த கவர்னர் மத வேரியனுன்களால் கொல்லப்பட்டார்.அதா ஏன் சொல்லல?தஸ்லிமா நஸ்ரின் இங்குள்ள முஸ்லீம் மத வெறியர்களால் அடித்து விரட்டப்பட்டார் அத பத்தி சொல்லுங்க.சொல்ல மாட்டீங்க.ஏன்னா நீங்க பின்பற்றுவதும் அதே கருணாநிதி வழிவந்த போலி நாத்திகம்தான்.அதாவது ஹிந்து மதத்தை மட்டும் எதிர்ப்பது மற்ற மதங்களை கண்மூடி ஆதரிப்பது

    • பாசு, நீ கேட்ட எல்லா மேட்டரும் வினவுக்குள்ளேயே இருக்கு, போய் தேடிப்பாத்து படி, சும்மா எல்லா கட்டுரையிலும் இந்த ஒரே பின்னூட்டத்தை போட்டு சாவடிக்காத.

      நீ முசுலீமுக்கெதிரா என்னா எழுதினேன்னு கேள்வி கேக்குறவெனெல்லாம் மொதல்ல அவன் பொந்து மதத்துக்கு எதிரா என்னாத்த புடுங்கினாங்கன்னு சொல்லிட்டு கேக்கனும்.

      • கருணாநிதி வழிவந்த போலி நாத்திகம்தான்…

        மிக அருமையான வாதம் ராஜேஷ்…வழக்கம் போல் வினவிடம் இதற்கு பதில் இலலை..

      • பாசு, நீ கேட்ட எல்லா மேட்டரும் வினவுக்குள்ளேயே இருக்கு, போய் தேடிப்பாத்து படி////
        .
        .
        ஓங்க பதிவுலையே பதில் இருக்கு.நன்றி.தேடிப்பாக்கனும்!!அந்த நிலமையில்தான் இவுங்க நாத்திகம் இருக்கு.இஸ்லாமிய நாட்டில் நாத்திகமோ கம்யூனிசமோ பேச முடியுமா?கொன்னுடுவாங்க.மத துவேஷ சட்டம் இருக்கு.அதை எதிர்த்தா கொலைதான்.ஆக இத்தனை சுதந்திரம் இங்கதான்

        • வினவுல இருக்கு தேடிப்படின்னு சொல்லிட்டேன், தேடற அளவுக்கு கூட அறிவு இல்லேன்னா என்ன செய்ய? ஏதோ பொலம்பிட்டு போகட்டும்னு விட வேண்டீதான்

          • நானும் “தேடுகிற அளவுக்குத்தான் இருக்கு”ன்னு சொல்லிட்டேன்.அதை புரிஞ்சிக்காம பொலம்புனா பொலம்பிக்கிங்க யாரு வேணாம்னா!!

            • தேடுறதுக்குத்தானே தேடு பொறி இருக்கு. உங்க வாழ்கேல எல்லாம் கூகிள் பயன்படுத்துவதே இல்லயா, நேரடியா பங்காளி டு நாட்டாமை தானா? என்ன கொடுமை சரவணன் இது?

              • முன்ன வினவுல தேட சொன்ன .அதுக்கு நானும் தேடுற அளவுக்குத்தான் (அதாவது உண்மையில் இல்லை ன்னு பதில் சொல்லிட்டேன்)வாழைமட்ட புத்திக்கு இன்னும் எப்படி புரிய வைக்க?எத பயன்படுத்தனும்னு எனக்கு தெரியும்.பத்து வருசமா இண்டநெட் பயன்படுத்துறேன்.அடவைச தமிழ் விரோத ராஜபக்சே ஆதரவு வினாவுக்கு சொல்லு

                • படத்தை பாத்துட்டு போற தற்குற் ஈ யெல்லாம் எதுக்கு இரும்படிக்கிற எடத்துக்கு வறனும், அப்புறம் குத்துதே கொடையுதேன்னு புலம்பனும்.

                • அகமதியா, இசுலாமிய மதவெறி, இசுலாமிய சாதிவெறி, இஸ்லாமிய பெண்கள் நிலை உள்ளிட்ட அனைத்து தலைப்புகளும் வினவுல விரிவா எழுதியிருக்கு, ஆனா அதைத்தேடிப்படிக்க்கூட துப்பு இல்லாம ஒரேயடியா இல்லைன்னு பொய் சொல்ற ஆசாமி நீர். SHAME ON YOU

                  • படம் பாக்குறவன் நானில்ல.1987 ஷாஹ் பானு கேசு பத்தி பேசலாமா?ஒனக்கு தெரியாதே!!சரி உடு.இரும்படிக்கிற எடமா இது.அய்யய்யோ இது கம்யூனிச கூச்சல் போடும் இடம்னுதானே நெனச்சேன்.தப்புதான்.எனக்கு அவமானம் இல்லை.ஒட்டு போடாதே புரட்சி செய்ன்னு பிரசாரம் பண்ண வினாவை புரள்க்கநித்து மக்கள் 80 % ஒட்டு போட்டாங்களே.அவுகளுக்குதான் அசிங்கம்

                    • ///ஒனக்கு தெரியாதே!/// இத முடிவு செய்ய நீங்க யாரு. இதே புதிய கலாச்சாரத்தின் கவர் ஸ்டோரியாகவே வந்த செய்தி அது. ரெண்டாவது அது நடந்த வருசம் 86. மூனாவது இதே இசுலாமிய மதவாதிளோட சரியத் சட்டத்தை விமரிசனம் செஞ்சு 2 மாசம் முன்னால கூட வினவுல கட்டுரை வந்தது..

                      ஆப்பு வாங்கியாச்சா? நடையை கட்டு! போகும் போது பொய் சென்னதுக்கு மன்னிப்பு கேட்டு போனா நீ மனுசன்

                  • அப்புறம் நீங்கெல்லாம் வக்காலத்து வாங்கும் இசுலாமிய நாடுகளில் நாத்திகம் பேசுனா கொன்னுபுடுவாங்க.நீ பாகிஸ்தான் போய் இதை பேசு பாப்போம்.இனி ஒன்னோட மல்லுகட்ட நமக்கு இன்ட்ரஸ்ட் இல்லைநீதான் துப்புரவு திலகம் ஒப்புகுறோம்.துப்புர ஊசி சொந்த பேருல வர வக்கில்ல..

                    • //வக்காலத்து வாங்கும்///

                      இதுக்குத்தான் சொன்னேன் அம்புலிமாமா கேசுன்னு, இப்ப அதுக்கும் கீழே இருக்கும் போலிருக்கே… தேடிப்பாத்து படிக்க கூட துப்பில்லாத ஆளு கூட பேச யார்கிட்டத்தான் என்ன இருக்கும்

                  • ஆமா ராஜபக்சேவுக்கு ஆதரவாவும் வினவு இப்போ ஒரு கட்டுரை எழுதியிருக்கு.அதாவது மேற்கு நாடுகளை நம்பக்கொடாதாம்.ரசியா சீனா பாகிஸ்தான் க்யூபா எல்லாம் ராஜபக்சே சப்போர்ட்டு.அதை சொல்லலியே வினவு.மேற்கு நாடுகளை ஈழ தமிழன் நம்பக்கொடாதுன்னா மூன்றாம் நாடுகள் எதை நம்ப?வினவு பட்டியல தரலாமே!!ஈழ தமிழர் பத்தி வினவு எழுதாம இருப்பதே நல்லது.இன உணர்வு பத்தி கம்யூனிஸ்டுக்கு என்ன தெரியும்?செசென்யா மக்களை ஒடுக்கியவர்கலதானே ரசியர்கள்.

                    • //ராஜபக்சேவுக்கு ஆதரவா///

                      மேலே சொன்ன அதேதான்… கூடவே, மொதல்ல சொன்னதும்.. சொந்த புத்தியும் இல்லை சொல்புத்தியும் இல்லை.. பேசாம மண்டையில டூலெட் போர்டு போட்டுகிட்டு பிளாட்பாரத்துல உக்காந்தா, நாலு பேரு உப்பு புளி மொளகா போட்டு வச்சுக்க பயன்படுத்துவாங்க, நாலு காசும் கிடைக்கும்.

                    • தேடுங்கள். அப்பொழுது கண்டடைவீர்கள். இயேசு கிருத்து

    • ராஜேஷ் எதனால் இந்தியாவில் இந்து மதம் அதிக விமர்சனத்திற்குள்ளாகிறது என்றால் இந்தியாவில் பெரும்பான்மை மிக்க மதம் அது. அதொடில்லாமல் மக்களை மடையர்களாக்கும் மூட நம்பிக்கைகள் அதிகம் கொண்ட மதமும் அது. எல்லா மதமும் விமர்சனத்திற்குரியவை தான் அதில் மறுப்பேதுமில்லை. ஆதிக்கம் செலுத்தும் மதங்களை தான் அதிகம் விமர்சிக்க முடியும்.

      • பெண்கள் கார் ஓட்டினால் சவுக்கடி கொடுப்பது இந்து மதமா?

        இஙே அனைத்து சுகங்களையும் அனுபவிது விட்டு இன்னாட்டுக்கே எதிராக தீவிரவாத எண்ண கருத்துகளை பரப்புவது இந்து மதமா?

        வெள்ளக்கரநாயிடம் காசு வாங்கி மக்களின் ஏழ்மையைப் பயண்படுத்தி மதமாற்றம் சைய்வது இந்து மதமா?

        • ஒரு மதத்தின் ஒரு சிலரின் நடவடிக்கைகள் எப்படி அந்த மதத்தின் அங்கீரமாகும்.செக்ஸ் புத்தகமான் வேதங்ளை எடுத்து இந்து மதத்தை அடையாளம் காணுவது போல் ஒவ்வொரு மதத்தையும் அதன் மூல நூல்களை வைத்து விமர்சிக்க வேண்டும். யூ ட்யூப் ல் போய் மனித கறி திங்கும் மிருக சைவ சாமியாரை பார்த்து விட்டு பேசவும்.அடுத்து நாட்டில் கடைசியாக இருபது முப்பது குண்டு வைத்த ஆர்.எஸ்.எஸ் எந்த மதம். சொந்த நாட்டில் பிறந்து சொந்த நாட்டையே காட்டியும் கூட்டியும் கொடுத்தவர்களின் வரலாறை பார்த்து விட்டு பேசவும். தற்போது கனிமொழியுடன் இருக்கும் இந்தியாவை பாகிஸ்தானுக்கு காட்டி டொடுத்தவர் எந்த மதத்தை சேர்ந்தவர்.

          • Countires where the Muslims aren’t happy!
            ***********
            * They’re not happy in Gaza.
            * They’re not happy in Egypt.
            * They’re not happy in Libya.
            * They’re not happy in Morocco.
            * They’re not happy in Iran.
            * They’re not happy in Iraq.
            * They’re not happy in Yemen.
            * They’re not happy in Afghanistan.
            * They’re not happy in Pakistan.
            * They’re not happy in Syria.
            * They’re not happy in Lebanon.
            ************************************

            And where are they happy?
            ***
            They’re happy in England.
            They’re happy in France.
            They’re happy in Italy.
            They’re happy in Germany.
            They’re happy in Sweden.
            They’re happy in the USA.
            They’re happy in Norway.
            They’re happy in India
            They’re happy in Australia
            They’re happy in Canada

            They’re happy in every country that is not Muslim country!

            And who do they blame?
            * Not Islam.
            * Not their leadership.
            * Not themselves.

            THEY BLAME THE COUNTRIES THEY ARE HAPPY IN!!

          • வேதங்ளை செக்ஸ் புத்தககங்களுடன் ஒப்பிடும்நீ தீவிரவாத எண்ணங்களை விதைக்கும் மசூதிகளை என்னவென்ட்ரு சொல்லுவாய்?

            //யூ ட்யூப் ல் போய் மனித கறி திங்கும் மிருக சைவ சாமியாரை பார்த்து விட்டு பேசவும்.//

            இறந்த மனிதனது கறியைத்தின்பது காட்டு மிராண்டித் தனம்னா, மனிதனை வெடி குண்டு வைத்துக் கொன்று வீரன் என்று பெயர் வாங்குவது என்ன பாய்?
            கோவை குண்டு வெடிப்பில் சிரையில் இருப்பவன் எல்லாம் ஆர்.எஸ்.எஸ் ஆ??

            //சொந்த நாட்டில் பிறந்து சொந்த நாட்டையே காட்டியும் கூட்டியும் கொடுத்தவர்களின் வரலாறை பார்த்து விட்டு பேசவும்.//

            இது தான் யா காமிடி..

            • விமர்சிக்க ஓர் அடிப்படை சொல்லிகொடுத்தும் புர்யாதது போல் நடிக்கின்றாயே!. ஒரு அமைப்பை அதன் கொள்கைகள் வைத்து விமர்சிக்க கற்று கொள். எவனோ ஒரு காரோட்டி காரை சரியாக ஓட்டவில்லை என்பதால் காரே சரியில்லை என கூறும் உமது பார்வையை சரி செய்து கொள். அடுத்து காஞ்சி காமவீரன் கோவிலில் செய்த விபச்சாரத்தை வைத்து இந்து மதத்தை விமர்சனம செய்தால், அமெரிக்காவினால் மூளைச்சலவை செய்யப்பட்ட சிலரினால் நடத்தப்பட்ட் ஒரு சில மதரசாவைப்பற்றி நீ கூறுவதில் உண்மை இருக்கும். எனது முந்தைய பிண்ணூட்டம் எல்லா மதத்திலும் காட்டு மிராண்டிகள் இருக்கிறார்கள் என்பதி உனக்கு புரிய வைப்பதே.

              • //எவனோ ஒரு காரோட்டி காரை சரியாக ஓட்டவில்லை என்பதால் காரே சரியில்லை என கூறும் உமது பார்வையை சரி செய்து கொள். //

                குழந்தைத் தனமான வாதம்..

                //காஞ்சி காமவீரன் கோவிலில் செய்த விபச்சாரத்தை வைத்து இந்து மதத்தை விமர்சனம செய்தால், //

                இந்த தரங்கெட்ட விமர்சனத்திற்க்கு பதில் அளித்தால் அது மிக அசிங்கமாக இருக்கும்

                • பிளவு, இது 2011 இந்த நிமிசம் வரைக்கும் சைல்டு மேரேஜை ஒழிக்க முடியல, 100 வருசத்துக்கு முன்னால அது சர்வசாதாரணம், முகம்மது நபி வாழ்ந்த 1500 வருடங்களுக்கு முன்னர் நிலை எப்படி இருந்திருக்கும்..? விதண்டாவாதம் பண்ணாதீங்க

                • மக்களுக்கான வாழ்க்கை சட்டங்களை இறைவன் முகமது நபிக்கு ஒரே நேரத்தில் தரவில்லை, அந்த வகையில் திருமணம் குறித்த சட்டமான பருவமடைந்தவர்கள் மட்டுமே திருமண ஒப்பந்தம் செய்ய முடியும் என்ற சட்டம் வருவதற்கு முன்பே அந்த திருமணம் நடைபெற்றுவிட்டது. கேள்விக்குறி அவர்கள் கூறியது போல் அந்தகாலத்தில் அது சர்வ சாதாரணம். அதையும் அவர் ஒழித்து கட்டினார்.

                  • //சைல்டு மேரேஜை ஒழிக்க முடியல// oru child-a innoru child-ku kalyanam pannungappa… oru kelavan orun 9 vayathu ponna paaliyal palathkaram pannirukkan, atha nyayapaduthaatheenga…

                    //அந்த வகையில் திருமணம் குறித்த சட்டமான பருவமடைந்தவர்கள் மட்டுமே திருமண ஒப்பந்தம் செய்ய முடியும் என்ற சட்டம் வருவதற்கு முன்பே அந்த திருமணம் நடைபெற்றுவிட்டது//

                    thambi Siraj, ithu nadanthathu muhammadu nabi aana piraguthana? thannoda nabi oru under-age pennoda udal uravu kollamal thadukaratha vittutu allah enna pannikittu irunthaaru?

                    Intha karumam India-vulathanu nenacha… unga arabiavum ipadi naaruthey!

          • சொந்த நாட்டில் பிறந்து சொந்த நாட்டையே காட்டியும் கூட்டியும் கொடுத்தவர்களின் வரலாறை பார்த்து விட்டு பேசவும்.///
            ;
            ;
            அந்த வரலாறுல பெரும்பாலும் பாகிஸ்தாந்தானே இடம்பெறுது.என்னத்த சொல்ல!!

        • பெண்களை கணவனின் உடலோடு உயிரோடு எரித்த மதம். வேதப்புளுகுகளை ஓதி ஓதி உடல் வளர்க்க ஒரு சாதி மலம் அள்ள முதற்கொண்டு வேலை பார்த்து உடல் தேய மற்ற சாதி என்று எழுதி வைத்த மதம். ஏழ்மையிலே மக்களை வைப்பதை அங்கீகாரம் கொடுத்த மதம். அடிமை முறையை சட்டபூர்வமாக்கிய மதம். எது????

          • அந்த உடன்கட்டை ஏறுவதை இன்னிக்கு ஒழிக்கப்பட்டுவிட்டதே.ஆனா புர்கா போடுவது விவாகரத்து பண்ண மனைவிக்கு ஜீவனாம்சம் மறுப்பது (1987 ஷாஹ் பானு வழக்கு) இன்னிக்கும் காலத்தோடு ஒன்றாத மதம் எது?

            • ஒரு மானமுள்ள பெண் அவளது உடலை மறைப்பது உனக்கு எங்கு அறிக்கின்றது என புரியவில்லை!
              கடவுள் போட்ட உடன்கட்டை சட்டத்தை மனிதன் ஒழித்துவிட்டான். மனிதனுக்கு தேவையில்லாத சட்டத்தை போட்டவன் ஒரு கடவுளாக இருக்க முடியுமா, சிந்தி.
              ஜீவனாம்சம்: ஒரு மனைவி தனக்கு பிடிக்காத கணவனிடமிருந்து பிரிந்த்தும் கூட அவனைச் சார்ந்து தன் உடலாலும் மனதாலும் நொந்து விபச்சாரம் போன்றவற்றில் இறங்குவதை விட( இதன் கொடுமையை உணர உனக்கு வாய்ப்பில்லை… ஏனென்றால் அதனை சட்டப்பூர்வமாய் அனுமதித்த ஒரு மதத்தை ஆதரிக்கின்றாய்)பிடித்த அடுத்த கணவனை தேர்ந்தெடுக்க உதவுவது சாலச் சிறந்ததாகும். இந்த கட்டுரையின் நோக்கம் இதுவல்ல என்பதை புரியவும்.

              • //ஒரு மானமுள்ள பெண் அவளது உடலை மறைப்பது உனக்கு எங்கு அறிக்கின்றது என புரியவில்லை!//

                எது உடலை மறைப்பது, புர்கா முகத்தை மறைப்பது பெண்ணை அடிமையாகநினைப்பதன் அடையாளம் இன்றும் காஸ்மீரில் புர்கா அனியாத பெண்களை கொல்லவும் தாயாராக தீவிரவாதக் கூட்டம் உள்ளதே..

                //கடவுள் போட்ட உடன்கட்டை சட்டத்தை மனிதன் ஒழித்துவிட்டான். மனிதனுக்கு தேவையில்லாத சட்டத்தை போட்டவன் ஒரு கடவுளாக இருக்க முடியுமா, சிந்தி.//

                எந்தநாட்ட்ற்கு சென்றாலும் தீவிரவத எண்ணங்களைப் பரப்புவது…”1.2.1.1.1″ – முடிந்தால் இதற்க்கு பதில் சொல்லவும்

                //இதன் கொடுமையை உணர உனக்கு வாய்ப்பில்லை… ஏனென்றால் அதனை சட்டப்பூர்வமாய் அனுமதித்த ஒரு மதத்தை ஆதரிக்கின்றாய்//இது தான் கொடுமை…ஒருவன் பலதார மணம் புரிய வசதியாக தலாக் சிஸ்டம் என்ன மட்ட ரகமான சிஸ்டம் அது தான அதன் சிறப்பே..இதைப்பற்றீ எல்லாம் ..

                • இந்த கட்டுரையின் நோக்கம் நடுத்தர மக்களின் உழைப்பை ஒரு கூட்டம் ஆன்மீகம் என்ற பெயரில் சுரண்டுவது என்பதே. இருந்தாலும் உனது வீம்புக்கு பதில் கூறுகிறேன்.

                  முகத்தையும் கைகளையும் தவிர மற்ற உறுப்புகளை மறைப்பதே புர்கா எனும்போது அவன் எதற்கு கொல்கிறான் என எளிதாக புரிய கூட உனது காவி அடிமை மனம் மறுக்கிறது எனும்போது….

                  புர்க்கா தனக்கும் தன்னைச் சுற்றியிருக்கும் ஆண்சமுதாயதிற்கும் பாதுகாப்பானதா என்பதை ஒதுக்கி விட்டு,உனது வீட்டில் உள்ள பெண்கள் உடலை மறைக்காமல் சுற்றி திரிவது எப்படி சுதந்திரம் என நீ நினைக்கின்றாயோ அது போல் மறைப்பதும் ஒரு சுதந்திரம் என நினைக்க மறுப்பது ஏன்?
                  1.2.1.1.1 க்கான பதில், வினவை படிக்கும் எவரும் எளிதில் புரியக்கூடிய ஏகாதிபத்தியம் மதத்தை விட வியாபாரத்தையே அதிகமாக நோக்கும் (வியாட்நாம், வட கொரியா சாட்சி)என்பதை கூட விளங்காதது வியப்பை தறுகிறது.

                  எந்த மதமும் தாரத்தின் எண்ணிக்கைப் பற்றி கூறாத்போது இஸ்லாம் “ஒன்று தான் சிறந்தது ஆணால் தேவை எனில் (தற்போது இலங்கையில் உள்ளவாறு) விபச்சாரத்தை நாடாமல் (பார்ர்க்க தமிழ் சர்கல்) பல தாரம் அனுமதிக்கப்பட்டுள்ளது” என கூறுவதியும் தலாக் பெண்களுக்கும் சுதந்திரம் உண்டு என கூறுவதும் உனது ஒரு சார்பு மனம் ஏற்காதது ஏன்?.

                  உனக்கு திறமை இருந்தால் தமிழகத்தில் எந்த இனம் அதிகாக பலதார மணம் புரிகிறது என் ஒரு சர்வே வெளியிடுவும்.

                  மீண்டும் இந்த கட்டுரையின் நோக்கம் இதுவல்ல.

                  • //முகத்தையும் கைகளையும் தவிர மற்ற உறுப்புகளை மறைப்பதே புர்கா எனும்போது அவன் எதற்கு கொல்கிறான் என எளிதாக புரிய கூட உனது காவி அடிமை மனம் மறுக்கிறது எனும்போது….//
                    அடப் பாவி முகத்தையும் மறைப்பது தான் புர்கா இன்னமும் பெண்ணை அடிமையாக்நினைப்பதன் அடையாளமே புர்கா..//அவன் எதற்கு கொல்கிறான்// அப்ப புர்கா அணியாவிடில் கொல்வதுநியாயமே என்னும் உன் வாதமே தீவிரவாதம் பழமைவாதம்+மதவாதம்+அடிப்படைவாதம்= தீவிரவாதம்
                    //னது வீட்டில் உள்ள பெண்கள் உடலை மறைக்காமல் சுற்றி திரிவது எப்படி சுதந்திரம் என நீ நினைக்கின்றாயோ அது போல் மறைப்பதும் ஒரு சுதந்திரம் என நினைக்க மறுப்பது ஏன்?//
                    அடுத்த வீட்டுப் பெண்ணை அசிஙகமாகப் பேசுவது உன் குணம் இதனால் எங்கள் மணம் காயமடையப் போவதில்லை…
                    //எந்த மதமும் தாரத்தின் எண்ணிக்கைப் பற்றி கூறாத்போது இஸ்லாம் “ஒன்று தான் சிறந்தது ஆணால் தேவை எனில் (தற்போது இலங்கையில் உள்ளவாறு) விபச்சாரத்தை நாடாமல் (பார்ர்க்க தமிழ் சர்கல்) பல தாரம் அனுமதிக்கப்பட்டுள்ளது” என கூறுவதியும் தலாக் பெண்களுக்கும் சுதந்திரம் உண்டு என கூறுவதும் உனது ஒரு சார்பு மனம் ஏற்காதது ஏன்?.//
                    டேய் தீச்சட்டித் தலையா உருப்படியா வாதாடனும் இல்லேனா வாய மூடிகிட்டு இருக்கனும்…ஒசாமா பின்லாடன் முதல்நம்ம உள்ளூர் பின் லாடன் வரை அனைவருக்கும் 9 பொண்டாட்டி இதுல இஸ்லாம் ஒன்ட்ரு தான் சிறந்ததாம்

                    • [obscured] ஒரு மதத்தின் அடிப்படை என்னெவென்றுகூட தெரியாத உன்னிடம் வாதாடுவதே நேர விரயம். ஒசாமா என்ன ஒரு மதத்தின் கொள்கை குன்றா? அவர் எதோ மூளைச் சலவை செய்யப்பட்டு நாசத்தில் ஈடுபடும் ஒருவரே அன்றி அந்த மதத்தின் கொள்கை புத்தகம் கிடையாது.

                      உடலை மறைக்காமல் திரிவது அசிங்கம் என ஒத்துக்கொண்டது சந்தோசமே.

                      இனி இஸ்லாத்தின் கொள்கைகளை விமர்சனம் செய்தால் மட்டுமே உனக்கு பதில் அதை தவிர்த்து இவன் இப்படி அவன் அப்படி என முட்டாள் தனமான வாதங்களுக்கு பதிலளிப்பதே தவறு என நினைக்கின்றேன். பை…….

      • சரி.இஸ்லாம் பெரும்பாண்மையா இருக்கும் பாகிஸ்தானில் ஷியா சன்னி அகமதியா சிந்தின்னு தங்களுக்கு பிரிஞ்சி அடிச்சிகிறாங்க.அங்க அதை பத்தி எழுதுனா கொன்னுடுவாங்க.எல்லா நாடும் இந்தியா இல்லை.கடவுள் மறுப்பை இஸ்லாமிய நாட்டில் பேசினாலே கொன்னுடுவாங்க.அதான் பாகிஸ்தானில் கம்யூநிச்டால் மேஅல் வரமுடியல.
        அப்புறம் மற்ற மதங்கள் மக்களை புத்திசாலியாவா அக்குது?இல்லையே

        • ராஜேஷ், ஆதிக்கம் செலுத்தும் மதங்கள் மட்டுமல்ல, மனிதர்களும் விமர்சனத்திற்குட்பட்டவர்களே! அப்படி செய்யவில்லையெனில் மனித இனம் இறுதி வரை முட்டாள்களாக மட்டுமே இருப்பர். எல்லா மதங்களும் விமர்சனத்திற்குரியவையே! இதில் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் இந்து மத சாமியார்களால் தான் இங்கு பிரச்சினை. இதே வினவில் பூண்டி கல்லூரி பாதிரியார் குறித்தும் எழுதப் பட்டிருக்கிறது. அனைத்து மதங்களும் விமர்சிக்கப் பட்டிருக்கிறது.

    • இங்கு இருந்து கொண்டு இங்குள்ள பிரச்சனையைதான் முதலில் பேச முடியும். மூடநம்பிக்கைகள் இல்லாத மதங்களே இல்லை. புத்தமதம் கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் சமூக ஏற்றத்தாழ்வுகளை தனது ஆதாரக்கொள்கையாகக் கொண்ட மதம் இந்த இந்து மதம். முதலில் இதை வெட்டி வீழ்த்துவோம். பின்னர் மற்றதை பற்றி யோசனை செய்வோம்

      • ஷியா சன்னி அகமதியா பிரிவு இஸ்லாத்தில் இல்லையா?அகமதியாக்களின் பிணங்களை தங்கள் சுடுகாட்டில் புதைக்க விடாத ஷியா சன்னி பிரிவினர் இன்றும் உள்ளனர்.

        • பிரிவினைகள் இருக்கலாம். ஏற்றத்தாழ்வுகள் கிடையாது. சமூகம் இவ்வாறு ஏற்றத்தாழ்வுகளுடனேயே இருக்க வேண்டும் இல்லையென்றால்நான் மறுபடி மறுபடி பிறந்து அதைநிலை நாட்டுவேன் என்று உங்கள் கடவுளே கூறியிருக்கிறார். சம்புக வதம் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா. அப்படிப்பட்ட மதமும் அப்படிப்பட்ட கடவுளும் தேவைதானா என்று உங்கள் மனசாட்சியை கேட்டுக்கொள்ளுங்கள்

    • Rajesh, Whether i like it or not, i belong to Hindu religion, so i have right to question this religion. Why don’t you try to clean yourself and instead you say there are people who are using shit as perfume.

      Compare Vivekananda with these bull shit people, who is true, Vinavu is asking us to be beware of these bullshit people. its up to you how you take this.

    • அறிவியலா ஆன்மீகமா — என்று கட்டுரை மிக அருமையான கருத்தை முன்வைக்குது, அதை விட்டுட்டு இந்த இந்து மத கோஷ்டியெல்லாம் ஏன் முசுலீம்களை திட்டி எழுதறாங்க? நியாயப்படி அவங்க ஆன்மீகமே சிறந்ததுன்னு விவாதிச்சாதானே சரி. ஒரு வேளை அவங்க ஆன்மீகம் ஒரு காலிப்பெருங்காய டப்பான்னு அவிங்களுக்கே புரிஞ்சிடுச்சா?

  2. ஆனந்தானு பேரு வச்சுருக்கரவண எல்லாம் பிடிச்சு உள்ள போட்ட கொஞ்ச நிம்மதியா இருக்கலாம்

  3. மிக விருப்பமான பதிவு இது.. நிதானமா படிக்கும்படி நீளமா இருக்கே..

    தினகரனை விட்டுடீங்க..??

      • உங்களை ஆர்.எஸ்.எஸ்ஸூன்னு சொன்னா முத்திரை குத்துவதா புலம்பறீங்க.. ஆனா இப்ப நீங்க செய்வது என்ன? அதுவும் ஒரு மதவாதிக்கே உரிய மலிவான கோயபல்சு உத்தியை கையாள்கிறீர்கள் சீனு.

        கட்டுரை அறிமுகப்படத்தில் தினகரன் படம் உண்டு, கட்டுரையில் தினகரம் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. தொடர்புடைய பதிவுகள் பட்டியலில் கிறுத்துவ மதவாதிகளை அம்பலப்படுத்தி எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள் உண்டு.

        ஆனால் இதையெல்லாம் சுத்தமாக மறைத்து பொய் பேச உங்களுக்கெல்லாம் கூச்சமாகவே இருக்காதா?

        • தீவிரவாதத்திற்க்கு எதிராக போராடுபவர்களை, “ஆர்.எஸ்.எஸ்.,காரர்கள்’ எனச் சொல்லி திசை திருப்ப முயலக்கூடாது. தீவிரவாதம், இந்த தேசத்தை பிடித்திருக்கக் கூடிய புற்றுநோய். அதை குணப்படுத்த, ஒவ்வொரு இந்திய குடிமகனும், ஆவலோடு ஏங்கிக் கொண்டிருக்கிறான்…
          சீனுவின் கருத்தின் பின்னணியில், ஆர்.எஸ். எஸ்., அமைப்பின் பின்னணி உள்ளது’ என ஊசி தெரிவித்துள்ளார்.முதலில், “ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம்’ சுருக்கமாக, ஆர்.எஸ்.எஸ்., என்ற அமைப்பு, அல்-குவைதா அமைப்பு போன்றதோ, லஷ்கர்-இ-தொய்பா போன்றதோ அல்ல; அது, சமூக சேவை அமைப்பு.தேச பக்தி என்ற கோணத்தை வைத்து ஆராய்ந்தால், காங்கிரஸ் கட்சியில் உள்ள பெருந்தலைவர்கள் கூட, ஒரு சாதாரண, ஆர்.எஸ்.எஸ்., தொண்டனுக்கு ஈடாக மாட்டார்கள்.கடந்த, 1977ல், ஆந்திராவில் வீசிய கடும் புயலில், லட்சக்கணக்கான எண்ணிக்கையில் மனித உயிர்களும், கால்நடைகளும் மாண்ட போது, நாட்டின் ராணுவமே, சேவை செய்யத் தயங்கிய சூழ்நிலையில், உயிரை துச்சமெனக் கருதி, சமூக அக்கறையுடன், தேசபக்தியோடு களம் இறங்கி, பணியாற்றிய பெருமை கொண்டது ஆர்.எஸ்.எஸ்.

          • மர்து, நான் அவரை ஆர்.எஸ்.எசுன்னு சொல்லல, அப்படி சொன்னாக்க முத்திரைன்னு குத்துறாங்கன்னு பொலம்புனவரு என்னாத்து வினவுக்கு முத்திரை குத்த சாப்பாவோட ரெடியா வற்றாருன்னு கேக்கறேன்.

            நீங்க அந்த இந்து தாலிபான்களுக்கு வக்காலத்து வாங்கறத்துக்கு இருக்கட்டும், சீனுவோட கோயபல்சுத்தனமான பொய்க்கு என்ன பதில்?

            • எது கோயபல்சுத்தனமான பொய்..மற்ற மதங்களில் உள்ள குற்றம் குரைகளை துளியும் விமர்சிக்காமல் உங்க முற்போக்கு வியாபாரத்திற்க்காக திரை மறைவில் புனை பெயரில் முட்டாள் தனமான ஒரு தலைப்பட்சமான கட்டுரைகளை எழுதி உன் போன்ற தீவிரவாதிகளை ச்ந்தோசப்படுதி விடுவது தான் சாமர்த்தியமா..

              இந்து சாமியார்கள் செய்வது வியாபாரம் தான், இது பணக்காரர்களுக்கு பணத்தை செலவு செய்ய ஒரு வாய்ப்பு…ஆனால் ஒவ்வொருவனையும் தீவிரவாதியாகவும் ஒவ்வொருவனையும் மதமாற்ற சக்தியாகவும் மாற்றும் சக்திகளை என்ன செய்வது பாசி..

              • ////எது கோயபல்சுத்தனமான பொய்.///

                அவர் எழுதியிருப்பதுதான்..

                ////மற்ற மதங்களில் உள்ள குற்றம் குரைகளை துளியும் விமர்சிக்காமல்////

                அதே பொய்யைத்தான் இப்போ நீங்களும் சொல்றீங்க

                செருப்புக்கேத்த வார்

          • புல்லரிக்க வச்சிட்டீங்க மார்தூ. அப்பிடியே உங்க RSS உடைய இந்த வருசத்துக்கான ‘முஸ்லிம் உயிர்களின் Target என்னனு சொல்லிட்ட பரவாயில்லை.’

            இந்த பின்னூட்டம் இடும் போது உங்களுக்கு கொஞ்சம் கூட கூச்சமாக இல்லையா?

            தயவு செய்து உங்கள் இயக்கத்துடன் அல்-குவைதா வை ஒப்பிடாதீர்கள். அடிமைதனதிலிருந்து விடுபட அவர்கள் தம் இன்னுயிரை இழக்கிறார்கள். நீங்களோ
            சொந்த நாட்டு மக்களையே கற்பழித்து கொலை செய்பவர்கள்.அதற்கு தேசபக்தி என்று பெயரிட்டுக்கொள்பவர்கள்.

            • //தயவு செய்து உங்கள் இயக்கத்துடன் அல்-குவைதா வை ஒப்பிடாதீர்கள். அடிமைதனதிலிருந்து விடுபட அவர்கள் தம் இன்னுயிரை இழக்கிறார்கள்.//

              யாரு அல்-குவைதா அடிமைதனதிலிருந்து விடுபட அவர்கள் தம் இன்னுயிரை இழக்கிறார்களா? இது தான் தம்பி இந்த வருசத்தோட சிறந்தநகைச்சுவை…முசுலிம் பெண்களை அடிமையாக வைத்திருப்பதே அவர்கள் தான்..விட்டாநீங்க பின் லேடன சுதந்திரப் போராட்ட தியாகி என்ட்ரு சொல்வீர்கள் போலே..

              • கண்டிப்பா தியாகிதான்.

                தம் மக்களுக்காக உயிர் இழப்பவன் தியாகி தானே!

                தம் சொந்த நாட்டு அப்பாவி மக்களை கொல்பவன் இந்துத்துவவாதி தானே! RSS காரன் தானே!!
                அதனால் தான் என்னவோ 2 லட்சம் மக்களை கொன்று விட்டு, தரிசனம் செய்ய இந்து கடவுள் தான் தகுதியானவர் என்று ராஜபக்சே திருப்பதிக்கு வந்தான். இங்கு அவனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தீர்கள்.

                பெண்களை கார் ஓட்ட அனுமதிக்கத்தது என்னவோ பெரிய சர்வ தேச பிரச்னை போல் பொங்குறியே தம்பி!பெண்களை மார்பு சேலை அணிய அனுமதிக்காதது உன் இந்து மதம்தான். அவர்களை கார் ஓட்ட அனுமதிக்காதது இஸ்லாம் அல்ல. அவர்கள் வாழும் நாடு.
                அதற்கும் இஸ்லாமுக்கும் என்ன சம்பந்தம். இந்த அளவில் தான் உன் அறிவு வேலை செய்யுமென்றால் நீயெல்லாம் எதுக்கு பின்னூட்டம் இடுற.

                அப்புறம் உன்னுடைய மடத்தனமான கருத்தை ஆதரிப்பதற்கு ரிசி என்று வேற ஒருவர்.

                எங்கெல்லாம் முஸ்லிம்கள் உரிமையை இழந்து வாழ்கிறார்களோ அங்கெல்லாம் அடிமைகளாக அமைதியாக வாழ அனுமதிக்கப்படுகிறார்கள். அதாவது இங்கு பாபர் மஸ்ஜித் பற்றிய உச்சா நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று அடிமையாக வாழ்வதை போல.

                மற்ற நாடுகளில் அமெரிக்க ஓநாயின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக அவர்களது உரிமைக்காக போராடுகிறார்கள். அவர்கள் அமைதியை இழக்கிறார்கள். சரி.. சொற்ப காசுக்காக நாட்டை கட்டி கொடுக்கும் RSS வழி வந்த உனக்கு இது புரியும் என்று எதிர் பார்ப்பதில் நியாயம் இல்லை.

                • //கண்டிப்பா தியாகிதான்.

                  தம் மக்களுக்காக உயிர் இழப்பவன் தியாகி தானே!//

                  ஒசாமா பின் லாடன் தியாகியா…(பாருங்க மக்களே இதுல இருந்தெ தெரியுதே அண்ணன் ஒரு தீவிரவாதி என்ட்ரு..

                  பல ஆயிரம் பேரை கொன்ட்ர அந்த திவிரவாதிக்கு அமேரிக்க காரனைக் கண்டவுடம் 3 வது வப்பாட்டி பின் தான் ஓடி ஒளிந்தான்..

                  //பெண்களை கார் ஓட்ட அனுமதிக்கத்தது என்னவோ பெரிய சர்வ தேச பிரச்னை போல் பொங்குறியே தம்பி!பெண்களை மார்பு சேலை அணிய அனுமதிக்காதது உன் இந்து மதம்தான். அவர்களை கார் ஓட்ட அனுமதிக்காதது இஸ்லாம் அல்ல. அவர்கள் வாழும் நாடு.
                  அதற்கும் இஸ்லாமுக்கும் என்ன சம்பந்தம். இந்த அளவில் தான் உன் அறிவு வேலை செய்யுமென்றால் நீயெல்லாம் எதுக்கு பின்னூட்டம் இடுற.//
                  னீ சொல்வது இந்துத்வாவில்நடந்தது அந்தக்காலம்..ஆனால் முச்லீம்நாடுகளில் இன்னமும்நடக்கும் கொடூரங்கள் அவன் மனிதனா மிருகமா என்ட்ரு சிந்திக்கவைக்கிறது..
                  உலகின் எங்கு போனாலும் பெண்ணடிமை, மதவாதம், தீவிரவாதத்தில் ஊறித்திளைபது, அப்புறம் அமேரிக்காக்காரன் கிட்ட அடி வாங்குவது..அவன் சுட வ்ற்றப்ப 3 வது வப்பாட்டி பின்னாடி போய் ஒழிந்து கொள்வது…

                  //சொற்ப காசுக்காக நாட்டை கட்டி கொடுக்கும் ற்ஸ்ஸ் வழி வந்த உனக்கு இது புரியும் என்று எதிர் பார்ப்பதில் நியாயம் இல்லை.//
                  யாருடா சொற்ப காசுக்காகநாட்டை காட்டிக்கொடுக்கும் கூட்டம்…

                  ஒரு தமிழனாக ஒரு இந்தியனாக இந்த மண்ணைநேசிக்கும் இந்து மக்கள் டாநாங்கள்…உன்னைப் போல் எல்லா சுகங்களையும் இங்கு அனுபவிது விட்டு கடைசியில் என் தாய்நாட்டை காட்டிகொடுக்கும் கயவர்நாங்கள் அல்ல…

                  எம்முடம்பில் ஒரு துளி உதிரமும் உறைந்து போகும் முன் என் தாய்நாட்டை வேட்டை யாட வரும் வெறிநாய்களை வெட்டி வீழ்த்துவோம்..

                  • //எம்முடம்பில் ஒரு துளி உதிரமும் உறைந்து போகும் முன் என் தாய்நாட்டை வேட்டை யாட வரும் வெறிநாய்களை வெட்டி வீழ்த்துவோம்.. //

                    அதைதான ஒசாமாவும் செய்தார்!நீ பண்ணினா தேசப்பற்று ஒசாமா பண்ணினா தீவிரவாதமா?
                    நல்ல இருக்குடா உங்க நியாயம்!

                    அண்ணன் பொண்டாட்டி அரைப்பொண்டாட்டி!தம்பி பொண்டாட்டி தாம் பொண்டாட்டி.
                    கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரியாவது வைப்பாட்டி வேணும் என்பது போன்ற கேவலமான கலாச்சாரத்தில் ஊறிய நீயெல்லாம் ஒழுக்கம் பற்றி பேசாதே!

                    நான் கேட்ட எந்த கேள்விக்கும் நீ நேரடியா பதிலே சொல்லவில்லை. உன்னால் அது முடியாது. நீ வெட்டிதனமா பேசுறவன்னு புரியுது.

                    ஏக வசனத்தில் பேசுற..
                    ஏன் ரொம்ப உணர்ச்சி வசப்படுற?

                    • னீ ஒரு காட்டுமிராண்டி தீவிரவாதிக்கூட்டம்ன்னு புரிஞு போச்சு..

                      னான் சொன்னது இந்தியாவில் தாக்குதல்நடத்திய அப்சல் குரு, கசாப் போன்ட்ற காலிப்பயல்கலுக்கு எதிராக..

                      ஓசாமா பேடிப்பயல் கொன்றது அப்பாவி அமெரிக்க மக்களை…

                      னீ வெளங்காம விதண்டாவதத்துக்குப் பேசுரவன், தீவிரவாத எண்ணம் கொண்டவன், ஒசாமாவை தியாகி என்று சொல்பவன்நாளை ஒரு கசாபோ, அப்ச்லோ வந்து மெட்ராஸீ தகர்க்க உதவி கேட்டால் உதவி செய்வாய்…இது தான் உன்ட வேட்டுக்கு ரென்டகம் பன்னுவது…அது என்ன பேரு சாராம்சம்…உன்மையான பெரு என்னெளன்னிடம் வாதிடுவது வீண் வேலை…சைனிங் ஆப்

        • //அதுவும் ஒரு மதவாதிக்கே உரிய மலிவான கோயபல்சு உத்தியை கையாள்கிறீர்கள் சீனு.//

          இந்துத்வா பற்றி வினவில் வறும் கட்டுரைகளுக்கு ஏற்ற கருத்து..

          • நரவேட்டை நரேந்திர மோடி கொலைசெய்யப்பட்டவர்கள் அப்பாவிகள் இல்லையா? அந்த வெறிநாய்க்கு எப்போ மரண தண்டனை?

            ஆமா அதென்ன பேரு மார்’தூ’?…. தூ..

        • கட்டுரை அறிமுகப்படத்தில் தினகரன் படம் உண்டு, கட்டுரையில் தினகரம் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. தொடர்புடைய பதிவுகள் பட்டியலில் கிறுத்துவ மதவாதிகளை அம்பலப்படுத்தி எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள் உண்டு.//
          .
          .
          1987 இல் ஷாஹ் பானு என்ற பெண் தனது ஜீவனாம்சத்திர்க்காக போராடினார்.ஆனா ராஜீவ் தலைமையிலான அரசு நீதிமன்றத்தை இன்ப்ளூயன்ஸ் செய்து ஆணாதிக்க முஸ்லீமுக்கு ஆதரவான ஆனால் முஸ்லீம் பெண்களுக்கு எதிரான தீர்ப்பு கொடுக்க வைத்தது.அதன் விளைவை இன்னமும் இஸ்லாமிய பெண்கள் அவதிபடுகின்றனர்.அதை பத்தியும் சொல்லலாமே!!

          • அம்புலிமாமா படிக்கத்தான் லாயக்குன்னா எதுக்கு வினவு பக்கத்துக்கு வரனும். ஒன்னு சொந்தபுத்தி இருக்கனும், இல்லேன்னா சொல்றதையாவது கேக்க தெரியனும். இப்படி ரெண்டுகெட்டான் கேசெல்லாம் வந்த என்னாத்த செய்ய?

            • வினவில் வருவதே அம்புலிமாமா கதை தானடா ஊசி..அந்தக் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் தான் நீ, பகத் சிங்..

              //சொந்தபுத்தி இருக்கனும், இல்லேன்னா சொல்றதையாவது கேக்க தெரியனும்.//

              சொந்தபுத்தி இல்லாவிடிலும் பரவாயில்லை உன்னை மாதிரி மந்த புத்தி (னான் புடிச்ச முயலுக்கு மூணு காலு)இருக்கக் கூடாது..

              • மர்து, உமக்கு ஏன் இவ்வளவு பிபி? வினவுக்குள்ள இருப்பதையே தேடிப்படிக்க முடியாத காமெடி பீசுகளுக்கெல்லாம் சுடு அன்ட் சொரணை இதெல்லாம் இருக்கப்பிடாது

                • சும்மா அனைத்து மதத்தையும் விமர்சிக்கிரேன் பேர்வழின்னு எப்பவாவது ஒரு கட்டுரையை ஒப்புக்கு எழுதிவிட்டு மற்றநேரம் முழுவதும் முழுநேரத் தொழிழாக இந்து மதத்தை விமர்சனம் செய்வதே வேலையாக இருந்தால் சல்லடை போட்டுத் தேடினாலும் கிடைக்காது தலைவா…

                  • மொதல்ல துளியும் விமர்சிப்பதில்லைங்கறது
                    அப்புறும் எப்பவாவது ஒப்புக்கு எழுதிட்டுங்கறது
                    இப்படியே படிப்படியா ஒரு வருசத்துல நீங்க உண்மையை ஒப்புக்குவீங்க
                    சோ அட்வான்ஸ் வாழ்த்துகள்

          • ராஜேஷ்! இதனை பெண்கள் மீதான உண்மையான அக்கறை என்று எடுத்துக்கொள்ளலாமா? அப்படி என்றால் குஜராத்தில் RSS வெறிநாய்களால் கற்பழித்து அநியாயமாக கொல்லப்பட்டார்களே நாம் இந்திய சகோதரிகள் அவர்கள் பற்றிய உங்கள் கருத்து என்ன என்றும் சொல்லுங்கள்.

  4. ரொம்பவும் நீளமான பதிவு. முதற்பகுதி ஆன்மிகத்தை வணிகமாக்கி வெற்றி காணும் சாமியார்களைப்பற்றி. அதில் ஒரு கிருத்துவரும் சொல்லப்பட்டிருக்கிறார்.

    இரண்டாம் பகுதி உங்கள் கருத்து. முழுக்கப்படிக்கமுடியவில்லை. படித்தவரை நிறைய கருத்துக்களை வைக்கலாம்.

    முதலில்

    இப்படிப்பட்ட சாமியார்கள் இன்று தீடீரென முளத்தவர்கள் அல்ல. எப்போதும் மனித வரலாற்றில் இவர்கள் இருக்கிறார்கள். இப்போது நாம் வாழ்வாதாலும், ஊடகங்கள் நம் அறைக்குள்ளே வந்து இவர்களைப்பற்றிச் சொல்வதாலும், இவர்கள் நமக்குப் பூதாகரமாகத் தெரிகிறார்கள். நீங்கள் கரடியாகக் கத்தினாலும் இவர்களை அழிக்க முடியாது. இவர்களிடம் போகுபவர்களுக்கு என்றுமே பஞ்சம் இருக்காது. இது ஒரு தொடர்கதை.

    இத்தொடர்கதையை என்ன செய்வது ? வருமான வரி இலாக்காவை முடக்கிவிட்டு இவர்களை வரிகட்டச் சொல்லலாம். அது மக்களுக்குப் போய்ச் சேரும். இல்லாவிட்டால், இவர்களை ஒழுங்கு படுத்தலாம். வியாபாரம் பண்ணுவோருக்குப்போடப்படும் சட்டக்கட்டுக்களை இவர்களுக்கு வைக்கலாம்

    So, the basis point is that: we must make the worst situation advantageous to us. We can frame laws to bring them under like Corporate Law. Income Tax department shd also frame spl rules for them: like registration of their income, voluntary discolusre scheme to them

    In short, instead of we seeing them just like their customers see them, we ought to see them as business men. At present, they launder their business activitiy using sprituality.

    The first and foremost thing is to drum up the support from the Hindus to bring these saamiyaars under control. Govt has brought Hindu temples in TN under control and the brahmins who earned through them, cant do anything. They r asking the temples back. The general Hindu population of TN has more or less accepted govt control.

    Similarly, the Hindu population will come forward to control these religious merchants.

    At present, the police cant arrest any saamiyaar for unfair trade practices. If u bring their mutts under sutiable laws, the enforceement agencies will go and ask for account. Cheating case will be lodged against these saamiyaars.

    Not only when a murder takes place, but always, the saamiyaar shd be under control.

    இன்று எந்தவொரு சாமியாரின் மீதும் எந்தவொரு நடவடிக்கையெடுத்தாலும், அவர்கள் ஒழிவது, இந்து இயக்கங்களின் பின்னாலே. ஜெயேந்திரர் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு போலீசால் சிறையடைக்கப்பட்ட போது, வாரணாசியில் எல்லாச்சாமியார்களும் அரசியல்வாதிகளை அழைத்து கூட்டம் போட்டார்கள். இந்துத்துவாவினர் இந்துக்களிடம் நம் மதத்திற்கு ஆபத்து எனப்பிரச்சாரம் செய்கிறார்கள். இப்படியாக இந்த வணிகசாமியார்களுக்கு நல்ல கேடயம் கிடைக்கிறது. அரசியலில் வணிகர்கள் புகுந்து எம்பிக்களாகவும் அமைச்சர்களாகவும் ஆகி தங்களுக்கு சேவை செய்வதைப்போல. இந்து வணிகச் சாமியார்கள் மதத்தைக் கேடயஙகளாகப் பயன்படுத்துகிறார்கள்.

    சாமியார்களைப்பற்றி எழுதினால் வரும் பின்னூட்டங்களே இதைச் சொல்லுங்கள். சாமியார்களுக்கு நிறைய ஆதரவு என்று.

    How to get the support of Hindus and control these saamiyaars ?

  5. இந்த வியாபார சாமியார்கள் பட்டியலில் கல்கி பகவான் – பத்மாவதி தம்பதி சமேதரைக் காணோமே?? அவர்களது சொத்து மதிப்பும் பல நூறு கோடிகளைத் தாண்டும் என நினைக்கிறேன். கட்டுரையை அப்டேட் செய்யவும்.

  6. சிரஜ், மற்றும் சாந்தி !

    இயேசு நாதர் பேரைச்சொல்லி ஆயிரம் பேர் ஏமாற்றிக்கொண்டலைகிறார்கள். இதனை நீங்கள் சொல்லி எவருக்கும் தெரியவேண்டியதில்லை. அவனுகளுக்கென்றே தனிப்பதிவு போட்டிடலாம். ஆனால், இங்கே கேள்வி:

    இப்படி ஆன்மிக வியாபாரம் செய்து பணம்பெருக்கும் ஆன்மிக வியாபாரிகளை விட்டுவிட்லாமா ? என்ன செய்யலாம் ? இதைக்கேட்டால் அதைப்படி, இதைப்படி, அவங்க மதத்திலேயும் இருட்டறையில் பண்ணுகிறார். நாங்கோ பண்ணுணா என்னங்க தப்பு ? என்று கேட்கிறீர்கள் !

  7. மர்து,

    இந்துச்சாமியார்கள் வணிகம் பண்ணும் வழிகள், கிருத்துவ சாமியார்கள் வழிகளை விட வேறானவை. ரவி சங்கரைப்போல ஆன்மிகத்தை ஒரு கிலோ இரண்டு கிலோ என்று முதலாளிகளுக்கு விறபதில்லை. ஜக்கி வாசுதேவ், அமிதமாயி போன்றோர் வியாபாரம் பண்ணிகிறார்கள்.

    கிருத்துவ ஆன்மிக வியாபார்கள் அவ்வளவு தூரம் போகவில்லை. இவங்க சம்பாதித்யமும் எண்ணிக்கை இந்து வியாபார்களைவிட குறைவுதான்.

    எனவேதான் இவர்களைப்பற்றி எழுதிமிடத்தைல் அவர்களைப்பற்றி எழுத முடியாது.

  8. ஆயினும் இந்தத் தீர்வை எந்தச் சாமியாரும் தர இயலாது
    Vinavu

    In ur reckoning, all spiritual leaders are crooks. U wont accept but urs is a sweeping statement. There r a few who live in their spiritual world, w/o inviting anyone to come to them to get their blessings for moeny.

    For them, ur post s inapplicable.

  9. இது போன்ற குற்றங்களுக்கு சாமியார்களை விட அதிகம் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ஊடகங்களே. அவர்கள் உள்ளதை உள்ளபடி கூறினால் எந்த ஒருவனையும் எந்த நாயும் சீண்டாது. அதே சமயத்தில் ஊடகங்களே திருடர்களின் கையிலும், அவனை தண்டிக்க வேண்டிய நீதிமன்றம் செயலற்ற நிலையிலும் இருக்கிம் போது பாமர மக்களை தனியாக தர்க்க ரீதியான சந்திப்பு மற்றும் மக்களுக்கு விளக்கும் நோக்கோடு நடக்கும் போராட்டங்களே தீர்வாகும்.

  10. //Countires where the Muslims aren’t happy!
    ***********
    * They’re not happy in Gaza.
    * They’re not happy in Egypt.
    * They’re not happy in Libya.
    * They’re not happy in Morocco.
    * They’re not happy in Iran.
    * They’re not happy in Iraq.
    * They’re not happy in Yemen.
    * They’re not happy in Afghanistan.
    * They’re not happy in Pakistan.
    * They’re not happy in Syria.
    * They’re not happy in Lebanon.
    ************************************//

    மார்துவின் இந்தப் பின்னூட்டம் நல்லாருக்கு. இதேபோல ஏற்கெனவே நான் சொல்லணும்னு இருந்தேன். முஸ்லீம்களுக்கு தனிநாடு வேணும்னு அடம்பிடிச்சு வாங்கிட்டுப்போனாங்க நம்ம முஸ்லீம் சகோதரர்கள். ஆனா இன்னிக்கு அங்கேதான் அவங்களுக்குப் பாதுகாப்பில்லை. எந்நேரம் எந்த கார் குண்டு வெடிக்கும்னு தெரியாது. எந்த பில்டிங் தகர்க்கப்படும்னு தெரியாது.

  11. இந்து சாமியார்கள் செய்வது வியாபாரம் தான், இது பணக்காரர்களுக்கு பணத்தை செலவு செய்ய ஒரு வாய்ப்பு…

    Maarthu

    Well done ! :>)

    Y dont the rich men find the way to spend their money by micro-financing the poor? or, helping finacially in the welfare programs for the poor ?

    • //இந்து சாமியார்கள் செய்வது வியாபாரம் தான், இது பணக்காரர்களுக்கு பணத்தை செலவு செய்ய ஒரு வாய்ப்பு…//

      ஆகா! அருமை மார்தூ! இந்து சாமியார்கள் பணத்தை செலவு செய்ய பணக்காரர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கி இருக்கிறார்கள். என்ன அருமையான கருத்து. பட்டினி சாவு நடக்கும் இந்த நாட்டில் பணத்தை செலவு பண்ண வேறு வழியே இல்லையாம். இது ஒன்று போதும் உன் சிந்தனை சக்தி எந்த அளவுக்கு மேன்மையானது என்று தெரிந்து கொள்ள.

  12. இங்கு பின்னூட்டமிடும் நண்பர்களுக்கு ஒரு கேள்வி. ஏன் இவர்கள் சாமியார் ஆனதும் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி, உணவு விடுதி, தங்கும் விடுதி போன்ற பணம் கொழிக்கும் தொழில்களையே ஆரம்பிக்கிறார்கள்( மருவூர் அம்மா, சாயி பாபா, அமிர்த “கட்டிப்புடி” மயீ, இன்ன பிற). அவர்கள் பணம் சம்பாதிக்கத்தான் இவ்வளவும் என்று விளங்க வில்லையா

  13. இவனுங்க கிட்ட இருந்து காச புடுங்கற வழிய பார்க்கணும் .
    நல்ல பதிவு .

  14. பொந்து மத கூஜாக்களுக்கெல்லாம் ஒரு இசுபெசல் டிப்ஸ் — பேசாம இந்த சாமியார்களெல்லாம் முஸ்லீம் தீவிரவாதிங்க மாரு வேசத்துல வந்திருக்காங்கன்னு சொல்லிடுங்க. மேட்டர் ஓவர்

  15. ஆர்எஸ்எஸ் காரனை சூடேற்றும் நல்ல பதிவு. இந்து மததில்தான் புதுசு புதுசா சாமியாருங்க வர்றானுங்க.விழுப்புரம் பக்கத்தில் சின்னபாபு சமுத்திரம் என்ற ஊரில் பத்துநாளா கையில் ஒரு பெரிய பூட்டுடன் ஒரு கேனைப் பொறுக்கி அளம்பு பண்ண்கிட்டு இருந்தான். அவன் கையில பூட்டு வச்சிறுந்ததால அவரு பேரு பூட்டு சாமியாரான். குறி சொல்றேன்னு சாக்குல பெண்களிடம் வம்பு செஞ்சிருக்குறான். இவனுக்கு அந்த ஊரு அதிமுக கவுன்சிலரும் சில காவிகளும் சப்போர்ட்டு. புஜதொமு தோழர்கள்தான் அவனை அங்கிருந்து விரட்டியடித்து மக்களை காப்பாற்றினார்கள். இல்லையென்றால் இன்னேரம் அவன் உக்கந்த இடத்துல முதல்ல ஒரு கொட்டா போட்டுருப்பான். அப்புறம் பட்டா வாங்கி ஊரையே வளைச்சிருப்பான். குறி சொல்றேன்னு பல…….களை நாசம் பண்ணியிருப்பான் அந்த அயோக்கியன்.

    • மார்தூ! அந்த பூட்டு சாமியாரை பொய் சந்திச்சிட்டு வந்து நல்ல புத்திசாலிதனமா ஒரு பின்னூட்டம் போடுங்க!

    • இல்லை கலை இது தீவிரவாதிகளை உற்சாகப்படுத்தும் ஒரு பதிவே(வழக்கம் போல்)

  16. இங்கேயும் ஒரு பொந்து சாமியின் (I guess he is one from Kaki amma appa mama or whatever saami)சீடன் வந்துருந்தான் எங்க ஸ்கூல் மாணவர்களை ஒளி வட்டம் தெரியுது சதுரம் தெரியுதுன்னு மூளைச்சலவை செய்ய. எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது, கேள்வி பதில் நேரத்தின் போது ஒரு 8 வயது மாணவி அவனுக்கு காது சரியா கேட்கலைன்னு அவன் பக்கத்துல போய் கேள்விய கேட்டா. அதுக்கு அவன் அந்தப்பொண்ண தள்ளி நின்னு கேள்வி கேளு பொண்ணுங்கள தொட்டா என் புனிதம் கேட்டுரும்னு எல்லார் முன்னாடியும் சொன்னான்.

    ங்கொய்யா, 8 வயசு குழந்தை கிட்ட என்ன தீட்டு உனக்கு? இதையே தனியா ரூம் போட்டு தொட்ட தீட்டு இல்லையா கருமம் புடிச்சவனே?

  17. அருமையான பதிவு,
    தெரிந்தே போய் விழும் ஆட்களை ஒன்றும் செய்ய முடியாது.இந்த சாமியார்களின் வருமானத்தை கண்கானித்தால் பல ஹவாலா,வருமான வரி ஏய்ப்புகள் தவிர்க்கலாம்.இந்த மத நன்கொடைகளுக்கு வருமான வரி விலக்கு அளிப்பதை நிறுத்த வேண்டும்.இதில் இந்து கிறித்த்வ பிரச்சாரகர்களுக்கு வித்தியாசம் இல்லை.தினகரன் போன்ற கிறித்தவ பிரச்சாரகர்களுக்கு பணம் கொடுப்பது கிறித்தவ்ர்கள் மட்டுமல்ல,சாதி மத பேதமற்று பலரும் அளிக்கிறார்கள்.
    ஹை டெக் இஸ்லாமிய பிரச்சாரகர்களை விட்டு விட்டீர்களே.குரானில் இருந்து அறிவியல் காட்டும்,ஜாகிர் நாயக்,அதனை சர்வ ரோக நிவாரணியாக்கும் பி.ஜே.ஜாகிர் நாயக் நடத்தும் விவாதங்களுக்கு ஊடகங்களின் பரப்புரை,தொலைக்காட்சி,ஒலி ஒளிப்பேழைகள் என்று அருமையாக கல்லா கட்டுகிறார்கள். இவர்களுக்கும் இந்த சாமியார்களுக்கும் எந்த வித்தியாசம் இல்லை.எவரேனும் 6 வித்தியாசங்கள் கூறவும்.

    • //தெரிந்தே போய் விழும் ஆட்களை ஒன்றும் செய்ய முடியாது.//

      பொதுவாக இந்த யோகா, தியானம் நடத்தும் கம்பெனி சாமியார்களிடம் அதிகம் வசதி உள்ளவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கம் தான் சென்று விழுந்து கிடக்கிறார்கள். ஆனால் தினகரன் போன்ற சில கிறிஸ்தவ அயோக்கியன்களிடம் மதவேறுபாடின்றி வசதி இருப்பவர்களை விட அதிகம் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கம் தான் ஏமாந்து போகிறது.

      ஜக்கி கிட்ட போனா மூக்கு ஒழுகும் போது எப்படி மூச்சி விடுவது என்பதையாவது கற்றுக்கொள்ளலாம். ஆனால் தினகரன் கிட்ட போனா சும்மா இருக்குற மூக்க அழுது அழுது ஒழுக வச்சிடுவாரு!

  18. கட்டுரையின் மையக்கருத்துக்கு நேர்மறை விமர்சனம் வைக்க முடியாதவர்கள்தான் மற்ற மதத்தில் உள்ள குறைபாடுகளை தமக்கு சாதகமாக சுட்டிக் காட்டி வாசகர்களை திசை திருப்ப முயலுவார்கள். அந்த வகையோரை சேர்ந்தவர்களாகத்தான் மர்து, ராஜேஷ்,ஊசி ஆகியோர் உள்ளனர். அவர்கள் ஒன்றை மட்டும் தமகுள்ளாகவே கேள்வியாக கேட்டுக் கொள்ளட்டும். மற்றவர்களின் குறைபாடுகளை தம்முடைய ஒழுக்கமின்மைக்கு பதிலாக கூறிக்கொள்வது நேர்மையான பதில் ஆகுமா.

    • கேள்வி பதில் :

      கேள்வி: நீ கொள்ளை அடித்தாயா?

      மார்தூ/ராஜேஷ்/மாக்ஸிமம் இன் பதில்: அவன் குச்சி திருடி விட்டான்.

  19. வினவுக்கு வேலை இல்லீனா ரெண்டு வேலை பண்ணும், ஒன்னு தேவனை பத்தி தப்பா எழுதுறது..இன்னொன்னு இந்து வை பத்தி தப்பா எழுதுறது..

    உடனே இந்த அல்லக்கை பசங்களும் கருத்து ங்கற பேர்ல வந்து வாந்தி எடுப்பான். இதுதான் நடந்துட்டு இருக்கு.

    ஏன்னா தேவனையும் இந்துவையும் தப்பா எழுதினாதான் பரபரப்பா ஆகுமாம்.

    இந்த பசங்க எழுதுறதை வச்சிட்டு ஆகா, நம்ம கூட வாதாட ஒருத்தனுக்கும் தகுதி இல்லை. நாம
    சொல்றதத்தான் எல்லாரும் சொல்றாங்க , மக்கள் எல்லாம் நம்ம பக்கம் தான் னு நெனைச்சா அதுதான் அவனுங்க பண்ற முட்டாள் தனம் .

    நீங்கெல்லாம் இப்படி எழுதிட்டே, ரோட்ல உண்டி குலுக்கி கிட்டே நின்னுற்றுபீங்க. ரொம்ப வருஷமா அதான் பண்றீங்க ஆனா ஒன்னும் வேலைக்கு ஆகலை.

    மத்தவனை பாரு, படிச்சி, முன்னேறி எனென்னமோ பண்ணிற்றுக்கான். அவங்கல்லாம் பார்த்தாவது திருந்துங்க தம்பிகளா..

    இந்தியா ங்குறது ஒரு சின்ன ஊரு இல்ல. உலகத்துலேயே ரெண்டாவது பெரிய நாடு. அது மட்டும் இல்ல, ஏகப்பட்ட மதம் ஜாதி இதெல்லாம் உள்ள ஒரு பெரிய அமைப்பு. அப்போ பிரட்சினைகளும் அப்படிதான் இருக்கும்.

    ஒருத்தர் சொல்லி இருக்காரு (புலவன் புலிகேசி) மூட நம்பிக்கை அதிகம் உள்ள மதமாம். (அதொடில்லாமல் மக்களை மடையர்களாக்கும் மூட நம்பிக்கைகள் அதிகம் கொண்ட மதமும் அது)

    தம்பி புலிகேசி, அப்படின்னா ஹிந்து எல்லாம் முட்டாளா? போய் பாரு, இந்தியாலேர்ந்து , யு .எஸ் , யு. கே, அப்படின்னு எல்லா இடத்துலயும் நம்மாளு கொடி கட்டி பறக்குறான். அதுல தொன்னூத்தி அஞ்சு சதவீதம் ஹிந்து பசங்க தான். முட்டாளா இருந்தா இதெல்லாம் எப்படி தம்பி சாத்தியம்..? இன்னிக்கு ஒபாமாவே இந்திய மாணவர்களை விட தகுதிகளை அமெரிகன்ஸ் வளர்த்துக்கணும்னு சொல்றார். எப்படி கண்ணா அது?

    ஹிந்துஸ் எல்லாம் ஒழுங்கா படிக்கறான்,சாமியை கும்பிடறான், அவன் வேலையை பார்த்துட்டு போய்டே இருக்கான்.

    நீங்க சொல்லி இருக்குற இந்த சாமியார் எவனாவது மதம் மாத்துறன்னு சொல்ல முடியுமா? அவன் பணம் சம்பதிச்சன்னா உங்களுக்கு ஏன் எரியுது? உன் வீட்டு பணம் இல்லேல? அவனை நம்புறவன் காசை கட்டி சந்தோசமா இருக்கான் இல்ல நாசமா போறான் .. உனக்கு என்னா வந்துச்சு?

    ஒருத்தன் மதம் மாறுனன்னா அது அவன் விருப்பம் னு சொல்ற ராஸ்கல்ஸ் இதுக்கு பதில் சொல்லுங்கப்பா.

    நான் மதம் மாத்துற மத்த ஆளுங்களை பத்தி பேச விரும்பலை .

    முடிஞ்சா நீயும் சம்பாரி , சாமி கும்பிடலன்னா என்னா என்னா நல்லது நடக்கும், இல்ல வேற மதம் மாறுனா என்னா சந்தோஷம் வந்து சேரும், இல்லை தெரு தெருவா உண்டி குலுக்கி புது அரசாங்கம் அமைச்சா என்னா என்னா நடக்கும் னு சொல்லி பாரு, நாலு பேர் வந்து சேர்ந்தா நீயும் இவனுங்களை மாதிரி பெரிய ஆளா ஆயிடலாம்.

    இது வியாபார உலகம் தம்பிகளா. விளம்பரம் இருந்தாதான் பூ கூட விக்கும். இவனுங்க கொஞ்சம் ஹை டெக் ஆ மீடியா வுல விளம்பரம் பன்றானுங்க. அவ்ளோதான் வித்தியாசம்.

    வினவு முன்னாடி ப்ளாக் ஆ இருந்துச்சு.. இப்போ வெப்சைட் ஆ மாறி இருக்கு. அதே மாதிரிதான் இதுவும்.

    வினவுல கூட சந்தா கேட்குறாங்க, இந்த சைட் நடத்த, கட்டுரை எழுத (நோட்: நான் இன்னும் கொடுக்கவில்லை.)

    அதே மாதிரி தான் இந்த டுபாக்கூர் சாமியார்ங்களும் பணம் வசூல் பண்றான் . இதேலென்ன தப்பு? விருப்பம் இருந்தா கொடு. இல்ல உன் வாயை மூடிக்கோ .

    யோகாசனம் அப்படிங்கறது இந்தியாவில உண்டான ஹிந்துஸ் ஓட ரொம்ப தொடர்புள்ள ஒரு கலை. அது செய்யரவனுக்கு , நம்புரவனுக்கு நிம்மதியை கொடுக்குது, ஒரு சில நோய்களை தீர்குது.

    பாரிநேர்ஸ் கூட இதை ஒத்துகிட்டான். அதன் அவனுங்க கூட வந்து ஆர்வமா கத்துக்கறான் . இங்கே பாண்டிசெர்ரி ல உலகத்துல என்கேங்கேர்ந்தோ வந்து கொஞ்ச நாள் அமைதியா சந்தோஷமா யோகா மூச்சு பயிற்சி லாம் பண்ணிட்டு போறான் அவனோட யியர்லி வகாஷன் டைம் ல . இங்கே இருக்குறவன் நினைச்சா அவனை மதம் மாருடான்னு சொல்ல முடியும் ஆனா இப்போ வரை அதையெல்லாம் செய்யறதில்ல.

    மொத்தத்துல ஒருத்தன் செய்ற தப்பு எல்லா ரையும் பாதிக்குது. இதை இந்த ஆர்டிகல் எழுதினவருக்கும் நல்லா தெரியும். இருந்தாலும் அப்படிதான் நீங்க எழுதுவீங்க..

    கங்கை நதியை காப்பாத்தனும் னு உண்ணாவிரதம் இருந்து ஒரு சாது உயிர் விட்டான். ஆனா இன்னிய வரைக்கும் வினவு அதை பத்தி எழுதவே இல்லை. ஆனா பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் உட்கார்ந்தவுடனே மூணு நாலு அர்டிகல் போடுது. இதுதான் உங்க நடு நிலைமை..

    மொத்தத்துல காசு இருக்குறவன் காக்டெயில் குடிக்கறான். ஏ சி பஸ் ல போறான். இல்லாதவன் பழைய கஞ்சி குடிச்சிட்டு பப்ளிக் பஸ் ல போறான்.

    வினவு ஆளுங்க யாராவது,
    அய்யயோ இந்த நாட்டுல உள்ள மக்கள் ல பாதி பேரு ஒரு வேலை சோறு கூட இல்லாம கஷ்டபடுரான்னு சொல்லி சோறு திங்காம இருக்கறாங்களா/ இல்லேல அது போல தான் எல்லாம்..

    இப்படிக்கு
    மாக்ஸிமம்

  20. எவ்வளவு முடியுமோ அவ்வளவு உளறல் உளறியாச்சு! மக்ஸிமம் நல்ல பொருத்தமான பேரு.
    //ஹிந்துஸ் எல்லாம் ஒழுங்கா படிக்கறான்,சாமியை கும்பிடறான், அவன் வேலையை பார்த்துட்டு போய்டே இருக்கான். //
    அவன் வேலை என்ன தெரியுமா? உதாரணம் – சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ்ல வெடிகுண்டு வச்சதுல 69 பேர் பலி. ஆனால் பழியோ முஸ்லிம்கள் மேல். 2007 ஆம் வருடம் நடந்த இந்த குண்டு வெடிப்பிற்கு அனைத்து ஊடகங்களும் முஸ்லிம்களை கை காட்டின. இது போன்ற ஒவ்வொரு நிகழ்வுகளிலும் அவர்கள் தீவிர வாதிகளாக சித்தரிக்கப்பட்டனர். இங்கு பதில் சொல்லும் பலரும் இந்த வாதத்தைதான் வைக்கின்றனர். இந்த குற்றச்சாட்டுகள் கூட உங்களைப்போன்ற இந்து வெறியர்களால் முஸ்லிம்கள் மீது திணிக்கப்பட்டதுதான்.

    இனி எங்கேனும் குண்டு வெடித்தால் நாம் சந்தேகப்பட வேண்டியது RSS, பிஜேபி, VHP , இந்துமுன்னணி உள்ளிட்ட இந்துத்துவ வாதிகள் மீது தான்.

    • மிஸ்டர் வியாக்கி,

      நான் மத்த மதத்து ஆளுங்க பத்தி ஒரு லைன் கூட எழுதலை …நீங்க தான் சில கேள்வி கேட்க வைக்கரீங்க ,

      சரி, சம்ஜத்வ எக்ஸ்பிரஸ் டிரைன் ல பாம் வச்சுதுலேர்ந்து இப்போ வெடிகுற, இனிமே வெடிக்க போற எல்லா பாம் க்கும் காரணம் இந்து தீவிரவாதி தான். ஓகே ,,

      அப்போ நியூயார்க் ல் டுவின் டவர் ல வெடிச்ச பாம் , ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் இராக் இங்கெல்லாம் வெடிச்ச, வெடிச்சிகிட்டு இருக்குற பாம் லாம் கூட ஹிந்து தீவிரவாதி வச்சதுதானா?

      எப்படி இங்கேர்ந்து விமானத்துல பொய் வச்சிட்டு வந்துர்ரானா?

      அப்டியே சொல்லுங்களேன், மும்பை இன்சிடென்ட் க்கு கூட ஹிந்து டெர்ரரிஸ்ட் தான் காரணம்னு. ரொம்ப நல்லா இருக்கும், நம்ம தேசிய விருந்தாளி கசாபை கூட உத்தமர் பட்டம் கொடுத்து ஊருக்கு அனுப்பிடலாம்…


      மாக்ஸிமம்

  21. ஆணியே புடுங்க வேண்டாம்…
    அவ அவன் சொந்த வேலையை மட்டும் பாத்தா போதும்..

    சாமி,சாமியார்,மதம் அப்டின்னு ஒரு ம**ம் இருக்காது…

  22. அண்ணாச்சி மேக்சிமம் என்ன சொல்ராக,
    ஹிந்துஸ் பித்ருக்களின் புண்ணிய பூமிய விட்டு வெளிநாட்டு குடியுரிமை பிச்சை வேண்டி செல்வது பற்றி பெருமையா?. ஒரு நாள் உதைச்சு வெளியே விரட்டுவான் அப்ப தெரியும்.அது வரைக்கும் ஜாலிதான்.நீங்க என்ன இந்த மாதிரி சாமியாரா? பொழைப்பு போகுதுன்னு கோப படுகிறீர்களா!.
    _________
    ஏமாற்றுக்கார மத குரு எல்லா மதத்திலும்தான் இருக்கிறான்.இந்த ஆன்மீகவாதிகள் பெண் பித்தர்களாக இருப்பது ஏன் ?.ஜாக்கிரதையாக் இருப்பது நல்லது.மனைவி குழந்தைகளை இவனுக இருக்கிற திசைக்கே காட்டக் கூடாது.விடியற் காலையில் டிவியை போட்டா ஏதாவது ஒருத்தன் வந்துடரான். வங்கி கணக்கு எண் கொடுத்து பனம் அனுப்புங்கிறான்.இதுக்கு ஒரு தடை கொண்டு வரமாட்டான்களா?

  23. வினவு !

    சாமியார் ரூட் போட்டு பொம்பிளைகூட படுக்கான். அவ அவன் பணத்துக்காக அவனுக்கு புடிச்சி விடுறா. வினவு இதிலே என்ன தப்புங்கிறே? உனக்கு லக்கு இல்லை. அவனுக்கு இருக்கு உனக்கேன் வவுத்தெறிச்சல்? அவனா பொம்பிளைகிட்ட போனா? அவளுக வந்து விழுறாளுக. உனக்கு பொம்பிளை கிடைக்கல. வவுறு எரியுது உனக்கு.

    ராம்தேவ் லேகியம் கொடுக்கான். அவன் யாரையும் வந்து வாங்கிக்கோன்னு சொல்லல. டயாபாடீஸ் சொஸ்தாமாகுன்னு நீ வாங்கிச்சாப்பிட்டுச் சாவுற. பணம் கொடுக்கிற. ராம்தேவ் மேலே ஏன் பாயுற வினவு? உனக்கு வேணும்னா லேகியம் வித்துக்கோயேன்.

    ஜக்கி ஆன்மிகத்தை விக்கிறாங்க. நீயும் போய் வித்து சம்பாரி. அதுக்குப்போய் ஜக்கி, சிரி சிரி முவா மேலே உனக்கு ஏன் காண்டு ?

    அவனுக சம்பார்க்கிறானுக. தினகரன் பண்றான். கல்லூரி கட்டறான். உனக்கு ஏன் வேகுது? அவன் பேர்ல மாநகராட்சியே ஒரு தெருவை பண்ணியிருக்கு. அவ்ளோ பெரிய ஆலூன்னு கவர்மென்டுக்குத் தெரியுது. உனக்குத் தெரியல‌? நீயும் போய் சம்பாரிடா. ஊர் ஜனங்கள ஏமாத்து.

    நீ பிச்சையெடுத்துக்கிட்டு அலயற. சாமியாருங்க உடகார்ந்த எடத்திலேயே கோடிகோடியா மக்கள் அவன் முன்னாலே கொட்றாங்க. பெண்டாட்டி, மகள் என்று சாமியார் முன்னாலேயே போய் கூட்டிக்கொடுக்கிறானுக. உனக்கு சாமியாருக‌ மேலே பொறாமை. இல்லியா ?

    பதிவை விட்டுவிட்டுடா. போய் மடம் கட்டு. பேங்களூரு வெளியே இடம் வாங்கிப்போட்டுக் கட்டு. ஜனம் வந்து மோதும். நல்ல நாட்டுக்கட்டை இரண்டு மூனே உள்ளே கொண்டு ஒதுக்கு. ராத்திர்க்கு ஜல்சா பண்ண. ஒரு பய கேட்க மாட்டா. கேட்டா சாமி குத்தமாகிவிடுமுள்ள.

    கோடிக்கு கோடி; பொம்பிளைக்கு பொம்பிள. அதைச்செய்யாம மூக்கால ஏன்டா அழுவுற ?

    போ.போ. சொல்லவந்துட்டான். சாமியாருகளைப்பத்தி முண்டம்.

    இப்படிக்கு

    மினிமம்

  24. வினவு vs கனவு!

    ஒன்றும் விளங்காத வினவே…
    ஒன்றை மட்டும் தெரிந்துகொள்.
    நம்பிக்கை வேதமொன்றே
    நலம் தரும் புரிந்துகொள்.

    விரலசைத்து என் ரஜினி
    ஒரு வார்த்தை உதிர்த்துவைத்தால்
    நாடே நாறிவிடும்;
    நாட்டாமை மாறிவிடும்.

    கேப்டன் குரல் எடுத்து
    கொளுத்திப் போட்டுவிட்டால்
    பாகிஸ்தான் படை நடுங்கும்;
    பார் மொத்தமும் குலுங்கும்.

    வெற்றி கிடைத்துவிடும்
    விஜயின் மௌனத்திலும்;
    வடிவேலின் கூவலிலும்
    வையகம் விடிந்துவிடும்.

    நடிக்கும் நடிகர்களின்
    நாவன்மை பலித்திடலாம்.
    என்றேனும் ஓர் நாள்
    எம் வயிறும் நிறைந்திடலாம்.

    ஜொலிக்கும் நடிகர் சொன்னால்
    ஜனநாயகம் துளிர்க்கையிலே,
    கடவுளின் தூதர் சொன்னால்
    கனவுகளும் மெய்ப்படாதா?

    மாமனிதர் வார்த்தைகளில்
    மகத்துவம் முகிழ்க்குமென்றால்,
    மாந்திரீகச் சாமியாரால்
    மயிரும் உயிர்த்தெழாதா?

    ஒன்றும் விளங்காத வினவே…
    ஒன்றை மட்டும் தெரிந்துகொள்.
    நம்பிக்கை வேதமொன்றே
    நலம் தரும் புரிந்துகொள்.

    ***

    பங்காரு பாவாடைக்குள்
    பாவங்கள் புழுத்துப் போகும்.
    கல்கியின் பாதத்தின் கீழ்
    கண்ணீரும் பொன்னாய் மாறும்.

    சிரி சிரியின் சுவாசம் பட்டால்
    சித்தமெல்லாம் சுத்தம் ஆகும்.
    ஜக்கியின் நேர் காணல்தான்
    ஜகஜ்ஜாலம் செய்து போகும்.

    மாயியைக் கட்டிக்கொண்டால்
    மாயையெல்லாம் விட்டுப்போகும்.
    சாயியின் படுக்கை கூட
    செம்பொன் வைரக் குட்டி போடும்.

    சங்கரனின் சிண்டுக்குள்ளே
    சிக்கல்கள் அவிழ்ந்துபடும்.
    தேவநாதன் கலவி செய்தால்
    தெய்வச்சிலை மறத்துப்போகும்.

    மூன்றாம் நாள் உயிர்த்தெழலை
    முன்னூறு தலைமுறையும்
    எதிர்பார்த்து எமாந்தும்,
    எம் நம்பிக்கைக்கு குறைவில்லை.

    கல்லெறிந்தும் சாத்தானை
    கொன்றுபோட முடியாமல்
    உயிர்த்தெழும் விந்தையை
    வியந்து வியந்து நம்புகிறோம்.

    ஒன்றும் விளங்காத வினவே…
    ஒன்றை மட்டும் தெரிந்துகொள்.
    நம்பிக்கை வேதமொன்றே
    நலம் தரும் புரிந்துகொள்.

    ***
    அலாவுதீனின் விளக்கொளியில்
    அற்புதங்கள் தேடுகிறோம்.
    சிந்துபாத்தின் கம்பளத்தில்
    சோறு தேடிப் பறக்கின்றோம்.

    மழித்து விழும் மயிரில்கூட
    மைதாசின் கை பட்டுவிட,
    திருப்பதி உண்டியலில்
    தாலியறுத்துப் போடுகிறோம்.

    ஒன்றும் விளங்காத வினவே…
    ஒன்றை மட்டும் தெரிந்துகொள்.
    நம்பிக்கை வேதமொன்றே
    நலம் தரும் புரிந்துகொள்.

    ***
    உலகம் தட்டையென்று
    வேதாளம் ஓதினாலும்
    உருண்டை உண்மை விளங்க
    ஒரு மாமாங்கம் ஆனதன்றோ?

    காண்டாமணியொலியில்
    காணாமற்போன கோட்பாடுகள்.
    பாதிரிகளின் தூபங்களில்
    பாவப்படுத்தப்பட்ட டார்வின்கள்.

    வானர அனுமனுக்கு இன்று
    வடைமாலை சாத்திகொண்டே,
    டார்வினைக் கரைத்துக் குடித்து
    டாப்ரேங்க் எடுக்கிறோமே!

    நாலு வேத நம்பிக்கை
    நரம்பிலெல்லாம் பிணைந்துகொள்ள
    விஞ்ஞான வினையூக்கியில்
    விபூதியும் கலந்துகொள்ளும்.

    நீள்தொலை ஏவுகணை
    நிலவுக்குப் போகும்முன்னே
    விஞ்ஞான விவேகம் தவறி
    உடைபடும் சிதறு தேங்காய்.

    ஒன்றும் விளங்காத வினவே…
    ஒன்றை மட்டும் தெரிந்துகொள்.
    நம்பிக்கை வேதமொன்றே
    நலம் தரும் புரிந்துகொள்.

    ***
    வறுமையுள் வீழ்ந்துபோனோம்.
    வாழ்வியல் மறுக்கப்பட்டோம்.
    எத்தைத் தின்றால் தெளியும்
    எம் பித்தம் எனத்தெரிய,

    அங்குமிங்கும் அலைந்தோம்.
    ஆன்மீகத்தில் விழுந்தோம்.
    தடையில்லாப் பொருள்தேடி
    தாடிமயிரில் தவங்கொண்டோம்.

    ஏனென்று ஓர்நாள் கேட்க
    ஏதொன்றும் விளங்கிப்போகும்.
    தெரிந்து செய்யும் தவறுதான்; எனினும்
    தப்பிக்க விட்டுவிடாத வழி!

    பால் குடித்த பிள்ளையார்
    பகடி செய்தார் என்று
    எள்ளி நகையாட எமக்கு
    இத்தனைக் காலமானது.

    உண்மை ஓர் நாள் உறைக்கும்.
    உலகமெலாம் உணர்ந்துகொள்ளும்.
    அதுவரை ஆன்மீகத் தாலாட்டில்
    ஆத்மாக்கள் அயர்ந்துபோகும்!

    ***
    விஞ்ஞானத்தின் தேடல்
    வெறுமைகளல்ல; உண்மைகள்!
    வெறுமைகளை விரட்டிச்செல்ல
    வினவுகள்தான் இங்கே வேண்டும்.

    இருந்தாலும் நாங்கள் இன்று
    ஏழுகால பூஜையிருக்கிறோம்.
    சிந்திக்க நேரமில்லாத
    சோதனையிலிருக்கிறோம்.

    வேலைவெட்டி யில்லாத
    வினவே, வினவு எமக்காக;
    பொழுது நன்றாய் விடிந்தால்
    புண்ணியமாய்ப் போகும் உனக்கு!

  25. LASt WORD

    இந்த கட்டுரையில எங்கேயுமே இந்து மதம் கேவலம் மத்த மதம் ஒஸ்தின்னு எழுதல. இல்லாத ஒன்னை கற்பிதம் செய்துகிட்டு எதுக்கு கிலோமீட்டர் கணக்காக விவாதிக்கிறீங்க?
    ஆன்மீகவாதிகள் எல்லாரும் ஆன்மீகம் சரின்னு வாதாடினா பொருள் உண்டு. அதை விட்டு நான் கேவலம், அவன் என்னை விட கேவலம்னு சொன்னா அது நேரடியா நாத்திக வாதத்திற்கு வலு சேர்பதே.

    இந்த இந்துமத கோஷ்டியில ஜெமோவை தவிர புதிய இன்டலெக்ட்சுவல்சு யாருமே இல்லயா? எல்லாம் இப்படி அப்பரசிண்டுகளா இருக்காங்களே

  26. அட பாவிகளா அந்த சாமியார்களே இதை பார்த்து ஆவேசபடமாட்டார்கள்.இவனுங்க இப்படி அவேச படுராங்களே.

  27. குரான் படிக்கிறார் டோனி பிளேர்
    22nd June 2011 · 0 Comments

    லண்டன்: இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஐ.நா மற்றும் ஐரோப்பிய யூனியன் தூதராக செயல்பட்டு வருகிறார்.

    கிறிஸ்தவரான டோனி பிளேர் எந்த மதத்தின் மீதும் பற்று இல்லாமல் இருந்தார். தற்போது அவர் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானை தினந்தோறும் படித்து வருகிறார்.

    இதுகுறித்து டோனி பிளேர் கூறியதாவது: குரானை படிப்பதால் நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறேன். சர்வதேச அளவில் செயல்பட நம்பிக்கையுடையவனாக இருக்க வேண்டும். அதற்காக தினந்தோறும் குரான் படிக்கிறேன். உலக நடப்புகளை புரிந்து கொள்ளவும், குரான் போதனைகள் உதவுகிறது. இது ஒரு சீர்திருத்த புத்தகம். இதில் எல்லா விஷயங்களும் உள்ளன. அறிவியலை போற்றி, மூட நம்பிக்கைகளை நீக்கச் செய்கிறது இவ்வாறு டோனி பிளேர் கூறியுள்ளார்.

    http://kadayanallur.org/2011/06/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/

    • Same Tony Blair converted from Anglicanism to Catholicism. Does that means Catholicism is true? We can’t say that if Tony Blair endorses some book or religion, that is essentially true. Wake up man!

    • குரான் படிக்கிறார் டோனி பிளேர்//

      படிக்கட்டுமே அதற்கென்ன. பல லட்சம் இராக்கிய குழந்தைகளை கொன்னவன்தான் இந்த டோனி பிளேர். குரானை படிப்பதினால் மட்டுமே அவனை நல்லவன் என்று சொல்லிவிடலாமா! அல்லது முஸ்லீமாக மாறிவிடுவதனாலேயே அவனை அல்லா மன்னித்துவிடுவார் என்பதும் சரியானதுதானா!

    • I saw one poster at Kathipara… There they have quoted that Carl Sagan (American cosmologist). It is saying Hinduism alone is correct according to modern science. Whenever a popular figure like Rehman, Cat Stevens, Rick Allen, Ford, Obama, Blair, etc follows other religion or converts, people belonging to the host religion try to use this as a “proof” that their religion is superior.

      But I feel that there is nothing like religion being superior. All religions are inferior when compared to basic humanism. wake up or perish in your ignorance…

      Well said Pilavu…

  28. எனக்கு ஒரு சந்தேகம்
    சிந்தனையை ஒருமுகப்படுத்துவதுதான் தியானம், அதை அப்படியே அடுத்த கட்டத்திற்கு வளர்த்தால், சிந்தனையற்ற மனமே பேராணந்தம் என்று சொல்லப்படுகிறது. என்னுடைய இந்த புரிதல் சரி என்றறல், சிந்தனையற்ற மனம் என்பது சாத்தியமா?, பொருள், சமூகம், சிந்தனை மூன்றும் இயங்கிகொண்டே இருப்பதல்லவா, பொருட்கள் இயங்கிகொண்டே இருக்கின்றன, சமூகமும் இயங்கிகொண்டே இருக்கின்றது. இதில் சிந்தனையை மட்டும் இயங்காமல் செய்வது என்பது, இயங்கியலுக்கு முரனானதல்லவா? அறிவியலுக்கு எதிரானதல்லவா? இது சாத்தியமா?

  29. சிந்தனையற்ற மனமே பேராணந்தம் என்று சொல்லப்படுகிறது

    Who told u this ?

    First define sinthanai. Then, proceed to find out whether the sinthanai used in the above quote s the same as u hav defined. I mean, what those Rishis and buddhist and Jain monks did refer to when they said, if indeed they hav said – I dont know, u shd know – s true, that meditation s successfully rewarding only when it reaches of a state of emptiness bereft of all sinthanai ?

    In Western Philosophy, for e.g, the French Philsopher Rene Descartes said,

    I THINK THEREFORE I AM.

    Meaning our existence is nil if v lose our faculty of thinking. V r alive only as long as v think. The above quote also means that only when our faculty of thinking works, v become conscious of our self and acts. Else, there s no self. W/o self, there s madness. All mad men lose their consciousness of being a self.

    In that sense, the mad man and the newly born baby r dead human beings. The baby comes to live only when it starts thinking at its level. Here, thinking even means the ability to distinguish its own mother from among a group of women.

    So, u may first define what u mean by sinthanai Venthan.

    • ஆற்றல், வீரம், இதெல்லாம் மூளையோடு தொடர்புடையது என்றும், அன்பு, பாசம், காதல் இதெல்லாம் இதயத்தோடு தொடர்புடையது என்றும் ஒரு தவறான கருத்து உள்ளது, உண்மையில், இதயம் என்பது ஒரு இரத்தம் வந்து போகும் ஒரு பம்பிங் ஸ்டேஷன். அனைத்திற்கும் மூளைதான் காரணம்.

      சிந்தனை என்பது மூளையின் ஒரு தன்மை.

      lenin wrote
      “matter is not a product of mind, But mind itself is the highest product of matter”

      குருவி கூடு கட்டுவதைப்போல் மனிதன் கூடு கட்ட முடியாது, ஆனால் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், குருவி அப்படியேதான் கூடு கட்டும், மனிதனோ, பல முன்னேற்றங்களை அடைந்துவிட்டான். ஒன்றை பற்றி முன்கூட்டியே சிந்திக்கும் ஆற்றல் மனிதனுக்கு மட்டுமே உண்டு. இந்த சிந்தனை என்பது சூழலைப்பொருத்து அமைகிறது.

      சிந்திப்பவனே மனிதன் என்றார் பெரியார்.

      மேலும் சிந்தனை என்பது இயங்கி கொண்டே இருப்பது. அதில் மாற்றம் வந்து கொண்டே இருக்கும். இது இயக்கவியலின் அடிப்படை விதி.

      குழந்தைகளுக்கும், மனம் பிறழ்ந்தவர்களுக்கும் அவர்கள் அளவில் சிந்தனை உண்டு என்றே நினக்கிறேன், அவர்களால் அதத வெளிப்படுத்த முடியவில்லை அல்லது நம்மால் அதை உணரமுடியவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம் இல்லையா?

      பிறந்த குழந்தை பால் வாசனையின் மூலம் தாயை உணரும தானே, ஆனால் அதற்கு அதை வெளிப்படுத்த தெரியாது. (எனக்கு தெரிந்த சிந்தனையின் வரையறை இதுதாங்க, விளக்கம் குடுத்துக்கிட்டே போகலாம், ஆனால் சாரம் இதுதுதான்)

  30. 368. மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை

    முதல் மனிதர் களிமண்ணால் படைக்கப்பட்டார் என்றும், அவரிலி ருந்து ஒரு பெண் படைக்கப்பட்டார் என்றும், அவ்விருவரிலிருந்து மனித குலம் பல்கிப் பெருகியது என்றும் இஸ்லாம் கூறுகிறது. மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்பதற்கு மாற்றமாக இஸ்லாம் கூறுவது ஏன்? மனிதன் களிமண்ணால் படைக்கப் பட்டான் என்பதற்கு என்ன சான்று?
    என்பன போன்ற கேள்விகள் எழலாம். மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்ற தத்துவம் கடவுளை மறுப்பதற்கு உதவுவதால் அதைச் சிலர் ஏற்றிப் போற்றுகிறார்களே தவிர அது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை அல்ல. வெறும் அனுமானமேயாகும்.
    ‘சில உயிரினங்கள் காலப் போக்கில் வேறு உயிரினமாக வளர்ச்சி பெற்று வந்தன. பல கோடி ஆண்டுகளில் குரங்கு என்ற இனமாக ஆனது. அதன் பின்னர் பல கோடி ஆண்டுகளுக்குப் பின் குரங்கு பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் என்ற படைப்பு உருவானது’ என்பது தான் டார்வினின் கொள்கை!
    எந்தக் குரங்காவது மனிதனாக மாறியதைப் பார்த்து விட்டு டார்வின் இப்படி முடிவு செய்தானா என்றால் நிச்சயமாக இல்லை.
    குரங்குக்கும், மனிதனுக்கும் இடையே உருவ அமைப்பில் மிகுந்த ஒற்றுமை இருப்பது தான் டார்வினின் இந்த அனுமானத்துக்குக் காரணமாக அமைந் தது எனலாம்.
    அறிவியல் அறிவு குறைவாக இருந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் இதை நம்பினால் அதில் ஆச்சர்யம் இல்லை. இன்றைய அறிவியல் உலகில் அதை நம்புவது ஆச்சர்யமாக இருக்கிறது.
    உருவ அமைப்பில் வேண்டுமானால் குரங்கு மனிதனுக்கு நெருக்கமான வடிவம் பெற்றிருக்கலாம். ஒரு மனிதனின் இரத்தத்தை இன்னொரு மனிதனுக்குச் செலுத்துகிற காலத்தில் நாம் வாழ்கிறோம்.
    மனித இரத்தங்கள் கிடைக்காத சூழ்நிலையில் வேறு உயிரினங்களின் இரத்தத்தை மனிதனுக்குச் செலுத்த முடியுமா என்று ஆய்வு செய்தனர். குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இரத்தமும் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமானதாக இல்லை. பன்றியின் இரத்தம் தான் மனிதனின் இரத்தத்துடன் அதிக அளவு பொருந்திப் போனது. அனேகமாக எதிர்காலத்தில் மனிதனுக்கு பன்றியின் இரத்தம் செலுத்தப்பட முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தாலும் அவ்வாறு செலுத்த முடியாது என்று முடிவு செய்தாலும் எந்த உயிரினங்களின் இரத்தத்தை விடவும் பன்றியின் இரத்தம் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமாக வுள்ளது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
    மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் பெற்றவனாக இருந்தால் குரங்கின் இரத்தம் தான் மனிதனின் இரத்தத்துக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்க வேண்டும். ஆடு, மாடு போன்ற பிராணி களின் இரத்தம் மனித இரத்தத்திலிருந்து எந்தளவு வேறுபடுகிறதோ அதே அளவுக்கு குரங்கின் இரத்தமும் வேறுபட்டுள்ளது.
    குரங்கிலிருந்து மனிதன் தோன்றி யிருக்கவே முடியாது என்பதற்கு மறுக்க இயலாத சான்றாக இந்தக் கண்டுபிடிப்பு அமைந்துள்ளது. உருவ அமைப்பை வைத்து எதிலிருந்து பிறந்தான் என்று முடிவு செய்வதை விட இது அறிவியல் பூர்வமானது.
    இன்றைக்கும் கூட தந்தையின் தோற்றத்தில் மகன் இல்லாத போது டி.என்.ஏ. சோதனை மூலம் இவன் தான் தந்தை என்று முடிவு செய்கிறோம். தோற்றத்தைக் கணக்கில் கொள்வதில்லை.
    டார்வின் காலத்தில் இரத்தங்களின் மூலக்கூறுகளை வகைப்படுத்தும் அறிவு இல்லாத போது ஊகமாக அவன் சொன்னதை மன்னிக்கலாம். அறிவியல் வளர்ந்த இந்தக் காலத்திலும் அதைத் தாங்கிப் பிடிப்பது சரி தானா?
    இருதய மாற்று அறுவையிலும் இன்று மனிதன் முன்னேறி வருகிறான். இதயம் செயல்பாடில்லாமல் போனால் செயற்கை இதயம் பொருத்தக்கூடிய அளவுக்கு முன்னேறி விட்டான்.
    வேறு பிராணிகளின் இதயம் மனிதனுக்குப் பொருந்துமா என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு பொருந்தினால் எத்தனையோ இதய நோயாளிகளுக்கு மறுவாழ்வு கிடைக்கும்.
    ஒவ்வொரு பிராணியின் இதயத்தை யும் ஆராய்ச்சி செய்த போது குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இதயமும் மனித உடலுக்குப் பொருந்தாது என்பதைக் கண்டறிந்தனர்.
    ஆச்சரியமாகப் பன்றியின் இதயம் தான் மனிதனின் இதயத்துடன் பெரு மளவு ஒத்துப் போவதைக் கண்டுபிடித் துள்ளனர். பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்தும் நிலை ஏற்பட்டாலும், அது சாத்தியமற்றது என அறிவிக்கப்பட்டாலும் மற்ற பிராணி களின் இதயத்தை விட பன்றியின் இதயம் மனித இதயத்துக்கு நெருக்கமாக இருப்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
    மனிதன் எந்தப் பிராணியில் இருந்தாவது பரிணாமம் பெற்றான் என்று கூறுவதாக இருந்தால் பன்றியிலிருந்து பரிணாமம் பெற்றான் என்று கூறுவதே அதிகப் பொருத்தமாகும். டார்வின் கூறும் உடலமைப்பை விட உள்ளுறுப்புகளின் அமைப்பை அடிப்படையாகக் கொள்வது அறிவியலுக்கு அதிக நெருக்கம் உடையதாகும்.
    இன்றைய மனிதன் மரபணுச் சோதனையிலும் முன்னேறி விட்டான். ஜீனோம் இரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டான்.
    குரங்கின் மரபணுக்களையும், மனிதனின் மரபணுக்களையும் சோதனை செய்து பார்த்து இரண்டும் ஏறத்தாழ ஒத்திருக்கின்றது என்று நிரூபணம் செய்யப்பட்டிருந்தால், அல்லது வேறு எந்தப் பிராணியின் மரபணுவும் மனிதனின் மரபணுவுக்கு ஒத்ததாக இல்லை என்று உறுதி செய்யப் பட்டிருந்தால் டார்வினின் தத்துவத்தை ஓரளவுக்காவது நம்பலாம். அப்படி எந்த நிரூபணமும் இல்லை.
    இன்னும் சொல்வதானால் ஜீனோம் கண்டுபிடிப்புக்குப் பின் முழு மனித குலமும் ஒரு ஆப்பிரிக்கத் தாய் தந்தையிலிருந்து தோன்றியவர்கள் தான் என்பதைக் கண்டுபிடித்து விட்டனர்.
    குறிப்பிட்ட கால கட்டத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குரங்கு கள் மனிதர்களாக மாறின என்பது டார்வினின் தத்துவம்.
    மனிதன் ஒரு தாய் தந்தையிலிருந்து பிறந்தவன் என்ற தத்துவம் உலக சகோதரத்துவத்தை ஏற்படுத்த உதவும். குலம், இனம், நிறத்தின் பெயரால் மனிதனுக்கிடையே ஏற்றத்தாழ்வு கற்பிப்பதைத் தடுக்கும்.
    டார்வினின் தத்துவத்தைத் தாங்கிப் பிடிப்பது மனித குலத்துக்குக் கேடு விளைவிக்கும்.
    என்னுடைய முதல் தந்தையும், உன்னுடைய முதல் தந்தையும் வேறு வேறு எனக் கூறி இன்று நிலவும் வேறுபாட்டை நியாயப்படுத்த முடியும்.
    இதையெல்லாம் விட மனிதன் உடல் அமைப்பால் மனிதன் என்ற பெருமை யைப் பெறவில்லை. பகுத்தறிவால் தான் பெறுகிறான்.
    உடல் வளர்ச்சிக்கும், உடலமைப்பில் மாறுதலுக்கும் தான் டார்வின் காரண காரியங்களைக் கூறுகிறான். பகுத்தறிவு இல்லாத உயிரினம் பகுத்தறிவு உள்ள தாக மாறுவதற்குரிய சூழல், நிர்ப்பந்தம் எது என்று டார்வின் கூறவே இல்லை.
    ஒட்டகச்சிவிங்கி சிறிய கழுத்தைப் பெற்றிருந்ததாம். அதற்குத் தேவையான உணவுகள் உயரமான இடத்தில் இருந்ததால் கழுத்தை நீட்டி, நீட்டி வந்ததால் படிப்படியாக கழுத்துப் பெரிதாகி பல கோடி வருடங்களில் இப்போது நாம் காண்பது போல் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டது என்று டார்வினிஸ்டுகள் கூறுகின்றனர்.
    உலகில் உயிர் வாழ்வதற்கு நீண்ட கழுத்து அவசியம் என்ற நிர்ப்பந்த நிலையில் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டது என்பதை ஒரு வாதத்துக்காக ஒப்புக் கொள்வோம். இந்த வாதத்தின் படி உயிர் வாழ்வதற்கு நீண்ட கழுத்து அவசியம் என்ற நிர்ப்பந்தத்தால் ஒட்டகச் சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டது. ஆனால், உயிர் வாழ்வதற்குப் பகுத்தறிவு அவசியம் என்ற நிர்ப்பந்தம் ஏதும் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு தேவையே இல்லை.
    பகுத்தறிவு இல்லாத ஜீவன் உயிர் வாழவே முடியாது என்ற நிர்ப்பந்தம் எப்போதாவது இருந்ததா? எனவே பகுத்தறிவு இல்லாத ஜீவன் பகுத்தறிவுள்ள ஜீவனாக மாறுகின்ற எந்த நிர்ப்பந்தமும் எந்தக் காலக் கட்டத்திலும் இருந்ததில்லை.
    உயிர் வாழ்வதற்குப் பகுத்தறிவு அவசியம் இல்லை என்னும் போது பரிணாம வளர்ச்சியினால் உடல் மாறலாமே தவிர பகுத்தறிவு என்பது வரவே முடியாது,
    ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டதற்கு டார்வின் கூறும் காரணத்தை யும் நாம் ஏற்க முடியாது. யானையின் தும்பிக்கை ஏன் நீண்டது? கங்காருவின் வயிற்றில் ஏன் பை வந்தது? யானை மூக்கை நீட்டியதால் தும்பிக்கையாகி விட்டது என்பார்களா?
    பரிணாம வளர்ச்சியினால் பல கோடி ஆண்டுகளில் குரங்கு மனிதனாக மாறியது என்றால் அந்த வளர்ச்சி தொடராமல் நின்று போனதற்கு என்ன காரணம்?
    தினம் சில குரங்குகள் உலகின் ஏதாவது ஒரு பகுதியில் மனிதனாக மாறிக் கொண்டே இருக்க வேண்டும்; அல்லது தினந்தோறும் சில தாய் குரங்குகள் மனிதக் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும்.
    ஏன் அது தொடரவில்லை? இதற்கும் டார்வினிஸ்டுகளிடம் பதில் இல்லை.
    மனிதன் பரிணாமம் பெற்று ஏன் இன்னொரு மேல் நிலையை அடையக் காணோம் என்பதற்கும் பதில் இல்லை.
    மனிதனின் இரத்தம், இதயம், ஈரல், சிறுநீரகம் போன்ற உள் அமைப்புகளும், மரபணுக்களும் ‘மனிதன் தனி இனம்; எந்த இனத்திலிருந்தும் அவன் பரிணாமம் பெற்றிருக்க முடியாது’ என்பதை உறுதிப்படுத்துகின்றன.
    (இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:30, 3:59, 4:1, 6:2, 6:98, 7:189, 15:26, 15:28, 22:5, 23:12, 30:20, 32:7, 35:11, 37:11, 38:71, 39:6, 40:67, 49:13, 55:14)

    onlinepj.com

    • //எந்தக் குரங்காவது மனிதனாக மாறியதைப் பார்த்து விட்டு டார்வின் இப்படி முடிவு செய்தானா என்றால் நிச்சயமாக இல்லை.// அதாவது எந்த ஒரு குரங்கும் தன் வாழ்நாளில் மனிதனாக மாறாது, அல்லது மனிதக்குட்டியை ஈன்றெடுக்காது. அதற்கு பல குரங்கு தலை முறைகள் கடந்திருக்க வேண்டும், அதேபோல மனிதனின் அடுத்த பரிணாம வளர்ச்சிக்கு இன்னும் பல கோடி மனித தலைமுறைகள் வேண்டும். இப்பொழுது அதை அனுமானிக்க முடியாது.

      டார்வின், உலகின் முதல் உயிரில் இருந்து மனிதன் வரையிலான வரைபடத்தை வரைந்து, ஒன்றிலிருந்து மற்றொன்று மாறியதற்கான காலக்கட்டத்தையும் குறித்தார். அதைபார்த்து அன்று எல்லோரும் சிரித்தார்கள், ஏனென்றால், மதகருத்துப்படி உலகம் தோன்றியே இத்தனை ஆண்டுகள் தான் என்று ஒரு கணக்கு இருந்தது. ஆனால் டார்வின் வரைபடத்தின்படி உலகம் இத்தனை(நம்பர் தெரியல) ஆண்டுகள் என்று வந்தது. இரண்டும் பொருந்தவில்லை, டார்வினுக்கே இது குழப்பத்தை ஏற்படுத்தியது. உண்மை என்னவென்றால், உயிரியலில் டார்வின் அடைந்த உயரத்தை புவியியலில் யாரும் அடையவில்லை, புவியின் வயதை அறிவியல் பூர்வமாக கண்டுபிடித்த பிறகு, டார்வின் குறித்த காலமும், புவியின் வயதும் ஒத்துபோவதை கண்டார்கள்.

      டார்வின் தன் ஆய்வின் மூலம் கண்டவற்றை அப்படியே பதிவு செய்தார். அது சரியா தவறா என்பது அதுத்தடுத்த ஆய்வுகளின் மூலமே உறுதிசெய்யப்படும். களிமண்ணில் இருந்து மனிதன் படைக்கப்பட்டான் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் நீங்கள் சொல்லவில்லை. டார்வினின் பரிணாமக்கோட்பாட்டை மறுப்பதாலேயே நீங்கள் சொல்வது உண்மையாகிவிடாது அல்லது நீங்கள் சொல்வதை உண்மை என்று நிரூபிப்பதற்காக பரிணாமக்கோட்பாட்டை மறுக்க முயற்சிக்கிறீர்கள்.

      • குரங்கு மனிதனாக பல கோடி ஆண்டுகள் தேவைப்படும் என்று வைத்து கொண்டாலும் சில நிமிடங்களே வாழும் பல உயிரின படைப்புகள் சில ஆண்டுகளில் பல கோடி கோடி தலைமுறைகளை தாண்டி விடும்.அதிலாவது ஒரு உயிரினம் பிரிதொரு உயிரினமாக மாற்றமடைந்துள்ளதா? என்பதை விளக்கவும்.

        • Definitely there are evidences for mutations and evolutions in micro-organisms. See, many bacterias are becoming drug resistant. They adapt to survive to a newly introduced anti-biotic in few years. How can you explain that?

          There were no record of HIV in recent past. Only a mutation or adaptive evolutions is the explanation for HIV becoming wide spread.

          First learn basic science before you contest anything related to science. Don’t assume that some holy book is word-by-word correct and then discredit science/history/philosophy…

          Just tell me this, why Muhammad told that
          1. in a house-fly, one wing has disease and other wing has cure?
          2. the child will resemble the parent who reach climax first in sex?
          3. sperm is produced in back-bone of humans?
          4. camel urine as medicine?
          5. sex with underage girl?
          6. female genital mutilation (female circumcision)?

        • ஒன்றுமில்லாததிலிருந்து
          ஒன்றாய்;
          காரிருளிலிருந்து
          பேரொளியாய்;
          பெரு வெடிப்பாய்;
          கொதி நெருப்பிலிருந்து
          நன் நீராய்;
          கலந்திடும் காற்றாய்;
          மழைதரு முகிலாய்;
          மின்னற் கீற்றாய்;
          ஓர் செல்லுயிராய்,
          நீரில் நீந்தி,
          தரையில் விதைந்து,
          மரமாய் மலர்ந்து,
          விலங்காய் ஊர்ந்து,
          தத்தித் தவழ்ந்து,
          விலங்காகி, பின்
          மனிதனாகி…

          மொத்தத்தில்
          நீளிருளிலிருந்து
          மனிதன்.
          மீண்டும் அவனே அவனை
          மிருகமாக்கி கொள்ளாத வரை!

    • //மனிதன் ஒரு தாய் தந்தையிலிருந்து பிறந்தவன் என்ற தத்துவம் உலக சகோதரத்துவத்தை ஏற்படுத்த உதவும்.//

      முதலில் யூதர்களும் நீங்களும் ஒன்னா இருக்க கத்துக்குங்க!

  31. http://onlinepj.com/books/islam-penkalin-urimayai/

    பெண்களின் விவாகரத்து உரிமை:-
    ஆண்களுக்கு இருப்பது போல் விவாகரத்துச் செய்யும் உரிமை பெண்களுக்கு இஸ்லாத்தில் இல்லை என்று முஸ்லிமல்லாதார் தவறாகக் கருதிக் கொண்டுள்ளனர். பெண்களுக்கும் அந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதை அறியாததால் தான் அவர்கள் இவ்வாறு கருதுகின்றனர். விவாகரத்துச் செய்யும் முறையில் தான் இருவருக்குமிடையே வித்தியாசங்கள் உள்ளனவே தவிர உரிமையில் வித்தியாசம் ஏதுமில்லை.
    இஸ்லாத்தை அறியாத முஸ்லிம் பெயர் தாங்கிகள் சிலரால் இந்த உரிமை இன்று மறுக்கப்பட்டாலும் அதற்காக இஸ்லாத்தைக் குறை கூற முடியாது.
    ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ் என்பாரின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ, நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்’ என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி ‘சரி’ என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் ‘தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு’ என்றார்கள்.
    அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
    நூல்கள்: புகாரி 5273, 5277
    மேற்கண்ட செய்தியிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நடைமுறையை அறியலாம்.
    ஒரு பெண்ணுக்கு கணவனைப் பிடிக்காவிட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர், அவள் கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையைத் திரும்பக் கொடுக்குமாறும் அந்த மஹர் தொகையைப் பெற்றுக் கொண்டு கணவன் அவளை விட்டு விலகுமாறும் கட்டளையிட வேண்டும்; திருமணத்தையும் ரத்துச் செய்ய வேண்டும் என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.
    பெண்கள் தாமாகவே விவாக ஒப்பந்தத்தை முறித்து விடாமல் தலைவர் முன்னிலையில் முறையிடுவது அவசியமாகின்றது. ஏனெனில் பெண்கள் கணவர்களிடமிருந்து ஊரறிய மஹர் தொகை பெற்றிருப்பதாலும், அதைத் திரும்பவும் கணவனிடம் ஊரறிய ஒப்படைக்க வேண்டும் என்பதாலும் இந்த நிபந்தனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    மேலும் விவாகரத்துப் பெற்ற பின்னால் அதிக சிரமத்துக்கு அவர்களே ஆளாக நேர்வதால் அத்தகைய முடிவுக்கு அவர்கள் அவசரப்பட்டு வந்து விடக் கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு அவசியமாகின்றது. சமுதாயத் தலைவர் அவளுக்கு நற்போதனை செய்ய வழி ஏற்படுகின்றது. இதனால் சமுதாயத் தலைவரிடம் தெரிவித்து விட்டு அவர் மூலமாகப் பிரிந்து கொள்வதே அவளுக்குச் சிறந்ததாகும்.
    பெண்கள் விவாகரத்துப் பெற இதை விட எளிமையான வழி எங்குமே காண முடியாததாகும். இந்த இருபதாம் நூற்றாண்டில் கூட வழங்கப்படாத உரிமையை இஸ்லாம் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே வழங்கி விட்டது.
    இவ்வாறு பெண்கள் விவாக விடுதலை பெற மிகப் பெரிய காரணம் ஏதும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலே கண்ட செய்தியில் அப்பெண்மணி கணவர் மீது எந்தக் குறையையும் கூறவில்லை. தனக்குப் பிடிக்கவில்லை என்றே கூறுகிறார். அதற்கு என்ன காரணம் என்று கூட நபியவர்கள் கேட்கவில்லை. காரணம் கூறுவது முக்கியம் என்றிருந்தால் நபியவர்கள் கட்டாயம் அதைப் பற்றி விசாரித்திருப்பார்கள். அவர்கள் ஏதும் விசாரிக்காமலேயே விவாகரத்து வழங்கியதிலிருந்து இதை உணரலாம்.
    குடிகாரக் கணவனை, கொடுமைக்கார கணவனைப் பிடிக்காதவர்கள் மட்டுமின்றி எவ்விதக் காரணமுமின்றி கணவனைப் பிடிக்காவிட்டால் கூட கணவனைப் பிரியலாம் என்பதையும் மேற்கண்ட சம்பவம் தெளிவுபடுத்துகின்றது.
    இஸ்லாம் திருமணத்தைப் பிரிக்க முடியாத பந்தமாகக் கருதவில்லை. மாறாக வாழ்க்கை ஒப்பந்தமாகவே அதைக் கருதுகிறது.
    இதைத் திருக்குர்ஆன் ‘உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்?’ (4:21) என்றும்
    பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. (2:228) என்றும் கூறுகிறது.
    பெண்களுக்கு விவாகரத்துச் செய்யும் உரிமை வழங்கப்படா விட்டால் அதனாலும் பல தீய விளைவுகள் ஏற்படும்; ஏற்படுகின்றன.
    கணவனைப் பிடிக்காத பெண்கள் விவாகரத்துச் சட்டம் கடுமையாக இருப்பதால் கணவரையே கொலை செய்யும் நிகழ்ச்சிகள் அதிகமாகி வருகின்றன.
    பெண்கள் ஸ்டவ் வெடித்துச் செத்தால், விஷம் கொடுக்கப்பட்டு கணவர்கள் கொல்லப்படுகிறார்கள். நன்றாகத் தான் படுத்தார். காலையில் பிணமாகி விட்டார் என்று கூறப்படுவதில் கனிசமானவை மனைவியரால் செய்யப்படும் கொலைகளாகும். சமையல் அவர்கள் கையில் இருப்பதால் எளிதாகக் கதையை முடிக்கிறார்கள்.
    அல்லது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை வெட்டிக் கொலை செய்கின்றனர். கணவனிடமிருந்து எளிதாக விவாகரத்துப் பெற்று, தனக்கு விருப்பமானவனைச் சட்டப்படி மணந்து கொள்ள வழியிருந்தால் இது போன்ற கொடூரம் நடைபெறாது.
    எனவே தான் ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் விவாகரத்துச் சட்டத்தை இஸ்லாம் மிக மிக எளிமையாக்கியுள்ளது.
    ஆண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் இஸ்லாம் பெண்களுக்கும் உரிமை வழங்கியுள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

    • //ஏனெனில் பெண்கள் கணவர்களிடமிருந்து ஊரறிய மஹர் தொகை பெற்றிருப்பதாலும், அதைத் திரும்பவும் கணவனிடம் ஊரறிய ஒப்படைக்க வேண்டும் என்பதாலும் இந்த நிபந்தனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.///

      mr. மாலிக் என்ற களிமண்,

      ஆண்கள் தலாக் தலாக் தலாக் என்று கூறி (அதாவது சமுதாய தலைவரிடம் தெரிவிக்காமலேயே) பெண்களை தன்னிச்சையாக விவாகரத்து செய்யும்போதும் இதே பிரச்சினை உள்ளதே, அதற்கென்ன சொல்கிறீர்.

  32. ஹிஜாப்
    பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இஸ்லாமிய வழக்கில் இது ஹிஜாப்’ என்றும் நம் நாட்டில் பர்தா, புர்கா, துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது.
    முஸ்லிமல்லாதாரின் விமர்சனத்துக்கு இலக்காகும் பிரச்சனைகளில் இதுவும் முக்கியமானதாகத் திகழ்கின்றது.
    ‘ஹிஜாப் என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும், அவர்களது உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது!’ என்று முற்போக்குவாதிகளும் அறிவு ஜீவிகளும் கூறுகின்றனர். எப்படியும் வாழலாம் என்று கருதும் பெண்டிரும் இந்தப் போலித் தனமான சுதந்திரத்தில் மயங்கி விடுகின்றனர்.
    ஹிஜாப்’ என்பது உண்மையில் பெண்களைக் கௌரவிப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே தவிர அவர்களது உரிமையைப் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது அன்று.
    இது பற்றி விளக்குவதற்கு முன்னால் இவர்களின் போலித்தனத்தையும் இவர்கள் தங்களின் கூற்றுக்குத் தாங்களே முரண்படுவதையும் இனம் காட்ட வேண்டியுள்ளது.
    ஹிஜாபை எதிர்ப்பவர்களின் போலித் தனம்
    ஹிஜாப் என்பது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவது எனவும், கூடுதல் சுமை எனவும் கூறுவோர் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஆடை விஷயத்தில் ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதேசுதந்திரத்தை அவர்கள் பெண்களுக்கும் அளிக்க வேண்டும். ஆனால் சமத்துவம் பேசும் அவர்கள் கூட அவ்வாறு அளிக்கத் தயாராக இல்லை.
    உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு ஆடவன் சட்டை பனியன் போன்ற மேலாடை எதுவுமின்றி வெறும் அரை நிக்கர் மட்டும் அணிந்து தனது வேலைகளைப் பார்க்கிறான். பலர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். அதே உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி மேலாடை ஏதுமின்றி பணிபுரியவோ, பலருக்கும் காட்சி தரவோ அனுமதிக்கப்படுவதில்லை. தம் மனைவியை, தம் தாயை, தம் சகோதரியைப் பிறர் முன்னிலையில் இந்த அளவு ஆடையுடன் காட்சி அளிக்க முற்போக்குவாதிகள் உட்பட எவரும் அனுமதிப்பதில்லை.
    அது போல் நடுத்தர வர்க்கத்து, அல்லது மேல் மட்டத்து ஆடவன் ஒருவன் மேலாடை ஏதுமின்றி வெளியில் காட்சி தராவிட்டாலும் வீட்டிற்குள் குடும்பத்தினர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். எல்லா நேரங்களிலும் இவ்வாறு இல்லா விட்டாலும் கடினமான வேலையின் போதும் கடுமையான கோடையின் போதும் இந்தக் கோலத்துடன் இருப்பதுண்டு. அதே வர்க்கத்துப் பெண்கள் இவ்வாறு இருப்பதற்கு அனுமதிக்கப் படுகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை.
    அன்னிய ஆடவர்கள் முன்னிலையில் மட்டுமின்றிக் குடும்பத்து ஆடவர்கள் முன்னிலையில் கூட இந்த நிலையில் பெண்கள் காட்சி தருவது கிடையாது. ஏன் குடும்பத்துப் பெண்கள் முன்னிலையில் கூட அவ்வாறு காட்சி தர அனுமதிக்கப்படுவது கிடையாது. முற்போக்குவாதிகள் உட்பட எவருமே இதை அனுமதிக்க மாட்டார்கள்.
    ‘ஆண்களை விடப் பெண்களிடம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் கூடுதலாக உள்ளன என்பதை அப்பெண்களும் உணர்ந்துள்ளனர்; ஆண்களும் உணர்ந்து உள்ளனர்’ என்பதற்கு இந்தப் போக்கு ஆதாரமாக அமைந்துள்ளது.
    ஹிஜாபை விமர்சனம் செய்பவர்களிடம் நாம் கேட்கிறோம்; ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்பது இப்போது எங்கே போயிற்று? பெண்களின் சுதந்திரம் இப்போது என்னவாயிற்று? முழு அளவுக்கு இல்லையானாலும் ஓரளவுக்கு இவர்களும் ஹிஜாபை வற்புறுத்தவே செய்கின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
    பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான பாகங்களை மறைக்க வேண்டும் என்பதை தங்களது நடவடிக்கையின் மூலம் இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். மறைக்கும் அளவு எது என்பதில் தான் நமக்கும் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு. சரி நிகர் சமானம் என்பதிலோ, பெண்களின் சுதந்திரம் என்பதிலோ அல்ல.
    ஏனெனில் அவர்களும் கூட ஆண்களுக்கு இருக்கும் அதே அளவு சுதந்திரத்தை இந்த விஷயத்தில் பெண்களுக்கு வழங்கி விடவில்லை.

    பெண்களுக்கு பாதுகாப்பு
    இனி ஹிஜாப் எவ்வாறு பெண்களுக்குப் பாதுகாப்பாகவும், அவர்களைக் கவுரவிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதைக் காண்போம்.
    ஆண்கள் பெண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும் படைக்கப் பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும் இரு பாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.பெண்களின் நிறம், அழகு, இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத் தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்கின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு இது தான்.
    பெண்களின் ரசனை இத்தகையது அன்று. ஆண்களின் உடலுறுப்புக்களின் கவர்ச்சியில் அவர்களின் ரசனை செல்வது கிடையாது. இதன் காரணமாகத் தான் ஆண்கள் எவ்வளவு குறைந்த அளவு ஆடையுடன் காணப்பட்டாலும் பெண்கள் பார்த்து ரசிப்பதில்லை. திரும்பப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை.
    ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதிலிருந்தும் ஆண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக ஆக்க முடிவதில்லை என்பதிலிருந்தும் கூட இதை அறியலாம். ஆண்களும், பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே அவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.
    அழகான அன்னியப் பெண்ணிடம் எதை எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு இதில் எந்த உரிமையும் கிடையாது.
    பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதைக் காண முடிகின்றது. இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.
    ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.
    பெண்களைப் பார்த்து ஆண்கள் ரசிப்பது போலவே பெண்களும் ஆண்களை ரசிக்கவே செய்கிறார்கள் என்று சிலர் கூறுகின்றனர். இந்த வாதத்தை உண்மையென்று ஒப்புக் கொண்டாலும் கூட ஹிஜாபை மறுப்பதற்கு இவ்வாதம் வலுவானதன்று
    ஏனெனில் ஆண்கள் பெண்களை ரசித்து விட்டுப் பெண்களின் விருப்பமில்லாமலேயே பலவந்தமாக அவர்களை அனுபவித்து விட முடியும். பெண்கள் ஆண்களை ரசிப்பதாகவே வைத்துக் கொண்டாலும் ஆண்கள் விரும்பாத வரை பெண்களால் ஆண்களைப் பலவந்தமாக அனுபவித்து விட முடியாது.
    இந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. ஆனால்அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை. அவளது விருப்பத்திற்கு மாறாகப் பலவந்தமாக அவள் அனுபவிக்கப்படும் போது அவளது உரிமையும், பெண்மையும், தன்மானமும் பாதிக்கப்படுகின்றன. கற்பழித்த குற்றத்துக்காக தண்டிக்கப்படுவோம் என்று அஞ்சும் கயவர்கள் அவளைக் கொன்றும் விடுகின்றனர். ஹிஜாபைக் குறை கூறுவோர் இதைச் சிந்திப்பதில்லை.
    பெண்ணுரிமை இயக்கங்களும், முற்போக்கு வாதிகளும் நாட்டில் தினந்தோறும் நடக்கும் கற்பழிப்புக்களையும் பெண்களுக்கெதிரான கொடுமைகளையும் கண்டிக்கின்றனர். ‘இச்செயல்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்; அரபு நாட்டுச் சட்டம் இங்கும் வேண்டும்’ என்றெல்லாம் கூறுகின்றனர். ஆனால் ஆண்களைத் தூண்டும் வகையில் பெண்களின் உடை அமைந்திருப்பதும் இந்த நிலைக்கு முக்கியமான காரணம் என்பதை மறந்து விடுகின்றனர். காரணத்தை மறந்து விட்டுக் காரியத்தை மட்டும் கண்டிக்கின்றனர்.
    பெண்ணுரிமை இயக்கங்களும் முற்போக்குவாதிகளும் ஆபாச சினிமா மற்றும் சுவரொட்டிகளுக்கு எதிராகப் போராடுவதையும் ஆபாச சுவரொட்டிகளைக் கிழிப்பதையும், சாயம் பூசி மறைப்பதையும் நாம் காண்கிறோம். இது எதை உணர்த்துகிறது? பெண்கள் ஆண்களை விட அதிகப்படியாக உடலை மறைக்க வேண்டும் என்பதை இவர்களின் உள் மனது ஒத்துக் கொள்வதை உணர்த்தவில்லையா?
    பெண்களை அதிகப்படியான ஆடையணிவித்து மூடி வைப்பது அவர்களின் சுதந்திரத்திலும் உரிமையிலும் குறுக்கிடுவதாகும் என்று முழங்கும் இவர்கள் ஆபாசப் போஸ்டர்களைக் கிழிப்பதும் கண்டிப்பதும் ஏன்?
    பெண்ணுரிமையைப் பயன்படுத்தியே அப்பெண் (நடிகை) அப்படிக் காட்சியளிக்கிறாள். அது அவளது சுதந்திரம்; அவளது ஒப்புதலுடன் தான் அக்காட்சி வெளியிடப்படுகிறது; அதை அவளும் பார்க்கிறாள் எனும் போது இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டிப்பதும் கிழிப்பதும் இவர்கள் கூற்றுப்படி அப்பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திலும், உரிமையிலும் தலையிடுவதாகாதா?
    பெண்ணுரிமை வெறி முற்றிப் போனது தான் அவள் இப்படி ஆபாசமாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் என்பதை இவர்கள் மறந்தது ஏனோ?
    எனவே இவர்களது கூற்று இவர்களது செயல்களுக்கு முரணாகவே அமைந்துள்ளது. பெண்களின் உடல் மறைக்கப்பட்டாக வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதையே இவர்களது உள் மனதும் ஒப்புக் கொள்கிறது என்பதை இவர்களது செயல்களே காட்டுகின்றன.
    இவ்விடத்தில் எழும் மற்றொரு சந்தேகத்தை விளக்கியாக வேண்டும்.
    பெண்களின் முழு உடலும் ரசிக்கத்தக்கதாக இருக்கும் போது முகத்தையும், கைகளையும் கூட மறைத்துத் தானே ஆக வேண்டும் என்ற கேள்வி நியாயமானது தான். அதை விட நியாயமான காரணங்களுக்காகவே இஸ்லாம் இந்த இரண்டு உறுப்புகளையும் மறைக்காமலிருக்கச் சலுகை வழங்கியிருக்கின்றது.
    ஆண்களாயினும், பெண்களாயினும் அவர்களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக் குறைவே. பெரும்பாலோர்ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள முக்கியக் காரணம் தமக்குத் தெரிந்த மனிதர்களிடம் தம் மதிப்பு, பாதிக்கப்படும் என்று அஞ்சுவது தான். இந்த அச்சத்தினாலேயே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். உள்ளூரில் ஒழுக்கமாக நடப்பவர்கள் வெளியூர்களில் ஒழுக்கம் தவறி விடுவதற்கு இது தான் காரணம்.
    முகத்தையும் ஒரு பெண் முழுமையாக மறைத்து விட்டால் அவள் யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். தன்னை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள் எனும் போது அவள் ஒழுக்கம் தவறுவதற்கான துணிவைப் பெற்று விடுகின்றாள். எந்த ஆணுடன் அவள் தனித்துச் சென்றாலும் அவள் யாரென்று தெரியாததால் அவனுடைய மனைவியாக இருப்பாள் என்று உலகம் எண்ணிக் கொள்ளும். முகத்தையும் மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டால் தவறு செய்யத் தூண்டுவதற்கு வழி செய்து கொடுக்கப்பட்டதாகவே ஆகும்.
    ஆண்கள் கூட முகமூடி அணிந்து எவரும் கண்டு கொள்ளாத வகையில் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டால் அவனது சுய ரூபமும் அப்போது வெளிப்படும். இறையச்சம் இல்லா விட்டாலும் சமூகத்தைப் பற்றிய அச்சமாவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தூண்ட வேண்டும்.
    மேலும் முகத்தையும் மறைக்கக் கட்டளையிட்டால் முஸ்லிம் பெண்கள் மட்டுமின்றி முஸ்லிமல்லாத பெண்களும் கூட தவறு செய்யும் போது முகத்தை மறைத்துக் கொள்ளும் நிலைமை ஏற்படும். அப்படியும் சில பகுதிகளில் நடப்பதை நம்மால் அறிய முடிகின்றது.
    பெண்கள் மட்டுமின்றி தவறான செயல்களில் ஈடுபடும் ஆண்கள் கூட பெண்களைப் போல் முகம் மறைத்து பல தவறுகளைச் செய்யக் கூடிய நிலமையும் ஏற்படலாம்.
    எனவே தான் பெண்களின் முகம் ரசிக்கத்தக்கதாக இருந்தும், மிக மோசமான விளைவுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்காகத் தான் முகத்தை மறைக்குமாறு இஸ்லாம் கட்டளையிடவில்லை.
    நபித்தோழியர் எவரும் தாங்கள் யார் என்று அடையாளம் தெரியாத வகையில் முகத்தை மறைத்துக் கொண்டதில்லை என்று வரலாற்று நூற்களில் காண்கிறோம்.
    கொடுக்கல், வாங்கல் இன்ன பிற அலுவல்களில் ஈடுபடக் கைகள் மிகவும் அவசியம். அவற்றையும் மறைத்துக் கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட இயலாத நிலை ஏற்படும். இதனால் தான் மணிக்கட்டு வரை கைகளை மறைத்துக் கொண்டு மற்ற பகுதியை மட்டும் மறைக்காமலிருக்கலாம் என்று இஸ்லாம் அனுமதிக்கின்றது.
    இதைத் தவிர மற்ற பாகங்கள் கண்டிப்பாக ஆண்களின் ஒழுக்கத்திற்குச் சவால் விடக் கூடியவை. அப்பாகங்களைத் திறந்து காட்டுவதால் எந்தப் பயனுமில்லை. அன்னியப் பெண்களைத் தடையின்றிப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான ஆசை கொண்டவர்களே பெண்களை அரை நிர்வாணத்துடனும் கால் நிர்வாணத்துடனும் நடைபோட அனுமதி கேட்கின்றனர்.
    முகமும், கைகளும் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவது பெண்களின் முன்னேற்றத்துக்கு தடை எனக் கூறுவதும் ஏற்கக்கூடிய வாதமன்று.
    இந்த நாட்டிலும் உலகின் பல நாடுகளிலும் பிரதமர்கள், ஜனாதிபதிகள், மாநில முதல்வர்கள் எனப் பல்வேறு பதவிகளை வகிக்கும் ஆண்கள் முகம், கை தவிர மற்ற பகுதிகளை முழுமையாகவே மறைத்துள்ளனர். ஆயினும் அவர்கள் பெரும்பதவிகளை வகிக்க இது தடையாக இருக்கவில்லை.
    பெரும் பதவி வகிக்கும் எந்த ஆணும் இடையில் தொப்புள் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவதில்லை. முட்டுக்கால் வரை கவுன் அணிந்து கால்களைக் காட்டிக் கொண்டிருப்பதில்லை.
    ஆனால் ஆண்களை விடக் குறைவான அளவு பெண்கள் மறைப்பதைச் சுதந்திரம் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?
    அடுத்தவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற வக்கிர எண்ணத்திற்கு சுதந்திரம் எனப் பெயர் சூட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது.
    ஆண்கள் குறைவான அளவு மறைத்தாலும் கேடுகள் ஏற்படாது. அவ்வாறு இருந்தும் ஆண்கள் நிறைவாக ஆடை அணிந்து முன்னேறுகிறார்கள். குறைவான அளவு ஆடையால் அடுத்தவரைப் பாதிக்கும் உடலமைப்புக் கொண்ட பெண்கள் நேர் மாறாக நடப்பது தான் நமக்கு வியப்பாகவுள்ளது.
    இன்னொன்றையும் இங்கே நாம் சுட்டிக் காட்ட வேண்டும். ஹிஜாப் என்பது குறிப்பிட்ட நிறம், மற்றும் வடிவத்திலானது அல்ல. எந்த நிறத்திலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம். முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.
    கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும், சமூகத்தில் ஒழுக்கம் நிலை பெறவும் தான் ஹிஜாப் என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளது. மேலை நாடுகளில் வழங்கப்பட்ட ஆடை சுதந்திரம் ஏற்படுத்திய விளைவுகளைக் கண்ட பிறகும் எவரும் ஹிஜாபைக் குறை கூற முடியாது.

  33. dear valventhan

    உங்கலிடம் ஒரு கேள்வி

    இந்த பூமீஇல் ஒவ்வொரு மனிதன் பிரக்கும் போது பூமீஇன் எடை அதிகரிக்குமா ?

    could you explain that

    • என்ன இது! கட்டுரைக்கு பொருந்தா விவாதத்தை ஆரம்பிச்சி வைக்கிறீங்க..! இருந்தாலும் பரவாயில்லை.

      என்னுடைய பதில் : அதிகரிக்காது.

      காரணம் : ஆற்றல் அழிவின்மை விதிப்படி, ஒரு ஆற்றம் இன்னொரு ஆற்றலாகத்தான் மாறமுடியும். மனிதன் விண்வெளியில் பூமியின் ஈர்ப்பு சக்திக்கு அப்பாற்பட்ட ஓரிடத்திலிருந்து வந்து விழுந்துவிடவில்லை. ஒரு மனித ஆற்றல்தான் இன்னொரு மனித ஆற்றலாக உருவெடுக்கிறது. அது வளர்ச்சி அடைவதற்கு இந்த பூமியின் பொருட்களை பயன்படுத்திக்கொள்கிறது.

      என்னுடைய கேள்வி:

      உலகத்தில் தற்போது தோராயமாக 600 கோடி பேர் உள்ளனர் என்று வைத்துக்கொள்வோம். அத்தனை பேரையும் விண்வெளிக்கலங்களில் ஏற்றி பூமியின் ஈர்ப்பு சக்தியைத் தாண்டிய பகுதியில் வேறு வேறு கிரகங்களில் கொண்டு போய் விட்டுவிட்டால்… அதன்பின் பூமி எப்போதும் போலவே சுற்றிக் கொண்டிருக்குமா? அதன் ஈர்ப்பு சக்தியில் மாற்றமிருக்குமா? விண்வெளிக்குள் இழுத்துக்கொள்ளப்பட்டுவிடுமா?

      • முந்தையது என் நினைவில் இருந்த கருத்துக்கள். நண்பர்களிடம் பேசியபின் அறிந்து கொண்ட விஷயம், பூமியின் நிறை எப்போதும் மாறாது என்பதே! பூமியின் எடை என்பது சூரியன் மற்றும் அருகிலுள்ள கிரகங்களின் ஈர்ப்பு தொடர்பிலான விஷயம். எடை கூடுமா என்று கேட்பதை விட நிறை அதிகரிக்குமா என்ற கேள்வியே சரியானது. அதற்கான பதில் : அதிகரிக்காது என்பதே!

  34. ஓஷோவை எந்த அடிப்படையில் விமர்சிக்கிறீர்கள் என்று தெரியவில்லை, ஓஷோ பாலுறவை பற்றி பேசியது அவர் மொத்தமாக பேசியவற்றில் பத்து சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருக்கும், ஆனால் முழு உலகமும் அதை மட்டுமே பிடித்து தொங்கி கொண்டுள்ளது, கட்டடற்ற பாலுறவை அவர் பிரச்சாரம் செய்து பேசவில்லை. அவர் பேசியதெல்லாம் பாலுணர்வு என்பது அடக்கபட வேண்டியதில்லை, அது இயல்பானது , அது பாவகரமானது அல்ல என்றுதான் பேசி வந்துள்ளார். அடக்கப்பட்ட ஒன்று அசிங்கமாகவே மாறும் என்பதே அவரின் மையகருத்து. பாலுணர்வை அடக்குவதன் மூலம் அதிலிருந்து வெளியே வர இயலாது, முழுமையாக அனுபவிப்பதன் மூலம் எளிதாய் வெளியே வரலாம், ஒடுக்குவதின் மூலம் அல்ல எனபதே அவ்ரின் கருத்து. மதங்களை பொறுத்தவரை ஓஷோ எப்பொழுதும் நிறுவனப்படுத்தபட்ட மதங்களுக்கு எதிராகவே பேசி வந்துள்ளார், நிறுவனபடுத்தபட்ட மதங்கள் உண்மையான இலக்கை நோக்கி உங்களை எடுத்து செல்லாது என்றே கூறி வந்துள்ளார்.இந்து மற்றும் கிறிஸ்துவ மதங்களை தொடர்சியாய் அவர் விமர்சித்தே வந்துள்ளார் தன்னை யாரையும் பின்பற்றும்படி எப்போதும் அவர் கூறியதில்லை, உண்மை என்னிடம் இருந்து கிடைக்காவிடில் வேறு இடங்களுக்கு செல்லுங்கள் என்றே கூறியுள்ளார். அவர் தன் வாழ்க்கையில் குருடருக்கு கண் தருவது போன்ற எந்த ஒரு அற்புதத்தையும் நிகழ்த்தியதில்லை, மேலும் இது போன்ற நபர்களை அவர் கண்டித்தே வந்துள்ளார்.

    //. வாழ்வின் வற்றாத இன்பங்களைத் தேடி அலைந்த மேலைநாட்டவருக்கு இவர் வடிகாலாகத் திகழ்ந்தார்.//

    வற்றாத இன்பங்களை அல்ல வாழக்கையின் உண்மையை தேடியவர்களுக்கு அவர் ஒளியாய் மட்டுமே இருந்தார், கண்களாய் அல்ல. அவரிடம் வந்தவர்கள் தங்கள் கண் கொண்டே உண்மையை உணர்ந்தனர். அவ்வளவு ஏன் பெரியாருடன் ஒப்பிட தகுந்தே ஒரே ஆன்மீகவாதி அவர்தான். நான் முதலில் ஓஷோவை படித்த பின்னரே பெரியாரை படிக்க ஆரம்பித்தேன் எனக்குள் எந்த ஒரு முரண்பாடும் ஏற்படவில்லை சொல்ல போனால் மகிழ்ச்சியும் ஒரே விதமான கருத்தையே நிறைய இடங்களில் பேசியுள்ளனர் என்ற உணர்வுமே ஏற்பட்டது. கீழே உள்ள இணைப்பை சொடுக்கி படிக்கவும்.

    http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=3790:2010-02-19-09-02-08&catid=1:articles&Itemid=264

    என்னுடைய கருத்து தங்களுக்கு புரியும் என நினைக்கிறேன். நீங்கள் எழுதியிருப்பதை பார்த்தால் அவர் என்ன சொன்னார் என்று கூட உங்களுக்கு தெரியவில்லை என்றே நினைக்கிறேன். சிறு வயது முதலே கலகத்தின் வழி வந்தவர் ஓஷோ. பொத்தாம் பொதுவாக அவரை மற்றவர்களுடன் சேர்த்து சேறடிக்க வேண்டாம். அவரது மதவாதிகளும், அரசியல்வாதிகளும் என்ற நூலை படிக்கவும் அவரை பற்றிய பொதுவான ஒரு பிம்பம் தங்களுக்கு கிடைக்கும்.

  35. பகவான் சாயிபாபாக்குச் சொத்து ஏன்?
    23rd June 2011

    சத்திய சாயிபாபா என்றும் பகவான் பாபா என்றும் பக்தர்களாலும், பக்தியைப் பரப்பி மக்களை மடத்தனத்தில் ஆழ்த்தி பணம் பறிக்கும் முதலைகளான ஊடகங்களாலும் புகழப்படும் சிறீமான் சாயிபாபா 4 வார காலம் படுத்த படுக்கையாகக் கிடந்து, செயற்கைப் பிராண வாயு (வென்டிலேட்டர்) அளிக் கப்பட்டு, படிப்படியாக ஒவ்வொரு உறுப்பும் பழுதுபட்டு, அதிகபட்ச துன்பங்களை அடைந்து பரிதாபமாக மரணம் அடைந்தது – மனிதாபிமானம் உள்ளவர் களால் வருத்தப்படக் கூடியதே!

    1) அதே நேரத்தில் பகவான் என்று சொல்லிக் கொள்பவர் – இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்ததிலிருந்தே பகவான் என்று கூறுவதெல்லாம் அசல் பொய் மூட்டை என்பதை உணருவதற்கு பாபா ஒரு உதாரணப் புருசர் ஆகிவிடவில்லையா? சிந்திக்கலாம்.

    2) பகவான் சாயிபாபா என்பவருக்குச் சொத்து ஏன்? தங்கக் கட்டிகள் ஏன்? வைரக் கற்கள் ஏன்? வங்கிக் கணக்கு ஏன்? இவை எல்லாம் இல்லா மலேயே சாதித்துக் காட்டினால் தானே பகவான் என்று சொல் லுகிறார்களே, அதில் கொஞ்சம் அர்த்தம் இருக்கும் போலிருக் கிறது என்று எண்ணத் தோன்றும்.

    சாயிபாபா செத்துப் போன ஒன்றரை மாதங்களுக்குப்பிறகு சாயிபாபா தங்கி இருந்த அறை (யஜீர் வேத மந்திரம் என்று அதற்கு நாமகரணமாம்.) சாயிபாபா அறக்கட்டளை உறுப்பினர்கள் முன்னிலையில் தக்க பாதுகாப்புகள் ஏற்பாட்டில் திறக்கப்பட்டுள்ளது (16.6.2011)

    98 கிலோ தங்க நகைகளும், 307 கிலோ வெள்ளி நகைகளும், வைர நகைகளும், ரூ.11 கோடியே 56 லட்சம் ரொக்கப் பணமும் கிடந்தனவாம். இதைத் தவிர உலக நாடுகள் பலவற்றிலும் உள்ள சொத்துக்கள், வங்கி இருப்புகள் எல்லாம் சேர்ந்தால் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பாம்.

    கடவுள் நிலையில் வைத்து மதிக்கப்பட்டவருக்கு இவ்வளவு சொத்துக்கள் ஏன் தேவைப் பட்டன என்ற கேள்வி சாதாரண மனிதனுக்குக்கூட ஏற்படக் கூடிய சாதாரண கேள்வியாகும்.

    உடலுழைப்பாலோ தொழிற்சாலை வைத்தோ, வியாபாரம் செய்தோ இவ்வளவு சொத்துக்களையும் அவர் சேர்க்கவில்லை.

    மக்களின் மூடத்தனம்தான் அவர்தம் முதலீடு! சாகசமும் – தந்திரமும்தான் அவர் கையாண்ட தொழில் திறன்! பச்சையாகச் சொன்னால் மக்களை ஏமாற்றிச் சுரண்டியது தான் இவ்வளவு பெரும் தொகை.

    இந்த ஏமாற்றுப் பேர்வழி யிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகளும், குடியரசு தலைவரும், பிரதமரும் மண்டியிட்ட நிலையை நினைத்தால் மக்களின் தரமும், நாடும் எந்தக் கெதியில் உள்ளன என்பதை உணர்ந்து கொள்ளலாம். பகுத்தறிவுப் பிரச்சாரத்தின் தேவையையும் கணித்து விடலாம்.

    3) அந்த அறையில் ஏராளமான தங்கச் சங்கிலிகளும் மோதிரங்களும் இருந்தனவாம். புரியவில்லையா? கை அசைப்பில் சங்கிலி யையும், மோதிரங்களையும் கொண்டு வருவதாக ஏமாற்றி வந்தாரே – அவை எல்லாம் எந்த வெங்காயமும் கிடையாது.

    இத் தொழிலுக்கான கையிருப்பு தான் அறையில் கிடந்த அவை! இந்த சங்கிலி மோதிரங்களைத்தான் கையில் மறைத்து வைத்து சாதுர்யமான முறையில் வேகமான கை அசைப்பில் (Quickness) கொண்டு வருவதுபோல் காட்டி மக்களை மயக்கி, அசத்தும் செயலாகும்.

    பிரதமர் நரசிம்மராவ் கலந்து கொண்ட விழா ஒன்றில் கை அசைப்பில் சங்கிலி எப்படி வந்தது என்பது வீடியோவில் பதிவாகி, ஊர் சிரித்தது என்பதையும் நினைவுக்குக் கொண்டு வருதல் நல்லது.

    http://kadayanallur.org/2011/06/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A/

  36. dear rishi

    http://onlinepj.com/books/ariviyal_sanrukal_2/

    ஈர்த்திழுக்கும் பூ கரம் :
    ஆறு மாதக் கைக்குழந்தை ஒன்றை மார்போடு அணைத்துக்கொண்டு கடைத் தெரு வழியாக நடந்து செல்கிறாள் ஒரு பெண். அவளின் மற்றொரு பிள்ளையாகிய ஐந்து வயது சிறுவன், அவளுடைய கையைப் பிடித்தவாறு அவளுடன் சென்று கொண்டிருக்கிறான். அவளுடன் நடந்து செல்லும் அந்தச் சிறுவன் தன் தாயின் கைகளைப் பற்றியவாறே கடைவீதிக் காட்சிகளை இரசித்துக்கொண்டே அவளுடன் சுதந்திரமாகச் சென்று கொண்டிருக்கலாம். அதை அவனுடைய தாய் தடுப்பதில்லை. ஆயினும் அவன் எப்போதேனும் கடைகளை நெருங்கிச்சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடைகளை நோக்கி நகரத் தொடங்கினால் அவனுடைய தாயின் கரம் உடனே அவனைத் தன் பக்கம் இழுத்துக்கொள்ளும். அப்போது மட்டுமே தனது தாயின் பிடியிலேயே தான் இருந்து வருவதாகவும் தனது அசைவுகள் தனது தாயால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதையும் அவனால் உணர முடிகிறது.
    இதைப் போன்றே அந்தத் தாயின் மார்பில் தவழ்ந்து கொண்டிருக்கும் குழந்தையும் கடைத் தெருக் காட்சிகளை இரசிப்பதற்காக தன் உடலைப் பலவாறு திருப்பலாம். அதை அதன் தாய் தடுப்பதில்லை. ஆனால் அக்குழந்தை எப்போதாவது குதூகலத்தால் தாயின் மார்பிலிருந்து துள்ளிக் குதிக்க முயன்றால் அப்போது அந்தத் தாயின் அரவணைப்பு மேலும் சற்று இறுக்கமாகும். அப்போது மட்டுமே அக் குழந்தைக்கு தாமும் தம்முடைய தாயின் அரவணைப்பால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளோம் என்பது தெரியவரும்.
    இதைப் போன்றே நாமும் நமது பூமித்தாயின் அரவணைப்பில் அதனுடன் சென்றுகொண்டிருக்கிறோம். நமது அன்றாட வாழ்வியல் நடவடிக்கைகளில் அதனுடைய அரவணைப்பை நாம் உணருவதில்லை. ஆயினும் தாயின் மார்பிலிருக்கும் குழந்தை கடைத் தெருவைப் பார்த்துத் துள்ளிக் குதிப்பதைப்போல் நட்சத்திரங்களைப் பார்த்து வானை நோக்கி நாம் குதிக்க முயற்சித்தால் பூமித்தாய் உடனே நம்மை அவள்பால் இழுத்து அணைத்துக் கொள்ளும். குழந்தை வளர்ந்து ஆளான பிறகு அதன் தாய் அதனை சுதந்திரமாக விட்டுவிடுவதைப் போன்று நாமும் அறிவியல் வளர்ச்சி அடைந்து இராக்கெட்டில் ஏறினால் பூமித்தாயும் நம்மை சுதந்திரமாக விட்டுவிடும்.
    நமது உதாரணத்தில் இதுவரை மனிதர்களைப் பற்றிப் பார்த்தோம். மனிதர்கள் மட்டுமன்றி விலங்கினங்களாயினும் அல்லது உயிரற்ற பொருட்களாயினும் பூமியின் மணிக்கு கிட்டத்தட்ட 1800 கி.மீ. எனும் (சுழல்) வேகத்தில் சுழல்வ தால் அதன் மீதிருக்கும் பொருட்கள் உயிருள்ளவையா யினும், உயிரற்றவையாயினும் சிதறடிக்கப்படாமல் அவை களை இருக்கும் இடத்திலேயே இருக்க வைப்பது பூமியின் ஈர்ப்பு விசையே ஆகும். இப்போது இந்த அறிவியலை அற்புதமாக எடுத்துரைக்கும் வான்மறையின் தேர்ந்தெடுத்த வார்த்தைகள் இதோ :
    “உயிருடன் உள்ளோரையும் இறந்தோரையும் அணைத்துக் கொள்ளக்கூடியதாக பூமியை நாம் ஆக்கவில்லையா?
    (77:25,26)
    எவ்வித மறுவிளக்கமும் இன்றி “பூமியை ஈர்ப்பு விசை உள்ளதாகவே இறைவன் உருவாக்கியுள்ளான் என்பதே இந்த சின்னஞ் சிறு வசனங்களின் பொருள் என்பதை விளங்கிக் கொள்வதில் இப்போது யாருக்கும் எவ்விதப் பிரச்னையும் இருக்காதன்றோ? எவ்வளவு மகத்தான அரிய அறிவியல் உண்மைகளையெல்லாம் இறை ஞானத்தின் வெளிப்பாடாக எவ்வித ஆர்பாட்டமோ, ஆராவாரமோ இன்றி முழுமையான அமைதியுடன் திருக்குர்ஆனின் தேர்ந்தெடுக் கப்பட்ட வசனங்களில் இழையோடிக்கொண்டிருக்கிறது என்பதை மிக மிகத் தெளிவாக நம்மால் அடையாளம் காண முடிகின்றதோ!
    பூமியின் அணைப்பில் ஆழ்ந்து கிடக்கும் அறிவியல்:
    ஒன்றை ஒன்று அணைப்பதற்குத் தேவைப்படும் உறுப்புகளாம் கைகள் இல்லாமலே விந்தைமிகு அறிவியல் கரமாம் ஈர்ப்பாற்றலால் பூமி நம்மை அணைப்பதாக திருக் குர்ஆன் கூறியிருக்கும் இந்த `அணைத்தல் எனும் சொல்லின் இலக்கியச் சுவையின் தித்திப்பு நாம் எடுத்துக் காட்டிய `தாய் – சேய் சான்றில் இருந்து அனுபவித்திருப்பீர்கள். ஆனால் அதன் இலக்கியத்திற்குள் இருக்கும் பச்சையான அறிவியல் மேலும் ஆழமானதே எனும் உண்மையை ஏனைய விண் ணகப் பொருட்களின் ஈர்ப்பு விசை பற்றிய அறிவிலிருந்து நம்மால் பெற முடிகிறது.
    பூமி நாம் வாழ்வதற்கென்றே படைக்கப்பட்ட ஒரு கோளாகும். இதன் காரணமாகவே அதனுடைய ஈர்ப்பு விசை ஒரு இழு விசையாக நமக்குத் தோன்றாமல் நாம் அணிந்திருக் கும் உடை போன்று ஒரு இதமான அணைப்பாகத் தென்படு கிறது. (நாம் அணியும் ஆடையின் எடையை நாம் ஒருபோதும் உணர்வதில்லை.) இதற்கு மாறாக பூமியின் ஈர்ப்பு விசை நமக்கு ஒரு இழு விசையாகத் தென்பட்டால் நம்மால் இதன் மீது ஒருபோதும் வாழ இயலாது. சான்றாக ஒருவர் வியாழனுக்குச் சென்றால் அங்கு அவரால் எழுந்து நிற்கக்கூட முடியாமல் சிரமப்படுவார். ஏனெனில் வியாழனில் பூமியில் இருப்பதை விட இரண்டரை மடங்கு அதிகமான ஈர்ப்பு விசை செயல்படுகிறது. நமக்கு இதமான அணைப்பாக விளங்கும் நமது உடையின் எடையை ஒரு சிறு பிராணி – ஒரு குருவி – யின் மீது வைத்தால் அதனால் எப்படி எழுந்து நடமாட முடியாதோ அப்படிப்பட்ட நிலையே நாம் வியாழனுக்குச் சென்றால் ஏற்படக்கூடிய நிலையாகும்.
    இப்போது வியாழனுக்குப் பதிலாக சூரியனின் பொருண்மையுள்ள ஒரு கோளுக்கு ஒருவர் செல்ல நேர்ந்தால் அவருக்கு ஏற்படும் நிலைமை ஒரு சிற்றெறும்பின் மீது நமது உடையின் எடையை வைத்தால் ஏற்படும் நிலைமைக்கு ஒப்பாகும். அந்த சிற்றெறும்பு தரையோடு தரையாக அழுந்திப் போவதைப் போன்று அந்த நபர் அக்கோளின் மீது அழுத்தப்பட்டு உடல் தட்டையாக்கப் (Flat)படுவார். ஏனெனில் பூமியின் ஈர்ப்பு விசை போன்று 28 மடங்கு ஈர்ப்பு விசை அக்கோளுக்கு இருப்பதே காரணமாகும்.
    நாம் நமது உடையை இப்போது ஒரு யானையின் முது கில் போர்த்துகிறோம். அந்த யானை அதை எப்படி உணரும்? யானையால் அதை ஒரு தழுவலாக உணர முடியாது. அதை வெறும் ஒரு தொடு உணர்வாகவே உணர முடியும். இந்த நிலையே புவி வாழ் மனிதன் ஒருவன் சந்தினுக்குச் சென்றால் ஏற்படும். ஏனெனில் புவியின் ஈர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்கே நிலவில் நிலவும் ஈர்ப்பு விசையாகும்.
    மேற்கண்ட எடுத்துக்காட்டுகளிலிருந்து பூமியின் ஈர்ப்பு விசை மனிதர்களாகிய நம்மைப் பொருத்தவரை ஒரு `அரவணைப்பைப் (Embracing) போன்றே செயல்படுகிறது எனும் கருத்து நவீன வானவியலின் விரிவான எல்லைகளைத் தொட்டு நிற்கும் ஆழமான அறிவியல் உண்மை என்பதை ஐயமறக் கண்டு தெளிந்தோம். திருக்குர்ஆனடைய இந்த அறிவியல் அது வழங்கப்பட்ட காலத்தில் வாழ்ந்த தலை சிறந்த அறிவியல் மேதைகளால் கூட கற்பனை செய்ய இயலாத அளவிற்கு ஆழ, அகலங்களைக் கொண்டதே இந்த அறிவியலாகும் என்பதையும் ஐயமறத் தெரிந்து கொண்டோம். இருப்பினும் இந்த அறிவியலை நேருக்கு நேர் பச்சையாகக் கூறினால் அன்று வாழ்ந்த மக்களின் புரிந்து கொள்ளும் ஆற்றலால் (Perspicacity) எளிதில் உட்கொள்ள முடியாது என்பதால் அப்படிப்பட்ட அறிவியல் உண்மைகளை இலக் கியச் சுவைமிக்க காப்ஸ்யூல்களில் (Capsules) உட்புகுத்தி அறியாமைக் குழந்தைகளின் அறிவியல் வளர்ச்சிக்காக மருத்துவர்களையும் வெல்லும் பரிவோடு தேவைக்கேற்ப வழங்கிக்கொண்டிருக்கும் திருக்குர்ஆனின் ஈடு இணை யில்லா அதி அற்புத மேதமை இறைஞானத்தின் வெளிப் பாடே அன்றி மானிட ஆற்றலால் இயலாத காரியமே என்பதில் 1300 ஊ.ஊ மூளையைச் சொந்தமாக்கி 21-ம் நூற்றாண்டிற்குள் புகுந்துவிட்ட பின்னரும் ஒருவரால் சந்தேகப்பட முடியுமா?

  37. //ஆறு மாதக் கைக்குழந்தை ஒன்றை மார்போடு அணைத்துக்கொண்டு கடைத் தெரு வழியாக நடந்து செல்கிறாள் ஒரு பெண். அவளின் மற்றொரு பிள்ளையாகிய ஐந்து வயது சிறுவன், அவளுடைய கையைப் பிடித்தவாறு அவளுடன் சென்று கொண்டிருக்கிறான். அவளுடன் நடந்து செல்லும் அந்தச் சிறுவன் தன் தாயின் கைகளைப் பற்றியவாறே கடைவீதிக் காட்சிகளை இரசித்துக்கொண்டே அவளுடன் சுதந்திரமாகச் சென்று கொண்டிருக்கலாம். //

    appothu ethavathu RSS/Taliban theeviravaathi kundu vaithaal… ellam sethu povaargal… muthalla atha pathi pesu pa…

  38. மாலிக்கு,

    உலகம் தட்டையா? உருண்டையா? முதல்ல அதை பத்தி சொல்லு

    மாக்ஸிமம்

  39. Vinavu,

    Intha saamiyaargal ellam rayil pettigal pola… ivargalai iyakkum engine “madham”. Kurippaaga indhu madham saamiyaargalaiyum, Kiristhavam tele-evangelistukalaiyum, islam imamgalaiyum uruvaakukirathu.

    Enathu arivukku ettiyavarai, Buddharum, Jesus-um sonna karuthukkalum, avargal vaazhntha vazhkaiyum ok.

    Mattra matha karuthukkalum sari, kirshnan, murugan, sivan(inthu kadavulgal), muhammad(islamin “irai” thoothar), abraham, david (yootha, kiristhava irai thoothargal), ellam porukkithanam, kolai, kollai, palathaaram ippadipatta kevalamaana vishaiyangalai justify seikindrana. So, intha mathangalaiyum, ippadi patta matha thalaivargal/kadavulkalaiyum thadai seiya vendum…

  40. dear kalai

    அப்படி நடப்பதர்க்கு சாத்திஎம் மில்லை

    ெபண்கைள நீங்கள் விவாகரத்துச் ெசய்தால் அவர்கள் தமக்கு

  41. //ஏனெனில் பெண்கள் கணவர்களிடமிருந்து ஊரறிய மஹர் தொகை பெற்றிருப்பதாலும், அதைத் திரும்பவும் கணவனிடம் ஊரறிய ஒப்படைக்க வேண்டும் என்பதாலும் இந்த நிபந்தனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.///

    mr. மாலிக் என்ற களிமண்,

    ஆண்கள் தலாக் தலாக் தலாக் என்று கூறி (அதாவது சமுதாய தலைவரிடம் தெரிவிக்காமலேயே) பெண்களை தன்னிச்சையாக விவாகரத்து செய்யும்போதும் இதே பிரச்சினை உள்ளதே, அதற்கென்ன சொல்கிறீர்.

    dear kalai

    go to this link and read this book available pdf formate

    http://onlinepj.com/books/islam-penkalin-urimayai/

    read very well its clear your doubt.

  42. dear maximam

    பூமிஎஇன் வடிவம் பதில் உருன்டை
    அலைப்பு விடுங்கல் என் முகவரிக்கு

  43. மனிதர்களால் குறையும் பூமி
    அவர்களால் பூமி எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை அறிவோம். நம்மிடம் பாதுகாக்கப்பட்ட ஏடு உள்ளது.
    திருக்குர்ஆன் 50:4
    அல்லாஹ் உங்களைப் பூமியிலிருந்தே வளர்த்துப் பெரிதாக்கினான்.
    திருக்குர்ஆன் 71:17
    உலகில் வாழும் மனிதர்களால் பூமி குறைகிறது என்ற தத்துவம் இவ்வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் மிகப் பெரிய அறிவியல் உண்மை அடங்கியிருக்கிறது.
    பூமியில் எவ்வளவு உயிரினங்கள் உருவானாலும் அதற்குரிய எடை வெளியிருந்து கிடைப்பதில்லை; பூமியுடைய எடை குறைந்து தான் அது மனிதனாக, மிருகங்களாக, மரங்களாக, மற்ற உயிரினங்களாக உற்பத்தியாகின்றன.
    இப்படியே முளைக்கின்ற, வளருகின்ற எல்லாப் பொருள்களுமே தங்களின் எடையைப் பூமியிருந்து தான் எடுத்துக் கொள்கின்றன.
    எத்தனை கோடி மக்கள் பெருகினாலும் அதனால் பூமியுடைய எடை கூடாது. இந்த மக்களோடு சேர்த்து பூமியை எடை போட்டால் ஆரம்பத்தில் பூமியைப் படைத்த போது இருந்த எடை தான் இருக்கும். மனிதன் பூமியிருந்து தான் தனது எடையை எடுத்துக் கொண்டு வளர்கிறான் என்ற அறிவியல் உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் கூறியிருப்பதன் மூலம் இது இறைவனின் வேதம் தான் என்பது நிரூபணம் ஆகிறது.
    இதே தத்துவத்தை மற்றொரு கோனத்திலும் திருக்குர்ஆன் பின் வரும் வசனத்தில் கூறுகிறது. அவனே உங்களை ஒரே ஒருவரிருந்து படைத்தான். (உங்களுக்கு) தங்குமிடமும் ஒப்படைக்கப்படும் இடமும் உள்ளன. புரிந்து கொள்ளும் சமுதாயத்திற்குச் சான்றுகளை விளக்கியுள்ளோம்.
    திருக்குர்ஆன் 6:98
    இவ்வசனத்தில் கூறப்படும் தங்குமிடம் என்பது இந்த உலகத்தில் வாழுகின்ற பூமியைக் குறிக்கும் என்பதையும், ஒப்படைக்கப்படும் இடம் என்பது மனிதன் மண்ணுக்குள் அடக்கம் செய்யப்படக் கூடிய இடத்தைக் குறிக்கும் என்பதையும் சாதாரணமாக யாரும் புரிந்து கொள்ள முடியும்.
    ஆனால் திருக்குர்ஆன் பயன்படுத்தியிருக்கின்ற ‘ஒப்படைக்கப்படும் இடம்’ என்ற வார்த்தை மிகப் பெரிய உண்மையைச் சொல்கிறது.
    மனிதன் இந்த உலகில் சின்னஞ் சிறிய அளவில் பிறப்பெடுக்கிறான். அவன் பிறப்பெடுத்த போது இருந்த அளவை விட பலப் பல மடங்கு பெரிதாக வளர்ந்து பின்னர் மரணிக்கின்றான். அவன் பிறப்பெடுக்கும் போது இருந்த அந்த எடை பல மடங்கு பெரிதாக எப்படி ஆனது என்றால் இந்த மண்ணிருந்து சத்துக்களை அவன் பெறுவதால் தான் ஆனது.
    மண்ணிருந்து உற்பத்தியாகின்ற தானியங்கள், பருப்புகள், இன்ன பிற சத்துக்களைப் பெற்று தன்னைப் பெரிதாக்கிக் கொண்டு பூமியின் எடையை மனிதன் குறைத்தான்.
    50 கிலோ எடையுள்ள ஒரு மனிதன் வாழ்கிறான் என்றால் இவன் வாழ்வதனால் மண்ணிருந்து 50 கிலோ குறைந்து விட்டது என்பது பொருள். எங்கிருந்து இந்த 50 கிலோ எடையைப் பெற்றிருக்கின்றானோ அதனை அங்கே அவன் ஒப்படைக்க வேண்டும்.
    ஒப்படைக்கப்படும் இடம் என்று சொன்னால் இவன் பூமிக்கு உடைமையான ஒரு பொருளாக இருக்கிறான். ஏனெனில் அங்கிருந்து தான் இவன் எடுக்கப்பட்டிருக்கின்றான் என்பது கருத்து.
    மனிதன் பூமியிலுள்ள மண்ணை நேரடியாகச் சாப்பிடுவதில்லை. மண் வேறு பொருளாக மாறி அதனை மனிதன் சாப்பிட்டு தன் உடலை வளர்த்துக் கொண்டான் என்ற தத்துவத்தை உள்ளடக்கி ‘ஒப்படைக்கப்படுகின்ற இடம்’ என்ற சொல்லை அல்லாஹ் மிகப் பொருத்தமாகப் பயன்படுத்தியிருக்கிறான்.

  44. http://onlinepj.com/books/arthamulla_kelvikal/
    this book available as pdf formate

    மனிதன் களிமண்ணால் படைக்கப் பட்டானா? Molecular Biology வளர்ந்து குளோனிங் மூலம் ஒரு மனிதனைப் போன்று இன்னொரு மனிதனை உருவாக்குகிறார்கள். மனிதனின், டி.என்.ஏ. வரிசையை மாற்றியமைத்து ஐன்ஸ்டீன் போன்று அறிவுடைய, ஜஸ்வர்யாராய் போன்ற அழகுடைய மனிதனை உருவாக்க முடியும் என்கிறார்கள். இந்த Bio-Technology யுகத்தில் மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டான் என்பதை எவ்வாறு நம்ப முடியும்? விஞ்ஞானப் பூர்வமான விளக்கங்கள் உண்டா? என எனது மாற்று மத நண்பர் கேட்கிறார்?

    – ஏ. சம்சுதீன், அருப்புக்கோட்டை

  45. dear pilavu brother

    Just tell me this, why Muhammad told that
    2. the child will resemble the parent who reach climax first in sex?
    5. sex with underage girl?
    6. female genital mutilation (female circumcision)?

    those you said which hatheese and qran verses mention could you explain that

  46. dear kala,

    மனிதன் ஒரு தாய் தந்தையிலிருந்து பிறந்தவன் என்ற தத்துவம் உலக சகோதரத்துவத்தை ஏற்படுத்த உதவும்.//

    முதலில் யூதர்களும் நீங்களும் ஒன்னா இருக்க கத்துக்குங்க!

    http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/islamum_kirithavamum_verupada_karanam_enna/

  47. These problems will be solved by making some rules

    1. No other Foreign companies or foreigner cannot invest in Indian Trust or any religion.

    2. In mean time there should be a marriage laws for Muslims.

    Sure there will not a single problem like this.

  48. “மனதைக் கட்டுப்படுத்துதல், கட்டுப்படுத்தினால் இறுதியில் பேரானந்தம்’ என்பது ஆன்மீகம் என்பதற்கு இவர்கள் தரும் இலக்கணம். மனதையே ஆன்மா, ஜீவன், உடலுக்கும் உயிருக்கும் அப்பாற்பட்டது என்றெல்லாம் கற்பித்துக்கொள்கிறார்கள். இத்தகைய அரூபமான விளக்கத்தில் உண்மையோ, பொருளோ இல்லை. — DON’T TALK WITHOUT EXPERIENCE

    அறிவியல்பூர்வமாக மனது என்பது மூளையின் செயல்பாடுகளில் ஒன்று. அதே சமயம் அதற்கென்று தனித்துவமான இடமும் உண்டு. ஆனால் அது தனியாய் பிறந்து வளர்ந்து செயல்படுவதில்லை — Don’t talk theory and confuse people.

  49. எனினும் அனைவருக்குள்ளும் “வாழ்வின் உச்சத்தைத் தொட்டுவிடமுடியும்’ என்ற மாயை நீக்கமற நிரப்பப்பட்டிருக்கிறது. இந்த இலக்கு உருவாக்கும் ஆசை, ஆசை ஏற்படுத்தும் போட்டி, போட்டிக்குப் பின்னான தோல்வி… இறுதியில் சித்தத்தின் சமநிலை சீர் குலைகிறது. கிடைக்காத வாழ்க்கை மாயமானாக ஓடுகிறது. கைக்கெட்டிய வாழ்க்கையோ கறிக்கடையைச் சுற்றி வரும் நாய்போல ஏக்கத்தில் உழல்கிறது.

    தள வடிவமைப்பு மாற்றிய பிறகு நேற்றும் இன்றும் தான் பல கட்டுரைகளை ஒவ்வொன்றாக படித்துக் கொண்டு வருகின்றேன். இந்த கட்டுரை எழுதியவரை அருகில் இருந்தால் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துருப்பேன். அற்புதம்.

  50. I am software Engineer in Bangalore.

    May be spiritual Gurus go wrong..But spirituality is not wrong…. and on this article I can see simply the ploy of the individual minds magic here…nothing else…

    I was total atheist 2 Years back I literally question anything related to God/Existence and when I just open myself intensely and when experienced something beyond my understanding…It broke my logic mind and got me into cosmic space…it is not just another bluff/joke… When any human being ( irrespective of cast/creed/religion) really die hard to know the truth of this existence..then it is not far away for him

    But simple arguments like this…may help you to do time pass…not to get you (or) hit the answer at any cost… this will simply pass the life…and die one day..that’s what maximum can happen..but confusion prevails throughout the life…

    Usual questions from human mind:
    ================================
    Who is God?
    Where is God?
    What is God?
    Can I a human become a God?
    Can human being worshiped as God?

    okie…tell me who created the such question on your mind and this question exists in many generations…So to my understanding the God realization is not for Mass and it is limited only for individual ( don’t ask me why.. that’s how mother nature has designed )…if someone wants answer he has to seek….Simply reading article may not help and it might comfort you and soothe you…

    If you really want to know what it is all about please email me I will try to help ( not show you :-)..because it does not work that way…Only a true guru can show you!!!) you to get some clarity

    Thanks for Reading and Shambho!!!

  51. Look up and Look at the vast sky and if you can store the complete information of sky on your mind and understand everything through the body…then a human mind/body is capable of holding everything in the Universe…But if you read two words..one word will be forgotten after sometime..that is the beauty of the mind…So with this experience of limited body and mind…talking/arguing about all these just waste of human energy…. 🙂

    But one thing I certainly say something that….in the years to come (around 6-10Yrs). You cannot stop people getting into spirituality…Even if you/me or your enemy is dead…does not matter it will happen…

    Yours humbly,
    Selva

  52. வினவு சொல்வதில் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.. ஆனால், தன்னுடைய கம்யுனிச சிந்த்தாத்தின் சிறையில் அடைபட்டு இருப்பதால, அதனால பொதுப்படையா யோசிக்க முடியல..

    குற்றம் சாட்ட எல்லாராலேயும் முடியும்.. ஆனால் தீர்வு என்ன? இதுவரை எந்த கம்யுனிஸ்ட்காரன் கிட்டயும் நான் கேட்டதில்லை.. அடிக்கனும்.. கொல்லனும்.. பொராடனும் .. இப்படித்தான் இவங்களோட சிந்தனா முறை நெகடிவா இருக்கு..

    ஸ்ரீ ஸ்ரீ இலவசமா யொகா சொல்லிக் கொடுக்க ரெடியா இருக்கார்னு வெச்சுக்கவோம்.. அவருக்கு இந்த அரசாங்கம், உதவி பண்ணுமா? இல்ல கத்துக்கிட்ட மக்கள்தான் உதவி பண்ணுவாங்களா?

    சரி.. காஞ்சி மகா பெரியவர், வாழ்நாள் முழுதும், ஒரு துறவிக்குண்டான இலக்கணத்துட, இருந்தாரே.. அவரை அங்கீகரித்து பாராட்ட வினவுக்கு மனசு வருமா?

  53. மாலிக்,நீங்கள் சொல்வதெல்லாம் சொல்லப்பட்ட வசனங்களை இன்றைய அறிவியலோடு மேட்ச் செய்யும் முயற்சி. அப்படி பார்த்தால் இந்துக்கள் சொன்ன சர்குலர் யுனிவர்ஸ், இன்றைய அறிவியலோடு ஒத்து போகிறது. அவர்களும் அவ்வாரே சொல்லக் கூடும். உலகம் உருண்டை என்பதும், சூரிய கிரணம் எதனால் நடக்கிறது என்பதும் முகமதுக்கு தெரிந்திருக்கவில்லை. அவர் சொன்ன இறை வசனங்கள் எல்லாம் “இரவில் பகலை புகுத்தினோம், பகலை இரவில் புகுத்தினோம்” என்பதுபோல் 1400 வருடத்திற்கு முன்பு வாழ்ந்த ஒரு நாடோடியின் சிந்தனை போலவே இருக்கிறது. “இறைவன்” சிம்பிளாக ஒரு வசனத்தை கூறியிருக்கலாம் அதைவைத்து இன்றைய முஸ்லிம்கள் இஸ்லாத்தின் “உண்மையை”நிரூபித்திருக்கலாம். வசனம் கீழே,

    நாம்தான் பூமியை படைத்து சுற்ற விட்டோம், சூரியனையும் சுற்றிவர விட்டோம், இதன்மூலம் பகலையும் இரவையும் தந்த்தோம். காப்பிர்கள்நம்பமாட்டார்களா

    இப்படி ஏதாவது வசனம் குரானில் இருக்கிறதா ?நான் படித்தவரை இல்லை. இதை சொல்வதற்கு இறைவனுக்கு என்ன கஸ்டம் ? அதிலும் 499ம் வருடத்திலேயே ஆர்யபட்டர் பூமி தன்னை தானே சுற்ற 24 மணி நேரம், சூரியனை சுற்றி வர 365.25 நாள் என்று தெளிவாக சொல்லி விட்டார். அதை காப்பி அடித்திருந்தாலே சரியாக சொல்லி இருக்கலாம். அடுத்து, சூரிய கிரணம். அதே ஆரியபட்டர் சூரிய கிரணம் எதனால்நடக்கிறது என்று தெளிவாக சொல்லி விட்டார். அவருக்கு 150 வருடங்களுக்கு பின் வாழ்ந்த முகமது சூரிய கிரணத்தைப் பார்த்து கியாமத் வந்து விட்டதோ என்று தொழுகை செய்ய ஓடினார். இறைவனிடம் தொடர்பு உள்ள ஒருவருக்கு இந்த அடிப்படை விசயங்களே போதிக்கப்படாதது ஆச்சரியம். சாமியாரை கடவுள் போல் நம்புவதற்கும், இறை தூதர் என்றுநம்புவதற்கும் அதிக வேருபாடு இல்லை.

  54. […] இந்தியாவிலும் இது போன்ற மதகுருக்களுக்கு துளியும் பஞ்சம் இல்லை.   புட்டபர்த்தி சாயிபாபா, கல்கி பகவான், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ, யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி, அரபிந்தோ, மகரிஷி மகேஷ் யோகி என்று பல்வேறு ஆன்மீக குருக்கள் தோன்றிக் கொண்டேதான் இருந்திருக்கிறார்கள். இந்த ஆன்மீக குருக்களில் யு.ஜி.கிருஷ்ணமூர்த்தியைத் தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் நிறுவனமாக உருமாறி, சொத்துக்கள் சேர்த்து, தங்களுக்கென்று மூளைச்சலவை செய்யப்பட்ட அடிமைகளை உருவாக்கி வந்திருக்கிறார்கள். இந்த ஆன்மீக குருக்களின் வளர்ச்சி தாராளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கைகள் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட தொண்ணூறுகளுக்குப் பிறகு ஒரு பிரம்மாண்டமான வீச்சோடு வளர்ந்தது.  தொண்ணூறுகளுக்கு முன்பு இருந்த சாமியார்கள், கார்ப்பரேட்டுகளின் தந்திரங்களைக் கையாளவில்லை.  அவர்களிடம் மூளைச்சலவை செய்யப்பட்ட பக்தகோடிகள் தாங்களாகவே சென்று சரணடைந்தார்கள். இந்த ஆன்மீக குருக்களைப் பற்றிய ஒரு நல்ல ஆய்வுக் கட்டுரை,வினவுத் தளத்தில் வெளியாகியுள்ளது. […]

  55. மிக அரிய பதிவு.நல்ல கட்டுரை.இதுபோன்ற கட்டுரையும் கட்டு உடைத்தலும் நாட்டுக்கு அவசியம் தேவைதான். எங்கே இந்த மேல்மருவத்தூர் கும்பல் செவ்வரி ஆடையுடன அலைவதை நிறுத்தப்போகிறது? இன்று முதல் வினவின் பதிவுகள் எமக்கும் வந்து சேரட்டும். வாழ்க வினவு. வளர்க அதன் பொதுத் தொண்டும், முகமூடி கிழிக்கும் எழுத்துக்களும்.

Leave a Reply to Agnost பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க