privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்இனி மிச்சமிருப்பது வங்கக் கடல் மட்டுமே ! கருத்துப்படம்

இனி மிச்சமிருப்பது வங்கக் கடல் மட்டுமே ! கருத்துப்படம்

-

mullai

(படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்)

யாழிலிருந்து பதறி, கிழக்கில் துடித்து, கொழும்பில் சிறைபட்டு, அயலகத்தில் சிதறி, வன்னியில் ஒதுங்கி, முல்லைக்கு விரட்டப்பட்டு…. இனி மிச்சமிருப்பது வங்கக் கடல் மட்டுமே !

  1. பாரே உந்தன் இதயம் உள்ள
    பக்கம் கையை வைத்துப் பார்
    வீட்டை விதியை எண்ணித் தினமும்
    விழிகள் கலங்கும் எம்மைப் பார்

    தனியாய் வாழ்ந்த தமிழரைச் சிங்களத்
    தலையினில் கட்டியே விட்டவர் நீர்
    உரிமை இழந்த இனமாய் நாங்கள்
    உலகம் முழுதும் உழல்வதைப் பார்

    மழையில் பனியில் மாக்களைப் போல
    மருளும் தமிழர் நிலையைப் பார்
    மண்ணைப் பிடிக்கும் மனிதப் பேயாம்
    மஹிந்த செயலை அடக்கப் பார்

    ஆண்டாய் ஆண்டாய் வாழ்ந்த மண்ணை
    அராஜகர் பறித்த கொடுமையைப் பார்
    அகதிகளாய்த் தினம் இருப்பிடம் தேடி
    அலைபவர் துயரைக் களையப் பார்

    காமுகர் வெறியால் ஆவியை இழந்து
    கிணற்றில் கிடக்கும் பெண்ணைப் பார்
    கன்னியர் தங்கள் சுதந்திரம் தேடிக்
    கருவியை எடுத்த காரணம் பார்

    பால்மணம் மாறாப் பாலகன் கூடப்
    புலியாய் மாறிய புதினம் பார்
    பயங்கர வாதிகள் யாரெனக் கடிதில்
    பகுத்து அறிந்து பதில்தரப் பார்

    சிறுவரைப் படையில் சேர்ப்பது முறையோ
    சீறியே நிற்கும் படித்தவர் நீர்
    சிறுவரைப் படுக்கையில் கொல்வதும் முறையோ
    சிந்தித் தெமக்கு விளக்கப் பார்

    ஒட்டுப் படையுடன் ஒட்டும் அரசை
    ஒட்ட நறுக்க முயன்றே பார்
    சட்டம் ஒழுங்கை காக்க மறுத்த
    மட்ட அரசை முடக்கப் பார்

    மனிதம் என்றே பேசும் உங்கள்
    மனதைக் கொஞ்சம் கேட்டே பார்
    நீதி நியாயம் எல்லாம் இங்கே
    நிலையாய் அழிந்து போனதைப் பார்

  2. வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களின் மீது கடந்த சில நாட்களாக சிறிலங்கா படையினர் வெள்ளை பொஸ்பரஸ் (white phosphorus shells) சேர்க்கப்பட்ட அதியுயர் வெடிமருந்து கொண்ட எறிகணைகளை (எரிகுண்டுகளை) பீரங்கிகள் மூலம் ஏவி வருகின்றது போல அப்பிரதேசங்களை அவதானிக்கும் போது தெரிவதாக அங்கிருந்து “புதினம்” செய்தியாளர் தெரிவிக்கின்றார்

  3. Eight pilots of the Sri Lankan Air Force (SLAF) are presently undergoing training at the Indian Air Force base at Thaamparam (Tambaram) near Chennai in Tamil Nadu, highly placed sources told TamilNet. News of this training spread like wildfire when the Sri Lankan Airforce personnel were taken Monday to the Chealaiyoor (Selaiyur) police-station for visa verification purposes. “People of Tamil Nadu need no further proof that this war of decimating Tamils in Sri Lanka is being undertaken at India’s insistence and instructions. This confirms our fears that Indian troops have also been sent to fight there,” a veteran Tamil activist told TamilNet.

  4. ஒரு வேண்டுகோள்

    இனி மத்திய அரசை நம்பி பயன் இல்லை.,அவர்கள் நமக்க்காக பேசுவார்கள் என்ற நம்பிக்கை அற்று போய்விட்டது
    அவர்கள் நம் உணர்வுகளை புரிந்து கொள்ள் மாட்டார்கள்.

    ஆகவே,தமிழ்கத்தில் உள்ள ஈழ தமிழர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ண உள்ள் தலைவர்கள்
    ஒரு குழு அமைத்து,இலங்கைக்கு சென்று,ராஜபக்ஷே விடம் பேச வேண்டும்

    அங்கு போர் நிறுத்தம் ஏற்பட செய்து,பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முயல வேண்டும்.
    இங்குள்ள சில தலைவர்களுக்கு விடுதலை புலிகளிடத்தில் உள்ள தொடர்பை பயன்படுத்தி,அவர்களை மறுபடியும் பேச்சு வார்த்தைக்கு இணங்க செய்து ஒரு தீர்வு காண வேண்டும்.

    புலிகள் மேல் உள்ள இந்தியாவுக்கு உள்ள தனிபட்ட கருத்தை ஒதுக்கி வைத்து விட்டு,அங்குள்ள நிலைமைக்கு ஏற்ப ,இலங்கை அரசை ,புலிகளுடன் பேசு வைத்து ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    இது முடியும்.மனமிறந்தால் மார்க்கம் உண்டு.

    தமிழக தலைவர்களை விட் இதற்கு சரியானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.

    சிங்களவர்களுக்கும்,ஈழ தமிழர்களுக்கும் உள்ள பகைமை போக்கி ஒரு இணக்கமான சுழல் கொண்டு வரவேண்டும்.

    மனித நேயம் சிறிதேனும் இருந்தால்,இது நிச்சயம் நடக்கும்

    குறிப்பாக,நெடுமாறன்,வை.கோ,திருமாவளவன் போன்றோர் அங்கு சென்று பேச வேண்டும்.

    வெறும்,இங்கிருந்து போராடினால் பயன் கிட்டாது.

    நார்வே குழு வைவிட நாம்,சிறந்த நடுவராக இருந்து தீர்வு காணமுயலலாம்.

    செய்வார்களா நம் தலைவர்கள்..

  5. It is not the fault of India or USA or UK or any other country. It is not the fault of Sri Lanka either. Tamils need to stop begging, crying, complaining and ask Tigers if they have been telling the truth. If they have told the truth, then we would still have faith in our destiny to reach Tamil Eelam. On the other hand, if Tigers have lied to Tamils, then we the Tamils want Tigers to be out of our community sothat another organization can continue the fight. India is the enemy of Tamils and India has been killing Tamils for a long time. Co-Chairs have been encouraging Sri lanka to kill Tamils. Tamils should not be foolish enough to beg or complain to the very countries that have been killing Tamils. Tamils should extend their hand to shake hands with the enemies of India, and CO-Chairs such as China.

  6. ஒரு ஊரில் ஒருவனுக்கு 100 ஏக்கர் சொந்தமாக இருந்தது.மற்றவனுக்கு 1 ஏக்கர் சொந்தமாக இருந்தது.அந்த ஊருக்கு வந்த ஒரு முரடன்,இருவரின் நிலத்தையும் பிடிங்கி கொண்டான்.அவர்களையே அடிமையாக ஆக்கி அந்த நிலத்தை அனுபவித்து வந்தான்.

    ஆண்டுகள் பல ஓடின.ஒரு நாள் அந்த முரடன் அவன் அனுபவித்த நிலம் (101ஏக்கர்)முழுவதையும் ,அந்த 100 ஏக்கர் சொந்தகாரனிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.

    அவன் மொத்தமாக 101,நிலத்தையும் தன் பொறுப்பில் வைத்து கொண்டான்.அந்த 1 ஏக்கர் சொந்த காரன் தன் நிலத்தை தனக்கே கொடுத்துவிடும் படி கேட்டான்.அதற்கு,அவன் இத்தனை ஆண்டுகள் 101 ஏக்கர் மொத்தமாக தானே இருந்தது அதனால்,நானே 101 ஏக்கர் நிலத்தையும் பார்த்து கொள்கிறேன்.உனக்கு தேவையானதை நான் செய்துவிடுகிறேன்.ஆகவே ஓன்றாக இருக்கலாம் என்றான்.அதற்கு 1 ஏக்கர் சரி என்று ஒத்து கொண்டான்

    சில ஆண்டுகள் தான் போயிருக்கும்,100 ஏக்கர் சொந்தகாரன் இவனை அடிமை போல் நடத்த ஆரம்பித்தான்,இவனுக்கு கொடுக்கவேண்டியதை கொடுக்காமல் துன்பபடுத்தினான்.

    மேலும் அவனை ஊரைவிட்டு ஓட வைத்து 101 ஏக்கர் நிலத்தையும் தானே அடைய திட்டம் தீட்டினான்.

    இந்த நிலை,தான் இலங்கையில் இப்போது நடைபெறுகிறது.1 ஏக்கர் நிலம் என்றாலும் அது அவன் சொந்த நிலம்.

    அது போல் தான்,இலங்கையில் ,தமிழர்கள் வாழும் பகுதி இலங்கையில் சிறிதென்றாலும்,அது அவர்களுடைய சொந்த பூமி.

    பிரிட்டிஷ் அரசு என்ற முரடன் போகும் போது விடுதலை என்ற பெயரில் மொத்த இலங்கையை,சிங்களவர்களிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டன்.
    பெரும்பாண்மை என்ற ஒரே காரணத்திற்காக இவன்(ஈழ தமிழனின் நிலத்தையும்) நிலத்தையும் தனக்கே சொந்தம் என்று சொல்கிறது சிங்களம்.

    அனால்,சொந்த பூமியில்,தன் சொந்தங்களோடு,தன் மொழி பேசி வாழமுடியாமல் ,சொந்த நாட்டிலேயே நாளும் உயிருக்கு பயந்து,அகதியாக காடுகளில்அலைகிறான்.உயிரோடு கொளுத்தபடுகிறான்.

    இது என்ன நியாயம்.

Leave a Reply to valaipookkal பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க