தமிழை அவமதித்த சங்கராச்சாரி விஜயேந்திரனை எதிர்த்து திருச்சி பேருந்து நிலைய சந்திதிப்பில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விஜயேந்திரனுக்கு செருப்படியுடன் பூஜை நடந்தது. இன்று (25.1.18 வியாழன்) நடந்த இந்தப் போராட்டத்தில் திரளான தோழர்கள் கலந்து கொண்டனர். பின்னர் போலீசு அவர்களை கைது செய்தது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி.
சிறப்பு??? ம.க.இ.க தோழர்களுக்கு வாழ்த்துக்கள்?
கம்யூனிச தோழர்கள் மட்டுமே அந்த விஜயேந்திரனை ர்- விகுதி போடாமல் அழைக்கிறீர்கள் மற்ற எல்லாரும் அந்தாளை விஜயேந்திரர்னு கூப்பிடுறாங்க.
அதுக்காக ‘எங்களுக்காக நிறைய செய்றீங்க’ என்னும் எண்ணம் வரப்பிடாது, தாங்கள் உண்மையான மக்கள் நலனில் கருத்தில் கொண்டு சொல்லியிருந்தால் நன்று. அத்தோடு கடல் தண்ணில அல்லா மாஜிக் காட்டுறார் என கண்முன் நிற்கும் பிரச்சினைகளை விடுத்து பித்தலாட்டம் பண்ணி திரியும் உங்கள் சகோதரர்களுக்கும் சொல்லி புரிய வையுங்கள். முடிந்தால்.
ஜல்லிகட்டு தொட்டு விஜயேந்திரன் ஈறாக கடந்த ஓராண்டில் பல்வேறு போராட்ட நிகழ்வுகளில் தமிழினவாத வாசம் அதிகமாக வீசுகிறதே…
இது சமரசமா ? அல்லது சர்வதேசியவாதத்தின் அங்கமா ?
என்ன செய்வது பிரியா அவர்களே,
சுயமரியாதை உணர்வை தமிழகத்தில் நீடிக்கச் செய்ய எந்த ஒரு அமைப்பும் வேலைபார்க்காத சூழலில் அந்த வேலையையும் பாவம் ம.க.இ.க.-னர்தான் செய்ய வேண்டியது இருக்கிறது. இதில் சமரசத்தை எங்கே பார்த்தீர்கள் எனத் தெரியவில்லை.
தமிழன் என்ற உணர்வுக்காக அல்ல, சுயமரியாதை உணர்வுக்காக. ஒரு மொழி இழிவுபடுத்தப்படும் போது, அதற்காக குரல் கொடுக்க வேண்டியவர்கள், எதிரியை ரோஜாப்பூக்களைக் கொண்டு தாக்கும் போது, கடப்பாரையால் ரெண்டு போட கம்யூனிஸ்ட்டுகளும் தேவைப்படுகின்றனரே ..
இங்கு தமிழ்தேசியம் பேசுபவர்கள் திராவிடமா தமிழ்தேசியமா என்னும் பார்ப்பன நிகழ்ச்சிநிரலில் அங்கமாக மாறிப்போன பிறகு, பார்ப்பனியத்தை வேறருக்க கம்யூனிஸ்ட்டுகளுக்கு இந்த வேலை கூடுதல் வேலையாக சுமத்தப்பட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன்.
ம.க.இ.க -வின் செருப்படி அருமை.
இவனுங்க தின்னு காெழுக்க தமிழ் நாடும் .. தமிழனின் காசும் வேணும் … ஆனால் தமிழ் என்றால் கசக்கும் …? இதைவிட பெரிய மரியாதை எதுவும் இல்லிங்களாண்ணா …?
Great job vinavu! agreed with Hashif, கம்யூனிச தோழர்கள் மட்டுமே அந்த விஜயேந்திரனை ர்- விகுதி போடாமல் அழைக்கிறீர்கள் மற்ற எல்லாரும் அந்தாளை விஜயேந்திரர்னு கூப்பிடுறாங்க.
ஆண்டாள் மீது அக்கறையோ,பக்தியோ இல்லை.ஆண்டாளின் தமிழை பெருமை படுத்திய வைரமுத்து க்கு மரியாதை இல்லை.போலி பக்தியோடு ஒரு போராட்டம்.இதற்கு ஆதரவாக நித்யானந்த சிஷ்யைகள் வேறு.காஞ்சி மடாதிபதியின் போலித்தனம் இன்று மக்கள் முன்னிலையில் அம்பலமாகி விட்டது.
இப்போது மக்கள் மனதில் இருக்கும் ஒரே கேள்வி,ஆன்மீகம் என்ற பெயரில் பெண்கள் இழிவு படுத்தப்படுகிறார்களா?அல்லது ஆன்மீக மடங்களே இப்படித்தான் இருக்குமா?
சாமானிய மக்களுக்கு மேலாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் இந்த சாமியாருக்கு ,இந்த மரியாதை தேவையான ஒன்றுதான்.
அறுசுவை உணவினருமை
பன்றிக்குத் தெரிவதில்லை;
புத்தாடையினருமை பைத்தியங்களுக்குப் புரிவதில்லை;
இல்லத்தின் தேவை நாடோடிகளுக்கு இருப்பதில்லை; செத்தப்பாடை(சை)யைச் சுமக்கும் மடத்தின் அதிபதிகளுக்கு இசைத் தமிழின் தீஞ்சுவையைத் துய்ப்பிக்கும் உணர் வொன்றுமில்லை இதில் ஆச்சரியமொன்று மில்லை, இவர்களைத் தூக்கிச்சுமக்கும் சூத்திரர் களைக் கண்டுநம் நெஞ்சம் கொதிக்கும். அன்று எண்ணாயிரம் சமணர்களைக் கழுவிலேற்றிய கயவர்களின் சந்ததியர் இன்று சங்கரராமனென்ற ஏழைபுரோகிதனைக் கொன்றுஆள்பவர் துணையுடன் தப்பிப் பிழைத்தப்பதர்கள் சமத்துவமின்மையே இவர்தம் மதம்; சூழ்ச்சியே இவர்கள் திறம்.