privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகதைஎங்க ஊரு சாயப்பு வாணக்காரய்யா

எங்க ஊரு சாயப்பு வாணக்காரய்யா

-

ங்க ஊர்ல வாணக்காரய்யா, வாணக்காரய்யான்னு ஒரு இஸ்லாமியர் இருந்தாரு. புதுக்கோட்டையில் இருந்து பொழப்புத் தேடி எங்க ஊருக்கு வந்தாரு. அவரைப் பத்தி எழுதணும்னு ஊருல விசாரிச்சேன், ஒருத்தருக்கும் அவரோட பேரு தெரியல. எல்லோரும் சொன்னது அவரு பேரு வாணக்காரருன்னுதான். இல்லேன்னா சாயப்பு (சாய்பு) வாணக்காரர். அதுவும் எங்க ஊருல அவரு மட்டும்தான் வெடி செஞ்சதாலயோ என்னமோ அவரோட பெயரை தெரிஞ்சிக்கணும்மனு யாருக்கும் தோணலையோ?

வாணக்காரையா
உண்மைப் படமல்ல, மாதிரிக்காக இணையத்தில் எடுக்கப்பட்டது.

இந்து மத சம்பிரதாய சடங்குகளும், சாதிய பாகுபாடும் வலுவா இருக்கும் எங்க ஊருல, இந்து மதத்தை தவிர வேத்து மததுக்காரவங்கன்னு யாரும் கெடையாது. இவர்தான் பொழப்புத் தேடி எங்க ஊருக்கு வந்த முதல் முஸ்லீம் குடும்பம். சுத்துப்பட்டுல உள்ள எல்லா ஊருக்கும் தீபாவளி, கோயில் திருவிழா, கல்யாணம், சாவுன்னு எல்லாத்துக்கும் வாணவெடி செய்றதுதான் இவரு தொழிலு. பாதுகாப்பா வெடி செய்றதால கிராமம் மட்டும் இல்லாம டவுனுலேர்ந்து கூட வந்து வாங்கிட்டு போவாங்க.

வாணக்கார அய்யா, குடும்பத்தோட எங்க ஊருக்கு வந்த போது “புள்ளக்குட்டியோட வந்துருக்காரு இவருக்கு ஏதாவது உதவி செய்யணு”ன்னு நெனச்சு ஊர் காரங்க ஒரு முடிவு செஞ்சு இருந்துட்டு போகட்டும் என்ற முடிவுக்கு வந்தாங்க.

“ஐயனார்  கோயில் எடந்தான் இருக்கு. உங்களுக்கு இஷ்டன்னா அதுல கொட்டகை போட்டுகிட்டு இருங்க”ன்னு சொன்னாங்க.

“சாமில என்னங்க இருக்கு, எல்லாத்துக்கும் மனசுதான் ஒத்துப் போகணும். புள்ளகுட்டியோட வந்த என்னை, முடியாதுன்னு சொல்லாம தங்க வச்சுக்கிறிங்க. ஐயனார நான் கும்பிட்டா ஒண்ணும் தப்பில்ல”ன்னு சொன்னாரு வாணக்காரரு. ஐயனாரு எடத்த அல்லா காட்டுன வழியா நெனச்சு தொழில ஆரம்பிச்சு அமோகமா இருந்தாரு வாணக்கார அய்யா.

ஊருகள்ள வாணக்காரய்யா வாணவெடிக்கு தனி மவுசு இருதுச்சு. ஒத்த வெடி, ஓல வெடி, அணுகுண்டு, பொதபொத வாணம் (புஸ் வாணம்), சங்கு சக்கரம், பென்சில் மத்தாப்பு, திருவிழா வெடி இவ்வளவுதான் அவர் செய்த வெடிகளோட வெரைட்டி. ஆனால் ஒவ்வொண்ணும் அவ்வளவு பாதுகாப்பா பாத்துப் பாத்து செய்வாரு. பிள்ளைகளோட பாதுகாப்பு கருதி வெடிகளோட மேல் அமைப்பு எல்லாம் களி மண்ணால செய்திருப்பாரு. சீக்கிரத்துல வெடி நமத்தும் போகாது. எந்த ஒரு வெடியும் வெடிக்கறதுக்கு ரெண்டு நிமிஷம் வரைக்கும் வெறும் மத்தாப்பு போல தான் வரும், பிறகு லேட்டாதான் வெடிக்கும். வெடிக்காத பென்சில் மத்தாப்புலக் கூட பாதி வரைக்கும் தவுடுதான் இருக்கும். அல்லா புண்ணியத்துலயோ அய்யனாரு புண்ணியத்துலயோ வாணக்காரையா சாவுற வரைக்கும் அவர் செய்த வெடியால எந்த விபத்தும் நடக்கல.

Ayyanar temple
அய்யனார் கோவில், மாதிரிப் படம்

எங்க ஊரைச் சுத்தி இருக்குற இருபது கிராமத்துக்கு மேலேருந்து இவர்கிட்ட வெடி வாங்க வருவாங்க. ஊருக்கூரு திருவிழா வெடிங்கறது சீசனுக்கு தான் நடக்கும், ஆனா சாவுக்கு வெடி கட்றது தினமும் நடக்கும். அதனால வேலை இருந்துகிட்டேதான் இருக்கும். 40 வருசத்துக்கு மேல எங்க ஊருல தொழில் பாத்தாரு. ஆனா சொத்துன்னு எதுவும் சேத்து வைக்கல. ஒரு வீடு கூட சொந்தமா இல்ல. வேலையாளுக்கு நல்ல சம்பளம் கொடுப்பாரு. பசின்னு வர்றவங்களுக்கு சாப்பாடு போடுவாரு. ஊரு விசேசத்துக்கு நல்லா செய்வாரு. ரொம்ப நல்ல மனிதர்.

எங்க ஊருல சேவை சாதி, தாழ்த்தப்பட்ட சாதி குடும்பத்திலிருந்து தொழில் செய்றவங்களுக்கு வேலைக்கி கூலி கொடுக்க மாட்டாங்க. வருசம் பூரா செய்ற வேலைக்கி அறுவடை முடிஞ்சதும் நெல்லு தான் கூலியா வாங்கிக்கணும். அதே போலதான் வாணக்கார அய்யாவும் தீபாவளிக்கு வாணவெடிய கொடுத்துட்டு அறுவடை முடிஞ்சதும் நெல்லு வாங்கிக்கணும்னு முறை வச்சாங்க.

தீபாவளிக்கு வெடி குடுத்துட்டு யாருக்கு எத்தனை மரக்கா நெல்லுக்கு வெடி குடுத்தோங்கற கணக்க நோட்டுல எழுதி வச்சுக்குவாரு. அறுவடை முடிஞ்சதும் ஒவ்வொரு வீடா போய் நெல்லு வாங்கிக்குவாரு. சாதாரண மக்கள் மரக்கால் கணக்குக்கும், பணக்கார விவசாயிகள் மூட்டை கணக்குக்கும் வெடி வாங்குவாங்க. வெளியூரு சனங்களுக்கு வெடி விக்கும் போது காசு வாங்கிக்குவாரு. கருவேப்பிலை, கொத்தமல்லி மாதிரி கொசுறா ஓல வெடியும், பென்சில் மத்தாப்பும் கொடுப்பாரு. தீபாவளி சமயத்துல வெடி விக்கிற எடத்துல பிள்ளைங்க போய் நின்னா, மிட்டாய் மாதிரி வெடிக்காத மத்தாப்பு வெடிய கையில கொடுத்தனுப்புவாரு. வியாபாரி போல இல்லாம ஊர் மக்களோட தாயா பிள்ளையா பழகுனாரு.

வெடி செய்யறதுக்கும், வெடி மருந்துகள பாதுகாக்கறதுக்கும் ஊருக்கு ஒதுக்கு பக்கமா இருக்குற தென்னந்தோப்புல ஒருத்தர் இடம் கொடுத்தாரு. செஞ்ச வெடிய தீபாவளி சமயத்துல விக்கிறதுக்கு ஊருக்குள்ள சும்மாக் கெடந்து வீட்ட ஒருத்தங்க தந்தாங்க. நாலு தாழ்த்தப்பட்ட சாதி ஆட்கள் இவர்கிட்ட வேல செஞ்சாங்க. தென்னந்தோப்புல அழகான ஒரு குடிசை போட்டு, உக்காந்து வெடி கட்ட திண்ணை போட்டு, பேட்ரி ரேடியோவ்ல பழைய எம்.ஜி.ஆர். பாட்டுப் போட்டு வேலை செய்ற அழகே தனி. இத பாக்குறதுக்குன்னே தினமும் மாடு மேய்க்க அங்கதான் போவோம்.

வாணக்கார அய்யா சாதி மதம் பாக்காம எல்லா சாதியினரிடமும் சகோதர குணத்தோட பழகுவாரு. எங்க ஊரையும், இந்து ஆதிக்க சாதி பண்டிகையையும் மதிச்சு நடந்துக்குவாரு. மதம் வேறயா இருந்தாலும், “என்னையும் சேத்துத் தானே உங்க சாமி பாத்துக்குது அதுக்கு எதுன்னா நான் செய்யணு”முன்னு முன்வருவாரு. இந்த ஊருல வியாபாரம் பாத்து பொழக்கிறதாலயும், ஐயனாரு சாமி எடத்துல குடி இருக்குறதாலயும் தானும் ஏதாவது செய்யணும்னு வருசா வருசம் ஐயனாரு திருவிழா, முருகனுக்கு மாசி மகம், பங்குனி உத்திரமுன்னு எல்லா திருவிழாவுக்கும் காசு வாங்காம வாணவெடி கட்டித் தருவாரு. சித்திரை திருநாளுக்கு முதல் நாள் இரவுலேர்ந்து மறுநாள் காலை வரைக்கும் விடிய விடிய கண்ணு முழிச்சு எந்த மனத்தடையும் இல்லாம சந்தோசமா சாமி புறப்பாட்டுல கூடவே வருவாரு. நன்றிக் கடனா ஐயனாருக்கு மட்டும் ஒரு படி கூடுதலா வெடி தருவாரு, காட்டுக்குள்ள புறப்புற்ற ஐயனாரு ஊருக்குள்ள வந்து சேர்ற வரைக்கும் விடிய விடிய வெடி சத்தத்துல ஊரே கிடுகிடுத்து போகும். பாக்க கண்கொள்ளா காட்சியா இருக்கும்.

வாணக்கார அய்யாவுக்கு மூனு பொண்ணுங்க. ஆம்பள பிள்ளை கிடையாது. அந்த பொண்ணுங்க வீட்ட விட்டு வெளிய வரவே மாட்டாங்க. முஸ்லீம் மத கட்டுப்பாட்டோட போட்ட முக்காடு எடுக்காம இருப்பாங்க. இந்த வெடித் தொழில் செஞ்சுதான் மூணு பொண்ணுவளையும் கட்டிக் குடுத்தாரு. வீட்லயே பந்தல் போட்டு ஊரு மணக்க பிரியாணி போட்டு பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சாரு. கண்ணாமூச்சி விளையாட்டு மாதிரி அந்த கல்யாணமே எங்களுக்கு வேடிக்கையா இருந்துச்சு. எங்க ஊருல ஒரு சில படித்த, நகரத்தோட பழக்க வழக்கம் வச்சுருந்த சில பெரிய மனிதர்களை தவிர, பெரும்பாலான சாதாரண மக்கள் இந்து மதத்து திருமணத்த தவிர வேறு மத திருமணத்த பாத்திருக்க வாய்ப்பில்லைதான். மொகத்துல பூப்போட்டு மூடி மறைச்சு முகமே தெரியாம நடந்த கல்யாணத்த பாக்குறதுக்கு எங்க ஊருக்கே வியப்பா இருந்துச்சு.

வாணக்காரையா தனிப்பட்ட நல்ல குணம்னா பசின்னு வர்ரவங்களுக்கு சாப்பாடு போட்றது தான். எந்த நேரமும் அடுப்பு எரிஞ்சுகிட்டேதான் இருக்கும். ஊர்க்காரவங்க யாரு அவரு வீட்டுக்கு போனாலும் சாப்புடாம விடமாட்டாங்க. பூக்காரம்மா, கூடை, மொறம் விக்கிறவங்க, வளையல் மணி விக்கிறவருன்னு பல சுமைதூக்கும் வியாபாரிங்கக் கூட சாப்பாட்டு நேரத்துக்கு சாயப்பூட்டுக்குப் போனா ரெண்டு சோறு திங்கலாம்னு போவாங்க. பாவப்பட்ட மக்க, மனுசங்க மனசறிஞ்சு சோறு போடும் பண்பு அந்த குடும்பத்துல எல்லாருக்குமே இருந்துச்சு.

இப்படி எங்கிருந்தோ வந்து ஊர் மனசுல இடம் பிடிச்சு ஊர் நல்லது கொட்டதுல கலந்துகிட்டு, இந்து முஸ்லீம் வேறுபாடு இல்லாம பழகி வாழ்ந்த வாணக்காரைய்யா 75 வயசுக்கு மேல இறந்துட்டாரு. வாழ இடம் குடுத்த ஊர் சனங்க புதைக்க எடம் கொடுக்கறதுல தயக்கம் காட்டுனாங்க. சாதிக்கு ஒரு சுடுகாடு இருக்குற எங்க ஊருல இவர் மதத்துக்குன்னு ஒரு சுடுகாடு இல்ல. அதால இவர எங்க பொதைக்கறது என்ற புது பிரச்சனை உருவாச்சு.

“நம்மோட தாயா பிள்ளையா பழகினாலும் எரிக்கிற எடத்துல பொதைக்க எப்புடி எடம் கொடுக்க முடியும். நாம பிரேதத்த கொண்டு போகும் போது கொம்பு ஊதி, தார தம்பட்ட அடிச்சு, சங்கு ஊதி கடைசி காரியம் பண்ணுவோம். அவங்க வேற மாதிரி செய்வாங்க இதெல்லாம் சரிபட்டு வராது. என்ன செய்யலாம்?” எடுத்துட்டு போங்கன்னு சொல்லவும் முடியல, ஊர்ல புது பழக்கத்த ஏற்படுத்தவும் முடியல ரெண்டுங் கெட்டான் மனசோட பேச்சுவார்த்தை ஒரு முடிவுக்கு வராம பாதி பொழுதுக்கு மேல இழுத்துகிட்டே போச்சு.

fireworksதுக்கத்துக்கு வந்த வாணக்காரையா சொந்தக்காரங்க இந்த குழப்பத்த எதிர்பார்க்கல இங்கேயே அடக்கம் செய்யணுன்னு சொல்லவும் முடியல. நடந்த கொழப்பத்த பாத்துட்டு ஊருக்கு எடுத்துட்டு போய் அடக்கம் பண்றதா சொன்னாங்க. ஆனா ஊர்க் காரங்களுக்கு தூக்கிட்டு போவச் சொல்றதுல விருப்பமில்ல. வாணக்காரையா பழகின விதமும் ஊரு நல்லது கெட்டதுல பங்கெடுத்துகிட்ட முறையும் அவரை விட்டுக் கொடுக்க மனசில்லாம செஞ்சுருச்சு. இந்த ஊரை நம்பி வந்துட்டாரு இவ்வளவு காலமா நம்மோட ஒண்ணுக்குள்ள ஒண்ணா பழகினாரு அதுவும் இல்லாம பாதில தூக்கிட்டு போனாங்கன்னா ஊருக்கு ஒரு இழுக்கா போயிரும்னு ஊர்க்காரங்க முடிவு வந்தாங்க.

“வாணக்காரையா சாதி மதம் பாக்காம எல்லார் கிட்டையும் நல்லா பழகினவரு. அவரும் இந்த ஊர்க்காரனாட்டம் கோயிலுக்கு வரி குடுத்து நல்லது கெட்டதுல கலந்துகிட்டாரு. அது மட்டும் இல்லாம அவரோட நல்ல நடத்தைக்கும், நல்ல மனசுக்கும் மதிப்பு குடுத்து நடந்துக்கணும். அவங்க ஒரு குடும்பம் இருக்குங்கறத மனசுல வச்சுகிட்டு இது வரைக்கும் நம்ம கிராமத்துல இந்து மதம் மட்டும் தான் இருந்துச்சு. இப்ப இஸ்லாம் மதமும் இருக்குன்னு ஒத்துக்கணும். அவங்க நம்ம ஊர்க் காரங்கதான்” என்று முடிவெடுத்தாங்க. எந்த சாதிக்காரங்க சுடுகாட்டுலயும் இல்லாம ஆத்துக் கரையோரமா அவங்களுக்குன்னு ஒரு தனி எடம் கொடுத்து அதுல பொதச்சுக்க சொன்னாங்க.

வாணக்காரையா இறந்ததும் அவர் மனைவி மட்டும் தனியா இருந்தாங்க. பொண்ணுங்க தன்னோட வந்து இருக்கும் படி கூப்பிட்டும் போக மறுத்துட்டாங்க. இது தன்னோட ஊரு இங்க இருக்குறவங்கதான் தனக்கு சொந்தக்காரங்க என்ற நெனப்போடு இருந்தாங்க. வெடி செய்றது கிடையாதுன்னாலும் பொண்ணுங்க குடுக்குற பணத்த வச்சுகிட்டு ஊர்க் காரங்க சில பேரு குடுக்குற நெல்ல வச்சுகிட்டு வாழ்ந்தாங்க. சும்மா இருக்க முடியாம ஊதுவத்தி செய்வாங்க. பத்து வருசத்துக்கு பிறகு நடக்க முடியாம படுத்த படுக்கையா போய்ட்டாங்க. பொண்ணுங்களுக்கு வந்து வந்து பாக்க முடியல. அதனால ஊர்க்காரங்க கிட்ட சொல்லிட்டு அந்தம்மாவ பொண்ணுங்களே கொண்டு போய்டாங்க.

அதுக்குப் பிறகு வாணக்காரையா குடும்பத்தை பத்தி எந்த சேதியும் தெரியல. இன்னைக்கும் எங்கூர்ல தீபாவளி பண்டிகையெல்லாம் பெரிய விசயமா கொண்டாடறது கிடையாது. வாணக்காரையா இல்லைங்கிறதுனாலயோ என்னமோ இப்பல்லாம் ஊருல பட்டாசு சத்தம் அதிகமாக கேக்கிறது இல்ல.

பட்டணுத்துல நான் பாத்த சிவகாசி பட்டாசெல்லாம் வாணக்கார அய்யா வெடி வகைங்களோடு ஒப்பிட்டால் ஒண்ணுமே இல்லை. ஏன்னா அந்த ஐயாவோட வெடியில சத்தம் மட்டுமில்ல, தன்னலம் கருதாக ஒரு அன்பு இருந்துச்சுன்னு இப்ப புரியுது.

சரசம்மா

(இது கற்பனைக் கதையல்ல, உண்மைச் சம்பவம்)

  1. நன்றி, இன்னைக்குதான் ஒரு உருப்படியான கட்டுரை வந்திருக்கு.

  2. Great article. Happy to see people living harmoniously without religious hatred. I salute both the great man Vanakarraiya and the great people of the village. They have proved that love has no religion.

    //“சாமில என்னங்க இருக்கு, எல்லாத்துக்கும் மனசுதான் ஒத்துப் போகணும். புள்ளகுட்டியோட வந்த என்னை, முடியாதுன்னு சொல்லாம தங்க வச்சுக்கிறிங்க. ஐயனார நான் கும்பிட்டா ஒண்ணும் தப்பில்ல”//

    This one thing is enough for TNTJ-PJ to declare that Vaanakkaaraiya is a kaffir and apostate. Their punishment for accepting another god other than allah will be death penalty.

  3. நல்ல வேலையா அந்த ஊருல ஆர்,எஸ்.எஸ் ,இந்து முண்ணனி காலிகள் இல்லை என நினைக்கிறேன்,வாணக்காரையாவின் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து மதவெறியாட்டம் போட்டு இருப்பார்கள்.

  4. ஒரு சிறுகதைக்கான உயிர்ப்புடன் இந்த பதிவு வாணக்காரய்யா போன்ற எண்ணிறந்த மக்களின் பங்களிப்புடன் பண்படுத்தப்பட்ட நமது பூமியின் ஒரு பண்பியல்பை கவனப்படுத்துகிறது. வணக்காரய்யா போன்ற சீலர்கள் அருகி வருவதும் கூட ஆர்.எஸ்.எஸின் வெற்றிக்கு ஒரு காரணம் என்று சொல்லலாம்.

    ஊருக்கு செல்லும் வழியில் ரயில் நிலையம் ஒன்றில் இறங்கி சற்று வேடிக்கைப் பார்த்தேன். முஸ்லிம் மக்கள் சிலர் அந்த கூட்ட நெரிசலின் மத்தியிலும் வட்டம் அமைத்து கைகளை விரித்து நமாஸ் செய்து கொண்டிருந்தனர். மத விவகாரத்தில் சற்று நீக்கு போக்குடன் இருக்கும் மக்களை பொறாமை கொள்ளவும், தமது மத உணர்வின் வீழ்ச்சி குறித்த குற்ற மனப்பான்மையை ஏற்படுத்தும் வண்ணம் அவர்கள் நடவடிக்கை இருந்தது.

    அதே போன்று பெந்திகொஸ்து கூட்டத்தை பார்த்தால் பயம் வருகிறது. சும்மா இருக்கிற ‘இந்துக்களை’ ஆர்.எஸ்.எஸின் ஷாகாக்களுக்கு இவர்கள் கத்தல் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நெட்டித் தள்ளுகின்றன. வணக்காரய்யா போன்ற நண்பர்களின் அனுபவம் ஒவ்வொரு இந்துவுக்கும் கிட்ட வேண்டும். நாமும் வணக்காரய்யா போன்றவர்களின் உருவாக்கி அளித்திருக்கும் சமூகப் பதனிலையை சிலாகித்து உயர்த்துவோம். பிநவீனத்துவவாதிகள் இதனை முஸ்லிம் மக்கள் தங்கள் ஒழுக்கத்தை நிரூபிக்க விதிக்கும் கூடுதல் சுமையாக கருதுவதில் தீர்வு இல்லை.

    • Sukdev,

      //முஸ்லிம் மக்கள் சிலர் அந்த கூட்ட நெரிசலின் மத்தியிலும் வட்டம் அமைத்து கைகளை விரித்து நமாஸ் செய்து கொண்டிருந்தனர். மத விவகாரத்தில் சற்று நீக்கு போக்குடன் இருக்கும் மக்களை பொறாமை கொள்ளவும், தமது மத உணர்வின் வீழ்ச்சி குறித்த குற்ற மனப்பான்மையை ஏற்படுத்தும் வண்ணம் அவர்கள் நடவடிக்கை இருந்தது. //

      நீங்கள் இவ்வாறு கருதுவதில் தீர்வு இல்லை. இது எங்கே கொண்டு போய் முடியும்? ஐந்து பூசை ஐம்பது நமாஸ் என்று போகும்.

      நமாஸ் செய்பவர்கள் மற்றவர்களுக்கு இடையூராக இல்லாமல் இருக்கக் கூட்ட நெரிசலின் மத்தியில் நமாஸ் செய்யாமல் விடுவதில் தான் தீர்வு இருக்கிறது.

      //பெந்திகொஸ்து கூட்டத்தை பார்த்தால் பயம் வருகிறது. சும்மா இருக்கிற ‘இந்துக்களை’ ஆர்.எஸ்.எஸின் ஷாகாக்களுக்கு இவர்கள் கத்தல் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நெட்டித் தள்ளுகின்றன. //

      ஒவ்வொரு நாளும் ஐந்து முறை ஒலிக்கும் கத்தல் ‘இந்துக்களை’ ஆர்.எஸ்.எஸின் ஷாகாக்களுக்கு நெட்டித் தள்ளவில்லையே என்று சந்தோசப்படுங்கள்.

      Your fear is misplaced and not proportional.

    • [1]யாருங்க, சுகதேவ்க்கு “communist பாடம்” சொல்லி கொடுத்தா டுபாகூர் வாத்தியார் ?

      sukdev//சும்மா இருக்கிற ‘இந்துக்களை’ ஆர்.எஸ்.எஸின் ஷாகாக்களுக்கு இவர்கள் கத்தல் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நெட்டித் தள்ளுகின்றன. //

      sukdev//முஸ்லிம் மக்கள் சிலர் அந்த கூட்ட நெரிசலின் மத்தியிலும் வட்டம் அமைத்து கைகளை விரித்து நமாஸ் செய்து கொண்டிருந்தனர்//

      //வணக்காரய்யா போன்ற சீலர்கள் அருகி வருவதும் கூட ஆர்.எஸ்.எஸின் வெற்றிக்கு ஒரு காரணம் என்று சொல்லலாம்.//

    • Hello Sukdev,

      Majority people of Hindus like us only conducting Temple festivals lot in Tamil Nadu and disturbing the public!!!

      Inside the Sukdev, there is a RSS mindset!

      //அதே போன்று பெந்திகொஸ்து கூட்டத்தை பார்த்தால் பயம் வருகி..

      //நெரிசலின் மத்தியிலும் வட்டம் அமைத்து கைகளை விரித்து நமாஸ் செய்து

  5. மனிதன் மனிதனாக வாழ்வதற்கு இங்கு மதம் முக்கியமில்லை என்பதை சொல்லாமல் சொல்லி சென்றிருக்கிறார் வாணக்காரய்யா. அவர் மரித்த பின் ஊர்மக்கள் மதச் சடங்குளினால் சற்று குழப்பமடைந்தாலும், அவரை அங்கேயே அடக்கம் செய்வதற்கு இடமளித்த போது மனிதம் மீண்டும் தலை நிமிர்ந்து நிற்கிறது.

  6. வாணக்காரர் போன்றவர்க்ள் அரிதாகி வருகிறார்கள்
    திருப்பதி சென்று வந்தவன் லட்டை அனைவர்க்கும் குடுத்தான்
    மது அருந்தும் இசுலாமிய நண்பன் வேண்டாம் என்று மறுத்ததோடு அலாமல் , இது பாவம் உள்ளது என்றான் . மதத்தின் தனித்தன்மை காட்டுவது , பெருமை கொள்வது என்கின்ற மத போதை இப்போது வளர்ந்து வருகிறது

    • There is a small difference here. That guy to show the exclusiveness of his religion may be wrong. But, that laddu is made by a place where only one caste of people can be priests. Other castes, even if they claim to be the same religion, can’t. This is a system of inequality. So, I will not eat that laddu, not because of my religion but due to my non-confirmation of the practices in the temple. Same way like we boycott walmart or apple products.

      • Tolerating the non-confirmation of the practices of other people/religion is what I am talking about.

        You are confusing a product and practice.

        With your argument any one can say below stuff..

        1. I dont rent my house to Muslims because they eat meat which is not in accordance with my principle

        2.I wont recruit Christians to my office because they never had black/brown pope

        3.I dont treat religious people as my equal because they believe in imaginary stuff

        • Raman,

          //Tolerating the non-confirmation of the practices//

          Harmless rituals are ok but tolerating intolerance is not.

          //You are confusing a product and practice.//

          When the product is shared as just a product, without implying my acceptance of its ‘special’ character, i accept it.

          //1. I dont rent my house to Muslims because they eat meat which is not in accordance with my principle//

          Renting house is not like giving a ‘sweet’. You are free to decide to whom you rent your property, as long as you don’t keep it idle for more than a reasonable time.

          //2.I wont recruit Christians to my office because they never had black/brown pope//

          If the reason is pope, you can recruit black/brown Christians and shun white Christians.

          3.I dont treat religious people as my equal because they believe in imaginary stuff

          You can consider so but keep it to yourself. Showing it and ‘treating’ is detrimental to you and you won’t dare it in the first place.

              • @@HisFeet

                I have given some sample statements how discrimination can be justified with your moral ground. so if you like I will rewrite “justified discrimination statement”

                2.I wont recruit Christians to my office because they never had WOMEN pope

                Based on your reply you seem agreed with other two sample “justified discriminatory statements”. This is how religion corrupts good minds and keeps their thought confined to one small box

                By the way looks like there is a confusion about African pope
                http://www.huffingtonpost.com/2013/03/03/has-there-ever-been-a-black-or-african-pope_n_2795549.html

                • That is a valid point. Surely I am for a women Pope.

                  Regarding African Pope, today’s North Africa is predominantly Arab (and mixed Berber Arab). But that doesn’t mean they were historically Arabs or Arab-like. Bible has reference to Ethiopian Eunuch who took Christianity to Africa before anyone took it to mainland Europe.

                  My opinion is that Peter, a Jew was the first Pope according to Catholics. He is an Asian. Some from African ancestry were also there. I don’t deny the European dominance in the Catholic Church after the Great Schism as the Eastern, African and Greek Orthodox people took their own path. They have their own Popes, Metropolitans and Bishops. So if you consider that, there are.

                  Coming to women’s role, Anglicans are now ordaining women. Surely that is not enough. But we have to push it in the right direction. In TN, a woman has been ordained in CSI. So thanks for pointing out. We will try to stand corrected.

                  But you too try to treat fellow humans as humans.

                  • @HisFeet

                    This is my last attempt to make you understand point.

                    Read the line carefully…

                    “I wont recruit Christians to my office because they never had WOMEN pope”

                    Here One justifies ignoring Christians in work place on the grounds of women pope.
                    Basically he discriminates Christians but justifies.

                    Issue is not Women pope/Black pope, issue is DISCRIMINATION on grounds of UNREALISTIC expectations.

                    Expectations may be genuine but the cultures slow to adopt.Now banking on these unrealistic expectations anyone can discriminate anyone.

                    Religious/cultural tolerance is accommodating these differences in a civilized manner.These differences ( however absurd may be with respect to ones view point ) are not a tool to discriminate others.

                    //But you too try to treat fellow humans as humans.//

                    OMG! Those are sample “discriminatory statements” and they are depicted to make you understand ….

                    Read 13.2

                    Not sure what you guys read and what you guys understand.

                    • What Brahmins were doing to women when their husbands died. They did not allow the widows to wear colour saris and not to have hair in their head. See the film Namma Giraamam.

                  • Friends! Let us not fight among as. Let us be united to oppose the the greatest evil ‘Brahmins’. I request you not to fight between Islam and Christianity. These two religions are not bad. Muslims and Christians are related to us. Jesus and Nabikal are related to us, Tamilians. Our only one goal should be to suppress the brahmins. Why no one talks about how the brahmins are cheating others, even non-brahmin hindus, in many organizations, even today. In my experience, brahmins are the only people who should be fobidden by others. If brahmins need, they will bow to Christians, non-brahmin hindus and Muslims. But the feeling against Christians, non-brahmin hindus and Muslims will never change from their mind. In any organization, if brahmins see their boss, then they will be pretending to be hard working. When the boss is away, they will never work. They will make sure others don’t go close to the boss. Brahmins are very very selfish and crooked people. In fact they are criminals. Brahmins are the only people from whom no good things can possibly come. All non-brahmins ( Christians, non-brahmin hindus and Muslims) be united against brahmins.

  7. நல்ல வேளை – வாணக்காரையாவை வேற்று மதத்தவரோடு இணக்கமாக இருந்தார் என்று ஒதுக்கி வைக்க முஸ்லிம் தீவிரவாதிகள் ஊரில் இல்லை போலும்.

  8. சகோதரர் ராமன் அவர்களே… இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையே ஓர் இறை கொள்கைதான். படைப்புகளை வணங்காமல் படைத்தவனை மட்டும் வணங்குவது. அப்படி இருக்கும்போது பல கடவுள் கொள்கையுடையவர் அதை பூஜை செய்த பிரசாதமாக கொடுக்கும்போது மறுப்பது இஸ்லாமியனுக்கு கடமை ஆகிவிடுகிறது . அதை பிரசாதமாக கொடுக்காமல் சாதாரணமாக கொடுத்தால் எந்த இஸ்லாமியனும் மறுக்க மாட்டான். நீங்கள் தீட்டாக கருதும் அரிஜன வகுப்பை சேர்ந்த இரண்டு நண்பர்கள் வீட்டிலிருந்து படைக்கப்படாமல் பொங்கல் எங்கள் வீட்டுக்கு வருடம் வருடம் வந்துவிடும். எங்களுக்கு கொடுத்த பிறகுதான் அவர்கள் அதற்கு பூஜை செய்வார்கள். எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் ரசித்து உண்பார்கள். ஆக .. கொடுக்கும் உணவு படைககாமல், பூஜை புனஸ்காரம் செய்யாமல் இருந்தால் அதை உண்பதற்கு எந்த இஸ்லாமியனுக்கும் தயக்கமே இருக்காது. அப்படி தயங்கினால் என்றால் அவன் இஸ்லாத்தை பற்றி அறிந்திருக்கவில்லை என்று அர்த்தம்.

    • @munna

      மது அருந்தும் இசுலாமிய நண்பன்

      He drinks liquor, but eating laddu will bring sin?

      அரிஜன வகுப்பை சேர்ந்த
      Appreciate it..

      இரண்டு நண்பர்கள் வீட்டிலிருந்து படைக்கப்படாமல் பொங்கல் எங்கள் வீட்டுக்கு வருடம் வருடம்

      So you will mutually give respect to other religion people if they follow your religion law. And you call that tolerance…
      You have no moral ground to complain Hindus are not accepting you as tenant….

      I have given some sample statements how discrimination can be justified with your moral ground

      • thappu,

        aprom ethukku ipdi avapeyaraiyum somanthu, salugaiyum illama kashtapadreenga… ellam sernthu venamnu porada vendiyathuthaana?

        hajj payanamey oru mooda nambikka, atha othukka thuppu irukka mr. thoppu?

        • ஆக அது மானியம் இல்லை என்ற கூற்றை மறுக்க முடியவில்லை.தனது கள்ளப்பரப்புரைக்காக கொஞ்சமும் வெட்கப்படாத அவனடி ஏன் அது வேண்டாம் என போராடவில்லை என கேட்கிறது .முசுலிம்கள் அந்த கோரிக்கையை பல ஆண்டுகளாக முன் வைக்கிறார்கள்.ஆட்சியாளர்கள் என்ற கல்லுளி மங்கன்கள்தான் செவி ஏற்க மறுக்கிறார்கள்.உங்களை போன்ற கருத்துக் குருடர்கள் அதை காண மறுக்கிறார்கள்.

          அது அற்புதம் என்று யாரையும் ஏய்க்காத, புனித பயணியை தவிர வேறு யாருக்கும் செலவு வைக்காத ஹஜ் பயணம் மூட நம்பிக்கை என்று கம்பு சுற்றுவதற்கு முன்பு குருடர்கள் பார்க்கிறார்கள் என்று ஏய்த்து பிழைக்கும், ஆவி எழுப்பும் அயோக்கியர்களை எதிர்த்து போராடி அவர்கள் வளர்க்கும் மூட நம்பிக்கையை ஒழித்துக்கட்டி விட்டு வாருமய்யா.

          • We are already protesting the frauds of such nature. Even your koran mentions that Jesus did such miracles. I accepts these are superstitions. But that in no way justifies hajj. You only talk about expense. But the unwanted travel and wastage of resources and also it cheats people that it will take away their sins. It also mandates all muslims to do that. I have seen poor people spending their life’s fortune on this stupid pilgrimage. That is much like economic suicide.

            //ஆக அது மானியம் இல்லை என்ற கூற்றை மறுக்க முடியவில்லை.தனது கள்ளப்பரப்புரைக்காக கொஞ்சமும் வெட்கப்படாத அவனடி ஏன் அது வேண்டாம் என போராடவில்லை என கேட்கிறது //

            I still insist that it is a subsidized pilgrimage. People’s money is wasted for some religious nut jobs (this applicable to Jerusalem tour for Christians and Kailash tour for Hindus).

            //ஹஜ் பயணம் மூட நம்பிக்கை என்று கம்பு சுற்றுவதற்கு முன்பு குருடர்கள் பார்க்கிறார்கள் என்று ஏய்த்து பிழைக்கும், ஆவி எழுப்பும் அயோக்கியர்களை எதிர்த்து போராடி அவர்கள் வளர்க்கும் மூட நம்பிக்கையை ஒழித்துக்கட்டி விட்டு வாருமய்யா.//

            appo nee enna un mathathula nadakara ella thappaiyum thiruttitta matra mathatha vimarsikkira?

            • ஹஜ் பயணத்துக்கு மக்கள் வரிப்பணம் மானியமாக வழங்கப்படுகிறது என்று இன்னமும் வலியுறுத்துகிறாராம்.இல்லை என்று சொன்ன விளக்கத்துக்கு தகுந்த மறுப்பு சொல்லாமல் நாட்டாமை தீர்ப்பு வழங்கினால் எப்படி.

              \\it cheats people that it will take away their sins It also mandates all muslims to do that. I have seen poor people spending their life’s fortune on this stupid pilgrimage. That is much like economic suicide.//

              இசுலாமிய மதத்தின் அடிப்படையை விளங்காத கூற்று.மனிதர்கள் இறைவனுக்கு செய்த பாவங்களை இறைவன் நாடினால் மன்னிக்கிறான்.அதாவது தொழுகை நோன்பு முதலான வழிபாடுகளை செய்யாமல் இருக்கும் பாவத்திற்கு இறைவனிடம் மன்னிப்பு கேட்டு பெறலாம்.அதற்காக மக்காவிற்கு போய்த்தான் இறைஞ்ச வேண்டும் என்றில்லை.இருக்கும் இடத்திலேயே செய்யலாம்.மற்ற மனிதர்களுக்கு தீங்கு இழைத்து செய்யும் பாவத்தை பாதிக்கப்பட்ட மனிதன் மன்னித்தால்தான் உண்டு.இல்லையேல் பாவம் நீடிக்கும்.இந்த இருவருக்கும் இடையிலான விவகாரத்தில் மக்காவிற்கு போனாலும் ஆண்டவன் எதுவும் மன்னிப்பு வழங்க மாட்டான்.

              ஹஜ் பயணம் அதனை மேற்கொள்வதற்கான பொருளாதார,உடல் வலிமை கொண்டோருக்கு மட்டுமே கடமை.அனைவர் மீதும் கடமை இல்லை.

              அப்படி வறிய முசுலிம் ஒருவர் மக்கா புனித பயணம் மேற்கொண்டு ”பொருளாதார தற்கொலை” செய்து வறுமையில் வாடுவதை காட்டுங்கள் பார்க்கலாம்.நான் பந்தயம் கட்டுகிறேன்.தலைகீழாக நின்றாலும் உங்களால் அப்படி ஒருவரை கண்டுபிடிக்க முடியாது.திண்டுக்கல்லில் இருக்கிறார்,கொட்டாம்பட்டியில் இருக்கிறார் என்று பொத்தாம் பொதுவாக சொல்லாமல் குறிப்பாக சொன்னால் தமிழகத்தின் எந்த மூலையானாலும் நான் நேரில் வருகிறேன்.

              \\appo nee enna un mathathula nadakara ella thappaiyum thiruttitta matra mathatha vimarsikkira?

              ஒரு மத நம்பிக்கையாளருக்கு பிற மத நம்பிக்கைகள் மூடத்தனமாக தோன்றலாம்.ஒரு கடவுள் மறுப்பாளர் அனைத்து மத நம்பிக்கைகளையும் மூடத்தனமானவை எனலாம்.ஆனால் இசுலாமிய மத நம்பிக்கைகள் யாருக்கும் தீங்கிழைப்பதில்லை.சோதிடம்,நல்ல நேரம்,கெட்ட நேரம்,வாஸ்து,கரிநாள்,சகுனம்,உடல்நல குறைவை மருத்துவம் பார்க்காவிட்டாலும் ஆண்டவர் குணமாக்குவார்,[ஏர்வாடி முதலான தர்காவில் போய் வேண்டுவது இசுலாமிய நெறிகளுக்கு எதிரானது] போன்ற மூட நம்பிக்கைகள் இசுலாமிய மதத்தில் கிடையாது.

              • //சோதிடம்,நல்ல நேரம்,கெட்ட நேரம்,வாஸ்து,கரிநாள்,சகுனம்,உடல்நல குறைவை மருத்துவம் பார்க்காவிட்டாலும் ஆண்டவர் குணமாக்குவார்,[ஏர்வாடி முதலான தர்காவில் போய் வேண்டுவது இசுலாமிய நெறிகளுக்கு எதிரானது] போன்ற மூட நம்பிக்கைகள் இசுலாமிய மதத்தில் கிடையாது.//

                72 virgins, polygamy, circumcision, jihad, forcing women to wear burka etc are also harming public. Don’t whitewash. As Hari pointed, why you people won’t book tickets and go to mecca instead of filing papers with government for subsidize?

                //பொத்தாம் பொதுவாக சொல்லாமல் குறிப்பாக சொன்னால் தமிழகத்தின் எந்த மூலையானாலும் நான் நேரில் வருகிறேன்.//

                arambichutarya PJ style-la. apdi naan sonnalum, iraivan naadinaal, athu ithunu solli thannudaiya thavarai maraikkum.

                • முதலிலேயே சொல்லி இருக்கிறேன்.இசுலாமிய மத நம்பிக்கைகள் யாருக்கும் தீங்கிழைப்பதில்லை.

                  \\ 72 virgins//

                  தான் செத்த பிறகு என்ன கருமாந்திரமோ கிடைக்கும் அவன் நம்புவதால் உங்களுக்கு அல்லது சமூகத்திற்கு என்ன கேடு விளைந்து விடும்.

                  \\polygamy//

                  பல தார மணம் கட்டாயம் இல்லை.தேவைபடுவோர் செய்து கொள்ளலாம்.அவ்வளவுதான்.பலதார மணம் இசுலாமியர்களை பொறுத்தவரை ஏட்டளவில்தான் உள்ளது.உங்களுக்கு அறிமுகம் உள்ள முசுலிம்களில் எத்தனை பேர் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்திருக்கிறார்கள் என எண்ணிப்பாருங்கள்.அநேகமாக ஒருவர் கூட இருக்க மாட்டார்கள்.

                  கள்ள உறவை குற்றம் என்று அறிவிக்காத சட்டத்தை கொண்ட நாட்டில்,ஓரின சேர்க்கையை சட்டபூர்வமாக ஆக்க வேண்டும் என்று பேசும் கிறுக்கன்கள் மலிந்த நாட்டில் முறையாக திருமணம் முடித்து இரண்டாவது மனைவிக்கும் அவர் மூலமாக பிறக்கும் குழந்தைகளுக்கும் சட்டபூர்வ வாரிசு உரிமை தரும் பலதாரமணம் உங்களுக்கு குற்றமாக தெரிகிறது என்றால் அதுதான் கோவணம் கட்டிய ஊரில் வேட்டி கட்டியவன் கிறுக்கன்.

                  \\ circumcision//

                  அவன் தன் பாலுறுப்பின் முன் தோலை நீக்கி கொண்டால் உங்களுக்கு என்ன கேடு,சமூகத்திற்குத்தான் என்ன கேடு விளைந்து விடும்.

                  \\jihad//

                  அநீதியை எதிர்த்து போரிடுவதுதான் ஜிகாத்.அப்பாவி மக்களை குண்டு வைத்து கொல்வதுதான் ஜிகாத் என கருதினால் அது இசுலாத்தை பற்றிய அறியாமை.ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டுமாறு இசுலாம் சொல்லவில்லை.அப்படி கோழைத்தனத்தை ,அடிமைத்தனத்தை வளர்க்கும் மதத்துக்கு சொந்தக்காரரான உங்களுக்கு ஜிகாத் மூட நம்பிக்கையாக தெரிந்தால் அதற்கு இசுலாம் பொறுப்பல்ல.

                  \\forcing women to wear burka//

                  பெண்கள் தமது உடலை முழுமையாக மறைத்து உடை அணிந்தால் உங்களுக்கு என்ன கேடு அல்லது சமூகத்திற்கு என்ன கேடு விளைந்து விடும்.சமூகத்திற்கு என்ன நன்மை விளைந்து விடும் என்று இடுப்பையும் முதுகையும் காட்டும் வகையில் பெண்கள் உடை அணிய வேண்டும் என்று சொல்கிறீர்கள்.அப்படி அணியும் பெண்களின் உடை உடுத்தும் பழக்கத்தால் நீங்களோ,சமூகமோ அடைந்த முன்னேற்றம் என்ன.

                  .அப்படி உடை அணியும் சகோதர சமுதாயத்தை சேர்ந்த இந்து,கிருத்துவ மற்றும் கடவுள் மறுப்பாளர்களான சகோதரிகள் மன்னிக்க வேண்டும்.உங்களை சிறுமை படுத்த வேண்டும் என்று இதை சொல்லவில்லை.ஒரு சமுதாய பெண்களின் ஆடையை கூட இந்த வெறியர்கள் பிரச்னை ஆக்குகிறார்களே அவர்களுக்கு தக்க பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

                  • //தான் செத்த பிறகு என்ன கருமாந்திரமோ கிடைக்கும் அவன் நம்புவதால் உங்களுக்கு அல்லது சமூகத்திற்கு என்ன கேடு விளைந்து விடும்.//

                    By saying this, people are encouraged to convert to islam, participate in jihad. Plainly this idea itself is stupid and why should one believe in this? If you believe it won’t affect society. But when you preach, that will affect.

                    //பல தார மணம் கட்டாயம் இல்லை.தேவைபடுவோர் செய்து கொள்ளலாம்.அவ்வளவுதான்.பலதார மணம் இசுலாமியர்களை பொறுத்தவரை ஏட்டளவில்தான் உள்ளது.உங்களுக்கு அறிமுகம் உள்ள முசுலிம்களில் எத்தனை பேர் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்திருக்கிறார்கள் என எண்ணிப்பாருங்கள்.அநேகமாக ஒருவர் கூட இருக்க மாட்டார்கள்.//

                    Even though it is not compulsion, it is unethical and immoral to have multiple wives. I know many who have multiple wives. Again you will ask address 🙂 If you say it is only in writing, then that means, islam is not practical religion.

                    //அவன் தன் பாலுறுப்பின் முன் தோலை நீக்கி கொண்டால் உங்களுக்கு என்ன கேடு,சமூகத்திற்குத்தான் என்ன கேடு விளைந்து விடும்.//

                    let a grown up man do it on his own will. don’t force it on children. If a child grows and wants it fore-skin back, can you give? So I am not against the practice itself. My problem is forcing it on children. Baptism is not irreversible so is the poonool. If you ask about ear piercing etc, I also oppose those practices.

                    //பெண்கள் தமது உடலை முழுமையாக மறைத்து உடை அணிந்தால் உங்களுக்கு என்ன கேடு அல்லது சமூகத்திற்கு என்ன கேடு //

                    Again, I am saying “forcing”. I really know 3 women in my circle who are forced by their family to wear burka. One of them is beaten for not wearing while playin in school ground. Her father passed by and noticed her, then stopped the bike and beat her before all of us. I will ask another person who watched this to comment here. This is 100% true.

                    • முசுலிம் அல்லாதவர்களை இழிவு படுத்துகிறீர்கள்.செத்த பிறகு சொர்க்கத்தில் பெண்கள் கிடைப்பார்கள் என்று சொன்னால் அவர்கள் இசுலாமிய மதத்திற்கு ஓடோடி வந்து விடுவார்களா என்ன.அறிவாளியே,மத மாற்றங்களுக்கு அடிப்படையே சமூக காரணங்கள்தான்.அதனால்தான் தாழ்த்தப்பட்ட மக்கள்தான் பெருவாரியாக கிறித்துவ இசுலாமிய மதங்களுக்கு மாறுகிறார்கள்.நாடார் சமூகம் பெருவாரியாக கிறித்துவத்தை ஏற்றுக் கொண்டதும் இப்படித்தான்.

                      \\it is unethical and immoral to have multiple wives…….islam is not practical religion.//

                      சின்ன வீடு வைத்துக் கொள்வதுதான் சரியோ.முறையாக திருமணம் முடித்துக் கொள்வது தவறாக்கும்.அனுமதி இருக்கும் அத்தனையையும் செய்தால்தான் நடைமுறை சாத்தியமானதா,இதென்ன கூத்து.பலதார மணம் கட்டாயம் இல்லை எனும்போது அதை செய்யாமல் இருப்பதற்கும் நடைமுறை சாத்தியத்திற்கும் என்ன தொடர்பு.

                      \\let a grown up man do it on his own will. don’t force it on children…….is forcing it on children.//

                      பிற மதங்களிலிருந்து இசுலாத்திற்கு மாறி வரும் பருவம் அடைந்தவர்கள் செய்து கொள்கிறார்களே.சிறுவயதில் ”சுன்னத்” செய்யப்பட்ட முசுலிம் ஒருவர் எனக்கு முன்தோல் இல்லையே என வருந்தினால் அப்போது வாருங்கள்,மேற்கொண்டு பேசுவோம்.அது வரை எங்கள் வீட்டு குழந்தைகள் மீதான உங்கள் ஓநாய் கரிசனத்தை ஒத்தி வைத்து விட்டு அடங்குங்கள்.

                      \\Again, I am saying “forcing”……beat her before all of us.//

                      நீங்கள் நன்றாக பொய் சொல்வீர்கள் என உறுதியாகிறது.புர்கா அணிந்து பள்ளி,கல்லூரிக்கு செல்லும் முசுலிம் மாணவியர் பள்ளி கல்லூரி வளாகத்தினுள் நுழைந்த பின் புர்காவை களைந்து விட்டு பிற மாணவியர் அணிந்திருப்பது போல் சீருடை அல்லது சாதாரண உடையில் வகுப்புக்கு செல்கின்றனர்.விளையாட்டு வகுப்புக்கும் அப்படித்தான் செல்கின்றனர். வளாகத்தினுள் புர்கா அணிவதை நிர்வாகங்கள் அனுமதிப்பதில்லை. இதை யார் வேண்டுமானாலும் ஒரு கல்வி நிறுவனத்தை கவனித்து பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.உண்மை நிலைமை இப்படி இருக்க ஒரு தந்தை பள்ளிக்குள் நுழைந்து புர்கா அணியாத தன மகளை உதைத்தாராம்.கேக்குறவன் கேணயனா இருந்தா கேப்பையிலும் நெய் வடியும்.

                    • //முசுலிம் அல்லாதவர்களை இழிவு படுத்துகிறீர்கள்.செத்த பிறகு சொர்க்கத்தில் பெண்கள் கிடைப்பார்கள் என்று சொன்னால் அவர்கள் இசுலாமிய மதத்திற்கு ஓடோடி வந்து விடுவார்களா என்ன.//

                      I don’t know if current non-muslims do that. But surely there are many muslims who converted for this in history. also, this is used for jihadist propaganda. Why a god want to give men 72 virgins? what about women? will your god give 72 men for them too? sick!!

                      //சின்ன வீடு வைத்துக் கொள்வதுதான் சரியோ.முறையாக திருமணம் முடித்துக் கொள்வது தவறாக்கும்.//

                      where I said keeping concubines is ok. Only your stone-age religion allows keeping women as concubines (sex-slaves). intha karumathukku peru “righ hand posssess”-am. thooo

                      //சிறுவயதில் ”சுன்னத்” செய்யப்பட்ட முசுலிம் ஒருவர் எனக்கு முன்தோல் இல்லையே என வருந்தினால் அப்போது வாருங்கள்,மேற்கொண்டு பேசுவோம்.//
                      http://lonepkliberal.wordpress.com/2013/02/18/dude-wheres-my-foreskin-asks-ex-muslim-atheist/
                      I know, you will claim that the link is a Christian/Jew/Hindu writing to disgrace islam

                      //ஒரு தந்தை பள்ளிக்குள் நுழைந்து புர்கா அணியாத தன மகளை உதைத்தாராம்.கேக்குறவன் கேணயனா இருந்தா கேப்பையிலும் நெய் வடியும்.//

                      I promise that this happened. He didn’t beat her for not wearing burka. But she didn’t cover her head with a black cloth. Our school ground has a public road intersecting in one corner. I have mailed my friend who saw this to comment on this thread. This really happened.

                    • சத்தியத்தை சர்க்கரை பொங்கலாக கொண்ட சத்திய சீலரே,

                      நீங்கள் ஒரு ஆசிரியர் என தெரிகிறது.ஆனாலும் செய்யும் தொழிலுக்கு முற்றிலும் முரணாக பிற மதங்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு நஞ்சு கக்குபவராகவும்,அதற்காக பொய்யும் புனை சுருட்டுமாக பேசும் யோக்கியமற்றவராகவும் இருக்கிறீர்கள்.

                      முதலில் புர்கா அணியாமல் பள்ளி மைதானத்தில் விளையாடியதற்காக அந்த மாணவியை அவரது தந்தை அடித்ததாக கதை அளந்தீர்கள்.தகுந்த விளக்கம் அளித்தவுடன் கிடிக்கியில் சிக்கிய கரப்பான் பூச்சியாக தப்பிக்க புது கதை சொல்கிறீர்கள்.அதாவது தலையில் துணி போடாததற்காக அடித்தார் என அளக்கிறீர்கள்.அதையும் பார்க்கலாம்.

                      பள்ளி சீருடை விதிகளிலேயே பெண் குழந்தைகள் இரட்டைச்சடை போட வேண்டும்.அதில் குறிப்பிட்ட வண்ண ”ரிப்பன்” கட்டி இருக்க வேண்டும் என்றெல்லாம் வரையறுக்கப்படுகிறது.பள்ளி வளாகத்தினுள் அவற்றை மூடி மறைத்து ஒரு இசுலாமிய அடையாளமான தலையில் துணி அணிவதை நிர்வாகங்கள் அனுமதிப்பதில்லை.அது நியாயம்தான்.சீருடை என்பது அனைவருக்கும் ஒரே மாதிரிதான் இருக்க வேண்டும்.இதை ஏற்றுக் கொண்டுதான் முசுலிம் பெற்றோர்கள் அந்த பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்கிறார்கள்.எதார்த்த நிலைமை இப்படி இருக்கும்போது துணி போடாததற்காக அடித்தார் என கதை அளக்கிறீர்கள்.கேணப்பயல்க ஊர்லதான் கிறுக்குப்பயல் ராஜாங்கம் செல்லுபடியாகும்.இங்கு செல்லுபடி ஆகாது.

                      ஆண்டான் அடிமை முறையே வழக்கொழிந்து போய் விட்டது.1500 ஆண்டுகளுக்கு முன் வழக்கில் இருந்த ஒரு நடைமுறைக்கு இசுலாம் சொன்ன சட்டங்களை இன்று வரை பிடித்து தொங்குவது வக்கிர மனப்பான்மை.இப்போது எந்த முசுலிம் எனக்கு அடிமை வேண்டும் என அடம் பிடிக்கிறான்.ஆனால் உங்கள் ”நாகரீக” மதமோ மனிதர்களால் கடைப்பிடிக்க முடியாத நடைமுறை சாத்தியமற்ற துறவறத்தை வலியுறுத்துகிறது.சிறு வயதில் ஆர்வ கிறுக்கில் பாதிரியாராக ஆகிவிட்டு பின்னாளில் கன்னித்துறவிகளை கர்ப்பமாக்குகிறார்கள்.சிறுவர்களை பிடித்து ஓரின சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள்.இப்போது தெரிகிறதா, யார் காட்டுமிராண்டிகள் என்று.

                    • I am not a teacher. And I will never show my religious identity in work. This is my personal opinion, shared in personal space. Fine?

                      I really meant, even for not covering head with black cloth that girl got beating. This happened during my school day. Our school is a village school where people are allowed to wear black cloth, towel (during sabarimalai season etc).

                      Don’t conveniently ignore the fact that islamic nations were the last to abolish slavery. If you say that the practice is no more there, then why your prophet didn’t abolish but regulated it? that means his revelations are not final and man-made secular humanist laws are better than divinely revealed crap.

                      By the by, you have skipped to answer about my arguments about polygamy and circumcision, you just want to attack celibacy of Catholics. Fine. I too oppose forced celibacy of Catholic religion. I am not sure whether it causes increased incidents of homosexuality, I am surely with you to condemn the priests molesting the children. But I know you will not stand with me to condemn your prophet who married a child. This is the difference between you and us. We are ready to take criticism and try to address the problems. You deny your errors and try not to evolve with the time.

                    • உங்கள் வயது என்ன என்று சொல்ல முடியுமா.

                    • நீங்கள் என்ன திரைப்பட நடிகரா.வயதை சொல்வதற்கு என்ன தயக்கம்.

                    • ஏற்கனவே பொய் சொல்லி இருப்பதால் வயதை சொன்னால் அதில் ஏதும் பொறி இருந்து மாட்டிக்கொள்வோமோ என பயந்து வயதை சொல்ல மறுக்கிறது அவனடி.சரி தொலையட்டும்.

                      இங்கு விவாதிப்பது யாருடைய மதம் உயர்ந்தது என முடிவு செய்வதற்காக அல்ல.அது ஒரு இணைய தள விவாதத்தில் முடிவு செய்யக்கூடியதும் அல்ல.அவரவர் நம்பிக்கை அவரவருக்கு உயர்ந்தது.ஆனால் உங்களை போன்ற மதவெறியர்கள் பிற மதங்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு நஞ்சு கக்குவதை எதிர் கொள்ளவே இந்த விவாதம்.

                      எனது வாதத்தின் சாராம்சமே இன்று நாம் வாழும் நாட்டில் இசுலாமிய மத நம்பிக்கைகளால் பிற சமயத்தவருக்கோ சமூகத்திற்கோ கேடு ஏதுமில்லை என்பதுதான்.அதற்கு நேர்மையாக பதில் அளிக்க முடியாமல் அந்த காலத்துல உங்க நபி ஏன் சின்ன புள்ளைய கல்யாணம் கட்டுனாரு நீங்க ஏன் அடிமை வச்சிருந்தீங்க உங்க பெண்கள் ஏன் புர்கா போடுறாங்க நீங்க ஏன் சுன்னத் பண்ணுறீங்க என்றெல்லாம் விவாதத்தை திசை திருப்புவது நேர்மையற்ற செயல்.இதனால் உனக்கென்னய்யா கேடு என்று கேட்டால் அதற்கு ஒரு பதிலும் சொல்ல முடியவில்லை.

                      இசுலாம் மதத்தை விமர்சிப்பதுதான் குறி என்றால் இதற்காகவே தனது வலைத்தளத்தின் முகப்பிலேயே உங்களுக்கு சவால் விட்டு கொண்டு PJ என்று ஒருவர் இருக்கிறாரே அங்கு http://onlinepj.com போய் உங்கள் வீர பிரதாபத்தை காட்டலாம்.வினவு போன்ற மதசார்பற்ற தளத்தில் வந்து பிற மதங்களை தூற்றி திரிவது கேடு கேட்ட மதவெறி நச்சரவங்களின் செயல்.

                      சரி அவனடியுடனான இந்த விவாதம் எப்படி துவங்கியது.ஹஜ் பயணத்துக்கு அரசு மக்கள் வரிப்பணத்தை மானியமாக வழங்குவதாக அவனடி பிதற்றியதிலிருந்து ஆரம்பித்தது.ஹஜ் மானியம் என்பதே பொய் என ஆதாரத்துடன் இங்கு நிரூபித்திருக்கிறேன்.அது பற்றி கள்ளமவுனம் சாதிக்கிறது அவனடி.ஏழை முசுலிம்கள் மக்காவுக்கு போவதன் மூலம் பொருளாதார தற்கொலை செய்து கொள்வதாக பிதற்றிய அவனடி நேரில் வருகிறேன் எங்கே நிரூபி பார்க்கலாம் என்றால் ஓடி ஒளிகிறது.எழுதிய கருத்துக்கு பொறுப்பேற்றுக் கொள்ள அணியமாக இல்லாத இந்த கோழைகள் பொய்யும் புரட்டும் பேசி பிற மதங்களை இழிவு படுத்த முனைகின்றனர்..

                • \\As Hari pointed, why you people won’t book tickets and go to mecca instead of filing papers with government for subsidize?//

                  கடைசியில் அரிக்குமார் என்ற அதிமேதாவியின் அதி பயங்கர புத்திசாலித்தனமான கேள்வியை சரணடைந்து விட்டீர்களே.அவரது அதி பயங்கர புத்திசாலித்தனமான கேள்விகளக்கு விடை அளிக்கும் அளவுக்கு நமக்கு ஆற்றல் இல்லை என்று பொதுவாக அரிகுமாருடன் விவாதிப்பதில்லை.சரி நீங்கள் கேட்டு விட்டதால் அந்த கேள்வியையும் பரிசீலித்து விடலாம்.

                  ஒரு பொருள் பற்றி விவாதிப்பதாக இருந்தால் கொஞ்சமாவது அது குறித்த விவரங்களை தெரிந்து கொண்டு வாருங்கள்.Haj Committee of India.Haj subsidy என்று Google ல் தேடிப்பார்க்கவும். ஹஜ் குழுக்கள் அரசு அதிகாரிகளால்தான் நிர்வகிக்கப்படுகிறது.அவை அரசு கட்டுப்பாட்டின் கீழ்தான் செயல்படுகின்றன.ஏர் இந்தியாதான் ஹஜ் பயணத்துக்கு nodal agency.ஹஜ் குழுவுக்கு பயண ஏற்பாடுகளை தன்னிச்சையாக செய்ய அனுமதியில்லை

                  the quota for India was fixed at 170,025 seats — comprising 125,025 seats for the Haj Committee of India (HCOI), Mumbai, and 45,000 for pilgrims going through private tour operators (PTOs).

                  தனியார் பயண முகவர்கள் வணிக வானூர்திகளில்தான் அழைத்துப் போகிறார்கள்.ஹஜ் குழுக்கள் chartered flight மூலம் அழைத்துப் போகிறார்கள்.அது ஏர் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

                  இந்த அழகில் ஏய்யா, நீங்கள் தனியாக டிக்கட் எடுத்து போக வேண்டியதுதானே. யார்யா உன்னைய ஏர் இந்தியாவுல போகச் சொன்னது என்றெல்லாம் கேட்கிறீர்கள்.

                  • Neenga thaana sonneenga,air india pricing is expensive compared tp private carriers endru?

                    If Hajj subsidy is benefitting nobody,is it a money laundering operation between the government and Air India?

              • Funny. I just asked one simple question. Why not use non-government-susidized way for hajj? why use it and blame it? government is getting more applications than allocated quota every year and hence they conduct lucky draw. Don’t cheat us with your blabbering.

                What is there in my age. Just counter my point. I am married with kids and already got threats from hindu fanatics. That’s why I maintain anonymity.

                • இவர்கள் முட்டாள்களா அல்லது கவனிக்காதது போல நடிக்கிறார்களா. மீண்டும் விளக்கமாக சொல்கிறேன்.

                  \\Why not use non-government-susidized way for hajj? why use it and blame it? //

                  ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
                  the quota for India was fixed at 170,025 seats — comprising 125,025 seats for the Haj Committee of India (HCOI), Mumbai, and 45,000 for pilgrims going through private tour operators (PTOs).

                  இந்திய சவூதி அரேபியா இரு தரப்பு ஒப்பந்தபடி ஹஜ் புனித பயணத்துக்கான விசாக்கள் மொத்தமாக இந்திய வெளியுறவு துறைக்கு அளிக்கப்படுகிறது. 45,000 புனித பயணிகளை தவிர்த்து மற்றவர்கள் ஹஜ் குழு மூலமாகத்தான் போயாக வேண்டும்.வேறுவழியில்லை.சவூதி தூதரகத்துக்கு புனித பயணிகள் தனியாக விண்ணப்பிக்க அனுமதியில்லை.

                  ஆனால் அரசு சாராயம் விற்று வருமானம் ஈட்டி முசுலிம்களுக்கு ஹஜ் மானியம் வழங்குவதாகவும் அதை ஏற்று மக்காவுக்கு போகும் முசுலிம்கள் ஏமாற்றுக்காரர்கள் என்று அவதூறு பேசிய அவனடி ஹஜ் மானியம் பொய் என நிரூபித்த பின்னும் தனது முட்டாள்தனத்துக்கும் வாய்க்கொழுப்புக்கும் வருந்துவதாக தெரியவில்லையே.இதுதான் இயேசுவின் போதனையோ.

                  \\What is there in my age. Just counter my point. I am married with kids //

                  அவனடியின் பொய்யையும் புரட்டையும் அம்பலப்படுத்த அது தேவைப்படுகிறது.இந்த விவரம் போதும்.நல்ல படிப்பு படித்து நல்ல வேலையில் இருக்கும் அவனடிக்கு திருமணம் முடித்து ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கின்றன என்றால் அவனடியின் வயது குறைந்த பட்சம் 35 இருக்க வேண்டும்.அப்படியானால் 80 களின் பிற்பகுதியில் , 90களின் முற்பகுதியில்தான் அவர் பள்ளி மாணவனாக இருந்திருக்க வேண்டும்.

                  தமிழக முசுலிம் பெண்களிடம் கருப்பு வண்ண புர்கா அணியும் பழக்கம் 90களின் பிற்பகுதியில்தான் வந்தது. அதுவரை தென்மாவட்டங்களில் சேலையையே தலையில் முக்காடாக அணிந்து புர்கா உடையை பேணிவந்தனர்,தஞ்சை,கடலூர் பகுதிகளில் சேலைக்கு மேல் வெள்ளை நிற துப்பட்டி அணியும் பழக்கம் இருந்தது. கருப்பு வண்ண புர்கா அணியும் பழக்கம் வந்த பின்னர்தான் பதின்ம வயது பெண்குழந்தைகளுக்கு தலையில் கருப்புவண்ண துணி அணியும் வழக்கம் வந்தது,

                  ஆகவே அவனடியின் பள்ளி நாட்களில் தலையில் கருப்பு துணி அணியாததற்காக ஒரு முசுலிம் சிறுமியை அவளது தந்தை அடித்ததாக சொல்வது அப்பட்டமான பொய்.

  9. Tippu always gives very silly excuses.

    Nobody stops muslims from flying to mecca using a chartered flight/emirates/etihad/air arabia.

    If u say we dont want this,nobody can force u.

    stop doing this comedy.

    Air India is cheaper than all other Airlines and it is normal that the govt ll insist upon using Air India for Hajj and even they provide 50% of the ticket,is that amount not worth it?

    if u think u can manage to book a chartered flight with per head cost being less than 12.5k,then who is stopping u?

    Hajj is a commercial ploy to boost the economy of Saudi Arabia before the Oil Boom.

    Christians are not forced to visit Vatican/anywhere and Hindus are not forced to go to Kashi but Hajj is a must,only to boost Saudi Economy.

  10. தமிழகத்தில் நிலவும் மத நல்லிணக்கத்தை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக அழகாக எடுத்துக் காட்டுகிறது கட்டுரை.பொறுக்குமா மதவெறியர்களுக்கு.பாய்ந்து வந்து குதறுகிறார்கள் முசுலிம்களை.கடவுள் மறுப்பாளன் என்று சொல்லிக்கொண்டே அப்பட்டமான பார்ப்பனிய இந்து மதவெறி நஞ்சை கக்குகிறார் ராமன்.நாங்க லட்டு குடுத்தா அவன் திங்க மாட்டேங்குறான் என்று ரெம்பவே உணர்ச்சிவசப் பட்டு சினம் கொள்கிறார்.இதற்கு முன்னா என்பவர் தகுந்த விளக்கம் அளித்திருக்கிறார்.ஒரே தெய்வ வழிபாட்டை கொள்கையாக கொண்ட முசுலிம்கள் பிறிதொரு தெய்வ பிரசாதத்தை உண்ண வேண்டும் என எதிர்பார்ப்பது என்ன வகை நியாயம்.

    அதே சமயம் இந்து மதத்தார் மீதும் அவர்கள் நம்பிக்கை மீதும் வெறுப்பு கொண்டு முசுலிம்கள் இதை செய்யவில்லை.இந்து மத நண்பர்கள் வீடுகளிலும் திருமண வைபவங்களிலும் முசுலிம்கள் விருந்துண்டு மகிழ்வதை கண்கூடாக காணலாம்.நான் ஆண்டுதோறும் தீபாவளி அன்று எனது நண்பர் மிண்ட் சாமியின் தாயாரின் கைப்பக்குவத்தில் உருவான பதார்த்தங்களை குறிப்பாக அதிரசத்தை விரும்பி உண்பதை வழக்கமாக கொண்டிருக்கிறேன்.

    \\ I dont rent my house to Muslims because they eat meat which is not in accordance with my principle//

    கொண்ட கொள்கை படி வாழ்கின்ற கொள்கை குன்றே,முசுலிம்கள் இறைச்சி உண்பதால் வீடு வாடகைக்கு கொடுக்க மாட்டீர்கள்.ஏனென்றால் அது உங்கள் கொள்கையோடு ஒத்து போகவில்லை.நல்லது.எந்த ஒரு மனிதனும் சமூகத்தை சார்ந்துதான் வாழ்கிறான்.இந்த சமூகத்தில் 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் இறைச்சி உண்பவர்களே.அவர்கள் விளைவித்து தரும் உணவை,நெய்து தரும் ஆடையை,அவர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொள்கை படி வாழ்கின்ற மேட்சிமை தங்கிய தாங்கள் ஏன் துறக்கவில்லை.ஆக முசுலிமுக்கு வீடு கொடுக்காமைக்கு காரணம் இறைச்சி அல்ல.உங்கள் முசுலிம் எதிர்ப்பு மத வெறிதான் காரணம்.

    \\I wont recruit Christians to my office because they never had black/brown pope//

    கிருத்துவர்களிடம் அப்படி சட்டம் ஏதுமில்லை.ஆனால் சங்கராச்சாரியாக,கோயில் குருக்களாக பார்ப்பனர்கள் மட்டும்தான் வர வேண்டும் என்று சொல்லும் பார்ப்பனர்களுக்கு மேட்சிமை தங்கிய தாங்கள் இந்த விதியை பொருத்தாத காரணம் என்ன.அந்த சிதம்பர கமுக்கத்தை நாங்கள் தெரிந்து கொள்ளலாமா.

    \\.I dont treat religious people as my equal because they believe in imaginary stuff//

    அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
    ஆரிருள் உய்த்து விடும்.

    • Those are some sample statements how discrimination can be justified with @HisFeet and Munna’s moral ground.

      When you reject laddu based on your rules, you loose ground to oppose other statements because they are justified with their set of rules

      Please read my reply 8.1.2 carefully one more time before getting into character assassination .நுனிப்புல் மேயவேண்டாம்

      I have given appropriate reply to Munna at 10.1

      What is right and what is wrong determined by culture and society when they evolve over time

      For some eating meat makes sense for some it doesn’t
      For some eating pig makes sense for some it doesn’t
      For some eating cow makes sense for some it doesn’t
      For some drinking alcohol is fun and makes sense for some it doesn’t
      For some clothing women in black, covered from head to toe makes sense for some it doesn’t
      For some women in bikini makes sense for some it doesn’t

      I can keep on writing like this.understanding the differences between culture and not discriminating each other for what they are is called religion/culture tolerance

      Uneducated Vanakkarayaa had this understanding and educated Tippu/Munna/HisFeet/Univerbuddy/Myfriend cant even think in that direction…

  11. Tipu,

    That excuse is not valid.

    Farmers/Weavers etc all get paid for their work,i dont want anyone to give me free stuff from their hardwork,

    I also wont rent my house to non hindus and the reason is not prejudice.

    • Nowadays Non-brahmins don’t rent their houses to Brahmins. Because before 30 to 50 years Brahmins did not rent their houses to non-bramins. That is why? We, non-brahmins should be thankful to the brahmins. Because they are always inducing us to work hard to come up in life and beat brahmins. Today, Islam and Christian students are only emerging as state first in public exams. Where did the so called ‘intelligent’ bramin studnts go? To Greece, their native. Brahmins don’t have any bravery. During the World War II the Tamilnadu brahmins started learning German expecting Hitler will win. Brahmins only created our God Periyar. Brahmins only created Arignar Anna. Brahmins only created so many good people in tamilnadu to save non-brahmins from brahmins. Dinamalar is the example for Braminism, which is so selfish and cruel.

  12. இப்போது உள்ள விலைவாசியில் கூட ஜித்தாவுக்கு போக வர 19573 ரூபாய்கள்தான் ஏர் இந்தியா வசூலிக்கிறது.பார்க்க.

    http://www.farecompare.com/flights/Delhi-DEL/Jeddah-JED/market.html

    Airfare from Delhi to Jeddah on Air India from ₨19573 round trip

    ஆனால் 2012 ஆம் ஆண்டு ஹஜ் பயணத்துக்கு ஏர் இந்தியா நிர்ணயித்த கட்டணம்.45,000 ரூபாய்.
    அதில் 20,000 புனித பயணியிடம் வசூலிக்கப்பட்டது. மீதி 25,000 ஐ மைய அரசு ஏர் இந்தியாவுக்கு செலுத்தியது.இதுக்கு பேர் மான்யம் என்று கதைக்கிறார்கள்.இதைத்தான் சில மூடர்கள் என் துட்டுல நீ உல்லாச பயணம் போறியான்னு முசுலிம்கள் மீது பாய்ந்து குதறுகிறார்கள்.

    • 2012 ஆம் ஆண்டு ஹஜ் பயண செலவு விவரம் இந்த சுட்டியில் உள்ளது.ஒரு ரூபாய் கூட ஹாஜிகள் யாரிடமும் இலவசமாக பெறவில்லை என்பதை திறந்த மனதுடன் படிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம்.

      http://www.hajcommittee.com/circular_no27.pdf

  13. Hi Tippu,

    //இசுலாமிய மத நம்பிக்கைகள் யாருக்கும் தீங்கிழைப்பதில்லை.//

    I am preparing a reply to this. I will make it a post in my blog, just in case Vinavu chooses to censor it.

    I will list out the problems due to the following

    //தான் செத்த பிறகு என்ன கருமாந்திரமோ [72 virgins] கிடைக்கும் அவன் நம்புவதால் உங்களுக்கு என்ன கேடு//

    //அவன் தன் பாலுறுப்பின் முன் தோலை நீக்கி கொண்டால் உங்களுக்கு என்ன கேடு,//

    //அநீதியை எதிர்த்து போரிடுவதுதான் ஜிகாத்.//

    //பெண்கள் தமது உடலை முழுமையாக மறைத்து உடை அணிந்தால் உங்களுக்கு என்ன கேடு//

    //இடுப்பையும் முதுகையும் காட்டும் வகையில் **** உடை அணியும் சகோதர சமுதாயத்தை சேர்ந்த இந்து,கிருத்துவ மற்றும் கடவுள் மறுப்பாளர்களான சகோதரிகள் மன்னிக்க வேண்டும்.உங்களை சிறுமை படுத்த வேண்டும் என்று இதை சொல்லவில்லை//.

    And will also add the problems due to 5 Ablutions/day where excessive water is wasted, 5 times Noisy Azan, 5 prayers, Street prayers, Street slaughter, Child frightening burka, etc

  14. திப்பு,

    //சிறுவயதில் ”சுன்னத்” செய்யப்பட்ட முசுலிம் ஒருவர் எனக்கு முன்தோல் இல்லையே என வருந்தினால் அப்போது வாருங்கள்,மேற்கொண்டு பேசுவோம்//

    ”சுன்னத்” செய்யத் தயார் செய்யப்பட்ட சிறுவன் வேண்டாமென்று கெஞ்சுவானே. அப்போது என்ன செய்கிறீர்கள்.

    கத்தி பட்டவுடன் வலிதாங்காமல் வேண்டாமென்று கதறுவானே. அப்போது என்ன செய்கிறீர்கள்.

    முன் தோலை குறியின் மொட்டிலிருந்தி உரிக்கும் போது வலியின் உச்சத்தில் விடுங்கடா சைத்தான்களா என்று கூட கதறுவானே. அப்போது என்ன செய்கிறீர்கள்.

    கதறிக்கதறி மூர்ச்சையாகி விடுவானே. அப்போது என்ன செய்கிறீர்கள்.

    • வெறும் கற்பனை.சுன்னத் செய்வதற்கு முன் சிறு சிறு தேங்காய் துண்டுகளை வாயில் போட்டு மெல்ல சொல்வார்கள்.அந்த சிறுவன் மென்று கொண்டிருக்கும்போது திடீரென சுன்னத் செய்பவர் சிறுவனின் தொடையில் அடிப்பார்.ஏன் இந்த கிழவன் திடீர்னு நம்மள அடிக்கிறான் என அந்த சிறுவன் திகைத்து அடியின் வலியை உணரும்போதே சுன்னத் செய்யப்பட்டுவிடும்.மிஞ்சி மிஞ்சி போனால் ஐந்து அல்லது ஆறு வினாடிகளுக்கு மேல் ஆகாது.

        • நன்றி செந்தில்,மருத்துவ வசதிகள் பெருகி விட்ட இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலும் மருத்துவ மனைகளில்தான் வலி தெரியாமல் சுன்னத் செய்து கொள்கிறார்கள்.பாரம்பரிய இசுலாமிய மருத்துவர்கள் [ஒசுதார்கள்] கூட மரத்து போக செய்யும் ஊசியை சிறுவனின் தொடையில் போட்டுவிட்டே சுன்னத் செய்கிறார்கள்.இந்த ஊசிகள் பரவலாக புழக்கத்தில் வருவதற்கு முன்பு கூட அவர்களின் பாரம்பரிய மருத்துவ மற்றும் அனுபவ அறிவு காரணமாக சிறுவனுக்கு பெரிய அளவுக்கு துன்பம் ஏற்படாமலேயே சுன்னத் செய்து வந்திருக்கிறார்கள்.

          ஒரு சிலர் சித்தரிப்பது போல சுன்னத் நிகழ்வு ஒரு துன்ப நிகழ்வாக சிறுவர்களின் மனதில் தங்கியிருப்பதில்லை.மாறாக ஒரு இன்ப நிகழ்வாக சிறுவர்களின் மனதில் தங்கியிருக்கிறது.முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சில நிகழ்வுகளை சொல்கிறேன்.

          சுன்னத் செய்வதை ”சுன்னத் கல்யாணம்” என்றே அழைப்பார்கள்.பொதுவாக மாலையில்தான் செய்வார்கள்.மதியம் உறவினர்,நண்பர்களுக்கு கல்யாண வீட்டில் விருந்து கொடுப்பார்கள்.அவரவர் ஆற்றலுக்கு ஏற்ப இதன் அளவு இருக்கும்.விருந்துக்கு பின் காத்திருக்கும் வேளையில் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது.அனைவருமே ”கல்யாண மாப்பிள்ளை” யை கொண்டாடுவார்கள்.பையனும் பரிசுப்பணங்கள்,புத்தாடை தரும் மகிழ்ச்சியில் இங்குமங்கும் ஓடியாடிக் கொண்டிருப்பான்.

          பையனின் தந்தைக்கு மாமன் மச்சான் உறவுமுறையினரும் பையனின் தாய்வழி பாட்டன்மார்களும் கேலி பேசிக் கொண்டே இருப்பார்கள்.

          ஒருமுறை ஒருவர் ”கல்யாண மாப்பிள்ளை”யை அழைத்து காதோடு ஏதோ சொன்னார்.சொல்லிக் கொண்டிருக்கும்போதே தந்தையை ஆச்சரியமாக திரும்பி திரும்பி பார்த்த பையன் நேராக தந்தையிடம் வந்தான்.

          அத்தா,உனக்குமாத்தா இன்னைக்கு சுன்னத் கல்யாணம்

          அதிர்ந்து போன தந்தை ”யார்ரா சொன்னது.அப்டிலாம் இல்ல”

          காசிம் மாமுதா சொன்னாக.அதுனாலதா நீயும் புது சட்டை போட்டிருக்கியாம்.

          சுற்றி இருந்தவர்கள் கொல்லென்று சிரித்து விட்டனர்.எல்லோரும் சிரித்தவுடன் பையனும் புரிந்தும் புரியாமலும் சிரிக்க ஆரம்பித்தான்.தந்தைக்கு கோபம் வந்து விட்டது.காசிமை நோக்கி கத்தினார்.

          ஏண்டா.கூறு கெட்ட பயலே,சின்ன பயல்ட்ட என்ன பேசுறதுன்னு உனக்கு விவஸ்தை இல்ல.உளறுவாப்பயலே.

          அந்த காசிம் பயல் அசருவதாக இல்லை.

          ”இல்ல மச்சான்,முப்பது நாப்பது வருசத்துக்கு முன்னால பண்ணிருப்பீக மறுபடியும் வளந்துருக்க போவுது.ஏதுக்கும் இன்னொருக்கா பண்ணிக்கங்க”

          அடி செருப்பால நாயே,வந்து மிதிச்சன்னா ஊட்டி தெறிச்சு போகும்.

          ஆனால் சிரிப்பலை அடங்குவதாக இல்லை.காசிம் பயந்தது போல பாவலா காட்டிக் கொண்டு அவசரமாக இடத்தை காலி செய்து விட்டு பந்தலுக்கு வெளிய போய் புறப்பட ஆயத்தமாக நின்று கொண்டான்.இன்னொருவர் எழுந்து ”காசிம்,நில்ரா நானும் வர்றேன்”என்று சொல்லிவிட்டு தந்தையிடம் வந்தார்.

          ”அப்ப மச்சான் நானும் புறப்படுறேன்.சாயங்காலம் அசர் தொழுத ஒடன வந்துர்ரென்”

          நல்லது,மாப்பிள்ள,, தொழுத ஒடன வந்துரு,சர்பத் கரைக்கணும்.

          சரி மச்சான் போற வழிலதான ஒசுதார் வீடு.எதுவும் சொல்லனுமா

          இல்ல நேத்தே நா சொல்லிட்டேன்

          ”இல்ல, ரெண்டு கத்திய ரெடி பண்ணி கொண்டார சொல்லவா உங்களுக்கும் பண்ணனும்னு பேசிக்கிட்டு இருந்தீகளே”

          சொல்லிவிட்டு அவசரமாக இரண்டு பேரும் ஓடிப்போகிறார்கள்.தந்தையோ நற நற வென பல்லை கடித்துக் கொண்டு அவர்களை திட்டிக் கொண்டிருந்தார்.

          இன்னொரு வீட்டில் அண்ணன் தம்பி இருவருக்கு ”சுன்னத் கல்யாணம்”. சற்று வயதானவர் சின்ன ”கல்யாண மாப்பிள்ளை”யிடம் சொன்னார்.

          டேய் பேரப்புள்ள.இன்னைக்கு உனக்கு சுன்னத் கல்யாணமா.இரு ஒசுதார் வர முன்னால உன் குஞ்ச நா அறுத்து எடுத்துட்டு போயிருவேன்.

          பையன் சற்று திகைத்து விட்டு சொன்னான்.”போங்க நன்னா , நீங்க சும்மா சொல்றீங்க” ,

          சற்று நேரம் கழித்து பெரிய ”கல்யாண மாப்பிள்ளை”யிடமும் அதையே சொன்னார்.தன் கையை பிடித்திருந்த பெரியவரின் கையை உதறி விட்டு சற்று விலகி நின்று அவன் சொன்னான்.

          ”அது வரைக்கும் என் கை புளியங்கா பறிக்குமா.நா உங்க குஞ்ச அறுத்துருவேன்”

          சுற்றி இருந்தவர்கள் சிரிப்பில் பெரியவருக்கு வெட்கம் தாளவில்லை. அதிலிருந்து அவர் இருக்கும் இடத்தில் அந்த பையனின் தலை தட்டுப்பட்டாலே அருகில் இருப்பவர்கள் ”யோவ்,உங்க அண்ணன் பேரன் வர்றாய்யா ஏதுக்கும் கைலிய இறுக்கி கட்டிக்க” என்பார்கள்.அவர் இறக்கும் வரை இந்த மாதிரியான கேலிகள் ஓயவில்லை.

          இந்த குதூகலங்களால் கவரப்படும் அதுவரை சுன்னத் செய்யப்படாத சிறுவர்கள் எனக்கு எப்பம்மா சுன்னத் கல்யாணம் பண்ணுவீக என்று கேட்பது கூட உண்டு.

          • திப்பு அவர்களே! சுன்னத் கல்யாணம் செய்வதற்கு மதரீதியான விளக்கங்கள் ஏதும் உண்டா? தெரிந்து கொள்வதற்காகவே கேக்கிறேன்.

            • யூத மதம் -version 1
              ஆதாம் ஏவாள்
              சுன்னத்

              கிருத்துவம் – version 2
              ஆதாம் ஏவாள்
              சுன்னத் இல்லை
              எதிரியிடம் அன்பு காட்டு

              இசுலாம் – version 3
              ஆதாம் ஏவாள்
              சுன்னத்
              எதிரியை பழிவாங்கு

              மதம் ஒவ்வொரு முறை புதுவடிவம் பெரும் பொழுதும் , புதிய சடங்குகளை உருவாக்கி புதியது என்று காண்பிக்கப்பட்டாலும் , பழையதன் தொடர்ச்சி என்று காட்டுவதற்காக பழைய அல்லது மறைந்த சடங்குகளை உயிர்பித்தார்கள் அவ்வாறு யூதர்களிடம் இருந்து வந்த பழக்கம் தான் .

              infection அது இது என்று மனத்தை தேற்றி கொள்கிறார்கள்.இந்தியாவில் சுன்னத் செய்யாமல் எத்துனை பேர் infection ஆகி இருக்கிறார்கள் ? எத்துனை பேர் மரணம் அடைந்திருக்கிறார்கள் ? நீங்கள் கேள்விப்பட்டது உண்டா ? ஆனால் சுன்னத் செய்யும் போது infection ஆகி இறந்த குழந்தைகள் உண்டு

              இதே போன்று மக்களால் பராமரிக்க முடியாது என்று கடைவாய்ப்பல்லை குறி வைத்து கிளம்பி இருக்கிறார்கள் மருத்துவர்கள்

              பின்குறிப்பு : hisfeet மற்றும் திப்பு இருவரும் ஒரே கடவுளை வணங்குபவர்கள்

              • நீண்ட விளக்கத்திற்கு நன்றி ராமன்.ஆதாம் ஏவாளை ஆண்டவன் உண்ண கூடாது என்று தடுத்த பழத்தின் பெயர் அறிவு பழமாமே[புருட்ஸ் ஆப் நாலெட்ஸ்].அபிரகாம் மதங்களின் ஆண்டவன் அறிவை விரும்பவில்லையா?

              • ராமனை யாராவது சுன்னத் செய்து கொள்ள வற்புரித்தினர்களா ?

                பூணுல் பிரியர் ராமனுக்கு சுன்னத் மீது ஏன் கோபம் ?

                //infection அது இது என்று மனத்தை தேற்றி கொள்கிறார்கள்.

                • @K.Senthilkumaran

                  You never understand the context.
                  You did not read from the beginning.
                  You have so much time to write your out of context opinion

                  //பூணுல் பிரிய//
                  And you are a racist

                  If you have time read from the beginning before coming to conclusion

                  When somebody come to public forum and claim “Why their culture is superior” I have given them the different perspective

                  • See Raman,

                    [1]It is a essay about religious harmony in Tamil Nadu. But some fake guy Hisfeet only start blaming about Muslim’s custom “Sunnath” in his feed back no 11.1.1.1.1.1.1

                    [2] You and under buddy also making harmonic music along with that fake guy hisfeet from the begining. So You guys only write out of context opinion.

                    [3]That is why i am telling you to clean your OWN “——-Anus——” first and tell the Muslims to clean their Anus next.

                  • See Raman ,

                    [1]Mr. Tipu is not claiming that his custom is superior.

                    [2]But he [ TIPU ]start defending his own custom from you guys like UNDERWARE,HISFEET,RAMAN.

                    [MY COMMENT NOW : HI GUYS LIKE UNDER,HIS,RAM FIRST U GUYS CLEAN YOUR ANUS FIRST THEN TELL TO OTHERS. BULLSHIT GUYS]

                    //When somebody come to public forum and claim “Why their culture is superior” I have given them the different perspective//

            • இந்த உலகில் சிரிக்க தெரிந்த ஒரே உயிரினம் மனித இனம்தான்.மிருகங்கள் சிரிப்பதில்லை.மதவெறி பிடித்த மிருகங்களும் அப்படித்தான் போலும்.

              எளிய மக்களின் பேச்சுக்களில் வேடிக்கையும் வெகுளித்தனமும் இருக்கும்.ஆபாசம் இருக்காது.நான் எழுதியது ஆபாசமாக இருந்திருந்தால் வினவில் மட்டுறுத்தப்பட்டிருக்கும். இதைப் படிக்கும்போது எனக்கு சிரிப்பு வரவில்லை அருவருப்புதான் தோன்றியது என்று மதவெறியர்கள் தவிர்த்து வேறு யாராவது சொல்ல முடியுமா.

            • ஆபாசத்தின் ஆரம்பமே பைபிள்!

              “And yet indeed she is my sister; she is the daughter of my father, but not the daughter of my mother; and she became my wife. (Genesis 20:12)”

              //வினவு என்ன ஆபாசக் கதைத் தளமா?

        • Hi KSK,

          Unless medically required, circumcision is not right, whether done under anasthesia (invention of kaafirs) or not. The foreskin protects the delicate tip of the penis and so should not be removed.

          If some doctors have advocated it, undestand that they have benefitted from Muhamadan petro dollars.

      • Tippu,

        //மிஞ்சி மிஞ்சி போனால் ஐந்து அல்லது ஆறு வினாடிகளுக்கு மேல் ஆகாது.//

        இது போன்ற உணர்ச்சியற்ற பதிலைத்தான் உங்களால் கொடுக்க முடியும்.

        அந்த ஐந்து அல்லது ஆறு வினாடிகளில் எத்தனை நொடிகள்? அந்த நொடிகளில் சிறுவனின் நிலை என்ன என்பது தானேக் கேள்வி.

        சிறுவனின் ‘தொடையில் அடிப்பதற்கு’ முன்னால், அவனின் குறியின் மீது கைவைப்பதற்கு முன்னால், அவன் ஆடைகளை களைய மாட்டீர்களா? அவன் தான் அம்மணமாவதால் திகைக்க மாட்டானா? அவனை ஒரு குறிப்பிட்ட நிலையி்ல் அமரவைக்க மாட்டீர்களா? அவனை அசையவிடாமல் தடுக்க அவனின் கால்களையும் கைகளையும் நான்கைந்து பேர் சேர்ந்து பிடித்துக் கொள்ள மாட்டீர்களா?

        அந்த சமயத்தில் அந்த அப்பாவிச் சிறுவன் தேங்காய் தான் மென்று கொண்டு இருப்பானா? வேண்டாம் என்று கெஞ்சமாட்டானா???…

        அந்த ஐந்து அல்லது ஆறு வினாடிகளின் மரண வேதனைக்குப் பிறகு ஒன்றுமில்லையா? காயம் ஆறும் வரை, பல நாட்கள், ஒவ்வொரு முறை குறி அசைக்கப்படும் சிறநீர் கழிக்கும் போதும் (ஏன் இருமும் போது) கூட வலிக்குமே.?

        I will request Senkodi (senkodi dot wordpress dot com) and Dajjal (iraiyillaislam dot blogspot dot com) by commenting in their sites, to comment here about their experiances. Let us see.

        • என்ன ஒரு புத்திசாலித்தனம்.அறிவாளியே வினாடியும் நொடியும் ஒன்றுதான்.மற்றபடி உங்கள் வாதங்கள் அதே அரைத்த மாவு.செங்கொடியும் வரட்டும்.பொதுவுடைமை தோழர்கள் மனசாட்சியை தொலைக்காதவர்கள் என்பது எனது கருத்து.அவர் வந்து ”அனுபவித்த துன்பத்தை” சொல்லட்டும்.

          • ஆப்பிரிக்க நாடுகளில் பெண்கள் சிறுவயதிலேயே அவர்கள் பிறப்புறுப்பை தைத்து விடுவார்கள். இந்த காடுமிராண்டிப்பழக்கம் இன்றும் உள்ளது.

            Link: vnnforum.com/archive/index.php/t-51533.html‎

            மேலும் பெண்களுக்கான Circumcision

            Link: http://www.mtholyoke.edu/~mcbri20s/classweb/worldpolitics/page1.html

            இதற்கும் இசுலாமிய சுன்னத்திற்கும் ஒரு வேறுபாடும் இல்லை.

            இப்போது சொல்லுங்கள் இந்த முறை வேண்டுமா அல்லவா என்று.

    • //கத்தி பட்டவுடன் வலிதாங்காமல் வேண்டாமென்று கதறுவானே. அப்போது என்ன செய்கிறீர்கள்.

      முன் தோலை குறியின் மொட்டிலிருந்தி உரிக்கும் போது வலியின் உச்சத்தில் விடுங்கடா சைத்தான்களா என்று கூட கதறுவானே. அப்போது என்ன செய்கிறீர்கள்.

      கதறிக்கதறி மூர்ச்சையாகி விடுவானே. அப்போது என்ன செய்கிறீர்கள்.///

      முஸ்லீம்கள் எது செய்தாலும் எதிர்க்கனும்னு முடிவு செஞ்சாச்சு. இனிமே முஸ்லிம்கள் கக்கூஸ் போனாக்கூட உங்களுக்கு பிரச்சினையாத்தான் தெரியும்.

            • மதம் நம்பிக்கைகள் வாழ்க்கை மார்க்கம் என்பது அறிவியல் வளராத அந்த கால நடைமுறை

              இன்று அறிவியல் சிந்தனைகள் மட்டுமே வாழ்க்கை மார்க்கம்!

              இன்று உடல் நோய்களுக்கு தீர்வு காண கோவிளுக்கோ , மசுதிக்கோ , தேவாலயங்களுக்கோ செல்லும் மூட நம்பிக்கை பெரும்பாலான மக்களிடம் இல்லை !

            • கிருத்துவத்தை அவனடி விமரிசிக்கும் லட்சணமும் மேலே விவாதத்தில் பல்லிளிக்கிறதே

              நியாயப்படுத்த முடியாத கிருத்துவ முட்டாள்தனங்களையும் அயோக்கியத்தனங்களையும் நானும் எதிர்க்கிறேன் என்ற பேரில் தப்பிக்கும் உத்திதான் அவனடியின் விமரிசன நாடகம்.

              துறவறம் என்பதே மனித இயல்புக்கு எதிரானது,மனிதர்களால் கடைப்பிடிக்க முடியாதது.அதை வலியுறுத்தும் கிருத்துவ மதம்தான் பாதிரிகள் ஒழுக்க கேடான செயல்களில் ஈடுபடுவதற்கு காரணம் என்று நான் எழுதிய போது அயோக்கிய பாதிரிகளை மட்டும் கண்டித்த அவனடி துறவறம் பற்றி கள்ள மவுனம் சாதித்து விட்டது.துறவறம் என்பதே முட்டாள்தனமானது என்பதை வசதியாக மறைத்துக்கொண்டு யாரையும் கட்டாயப்படுத்தி துறவறம் மேற்கொள்ள செய்தால் மட்டுமே எதிர்ப்பேன் என நாடகமாடுகிறார்..

              • I am not accepting the forced celibacy. i.e. A periest must not marry. I am against this.

                But voluntary celibacy like Abdul Kalam, Jesus etc are acceptable. It is their wish. It should not be made as a religious law.

          • செந்தில் குமரன், மார்க்ஸியத்தில் இஸ்லாத்திற்கு மட்டும்தான் இடமுண்டா? மூட நம்பிக்கைகள் எந்த மதத்தில் இருந்தாலும் விமர்சிப்பது தானே உங்களை போன்ற மார்க்சியர்களின் கடமை.கோயில்களை பள்ளிகூடங்களாக மாற்ற வேண்டும் என்று சொல்லும் நீங்கள் இஸ்லாத்திற்கு வக்காலத்து வாங்குவது ஏன்?

            • In this web page

              https://www.vinavu.com/2011/10/08/unarvu-reply/#respond

              என் பின்னூட்டங்கள்

              32.1.1.1.1

              32.1.1.1.2

              32.1.1.1.3

              33.3

              75:

              The women who conceive a child in her, who develop the child in here, who deliver the child, who feed the mother milk, who dress the child, who educate the child informally and formally and who also earn bread for her family……….

              DO NOT THEY [WOMEN] KNOW HOW TO DRESS BY OWN?

              பார்க்க !
              //இஸ்லாத்திற்கு வக்காலத்து வாங்குவது ஏன்?

            • தேவார நாயனார்,

              அனைத்து மத மூட நம்பிக்கைகளையும் பட்டியல் இடுங்கள்.

              ஒவ்ஒன்றாய் விவாதிப்போம் ,விமர்சிப்போம்

              தேவார நாயனார் said://மூட நம்பிக்கைகள் எந்த மதத்தில் இருந்தாலும் விமர்சிப்பது தானே உங்களை போன்ற மார்க்சியர்களின் கடமை.

                  • 1.இந்து மதத்தில் உள்ள வர்ணாஸ்ரம தர்மம்.2.கிரிஸ்தவத்தில் உள்ள கன்னிக்கு குழந்தை பிறந்தது.3.இஸ்லாத்தில் உள்ள பல தார மணம்.

                    • நன்றி ஐயா.

                      பதில் சொல்ல வேண்டியது அம் மதவாதிகளின் கடமை.

                      I Said://மத மூட நம்பிக்கைகள் 3 அவது பட்டியல் இடுங்கலேன்

                      தேவார நாயனார் Replayed://

                      1.இந்து மதத்தில் உள்ள வர்ணாஸ்ரம தர்மம்.

                      2.கிரிஸ்தவத்தில் உள்ள கன்னிக்கு குழந்தை பிறந்தது.

                      3.இஸ்லாத்தில் உள்ள பல தார மணம்.

                      நன்றி தேவார நாயனார் ஐயா.

            • தேவார நாயனார்,

              பின்னூட்டம் 19.2.1.1.1.1 பொருள் புரியவில்லையா ???

              தேவார நாயனார் Said://மூட நம்பிக்கைகள் எந்த மதத்தில் இருந்தாலும் விமர்சிப்பது தானே உங்களை போன்ற மார்க்சியர்களின் கடமை//

              I said in feedback 19.2.1.1.1.1:
              [1]மதம் நம்பிக்கைகள் வாழ்க்கை மார்க்கம் என்பது அறிவியல் வளராத அந்த கால நடைமுறை

              [2]இன்று அறிவியல் சிந்தனைகள் மட்டுமே வாழ்க்கை மார்க்கம்!

              [3]இன்று உடல் நோய்களுக்கு தீர்வு காண கோவிளுக்கோ , மசுதிக்கோ , தேவாலயங்களுக்கோ செல்லும் மூட நம்பிக்கை பெரும்பாலான மக்களிடம் இல்லை !

              • செந்தில் நான் பின்னுட்டம் இடும் பொழுது உங்களது பின்னுட்டம் 19.2.1.1.1.1 பதிவாக வில்லை.காரணம் அதுதான்.

      • Abu,

        I think you have read my post in my blog.

        //முஸ்லீம்கள் எது செய்தாலும் எதிர்க்கனும்னு முடிவு செஞ்சாச்சு//

        Why don’t you tell me how i am wrong?

        • இந்துக்கள் காவடி தூக்குறேன், அலகு குத்திக்கிறேன், பூ மெதிக்கிறேன்னு ஒவ்வொரு வருடமும் தங்களை காயப்படுத்திக்கொள்கின்றனர். அதுக்கு எதிரா எதாவது புடுங்கி மாத்ரி சொல்லுவிங்களா? ஏண் ஒன்னும் இல்லாத விசயத்துக்கு இவ்ளோ அக்கப்போரு செய்றீங்க. தினமும் பாதாள சாக்கடையில் முங்கி எந்திருக்கும் மனிதனுக்கு ஆதரவா போராடுவோம் வறீங்களா?

  15. Dear Vinanvu readers,

    இன்று நான் முதல் முறையாக ப்ளொக்ஸ் தொடங்க்கினேன். “சிறுகதை – கவிதை களம்” அது .

    vansunsen.blogspot.in

    with regards,
    K.Senthilkumaran

  16. பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் வங்கியில் வைத்திருக்கும் பணத்திற்கு வட்டி வேண்டாமென்று எழுதிக்கொடுப்பதால் வருடத்திற்கு பல ஆயிரம் கோடி ரிசர்வ் வங்கிக்கு லாபம் கிடைக்கிறது. 30 வருட காலங்களில் இது பல லட்சம் கோடியாக கிடைத்திருக்கிறது. இதை எல்லாம் எந்த அரசியல்வாதியோ, அதிகாரியோ , ஊடகமோ வெளியிடுவதில்லை. நாங்கள் வேண்டாம் என்று கூறும் இஸ்லாமியர்களை சுரண்டும் ஏமாற்றுஹஜ் மானியத்தை தூக்கிபிடிக்கிரார்கள் இந்த பார்பனர்கள். சாதாரண காலங்களில் 20000 ரூபாய்க்கு செல்லும் விமான கட்டணத்தை ஹஜ் காலங்களில் 45000 ரூபாய்க்கு உயர்த்தி 15000 ரூபாய் மானியமாக குறைக்கப்பட்டு ஒரு ஹஜ் பயணியிடம் 10000 ரூபாய் லாபம் பார்கிறது ஏர் இந்தியா. ஹஜ் கமிட்டி மூலம் செல்லும் 25000 முஸ்லீம்களிடம் இப்படி வசூலிப்பதால் லாபம் பெறுவது 50 கோடி. இப்படி வருடம் வருடம் சுரண்டப்படுகிறது.

  17. சுன்னத் செய்வது என்பது இறைவன் மனிதனை சரியாக படைக்கவில்லை என்பதை உணர்த்துகிறது
    இறைவன் மிகப்பெரியவன் அல்ல அவனும் தவறு செய்வான் என்பதை நினைவு படுத்துகிறது

    அல்லது மணிதான் இறைவனால் வடிவமைக்கப்படவில்லை இயற்கை தேர்வின் மூலம் உருவாக்கப்பட்டவன் என்பதை உறுதிப்படுததுகிறது

    சுன்னத் செய்யும் அன்பர்கள் விரல்களை வெட்டி விட்டால் நகசுதி வியாதி வராமலும் பாதுகாக்கலாம்

  18. அது என்னா இயற்கை தேர்வு… ? ஒன்றை தேர்வு செய்ய வேண்டுமென்றால் அறிவு என்று ஒன்று இருந்தால் தான் செய்ய முடியும். அப்போ இயற்கைக்கு அறிவு இருக்கா ? அப்படி இருக்கு என்றால் அதான் இறைவன்.

    • //ஒன்றை தேர்வு செய்ய வேண்டுமென்றால் அறிவு என்று ஒன்று இருந்தால் தான் செய்ய முடியும்.//

      ஒன்றைத் தேர்வு செய்ய மட்டுமல்ல… ஒன்றைப் புரிந்துகொள்ளவும் அறிவு வேண்டும்.

      Natural selection is a theory accepted by scientific community and people with IQ above “retard levels” have no problem in understanding the concept.

    • @iniyan

      இரண்டாயிரம் வருடங்களாக முன்தோலை வெட்டி இறைவனுக்கு செய்து அனுப்புஉகிறீர்கள் . அந்த அறிவுள்ள இறைவன் இனிமேல் பிறக்கும் குழந்தைகளுக்கு முன்தோல் இல்லாமல் படைக்கட்டுமே …

      • இறைவனை பக்கத்து வீட்டுக்காரன் போல இறைவனுக்கே புத்தி கூறுகிறார் இந்த ராமன்.

      • இரண்டாயிரம் வருடங்களாக பூணுலுடன் வாழும் ” ராமர்களுக்கு ” அந்த அறிவுள்ள இறைவன் இனிமேல் பிறக்கும் குழந்தைகளுக்கு பூணுலுடன் படைக்கட்டுமே!

  19. அறிவியல் கண்டு பிடிப்பான “உலகம் உருண்டை ” யை போப் ஏற்றுகொண்டாரா இல்லையா ??????

    //Natural selection is a theory accepted by scientific community and people with IQ above “retard levels” have no problem in understanding the concept.//

      • அறிவியலையும் , மத நம்பிகையையும்

        ஒன்றை கலக்கும்

        உங்களின் உயர் அறிவு

        எம்மை போன்ற எளிய ஆசிரியர்களுக்கு இல்லை

      • கலிலியோ கதை தெரியுமா ?

        உலகம் உருண்டை என கூறிய கலிலியோவை மத தீவிரவாதிகள்

        கல்லால் அடித்துக்கொல்ல முயற்சித்தனர்.

        போப் அவரை மதத்திலிருந்தே நீக்கினார்.

            • [1]16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோபர்நிகஸ், டெமாக்ரடிஸுக்கும் முந்தையவரான தாலமி முன்வைத்த புவி மையக் கோட்பாட்டை மறுத்து சூரிய மையக் கோட்பாட்டை முன்வைக்கிறார். இதே கோட்பாட்டை வலியுறுத்திய புரூனோ ரோம் நகரில் திருச்சபையால் தீவைத்து எரிக்கப்படுகிறார்.

              [2]Not only old POPS also nowadays POPS are also Religious Terrorist and against mankind and against scientific thoughts!

              [3]First u clean u r own “—–ANUS—-” and then tell to Muslims to clean their ANUS.

              //Because earlier popes were stupid.

      • 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோபர்நிகஸ், டெமாக்ரடிஸுக்கும் முந்தையவரான தாலமி முன்வைத்த புவி மையக் கோட்பாட்டை மறுத்து சூரிய மையக் கோட்பாட்டை முன்வைக்கிறார். இதே கோட்பாட்டை வலியுறுத்திய புரூனோ ரோம் நகரில் திருச்சபையால் தீவைத்து எரிக்கப்படுகிறார். ‘உங்கள் தீர்ப்பைக் கேட்டு நான் அஞ்சுவதைக் காட்டிலும், தீர்ப்பை வழங்கிய நீங்கள்தான் அதிகம் நடுங்குகிறீர்கள்‘ என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளை புருனோ எள்ளி நகையாடியதும், மன்னிப்பு கேட்டு உயிர் பிழைக்க வாய்ப்பளிக்கப்பட்டும் அதனை அவர் மறுத்ததும், ஐரோப்பிய அறிவுத்துறையினர் மத்தியில் புருனோ மேனியாவாக காட்டுத்தீயாய் பரவி, திருச்சபையை அச்சுறுத்தின. தொலைநோக்கி வழியாக சூரிய மையக்கோட்பாட்டை நிரூபிக்கமுயன்ற குற்றத்துக்காக 32 ஆண்டுகள் வீட்டுச்சிறையில் தள்ளப்படுகிறார் கலீலியோ.

        Thanks vinavu.
        https://www.vinavu.com/2012/10/02/goddamn-particle-history/

        • This is really a shameful situation for the Christian faith. Though Galileo himself was a Christian, who believed that those passages quoted against him should not be taken literally.

          Now my opinion is that, we have two choices.
          1. We can reject the parts of Bible that contradict modern science and culture and accept the parts where the teachings of Bible are superior to present situation.
          2. We can go for a liberal/progressive interpretation of Bible that suits the modern science and culture.

          I go with option 1.

  20. “””அந்த அறிவுள்ள இறைவன் இனிமேல் பிறக்கும் குழந்தைகளுக்கு முன்தோல் இல்லாமல் படைக்கட்டுமே …””””” ஒரு மனிதனை கேட்பது போல கடவுளை பார்த்து நீ ஏன் இதை பண்ணினாய், எதற்காக இப்படி படைத்தாய்… என்றெல்லாம் கேட்கிறீர்கள். இங்குதான் கடவுளை பற்றி சரியான புரிதல் உங்களுக்கு இல்லை என்று கூறுவேன். ஒரு மனித நிலையிலிருந்து அடுத்த மனிதனை பார்பதை போன்றே கடவுளையும் பார்கிறீர்கள். குர்ஆனில் ஒரு வசனம் வருகிறது.. ஒன்றாய் இருந்த வானம் பூமி சூரியன் கோள்கள், நட்சத்திரங்கள் எல்லாவற்றையும் நாமே(கடவுளே) பிரித்தெடுத்தோம் இன்று அது தன தன பாதைகளில் நீந்திக்கொண்டிருக்கிறது. இது அப்பட்டமாய் பிக்பாங் தியரியை தான் குறிக்கிறது. ஒரு வெடிப்பு தான் இன்று பிரபஞ்சங்கள் தோன்ற காரணம் என்று விஞ்ஞானம் கூறுகிறது. இன்னொரு குரான் வசனம்.. மனிதர்களே நீங்கள் இந்த பிரபஞ்சத்தை பற்றி சிந்திக்க மாட்டீர்களா அப்படி நீங்கள் சிந்திப்பீர்கலேயானால் அதை படைத்தவனுடைய வல்லமை உங்களுக்கு விளங்கும். ஒரு வேலை அந்த கடவுளை மனிதன் போன்று நினைத்து கேள்விகள் கேட்காமல் இருக்க கூட இந்த மகா பிரமாண்டமான பிரபஞ்ச அதிசயங்களை படைக்கப்பட்டிருக்கலாம். இதெற்கெல்லாம் நம் மரணத்திற்கு பிறகு விடை கிடைக்கும் என்று இஸ்லாம் கூறுகிறது. ஒரு இரநூறு வருட அறிவியல் வளர்ச்சியினால் பெற்ற அறிவில் இவ்ளோ கேள்வி கேட்கிறீர்களே… இந்த பிரபஞ்ச படைப்பாளியின் அறிவை பற்றி சிந்திக்க கூட நமக்கு அருகதை இருக்கா ?

    • இனியன், இந்திய தத்துவ மரபில் சாங்கியம் என்ற தரிசனம் உண்டு.அது ஆதி இயற்கை ஒரு ஜட பொருள் என் கிறது.அதற்கு மூல பிரகிரிதி என்று பெயர்.அதில் ஏற்பட்ட முதல் சலனத்திற்கு மகத் என்று பெயர்.முதல் சலனத்தின் விளைவாக சத்தமும் வெளிச்சமும்[நாதமும்,விந்துவும்] ஏற்பட்டதாம்.இப்படி போகிறது சாங்கியத்தின் பிரபஞ்ச உருவாக்கம் பற்றிய கருத்து.இதுதான் பிக் பேங் தியரியை ஒத்துள்ளது.நீங்கள் கூறியது இல்லை.சாங்கிய தரிசனம் தமிழர்களுடையது என்பது தத்துவ அறிஞர்கள் ஏற்றுகொண்ட ஒன்று.பிரபஞ்சத்தை குறிக்கும் தூய தமிழ் வார்த்தை ஆகிய “புடவி” என்பது புடைத்தல்,வீங்குதல்,விரிதல் என்ற பொருளையே தருகிறது.நீங்கள் கொல்லன் தெருவில் ஊசி விற்காதீர்கள்.

      • “”” அதில் ஏற்பட்ட முதல் சலனத்திற்கு மகத் என்று பெயர்.முதல் சலனத்தின் விளைவாக சத்தமும் வெளிச்சமும்[நாதமும்,விந்துவும்] ஏற்பட்டதாம்.இப்படி போகிறது சாங்கியத்தின் பிரபஞ்ச உருவாக்கம் பற்றிய கருத்து”””” நான் பிக்பாங் என்ற அறிவியல் ஏற்றுக்கொண்ட தியரியை பற்றி கூறினேன். நீங்கள் சொன்னது போல் பிக்பாங் தியரியில் விந்து உற்பத்தி ஆன கதை எல்லாம் கிடையாது. எதையாவது படித்துட்டுவந்து அப்படியே ஜல்லி அடிக்காதீர்கள். அது என்னா விந்து உற்பத்தி ? விந்து எப்படி உற்பத்தியாகும் என்ற உண்மை கூடவா தெரியாமளிருக்கிறீர்கள்? கண்டிப்பாக தெரியும். ஆனால் பகுத்தறிவை கொண்டு கேள்வி எல்ழுப்ப மறுக்கிறீர்கள். பிக்பாங் தியரியில் நாதம் வந்ததாம், அதுல விந்து உற்பத்தி ஆனதாம்.எந்த அறிவியல் இப்படி சொல்கிறது கூறும் ? இப்படி கேள்வி கேட்காமலே நீங்கள் இருப்பதால் தான் பார்பனன் … சமஸ்கிருத வார்த்தைகள போட்டு உங்களை மடையனாக்கிவிடுகிறார்கள்.

        • அதி புத்திசாலி இனியன் அவர்களே! சூரியன் ,சந்திரன் எல்லாம் ஒன்னாகிடந்தது நாந்தான் பிரிச்சேன் அப்படிங்கருதுதான் பிக்பேங் தியரியா? நீங்கதான் ஜல்லி அடிக்கிறிங்க.விந்து என்பது நேர் விசை,வெளிச்சம் அப்படிங்ற பொருள் உள்ளது.இத சொன்னவங்க பார்ப்பனர் இல்ல பாய்.மார்க்சிய தத்துவ அறிஞர் தேவி பிரசாத் சட்டோ பாத்யாயா.புக் பேரு” இந்திய தத்துவ மரபில் அழிவுற்றதும் நீடித்திருப்பதும்”.வாங்கி படிச்சு பாத்துட்டு பொறுமையா பதில் சொல்லுங்க.நீங்க மனித விந்தையும் தத்துவ மரபில் சொல்ற விந்தையும் ஒன்னா போட்டு குழப்பாதிங்க.

          • “”””” விந்து என்பது நேர் விசை,வெளிச்சம் அப்படிங்ற பொருள் உள்ளது. ”’ இதற்கு என்ன அர்த்தம்னே புரியலை. உங்களுக்கு இதில் என்ன விளங்கியதோ எனக்கு தெரியவில்லை. இன்றைய விஞ்ஞானிகளின் அனைவரும் பிக்பாங் தியரியை ஏற்றுக்கொள்கிறார்கள். சூனியத்தில் இருந்து ஒரு வெடிப்பு (ஆற்றல் வெளிப்பட்டது) ஏற்பட்டது. அந்த வெடிப்பு நிகழ எடுத்துக்கொண்ட நேரம் நொடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு. வெடிப்பு நிகழ்ந்து சிலமணி நேரத்தில் வெப்பம் குறைந்தவுடன் அடுத்த ஒரு நொடியில் அணுக்கள் தோன்றின. அந்த அணுக்கள் தோன்றிய அடுத்த நொடியில் அந்த அனுவாகப்பட்டது ஒன்றுக்கு பக்கத்தில் 30 பூஜ்யம் போட்டால் எத்தனை மடங்கு வருமோ அத்தனை மடங்கு பெரிதாகிவிடுகிறது. அதாவது ஒரு கடுகு சடனாக இமயமலை அளவுக்கு ஆகிவிட்டது என்று நினைத்து பாருங்கள் அது போல. அது அத்தனை கோடான கோடி மடங்கு பெரியதாக மட்டும் சும்மா தேமே… என்று ஆகவில்லை …. இன்றைக்கு இருக்கக்கூடிய பிரஞ்சத்திற்குரிய எல்லா டிசைன்களையும் தன்னகத்தே கொண்டு அந்த அளவுக்கு அது ஆகிவிடுகிறது. ஒரு பக்கா டிசைனர் (சூத்திரதாரி)இல்லாமல் இது தானாக நடக்க சாத்தியமா ? பிரபஞ்சத்தில் ஒளிதான் வேகமானது. ஆனால் இந்த நிகழ்வு ஒளியைவிட பல கோடி மடங்கு வேகமுடையது. இதை எந்த விதியில் அடக்குவது ? இந்த அற்புதமான வெடிப்பு எப்படி தானாக நிகழ முடியும்? குரானின் ஒரு வசனம் : நாம் (இறைவன்) ஆகுக என்றால் ஆகிவிடும் . குர்ஆனில் அடுத்து ஒரு வசனம் வருகிறது.. ஒன்றாய் இருந்த வானம் பூமி சூரியன் கோள்கள், நட்சத்திரங்கள் எல்லாவற்றையும் நாமே(கடவுளே) பிரித்தெடுத்தோம் இன்று அது தன தன பாதைகளில் நீந்திக்கொண்டிருக்கிறது. இது அப்பட்டமாய் பிக்பாங் தியரியை தான் குறிக்கிறது. உலகின் மிகப்பெரிய விஞ்ஞானியாக கருதப்படும் ஹாக்கின் கூறுகிறார் : இந்த பிரபஞ்சத்தின் படைப்பு மனிதன் போன்ற படைப்புகளுக்கான நோக்கமாக இருக்கலாம். இன்று ஹாக்கிங் போன்ற விஞ்ஞானிகள் முடிவெடுத்து ஆராய்ந்து கூறியதை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு படிப்பறிவு இல்லாத முகமத் என்ற மனிதர் எவ்வாறு கூற முடியும் ? இந்த வசனம் அந்த காலத்தில் உள்ள மனிதர்கள் விளங்கவே முடியாது. முகமத் ஆக கூறி இருந்தால் இதை கூற அவருக்கு அவசியமே இல்லை. இப்படி சொல்ல படைத்தவனை (இறைவன) தவிர வேறு யாராலும் எளிமையாக எதார்த்தமாக கூற முடியாது. இது போன்ற நிறைய வசனங்கள் குர்ஆனில் உள்ளன. நம்முடைய பேரண்டத்தின் பிரம்மாண்டத்தை பற்றி தெரிந்துக்கொள்ள சிலவற்றை சொல்கிறேன். நம்முடைய பூமியை போன்று பல லட்ச மடங்கு பெரியது சூரியன். இந்த சூரியனை போன்று ஒன்னரை லட்சம் கோடி சூரியன்கள் நம் காலக்ஸியில்(மில்கிவே) மட்டும் உள்ளனன. இது போன்ற கால்க்சிக்கள் பல லட்சம் கோடி காலக்சிக்கள் இந்த பேரண்டத்தில் உள்ளன. நினைத்துப்பாருங்கள் பிரமாண்டத்தை. இந்த பொருள்கள் எல்லாம் தானாக உருவாக்கி இருக்குமா ? ஆற்றலை உருவாக்கவும் அழிக்கவும் முடியாது. மாற்றம் மட்டுமே செய் முடியும். இதையும் நம் அறிவியல் தான் சொல்கிறது. அப்படி என்றால் இவ்வளவு மூலக்கூறுகள் எப்படி தானாக உருவானது ? அறிவியலில் இதெற்கெல்லாம் பதிலே இல்லை. சிந்திப்பவர்களுக்கு விளங்கும். நன்றி.

            • இன்னொரு குரான் வசனம்.. மனிதர்களே நீங்கள் இந்த பிரபஞ்சத்தை பற்றி சிந்திக்க மாட்டீர்களா அப்படி நீங்கள் சிந்திப்பீர்கலேயானால் அதை படைத்தவனுடைய வல்லமை உங்களுக்கு விளங்கும்.

            • சூனியத்திலிருந்து ஏற்பட்ட வெடிப்பை தான் சாங்கியம் முதல் சலனம் என் கிறது.அதற்கு மகத் என்று பெயர் வைக்கிறது.மகத் என்றால் பிரமாண்டம் என்று பொருள்.வெடிப்பிலிருந்து ஏற்பட்ட ஆற்றலைதான் நாதம் விந்து எந்கிறது.உங்களுக்கு புரியவில்லை என்றால் எலக்ட்ரான்,புரோட்டான் [நேர் ஆற்றல்,எதிர் ஆற்றல்] என்று கொள்ளுங்கள்.அவை சேர்ந்து பிரபஞ்ச தொடக்கம் ஆரப்பிக்கிறது.இப்பொழுது புரிகிறதா எது பெரு வெடிப்பு சம்பவத்தை ஒத்து உள்ளது என்று.தமிழர்கள் 2000 வருடத்திற்கு முன்பே பிரபஞ்சத்தை “புடவி” என்று பெயரிட்டு அழைத்தனர் என்று கூறினேனே.புடவி என்றால் வீங்குதல்,புடைத்தல் என்றுதான் பொருள்.பிரபஞ்சம் தனது விரிவடைதலை நிறுத்தியதா? இன்னும் தொடர்ந்து விரிகிறதா என்னும் கேள்வி இன்றுவரை தொடர்கிறது.சாங்கிய தரிசனத்தை ஆராய்ந்த மேலை தத்துவ அறிஞர்கள் பலருக்கு பிக்பேங் தியரியை ஒத்த இந்த ஆய்வு மிகுந்த ஆச்சரியத்தை அளித்துள்ளது.தேவை என்றால் அந்த பட்டியலை தருகிறேன்.சாங்கிய சிந்தனை தமிழர்களுக்கு உடையது.ஒரு தமிழனாக இதை விளக்குவது எனது கடமை.தமிழ் அறிஞர்களில் சமீப காலமாக சாங்கியன் என்று பெயர் வைக்கும் போக்கு அதிகரித்துள்ளது.நான் அதை மனமாற வரவேற்கிறேன்.

              • நீங்கள் கூறிய அர்த்தப்படியே அது பிக்பாங் தியரியையே குறிப்பிட்டால் அது அருமையான விஷயம்தான். அறிவியல் ரீதியாக இந்த பிரபஞ்ச படைப்பை ஒப்புக்கொள்கிற நீங்கள் …. பிள்ளையார் வயிற்றில் உலகம் இருக்கிறது, சிவனின் கொண்டையில் நிலா இருக்கிறது, பூமா தேவி பூமியை தாங்கி கொண்டு இருக்கிறாள், சிவனின் தலையில் கங்கை ஓடுகிறது, மலையை தூக்கி கடந்த ஹனுமான், பத்துதலை ராவணன், மூன்று மண்டை பிரம்மா ,(இதை எல்லாம் எழுதி முடிக்க முடியாது) போன்ற அபத்தங்களை ஏன் ஏற்றுக்கொள்கிறீர்கள். அதை நீங்கள் ஏன் விஞ்ஞான ரீதியாக அலச மறுக்கிறீர்கள். இதை எல்லாம் மக்களை ஏமாற்றும் சுத்தமான கட்டு கதைகள் என்பதையும் நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் சரியா ? ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்

                • நீங்கள் குறிப்பிடும் அனைத்துமே பார்ப்பானியத்தில் உள்ளது.என்னுடைய விவாதமே பார்ப்பானியத்திற்கு எதிராகதான்.வினவில் என்னுடைய மறுமொழிகளை நீங்கள் வாசித்திருந்தால் தெரிந்து இருக்கும்.அந்த கட்டுகதைகளுக்கு நான் ஏன் விஞ்ஞான விளக்கம் தர வேண்டும்? நான் கூறியது தமிழனுடைய அறிவை பற்றி.பார்ப்பானருடைய அண்ட புழுகை அல்ல

              • அந்த சாங்கியம் அறிவியல் ஒப்புக்கொள்கிற பெருவெடிப்பை தான் குறிக்கிறது என்கிற உங்கள் வாதம்… குரான் மட்டும் பிங்க்பாங்க் தியரியை கூற வில்லை அதற்கு முன்னே எங்கள் மதம் கூறிவிட்டது என்று நிறுவ முயலுகிறீர்கள். நல்லது. பிங் பாங்க் என்ற உண்மையை யாரு கூறினாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதில் தவறு இல்லை. இதே போன்று மற்ற ஹிந்து மத விஷயங்களையும் அறிவியல் ரீதியாக விவாதிக்க தயாரா ?

                • மீண்டும் கூறுகிறேன் சாங்கியம் பார்ப்பானரின் வேதங்களை மறுத்து வந்த தரிசனம்.அது தமிழர்களின் தரிசனம்.தமிழர்களின் எந்த நூலை குறித்தும் நான் விவாதிக்க தயார்.உதாரணத்திற்கு தமிழர்களின் வேதம் என்று போற்றபடும் திருக்குறளை எடுத்து கொள்ளலாம்.

  21. நாத்திகம் சொல்வது போல் ஒன்றும் இல்லாததிலிருந்து இந்த பிரபஞ்சம் உருவாக்கி இருக்க முடியாது. ஏனென்றால் இந்த பிரபஞ்சத்தில் அவ்வளவு அதிசியங்கள் இருக்கிறது. குறிப்பாக பூமியில் ( நமக்கு தெரிந்து) .இந்த அதிசயங்களுக்கெல்லாம் கண்டிப்பாக ஒரு காரணகர்த்தா இருக்க ( ப்ரோக்கிராமர், ஒரு சூப்பர் பவர்) வேண்டும். நாம் கற்பனையிலும் நினைத்துப்பார்க்க முடியாத வல்லமை கொண்ட அந்த சூப்பர் பவரை (கடவுளை) அதற்கே உரிய இலக்கணத்துடன் அணுகுவோம்.

    • [1]இது தான் மதவாதிகளின் படைப்புவாத கொள்கை.

      [2]அறிவியல் இதனை தவறு என்று டார்வின்[Natural Selection] முலம் நிருபணம் செய்துள்ளது .

      [3]மதம் நம்பிக்கைகள் வாழ்க்கை மார்க்கம் என்பது அறிவியல் வளராத அந்த கால நடைமுறை

      [4]இன்று அறிவியல் சிந்தனைகள் மட்டுமே வாழ்க்கை மார்க்கம்!

      [5]இன்று உடல் நோய்களுக்கு தீர்வு காண கோவிளுக்கோ , மசுதிக்கோ , தேவாலயங்களுக்கோ செல்லும் மூட நம்பிக்கை பெரும்பாலான மக்களிடம் இல்லை !

      • “”” அறிவியல் இதனை தவறு என்று டார்வின்[Natural Selection] முலம் நிருபணம் செய்துள்ளது”””” டார்வின் யூகம் எல்லாம் அரதபழசு. குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற டார்வினது யூகம் எல்லாம் எப்பவோ அடித்து நொருக்கப்பட்டுவிட்டது. உலகத்தில் உள்ள பலதரப்பட்ட மக்களின் dna மாதிரிகளை ஆராய்ச்சி செய்து ஆப்பிரிக்க கறுப்பின தாய்க்கு பிறந்தவர்கள் தான் மனிதர்கள் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.

  22. ஒன்றுமே இல்லாத அண்டத்தில் இவ்வளவு நேர்த்தியான அதிசயங்கள் தானாக உருவாக்கிக்கொண்டது என்று முடிப்பது பகுத்தறிவா ? இல்லை இந்த நேர்த்தியான அதிசயங்களை ஒரு மிக சிறந்த ப்ரோகிராமர் உருவாக்கி இருப்பார் என்று முடிப்பது பகுத்தறிவா ? எது பகுத்தறிவுக்கு உகந்தது என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். நன்றி. ( உடனே அந்த ப்ரோகிராமரை யார் உருவாக்கியது என்று பாமரத்தனமான கேள்வியை வழக்கம்போல் கேட்பீர்கள். அதற்கான புரிதல் பற்றியும் மேலே விவாதத்தில் நான் சொல்லிவிட்டேன் )

  23. கடவுளை நேரில் பார்ப்பது என்பது நம் மரணத்திற்கு பின்புதான் என்று இஸ்லாம் கூறுகிறது. மனித வரலாற்றில் போன நூற்றாண்டு வரைக்கும் நாம் மின்சாரத்தை பற்றி அறிந்திருந்தோமா ? இல்லை தானே. மனிதன் தோன்றி போன நூற்றாண்டு வரை மின்சாரத்தை பற்றி புரியாமல் வைத்திருந்தது கடவுளின் செயல்தான்.இதை போன நூற்றாண்டில் நாம் அறிய வைத்திருப்பது கடவுளின் செயல்தான் என்று புரிந்துக்கொள்ளுங்கள். அது போல கடவுள் எப்படி உருவானார் என்ற எளிதான விடையை நமக்கு புரியாதபடி வைத்திருப்பது கூட கடவுளின் செயல் தான். இது இந்த பிரபஞ்ச அதிசியங்களை படைத்த சக்திக்கு இது பெரிய காரியம் கிடையாது. கடவுளை அநேகம் பேர் புரிந்துக்கொள்வதில் தான் சிக்கல் ஏற்படுகிறது. கடவுள் ஏதோ மனிதனை போன்று எண்ணுகிறார்கள். அவன் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறான்? எப்படி உருவானான் ?, அவர் ஏன் நேரில் வராமல் ஒளிந்திருக்கிறார் போன்ற பாமரத்தனமான கேள்விகள் கேட்கிறார்கள். நீங்கள் நாத்திகராக இருந்தால் முதலில் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று முடிவுக்கு வாருங்கள். கடவுள் இருக்கிறார் என்று முடிவுக்கு வந்த பிறகு எது உண்மையான கடவுள் கொள்கை என்று ஆராய்ந்து பாருங்கள். கடவுள் கொள்கையை ஆராய என் அறிவுக்கு பட்ட சிறு உதாரணத்தை கூறுகிறேன். உயிரினம் தோன்றி பல்கி பெருக முக்கிய காரண சூட்சமம் காமம் தான். இந்த காமம் என்ற சூட்சமம் இல்லை என்றால் இனப்பெருக்கமே இல்லாமல் இருந்திருக்கும்.இந்த காமம் எவ்வளவு நுட்பமான அதிசயம். இந்த சூட்சமத்தை எப்படி எல்லா உயிரினங்களும் பெற்றது ? இந்த அதி நுட்பமான செயலை இயற்கையாக உருவாகி இருக்கும் என்றால் இயற்கைக்கு உண்மையில் அறிவு என்று இருக்கிறதா ? அப்படி இருக்கிறது என்றால் அதுதான் கடவுள். இப்படி உங்கள் சிந்தனை இந்த பிரபஞ்ச அதிசயங்களை பற்றி சிந்திக்க வேண்டும். இந்த பிரபஞ்சம் தானாக தோன்றி இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இல்லாமல் ஒரு சூப்பர் ப்ரோகிராமர் எப்படி ஒரு ஒழுங்குடன் படைத்திருப்பானோ அப்படி அல்லவா இயங்குகிறது. சிந்திப்பவர்களுக்கு இது நன்றாக விளங்கும். குரான் நிறைய விஞ்ஞான அதிசயங்கள் கூறுகிறது.

    • இனியன், இறந்த பிறகு கடவுளை பார்த்தார்களா இல்லையா என்று செத்துப்போன யாரும் வந்து சொல்ல முடியாது.எனவே உயிரோடு உள்ளவர்களின் அனுபவமே கணக்கில் கொள்ள வேண்டும் தர்க்க ரீதியாக.உயிரோடு உள்ள போதே உங்களில் உள்ள கடவுளை உணருங்கள் என்று ஒரு குரு கூப்பிடுரார்.லட்சகணக்கான இளைஞர்கள் அதுல போய் சேர்ராங்க.நீங்க அது மாதிரி எதும் முயற்சி பண்ணி இருக்கீங்களா?.பொதுவான இறை கொள்கையில் எது சிறந்தது என்று பேசுறதால கேக்கிறேன்.

      • நம குள்ளே என்னா கடவுள் இருக்கிறது ? ஒன்னும் புரியலை எனக்கு ? எவனாவது நான்தான் கடவுள் என்று சொல்லிக்கொண்டு உனக்குள்ளேயும் கடவுள் இருக்கிறது உணருங்கள் என்று கூறினால் நீர் நம்புவாய் ? பகுத்தறிவை யூஸ் பண்ணுபவன் நம்ப மாட்டான். எனக்குள்ளே.. நான் யார் என்பதை அறிந்துவைத்திருக்கிறேன். என் பெற்றோர்கள் யார் என்பதை அறிந்துவைத்திருக்கிறேன். என் குணங்கள், எனக்கு பிடித்தது, பிடிக்காதது, தெரிந்தது, தெரியாததை அறிந்து வைத்திருக்கிறேன். எனக்குள்ள கடவுள் இருக்கார்னு எவனாவது அறியமுடியுமா ? மடமையான கருத்து அது. கடவுளை நான் அறிந்திருக்கிறேன் என்று எவனாவது சொன்னால் அவன் பொய் சொல்லுகிறான் என்று அர்த்தம். கடவுளை அறிந்து என்னத்தை அவன் சாதித்துவிட்டான். நீ எப்படி அய்யா கடவுளை உணர்ந்தாய் என்று கேளுங்க. கடவுளை உணர்ந்தவனுக்கு என்னைவிட இல்லை சாதாரண மனிதனைவிட கூடுதலாக என்ன சக்தி இருக்கிறது ? நான் 50 கிலோ கல்லை தூக்குவேன். அவன் 5000 கிலோ கல்லை தூக்குவானா ? நம்மை போலவே மலம் ஜலம் கழிக்கிறான், நம்மை போலவே உண்கிறான், பத்து நாளைக்கு மலத்தை அடக்கும் சக்தி இருக்கா அவனிடம் ? ஒரு கேவலமான மலத்தை அடக்க கூட சக்தி இல்லாதவன் எப்படி கடவுளை உணர்ந்து ( நம்மை காட்டிலும்) அதிக சக்தியுள்ளவன் ஆகிறான் ? கடவுளை உணர்ந்தவன் என்று சொல்லிக்கொல்பவர்கல்தான் காமலீலைகலிலும், அயொக்கியதனங்கலிலும் , சொகுசுவாழ்கைகளிலும் திளைக்கின்றனர். மாட்டாத வரைக்கும் நல்ல சாமியார் மாட்டிய பிறகு கெட்ட சாமியார். உங்களை போன்ற கேள்வியே கேட்காத, பகுத்தறிவை பயன்படுத்தாத நபர்களால் தான் இவர்கள் போன்றோர் மக்களை ஏமாற்றிக்கொண்டு திரிகின்றனர்.

        • செத்த பின்பு கடவுளை காணலாம் என பகுத்தறிவு மூலம் கண்ட இனியனெ! நீங்கள் என்பது உங்கள் உடலும் மனமும் மட்டும் இல்லை.உங்களுக்கு உணர்வரு மனம்[அன் கான்சியஸ் மைன்ட்] என்று ஒன்று உண்டு.மேலை உளவியல்[சைக்காலஜி] ஒரு மனிதனின் ஆளுமை குணாதிசயங்கள் உணர்வறு மனத்தால்தான் கட்டுபடுத்தபடுகிறது என்று கூறுகிறது.மனித மூளையின் மிக சிறிய பகுதிதான் பயன்படுத்த படுகிறது என்றுதான் அறிவியல் கூறுகிறது.முழு பகுதியும் பயன்படுத்த பட்டால் சாதாரண மனிதனைவிட ஆற்றல் மேம்படுவதில் ஆச்சரியம் இல்லை.கடவுளை தெடுதல் இல்லாமல் இல்லை என்று மறுப்பவருக்கும் யோக பயிற்சி இல்லாமல் அது தவறு என்று மறுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம். நீங்கள் ஏன் நாத்திகரை பழிக்கிரிங்க? செத்த பின்பு கடவுளை பார்க்கலாம் என்பவரை விட புலன் வழியாக அனுபவிக்காத எதையும் நம்ப மறுப்பவர்கள் உண்மையான மனிதர்கள்.

          • “””” செத்த பின்பு கடவுளை பார்க்கலாம் என்பவரை விட புலன் வழியாக அனுபவிக்காத எதையும் நம்ப மறுப்பவர்கள் உண்மையான மனிதர்கள்.”””

            புலன் வழியாக இந்த உலகத்தில் யாரு கடவுளை அனுபவித்தவர் ? இருந்தா காண்பியுங்கள் ? அது எப்படி புலன் வழியாக கடவுளை அனுபவிப்பது? உங்களின் வார்த்தைகள் ஒரு கை தேர்ந்த கபட சாமியாரின் வார்த்தைகள் போல் உள்ளது. அவர்கள் எதையும் எதார்த்தமாக பேச மாட்டார்கள். அப்படி புலன் வழியாக கடவுளை அனுபவித்து என்னத்தை சாதித்துவிட்டார்கள் இந்த உலகில் ? புலன் வழியா கடவுளை பார்த்தேன் என்று சொன்னவனை எல்லாம் இன்று கேமரா வழியா பார்த்து உலகமே காரித்துப்புகிறது. 5 புலன்களையும் அடக்கி ஆளும் ஜெகத் குரு எல்லாம் மலத்தை அடக்க முடியாமல் வாழை இலையில் கழிந்ததை உலகம் பார்த்தது. காமத்தை அடக்க முடியாமல் சந்தி சிரிக்கிறது.

            • எந்த திருட்டு பண்ணாடையும் எனக்கு ஜெகத்குரு இல்லை.ஜெகத் குரு என்று கொண்டாடுபவர்களிடம் இதை கேளுங்கள்.யோகம் ஒரு பயிற்சி.அதில் மந்திரமாயம் எதுவும் இல்லை.நீங்கள் பயிற்சியை மேற்கொண்டால்தான் அதை உணரமுடியும்.ஒருவன் புலன் வழியாக அனுபவித்ததை உங்களுக்கு எப்படி நிறுபிப்பது?.மற்றவரை பாமர தனமாக கேக்ககூடாது என்று சொல்லும் உங்கள் கேள்வி பாமரதனமாக உள்ளதே.கபட குருமார்கள் அனைத்து மதத்திலும் உள்ளனர்.நான் என் புலன் வழியாக அனுபவித்ததை மட்டுமே ஏற்கும் மனிதன்.சொர்க்கத்தில் பொண்ணுகளை ஏற்பாடு பண்ணிதரும் எந்த ” மாமா” கடவுளையும் நம்பாத சாதாரண மனிதன்.கபட சாமியார் எல்லாம் இல்லை.

              • என்னை பொருத்தவரை யோகா என்பது முதலீடில்லாத நல்ல தொழில். அதை நடத்துபவர்களுக்கு. பிரச்சனைகள் உள்ள மனிதனை யோகோ என்று கூறி சில பல ஆசனங்களை சொல்லிக்கொடுத்து பிரச்னை எல்லாம் தீர்ந்துவிட்டது என்று சைக்காலஜிக்காக பொய்யாக நம்ப வைக்கப்படுகிறது. அப்படி நம்பியவர்கள் பிரச்னை தீர்ந்துவிட்டதாக தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள். ஏமாறுவது மட்டுமல்லாமல் அடுத்தவரையும் அதில் இணைக்க பாடுபடுகின்றனர். அதாவது அவுங்க சந்தோசமா இருக்காங்களாம் .

                • கார்பரேட் குருமார்கள் மீது எனக்கும் விமர்சனம் உண்டு.ஆனால் யோக மார்க்கம் அவர்களின் சொந்த கண்டுபிடிப்பு அல்ல.இந்த மண்ணின் ஆதி குடிகளுக்கு உரியது.அறிவியல் பூர்வ மானது.அதை யோக விஞ்ஞானம் அல்லது அக அறிவியல்[இன்னர் சயின்ஸ்] எனலாம்.எதிர்கால விஞ்ஞானம் அதை வளர்த்தெடுக்கும் என நம்பலாம்.பிரச்சனை உள்ளவர்கள் மட்டும்தான் யோக பயிற்சி செய்கிறார்கள் என்ற வாதம் மழுப்பழானது.அதிகமும் மத சடங்குகளில் நம்பிக்கை அற்றவர்கள்தான் யோக பயிற்சி செய்கிறார்கள்.

  24. //இந்த காமம் எவ்வளவு நுட்பமான அதிசயம். இந்த சூட்சமத்தை எப்படி எல்லா உயிரினங்களும் பெற்றது ? //

    WRONG!!! There are lot of living things that reproduce without sex.

    I don’t have a problem with believing in a God. But the stories like that God wants you to cut the skin of your genitals or that God allows to marry 4 wives and keep concubines, that God wants to kill homosexuals etc are what I can’t accept. I too believe in God. But not the version you believe.

    • Yes u r Right! “There are lot of living things that reproduce without sex”

      [1] இயேசு இவ்வுலகில் வரும் போது, ஒரு தம்பதிகளுக்கு இயற்கையான முறையில் பிறக்காமல், ஒரு கன்னிகைக்கு அற்புதமாக பிறந்தார்!

      [2]இயேசு வெறும் ஒரு தீர்க்கதரிசியாக மட்டுமே இருந்திருந்தால், தேவன் அவரை இயற்கையான முறையில் பிறக்கவைத்திருப்பார். ஆனால், அவர் தீர்க்கதரிசிகளைக் காட்டிலும் மேலானவர் என்பதால் அவர் அற்புதமாக பிறந்தார். ஒரு ஆணின் துணையில்லாமல் மரியாள் கர்ப்பம் தரிக்கச் செய்து, தேவன் இயேசுவை அனுப்பினார்.

      [3] What a great scientific thinking of “Hisfeet” Christians in
      http://answering-islam.org/

      His feet crowling :
      //Everyone with brain will accept proven science.//
      //WRONG!!! There are lot of living things that reproduce without sex.//

      Thanks to Hisfeet’s “answering-islam.org”

    • Hello Half Scientific half Religious minded Hisfeet!,

      [1]But u believe in the creation theory[படைப்புவாதம்].
      [2]But u believe in the birth of Jesus Christ with out xy male SEX chromosome!

      Hisfeet Said:
      //But the stories like that God wants you to cut the skin of your genitals or that God allows to marry 4 wives and keep concubines, that God wants to kill homosexuals etc are what I can’t accept. I too believe in God. But not the version you believe.//

  25. இங்கு இஸ்லாமிய மார்க்கதினை மட்டும் குறைகளை கூறும்

    Hisfeet,Raman,undderbuddy போன்ற அறிவாளிகளுக்கு,

    முதலில் தன் மார்க்கங்களில்

    உள்ள மூட நம்பிக்கைகளை

    பகுப்பு ஆய்வு செய்யும் துணிவு

    உண்டா ?

    நான் ஆரம்பிக்கட்டுமா ??

    பூணுலும், படைப்புவாதமுன் சரியா ?

    • K.Senthiilkumaran

      அரை குறையாக படித்து விட்டு அந்த விவாதத்தில் தான் புத்திசாலி என்று நிறுவ விரும்பும் ஆசிரியர் செந்தில்

      கருணாநிதியின் ஊழல்களை பற்றி கூறினால் , ஜெயலலிதாவின் ஊழல்களை கூறி விவாதத்தை மாற்றுவது

      இசுலாமியர் பிரச்சினை பேசினால் ஈழ தமிழருக்காக குரல் கொடுத்தாயா எனபது போன்று பேசி சம்பந்தம் இல்லாமல் விவாத களத்தை மாற்றி நேரத்தை வீணாக்கும் வீணர்கள் நிறையா பேர் உள்ளார்கள்

      அது போன்று எடுப்பார் கைபிள்ளை நான் அல்ல , எனக்கு நேரம் பொன் போன்றது என்பதோடு “கற்க கசடற ” “செய்வன திருந்த செய் ” என்று கூறி முடிக்கிறேன்

      • இந்த கட்டுரை தமிழக மக்களின் மத நல் இணக்கத்தை

        பற்றியது என தெரிந்தும் ,

        கொலை வெறியுடன் முஸ்லிம் மக்களின் மார்கத்தை

        மட்டும் “சுன்னத்” செய்யும் முட்டாள் ,மத வெறி “இராமன்”

        ,முதலில் நாம் சார்ந்த ஹிந்து மத மார்கத்தை சுத்தம்

        செய்.

        Raman said://கருணாநிதியின் ஊழல்களை பற்றி கூறினால் , ஜெயலலிதாவின் ஊழல்களை கூறி விவாதத்தை மாற்றுவது

    • Senthil, I am not a creationist. And I welcome you to criticize mistakes in Christian faith. I am a Deistic Christians. So, I don’t mind if you criticize any part of Bible. I only have Jesus as a great moral teacher and a guidance for a progressive life.

      Just to ask, have to communists addressed all their mistakes before criticizing others?

  26. There is nothing wrong with circumcision.

    it is done to avoid infections and discourage people from shaking their cock.

    50 years ago people got married and have intercourse before they were 20 and perhaps have kids too.

    not the case now,so whichever religion u belong to u pretty much lost your foreskin.

    people who argue like this should also argue against any kind of surgery since that also tampers with the form u were born in.even a fracture/broken bone is treated artificially.

    the only issue is 4 wives and no common personal law for muslims.

    thats a big problem because we want to control population in india and christians are against contraceptive and muslims against sterilization.

    this is a big problem.

    remaining things ae much simpler problems,islam brings along a cultural invasion and that is a problem.

    unless they themselves offer clarifications the problem ll continue.

    • Harikumaar! First let me appreciate your appreciation of ‘sunnath’ as scientific approach! But any good practice shall prevail out of Scientific knowledge and not by religious dictate! Few communities elsewhere practice female circumscition also as religious custom! All such customs will seem to be good for time being and very soon outdated on scrutiny by advancing scientific knowledge!

      Regarding your second concern about ‘cutural invasion’ by Islam is already done, the same way by Aryan and later Europpean cultural invasion! You can not swim upstream now!

  27. Cloning Technology is used by the birth of Jesus Christ??
    Hello Half Scientific half Religious minded Hisfeet!,

    ஆதியாகமம் 3:15ல் தேவன், இயேசுவின் எப்படி பிறப்பார் என்பதை தெளிவாக கூறினார். ஒரு ஸ்திரியின் வித்தின் மூலமாக பிறக்கப்போகின்றவர் சாத்தானை ஜெயிப்பார் என்று கூறினார். from
    http://answering-islam.org/tamil/authors/umar/xmas2013/xmas2013part3.html

    What kind of technology it is!!

    Cloning Technology is used by the birth of Jesus Christ??

    hisfeet tells://Everyone with brain will accept proven science.//

  28. Dear iniyan,

    [1]உங்கள் கருத்து இந்து ,முஸ்லிம்,கிறிஸ்டியன் மதவாதிகளின் படைப்புவாத கொள்கையை அடிப்படையில் உள்ளது
    // மனிதர்களே நீங்கள் இந்த பிரபஞ்சத்தை பற்றி சிந்திக்க மாட்டீர்களா அப்படி நீங்கள் சிந்திப்பீர்கலேயானால் அதை படைத்தவனுடைய வல்லமை உங்களுக்கு விளங்கும். //

    [2]அறிவியலையும் , மத நம்பிகையையும் ஒன்றாக இணைக்க வேண்டாம் !
    //ஒரு இரநூறு வருட அறிவியல் வளர்ச்சியினால் பெற்ற அறிவில் இவ்ளோ கேள்வி கேட்கிறீர்களே… இந்த பிரபஞ்ச படைப்பாளியின் அறிவை பற்றி சிந்திக்க கூட நமக்கு அருகதை இருக்கா ?//

    [3]Yes We Can! Through subatomic particle called the Higgs boson.[“God particle”]

    //இந்த பிரபஞ்ச படைப்பாளியின் அறிவை பற்றி சிந்திக்க கூட நமக்கு அருகதை இருக்கா ?//

    with regards,
    K.Senthilkumaran

  29. Higgs boson Partical:[“God particle”]

    [1]To understand why the so-called “God particle” is so crucial, and why so many scientists are celebrating, you must understand where it came from.

    [2]The scientists from the European Organization for Nuclear Research (CERN) working with the Large Hadron Collider in Geneva, Switzerland, finally confirmed the discovery of the Higgs boson, physicists where thrilled. This information was announced in a statement by the Geneva-based CERN.

    //இந்த பிரபஞ்ச படைப்பாளியின் அறிவை பற்றி சிந்திக்க கூட நமக்கு அருகதை இருக்கா ?//
    Yes WE have!

    • திரு செந்தில் குரான் அவர்களே…. எல்லாம் சரி.. மனிதன் நிறைய கண்டுப்பிடிக்கிரான் ஆராய்கிறான்…. எல்லாம் இந்த உலகில் (ஏற்கனேவே சூப்பர் பவரால் படைக்கப்பட்டு இருக்கின்ற) இருக்கின்ற ஒன்றை தான் நம்மால் கண்டுப்பிடிக்க முடியும். குர் ஆனில் இன்னொரு வசனம் : நபியே நீர்… அவர்களிடம் கூறும்… நீங்கள் கடவுளாக வணங்குகிற அனைத்து கடவுள்களையும், சேர்த்துக்கொள்ளுங்கள் , உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களும் சேர்ந்துக்கொள்ளுங்கள் சேர்ந்து நீங்கள் அற்பமாக நினைக்கின்ற ஒரு எறும்பை தனியாக படைத்துககாட்ட சொல்லுங்கள். இப்படி குரான் சவால்விடுகிரது. உண்மையில் இன்று இவ்வளவு பிரமாண்ட விஞ்ஞான வளர்ச்சி அடைந்திருக்கும் மனித சமுதாயத்தால் இது முடியுமா? கண்டிப்பாக முடியாது.

      • Dear Iniyan,

        Current science allows us to ….

        [1] Create a living being with out male XY sex chromosome using CLONING technology Example is Dolly sheep![No Holly books (so called) Getha,Bible,Koran predict this in their days]

        [2]Create a living being with specific gender using Seasoning Technology[We (Animal husbandry department of TamilNadu) are using this technology to create more cows for the shake of producing milk.][No Holly books (so called) Getha,Bible,Koran predict this in their days]

        In India this technology is banded for the creation of the specific gender infant.

        Countries like Taivan,Tailand permitting this technology as their Medical Tourism policy to improve their economy

        More over

        [3] The god (so called) even could not create a “Jesus Christ” with out the help of XX chromosome of the “Human Mother Marry”. The so called god can only give XY chromosome! for the creation of Christ!

        [4] Again I am telling you that ….

        உங்கள் கருத்து இந்து ,முஸ்லிம்,கிறிஸ்டியன் மதவாதிகளின் படைப்புவாத கொள்கையை அடிப்படையில் உள்ளது

        அறிவியலையும் , மத நம்பிகையையும் ஒன்றாக இணைக்க வேண்டாம் !

        With regards,
        K.Senthilkumaran

        • dear kumaran… நான் சொன்னதை நீங்கள் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை . க்ளோனிங் எதிலிருந்து உருவாக்குகிறார்கள் ? வெற்றிடத்திலிருந்தா ? ஏற்கனவே இருந்த dna வை கொண்டுத்தானே ? அதை படைத்தது யாரு ? அதில் இப்படி உருவாக்க முடியும் என்பதை மனிதன் கண்டுப்பிடித்தான். மறைந்து இருந்ததை கண்டுப்பிடித்தான். இல்லாததை வெற்று இடத்திலிருந்து யாராலும் உருவாக்கிவிட முடியாது. அந்த சூப்பர் பவரை தவிர . அறிவியலும் இதை தான் கூறுகிறது. ஆற்றலை அழிக்கவும் முடியாது, உருவாக்கவும் முடியாது. மாற்றம் மட்டுமே செய்ய முடியும். அப்படி இருக்க இந்த பிரபஞ்சத்தில் இவ்வளவு அதிசயங்கள் எப்படி உருவானது ? அறிவியளிடம் கேளுங்கள்…. பதில் கிடையாது. இங்குதான் பகுத்தறிவு வேலை செய்யணும். ஒன்றும் இல்லாத சூனியத்தில் எப்படி இவ்வளவு (நாம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு) மூலக்கூறுகள் தோன்றியது ? இது தானாக தோன்றியது என்று அறிவியல் ஏற்றுக்கொள்ளாததை உங்கள் அறிவு எப்படி ஏற்கிறது ? இதை கண்டிப்பாக ஒரு வல்லமை மிக்க சக்தியால் தான் படைக்கப்பட்டிருக்கும் என்பது நம்புவது தானே நம் அறிவுக்கு ஏற்றதாக இருக்கும் ? இந்த கம்ப்யூட்டர் இருக்கு இது தானாக தோன்றியது என்றால் நம் பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளுமா ? கண்டிப்பாக இதை உருவாக்கியவர்கள் எங்கோ இருப்பார்கள் என்றுதான் நம் பகுத்தறிவு முடிவு செய்யும். இல்லை… கம்ப்யூட்டரை செய்தவனை பார்த்தல் தான் நம்புவேன் என்று கூறுமா ? அது போல பிரபஞ்ச சூத்திரதாரி நமக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒரு சூத்திரதாரி கண்டிப்பாக பின்புலமாக இருக்கவேண்டும் இப்படித்தான் பகுத்தாய்வு முடிவெடுக்கவேண்டும்.

  30. @இனியன்

    முதலில் சுன்னத் நல்லது என்று விவாதிக்கப்பட்டது . அதை கேள்வி கட்டதும் , இறைவனை கேள்வி கேட்க நீங்கள் யார் என்று விவாதம் புரிகிறீர்கள்

    //உங்களை போன்ற கேள்வியே கேட்காத, பகுத்தறிவை பயன்படுத்தாத நபர்களால் தான் இவர்கள் போன்றோர் மக்களை ஏமாற்றிக்கொண்டு திரிகின்றனர்.//

    நான் இறைவன் அல்ல , ஆனால் இறைவன் என்னோடு பேசினார் , இவ்வாறு சொல்ல சொன்னார் . என்னோடு பேசியது தான் கடைசி , இனிமேல் யாரோடும் பேசமாட்டேன் என்றும் கூறி விட்டார்

    மேற்கண்ட சொற்றொடர் உங்கள் பகுத்தறிவிற்கு புரிகிறதா

    இறைவனை கேள்வி கேட்க அற்ப மனிதன் நீ யார் – என்கின்ற வாசகம் ஆண்டைகளின் அடக்குமுறையின் வலிமையான ஆயுதம் .

    இறைவனின் பெயரால் மக்களை சிந்திக்கவிடாமல் செய்கிறது

    இறைவன் சுன்னத் செய்ய சொன்னாரென்றால் அவரால் பக பிக்ஸ் பண்ண முடியவில்லை என்று அர்த்தம் இல்லையா ?

    //இந்த பிரபஞ்சம் உருவாக்கி இருக்க முடியாது. ஏனென்றால் இந்த பிரபஞ்சத்தில் அவ்வளவு அதிசியங்கள் இருக்கிறது.//

    இந்த பிரபஞ்சத்தில் எத்துனை கிரகங்கள் இருன்கின்ரன தெரியுமா ? ஆண்டவன் கோடி கோடி கிரகங்கள் செஉதுக்கி தவறு செய்து, கடைசியாக பூமியை சரியாக செதுக்கி இருக்கிறான் என்று கொள்வதா ?

    அது சரி , இறைவனை கேள்வி கேட்க நாம் யார் .

    • \\முதலில் சுன்னத் நல்லது என்று விவாதிக்கப்பட்டது //

      சுன்னத் நல்லதா கெட்டதா என்று விவாதிக்கவில்லை.முசுலிம்கள் தங்களுக்கு செய்து கொள்வதால் ராமனுக்கும் அவனடிக்கும் என்ன கேடு என்றுதான் விவாதிக்கப்பட்டது.உங்களுக்கு செய்ய வேண்டும் முசுலிம்கள் சொல்லவில்லையே.எங்கள் குழந்தைகளுக்கு வலிக்கும் என்ற உங்களுடைய ஓநாய் கரிசனத்தை ஒத்தி வைத்து விட்டு அடங்குங்கள் என்றுதான் சொல்லப்பட்டது.

    • சுன்னத் என்கிற விருத்த சேதனம் பற்றி கூறிவிடுகிறேன். இந்த முன் தோல் நீக்கம் நபிகள் நாயகத்திற்கும் முன் உள்ள சமுதாயங்களிலும் இந்த பழக்கம் இருந்திருக்கிறது. இது பைபிள்களில் பல இடங்களிலும் காணலாம். இதை செய்தால் குரான் சுன்னத் என்று சொல்கிறது. சுன்னத் என்றால் நன்மையானது என்று அர்த்தம். தாடி வைப்பது சுன்னத். வைத்தால் நன்மையானது.ஆனால் கட்டாயம் கிடையாது. அதே போல் முன் தோல் நீக்கினால் நன்மையானது. கட்டாயம் கிடையாது. பர்ளு என்றால் கட்டாயம். சுன்னத் என்றால் நன்மையானது கட்டாயம் கிடையாது. 50 வயதில் ஒருவர் இஸ்லாம் மார்கத்தை ஏற்றுக்கொள்கிறார் என்றால் அவர் முன் தோல் நீக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் கிடையாது. ஏனென்றால் அது சுன்னத்தான காரியம். அனால் ஓர் இறையை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் அது பர்ளு. கட்டாயம். இந்த விருத்த சேதனத்தை பற்றி விஞ்ஞான ரீதியாக பாப்போம். இது செய்வதால் நன்மை என்று விஞ்ஞானம் கூறுகிறது. முன் தோல் நீக்கப்பட்டவனுடைய உறுப்பின் அந்த இடம் மரத்து கடினமாகிவிடுகிறது. அந்த உறுப்பில் உள்ள கூச்சம் போய்விடுகிறது. இதனால் அவன் ஒரு பெண்ணிடம் உறவுகொள்ளும்போது நீண்ட நேரம் அவன் தாக்குபிடித்து உச்ச நிலை அடைய முடியும். இந்த தோல் நீக்கப்படாதவர்கள் அவர்களுக்கு ஏற்படும் உறுப்பு கூச்சத்தினால் மிக எளிதாக விரைவாக உச்ச நிலை அடைந்து விடுகிறார்கள். ஆண்கள் உச்சநிலை அடையும் நேரத்தைவிட பெண்ணின் உச்சநிலை (orgasam ) மிக தாமதமாக இருக்கும் இது எதார்த்தம் மருத்துவமும் ஏற்றுக்கொள்கிறது. ஆக அவர்களை திருப்தி படுத்த கூட இந்த முன்தோல் நீக்கம் நன்மை செய்கிறது. மேலும் இதை செய்வதால் பால்வினை நோய்கள் எளிதில் அண்டுவதில்லை. அந்த முனை தோல் இருந்தால் அதில் கிருமி தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்பிருக்கிறது. மேற்கத்தியர்கள் பெரும்பாலும் இதை செய்துவிடுகிறார்கள். இவர்கள் என்ன இஸ்லாம் சொல்லியா செய்கிறார்கள். இதில் உள்ள நன்மைகளை கருதித்தான்.

      • என்னை கேட்டால் மத நம்பிக்கைகளை கடந்து இதை எல்லா மக்களும் செய்துவிடுவது நன்மையானது. எதிர்கால இல்லற சுக வாழ்கையை கருத்தில் கொண்டும், பால்வினை நோய்களை தவிர்பதர்கும் தான் சொல்கிறேன். இதை யூதர்கள் மேற்கத்தியர்கள் அனைவரும் செய்துவிடுகின்றனர் அந்த நன்மைகளை கருதியே

    • “”””” நான் இறைவன் அல்ல , ஆனால் இறைவன் என்னோடு பேசினார் , இவ்வாறு சொல்ல சொன்னார் . என்னோடு பேசியது தான் கடைசி , இனிமேல் யாரோடும் பேசமாட்டேன் என்றும் கூறி விட்டார்

      மேற்கண்ட சொற்றொடர் உங்கள் பகுத்தறிவிற்கு புரிகிறதா “””””

      அஹா… இப்படித்தான் கேள்வி கேட்க வேண்டும். இது போன்று கேள்வி மட்டும் கேட்டால் போதாது அதற்கான விடையை தேடிப்பார்த்து விடை திருப்தி இல்லை என்றால் பிறகு விமர்சிக்க வேண்டும். இங்கு உள்ள மத சுரண்டல்களை பார்த்துவிட்டு உலகில் உள்ள மற்ற கடவுள் கொள்கைகளையும் விமர்சனம் செய்வது எப்படி நியாயம் ஆகும் ? நீங்கள் கேட்பது போன்ற கேள்விகள் அந்த காலத்தில் கேட்டிருக்க மாட்டார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா ? பிறகு எப்படி ஏற்றுக்கொண்டார்கள்? முதல் காரணம் குரான். குரானை படிப்பவர்களுக்கு புரியும் இது சாதாரண மனிதனால் உருவாக்கவே முடியாது என்கிற உண்மை. அதுவும் எழுதபடிக்க தெரியாத முகமது இதை எப்படி உருவாக்க முடியும் ? இன்று கூட பத்து பக்கம் எழுதும் நபர்கள் அதற்குள்ளாகவே பத்து முறை தனக்கு தானே முரண் பட்டு போவதை பார்க்கிறோம். அப்படி ஒன்றை கூட குர்ஆனில் பார்க்க முடியாது.இன்றும் அரபி மொழியின் மிக சிறந்த இலக்கியமாக குரான் பார்க்கப்படுகிறது. இன்றும் விஞ்ஞான ரீதியாக கூட முரண்பாடுகளை கண்டுப்பிடிக்க முடியவில்லை.அப்படி இருந்தால் மேற்கத்தியர்கள் அதை மீடியா வழியாக கிழித்திருப்பார்கள். ஆனால் அவர்களால் அது முடியவில்லை. மாறாக விஞ்ஞான தோடு ஒத்து போகிறது குரான். குரானின் நபிகள் காலத்து மூல பிரதி இன்றும் ரஷ்யாவின் தாச்கண்டிலும், துருக்கியின் இச்தான்புள்ளிலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதன் நகல்கள் தான் இன்று உலகில் உள்ள அனைத்து குரான்களும். அடுத்து நபி அவர்களின் வாழ்கை பற்றி கூறுகிற ஹதீஸ். முகமதை பற்றி இஷ்டத்திற்கு யாரும் கதை அடித்துவிட்டு போய்விட முடியாது. முகமது வாழ்ந்த காலத்தில் 5 லட்சம் நபர்களிடம் தகவலாக திரட்டப்பட்டு அவரது வாழ்கையை எழுத்தில் பதிய வைக்கப்பட்டுள்ளது. அதை படிப்பவர்களுக்கு புரியும் இப்படி ஒரு மனிதர் வாழ முடியுமா ? கடவுள் தொடர்பில் இருந்தால் தான் அது சாத்தியம். நபி அவர்கள் மரணிக்கும்போது உலகிலேயே மிக பெரிய இஸ்லாமிய வல்லரசின் மன்னனாகத்தான் மரணித்தார்கள். தான் ஒரு யூதநிடத்தில் தன போர்க்கால கவச உடையை 2 மரக்கால் கோதுமைக்காக அடகு வைத்துவிட்டு மீட்க முடியாமலேயே மரணித்துவிட்டார்கள். குரானும் நபிகளுடைய வாழ்கையும் தான் இஸ்லாமை தன உயிரினும் மேலாக மக்கள் ஏற்றுக்கொள்ள காரணம். நான் 28-ல் கூறியபடி .. முதலில் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று முடிவுக்கு வாருங்கள். கடவுள் இருக்கிறார் என்று முடிவுக்கு வந்த பிறகு எது உண்மையான கடவுள் கொள்கை என்று ஆராய்ந்து பாருங்கள் இப்படித்தான் நம்முடைய பகுத்தாய்வு இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இறைவன் எங்கே இருக்கிறான், இப்போ என்ன செய்துக்கொண்டு இருக்கிறான், ஏன் நேரில் வரவில்லை ? இதெல்லாம் கேள்விகளா ? பாமரத்தனமான கேள்விகள் இது. நேரில் வந்தாலும் ஒற்றுக்கொள்ள கூடாது அப்பொழுதும் நம் பகுத்தறிவு கொண்டு கேள்வி கேட்டு சரியாக இருந்தால் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

      • கடைசியாக புரியும்படி சில கருத்துக்களை சொல்லி முடிக்கிறேன்..

        இன்றைக்கு நாட்டில் நடக்கும் கற்பழிப்பு மற்றும் கள்ளகாதல் கொலைகள் செய்திகளை எடுத்துப்பாருங்கள். இதில் எத்தனை சதவிகிதம் இஸ்லாமிய பெண்கள் சம்பந்தப்பட்டது என்பதை கவனியுங்கள் நண்பரே… மக்கள் தொகையில் 20% இருக்கும் முஸ்லீம்கள் என்றால் இந்த செய்திகளில் 20 % இடம் பெற்றிருக்க வேண்டுமல்லாவா ? ஆனால் 1 அல்லது 2 அல்லது அதிகபட்சமாக 3 சதவீதம் தான் முஸ்லீம் பெண்கள் சம்பந்தப்பட்டதாக இருக்கும்.

        உலகத்தில் எயிட்ஸ் பாதித்தவர்களில் இஸ்லாமியர்கள் 2 % தான் கனேக்கேடுப்பு சொல்கிறது. உலகத்தில் 25% க்கும் மேல் இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள்.

        அதேபோல் இயற்கைக்கு ஆகாதா கேடான ஹோமோ, லச்பியன் செக்சிலும்..

        அதே போல் போதை பழக்கவழக்கங்களிலும், இதே போல் தான் விகிதாசாரம் இருக்கிறது.

        இஸ்லாமிய பெண்களுக்கு மன உளைச்சல் என்பது மிக மிக குறைவாக உள்ளதாம்.

        அதே போல் கடவுள் கொள்கையில் திருப்தி இல்லாமல் இஸ்லாத்தை நோக்கி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இஸ்லாத்தில் இருந்து வெளியேறுவது மிக மிக குறைவாகவே உள்ளது.
        இஸ்லாமை அழிக்க மேற்கத்தியர்களுக்கு இதெல்லாம் கூட முக்கிய காரணங்கள் தான். அதற்காகத்தான் இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று படம் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி கூறினாலாவது இஸ்லாமின் பரவும் வேகம் குறையும் என்று வாடிகன் நினைக்கிறது போலும். ஆனால் இன்று அதைவிட வேகமாக பரவுகிறது. அதான் உண்மை.

        • //உலகத்தில் எயிட்ஸ் பாதித்தவர்களில் இஸ்லாமியர்கள் 2 % தான் கனேக்கேடுப்பு சொல்கிறது. உலகத்தில் 25% க்கும் மேல் இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள்.

          அதேபோல் இயற்கைக்கு ஆகாதா கேடான ஹோமோ, லச்பியன் செக்சிலும்..

          அதே போல் போதை பழக்கவழக்கங்களிலும், இதே போல் தான் விகிதாசாரம் இருக்கிறது.

          இஸ்லாமிய பெண்களுக்கு மன உளைச்சல் என்பது மிக மிக குறைவாக உள்ளதாம்.//

          இதற்கெல்லாம் உங்களிடம் ஆதாரங்கள் அல்லது இணையத்தள இணைப்புகள் ஏதாவதுண்டா, அல்லது உங்களின் கற்பனையில் உருவானவையா? குறிப்பாக, இரண்டாவது விடயத்தில் அரபு, பார்சிய நாடுகளின் கலாச்சாரத்தில் தனித்துவமான பாரம்பரியம் உண்டென்று சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டதில்லையா. 🙂

        • //அதேபோல் இயற்கைக்கு ஆகாதா கேடான ஹோமோ, லச்பியன் செக்சிலும்.. //

          Dear Vinavu, Senthil, etc etc pseudo-seculars, please tell what is your position on gay rights and why you keep silent about these fanatics abusing gays?

      • // தான் ஒரு யூதநிடத்தில் தன போர்க்கால கவச உடையை 2 மரக்கால் கோதுமைக்காக அடகு வைத்துவிட்டு மீட்க முடியாமலேயே மரணித்துவிட்டார்கள். //

        I Do not understand. What did it means?

        • “””” // தான் ஒரு யூதநிடத்தில் தன போர்க்கால கவச உடையை 2 மரக்கால் கோதுமைக்காக அடகு வைத்துவிட்டு மீட்க முடியாமலேயே மரணித்துவிட்டார்கள். //

          I Do not understand. What did it means?””””’

          நபி அவர்கள் மரணிக்கும்போது உலகிலேயே மிக பெரிய இஸ்லாமிய வல்லரசின் மன்னனாகத்தான் மரணித்தார்கள். அப்படி இருந்தும் 2 மரக்கால் கோதுமை பெற தன்னுடைய போர் கால கவச ஆடையை யூதநிடத்தில் அடகு வைக்கும் நிலைமையில் தான் இருந்திருக்கிறார்கள். அதை மீட்க கூட முடியாமல் மரனித்தும்விட்டார்கலென்றால் அவர்கள் வாழ்ந்த வாழ்கை எப்பேற்பட்டது என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். அவர்களுடைய வாழ்கை வரலாற்றை படித்தவர்கள்தான் இதை புரிந்துக்கொள்ள முடியும்

  31. Abu,

    //அலகு குத்திக்கிறேன், பூ மெதிக்கிறேன்னு//

    இவைகள் ஆண்டுகளில் வளா்ந்த மனிதர்கள் தங்களைத்தாங்களே (தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு) வருத்திக்கொள்வது. இதற்கும் பச்சிளம் சிறுவர் சிறுமியர்களின் அந்தரங்கக் குறியை அவர்கள் கதறக்கதற ஆண்டுகளில் வளா்ந்த மனிதர்களால் சேதம் செய்யப்படுவதற்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு புலப்படவில்லையென்றால் உங்களிடம் எதைப் பேசி என்ன பயன்?

    //காயப்படுத்திக்கொள்கின்றனர்.//

    காயங்கள் ஆறிவிடும். குறிகளுக்கு இழைக்கப்பட்ட சேதம் சேதம்தான். அந்த பச்சிளம் சிறுவர் சிறுமியர்களின் மனங்களுக்கு இழைக்கப்பட்ட சேதமும் சேதம்தான்.

    //அதுக்கு எதிரா எதாவது புடுங்கி மாத்ரி சொல்லுவிங்களா?//

    மேலே புடுங்கியது போதுமா?

    //ஏண் ஒன்னும் இல்லாத விசயத்துக்கு இவ்ளோ அக்கப்போரு செய்றீங்க.//

    உங்களுக்கு ஒன்னும் இல்லாத விசயம். எனக்கு இது Cruel Child abuse.

    //பாதாள சாக்கடையில் முங்கி எந்திருக்கும் மனிதனுக்கு ஆதரவா போராடுவோம் வறீங்களா?

    I am highly in solidarity with people who are forced into this tragedy. I regulary clean my own drains and get my self dirty and stinky all over me. I am participating and contributing various events and causes towards social justice. I will always do it without waiting for any ones invitation.

    • //அந்த பச்சிளம் சிறுவர் சிறுமியர்களின் மனங்களுக்கு இழைக்கப்பட்ட சேதமும் சேதம்தான்.// அய்யோ யுனிவர்பட்டி சொல்றத படிச்சா சிப்பு சிப்பா வருது. சிறுமிக்கெல்லாம் கத்னா செய்றாங்களாம். கொடுமைடா. எந்தக் குழந்தை உங்களாண்ட வந்து சொன்னிச்சி. கத்னா செஞ்ச அடுத்த நாளே அதை மறந்துட்டு விளையாட ஆரம்பிச்சுறும். இவ்ருகிட்ட வந்து சொன்னிச்சாம். என்னமா உருகுறானுங்கடா. யோவ் உனக்கு அநிய்யயத்து எதுரா எதுன்னா செய்யனுனு மனசார நெனச்சீனா இப்படி காமெடி ப்ண்ணிகிட்டு டையத்த வேஸ்ட் பண்ணாம போய்யா போயி வினவுகாரககிட்ட சேந்துரு.

    • //I am highly in solidarity with people who are forced into this tragedy. I regulary clean my own drains and get my self dirty and stinky all over me. I am participating and contributing various events and causes towards social justice. I will always do it without waiting for any ones invitation.//

      உன் வீட்டு வாய்க்கால் குழாய் இணையும் பாதாள சாக்கடை தொட்டி அடைத்துக்கொண்டால் நீ உள்ள எறங்குவியா அத சொல்லு.

  32. K.Senthil kumaran,

    //ராமனை யாராவது சுன்னத் செய்து கொள்ள வற்புரித்தினர்களா ?//

    Don’t be so naïve about Muhamadhians. When they are in power, they will do just that. Read some history of horrors perpetrated during India Pakistan partition. Adult males were circumcised if they wanted to keep themselves alive.

  33. K. Senthil kumar,

    //undderbuddy போன்ற அறிவாளிகளுக்கு,

    முதலில் தன் மார்க்கங்களில் உள்ள மூட நம்பிக்கைகளை பகுப்பு ஆய்வு செய்யும் துணிவு உண்டா ? நான் ஆரம்பிக்கட்டுமா ??//

    I am a humanist and i don’t follow any madness. I have read the critiques of various madnesses and i find Muhamadanism to be the greatest danger the humanity faces. I came to this conclusion based on the exposures of Ex-Muhamadans themselves. Otherwise i would not know.

    I have already suggested you to have a global view. Please consider my request. Please read what Ex-Muhamadans have to say.

  34. கொலை வெறி இராமன்,

    [1]கொலை வெறியுடன் முஸ்லிம் மக்களின் மார்கத்தை மட்டும் “சுன்னத்” செய்யும் அன்பர் “இராமன்”, அவர் விரல்களை “அவரே ” வெட்டி கொண்டால் நகசுதி வியாதி வராமலும், மத நல் இணக்கத்தையும் பாதுகாக்கலாம்

    [2] தூத்தேரி , முதலில் நாம் சார்ந்த ஹிந்து மத மார்கத்தை சுத்தம் செய் ,பார்பன,பூணுல் ,சாதி ,நாற்றம் நாறுது

    Raman said://சுன்னத் செய்யும் அன்பர்கள் விரல்களை வெட்டி விட்டால் நகசுதி வியாதி வராமலும் பாதுகாக்கலாம்//

  35. Tippu,

    //இசுலாம் மதத்தை விமர்சிப்பதுதான் குறி என்றால் ******** onlinepj.com போய் உங்கள் வீர பிரதாபத்தை காட்டலாம்.//

    Online is only in the name, but everthing for him is onstage. Ask him to allow comments so that we can do ONLINE debate. (By the by, I have written 2 posts rebutting his book on polygamy. It’s been many weeks. I don’t know how to inform him of my rebuttals.)

    //வினவு போன்ற மதசார்பற்ற தளத்தில் வந்து பிற மதங்களை தூற்றி திரிவது கேடு கேட்ட மதவெறி நச்சரவங்களின் செயல்.//

    Vinavu is a site where we can discuss everything that affects people particularly those exploited. Religion is the first tool of exploitation.

    Let PJ allow us to comment in his site. We will stop commenting on Muhamadism in Vinavu. lol.

    • ஒட்டு மொத்தமாக வினவில் இசுலாமிய மதத்தை விமரிசிக்க கூடாது என்று நான் சொல்ல வரவில்லை.தாராளமாக தாங்கள் கழிந்து வைக்கலாம்.ஆனால் தமிழகத்தின் மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் இது போன்ற நல்லதொரு பதிவில் வந்து கட்டுச்சோற்றில் பெருச்சாளியை வைத்துக் கட்டுவது போல உங்கள் மதவெறி நச்சுக் கருத்துக்களை வாந்தி எடுத்து வைப்பதைத்தான் கண்டிக்கிறேன்.

      ஆமாம்,முசுலிம்களும் இந்துக்களும் இணக்கமாக வாழ்வதை கண்டால் ஆணிவேர் முட்டிகளுக்கு ,மன்னிக்கவும்.” யுனிவெர்பட்டிகளுக்கு ”டாப் டூ பாட்டம் பத்த்த்திண்டு எரியறதே” ஏனோ.

  36. [1]உலகம் உருண்டை என்று கலிலியோ கூறிய போது அவருக்கு மதம் வாய்ப்பூட்டு போட்ட சம்பவம் வரலாறாகும்.

    [2]பின்னர் மதம் அந்த உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதும் வரலாறாகும்.

    [3]சாகும் தருவாயிலும் கலிலியோ உலகம் உருண்டை என்பதிலிருந்து பின்வாங்காமல் நேர்மையாக இருந்தார்

    Hisfeet said://Funny… Read about Galileo before you post. He said Sun is at center. Before Plato said earth is at center.

    I really pity your students. You have many wrong information.//

  37. Dear Iniyan,

    இந்த நூற்றாண்டில் ,அறிவியல் மத வாதிகளின் இரண்டு முக்கிய சவால்களை வென்று உள்ளது .

    [1] உலகம் உருவான முறை Higgs boson Partical: [“God particle”]
    [i]ஐரோப்பாவின் செர்ன் ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ‘கடவுள் துகளை’க் கண்டுபிடித்து விட்டனர் என்பதே இச்செய்திகளின் சாராம்சம். விஞ்ஞான மொழியில் சொல்வதானால் தற்போது ‘பிடிபட்டிருக்கும்’ துகளை ஹிக்ஸ் போசான் துகள் என்று சொல்லலாம்.

    [ii]வெடித்துச் சிதறிய அதீத வெப்பம் கொண்ட துகள்கள் ஒரு குறிப்பிட்ட விசைப்புலத்தைக் கடக்கும் போது அதன் ஆற்றல் நிறையாக மாறும் என்பதை ஹிக்ஸ் எனும் விஞ்ஞானி சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் விளக்கினார். அந்த விளக்கம் தான் தற்போதைய சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    [2] உயிர் உருவாகும் முறை [DNA double helix structure by Crick and Watson.]
    [i]The key ingredient in their discovery was the chemical logic behind the complementary relationship between nucleotides in each strand. It explain the Chargaff rule, since A was predicted to pair with T, and C with G. Thus, the nucleotide string of one stand completely defined the nucleotide string of other.
    [ii]This is the key to DNA replication, and the missing link between the DNA molecule and heredity.

    Again I am telling you that

    அறிவியலையும் , மத நம்பிகையையும் ஒன்றாக இணைக்க வேண்டாம் !

    • “””””[ii]வெடித்துச் சிதறிய அதீத வெப்பம் கொண்ட துகள்கள் ஒரு குறிப்பிட்ட விசைப்புலத்தைக் கடக்கும் போது அதன் ஆற்றல் நிறையாக மாறும் என்பதை ஹிக்ஸ் எனும் விஞ்ஞானி சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் விளக்கினார். அந்த விளக்கம் தான் தற்போதைய சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.”””” இத யாரும் இல்லை என்று மறுக்கவில்லை. அந்த விஞ்ஞானிகள் ஒரு பிரபஞ்சமே உருவாகும் என்ற எதிர்பார்பொடுதான் இதை செய்தனர். ஆனால் அது நடக்கவில்லையே. இந்த ஆராய்ச்சியின் படி ஆற்றல் நிறையாக மாறியது சரி இந்த விதியை உருவாக்கிய சூத்திரதாரி யார்? அந்த ஆற்றல் எப்படி உருவானது ? எல்லாம் தானாக நடந்து விட்டதா ? சிந்தியுங்கள்.

    • நண்பர் செந்தில் குமரனுக்கு…

      இதில் கடவுள் இருக்கிறானா இல்லையா நாத்தீக விவாதத்துடைய விடியோ லிங்க் இது. மிக சுவாரஸ்யமாக இருக்கும். முழுவதையும் பொறுமையாக பாருங்கள் தெளிவு கிடைக்கும்.

      http://onlinepj.com/bayan-video/vivathangal/iraivan_irukinrana/

  38. Hello fake Hisfeet,

    [1]It is a essay about religious harmony in Tamil Nadu. But some fake guy like you “Hisfeet” only start blaming about Muslim’s custom “Sunnath” in his feed back no 11.1.1.1.1.1.1 FIRST. Yes u only the culprit to start spoiling the good harmony atmosphere here. More over Raman and Underware also making harmonic Music in support of your Muslim heated speeches.

    [2]That is why, TIPU start defending his own Muslim custom from you guys like suspicious UNDERWARE,fake HISFEET,மத வெறிRAMAN.

    [3]So there no reason for asking Muslims to blame their own religion in THIS ESSAY.

    [4]Even though IF u want to blame Muslims customs…fine ok … FIRST U LIST OUT ALL YOUR OWN RELIGIOUS FOOLISH CUSTOMS , THEN BLAME MUSLIMS CUSTOMS.

    ” CLEAN YOUR OWN ANUS THEN TELL MUSLIM TO CLEAN “

  39. கிறித்தவத்தின் மாபெரும் ஞானி (ஏசு கிறிஸ்து) மக்களின்

    ஆத்மாக்களுக்கு விடுதலை கோரி, தமது உடம்பைத் தியாகம்

    செய்தார்; நவீனமான, கல்வியறிவு மிகுந்த ஞானியோ(பாதிரி)

    தனது சொந்த ஆத்மாவின் விடுதலைக்காக மக்களின்

    உடம்புகளைத் தியாகம் செய்கிறார்.

    -காரல்மார்க்ஸ்

  40. வாழ்த்துக்கள் செந்தில்,அவனடியை ஓட ஓட விரட்டி அதன் ஆணவத்துக்கு தக்க பாடம் புகட்டி இருக்கிறீர்கள்.குளிக்கப் போய் சேற்றை அள்ளிப் பூசிக்கொண்டு வந்த மடையனைப் போல ஆகிப்போனது அதன் நிலைமை.

    \\We can reject the parts of Bible that contradict modern science//

    \\this is a foolish story about a non-existing person called Abraham. I don’t believe that there existed a person called Abraham.//

    Proud fools talk too much என்ற பழமொழி உண்மையாகி போனது..பிற மத நம்பிக்கையாளர்களுக்கும்,கடவுள் மறுப்பாளர்களுக்கும் நம்முடைய மத நம்பிக்கைகள் ஏற்புடையதாக இருக்காது என்ற எளிய உண்மையை கூட உணராமல் தம்முடைய மதமே உயர்ந்தது என பீற்றி திரிந்த அவனடி பைபிள் அறிவியலுக்கு புறம்பானது என வேறு வழியின்றி ஒப்புக்கொண்டுள்ளது.

    குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக பைபிளில் உள்ள நல்ல போதனைகளை ஏற்றுக்கொள்ள சொல்கிறது அவனடி.ஏசு போதனைபடி எதிரிக்கும் அன்பு காட்டனும்,குற்றம் செஞ்சவங்கள மன்னிக்கணும் இப்படியெல்லாம் பிதற்றி வருகிறது.இது கடைந்தெடுத்த முட்டாள்தனம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்.

    1999-இல் ஓடிசாவில் மத பரப்புரை செய்த ”மாபாதக குற்றத்துக்காக” ஸ்டெயின்ஸ் பாதிரியாரையும் அவரது பச்சிளம் குழந்தைகள் இருவரையும் உயிரோடு எரித்துக் கொன்றான் சங் பரிவார் கும்பலை சேர்ந்த தாராசிங் என்ற மிருகம்.பாதிரியாரின் விதவை மனைவி கணவருக்காக வடித்த கண்ணீர் காயும் முன்பாகவே ”எனது கணவரை கொன்றவர்களை மன்னித்து விட்டேன்”என்று அறிவித்தார்.இந்த பெருந்தன்மை கண்டு வெட்கி திருந்தினவா சங் பரிவார் மிருகங்கள்.இல்லை,ஏழெட்டு ஆண்டுகளுக்கு பின் அதே ஒரிசாவில் கந்தமால் மாவட்டத்தில் இந்த மிருகங்கள் கிருத்துவ மக்களை துரத்தி துரத்தி வேட்டையாடி கொன்றொழித்தன. கன்னித்துறவிகளை கதற கதற பாலியல் கொடூரத்திற்கு ஆளாக்கினார்கள்.

    ஆகவே மன்னிப்பு எதிரியின் மயிரை கூட அசைக்காது.எதிரியின் மொழியிலேயே அளிக்கும் பதில்தான் நமது எதிர்காலத்தை பாதுகாப்பானதாக்கும் என்பதற்கு குருதி சாட்சியம்தான் ஸ்டெயின்ஸ் பாதிரியார்.

    • No such intimidation will lead us to violence like you.

      //உணராமல் தம்முடைய மதமே உயர்ந்தது என பீற்றி திரிந்த அவனடி பைபிள் அறிவியலுக்கு புறம்பானது என வேறு வழியின்றி ஒப்புக்கொண்டுள்ளது.//

      I have never said that my religion is the only true religion. But I always hold that some religions are better than other religions. I always criticized falsehoods in Christianity. You can see historic comments in this site. I have posted against foolishness in Christianity in many posts. (Angel TV, Jesus Calls etc). Also I supported evolution, gay rights, equality for women, secularism. Everyone who follows my comments know that. Don’t think that you have defeated me in anything. I have not changed from any of my positions.

      • \\ I have not changed from any of my positions.//

        \\நியாயப்படுத்த முடியாத கிருத்துவ முட்டாள்தனங்களையும் அயோக்கியத்தனங்களையும் நானும் எதிர்க்கிறேன் என்ற பேரில் தப்பிக்கும் உத்திதான் அவனடியின் விமரிசன நாடகம்.

        துறவறம் என்பதே மனித இயல்புக்கு எதிரானது,மனிதர்களால் கடைப்பிடிக்க முடியாதது.அதை வலியுறுத்தும் கிருத்துவ மதம்தான் பாதிரிகள் ஒழுக்க கேடான செயல்களில் ஈடுபடுவதற்கு காரணம் என்று நான் எழுதிய போது அயோக்கிய பாதிரிகளை மட்டும் கண்டித்த அவனடி துறவறம் பற்றி கள்ள மவுனம் சாதித்து விட்டது.துறவறம் என்பதே முட்டாள்தனமானது என்பதை வசதியாக மறைத்துக்கொண்டு யாரையும் கட்டாயப்படுத்தி துறவறம் மேற்கொள்ள செய்தால் மட்டுமே எதிர்ப்பேன் என நாடகமாடுகிறார்..//

        \\But voluntary celibacy like Abdul Kalam, Jesus etc are acceptable. It is their wish. It should not be made as a religious law.//

        பாதிரி ஆக துறவறம் கட்டாயம் என்று ஆக்கிய மதத்தை இந்த ஒற்றை வரியால் மாற்றி விடுவாராம்.வெறும் நாடகம்.துறவறம் கட்டாயம் என ஆக்கியது தவறுதான் அது ஒழுக்க கேட்டுக்கு காரணமாகிறது என்று சொல்ல என்ன தயக்கம்.

    • You say that you should address violence with violence. You people do that in many countries. What happened? Have you put an end to atrocities against your people? What happened in Gujarat or Muzafarabad? Still you are attacked. Why? Don’t you see the problem is with the aggressors and not with the forgiving heart?

      You also say that your god is “alavatra arulaalan” what that means?

      • குட்ட குட்ட குனிபவனும் முட்டாள்.
        குனிய குனிய குட்டுபவனும் முட்டாள்.

        ஒடிசாவில் நடந்தது போல எதிரிகள் அநீதி இழைக்க இழைக்க மீண்டும் மீண்டும் மன்னித்துக்கொண்டிருப்பது கிறுக்குத்தனம். அதனால்தான் மன்னிப்பது அயோக்கியர்களை திருத்தும் என அவனடியானால் சொல்ல முடியவில்லை.

        எதிரியை எதிரியின் வழியிலேயே சந்திப்பது தீர்வாகாது என கதைக்கிறார்.

        உமர் முக்தார் திரைப்படத்தில் இறுதிக்காட்சி.போரில் பிடிபட்ட உமர் முக்தாரிடம் ஜெனரல் கர்சியானி இத்தாலியின் காலனி ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டு பொம்மை ஆட்சியாளராக இருக்குமாறு சொல்கிறார்.அந்த மாவீரன் பதில் சொல்கிறார்.

        “We will never surrender; we win, or we die. And don’t think it stops there. You will have the next generation to fight, and after the next, the next. As for me, I will live longer than my hangman.”

      • \\Have you put an end to atrocities against your people? What happened in Gujarat or Muzafarabad? Still you are attacked. Why? Don’t you see the problem is with the aggressors and not with the forgiving heart?//

        இந்திய முசுலிம்களை கடந்த நூறாண்டு காலமாக தொடர்ந்து வேட்டையாடி வருகிறது சங் பரிவார் கும்பல்.இதற்கு ஒருநாளில் தீர்வு கிடைத்து விடும் என எதிர்பார்க்க முட்டாள்களால் மட்டுமே முடியும்.

        • Even Christians are hunted in India by both hindus and muslims. You know how tippu sultan persecuted Manglorean Catholics? For you and vinavu may be, tippu sultan is a hero. But he killed many Christians.

          • Keeping religion and politics aside , Tippu Sultan was true hero , king of masses , and man with exceptional coverage. He has given goosebumps to mighty british several times and faced them head on. Son of soil had the good repo with other religion too. Coming back to critical point , most of canara christian catholics forget we migrated from goa upon inquisition and rani abbakka given shelter along konkan belt. Mostof catholic forefathers were hindus often converted by missionaries. They helped british several times , which angered tippu , so ordered the dictat. So one can say its catholics exactly betrayed india by helping british …. Its true…..

            there are some christian who worked as informer to British has been executed, I don’t think Tipu sulatan is wrong in that regard,in every religion there is black sheeps.

            நன்றி.http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=161940&cnt=2

      • \\“alavatra arulaalan” //

        பாத்திரமறிந்து பிச்சையிடு.இரங்குவதற்கு தகுதியானவருக்கு இரங்கலாம்.கொல்ல வரும் மிருகத்திற்கும் இரங்குபவன் கிறுக்கன்,சரி,இந்த கேள்விக்கு அவனடியின் பதில் என்ன.

        ராஜபட்சேவை மன்னித்தால் ஈழ தமிழர்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைத்து விடுமா.

  41. @கி.செந்தில் குமரன் நீங்கள் டார்வினின் பரிணாம கொள்கையை பற்றி பேசுவதால் ஒரு கேள்வி மட்டும்.ஒரு செல் உயிரியில் இருந்து மனிதன் வரை பரிணாமம் அடைந்துள்ளதாக டார்வின் கூறுகிறார்.நன்று.மனிதனின் அடுத்த பரிணாமம் என்ன? அது எத்தனை லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு நடக்கலாம் தோரயமா? டார்வின் அது பற்றி எதுவும் கூறி உள்ளாரா? விளக்குங்களேன்.

      • நன்றி செந்தில் ,பொறுமையாக பதிலை சொல்லுங்கள் எந்த அவசரமும் இல்லை.

    • தேவாரா நாயனார் அவர்களே ,உங்கள் கண்ணாடியில் தெரியும் ஜந்து இரண்டே இரண்டு செல்களில் இருந்து வந்தது. அந்த இரண்டு செல்லில் இருந்து தான் கண் இத்யம் மூக்கு என்று எல்லாம் உருவானது .

      • நான் கேட்ட கேள்விக்கு பதில் அது இல்லையே!நான் பரிணாம வளர்ச்சிய கேட்டா நீங்க கருவளர்ச்சிய பத்தி பேசுறிங்களே ஏன்? எப்பவுமே நேரா பதில் சொல்ல மாட்டீங்களா? இல்ல வளர்சிதை மாற்றமும் பரிணாம வளர்ச்சியும் ஒன்னா?

      • Raman Sir,The real questions asked by Mr Devara nayanar is…

        [1]மனிதனின் அடுத்த பரிணாமம் என்ன?

        [2]அது எத்தனை லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு நடக்கலாம் தோரயமா?

        [3] டார்வின் அது பற்றி எதுவும் கூறி உள்ளாரா? விளக்குங்களேன்.

        Raman replayed://தேவாரா நாயனார் அவர்களே ,உங்கள் கண்ணாடியில் தெரியும் ஜந்து இரண்டே இரண்டு செல்களில் இருந்து வந்தது. அந்த இரண்டு செல்லில் இருந்து தான் கண் இத்யம் மூக்கு என்று எல்லாம் உருவானது .

  42. Hi fake Hisfeet, if that is not your web site then why are u referring it here?

    [1] Bible tells that the Earth is Flat[ You and YOUR god only having peanut sized brain,FOOLISH GUYS]

    [2]Galileo speaks against this… [ In 1615 Galileo wrote a letter outlining his views to Madame Christina of Lorraine, the Grand Duchess of Tuscany, “Concerning the Use of Biblical Quotations in Matters of Science.”]

    [3]The tribunal used this letter against him in his first trial in 1616.

  43. Iniyan,

    //இந்த தோல் நீக்கப்படாதவர்கள் அவர்களுக்கு ஏற்படும் உறுப்பு கூச்சத்தினால் மிக எளதாக விரைவாக உச்ச நிலை அடைந்து விடுகிறார்கள்.//

    It is nonsense. Only when the bud [glan] is rubbed after orgasm it gets கூச்சம் [tingling sensation]. Before orgasm it does not get கூச்சம்.
    (In fact, man can penetrate the woman just the bud deep and keep mating for a considerable time and there by prepare the woman for orgasm without himself fully prepared for orgasm. When the woman is fully ready then the man can go all the way inside and mate and both of them can come to orgasm simultaneously. If the man now takes little longer to orgasm, the woman can even enjoy multiple orgasms.)

    //மேற்கத்தியர்கள் அனைவரும் செய்துவிடுகின்றனர் அந்த நன்மைகளை கருதியே//

    Blatant lie.

    //குரானை படிப்பவர்களுக்கு புரியும் இது சாதாரண மனிதனால் உருவாக்கவே முடியாது ************************//

    Yaaawn

    //ஒரு யூதநிடத்தில் தன போர்க்கால கவச உடையை 2 மரக்கால் கோதுமைக்காக அடகு வைத்துவிட்டு மீட்க முடியாமலேயே மரணித்து//

    Yaaaaaaaaaaaaaawn.

  44. Abu,

    //உன் வீட்டு வாய்க்கால் குழாய் இணையும் பாதாள சாக்கடை தொட்டி அடைத்துக்கொண்டால் நீ உள்ள எறங்குவியா அத சொல்லு//

    Yes. You?

    //சிறுமிக்கெல்லாம் கத்னா செய்றாங்களாம். கொடுமைடா//

    கொடுமைதான். If you don’t pretend to not know it, just Google search ‘female genital mutilation’.

  45. Tippu,

    //” யுனிவெர்பட்டிகளுக்கு ”டாப் டூ பாட்டம் பத்த்த்திண்டு எரியறதே”//

    Any rational person can have negative opinion about Muhamadism. Suspecting Paarpaan for everything means giving to much credit to him which he does not deserve.

    • முசுலிம் எதிர்ப்பு இந்து மதவெறியின் ஆணிவேரே பார்ப்பனியம்தான்.பிறப்பால் பார்ப்பனராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பார்ப்பனியத்தின் மூளைசலவைக்கு ஆளாகிபோனதால் இந்துமத வெறியர்களுக்கு முசுலிம்களும் இந்துக்களும் இணக்கமாக வாழ்வதை கண்டாலே ”டாப் டூ பாட்டம் பத்த்த்திண்டு எரியறது”.

  46. K. Senthil kumaran, Tippu, etc.

    //இந்த கட்டுரை தமிழக மக்களின் மத நல் இணக்கத்தை பற்றியது//

    First of all, I am responding to the comments already made in this post. If you don’t want me to comment at all, I cannot oblige.

    Next, the cohesion is the result of being aware of the issues involved by the parties involved, understanding them and ironing out the differences. Without the final ironing out, expecting cohesion is contenting with a mirage. Here I have brought out some issues so that they may be known and be discussed.

    Let us discuss, with or without name-callings.

    • \\First of all, I am responding to the comments already made in this post//

      முசுலிம் எதிர்ப்பு மதவெறியோடு கைகோர்க்க மதவெறி ஓடோடி வந்தது.

      https://www.vinavu.com/2013/12/31/vanakkarayya-short-story/#comment-120554

      \\If you don’t want me to comment at all, I cannot oblige.//

      ஏற்கனவே சொன்னதுதான்..தாராளமாக தாங்கள் கழிந்து வைக்கலாம்.எதிர்கொள்ள நாங்கள் அணியம்.

      \\Let us discuss,with or without name-callings.//

      ஆகட்டுமுங்க

  47. Hi fake Hisfeet,

    Government is just as infallible too when it fixes systems in physics. Galileo was sent to the inquisition for affirming that

    the earth was a sphere:

    the government had declared it to be as flat as a trencher, and Galileo was obliged to abjure his error. This error however at length prevailed, the earth became a globe, and Descartes declared it was whirled round its axis by a vortex.

    http://en.wikipedia.org/wiki/Myth_of_the_Flat_Earth

    • The article you have posted clearly says that there was no widely held belief in flat earth in medieval period. This is a later myth spread to disgrace Catholics. Plato himself proposed a spherical earth.

      From the article you quoted
      //In 1834, a few years after the publication of Irving’s book, Jean Antoine Letronne, **a French academic of strong antireligious ideas, misrepresented the church fathers and their medieval successors as believing in a flat earth,** in his On the Cosmographical Ideas of the Church Fathers//

      so it is a misinterpretation by anti-religious people like you. So get your facts right. Also read the article before you post. You post articles that says just the opposite to your point.

  48. The Scientist Galileo was interfered by the foolish POP’s in two occasional.

    [1]On February 24th 1616 Galileo’s scientific views were condemned by a special commission of theologians at Rome, presided over by Cardinal Bellarmine. He was forbidden to ‘hold, teach or defend his opinion in any way, either verbally or in writing’.

    [2]On February the 13th 1633 Galileo was again summoned to an ecclesiastical court. He was found guilty as ‘suspected of heresy’. He was made to kneel down and abjure his opinion. Until his death, in 1642, he was kept under house arrest

    During his lIFE TIME he not only proving that the EARTH IS SPHERE AND ALSO PROVING THAT it is not the sun that moves but the earth; that day and night come about by the earth rotating round its own axle[heliocentric system]

  49. Hi fake Hisfeet,

    The legend Sir Galileo proved that

    [1]Biblical flat earth claim

    [2]Biblical Geocentric model

    are WRONG.

    So at least NOW accept that you and Bible supporters are NUMBER ONE FOOLS IN THE WORLD AND HAVING “peanut sized brain”

  50. மத நல்லினக்கம்னா என்னனா , மற்ற மத மக்களின் கலாசார பழக்க வழக்கங்களை மதித்து , அதன் பொருட்டு மற்றவர்களிடம் பாரபட்சம் காட்டாமல் இருப்பது என்று நான் சொன்னேன்

    முன்னா , திப்பு , அவனடி போன்றோர் , இல்லை மாற்று மதத்தினரும் எங்கள் மத வழக்கப்படி பொங்கல் கொடுத்தால் தான் , எங்கள் மதப்படி நடந்து கொண்டால்தான் மதிப்போம் , அது தான் மத நல்லிணக்கம் என்று கூறினார்கள்

    இதற்கு எனக்கு பூணூல் பூட்டு அழகு பார்கிறார் செந்தில்
    அர்ஜுனோ ஹிடலர் போல , எல்லா பார்ப்பானையும் ஒலுசுட்டா உலகம் சுதமாஇகிவிடும் என்று சின்சா , சின்சா என்று கொட்டி கொண்டு இருக்கிறார்

    பதில்களை படிக்கும் பொது, வினவு வாசகர்கள் இடையே இவ்வளவு சிந்தனை வறட்சி காணபடுகிறது . பின்னர் தினமலர் கரன் படிப்பவர்கள் நிலை என்னவோ

    வருத்ததுடன் …

    • Raman, I had eaten pongal offered to your gods this 14th Jan. I really don’t have a problem. My hindu relatives bless me and put holy ash on my forehead. I don’t have problem. These are household practices. My problem is only with temples where only one caste and only one language is allowed. If you give prasadam on that temple (even if it is not offered to your gods) I will not eat. I won’t associate with the ideologies that I have differences. But I don’t have a problem with kolakattai on pillayar sathurthi or sundal for navarathri. I eat all those things.

  51. சிந்தனா மூர்த்தி ராமன் அவர்களுக்கு

    உங்கள் பொன்னான நேரத்தை [நீங்க சொன்னதுதான்] எங்கள் சிந்தனையை வளப்படுத்தும் உங்களுக்கு முதல்ல நன்றி சொல்லிக்கிறேன்.

    ”மற்ற மத மக்களின் கலாசார பழக்க வழக்கங்களை மதித்து , அதன் பொருட்டு மற்றவர்களிடம் பாரபட்சம் காட்டாமல் இருப்பது” என்ற நெறிமுறையை இந்து முசுலிம் கிருத்துவ மக்கள் கடைப்பிடிக்கவே செய்கிறார்கள்.உங்கள் சிந்தனை ரெம்பவே பெருக்கெடுத்து ஓடுவதால் உங்களால் அதை உணர முடியல போல.

    கிருத்துவர்களும் தலித்களும் பன்றி இறைச்சி உண்கிறார்கள் என்பதற்காக முசுலிம்கள் அவர்களை வெறுத்து ஒதுக்கவில்லை.அவர்கள் கடைகளில் பொருள் வாங்காதேன்னு சொல்றதில்லை.அவர்களுக்கு வீடு தர மாட்டோம்னு முசுலிம்கள் சொல்றதில்ல.அவுக வீடுகள்ல குடியிருக்க மாட்டோம்னு சொல்றதில்ல.சென்னை போன்ற நகரங்களின் எந்த ஒரு சேரியை எடுத்துக்கிட்டாலும் கிருத்துவ இந்து தலித் மக்களுடன் முசுலிம்கள் சேர்ந்து வாழ்வதை காணலாம்.முசுலிம்கள் இல்லாத ஒரு சேரி கூட சென்னையில் இருக்காது.
    ஆண்டுதோறும் திருப்பதி குடை கவுனி தாண்டும் திருவிழா அன்று வட சென்னை நகரமெங்கும் அன்னதான நிகழ்ச்சிகள் வீதிதோறும் நடக்கின்றன.அதற்காக நன்கொடை வசூலிக்கும் அன்பர்களை கேட்டுப் பாருங்கள்.ஒரு தெருவில் கூட நன்கொடையில் முசுலிம்களின் பங்களிப்பு இல்லாமல் இருக்காது.

    மசூதிகளில் தொழுகை நேரம் என்றால் அவற்றை கடந்து செல்லும் இந்து மத பக்தி ஊர்வலங்களில் செல்லும் இந்து சகோதரர்கள் இசைக்கருவிகளை இசைப்பதில்லை.மசூதிகளின் வாயிலில் காலை மாலை தொழுகை நேரங்களில் குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்ய சொல்லி இந்து மத தாய்மார்கள் குவிகிறார்கள்.மசூதிகளுக்கு அருகில் கடை வைத்திருக்கும் இந்து மத சகோதரர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு துறக்க பள்ளிக்கு பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு செய்கிறார்கள்.சென்னையில் ஒவ்வொரு பள்ளியிலும் காய்ச்சப்படும் நோன்பு கஞ்சியை இந்து,கிருத்துவ சகோதரர்கள் ஆர்வத்துடன் கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள்.

    கிருத்துவ மத நிறுவனங்கள் நடத்தும் சில பள்ளிகளில் கூட [ஆண்டு முழுவதும் இல்லன்னாலும்] சில சமயம் வெள்ளி கிழமை சிறப்பு தொழுகைக்கு போய் வர முசுலிம் மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் விடுப்பு தருவதும் உண்டு.

    இப்படியான நிகழ்வுகள்தான் ”மற்ற மத மக்களின் கலாசார பழக்க வழக்கங்களை மதித்து , அதன் பொருட்டு மற்றவர்களிடம் பாரபட்சம் காட்டாமல் இருப்பது”

    அதை விடுத்து லட்டு தின்னால்தான் நல்லிணக்கம் என்று பிதற்றாதீர்கள்.இந்து மத நம்பிக்கைபடி தெய்வத்துக்கு படைக்கப்பட்ட உணவை உண்பது புண்ணியம்.அதுவும் ஒரு வழிபாடு.அதனால்தான் தெய்வ பிரசாதத்தை கோவிலுக்கு வெளியே பல கிலோ மீட்டருக்கு அப்பால் கொண்டு வந்து கொடுத்தாலும் இரு கரம் ஏந்தி அதை வாங்கி பவ்யமாக உண்கிறார்கள் இந்து மத சகோதரர்கள்.

    ஆக ஒரு இந்து மத வழிபாட்டை முசுலிம்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் அதை செய்யலன்னா மத நல்லிணக்கம் இல்லைன்னு சொல்றதும் கடைந்தெடுத்த பித்தலாட்டம்.

    \\பதில்களை படிக்கும் பொது, வினவு வாசகர்கள் இடையே இவ்வளவு சிந்தனை வறட்சி காணபடுகிறது . பின்னர் தினமலர் கரன் படிப்பவர்கள் நிலை என்னவோ//

    யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர்
    சொல்லிழுக்குப் பட்டு

    கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.

      • கெரடி என்பது சிலம்ப விளையாட்டை குறிக்கும் சொல்.பெரும்பாலும் புழக்கத்தில் இல்லாத சொல்.அகர முதலியிலும் தமிழ் பலமொழிகளிலும் மட்டுமே காணக்கிடைக்கிறது.

  52. ராமனின் மத நல்லினக்கம்: [ராமனின் பொன்மொழிகள்]

    [1]மது அருந்தும் இசுலாமிய நண்பன் வேண்டாம் என்று மறுத்ததோடு அலாமல் , இது பாவம் உள்ளது என்றான் .

    [2] I dont rent my house to Muslims because they eat meat which is not in accordance with my principle

    [3]பின்குறிப்பு : hisfeet மற்றும் திப்பு இருவரும் ஒரே கடவுளை வணங்குபவர்கள்

    [4]When somebody come to public forum and claim “Why their culture is superior” I have given them the different perspective

    [5]சுன்னத் செய்வது என்பது இறைவன் மனிதனை சரியாக படைக்கவில்லை என்பதை உணர்த்துகிறது
    இறைவன் மிகப்பெரியவன் அல்ல அவனும் தவறு செய்வான் என்பதை நினைவு படுத்துகிறது

    [6]சுன்னத் செய்யும் அன்பர்கள் விரல்களை வெட்டி விட்டால் நகசுதி வியாதி வராமலும் பாதுகாக்கலாம்.

    [7]இரண்டாயிரம் வருடங்களாக முன்தோலை வெட்டி இறைவனுக்கு செய்து அனுப்புஉகிறீர்கள் . அந்த அறிவுள்ள இறைவன் இனிமேல் பிறக்கும் குழந்தைகளுக்கு முன்தோல் இல்லாமல் படைக்கட்டுமே …

    My comment: ” சும்மா நச்னு இருக்கு தல ”

    raman://அர்ஜுனோ ஹிடலர் போல , எல்லா பார்ப்பானையும் ஒலுசுட்டா உலகம் சுதமாஇகிவிடும் என்று சின்சா , சின்சா என்று கொட்டி கொண்டு இருக்கிறார்//

    My comment :தல அழாத தல ரொம்ப அசிங்கமா இருக்கு

  53. ////// மத நல்லினக்கம்னா என்னனா , மற்ற மத மக்களின் கலாசார பழக்க வழக்கங்களை மதித்து , அதன் பொருட்டு மற்றவர்களிடம் பாரபட்சம் காட்டாமல் இருப்பது என்று நான் சொன்னேன் ///// இதை படித்தால் வாயால சிரிக்க முடியலை…
    யார் பாரபட்சம் காட்டாமல் நடந்துக்கொள்வது ? நீங்களா நாங்களா ? பிரதோஷம் போன்ற விரத நாட்களில் அசைவம் சாப்பிடும் இந்துக்கள் இஸ்லாமியர் வீட்டு திருமணங்களில் அன்று அசைவம் சாப்பிடாத காரணத்தால் அவர்களுக்காகவே சைவ சாப்பாடும் ஏற்பாடு செய்திருப்பார்கள். அவர்களுடைய மத நம்பிக்கையை மதித்துத்தான் செய்கிறார்கள். இது தான் மற்ற மத மக்களின் கலாசார பழக்க வழக்கங்களை மதித்து நடப்பது. நீங்களோ முடியாது நீங்க பொங்கல் தின்றே ஆகவேண்டும் என்று சொல்கிறீர்கள். நாங்களும் அசைவம் சாப்பிட்டே ஆகவேண்டும் என்று கட்டாயம் பண்ணினால் ? ஒரு அய்யரை நாங்கள் பக்ரித்துக்கு பிரியாணி தின்றே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியுமா ? சரி அதை விடுங்கள் அய்யா… உங்கள் மதத்தை சேர்ந்த தலித் வீடுகளில் எந்த தீட்டும் பார்க்காமல் இஸ்லாமியன் உணவு உண்பான். ஐயராகிய நீயோ இல்லை மற்ற பிள்ளை முதலி போன்ற ஜாதி இந்துக்களோ உண்பீர்களா ? இதை எல்லாம் மறைத்துவிட்டு வெட்கமே இல்லாமல் எப்படி அய்யா உங்களால் (மற்ற மத மக்களின் கலாசார பழக்க வழக்கங்களை மதித்து , )இப்படி எல்லாம் கருத்து சொல்ல முடியுது ? 500 வருடங்களுக்கு முன் எங்க ராமரு கோயிலு இருந்ததுன்னு கட்டுக்கதை சொல்லிக்கிட்டு பள்ளிவாசல இடித்து தள்ளிய பார்பன கூட்டம் மாற்று மத பழக்க வழக்கங்களை மதிப்பதை பற்றி பேச வந்துடிச்சு . பிராமின்ஸ் ஒன்லி என்று இன்றும் வீடு வாடகை கொடுப்பவனுங்க எல்லாம் இப்படி பேசக்கூடாது. இஸ்லாமிய மக்கள் மீது சேற்றை வாரி அடிக்க யோசிக்காமல் எதைவேண்டுமாலும் சொல்லாதே அய்யரே…

  54. ஒட்டு மொத்த பார்பனர்களும், அவர்களின் அடிமை சிலபேரை தவிர மற்ற இந்து சகோதரர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக துவேசங்களுடனும்,வெறுப்புணர்ச்சி யுடனும் இருப்பதாக தெரியவில்லை. அப்படி இஸ்லாமியர்களை வெறுப்பதால் அவர்களுக்கு எந்த லாபமும் இல்லை. பார்பன மீடியாக்களின் இஸ்லாமிய எதிர்ப்பு சித்தரிப்பினால், பொய் பிரசாரங்களால் அந்த சகோதரர்களுக்கு இஸ்லாமிய வெறுப்பு ஏற்பட்டிருக்கலாம் தவிர அப்படி வெறுப்பதற்காக வேற காரணங்களும் அவர்களுக்கில்லை. மக்களிடையே இஸ்லாமிய வெறுப்பை வளர்பதினால் மக்களை பிரிப்பதினால் கிடைக்கும் முழு லாபத்தையும் அடையப்போவது பார்பனர்கள் தான்.அவர்கள் மட்டும் தான். பின் எதற்காக இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டும், சுன்னத் செய்துக்கொண்டும் ஒரு பார்பான் கோட்சே காந்தியை கொள்ள வேண்டும்? மேலும் நாடு முழுவதும் குண்டுகளை வைத்தது அதை இஸ்லாமியர்கள் மீது சுமத்தியது, , பாகிஸ்தான் கொடியை ஏற்றியது, ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் தனக்கு தானே குண்டுவைத்தது, கோவிலில் மாட்டு கறியை வீசுவது என்று…. சமீபத்தில் திண்டுக்கல்லில் நடந்த தன் வீட்டுக்கு தானே பெட்ரோல் குண்டை வீசிக்கொண்டதுவரை எவ்வளவு சூழ்சிகள்….ரேசிஸ்ட் அதிகாரிகள், ஆட்சியாளர்கள்,இது போன்ற செய்திகளை மூடி மறைக்கும் மீடியாக்கள் போன்றவைகளை எல்லாம் மீறி வெளியே தெரிந்ததே இவ்வளவு என்றால்….. ? தெரியாதது இதைவிட பல மடங்கு இருக்கும். இப்படி ஒரு பக்கம் என்றால், பார்பன அம்பிகள், மற்றும் பார்பன அடிமைகள் வினவு போன்ற பொது தளங்களில் இஸ்லாமியர்களை பற்றி சேற்றை வாரி அடிப்பது இதெல்லாம் எதற்காக… ?
    பார்பனர்களுக்கு நன்றாக புரிந்திருக்கிறது ஜனநாயக தேர்தல் முறைகளில் 3% இருக்கும் தன இனம் அதிகாரத்தை கைப்பற்றவே முடியாது என்ற உண்மை. தன்னுடைய வர்ணாசிரம, ஜாதிய பித்தலாட்டங்களால் காலம் காலமாக நசுக்கிவைத்துள்ள பெரும்பான்மை இந்து மக்களிடம் ஆதரவு பெற்று அதிகாரத்தை பெற முடியுமா ? அதற்காகத்தான் இந்த இஸ்லாமிய எதிர்ப்பு சூழ்ச்சி. இது நாட்டின் சுதந்திரத்திற்கு பிறகு பல முயற்சிகள் செய்தாலும் இந்த இஸ்லாமிய எதிர்ப்பை பற்ற வைக்க முடியவில்லை. 1987 பாபர் மசூதி பிரச்சனையை பார்பனர்கள் கையில் எடுத்த பிறகுத்தான் மாற்றம் தொடங்கியது. 1992 பாபர் மசூதி இடிப்புக்கு பிறகுதான் நாடெங்கிலும் இந்த தந்திரம் செயல்பட தொடங்கியது. அதுவரை மக்கள் ஒன்றாக அமைதியைத்தான் வாழ்ந்தார்கள் என்பது வரலாறு. பார்பனர்கள் அந்த சூழ்ச்சியின் பலனை அதிகாரங்களாக அறுவடை செய்தார்கள். பலமாநிலங்களில் அதிகாரம் அவர்களின் கைகளுக்கு வந்தது. இரு முறை இந்தியாவின் ஆட்சியையும் பார்பன கைகளுக்கு வந்தது. இந்திய மக்களின் நிம்மதிதொலைந்தது மற்றும் ஒற்றுமை குலைந்தது. வெறுப்பு வளர்ந்தது. இன்னும்… இந்தியாவின் முன்னேற்றம் தொலையும், பின்னேற்றம் அடையும். இவர்களின் தந்திரம் பலிப்பது நீடித்தால்

  55. நீங்க சாப்பிடும் அரிசி பருப்பு எல்லாமே சூரிய பகவனுக்கு படைக்கப்பட்ட பிறகு தான் விற்பனைக்கு வருகிறது.

    பொங்கல் திருநாளின் சிறப்பே அது தான், அடுத்து முறை பிரியனி அரிசி பாகிஸ்தான் இல் இருந்து வாங்கி செய்யுங்க.

    கொத்செ நீங்க சொன்ன ரெந்டயுமே ஸெய்யல.அவர் தனது தரப்பில் நீதிமன்றத்தில் கூறிய கருத்துக்கள் இன்று வரை வெளியிடபபடவில்லை.

    மொதல்ல இப்ராதிம்,பொறவு திப்பு,இப்போ ஆபு.

    மறுபடியும் மறுபடியும் மொதல்ல இருந்து?

  56. Dear Raman,

    [1] Raman is hiding himself inside the Book fares and Library issues!

    [2]He[Raman] should answer for the very simple and straightforward questions asked by Munna and Tipu

    [3]For me Nothing problem in taking food from any Religious people.

    So Taking beef,Chicken, Mutton Meat, Turkey Beriyani from Muslims friends,Christian friends ,OK for me.

    WHAT ABOUT YOU?

    [4]Dear Raman, should We eliminate Parpaneeyam or Parpanrkal?

  57. Hello Hisfeet,,

    WILLIAM E. CARROL
    University of Oxford
    The Legend of Galileo, Icon of Modernity

    Galileo concluded that “the Earth was round, the unanimous consensus against him was that the Earth was flat, and this despite the fact that Galileo had demonstrated his conclusion.

    http://www.mtsm.org/pdf/Legend%20of%20Galileo%20Icon%20of%20Modernity.pdf

    hisfeet://Hey half baked Senthil, can you give any credible link about Galileo fighting for flat earth against the Church?//

  58. Tippu,

    //முசுலிம் எதிர்ப்பு இந்து மதவெறியின் ஆணிவேரே பார்ப்பனியம்தான் ********.//

    Wrong. It is Muhamadism which is opposed to all other isms. So, let me repeat, any RATIONAL person can have negative opinion on Muhamadism.

    Let me add. Paarppanars (wearing threads) cannot be termed as RATIONAL. However, it is not irrational for them to be wary of Muhamadism.

    In the face of multiplying Muhamadism, other isms are getting more and more fanatical and you cannot blame them for it. (Read Sukdev’s comment in the beginning). I know you Muhamadists value death more than we love life. Unless you scale down, conflicts are bound to increase. I am not for this conflict. I am for peace resulting from freedom from religious madness.

    By the by, I abhor Paarppanism and I am not at all influenced by it.

  59. Munna,

    // மீடியாக்களின் இஸ்லாமிய எதிர்ப்பு சித்தரிப்பினால், பொய் பிரசாரங்களால்//

    People know that the Media is afraid of handling Muhamadist issues (local or national or international) objectively. Even the little attention they give on few issues like Twin tower destruction and Mumbai Taj end up damaging Muhamadism and now you cry foul.

    Keep playing victim till every one becomes tired of it.

    // 1992 பாபர் மசூதி இடிப்புக்கு பிறகுதான் நாடெங்கிலும் இந்த தந்திரம் செயல்பட தொடங்கியது. அதுவரை மக்கள் ஒன்றாக அமைதியைத்தான் வாழ்ந்தார்கள் என்பது வரலாறு.//

    What about Mappilla massacre, Nao kali massacre, etc? Even now, almost all the flash points in the world involve Muhamadans. Even last week, many Hindus in Bangladesh were killed. I know you would not tire of deception too. Keep it up.

  60. Galileo concluded that “the Earth was round, the unanimous consensus against him was that the Earth was flat,”
    and this despite the fact that Galileo “had demonstrated his conclusion.”.

        • Dear Senthil,

          Really I pity you. You post links that favor me. William E Caroll is a Theologian. He opposes stupid atheists like you who had mistakenly said that Galileo said earth was round and Catholics said it was flat. The same point he denied in his book. Really I ask you, not to insult you. Do you know English? Can you understand the passage given in your link?

          //Writing in
          Le Monde
          in February 2007, Serge Galam, a physicist of CNRS
          (Centre National de la Recherche Scientifique) and member of the Center for
          Research in Applied Epistemology of the École Polytechnique, discussed
          scientific arguments concerning the role of human beings in global warming.
          In what is all too frequent in contemporary analyses of science, ethics, and
          public policy, Galam invoked the image of Galileo and his opponents in the
          seventeenth century. He noted that, when Galileo concluded that “the Earth
          was round, the unanimous consensus against him was that the Earth was flat,”
          and this despite the fact that Galileo “had demonstrated his conclusion.”
          Galam then brought his point closer to our own day: “in a similar way,” the
          Nazis rejected the theory of relativity because it was put forth by Einstein and
          was, accordingly, a Jewish and, hence, “degenerate theory.” ***It is quite some-
          thing to think that it is was the sphericity of the Earth which Galileo was
          defending. After all, as one letter-writer to Le Monde pointed out, that the
          Earth was a sphere was widely accepted in educated circles from Antiquity
          through the Middle Ages.*** Perhaps even more extraordinary than the claim
          about the shape of the Earth, was Galam’s comparison (
          de façon similaire
          ) of the
          Catholic Church to the Third Reich. //

          William is criticizing Le Monde for saying “Galileo proved that earth is sphere”. So, your credible link is proving my point. I accept Catholics were wrong in saying that earth is at center. But Catholics didn’t hold that earth is flat.

  61. feedbacks 66,66.1,66.1.1 are the seqyential replays for mr Hisfeet comment:

    can you give any credible link about Galileo fighting for flat earth against the Church?

    Now u should accept this proofs comes from Educational Institutions like University of Oxford!

  62. முன்னா மற்றும் திப்பு இருவருமே என்ன நினைத்து கொண்டு உள்ளீர்கள் என்று தெரியவில்லை .

    ஊரில் நிறைய வானக்காரயாக்கள் இருக்கிறார்கள். அவர்கள் செய்யும் நல்லது எல்லாம் எப்படி உங்களுடையதாகும் ?

    அப்படிப்பட்ட நல்லவர்களை எல்லாம் நான் குறை கூறவே இல்லையே ?

    இங்கே முன்னா கூறியது ” என் மத வழக்கபடி நீ பொங்கல் வைத்து வா” என்பது அதை திப்பு ஆமோதித்தார் .

    இது மத நல்லிணக்கம் இல்லை என்று புரிய வைக்க முயலுகிறேன் . நீங்களோ செய்த த்தவரை ஆமோதிக்காமல் , ஊரில் உள்ள நல்லவர்கள் செய்யும் செயலை பசும் தோல் போல போர்த்தி கொள்ள் பார்க்கிறீர்கள் . அதே போல ஊரில் உள்ள மத வெறி கொண்டவர்கள் செயலை காட்டி , பாருங்க ஊருல சிங்கங்கள் உள்ளன , நாங்கள் வெறும் ஊநாய் தான் என்று உங்களை இருப்பதிலே நல்லது போல காட்டி கொள்ள முயலுகிறீர்கள்

    என்னை திசை திருப்ப முடியாது .

    • சிந்தனை செல்வர் ராமன் அவர்களுக்கு சிந்தனை வெள்ளம் தலைக்கு மேல் ஓடிக்கொண்டிருப்பதால் எங்களின் சிறிய கருத்தை கூட புரிந்து கொள்ள முடியவில்லை போலும்.

      முசுலிம்கள் திருப்பதி லட்டை உண்ண முடியாது என நான் அளித்த விளக்கத்திற்கு ஒரு வரி கூட மறுப்பு சொல்ல முடியவில்லை உங்களால்.ஆனால் அது தவறு என்று பெரிய நாட்டாமை மாதிரி தீர்ப்பு சொல்கிறீர்கள்.அறிவாளியே திருப்பதி குடைக்கு நன்கொடை கொடுக்கும் அதே முசுலிம் சகோதரர்கள்தான் திருப்பதி லட்டை ஏற்க மறுக்கிறார்கள்.அதே சமயம் நோன்பு துறக்க கஞ்சி காய்ச்ச இந்து சகோதரர்கள் நன்கொடை கொடுத்தால் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறார்கள்.

      தன்னளவில் ஒரு செயலை செய்ய மறுப்பதே மதவெறியாக உங்களுக்கு தெரிகிறது என்றால் நீங்கள் சிந்தனை சிகரம்தான்.நாங்கள் மதவெறியர்களா இல்லையா என்பதை எங்கள் கருத்துக்களை படிப்பவர்கள் முடிவு செய்யட்டும்.உங்களை போன்ற கடவுள் மறுப்பாளர் வேடத்தில் நடமாடும் பார்ப்பன இந்து மத வெறியர்களிடமிருந்து சான்றிதழ் தேவையில்லை.

      \\என்னை திசை திருப்ப முடியாது //

      வேணாம்யா.உங்க திசையிலேயே இருந்துக்கங்க.இந்த பக்கம் வந்து உங்க மதவெறி நோயை மத்தவங்களுக்கும் பரப்பிற போறீங்க.

    • \\ஊரில் நிறைய வானக்காரயாக்கள் இருக்கிறார்கள்.//

      மகிழ்ச்சி.முசுலிம்னாலே ”அப்படித்தான்” என்ற கள்ளப்பரப்புரை சுக்கு நூறாக சிதைகிறது.

      \\அவர்கள் செய்யும் நல்லது எல்லாம் எப்படி உங்களுடையதாகும் ?//

      எம் மக்களின் பெருமை எமக்கு பெருமைதான்.

  63. பாவம் யுனிவெர்பட்டி பதட்டத்தில் ஏதேதோ உளறுகிறார்.மகாத்மா பூலேவும் அம்பேத்கரும் பெரியாரும் இசுலாமிய மதத்தால் உந்தப்பட்டா பார்ப்பனியத்தை எதிர்த்தார்கள்.பார்ப்பனியம் இந்து மக்களில் பெரும்பான்மையினரை ஒடுக்கி வருகிறது.அதற்கு எதிராக அந்த மக்கள் ஒன்றுபட்டு கிளர்ந்து எழாமல் தடுக்க பார்ப்பனியம் முசுலிம்களை பொய்யான பித்தலாட்டமான முறையில் எதிரிகளாக சித்தரிக்கிறது.

    பார்ப்பனியம்தான் இந்து மதவெறியின் அடிநாதம் என்பதற்கு கல்லில் செதுக்கினாற் போல் ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்.1989-ல் வி.பி.சிங் ஆட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை சங் பரிவார் கும்பல் திரும்ப பெற்றது.காரணம் காங்கிரசு பார்ப்பன கும்பல் பத்து ஆண்டுகளாக குப்பைக்கூடையில் போட்டு வைத்திருந்த மண்டல் ஆணைய பரிந்துரையை அமுல்படுத்தி அரசு வேலைகளில் 27 விழுக்காடு இடங்களை பிற்பட்டோருக்கு [அவர்களும் இந்துக்கள்தான்] ஒதுக்கீடு செய்தார் வி.பி.சிங்.பார்ப்பனிய ஆதிக்கம் ஆட்டம் கண்டு விடுமோ என்று மண்டலை கமண்டலத்தால் எதிர்கொண்டது சங் பரிவார் கும்பல்.இந்துக்களில் ஒரு பிரிவினருக்கு வேலை கிடைப்பதை பொறுத்துக் கொள்ளாத மதவெறி கும்பல் யாருடைய நலனுக்காக இருக்கிறது.இந்துக்களோ,முசுலிம்களோ அவர்கள் எக்கேடோ கெட்டு போகட்டும்.பார்ப்பனர்கள் வசதியாக வாழ வேண்டும் இது மட்டுமே மதவெறி கும்பலின் முதன்மையான நோக்கம்.

  64. இராமன் ,

    [1]பாயை திருப்தி லட்டு சாப்பிட சொல்லும் நீர் !, பாய் வீட்டுக்கு வந்து மட்டன் பிரியானி சாப்பிட தயாரா ?

    Raman://I dont rent my house to Muslims because they eat meat which is not in accordance with my principle//
    Raman://திருப்பதி சென்று வந்தவன் லட்டை அனைவர்க்கும் குடுத்தான்
    மது அருந்தும் இசுலாமிய நண்பன் வேண்டாம் என்று மறுத்ததோடு அலாமல் , இது பாவம் உள்ளது என்றான் . மதத்தின் தனித்தன்மை காட்டுவது , பெருமை கொள்வது என்கின்ற மத போதை இப்போது வளர்ந்து வருகிறது//

    [2]பாய் “சுன்னத்” செய்வதை குறை சொல்லும் நீர் , உன் பூணுலை அறுத்து ஏறிவியா ?உன் இறைவன் உன்னை பிறக்கும் போதே ஏன் பூணுலுடன் படைக்கவில்லை ! உன் இறைவன் குறை என்ன ?உன் இறைவன் மிகப்பெரியவன் அல்ல, அவனும் தவறு செய்வான் என்பதை நினைவு படுத்துகிறது.

    Raman://சுன்னத் செய்வது என்பது இறைவன் மனிதனை சரியாக படைக்கவில்லை என்பதை உணர்த்துகிறது
    இறைவன் மிகப்பெரியவன் அல்ல அவனும் தவறு செய்வான் என்பதை நினைவு படுத்துகிறது//

    continue..

    • சரியான கேள்வி.

      \\பாயை திருப்தி லட்டு சாப்பிட சொல்லும் நீர் !, பாய் வீட்டுக்கு வந்து மட்டன் பிரியானி சாப்பிட தயாரா ?//

      • செய்யாத ஒன்றை செய்ய சொல்வது மத திணிப்பு , மத நல்லிணக்கம் அல்ல
        இப்போது ஒரு இந்து அன்பர் விபூதி குடுக்கிறார் . நீங்கள் மறுக்கிறீர்கள் என்றால் அது நியாயம் .

        • லட்டுக்கும் விபூதிக்கும் என்ன வேறுபாடு,இரண்டுமே கடவுளின் அருள் கிடைக்க செய்யும் என்றே இந்துக்கள் நம்புகிறார்கள்.முசுலிம்கள் விபூதியை பூச வேண்டாம் என்று பெரிய மனது வைத்து அருள்பாலிக்கும் ராமன் லட்டை மட்டும் தின்னே ஆகணும்னு அடம் பிடித்தால் அதுதான் விதண்டாவாதம்.

    • நாங்கள் பெருநாள் கொண்டாடும்போது சைவ உணவு பழக்கம் கொண்ட நண்பர்களுக்கு பிரியாணி கொடுப்பதில்லை.இனிப்புதான் வாங்கி கொடுக்கிறோம்.அவர்கள் நம்பிக்கையை நாங்கள் மதித்து நடக்கிறோம்.எங்கள் நம்பிக்கையை அவர்கள் மதித்து நடக்கிறார்கள்.எங்கள் மத வழிபாட்டு முறை குறித்த அறியாமையின் காரணமாக தெய்வத்திற்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை எங்களுக்கு கொடுப்பவர்களும் உண்டு.அதிகம் பழக்கம் இல்லாதவர்கள் என்றால் அவர்கள் மனம் கோண கூடாது என்று வாங்கி வைத்துக்கொண்டு அவர்கள் சென்ற பின் வேறு ஒரு இந்து நண்பருக்கு கொடுத்து விடுவதும் உண்டு அல்லது நன்கு பழகியவர்கள் என்றால் இதை நாங்கள் உண்ண இயலாது என்பதை விளக்கி சொன்னால் அவர்கள ஏற்றுக் கொள்வதும் உண்டு.இந்து மக்களுக்கு நாங்கள் திருப்பதி லட்டு உண்ணாமல் இருப்பதில் ஒரு பிரச்னையும் இல்லை.இந்து மத வெறியர்களுக்குத்தான் ”டாப் டூ பாட்டம் பத்திண்டு எரியறது”.

  65. இராமன் ,

    [3]உன் “சொறி செரக்கு” முதுகு அழுக்கை எடுக்க பூணுல் போடும் நீர் ,உன் விரல்களை நீயே வெட்டி விட்டால் நகசுதி வியாதி வராமலும் பாதுகாக்கலாமே !

    Raman://சுன்னத் செய்யும் அன்பர்கள் விரல்களை வெட்டி விட்டால் நகசுதி வியாதி வராமலும் பாதுகாக்கலாம்.//

  66. இராமன் ,

    [4]உன் இறைவன் நீ பிறக்கும் போதே உன்னை, ஏன் பூணுலுடன் படைக்கவில்லை ! அந்த அறிவுள்ள இறைவன் இனிமேல் பிறக்கும் ஆரிய குழந்தைகளை பூணுலுடன் படைக்கட்டுமே !

    raman://இரண்டாயிரம் வருடங்களாக முன்தோலை வெட்டி இறைவனுக்கு செய்து அனுப்புஉகிறீர்கள் . அந்த அறிவுள்ள இறைவன் இனிமேல் பிறக்கும் குழந்தைகளுக்கு முன்தோல் இல்லாமல் படைக்கட்டுமே …//

  67. இராமன்,
    [5]அர்ஜுன் ,பார்ப்பானை அழிப்பாரா இல்லையா என்று எனக்கு தெரியாது , ஆனால் நீர் தமிழை அழிக்க முயலுகின்றாய் [சின்சா , சின்சா அர்ஜுனோ ஒலுசுட்டா]

    raman://அர்ஜுனோ ஹிடலர் போல , எல்லா பார்ப்பானையும் ஒலுசுட்டா உலகம் சுதமாஇகிவிடும் என்று சின்சா , சின்சா என்று கொட்டி கொண்டு இருக்கிறார்//

  68. [6]வானக்காரயா பாயை உன் இடம் திருப்தி லட்டு வாங்கி சாப்பிட்டாரா?

    Raman://ஊரில் நிறைய வானக்காரயாக்கள் இருக்கிறார்கள். அவர்கள் செய்யும் நல்லது எல்லாம் எப்படி உங்களுடையதாகும் ?//

    [7] இல்லை முன்னா பாயும் ,திப்பு பாயும் வந்து உன் பூணுலை அறுத்தார்களா ?

    Raman// ஊரில் உள்ள நல்லவர்கள் செய்யும் செயலை பசும் தோல் போல போர்த்தி கொள்ள் பார்க்கிறீர்கள் . அதே போல ஊரில் உள்ள மத வெறி கொண்டவர்கள் செயலை காட்டி , பாருங்க ஊருல சிங்கங்கள் உள்ளன , நாங்கள் வெறும் ஊநாய் தான் என்று உங்களை இருப்பதிலே நல்லது போல காட்டி கொள்ள முயலுகிறீர்கள்/.//

  69. [8]இராமன் , நீர் என்ன லூசா இல்லை முட்டாளா ?

    “முன்னா பாயும் ,திப்பு பாயும் வந்து உன் இடம் திருப்தி லட்டு வாங்கி சாப்பிடவில்லை என்பதால் ஓநாய் என்று அழைக்கும் நீர்………….”

    இராமன் , நீர் என்ன லூசா இல்லை முட்டாளா ?

    // அதே போல ஊரில் உள்ள மத வெறி கொண்டவர்கள் செயலை காட்டி , பாருங்க ஊருல சிங்கங்கள் உள்ளன , நாங்கள் வெறும் ஊநாய் தான் என்று உங்களை இருப்பதிலே நல்லது போல காட்டி கொள்ள முயலுகிறீர்கள்
    என்னை திசை திருப்ப முடியாது ..//

  70. Raman,

    IF raman [You are ] is not able to answer the simple questions asked by me ,Tipu,Munna, then what is the need of doing discussions here and making unwanted comments here?

    [1]யார் பாரபட்சம் காட்டாமல் நடந்துக்கொள்வது ? நீங்களா நாங்களா ? பிரதோஷம் போன்ற விரத நாட்களில் அசைவம் சாப்பிடும் இந்துக்கள் இஸ்லாமியர் வீட்டு திருமணங்களில் அன்று அசைவம் சாப்பிடாத காரணத்தால் அவர்களுக்காகவே சைவ சாப்பாடும் ஏற்பாடு செய்திருப்பார்கள். அவர்களுடைய மத நம்பிக்கையை மதித்துத்தான் செய்கிறார்கள். இது தான் மற்ற மத மக்களின் கலாசார பழக்க வழக்கங்களை மதித்து நடப்பது. நீங்களோ முடியாது நீங்க பொங்கல் தின்றே ஆகவேண்டும் என்று சொல்கிறீர்கள். நாங்களும் அசைவம் சாப்பிட்டே ஆகவேண்டும் என்று கட்டாயம் பண்ணினால் ? by Munna

    [2]ஒரு அய்யரை நாங்கள் பக்ரித்துக்கு பிரியாணி தின்றே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியுமா ? சரி அதை விடுங்கள் அய்யா… உங்கள் மதத்தை சேர்ந்த தலித் வீடுகளில் எந்த தீட்டும் பார்க்காமல் இஸ்லாமியன் உணவு உண்பான். ஐயராகிய நீயோ இல்லை மற்ற பிள்ளை முதலி போன்ற ஜாதி இந்துக்களோ உண்பீர்களா ? by Munna

    [3]ஒரு இந்து மத வழிபாட்டை முசுலிம்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் அதை செய்யலன்னா மத நல்லிணக்கம் இல்லைன்னு சொல்றதும் கடைந்தெடுத்த பித்தலாட்டம். by tipu

    [4]For me Nothing problem in taking food from any Religious people.

    So Taking beef,Chicken, Mutton Meat, Turkey Beriyani from Muslims friends,Christian friends ,OK for me.

    WHAT ABOUT YOU? By K.Senthilkumaran

  71. Hello No 1 fool Hisfeet,

    [0] Hello No 1 fool Hisfeet, William is criticizing Serge Galam not Le Monde as u said![Le Monde is a French daily evening newspaper!!!!]

    [@Serge Galam (1945) is a French physicist not atheist ]
    [@William E Caroll is a Theologian]

    Again your Theology is fighting with Science!
    You biblical fools never correct your tails….. O sorry,your mind!
    Really Do you know English? Can not you understand the meaning given in my link?

    [1] In my link, Do not you know and understand that Serge Galam[physicist] writing in Le Monde telling that “Galileo proved that earth is sphere” ?

    [2]I told you to make a search in Google in my comment 68.1.1 !

    [3]Are you really expect line by line explanation of all the proof I have shown to you?Ok I explain now ! Here the analogy is that

    [a]I am similar to Serge Galam[scientist] writing in Le Monde telling that “Galileo proved that earth is sphere”

    [b]You are similar to WILLIAM E. CARROL[Theologian] University of Oxford who oppose that “Galileo proved that earth is sphere”

    [5]The Bible tells that the earth is flat. Yes I am going to prove it from its words now. Wait!

  72. Hi Hisfeet,

    [1]So According to Your Elephant Size brain !, Both Serge Galam French physicist and K.Senthilkumaran Indian teacher are not fit for educating children! [Both We are telling that Galileo proved that earth is sphere]

    [2]So only like you religious Biblical foolish guys want to teach science to children!

    Hisfeet://Funny… Read about Galileo before you post. He said Sun is at center. Before Plato said earth is at center. I really pity your students. You have many wrong information.

  73. hello Hisfeet, Bible tells Earth is flat!

    The Bible claims that Earth has four ends and four corners. Nobody can ever think a ball or a cycle to have corners and ends! Only flat items can have corners and ends, and this is exactly what the bible is trying to express regarding the shape of the earth. The earth is not flat, as once thought and it has no corners or ends at all. If Magnetic Poles can be taken as ends or corners of earth, then this definitely opposed to the axis of rotation.

  74. Revelation 7:1 Bible tells Earth is flat!
    1 And after these things I saw four angels standing on FOUR CORNERS OF THE EARTH, holding the four winds of the earth, that the wind should not blow on the earth, nor on the sea, nor on any tree.

  75. Hi Hissfeet,[Bible tells Earth is flat]!

    Isaiah 40:22 “”He sits enthroned above the circle of the earth, and its people are like grasshoppers. He stretches out the heavens like a canopy, and spreads them out like a tent to live in.” (How could the “heavens” be spread out over the Earth like a tent if they believe it’s a sphere? They believe the sky literally came down and touched the edges of the Earth.)

  76. Hi Hissfeet,[Bible tells Earth is flat]!

    The Bible not only failed to claim that the Earth was sphere, but it also claimed in numerous verses as shown above that the Earth is flat, has Edges, has Four Corners, has Pillars, and has Foundations!!!!!!!

    WHAT A GREAT BELIEVER OF BIBLE YOU ARE!!!!

  77. Hi Hissfeet,[Bible tells Earth is flat]!

    Jeremiah 16:19:
    O LORD, my strength, and my fortress, and my refuge in the day of affliction, the Gentiles shall come unto thee from the ends of the earth, and shall say, Surely our fathers have inherited lies, vanity, and things wherein there is no profit.

    According to Jeremiah 16:19, the earth has ends. There is no way a spherical earth could have ends, and therefore the earth must be flat. The Book of Revelation tells a similar story:

    Revelation 7:1:
    And after these things I saw four angels standing on the four corners of the earth, holding the four winds of the earth, that the wind should not blow on the earth, nor on the sea, nor on any tree.

    A spherical earth cannot have corners, it is scientifically impossible. The only logical explanation is that the earth is flat. Checkmate atheists!

    • I never rejected that there are some verses suggesting that earth is flat in Bible. These type of verses are there in almost all ancient scriptures. Whether they are figurative or literal, is subjective. What I said is that, in Medieval Europe, the common belief is a spherical earth and NOT a flat earth. You have jumped from the point of argument and try to prove a wrong point by quoting Bible. Bible was not written by medieval Europeans but by ancient Hebrews. Same type of verses are there in your tamil literature, koran etc. So first clean your anus and come and tell us.

      By the bye, Serge Galam has written a wrong statement in a magazine and William was pointing that. If possible, please provide some historical proof for your statement, like how we have the proof for “Galileo’s persecution for heliocentric model”. Also try to summarize things in one comment. I can’t reply 10+ same comment with same reply.

      • conflicts with Hisfeet statements !!!!

        Hisfeet://I accept Catholics were wrong in saying that earth is at center. But Catholics didn’t hold that earth is flat.

        Hisfeet://I never rejected that there are some verses suggesting that earth is flat in Bible.

        This[conflicts] is called the pity mind of Theologian like you Hisfeet!

      • [1]By the bye, Serge Galam has written a Right statement in a newspaper Le Monde[Galileo proved that earth is sphere] and William was wrongly pointing that

        HIsfeet://By the bye, Serge Galam has written a wrong statement in a magazine and William was pointing that//

        [2] Atleast now u accept that Serge Galam is a human being and Le Monde is a magazine.[But actually Le Monde is a French daily evening newspaper!!!!]

        [3]You Theologian can not correct your tails against the science ! Science is growing in nature but Theology is stagnant.

      • Hello Hissfeet,

        [1]Since I am the follower of Science and the science is day by day growing SO my[HUMAN] ANUS[IGNORANCE] IS CLEANED BY SCIENCE DAY BY DAY !

        [2] But You are the follower of Stagnant Biblical thought and your ignorance and foolish ideas are always stable By the way your ANUS is making bad smell for the past 2000 years!

        Hissfeet://Same type of verses are there in your tamil literature, koran etc. So first clean your anus and come and tell us.//

      • Hisfeet,

        [1]First you asked me credible like so I give the Serge Galam’s statement in a newspaper Le Monde [Galileo proved that earth is sphere]

        [2]Now you are asking HISTORICAL PROOF!

        [3]What next? Will u ask me to bring Galileo into vinavu?

        Hisfeet Asked me first : //can you give any credible link about Galileo fighting for flat earth against the Church?//

        Hisfeet Asked me next: //If possible, please provide some historical proof for your statement,

        • I can’t argue with a retard like you. Serge Galam is not quoting any credible document to his support. All existing credible documents point that the conflict between Catholics and Galileo was about heliocentric theory and not about spherical earth. So the burden of proof is on you. I am a Deistic Christian (deist by belief and Christian by culture) so try to understand. I am not a theologian and I don’t believe in Biblical inerrancy and literal interpretation of Bible.

  78. மிக சரியாய் கேட்டுள்ளீர்கள் செந்தில். பதில் வராது. இங்கே தான் பூணூல் கூட்டத்தின் பித்தலாட்ட அரசியல் தெரியுது.

  79. மிக சரியாய் கேட்டுள்ளீர்கள் செந்தில். பதில் வராது. இங்கே தான் பூணூல் கூட்டத்தின் பித்தலாட்ட அரசியலே இருக்கு . இது போன்ற தன் மக்களுக்கே எதிரான பித்தலாட்ட அரசியலை மறைக்க தான் அந்த கூட்டம் மாற்று மத முஸ்லீம் எதிர்ப்பு அரசியலே பண்ணுகிறார்கள். அதாவது ஒட்டுமொத்த இந்துக்களுக்காக பாடுபடுகிறார்களாம். இந்தசிந்தனை மராட்டிய பார்ப்பனர்களின் (கோல்வாக்கர் கூட்டம் )சிந்தனை. வெறும் 3 சதவீதம் இருக்கும் பூணூல் கூட்டம் ஜனநாயக அரசியலில் பிழைக்க வேற வழியே இல்லை என்று இந்த சிந்தனையை இந்தியா முழுவதும் பற்றிக்கொண்டது. காலம் சென்ற காஞ்சி பெரியவா சொன்னது போல் வெள்ளைக்காரன் ஹிந்து என்ற வார்த்தையை பிரயோகிக்கவில்லை என்றால் நம்மவாக்கள் கரை ஏறி இருக்க முடியாது என்றார். அவர் கூற்று முற்றிலும் உண்மை. இந்தியாவின் முஸ்லீம் ஆட்சியாளர்கள் முஸ்லீம் அல்லாத இந்திய மக்களை ஹிந்துஸ்தாநியர்கள் என்று கூறினார்கள். அதன் பிறகு வந்த வெள்ளையர்கள் ஹிந்துக்கள் என்று கூறினார்கள். இந்த ஹிந்து என்ற சொல்லைத்தான் ஆரியர்கள் இருக்கப்பற்றிக்கொண்டார்கள். தங்களுக்கென்று மதம் இல்லாமல் மதம் பிடிக்காமல் வாழ்ந்த திராவிட மக்களும் இவர்களின் பின்னால் ஒதுங்கவேண்டிய சூழ்நிலையை வரலாறு உருவாக்கிவிட்டது. இன்று ஆரியர்கள் சொல்லும் தங்களையே (திராவிடர்களையே) இழிவுபடுத்தும் கொள்கைகளும் கோட்பாடுகளும் தான் தங்களுடைய கலாச்சாரமும், வரலாறும் என்று நம்புகின்றனர். நம்பவைக்கப்படுகின்றனர். இது போன்றுதான் பிற பகுதி இந்திய மக்களின் நிலையும்.

  80. Tippu,

    //யுனிவெர்பட்டி பதட்டத்தில் //

    பதட்டம் தான். என் பதில் வினவினால் மறைக்கப்பட்டுவிடக் கூடாதே என்ற பதட்டத்தினால் மிகவும் சூசகமாக எழுத

    வேண்டியிருக்கிறது.

    //பார்ப்பனியம் இந்து மக்களில் பெரும்பான்மையினரை ஒடுக்கி வருகிறது//
    //பார்ப்பனியம்தான் இந்து மதவெறியின் அடிநாதம் //

    I agree.

    //மண்டலை கமண்டலத்தால் எதிர்கொண்டது//

    I know Paarpanars are cunning. But I don’t see them so cunning as to come up

    with such a strategy. More over, nothing prevented OBC’s to come to streets

    and and win their share. Mandal vs Kamandal must be just one of a conspiracy

    theories that you Muhamadans have come up. These two issues have occured one

    after another just by coincidence.

    //அவர்கள் எக்கேடோ கெட்டு போகட்டும்.பார்ப்பனர்கள் வசதியாக வாழ வேண்டும்//

    I know paarpanars (atleast most of them) have been such people.

    But, all this do not mean that i cannot talk about Muhamadism, which i see as

    the single most dangerous ideology that the whole humanity, not alone India,

    faces.

    //” யுனிவெர்பட்டிகளுக்கு ”டாப் டூ பாட்டம் பத்த்த்திண்டு எரியறதே”//

    இந்த யுனிவெர்பட்டிக்கு முகமதியத்தின் அநீதிகளைக் கண்டு ரத்தம் கொதிக்கிறது. Muhamadism is opposed

    to all other isms. Just to give an example, Muhamadism was the primary reason

    why Buddhism became almost extinct in India. Babasaheb Ambedkar has clearly

    explained this aspect. Muhamadism is opposed to universal human rights. I

    would not want to leave my children in a world where Muhamadism predominates

    and where girls and women are covered in black. That is why i oppose it and

    spread awareness about it.

    • \\I know Paarpanars are cunning. …………………… These two issues have occured one
      after another just by coincidence.//

      இந்துக்களான பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் ”இந்துக்களின் நலனுக்காகவே” உயிர் வாழும் சங் பரிவார் கும்பலுக்கு ஆட்சியை கவிழ்க்கும் அளவுக்கு ஏன் ”டாப் டூ பாட்டம் பத்த்த்திண்டு எரியறது”.அத சொல்லுங்கோ முதலில். அது தற்செயலா அவாள் செயலான்னு நாடே அறியும்.சிரமப்பட்டு ஆணி புடுங்குவது வீண்.
      \\single most dangerous ideology that the whole humanity, not alone India,faces.//

      புர்கா போடுவதும்,சுன்னத் செய்வதும்,திருப்பதி லட்டு திங்காததும் உலகத்தையே அழிச்சுடுமா .சொல்லவேயில்ல

      \\.Muhamadism was the primary reason why Buddhism became almost extinct in India. Babasaheb Ambedkar has clearly explained this aspect.//

      அட புரட்டர்களா.பார்ப்பனியத்தின் பாதந்தாங்கிகள் நெஞ்சறிய கூசாமல் பொய் சொல்வீர்கள் என்று தெரியும்.இருந்தாலும் இந்த அளவுக்கா பொய் சொல்வது.இந்தியாவில் பவுத்தம் குப்தர்களின் ஆட்சி காலத்தில்தான் வீழ்ச்சி அடைய துவங்கியது.குப்தர்களின் ஆட்சி காலம் கி.பி.320 முதல் 550 வரை நடந்தது.அப்போது முகம்மது நபிகளார் பிறக்கவே இல்லை.அட மானிட பதர்களா.

      ஆனால் உங்கள் இந்து மதம்தான் அம்பேத்கரை பவுத்தத்தை நோக்கி நெட்டி தள்ளியது.இதோ ஆதாரம்.

      இந்து மதம் ஒருவரையும் காப்பாற்றாது.இந்து மதத்தில் யாருக்கும் மீட்பு என்பது இல்லை.இந்து மத நெறிகளால் உயர்சாதி எனப்படுவோர் மட்டுமே பயனடைந்துள்ளனர்.சூத்திரர்களும் பஞ்சமர்களும் இந்து மதத்தால் ஒரு பயனும் பெறவில்லை.பிராமணர்களுக்கு உயர் பதவிகள் என்ற பேராசையும் தாழ்த்தப்பட்டோருக்கு இழிந்த வேலைகள் என்ற கேவலத்தையும் ஊட்டி வளர்க்கும் வருந்தத்தக்க சூழ்நிலை இந்து மதத்தில் நிலவுவதே இதற்கு காரணம்.இந்து மதத்தில் நாம் அடிமைகளாக தொடரும் வரை நம் படிநிலையில் எந்த முன்னேற்றமும் வராது.நமக்கு ஏதாவது நம்பிக்கை இருக்குமானால் இந்து மதத்தை உதறித்தள்ளி விட்டு பவுத்தத்தை கடைப்பிடிப்பதன் மூலமே இது இயலும்.

      —— அண்ணல் அம்பேத்கர்.

      ”பவுத்தம் ஏற்பு ஏன்” நூலில் இருந்து.பக்கம்.33.
      source.Thus spoke Ambedhkar.தமிழாக்கம்.மோ.அ .பாலசுப்ரமணியன்.
      கிடைக்குமிடம்.கரிசல் பதிப்பகம்.62,இரண்டாவது நிழற்சாலை.வேளச்சேரி.சென்னை.42.
      \\ I would not want to leave my children in a world where Muhamadism predominates

      and where girls and women are covered in black.//

      புர்கா போட்ட பெண்கள் நடமாடும் ஊர்களில் இருக்க அச்சப்படுகிறீர்கள் என்றால் உங்களவா நிறைய பேர் துபாயிலும் அபுதாபியிலும் போய் சமத்தா இருக்காளே .எப்படி.

  81. K.Senthil kumaran

    //நீர் என்ன லூசா இல்லை முட்டாளா//, etc

    A word of advise. It is not free. You have to repay it with better arguments.

    Please avoid personal attacks. It improves your arguments. Thanks.

    • “முன்னா பாயும் ,திப்பு பாயும் வந்து இராமன் இடம் திருப்தி லட்டு வாங்கி சாப்பிடவில்லை என்பதால் ஓநாய் என்று அழைக்கும் இராமன் , என்ன லூசா இல்லை முட்டாளா ?”

      Whats wrong in this question ?

      RAMAN IS USING THE WORD Hyena [“ஓநாய்”] AGAINST MUNNA AND TIPU. IS IT NOT PERSONAL ATTACK?

      Did you[underbuddy] go for sleeping while raman was attacking personally others?

      Only foolish guys or mental guys with ‘hallucination’ call others with animal names!!!

      So that I am asking him whether he is a fool or mental!

      underbuddy://Please avoid personal attacks.

  82. Rama,
    Rama,
    O Rama,
    Do not Run away Rama,
    Straight answers are needed Rama,

    [1]பாயை திருப்தி லட்டு சாப்பிட சொல்லும் நீர் !, பாய் வீட்டுக்கு வந்து மட்டன் பிரியானி சாப்பிட தயாரா ?

    Raman://திருப்பதி சென்று வந்தவன் லட்டை அனைவர்க்கும் குடுத்தான்
    மது அருந்தும் இசுலாமிய நண்பன் வேண்டாம் என்று மறுத்ததோடு அலாமல் , இது பாவம் உள்ளது என்றான் . மதத்தின் தனித்தன்மை காட்டுவது , பெருமை கொள்வது என்கின்ற மத போதை இப்போது வளர்ந்து வருகிறது//

    [2]உன் “சொறி செரக்கு” முதுகு அழுக்கை எடுக்க பூணுல் போடும் நீர் ,உன் விரல்களை நீயே வெட்டி விட்டால் நகசுதி வியாதி வராமலும் பாதுகாக்கலாமே !

    Raman://சுன்னத் செய்யும் அன்பர்கள் விரல்களை வெட்டி விட்டால் நகசுதி வியாதி வராமலும் பாதுகாக்கலாம்.//

    [3]]உன் இறைவன் நீ பிறக்கும் போதே உன்னை, ஏன் பூணுலுடன் படைக்கவில்லை ! அந்த அறிவுள்ள இறைவன் இனிமேல் பிறக்கும் ஆரிய குழந்தைகளை பூணுலுடன் படைக்கட்டுமே !

    raman://இரண்டாயிரம் வருடங்களாக முன்தோலை வெட்டி இறைவனுக்கு செய்து அனுப்புஉகிறீர்கள் . அந்த அறிவுள்ள இறைவன் இனிமேல் பிறக்கும் குழந்தைகளுக்கு முன்தோல் இல்லாமல் படைக்கட்டுமே …//
    raman//செய்யாத ஒன்றை செய்ய சொல்வது மத திணிப்பு , மத நல்லிணக்கம் அல்ல
    இப்போது ஒரு இந்து அன்பர் விபூதி குடுக்கிறார் . நீங்கள் மறுக்கிறீர்கள் என்றால் அது நியாயம் .//

  83. Rama,Rama, O Rama, Do not escape Rama, Do not Run away Rama,

    [1]ராமா , நீர் உன் இந்து மதத்தின் அடிப்படையில் மட்டன் பிரியானி சாப்பிட மாட்டாய் . நன்று .

    [2]அதுபோல முன்னா ,திப்பு பாய்கள் அவர்கள் இஸ்லாம் மதத்தின் அடிப்படையில் திருப்தி லட்டு சாப்பிட மாட்டார்கள்.என்ன தவறு ?

    Can u understand at least now

    Raman//செய்யாத ஒன்றை செய்ய சொல்வது மத திணிப்பு , மத நல்லிணக்கம் அல்ல இப்போது ஒரு இந்து அன்பர் விபூதி குடுக்கிறார் . நீங்கள் மறுக்கிறீர்கள் என்றால் அது நியாயம் .//

  84. வினவு வாசகர்களுக்கு ,

    [1] நான் திரு ராமன் அவர்களுடன் இங்கு செய்யும் விவாதத்தின் நோக்கம் ,மத நல்லிணக்கம் சார்ந்த கண்னோட்டத்துடன்.

    [2] நான் திரு ஹிஸ்பீட் அவர்களுடன் இங்கு செய்யும் விவாதத்தின் நோக்கம் அறிவியலுடன் மத நம்பிக்கைகளை இணைக்கக் கூடாது என்ற கண்னோட்டத்துடன்.

  85. K.Senthil kumaran

    //R U duplicate to Raman?//

    No. Did I suspect you to be a duplicate of Tippu/Abu/Iniyan?

    //Hyena [“ஓநாய்”] AGAINST MUNNA AND TIPU. IS IT NOT PERSONAL ATTACK?//

    Raman has used a simile. This is a figurative speech. This need not be taken as a personal attack. Please see what our friend Tippu has written //எங்கள் வீட்டு குழந்தைகள் மீதான உங்கள் ஓநாய் கரிசனத்தை ஒத்தி வைத்து விட்டு அடங்குங்கள்.//. Here we did not take it as personal attack.

    I hope you see the difference now. See also, ஓநாய் = Wolf, Hyena = கழுதைப்புலி.

    //answer the questions in my comments 72 to 78//

    They are directly meant to Raman. Only he can answer them.

    Finally,

    I wonder how you find so much time to write so many comments. It prompts me to give you another advice, in good faith. Please cut down the number of your comments. They are mostly repetitions and thus do not contribute to the debate. It is good for you, Vinavu and all of us, if you heed my advice(s).

    • Underbuddy,,

      IF I AM GIVING COMMENTS “NOT IN MY WORKING HRS” THEN WHAT IS THE PROBLEM FOR YOU!

      My comments are not repetitions but the proof of stressing and supporting my scientific facts.

      //I wonder how you find so much time to write so many comments. It prompts me to give you another advice, in good faith. Please cut down the number of your comments. They are mostly repetitions and thus do not contribute to the debate. It is good for you, Vinavu and all of us, if you heed my advice(s).//

    • [1]See Tipu is just comparing the nature of an animal Wolf with Raman’s nature of support to Muslim children. Tipu is not calling him as Wolf!

      [2] But Raman is directly calling Muslims as Wolf. It is only a personal attack. Only foolish guys[raman] or mental guys with ‘hallucination’ can only call others with animal names!!!

      [3] if u r not responsible for answering instead of Raman that is good.

      //Raman has used a simile. This is a figurative speech. This need not be taken as a personal attack. Please see what our friend Tippu has written //எங்கள் வீட்டு குழந்தைகள் மீதான உங்கள் ஓநாய் கரிசனத்தை ஒத்தி வைத்து விட்டு அடங்குங்கள்.//. Here we did not take it as personal attack.//

      • K. Senthil kumaran,

        1. Could you tell me what is the nature of the Wolf that prompted Tippu write ‘ஓநாய் கரிசனத்தை’?

        2. Could you explain me what do you mean by ‘mental guys with ‘hallucination’ that you have written?

        • Hello Underbuddy,

          DO not divert the matter!

          [1]Tipu is just comparing the nature of an animal Wolf with Raman’s nature of support to Muslim children. Tipu is not calling him as Wolf! But Raman is directly calling Muslims as Wolf. It is only a personal attack. Only foolish guys[raman] or mental guys with ‘hallucination’ can only call others with animal names!!!

          [2]Raman is directly comparing Muslims with Wolf.See here

          Raman said://அதே போல ஊரில் உள்ள மத வெறி கொண்டவர்கள் செயலை காட்டி , பாருங்க ஊருல சிங்கங்கள் உள்ளன , நாங்கள் வெறும் ஊநாய் தான் என்று உங்களை இருப்பதிலே நல்லது போல காட்டி கொள்ள முயலுகிறீர்கள்//

          [3] Since you are supporting raman now I am asking you…
          [a] Where is Raman?
          [b]Since you are not interested to answer my questions asked to raman and on behalf of raman then why are you SUPPORTING RAMANS STATENTS HERE?

          [4] Let the Raman come and answer all my questions.I Can wait for him!

    • என்ன ஒரு புத்திசாலித்தனம்.அறிவாளியே ”ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுச்சாம்” என்ற பழமொழியின் சாயலில் எழுதியதுதான் ”ஓநாய் கரிசனம்”. முசுலிம் எதிர்ப்பு கலவரங்களில் பெண்கள் என்றும் குழந்தைகள் என்றும் பாராமல் கொன்று குவிக்கும் மதவெறியர்களை ஆதரிக்கும் உங்களை போன்றவர்கள் சுன்னத் செய்வதால் முசுலிம் குழந்தைக்கு வலிக்குமே என்று போலியாக கவலைபடுவதுதான் ”ஓநாய் கரிசனம்”.என சுட்டப்பட்டது.மதவெறியர்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல் இல்லை.

      ராமன் என்கிற வக்கிரம் பிடித்த மதவெறியர் ”ஊநாய்” என்று குறித்தது யாரை அது தனிநபர் தாக்குதலா இல்லையா என்பதை மனசாட்சி கொண்டோரின் முடிவுக்கு விட்டுவிடுகிறேன்.ஆனால் பதிலுக்கு ராமனை அது போன்று அழைக்க மாட்டேன்.நாய் நம்மை கடித்து விட்டது என்பதற்காக நாயை நாம் திருப்பி கடிக்க முடியாது.

      • Tippu,

        //’ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுச்சாம்” என்ற பழமொழியின் சாயலில் எழுதியதுதான் ”ஓநாய் கரிசனம்”. ***** மதவெறியர்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல் இல்லை.//

        That is what i said to Senthil. Thanks for clarifying.

        Now you have written //நாய் நம்மை கடித்து விட்டது என்பதற்காக நாயை நாம் திருப்பி கடிக்க முடியாது.//

        Now read what Raman has written //ஊரில் உள்ள நல்லவர்கள் செய்யும் செயலை பசும் தோல் போல போர்த்தி கொள்ள் பார்க்கிறீர்கள் . அதே போல ஊரில் உள்ள மத வெறி கொண்டவர்கள் செயலை காட்டி , பாருங்க ஊருல சிங்கங்கள் உள்ளன , நாங்கள் வெறும் ஊநாய் தான் என்று உங்களை இருப்பதிலே நல்லது போல காட்டி கொள்ள முயலுகிறீர்கள்//

        Why don’t you allow Raman to use proverbs, while you use it so freely.

        • \\Why don’t you allow Raman to use proverbs, while you use it so freely.//

          \\”ஊநாய்” என்று குறித்தது யாரை அது தனிநபர் தாக்குதலா இல்லையா என்பதை மனசாட்சி கொண்டோரின் முடிவுக்கு விட்டுவிடுகிறேன்.ஆனால் பதிலுக்கு ராமனை அது போன்று அழைக்க மாட்டேன்.//

        • இல்லாதவற்றை இருப்பதாக யுனி கற்பனை செய்து கொள்வதற்கு இதுவும் ஒரு சான்று.பழமொழிகளை தாராளமாக பயன்படுத்தும் நீங்கள் ராமனும் அது போல .பழமொழிகளை பயன்படுத்த அனுமதிக்கலாமே என்று கேட்கும் யுனி அவர்களே,

          \\ஊரில் உள்ள மத வெறி கொண்டவர்கள் செயலை காட்டி , பாருங்க ஊருல சிங்கங்கள் உள்ளன , நாங்கள் வெறும் ஊநாய் தான் என்று உங்களை இருப்பதிலே நல்லது போல காட்டி கொள்ள முயலுகிறீர்கள்//

          ராமனின் இந்த தஞ்சாவூர் கல்வெட்டில் செதுக்கத்தக்க பொன்மொழியில் என்ன பழமொழி ஒளிந்துள்ளது என சொல்ல முடியுமா.நானும் யோசிச்சு யோசிச்சு பாக்குறேன் எதுவும் மட்டுப்படல.உங்க ஞான கண்ணால கொஞ்சம் பாத்து சொல்லுங்களேன்.

  86. Tippu,

    //நெஞ்சறிய கூசாமல் பொய் சொல்வீர்கள் //

    It is not lie.See the quote below from Babasaheb Ambedkar’s book ‘Revolution and Counter-Revolution’ part II.
    —————–
    There can be no doubt that the fall of Buddhism in India was due to the invasions of the Musalmans. Islam came out as the enemy of the ‘But’. The word ‘But’ as everybody knows is an Arabic word and means an idol. Not many people however know what the derivation of the word ‘But’ is ‘But’ is the Arabic corruption of Buddha. Thus the origin of the word indicates that in the Moslem mind idol worship had come to be identified with the Religion of the Buddha. To the Muslims, they were one and the same thing. The mission to break the idols thus became the mission to destroy Buddhism. Islam destroyed Buddhism not only in India but wherever it went.

    Before Islam came into being Buddhism was the religion of Bactria, Parthia, Afghanistan, Gandhar and Chinese Turkestan, as it was of the whole of Asia. [f1] In all these countries Islam destroyed Buddhism. As Vicent Smith [f2] points out :

    “The furious massacre perpetrated in many places by Musalman invaders were more efficacious than Orthodox Hindu persecutions, and had a great deal to do with the disapperance of Buddhism in several provinces (of India),”
    ———————
    The link to this book:
    http://www.ambedkar.org/ambcd/19B.Revolution%20and%20Counter%20Rev.in%20Ancient%20India%20PART%20II.htm

    • எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்

      மெய்ப்பொருள் காண்ப தறிவு.

      அம்பேத்கர் சொல்லி விட்டார் என்பதற்காக எதையும் பகுத்தாயாமல் ஏற்க வேண்டியதில்லை.

      மேலும் வரலாற்று ஆய்வுகளை இணைய தளங்களில் வெளியாவதை வைத்து முழுமையாக ஏற்க முடியாது.அவற்றின் உண்மைத்தன்மையை [authenticity] சரி பார்க்க வழியில்லை.அச்சிட்ட நூல்கள்தான் பொருத்தமானவை.அந்த எழுத்தாளர்தான் எழுதினார் என்பதற்கு பதிப்பகத்தார் பொறுப்பாகிறார்கள்.எழுதிய எழுத்துக்கு எழுத்தாளர் பொறுப்பாகிறார்.இணையத்தை பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் அம்பேத்கர் பெயரில் ஒரு தளம் ஆரம்பித்து அவரது எழுத்துக்களுடன் சொந்த சரக்கை இடைச்செருகலாக திணித்து வலையேற்றலாம்.உண்மையிலேயே அம்பேத்கர் இயக்கங்கள் நடத்தும் தளங்களில் கூட அயோக்கியர்கள் கள்ளத்தனமாக நுழைந்து திரிபு வேலைகள் செய்து வைக்கலாம்.அந்த தளங்களை நிர்வகிப்போர் தொடர்ச்சியாக வலையேற்றியது எல்லாம் அப்படியே இருக்கிறதா என்று சரி பார்த்து கொண்டிருக்க முடியாது.

      சரி,இருக்கட்டும்.இப்போது விவாதத்தில் உள்ளவை அம்பேத்கர் உண்மையில் எழுதியவையே என்று வைத்துக் கொள்வோம்.சிலை வழிபாட்டுக்கு எதிரான முசுலிம்கள் படை எடுத்து சென்ற இடங்களில் எல்லாம் புத்தர் சிலைகளை தகர்த்து விட்டார்கள்,பவுத்தத்தை அழித்து விட்டார்கள் என்கிறார் அம்பேத்கர்.பார்ப்பனியம்,புத்தம் இரண்டையுமே இசுலாம் தாக்கியதாகவும் அம்பேத்கர் சொல்கிறார்.அரசு ஆதரவு இருந்ததால் பார்ப்பனியம் தப்பித்தது என்றும் அரசு ஆதரவு இல்லாததால் புத்தம் அழிந்து பட்டதாகவும் சொல்கிறார்.மேலும் இதை விளக்குவதற்கு அதிர்ஷ்டம் என்ற மூடத்தனத்தையும் துணைக்கழைக்கிறார் அம்பேத்கர் .அவரை போன்ற சமூக புரட்சியாளர் ஒருவர் அதுவும் பார்ப்பனிய மூடத்தனங்களை, வர்ணாசிரம முட்டாள்தனங்களை காலமெல்லாம் சாடி வந்த அம்பேத்கர் அதிர்ஷ்டத்தை நம்புவது அதிர்ச்சியாக இருக்கிறது.

      ஒரே ஒரு கேள்வியை எழுப்பி விடை தேடியிருந்தால் அம்பேத்கருக்கு இந்த குழப்பம் வந்திருக்காது,இந்திய துணைக்கண்ட பகுதியில் 800 ஆண்டுகளுக்கு மேலாக முசுலிம் மன்னர்கள் ஆட்சி செய்திருந்த போதும் இத்தனை ஆயிரம் இந்து,சமண கோவில்களும்,புத்த விகாரைகளும் அவற்றின் தெய்வச்சிலைகளும் எப்படி இடிபடாமல் தப்பின.மாலிக் கபூர் தில்லியிலிருந்து தெற்கே ராமேசுவரம் வரை படை நடத்தி வெற்றி பெற்றிருந்தாலும் ராமநாதசுவாமி கோவிலும் அதன் சிலைகளும் எப்படி இடிபடாமல் தப்பின.ஆப்கானின் பாமியன் புத்தர் சிலைகள் தலிபான் என்ற மதவெறி கிறுக்கு கூட்டம் வந்து இடிக்கும் வரை எப்படி இடிபடாமல் தப்பின.அவ்வளவு ஏன்,இசுலாம் தோன்றிய அரபு தீப கற்பத்துக்கு அருகிலேயே அரபு மொழி பேசும் எகிப்தில் பிரமீடுகளும் அதன் சிலைகளும் எப்படி இடிபடாமல் தப்பின.

      விடை பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியிலும் அதற்கான இந்து முசுலிம் ஒற்றுமையை சீர்குலைக்கும் கள்ளப்பரப்புரையிலும் உள்ளது.1857 விடுதலை போருக்குப்பின் இந்து முசுலிம் ஒற்றுமை தங்கள் ஆட்சிக்கு பெரும் ஆபத்து அதனை பிளக்காமல் தாங்கள் இந்தியாவை ஆள முடியாது என்று உணர்ந்து கொண்ட காலனியவாதிகள் அதற்காக இந்து முசுலிம் ஒற்றுமையை சீர்குலைக்கும் கள்ளப்பரப்புரையை முடுக்கி விட்டனர்,ஆங்கிலேய கள்ள வரலாற்று ஆய்வாளர்கள் எந்த ஆதாரமும் இன்றி பாபர் மசூதி ராமர் கோவிலை இடித்து விட்டு கட்டப்பட்டதாக கிளப்பி விட்டார்கள்.அதன் கொடும் விளைவுகளை இன்று வரை இந்திய மக்கள் அனுபவிக்கிறார்கள்.அப்படிப்பட்டதொரு கள்ளப்பரப்புரைக்கு அம்பேத்கரும் பலியாகியிருக்கிறார்.அம்பேத்கர் மேற்கோள் காட்டும் வரலாற்று ஆய்வாளர்கள் வெள்ளைக்கார காலனியவாதிகளாகவே உள்ளனர். .குறிப்பாக இந்திய பகுதிகளில் இசுலாம் புத்தர் சிலைகளை தகர்த்து பௌத்தத்தை ஒழித்தது என சொல்லும் வின்செண்ட் ஸ்மித் ஆங்கிலேய அரசில் இந்திய குடிமை பணி அதிகாரியாக இருந்தவர்.இவரை போன்றவர்களின் ஆய்வு எந்த அளவுக்கு விருப்பு வெறுப்பின்றி இருந்திருக்கும்.

      சரி,ஒரு வாதத்திற்காக அம்பேத்கர் சொல்வதை அப்படியே உண்மையென எடுத்துக்கொள்வோம்.நாடு பிடிக்கும் ஆசையில் முசுலிம் மன்னர்கள் நடத்திய ஆக்கிரமிப்பு போர்களுக்கும் அவர்களது போர்க்கால அட்டூழியங்களுக்கும் இன்றைய முசுலிம்களையும் இசுலாமிய மதத்தையும் பொறுப்பாக்கி மேன்மை தங்கிய நீதியரசரான உனிவர்பட்டி தீர்ப்பு வழங்குவது சரியல்லவே.ராஜபக்சேவின் போர்க்குற்றங்களுக்காக புத்த மதத்தை ஒழிக்க வேண்டும் என எந்த கிறுக்கனும் சொல்வதில்லை.அதுவும் முகம்மதியர்கள் ஆதிக்கம் செய்யும்,அவர்கள் பெண்கள் புர்கா போட்டு நடமாடும் உலகில் எனது குழந்தைகளை விட்டு செல்ல அஞ்சுகிறேன் என்று புலம்பும் யுனி அவர்களே எந்த குழந்தையும் புர்கா போட்ட பெண்களை பார்த்து அஞ்சுவதில்லை.வீணான கற்பனைகளை தவிர்த்து கொள்ளுங்கள்.இப்படியே இந்த மனநிலை நீடித்தால் இல்லாததை இருப்பதாக கற்பித்துக்கொள்ளும் இந்த மனப்போக்கு மனநோயாக மாறவும் வாய்ப்புண்டு.எதற்கும் ஒரு நல்ல மன நல மருத்துவரை பாருங்கள்.

      வருமுன் காவாதான் வாழ்க்கை எரிமுன்
      வைத்தூறு போலக் கெடும்.

      விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.

  87. Hisfeet, HERE IS THE HISTORICAL PROOF !!!!!!!1

    Copernicus’ major theory :

    1. There is no one center of all the celestial circles or spheres.
    2. The center of the earth is not the center of the universe, but only of gravity and of the lunar sphere.
    3. All the “spheres revolve about the sun” as their mid-point, and therefore the sun is the center of the universe.

    Copernicus WAS TRYING TO PROVE THIS based on Mathematics

    IMPORTANT NOTE: Copernicus is telling “spheres” revolve about the sun!!!!!!!!!!!!!!
    IMPORTANT NOTE: Bible is telling Earth is flat

    Galileo’S work:

    BUT Galileo not only had the mathematical proofs of Copernicus, but, also new proof from the science of astronomy.

    The legend Sir Galileo proved that

    [1]Biblical flat earth claim

    [2]Biblical Geocentric model

    BOTH ARE WRONG.

    Dear Hisfeet, Thanks for asking the historical proof, by the way i could go back to Copernicus days!!!!

    hISFEET ASKED ://If possible, please provide some historical proof for your statement,

  88. Conclusion from History: “spheres revolve about the sun”
    Dear Hisfeet,

    Both Copernicus and Galileo proved that “spheres revolve about the sun” by mathematically and scientifically RESPECTIVELY. But the Bible only foolishly speaking that “Flat earth and Geocentric model”.

    Note:
    I am going to write a detailed essay about this in my blog in Tamil with in 2 days.

    http://vansunsen.blogspot.com/

  89. Bible and Hissfeet Both accept that….

    [1][Earth is flat in Bible!]I never rejected that there are some verses suggesting that earth is flat in Bible. These type of verses are there in almost all ancient scriptures.[ref his comment 87.1]

    [2]I[Hissfeet] accept Catholics were wrong in saying that earth is at center.[ref his comment68.1.1.1]

    BUT THE LEGENDS Copernicus and Galileo

    Not only proved that the earth is sphere but also the the

    earth revolves the sun by proving “spheres revolve about

    the sun” by mathematically and scientifically RESPECTIVELY.

  90. From the Java code you have written in your blog, it is evident how much you are enlightened. Plato himself who lived in BC, put forth the spherical earth model. Ok, you say William is wrong, why there is a Wikipedia article about Myth of Flat Earth? Is that article written by me or by Christians?

    Please don’t take Java classes. I pity your students. Learn Java yourself before you teach others. Kind advice.

    • //This article is about the ***modern myth that medieval Europeans believed the Earth was flat.***//

      you are a believer in this modern myth.

      //The myth of the Flat Earth is the ***modern misconception that the prevailing cosmological view during the Middle Ages saw the Earth as flat, instead of spherical.***//

      you have this misconception.

      http://en.wikipedia.org/wiki/Myth_of_the_Flat_Earth

      Before Galileo was born books were written by a priest that shows a spherical earth.

      http://en.wikipedia.org/wiki/Gautier_de_Metz

      A 7th century Christian saint also developed a map with spherical earth model.

      http://en.wikipedia.org/wiki/T_and_O_map
      http://en.wikipedia.org/wiki/Isidore_of_Seville

      I am not claiming Christians are best. But Christians took the idea of spherical earth from Greeks even before Galileo was born.

      • Hissfeet,

        [1]Am i telling any where here that Galileo only first found that earth is spherical?

        [2] I told only at the beginning of referring Galileo that

        “உலகம் உருண்டை என கூறிய கலிலியோவை…”

        [3]Copernicus’ major theory : ref comment 98
        All the “spheres revolve about the sun” as their mid-point, and therefore the sun is the center of the universe.

        IMPORTANT NOTE: Copernicus is telling “spheres” revolve about the sun!!!!!!!!!!!!!!
        IMPORTANT NOTE: Bible is telling Earth is flat

        [4]Galileo’S work:

        Both Copernicus and Galileo proved that “spheres revolve about the sun” by mathematically and scientifically RESPECTIVELY. But the Bible only foolishly speaking that “Flat earth and Geocentric model”.

        [5]If christian priests are supporting that earth is sphere then that is not against “science” but only against Bible that foolishly speaking about “Flat earth and Geocentric model”.

        Hisfeet://Plato himself who lived in BC, put forth the spherical earth model.

        Hisfeet://I am not claiming Christians are best. But Christians took the idea of spherical earth from Greeks even before Galileo was born.

        Hisfeet://Before Galileo was born books were written by a priest that shows a spherical earth.

        Note:

        HELLO HISFEET,

        CAN YOU UNDERSTAND THAT WHAT IS THE MEANING OF THE Copernicus STATEMENT “spheres revolve the sun” ?

        • //But the Bible only foolishly speaking that “Flat earth and Geocentric model”.//

          The argument is not about Bible. It is about, for which idea Galileo was persecuted. Is it for saying earth is sphere or is it for the idea of heliocentric theory?

          //THE Copernicus STATEMENT “spheres revolve the sun” ?//

          Earlier they believed “spheres revolve the earth”. Copernicus (before him, many) found that the spheres revolve the sun.

          Now, reply my comment about Magellan.

          • Hello Hissfeet,

            [1]Am i telling any where here that Galileo only first found that earth is spherical?

            [2] I told only at the beginning of referring Galileo that

            “உலகம் உருண்டை என கூறிய கலிலியோவை…”

            [3]Now you are accepting that “Copernicus (before him, many) found that the spheres revolve the sun.” That is Great!

            [4]The conflict between Galileo and Bible blasted out When he was proving that “spheres revolve the sun” scientifically!

            [5] How foolishly you and Bible are speaking against Science!

          • Hi Hisfeet,

            [1]Any one can tell that “spheres revolve the earth”. But Both Copernicus and Galileo only proved that “spheres revolve about the sun” by mathematically and scientifically RESPECTIVELY.

            [2] For Science We need proof and facts!

            [3]Copernicus gave mathematical proof for “spheres revolve the earth”.

            [4]Galileo gave scientific proof and facts for “spheres revolve the earth”.

            //Earlier they believed “spheres revolve the earth”. Copernicus (before him, many) found that the spheres revolve the sun.

    • ஏன் இந்த கொலை வெறி !!!!!!!!!!

      [1]I am really happy when some one is finding mistakes in Java codes!!!!!!!

      [2]Keep finding mistakes in my java code!!!!

      //Please don’t take Java classes. I pity your students. Learn Java yourself before you teach others. Kind advice.//

  91. Tippu,

    //சமூகத்திற்கு என்ன நன்மை விளைந்து விடும் என்று இடுப்பையும் முதுகையும் காட்டும் வகையில் பெண்கள் உடை அணிய வேண்டும் என்று சொல்கிறீர்கள்.அப்படி அணியும் பெண்களின் உடை உடுத்தும் பழக்கத்தால் நீங்களோ,சமூகமோ அடைந்த முன்னேற்றம் என்ன. அப்படி உடை அணியும் சகோதர சமுதாயத்தை சேர்ந்த இந்து,கிருத்துவ மற்றும் கடவுள் மறுப்பாளர்களான சகோதரிகள் மன்னிக்க வேண்டும்.//

    //உங்களை சிறுமை படுத்த வேண்டும் என்று இதை சொல்லவில்லை.//

    I am preparing a reply to this (as a post in my blog). It will be ready by today/tomorrow. I hope you will comment on it.

  92. உலகம் உருண்டை என்பதை கிரேக்கர்கள் நன்றாக அறிந்து வைத்து இருந்தார்கள்
    அரிஸ்டாட்டில் உலகம் தட்டை இல்லை என்கிறார் . அஹற்கு அவர் கூறிய விளக்கம் வடக்கே தெரியும் நட்சத்திர கூட்டம் தெற்கே பயணிக்கும்போது தெரிவதில்லை.

    அறிச்டார்கஸ் என்பவர் சூரியனை நாடு நாயகமாக வைத்து , Trigonometry மூலம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம், பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம் , சந்திரனை விட பூமி எவ்வளவு பெரியது , சூரியன் எவ்வளவு பெரியது என்பதை நிறுவினார்

    தாளமி என்பவர் மெசபடொமியர்கல் மற்றும் கிரேக்க முன்னோர்கள் கண்டு பிடித்ததை ஆல்மகெச்ட் புத்தகத்தில் எழுதி இருந்தார். மேலும் இவர் latitude longitude என்பதை பயணிகள் கூறியதை வைத்து கண்டரிததொடு அல்லாமல் , உலக வரைபடத்தையும் உருவாக்கினார் .

    மெகஸ்தனிஸ் இந்திய பயண குறிப்பை கொண்டு இந்தியாவின் நீள அகலத்தை அளந்தார்கள்.

    கிருத்துபிறந்த பின்னர் அறிவியலின் இருண்ட காலம் ஆரம்பிக்கின்றது . அதன் பின்னர் இசுலாமியர்கள் எகிப்தை வென்ற பிறகு அலெக்ஷான்றியாவில் நூலகத்தில் இருந்த புத்தகத்தை அரபியில் மொழிபெயர்த்தார்கள். மாயன் மக்களின் நூலகத்தை கிருத்துவர்கள் எரித்ததை போல இசுலாமியர்கள் நடந்துகொள்ளவில்லை

    இந்த கிரக்கர்கலின் அறிவு அரபு உலகம் மூலம் மீண்டும் ஐரோப்பாவிற்கு இலத்தீன் மூலம் செல்கிறது .

    தாலமியின் வரைபடத்தை வைத்துதான் கொலம்பஸ் இந்தியாவிற்கு வழிதேடி மேற்கே பயணித்தார் …

    உலகத்தின் சுற்றலவையெ அளந்து கூரிவுட்டார் தாளமி

    http://en.wikipedia.org/wiki/Aristarchus_of_Samos

    http://en.wikipedia.org/wiki/Almagest

    http://www.amazon.com/The-History-Practice-Ancient-Astronomy/dp/0195095391/ref=sr_1_1?ie=UTF8&qid=1390314540&sr=8-1&keywords=ancient+astronomy

    • //மாயன் மக்களின் நூலகத்தை கிருத்துவர்கள் எரித்ததை போல இசுலாமியர்கள் நடந்துகொள்ளவில்லை//

      Nalanda university, Maldevian Buddhist scriptures, Archives of Ctesiphon, even their own koran (different versions). The list never ends

      Even on 642 AD, the library was burnt, that is what their own history is saying. So called liberal scholars might have watered it down.

      But I still condemn those who burnt Mayan scriptures and I don’t want any book burnt.

    • Egypt or Greeks ?

      //கிருத்துபிறந்த பின்னர் அறிவியலின் இருண்ட காலம் ஆரம்பிக்கின்றது . அதன் பின்னர் இசுலாமியர்கள் எகிப்தை வென்ற பிறகு அலெக்ஷான்றியாவில் நூலகத்தில் இருந்த புத்தகத்தை அரபியில் மொழிபெயர்த்தார்கள்.//

  93. HISS FEET,

    [1]Even after Plato,christian saints ,Copernicus,Galileo, You,and I all
    are telling that earth is sphere……….. ,

    Why did this Bible till now not changing the idea of “Earth is flat”?

    [2]Thanks lot for, you supporting the science and telling that Plato and then 7th century christian saint are also found that earth is spherical model.Good. After that Copernicus,Galileo both proved that “spheres revolve about the sun” by mathematically and scientifically RESPECTIVELY.

    [3]But Bible is not changing its WRONG statements ABOUT

    [i]Biblical flat earth claim

    [ii]Biblical Geocentric model

    [4]Now editions of your Bible should make changes about this WRONG statements.

    Hisfeet://Plato himself who lived in BC, put forth the spherical earth model.

    Hisfeet://A 7th century Christian saint also developed a map with spherical earth model.

      • Dear Hisfeet,

        [1]Whether it is a literature or Science book or Text book that is not a matter. But the matter is the error in Bible SHOULD BE eliminated.

        [2]According to you ,if it is a literature then it should not conflict with science. The reason is science is growing day by day but bible is not! More over Science has the facts and proofs for its inventions but bible has not!!!

        hisfeet://Can you rightly guess to which category Bible belongs?

  94. Conflicts in Hisfeet Statements…..:

    conflict set 1:

    [a]Hisfeet://I accept Catholics were wrong in saying that earth is at center. But Catholics didn’t hold that earth is flat.

    [b]Hisfeet://I never rejected that there are some verses suggesting that earth is flat in Bible.

    Explanation: The conflict here is between the [b]stmts “Bible is suggesting earth is flat” and [a]”Catholics didn’t hold that earth is flat”.

  95. Conflicts in Hisfeet Statements…..:

    conflict set 2:

    [a]Hisfeet://Christians took the idea of spherical earth from Greeks even before Galileo was born.

    [b]Hisfeet : //can you give any credible link about Galileo fighting for flat earth against the Church?//

    [c]Hisfeet://Before Galileo was born books were written by a priest that shows a spherical earth.

    Explanation:
    The stmet [a] and [c] are supporting the point that before Galileo born and proved Christians know that the earth is sphere. The stmt [b] is doubting that Galileo fighting for flat earth.

    Actually:
    ———
    ———
    Chronically Copernicus,Galileo both proved that “spheres revolve about the sun” by mathematically and scientifically RESPECTIVELY.

    • Hey, are you having any English knowledge? Or at least any language sense? [b] is not a statement. It is a question for you.

      It is not chronically. It is chronologically. You are having chronic misunderstanding. I wish I could just leave you perish in your own ignorance.

      • Hello Academically very poor Hisfeet,

        you are expecting Konar notes for each and every comments of mine! Ok no problem! Take the Notes below

        [1]Chronically—->continually
        Chronically[continually] Copernicus,Galileo both proved that “spheres revolve about the sun” by mathematically and scientifically

        [2]Types of English statements

        stmt [b] is a Interrogative Sentence!

        Declarative Sentences are used to form statements.
        Examples: “Mary is here.”, “My name is Mary.”

        Interrogative Sentences are used to ask questions.
        Examples: “Where is Mary?”, “What is your name?”

        Imperative Sentences are used for commands.
        Examples: “Come here.”, “Tell me your name.”

        Conditional Sentences are used to indicate dependencies between events or conditions.
        Example: “If you cut all the trees, there will be no forest.”

        Note:
        [1]You only trying to find the syntax errors of my comments but what about the content!

        [2]I am telling you that u have conflicts in your stmts!

  96. Abu,

    You had asked me ‘பாதாள சாக்கடை தொட்டி அடைத்துக்கொண்டால் நீ உள்ள எறங்குவியா’

    I replied Yes and wanted to know your reply to the same question. Its been 5 days and you are yet to reply and i am little anxious.

    பாதாள சாக்கடை தொட்டியில் இறங்கி உங்களுக்கு ஏதும் ஆகிவிடவில்லையே?

  97. 1]Am i telling any where here that Galileo only first found that earth is spherical?

    [2]I told you that Both Copernicus and Galileo proved that “spheres revolve about the sun” by mathematically and scientifically RESPECTIVELY. But the Bible only foolishly speaking that “Flat earth and Geocentric model”.

    [3] Since Magellan is not believing your foolish Bible in flat earth matter,So he went around word and proving practically that the world is not flat as told by foolish Bible and he practically proved that it is sphere.

    [4] By giving me more and more information now you are proving that Only “foolish Bible and foolish POPs” trust that the Earth is Flat! That is good!

    [5]Now this discussion is the proof that Bible is going far away from christian people while it is conflicting the matters with science.

    hisfeet://Now, reply my comment about Magellan.
    hisfeet://Last point, Magellan went for a around the world voyage even before Copernicus published his work ( De revolutionibus orbium coelestium) and even before Galileo was born. How can a believer in flat earth go for a journey around the world?//

  98. Dear Hissfeet,

    Your own conflicts and your travel[comments] towards the acceptance of my point are given below. You gave the following comments!

    [1]I criticize all religions including Christianity, Hinduism etc. What is your problem?//hissfeet

    [2]வினவு என்ன ஆபாசக் கதைத் தளமா?//hisfeet

    I replayed:
    ஆபாசத்தின் ஆரம்பமே பைபிள்!

    “And yet indeed she is my sister; she is the daughter of my father, but not the daughter of my mother; and she became my wife. (Genesis 20:12)”

    [3]Yes. this is a foolish story about a non-existing person called Abraham. I don’t believe that there existed a person called Abraham.//hisfeet

    [4]By the by, it is not spherical earth, but helio-centric model. I am writing in support of science, but a lecturer in 10+ colleges can’t understand?!?!? //hisfeet

    [5]I asked//கலிலியோ கதை தெரியுமா ? 360 ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகன் போப் பகிரங்க மன்னிப்புக் கோரினார். Why?

    [6]Because earlier popes were stupid.//hisfeet relayed

    [7]Funny… Read about Galileo before you post. He said Sun is at center. Before Plato said earth is at center.//hisfeet

    [8]We can reject the parts of Bible that contradict modern science and culture and accept the parts where the teachings of Bible are superior to present situation.//hisfeet

    [9]I don’t have anything to say about Virgin birth, Resurrection etc. All I have admiration is Christ’s teaching of loving others, not following useless traditions etc.//hisfeet

    [10]Mr. Senthil with peanut sized brain. Galileo didn’t tell earth is sphere. He told earth revolves Sun. i.e. heliocentric theory. Earlier people believed (as Plato said) that earth is at center and sun is revolving earth. Again and again you tell incorrect information. How you managed to get a degree?//hisfeet

    I replayed:

    [i]Copernicus first derived his theory from esoteric studies of the Pythagorean and other ancient traditions. His successor, Galileo, challenged the flat-earth believers to scientific experiments.
    [ii]The legend Sir Galileo proved that

    [1]Biblical flat earth claim

    [2]Biblical Geocentric model

    are WRONG.

    So at least NOW accept that you and Bible supporters are NUMBER ONE FOOLS IN THE WORLD AND HAVING “peanut sized brain”

    [11]Hey half baked Senthil, can you give any credible link about Galileo fighting for flat earth against the Church?//hissfeet

    [12]William is criticizing Le Monde for saying “Galileo proved that earth is sphere”. So, your credible link is proving my point. I accept Catholics were wrong in saying that earth is at center. But Catholics didn’t hold that earth is flat./hissfeet

    I replayed:
    [i]Hello No 1 fool Hisfeet, William is criticizing Serge Galam not Le Monde as u said![Le Monde is a French daily evening newspaper!!!!]

    [@Serge Galam (1945) is a French physicist not atheist ]
    [@William E Caroll is a Theologian]

    Again your Theology is fighting with Science!
    You biblical fools never correct your tails….. O sorry,your mind!
    [ii] In my link, Do not you know and understand that Serge Galam[physicist] writing in Le Monde telling that “Galileo proved that earth is sphere” ?

    [iii]The Bible claims that Earth has four ends and four corners.[And many many evidence I gave from Bible]

    [12]I never rejected that there are some verses suggesting that earth is flat in Bible. These type of verses are there in almost all ancient scriptures./hiss feet

    [13]By the bye, Serge Galam has written a wrong statement in a magazine and William was pointing that. If possible, please provide some historical proof for your statement, like how we have the proof for “Galileo’s persecution for heliocentric model”.

    I replayed sharply
    conflicts with Hisfeet statements !!!!

    Hisfeet://I accept Catholics were wrong in saying that earth is at center. But Catholics didn’t hold that earth is flat.

    Hisfeet://I never rejected that there are some verses suggesting that earth is flat in Bible.

    This[conflicts] is called the pity mind of Theologian like you Hisfeet!

    Conclusion from History: “spheres revolve about the sun”
    Dear Hisfeet,

    Both Copernicus and Galileo proved that “spheres revolve about the sun” by mathematically and scientifically RESPECTIVELY. But the Bible only foolishly speaking that “Flat earth and Geocentric model”.

    [14]From the Java code you have written in your blog, it is evident how much you are enlightened. Plato himself who lived in BC, put forth the spherical earth model. Ok, you say William is wrong, why there is a Wikipedia article about Myth of Flat Earth? Is that article written by me or by Christians?

    Please don’t take Java classes. I pity your students. Learn Java yourself before you teach others. Kind advice.//hissfeet

    [15]Last point, Magellan went for a around the world voyage even before Copernicus published his work ( De revolutionibus orbium coelestium) and even before Galileo was born. How can a believer in flat earth go for a journey around the world//hisfeet

    Earlier they believed “spheres revolve the earth”. Copernicus (before him, many) found that the spheres revolve the sun.//hisfeet
    I replayed:
    [i]Even after Plato,christian saints ,Copernicus,Galileo, You,and I all
    are telling that earth is sphere……….. ,

    Why did this Bible till now not changing the idea of “Earth is flat”?

    [ii]Thanks lot for, you supporting the science and telling that Plato and then 7th century christian saint are also found that earth is spherical model.Good. After that Copernicus,Galileo both proved that “spheres revolve about the sun” by mathematically and scientifically RESPECTIVELY.

    [iii]Am i telling any where here that Galileo only first found that earth is spherical?

    [iv]I told you that Both Copernicus and Galileo proved that “spheres revolve about the sun” by mathematically and scientifically RESPECTIVELY. But the Bible only foolishly speaking that “Flat earth and Geocentric model”.

    [v] Since Magellan is not believing your foolish Bible in flat earth matter,So he went around word and proving practically that the world is not flat as told by foolish Bible and he practically proved that it is sphere.

    [vi] By giving me more and more information now you are proving that Only “foolish Bible and foolish POPs” trust that the Earth is Flat! That is good!

    [vii]Now this discussion is the proof that Bible is going far away from christian people while it is conflicting the matters with science.

    • From the beginning,

      1. I have never said I believe in Bible literally.

      2. I don’t even believe that Bible is without errors.

      3. My opinion is that Bible was written by ordinary humans like you and me.

      4. But I see teachings of Jesus as timeless treasures. They are very much helpful for me to live everyday life in a simple and progressive way.

      5. Also the Western culture(equality, gay rights, woman’s right, separation of religion and government etc), which is a direct or indirect result of Christian religion is what I admire.

      6. Even though many of the Newtonian physics is not accurate after the introduction of Relativity theory, you can still take Newton as a role model and admire him. Like wise I admire old philosophers who are the corner stones of modern society. Ex: St. Augustine of Hippo, St. Thomas Aquinas, Rene Des Cartes, Immanuel Kant also Plato, Aristotle and others.

      7. By belief, I am a Deist. Please google to know what it means. I believe there is a God. Instead of believing a “revealed book” blindly, I believe in progressive revelation of truth. That is as we search earnestly, we find truth more and more.

      8. By culture I am a Christian. I go to Church, I have taken Baptism, I take Communion and I try to share the message of Jesus Christ with others. That message is not about miracles or magics. The message of love, truth and humbleness, which is the best alternate for this consumerist and materialistic world.

      9. Coming to the argument here. You said Catholic Church persecuted Galileo for saying earth is sphere. I said Catholic Church persecuted Galileo for saying Sun is at center. I also said the concept of spherical earth is already known to people. Even before Galileo was born.

      10. Instead of providing any credible argument, you just brought in Bible to defeat me. You can’t defeat me by criticizing Bible. I am not defending Bible here. I am defending what I know from history and science lessons.

      11. Then you asked me why it is not changed in Bible that earth is sphere. To clarify this, Bible is not text book to include new inventions. It is a literature. Even though we now know that there is no rebirth, will you change thirukural to remove references to reincarnation (seven births)?

      12. Now your Bible bashing is nothing new. There is no need for a person without any sense of history or science to write about the errors in Bible. There is a website called skeptic’s annotated Bible. Google it. It has lot of criticism about Bible summarized at one place. They also have for koran.

      13. Bible is not read by me or other progressive people as a science book. No! We don’t believe in Adam and Eve story. We don’t believe in Noah’s flood. We don’t believe in flat earth. We believe in love. We believe in helping others. We believe that being truthful to self and God is much better than living a life of eating/mating/dying.

      14. All your arguments stem from two beliefs. 1. I believe in literal interpretation of Bible. 2. I am a Catholic or Pope supporter. I am neither. You have been arguing for waste till now. If you had any brain, you should have understood and accepted the error in your post and stopped. But you don’t.

      15. Conclusion: I still say that the problem between Galileo and Catholic Church was “Catholic Church believed that Earth is at center. Galileo and Copernicus believed and proved that Sun is at center”. But what you said is “Catholics believed in a flat Earth. Galileo and Copernicus said it is spherical”. I said “Magellan traveled around the world even before Galileo was born. How can a man set forth a voyage that costs a lot and involves lot of risks if the common consensus was a flat earth?” You again and again say Bible says this and Bible says that. Who cares? What you said is incorrect. I will say it again.

      //உலகம் உருண்டை என கூறிய கலிலியோவை மத தீவிரவாதிகள்

      கல்லால் அடித்துக்கொல்ல முயற்சித்தனர்.

      போப் அவரை மதத்திலிருந்தே நீக்கினார்.//

      Galileo was not persecuted for saying world is sphere. He was persecuted for heliocentrism.

      Stoning to death was not a common punishment in medieval Europe. It is common only in modern day Islamic countries.

      Pope didn’t excommunicate Galileo. They just asked him to repent and kept in house arrest. Which I also condemn.

      But see for yourself. You have written 3 sentences. All three are factually incorrect. Am I wrong in pointing them? Are you a teacher? Is this the right way to adamantly deny your errors?

      16. Last point. I have read your code, read your comments and understood how you see things. You don’t seem to have good understanding of things. You don’t understand English well. Your code lacks standard. I really wonder how you manage to teach students. First learn these basics and then teach. Else it will cripple the mind of hundreds of students every year.

      • திரு.அவன் பாதம், இந்த மறுமொழியில் நீங்கள் குறிப்பிடும் திருக்குறள் எந்த திருக்குறள்? அதை ஏன் திருத்த வேண்டும்? விளக்க முடியுமா?

          • மறுபிறப்பு பொய் என்று அறிவியல் பூர்வமாக நிறுவபட்டு விட்டதா?

              • கடவுளும் அறிவியல் பூர்வமாக நிறுவப்படாத ஒரு கருத்தியல்தான்.மறுபிறப்பும் அது போன்ற ஒரு கருத்தியல்.ஆனால் உலகம் தட்டையானது என்பது அறிவியல் பூர்வமாக மறுக்கப்பட்ட ஒன்று.அதற்கு இனையாக திருக்குறளை ஒப்பிட்டு குழப்பி தற்போது நழுவி செல்லும் அவன்பாதத்திடமே என் கேள்வி.அதை புரிந்து கொண்டுதான் என் கேள்விக்கு பதில் கூறாமல் விலகி செல்கிறார்.

            • மறுபிறவியில் நம்பிக்கை வைத்து வள்ளுவரும் எதுவும் சொன்னதாக தெரியவில்லை.வேண்டுமானால் இந்த குறளை சொல்வார்கள் .

              பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
              இறைவன் அடிசேரா தார்.
              இதிலும் மறுபிறவியை வள்ளுவர் குறிக்கவில்லை.

              • தங்களின் திருக்குறள் வாசிப்பு குறித்து மகிழ்ச்சி!

                ஒரு பிறவியை மட்டும் குறித்தால் அதை கடக்க முடியாத முடிவில்லாத எனும் பொருள் தரும்
                “பெருங்கடல்” ஆக உருவகபடுத்தமாட்டார் என நினைக்கிறேன்.அடியார்க்கு நல்லார்,பரிமேலகர்,முதலிய உரையாசிரியர்கள் அந்த பொருளையே கொள்கிறார்கள்

            • இதற்கும் ஒரு பிறவியில் ஒருவன் கற்ற கல்வி வரும் பிறவிதோறும் தொடர்ந்து வரும் என்றே பழைய உரைகள் அனைத்தும் பொருள்கொள்கிறது.

              இந்தியாவில் தோன்றிய அனைத்து மதங்களும் சமணம்,பெளத்தம் உட்பட மறுபிறப்பு கொள்கையை ஏற்கின்றன.வள்ளுவர் மட்டும் மாறுபட வாய்ப்பில்லை.

              • Hi Nayanaar,

                I am not against Valluvar in this. Please understand. I am saying, non-scientific concepts/statements in literature can’t be changed. But They are respected for the message they convey. They are not text books to be updated with latest inventions and discoveries.

                • உங்களின் ஒப்பீடல் குறித்துதான் எனது கேள்வியே.உலகம் உருண்டையானது தட்டையானது இல்லை என்று விஞ்ஞானம் நிறுவிவிட்டது.மறுபிறப்பு தவறு என்று எந்த விஞ்ஞானமும் நிறுவவில்லை.மேலும் அதை டார்வினின் பரிணாம விதியுடன் ஒப்பிட்ட சில ஆய்வு கட்டுரைகளை நான் வாசித்துள்ளேன்.இதை இரண்டையும் எந்த அடிப்படையில் நீங்கள் ஒப்பிட்டீர்கள்? விஞ்ஞான பூர்வமற்றதை மாற்ற வேண்டுமெனில் முதலிடத்தில் இருப்பது கடவுள் என்ற கருத்துருதான்.விவிலியம் முழுவதையும் இதனடிப்படையில் திருத்த வேண்டி இருக்கும்.மற்றவர்களை புரிந்து கொள்ள வற்புறுத்தும் நீங்கள் முதலில் புரிந்து கொண்டு ஒப்பிடுங்கள்.

                  உலகம்தட்டையானது என்று முட்டாள்கள் கூறிய காலத்தில் உலகம் உருண்டையானது,அது தன்னைதானே சுற்றுகிறது என்றவர் வள்ளுவர்.

                  “சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்”–திருக்குறள்.

                  • Can you tell me the correct date of tirukural’s authorship? That itself is not established. Another point, ask anyone who has basic knowledge of science. They will deny existence of after life or rebirth. Don’t quote some pseudo scientific references. There are some people who claim they visited heaven and hell. You want link 😀

                    The verse you quoted is not having any reference to a spherical earth. It can be interpreted to mean that the cycle of life in earth is dependent on farming. Also, does it make sense that earth rotates because of farming? Earth has been rotation before we humans were born.

                    I am fed up explaining one moron here already. You too don’t start.

                    • why r u applying science onto a moral treatise?

                      have u read thirukkural,do u know that ideas like karma/rebirth and maintained to bring some order in the behaviour of human beings who otherwise ll abuse every liberty/luxury.

                  • Can you tell me the correct date of tirukural’s authorship? That itself is not established. Another point, ask anyone who has basic knowledge of science. They will deny existence of after life or rebirth. Don’t quote some pseudo scientific references. There are some people who claim they visited heaven and hell. You want link 😀

                    The verse you quoted is not having any reference to a spherical earth. It can be interpreted to mean that the cycle of life in earth is dependent on farming. Also, does it make sense that earth rotates because of farming? Earth has been rotation before we humans were born.

                    Kural – 1031
                    Howe’er they roam, the world must follow still the plougher’s team;
                    Though toilsome, culture of the ground as noblest toil esteem.

                    கலைஞர் உரை:

                    பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.

                    மு.வ உரை:

                    உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.

                    சாலமன் பாப்பையா உரை:

                    உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது.

                    Even I can quote some Bible verses out of context and claim that they are scientific

                    He hangs the earth on nothing. -Job 26:7

                    Indians believed earth is sitting on a turtle and earth was drowned in to ocean during Varaka avatar.

                    has stretched out the heavens at His discretion -Jeremiah 10:12

                    This means expanding universe model from which we conclude the Big Bang. So Bible has it right. Indians believed in a constant, everlasting universe model.

                    http://www.raptureforums.com/BibleProphecy/101science.cfm

                    Funny guys. You and the guy who runs the website raptureforums.com

                    You both quote some verses out of context and claim scientific fore-knowledge.

                    I am fed up explaining one moron here already. You too don’t start.

                    • 1.திருவள்ளுவர் கி.மு.31 ஆம் ஆண்டில் பிறந்தார் என அறிஞர்கள் நிறுவியுள்ளனர்.

                      2.பின் வரும் திருவாசக பாடலை படியுங்கள்.

                      “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
                      அளப்பருந் தன்மை வளப்பருங் காட்சி
                      ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
                      நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன”

                      இதில்”உண்டை” என்பது உருண்டை என பொருளில்தானே? இதை விட பிக்பேங் தியரியை விவரிக்க முடியுமா?

                      3.உலகம் என்ற தமிழ் சொல்லே” உலவு” என்ற வேர்சொல்லில் இருந்து வந்ததுதான்.உலவு என்றால் சுற்றுதல் என்றுதானே பொருள்?

                      4.”சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்” நான் கூறிய பொருளில் அரசு பாடநூல்களிலேயே இடம் பெற்றுள்ளது.நீங்கள் சாலமன் பாப்பையா,விவேக்,சந்தானம் கூறிய கருத்தையெல்லாம் கூறுவது நல்ல வேடிக்கை.

                      5.ஞாலம் என்பதும் உலகை குறிக்கும் மற்றொரு சொல்.ஞால் என்ற வேர் சொல்லில் இருந்து பிறந்தது.ஞால் என்றால் தொங்குதல் என்றே பொருள்.

                      6.மறுபிறவி குறித்த திருவாசக பாடல்

                      “புல் ஆகி,பூடு ஆகி புழு ஆய் மரம் ஆகி
                      பல் விருகம் ஆகி பறவைஆய் பாம்பு ஆகி
                      கல் ஆய் மனிதர் ஆய் பேய் ஆய் கணங்கள் ஆய்
                      வல் அசுரர் ஆகி முனிவர் ஆய் தேவர் ஆய்
                      செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
                      எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்”

                      இதில் புல்லில் இருந்து மனிதன் வரையில்லான பரிணாமம் உள்ளது.தமிழன் பரிணாம வளர்ச்சியை மறுபிறப்பாக புரிந்து கொண்டான்.

              • பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
                இறைவன் அடிசேரா தார்.

                உங்கள் வாதப்படி இதன் பொருள் இறைவனின் அருளை பெறாதவர்கள் மீண்டும் மீண்டும் பிறந்து அந்த பிறவிப் பெருங்கடலில் கிடந்து உழல்வர்.அருள் பெற்றோர் அதனை நீந்தி கடந்து விடுவர் என்றாகிறது.அப்படியானால் அருள் பெற்றோருக்கு அது சிறு குட்டைதானே.அவர்களுக்கும் அதனை ” கடக்க முடியாத முடிவில்லாத எனும் பொருள் தரும்
                பெருங்கடல்” ஆக உருவகப்படுத்துவது பொருத்தமாக இல்லையே.

                \\அடியார்க்கு நல்லார்,பரிமேலகர்,முதலிய உரையாசிரியர்கள் அந்த பொருளையே கொள்கிறார்கள்//

                இந்த உரையாசிரியர்களுக்கு மறுபிறவி மீது நமபிக்கை இருந்திருக்கிறது.அதனால் அப்படி பொருள் கொண்டிருக்கிறார்கள்.மறுபிறவி மீது நமபிக்கை இல்லாத கலைஞரின் உரையை பாருங்கள்.

                \\வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.//

                தமிழர்கள் வாழ்வில் கடவுளும் மதங்களும் வருவதற்கு முன்னரே ”இறைவன்”வந்து விட்டான்.அவன் வேறு யாருமல்லன்.ஒரு கூட்டத்தின் தலைவன்,இனக்குழுவின் தலைவன்,ஊர்த்தலைவன்,அரசன் இவர்களே இறைவன் என அறியப்பட்டான்.அதிலிருந்துதான் கடவுளை குறிக்கும் மற்றொரு சொல்லுக்குரிய ”ஆண்ட”வனும் வந்தான்.இறையாண்மை வந்ததும் இப்படித்தான்.ஆகவே கலைஞர் சொல்லும் பொருளே ஏற்கத்தக்கதாக இருக்கிறது.நல்ல தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என வள்ளுவர் மேலும் வலியுறுத்துவதை பாருங்கள்.

                தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
                மனக்கவலை மாற்றல் அரிது.

                \\இதற்கும் ஒரு பிறவியில் ஒருவன் கற்ற கல்வி வரும் பிறவிதோறும்…………………. மறுபிறப்பு கொள்கையை ஏற்கின்றன.வள்ளுவர் மட்டும் மாறுபட வாய்ப்பில்லை.//

                சிறு வயதில் கற்ற வாய்ப்பாடு கூட முதுமையில் மறந்து போய் விடுகிறது,எத்தனை பேருக்கு தான் படித்த ஆசிரியர்கள் பெயர் அத்தனையும் நினைவிருக்கிறது.ஒரு பிறவியிலேயே மனிதனின் நினைவாற்றலின் அழகு இதுதான்.உங்களுக்கும் எனக்கும் தெரிந்த இந்த எளிய உண்மை அய்யன் வள்ளுவருக்கு தெரியாமல் போயிருக்குமா.அவர் ஏழேழு பிறவிக்கும் ஒருவனின் கல்வி தொடர்ந்து வரும் என சொல்லியிருப்பாரா என்ன.

                  • நன்றி செந்தில்.ஏற்கனவே ஒரு வலைப்பூ எழுதுகிறேன்.நேரமின்மை காரணமாக தொடர்ச்சியாக எழுத முடிவதில்லை.இப்போது என் பெயரின் மீது சொடுக்கினால் அந்த வலைப்பூவுக்கு போகும்.

                • அய்யா, நான் தங்களுடன் விவாதிக்க தயாராகவே உள்ளேன்.சில புரிதல்களுக்காக இந்த கேள்வி.அறத்துப்பாலில் “ஊழ்” என்று ஒரு அதிகாரம் உண்டல்லவா? ஊழ் என்றால் என்ன என்று விளக்குங்கள் பிறகு விவாதிக்கலாம்.

                  • நேரமின்மை,பணிச்சுமை காரணமாக மறுமொழி அளிக்க தாமதமாகிறது.பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்

                    • பொறுத்து கொள்கிறேன்[கோபிக்காதீர்கள் சும்மா தமாசு]

                  • ஊழ் என்பதற்கு முற்பிறவி பயன் என்று பொருள் கொள்வதால் அய்யன் வள்ளுவன் மறுபிறவியில் நம்பிக்கை வைத்து எழுதியதாக நீங்கள் கருதுகிறீர்கள் என நினைக்கிறேன்.ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்பது சமண துறவியான இளங்கோவடிகள இயற்றிய சிலப்பதிகாரத்தின் அடிப்படை அல்லவா.இது குறித்து அறிஞர் பெருமக்களிடையே மாறுபட்ட கருத்துக்களும் நிலவுகின்றன.சாலமன் பாப்பையா அதற்கு விதி என பொருள் கொள்கிறார்.கலைஞர் அதனை இயற்கை நிலை என்கிறார்.

                    பார்க்க;http://www.thirukkural.com/2009/01/blog-post_2943.html
                    ஆகவே குழப்பம் எல்லாம் நம்மிடையேதான்.அய்யனிடத்தில் இல்லை.உங்கள் மறுபிறவி நம்பிக்கையை வள்ளுவன் மீது ஏற்றி வைத்துவிட்டு உங்கள் கருத்தையே அவரும் கொண்டிருப்பதாக மயங்க வேண்டாம்.

                    • ///ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்பது சமண துறவியான இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தின் அடிப்படை அல்லவா///

                      ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டியது எப்படி என்று முதலில் பார்ப்போம்.

                      கீழே உள்ள சிலப்பதிகார பாடலை படியுங்கள்

                      “முதிர்வினை நுங்கட் கு முடிந்த தாகலின்
                      முந்தைப் பிறப்பிற் பைந்தொடி கனவனொடு
                      சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்துச்
                      சங்கம னென்னும் வாணிகன் மனைவி
                      இட்ட சாபங் கட்டிய தாகலின் [சிலப்பதிகாரம்-பதிகம்-45]

                      கோவலன் கொலைகளத்தில் மாள காரணம் அவனது முற்பிறப்பில் சங்கமன் எனும் வணிகனின் மனைவி இட்ட சாபமே காரணம் என்று இந்த பாடல் கூறுகிறது.சிலம்பு கூறும் ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டுவது இதுவே

                      இளங்கோவடிகள் சமணர் என்று நீங்களே கூறிவிட்டீர்கள்.வள்ளுவர் சமணர் என்று கலைஞரே ஏற்றுகொண்டதுதான்.ஒரு சமணர் ஊழ்வினை என்பதற்கு முற்பிறவி வினை என்றும் மற்றொருவர் இயற்கை நிலையாகவும் எப்படி பொருள்கொள்வார்கள்?

                      ///சாலமன் பாப்பையா அதற்கு விதி என பொருள் கொள்கிறார்///

                      விதி என்றாலும் கர்மா என்றாலும் ஊழ்வினை என்றாலும் முன் ஜென்ம வினை என்றாலும் ஒரே பொருள்தான் அய்யா.

                      ///உங்கள் மறுபிறவி நம்பிக்கையை வள்ளுவன் மீது ஏற்றி வைத்துவிட்டு உங்கள் கருத்தையே அவரும் கொண்டிருப்பதாக மயங்க வேண்டாம்///

                      கலைஞர் என்ற ஒற்றை குழப்பவாதியின் கருத்தை மட்டும் ஏற்றுகொண்டு மயங்குவது நீங்கள்தான்.விளக்க உரையில் ஒரு வார்த்தை பொருள் கூறும்போது இதர இலக்கியங்களில் அந்த வார்த்தை எந்த பொருளில் கையாளப்படுகிறது என்பதை ஒப்புனோக்கியே பொருள் கொள்ள வேண்டும்.மனம் போன போக்கில் அல்ல.சிலப்பதிகாரம் எப்படி பொருள் கொள்கிறது என ஒப்பிட்டு பாருங்கள் வள்ளுவர் கூறுவது எது என புரியும்.

                • ///அருள் பெற்றோருக்கு சிறுகுட்டைதானே///

                  அருள் பெற்றோர் சிலராகவும் பெறாதோர் பலராகவும் உள்ளதால் பெருங்கடல் என உருவகித்தார்.

                  ///வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர் தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்///

                  எப்படி? இதை கலைஞரின் கூற்றாக நீங்கள் சொல்வதால் அவரையே உதாரணத்திற்கு எடுத்து கொள்வோம்.கலைஞரை தலைவராக ஏற்று அவரின் அடி தொடர்ந்து செல்லும் அவரின் தொண்டர்கள் பிறவி பெருங்கடலை நீந்தி கடந்து விடுவார்களா? அவரை போன்ற தலைவரை பின்பற்றாதவர்கள் நீந்த முடியாம தவிப்பார்களா? நான் நெனைக்கிறேன் கட்சிக்கு ஆள் சேக்கதான் இப்படி ஒரு விளக்க உரை கொடுத்து இருப்பார்னு.

                • ///தமிழர்கள் வாழ்வில் கடவுளும் மதமும் வருவதற்கு முன்னரே”இறைவன்” வந்து விட்டான்….இறைவன் என அறியபட்டான்///

                  கடவுளும் மதமும் எப்போது வந்தது? எதாவது கால கணக்கு உள்ளதா? தமிழில் கிடைப்பதிலேயே சங்க இலக்கியம் தான் பழமையானது.அதிலும் புறநானூறு தான் ஆக பழமையானது.அதிலேயே சிவன் முப்புரம் எரித்த புராண குறிப்பு உள்ளது.

                  “ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞான் கொளீஇ
                  ஒருகணை கொண்டு மூவெயி லூடற்றிப்
                  பெருவிற லமரர்க்கு வென்றி தந்த
                  கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்
                  பிறைநுதல் விளங்கு மொருகண் போல[புறம்-55 1:5-மருதன் இளநாகனார்]

                  சங்க இலக்கியங்களில் கடவுள் பற்றிய குறிப்புகள் அனேகம் உள்ளது அது எல்லாம் இனகுழு தலைவரா? இந்த பாட்டில் பிறை நுதல் விளங்கும் கறைமிடற் அண்ணல் இனக்குழு தலைவரா?

                  ///தனக்குவமை இல்லாதான்///

                  தனக்கு உவமை இல்லாதவன் அதாவது தன்னோடு ஒப்பிட ஒருவரும் இல்லாதவன் என்று கூறுகிறார்.அது எப்படி இனக்குழு தலைவனை குறிக்கும்?நூற்றுக்கணக்கான இனக்குழுக்களுக்களும் அதற்கு தலைவர்களும் உள்ள நாட்டில் இனக்குழு தலைவனை தனக்கு உவமை இல்லாதவன் என்று கூறுவாரா?

                  அடிசேர்தல்,தாள்சேர்தல் முதலியவை இறைவனின் திருவடியை மட்டுமே குறிக்கும் மரபு சொற்கள்.

                  • இந்தியாவில் தோன்றிய மதங்கள் மட்டுமே மறுபிறவியை நம்ப சொல்கின்றன.உங்கள் வாதப்படி விதி என்பது முற்பிறவி பயன் என பொருள்படும் என்றால் மறுபிறவியை நம்பாத ஐரோப்பியர்களின் மொழிகளிலும் விதி என பொருள்படும் சொற்கள் எப்படி வந்தன.ஆகவே விதி என்பது முற்பிறவி பயன் என்பது வெறும் கற்பனை.அது தலையெழுத்து தலைவிதி என இப்பிறவி குறித்தது என்பதுதான் சரியானது.

                    திருவள்ளுவர் சமணர் என்பது மெய்ப்பிக்கப்படாதது.சமணர் என்றும் இல்லையென்றும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

                    கலைஞர் குழப்பவாதி என முடிந்த முடிபோடு அணுக கூடாது.அவரது அரசியல் மீது ஆயிரம் கடும் திறனாய்வுகள் இருக்கலாம்.ஆனால் தமிழிலக்கியத்திற்கு அவர் ஆற்றியிருக்கும் பணி அளப்பரியது.நாம் இப்போது கலைஞர் என்கிற இலக்கியவாதியைத்தான் மேற்கோள் காட்டுகிறோம்.

                    அருள் பெற்றோர் சிலர் என்றும் பெறாதோர் பலர் என்றும் எப்படி முடிவு செய்கிறீர்கள்.உங்களுக்கும் கடவுளுக்கும் ஏதேனும் தகவல் தொடர்பு இருக்கிறதா.

                    கலைஞர் அரசியல் தலைவர்.அவரது அடியொற்றி நடந்தால் ஏதேனும் நாற்காலி கிடைக்கலாம்.இங்கு தலையானவனை சேர்வது என குறிப்பது ஆன்மீக விடுதலை வேண்டுவோர் அதற்குரிய தலைவனை சேர வேண்டும் என்பதைத்தான்.நித்தியானந்தாவையோ,பிரேமானந்தாவையோ போய் சேர்ந்தால் என்ன கிடைக்கும் என்று கேட்டு விடாதீர்கள்.

                    இறைவன் என்பதற்கு தலைவன் என்றும் பொருள் உண்டு என்பதுதான் நான் சொல்ல வருவது.அந்த பொருள் உண்டா இல்லையா.

                    • ///இந்தியாவில் தோன்றிய மதங்கள் மட்டுமே மறுபிறவியை நம்ப சொல்கிறது///

                      திருவள்ளுவர் இந்தியாவில்தானே பொறந்தார்? அய்ரோப்பாவில் இல்லையே?

                      ///விதி என்பது முற்பிறவி பயன் என்பது வெறும் கற்பனை அது தலையெழுத்து தலைவிதி என இப்பிறவி குறித்தது என்பதுதான் சரியானது///

                      என்ன ஒரு வாதம்! ஊழ் வினை என்பது தமிழில் என்ன பொருளில் வழங்கி வருதுன்னு சொன்னேனே அதுக்கு என்ன பதில்? நீங்க தானே ஊழ் வினை உறுத்துவந்து ஊட்டும் மேற்கோள் எல்லாம் காட்னீங்க. தெரியாம சொல்லீட்டிங்களா? உங்களுக்கு புடிச்சு இருந்தா சரியானது புடிக்கலைனா கற்பனையா? தலை எழுத்து தலை விதி எல்லாம் எந்த அடிப்படையில எழுத படுதுன்னு விளக்குங்க பாப்போம்.

                      ///திருவள்ளுவர் சமணர் என்பது மெய்ப்பிக்க படாதது///

                      இப்ப மட்டும் கலைஞர் சொல்கிறது உண்மை இல்லையா? அவரை சமணர் இல்லை என்று மறுப்பவர்கள் சைவ சித்தாந்திகள்தான்.சைவர் என்றுநிறுவுகிறார்கள்.இரு மதங்களும் மறுபிறப்பை ஏற்பவைதானே? அதுல என்ன பிரச்சனை.

                      ///கலைஞர் என் கிற இலக்கிய வாதியைத்தான் மேற்கோள் காட்டுகிறோம்///

                      கலைஞரின் இலக்கியங்கள் அரசியல் உள்னோக்கம் கொண்டது

                      ///உங்களும் கடவுளுக்கும் ஏதேனும் தகவல் தொடர்பு இருக்கிறதா///

                      இறைவனின் திருவடி அடைவது அரிது என்ற பொருளில் அப்படி சொன்னேன்.கூட்டம் கூட்டமா வர்ராங்கன்னு கடவுள் உங்களுக்கு போன் பன்னிட்டாரா?

                      ///ஆன்மீக விடுதலை வேண்டுவோர் அதற்குரிய தலைவனை சேர வேண்டும்///

                      ஆன்மீக விடுதலையா? கலைஞர் இதெல்லாம் சொல்ல மாட்டாரே.உங்க சொந்த சரக்கா? ஆன்மீக விடுதலைனா என்ன? அதற்குரிய தலைவன் மனிதனா,கடவுளா? அதற்கான தகுதி என்ன அப்பிடின்னு விளக்கம் கொடுத்துட்டு அப்பறம் அள்ளி விடுங்க.

                      ///இறைவன் என்பதற்கு தலைவன் என்றும் பொருள் உண்டு///

                      ஒரு வார்த்தைக்கு பல பொருள் இருக்கலாம்.வள்ளுவர் என்ன பொருளில் கையாண்டார் என்பதுதான் வாதம்.

                    • 1.///பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
                      இறைவன் அடிசேரா தார்

                      2.///வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர் தலைவயானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்///-மறுமொழி 110.1.1.1.2.1.2

                      3.///ஒரு கூட்டத்தின் தலைவன் இனக்குழுவின் தலைவன்,ஊர்த்தலைவன்,அரசன் இவர்களே இறைவன் என அறியப்பட்டான்///-மறுமொழி 110.1.1.1.2.1.2

                      4.///ஆன்மீக விடுதலை வேண்டுவோர் அதற்குரிய தலைவனை சேர வேண்டும்///-மறுமொழி 110.1.1.1.2.1.2.4.1

                      4ம் மே திப்புவுடைய மறுமொழிகளே.எனது கேள்வி என்னவெனில் முதலில் ஏன் ஆன்மீக விடுதலையையோ ஆன்மீக தலைவனையோ கூறவில்லை என்பதுதான்.சங்க காலத்திலேயே கடவுள் என்ற கருத்து இருந்தது என்று நிறுபித்தவுடன் அப்படியே பல்டி அடித்து ஆன்மீக விடுதலைங்கிறார்.இது செம பல்டி சாமி.

                    • வச்சா குடுமி சிரைச்சா மொட்டை எனபது போல் திருவள்ளுவர் சமணர் இல்லையென்றால் சைவர் என ஒரே போடாய் போடுவது சரியா.அவர் ஒரு சித்தர் என்ற கருத்தும் நிலவுகிறதே.

                      விதி என சாலமன் பாப்பையா பொருள் கொள்வதும் முர்பிறவியைத்தான் என்று சொன்னதற்குத்தான் மறுபிறவி பற்றிய கருத்து ஏதும் இல்லாத ஐரோப்பிய பகுதியிலும் விதி என்ற சொல் அவர்கள் மொழிகளில் எப்படி வந்தது என கேட்கிறேன்.நீங்களோ திருவள்ளுவர் இந்தியாவில்தானே பொறந்தார்? அய்ரோப்பாவில் இல்லையே? என்று விதண்டாவாதமாக கேட்கிறீர்கள்.

                      \\இறைவனின் திருவடி அடைவது அரிது என்ற பொருளில் அப்படி சொன்னேன்.கூட்டம் கூட்டமா வர்ராங்கன்னு கடவுள் உங்களுக்கு போன் பன்னிட்டாரா?//

                      அரிது என உங்களுக்கு தகவல் சொன்ன கடவுள் எனக்கு ஒன்றும் சொல்லவில்லையே என வருத்தமாக உள்ளது.

              • தாய் மொழியை விட அந்நிய மொழிதான் இவருக்கு சரளமாக வருமாம்.இப்படியும் பினாத்துற ஆளுங்க உலகத்துல இருக்காங்களா.

                • In context of typing. Ironically, I missed to type that 😉 .

                  Aprom Arabi mozhila irukaratha thamizhla correct-a mozhi peyarkkara alavukku thamizh mozhikku thaguthi illainu soldra kootam yaruppa?

                  • பொய்யும் புரட்டும் முடிவில்லாமல் தொடர்கின்றன.குரானும் நபி மொழி தொகுப்புகளும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு தாராளமாக கிடைக்கின்றன.

  99. Dear Hissfeet,

    [1]Anyway I am very much thankful to you for providing me lot of historical facts in our discussion.

    [2]I am writing an essay related to the Bible’s “Earth is flat” matter. It is possible just because of our discussion.

    sincerely,
    K.Senthilkumaran

    Note:

    [i]I am not conflicting with Christianity other than the conflicts matters between Bible and Science.

    [ii]I believe it[Bible] shows the decent way of life for billions of people around the world.

    [iii]Particularly speaking ,In Tamil Nadu Christian Educational Institutions have done a great service for the upliftment of economically and socially backward people.

    [iv] Only My nonacceptance in Bible is its conflicts with Science and punishing Great legends ,scientist in the history.

    [v] Let You live a Scientifically-Biblical life.

    [vi] Thanks lot for spending your valuable time and energy for this lengthy discussion . Buy Buy

  100. Tippu,

    //ஒரு நல்ல மன நல மருத்துவரை பாருங்கள்.//

    அல் மஜ்னூனுக்கு ஒரு நல்ல மன நல மருத்துவர் கிடைத்திருந்தால் எனக்கு இந்த நிலை வந்திருக்காது.

    //இந்திய துணைக்கண்ட பகுதியில் 800 ஆண்டுகளுக்கு மேலாக ***** எப்படி இடிபடாமல் தப்பின.//

    இந்த ஆணி ஏற்கனவே புடுங்கியாச்சி. புடுங்கியது நம்ம பங்களா காரர்தான். அதாங்க நம்ம M.A.Khan. Read his book ‘Islamic Jihad’, particularly the headings HOW SO MANY HINDUS SURVIVED IN INDIA? And WHY SO MANY PEOPLE IN INDIA ARE STILL HINDUS?
    The link: http://www.islam-watch.org/books/islamic-jihad-legacy-of-forced-conversion-imperialism-slavery.pdf

    Let me give you 2 quotes:

    ***although Muslims theoretically ruled India for over eleven centuries, they hardly ever managed to secure a complete hold over the entire country. During the first three centuries after Qasim’s foray into Sindh in 712, Muslim rule remained confined to a tiny Northwest area of vast India. The fact that a huge majority of the population in those parts are now Muslims proves that Muslim rulers could impose Islam more effectively in areas, where they had strong political power over a longer period of time.***

    ***Even during the period of most firmly established Mughal rule of Akbar and Jahangir, their influence across the country remained rather fragile. Jahangir wrote in his memoir, Tarikh-i-Salim Shahi, that ‘‘the number of turbulent and disaffected never seems to diminish; for what with the examples made during the reign of my father, and subsequently of my own, …there is scarcely a province in the empire in which, in one quarter or the other, some accursed miscreant will not spring up to unfurl the standard of rebellion; so that in Hindustan never has there existed a period of complete repose.’’***

    //ஆப்கானின் பாமியன் புத்தர் சிலைகள் ***** எப்படி இடிபடாமல் தப்பின.//

    -Those statues were in remote places away from human habitation and they were not known to fanatical Muhamadans till very late.
    -They cannot be destroyed as the temples and idols, with simple tools like crowbars, pickaxes, etc. They did not have dynamites till recently.

    //எகிப்தில் பிரமீடுகளும் அதன் சிலைகளும் எப்படி இடிபடாமல் தப்பின.//

    Egyptians are (and were) proud of their pre-muhamadic civilization and want to preserve these monuments, in spite of pressure from Arabs.
    They cannot be destroyed with simple tools like crowbars, pickaxes, etc. that the Arab hoards had. Even today they cannot be dynamited so easily.
    Moreover the pyramid (Tourism) is a main industry in Egypt.

    //எந்த ஆதாரமும் இன்றி பாபர் மசூதி ராமர் கோவிலை இடித்து விட்டு கட்டப்பட்டதாக கிளப்பி விட்டார்கள்//

    The Kaaba itself is a usurped temple made into a mosque. Muhamadans are known to have usurped many structures: Hagia Sofia in Istanbul is another very well-known case of cathedral turned into a mosque. If they don’t convert the structure, they destroy the structure to build new one over its place. Babri masjid may not be an exception. Otherwise people won’t have remembered.

    //முசுலிம் மன்னர்கள் நடத்திய ஆக்கிரமிப்பு போர்களுக்கும் அவர்களது போர்க்கால அட்டூழியங்களுக்கும் இன்றைய முசுலிம்களையும் இசுலாமிய மதத்தையும் பொறுப்பாக்கி **** தீர்ப்பு வழங்குவது சரியல்லவே//

    It is Muhamad himself who did all this and he is the best example to follow to you all Muhamadans. So the fault lies in him and his ideology.

    • \\இந்த ஆணி ஏற்கனவே புடுங்கியாச்சி. //

      அவர் எதையோ புடுங்கி போட ”இதோ பார் ஆணி புடுங்கியாச்சி” என்று வந்து நிற்கும் யுனியை பார்க்க பரிதாபமாக உள்ளது.இசுலாமியர்கள் பல நூற்றாண்டுகள் இந்திய துணைக்கண்டத்தில் ஆட்சி நடத்தியிருந்த போதும் அவர்கள் கோவில்களை இடிப்பதையே கொள்கையாக கொண்டிருந்தால் இத்தனை கோவில்கள் இடிபடாமல் தப்பியது எப்படி என்று கேட்டால் HOW SO MANY HINDUS SURVIVED IN INDIA? And WHY SO MANY PEOPLE IN INDIA ARE STILL HINDUS? என்று ”விளக்குகிறார்”.அறிவாளியே இதுவா கேள்வி.

      \\Those statues were in remote places away from human habitation and they were not known to fanatical Muhamadans till very late……………..Egyptians are (and were) proud of their pre-muhamadic civilization and want to preserve these monuments, in spite of pressure from Arabs…………. cannot be dynamited so easily.//

      அந்த சிலைகள் இருப்பது முகம்மதியர்களுக்கு தெரியாது என்று எப்படி கண்டுபிடித்தார் யுனி.பிரமீடை தகர்க்க வெடிகுண்டு தேவைப்படலாம்.வாசலில் இருக்கும் சிலைகளுக்கு கடப்பாரை போதுமே.வேண்டுமானால் அத்வானியிடம் கேட்டுப்பார்க்கலாம்.அவர்தான் பஜனை மட்டுமே கரசேவை அல்ல.கடப்பாரையாலும் மண்வெட்டியாலும் கூட கரசேவை செய்யலாம் என்று சொன்னவர்.

      பாபர் மசூதி கோவிலை இடித்துவிட்டு கட்டப்பட்டது என்பதற்கு வரலாற்று ஆதாரம் எதையுமே காட்ட முடியாமல் ”முசுலிம்னாலே அப்படித்தான்.அவுக நபி கோயிலை மசூதி ஆக்குனாரு.அதுனால பாபர் மசூதியும் கோவிலை இடித்துவிட்டு கட்டுனதுதான்”’என்று அடித்து விடுவதுதான் விவாதமா.உங்களை போன்ற மதவெறியர்களுக்கு பொய்யும் புரட்டும்தானெ ஆதாரம்.பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலேயே வாழும் சங் பரிவார் கும்பலுக்கே வரலாற்று ஆதாரம் எதையும் கொடுக்க முடியவில்லை.நீங்கள் என்ன செய்வீர்கள்.பாவம்.அதே பொய்களை தூக்கி திரிய வேண்டியதுதான்.

  101. Hello Hisfeet,

    [1] You are totally conflicting with your own comments. I mentioned in the summary of my comments 109! But u speak noting about it. Instead of this you start blaming me for your own mistakes! At least you should use the simple logic for eliminating all your errors in your dirty mind!

    [A]Bible tells the earth is FLAT AND CENTER!
    [B]Both Copernicus and Galileo proved that “spheres revolve about the sun” by mathematically and scientifically RESPECTIVELY.
    [C]What does it mean? Even a school children can say that
    the Bible words[FLAT AND CENTER] are disproved by both Copernicus and Galileo.

    [2] I am really wonder that How you can write programs or teaching java programming for this society.First you need to improve your IQ by improving your understanding level.

  102. For Hisfeet,

    Simple Logic:

    [A]Bible tells the earth is both FLAT AND CENTER!

    [B]Magellan traveled around the world even before Galileo was born. How can a man set forth a voyage that costs a lot and involves lot of risks if the common consensus was a flat earth [not common consensus but only Bible and Pops believe that Earth is flat]

    [C]Both Copernicus and Galileo proved that “spheres revolve about the sun” by mathematically and scientifically RESPECTIVELY.

    [D]What does it mean? Even a school children can say that
    the Bible words[FLAT AND CENTER] are disproved by Magellan,Copernicus, Galileo.More over Only “foolish Bible and foolish POPs” trust that the Earth is Flat! Now this discussion is the proof that Bible is going far away from christian people while it is conflicting the matters with science.

    [E] I am really wonder that How you can communicate with others in your life and in work place with out understanding the basic simple logic in your mind.First you need to improve your IQ by improving your understanding level.

    [f] Hi foolish Hisfeet, am I telling you that “Catholics believed in a flat Earth”? No. Only Bible and foolish pops believe this. That is why Magellan traveled around the world and proved that the earth is sphere by practically!

    Hisfeet://Conclusion: I still say that the problem between Galileo and Catholic Church was “Catholic Church believed that Earth is at center. Galileo and Copernicus believed and proved that Sun is at center”. But what you said is “Catholics believed in a flat Earth. Galileo and Copernicus said it is spherical”. I said “Magellan traveled around the world even before Galileo was born. How can a man set forth a voyage that costs a lot and involves lot of risks if the common consensus was a flat earth?” You again and again say Bible says this and Bible says that. Who cares? What you said is incorrect. I will say it again.//

    • //Hi foolish Hisfeet, am I telling you that “Catholics believed in a flat Earth”? No. Only Bible and foolish pops believe this. That is why Magellan traveled around the world and proved that the earth is sphere by practically!//

      unakellam arivunu ethaachum irukka? naa eppo Bible pathi pesunen? nee sonna thappana information-a correct pannen. athukku ipdi chinnapullathanama sandapidikiriye? vekkama illa?

  103. [1]Before you r blaming others custom [for example you are blaming sunnath], You should criticize your own religious mistakes.

    [2]Your liberal mind proves that Christians are not following Bible for scientific matters. That is why I am saying that Bible is going far away from christian people while it is conflicting the matters with science.More over Only “foolish Bible and foolish POPs” trust that the Earth is Flat!

    //All your arguments stem from two beliefs. 1. I believe in literal interpretation of Bible. 2. I am a Catholic or Pope supporter. I am neither. You have been arguing for waste till now. If you had any brain, you should have understood and accepted the error in your post and stopped. But you don’t.//

  104. Hello Hisfeet,

    [0]This discussion is based on the fact

    “திரு ஹிஸ்பீட் அவர்களுடன் நான் இங்கு செய்யும் விவாதத்தின் நோக்கம் அறிவியலுடன் மத நம்பிக்கைகளை இணைக்கக் கூடாது என்ற கண்னோட்டத்துடன்”

    So If Bible and pop are believing about “Earth is Flat and center” then what is wrong to refer Bible and pops here?

    [1]Bible and Christians can not be distinguished in the post. But now Christians are going away from Bible where bible is conflicting with Scientific matters. It is true.You[Liberal Christians] are the example for this.That is good.

    [2] Why do not we discuss about Bible when you have rights for discussing with ‘Sunnath’ and ‘Thirukural’?

    [3]More over Galileo is scientifically fighting against Bible content “EARTH FLAT AND CENTER” matter!.

    [4] With out this simple logic HOW CAN U WORK IN A S/W COMPANY OR TEACHING S/W TO SOCIETY?

    [5]Your “nice replay” shows that how far you are good in culture and good in Tamil language.

    [6]Hi brilliant Hisfeet, You do not know how to type JUST two lines of Tirukural in Tamil Text?

    “ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு
    எழுமையும் ஏமாப்பு உடைத்து”

    Hisfeet://unakellam arivunu ethaachum irukka? naa eppo Bible pathi pesunen? nee sonna thappana information-a correct pannen. athukku ipdi chinnapullathanama sandapidikiriye? vekkama illa?//

    • //Why do not we discuss about Bible when you have rights for discussing with ‘Sunnath’ and ‘Thirukural’? //

      I am open for the discussion. You have every right to criticize any book of any religion. But your criticism should be correct.

      //[3]More over Galileo is scientifically fighting against Bible content “EARTH FLAT AND CENTER” matter!. //

      Again? Galileo was fighting against “earth at center model”. But almost everyone in Galileo’s time believed in a spherical earth. Galileo was fighting with Catholic Church. Not with Bible. Catholics used some verses in Bible to trick Galileo. Also, the whole issue has other backgrounds, which if I discuss here, you won’t understand and repeat your blabbering.

      • [A]Bible tells the earth is FLAT AND CENTER!
        [B]Both Copernicus and Galileo proved that “spheres revolve about the sun” by mathematically and scientifically RESPECTIVELY.
        [C]What does it mean? Even a school children can say that
        the Bible words[FLAT AND CENTER] are disproved by both Copernicus and Galileo.

        But as a s/w eng or s/w trainer, You can not understand this simple logic! It shows your great understanding level!

        • Bible has some verses that suggests that Earth is flat. But was Galileo challenged with those verses or the verses that says “earth is not moving”? You have held an incorrect opinion. When I pointed out, you started to pull Bible in and prove that you are right.

          To be exact, the Catholic Church of Galileo’s time didn’t took those “flat earth” verses literally. But they took the “earth is unmoveable” verses literally.

          That too, Galileo challenged existing views held by top authorities of Science in universities of those days. As most universities were run by Catholic fathers, they used Bible as an excuse to settle vengeance with Galileo.

          //Biblical references Psalm 93:1, 96:10, and 1 Chronicles 16:30 include text stating that “the world is firmly established, it cannot be moved.” In the same manner, Psalm 104:5 says, “the Lord set the earth on its foundations; it can never be moved.” Further, Ecclesiastes 1:5 states that “And the sun rises and sets and returns to its place.”

          Galileo defended heliocentrism, and claimed it was not contrary to those Scripture passages. He took Augustine’s position on Scripture: not to take every passage literally, particularly when the scripture in question is a book of poetry and songs, not a book of instructions or history. He believed that the writers of the Scripture merely wrote from the perspective of the terrestrial world, from that vantage point that the sun does rise and set. Another way to put this is that the writers would have been writing from a phenomenological point of view, or style. So Galileo claimed that science did not contradict Scripture, as Scripture was discussing a different kind of “movement” of the earth, and not rotations.//

          From Wikipedia, with references,

          Brodrick (1965, c1964, p. 95) quoting Cardinal Bellarmine’s letter to Foscarini, dated 12 April 1615. Translated from Favaro (1902, 12:171–172) (Italian).

          Galileo Galilei – New Mexico Museum of Space History. Retrieved 26 August 2011.

          Bible verses used against Galileo by Catholic Church:

          The Lord reigneth, he is clothed with majesty; the Lord is clothed with strength, wherewith he hath girded himself: the world also is stablished, that it cannot be moved. -Psalm 93:1

          Say among the heathen that the Lord reigneth: the world also shall be established that it shall not be moved: he shall judge the people righteously. -Psalm 96:10

          Fear before him, all the earth: the world also shall be stable, that it be not moved. -1 Chronicles 16:30

          The sun also ariseth, and the sun goeth down, and hasteth to his place where he arose. -Ecclesiastes 1:5

          Who laid the foundations of the earth, that it should not be removed for ever. -Psalm 104:5

          Please find a Bible and check for yourself. All these verses are part of poems. They are purely poetic. There is no science involved when we say “sun rises” But we still use that. You can ask Nestle to rename their coffee to “Earth rotate”.

          I am not claiming Bible is correct. I too think that those who wrote Bible were not aware of the fact that the earth revolves the sun. But what Catholics did was just quoting some verses out of context to satisfy their greed. They wanted to silence Galileo. Reason, Galileo was putting forward a new theory that is not compatible with the Platonic model which was widely held. Whenever a new theory is put forward, it is challenged and people will try to silence it. Back then, those people had religion as tool. Now corporates have money and media as tools.

  105. Tippu,

    //இத்தனை கோவில்கள் இடிபடாமல் தப்பியது எப்படி என்று கேட்டால் HOW SO MANY HINDUS SURVIVED IN INDIA? And WHY SO MANY PEOPLE IN INDIA ARE STILL HINDUS? என்று ”விளக்குகிறார்”.அறிவாளியே இதுவா கேள்வி.//

    Some things are explicit while others are implicit. You want things explicit. Ok.

    Let me explain. If Hindus have survived, it also means they have rebuilt their temples. The temples of North India standing at present are mostly built after Muhamadan rule.

    I just give you 2 examples of rebuilding the temples from the same Khan’s book.

    ***He [Sultan Firoz] writes in his memoir, Futuhat-I Firoz Shahi: ‘(Hindus) now erected idol temples in the city and in the environs in opposition the Law of the Prophet which declares that such temples are not to be tolerated. Under Divine guidance, I destroyed these edifices and killed those leaders of infidelity who seduced others into error, and lower orders I subjected to stripes and chastisement, until this abuse was entirely abolished.’ ***

    *** In another instance, he [Sultan Firoz] received information that the Hindus had erected a new idol temple in the village of Kohana; they assembled in it and performed their religious rites. He records: ‘I ordered that the perverse conduct of the leaders of this wickedness should be publicly proclaimed and that they should be put to the death before the gate of the palace. I also ordered that the infidel books, the idols,and the vessels used in their worship… should all be publicly burned. The others were restrained by threats and punishments, as a warning to all men, that no zimmi (dhimmi) could follow such wicked practices in a Musulman country.’***

    //பாபர் மசூதி கோவிலை இடித்துவிட்டு கட்டப்பட்டது என்பதற்கு வரலாற்று ஆதாரம் எதையுமே காட்ட முடியாமல் ”முசுலிம்னாலே அப்படித்தான்.//

    See just 2 Muhamadan references from Khan’s book below for destroying temple and building mosque in its place.

    Persian historian Hasan Nizami, in his Taj-ul-Ma’sir:

    ***In Aibak’s expedition to Benares, ‘which was the centre of the country of Hind… here they destroyed nearly one thousand temples, and raised mosques on their foundations; and the knowledge of the law (Sharia) became promulgated, and the foundations of religion were established,’ adds Nizami.***

    ***On Aibak’s brilliant achievement in the expedition to Kalinjar in 1202, records Nizami: ‘The temples were
    converted into mosques… and the voices of summoners to prayer ascended to the highest heaven and the very
    name of idolatry was annihilated.’ ‘Fifty thousand came under the collar of slavery and the plain became
    black as pitch with Hindus,’ continues Nizami.***

    Now, Why Babri Masjid could be an exception?

    //பிரமீடை தகர்க்க வெடிகுண்டு தேவைப்படலாம்.வாசலில் இருக்கும் சிலைகளுக்கு கடப்பாரை போதுமே.//

    They atleast broke the nose of sphinx. As i already told, Egyptians are (and were) proud of their pre-muhamadic civilization and want to preserve these monuments, in spite of pressure from Arabs. They protect not only Pyramids but also many other pharaonic monuments. During the construction of Aswan dam, they even moved a temple to higher place. In addition, Egypt largely depends on Tourism.

  106. @Hisfeet,

    //I try to share the message of Jesus Christ with others//

    Are you telling them,
    You are a Deist by belief and a Christian by culture?,
    You don’t believe in Bible literally?,
    You don’t even believe that Bible is without errors?,
    etc?

  107. Univerbuddy,

    பாபர் மசூதியை இடித்ததைப் பற்றி உங்களின் கருத்தென்ன? இந்துக்களின் அந்தச் செயல் சரியானதா?

    • Viyasan,

      I have twe replies for your question. You can choose any one or both.

      1. Until human beings forego their ‘cultish’ madness and coalesce in an universal culture, these sort of destructions and violences are the norm.

      2. Till few years back I was clueless about Muhamadism, its jihad and expansion. Then i was very angry on Hindutva gang for having destroyed a building. Now since i have become aware of Muhamad’s ideology which has spawned a countless idol-breakers (sikundars) and thier destructions all over the world, i can understand the anger of idol worshippers and their symbolic act of repaying idol-breakers in kind.

  108. Conflicts in Hisfeet brain:

    Hisfeet://unakellam arivunu ethaachum irukka? naa eppo Bible pathi pesunen? nee sonna thappana information-a correct pannen. athukku ipdi chinnapullathanama sandapidikiriye? vekkama illa?

    Hisfeet://I am open for the discussion. You have every right to criticize any book of any religion. But your criticism should be correct.

    Hisfeet://Instead of providing any credible argument, you just brought in Bible to defeat me.

    Hisfeet//The argument is not about Bible. It is about, for which idea Galileo was persecuted. Is it for saying earth is sphere or is it for the idea of heliocentric theory?

    Hi foolish Hisfeet,

    [1]When we discuss about Galileo we can not avoid Bible and Pop’s. It is a very simple fact. But u can not understand this because of ur great understanding power!

    [2] you forget what u said in your previous comments. I Hope u type comments while drinking

  109. Hi Hisfeet,

    [1]It is not a matter whether u are liberal christian or not but the matter is How correctly u r criticizing the Bible and pops [while they are interfering with scientific matters]!

    [2] When you criticize Sunnath and Kural ,in the same manner you should criticize Foolish Bible WITH YOUR OWN WORDS!

    UB//@Hisfeet,

    //I try to share the message of Jesus Christ with others//

    Are you telling them,
    You are a Deist by belief and a Christian by culture?,
    You don’t believe in Bible literally?,
    You don’t even believe that Bible is without errors?,
    etc?
    Hisfeet//yes 🙂

  110. @திப்பு

    ///அவர் ஒரு சித்தர் என்ற கருத்தும் நிலவுகிறதே///

    கருத்து நிலவுவது மட்டும் இல்லை அவர் பெயரில் சித்தர் இலக்கியங்களும் உள்ளது.உங்களுக்காக ஒரு மேற்கோள் பாடல் மட்டும்.

    “முதலிருந்த ஊழ்வினையை முப்பாழைச் சுட்டுப்
    பதறா மதிபாடு பட்டேன் – முதலிருந்த
    நல்வினையுந் தீவினையு நாடாம லும்பிறந்து
    வல்வினையிற் போக்கி விட்டேன் வாழ்வு” -[திருவள்ளுவர்ஞானம்-14]

    மேலே உள்ள பாட்ல முன்பிருந்த ஊழ்வினை என்பது எதை குறிக்கும்னு முன்னாடியே சொல்லியாச்சு.நானா எந்த மேற்கோளும் காட்றது இல்லைங்க.நீங்க சொல்றதுக்கு மட்டும்தான்.

    ///விதி என சாலமன் பாப்பையா பொருள் கொள்வதும்///

    இந்தியாவில் பிறந்த பாப்பையா,இந்தியாவில் உள்ள திருக்குறளுக்கு விதி என பொருள் கொள்ளும் போது இந்தியாவில் விதி என்பது எந்த பொருளில் வழங்கி வருது என்றுதானே பாக்கனும்.நீங்க ஏன் ஐரோப்பா போனீங்க? நான் கேட்டது அத தானே.இதில் விதண்டாவாதம் செய்வது நீங்க தானே.

    ///அரிது என உங்களுக்கு தகவல் சொன்ன கடவுள்///

    தகவல் சொன்னது கடவுள் இல்லை.கடவுளின் அடியார்கள்.தகவல் சாதனம் போன் இல்லை.தங்கள் இலக்கியங்கள் மூலம்.எனவே வருத்தத்தை கைவிடுங்கள்.

    • இந்தியாவில் பிறந்த மறுபிறவியில் நம்பிக்கை இல்லாத இந்துக்கள் அல்லாத பிற மதத்தவரும் விதியை நம்புகிறார்கள்.சாலமன் பாப்பையா கிருத்துவர்.அவர் இந்தியாவில் பிறந்து விட்ட காரணத்தால் விதி என்ற சொல்லால் முற்பிறவி பயனை குறிக்கிறார் என்று சொல்வது எப்படி சரியாகும்.

      \\தகவல் சாதனம் போன் இல்லை.தங்கள் இலக்கியங்கள் மூலம்.//

      அந்த இலக்கியங்களை குறிப்பிட்டு விளக்க முடியுமா.

      • ///சாலமன் பாப்பையா கிருத்துவர்///

        சாலமன் பாப்பையா எந்த மதத்தை சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கட்டும்,வள்ளுவர் எந்த மதத்தை சேர்ந்தவர் அதை சொல்லுங்கள்?

        ///அந்த இலக்கியங்களை குறிப்பிட்டு விளக்க முடியுமா///

        அது நிறையா உள்ளது.இது வரை விளக்கம் குடுத்த இலக்கியத்துக்கெல்லாம் ஏன் பதில் சொல்லலை? பதில் இல்லையா இல்ல உங்களுக்கு தெரியாதா?

        வாதம் என்ன? திருக்குறள் மறுபிறப்பை நம்புதா இல்லையா என்பது தானே? ஊழ்வினைக்கு ஒரு அதிகாரமே கொடுத்து இருக்கார்.ஊழ்வினைக்கு தமிழில் என்ன பொருள் என்று சிலப்பதிகாரத்தின் மேற்கோளோடு விளக்கி இருக்கேன்.மேற்கோளே நீங்க கொடுத்ததுதான்.எதையாவாது உங்களால் ஆதாரத்துடன் மறுக்க முடிந்ததா?

        திப்பு வாதம் நீர்த்து போனால் விட்டுவிட்டுபோங்க.நான் யார் கிட்டையும் சொல்ல.நீங்க வாதம் பன்றத பாக்க எனக்கே பாவமா இருக்கு.

        • முரண்டு பிடிக்கும் விதண்டாவாதம் உங்களுடையது.

          \\ஊழ் வினை என்பது தமிழில் என்ன பொருளில் வழங்கி வருதுன்னு சொன்னேனே அதுக்கு என்ன பதில்?//
          இதைத்தானே நானும் சொல்கிறேன்.நீங்கள் சாலமன் பாப்பையா கலைஞர் ஆகியோரை விட மேம்பட்ட தமிழறிஞராக உங்களை கருதிக் கொள்ளலாம்.அது உங்கள் உரிமை.அந்த கனவை கலைக்க எனக்கு விருப்பமில்லை.ஆனால் அவ்வாறே மற்றவர்களும் கருத வேண்டும் என எதிர்பார்க்க உங்களுக்கு உரிமையில்லை.

          பரிமேலழகரும் மணக்குடவரும் ஊழ் என்பதற்கு பொருளாக ஊழ் என்ற சொல்லையே பயன்படுத்தி விளக்கம் தரும்போது சாலமன் பாப்பையா, கலைஞர் இருவரும் முறையே விதி,இயற்கை நிலை என்று பொருள் தருகிறார்கள்.முன்னது முற்பிறவி பயனை குறிக்கும்.மறுக்கவில்லை.ஆனால் விதி என்பதும் முற்பிறவி பயன்தான் என தடாலடியாக நீங்கள் அடித்து விடுவதைத்தான் மறுக்கிறேன்.அதே பொருள்தான் எனும்போது சாலமன் பாப்பையாவும் ஊழ் என்ற சொல்லையே பயன்படுத்தி விட்டு போயிருக்கலாமே.வலிந்து விதியை கொண்டுவருவது வேறொரு பொருளில்தான் என்பதை எனக்கு இருப்பது போல் சாதாரண தமிழறிவு இருந்தால் புரிந்து கொள்ளலாம்.உங்கள் மேதமை அதை புரிந்து கொள்ள விடாமல் தடுக்கிறது போலும்.

          வரலாற்று ஆதாரங்களில் மொழிகளின் சொற்களும் முதன்மையான இடத்தை வகிக்கின்றன.அந்த வகையில்தான் ஐரோப்பிய மொழிகளில் விதி என்ற சொல்லுக்கு உள்ள பொருள் பற்றி சொன்னேன்.நீங்களோ இந்தியாவில் பிறந்தவர் அனைவருக்கும் விதி என்றால் முற்பிறவி பயன்தான் என ஒரே போடாக போட்டீர்கள்.\\இந்தியாவில் பிறந்த பாப்பையா,இந்தியாவில் உள்ள திருக்குறளுக்கு விதி என பொருள் கொள்ளும் போது இந்தியாவில் விதி என்பது எந்த பொருளில் வழங்கி வருது என்றுதானே பாக்கனும்.//

          இந்தியாவில் முற்பிறவியை நம்பாத பிற மதத்தவரும் உள்ளனர் அதில் ஒருவர்தான் சாலமன் பாப்பையா என்று சுட்டிக்காட்டினாலும் \\சாலமன் பாப்பையா எந்த மதத்தை சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கட்டும்,வள்ளுவர் எந்த மதத்தை சேர்ந்தவர் அதை சொல்லுங்கள்?// என்று கேட்கிறீர்கள்.அதாவது யாராக இருந்தாலும் அவர்கள் எந்த பொருளில் சொன்னாலும் விதி என்றாலே அது முற்பிறவி பயன்தான் என விதண்டாவாதம் பேசுகிறீர்கள்.மாற்றுக் கருத்து கொள்வதற்கு மற்றவர்களுக்கு உரிமை உண்டு என்ற சனநாயக பண்பை ஏற்க பழகிக் கொள்ளுங்கள்.பிற மதத்தவருக்கு விதி எனபது நமது வாழ்க்கையில் என்னென்ன நடக்கும் என கடவுள் விதித்தது அதாவது வகுத்தது.அவ்வளவுதான்.

          \\கலைஞரின் இலக்கியங்கள் அரசியல் உள்னோக்கம் கொண்டது//

          அதனால் என்ன.சொல்லப்படும் ஒவ்வொரு சொல்லின் பின்னாலும் அதை சொல்பவரின் வர்க்க நலன் ஒளிந்துள்ளது என்றார் மார்க்சு.நீங்கள் மறுபிறவியை நம்புவதால் வள்ளுவரும் அப்படித்தான் என வாதிடுவது போல கலைஞரும் சாலமன் பாப்பையாவும் தங்கள் நம்பிக்கைக்கு ஏற்ப பொருள் கொள்வதில் என்ன தவறு.அப்படி பொருள் கொள்ள தக்கவாறு வள்ளுவனின் சொற்களுக்கு வேறு வேறு பொருட்கள் உண்டு என்று சொன்னால் அதெல்லாம் முடியாது நான் சொல்லும் பொருள்தான் செல்லும் என பிடிவாதம் பிடிப்பது என்ன வகை விவாதம்.

          \\இப்ப மட்டும் கலைஞர் சொல்கிறது உண்மை இல்லையா? //

          கலைஞர் வள்ளுவரை சமணர் என்று சொல்லியிருக்கிறாரா என்று எனக்கு தெரியாது.அப்படியே சொல்லியிருந்தாலும் அதுதான் சரி என கலைஞரை மேற்கோள் காட்டுவோர் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா.

          \\சாலமன் பாப்பையா எந்த மதத்தை சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கட்டும்,வள்ளுவர் எந்த மதத்தை சேர்ந்தவர் அதை சொல்லுங்கள்?//

          வள்ளுவர் எந்த மதத்தை சேர்ந்தவர் எனபது ஐயத்திற்கு இடமின்றி நிறுவப்படவில்லை என்பதுதான் எனது கருத்து.ஆனால் சாலமன் பாப்பையா எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் மீது மறுபிறவி,முற்பிறவி நம்பிக்கையையை ”விதி ” யால் ஏற்றுவேன் என நீங்கள் அடம் பிடிப்பதுதான் சகிக்கவில்லை.

          \\இது வரை விளக்கம் குடுத்த இலக்கியத்துக்கெல்லாம் ஏன் பதில் சொல்லலை//

          ஒரே விளக்கம்தான் திரும்ப திரும்ப சொல்கிறீர்கள்.ஊழ் என்றால் அது முற்பிறவி பயன் என்கிறீர்கள்.அதைத்தான் திரும்ப திரும்ப கலைஞர்,சாலமன் பாப்பையா துணை கொண்டு மறுக்கிறேன்.

          \\அது நிறையா உள்ளது//

          கோச்சுக்கிராம கொஞ்சத்தையாவது எடுத்து விடுங்களேன்.நாங்களும் தெரிஞ்சுக்குவோம்ல.ஒரு வேளை சரக்கு இருப்பு இல்லையோ.

          கடைசியாக வெளிப்படையாக ஒரு உண்மையை சொல்லி விடுகிறேன்.ராமன் சொல்லியது போல நாம் இருவருமே அவரவர் விருப்பத்தை,நம்பிக்கையை வள்ளுவர் மீது ஏற்றி சொல்லிக் கொண்டிருக்கிறோம்.உரையாசிரியர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்.அதனால்தான் ஊழ் என்பது முற்பிறவி பயனாக,விதியாக,இயற்கை நிலையாக அவரவர் விருப்பப்படி மாறி மாறி காட்சியளிக்கிறது.இதில் நான் சொல்வதே சரி என நீங்கள் மாபெரும் தமிழறிஞர் வேடம் கட்டி ஆடுவதை பார்க்கும்போது உங்கள் மீது இரக்கப்பட தோன்றுகிறது.

  111. ///முரண்டு பிடிக்கும் விதண்டாவாதம் உங்களுடையது///

    பொது கருத்துக்கு எதிராக எந்த இலக்கிய தரவுகளும் இன்றி விதண்டாவாதம் செய்பவர்நீங்கள் தான்.

    ///சாலமன் பாப்பையா கலைஞர் ஆகியோரைவிட மேம்பட்ட தமிழறிஞராக உங்களை கருதி கொள்ளலாம்///

    வாதம் தீர்ந்து போனால் இப்படிதான் உளருவதா? மறுபிறப்பு என்பது எனது சொந்த கருத்தா? பரிமேலழகர்,மணக்குடவர் தொடங்கி நூற்றுக்கணக்கான தமிழ் அறிஞர்களின் கருத்து அது என்று தெரியாதா? அவர்களைவிட நீங்கள் பெரிய தமிழறிஞரா என கேக்கலாமா?

    ஒரு இலக்கியம் குறித்த விவாதத்தில் மற்ற இலக்கியங்களில் இருந்து மேற்கோள்காட்டினால் உடனே தமிழறிஞராக கனவுகான்பதாக கதைகட்டுவதா?

    தருமர் மணக்குடவர் தாமத்தார் நச்சர்
    பரிதி பரிமேலழகர்-திருமலையார்
    மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர் நூற்கு
    எல்லையுரை செய்தார் இவர்

    இந்த வெண்பா பழமையான உரையாசிரியரை பட்டியல் இடுகிறது.இவற்றுள் பரிமேலழகர்,மனக்குடவர்,பரிதியார்,காலிங்கர் ஆகியோரின் உரையே தற்போது கிடைக்கிறது.நால்வருமே வள்ளுவர் மறுபிறப்பை சொல்வதாக கூறகிறார்கள்.இந்த தமிழ் மாமேதைகளைவிட நீங்கள் சிறந்த தமிழ் அறிஞரா?

    • ஊழ் அதிகாரத்தில்

      ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
      சூழினுந் தான்முந் துறும்.

      என்று சொன்ன வள்ளுவர்தான் பிறிதோர் இடத்தில்.

      ஆள்வினையுடைமை என்னும் அதிகாரத்தில்,

      ‘ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
      தாழாது உஞற்று பவர்.’

      என்று குறிப்பிடுகிறார்.அப்படியானால் ஒன்றுக்கொன்று முரண்படும் இந்த குறள்களை எப்படி விளங்கி கொள்வது.இங்குதான் முத்தமிழ் வித்தகர் கலைஞர் கை கொடுக்கிறார்.எழுதப்பட்ட விதி,இறைவன் வகுத்த முன் பின் பிறவிப்பயன் என்று கடும் பொருளை ஊழுக்கு கொடுத்தால் அதை வெல்வது எப்படி சாத்தியமாகும்.அண்ட சராசரங்களை படைத்த வலிமையானவன் வகுத்ததை சாதாரண எளிய மனிதன் எப்படி வெல்ல முடியும்.ஆகவே ஊழ் எனபது முற்பிறவி பயன் என்று விளங்கி கொள்வது அறிவுக்கு பொருத்தமாக இல்லை.அதையே கலைஞர் சொல்லியவாறு இயற்கை நிலை என பொருள் கொண்டு பாருங்கள்.ஊழ் முந்துறுவதும் ஊழை உப்பக்கம் காண செய்வதும் ஒன்றுக்கொன்று முரண்படா.

      i

      • ஊழ்வினைதான் இறுதியானது என்று கர்மசித்தாந்தம் சொல்கிறாதா? ஊழை உப்பக்கம் காண்பவர் யார்? தவத்தோர்தானே.

        வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
        ஈண்டு முயலப் படும்–[குறள்-265]

        கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
        ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்–[குறள்-269]

        முதல் குறளில் வேண்டிய வேண்டியாங் கெய்தல் ஊழ்வினையால் பீடிக்க பட்டவர்க்கு இயலாது ஆனால் தவம் புரிவார்க்கு இயலும்.

        இரண்டாம் குறளில் தவம் செய்வார் எமனையும் வெல்லலாம் என் கிறார்.ஊழலை உப்பக்கம் காண்பது எம்மாத்திரம்?

        எனவே வள்ளுவத்தில் எந்த முரன்பாடும் இல்லை.ஊழ் முந்துறுவது சாதாரண மக்களுக்கும் ஊழை உப்பக்கம் காண்பவர் தவத்தோரும் என்பது விளங்கும்.உங்கள் பேதமையால் எங்கள் பொய்யில் புலவனிலேயே முரண்பாடு காண்கிறீர்கள்.

        • ஊழ் என்பதற்கு முற்பிறவி பயன் என பொருள் கொண்டால்

          ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
          சூழினுந் தான்முந் துறும்.

          ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
          தாழாது உஞற்று பவர்.’

          ஆகிய இந்த இரண்டு குறள்களும் முரண்படுவதாக சொல்லி வாதிட்டபோது முதலில் உங்கள் மறுப்பு.

          \\ வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
          ஈண்டு முயலப் படும்–[குறள்-265]

          கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
          ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்–[குறள்-269]

          முதல் குறளில் வேண்டிய வேண்டியாங் கெய்தல் ஊழ்வினையால் பீடிக்க பட்டவர்க்கு இயலாது ஆனால் தவம் புரிவார்க்கு இயலும்.

          இரண்டாம் குறளில் தவம் செய்வார் எமனையும் வெல்லலாம் என் கிறார்.ஊழலை உப்பக்கம் காண்பது எம்மாத்திரம்?//

          இதற்கு மறுப்பாக விதியை மாற்ற முயற்சியே போதும் என்பதுதான் வள்ளுவர் சொல்வதின் பொருள் என எடுத்துக்காட்டியவுடன் அந்த வாழைப்பழம்தான் இது என்ற கதையாக அந்த முயற்சிதான் தவம் என்கிறீர்கள்.

          நீங்கள் சொல்லும் இரண்டு குறள்களுமே தவம் என்ற அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளன.அந்த அதிகாரத்தில் உள்ள பத்து குறள்களிலும் விடா முயற்சி பற்றி வள்ளுவர் எதுவுமே கூறவில்லை.அதே போல் முயற்சி பற்றி பேசும் ஆள்வினையுடைமை அதிகாரத்தில் தவம் எனபது பற்றி வள்ளுவர் எதுவுமே கூறவில்லை..தவம் என்பது விடா முயற்சிதான் என நீங்கள் சொல்வது அப்பட்டமான உருட்டு புரட்டு.இப்படி இட்டுக்கட்டியேனும் வாதத்தில் வெல்ல வேண்டும் என்ற உங்கள் எண்ணம் மிகவும் மலிவானது.

          வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர்தம்
          உள்ளத் தனையது உயர்வு

          நினைவில் வையுங்கள்.

          தவம் என்பது என்னவென்று வள்ளுவரே சொல்கிறார்.கேளுங்கள்.

          உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
          அற்றே தவத்திற் குரு.
          இதுதானய்யா தவம்.ஒருமுறை இந்த குறளை சிதம்பரம் ஆறுமுக சாமிக்கு பொருத்தி மிக அழகாக பேசினார் பெரியார்தாசன்.அது இப்போது நினைத்தாலும் என் காதில் ஒலிக்கிறது.

          \\ஒரு சமணர் அற இலக்கியத்தை பாடினார்.அது சமணர்களின் மத நூல் இல்லை.அதில் உள்ள அறம் குறித்த கருத்துக்கள் தமிழர்களின் அறம் குறித்த சிந்தனைதான்.//

          இப்படி சொல்லும் உங்கள் நாவுதான் சமண கொள்கையின்படி மறுபிறவியை பாடினார் என்கிறீர்கள். இது உங்களுக்கே முரணாக தெரியவில்லையா

          • மட்டையடி வாதம் என்பதற்கு உங்களுடைய இந்த வாதம்தான் வகை மாதிரி.

            ஊழ் என்பதற்கு முற்பிறவி பயன் என பொருள் கொண்டால்

            ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
            சூழினுந் தான்முந் துறும்.

            ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
            தாழாது உஞற்று பவர்.’

            ஆகிய இந்த இரண்டு குறள்களும் முரண்படுவதாக சொல்லி நான் வாதிட்டபோது

            ஊழை உப்பக்கம் காண செய்ய தவத்தாரால் மட்டுமே முடியும்.ஊழ் வினையால் பீடிக்கப்பட்டவரால் முடியாது, .ஊழ் முந்துறுவது சாதாரண மக்களுக்கும் ஊழை உப்பக்கம் காண்பவர் தவத்தோரும் என்பது விளங்கும் என்று நீங்கள் சொன்னீர்கள்.

            அதை மறுத்து திருவள்ளுவர் அப்படி சொல்லவில்லை.விடா முயற்சியால் யார் வேண்டுமானாலும் ஊழை உப்பக்கம் காண செய்ய முடியும் என்றுதான் சொல்கிறார் என்பதை குறள்களை மேற்கோள் காட்டியே நான் சொன்னேன்.

            அதற்கு மறுமொழியாக \\ஒரே குறிக்கோளுடன் இடைவிடாத முயற்சியைதான் தவம் என சொல்கிறோம் //என்று எந்த ஆதாரமும் இன்றி மொட்டையாக அடித்து விட்டீர்கள்.இதுதான் மட்டையடி வாதம்.

            அதை மறுத்து நான் சொன்னது

            \\நீங்கள் சொல்லும் இரண்டு குறள்களுமே தவம் என்ற அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளன.அந்த அதிகாரத்தில் உள்ள பத்து குறள்களிலும் விடா முயற்சி பற்றி வள்ளுவர் எதுவுமே கூறவில்லை.அதே போல் முயற்சி பற்றி பேசும் ஆள்வினையுடைமை அதிகாரத்தில் தவம் எனபது பற்றி வள்ளுவர் எதுவுமே கூறவில்லை..தவம் என்பது விடா முயற்சிதான் என நீங்கள் சொல்வது அப்பட்டமான உருட்டு புரட்டு.//

            இதற்கு ஒரு மறுப்பும் சொல்ல முடியாமல் வாயடைத்து போய் இருக்கிறீர்கள்.

            • இதுதான்நான் வாய் அடைத்து போன கேள்வியா?

              ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றி
              தாழாது உஞற்று பவர்.

              இது தவத்தோற்கு உரியது என்றேன்.இதில் என்ன தவறு?.தவம் என்ற அதிகாரத்தை வள்ளவர்தானே இயற்றினார்? நான் அதில் இருந்துதானே மேற்கோள்காட்டினேன்.திப்பு என்ன சொல்கிறார் தவம் என்ற அதிகாரத்தில் வினையை பற்றி பேசவில்லை என்று.இந்த குறளை படியுங்கள்.

              தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
              அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு

              இது தவம் என்ற அதிகாரத்தில் தானே உள்ளாது.வள்ளுவர் என்ன சொல்கிறார் தவம் செய்பவர்களே தன் வினையை,செயலை முழுமையாக செய்யப்படும்.மற்றவர்கள் ஆசை வய பட்டவர்கள் என்பதால் தன் வினையை முழுமையாக செய்யமுடியாது என்பதுதானே.

              தவம் செய்யாத மற்றவர்கள் தன் கடமையையே முழுவதுமாக செய்ய முடியாத போது ஊழை எப்படி உப்பக்கம் காண்பார்கள்.
              உங்கள் மொத்த வாதமே மட்டை அடி வாதமாக இருக்கையில் எனக்கு எடுத்துகாட்டு வேறயா?

              • ஒருவழியாக அடைத்துக் கிடந்த வாயை திறந்திருக்கிறார்.தேவரர்.ஆனாலும் மேற்கோள் காட்டும் குறளுக்கு தவறாக பொருள் சொல்கிறார்.

                தவம் செய்பவர் மட்டுமே தன் வேலையை முழுமையாக செய்ய முடியும் மற்றவர் எல்லாம் ஒழுங்காக செய்ய மாட்டார்கள் என்று இந்த குறளில் வள்ளுவர் கூறுகிறார் என்கிறார்.

                முதலில் தளரா முயற்சியே தவம் என போட்ட மட்டையடி செல்லுபடியாகவில்லை என்று தவம் செய்பவர் தவிர வேறு எவரும் உருப்பட மாட்டார்கள்.தங்கள் வேலையை உருப்படியாக செய்ய மாட்டார்கள் என்று இந்த குறளை கொண்டு வருகிறார் தேவர். அப்படியானால் தவம் செய்பவர் தவிர வேறு எவரும் இந்த உலகில் வாழ முடியாது போய் விடும் என்று வள்ளுவர் சொல்கிறார் என்பதுதான் தேவரரின் அருஞ்சொற்பொருள். ஆமாம்.ஒரு வேலையும் ஒழுங்காக செய்யாதவன் இந்த உலகில் எப்படி வாழ முடியும். என்ன ஒரு கேலிக்கூத்து.

                தவம் செய்பவர்கள் தங்கள் வேலையை சரியாக செய்வார்கள்.தவம் செய்யாத மற்றவர்கள் ஆசையால் அலைக்கழிக்கப்பட்டு தவறு செய்வார்கள் என்பதுதான் சரியான பொருள்.

                இந்த பொருளின்படி பார்த்தாலும் மற்றவர்கள் வாழ்வது கேள்விக்குறி ஆகிறதே என்ற கேள்வி எழலாம்.அதற்குத்தான் முதலிலேயே வள்ளுவர் சொல்லி விட்டார்.விடாது முயற்சி செய் வெற்றி நிச்சயம் என்கிறார்.அப்படியானால் நாம் என்ன விளங்கி கொள்ள வேண்டும்.தவம் செய்யாதவர்கள் தவறு செய்தாலும் திருத்திக் கொண்டு விடாது முயற்சி செய்து வெற்றி காண வேண்டும் என்பதுதான்.

                வள்ளுவர் இந்த குறளில் சொல்வது,

                ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றி
                தாழாது உஞற்று பவர்.

                அதாவது,மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர் ஊழையும் வெற்றி கொள்வர் என்கிறார்.முயற்சி பற்றி பேசும் இந்த குறளில் தளரா முயற்சியால் வெற்றி கிடைக்கும் என ஊக்குவிக்கும் குறளில்,தவத்தை கொண்டு வந்து சொருகுவதற்கு எந்த முகாந்திரமுமில்லை.

                எவ்வளவு பாதகமான சூழ்நிலைகள் இருந்தாலும் விடாது முயற்சி செய்.உனக்கு வாழ்வில் வெற்றி நிச்சயம் என்று ஊக்கமூட்டும் வள்ளுவர் தவம் செய்யாவிட்டால் நீ உருப்பட மாட்டாய் என்றெல்லாம் பீதியூட்டவில்லை.யாரும் பயப்பட வேண்டாம்.எப்படியாவது விவாதத்தில் நாம் வென்றோம் என தன் மன அகந்தை விகாரத்தை [ego] திருப்திபடுத்த தேவரர் கையாளும் மலிவான உத்தி இது.

                • அய்யா,முழுமையாக என்பதற்கும்,சரியாக என்பதற்கும் என்ன வேறுபாடு? முழுமை இல்லாத என்பதற்கும் தவறாக என்பதற்கும் என்ன வேறுபாடு? கொஞ்சம் சொல்லுங்களேன்.

                  நீங்கள் தவம் என்ற அதிகாரத்தில் வினையை பற்றி எதுவுமே இல்லை என்று கூறிவிட்டு இப்ப அப்படி இப்படி என்று சப்பைகட்டு கட்டுவது ஏன்?

                  • \\நீங்கள் தவம் என்ற அதிகாரத்தில் வினையை பற்றி எதுவுமே இல்லை என்று கூறிவிட்டு//

                    முயற்சியே தவம் என்று நீங்கள் அடித்து விட்டதற்கு மறுப்பாக தவம் அதிகாரத்தில் முயற்சி பற்றி எதுவுமே இல்லை என்றுதான் சொல்லியிருக்கிறேன்.

                  • \\முழுமையாக என்பதற்கும்,சரியாக என்பதற்கும் என்ன வேறுபாடு? முழுமை இல்லாத என்பதற்கும் தவறாக என்பதற்கும் என்ன வேறுபாடு? //

                    கருத்துக்களை மறுக்க முடியாமல் வெறுமனே சொற்களை பிடித்துக் கொண்டு வித்தை காட்டுகிறார்.

                    தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
                    அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு

                    இதற்கு தேவரர் சொல்லும் பொருள்

                    \\ தவம் செய்பவர்களே தன் வினையை,செயலை முழுமையாக செய்யப்படும்.மற்றவர்கள் ஆசை வய பட்டவர்கள் என்பதால் தன் வினையை முழுமையாக செய்யமுடியாது //

                    அவர் ஏற்றிப் போற்றும் மணக்குடவர் சொல்லும் உரை

                    தங்கருமஞ் செய்வார் தவம் செய்வார்; அஃதல்லாதன செய்வாரெல்லாம் ஆசையிலே அகப்பட்டுப் பயனில்லாதன செய்கின்றார்

                    ஆசை வய பட்டவர்கள் என்பதால் தன் வினையை முழுமையாக செய்யமுடியாது என்று அவர் சொல்லவில்லை.ஆசையிலே அகப்பட்டுப் பயனில்லாதன செய்கின்றார் என்றுதான் உரை சொல்கிறார்.இதற்கு என்ன பொருள்.தன் வேலையை விடுத்து ஆசையின் காரணமாக பயனற்ற வேறு வேலைகளை செய்கிறார் என்பதுதானே.இதற்கு முழுமையாக ,முழுமை இல்லாத என பொருள் சொல்வது திரித்து சொல்வது ஆகாதா.

                    இந்த குறளில் வள்ளுவர் வலியுறுத்துவது தவத்தின் மேன்மையை, அவ்வளவுதான்.இதற்கும் வினையுடமை அதிகாரத்தில் விடாமல் முயற்சி செய்தால் எவ்வளவு பாதகமான சூழ்நிலைகள் இருந்தாலும் வெற்றி பெறலாம் என வள்ளுவர் சொல்வதற்கும் முடிச்சு போடுவது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாகும்.

                    உண்மையில் பொய்யான வெற்றியையாவது ஈட்டி விட வேண்டும் என்று வக்கிர வெறி கொண்ட ஒரு மன நோயாளியுடன் விவாதிப்பதற்காக நான்தான் வெட்கப்பட வேண்டும்.

    • இதுக்கு மட்டும் கடைசி வரைக்கும் பதில் சொல்ல மாட்டீர்களோ.

      \\அது நிறையா உள்ளது//

      கோச்சுக்கிராம கொஞ்சத்தையாவது எடுத்து விடுங்களேன்.நாங்களும் தெரிஞ்சுக்குவோம்ல.ஒரு வேளை சரக்கு இருப்பு இல்லையோ.

      • தமிழனிடம் சரக்குக்கு ஏது பஞ்சம்?

        தேரப்பா தெருத்தெருவே புலம்புவார்கள் தெய்வநிலை
        ஒருவருமே காணார் காணார்
        ஆரப்பா நிலைநிற்கப் போறா ரையோ! ஆச்சரியம்
        கோடியிலே யொருவன் தானே.[அகத்தியர்]

        கோடியில் ஒருவர்தான் பிறவியை கடக்க முடியுமாம்.

        ஓயாக் கவலையினால் உள்ளுடைந்து வாடாமல்
        மாயாப் பிறவி மயக்கு அறுப்பது எக்காலம்[பத்திரகிரியார்]

        பிறவி அறுப்பது அரிதாயிற்றே எக்காலம் எனக்கு கூடுமோ என் ஏங்குகிறார்.

        ஓடி ஒடி ஒடி ஒடி உட் கலந்த சோதியை
        நாடி நாடி நாடி நாடி நாட் களும் கழிந்து போய்
        வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
        கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே

        இறைவனின் திருவடியை அடையாமல் மாண்டவர்கள் கணக்கில்லா கோடியாம்.

        அத்தனை முப்பத்து முக்கோடி தேவர்க் கதிபதியை
        நித்தனை அம்மை சிவகாம சுந்தரி நேசனை எம்
        கத்தனைப் பொன்னம்பலத் தாடும் ஐயனைக் காணக்கண்கள்
        எத்தனை கோடி யுகமோ தவஞ்செய் திருக்கின்றனவே[பட்டினத்தார்]

        யுக யுகமாய் தவம் செய்து இறைவனை காண வேண்டுமாம்.

        தொல்லைப் பிறவியின் தொந்தமுற்று அறவே
        சோம்பலற் றுத்தவஞ் செய்யாக்கால்
        எல்லையில் கடவுள் எய்தும் பதம உமக்கு
        இல்லையென்று எண்ணுவீர் கோனாரே!

        கணப்பொழுதேனும் சொம்பல் உற்றால் இறைவன் பதம் கிட்டாதாம் அது அரிதாம்.

        திப்பு நீங்கள் பதில் சொல்லாத கேள்விகளின் பட்டியல் வேண்டுமா?

        • கொஞ்சம் பேர் இறைவனடி சேர்வதால் நிறைய பேர் சேராததால் பிறவி எனபது பெருங்கடல் ஆகிறது என்றால் ”பிறவி பெருங்கடல் நீந்துவர்” என இறைவன் அருள் பெற்றவருக்கு அதனை பெருங்கடலாக உருவகப்படுத்துவது பொருந்தவில்லையே.அவர்கள்தான் எளிதாக கடந்து விடுவார்களே.நிறைய பேர் தத்தளிப்பது அவர்களுக்கு ஒன்றும் சுமையில்லையே. அருள் பெறாதவருக்கு பெருங்கடல் என சொல்லி இருந்தால் மட்டுமே உங்கள் வாதம் சரியாக இருக்கும்.

          \\நீங்கள் பதில் சொல்லாத கேள்விகளின் பட்டியல் வேண்டுமா?//

          கொடுங்கள்.பேசலாம்.

          • எத்தனை முறை சொன்னாலும் அதே கேள்வியையே கேக்கிறீர்களே? இறைவன் அருளை பெற்றாலும் பெறாவிட்டாலும் பிறவி என்பது பெருங்கடல்தான் அருள் பெற்றவர்கள் அதை கடக்கிறார்கள் பெறாதவர்களால் கடக்க முடியாது.

            உங்கள் வாதப்படி பிறவியை ஏன் பெருங்கடலாக உருவகிக்கிறார் என்று கூறுங்களேன் பார்ப்போம்.

            ///கொடுங்கள் பேசலாம்///

            அய்யா! நீங்கள் ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்று சொன்னீர்கள் அல்லவா,அதற்கு நான் விளக்கமும் கொடுத்தேன் அல்லவா? அது குறித்து ஏன் பிறகு பேச வில்லை? இந்த ஒரு கேள்விக்கு முதலில் பதில் அடுத்த கேள்வியை பிறகு கூறுகிறேன்.

        • இறைவன் என்ற சொல்லை அரசன் என்ற அர்த்தத்தில்தான் வள்ளுவர் மிகுதியும் பயன்படுத்தியுள்ளார். ஏனென்றால், மனிதர்களுக்குள் இறுதியான தலைமைநிலையில் இருப்பவன் அரசன்தான். இறு (வேர்ச்சொல் ‘இற்’) என்ற சொல்லிலிருந்துதான் இறையன், இறைவன், இறுதி, இற்றுப் போதல், இறுத்தல், இறப்பு போன்ற சொற்கள் உருவாகின்றன. இறத்தல் என்பதற்கு ஒரு எல்லையைக் (இங்கே மனித வாழ்க்கை எல்லை) கடந்து செல்லுதல் என்று பொருள். எனவே இறைவன் என்பது கடவுளைக் குறிக்கும் சொல்லன்று

          • இறைவன் என்ற சொல் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ளது.வானுறையும் தெய்வம் என்ற பதம் எதை குறிக்கும்? திருக்குறள் குறிக்கும் இறைவன் இனக்குழு தலைவனைதான் என்றும்,அந்த காலத்தில் கடவுள் குறித்த கருத்தே இல்லை என்ற உங்களது கோமாளிதன மான வாதத்தை புறநானூறை மேற்கோள் காட்டி மறுத்துள்ளேன்.கடவுள் வாழ்த்தில் உள்ள பல பதங்கள் அருகனைதான் குறிக்கும் என்று ஆதாரத்துடன் கூறிய பிறகு அதை மறுக்க தெரியாமல் பழய படி இறைவன் என்றால் இனக்குழு தலைவன் என்று எந்த ஆதாரத்தையும் காட்டாமல் அரைத்த மாவையே அரைப்பது பயித்தியகாரதனமானது.

            • அரசனைத்தான் திருவள்ளுவர் ஆதி எனும் இறைவனாக சொல்கிறார்.அதனால்தான்

              அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
              நின்றது மன்னவன் கோல்

              என்று பாடுகிறார்.

              பகவு என்னும் சொல்லால் திருவள்ளுவர் நமக்குத் தெரியாமல் பகுதிபட்டிருக்கும் பொருளைக் குறிப்பிடுகிறார். அந்தப் பகவு எள்ளுக்குள் எண்ணெய் போலப் பகவுபட்டிருக்கும் என்பதே வள்ளுவர் கருத்து.அதனால்தான்

              எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்
              உட்பகை உள்ளதாம் கேடு

              என்று பாடுகிறார்.

            • கடவுள் வாழ்த்து ,கடவுள் வாழ்த்து என்று நீங்கள் ஓயாமல் சொல்லும் அதிகாரத்தில் கடவுள் என்ற சொல்லோ,வாழ்த்து என்ற சொல்லோ இல்லை.அதில் உள்ள குறள்கள் அத்தனையும் முதல் குறள் தவிர்த்து மனிதர்களுக்குத்தான் அறிவுரை சொல்கின்றன.வானுறையும் தெய்வம் என்பதற்கு பொருள் மனிதர்கள் தங்கள் நிலையில் உயரும்போது தெய்வம் ஆகிறார்கள் தெய்வமாக மக்கள் மனதில் இடம் பெறுகிறார்கள் என்பதுதான்.இதில் கடவுளை வாழ்த்தும் செய்தி எதுவுமே இல்லை.

              கூடுதலாக கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு பொருள்.

              திருக்குறளில் இடைச்செருகல்கள் உள்ளதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.1935-ல் திருக்குறளுக்கு உரை எழுதி வெளியிட்ட வ.உ.சிதம்பரனார் திருக்குறளில் வரும் முதல் மூன்று அதிகாரங்களை இடைச்செருகல் என்று கருதுகிறார். எனவே, அப்பகுதியை “இடைப்பாயிரம்” என்கிறார். அறத்துப்பாலில் மட்டும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் திருக்குறள் பாடத்தைத் திருத்தியுள்ளார். சில வேளைகளில் பரிமேலழகருக்கு முற்பட்ட பழைய உரையாசிரியர்களைப் பின்பற்றி இத்திருத்தங்களைச் செய்துள்ளார்.

  112. //வலிந்து விதியை கொண்டு வருவது வேறொரு பொருளில்தான்//

    அவர் வேறு பொருளில்தான் வலிந்து விதியை கொண்டுவந்தேன் என்று எங்காவது கூறி உள்ளாரா? உங்களிடம் மட்டும் தனியாக எப்போதாவாது கூறினாரா?நீங்களாக கற்பனை செய்கிறீர்களா?

    “தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும்;
    தருமம் மறு படிவெல்லும்” எனுமியற்கை
    மருமத்தை நம்மாலே உலகங் கற்கும்
    வழிதேடி விதி இந்தச் செய்கை செய்து[பாஞ்சாலி சபதம்-79 1:4]

    மறுபிறப்பை ஏற்கும் பாஞ்சாலி சபதத்தில் பாரதியார் விதி என்ற வார்த்தையை ஏன் வலிந்து கொண்டுவந்தார் அதுக்கு வலிந்த பொருள் என்ன என நீங்கள் வலிந்து விளக்கினால் நன்றாக இருக்கும்.

    • விதி என்றால் முற்பிறவி பயன் என சாதிக்க பாரதி என்ற வருணாசிரம பித்து கொண்ட புலவனின் பாடலை மேற்கோள் காட்டும் உங்களுக்கு உலக புகழ் பெற்ற, தமிழர் அனைவரும் நினைந்து நினைந்து பெருமை படத்தக்க கணியன் பூங்குன்றனாரின் இந்த பாடலை பரிந்துரைக்கிறேன்.

      யாதும் ஊரே யாவரும் கேளிர்
      தீதும் நன்றும் பிறர்தர வாரா
      நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
      சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
      இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
      இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
      வானம் தண்துளி தலைஇ யானாது
      கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
      நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
      முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
      காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
      பெரியோரை வியத்தலும் இலமே,
      சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

      இதற்கு விக்கிபீடியா எழுதிய அறிஞர்கள் கூறும் உரை.

      எல்லா ஊரும் எம் ஊர்
      எல்லா மக்களும் எம் உறவினரே
      நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
      துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
      சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
      இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
      வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
      பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
      இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
      தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
      ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
      சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
      பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.

      அதே சமயம் இந்த இயற்கை வழியை விதி என கொள்வாரும் உண்டு.பார்க்க

      http://www.eegarai.net/t56643-topic

      ஆகவே பாரதி சொல்லிட்டார் மணக்குடவர் சொல்லிட்டார் அதுதான் சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.ஏனையோரும் ஆய்ந்து அறிந்தே அவர்கள் சொல்லும் பொருளை உரைக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

      • திப்பு இந்த பாடலை எந்த எண்ணத்தில் மேற்கோள் காட்டினீர்கள்.இதற்காக உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

        “தீதும் நன்றும் பிறர்தர வாரா”

        இதுக்கு என்ன பொருள் உனக்கு ஏற்படும் நன்மைக்கும் தீமைக்கும் கடவுளோ இயற்கை நிலையோ வேறு யாருமோ காரணம் இல்லை.பிறகு உன் முன் ஜென்ம செயல்தான் காரணம்.எனக்கு ஆதரவாக கனியன் பூங்குன்றனாரை அழைத்து வந்ததுக்கு நன்றி

        • கணியர் என்பவர்கள் பண்டைய தமிழ்நாட்டில் வானியலிலும் அதனடிப்படையிலெழுந்த சோதிடத்திலும் வல்லவர்கள். இவர்கள் அறிவர், அறிவன், கணி, கணியன் என்றும் அழைக்கப்பட்டனர். அரசர்களின் அவைகளிலும் இவர்கள் இடம் பெற்றிருந்தனர்.. இவர்கள்தான் புத்த சமண நூல்கள் சொல்லும் அசீவகர்கள்.சமணரின் சீவன்-உயிர் நிலையானது என்ற கொள்கையை ஏற்காதவர்கள்.அதனால் இவர்களை அசீவகர்,அமணர் என நக்கலாக அவர்கள் அழைத்தனர்.உழைத்து உண்பதை போற்றிய கடவுள் மறுப்பாளர்கள்.பழம் வினை தொடர்பு மறுப்பாளர்கள்.அப்படி ஒரு கணியர்தான் பூங்குன்றம் என்ற ஊரை சேர்ந்த கணியன் பூங்குன்றனார்.

          இது தெரியாமல் அவர் பாடியதும் முற்பிறவி பயனைத்தான் என உளறிக் கொண்டு இருக்கிறீர்கள்.ஆற்றின் போக்கில் தெப்பம் அடித்துச் செல்லப்படுவது என்பது நம்மை சுற்றி அமையும் சூழ்நிலைமைகளால் நமது வாழ்வும் தாக்கமுறும் என்பதையே குறிக்கிறது.

          அதிலும் தெப்பம்,விதி என பொருள் சொல்லி விட்டு நன்றும் தீதும் முற்பிறவி செயலால் வரும் என்பதே சரியான பொருத்தமான பொருள் என்கிறீர்கள்.அதற்கு முதல் வரி யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதும் முற்பிறவி செயலால்தான் விளைகிறதா.என்னே
          உங்கள் தர்க்க நியாயம்.

          • திப்புவின் வாதங்கள் அருமையாக இருக்கின்றன. இந்த நீண்ட விவாதத்தை துவக்கத்தில் கவனித்து இடையில் கொஞ்சம் பின் தொடராமல் விட்டிருக்கிறேன். மீண்டும் துவக்கத்தில் இருந்து ஒரு முறை படிக்க வேண்டும்.

            நன்றி திப்பு.

          • ///கணியர் என்பவர்கள் பண்டைய தமிழ்நாட்டில் வானியலும் அதனடிப்படையிலெழுந்த சோதிடத்திலும் வல்லவர்கள்///

            சரியான கருத்துதான்! ஆனால் சோதிடம் கர்ம சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டது என்றால் எனக்கு காமாலை கண் என்று ஒப்பாரி வைப்பீர்கள்.அதனால் சோதிட சாத்திரத்தில் 5ம் பாவகமாகிய பூர்வ புண்ணிய ஸ்தானம் எதை குறிக்கிறது என்றும்,12ம் பாவகமாகிய மோட்ச ஸ்தானம் எதை குறிக்கிறது என்றும் தமிழில் உள்ள சோதிட நூல்களை படித்துவிட்டு வந்து பதில் சொல்லுங்கள் பிறகு கணியன் பூங்குண்றனாரின் கொள்கை குறித்தும் அது அந்த பாட்டில் எப்படி பயின்று வருகிறது என்று அப்புறம் பேசலாம்.

            பி.கு. ஆப்பிரிக்காவில் உள்ள சோதிடநூல் வேற மாதிரி சொல்லுது என்று சொல்ல வேண்டாம்.பிளீஸ்.

  113. ///வள்ளுவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பது ஐயத்திற்கு இடமின்றி நிறுவப்படவில்லை///

    பூனை கண்ணை மூடிகிட்டு பூலோகம் இருட்டா இருக்குன்னு சொன்னுச்சாம்.வள்ளுவர் சமணர் என்று மறுக்க முடியாத ஆதாரத்துடன் நிறுவப்பட்டு பாடநூல்கள் வரை ஏற்றுகொள்ளப்பட்டாகி விட்டது.கடவுள் வாழ்த்தில் உள்ள ஒரு பாடலை மட்டும் அறிஞர்களின் நூலில் இருந்து எடுத்து தருகிறேன்.

    மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்-[திருக்குறள்-3]

    மேலே உள்ள பாடலில் இறைவனை குறிக்கும் சொல்”மலர்மிசை ஏகினான்”.பொருள்:மலர் மேல் நடந்தவன்.

    பரிமேலழகர் தேவர்கள் அர்ச்சித்த மலர்மேல் நடந்த சிவன் என் கிறார்.அது வலிந்து பொருள் கொள்வது மேலும் சைவ இலக்கியங்களில் மலர்மிசை நடந்தவன் என்ற சொல்லாட்சி கையாளபடவில்லை என மறுக்கிறார்கள்.

    மணக்குடர் மலர்மேல் நடந்தவன் அருகன் என சொல்கிறார்.அதற்கு இலக்கிய ஆதாரங்களை எக்கசக்கமாக அறிஞர்கள் கொடுத்துள்ளனர் அவற்றை பார்ப்போம்.

    பொருளில் யாக்கை பூமியில் பொருந்தாது
    அருகர் அறவன் அறிவோர் கல்லதென்
    இருகையும் கூடி ஒருவழிக் குவியா
    மலர்மிசை நடந்தோன் மலரடி அல்லதென்
    தலைமிசை உச்சி தானணிப் பொறாஅது- [சிலம்பு-நாடுகாண்காதை-200-205]

    விரைமணந்த தாமரைமேல் விண்வணங்கச் சென்றாய்[சூளாமணி-187]

    பூவின்மேல் சென்றான் புகழடியை-[அறநெறிசாரம்-1]

    பன்னிரண்டு மாகணமு மெத்தப்பைந் தாமரைடின்
    சென்னி மிசை நடந்த சேவடியை–[ஜீவசம்போதனை]

    மலர்போதி லிருந்தவ ரலர்பூவி நடந்தவ-[திருக்கலம்பகம்]

    தாதார் மலர்மேல் நடந்தானை[தொத்திர திரட்டு-6]

    வெறிமலர் மேல்நடந்த வண்ணவனைப்-[திரு இரட்டை மனிமாலை]

    பூமிசை நடந்தோன் போதன்[சூடாமணி நிகண்டு-9]

    இது ஒரு குறளுக்காண மேற்கோள் மட்டுமே இதுபோல் அனேகம் உள்ளது.வேசம் கட்டாத உண்மையான தமிழ் அறிஞர் திப்பு இதை மறுத்து திருவள்ளுவர் சமணர் இல்லை என இதை போன்ற இலக்கிய ஆதாரங்களுடன் நிறுவுவார் என எதிர்பார்க்கிறேன்.

    • தேவரீர்,ரொம்பவே கோவப்பட்டு பொரிஞ்சு தள்ளியிருக்கீங்க.சரி விடுங்க ஆறுவது சினம்.

      முதலில் திருவள்ளூவர் சமணர் எனபது சரிதானா என்பதை பார்த்து விடலாம்.சமணம் கொல்லாமையை வலியுறுத்துகிறது என்பதை சொல்லத்தேவையில்லை.திருவள்ளுவரோ படைமாட்சி என்று ஒரு அதிகாரத்தையே இயற்றி வைத்திருக்கிறார்.

      சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
      இல்லாயின் வெல்லும் படை.

      இப்படி கொல்லும்படை பற்றி சொல்லும் வள்ளுவர்தான் போரில் தலைவனுக்காக கொல்லப்படுவதையும் ஏற்றிப் போற்றுகிறார்.

      `புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
      இரந்துகோள் தக்கது உடைத்து”

      மேலும் கொடியவருக்கு சாவுத்தண்டனை விதிக்கவும் கோருகிறார்.பார்க்க.

      கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
      களைகட் டதனொடு நேர்.

      கொல்லாமையை வலியுறுத்தும் சமண சமயத்தை சேர்ந்த ஒருவர் இப்படியெல்லாம் பாடுவார் எனபது அறிவுக்கு பொருத்தமாக இருக்கிறதா.

      சமண சமயப்படி இறைவன் என்று யாருமில்லை.ஆனால் உயிர் நிலையானது.அப்படியானால்

      அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
      பகவன் முதற்றே உலகு.

      என்று பாடுவது ஒரு சமணருக்கு ஏற்புடையதாக இல்லையே.

      இந்த ஆதாரங்களுக்கு பிறகும் திருவள்ளுவர் சமணர்தான் என சாதிப்பீர்களேயானால் கோளாறு வள்ளுவரிடத்தில் இல்லை உங்களிடம்தான்.

      உண்மையில் திருவள்ளுவர் மதங்களை மறுத்தவர்.அதனால்தான்

      ”சமயக் கணக்கர் மதி வழி கூறாது
      உலகியல் கூறி பொருளிது என்ற வள்ளுவன் ”

      என்று பாராட்டினார் கல்லாடனார்.

      வைதீக சமய நெறிகளை எதிர்ப்பதில் திருக்குறள் புத்த சமண கோட்பாடுகளை பின்பற்றினாலும் அவர் அந்த சமயங்களின் சடங்குகளையோ இன்ப நுகர்ச்சி தடைகளையோ ஏற்கவில்லை.மனித இனம் உலகின் இன்பங்களை உய்த்துணர்ந்து வாழ வழி சொல்லும் அய்யனை சிறிய மத வட்டத்திற்குள் அடைத்து விடாதீர்கள்.அந்த சந்தடி சாக்கில் மறுபிறவியைத்தான் பாடினார் என கதை கட்டி விடாதீர்கள்.

      • ///
        அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
        பகவன் முதற்றே உலகு

        என்று பாடுவது ஒரு சமணருக்கு ஏற்புடையதாக இல்லையே///

        திப்பு இதை எப்படி மறுக்குறதுன்னு பயந்தே போய்ட்டேன்[ஹி,ஹி]

        ஆதிபகவன் என்பது அருகனாகிய ஆதிநாதரை[ரிசப தேவரை] குறிக்கும்

        வியப்புறு பொன் எயிற்குள்
        விளங்கு வெண் ணெழுத்திரண்டும்
        பரப்பிய ஆதி மூர்த்தி-[சூடாமணி நிகண்டு]

        கோதில்வருகன் திகம்பரம் என் குணன் முக்குடையோன்
        ஆதிபகவன் அசோகமர்ந்தோன் அறவாழிஅண்ணல்-[கயாதரநிகண்டு]

        இதில் திருக்குறள் கடவுள் வாழ்த்தில் உள்ள என் குணத்தான்,ஆதிபகவன்,அறவாழி அண்ணல் ஆகியவை அருகனை குறிப்பதை காண்க.

        ஆதிபகவனை அருகனை -திருக்கலம்பகம்-109.

        அத்தனே என்னை ஆளீர் சரணம்
        ஆதிபகவன் அருளே சரணம்-[தொத்திர திரட்டு]

        இதில் உள்ள பாடல்கள் அதிபகவன் அருகனே என நிறுவுகிறது.

        திப்பு ஐயா, மறுப்பது என்பது மலர்மிசை ஏகினான்,ஆதிபகவன் முதலிய பதங்கள் அருகனை குறிக்கவில்லை என இலக்கிய தரவுகளுடன் மறுப்பது.நீங்கள் மறுப்பதை பார்ப்பதற்கு சிரிப்பாக உள்ளது.

        சமணமுனிவராகிய திருத்தக்கதேவர்தான் இன்பசுவை நிரம்பிய சீவகசிந்தாமணியை படைத்தார்.

        சமணமுனிவராகிய இளங்கோவடிகள்தான் அருகனோடு சிவன்,திருமால்,முருகன்,கொற்றவை முதலிய தெய்வங்களை பாடினார்.

        இதற்காக இவர்கள் இருவரையும் சமணர் இல்லை என்று கூறமுடியுமா?

        படைமாட்சி எழுதிய வள்ளுவர்தான் கொல்லாமைக்கு ஒரு அதிகாரம் வைத்தார் அதற்கு என்ன சொல்கிறீர்கள்?

        திருக்குறளில் கடவுள் வாழ்த்து உள்ளது அது எந்த கடவுள் என்று நிறுவினால் அவரின் சமயத்தை அறியலாம்.நான் அதைதான் செய்கிறேன்.

        நீங்கள் வள்ளுவர் கொலை செய்ய சொல்கிறார் என்று அவதூறு செய்கிறீர்கள்.

        திருக்குறள் ஒரு அறநூல்.படைமாட்சியில் உள்ளது படை எடுத்தலுக்கான அறம்.அதை புரிந்து கொள்ளுங்கள்.

  114. ///நீங்கள் மாபெரும் தமிழறிஞர் வேடம் கட்டி ஆடுவதைபார்க்கும் போது உங்கள் மீது இரக்கப்பட தோன்றுகிறது//

    வேடம் கட்டாத உண்மை தமிழறிஞர் திப்பு அவர்களே!நான் தமிழறிஞன் என்று எப்போது கூறினேன்? சங்க இலக்கியத்தில் இருந்து 4 பாட்டை மேற்கோள் காட்டினா அவன் தமிழறிஞனா? அப்படி பாத்தா தமிழ்நாட்ல ஒரு கோடி பேருக்கு மேல தமிழ் அறிஞர்கள் இருப்பார்களே.

    ஆனால் ஒரு பெருமை பீத்தகலயம் பசுவின் புனிதம் போஸ்ட் மறுமொழி 17.2.2.1 ல் தன்னை யானை வேட்டைகாரராக பீத்தி குட்டிகதை எல்லாம் கூறினார்.இந்த விவாதத்தின் முடிவில் அவர் யானை வேட்டைகாரரா பூனை வேட்டைகாரரா என பார்ப்போம்.

    • என்னை ”யானை வேட்டைக்காரன்”என பெருமை பட உரைப்பதாக யாரும் கருதிவிடக் கூடாது என்ற எண்ணத்தில்தான் அவையடக்கம் கருதி அந்த பின்னூட்டத்தில் முதல்வரியிலேயே

      கான முயல்எய்த அம்பினில் யானை
      பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
      என்ற குறளை குறிப்பிட்டிருக்கிறேன்.அதாவது முயலை வீழ்த்தி வெற்றி பெறுவதை காட்டிலும் யானையை எதிர்த்து தோல்வியடைவதை விரும்புகிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.கவனிக்கவும்.

      அகந்தை இறுமாப்பு முதலான தீய குணங்கள் என் மனதில் கடுகளவும் இல்லை என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.இல்லை என்று சொல்வதில் கூட ஒரு பெருமை தொனித்து விட கூடாது என்பதற்காக பணிவோடு தெரிவிக்கிறேன்.

      ”கர்வம் கொள்ளாதீர்கள்.பொறாமை படாதீர்கள்.அவை நெருப்பு விறகை தின்பதை போல உங்கள் நல்ல குணங்களை அழித்து விடும்”

      என்ற நபிகள் நாயகத்தின் பொன்மொழியை மனதில் இருத்தி செயல்படுவதால் எக்காலத்திலும் அகந்தை மனப்பான்மை கொள்வதாக இல்லை.

      ஆனால் உங்கள் நிலையென்ன.

      இலக்கிய தரவுகள் இன்றி விவாதிக்கும் ”வெத்துவேட்டு இவன்,இலக்கியங்களில் இருந்து மேற்கோள் காட்ட தெரியாத தற்குறி” நாம்தான் இலக்கிய மேற்கோள்களை அள்ளிப்பொழிந்து விவாதிக்கிறோம்

      என இறுமாந்த நிலையில் \\வேசம் கட்டாத உண்மையான தமிழ் அறிஞர் திப்பு இதை மறுத்து திருவள்ளுவர் சமணர் இல்லை என இதை போன்ற இலக்கிய ஆதாரங்களுடன் நிறுவுவார் என எதிர்பார்க்கிறேன்.// என்று இளக்காரமாக பேசுகிறீர்கள். தன்னை மெச்சுமாம் தென்னை மர குரங்கு.

      இதோ நானும்தான் மேலே இலக்கியங்களிலிருந்து ஆதாரங்கள் காட்டுகிறேன்.எது சரி என்பதை படிப்பவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.அவர்கள் முடிவை நாம் அறியவும் முடியாது.நம் விவாதத்தை சீர்தூக்கி பார்த்து சன் தொலைக்காட்சியில் தீர்ப்பு சொல்ல சாலமன் பாப்பையா காத்திருப்பது போல விவாதத்தின் முடிவில் தெரியும் என்று மனப்பால் குடிக்கிறீர்கள்..இப்போது தெரிகிறதா யார் ”பெருமை பீத்தகலயம்”என்று.

      உங்களுக்கு ஒரு சீன பழமொழியை நினைவூட்டுகிறேன்.

      ”உன்னை அறி.எதிரியை அறி.எந்த போரிலும் நீ வெல்லலாம்.”

  115. ///அகந்தை இறுமாப்பு முதலான தீய குணங்கள் என் மனதில் கடுகளவும் இல்லை///

    அய்யா யானை வேட்டைகாரரே! உங்களை யானை வேட்டைகாரராகவும் ஹரிகுமாரை முயல்,சாக்கடையில் விழுந்து வந்த பன்றி என்றும் உருவகம் செய்வது அகந்தை இல்லையா? அதுதான் அவை அடக்கமா?

    என்னை தமிழறிஞராக வேசம் கட்டுவதாக கூறினீர்கள்.உங்களை வேசம் கட்டாத உண்மையான தமிழறிஞர் என்றேன்.இதில் என்ன தவறு? இதற்கு இல்லாத பொருளை எல்லாம் ஏன் கற்பனை செய்கிறீர்கள்.

    தன்னை மெச்சும் தென்னைமர குரங்கு யார் என்று படிப்பவர்க்கு புரியும்.

    நீங்கள் தமிழ் அறிஞர் என்று தெரியும்.ஆனால் சீன பழமொழியிலும் பாண்டித்தியம் உண்டு என்று அறிந்துகொண்டேன்.நன்றி.

  116. தேவரீர்,

    ஊழ் என்பதற்கு பொருள் முற்பிறவி பயன் என பரிமேலழகர் சொல்வதை நீங்கள் ஏற்பதால் ஆதி பகவன் என்பதற்கு கடவுள் என அவர் பொருள் சொல்வதை ஏற்பீர்கள் என்று அதை மேற்கோள் காட்டினால் அந்தர் பல்டி அடித்து அது அருகன், கடவுள் இல்லை என்கிறீர்கள்.ஊழுக்கு கலைஞரின் இயற்கை நிலை என்ற பொருளை ஏற்கும் நான் அவர் வள்ளுவரை சமணர் என்று சொல்லியிருப்பதாகவும் அதை ஏற்க மறுப்பதாக என் மீது சினம் கொண்டீர்கள். இப்படி மாற்றி மாற்றி பேசுவது விதண்டாவாதம் என்று சொன்னால் அதற்கும் கோபப்படுகிறீர்கள்.

    “தீதும் நன்றும் பிறர்தர வாரா”

    இதற்கு நீங்கள் சொல்லும் விளக்கம் காமாலை கண்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் பழமொழியை ஒத்திருக்கிறது.பிறர் தர முடியாது எனும்போதே நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்கிறோம் என்றாகிறது.எடுத்துக்காட்டாக ஒருவன் குடித்துக் குடித்து குடல் கருகி செத்துப் போனால் அவனது சாவுக்கு அவனேதான் காரணமாகிறான்.ஆனால் நீங்களோ அது முற்பிறவி பயன்தான் என அடித்து விடுகிறீர்கள்.அப்படியான பொருளில்தான் கணியன் பூங்குன்றனார் பாடினார் என்பது உங்கள் விருப்பத்தை அவர் மீது இட்டுக்கட்டுவது.

    ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
    தாழாது உஞற்று பவர்

    இந்த குறளுக்கு என்ன பொருள்.

    சோர்வில்லாமல் இடைவிடாது முயற்சிகளைச் செய்பவர்கள், விதியையும் வெல்வார்கள்

    அதாவது மனிதர்கள் வாழ்வில் இன்னின்னது நடக்கும் என்று விதித்ததை [அது கடவுளோ,முற்பிறவி பயனோ எந்த கருமாந்திரமாகவும் இருக்கட்டும்] இடைவிடாமல் முயற்சி செய்தால் மாற்றி அமைக்க முடியும்.

    இதில் தவத்தார்,எமனாருக்கெல்லாம் என்ன வேலை இருக்கிறது என்று அவர்களை அழைத்து வருகிறீர்கள்.

    \\திருக்குறள் ஒரு அறநூல்//

    இதைத்தானே அய்யா நானும் சொல்கிறேன்.மதங்களுக்கு அப்பாற்பட்டு மனித வாழ்வுக்கு வழிகாட்டும் நூல் அது என்கிறேன்.நீங்களோ அவர் சமணர் அதனால் சமண கருதுகோள்கள் அடிப்படையிலேயே பாடினார் என சாதிக்கிறீர்கள்.ஒரு சமணர் ஏன் படைமாட்சியை பாடவேண்டும் என்று கேட்டால் அது அறநூல் என தோசையை திருப்பி போடுகிறீர்கள்.

    அகந்தையால் அரிகுமாரை அப்படி உருவகப்படுத்தவில்லை. காட்டுவிலங்காண்டித்தனமான அவரது பேச்சுக்கான எதிர்வினை அது.நான் அசைவம் சாப்பிடுவதற்கான நியாயங்களை எடுத்து சொல்வதற்காக மொக்கை எதிர்வாதங்களை வைத்து விட்டு ”முட்டாளே” என்று அழைத்தால் அவரை கொஞ்சவா முடியும்.உங்களை ஒருவன் அப்படி அழைத்தால் உங்கள் எதிர்வினை என்னவாக இருக்கும்.இருக்கட்டும் அந்த மேதாவி என்றாவது ஒரு நாள் உங்களுடனும் ”விவாதிப்பார்”.அப்போது தெரியும் உங்களுக்கு.

    பி.கு. இத்துடன் எனது விவாதங்களை முடித்துக் கொள்கிறேன்.[சரக்கு தீர்ந்து போச்சுன்னு கூட நீங்க வச்சுக்கலாம்].மீண்டும் மீண்டும் ஒரே பொருளை பிடித்து தொங்குவது அலுப்பூட்டுகிறது.ஆகவே இதற்கு பதிலாக ஐந்தாறு பின்னூட்டங்களை போட்டு நீங்களும் முடித்துக் கொள்ளுங்கள்.இறுதியாக ஒன்று.ஏற்கனவே சொன்னதுதான்,

    \\கடைசியாக வெளிப்படையாக ஒரு உண்மையை சொல்லி விடுகிறேன்.ராமன் சொல்லியது போல நாம் இருவருமே அவரவர் விருப்பத்தை,நம்பிக்கையை வள்ளுவர் மீது ஏற்றி சொல்லிக் கொண்டிருக்கிறோம்.உரையாசிரியர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்.அதனால்தான் ஊழ் என்பது முற்பிறவி பயனாக,விதியாக,இயற்கை நிலையாக அவரவர் விருப்பப்படி மாறி மாறி காட்சியளிக்கிறது.//

    • சொல்ல நினைத்து பின்னூட்டமிடும்போது எழுத மறந்து விட்டேன். ‘முனைவர்.செ.நாராயணசாமி எழுதிய

      ‘வள்ளுவத்தின் மீட்சி
      திருக்குறளின் வேர்களும் விழுதுகளும் ”

      என்ற நூலை படித்து பாருங்கள். உங்களுக்கு விரிவான விளக்கங்கள் கிடைக்கக்கூடும்.இணையத்திலும் இந்த முகவரியில் மேற்படி நூல் பகுதியளவுக்கு கிடைக்கிறது.அந்த தளம் நகல் எடுப்பதை அனுமதிக்கவில்லை.அதனால் விவாதங்களுக்கு துணையாக எடுத்தாள முடியவில்லை.
      http://books.google.co.in/books?id=8RNK62Yy4NsC&printsec=frontcover&source=gbs_ge_summary_r&cad=0#v=onepage&q&f=false

  117. ஜனாப்,

    நீங்கள் விவாதத்தை முடித்துகொள்கிறேன் என்று கூறிய பிறகு விவாதிப்பது அழகில்லை எனினும் என் மேல் சில அபாண்டங்களை அள்ளிவிட்டு இருப்பதால் அவற்றை மறுத்து எனது விவாதத்தை முடித்துக் கொள்கிறேன்.

    ///பரிமேலழகர் சொல்வதை நீங்கள் ஏற்பதால்///

    தயவு செய்து பின்னுட்டம் 125ஐ படித்து பார்க்கவும்.பரிமேலழகரை மறுத்து மணக்குடவரே சரியென்று நிறுவியுள்ளேன்.பரிமேலழகரை நான் ஏற்பதாக ஏன் புளுகுகிறீர்கள்.விவாதத்தின் தொடக்கத்தில் இருந்து வள்ளுவரை சமணர் என்றே கூறிவருகிறேன்.சமணம் மறுபிறப்பை ஏற்கிறதுதானே?

    பரிமேலழகர் வள்ளுவரை சமணர் என்றா ஏற்கிறார்? ஏன் இந்த அபாண்ட புளுகு?

    ///பிறர் தரமுடியாது எனும்போது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்கிறோம்///

    நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
    முறை வழிப் படூஉம் என்பது திறவோர்

    ஆற்றில் அடித்து செல்லப் படும் தக்கை போல் மனித வாழ்க்கை வினையால் அடித்து செல்லப் படுகிறது என்று சொல்லும் கணியன் பூங்குன்றனார் தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பது மட்டும் சொந்த செயலைதான் சொல்கிறாராம்.என்ன ஒரு விளக்கம் காமாலை கண் பழமொழி உங்களுக்குதான் பொருந்தும்.

  118. ///சோர்வில்லாமல் இடைவிடாது முயற்சிகளைச் செய்பவர்கள்///

    ஒரே குறிக்கோளுடன் இடைவிடாத முயற்சியைதான் தவம் என சொல்கிறோம்.எனவே தவத்தோரை அழைத்துவந்ததில் எந்த தவறும் இல்லை.

    ///ஒரு சமணர் ஏன் படைமாட்சியை பாட வேண்டும்///

    இதை முன்பே விளக்கி விட்டேன்.புரியாத மாதிரி நடிக்கிறீர்கள்.ஒரு சமணர் ஏன் காப்பியம் பாட வேண்டும்? ஒரு சமணர் ஏன் இந்து கடவுள்களை பாட வேண்டும்? சமண முனிவர்கள் ஏன் திருக்குறளோடு ஒப்பிட கூடிய நாலடியாரை பாட வேண்டும்? போன்ற உப கேள்விகளையும் நீங்கள் எழுப்பலாம்.

    ஒரு சமணர் அற இலக்கியத்தை பாடினார்.அது சமணர்களின் மத நூல் இல்லை.அதில் உள்ள அறம் குறித்த கருத்துக்கள் தமிழர்களின் அறம் குறித்த சிந்தனைதான்.அதனால்தான் அது உலகிற்கே வழிகாட்டுகிறது.

  119. ///[சரக்கு தீர்ந்து போச்சுன்னு கூட நீங்க வச்சுக்கலாம்] மீண்டும் மீண்டும் ஒரே பொருளை பிடித்து தொங்குவது அலுப்பூட்டுகிறது///

    அடைப்பு குறிக்குள் உள்ளதே சரியாண காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.ஏனெனில் சுவாரஸ்யத்திற்குகாக யாரும் விவாத பொருளை மாற்றிகொண்டே இருக்க முடியாது.தரவுகளைதான் அதிகரிக்க வேண்டும்

    எப்படியோ சாலமன் பாப்பையா வராமலேயே விவாதம் முடிந்து விட்டது.விவாதத்தில் இருந்து விலகுபவரே தொற்றவராக கருதுவதே மரபு.

    நான் வள்ளுவர் சமணர் என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரங்களை கொடுத்து உள்ளேன்.எனவே ஊழ் என்பது சமணர் கொள்கைபடி மறுபிறப்புதான் என்று நிறுவப்படுகிறது.

  120. மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று அதனை விடுவதில்லை.உங்கள் எகத்தாளம் மறுப்பு எழுத தூண்டுகிறது.

    இந்த விவாதம் முன்,பின் பிறவியை வள்ளுவர் ஏற்றுக்கொள்கிறாரா என்பது குறித்து துவங்கியது.அதை ஐயத்திற்கு இடமின்றி நிறுவி விட்டதாக கருதுகிறீர்களா.

    கணியன் பூங்குன்றனார் யார்,என்ன கொள்கையுடையவர் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா.

    மேற்கொண்டு பேசலாம்.

  121. கணியன் பூங்குன்றனாரின் பாடலை மேற்கோள் காட்டியது நீங்கள்தானே?நீங்களே விளக்குங்கள்.

    வள்ளுவர் சமணர் என்பதற்கு நான் கொடுத்த ஆதாரத்தை மறுக்காதவரை நிறுவிவிட்டதாகவே கொள்ள வேண்டும்.

  122. உங்கள் தர்க்க நியாயம் முன்னுக்குப் பின் முரணானது.

    திருவள்ளுவர் சமணர்.ஆகவே அவருக்கு மறுபிறவி மீது நம்பிக்கை உண்டு.ஆகவே அவர் ஊழ் என குறிப்பது முற்பிறவி பயனைத்தான் என்கிறீர்கள்.இதே அளவுகோலை சாலமன் பாப்பையாவுக்கு பொருத்த மறுக்கிறீர்கள்.அவர் முன்,பின் பிறவியை ஏற்காத கிருத்துவரேயானாலும் விதி என்ற சொல்லால் அவர் குறிப்பது முற்பிறவி பயனைத்தான் என சாதிக்கிறீர்கள்.இது என்ன நியாயம்.என்ன வகை வாதம்.இந்த முரணை நியாயப்படுத்த நீங்கள் சொல்லும் காரணம் இன்னும் கோமாளித்தனமானது.

    இந்தியாவில் பிறந்தவர் எவராயினும் விதி என்ற சொல்லை முற்பிறவி பயன் என்ற பொருளில்தான் ஆளுகிறார்கள் என்கிறீர்கள்.இது அப்படியே இந்து மதவெறி கருத்தாக்கம்.ஒரே நாடு,ஒரே மக்கள்,ஒரே கலாச்சாரம் என்ற எதார்த்தத்துக்கும்,உண்மைக்கும் புறம்பான நியாயத்திற்கும் தர்மத்திற்கும் எதிரான மதவெறி முழக்கத்தோடு முற்று முழுதாக பொருந்துகிறது உங்கள் கூற்று.

    இந்தியாவில் பிறந்த, மறுபிறவி கொள்கையை ஏற்காத முசுலிம்கள் கிருத்துவர்கள் தங்கள் வாழ்க்கையில் இன்னின்னது நடக்கும் என கடவுள் விதித்ததை என்ன சொல்லால் குறிக்க வேண்டும் என அருள் கூர்ந்து தெரிவிக்கிறீர்களா.கடவுள் விதித்தது என்பதை விதி என்ற சொல்லால் குறிக்க கூடாது என சொல்வது எவ்வளவு கோமாளித்தனமானது.

    ஊழ் என்ற சொல்லுக்கு முற்பிறவி பயன் தான் என வாதிடும் நீங்கள் அதனை கலைஞர்,சாலமன் பாப்பையா முதலானோரை துணையாக கொண்டு நான் மறுத்தபோது \\பரிமேலழகர்,மனக்குடவர்,பரிதியார்,காலிங்கர் நால்வருமே வள்ளுவர் மறுபிறப்பை சொல்வதாக கூறகிறார்கள்.இந்த தமிழ் மாமேதைகளைவிட நீங்கள் சிறந்த தமிழ் அறிஞரா?//
    என்று கோபப்பட்டீர்கள்.

    இந்த நால்வரில் ஒருவரான பரிமேலழகர் ஆதி பகவன் எனபது கடவுளை குறிக்கும் என்று சொல்வதை நீங்கள் ஏற்க மறுக்கிறீர்கள்.இதற்கு மலர்மிசை ஏகினான் என்ற பதத்தை எடுத்துப்போட்டு சில பாடல்களையும் சுட்டுகிறீர்கள்.மேலும் பரிமேலழகர் நீங்கள் சொல்வது போல் மலர்மிசை ஏகினான் என்பதற்கு மலர் மேல் நடந்த சிவன் என்று பொருள் உரைக்கவில்லை.மலரின்கண்ணே சென்றடைவான் என்றே பொருள் கொள்கிறார்.ஆனாலும் ஆதி பகவன் எனபது கடவுளை குறிக்கும் என்று அவர் சொல்வதை ஏற்க மறுக்கிறீர்கள்.அப்படியானால் நீங்கள் பரிமேலழகரை விட நீங்கள் சிறந்த தமிழ் அறிஞரா?.எனக்கொரு நியாயம் உங்களுக்கு ஒரு நியாயமா.

  123. ///திருவள்ளுவர் சமணர் ஆகவே அவருக்கு மறுபிறவி மீது நம்பிக்கை உண்டு.ஆகவே அவர் ஊழ் என குறிப்பது முற்பிறவி பயனைத்தான் என்கிறீர்கள்///

    சரி

    ///இதே அளவுகோலை சாலமன் பாப்பையாவுக்கு பொருத்த மறுக்கிறீர்கள்///

    அட ஆண்டவனே! நூலின் மூல ஆசிரியருக்கும்,அதற்கு உரை எழுதிய ஆயிரக்கணக்காணவர்களில் ஒருவருக்கும் ஒரே அளவுகோல் தானா? உங்களுக்கு புரிஞ்சுதான் கேக்கிறீர்களா? இல்ல புரியாத மாதிரி நடிக்கிறீர்களா?

    இதற்கு கீழே உள்ளதும் இதே பாணியிலானது.

    சரி விடயத்திற்கு வருவோம்.உங்கள் மதத்தை ஒப்பிட்டு விளக்கினால் புரியும் என்று நினைக்கிறேன்.

    அல்குரான் ஒரு இஸ்லாமிய நூல்.அதில் அல்லா இறைவனாக குறிக்கப் படுகிறார்.ஒரு சமணர் அதுக்கு உரை எழுதுகிறார்.குரான் கூறும் மறுமை மறுபிறப்புதான் என விளக்குகிறார்.அது ஒரு இஸ்லாமிய நூல் எனவே அது கூறும் மறுமை சொர்க்கம்தான் என் கிறார்.ஆனால் மறுப்பவர் அதற்கு ஒரு சமணர் உரை எழுதி உள்ளார் எனவே அதுதான் சரியானது என் கிறார்.இதில் எது சரியான வாதம்?

    வள்ளுவர் கூறும் ஊழ் எது என்ற வாதத்தில் நான் இந்தியாவில் உள்ள மாற்று மதத்தவரை எல்லாம் அவமதிப்பதாக கூறுகிறீர்கள்.யாருடைய வாதம் கோமாளித்தனமானது?

    இறுதியாக, திருக்குறள் கடவுள் வாழ்த்தில் உள்ள மலர்மிசை ஏகினான், என் குணத்தான்,ஆதி பகவன்,அறவாழி அண்ணல் முதலிய பதங்கள் யாரை குறிக்கிறது என்று இலக்கிய ஆதாரங்களுடன் முடிந்தால் கூறுங்கள்.

    மட்டை அடி விவாதங்கள் மற்றவர்களுக்கு உவப்பாக இருக்கலாம்.எனக்கு அப்படி இல்லை.

  124. திப்பு ,தேவா ,

    திருவள்ளுவன் சமணனா இல்லையா என அறிந்து என்ன ஆகப் போகிறது ?

    யேசு ,இந்து ம்தம் பற்றி பாடிய கண்னதசன் யார்?

    தன் மதச் சார்புக்கும் , எழுதும் எழுத்துக்கும் ஒற்றுமை இருக்க வேண்டுமா என்ன ??

    • செந்தில்,

      உலகிலயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் திருக்குறள் மூன்றாம் இடத்தில் உள்ளது,மனித இனத்தின் நல்வாழ்வுக்கான நன்னெறி கருத்துப் பெட்டகம் அது என்பதால் இத்தகைய பெருமையை திருக்குறள் பெற்றுள்ளது.

      திருக்குறளின் மேன்மை ஒளி விட்டு மின்னி அதன் புகழ் பரவத்தொடங்கிய உடன் பல சமயத்தவரும் திருவள்ளுவருக்கு சொந்தம் கொண்டாட ஓடோடி வந்தனர்.நாட்டின் விடுதலைக்காகவும் மக்களின் மேன்மைக்காகவும் சாதி,மதங்களை கடந்து போராடிய மாவீரர்களை இன்று பல சாதி சங்கங்கள் சொந்தம் கொண்டாடுவதைப் போல இழிவானது அது.

      அப்படி வந்தவர்கள் கடவுள்,மறுபிறப்பு,பழம்வினை தொடர்பு போன்ற தங்கள் மூடக் கருத்துக்களையும் வள்ளுவர் மீது ஏற்றி வைத்தனர்.திருவள்ளுவரின் இயற் பெயரே யாருக்கும் தெரியாது.அவர் வள்ளுவர் குலத்தை சேர்ந்தவர் என்பதை வைத்து திருவள்ளுவர் என அழைக்கப்படுகிறார்.இன்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் திருமணங்களை வள்ளுவர்கள் நடத்தி வைப்பதை நீங்கள் பார்க்க முடியும்.

      உண்மையில் கடவுள் ,பழம்வினை தொடர்பு மறுப்பாளர்களான கணியர்கள் மரபில் வந்த திருவள்ளுவர் மீது இவர்கள் அள்ளி இறைக்கும் சேற்றை அகற்றி தூய்மை படுத்தும் முயற்சியில் பல தமிழ் சான்றோர்கள் ஈடு பட்டு வந்துள்ளனர்.அத்தகைய சான்றோரை துணையாக கொண்டு நானும் அந்த முயற்சியில் ராமனுக்கு உதவிய அணிலை போல என்னையும் இணைத்துக் கொள்கிறேன்.

      இத்தகைய விவாதங்களின் மூலமாக தமிழின் மீதான ஆர்வமும் பற்றும் ஒரு சிலருக்காவது கூடுதலாகுமேயானால் அதுவே இந்த விவாதத்தின் வெற்றியாக கருதுகிறேன்.

      • ///கடவுள்,மறுபிறப்பு,பழம் வினை தொடர்பு போன்ற தங்கள் மூடக் கருத்துகளையும் வள்ளுவர் மீது ஏற்றி வைத்தனர்///

        திப்பு நீங்கள் கடவுள் மறுப்பாளரா? இந்த போஸ்ட்டில் உள்ள உங்களது விவாதங்களை பார்த்தால் எனக்கு அப்படி தோனவில்லை.அப்படியெனில் உங்களது கடவுள் நம்பிக்கை அறிவு நம்பிக்கை,மற்றவர்களின் கடவுள் நம்பிக்கை மூடநம்பிக்கையா? எனக்காக கொஞ்சம் விளக்குங்களேன்.

        ///திருவள்ளுவர் மீது இவர்கள் அள்ளி இறைக்கும் சேற்றை///

        ஊழ் என்பது ஆபிரகாமிய மதங்கள் கூறும் விதிதான் என்றால் அது வள்ளுவர் மீது சந்தனமாக தெளிக்கப்பட்டதாக கூறுவீர்கள் இல்லையா.

        • இந்த விவாதத்தில் நான் கூறும் கருத்துக்களை ஒரு கடவுள் மறுப்பாளர் சொன்னால் அப்படியே ஏற்றுக் கொள்வீர்களா.மறுத்து விவாதம் பண்ணுவீர்கள்தானே.அப்படியானால் இந்த கருத்துக்களை சொல்வதில் உங்களுக்கு பிரச்னையில்லை.சொல்பவர் யார் என்பதில்தான் உங்களுக்கு பிரச்னை.

          அய்யா,நியாயத்தை யார் வேண்டுமானாலும் கேட்கலாம். அநீதிக்குத்தான் துணை போக கூடாது. நான் எப்போதுமே எனது அடையாளத்தை மத நம்பிக்கையை மறைத்ததில்லை.அதே போல் எனது மதம்தான் உயர்ந்தது என அகந்தையோடு உரைத்ததில்லை.காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற பழமொழிக்கு ஒப்ப அவரவர் நம்பிக்கை அவரவருக்கு உயர்ந்தது என்றே இந்த பதிவில் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறேன்.

          பண்டைய தமிழகத்தில் ஒரு காலத்தில் அரசியல் முறையாகவும் வாழ்வியலாகவும் இருந்த வள்ளுவத்தின் சார்பில் நான் பேசுகிறேன்.அந்த வள்ளுவத்தில் விளைந்த திருக்குறள் மீது பொய்மைகள் இட்டுக் கட்டப்படுவதை எதிர்த்து எழுதுகிறேன்.ஒரு தமிழன் என்ற முறையில் அதற்கான உரிமை எனக்கு முற்று முழுதாக உள்ளது.இதில் எனது மத நம்பிக்கைகள் தலையிட அணுவளவும் நான் இடம் கொடுக்கவில்லை.இதையும் நான் ஆதாரத்துடன்தான் சொல்கிறேன்.

          பின்னூட்டம் எண்.123.1-ல் நான் எழுதியதை மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள்.

          \\ஊழ் அதிகாரத்தில்

          ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
          சூழினுந் தான்முந் துறும்.

          என்று சொன்ன வள்ளுவர்தான் பிறிதோர் இடத்தில்.

          ஆள்வினையுடைமை என்னும் அதிகாரத்தில்,

          ‘ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
          தாழாது உஞற்று பவர்.’

          என்று குறிப்பிடுகிறார்.அப்படியானால் ஒன்றுக்கொன்று முரண்படும் இந்த குறள்களை எப்படி விளங்கி கொள்வது.இங்குதான் முத்தமிழ் வித்தகர் கலைஞர் கை கொடுக்கிறார்.எழுதப்பட்ட விதி,இறைவன் வகுத்த முன் பின் பிறவிப்பயன் என்று கடும் பொருளை ஊழுக்கு கொடுத்தால் அதை வெல்வது எப்படி சாத்தியமாகும்.அண்ட சராசரங்களை படைத்த வலிமையானவன் வகுத்ததை சாதாரண எளிய மனிதன் எப்படி வெல்ல முடியும்.ஆகவே ஊழ் எனபது முற்பிறவி பயன் என்று விளங்கி கொள்வது அறிவுக்கு பொருத்தமாக இல்லை.அதையே கலைஞர் சொல்லியவாறு இயற்கை நிலை என பொருள் கொண்டு பாருங்கள்.ஊழ் முந்துறுவதும் ஊழை உப்பக்கம் காண செய்வதும் ஒன்றுக்கொன்று முரண்படா.//

          ஊழுக்கு பொருளாக ஆப்ரகாமிய மதங்கள் நம்பும் விதியை பொருத்த மறுத்திருக்கிறேன்.ஆனால் நீங்களோ
          \\ஊழ் என்பது ஆபிரகாமிய மதங்கள் கூறும் விதிதான் என்றால் அது வள்ளுவர் மீது சந்தனமாக தெளிக்கப்பட்டதாக கூறுவீர்கள் இல்லையா.//

          என்று அபாண்டமாக பேசுகிறீர்கள்.

  125. அய்யா நீங்கள் பிற மதத்தவரை அவமதிப்பதாக சொல்லவில்லை.அவர்கள் கடவுள் விதித்தது என்பதை எந்த சொல் கொண்டு அழைப்பது என்றுதான் கேட்கிறேன்.ஏனென்றால் அவர்கள் இதுகாறும் பயன்படுத்தி வரும் விதி என்ற சொல்லை முற்பிறவி பயன் என்று நீங்கள் உங்கள் பெயரில் பட்டா போட்டுக் கொண்டு விட்டீர்கள்.தயவு செய்து அவர்களுக்கும் ஏதாவது ஒரு சொல்லை கை காட்டி விட்டு போங்கள்.அவர்களும் பிழைத்துப் போகட்டும்.

    \\உங்கள் வாதப்படி பிறவியை ஏன் பெருங்கடலாக உருவகிக்கிறார் என்று கூறுங்களேன் பார்ப்போம்.//

    வாழ்க்கை என்பது மலர்கள் விரித்த பாதையல்ல.திக்கு தெரியாத காட்டில் தனியொருவனாக பயணிப்பது கடினம்.தக்க வழிகாட்டி இல்லையேல் வாழ்க்கையே துன்ப கடலாக போய் விடும்.என்றுதான் வள்ளுவர் பிறவியை பெருங்கடலாக உருவகிக்கிறார்.

    \\நீங்கள் ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்று சொன்னீர்கள் அல்லவா,அதற்கு நான் விளக்கமும் கொடுத்தேன் அல்லவா? அது குறித்து ஏன் பிறகு பேச வில்லை? //

    அது சமண முனிவர் இளங்கோவடிகளின் மறுபிறப்பு பற்றிய பாடல்.நம்பிக்கை.அதில் மாற்று கருத்து சொல்ல ஏதுமில்லை.ஆனால் வள்ளுவர் ஊழ் என்ற சொல்லால் முற்பிறவி பயனை குறிக்கவில்லை.ஏனென்றால் அவர் சமணரில்லை.இதைதான் நான் துவக்கம் முதலே சொல்கிறேன்.நான் என்னவோ அது குறித்து பேசாதது போல் பாசாங்கு செய்கிறீர்கள்.

    \\சரியான கருத்துதான்! ஆனால் சோதிடம் கர்ம சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டது என்றால் எனக்கு காமாலை கண் என்று ஒப்பாரி வைப்பீர்கள்.அதனால் சோதிட சாத்திரத்தில் 5ம் பாவகமாகிய பூர்வ புண்ணிய ஸ்தானம் எதை குறிக்கிறது என்றும்,12ம் பாவகமாகிய மோட்ச ஸ்தானம் எதை குறிக்கிறது //

    விவாதம் கணியன் பூங்குண்றனார முற்பிறவி பயனைத்தான் குறித்தாரா.என்பது பற்றியது.கணியர்கள் கடவுள் மறுப்பாளர்கள் பழம் வினை தொடர்பியல் மறுப்பாளர்கள் என்று சுட்டிக்காட்டி இருக்கிறேன்.அப்படி இருந்தும் அவர் முற்பிறவி பயனைத்தான் குறித்தார் என்று நிறுவும் வாதங்களை வையுங்கள்.

    கணியன் பூங்குன்றனார் பற்றி சொல்லுங்கள் என கேட்டபோது நீதானே மேற்கோள் காட்டினாய் நீயே சொல் என்றீர்கள் அல்லவா.நான் அதை செய்தேன் அல்லவா.ஆகவே சோதிடம் பற்றி நீங்களே சொல்லி விட்டு வாதங்களை வைக்கவும்.

    \\அல்குரான் ஒரு இஸ்லாமிய நூல்.அதில் அல்லா இறைவனாக குறிக்கப் படுகிறார்.ஒரு சமணர் அதுக்கு உரை எழுதுகிறார்.குரான் …….இதில் எது சரியான வாதம்?//

    நல்ல கேள்வி.பயன் உங்களுக்கு இல்லை.எனக்கு.

    குரான் இசுலாமிய நூல் என நீங்களே சொல்லி விட்டீர்கள்.ஆகவே இசுலாமிய கருத்துதான் செல்லுபடியாகும்.ஆனால் நீங்களே சொல்லி இருக்கிறீர்கள்.திருக்குறள் சமண நூல் அல்ல.அது ஒரு அற நூல் என்று.ஆனாலும் சமண கருத்துதான் செல்லுபடியாகும் என அடம் பிடிப்பது சரியில்லையே.வள்ளுவக் கணியர் என்று சொல் தமிழில் இருக்கிறது.அது என்னவென்று கொஞ்சம் தேடி படித்து விட்டு வாருங்களேன்.இந்த மாதிரி தளர்வு பேச்சுக்களை விட்டு மாட்டிக் கொள்ள மாட்டீர்கள்.

  126. ///கணியர் என்பவர்கள் பண்டைய தமிழ்நாட்டில் வானியலிலும் அதனடிப்படையிலெழுந்த சோதிடத்திலும் வல்லவர்கள்.இவர்கள் அறிவர்,அறிவன்,கணி,கணியன் என்றும் அழைக்கப்பட்டனர்///

    முன்பே இது சரியான கருத்து என்று கூறி உள்ளேன்.சான்றாக

    மறுஇல் செய்திமூ வகைக் காலமும்
    நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்[தொல்காப்பியம்-பொருள்-74 4:5]

    அறிவன் மூன்று காலத்தையும் உணர்ந்தவனாம்.

    ///வள்ளுவக் கணியர் என்ற சொல் தமிழில் இருக்கிறது///

    ஆம் இருக்கிறது.

    ///கணியர்கள் கடவுள் மறுப்பாளர்கள் பழம் வினை தொடர்பியல் மறுப்பாளர்கள்///

    இதுக்கு எந்த ஆதாரமும் இல்லை.நீங்களும் கொடுக்கவில்லை.இறை மறுப்பாளர்கள் இல்லை என்று மறுக்க எனக்கு அவசியம் இல்லை.ஆனால் பழம் வினை தொடர்பியல் மறுப்பாளர்கள் இல்லை என்று மறுப்பது அவசியம்.

    காலக்கணிதம் செய்வதால் அறிவன் என்று அறியப்படும் சங்ககால புலவராகிய நல்லந்துவனார் சங்க இலக்கியமாகிய பரிபாடலில் எழுதிய பாடல் கீழே

    உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர
    வருடையைப் படிமகன் வாய்ப்ப பொருள்தெரி
    புந்தி மிதுனம் பொருந்த புலர் விடியல்
    அங்கி உயர் நிற்ப,அந்தணன் பங்குவின்
    இல்லத் துணைக்கு உப்பால் எய்த இறையமன்
    வில்லின் கடை மகரம் மேவ,பாம்பு ஒல்லை
    மதியம் மறைய,வரு நாளில் வாய்ந்த
    பொதியில் முனிவன் புரை வரைக் கீறி
    மிதுனம் அடைய,விரிகதிர் வேனில்
    எதிர் வரவு மாரி இயைக என் ஆற்றால்[பரிபாடல்-வையை-11 1-10]

    மழைக்கான கிரக நிலையை பற்றி கூறுகிறார்.தேவை எனில் விரிவாக விளக்குகிறேன்.

    இதே பரிபாடல் 11வது பாடலின் இறுதிவரிகள் கீழே.

    மின் இழை நறுநுதல் மகள் மேம்பட்ட
    கன்னிமை கனியாக் கைக்கிளைக் காம
    இன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல்
    முன்முறை செய் தவத்தின் இம்முறை இயைந்தோம்
    மறுமுறை அமையத்தும் இயைக!
    நறுநீர் வையை நயத்தகு நிறையே![பரிபாடல் -வையை-11 134-140]

    பொருள்:

    பரிபாடலால் புகழப்பெற்ற வைகையே! இவ்வாறு கைக்கிளை காமத்தைத் தருகின்ற நின்னிடத்தே இத்தைந் நீராடலை முற்பிறப்பிற் செய்த தவத்தால் இப்பிறப்பிற் பெற்றோம்,அதனை யாவரும் நயக்கத் தக்க நினது நீர் நிறைவின் கண்ணே மறுபிறப்பிலும் பெறுவோமாக.

    இதில் முற்பிறப்பும் மறுபிறப்பும் வருவது புரியும் என்று நினைக்கிறேன்.

    தயவு செய்து மட்டையடி விவாதத்தை கைவிட்டு இதை இலக்கிய தரவுகளுடன் மறுக்க பாருங்கள்.

    • இந்த பரிபாடல் செய்யுளையும் அதற்கான பொருளையும் தமிழ் இணையக் கல்விக்கழக இணைய தளத்திலிருந்து எடுத்திருக்கிறீர்கள்.உங்களை போன்ற மறுபிறவி நம்பிக்கையாளர்கள் தங்கள் நம்பிக்கையை இலந்துவனார் மீது ஏற்றி வைத்து இருக்கிறார்கள்.[மட்டையடி என்று அவசரப்பட வேண்டாம்.உரிய விளக்கம் இன்றியோ,தக்க ஆதாரம் இன்றியோ நான் எதையும் சொல்வதில்லை .உண்மையில் நீங்கள்தான் மட்டையடி வாதக்காரர்.அதை தனி பின்னூட்டமாக சொல்கிறேன்] .

      ”முன்முறை செய் தவத்தின் இம்முறை இயைந்தோம்
      மறுமுறை அமையத்தும் இயைக!
      நறுநீர் வையை நயத்தகு நிறையே

      என்பதற்கு

      இத்தைந் நீராடலை முற்பிறப்பிற் செய்த தவத்தால் இப்பிறப்பிற் பெற்றோம்,அதனை யாவரும் நயக்கத் தக்க நினது நீர் நிறைவின் கண்ணே மறுபிறப்பிலும் பெறுவோமாக.

      என பொருள் சொல்கிறார்கள்.அதை நீங்களும் ஏற்று இங்கு வந்து ஆதாரமாக காட்டுகிறீர்கள்.வைகை ஆற்றை நோக்கி மகளிர் கூறுகின்ற அதன் உண்மையான பொருளை ஆதாரத்தோடு நான் சொல்கிறேன்.கேளுங்கள்.[பெரிய தமிழ் அறிஞனா நீ என கிண்டல் செய்தாலும் அது பற்றி கவலையில்லை]

      அந்த பாடலில் மழை பெய்வதற்கான வானியல் கூறுகளை எடுத்து சொல்லி அந்த மழை பெய்து வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஓடிக்கொண்டிருக்கும் நீரில் பெண்கள் கூட்டம் கூட்டமாக சென்று குளிப்பதாக கூறுகிறார் இலந்துவனார்.

      முன்முறை செய்தவத்தின்–முந்தைய முறை செய்த தவத்தின் காரணமாக

      இம்முறை இயைந்தோம்–இந்த முறை உன்னில் இயைந்தோம்

      மறுமுறை அமையத்தும் இயைக–அடுத்த முறை உன்னை அடையும்போதும் இயைக.

      நறுநீர் வையை நயத்தகு நிறையே-யாவரும் விரும்பக் கூடிய அடுத்த நன்னீர் பெருக்கின்போது

      அமையத்தும் என்பதற்கு ”அடையும்போதும்” என்பதுதான் பொருள்.

      ஆதாரம்.பரணரின் பாலை பாடல்.

      இலங்குசுடர் மண்டிலம் புலந்தலை பெயர்ந்து
      பல்கதிர் மழுகிய கல்ரே் அமையத்து
      அலந்தலை மூதேறு ஆண்குரல் விளிப்ப
      மனைவளர் நொச்சி மாசேர்பு வதிய

      பொருள்.
      இலங்கு சுடர் மண்டிலம் – விளங்கும் ஒளி வாய்ந்த ஞாயிறு, புலம் தலை பெயர்ந்து – வானிடத்தினின்றும் நீங்கி, பல் கதிர் மழுகிய சுல்சேர் அமையத்து – தனது பலவாகிய கதிர்களும் வெம்மை குறையப்பெற்ற மேற்கு மலையினை அடையும் போழ்தில், அலந்தலை முது ஏறு – கலக்கமுற்ற முதிய ஏறு, ஆண்குரல் விளிப்ப – தன் ஆண் குரல் தோன்ற அழைத்திட, மனை வளர் நொச்சி மாசேர்பு வதிய – மனையைச் சூழ்ந்து வளரும் நொச்சியின்கண் மான்கள் சேர்ந்து தங்கியிருக்க,
      ஆண்டுதோறும் மழைக்காலத்தில் வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது புதுப்புனலில் நீராடி மகிழ்வது அக்கால தமிழர் வழக்கமாக இருந்திருக்க வேண்டும்.பரத்தை மாது மகளிர் கூட்டத்தில் ஒளிந்து கொள்ளும் அளவுக்கு கூட்டம் இருந்ததாக புலவர் சொல்கிறார்.அப்படியானால் அது ஒரு திருவிழாவாகவே நடந்திருக்க வேண்டும்.அதனால்தான் அடுத்த ஆண்டு திருவிழா வுக்கு வரும்போதும் தன்னோடு இயைந்து நடந்து கொள்ளுமாறு வைகைக்கு வேண்டுகோள் விடுக்கிறாள் தலைவி.

      யாராவது முற்பிறவி என்று சொன்னாலே அப்படியே அதை நம்பிக் கொண்டு வராதீர்கள்.சற்றே எண்ணிப் பார்த்து சரி காணுங்கள்.பிறவி .பிறப்பு குறித்த எந்த சொல்லும் இல்லாத இந்த வரிகள் முன்,பின் பிறவிகளை பற்றி சொல்வதாக யார் சொன்னாலும் அப்படியே நம்பி விடுவதா,

      • கோச்சுகாதிங்க[ஹா,ஹா,ஹா].பாடலின் திரண்ட பொருளை தாருங்கள்.முந்தைய முறை செய்த தவம் என்றால் எப்ப செய்தது என்று கூறுங்கள்.

        பரிபாடலுக்கு இளம்பூரணர்,நச்சினார்க்கினியர்,பரிமேலழகர் முதலியவர்கள் பழைய உரையாசிரியர்கள்.பிற்காலத்தில் முதல் முறையாக உரையுடன் பதிப்பித்தவர் உ.வே.சா அவர்கள்

        பிறகு பெருமழை புலவர் பொ.வே.சோமசுந்தரனார் விரிவான உரை எழுதி உள்ளார்.நான் மேற்கோள் காட்டியது அவருடைய உரையைதான்.

        எனக்கு தெரிந்து பரிபாடல் உரையாசிரியர்களில் குழப்பம் இருப்பதாக தெரியவில்லை.ஆனால் உங்களை போன்ற தமிழறிஞர்கள் அதில் பிழை உள்ளது எனும்போது நம்பாமலும் இருக்கமுடியவில்லை.

        போகட்டும் நீங்கள் சங்க இலக்கியம் முழுமைக்கும் உண்மையான உரையை பிறகு எழுதலாம்.பரிபாடல் பாடல் 11க்காவது மட்டுமாவது உண்மையான உரையை இப்பொழுது கூறி எங்களுக்கு நல்ல புத்தி புகட்டுங்கள் ஐயா.

        • திரண்ட உரை கண்டு என்ன பயன்.

          எடுத்துக் கொண்ட விவாதப்பொருள் அந்த பாடலில் முன்,பின் பிறவிகளை இலந்துவனார் குறித்தாரா என்பதுதான்.இல்லை என்று குறிப்பிட்ட வரிகளை எடுத்துக் கொண்டு விளக்கி இருக்கிறேன்.திரண்ட பொருளில் உங்களுக்கு சாதகமாக ஏதேனும் இருந்தால் அதை நீங்கள்தான் எடுத்து வர வேண்டும்.உங்கள் சுமையை என்னை சுமக்க சொல்லலாமா.

          மேலும் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.பரிபாடலுக்கு உரை எழுதும் எண்ணம் இல்லை.இப்போது எழுதிய உரைக்கே உங்களுக்கு கோபம் கொப்பளிக்கிறது.மேலும் உங்களை சிரமப்படுத்த கூடாது என்ற நல்லெண்ணம்தான் காரணம் நண்பரே.

          • இத்தை நீராடலை முற்பிறப்பிற் செய்த தவத்தால் இப்பிறப்பிற் பெற்றோம் அதனை யாவரும் நயக்கத் தக்க நினது நீர் நிறைவின் கண்ணே மறுபிறப்பிலும் பெறுவோமாக.

            என்று பொருள் கூறினேன் அல்லவா அதே போன்று சேர்த்து பொருள் கூறுங்கள்.அப்பதானே உங்கள் கோமாளிதனமான விளக்கம் எல்லாருக்கும் புரியும்.

            முன் முறை செய் தவம் என்றால் எப்ப என்று கேட்டேன் அல்லவா? அதற்கு பதில் கூறாமல் நழுவினால் எப்படி?

            அப்புறம் பரிபாடலுக்கு உரை எழுத மாட்டேன் என்ற எண்ணத்தை தயவு செய்து கைவிடுங்கள்.நச்சினார்க்கினியர் உள்ளிட்ட அனைவரையும் முட்டாள் என்று வாதம் செய்யும் மாபெரும் உரையாசிரியரை தமிழ்நாடு இழப்பதை நான் அனுமதிக்க முடியாது.

            அப்புறம் நீங்கள் குடுத்த விளக்கங்களை பார்த்து எனக்கு கோபம் இல்லை.காமெடின்கள் மீது யாருக்குதான் கோபம் வரும்.மற்ற அனைத்து பின்னுட்டங்களுக்கும் மறுமொழியை மாலை வந்து தொடர்கிறேன்.

            • முன்முறை என்பதற்கு முந்தைய முறை என்று சொன்னதற்கு பிறகு வேறு விளக்கம் இன்னும் சொல்லவில்லை.அதற்கு திரண்ட விளக்கம் கேட்டீர்கள்.அதை நீங்கள் சொல்லலாம் என்ற அளவில்தான் பேசி இருக்கிறேன்.ஆகவே நழுவி செல்லவில்லை என்பதை புரிந்து கொள்க.நழுவி செல்வதில் நீங்கள்தான் கில்லாடி.அதனால்தான் பின்னூட்டம் எண் 123.1.1.1.1 ல் உள்ள வாதத்திற்கு பதில் சொல்ல முடியாமல் அடைத்த வாயை இன்னும் திறக்காமல் இருக்கிறீர்கள்.நேரம் கடந்து கொண்டிருக்கிறது.காலையில் சந்திப்போம்.

      • @திப்பு,

        முன்முறை,இம்முறை,மறுமுறை என்ற மூன்று சொற்களை நல்லந்துவனார் பயன்படுத்துகிறார்.அதற்கு முறையே முற்பிறப்பு,இப்பிறப்பு,மறுபிறப்பு என்று இளம்பூரனார்,நச்சினார்கினியர் தொடங்கி தற்கால தமிழ் அறிஞர்கள் வரை அதே பொருளையே கொள்கிறார்கள்.

        திப்பு அவர்கள் கோமாளிதனமாக அமையத்தும் என்ற வார்த்தைதான் மறுபிறப்பை குறிப்பதாக கற்பனை செய்கொன்டு தமிழுக்கு தொண்டு செய்த உரை ஆசிரியர்களை முட்டாள்கள் என்கிறார்.அமையத்தும் என்றால் அடையும்போது என்றுதான் பொருள் என்று வாதம் செய்கிறார்.இது உங்களுக்கு தெரியும் போது புகழ் பெற்ற உரையாசிரியர்களுக்கு தெரியாதா?

        முற்பிறப்பில் செய்த தவத்தால் இப்பிறப்பில் உன்னில் நீராடும் பாக்கியம் பெற்றோம்,மறுபிறப்பு ஒன்று அமையுமானால் அதிலும் உன்னில் நீராடும் பேறு வேண்டும் என்பது சரியான பொருளா

        இல்லை முன்னாடி செய்ததவத்தால்[எப்பன்னு அவர் கூற வில்லை] இந்த வருசம் நீராடினோம்,அடுத்த வருசமும் நீராடுவோம் என்பது சரியான பொருளா?

        திப்பு கூறும் பொருளை எந்த உரை ஆசிரியர்களும் கூற மாட்டார்கள் ஏனென்றால் அது கோமாளிதனமானது.இப்படி ஒரு அசட்டு விளக்கத்தை கூறிவிட்டு இன்றுபோய் நாளை வா என்று ராமாயண டயலாக் எல்லாம் விடுகிறார்.இதற்கெல்லாம் அசட்டு துணிச்சல் வேண்டும்.

        திப்பு உங்களை மாதிரி நான் இல்லை.எத்தனை நாள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்.உண்மையான விளக்கத்தை வந்து கூறுங்கள்.அது போதும்.

        • திருவள்ளுவர் என்னிடம் சொல்லியிருக்கிறார்.யார் எதை சொன்னாலும் அப்படியே நம்பி விடாதே.அதன் உண்மை தன்மையை ஆய்ந்து அறிந்து ஏற்றுக்கொள் என்று.

          எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
          மெய்ப்பொருள் காண்பது அறிவு.

          விவாதத்தில் உள்ள பரிபாடலில் இலந்துவனார் மழை பெய்வதற்கான சாத்தியங்களை விண்மீன்கள்,கோள்கள் ஆகியவற்றின் இருப்பிட தோற்றங்களை வைத்து சொல்கிறார்.மழைக்காலம் துவங்குவதற்கான அறிகுறிகள் அவை.பின்னர் வைகையில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதாகவும் மக்கள் கூட்டம் கூட்டமாக அதில் நீராடி மகிழ்வதாகவும் சொல்கிறார்.இந்தக் குறிப்பிட்ட பரிபாடல் காட்டும் வானத் தோற்றத்தைக் கணக்கில் கொண்டு பார்க்கையில், இக்காட்சி, கி.பி. 634 ஜூன் 17 அன்றைய நாளுக்குப் பொருந்துவதாக உள்ளது என தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் ஐயம்பெருமாள் கூறியுள்ளார்.ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் வரும்.அப்போதெல்லாம் ஆறுகளில் புதுப்புனல் பெருக்கெடுக்கும் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.அப்படியானால் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் புதுப்புனலில் நீராடி அதனை கொண்டாடியிருப்பார்கள்.

          இப்போது எடுத்துக் கொண்ட விவாதப்பொருளுக்கு வருவோம்.புதுப்புனலில் நீராட கூட்டம் அலை மோதியது என்ற செய்தியிலிருந்து மக்கள் ஆண்டுதோறும் புதுப்புனலில் நீராடுவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்கள் என்பது தெளிபு.பாடலில் வரும் தலைவியும் அந்த வழக்கத்தை கடைபிடித்திருக்கிறாள்.ஆகவே கடந்த ஆண்டு நீராடி வைகையிடம் வேண்டிக்கொண்டதைத்தான் அவள் முன்முறை செய்தவம் என்று குறிக்கிறாள்.அடுத்த நீர்பெருக்கின்போது உன்னிடம் நீராட வேண்டும் என வேண்டுவது அதற்கடுத்த ஆண்டு .அதில் மழை இல்லாமல் போனால் அதற்கு அடுத்த அடுத்த ஆண்டுகளில் ஏற்படும் நீர்பெருக்கின்போது என்பதுதான் பொருள்.அதைத்தான்

          ”நறுநீர் வையை நயத்தகு நிறையே”

          என்று உரைக்கிறாள்.

          நீங்கள் சொல்வது போல் முற் பிறவியில் செய்த தவத்தால் இந்த பிறவியில் நீராடினாள் என பொருள் கொண்டால் தலைவி அவளின் இந்த பிறவி வாழ்க்கையில் இப்போதுதான் வைகையில் முதன்முறையாக நீராடுகிறாள் என்றாகிறது.அடுத்த பிறவியிலும் நீராட வேண்டும் என்று அவள் வேண்டுவதாக கொண்டால் எஞ்சியுள்ள இந்த பிறவி வாழ்நாளில் அவள் மீண்டும் வைகைக்கு நீராட வர மாட்டாள் என்றாகிறது.ஊரே ஆண்டுதோறும் கொண்டாடி மகிழும் ஒரு திருநாளை வாழ்நாளில் ஒரு முறைதான் அவள் அனுபவிப்பாள் என்பது அறிவுக்கு பொருத்தமாக இல்லையே.

          \\அதனை யாவரும் நயக்கத் தக்க நினது நீர் நிறைவின் கண்ணே மறுபிறப்பிலும் பெறுவோமாக.//

          நீங்கள் சொல்லும் பொருள்தான் இது.அனைவரும் விரும்பக்கூடியஅந்த நீர் நிறைவு கி.பி.635 லும் வருமே.அந்த ஆண்டு மழை இல்லாமல் போயிருந்தாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் வந்திருக்குமே.ஆகவே கடந்த ஆண்டு வேண்டிக்கொண்டதால் இந்த ஆண்டு நீராடினோம்.இந்த ஆண்டு வேண்டிக் கொள்வதால் அடுத்த ஆண்டும் எம்மோடு இயைக என்பதுதான் அறிவுக்கு பொருத்தமானது.பிறவி பெரும்பயன் என்று கொள்வதாக இருந்தால் இலந்துவனார் பல இரவுகளில் வெகு நேரம் கண்விழித்து விண்மீன் நாள்மீன் நிலைகளை அவதானித்து மழை பெய்ய போகிறது என்பதெல்லாம் சொல்ல வேண்டியதில்லையே,

          எங்கும் மழை ஈசன் அருளால்
          பொங்கும் வையை புதுப்புனலால்

          என்று கலந்து கட்டி அடித்து விட்டு போயிருக்கலாமே.அவரது கடும் உழைப்பை பெருமை படுத்தா விட்டாலும் உங்கள் மூட நம்பிக்கைகளை அவர் மீது ஏற்றி வைத்து சிறுமைப்படுத்தாமலாவது இருங்கள்.

          பெரிய பெரிய மேதைகள் சொல்லி விட்டார்கள் நீ யாரடா சிறுவன் அதை மறுப்பதற்கு என்ற பாச்சாவெல்லாம் பலிக்காது.முன்னரே சொல்லியிருக்கிறேன்.மறுபிறவி நம்பிக்கையாளர்கள் என்பதால் அவர்கள் தாங்கள் செல்லுமிடமெல்லாம் [உரை சொல்லுமிடமெல்லாம்] அதனை ஏற்றி வைத்து விடுகிறார்கள்.முன் என்ற சொல்லை கண்டாலே மறுபிறப்பு என கிளம்புவது காமாலை கண் கொண்டு காண்பதெல்லாம் மஞ்சள் என்பது.

          பி.கு. நல்ல கற்பனை வளம் உங்களுக்கு.அமையத்தும் என்ற சொல்லுக்கு மறுபிறவி என்று நீங்கள் பொருள் சொல்வதாக நான் நினைத்துக்கொண்டேன் எனபது உங்கள் கற்பனை.நான் பொருள் சொன்ன அந்த வரிகளில் அந்த ஒரு சொல்லை தவிர ஏனையவை எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவை.இது மட்டுமே சற்று கடினமான சொல் என்பதால் ஆதாரம் கொண்டு விளக்க வேண்டியதாயிற்று.அந்த பாடலில் பிறவி,பிறப்பு என குறிக்கும் சொல் எதுவுமே இல்லை என அந்த பின்னூட்டத்திலேயே சொல்லி இருக்கிறேன்,கவனிக்கவும்.

          • சொன்னத விட்டுட்டு சொரையை ஆய்ரதுன்னு எங்க கிராமத்தில் பழமொழி இருக்கு அது மாதிரி இருக்கு திப்பு,நான் கேட்டது மூனுவரிக்கு சேர்ந்த மாதிரி உரை.அத விட்டுவிட்டு மத்தத எல்லாம் சொல்கிறார்.அதுல ஓட்டை லாஜிக் வேற பேசுகிறார்.விரிவா பார்ப்போம்.

            முதலில் அவர்கூறும் காலக்கணக்கு தவறு.கடைச்சங்க காலம் கி.பி.ல் இல்லை.கி.மு.வில்.உண்மையான காலம் கி.மு.161 அதாவது கலி 2941 பிரமாதி ஆண்டு ஆவணி மாதம் 12ம் தேதி வியாழக்கிழமை சதுர்த்தசி[பூர்வ பட்சம்]நாழிகை 15 வினாடி4 அவிட்ட நட்சத்திரம் நாழிகை 45 வினாடி53.

            இனி பாடல்

            முன்முறை செய் தவத்தின் இம்முறை இயைந்தெம்
            மறுமுறை அமையத்தும் இயைக!
            நறுநீர் வையை நயத் தகு நிறையே!

            இதுக்கு திப்பு கொடுக்கும் பொருள்;

            போன ஆண்டு நீராடி வேண்டிகொண்டோம்,அதன் பயனாக இந்த ஆண்டு நீராடுகிறோம்,அடுத்த ஆண்டும் நீராட அருள்புரிக.

            உரை ஆசிரியர்கள் சொல்வது:

            முற்பிறப்பில் செய்த தவத்தால் இப்பிறப்பில் நீராடும் பேறுபெற்றோம்,அதை மறுபிறப்பிலும் பெற அருள் புரிக.

            அதுக்கு திப்பு கொடுக்கும் ஓட்டை லாஜிக் இப்பிறப்புன்னா இப்பதானே முதல் முறையாக நீராடுகிறாள் என்று அர்த்தமாகிறதே என்பது,அடுத்த வருடமும் நீராடுவாளே என்று கேட்கிறார்.

            நான் கேக்கிறேன் இப்பிறப்பு என்றால் இந்த வருடம் மட்டும் என்றோ இப்பதான் முதல் முறையாக நீராடுகிறாள் என்று அர்த்தம் என்றும் யார் சொன்னது.
            அவள் பிறந்து முதல் முறை புதுபுனலாடுவது தொடங்கி மரணம் வரையிலானது அல்லவா இப்பிறப்பு என்பது.ஆனால் அவளுக்கு அது போதாது மறுபிறப்பிலும் அதே பகுதியில் பிறந்து அப்பிறப்பு முழுவதும் வைகையில் நீராட வேண்டுமாம் அதுதான் அவள் வேண்டுதல்.இப்பிறவிதோறும் புதுபுனலாட முற்பிறப்பில் செய்த தவம்தான் காரணமாம்.

            திப்பு கொடுக்கும் பொருளில் உள்ள ஒட்டை என்ன? போன வருடம் தான் முதல் முறையாக குளித்தாலா என்று கேக்கலாம்.அப்படி இருக்காது வருடா வருடம் வைகையில் வெள்ளம் வரும்.அவளும் குளித்து இருப்பாள் இதற்கு எதுக்கு வேண்டுதல்?.திப்பு போன்றவர்கள் வேண்டிக்கொள்ளலாம்.சங்ககால பெண் வருடா வருடம் இயல்பாக நடப்பதற்கு வேண்டிகொள்வாளா? அவள்தான் முட்டாளா? இல்லை பாடல் எழுதிய நல்லந்துவனார்தான் முட்டாளா?

            வள்ளுவர் சொன்னது மெய்பொருள் காண்பவருக்கு ஓட்டைவாதம் பேசும் உங்களுக்கு இல்லை.

            மீண்டும் சொல்கிறேன் எத்தனைநாள் வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள்.உண்மையான பொருளை சொல்லுங்கள்.

            பி.கு.:அமையத்தும்-அடைதல் என்று சொன்னால் முடிந்து போகுது.எதுக்கு பாட்டெல்லாம் சொல்லி விளக்குறிங்க?ஒரு வார்த்தைக்கு பொருள் சொல்ல ஒரு பாட்டெ சொல்லி அதுக்கு பொருளை சொலலனுமா? நல்லா கொடுக்குறாருய்யா டீடெயிலு

            • ///அந்த பாடலில் பிறவி,பிறப்பு என குறிக்கும் சொல் எதுவும் இல்லை///

              எந்த சொல் குறிக்குதுன்னு முன்னாடியே சொல்லிட்டேன்.வருடம்,ஆண்டு என்று குறிக்கும் சொல்லும்தான் இல்லை.நீங்கள் எப்படி பொருள் கொண்டீர்கள்?

              முன்முறை செய் தவத்தின் -இதுல குளிச்சுட்டு வேண்டிகிட்டேன் என்று எங்க இருக்கு? நீங்களா அடிச்சி விடுறதா? செய் தவம் என்றால் குளிச்சுட்டு வேண்டிகிறதுன்னு எந்த முட்டாள் உங்களிடம் சொன்னது.

              இம்முறை இயைந்தோம்,மறுமுறை இயைக இதில்ன் இயைதல் என்ற சொல்தானே நீராடுதலை குறிக்கிறது.அனைத்து உரை ஆசிரியர்களும் முட்டாள்கள் நீங்க மட்டும்தான் புத்திசாலியா? போங்கண்ணே சும்மா காமெடி பண்ணாம

            • ஒரு அறிவியல் அறிஞர் ஒவ்வொரு நாளும் மாறும் வான் தோற்றத்தை வைத்து ஆய்ந்து சொல்வது தவறாம்.அதுக்கு பதில் சொல்றாரு பாருங்க.

              \\உண்மையான காலம் கி.மு.161 அதாவது கலி 2941 பிரமாதி ஆண்டு ஆவணி மாதம் 12ம் தேதி வியாழக்கிழமை சதுர்த்தசி[பூர்வ பட்சம்]நாழிகை 15 வினாடி4 அவிட்ட நட்சத்திரம் நாழிகை 45 வினாடி53.//

              இவ்வளவு ”டீடெய்லு” சொன்னவரு ஆதாரம் என்ன வென்று சொல்லாமல் இருக்கலாமா.

              \\உண்மையான பொருளை சொல்லுங்கள்.//

              உங்களுக்கு ஏதுவாக இருந்தால் உண்மையான பொருள்,உவப்பாக இல்லையென்றால் தவறான பொருளா

              தேவரர் வாதப்படி முப்பது நாற்பது ஆண்டுகளாக வந்து வைகை கரையில் நின்று கொண்டு ”போன பிறவியில் செய்த தவத்தால் இந்த பிறவியில உன்னில் குளிக்கிறேன்”.அதுவும் குளிக்கிறோம் என்று பன்மையில் தம் தோழியரையும் சேர்த்து சொல்கிறாள்.அடுத்த பிறவியிலும் இதே பாக்கியம் கிடைக்கணும் என்று ”முன் பதிவு” செய்து கொள்கிறாள்.

              இந்த முன் பதிவு தான் இந்த பிறவியில் செய்யும் தவம் என்கிறீர்களா. சொல்லுங்கள் மேற்கொண்டு பேசலாம்.

              • மேலே உள்ள காலக் கணக்கு பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் எழுதிய பரிபாடல் விளக்க உரையில் உள்ளது.மேலும்”அறிஞர்கள் ஆராய்ந்து அறுதியிட்டுக் கூறியுள்ளனர் இம்முடிவே இப்பொழுது பலரானும் ஒப்ப முடிந்தது” என்று கூறுவதால் பல அறிஞர்கள் கருத்தை ஏற்றே இந்த முடிவுக்கு வந்திருப்பார் என கொள்ளலாம்.

                ஐயா,உங்கள் ஓட்டை வாதம் உடைக்கப் பட்டு விட்டது.அந்த பாடல் குறித்து உங்களின் பொருள் விளக்கம் எது என்று கூற வேண்டியது நீங்கள் தானே அன்றி நான் இல்லை.மேலும் நீங்களாக கற்பனை செய்யும் முன்பதிவு போன்ற வற்றிற்கு விளக்கம் அளிக்க வேன்டிய அவசியம் எனக்கு இல்லை.உங்கள் கற்பனைக்கு நீங்களே விளக்கம் தர வேண்டும்.

            • வெறுமனே விளக்கினால் இலக்கியத்தரவு கொடு என்று தேவரர்தான் கொந்தளித்தார்.சரி ” ”எங்காத்துக்காரரும் கச்சேரிக்கு போறார்” பாணியில நானும் ரெண்டு பாட்டை எடுத்து விட்டா அதுக்கும் கோவப்படுராரு.

              இப்படி முன்னால வந்தா கடிக்குது பின்னால போனா உதைக்குதுன்னு இருந்தா நான் என்னதான் பண்ணட்டும் தேவரே.

              \\ஒரு வார்த்தைக்கு பொருள் சொல்ல ஒரு பாட்டெ சொல்லி அதுக்கு பொருளை சொலலனுமா? நல்லா கொடுக்குறாருய்யா டீடெயிலு//

              • ஒரு வார்த்தைக்கு இலக்கிய தரவு கொடுன்னு யாரும் கேட்கமாட்டார்கள் அந்த வார்த்தை மிக முக்கியமாக இல்லாத வரைக்கும்.நானும் அந்த வார்த்தைக்கு அதே பொருள்தான் கொடுத்துள்ளேன்.பிறகு ஏன் இலக்கிய தரவு கேட்க போகிறேன்.உளரிவிட்டு சமாளிப்பதே உங்கள் வேலையாய் போச்சு.

    • கணியர்,சித்தர்,அறிவர் என அறியப்பட்ட அந்த அறிஞர்கள் கடவுள் மறுப்பாளர்கள், பழம் வினை தொடர்பியல் மறுப்பாளர்கள்.மதங்கள்,கடவுள் என்ற கருத்தியல்களுக்கு எதிரானவர்கள் அவர்கள்.

      ஆதாரம் இதோ.

      மெய்யுணர்வு எய்து தன்னை முதல் உணர்ந்து
      மெய்மைகள் விளங்குதல் வேண்டி பொய்மிகு
      புலன்கள் கடந்து பேருண்மை புரிவதே இறையுணர்வு.
      தூய மொழி பேணார் நாடினை நினையார்
      தம் கிளை நண்பருக்கு இரங்கார்
      தூய நல் அன்பால் உயிர்க்குஎல்லாம் நெகிழார்
      துடிப்புறும் ஏழையருக்கு அருளார்
      அன்பு இலார் உயிர்கட்கு அனி இலார் தூய்மை
      அகத்து இலார் ஒழுக்கமும் இலார்
      வன்பினால் பிறரை வருத்துவார் எனினும்
      வகைபெற உடம்பெல்லாம் பூசி
      முந்தொழுகையர் முறைகளில் தவறார்
      முழுகுவார் துறை தோறும் சென்றே
      நன்று கொல் முரண்பாடு இதுவன்றோ சமயம்.

      என்று இறையுணர்வு என்றால் என்னவென்று விளக்கி சொல்லி விட்டு சமயங்களை சாடினார் தடங்கண் சித்தர்.

      வேதங்கள் ஆவது பேசின பேச்சு
      உபநிடதங்கள் அச்சத்தின் மூச்சு
      சாத்திரம் எனபது சண்டை சரக்கு
      தோத்திரங்கள் மூடர்கள் கூச்சல்
      ஆன்மீக வாதம் ஒரு செத்த பிணம் காண்;வேத
      ஆகமங்கள் யாவும் நோயின் ரணங்கள்
      ஆன்மா என்பது பொய்யின் கற்பனை
      அடுத்த உலகம் என்று ஒன்றுமே இல்லை-மக்கள்
      பண்படா காலத்தில் புகுந்த ஒரு தொல்லை
      புத்தர் திருவள்ளுவர் சீலத் திருமூலர்-இந்தப்
      பூமியிலே பிறந்து சிறந்த நற்சீலர்
      இயற்கை வளங்களைக் கண்டவன் மனிதன்-மக்கள்
      ஏற்றத்திற்கு அவற்றை இணைத்தவன் மனிதன்.

      என்று பாடினார் தங்கவேல் லோகாயுதச் சித்தர்.

      இதற்கு மேலும் ஆதாரம் வேண்டுமா.

  127. திப்பு,

    ///மெய்மைகள் விளங்குதல் வேண்டி பொய்மிகு
    புலன்கள் கடந்து பேருண்மை புரிவதே இறையுணர்வு///

    என்று தடங்கன் சித்தர் ஆன்ம வாதம் பேசுகிறார்.லோகாதாய தங்கவேல் சித்தரோ???!!!

    ///ஆன்மா வாதம் ஒரு செத்த பிணம்///

    என்கிறார்.இருவரில் யார் சொல்வது உண்மை.

    தங்கவேல் சித்தர் என்பவர் அறிவன்,கணியன் சித்த மரபின் கடைசி நபரா? அவரை பற்றி கொஞ்சம் விளக்குங்கள்.லோகாதயமும்,ஆசிவகமும் ஒன்றா?

    எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்றும் குழம்பும் உங்களை பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

    இதற்கு மேலும் ஆதாரம் வேண்டுமா என்று கேட்டீர்களே அதுதான் காமடியின் உச்சம்.

    • முதலில் மெய்மை என்றால் என்னவென்று கொஞ்சம் தேடிப்பார்த்துவிட்டு நீங்கள் வந்திருக்கலாம்.

      மன்னே உன்னை நான் சார்ந்திருப்பது என்னுடைய மெய்மை நிலை. யாண்டும் உன் மயம் யான் ஆவேனாக..

      நான், எனது என்பன பொய். பொய்யை வளர்க்கும் அளவுக்கு புன்மையும் துன்பமும் வளர்கின்றன.
      நான், எனது என்பனவற்றை அகற்றியவிடம் மெய்மை, நான் எனது என்பனவற்றை அகற்றுமளவ இன்பம் பெருகுகிறது. நான் எனது என்பன அகன்று போமளவு மனத்தினுள் மேன்மை மிளிர்கிறது.மேன்மையும் மெய்மையும் ஒன்றே — திருமந்திரம்

      நான் எனது என்ற அகந்தையை நீக்கி தனது புலன்களால் அடையும் இன்பம் பொய்யானது என புறந்தள்ளி அதாவது தன்னலம் நீக்கி மேன்மை நிலை அடைவதே உண்மையான இறையுணர்வு என்கிறார் தடங்கண் சித்தர்.

      இதில் என்ன ஆன்ம வாதத்தை கண்டீர்கள்.

      • மெய்மைகள் விளங்குதல் வேண்டி–உண்மையை அறிந்து கொள்வதற்காக

        பொய்மிகு புலன்கள் கடந்து–பொய்யான புலன் வழி அறிதலை கடந்து

        பேருண்மை புரிவதே இறையுணர்வு–ம்கா உண்மையை அதாவது புலன் கடந்த பேருண்மையை அறிவதுதான் இறைவுணர்வாம்..

        நீங்க என்ன விளக்கம் கொடுக்கிறீர்கள் மன்னே போன்னேன்னு.அந்த திருமந்திர பாட்டு எது?
        வினவில் ஆன்மீகத்தால் அச்சுறுத்துகிறாரா செந்தமிழன் என்று ஒரு கட்டுரை சமீபத்தில் வந்தது.அது புலன் கடந்த அறிதலை அலசுகிறது அதை படித்து தெளிவடையுங்கள்.

    • பின்னுட்டத்தில் சேர்க்க நினைத்து மறந்து விட்டேன் தங்கவேல் சித்தர் தனக்குதானே முரன்படுகிறார்.அவர் நற்சீலராக கருதும் மூவரில் வானுறையும் தெய்வத்தை பற்றி பேசுகிறார் வள்ளுவர் அடுத்த உலகம் ஒன்று இல்லை என்கிறார் தங்கவேல் சித்தர்.புத்தரின் தம்மம் ஆன்மாவை ஏற்கிறது ஆன்மா இல்லை என்கிறார் தங்கவேல் சித்தர்.சிவ ஆகமங்கள் ஒன்பதின் பிழிவாக திருமந்திரத்தை பாடினார் திருமூலர்,ஆகமங்கள்நோய் என்பது தங்கவேல் சித்தரின் வாதம்.

      • வடிவேலு சொல்ற மாதிரி சின்னப்புள்ளதனமா இருக்கு நாயன்மாரே உங்களுடைய வாதம்.திருமூலர் ஒரு சிவ பக்தர் என்று தெரியாமல்தான் தங்கவேல் சித்தர் இந்த பாடலில் அவரை புகழ்ந்து விட்டாரா.அய்யா இது பொறையுடைமை.தனது கருத்துக்களை ஆணி அடித்தாற் போல் தெளிவாக சொல்லும் தங்கவேல் சித்தர் மாற்றுக்கருத்து கொண்டோரையும் அவரது நற்குணங்களுக்காக மதிக்கும் தனது உள்ளப்பாங்கையும் வெளிப்படுத்துகிறார்.இதில் முரண்பாடு எங்கே வந்தது.

        https://www.vinavu.com/2013/12/31/vanakkarayya-short-story/#comment-122213

        இந்த பின்னூட்டத்தில் மாற்று மத நம்பிக்கையாளர்களையும் அவர்கள் கடவுளாக நம்புவதையும் நீங்கள் வெறி கொண்டு பிராண்டி வெறுப்பை உமிழ்வது போலத்தான் மற்றவர்களும் இருப்பார்கள் என எதிர்பார்க்க வேண்டாம்.

        உன்னிடம் சரக்கு தீர்ந்து போய் விட்டது என சில நாட்களுக்கு முன்பு ஏகடியம் பேசிய உங்களுக்கு வந்த சோதனையை பார்த்தீர்களா.இந்த மதுரைக்கு வந்த சோதனையை விட்டு வெளியே வருவதற்கு எப்படியெல்லாம் மூளையை கசக்கி கற்பனையான வாதங்களை தேட வேண்டியிருக்கிறது பார்த்தீர்களா.

        தரக்கேடில்லை நண்பரே,உங்களுடைய அத்தனை அம்புகளும் முனை முறிந்து விட்டன. இன்று போய் புதிய ஆயுதங்களை சேகரித்துக் கொண்டு நாளை வாருங்கள்.

        ஒரு இசுலாமியன் அணில்-ராமன்,இன்று போய் நாளை வா போன்ற ராமாயண மேற்கோள்களை எப்படி பயன்படுத்தலாம் என்று மட்டும் கோபப்பட்டு விடாதீர்கள்.

        • திருமூலரை நாம் அவரது திருமந்திரத்தால் அறிகிறோம்.திருமந்திரம் 9பது ஆகமங்களின் பிழிவாக 9பது தந்திரங்களை கொண்டு அமைக்கப்பட்டது.அதை பார்ப்போம்.

          பெற்றநல் ஆகமங் காரணங் காமிகம்
          உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
          மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரந்
          துற்றநற் சுப்பிரஞ் சொல்லு மகுடமே.

          காரணம்,காமிகம்,வீரம்,சிந்தம்,வாதுளம்,வியாமளம்,காலோத்திரம்,சுப்பிரம்,மகுடம் ஆகிய ஒன்பது அகமங்களின் பிழிவே திருமந்திரம்.

          ஆகமம் நோய் என்பதன் மூலம் திருமந்திரத்தை மறுக்கிறார் தங்கவேல் அதன் மூலம் திருமூலரையும் மறுப்பதாக கொள்ளலாம்.நான் கேட்டது இந்த முரண்பாட்டைதானே இதில் என்ன தவறு?

          நான் மாலை வந்து தொடர்கிறேன் என்றுதானே சோன்னேன்.நீங்களாக எதையாவது நினைத்து கொண்டு இன்று போய் நாளை வான்னா என்ன அர்த்தம்? இதெல்லாம் உங்களுக்கே ஓவரா படலை?

          • ஆத்திரக்காரனுக்குத்தான் புத்தி மட்டு.உங்களுக்கு ஏன் அவசரம்.நான் இன்று போய் நாளை வாருங்கள் என்று சொன்னது காலை 8.38 க்கு.நீங்கள் மாலை வருவதாக சொன்னது காலை 9.03 க்கு. பின்னூட்டங்களில் நேரம் குறிக்கப்படுகிறது.கவனிக்கவும்.

          • அய்யா திருமூலர் ஆகமங்களை பிழிந்து சாறு எடுத்துக் கொடுத்தார் என்பதெல்லாம் தங்கவேல் சித்தருக்கும் தெரிந்துதான் இருக்கும்.தெரிந்தும் அவரை நற்சீலர் என பாராட்டி கருத்து வேறுபாடுகள் மனித நேயத்தை மாய்க்க கூடாது என எடுத்துக் காட்டாக திகழ்கிறார்.இந்த பாடலில் திருமூலரை ஏற்பது எதுவும் இல்லை. கடவுள்,சமய மறுப்பு மட்டுமே உள்ளது.

            ஒன்று மட்டும் தங்கவேல் சித்தருக்கு தெரிந்திருக்காது. திருமூலர் ஆகமங்களை பிழிந்து எடுத்துக் கொடுத்த சாறை 21 ஆம் நூற்றாண்டில் தேவார நாயனார் குடித்துவிட்டு வந்து தன் மீது வாந்தி எடுத்து வைப்பார் என்று மட்டும் அவருக்கு தெரிந்திருக்காது.

            • அந்த தங்கவேல் யாருங்க? எந்த நூற்றாண்டு அத சொல்லுங்க.உங்கள பாத்தா எனக்கு பாவமா இருக்கு?

              • கைப்புள்ள கட்டதுரையிடம் சொன்னது அப்படியே அச்சு அசலாக பொருந்துகிறதே

                உங்களஎல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு

                • பதில சொல்லுங்க பாஸ்,தங்கவேலு கணியரா இல்லை அறிவனா? அவர் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர் அதை சொல்லுங்க.

                  • தங்கவேல் சித்தர் பற்றி ‘முனைவர்.செ.நாராயணசாமி எழுதிய
                    ‘வள்ளுவத்தின் மீட்சி
                    திருக்குறளின் வேர்களும் விழுதுகளும் ”

                    என்ற நூல் இணையத்தில் கிடைக்குமளவு படித்தது தவிர கூடுதல் விவரங்கள் இணையத்தில் கிடைக்கவில்லை.
                    புலவர்கள் பற்றி அவர்களுடைய பாடல்களே பெரும்பாலும் செய்திகளை தருகின்றன.அந்த வகையில் இந்த பாடலை வைத்து தங்கவேல் சித்தர் ஒரு கடவுள் மறுப்பாளர் பிறவி கொள்கையை மறுப்பவர் என தெளிவாகிறது.அவர் ஒரு அறிவன் என கொள்ளலாம்.

                    • ///கணியர்கள் என்பவர்கள் தமிழ்நாட்டில் வானியலிலும் அதனடிப்படையிலெலுந்த சோதிடத்திலும் வல்லவர்கள்.இவர்கள் அறிவர்,அறிவன்,கணி,கணியண் என்றும் அழைக்கப் பட்டனர்///—திப்பு[இதில் சித்தரை சேர்க்கவில்லை கவனிக்கவும்]

                      ///சரியான கருத்துதான்///–நான்

                      ///கணியர்கள் கடவுள் மறுப்பாளர்கள் பழம் வினை தொடர்பியல் மறுப்பாளர்கள்///—- திப்பு

                      ///இதுக்கு எந்த ஆதாரமும் நீங்கள் கொடுக்கவில்லை///–நான்[ஆனாலும் கணியர்கள் பழம் வினையை ஏற்பவர்கள் என்பதற்கு ஆதாரம் கொடுத்துள்ளேன்]

                      ///கணியர்,சித்தர்,அறிவர் என அறியப்பட்ட அந்த அறிஞர்கள் கடவுள் மறுப்பாளர்கள் பழம் வினை தொடர்பியல் மறுப்பாளர்கள்,மதங்கள்,கடவுள் என்ற கருத்தியல்களுக்கு எதிரானவர்கள் ஆவார்கள் ஆதாரம் இதோ///— திப்பு [புதிதாக சித்தர் என்ற வார்த்தையை சேர்க்கிறார்.கணியர்களின் முக்கிய அடையாள மாகிய சோதிடம்,வானியியலை புறக்கணித்து வெறும் கடவுள் மறுப்பாளராக சுருக்குகிறார்]

                      அவர் மேற்கோள்காட்டிய தடங்கண்,தங்கவேல் இருவரும் சோதிடம்,வானியியல் பற்றி எதுவும் கூறவில்லை.அதை ஏற்பவர்கள் என்று நம்ப எந்த முகாந்திரமும் இல்லை.எனவே

                      ///தங்கவேலு கணியரா இல்லை அறிவனா?/// என்று கேட்டால்.அதற்கு

                      ///தங்கவேல் சித்தர் ஒரு கடவுள் மறுப்பாளர்,பிறவி கொள்கையை மறுப்பவர் என தெளிவாகிறது அவர் ஒரு அறிவன் என கொள்ளலாம்/// என கோமாளிதனமாக பதில் சொல்கிறார்.இவரிடம் முன்பே

                      மறு இல் செய்திமூ வகை காலமும்
                      நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்

                      என்ற தொல்காப்பிய செய்யுளை மேற்கோள் காட்டி அறிவன் என்பவர் மூன்று காலத்தையும் அறிந்தவர் என்றால் அவர் காதில் விழமாட்டேன் என்கிறது.கடவுள் மறுப்பு யார் செய்தாலும் அவர் அறிவன் என்று குருட்டு வாதம் செய்கிறார்.இப்படி ஒரு கோமாளியுடன் விவாதம் செய்வதற்காக முதல் முறையாக வெக்கப் படுகிறேன்.

                    • மேலே உள்ள பின்னுட்டத்தில் சொல்ல நினைத்து மறந்து விட்ட முக்கிய விடயம் ஒன்று.

                      ///சித்தர் என்ற பெயரில் உள்ள அத்தனையையும் நியாயப்படுத்த அவர்கள் அத்தனை பேரும் கணியர்கள் இல்லை என்று சொல்கிறேன்///

                      ஆச்சரிய பட வேண்டாம் இதை சொன்னது திப்புதான்.இந்த வாய்தான் தங்கவேலு சித்தர் அறிவன் என்கிறது,அதை விட முக்கியம் திருவள்ளுவர் சித்தருக்கு எதிராக இதை சொன்னார் என்பது.இவர் முன்பு என்ன சொன்னார்?

                      ///வள்ளுவக் கணியர் என்ற சொல் தமிழில் இருக்கிறது///

                      இதுவும் அவர் சொன்னதுதான்.இன்னும் என்னவெல்லாம் புளுக போகிறாரோ தெரியவில்லை.திப்புவுக்கு திராணி இருந்தால் இதை மறுக்கலாம்.விவாதத்தில் வெல்ல எப்படி எல்லாம் புளுகுகிறார்.

                    • அறிவன் என சொன்னது தவறுதான்,ஏற்கிறேன்.சித்தர் என சொன்னதோடு நிறுத்தியிருக்கலாம்.ஏனைய வாதங்களை பற்றி சொல்லலாம்.

                      \\.நீங்கள் ஆதி என்ற வார்த்தைக்கு இந்த குறளையும் பகவான் என்ற வார்த்தைக்கு மற்றோரு குறளையும் மேற்கோள் காட்டி உள்ளீர்கள்.//

                      இதை விளக்கினால் விவாதிக்கலாம்.

  128. திப்பு அவர்களுக்கு,

    திருவள்ளுவர் என்று பெயர் உள்ளதால் கணியன் என்று அறியப்படும் இந்த சித்தரின் பாடலை பாருங்கள்.இதை முன்பே எடுத்து காட்டி உள்ளேன்.மீண்டும் ஒரு முறை உங்களுக்காக.

    முதலிருந்த ஊழ்வினையை முப்பாழைச் சுட்டுப்
    பதறா மதிபாடு பட்டேன் முதலிருந்த
    நல்வினையுந் தீவினை நாடாம லும்பிறந்த
    வல்வினையிற் போக்கிவிட்டேன் வாழ்வு[திருவள்ளுவர்ஞானம்-பாடல்-13]

    நீங்கள் உண்மையான் உரை கூறுபவர் என்பதால் இந்த பாட்டுக்கும் உரை கூறுவீர்கள் என்று நினைக்கிறேன்.கணியர்கள் பழம் வினை தொடர்பை மறுப்பவர்கள் என்று நீங்கள் கூறியதாக நினைவு

    ஆகா! கூறுங்கள் உங்கள் உண்மையான் உரையை இந்த பாடலுக்கு.நான் கேட்க ஆவலாக உள்ளேன்.

    • இது என்ன விவாத முறை.ஏதேனும் மேற்கோள் கொடுப்பதாக இருந்தால் அதை பொருள்பட விளக்கி தமது வாதங்களை வைப்பதுதான் சரியான விவாத முறை.எந்த ஆதாரத்தை கொணர்ந்தாலும் நீயே சொல் நீயே சொல் என்பது என்ன விவாத முறை.செய்வன திருந்த செய்யுங்கள்.

    • முதலிருந்த ஊழ்வினையை–முப்பிறப்பில் ஏற்பட்ட வினைத் தொடர்பை

      முப்பாலைச் சுட்டு–மூன்று பாழ்வெளிகளாகிய தூலம்,சூக்குமம்,கரணத்தை சுட்டு

      பதறா மதிபாடு பட்டேன் – சிந்தை கலங்காது இருந்தேன்

      நல்வினையிந் தீவினையும் நாடாம லும்பிறந்த–பிறப்பை உண்டாக்க கூடிய நல்ல,தீய வினைகள் என்னை சேராமல்

      வல்வினையிற் போக்கி விட்டேன் வாழ்வு– செயல்கள் மீது பற்றில்லாத கர்மயோக வாழ்க்கையை வாழ்ந்து விட்டேன்.

      இதில் ஊழ்வினை என்ற பதம் முற்பிறவி வினையைதான் குறிக்கிறது என்று தெளிவாக உள்ளது.இதற்கு மேலும் ஒரு ஆதாரம் வேண்டுமா[உங்க பாணிதான்]

      • .சித்தர் என்ற பெயரில் உலா வரும் அத்தனை செய்திகளையும் நான் நியாயப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்.பல நூறாண்டுகள் காலம் ஓடிய பின்னர் பல்வேறு இடைச்செருகல்களும் திரிபுகளும் கருத்து திணிப்புகளும் நடந்தேறியுள்ளன எனும்போது அவற்றை நியாயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை..ஏன் திருமூலரே ஒரு சித்தர் என கூறுவாரும் உண்டு.அவரை கணியர் என பொருள்பட சித்தர் என ஏற்றுக்கொண்டால் முழு திருமந்திர மாலைக்கும் கடவுள் மறுப்பு கண்ணாடி அணிவிக்க வேண்டிய நிலையில் கொண்டு போய் விடும்.அது பைத்தியக்காரத்தனம்.

        ஒசை உள்ள கல்லை நீர் உடைத்து இரண்டாய் செய்துமே
        வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
        பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்துரீர்
        ஈசனுக்கு உகந்தகல் எந்தக்கல் சொல்லுமே

        செங்கல் செம்புகல்லெலாம் சிறந்து பார்க்கும் மூடரே
        நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
        சுற்றிவந்து முணுமுணென்று சொல்லும் மந்திரம் ஏதடா
        நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
        சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

        கட்டையால் செய்தேவரும் கல்லினால் செய்தேவரும்
        மட்டையால் செய்தேவரும் மஞ்சளால் செய்தேவரும்
        சட்டையால் செய்தேவரும் சாணியால் செய்தேவரும்
        வெட்டவெளியதன்றி மற்றவேறு தெய்வம் இல்லையே

        இப்படி கடவுளையும் சமய வழிபாட்டையும் சாடிய சித்தருக்கு எத்தர்கள் என்ன பெயர் வைத்திருக்கிறார்கள் தெரியுமா.
        சிவ வாக்கியர் .அவருக்கு பொருந்தும் பெயரா இது.என்ன ஒரு எத்துவாளித்தனம்.பிறக்கும்போது எல்லா குழந்தைகளும் குவா குவா என அழும்போது இவர் மட்டும் சிவ சிவா என்று சொல்லிக்கொண்டே பிறந்தாராம்.இதையொத்த கட்டுக்கதைகளை அள்ளிக்கொண்டு வந்து சித்தர்களை கடவுள்,பழம் வினை ஏற்பாளர்களாக காட்டுவது கண்டிக்கத்தக்கது,சிவ வாக்கியர் குறித்து இந்த சுட்டியில் உள்ள கட்டுக்கதைகளை படித்துப்பாருங்கள்.உங்களுக்கே வெட்கமாக இருக்கும்.

        http://siddharsivavakkiyar.blogspot.in/2013/05/1.html

  129. யாருக்குமே தெரியாத தங்கவேல் சித்தர் சொல்வது உண்மை என்று சொல்லும் நீங்கள்,சித்தர் இலக்கியங்கள் முதன் முதலாக தொகுக்க பட்ட பெரியஞான கோவையில் உள்ள திருவள்ளுவர்ஞானம் இடைச் செருகலா? இப்படி ஒரு வாதம் செய்ய உங்களுக்கு கூச்சமாக இல்லையா?

    திருவள்ளுவர் என்ற பெயர் வள்ளுவர் சாதியினர்[கணியர்] மட்டுமே வைத்து கொள்வது.மற்றவர்கள் யாரும் வைத்துகொள்வதில்லை முற்காலத்தில்.பிற்சேர்க்கை என்பதற்கு தகுந்த ஆதாரம் இருந்தால் கூறுங்கள் இல்லை என்றால் தோல்வியை ஒத்துக்கொண்டு விளகுங்கள்

    நான் கணியர்கள் என்று கருதும் அறிஞ்ர்களின் பாடல்களை மட்டுமே மேற்கோள்காட்டுகிறேன்.

    என்னிலெ இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
    என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
    என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
    என்னிலெ இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே[சிவ வாக்கியர்]

    தனக்குள் இருக்கும் இறைவனை கண்டவருக்கு புறத்தில் பூசை தேவையில்லைதானே?

    நான் சிவவாக்கியர் கணியர் என்றோ,அறிவன் என்றோ சொன்னேனா? அவர் எங்காவது காலக்கணிதம் செய்துள்ளாரா? அவர் குவா,குவா, என்று சொன்னாரா இல்லை சிவா,சிவா என்று சொன்னாரா என்பதா இங்கு வாதம்.

    சித்தர் இலக்கியத்தை ஆய்ந்த அறிஞர்கள்”சுரியதோர் எழுத்தை உன்னி சொல்லுவேன் சிவவாக்கியம்” என்று கடவுள் வாழ்த்தில் சொல்வதால் அவருக்கு சிவவாக்கியர் என்ற பெயர் வழங்கி இருக்கலாம் என்கிறார்.அதை ஆய்வுலகமும் ஏற்றுகொண்டது.நான் பூனை கண்ணை மூடி கொண்ட பழமொழியை முன்பே சொல்லிவிட்டேன்,மீண்டும்,மீண்டும் சொல்ல அலுப்பாக உள்ளது.

    எனவே உளருவதை குறைத்துகொண்டு அறிவார்ந்து விவாதிக்க பாருங்கள்.

    • புரிந்து பேசுறீங்களா நடிக்கீறீங்களா.சித்தர் என்ற பெயரில் உள்ள அத்தனையையும் நியாயப்படுத்த அவர்கள் அத்தனை பேரும் கணியர்கள் இல்லை என்று சொல்கிறேன்.

      நான் ஏன் தோல்வியை ஒப்புக் கொள்ளவேண்டும்.உண்மையில் நீங்கள்தான் அந்த நிலையில் இருக்கிறீர்கள்.முதன்மையான விவாதப் பொருள் திருவள்ளுவர் ஊழ் என்ற சொல்லால் இயற்கை நிலையை குறித்தாரா முற்பிறவி பயனை குறித்தாரா என்பதுதான்.அந்த இழையில் இயற்கை நிலைதான் என்று அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறேன்,பதில் சொல்ல முடியாமல் நீங்கள் வாயடைத்து போய் இருக்கிறீர்கள் என்று மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி இருக்கிறேன்.

      ஆயினும் தோல்வியை ஒப்புக்கொள் என கேட்கும் மமதை எனக்கில்லை.ஏனென்றால் கர்வம் கொள்ளாதே என்று நபிகள் நாயகம் சொல்லியிருக்கிறார்.வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என தமிழ் எனக்கு சொல்லித் தந்திருக்கிறது.

      • நீங்கதான் நடிக்கிறீங்க, வள்ளுவர் என்ற பெயர் கணியர்களை குறிக்கும் என்று சொன்னது யார் நீங்களா நானா? நல்லந்துவனார்,திருவள்ளுவர் என நான் மேற்கோள் காட்டிய இருவரும் கணியர்களா இல்லையா? நீங்கள் மேற்கோள் காட்டிய தடங்கன் சித்தர்,தங்கவேல் சித்தர் இருவரும் கணியனா இல்லை அறிவனா? ஏன் இந்த பித்தலாட்டம்?.

        திருவள்ளுவர்ஞானம் பிற்சேர்க்கை என்றால் ஆதாரம் கொடுங்கள்.நான் கேட்பது அதைதான்.

  130. திப்பு,

    ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
    தாழாது உஞற்று பவர்[குறள்-620]

    கலைஞர் உரை:

    ஊழ் என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள் சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் அடையச் செய்வார்கள்.

    திப்பு ஐயா, இயற்கை நிலை,இயற்கைநிலை என்று புலம்புனீர்களே.இப்படி கலைஞர் உங்களை ஏமாற்றி விட்டாரே இதற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்.இப்ப மட்டும் ஏன் ஊழ் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்.

    • இந்த இடத்தில் ஊழ் என்ற சொல்லால் முற்பிறவி பயனைத்தான் குறிக்கிறேன் என்று கலைஞர் உங்களிடம் சொன்னாரா.ஏற்கனவே ஊழ் என்ற சொல்லுக்கு இயற்கை நிலை என்று அவர் பொருள் கூறியிருப்பதால் அந்த பொருளில் பயன்படுத்தியிருக்கிறார் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

      • இயற்கை நிலை என்றால் மறுபிறப்பை குறிக்காது என்று உங்களிடம் சொன்னாரா? நீங்காளாதானே அப்படி பொருள் கொண்டீர்கள்.இதிலும் அதே வார்த்தையை பயன்படுத்த வேண்டியதுதானே? ஏன் மாற்றி சொல்கிறார்? இப்பொழுது நேர மில்லை.பிறகு இது குறித்து விரிவாக சொல்கிறேன்.

        • ஊழ் என்ற சொல்லை பல இடங்களில் கலைஞர் பயன்படுத்துகிறார்.சில இடங்களில் அதற்கு இயற்கை நிலை என்று பொருள் சொல்லி இருக்கிறார்.மற்ற இடங்களில் ஊழ் என்ற சொல்லையே பயன்படுத்தி உரை சொல்கிறார்.அறிவு நாணயம் உள்ளவர்கள் அவர் ஏற்கனவே சொன்ன பொருளில் புரிந்து கொள்வார்கள்.தேவரர் போன்றவர் அவருக்கு விருப்பமான பொருள் கொள்கிறார்.

        • இயற்கை நிலை என்பது மறுபிறப்பை குறிக்கும் என்று நானாக பொருள் கொண்டதாக சொல்லும் தேவரர் அது தவறு என்றால் சரியான பொருளை சொல்லலாம்.

  131. ///அர்சனைத்தான் திருவள்ளுவர் ஆதி எனும் இறைவனாக சொல்கிறார் அதனால்தான்

    அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
    நின்றது மன்னவன் கோல்

    என்று பாடுகிறார்///

    உளருவது என்று முடிவு எடுத்த பிறகு அதுக்கு எல்லை ஏது? முதலில் பாடலின் பொருளை பார்ப்போம்.

    “அறவோர்களின் நூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய்,ஆதாரமாய் இருப்பது அரசனின் செங்கோலே”

    என்ன சொல்கிறார் என்றால் நாட்டில் நல்லாட்சி நடக்கவில்லை என்றால் அங்கு எந்த அறமும் நிலைக்காது.

    இங்கு ஆதி என்ற வார்த்தை அடிப்படை என்ற பொருளில்தான் வருகிறதே தவிர அரசன் என்ற பொருளில் இல்லை.பிறகு ஏன் திப்பு உளருகிறார் என்கிறீர்களா? அவர் உளராவிட்டால்தானே ஆச்சரியம்.

    • யார் உளறுவது.ஆதி பகவன் என்ற சொல்லின் மூலம் வள்ளுவர் குறிப்பது இனக்குழு தலைவன்,அரசன் என்கிற இறைவனைத்தான் என்று அந்த இழையில் சொல்லியிருக்கிறேன்.அதற்கு ஆதாரமாகத்தான்

      அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
      நின்றது மன்னவன் கோல்

      என்ற குறளை சொல்லியிருக்கிறேன்.ஆதி என்ற சொல் மன்னனை குறிப்பதாகநான் எங்கே சொல்லியிருக்கிறேன். அய்யா இது எளிய தமிழில் அமைந்த குறள்.குழந்தை கூட இதன் பொருளை சொல்லிவிடும்.அதனால் எந்த விளக்கமும் சொல்லாமல் குறளை மட்டுமே குறிப்பிட்டு உள்ளேன்..வேண்டுமென்றே அந்த இழையை விட்டு விலகி வந்து இந்த புரட்டை அவிழ்க்கிறீர்கள்.

      நான் சொன்னதாக நீங்கள்சொல்லும் பொருளின் படி பார்த்தால் ”அரசனாக நின்ற மன்னவனின் கோல்” என்று பொருள் வரும்.ஒரு முட்டாள் கூட அப்படி சொல்ல மாட்டான்.மலிவான் தீய எண்ணம்.தவிர்த்து கொள்ளுங்கள்.ஆத்திரத்தில் உளறுவது நீங்கள் தான்.

      • நான் ஒட்டவும் இல்லை,வெட்டவும் இல்லை.நீங்கள் ஆதி என்ற வார்த்தைக்கு இந்த குறளையும் பகவான் என்ற வார்த்தைக்கு மற்றோரு குறளையும் மேற்கோள் காட்டி உள்ளீர்கள்.இழை,தழை என்று மேலும் உளருகிறீர்கள்.நான் வெட்டிய இழையை ஒட்டி விளக்க வேண்டியது தானே? எங்காச்சும் ஒட்டுற மாதிரி இருக்கா? கண்டதையும் உளர வேண்டியது? அத எடுத்து சொன்னா அப்படி இல்லை இப்படின்னு மழுப்ப வேண்டியது.

  132. ///கணியர்கள் என்பவர்கள் பண்டைய தமிழ்நாட்டில் வானியியலிலும் அதனடிப்படையிலெழுந்த சோதிடத்திலும் வல்லவர்கள்///– மறுமொழி 124.1.1.1

    ///திருவள்ளுவர் இயற்பெயரே யாருக்கும் தெரியாது.அவர் வள்ளுவர் குலத்தை சேர்ந்தவர் என்பதை வைத்து திருவள்ளுவர் என அழைக்கப்படுகிறார்///– மறுமொழி 136.1

    ///கணியர்கள் மரபில் வந்த திருவள்ளுவர்///– 136.1

    ///வள்ளுவக் கணியர் என்ற சொல் தமிழில் இருக்கிறது///–137

    மேலே கூறியநான்கு மறுமொழிகளும் திப்புவுடையது.இதிலிருந்து

    1.கணியர்கள் சோதிடர்கள்

    2.திருவள்ளுவர் ஒரு கணியர்

    3.திருவள்ளுவரை ஒரு கணியராக திப்பு கருதுவதற்கு அவர் பெயர் மட்டுமே காரணம்.

    ஆகிய கருத்துக்களை பெறலாம்.இனி விடயத்திற்கு வருவோம்.நான் சித்தர் இலக்கிய தொகுப்பாகிய பெரியஞான கோவையில் இருந்து திருவள்ளுவர் என்ற சித்தர் பெயரில் அமைந்த திருவள்ளுவர்ஞானம் என்ற பிரிவிலிருந்து பின்வரும் பாடலை மேற்கோள் காட்டினேன்.

    முதலிருந்த ஊழ்வினையை முப்பாழைச் சுட்டுப்
    பதறா மதிபாடு பட்டேன் முதலிருந்த
    நல்வினையுந் தீவினையு நாடாம லும்பிறந்து
    வல்வினையிற் போக்கிவிட்டேன் வாழ்வு[திருவ.ஞானம்-13

    இந்த பாடலுக்கான பொருளை முன்பே விளக்கிவிட்டேன்.வாதத்துக்கு தேவையான “முதலிருந்த ஊழ்வினை” என்பது முற்பிறவி வினையைதான் குறிக்கும் என்பது 8ம் வகுப்பு மாணவனுக்கும் தெரியும்.

    திப்புவின் கருத்துபடி இவர் பெயர் திருவள்ளுவர் என்று இருப்பதால் இவர் ஒரு கணியர் என்று அறியலாம்.மேலும் இவர் முற்பிறப்பை ஏற்கிறார் என்பதும் உறுதியாகிறது.

    திப்பு மறுபிறப்பை மறுக்கும் கணியர் பாடல் எதையும் கூறவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.

    நான் முன்பே கூறியபடி திப்புக்கு திராணி இருந்தால் இதை மறுக்கட்டும்.பிறகு என் விவாதத்தை தொடர்கிறேன்.

  133. There are so many like this. He is good. Several are there in Hindus and Christians. Write about them ill treating other religions. You dont have the courage. You want tp lease a few for pleasing. Stupid. Story self pitying

Leave a Reply to iniyan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க