privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திசாமியே ஐயப்பா மகர ஜோதி பொய்யப்பா !

சாமியே ஐயப்பா மகர ஜோதி பொய்யப்பா !

-

மகர ஜோதி பொய்,  ஐஸ் லிங்கம் பொய்,  பக்தி பரவசமும் பொய்

சபரி மலையின் மகரஜோதி என்பது தானே எரிவது அல்ல, அது கோயில் ஊழியர்களால் கொளுத்தப்படுவதுதான்” என்று ஐயப்பன் கோயில் தலைமைப் பூசாரியின் குடும்பத்தைச் சேர்ந்த ராமன் நாயர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்தார். இதனை ஒட்டி பதில் சொல்லியாக வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார் கோயிலின் தலைமைத் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு. அவர் சார்பில் அறிக்கை வெளியிட்ட அவரது பேரனும் கோயில் தந்திரியுமான ராகுல் ஈஸ்வர், “வனத்துறை அதிகாரிகளும், தேவசுவம் போர்டு (அறநிலையத்துறை) அதிகாரிகளும், போலீசும் கூட்டாகச் சேர்ந்து கொளுத்தும் தீப்பந்தம்தான் மகரவிளக்கு” என்ற உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

‘இந்த அளவுக்கு குட்டு உடைந்த பிறகும் மார்க்சிஸ்டு அரசு மகரஜோதியைக் கொளுத்துமா?’ என்ற கேள்விக்கு “சபரிமலையில் மகரவிளக்கு வெளிச்சம் எப்படி உருவாகிறது என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும். ஆனால் பக்தர்களின் நம்பிக்கைக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது” என்று பதிலளித்திருக்கிறார் மார்க்சிஸ்டு முதல்வர் அச்சுதானந்தன். யாரை யார் விசாரிப்பது? பந்தம் பிடிப்பவனை பற்ற வைப்பவன் விசாரிப்பதா?  “தீவட்டியைத் தொடர்ந்து கொளுத்துவோம். தீவட்டிக் கொள்ளையைத் தொடர்ந்து நடத்துவோம்” என்பதுதான் அச்சுதானந்தனுடைய கூற்றின் பொருள்.

மகரஜோதி அம்பலமாவது இது முதல் முறையல்ல.  பந்தம் கொளுத்திய மின்வாரிய ஊழியர்களைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள் கேரள மாநில பகுத்தறிவாளர் சங்கத்தினர். “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா, அரசாங்க வருமானத்துக்கு ஆப்பு வைக்காதீங்கப்பா” என்று அன்பு வேண்டுகோள் விடுத்து அன்று பகுத்தறிவாளர்களை அமுக்கினார் அந்நாள் மார்க்சிஸ்டு முதல்வர் ஈ.கே. நாயனார்.

கோயில் தந்திரி கண்டரரு மோகனரு, தனது லீலாவிநோதங்கள் மூலம் ஐயப்பன் மகிமையைக் கந்தலாக்கியது தனிக்கதை.  அவருக்கு வேதம், மந்திரம் போன்ற வெங்காயம் எதுவும் தெரியாதென்பதும் விலைமாதர் வீட்டு முகவரிகள் மட்டுமே தெரியும் என்பதும் அவரிடம் நடந்த விசாரணையில் அம்பலமானது. இப்போது தலைமைத் தந்திரியின் ஒப்புதல் வாக்குமூலம் வந்திருக்கிறது.

amarnathதெற்கே தீவட்டி பிசினஸ்; வடக்கே பனிக்கட்டி பிசினஸ். காஷ்மீரில் அமர்நாத் எனுமிடத்தில் குளிர்காலத்தில் ஒரு குகைக்குள்ளே பெரிய ‘குச்சி ஐஸ்’ வடிவத்தில் உருவாகும் பனிக்கட்டியைத் தரிசிப்பதற்கு ஆண்டுதோறும் 4 லட்சம் பக்தர்கள் அங்கே சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த பக்தர்களை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாக்க 40,000 சிப்பாய்களை மாதக்கணக்கில் காவல் வைக்கிறது அரசு.

மேற்படி சிவலிங்கத்திற்கும் வந்தது சோதனை! “முன்னர் சுமார் 12 அடி உயரம் இருந்த பகவான் தற்போது 6 அடிக்கும் கீழே போய்விட்டார். காரணம் புரியவில்லை” என்று சென்ற ஆண்டு அபாயச்சங்கு ஊதினார் அந்தக் கோயிலின் நிர்வாக அதிகாரி. பகவானைக் கண்டு பக்தர்கள் உருகலாம், பக்தர்களைக் கண்டு பகவான் எப்படி உருகமுடியும்? “பக்தர்கள் விடும் மூச்சுக்காற்றின் வெப்பத்தைப் பனீசுவர பகவானால் தாங்கமுடியவில்லை” என்றன சில பத்திரிகைகள். பக்தர்களின் மூச்சை நிறுத்த முடியாதே! “குகைக்கு அருகில் அடுப்பு பற்றவைத்து பக்தர்கள் சப்பாத்தி போடுகிறார்கள். சூடு தாங்கமுடியாமல்தான் பகவான் கசிந்துருகுகிறார்” என்றன வேறு சில பத்திரிகைகள். புவி சூடேறுதல்தான் காரணம் என்றனர் வேறு சிலர்.

காரண காரியங்கள் குறித்த அறிவுப்பூர்வமான ஆய்வுகள் தொடர்வது ஆன்மீகத்துக்கு ஆபத்து என்பதால் குப்தா கமிசன் என்றொரு கமிசனைப் போட்டு ஆராயச் சொன்னது அரசு. பகவான் கரையாமலும், பக்தர்கள் கூட்டம் கலையாமலும் பாதுகாக்கும் பொருட்டு குகைக்கு குளிர் சாதன வசதி செய்து சிவபெருமானை ஸீரோ டிகிரியில் பாதுகாப்பது; பக்தர்கள் சப்பாத்தி போட 100 ஏக்கர் வனப்பகுதியைக் கோயிலுக்கு தானம் கொடுத்து அடுப்புச் சூட்டிலிருந்து ஆண்டவனைப் பாதுகாப்பது என்று முடிவு செய்தது அரசு.  இந்த 100 ஏக்கர் தானத்துக்கு எதிராகக் காஷ்மீரே பற்றி எரியத் தொடங்கி, அதன் விளைவாக அம்மாநில காங்கிரசு அரசு இப்போது உருகிக் கொண்டிருக்கிறது.

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக, ‘அமர்நாத் பனிலிங்கம் செயற்கையானதல்ல’  என்று கொட்டை எழுத்தில் செய்தி போடுகிறது தினமணி (24.6.08).

இயற்கையாக உருவான எல்லாம் வல்ல இறைவனை செயற்கையாகப் பாதுகாப்பது ஏன் என்ற கேள்விக்கு மட்டும் அவர்கள் பதில் சொல்லவில்லை.

“”இராமன் பாலம் என்பது இயற்கையாக அமைந்த மணல்திட்டு”” என்று சொன்னால், ‘இல்லையில்லை,  அது இராமனால் கட்டப்பட்டது, செயற்கையானது  எனவே தெய்வீகமானது’ என்று கத்துகிறார் இராம. கோபாலன். ‘அமர் நாத் பனிலிங்கம் செயற்கையானது’ என்று சொன்னால் ‘இல்லையில்லை, அது இயற்கையானது  எனவே தெய்வீகமானது’ என்கிறார்கள். வடக்கே இயற்கை தெய்வீகம்! தெற்கே செயற்கை தெய்வீகம்!

மக்களை மயக்கத்தில் ஆழ்த்துவதற்காக ஆளும் வர்க்கம் உருவாக்கிய மடமைகள் உடைபடும்போது மதவாதிகள் பதறுகிறார்கள்; அதற்குக் காரணம் இருக்கிறது. ஆனால் அற்புதம் என்றும் தெய்வீகம் என்றும் தாங்கள் இதுகாறும் நம்பிக் கொண்டிருந்தவை அயோக்கியத்தனமான மோசடிகள் என்று ஆதாரப்பூர்வமாகத் தெரியும்போது பக்தர்கள் பதறியிருக்க வேண்டாமா?

“கடன் பட்டதும், காவியணிந்ததும், மதுமாமிசம்மனைவியைத் துறந்ததும், காடு மலைகளில் நடையாய் நடந்ததும் கேவலம் ஒரு தீவட்டியைத் தரிசிக்கத்தானா?”  என்று குமுறியிருக்க வேண்டாமா? ‘அது தீவட்டியில்லை, தெய்வீகத் தீபம்தான். நாங்கள் நம்பமாட்டோம்’ என்று நக்கீரனுக்குப் பேட்டி கொடுக்கிறார்கள் ஐயப்பசாமிகள். “பகவானை எண்ணி பனியைச் சகித்ததும், பயங்கரவாதிகளை எண்ணிப் பயந்து செத்ததும், 12,000 அடி உயரம் மூச்சு வாங்க மலையேறியதும் ஒரு குச்சி ஐஸைத் தரிசிக்கத் தானா?” என்று கொதித்திருக்க வேண்டாமா? அந்தக் குச்சி ஐஸைப் பாதுகாக்க பாரத் பந்த் நடத்துகிறது பாரதிய ஜனதா. அதற்கும் கூட்டம் சேருகிறது.

பகுத்தறிவின் ஒளி பட்டவுடனே மூடநம்பிக்கை இருள் அகலவில்லையே ஏன்? ‘மகரஜோதி பொய்’ என்பதை அந்தக் கோயிலின் தந்திரியே பிரகடனம் செய்த பின்னரும் அய்யப்பன்மார்கள் திருந்தவில்லையே ஏன்? இந்த பக்தர்களை ‘மூட நம்பிக்கைக்குப் பலியானவர்கள்’ என்று மட்டும் நாம் கருதமுடியுமா? என்ன வகை பக்தி இது?

மூடநம்பிக்கை, பகுத்தறிவு, ஏமாற்றுபவன்ஏமாற்றப்படுபவன் என்ற வகைப்பாடுகளின் வரம்பைத்தாண்டி ஒரு விநோதக் கலவையாக உருப்பெற்று வருகிறது இந்த ‘பக்தி’. காமவெறி பிடித்த பித்தலாட்டக்காரனாக அர்ச்சகன், இந்தப் பித்தலாட்டத்துக்குப் பந்தம் பிடிக்கும் அரசு, அதற்குக் காவல் நிற்கும் போலீசு, ஐயப்ப சீசனில் திருடுவதற்காகவே மாலை போட்டுக் கொள்ளும் பிக்பாக்கெட்டுகள், டாஸ்மாக் கடைகளில் அய்யப்பன்மார்களுக்கென்றே ஒதுக்கப்பட்டிருக்கும் தனிக் கோப்பைகள், சுத்தம் கருதி சாக்கனாக் கடைகளில் அவர்களுக்கு மட்டும் இலை போட்டுப் பரிமாறப்படும் புரோட்டாக்கள்..! மோசடியும் சுயமோசடியும் சரிவிகிதத்தில் கலந்து உருவாகியிருக்கும் இந்தக் கூட்டுக் களவாணித்தனத்தில் ஏமாற்றுபவன் யார், ஏமாற்றப்படுபவன் யார் என்று பிரித்தறிய முடியவில்லை.

130120081921புதுப்பட ரிலீஸ் அன்று கட் அவுட்டுக்குப் பால் அபிசேகம் செய்யும் ரசிகனின் பரவசம், நூறு ரூபாய்ஒரு குவாட்டர் என்று கறாராக ரேட் பேசிக் கொண்டு லாரியில் ஏறி வந்து ‘தலைவா’ என்று உணர்ச்சி வசப்படும் தொண்டனின் மனக்கிளர்ச்சி, இலஞ்சத்தை அழுதுவிட்டு அப்புறமும் அதிகாரியிடம் ‘ங’ போல் வளையும்’ நெளிவு சுளிவு,  மொய் எழுதும் வயிற்றெரிச்சலை மறைத்தபடி திருமண வீட்டில் மலர்ந்து மணம் பரப்பும் புன்னகைகள்..! அன்றாட வாழ்வில் நாம் காணும்  இந்த ‘உணர்ச்சிகள்’ எல்லாம் அமர்நாத் யாத்ரீகர்களின் பரவசத்தையும் அய்யப்பன்மார்களின் மனக் கிளர்ச்சியையும் பிரதிபலிக்கவில்லையா?

இந்த மத உணர்ச்சி ஒரு மயக்கமென்றால், அது ஆட்படுத்தப்பட்ட மயக்கம் மட்டுமல்ல, விரும்பி ஆட்படும் மயக்கம். இது தெய்வீக அபினி மட்டுமல்ல, லவுதீக அபினியும் கூட. இது புனித யாத்திரை என்ற முகமூடி அணிந்த இன்பச் சுற்றுலா. இந்தப் போலி பக்தியை ஆன்மீக அனுபவமாக ‘உணர்ந்து’ மயங்கும் பொருட்டு ஒரு ‘தெய்வீக கிளைமாக்ஸ்’ பக்தனுக்கே தேவைப்படுகிறது.

எனவேதான் பக்தன் பதறுவதில்லை. சாம்சங் ரெப்ரிஜிரேட்டரையே கருவறையாக்கி, அதற்குள் பனி லிங்கம் ஒன்றை உறையவைத்து, ஆண்டுக்கு ஒரு முறை திறந்து  காட்டினாலும் ‘ஹர ஹர மகாதேவா’ என்று கன்னத்தில் போட்டுக்கொள்ள இந்த பக்தர்கள் தயார்! மகரஜோதிக்குப் பதில் சிலிண்டரை வைத்து ‘ஸ்பிக் ஜோதி’யைக் கொளுத்திக் காட்டினாலும் அதனைத் ‘தரிசிக்கும்’ பொருட்டு விரதமிருக்கவும், இருமுடி சுமக்கவும் அய்யப்பன்மார்கள் தயார்!

‘டென் கமாண்ட்மென்ட்ஸ்’ என்ற திரைப்படத்தில் பார்த்த ஒரு காட்சி இங்கே நினைவுக்கு வருகிறது. பல வகையான விக்கிரக வழிபாடுகளில் மூழ்கியிருக்கும் யூத மக்களிடம் “இவையெல்லாம் கடவுளல்ல, உண்மையான கடவுளின் செய்தியை நான் உங்களுக்குக் கொண்டுவருகிறேன்” என்று கடவுளைத் தேடி மலைக்குச் செல்வார் மோசஸ். போனவர் திரும்புவதற்குத் தாமதமாகவே, “ஒரு கடவுளில்லாமல் இன்னும் எத்தனை நாள்தான் நாம் காத்திருக்க முடியும்?” என்று விசனப்பட்ட மக்கள் ஒரு எருமைக்கிடா பொம்மையைக் கடவுளாக்கி அதைத் தலையில் வைத்துக் கூத்தாடத் தொடங்குவார்கள்.

அந்தக் கூத்தும் இந்தக் கூத்தும் ஒன்று போலத் தோன்றினாலும் ஒன்றல்ல. அது அச்சத்திலும் மவுடீகத்திலும் மனிதகுலம் ஆழ்ந்திருந்த, அறிவியல் வளராத காலம். அது பல் முளைக்காத குழந்தையின் மழலை. இன்று நாம் காண்பதோ கிழவனின் மழலை. “ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான்தான் என்று, அந்தப் பொய்யில் உயிர்வாழ்வேன்” என்று மன்றாடும் காதலனைப் போல, ‘எங்களுக்கு ஒரு மாயையை வழங்கு’ என்று இறைஞ்சுகிறார்கள் இந்த பக்தர்கள்.

சென்னை தீவுத்திடலில் அமர்நாத்தைப் போலவே பனிக்கட்டி லிங்கத்தை உருவாக்கி ‘சென்னையில் அமர்நாத்’ என்று விளம்பரம் செய்யப்படுகிறது.  ராட்டினம் ஏறப்போன பொருட்காட்சிக் கூட்டம் உடனே பக்தர்களாக உருமாறி அந்த செயற்கை லிங்கத்தைப் பரவசத்துடன் வழிபடுகிறது. திருப்பதி வரை சென்று தரிசிக்க முடியாத பக்தர்களுக்காக ‘சீனிவாச திருக்கல்யாணத்தை’ சென் னையிலேயே நடத்தி, ‘சென்னையில் ஒரு திருப்பதி’ என்று விளம்பரம் செய்கிறது திருப்பதி தேவஸ்தானம். ‘கோயிந்தா கோயிந்தா’ என்று அங்கேயும் கூட்டம் அலைமோதுகிறது.

ஷாம்பு பாட்டில் வாங்கும் வசதியில்லாதவர்களுக்காக இப்போது சாஷேக்களில் தொங்குகிறார் கடவுள். நுகர்வு தரும் சிற்றின்பத்துக்கும் ஆன்மீகப் பேரின்பத்துக்கும் இடையில் நிலவுவதாகச் சொல்லப்படும் சீனப்பெருஞ்சுவர் மாயமாக மறைந்து விட்டது. இந்தப் பேரின்பமென்பது சிற்றின்பத்தின் வாலில் தடவப்பட்டிருக்கும் ஆன்மீக வாசனைத் தைலம். தமது இஷ்ட தெய்வங்கள் மீது இந்த பக்தர்கள் கொண்டிருக்கும் ஈடுபாடு,  தமது இஷ்ட பிராண்டுகள் மீது  நுகர்வோர் கொண்டிருக்கும் ஈடுபாட்டையே பெரிதும் ஒத்திருக்கிறது.

இது உத்திரவாதமில்லாத பரலோக இன்பவாழ்வை இலட்சியமாகக் கொண்டு இகலோகத் துன்பங்களைச் சகித்துக் கொள்ளும் இலக்கண வகைப்பட்ட ஆன்மீகமல்ல; உத்திரவாதமான இன்பத்துக்கான தேட்டம். ‘பக்தி’ என்று புனைபெயர் சூட்டிக் கொண்ட பிழைப்புவாதம். ஜோதியோ, லிங்கமோ, பக்திப் பரவசமோ அனைத்தும் இங்கே பிஸ்கெட் பாக்கெட்டுகளின் பளபளப்பான மேலுறைகள் மட்டுமே.

கஞ்சாச் செடியின் போதையைத் தெய்வீகமென்றும் பேரின்பமென்றும் தவமென்றும் எண்ணிக் கொண்டிருந்த கருத்து மயக்கமல்ல இது. ‘கஞ்சாவே பேரின்பம்’ என்று அறிவுப்பூர்வமாகத் தேர்ந்து தெளிந்த விழிப்பு நிலை. சொல்லப்போனால் இது வேறு ஒரு வகைப் பகுத்தறிவு. சுயநலத்துக்காகத் தெரிந்தே தன்னை மடமையில் ஆழ்த்திக் கொள்ளும் பகுத்தறிவு. கல்லையும் மரத்தையும் கண்டு அஞ்சி வணங்கிய மூடநம்பிக்கையைக் காட்டிலும் அபாயகரமான பகுத்தறிவு.

‘மாலை போடுவது மடமை’ என்று நீங்கள் சாடினால், ‘ஒரு மண்டலம் விரதமிருப்பதும், புலால் மறுப்பதும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்’ என்று அறிவியல் பூர்வமாக விளக்கி உங்களைத் திகைப்படையச் செய்வார்கள் இந்த பக்தர்கள். ‘பனிலிங்கம் பொய்’ என்று நீங்கள் கூறினால், “இந்த விசயம் உங்களுக்கு இப்போதுதான் தெரியுமா, எனக்கு ஏற்கெனவே தெரியும்” என்று சொல்லி உங்களை அதிர்ச்சியில் உறைய வைப்பார்கள். நீங்கள் அறிந்திராத மேலும் இரண்டு ஆன்மீக மோசடிகளை உங்களுக்கு விளக்கி, தங்களது உலக ஞானத்தின் மேன்மையை உங்களுக்குக் குறிப்பாலுணர்த்துவார்கள்.

அல்லது “மகரஜோதியும் பனிலிங்கமும் மட்டுமா, உலகமே மோசடிகளால்தான் நிறைந்து இருக்கிறது” என்று தத்துவஞானத்தின் தளத்துக்கு விவாதத்தை தள்ளிச் செல்லுவார்கள். லஞ்சம், வரதட்சிணை, சாதி, வாஸ்து, சாமியார்கள், ராசிக்கல் என நியாயப்படுத்த முடியாத எல்லா அயோக்கியத்தனங்களையும் கொள்கையளவில் மறுப்பதற்கும், நடைமுறையில் அவற்றுடன் அனுசரித்துச் செல்வதற்கும் என்ன விதமான நியாயப்படுத்தல்களை சமூக வாழ்வில் நாம் எதிர்கொள்கிறோமோ, அவற்றைத்தான் பக்தர்களும் பயன்படுத்துகிறார்கள். பிழைப்புவாதமும் காரியசாத்தியவாதமும் பழகிவிட்டதால், அந்த வாதங்கள் அனைத்தையும், ‘பழகிய சைக்கிளை பழகிய ரோட்டில் ஓட்டும் இலாவகத்துடன்’  பயன்படுத்தி பகுத்தறிவை முறியடிக்கிறார்கள் இந்த பக்தர்கள்.

‘டபுள்யூ.டபுள்யூ.எஃப்’ என் றொரு அமெரிக்க மல்யுத்தத்தைத் தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். அதில் இரண்டு மாமிசமலைகள் மோதிக்கொள்வார்கள். நாக்கூசும் வார்த்தைகளால் ஏசிக் கொள்வார்கள். கொலைவெறியுடன் கட்டிப் புரளுவார்கள். எனினும் அது உண்மையான சண்டையல்ல. யார் வெல்ல வேண்டும் யார் தோற்க வேண்டும் என்பதை முன்னரே தீர்மானித்து நிகழ்ச்சியை நடத்தும் முதலாளிகள் காட்சிப்படுத்தும் நாடகம் அது.  இரசிகர்களுக்கும் இது தெரியும். இருந்தாலும் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி சண்டையை ரசிக்கிறார்கள். ‘குத்து.. கொல்லு’ என்று வெறிகொண்டு கூச்சலிடுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஏமாற்றுபவன் யார், ஏமாற்றப்படுபவன் யார்? நடிகன் யார், ரசிகன் யார்? தீவட்டி கொளுத்துபவன் யார், கன்னத்தில் போட்டுக் கொள்பவன் யார்? கண்டரரு யார், காணதவரு யார்? குருசாமி யார், கன்னிச்சாமி யார்?

இது ஒரு வகைப் ‘பகுத்தறிவு’. இதுதான் நம் முன் பக்திவேடம் பூண்டு ஆடுகிறது. வெறும் கருத்துப் போராட்டத்தால் இதனை வீழ்த்த முடியாது. இதன் இதயம் ஆன்மீகத்தில் இல்லை ; லௌகீகத்தில் இருக்கிறது சமூக வாழ்க்கையின் எல்லாப் பரப்புகளிலும் வேர் பரப்பியிருக்கும் இந்தப் ‘பகுத்தறிவை’ எதிர்த்துப் போராடுவதென்பது ‘ஒரிஜினல் மூடநம்பிக்கையை’ எதிர்த்துப் போராடுவதைக் காட்டிலும் கடினமானது.

புதிய கலாச்சாரம் – ஜூலை 2008 ( அனுமதியுடன்)

  1. சென்ற கட்டுரையைப் போலவே மக்களின் மனநிலையை படம் பிடிக்கும் கட்டுரை…

  2. பனிலிங்கம் பொய்,
    மகர ஜோதி பொய்,
    ராமன் பாலம் பொய்!
    சாமியே சரணம் பொய்யப்பா!

    இந்த கட்டுரை பக்த கேடிகளுக்கு இன்னுமொரு ஆப்பு!

    • unaku sinthanai seiya theriyuma… namma yellathukum mela oru super power illama than manusangalukulla automatic ah uiyrnu onu iruku ?… daily ne yenna battery recharge pannikaraya ? illa soru sapadrathu yepdi jeernam aguthu nu yesochiya ?

      ithavae tha english karan, science nu solli appatama sollaran, ava sollratha apdiyae nambuveenga, thai molila, olukathoda, simpla sonna kindal pannrathu ungaluku kokaiya ?

      (Nithyanantha mattrum pala mirukangalai mun utharanam vaipathil priyojanam illai, prachanai naam – manitharkalukidaye mattum than.)

  3. இந்திய அரசு மெக்காவில் இருக்கும் வெறும் மொட்டை கல்லை பார்ப்பதற்கு கூட வருடா வருடம் கோடி கணக்கில் செலவழிக்கிறதே, உங்கள் பகுத்தறிவிற்கு அது ஏன் எட்டவில்லை? பிழைப்புவாதிகள் மக்கள் மட்டும்தனா ?

    தயாளன்.

    • நண்பரே மக்காவில் உள்ள கல்லை அற்புதம் என்றோ இயற்கை என்றோ சொல்லி யாரும் யாரையும் ஏமாற்றுவதில்லை. குத்துக்கல்லும் குப்புசாமியும் ஒன்றாகுமா

      • மக்காவிற்கு (ஹஜ்) சென்று வந்தால் “தாய் அவனைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாயப் பாலகனாகத்) திரும்புவான்.” என்ற முஹம்ம்துவின் அருவாக்கிற்கு என்ன விளக்கம்.

        • நீ ஏண் நாண்டுக்கிட்டு இருக்கறேன்னு கேட்டா அவன் ஏன் திரும்பிக்கிட்டு இருக்கான்? னு திருப்பி கேக்குற புத்திசாலியே…

          மக்காவுக்குப் போனால் தான் மோட்சம் கிட்டும்னு முஸ்லிம் மதம் சொல்லவில்லை. பணவசதியும், பயண வாய்ப்பும் இருக்கறவங்க மட்டும் அங்கே போய் பொதுவான ஓர் இறைவனை தேச இன அந்தஸ்து கடந்த ஒரேமாதிரியான வெள்ளாடை அணிந்து ஆன்மிக அனுபவம் பெறும் வாய்ப்பு அது.

    • ஓன்று மட்டும் புரிகின்றது.
      இந்தப் போதை “அவனுக்குப்” பிடித்திருக்கின்றது.
      சாமி என்று யாராவது கூப்பிடுவது…
      இஸ்லாமியர் ஹஜ் சென்று வந்தவுடன் ஹாஜியார் என்று அழைக்கப் படுவதைப் போல
      வித்தியாசமாய் உடை அணிவது….
      சவரம் செய்யாமல் இருப்பது…
      பெரிய பொதிகள் இல்லாமல் உல்லாசப் பயணம் செல்வது..
      நடனம் ஆடுவது..
      பாட்டுப் பாடுவது…
      ஏதோ போதை…ஏதோ சந்தோசம்…
      மனுஷனாப் பொறந்தா ஏதாவது என்டேர்டைன்மென்ட் (பொழுதுபோக்கு) வேணும்ல!
      சினிமாவும் டி.வி.யும் எத்துனை மணிநேரம் தாங்கும்?
      இதனால உங்களுக்கு என்ன நஷ்டம்?
      இதை செய்யாமல் நீங்க என்ன சாதித்தீர்கள்?
      மோசஸ் மாதிரி நீங்க திறப்பின் வாசலில் நிற்க முடிஞ்சா- அத செய்யுங்க.
      இதெல்லாம் இல்லாம மனுஷன் வாழ்ந்தா மன அழுத்தம்தான் மிஞ்சும்.
      ஒருவேளை டாஸ்மாக் விற்பனைக் குறைகின்றதே என்ற கவலையா!
      பனி லிங்கமும் கிடையாது- பனி சிங்கமும் கிடையாது என்று எங்களுக்குத் தெரியும்.
      ஜோதி உருவானவர் இங்கே கிடையாது, எங்கே என்பதும் எங்களுக்குத் தெரியும்.
      நல்ல ஒரு மாற்று கொடுத்தால் – நீங்கள் சொல்வதைக் கேட்கின்றோம்.
      கம்ப்யூட்டரை விட்டுக் களத்தில் இறங்கத் தயாரா?
      விமரிசனம் நன்றாக உள்ளது.
      ஆக்கபூர்வமான தீர்வு சொல்லப் படவில்லை எண்பது வருத்தம் அளிக்கின்றது.

      குரு சாமியின் பிழைப்பில் மண் அள்ளிப்போட நினைத்தீரோ!
      இந்தக் குளிருக்கெல்லாம்அஞ்சாது பனிக்கரடி.
      ஹ…ஹாய்…ஹீ…..

  4. //இது ஒரு வகைப் ‘பகுத்தறிவு’. இதுதான் நம் முன் பக்திவேடம் பூண்டு ஆடுகிறது. வெறும் கருத்துப் போராட்டத்தால் இதனை வீழ்த்த முடியாது. இதன் இதயம் ஆன்மீகத்தில் இல்லை ; லௌகீகத்தில் இருக்கிறது சமூக வாழ்க்கையின் எல்லாப் பரப்புகளிலும் வேர் பரப்பியிருக்கும் இந்தப் ‘பகுத்தறிவை’ எதிர்த்துப் போராடுவதென்பது ‘ஒரிஜினல் மூடநம்பிக்கையை’ எதிர்த்துப் போராடுவதைக் காட்டிலும் கடினமானது.

    //

    இந்த வரிகளை எத்தனை பேர் புரிந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. இந்த கட்டுரை வெறுமனே பகுத்தறிவு பிரச்சாரம் அல்ல மாறாக பக்தி என்பதே ஒரு பகுத்தறிவாக இருக்கிறது எனப்தும், அதனை எதிர்க்கும் பண்பாட்டு போராட்டம் என்பது இன்னும் நுட்பமாக செய்யப் பட வேண்டியுள்ளது என்பதையும் சுட்டி காட்டியே இந்த கட்டுரை உள்ளது.

  5. ONNU SOLLIKKA VIRUMBARA. MANITHARKALAI NAL VALIPADUTHA, OLUKKANGALAI KADAIPIDIKKA, THAVARU SEYVATHAI THADUKKA, KADAVULIN PEYARAL PAYAMURUTHI VAITHURIKIRAR KAL NAM MURKAALA MANITHARKAL. ATHAN VILAIVE INTHE URUVA VALIPADU PONDRA MATTA VALIPAADUGAL.

    THAPPU SEYYATHENU SONNA KETKA MAATANGA. THAPPU SENJA SAMI KANNA KUTHIDUM SONNA KEPPANGA. APPADI THAN VANTHU IRUKKANUM INTHA VALIPADUGAL.

    ALAIPAAYUM MANATHAI ORU NILAI PADUTHAVE IN THE URUVA VALIPADU. MANATHAI AALATHERINTHAVARKALUKKU ETHUVUM THEVAI ILLAI.

    AVVLOTHAN. ITHUL KADAVUL IRUKIRARA ILLAYA ENPATHU PIRACHANAI ALLA. MAKKAL THAVARILAIKKAMAL IRUKKA ERPADUTHAPATTATHU ENDRU .

    IYARKAI THAAN KADAVUL.

  6. இந்த கல்வி அறிவும், சமூக அமைப்பும் மக்களிடம் எதை தெரிவிக்க வேண்டும், எதை தெரிவிக்க கூடாது என்பதில் குறியாய் உள்ளன.. அதையும் மீறி உண்மை வெளிவரும்போது மக்கள் போதைக்கு அடிமை ஆனவர்கள் போல அவற்றில் இருந்து மீள மறுக்கின்றனர்.. நம்முடைய மக்களின் நிலைமை எந்த ஒரு கூட்டத்தையும் பின் பற்றி செல்லும் செம்மறி ஆடுகளின் நிலைமையை போலதான் உள்ளது…

  7. மக்களின் மூட நம்பிக்கையை தயவு செய்து கெடுக்க வேண்டம் .. you might be an athiest but don’t publish some sensitive issues in internet world which affects others divotion…

  8. மதம் குறித்து எப்போது பேசினாலும் முடிந்தவரை பதில் கூறிவிட்டு முடியாதபோது அது எங்களின் நம்பிக்கை என்று முடிக்கிறார்கள். அந்த நம்பிக்கை எதைக்கொண்டு நெய்யப்பட்டுள்ளது என்பதை ஆய்வுக்கு உட்படுத்த யாரும் விரும்புவதில்லை.
    கண்ணால் கண்ட பிறகும் பட்டினிச்சாவுகளை எதிர்த்துப்போராடும் ஊக்கத்தை அந்த நம்பிக்கை தரவில்லை என்றால்
    தெளிவுகள் கிடைத்தபின்னும் நல்லதை ஏற்றுச்செய்யும் துணிவை அந்த நம்பிக்கை தரவில்லை என்றால்……
    அறிவியலால் நிரூபிக்கப்பட்டாலும் கூட அந்த நம்பிக்கை புறந்தள்ளப்படவேண்டியதே; அறிவியலால் நிரூபிக்கப்படாதபோதோ….

    தோழமையுடன்
    செங்கொடி

  9. //you might be an athiest but don’t publish some sensitive issues in internet world which affects others divotion…//

    Pal, the devotion and the marketing tactics of the devotes are irritating and hurting ppl like vinavu. Would you please help vinavu by asking them to stop the nonsense?

    காலங்காத்தாலே தூங்கவிடாம ஒரு பக்கம் கோயில் மைக்செட், ஒருபக்கம் பாங்கு சத்தம், இன்னொரு பக்கம் அல்லேலுயா கோஸ்டியோட அவலக்குரல். ரொம்பக் கஷ்ட்டமா இருக்கு தல, எப்படியாவது இதெயெல்லாம் நிப்பாட்டிட்டீங்கன்னா உங்களுக்குப் புண்ணியமாப் போகும்.

    • ஒன்னு செய்யுப்பா…
      ஊரைவிட்டு ஓடிப் பொய் காட்டுல இருந்துக்கோ…
      சாரி… காட்டுல தூங்கு…..
      அய்யய்யோ! பயமா இருக்கும்.
      சத்தமே கேட்காம எப்படித் தூங்குவது?
      அப்படித் தூங்கினா நம்மள சாமியாக்கிடுவான்களே..
      பகவானே

  10. அருமையான கருத்துக்கள்.ஆழமாக எழுதப் பட்டிருக்கிறது.உண்மையான ஆனமீகவாதிகளாக இருந்தால் வெட்கித் தலைகுனிந்து வேதனைப் படுவார்கள்.ஆனால் அவர்கள் இந்தப் போலிப் பக்தியின் முன் தோற்றுப் போய் நிற்பதுதான் உண்மை.

  11. //சென்னை தீவுத்திடலில் அமர்நாத்தைப் போலவே பனிக்கட்டி லிங்கத்தை உருவாக்கி ‘சென்னையில் அமர்நாத்’ என்று விளம்பரம் செய்யப்படுகிறது. ராட்டினம் ஏறப்போன பொருட்காட்சிக் கூட்டம் உடனே பக்தர்களாக உருமாறி அந்த செயற்கை லிங்கத்தைப் பரவசத்துடன் வழிபடுகிறது. திருப்பதி வரை சென்று தரிசிக்க முடியாத பக்தர்களுக்காக ‘சீனிவாச திருக்கல்யாணத்தை’ சென் னையிலேயே நடத்தி, ‘சென்னையில் ஒரு திருப்பதி’ என்று விளம்பரம் செய்கிறது திருப்பதி தேவஸ்தானம். ‘கோயிந்தா கோயிந்தா’ என்று அங்கேயும் கூட்டம் அலைமோதுகிறது.//
    சமீபத்தில் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான ஒரு இஸ்லாமிய இயக்கத்தார் தங்களது நிகழ்ச்சி ஒன்றில் மக்காவிலுள்ள கஅபா பள்ளியைப் போல வடிவமைத்து வைத்திருந்ததை கண்டு மக்கள் அதைச் சுற்றி வந்தனர் என்றும் அதைத் தடுக்க நிகழச்சி ஏற்பபடு செய்திருந்தவர்களே விளக்க ஏற்பாடுக்ளை பின்னர் செய்தனர் என்றும் அறிந்து வெட்கினோம்.

  12. நண்பா , கட்டுரை அருமை… அதே சமயத்தில் முஸ்லீம் மதத்தினர் மக்காவுக்கு சென்றால் தான் மோட்ஷம் கிட்டும் என்றும் கிறிஸ்தவர்கள் போப் என்ற மனிதனை கடவுளாக கொண்டாடுவதும் அந்த போப்களின் ஓரின சேர்கை விஷயங்கள் வெளி வந்ததையும் மேற்கோள் காட்டி இருந்தால் நீங்கள் ஒரு உண்மையான பகுத்தறிவு உடையவர் என்பேன் …ஆனால் உங்கள் கருத்து ஒரு மதத்தை மட்டுமே சாடுவது அப்பட்டமான உண்மை …

  13. “”//இராமன் பாலம் என்பது இயற்கையாக அமைந்த மணல்திட்டு”” என்று சொன்னால், ‘இல்லையில்லை, அது இராமனால் கட்டப்பட்டது, செயற்கையானது எனவே தெய்வீகமானது’ என்று கத்துகிறார் இராம. கோபாலன். ‘அமர் நாத் பனிலிங்கம் செயற்கையானது’ என்று சொன்னால் ‘இல்லையில்லை, அது இயற்கையானது எனவே தெய்வீகமானது’ என்கிறார்கள். வடக்கே இயற்கை தெய்வீகம்! தெற்கே செயற்கை தெய்வீகம்!

    சாம்சங் ரெப்ரிஜிரேட்டரையே கருவறையாக்கி, அதற்குள் பனி லிங்கம் ஒன்றை உறையவைத்து, ஆண்டுக்கு ஒரு முறை திறந்து காட்டினாலும் ‘ஹர ஹர மகாதேவா’ என்று கன்னத்தில் போட்டுக்கொள்ள இந்த பக்தர்கள் தயார்! மகரஜோதிக்குப் பதில் சிலிண்டரை வைத்து ‘ஸ்பிக் ஜோதி’யைக் கொளுத்திக் காட்டினாலும் அதனைத் ‘தரிசிக்கும்’ பொருட்டு விரதமிருக்கவும், இருமுடி சுமக்கவும் அய்யப்பன்மார்கள் தயார்//

    நல்லா குட்டு வச்சிருகீங்க….
    நம்ம மக்கள் ரொம்ப நல்லவங்க சார்…எதைச்சொன்னாலும் நம்புவாங்க…

  14. நாலு வ்ரியில் நருக்குனு சொல்லீட்ங்களே எப்படி சார் இவ்வளவு தைரியம்.உங்ளுக்கு ஒரு கீரீடம் வைக்க வேண்டியது தான்.

  15. ///நண்பா , கட்டுரை அருமை… அதே சமயத்தில் முஸ்லீம் மதத்தினர் மக்காவுக்கு சென்றால் தான் மோட்ஷம் கிட்டும் என்றும் கிறிஸ்தவர்கள் போப் என்ற மனிதனை கடவுளாக கொண்டாடுவதும் அந்த போப்களின் ஓரின சேர்கை விஷயங்கள் வெளி வந்ததையும் மேற்கோள் காட்டி இருந்தால் நீங்கள் ஒரு உண்மையான பகுத்தறிவு உடையவர் என்பேன் …ஆனால் உங்கள் கருத்து ஒரு மதத்தை மட்டுமே சாடுவது அப்பட்டமான உண்மை …//

    நீ ஏண்டா நாண்டுக்கிட்டு இருக்கறேன்னு கேட்டா அவன் ஏன் திரும்பிக்கிட்டு இருக்கான்? னு திருப்பி கேக்குற புத்திசாலியே…

    மக்காவுக்குப் போனால் தான் மோட்சம் கிட்டும்னு முஸ்லிம் மதம் சொல்லவில்லை. பணவசதியும், பயண வாய்ப்பும் இருக்கறவங்க மட்டும் அங்கே போய் பொதுவான ஓர் இறைவனை தேச இன அந்தஸ்து கடந்த ஒரேமாதிரியான வெள்ளாடை அணிந்து ஆன்மிக அனுபவம் பெறும் வாய்ப்பு அது.

    • ya i agree with u do u know how many people aare dieing in the period of hug. i will tell u bcoz im in saudi arabia atleast 1 million people in eachh year. non muslims they can’t even enter the the place mecha . compare to there our india is better. so ur agree with anmeegam but ur not agree with one riligion . so ur there. only one riligion dosn’t ask to convert that the riligion u mentioned. u people con’t agree that riligion in the sence think about ur poority

  16. முஸ்லிம்கள் மக்கா போனால் தான் மோசம் கிட்டும் என்று இல்லை போகாமலும் மோச்சம் கிட்டும் என்று நீங்கள் சொன்னாலோ ,நினைத்தாலோ அவர்கள் போய்விட மாட்டார்கள் எவன் ஒருவன் நன்மையான ,பிறருக்கு தீமை செயாமல் இருக்கிறானோ அவன் மோசம் அடைவான்.

  17. ////சாம்சங் ரெப்ரிஜிரேட்டரையே கருவறையாக்கி, அதற்குள் பனி லிங்கம் ஒன்றை உறையவைத்து, ஆண்டுக்கு ஒரு முறை திறந்து காட்டினாலும் ‘ஹர ஹர மகாதேவா’ என்று கன்னத்தில் போட்டுக்கொள்ள இந்த பக்தர்கள் தயார்! மகரஜோதிக்குப் பதில் சிலிண்டரை வைத்து ‘ஸ்பிக் ஜோதி’யைக் கொளுத்திக் காட்டினாலும் அதனைத் ‘தரிசிக்கும்’ பொருட்டு விரதமிருக்கவும், இருமுடி சுமக்கவும் அய்யப்பன்மார்கள் தயார்!////

    :-))

  18. நான் ஓர் ஈழத்தமிழனாக இருந்தாலும் இந்தியாவில் நீண்டகாலம் வாழ்ந்தவன் என்ற ரீதியில் இங்கே ஓர் இடுகையிட விரும்புகின்றேன், அத்தோடு இது தாயகத்தமிழர் மனங்களைப்புண்படுத்தினால் தயவு செய்து மன்னித்துக்கொள்ளுங்கள்.

    கோடி கோடியாய் பணம் கொட்டுமிடம் இந்தியாவில் எல்லோரும் சொல்வது திருப்பதி வெங்கடேஸ்வரர் அத்துடன் ஐயப்பன் கோவில்;

    இவை இரண்டும் உண்மையிலேயே தமிழ் நாட்டில் இல்லை. வேற்று மாநிலத்தில் இருந்தாலும் பக்தர்கள் தமிழ்நாட்டிலிருந்தே இங்கு அதிகம் செல்கின்றார்கள். உண்மையில் நான் வெட்கி வேதனைப்பட்டேன், நான் இந்தியாவிலிருந்த சமயம் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு பெரும் பணக்காரர் 1கோடி ரூபாவினை திருப்பதிக்கோவிலுக்கு காணிக்கை செலுத்தினார், அதேநேரம் ஒரு கோடி மக்கள் தமிழ் நாட்டில் உண்ண உணவின்றி வாடுகின்றனர், சரி 1 கோடி மக்களுக்கு 1 ரூபா வீதமாவது கொடுக்க வேண்டாம், 10 சதமாவது கொடுத்திருக்கலாமே? இல்லை தமிழ் நாட்டு அரசுக்கு சரி கொடுத்திருக்கலாமே? இவ்வாறு எத்தனை கோடிகள் கொட்டுகின்றது ஆந்திராவுக்கு? உன் பணத்தை நீ கொடுக்கின்றாய் உன் இடத்திற்கு குடிக்கக்கூட தண்ணீர் தர மறுக்கின்றான் அவன், இதை நீ உணர்கின்றாயா? நீ கொடுக்கும் ஒரு ரூபாயா இருந்தாலும் தமிழனுக்கு கொடு, தமிழனை வாழ வை அதை விடுத்து அடுத்தவனுக்கு கொட்டிக்கொடுக்குறாய். அவனோ உன்னை எட்டி உதைக்கின்றான், நீ ஒரு கோடி கொடுத்தாய் என்று அங்கே சொன்னால் நீ தமிழன் என்று தெரிந்தால் உனக்கும் தான் அடி, உதை. மனதிற்கொள் வெட்கித்தலைகுனியவேண்டும், அரசியலில் ஆட்டிப்படைக்கின்றனர் எல்லாமே பாதிக்கு மேல் வேற்று மாநிலத்தான், நீ தமிழ் நாட்டுக்காரன் என்று கூறிக்கொண்டு ஆந்திராவிலோ, இல்லை கர்நாடகத்திலோ இல்லை வேறு எந்த மாநிலத்திலோ உன்னால் சுதந்திரமாக தமிழ் வாழ்க என்று ஒரு வார்த்தை சொல்ல முடியுமா உனக்கு? சொல்ல தைரியமிருக்கின்றதா உனக்கு இல்லையே ஆனால் வேற்று மாநிலத்தவன் வந்து தமிழ்நாட்டில் ஆண்டால் தலைமேல் வைத்துக்கொண்டாடு, பால் அபிசேகம் செய், ஏனென்றால் தமிழன் மடையன் என்று எண்ணிக்கொண்டான். வந்தோரை வாழவைக்கும் பூமி வாழவைக்கும் பூமி என்று சொல்லியே நீ செத்துப்போ அவன் வாழ்ந்துகொண்டிருக்கின்றான். தமிழினமே சிந்திக்க வேண்டிய தருணமிது. அந்நியன் நம்மினம் அழிக்க நினைக்கின்றான், ஆண்டவன் அதைப்பார்த்து இரசிக்கின்றான்.

    கேவலம் உன் இனம் உன் கண்முன்னே அழிக்கப்படுகின்றது அதைப்பார்த்தும் இன்னும் ஏன் அமைதி?

    • அய்யா இறை உணர்வு என்பது மொழிகளைக் கடந்தது. இந்து மதத்திற்க்கு எதிராக எழுதும் இந்த போலி பகுத்தறிவுவாதிகள், உண்மையிலேயே பகுத்தறிவுவாதிகளாக இருந்தால் தமிழகம் கண்ட சித்தர்களைப் பற்றி ஆய்வு செய்துவிட்டு பிறகு எழுதட்டும்

  19. மிக நுட்பமான கட்டுரை…அற்புதமாக எழுதப்பட்டுள்ளது…!!!

  20. /மக்காவுக்குப் போனால் தான் மோட்சம் கிட்டும்னு முஸ்லிம் மதம் சொல்லவில்லை. பணவசதியும், பயண வாய்ப்பும் இருக்கறவங்க மட்டும் அங்கே போய் பொதுவான ஓர் இறைவனை தேச இன அந்தஸ்து கடந்த ஒரேமாதிரியான வெள்ளாடை அணிந்து ஆன்மிக அனுபவம் பெறும் வாய்ப்பு அது.
    //
    அட வாசக அதி புத்தி சாலியே , அந்த பரவச அனுபவத்தை தாண்ட சபரி மலைக்கும் போறவனும் சொல்றான் …என்ன உன் மதத்தில காசு உள்ளவன் மட்டும் போறதா நீ சொல்ற ..இங்க ஏழை பாளை எல்லாரும் போறான் .. அங்க போரவுனுக்கும் இங்க போறவனுக்கும் பெரிய வித்தியாசமில்லை ..உன் எதிரி மதத்தை பற்றிய கட்டுரை என்றவுடன் நீ காட்டும் அக்கறை நல்லாவே தெரியுது

  21. ///மக்காவுக்குப் போனால் தான் மோட்சம் கிட்டும்னு முஸ்லிம் மதம் சொல்லவில்லை. பணவசதியும், பயண வாய்ப்பும் இருக்கறவங்க மட்டும் அங்கே போய் பொதுவான ஓர் இறைவனை தேச இன அந்தஸ்து கடந்த ஒரேமாதிரியான வெள்ளாடை அணிந்து ஆன்மிக அனுபவம் பெறும் வாய்ப்பு அது.
    //
    இது எப்படி இருக்குன்னா, ஒரு குறிப்பிட்ட மத பணக்காரன் குடிக்கிற மதுவிலதான் பரவச அனுபவம் கிடைக்கும் , மத்தவன் குடிக்கிறதுல ஒரு போதையும் கிடைக்காது அப்படின்ற மாதிரி … ஆக மொத்தம் மக்காவுக்கும் ,சபரி மலைக்கும் , வாடிகனுக்கும் போற எல்லா பயளுகலுமே போதைக்கு அடிமை …இதுல என் போதை பெரிசு ,உன் போதை சிறிசு அப்படின்னு அடி தடி வேற …

    • Well said Ilayadasan….
      Hats off

      Vinavu, if you have added facts about the ‘huge beliefs’ in other religions also, it would have been a nice entertaining article

      keep the good work going

  22. எனக்கும் , என் முஸ்லீம் நண்பனுக்கும் ,உணவு இடைவெளியில் ஓர் உரையாடல் , நண்பன் வழக்கம் போல் , இஸ்லாம் மதத்தின் அருமை , பெருமைகளை எடுத்து சொல்ல ஆரம்பித்தார்:
    நண்பர்: குரான் ல என்ன சொல்லியிருக்குன்ன , மனிதன் இறந்த பின்,அவன்
    முதுகு தண்டு வடதில இருந்து முத்து மாதிரி ஒன்னு சொர்கத்துக்கு போகும், அங்க சொர்க்க வாழ்வுன்னு ஒரு நாட்டாமை தீர்ப்பு சொல்லிடாருன்ன
    உடனே அந்த முத்து ,அந்த மனிதன் பதினாறு வயதில எப்படி இருந்தானோ அப்படி
    ஆயிடுவான் …அப்புறம் அவன் சொர்க்கத்தில் இருக்கிற கன்னி கழியாத பெண்களை எப்படி வென அனுபவிக்கலாம் …
    நான் : இது ஒரு கவர்ச்சி காட்டி மதத்துக்கு இழுக்கிற தந்திரமா இருக்கே..
    ஏன் அந்த முத்து ஒரு குழந்தை ஆக மாறி , அப்படியே எந்த ஒரு
    விவகாரம் இல்லாம இருக்க வேண்டிதானே …அங்க போனபுரமும்
    ஏன் இந்த ஜல்சா ஆசை ?
    நண்பன்: பெருத்த அமைதி ..
    நான் : உங்களோட இன்னொரு முஸ்லீம் நண்பன் ,உங்க கூடவே
    இறந்து , நீங்க ரெண்டு பெரும் , முத்து ல இருந்து உங்க பதினாறு
    வயசுக்கு போறத வட்சிகுடுவோம் …அங்க ரெண்டு கன்னிக இருக்காக
    ஆளுக்கு ஒன்ன அனுபவிக்கலாம் அனுபவிகிறீங்க ..அப்புறம்
    உங்க ரெண்டு பேருக்கும் ஒரு பொறாமை வருது ..என் கன்னி அழக அவன்
    பாக்க கூடாதுன்னு …அப்பே என்ன செய்வீங்க ?
    நண்பன்: அமைதி
    நான்: ஒரு வேலே , அவங்களுக்கும் முக்காடு போடுருவீன்களோ ?

  23. “இது ஒரு வகைப் ‘பகுத்தறிவு’. இதுதான் நம் முன் பக்திவேடம் பூண்டு ஆடுகிறது. வெறும் கருத்துப் போராட்டத்தால் இதனை வீழ்த்த முடியாது. இதன் இதயம் ஆன்மீகத்தில் இல்லை ; லௌகீகத்தில் இருக்கிறது சமூக வாழ்க்கையின் எல்லாப் பரப்புகளிலும் வேர் பரப்பியிருக்கும் இந்தப் ‘பகுத்தறிவை’ எதிர்த்துப் போராடுவதென்பது ‘ஒரிஜினல் மூடநம்பிக்கையை’ எதிர்த்துப் போராடுவதைக் காட்டிலும் கடினமானது.”

    புதிய கலாச்சாரத்தில் வந்த பல கட்டுரைகளையும் வினவு வெளியிட வேண்டும்.கடவுள் எங்கெ இருக்கிறார் எனக்கேட்டால் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பார்கள் பின்ன என்ன இதுக்கு சபரிமலைக்கு போறீங்க என்றால் மனசு தான் கடவுள் என்று புது வியாக்கியானம் கொடுப்பார்கள்,கடவுள் குடியுப்பதால் தான் தன் வாழ்வுக்கு யாரெதிரி என்பதை தெரிந்தும் அறியாதது போல் கடவுள் போதையில் கிடக்கிறார்கள் நம்முடைய வேலையே கொஞ்சமும் ஈவிரக்கமின்றி இவர்களின் “மனசை” பிளப்பதாக இருக்கவேண்டும்

    கலகம்

  24. கோழி முட்டை போடுவதை போல பின்னூட்டமிடும் ஒரு புண்ணாக்கு வேட்டிக்கு உள்ளே கட்ட வேண்டிய கோவணத்தை நெற்றியில் கட்டிக்கொண்டு வந்திருக்கிறது.
    காவி நிறத்தில் இருந்தாலும் கோவணம்தானே அதன் கப்பு இந்த பிண்ணூட்ட பகுதியை நாறடிப்பதால் அந்த ஜந்துவை விரட்டி விடுங்கள் தோழர்களே.

  25. ஜட்டி யில் தொழிற் சங்கம் கூடாது என வரிந்து கட்டிக் கொண்டு வந்த ஐடி தாசன் இங்கே பொந்து மத்ததிற்காகவும் ஆஜர் ஆகிரார்…..
    நமது அறிவையும் , பகுத்தறிவையும் கேள்வி கேட்கிறார். ஆனால் ஒரு பிரச்சனை…..

    ஜட்டி துறையோ, பொந்து மதமோ ஏதோ புனிதமாக இருப்பது போலவும அதை பற்றி நாம் அவதூறு பேசுவது போலவும பிதற்றும் இவர் ராமலிங்க ராஜூ மற்றும் ராமன் நாயரையும் மறப்பது ஏனோ?

    கண்ணை மூடிக்கொண்டிருந்தால் திறக்கலாம்
    குருடராயிருந்தால்……அதுவும காரியக் குருடராயிருந்தால்???????????????????????

  26. illayadhasan
    முஸ்லீம் மதத்தினர் மக்காவுக்கு சென்றால் தான் மோட்ஷம் கிட்டும் என்றும் கிறிஸ்தவர்கள் போப் என்ற மனிதனை கடவுளாக கொண்டாடுவதும் அந்த போப்களின் ஓரின சேர்கை விஷயங்கள் வெளி வந்ததையும் மேற்கோள் காட்டி இருந்தால் நீங்கள் ஒரு உண்மையான பகுத்தறிவு உடையவர் என்பேன் …ஆனால் உங்கள் கருத்து ஒரு மதத்தை மட்டுமே சாடுவது அப்பட்டமான உண்மை …

    ஏண்டா அம்பி,
    புதிய கலாச்சாரம் பத்திரிக்கை படிக்கிரியோல்லியோ,
    ம.க.இ.க., எல்லா ம்த்த்தையும் விமர்சனம் பன்ராள். மதத்தை வைச்சு வியாபாரம் பன்ர என்னை மாதிரி எல்லா பிராடுகளுக்கும் ம.க.இ.க., எதிரிதான்.

    ஆமா நீ நம்மவாதான , ஆத்துக்கு வந்துட்டு போடா.

  27. குருட்டு அர டிக்கெட்டு ,
    என் பின்னூட்டத்தை நல்லா படி முதல்ல …பொந்து மதம் …முல்லா மதம் ..
    கிரிஷ் மதம் …எல்லாமே சுத்த பேத்தல் பொடியா …முந்தரி கொட்டையா இருக்காத ..
    எல்லாத்தையும் விரட்டு விரட்டுனி சொல்ற உன்ன மொதல்ல விரட்டனும் ..மொதல்ல முழு டவுசர் தைத்து , பொறுமையா எப்படி அடுத்தவங்க என்ன சொல்ல வாரங்க கவனிக்க கத்துக்கோ

  28. வோய் ராம கோபாலா … நான் அம்பியுமில சும்பியுமில …அதை படிச்சியா இத படிச்சியா கேட்குரையே ..விட்டா வினவு பதிவெல்லாம் படிச்சு ஒரு டாக்டோரட் வாங்கிவந்துட்டுதன் பின்னூட்டம் போடணுமுன்னு சொல்வியோ ?

  29. இந்து மதவெறி இளையதாசரே,
    கட்டுரையில் ஆதாரத்தோடு பனிலிங்கம் பொய், மகர ஜோதி பொய், ராமன் பாலம் பொய் என்று போட்டிருக்கு. நீங்களும் ஆதாரத்தோடு அதை மறுக்கலாமே. இதுக்கு இடையில் முசுலீம ஏன் இழுத்து உடுற. ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற காவி ரவுடிகள் தான் எதை பேசினாலும் இப்படி முசுலீம இழுத்து உடுவான்.

  30. ஏம்பா தாசு,
    சாரிபா …உன் புண்ணூட்டத்த இப்பதான் பாத்தேன்… முத்தான மூணு கருத்த சொல்லீகிறே……

    1) இந்துவ மட்டும் ஏன் திட்டுற?
    2) முசுலீம ஏன் திட்டல??
    3) கிரிஸ்டியன ஏன் திட்டல???

    இத கண்டு புடிக்கறத்துகுள்ளாரயே தாவு தீந்து டவுசர் கிழிஞ்சு போச்சு….இந்த அழகுலா புதுசா முழு டவுசர தைக்கணுமாம்? விளங்கிடும்!!!!

    அப்புறம் ஒன் மேட்டர்… நீ எல்லாத்தையும் படிச்சு டாக்குடர்ர்ர்ரேட்டு வாங்கிட்டு புண்ணூட்டம் போட வாணாம்…
    அட்லீஸ்ட் இந்த கட்டுரையை படிச்சுட்டு புண்ணூட்டம் போடு….

    அத உட்டுட்டு சம்மந்தமேயில்லாம அவன திட்டு அவங்காயாவ திட்டுன்னு சொன்னா உன்ன கும்பின்னுதான் சொல்லுவாங்க

  31. நான் முஸ்லீம் மதத்தை சாடியவுடன் , நான் ஒரு அம்பியோ என்று உடனே சந்தேகம் வந்து டவுசரும் , கோபாலனும் எப்படி குதிகிரான்களோ …அதே சிந்தனயில் ஒட்டிய சந்தேகம் தான் எனக்கும் வந்தது வினவின் இந்த பதிவின் மேல …நான் உடனே வினவு நீ ஓர் கிறிஸ்டியன் தானே …அல்லது நீ ஓர் முஸ்லீம் தானே நு கேட்கலே …அப்படியே விட்டுப்போன இந்த இரு மதங்களின் நாற்றத்தையும் மேற்கோள் கட்டியிருந்தா , கட்டுரை ஒரு நடு நிலமையா இருந்திருக்குமே !

  32. டவுசர் நீ தான் எதையும் புரிய முடியாத அர வேக்காடு ன்னு நியே ஒத்துகிட்ட …பின்ன என்ன , பாஞ்சயது முடிஞ்சட்சு ..போயி அடுத்த கும்மி எங்க போடலாமுன்னு பாரு !

  33. சுனா பானா, இந்து மதத்தை மட்டும் சொல்லாதட ன்ன , உடனே இந்து தீவிர வாதியா ….முஸ்லீம் பத்தி சொன்னவுடனே நீ குதிகிரையே , அப்பா நீ ஒரு முஸ்லீம் தீவிரவாதின்னு நான் ஏன் உன்ன கூப்பிட கூடாது ?

  34. எலேய் தாசப்பா..

    வினவு தளத்தில் இதற்கு முன் இசுலாமிய அடிப்படைவாதம் மற்றும் கிருத்துவ மூடத்தனங்களை குறித்து எழுதப்பட்டிருக்கிறது.. — நீ ஏன் அங்கெல்லாம் வந்து ஏன் இந்து மதம் குறித்து எழுதவில்லை என்று ஏன் கேட்கவில்லை??? Surprising dude..!!!

    இக்கட்டுரை ஒரு பத்திரிகையில் வெளியான ஒன்று.. அதனை இங்கே மறுபதிப்பு செய்திருக்கிறார்கள். ஏற்கனவே பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையில் என்ன எழவுக்கு மாற்றம் செய்து இசுலாம் கிருத்துவம் குறித்து சொருக வேண்டும்? அதற்குத் தான் முன்பே எழுதிய கட்டுரை இருக்கிறதே? அதைக் கூட கவனிக்காத அளவுக்கு உன் குடுமி உன் கண்ணையே மறைக்கிறது. மொதல்ல அத்த அள்ளி முடிஞ்சிக்கோங்கோ.

    பேளப் போற எடத்துல சாப்டியான்னு கேக்கரது தான் உன் அறிவா? எங்கேர்ந்துய்யா கெளம்புரீங்க?

    இன்னும் கேட்க வேண்டியது தானே.. ”வினவுக்காரவுக ஜோராஸ்ட்ரியம், கான்பூஷியம், அவும் ஷென்ரிக்யோ, பாகான், சீக்கியம், ஜைனம், பௌத்தம், இயற்கைமதம், தாவோயிசம், யூதம்… இப்படி உள்ள மதங்களையெல்லாம் பத்தி எழுதாததாலே அந்த மதவெறி பிடிச்சி அலையறாக” அப்படின்னு..

  35. நன்பர்கள் மன்னிக்க::: “ஒரு பத்திரிகையில்” = புதிய கலாச்சாரத்தில்.

  36. தே லவர் பாய் , உன்ன மாதிரி லவ் பன்றதில பிசிப்பா .. latest பதிவுக்கு லேட்டஸ்ட் reply தான் கொடுக்க முடியும் … அறிசுவடிய தேடி பிடிச்சு அங்கெல்லாம் போயி கருத்த போடுன்னு சொல்றே …நான் போட ரெடி …நீ ரெடியா lad?

  37. //பேளப் போற எடத்துல சாப்டியான்னு கேக்கரது தான் உன் அறிவா? எங்கேர்ந்துய்யா கெளம்புரீங்க?//

    ராமகோபாலன் அன்டு கம்பேனி பிரைவேட் லிமிடெட் …!!!

  38. Oh my dear dhassaa.. That’s a fantastic idea. Search through vinavu’s other posts and write your craps there. I am there to join your bluff-party

    தெரஸ்ஸா பதிவிலும் மும்பை குறித்த கடைசி பதிவிலும் பொந்து மதத்தின் டவுசரை கிழித்தெரிந்து சங்கராச்சாரிகளின் கோவனம் உருவப்பட்டதைப் போல் மொத்த பொந்து மதத்தின் கோவனத்தையும் உருவும் விதமாய் கொமெண்டுகள் இடப் போகும் உங்களுக்காக ஆவலோடு காத்துக் கிடக்கிறேன்.

  39. ——விளம்பரம்——-

    அமெரிக்கா ஊற்றி வளர்த்த ஜிகாதிப் பயங்கரவாதம் !

    ஷகீலா – கவர்ச்சி சுதந்திரமா ? பர்தா கண்ணியமா ??

    ” நமீதா அழைக்கிறார் ” – நாசரேத் ஆயர்

    யேசுவே நீரும் இல்லை – அன்னை தெரசா !

    அதாகப்பட்டது, மேலுள்ள சுட்டிகளில் இசுலாமிய மற்றும கிறுத்துவ மதங்களை வினவு சாடியிருப்பதால் அங்கே நமது அண்ணன் இளையதாசன் இந்து மத்த்தை திட்டாமல் போன சதியை அம்பலப்படுத்தி இந்து மதத்தை நார் நாராய் கிழித்து காயப்போடப் போகிறார். இதில் ஹைலைட்டாக அவர் தனது இந்து நண்பருடன் உணவு இடைவேளையில் பேசிய பேச்சும் இடம்பெரும். அனைவரும் வந்து இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி ஒர் ஆன்மீக அனுபவத்தை பெறுமாரு கேட்டுக்கொள்கிறோம்.

    இப்படிக்கு விழாக்கமிட்டியினர்

    விளம்பர உபயம்
    லவ்வர்பாய், மாணவன், சூனா பானா, அர டிக்கெட்டு, கலகம் , குதிரு மற்றும் பலர்

  40. I born in Hindu family, my close friends are Christians and Muslims. They also reflect the “foolishness” in their “religious practice” and they are much worried about the religious Fanaticism

    As per my observations , the following are the reasons
    # poverty
    # lack of education
    # misguided by Media [ news agencies ]
    # misguided by politicians
    # false recognitions
    # No clear pathway to eradicate “Foolish Religious Practice” [ All religions ]
    # poor religious understanding.[ do not use the phrase “religious tolerance” ]

    My suggestions
    # create a blog to show the positive things done by the “Religious” .
    # During festive occasions, Go to Temple , Church and Mosque, Give handouts related to “civic sense” , “small savings”, “clean habits” etc…

  41. டவுசர் …அடங்க மாற்றியே … இலவச விளம்பரத்துக்கு நன்றி …கூட்டம் சேக்கிற போல …தனி ஆவர்த்தனம் பண்ண முடியலேள்ள

  42. யப்பா,

    தாசப்பா ஒரு கட்டுரய முழுசா படிக்காம பேசி இப்புடி காவி கலரு கோவணத்தையும் விட்டுட்டு போறீயேப்பா ரொம்ப நல்லா மாவு அரைக்குறீயே எங்கன கத்து குடுத்தாங்க சீபீஎம் அல்லது ஆர் எஸ் எஸ் ,பீஜேபி, அல்லது எதுலனு நீயே சொல்லுப்பா,ஏன்னாஅ உன்னோட மாவாட்டுர திறமய பாத்துட்டு இந்து முன்னணியில ராம கோபாப்ஸ்க்கு அப்புறம் நீதான் தலைவர்ன்னு பேசிக்குறாங்க.அப்புறம் நீ வந்தது ரொம்ப சந்தோசமா இருக்கு என்னா லூசு கோட்சில்லா,போலி விடுதலை மாறி ……..மாரிங்க இருந்தாதான் கச்சேரி களை கட்டுது.

    கலகம்

  43. டவுசர் …அடங்க மாற்றியே … இலவச விளம்பரத்துக்கு நன்றி …கூட்டம் சேக்கிற போல …தனி ஆவர்த்தனம் பண்ண முடியலேள்ள//

    பின்ன உன்ன மாதிரி மொக்கய பேசுரதுக்கு எங்களுக்கு பயிற்சி ஒண்ணும் தரலை\
    அதெல்லாம் உனக்குதான் கைவந்த கலை.என்ன இருந்தாலும் உனக்கு அகில உலக சிறந்த மாவாட்டும் திலகம்ன்னு பரிசு கொடுக்க போறாங்களாம்

  44. Iam just stunned reading this article. This what i encounter talking with people who call themselves “spiritual” but not religious. You just cant convince them because nothing seems to rattle them. they accept anything and everything carrying on their usual superstitious beliefs and rituals. Its like a Vijay fan talking bad about Ajith or vice versa. i personally feel this is a lost cause as these people just mutate on the go.
    Doublethink (act of simultaneously accepting as correct two mutually contradictory beliefs) is an apt word to describe this behaviour.
    Thanks to Vinavu for posting this article which was incisive to say the least.

  45. தோழர்களே,

    போலிகம்யூனிச கட்சியான சிபிஎம் கட்சியின் சார்பில் இணையத்தில் எழுதிவரும் சந்திப்பு என்கிற நபர் தொடர்ந்து அவதூறுகளையும் புரட்டுக்களையுமே பதிந்து வருகிறார். அவரிடம் நாம் சென்று விவாதித்தால் எத்தனை இழிவாக நடந்து கொள்வார் என்பதனை நமது தோழர்களின் கடந்த இரண்டாண்டு எழுத்துக்களைப் (அசுரன், கேடயம், கரும்பலகை, அரசுபால்ராஜ்….) பார்த்தாலே புரியும்.

    அனைவரது தளங்களிலும் சிதறிக் கிடக்கும் இதுபோன்ற பதிவுகளைத் தொகுக்கவும், போலிகம்யூனிச கும்பலை நோக்கிய எனது பதிவுகளையும் பதியும் வண்ணம் இத்தளத்தை உருவாக்கியிருக்கிறேன்.

    கீழே சந்திப்பு என்கிற நபரின் தளத்தில் நான் பதிந்த பின்னூட்டத்தை இங்கே பிற தோழர்களின் பார்வைக்காக பதிந்திருக்கிறேன். நன்றி!

    – கலைவேந்தன்.
    —————————————————————————–

    மதிப்பிற்குரிய தோழர் செல்வப்பெருமாள் அவர்களுக்கு,

    நான் பல முறை வேண்டுகோள்கள் விடுத்திருந்தும் நீங்கள் நேர்மையாக எனது பின்னூட்டங்கள் சிலவற்றை இன்னும் பதிப்பிக்காமல் இருக்கிறீர்கள். கிட்டத்தட்ட பத்துநாட்களுக்கும் மேலாக நீங்கள் மவுனம் சாதித்து வருவதால் இனியும் தாமதிக்க நான் தயாராக இல்லை.

    நீங்கள் இழிவாகக் கடைபிடித்து வரும் செயல்களான மகஇக வின் மீது புழுதிவாறித் தூற்றும் போக்கு, போலிஸ்காரர்களுக்கு ஆட்காட்டி வேலை செய்வது, ‘நக்சலைட்’ என்று பீதியூட்டி தீக்கதிரில் எழுதுவது போன்ற செயல்களோடு, நான் சார்ந்திருக்கும் அமைப்பின் பெயரிலேயே மோசடியாக வலைதளத்தை உருவாக்கி அவதூறுகளையும் பதிந்து வருகிறீர்கள்.

    இந்நிலையில் உங்களை மேலும் கூடுதலாக கவனம் செலுத்தி உங்கள் கட்சியிலுள்ள நேர்மையான தோழர்களிடமிருந்து தனிமைப் படுத்த வேண்டும் என்கிற நோக்கில் கீழ்கண்ட வலைதளம் ஒன்றைத் தனிப்பட்ட வகையில் தொடங்கியிருக்கிறேன்.

    வினவு தளத்திலும் பிற தோழர்களது தளங்களிலும் எமது பத்திரிக்கைகளிலும் அவ்வப்போது பதியப்படுகின்ற விமர்சனங்களைப் பார்த்தே தொடைநடுங்கிக் குமைந்து கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த வலைதளம் கூடுதல் சவாலாக இருக்கும் என்பதனை மிகவும் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதற்கு முன் பதியப்பட்ட பல்வேறு சித்தாந்த ரீதியிலான விமர்சனங்களும் இத்தளத்தில் தொகுக்கத் திட்டமிட்டிருக்கிறேன். தமுஎசவில் என்னோடு பணியாற்றிய பல்வேறு தோழர்களின் ஆதரவோடுதான் இத்தளத்தைத் தொடங்கியிருக்கிறேன்.

    விவாதங்களை நேர்மையாக பங்கேற்க பயந்து அவதூறுகளையும் வசவுகளையும் மட்டும் பதில்களாகத் தந்து என்னை இந்த வலைதளத்தைத் தொடங்க வைத்த உங்களுக்கும் (சந்திப்பு (எ) செல்வப் பெருமாள்), சிபிஎம் கட்சியின் யோக்கியதையை அப்படியே காட்டும் கண்ணாடியைப் போன்று இணைய பக்கங்களில் எழுதிவரும் ‘விடுதலை’ என்கிற ரமேஷ்பாபுவுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    – கலைவேந்தன்.
    http://policommunists.blogspot.com/

    இதுவரையிலான பதிவுகளின் தலைப்புகள் உங்கள் பார்வைக்காக…..

    1. “போலி(கம்யூனிஸ்டு)கள்” தளத்திற்கான தேவை பற்றி…

    2. பாசிஸ்ட் சிபிஎம் கட்சியும்! லெனின் சொல்லும் ஜனநாயகப் புரட்சியும்!!

    3. அணுசக்தி ஒப்பந்த பேரம்! இந்திய-அமெரிக்க கூட்டுப்பயிற்சிக்கு சோரம்!! – போலிகம்யூனிஸ்ட் சிபிஎம்மின் ஏகாதிபத்திய எதிர்ப்பைப் பாருங்கள்!!!

    4. டாட்டாவும் ஆர்.எஸ்.எஸ்.சும் பங்காளிகள்! எதிர்த்துக் கேட்கும் புரட்சியாளர்கள் ஜென்ம விரோதிகள்!! – சிபிஎம் கட்சியின் ‘குண்டர் கொள்கை’….

    இன்னும் இன்னும் தொடரும்…..

  46. அரை வேக்காட்டுத்தனமான கட்டுரைகளும் பதில்களும்,
    முதிற்ச்சியற்ற பகுத்தறிவு சிந்தனை, வராலாறுகளை தெளிவாக படித்து விட்டு கட்டுரை எழுத முயற்ச்சிக்கலாம். சாதாரண பாமரனின் (இலவசத்தை எதிர்பார்க்கும் சோம்பேறி அல்ல) தேவை என்ன என்பது தெரியாமல் பொது உடமை பேசும் சிலர்.
    அடிமையான தமிழர்கள், அன்னிய சக்திகளுக்கு அடிவருடியாய் செயல்படும் தமிழ் முற்ப்போக்கு எழுத்தாள‌ர்கள்

    என்னெவென்பது தமிழின் நிலை இனி

  47. குமரிநாடு…
    உங்கள் கருத்துக்கு விரோதமானவை அரைவேக்காட்டுதனமென்றால்…
    சரியானதை சுட்டவேண்டியதுதானே.
    அதை விடுத்து குறை கூறி என்ன பயன்?

  48. அய்யா பகுத்தறிவு என்பது ஒரு கருத்தை ஆழ்ந்து நோக்குவதும், அதில் மறைமுகமாக இருக்கும் அர்த்தங்களை புரிந்து கொள்வதும் பகுத்தறிவு. ஒரு பொருளை விவாதிக்கலாம், அதன் மூலம் நிறைய உண்மைகளை தெரிந்து கொள்வது பகுத்து+அறிவு. வீணான விவாதங்கள் இதுபோன்ற கட்டுரைகள் கலகத்திற்கு வழிவகுக்கும்.
    தமிழ் நாட்டில் இருப்பவ்ர்களுக்கு குடுக்காமல் திருப்பதி உண்டியலில் போடுவதை பற்றி ஒருவர் குறைபட்டிருந்தார். தண்ணீர் தராத அவர்கள் உண்டியலில் ஏன் போடவேண்டும்? என்று, இங்கு மட்டும் என்னெ வாழுதாம் அனியாய ஜாதிவெறி, ஒரே ஊருக்குள் தண்ணி எடுக்க விட மாட்டேன் என்கிறார்கள். ஊருக்கு நடுவே தீண்டாமை சுவர். தேனீர்கடைகளில் தனித்தனி கோப்பைகள். ஜாதி வாரியாக கட்சிகள். அமைப்புகள், சிலை உடைப்பு, சாணி பூசுதல், மதங்களை மட்டும் சாடும் கட்டுரைகள் ஜாதிவாரியாக உள்ள மூட நம்பிக்கைகளை சாட வேண்டியதுதானெ, (எனது சாதியில் நாங்கள் இப்படித்தான் செய்வோம்,அப்படித்தான் செய்வோம், நீ எங்க வீட்டின் முன்பாக வரக்கூடாது,என்று பல) நான் சொல்வது தமிழகத்திலுள்ள ஜாதிகளை பற்றி மட்டும் (அவாள் களை நான் சொல்ல வேண்டியது இல்லை)
    என்னெ ஜாதி ஓட்டுக்கள் கிடைக்காமல் போய்வ்டும் என்ற அச்சமா?

    க‌லாச்சார‌ நெறிமுறைக‌ளை ப‌குத்தறிந்து அவ‌ற்றை சீர்ப‌டுத்த‌ உத‌வுங்க‌ள். த‌மிழ்க‌லாச்சார‌ம் 5000 ஆண்டுக‌ளுக்கு முற்ப்ப‌ட்ட‌து. திருக்குற‌ளில் சொல்லாத‌தையா நீங்க‌ள் சொல்லிவிட‌ப் போகிறீர்க‌ள்

  49. ஐயா வணக்கம்,
    யானே அவ்விளக்கத்தை முன்வைத்திருந்தேன், இங்கே பகுத்தறிவு என்பதற்காக நீங்கள் பேசுகின்றீர்கள், நீங்கள் கண்ட பெரியார் எவ்வாறாக இருந்தாலும் பரவாயில்லை, இங்கே நான் மொழி மதம் குறித்து வாதிடவேண்டும் என்பதல்ல என் நோக்கம். நாம் மனிதர்கள் அதிலும் தமிழர்கள் என்பதை நினைவிற்கொண்டெ யான் இதனை வரைந்தேன். பட்டினியால் அழும் குழந்தைக்கு பசியே தீர்க்கவேண்டிய ஒன்று அதை விடுத்து ஆண்டவன் சன்னிதியில் அக்குழவியை இட்டு பசியாற்றமுடியாது. எம் உறவுகள் பட்டினியாற் துடிக்கின்றன, எம் உறவுகள் தாயகத்தில் மட்டுமல்ல தமிழீழத்திலும் கூடத்தான். இங்கே குறிப்பிட்ட ஓர் விடயம் நாம் இடும் காணிக்கைகள் உண்மையில் யாரைச்சென்றடைகின்றன என்பதை பகுத்தறிவுச்சிந்தனையோடு பாருங்கள். சரி யாரைச் சென்றடைந்தால் என்ன என்று கேட்கும் உங்களுக்கு அதில் தெரிவது இன வெறி ஜாதிவெறி என்றால் அது “ஒருவன் எதைப்பற்றி எப்போதும் சிந்திக்கின்றானோ அவன் அதுவாகவே ஆகிவிடுகின்றான்” என்பதுபோல் உள்ளது. இங்கே சொல்வது சரி நீ கோயிலில் இட்ட பணத்தினை 4 பட்டினியால் வாடும் மனிதனுக்கு உணவாகவிடு, அது உன்னால் தமிழ் நாட்டில் செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை, ஆந்திராவில் பசியால் பட்டினியால் வாடும் ஓர் உயிரினத்திற்கு இடு அதுவே போதும். நீங்கள் இட்ட வரிகளே உங்கள் வினாவிற்கான பதில்களை வழங்குகின்றன. “த‌மிழ்க‌லாச்சார‌ம் 5000 ஆண்டுக‌ளுக்கு முற்ப்ப‌ட்ட‌து. திருக்குற‌ளில் சொல்லாத‌தையா நீங்க‌ள் சொல்லிவிட‌ப் போகிறீர்க‌ள்” யான் இங்கு வாதிட வரவில்லை, மானிடனிடத்திலிருக்கும் பகுத்தறிவைப்பற்றிப்பேசும் தாங்களே பகுத்து அறியாதவிடத்து நீங்கள் எவ்வாறு மற்றவர்களைப்பகுத்தறிய வைக்கப்போகின்றீர்கள் என்ற கவலையோடும் மன ஆதங்கத்தோடுமே இதனை வரைகின்றேன். பகுத்தறிவு என்பது வேறு அடிமைத்தனம் என்பது வேறு, எங்களுக்கும் பன்மொழியில் ஆருயிர் நண்பர்கள் இருக்கின்றார்கள், இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளில் ஏறத்தாழ 106 நாடுகளுக்குமேல் நண்பர்கள் உள்ளனர், பல மொழி, பல மதம் மதமற்றவர் என்று எத்தனையோ, ஆனால் அவர்களிடம் காணாத புதுமை ஒன்றை தமிழனிடம் கண்டேன், பெரியாரின் கொள்கை என்று பகுத்தறிவு பற்றி பேசும் பலரிடம் அந்த பகுத்தறிவிற்கான அடித்தளமே இல்லாதமை. பெரியார் சொல்லாத பலவற்றை தம்மகத்தே போட்டு அதற்கு ஒரு வரைவிலக்கணம் கொடுத்து அதனை சீர்தூக்கிப்பார்க்கும் ஓர் கேவலம். மதிக்கப்பட வேண்டியவர் பெரியார் மிதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார் என்பது எண்ணும்போது கண்களில் வரும் கண்ணீர்கள் உப்புக்கட்டிகளாக உறைகின்றனவே!.. முதலில் முக்கியம் மானிட உயிர் அதன்பின் நீங்கள் ஏது என்றாலும் சீர்துக்கிப்பாருங்கள். உங்களால் முடிந்தால் கன்னடருக்கும், தெலுங்கர்களுக்கும்,(*தமிழ்நாட்டில் இருப்பவர்களைப்பற்றி சொல்லவில்லை) நீங்கள் அவர்களின் பூர்வீக இடங்களில் சென்று உங்கள் பகுத்தறிவைச் சொல்லி வென்றுவாருங்கள் நான் நேரே வந்து உங்களைச்சந்திக்கின்றேன். என்வார்த்தைகள் தமிழன் என்பதால் யான் பெங்களூரில் தாக்கப்பட்டதில் இருந்து மட்டுமல்ல, மும்பையில் தமிழன் என்பதனால் வாடகை வாகனத்திலிருந்து நடுத்தெருவில் தள்ளி வீழ்த்தப்பட்டு வந்த காயங்களில் இருந்தல்ல இலங்கையில் எத்தனை முறை சிங்களவன் பிடித்து அடித்தும் அதன்பின் மலேசியாவில் தமிழன் என்று தண்ணீர்கொண்டு பீச்சி அடிக்கப்பட்ட வேதனைகளிலும் வலிகள்லிருந்துமே தோன்றின. அடிகளும் ரணங்களும் தோன்றும்போதே மனதில் ஓர் வெறி ஏற்படும் என்பது என்னமோ உண்மைதான் ஆனால் கொழுந்துவிட்டு எரியவைத்தவர்கள் யார்? யானோ கலவரத்தை மூட்டுகின்றேன்? இல்லை என்னை மூட்ட வைத்தவர்கள் யார் என்பதனை உங்கள் ப

  50. Y DON U COMMENT ON THE BELIEFS OF OTHER RELIGIONS TOO?? U R STANDING WITH FOUR OF YOUR FRIENDS AND IF A FRIEND COMES AND INSULTS U ALONE ALL THE TIME EVEN THOUGH NOBODY STANDING THERE IS PERFECT THEN HOW WILL U FEEL?? IF U HAVE THE GUTS TO SPEAK ABOUT THE MOODA NAMBIKKAIS IN OTHER RELIGIONS TOO THEN CALL YOURSELF A PAGUTHARIVAALAN OTHERWISE CALL YOURSELF HINDU MATHA ETHIRPAALAN MATRUM MATHA MATHANGALAI MOODAMAGA NAMBUBAVAN.

  51. வினவு அவர்களே.. நீங்கள் குழந்தையாய் இருக்கையில் உங்கள் தாய் ஒருவரைக் காட்டி “இதுதான் உன் அப்பா” என்று அறிமுகப்படுத்துகிறார். அன்று முதல் நீங்கள் அவரைத்தான் அப்பா என்று கூப்பிட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். இப்போது ஒரு “புறம்போக்கு” வந்து அது உன் அப்பா இல்லை… என்று சொல்கிறான் என்பதற்காக.. நீங்கள் உடனே.. “பகுத்தறிவு” கொண்டு DNA டெஸ்ட் எடுத்து உண்மையை கண்டறிய விழைவீர்களா.. இல்லை “முட்டாள்கள்” அப்படித்தான் சொல்வார்கள். “என் மீது அளவு கடந்த அன்பும் பாசமும் நிறைந்த என் தந்தையை பற்றி எனக்கு தெரியும். DNA டெஸ்ட் எல்லாம் எடுத்து கொச்சைப்படுத்த விரும்ப வில்லை” என நம்பிக்கையின் அடிப்படையில் முடிவு எடுப்பீர்களா..?

    (கொச்சையாக பேசியதற்கு வருந்துகிறேன்)

  52. Pity the dogs that bark at the mountain of Hinduism, Christianity and Islam !
    The so-called champions of rationalism is led by the small one who asked his friends to tease his wife !!
    The siriyon who came and attacked Hinduism in vain, became a paedophile and married his daughter at ripe old age !! This is a fact that is even confirmed by his first disciple.
    These are the joker-champions of rationalism, who have amassed wealth, citing the same names of Gods, but only speaking against it ! Such is the effectiveness of chanting God’s names !

  53. ஏயா குமரி !
    இந்த மதிரி கட்டுரை கலகம் விளைவிக்குமா?

    வரட்டுமே அப்படி ஒரு கலகம் வரணும்னு தான தந்தை பெரியார் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார்.

    நீ ஒரு பார்ப்பன சேவகன்!
    உனக்கலாம் எதுக்குயா பகுத்தறிவு சாயம்!

    நியாயமா பகுத்தறிவுவாதிகள் பாராட்டவேண்டிய அற்புதமான கட்டுரைய ஆயிரம் நொட்ட நொற சொல்லிட்டு இருக்காதப்பா!

    நீ வீரமணி கோஷ்டிதான?

    ஏய் ! saravananblog, தண்ணிபோட்டுட்டு லூசு மாதிறி ஒளறாத
    எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுற….

    சாக்கடய மூடுங்கயா நாத்தம் தாங்க முடியல

  54. //சூப்பர் ஐயர் // — வசவுகளைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் நன்பா.

    யாழ்நிலவன் அவர்களின் கருத்தில் பழமையே பெருமை என்னும் தமிழினவாதிகளின் கருத்து தொக்கிநிற்கிறது… ஒரு வகையான “மறைமலை அடிகள் ப்ராண்டு” தமிழ் உணர்வு..

  55. ////சாம்சங் ரெப்ரிஜிரேட்டரையே கருவறையாக்கி, அதற்குள் பனி லிங்கம் ஒன்றை உறையவைத்து, ஆண்டுக்கு ஒரு முறை திறந்து காட்டினாலும் ‘ஹர ஹர மகாதேவா’ என்று கன்னத்தில் போட்டுக்கொள்ள இந்த பக்தர்கள் தயார்! மகரஜோதிக்குப் பதில் சிலிண்டரை வைத்து ‘ஸ்பிக் ஜோதி’யைக் கொளுத்திக் காட்டினாலும் அதனைத் ‘தரிசிக்கும்’ பொருட்டு விரதமிருக்கவும், இருமுடி சுமக்கவும் அய்யப்பன்மார்கள் தயார்!////

    – Chumma nachu-nu iruku..

  56. தமிழா நீ என்று திருந்துவாயோ,
    கலகத்தை பெரியார் ஆதரித்தார்!!!!! மிக்க நன்றி,
    அப்படியானால் முட்டி மோதி உங்களுக்குள் நீங்களே மடிந்து போங்கள், அப்புறம் தமிழ்நாடும், தமிழனும் இருக்கமாட்டானுவ? நீங்கள்ளாம் சிந்தனைவாதிகளல்ல ஆடுகளை மோதவிட்டு வடியும் ரத்தத்திற்க்ககவும் செத்துப்போகும் ஆட்டிற்க்காவும் காத்திருக்க்கும் புத்திசாலி ஓநாய்கள்.

    ‘தமிழையும், தமிழனையும் கலர் ஜெராக்சில் பதிவெடுத்து வையுங்கள், இப்படி ஒரு இனம் இருந்ததென்று வருங்கால சந்ததி தொல்பொருள் ஆய்வாளர்கள் துணையுடன் தெரிந்து கொள்வார்கள்.

  57. வணக்கம்,

    மதம், சாதி இதை வைத்தே தமிழன் தமிழனை அழிக்கும் காலமிது. ஆண்டவன் உன்னைப் படைக்கும்போது நீ இம்மதத்தவன், நீ இன்ன மொழியுடையவன் என்றா படைத்தான்? நாம் அனைவரும் தமிழர் என்னும் ஓர் தெரிந்த மொழியின் மூலம் உறவுகளாக இணைந்துள்ளோம். அதில் ஏன் மதம் ஒன்றை வைத்து பகை கொள்கின்றீர்கள். இதிலே இப்பதிவு ஏனோ ஒரு மதத்தினைச் சார்ந்ததாக இருந்தாலும் அதன் கீழே பலரும் பலவாறு இடுகைகளை இடுகின்றனர். இதிலே குறிப்பிடவேண்டிய ஓர் விடயம் மதம் மொழி சாதி இனம் என அனைத்து பாகுபாட்டினையும் மறந்து தமிழன் நாம் என்னும் ஓரணியில் ஒருமித்து குரல் ஒலித்தாலே நம் தமிழரை வெல்ல யாராலும் முடியாது என்பது என்னமோ உண்மைதான். அரசாண்ட இராஜராஜ சோழன் அன்று எவ்வாறு மலேசியா, இந்தோனேசியா ஏன் அவுஸ்ரேலியாவின் சில பகுதிகளைக்கூட தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்திருக்கின்றான். அதைவிட தமிழன் இல்லாத ஓர் துறையினை அதுவும் இன்றைய காலகட்டத்தில் தமிழன் இல்லாத ஓர் துறையினை தாங்கள் கூறுவீர்களானால் நாம் தமிழனில்லை என்று நான் தமிழ் ஆதரவை விலக்கிக்கொள்கின்றேன். வீதி கூட்டுவதிலிருந்து விளக்கேற்றுவதோடு மட்டும் நின்றுவிடாது தமிழன் வானிலும், கடலிலும் ஏன் அண்டவெளியிலும்கூட சாதனைகள் படைத்துக்கொண்டுதான் இருக்கின்றான் என்றால் அது மிகையல்ல. உண்மையில் நாம் ஒன்றினை எடுத்து நோக்குவோமானால் உலகிலேயே அதிக புத்திசாலிகள் என்று பன்னாட்டு அறிஞர்களால் பட்டியலிடப்பட்டவர்களில் முதலிடத்தில் ஏனோ யுதர்கள் இருந்தாலும் அடுத்த இடத்தில் தமிழர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் நாம் நம் இனம் இன்னமும் முன்னேற முடியாது தவித்திருப்பதற்கு ஓர் முக்கியகாரணம் யாதென்று கவனிப்போமாயின் அது நமக்கிடையே காணப்படும் ஒற்றுமையின்மைதான் என்பது என்னமோ உண்மைதானே?

    யூதர்கள் புத்திசாலிகள் என்று குறிப்பிடப்படுமிடத்து நாம் ஒன்றை நோக்கவேண்டும், அவர்களை அழிக்கவென்றே பல நாடுகள் திட்டமிட்டு அவர்கள் மேல் இன்று நேற்றல்ல பல்லாண்டு காலமாக இன அழிப்பினை மேற்கொண்டுவந்தனர் ஏன் அதனை இன்றும்கூட தொடர்ந்தவண்ணம் உள்ளனர். அதேபோன்று அதற்கடுத்த நிலையிலிருக்கும் எம்மையும் அழிக்க திரைமறைவில் சதி நடக்கின்றது என்பது என்னமோ உண்மைதான் அதன் தோற்றுவாய்களாகவே ஒரு இனத்தின் அடையாளச் சின்னமான அவ்வினத்தின் மொழியில் வேற்றுமொழிக்கலப்பு இடம்பெறுகின்றது.

    மொழியின் இறப்பு என்பதை நாம் எடுத்து நோக்குவோமாக இருப்போமானால் அது முக்கியமாக சில குறிப்பிட்ட காரணங்களால் இடம்பெறுகின்றன என்பது உண்மைதான் அதிலே முக்கியமாக வேற்று மொழிச் சொற்கலப்பு அத்துடன் நாகரீகமின்மை என்று கீழைத்தேய நாகரீகங்களைக்கொண்ட நாம் மேலைத்தேய நாகரீகங்களை நாடுவதும் அதன் வழி செல்கையில் எமக்கு அடுத்த சந்ததியினர் அவ்வழியில் தோன்றுவதும் இன்று நேற்றல்ல பல்லாண்டு காலமாக பல இனம் மொழிகளுக்கு எம்மவர்கள் மாற்றப்பட்டு நாம் மற்றைய மொழியினத்தவருக்கு அடிமையாக இருக்கின்றோம் என்பது எவ்வளவோ உண்மைதான். இன்று நம்மவர்களின் மூளைகள் அமெரிக்காவிலும் ஜப்பானிலும் ஏன் இன்னும் சொல்லப்போனால் பல்லாயிரம் மக்களிடையே நம்மவர்கள் அதாவது தமிழர்கள் தங்கள் அடிப்படை அடையாளங்களை இழந்து மாறிக்கொன்றிருக்கின்ற ஓர் கேவலமான நிலையில் நாம் இன்று இருந்துகொண்டிருக்கின்றோம் என்பது நாம் நம் கண்களால் காணக்கூடிய ஒன்று. இவற்றை மாற்றுவது யார்? எதனால் இம்மாற்றங்கள் என்று நாம் உற்றுநோக்குவோமானால் நாம் நம்மை திருத்திக்கொள்ள முடியும்.

    ஆங்கிலவன் பண்பாடு என்று நாம் அடிமைப்பட்டுக்கொண்டாலும் அவன் மற்றையவரைப்பற்றி அதிகம் பேசுவதிற் செலவழிக்க மாட்டான். அவன் தான் தன் இனம் தன் இன கலாச்சார பண்பாட்டு வளர்ச்சி என்று அனைத்திலுமே தன் இனத்தை தக்க வைக்க எத்தனையோ வழிகளில் அதனை நம்மிடையேயும் புகுத்தியுள்ளான் என்பதுதான் உண்மை. நாம் எண்ணிப்பார்த்தோமானால் நாமே அவனிடம் அடிமையாகின்றோமே ஒழிய அவர்களல்ல. நம் நாட்டு சாப்பாட்டினை சாப்பிடும் வேற்று இனத்தவன் அவனது மொழியில் “மிக மிக அருமையான உணவு” என்று சொல்வான். அவன் நம் நாட்டிலிருக்கும்வரை அவ்வுணவை உண்பான் பின்னர் தெரியாததுபோன்று இருந்துவிடுவான் ஆனால் நம்மவர்களோ அவனது மேலைநாட்டு உணவினை நம்மிடங்களிலேயே கொட்டித்தீர்ப்பதும் அவனது கலாச்சாரமானா களியாட்ட விடுதிகளில் தூங்குவதும் ஏன் என்று நாம் யோசிக்கவேண்டும். அதைவிடுத்து மதம் மதம் சாதி என்று அனைவரும் ஒருவர் மேல் ஒருவர் குறைகூறுவதை விடுத்துவிட்டு பெரியார் சொன்னதுபோன்று நீங்கள் சிந்தியுங்கள் தமிழனுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே விடிவு நிச்சயம் என்பது உண்மை. நம்மவர்கள் நம் முன்னோர்கள் சிலர் நல்வழிகளை ஏற்படுத்தித் தந்துவிட்டுப்போனாலும் பலர் நம்மை அழிவுப்பாதைக்குள் நம்மைத்தள்ளிவிட்டுச் சென்றுவிட்டார்கள் என்பதே உண்மை அதன் வெளிப்பாடே இந்த சாதி என்னும் ஓர் கொடிய விசம். அதனை நாம் மீண்டும் மீண்டும் பருகப் பருக நமக்கே தீங்கு என்பதறியாது அதனுள் முக்குளிக்கின்றோம். மறவுங்கள் சாதியை, மறையுங்கள் உங்கள் மதத்தை, கூறுங்கள் உங்கள் மொழியை உரக்கவே “தமிழன்” பாரெங்கும் எதிரொலிக்க கதறுங்கள் கத்துங்கள் அதுவே நீங்கள் வாழாவிட்டாலும் உங்களுக்கு அடுத்த சந்ததி “தமிழன் ” என்னும் பெயரோடு ஓங்கி உலகெங்கும் ஒலிக்கும்போது தங்கள் குரலின் புகழ் உலகெங்கும் எதிரொலிக்கும். மீண்டும் ஒருமுறை கூறிவோம் நாம் மதம் மறைத்தவர்கள், சாதியை மறந்தவர்கள் ஆனால் பெரும்புகழ் கொண்ட வீரத் “தமிழன்”.

  58. பாவம் “சூப்பர் ஐயர்” அவர்கள் பதில் சொல்ல திராணி இல்லாமல்.. “சாக்கடையை மூடுங்கள்” என்கிறார். உண்மையில் அவருடைய பேச்சுக்கள்தான் கூவத்தில் குளிப்பது போன்ற அருவருப்பை தருகிறது.

  59. Your knowldge of Hinduisim and Sanatana Dharma is so limited and you are not qualified to comment on Hinduisim. You should go and seek enlightment from a learned person , like Swamy Dhyananda Saraswati for few years and learn a bit about our Dharmic tradition before commenting, Our age old traditions have faced scoundrels like you in the past and is STILL THRIVING, THANKS TO IT’S INFINITE WISDOM AND ETERNAL TRUTH. The dogs keep barking but the caravon moves on. I am waiting for your article on resuscitation of Christ and circumambulating of muslims of Karbala and throwing stone at Satan. I am not going to hold my breath for this to happen. Athesism is fine but your selective dribble against Hinduisim only makes me want to throw up.

  60. ஏயா! saravananblog, நீ கேள்வியா கேட்ட பதில் சொல்றதுக்கு?

    மறுபடியும் வாய கெளறாத,

    “…………………..”

  61. ////ஆனால் நாம் நம் இனம் இன்னமும் முன்னேற முடியாது தவித்திருப்பதற்கு ஓர் முக்கியகாரணம் யாதென்று கவனிப்போமாயின் அது நமக்கிடையே காணப்படும் ஒற்றுமையின்மைதான் என்பது என்னமோ உண்மைதானே?////

    ஒற்றுமை என்பதாக எதை கூறுகிறீர்கள். யார் ஒற்றுமை இல்லாமல் இருக்கிறார்கள். ஆபிராகமிய கோட்பாடை பின்பற்றும் தமிழர்களா, இல்லை பூர்வீக தமிழர்களையா? ஒற்றுமை எங்கெ வருகிறது, தமிழன் என்ற உணர்வுடன் இருக்கும் போது. அது இப்போது எங்கே இருக்கிறது, “ஆரேபிய சிந்தனை உணர்வுடன் தமிழர் திருவிழாவான பொங்கலை புறக்கணிக்கும் இவர்கள் ஒன்றுபடுவார்களா?
    இவர்களிடம் கேட்டுப்பாருங்கள் நீங்கள் தமிழர்களா என்று இல்லை என்று பதில் வரும். (இலங்கையிலும் இதைவிட மோசம்), அவர்கள் வெளிப்படையாகவே சொல்லிக்கொள்வார்கள் நாங்கள் தமிழர்கள் இல்லை என்றும் ஆரேபிய வழித்தோன்றல் என்றும். ஆனால் வாழவதற்க்கும் உண்பதற்க்கும் த‌மிழ் வேண்டும்.
    மேலும் இங்கே வந்தால் திருக்குறளும், ஆத்தீச்சூடியும் கிறித்தவ நூல்களென்றும் ஆதித்தமிழர்களெல்லாம் காட்டுமிராண்டிகளென்றும் வரலாற்றுத்திரிபுகளை ஆணித்தரமாக நிலைனிறுத்த அன்னியனாட்டின் முயற்சியுடன் ஒரு திட்டமிடப்பட்ட சதி நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. இது நிறைவேறினால் தமிழ், தமிழ்மொழி சவக்குழிக்குள் போவது சத்தியம். கன்னியாகுமரிமாவட்டத்தில் தமிழர்கள் வீட்டுமுன் பொங்கல் போடக்கூடாது என்று காவல்துறை உதவியுடன் ஒரு அக்கிரமம் நடந்தேறியது அறிவீர்களா?
    இது இப்படி இருக்க தமிழர் ஒற்றுமையை பற்றி யோசிக்ககூடமுடியாதே.
    இலங்கையில் ஓர் அரசாங்கம் இனப்படுகொலை செய்கிறது. அது அரசாங்கம். இங்கே தமிழ் நாட்டில் மக்களின் அறியாமையை பயன்படுத்தி ஜாதீய ரீதியில் மோதலை தூண்டிவிட்டு மக்களின் மனதில் ஒரு பீதியை உருவாக்கி அவர்களை தங்கள் வழிக்கு வரவைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதை ஒரு சில தலைவர்களும் ஆமோதிப்போடு வரவேற்கிறார்கள். இதோ அவர்களின் பிள்ளைகள் மம்மி, டாடி, அங்கிள் என அழைக்க தொடங்கி விட்டார்கள். இதுவும் ஒரு இனப்படுகொலைதான். த‌ன் அடையாழத்தை இழப்பதும் ஒரு சாவுக்கு சமம் தான் என்பது என் கருத்து. தமிழ் ஜாதித்தலைவர்கள், சங்கம் நடத்த பணம் ஏது? பதில் கிடைக்கும் ஊர்தோறும் புடைத்துக்கொண்டிருக்கும் அன்னிய பணத்தில் கொளுத்துக்கொண்டிருக்கும் தொண்டுநிறுவனங்கள், இவர்களை ஒழித்துக்கட்டினால் ஜாதித்தலைவர்களுக்கு வரும் பணம் அடியோடு நின்றுவிடும். தமிழையும் தமிழ்க்கலாச்சாரத்தையும் மேற்க்கத்திய நவீன ஆக்கிரமிப்புகள் அடிமைபடுத்தியுள்ளன. இதை எப்படி உடைத்தெறிந்து தமிழ் தலைநிமிரச்செய்வது? சாத்தியமா.. இந்தக்கருத்து பொதுப்பார்வையுடன் எனக்குத்தொன்றியது.
    அன்புடன்

  62. திருப்பதி வெங்கடாஜலபதியும் அண்மையில் சிங்கப்பூருக்கு ரூர் போயிட்டு வந்ததாகத் தகவல். மெய்யே?

  63. KALAVU EDUBPAVANUM, BOISOLI,EMATHTHI PILAIBPAVANUM THANE KOYILUKKUBOKIRAN.

    MANADSADSIYODU VALBAVAN ENADA KOYILUKKU
    BOKAVENUM. KALLA NAYKALA.

    Ennai poruththavarai Koyilukku Boravanalathan
    Kuduthalana Pirachsanaikal Samukaththila
    Uruvakinrathu.

    SETHTHAVAN KUNDI KILAKKALA BONALENNA
    MERKKALA BONALENNA.

  64. This can happen only in India and also only with the hindu religion. You cant go and write in saudi or vatican and write against their religion. You people themselves think as the saviour of society. Because no hindu cares about it. Since we are not forced to our religion.Have you ever been to sabarimala or Amarnath. You defend anything by simply sitting infront of the PC. God is a feeling and you have to feel for it. Only this religion we keeps on accepting anything you can tell. First go to sabarmala and amarnath and then you tell. Its not that one kandareru made mistake, there is also many example with the other religion. Dont take the name of pagutharivu and hurt others. If you dare enough to challenge hinduism, then write the same thing about the belief of their haj pilgrimage or visiting vatican. You can not do that because they will not leave but the hindu will tolerate anything even upto the level of depicting our gods picture in the panties and bras of the ladies. Its a great shame for us. Hinduism is a way of life. Live it first and then tell us. Experience the feeling of darshaning makara jothi or amarnath and then come for debate.Hope you know that blood is transformed into milk but you can only get it from the nipple only. Even though it is of same blood. Eevry gene in the sperm cannot form into a baby only some certain can form. Dont ever try to propogate false things to callenge some thing. Live the life in good and be good thats enough for the society. And finally understand dont try to make politics on quoting as the different states we are in India and every part of the India is one.
    If you are so smart write the same thing with others and see the result. Dont try to fool the people by propogating that you ar pagutharivu vadhi. Every one knows their job how to do.

  65. நாய் வாலை நிமிர்த்த முடியுமா? போலிப்பகுத்தறிவாதம் நின்று கொல்லும் விஷம்.

    ***தமிழா விழித்திடு,
    **நீயாருக்கும் அடிமை இல்லை, **நீயாரையும் அடிமையாகவோ, யாருக்கும் அடிமையாகவோ நினைப்பதை நிறுத்து, **தலைநிமிர், கல்வியால் உலகை வெல்லலாம்,
    **கல்வியால் அடிமைத்தளைகளை தகர்த்தெரியலாம்,
    **தமிழ் பேசு கூடியமானவரை,
    **தமிழில் ஆங்கிலத்தை கலக்காதே,
    **தமிழா நாம் உலகத்திற்க்கு நாகரீகத்தை கற்றுக்கொடுத்தவர்கள்.
    **உலகின் முதலில் தோன்றிய இயற்கை மொழியாகிய தமிழ் மொழிக்கு சொந்தக்காரர்கள்.
    **இயற்கையை உலகவாழ்க்கையை பகுத்தறிய முயல்,
    **** அடுத்தவன் ஊதும் ஊத்திற்க்கு ஒத்து ஊதாதே***
    நீ முன்னேற முடியாது.

    தான் என்ற அகம்பாவம் வேண்டும்? ஆம் நான் தமிழன், உலகின் மூத்த, இளமை மாறாத தமிழ் மொழி பேசுபவன் என்ற அகம்பாவம் வேண்டும்.

    போலிகளிடமிருந்து தமிழையும், தமிழ் சமயத்தையும் மீட்டெடுப்போம்.

    பாலாஜி…

  66. kaduvalai nambaamal thannambikkayodu vaazhbavarkale ungalikku enadhu vaazhthukkal.
    kadavul nambikkai illayenil ennaal vaazha mudiyumendra nambikkai illai.
    mooda nambikkai azhikka pada vendiayadhe,
    aanaal ingu mooda nambikkayai mattum azhikka munvandhaal mutrilum azhitthu viduvarkalo endra bayame en pondravarkalai oru madham ennum siraikkul pootti vaitthirukkiradhu.
    veliye vandhaal madiya maattom endra nambikkayai thara vendiyadhu pakuttharivu vaadhigal
    aanaal nambikkai tharaamal engalai madham ennum sirayilirundhu veliye konduvara paarkireerkal
    endha oru madhatthayum(kadavul nambikkayatra) saaraadha naadu edhum ulladha?
    illai munnar irundhulladha?
    irundhaal adhai patri padikka virumbikiren.

  67. good all of them blamming one reiligion. one person supporting that religion this is not correct .even in web page u people are fighting for the riligion, don’t u feel shame. do u thing india will be good country. we are the
    one have to improve are country as an youngsters there is no riligion .that’s why china, pakistan wants firght with us. like this problems only makes them (vengat ramakrishan) to say or avoid to say they are indian… if we are like this 1000’s of vivekanadhar, 1000’s of abdhulkalam also change are improve uer country, indians enemy is indian only not others.

  68. really i read it as the second time and i enjoyed the content of it. please continue to write this type of articles. i may not be able to respond to you everytime, but i read all the articles everyday. in the same way there are penecostal prayer meetings conducted by christians and most of the poor people become prey to it. so please your next article must be based on these pentecostal ‘alleluia’ meetings. i request and appeal to you. you can enter into catholic, protestant church prayers, and mulims worship too. because in general all religions deliberately cheat people for the sake of money and the priestly class. you must bring it to light.

    thank you. amal

  69. சூப்பர் சார் அப்படியிய மேல்மருவத்தூர் அம்மா பத்தி எழுதன சூப்பர் ஆ இர்ருக்கும் ப்ளீஸ்

  70. At least for you guys to discuss something u need god.
    so everyone need in this world in world god in some form.

    u need them to oppose and other need to work ship, so there is no difference between the people worship and not.

    it is unnecessary to put our thoughts to other mind.

  71. if you want to research the foolishness…in religion, you have to gothrough with all…not only in hindu…

    Even in tamilnadu, thiravida kalagam, talking about hindus only. why dont they stand in front of church and mosque and said……..DONT GO IN ….THERE IS NO GOD…

  72. அய்யப்பன் 1949க்கு முன்பு வரை அவ்வளவாக தமிழ் மக்களுக்கோ ஆந்திர மக்களுக்கோ தெரியாது. இரண்டாம் உலகப்போர் முடிந்த நேரத்தில் காட்டுக்குள் இருந்த ஐயப்பன் கோவில் மர்ம நபர்களால் (மாற்று மதத்தவர் என்கின்றனர்) தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது. இதில் கோவிலும் ஐயப்பன் சிலையும் எரிந்து சாம்பலாகி விட்டது. அப்போது திருவாங்கூர் அரசு இதை மறுநிர்மாணம் செய்வதில் அக்கறை காட்டவில்லை. அதன் பின் வந்த கொச்சி-திருவாங்கூர் மக்கள் அரசும் அக்கறை காட்டவில்லை. (அப்போது ஆட்சிக்கு வந்தவர்கள் பிரஜா சோசலிஸ்ட்கள்..பட்டம் தாணுபிள்ளை…சர் சிபி ராம சாமி அய்யர் ஆதிக்க காலகட்டம்)..அத்தகைய சூழலில் அய்யப்பனுக்கு கோவில் எழுப்பி அதில் சிலை வைக்க இயக்கம் ஒன்றை நடத்தினார் பி.டி.ராஜன்..இவர் நீதிக்கட்சி தலைவராக..சென்னை மாகாண அமைச்சராக, பிரதமராக இருந்தவர்..முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்.பழநிவேல்ராஜனின் தந்தை ஆவார். அய்யப்பன் சிலையை அப்படியே பிரதிஷ்டை செய்யக் கூடாதாம். பல ஊர்களுக்கு எடுத்து சென்று பூஜை செய்த பிறகுதான் அதனை பிரதிஷ்டை செய்ய வேண்டுமாம். எனவே பி.டி.ராஜன் 1949 இல் அய்யப்பன் சிலையை செய்து ஊர் ஊராக யாத்திரையாகக் கொண்டு போய் பூஜைகள் நடத்தினார். அதற்கு லட்சக்கணக்கில் போஸ்டர் போட்டு பட்டி தொட்டி எங்கும் பிரச்சாரம் செய்தார். ‘எல்லை காக்கும் அய்யனார்தான்..இந்த அய்யப்பன்..இவனுடைய காவல் எல்லைக்குள் வராத ஊர்களுக்குள் எல்லாம் சிலையைக் கொண்டுவருதல் தவறு என பார்ப்பனர்கள் எதிர்த்துள்ளனர்..ராஜன் அந்த எதிர்ப்புகளை எல்லாம் பொருட்படுத்தாது அய்யப்ப கரசேவை செய்தார்..நீதிக்கட்சித் தலைவர் செய்த இந்த சாதனையை நீதிக்கட்சியின் வழித்தோன்றல்கள் (வீரமணி,கருணாநிதி) ஏன் விமர்சிப்பதே இல்லை? (ஆதாரம்: தமிழவேள் பி.டி.ராசன் வாழ்வும் வாக்கும் – சு.ந.சொக்கலிங்கம்)

  73. உண்மையாகவே இந்தியாவில் உள்ள வக்ஃப் சொத்துகளெல்லாம் இஸ்லாமியர்களின் நலனுக்காக பயன் படுத்தப்பட்டால், இன்று உள்ள ஏழ்மை பெருமளவிற்கு குறையும். ரகுமான் கான் தலைமையில் அமைந்த பாராளுமன்ற கமிட்டி வக்ஃப் போர்டுகள் நிலைமை பற்றி ஆராய்ந்து சொல்லியிருக்கும் விஷயங்கள் குறித்த சுட்டி.

    http://www.outlookindia.com/article.aspx?261789

  74. முஸ்லிம்களுக்காக உருகும் உங்கள் இனிய அன்பு நெஞ்சை என் சொல்வேன்!

    முதலில் உங்களுக்கு எட்டும் தொலைவில் உள்ள ‘இந்துக்’ கோவில் சொத்துக்கள் பற்றி எதையாவது செய்து பிற மதத்தவர்கட்கு வழி காட்டுங்களேன்.
    அந்த ஏழுமலையானும், ஐயப்பனும் இன்னும் பல தெய்வங்களும் உங்களை ஆசீர்வதிபார்களாக!

    • Corporal Zero

      திரு உதய்சிங்கின் பின்னூட்டத்திற்கு அளித்த பதிலின் ஒரு பகுதி இது. கீழே உள்ள முழு பதிலையும் படித்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

  75. நண்பரே, நான் உங்கள் கட்டுரைக்குள் இருக்கும் விசயத்துக்கே உள்ளே வர வில்லை. ஏனெனில் போதுமான பின்னூட்டம் உங்கள் கட்டுரை பற்றி போட்டு ஆகிற்று. மொதல்ல இந்த ரகசியத்த சொல்லு, இவ்வளவு ஆழமான, அழுத்தமான, வலுவான விசயத்தை விமர்சனம் பண்ணும்போதும் வரிக்கு வரி கிண்டல் கேலிக்கு குறை இல்லாமல் எங்கய்ய எழுத கத்துகிட்ட.

  76. //“”இராமன் பாலம் என்பது இயற்கையாக அமைந்த மணல்திட்டு”” என்று சொன்னால், ‘இல்லையில்லை, அது இராமனால் கட்டப்பட்டது, செயற்கையானது எனவே தெய்வீகமானது’ என்று கத்துகிறார் இராம. கோபாலன். ‘அமர் நாத் பனிலிங்கம் செயற்கையானது’ என்று சொன்னால் ‘இல்லையில்லை, அது இயற்கையானது எனவே தெய்வீகமானது’ என்கிறார்கள். வடக்கே இயற்கை தெய்வீகம்! தெற்கே செயற்கை தெய்வீகம்!//
    அருமை….

Leave a Reply to elakya பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க