privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைகவிதை: ஆகஸ்டு 15க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் !!

கவிதை: ஆகஸ்டு 15க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் !!

-

ஆகஸ்டு 15, ஆழ்ந்த அனுதாபங்கள்

ருக்குச் செல்லும் பாதையின் துவக்கத்தில்
நிழல் கொடுக்கும் அந்த வேப்பமரம்
இப்போது இல்லை,
தலைமுறைகளுக்கு சுவாசம் ஊட்டிய
பால்சுரந்த கிளைகளின் ஈரம்…
இலைகளின் வாசம்…
கொழுந்துகள் நுனியில் கூசும் சூரியன்…அனைத்தையும்
கொன்ற இடத்தில் கண்டேன் பலகையை;
“பசுமை சுய உதவிக்குழு”
உங்களை அன்புடன் அழைக்கிறது.

………

பெரிசுகள் ஒதுங்கி வெற்றிலைப்போடும்
அழகினைப்பார்த்து கிளிவாய் சிவக்கும்.
மிச்ச சுண்ணாம்பு தடவிய இடத்தின்
மேலே வழியும் மரக்கோந்து வள்ளத்தில்
கை நனைத்து கட்டெறும்புகள் வரையும்
உயிரோவியத்தை காண இனி வழியில்லை!

………

ழைய நினைவுகள் பாதையில் குறுக்கிட்டன…
அதோ…கல்யாண முருங்கை இலை
அடை சுட்டு சாப்பிட்டால்
அடாத சளி நீங்கும்,
இதோ… ஆடாதொடை
கசாயம் குடித்தால் கடும் ஜூரம் போகும்.
அதுதான் துன்னூற்றுப் பச்சிலை
மரு நீக்கும்
அதோ குப்பைமேனி
சொறி, சிரங்கு போக்கும்…
பச்சிலைகளை உறவாக்கி
பாட்டி கூட்டிச் சென்ற வழியெங்கும்
இப்போது கருவை முட்களில்
காய்த்துக் குலுங்கும் சாராய உறைகள்…

………

குட்டையின் புழுக்கம் தாங்காமல்
சட்டையைக் கழற்றிய நல்லபாம்பு
வாதாம் இலைச்சருகில் இறந்துகிடக்குது.
ஆலமரத்து டீக்கடையை
அடையாளம் தேடினாலோ,
“அதெல்லாம் இப்ப இல்லை
அதோ அந்த காய்ந்த வாய்க்கால் தாண்டினால்
முன்பு வேளான் வீடிருந்த இடத்தில்
உடைந்த பானைகள் குவிந்திருக்கும்
அதுக்கு கிழக்கால ஒரு பாழும் கிணறு
அதை ஒட்டி மடிச்ச கீத்து மேல
ஒரு பிளாஸ்டிக் தாள் போட்டிருக்கும்
அதான் இப்ப டீக் கடை” என ஊர் சொல்லுது.

………

வ்வாலும் வீட்டிற்குள் வருவதில்லை
என்ன இருக்கிறது விவசாயி வீட்டில்?
வெறும்பானையை உருட்டி
வெறுத்துப்போன எலி
விழுந்து சாக கழனிப்பானை இல்லாமல்
வீட்டை விட்டே ஓடிவிட்டது.
ஓலையில் செருகிய
கருக்கரிவாளின் கைப்பிடியை கரையான் தின்கிறது
வேலியில் காயும் வெளிர்பச்சை தாவணியை
ஆடு மேய்கிறது.

………

சும்புல் துளிர்க்க வழியின்றி
பன்றிகள் காலில் மிதிபட்டு
பட்டுப்போய்… பொட்டல் வெளியான
வயலின் நடுவே
ஜோடிக்கப்பட்ட மரத்தின் உச்சியில்
கொடி ஒன்று துளிர்க்கிறது
வேடிக்கைப் பார்த்தவர்களிடம் விசாரித்தால்
ஆகஸ்டு பதினைந்து!

துரை. சண்முகம்

புதிய கலாச்சாரம், ஆகஸ்டு-2009

புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

  1. இன்னமும் பொருளாதார ஏற்ற தாழ்வுகள் இருக்கின்றன. சாதிக் கொடுமைகள் இருக்கின்றன. சுற்றுச் சூழல் சீர் கெட்டு வருகிறது. பொது வாழ்வில் ஊழல் மித மிஞ்சி நிற்கிறது. ஓர மாநிலங்களில் அப்பாவி மக்கள் நசுக்கப் படுகிறார்கள். ஆங்காங்கே தீவிரவாதம் தலைகாட்டுகிறது.

    ஆனால் 60 ஆண்டுகளுக்கு மின்பிருந்ததை விட பெண்களும், தாழ்த்தப் பட்ட மக்களும் முன்னேறி இருக்கிறார்கள். பெரும்பாலான பகுதிகளில் ராணுவமோ, காவல் துறையோ கண்ணில் கூடப் படாமலேயே சகஜ வாழ்வு நடக்கிறது. எங்கு தவறு நடந்தாலும் தட்டிக் கேட்கக் கட்சிகளும், கட்சி சாரா அமைப்புகளும் இருக்கின்றன. பேச்சு சுதந்திரமும் எழுத்து சுதந்திரமும் இருக்கின்றன. சட்ட ரீதியாக எல்லாருக்கும் சம உரிமைக்கு வழி இருக்கிறது. எந்தத் தொழில் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது.

    எனக்கென்னமோ இப்போதைய இந்தியாவின் மேல் குறைகள் இருந்தாலும் வேறு எந்த நாட்டை விடவும் இங்குதான் அன்பும், அறமும், மனித நேயமும், நம்பிக்கையும், பகுத்தறிவும், அறிவியலும், பொருளாதாரமும் வளர வழி இருப்பதாகத் தோன்றுகிறது. வேறு பட்ட கருத்துக்களுடன் நாம் பேசிக்கொள்ள வழி இருப்பதே அதற்கு சான்று. அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

    • a quick reply:

      //பேச்சு சுதந்திரமும் எழுத்து சுதந்திரமும் இருக்கின்றன. //

      All over the world, wherever there are capitalists, freedom of the press means freedom to buy up newspapers, to buy writers, to bribe, buy and fake “public opinion” for the benefit of the bourgeoisie.

      * Lenin’s Collected Works, Volume 32, pp.504-509

      • Well, Lenin was an extraordinarily intelligent man. But he hadn’t seen anything like the Indian Democratic system. I am sure his opinion was based on the 19th century values than dominated the world he lived in. My hunch is he wouldn’t have had too many issues with the press in the present Indian context. Of course, all this is mere speculation. Thanks anyway for quoting the great man.

      • What about this freedom of expression in this internet and blogs ?

        i suppose comrades (who do not care for Bourgeoius type freedom and democracy) would prefer a right wing dictatorship like Burma or Religious oligarchy like Saudi in India !! in such a set up the first group to be suppressed inhumanly would be MaKaIka comrades and their alles. the org will be banned, members jailed or worse, all propoganda banned and websites blocked. would you prefer that comrades ?

      • //Author: K.R.Athiyaman
        Comment:
        What about this freedom of expression in this internet and blogs ?

        i suppose comrades (who do not care for Bourgeoius type freedom and democracy) would prefer a right wing dictatorship like Burma or Religious oligarchy like Saudi in India !! in such a set up the first group to be suppressed inhumanly would be MaKaIka comrades and their alles. the org will be banned, members jailed//

        கூச்சமில்லாமல் நகைச்சுவையாக எழுதும் அதியமானிர்க்கு:

        தமிழரின் உரிமைக்காக பேசினால் ‘தேசிய பாதுகாப்பு சட்டம்’, தடா, பொடா எல்லாம் சீனா காரனா போட்டான் ?? தமிழனுக்கு தனி நாடு வேணும் என்று பேச கூட உரிமை இல்லாத நாட்டில் அடிமை தமிழனுக்கு சுதந்திர தினம் எதற்குன்னு கவிதை எழுதினால், நீ ஏன் அடுத்தவனை சுட்டி காட்டுறீர் !!!

        //What about this freedom of expression in this internet and blogs ?//

        யாரோ ஒருத்தன் சோனியாவ பத்தி எழுதினதுக்கு என்னா ஆச்சாம் ?? இல்ல சுதந்திரமா முதலமைச்சரா மிரட்டி மினஞ்சல் அனுப்ப முடியுமா ??

        just because the govt knows that internet penetration is very low. so they ignore at the moment. Obviously they ban blogging any time, if they think there will be a some serious movement against their power!!

      • ann,

        நகைச்சுவையாக பேசுவது நீர் தான் தம்பி.

        தமிழனுக்கு தனிநாடு வேண்டும் என்று பேச, பிரச்சாரம் செய்ய தடை இல்லையே.
        முறைகளில் தாம் பிரச்சனை. அதாவது சட்டத்தை கையில் எடுக்காமல், வன்முறை,
        வெறுப்பை தூண்டாமால், தமிழக மக்களில் பெரும்பாலோனோரிடம் உமது பிரச்சாரத்தை
        எடுத்துறைக்க தடை இல்லையே. தமிழக மக்களில் பெரும்பாலானோர் அப்படி விருப்பட்டால்,
        தனி தமிழகம் உருவாகுவது மிக சுலபம். அமைதியான வழிகளில் பெரும்பாலோன மக்கள்
        போராட துணிந்தால் ஜனனாயக நாட்டில் அது சாத்தியமே. அதவாது, ஆங்கிலேயரை
        எதிர்த்து காந்திய வழியில் அன்று நடந்த விடுதலை போரை போல, பெரும்பாலானா
        (ரிபீட் : பெரும்பாலான) தமிழ மக்கள் அறப்போர் மற்றும் பிற மாநில பொருட்கள் மற்றும்
        சேவைகளை மறுத்தல் ; இது போன்ற முறைகளில் போராட தடை இல்லை.

        துப்பாக்கி ஏந்துவது, அதை தூண்டிவிடுவது, வன்முறைகளை தூண்டுவது குற்றமாக இங்கு
        கருதப்படுகிறது.

        சரி, இருக்கட்டும். நீங்க கட்டமைக்க விரும்பும் கம்யூனிச இந்தியாவில், ஒரு இனம் (அதாவது
        தமிழர்கள் போல) தனி நாடாக விழைந்தால் என்ன செய்வீக ? ஸ்டாலின் காலத்தில் ரஸ்ஸியர்கள்,
        பிற இனத்தவரை நசுக்கிய கொடூர வரலாற்றை மறக்க வேண்டாம். உக்ரேன் ம்ற்றும் இதர‌
        “சோவியத் குடியாட்ச்சி” நடந்த நாடுகளில் விசாரித்துப் பார்க்கவும். ஜனனாயகம் மற்றும்
        சுதந்திரம் பற்றி பேச உம்மைப் போன்றவர்களுக்கு எந்த அருகதையும் கிடையாது. கம்யூனிச சொர்கம்
        என்ற பெயரில் நடந்த அடக்குமுறைகளை நியாப்படுதும் நீங்க, இன விடுதலை பற்றி பேசுவது தான்
        பெரும் நகைச்சுவை. உகேரேன் நாட்டில் சென்று விவாதிக்லாம் இதை பற்றி. வர்ரீகளா ?

        and email threats are investigated. that is all. don;’t you know what BJP and hindthuva brigade are saying about Sonia and her family. or what is written and spoken about JJ’s personal life on net and in print media. do you know what DMK speakers speak ON stages about the personal life of JJ ? (while there can be no justification of JJ’s crimes, talking shit about her personal ife is different matter) what Theerpori Arumugam spoke in the past ? talking of freedom of expression…

      • நகைச்சுவையாக பேசுவது நீர் தான் தம்பி.

        தமிழனுக்கு தனிநாடு வேண்டும் என்று பேச, பிரச்சாரம் செய்ய தடை இல்லையே.
        முறைகளில் தாம் பிரச்சனை. அதாவது சட்டத்தை கையில் எடுக்காமல், வன்முறை,
        வெறுப்பை தூண்டாமால், தமிழக மக்களில் பெரும்பாலோனோரிடம் உமது பிரச்சாரத்தை
        எடுத்துறைக்க தடை இல்லையே. தமிழக மக்களில் பெரும்பாலானோர் அப்படி விருப்பட்டால்,
        தனி தமிழகம் உருவாகுவது மிக சுலபம். அமைதியான வழிகளில் பெரும்பாலோன மக்கள்
        போராட துணிந்தால் ஜனனாயக நாட்டில் அது சாத்தியமே. அதவாது, ஆங்கிலேயரை
        எதிர்த்து காந்திய வழியில் அன்று நடந்த விடுதலை போரை போல, பெரும்பாலானா
        (ரிபீட் : பெரும்பாலான) தமிழ மக்கள் அறப்போர் மற்றும் பிற மாநில பொருட்கள் மற்றும்
        சேவைகளை மறுத்தல் ; இது போன்ற முறைகளில் போராட தடை இல்லை.

        துப்பாக்கி ஏந்துவது, அதை தூண்டிவிடுவது, வன்முறைகளை தூண்டுவது குற்றமாக இங்கு
        கருதப்படுகிறது.

        சரி, இருக்கட்டும். நீங்க கட்டமைக்க விரும்பும் கம்யூனிச இந்தியாவில், ஒரு இனம் (அதாவது
        தமிழர்கள் போல) தனி நாடாக விழைந்தால் என்ன செய்வீக ? ஸ்டாலின் காலத்தில் ரஸ்ஸியர்கள்,
        பிற இனத்தவரை நசுக்கிய கொடூர வரலாற்றை மறக்க வேண்டாம். உக்ரேன் ம்ற்றும் இதர‌
        “சோவியத் குடியாட்ச்சி” நடந்த நாடுகளில் விசாரித்துப் பார்க்கவும். ஜனனாயகம் மற்றும்
        சுதந்திரம் பற்றி பேச உம்மைப் போன்றவர்களுக்கு எந்த அருகதையும் கிடையாது. கம்யூனிச சொர்கம்
        என்ற பெயரில் நடந்த அடக்குமுறைகளை நியாப்படுதும் நீங்க, இன விடுதலை பற்றி பேசுவது தான்
        பெரும் நகைச்சுவை. உகேரேன் நாட்டில் சென்று விவாதிக்லாம் இதை பற்றி. வர்ரீகளா ?

      • ann, ////யாரோ ஒருத்தன் சோனியாவ பத்தி எழுதினதுக்கு என்னா ஆச்சாம் ?? இல்ல சுதந்திரமா முதலமைச்சரா மிரட்டி மினஞ்சல் அனுப்ப முடியுமா ??

        just because the govt knows that internet penetration is very low. so they ignore at the moment. Obviously they ban blogging any time, if they think there will be a some serious movement against their power!!/////

        email threats are investigated fully. that is all. but no objection to critise Sonia or any other leaders politics and action, etc. even their personal life details are talked about shamelessly. do you know what DMk speakers like Theepori Arunuma spoke ON stages ? about what was written about JJ or Indira Gandhi;s personal ives. (i do not support their cimies, but their personal matter is a different issue). Freedom of expression is alive in India to a greater extent. but still it is not as good as Europe or US. anyway, we all know about the freedom of expression allowed in your communist sorgam. could anyone have critised Stalin when he was alive in USSR ? why not ?

    • //ஜனனாயகம் மற்றும்
      சுதந்திரம் பற்றி பேச உம்மைப் போன்றவர்களுக்கு எந்த அருகதையும் கிடையாது. கம்யூனிச சொர்கம்
      என்ற பெயரில் நடந்த அடக்குமுறைகளை நியாப்படுதும் நீங்க, இன விடுதலை பற்றி பேசுவது தான்
      பெரும் நகைச்சுவை.//

      யோவ் உன்ன சொல்லி குத்தமில்லை.

      வினவு: உங்க தளத்தில் உங்கள் பதிவில் உள்ள ஒரு சில கருத்துகளுக்கு ஆதரவாக பதில்ட்டால், நான் என்னமோ வினவின் மொத்த உருவம் என்று நினைத்து பதிலிடும் இந்த அரை வேக்காட்டை எப்ப பார்த்தாலும் முதலாளித்துவத்தின் மொத்த உருவமாய் அதன் வழக்கரிங்கராய் கருதி வாதாடுகிறீர்கள் ??

      // தமிழனுக்கு தனிநாடு வேண்டும் என்று பேச, பிரச்சாரம் செய்ய தடை இல்லையே.
      முறைகளில் தாம் பிரச்சனை. //

      நீங்க முப்பது நாப்பது வருசமா கம்பி எண்ணிட்டு இப்ப தான் வெளியே வந்தவர் மாதிரி பேசுறீங்க. உங்களுக்கு சின்ன ஆதாரம் .
      http://www.flickr.com/photos/8764176@N05/3836497932/

      ஆமா, இப்ப சீமான், கொளத்தூர் மணி எல்லாம் பேசி தமிழ் நாட்டுல ரத்த ஆறா உள்ள ஓடுது??

      அரசுக்கு எதிரான போராட்டங்களை எல்லா அரசுகளும் அவர்களின் அதிகாரங்களை நிலை நாட்ட அடக்கவே செய்கிறார்கள். அதில் சோசலிச அரசிற்கு முதலாளி துவ அரசு எந்த விதத்திலும் சளைத்ததல்ல. இவ்வளவு ஜன நாயக உரிமைகள் பேசும் அமெரிக்காவில் கம்யுனிசம் தடை செய்யப்பட கட்சி. G8 மாநாட்டு எதிர்ப்பை இருந்தால் பிரட்டன் ஆ இருந்தாலும் துப்பாக்கிகள் சுடும்.

      • jp. when you quote Lenin, then i conclude you are endorsing communist dictorship. that is all. and i cannot keep track of various ids here. ok. so no big deal. so what is your stand ? do you support Stalinisim then ?

        Aringar Anna and Periyar asked for Dravida NAdu for decades in a democractic manner. It was part of DMK manifesto. And Akali Dal in its intial days asked for Punjabi Saba (so i think). they were all not banned. Seeman and Kollathoor MAni’s choice of words and methods are the issue here. not Thani thamil naadu or Eelam, etc. understand that first.

        if any group argues for Thani thamil naadu in a peaceful way, no problem. there is a org called JKLF in Kashmir called JAmmu Kashmir Liberation Front which calls for independent KAshmir. they are NOT jihadisists and continue to operate in Kashmir till date. only when they induce violence, they are arrested. but otherwise they are free to propogate their views. ok.

  2. இந்திய சுதந்திரத்திற்கு
    பிறந்த நாளாம்
    இந்தியாவே
    நீ பிறந்த நாள்தான்
    எம் மக்களுக்கு துக்க நாள்…..

    இந்தியர்களின் ரத்தம்
    கொதிக்கலாம் இன்னும்
    எத்தனை டிகிரி வேண்டுமானாலும்
    கொதிக்கட்டும் மானத்தை
    இழந்து கொதிக்கும் ‘ரத்தம்’ சுடுமா என்ன?…….
    எரிவதை பிடுங்கினால்
    கொதிப்பது அடங்குமாம்
    ஆனால் இங்கு
    நடப்பதே வேறு
    மனிதத்தை,சுயமரியாதையை
    பிடுங்கியதால் தான் இவ்வளவு பிரகாசமாய்
    கொதிக்கிறதோ இந்தியம் ….

    ஆயிரம் செண்ட் அடித்தாலும்
    துரோகத்தின் ரத்த கவுச்சி
    போவதில்லை – உழைக்கும் மக்களின்
    ரத்தத்தை நக்கிக்கொண்டே
    உரக்க பாடுங்கள் ஜெய்ய்ய்ய்ய்ய் ஹிந்த்த்த்……..
    பிறந்த நாள் சரி
    பிறக்காமலே இறந்து
    போன கதை தெரியுமா?

    ஒன்பது மாதம் இருட்டுச்சிறையில்
    நாளை வெளியுலகம்
    பார்க்க ஆவலாயிருந்ததாம்
    கரு
    மருத்துவச்சியாய் ஆட்லெறி
    குண்டுகள் மாற
    தாயும் சிசுவும் பரந்த வெளியில்
    சிதிலங்களாய்
    பிணதிண்ணியாய்
    இந்திய மேலாதிக்கம்…..
    ஆகத்து 15

    எம் உரிமைகள் நசுக்கப்பட்ட நாள்
    எம்மினங்களின் கழுத்து நெறிக்கப்பட்ட நாள்

    ஈழத்தில் பிறந்த நாளை
    இறந்த நாளாய் திருத்தம் செய்யும்
    சித்திர குப்தன் தரகு முதலாளிக்கும்
    அன்று தான் பிறந்த நாள்

    அவன் கதை முடிக்க
    ஆண்டாண்டு கால கணக்கு தீர்க்க
    பறையடித்து சொல்லுவோம்
    ஆகத்து 15 ஒரு கருப்பு நாளென்று.

  3. வித்தகன்,

    நீங்க சொல்றது மாதிரி இருந்த்தா நல்லா தானிருக்கும்!
    ம்ம்ம்ம் …. கற்பனை நன்றாக தானிருக்கிறது. என்ன செய்ய உண்மை சுடுகிறதே?

    தீவிரவாதம் தலைகாட்டுவதாக சொல்லும் நீங்கள், மக்களின் உரிமைகள் ம்றுக்கப்பட்டு, அதற்காக மக்கள் போராடும் போது அரசின் வன்முறை பற்றியும், போராடும் மக்களை தீவிரவாதியென முத்திரை குத்துவதையும் சொல்லி இருக்கலாம்.

    60 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த்தை விட மக்கள் முன்னெறி இருப்பதாக சொல்கிறீர்கள். 60 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த்தை விட பெறு முதலாளிகள் முன்னேறியதையா மக்கள் முனேற்றம் என்கிறீர்கள்? எத்தனை மக்களின் வாழ்க்கை தரம் குறைந்திருக்கிறது? எத்துனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்?

    ***அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.***

    ஏதோ சொல்றீங்க…. அப்படியே பப்பர் மிட்டாய் கொடுத்தீங்கன்னா சப்பிகிட்டே போயிடுவோம்.

    சுதந்திர தின வாழ்த்து சொல்லும் போது, நாம் உண்மையிலேயே சுதந்திரம் இருக்கான்னு யோசிக்க கூடாதுன்னு தான் பப்பர் மிட்டாய் குடுக்குறாங்ய்களோ..
    சின்ன புள்ளத்தனமால்ல இருக்கு…

    • //மக்களின் உரிமைகள் ம்றுக்கப்பட்டு, அதற்காக மக்கள் போராடும் போது அரசின் வன்முறை பற்றியும், போராடும் மக்களை தீவிரவாதியென முத்திரை குத்துவதையும் சொல்லி இருக்கலாம்.//

      உண்மைதான். அதுக்காக எல்லாத் தீவிரவாதியையும் போராளிகள்னு கொண்டாட முடியாதில்ல!

      //60 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த்தை விட பெறு முதலாளிகள் முன்னேறியதையா மக்கள் முனேற்றம் என்கிறீர்கள்?//

      இல்லைங்க. ஏழை எளிய மக்களுக்கு படிப்பறிவுக்கும் சுய தொழில் வாய்புக்கும் வழிமுறைகள் பெருகியிருப்பதைச் சொல்றேங்க. இன்னும் நெறய வாய்ப்புகள் அமையணும், செல்வம் இன்னும் சீராகப் பரவணும்ங்கிறது உண்மைதான். ஆனாலும் போற திசை சரியாகத்தான் இருக்கு. சிறு தொழில்கள் பெருக வாய்ப்புகள் இன்னும் மேல மேல வரும்னு நம்பறேன்.

      //எத்தனை மக்களின் வாழ்க்கை தரம் குறைந்திருக்கிறது? //

      வாழ்க்கைத் தரம் என்பதன் வரையறை என்ன? பசியால் செத்துப் பொகும், நோய் நொடிக்கு மருத்துவம் பார்க்க வழியில்லாமல் சாகும் மக்களின் எண்ணிக்கை சுதந்திரத்திற்குப் பின் ஏராளமாகக் குறைந்துள்ளது. சின்னஞ்சிறு ஊர்களிலும் போலியோ மலேரியா மருந்துகள் கிடைக்கின்றன. மருத்துவ வசதி அதிகரித்துள்ளது. சிறு விவசாயிகளுக்கு கடன்களும், சலுகை களும் கணிசமாகக் கிடைக்கின்றன. அவர்கள் பிள்ளைகள் படிக்கவும், வேலை தேட வும் இட ஒதுக்கீடு அமுலில் உள்ளது.

      //எத்துனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்?//

      வெட்கக் கேடு. இனிமேல் அப்படி நிகழக் கூடாது.

      ளிமாகோ! இப்படி கேள்வி கேட்கும் உரிமையை உங்களுக்குத் தந்துள்ள உங்கள் நாட்டின் சுதந்திர தினத்திற்காக உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

    • வித்தகன்,

      நீங்கள் கூறுவது போல் நடுத்தரவர்க்கத்திற்கு பல குறைகளும், நிறைய வாய்ப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், 90களுக்கு பிறகு இந்தியாவில் விவசாயம் , சிறு தொழில் (small scale industries), ஒழிக்கப்பட்டு வருகின்றன.

      இந்தியாவிலே பல்வேறு விதமான உணவு தானியங்கள், காய்கறி, கனிகள் கிடைக்கும் போது உணவு இறக்குமதி தேவையா? நம் நாட்டு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யாமல் வெங்காயம், ஆப்பிள், ஆரஞ்சு, உணவு தானியங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்து நம் விவசாயிகள் வயிற்றில் அடிப்பது சுதந்திரமா?

      சுதந்திரம் இருக்குத்தான் செய்கிறது. ஆனால் எந்த வர்க்கத்துக்கு என்பது தான் மைய பிரச்சனை. பன்னாட்டு கம்பனிகளுக்கும், டாடா அம்பானி போன்ற தரகு முதலாளிகளுக்கும், தான் முழு சுதந்திரம் உள்ளது.

      • //90களுக்கு பிறகு இந்தியாவில் விவசாயம் , சிறு தொழில் (small scale industries), ஒழிக்கப்பட்டு வருகின்றன. ///

        prove this with data comrade. i disagree with this false info as a SSI entrepreneuer. actually there are many many new chances now for SSIs. try taking a tour of Sriperumbudur to Chengalpattu belt. and enquire about the thousands and lacs of new chances for suppliers and vendors to MNCs there. there is something called “ripple effect” ; also try to compare the Combatore and Karur districts with their situation in 70s. I grew up there in the 70s and 80s and knew something about the exlposive growth of industry, employment and tax revenue. the issues of pollution, etc are there, of course. but still somwething is better than nothing and you have no idea about the grim scene in the 70s.

      • சிறுதொழில்களுக்கு மார்ச்1990-இல் வங்கி மூலம் கிடைத்த கடன்கள் 11.5%. இதுவே மார்ச்2003-இல் கிடைத்த வங்கி கடன் வெறும் 4.9% மட்டுமே. (Source: RBI, Basic Statistical Returns)

        பணமுதலை கம்பனிகளுக்கு சலுகைகளும், கடன்களும் தாராளமாக கிடைக்கிறது. ஆனால் சிறுதொழில்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன.

      • சுனா பானா,, that is one relative statistics. can you give the total number of SSI untis on date when compared to 1990 and how many old units went out of business and new ones entered in this period. and compare with pre-1991 data. and your info shows that the economy is booming and more credit to large companies. that doesn;t mean SSI units are starved of credit. in fact, getting a loan is easy now and there is utmost competition among banks and orgs like TIIC to target SSIs. the most important issue is whether SSI’s are dying out.
        even if they wane, no big deal. economics of sacle and new technologies constantly change the scene and new companies grow while old ones die. when tractors and powerlooms replaced ox and handlooms,. there was opposition intially. and loss of employment INTIALLY. but soon there was adjustment and new oppurtunities. and without these changes, agri and textile output could not have kept up with the growing population. We, the SSI entrepreneuers are NOT complaining while you do. by the way, what about my other points and posts ??

      • //பணமுதலை கம்பனிகளுக்கு சலுகைகளும், கடன்களும் தாராளமாக கிடைக்கிறது. /// sure. :)) and hence this cheap website for vinavu hosted in a server dead cheap (when compared to 15 years ago) and all this free blogs, cheap cells, millions of new jobs in many sectors and huge tax revenue for govt. and much much more.

      • ஏங்க அதியமான், நீங்க டிபனுக்கு செல்போனும், சாப்பாட்டுக்கு ஹார்ட்டிஸ்கும் சாப்புடறீங்களா?

      • எனக்கு தெரிந்த உண்மை சம்பவம். என் சொந்தக்காரப் பையன், 10 வருடத்திற்கு முன்பு சிறுதொழில் செய்வதற்காக PMRY (Prime minister Rozgar Yojana) திட்டம் மூலம் 1 லட்சம் லோன் வாங்க விண்ணப்பித்தான். ஒரு லட்சம் லோன் வாங்க 10 ஆயிரம் செலவு பண்ணிணான். 8 மாசமாக அலைஞ்சி செருப்பு தேஞ்சி போனது தான் மிச்சம்.

        இப்படி கொடுக்கப்படும் சிறுதொழில் கடன்களும் காசுள்ளவனுக்குத் தான் கிடைக்கிறது.

        இது தான் சிறுதொழில் செய்ய முன்வருவோருக்கு கிடைக்கும் “சலுகை”.

      • சுனா பானா,

        உங்கள பரிச்சை பண்ணி பார்த்தேன். ஆனா தேரலையே !!

        பார்க்கவும் :

        http://www.dcmsme.gov.in/ssiindia/statistics/economic.htm#Industrial

        http://www.dcmsme.gov.in/ssiindia/performance.htm

        உங்க நண்பன் 10 % தொகை எப்படி “செலவு” செய்தாராம் ?
        ஆரம்பத்திலியே லஞ்சம் !! அந்த 10,000 ரூபாய் முதலீட்டில்
        நேர்மையாக ஒரு மிக சிறு கடை ஆரம்பித்திருக்கலாமே.

      • உங்கள் ஆலோசனை நல்லா இருக்கு.
        >>சிறு கடை ஆரம்பித்திருக்கலாமே.

        ஆனால் லஞ்சம் கொடுத்தும் லோன் கிடைக்கவில்லை. அப்போ லஞ்சம் கொடுக்காமல் தொழில் செய்ய நினைக்கும் இளைஞர்கள் கதி என்ன என்பது தெளிவு. ஆக, காசில்லாத இளைஞர்கள், நேர்மையானவர்கள் சிறு தொழில் தொடங்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.

        அரசும் காசுள்ளவனுக்கு தான் உதவுகிறது. வங்கியும் காசுள்ளவனுக்கு பின்புலம் பார்த்து தான் கடன் கொடுக்கிறது. இதில் இருந்து தெரியவில்லையா எந்த வர்க்கத்திற்கு சுதந்திரம் என்று.

        இந்தியாவில்,
        மேட்டுகுடியினருக்கு தான் முழு சுதந்திரம்,
        நடுத்தர வர்க்கத்திற்கு ஓரளவு சுதந்திரம்,
        ஏழைகளுக்கு சுதந்திரம் இல்லை.

      • ///ஆனால் லஞ்சம் கொடுத்தும் லோன் கிடைக்கவில்லை. அப்போ லஞ்சம் கொடுக்காமல் தொழில் செய்ய நினைக்கும் இளைஞர்கள் கதி என்ன என்பது தெளிவு. ஆக, காசில்லாத இளைஞர்கள், நேர்மையானவர்கள் சிறு தொழில் தொடங்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை./// no Su.Pa. this is gross genralisations and untrue.
        u have no idea about the boom and energy unleashed in Coimbatore, KArur dts due to the efforts of self made entrepreneuers. and around chennai. and many of the present capitalists were former workers who made it big thru effort and hard work. the majority of entrepreneuers in Coimbatore, Thirupur, Karur region started as workers and made their way up slowly over the years.

        and if you are honest and if your business is run on sound manner, there will be no problem in getting loans. for start ups too this applies. i know many many start ups who started with a tiny amount and grow later.

      • /////ஆனால் லஞ்சம் கொடுத்தும் லோன் கிடைக்கவில்லை. அப்போ லஞ்சம் கொடுக்காமல் தொழில் செய்ய நினைக்கும் இளைஞர்கள் கதி என்ன என்பது தெளிவு. ஆக, காசில்லாத இளைஞர்கள், நேர்மையானவர்கள் சிறு தொழில் தொடங்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை./// //

        சுனா.பானா,

        ஒரு முக்கிய விசியதை விட்டுவிட்டேன்.
        லஞ்சம் கொடுத்து கடன் பெற நினைப்பவர்கள் வாங்கிய கடனை ஒழுங்காக‌
        திருப்பி தர மாட்டார்கள். இது போன்ற அரசு திட்ட கடனகள் எல்லாம் இனாம்தான்,
        திருப்பி தர தேவையில்லை, ஏமாற்றிவிடலாம் என்ற எண்ணம் மிக மிக அதிகமாக‌
        உள்ளது. விவசாய கடன்களிலும் தான். உண்மையில் திவாலாகி, கடனை திருப்பி
        தர இயலாதவர்களை விட, இது போன்ற ஏமாற்றுபவர்கள் மிக மிக அதிகம்.

    • //. 60 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த்தை விட பெறு முதலாளிகள் முன்னேறியதையா மக்கள் முனேற்றம் என்கிறீர்கள்? எத்தனை மக்களின் வாழ்க்கை தரம் குறைந்திருக்கிறது? எத்துனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்?///

      poverty ratio has declined dranstically since 1947. illetarcy and famines have declined vastly. but ,yes, India is corrupt, under developed and we have hell lot of problems and issues and poverty. but we were worse off in 1947 and could not have improved this much without this much maligned independence. with a population of nealy 1.1 billion we are managing poverty at this level. if the poverty ratio at 1947 level is still there, then imagine the total people below poverty today. it would be more than 50 % or nealy 60 crores.

      our debate is about the ways and means to conquer poverty and other ills. well, we can learn from history of the world or be condemned to repeat the mistakes of the past,

      • அதியமானுக்கு ஒரு தெளிவுரை….

        முதலாளிகளுக்கு கொடுக்கும் சலுகைகளும், விலைவாசி உயர்வும், விவசாயத்தின் அழிவும் குறித்து.

        Drought of justice, flood of funds

        P. Sainath

        Ask for expansion of the NREGS, universal access to the PDS, more spending on health and education — and there’s no money. But there’s enough to give away to the corporate world in concessions.

        Sure, August is proving an unusual month. But what an extraordinary one July was! We celebrated the delivery of the cheapest car in the world and the costliest tur dal in our history within the same 31 days. And it took some work to get there. The price of tur dal was around Rs. 34 a kilogram just after the 2004 elections, Rs. 54 before the 2009 polls, Rs. 62 just after and, now at over Rs. 90, bids for three-figure status.

        The euphoria of July also saw Montek Singh Ahluwalia declare that the “worst is behind us.” (Though it must be conceded that he said that even in June and, possibly, earlier.) That’s good. I only wish he had told us when the worst was upon us. It would have been nice to know. Otherwise, it gets hard to appreciate improvement.

        As a matter of fact, Prime Minister Manmohan Singh and Agriculture Minister Sharad Pawar suggest that the worst could be ahead of us. And they don’t mean the swine flu. Both appear to have written off much of the kharif crop. They advise us to buckle up for a further rise in food prices due to the drought they now say affects 177 districts. That they’ve thrown in the towel on the kharif crop is evident in their calling for a more efficient planning of the rabi. Yet, the government had two months during which it could have opted for compensatory production of foodgrain in regions getting relatively better rainfall. But there was no effort at monsoon management.

        Even today, there are very useful things that could be done to counter the worst ahead. A positive step taken by the Rural Development Ministry now allows small but vital assets like farm ponds to be created on the lands of farmers through the NREGS. A pond on every farm should be the objective of every government. (Incidentally, this would help hugely with the rabi season. It would also ease the hostility of quite a few farmers towards the NREGS.) A massive expansion of the NREGS will also help cushion the lakhs of labourers struggling to find work and devastated by rising food costs. But it would call for throwing out the entirely destructive 100-days-per-household limit on work under the scheme. With the Prime Minister calling for anti-drought measures on “a war footing,” this should be the time to do it.

        The price-rise-due-to-drought warning is a fraud. Of course, a drought and major crop failure will push up prices further. But prices were steadily rising for five years since the 2004 elections, long before a drought. Take the years between 2004 and 2008 when you had some good monsoons. And more than one year in which we claimed “record production” of foodgrain. The price of rice went up 46 per cent, of wheat by over 62 per cent, atta 55 per cent, salt 42 per cent and more. By March 2008, the average increase in the prices of such items was already well over 40 per cent. Then, they rose again till a little before the 2009 polls. And have risen dramatically in the past three months.

        The Agriculture Minister appears to have figured out that the stunning rise in the price of pulses may have little to do with drought. “There is no reason,” he finds, “for prices to rise in this fashion merely on a supply-demand gap.” He then goes on to find a valid reason: “blackmarketing or hoarding.” But remains silent on forward trading in agricultural commodities. Many senior Ministers have long maintained that “there is no evidence” that speculation related to forward trading has had any impact on food prices. (The ban on trading in wheat futures was lifted even before the results of the 2009 polls were announced in May. And existing bans on other items have been challenged in interpretation.)

        The price rise since 2004 could be the highest for any period in the country barring perhaps the pre-Emergency period. For the media, of course, July was far more interesting for the political price in Parliament over the gas war between the Ambani brothers. When these two barons brawl, governments can fall. Also, how could atta be more interesting than airline tickets (the prices of which fell dramatically over several years)? Food prices might have gone up but airline travel costs went down and those are the prices that mattered.

        So the price of aviation turbine fuel became a far more to-be-covered thing as private airlines threatened a strike demanding public money bailouts. At the time of writing, it appears the government will try and make things cheaper for them. These airline owners include some associated with the IPL, which got crores of rupees worth of tax write-offs last year. Maharashtra waived entertainment tax on the IPL. And with so many games held in Mumbai that proved a bonanza for the barons paid for by the public.

        There’s always money for the Big Guys. Take a look at the budget and the “Revenues foregone under the central tax system.” The estimate of revenues foregone from corporate revenues in 2008-09 is Rs. 68,914 crore. (http://indiabudget.nic.in/ub2009-10/statrevfor/annex12.pdf) By contrast, the NREGS covering tens of millions of impoverished human beings gets Rs. 39,100 crore in the 2009-10 budget.

        Remember the great loan waiver of 2008, that historic write-off of the loans of indebted farmers? Recall the editorials whining about ‘fiscal imprudence?’ That was a one-time, one-off waiver covering countless millions of farmers and was claimed to touch Rs. 70,000 crore. But over Rs. 130,000 crore (in direct taxes) has been doled out in concessions in just two budgets to a tiny gaggle of merchants hogging at the public trough. Without a whimper of protest in the media. Imagine what budget giveaways to corporates since 1991 would total. We’d be talking trillions of rupees.

        Imagine if we were able to calculate what the corporate mob has gained in terms of revenue foregone in indirect taxes. Those would be much higher and would mostly swell the corporate kitty for the simple reason that producers rarely pass on these gains to consumers. Let’s take only what the budget tells us (Annexure 12, Table 12, p.58). Income foregone in 2007-08 due to direct tax concessions was Rs. 62,199 crore. That foregone on excise duty was Rs. 87,468 crore. And on customs duty Rs. 1,53,593 crore. That adds up to Rs. 3,03,260 crore. Even if we drop export credit from this, it comes to well over Rs. 200,000 crore. For 2008-09, that figure would be over Rs. 300,000 crore. That is a very conservative estimate. It does not include all manner of subsidies and rate cuts and other freebies to the corporate sector. But it’s big enough.

        Simply put, the corporate world has grabbed concessions in just two years that total more than seven times the ‘fiscally imprudent’ farm loan waiver. In fact, it means that on average we have been feeding the corporate world close to Rs. 700 crore every day in those two years. Imagine calculating what this figure would be, in total, since 1991. (Er.., what’s the word for the bracket above ‘trillion?’) Ask for an expansion of the NREGS, seek universal access to the PDS, plead for more spending on public health and education — and there’s no money. Yet, there’s enough to give away nearly Rs. 30 crore an hour to the corporate world in concessions.

        If Indian corporates saw their net profits rise in April-June this year, despite gloom and doom around them, there’s a reason. All that feeding frenzy at the public trough. The same quarter saw 1.7 lakh organised sector jobs lost in the very modest estimate of the Labour Ministry. That’s not counting the 15 lakh jobs said to have been lost in just the export sector between September and April by the then Commerce Secretary.

        And now comes the drought. A convenient villain to hang all our man-made distress on — and sure to oblige by adding greatly to that distress. A huge fall in farm incomes is in the offing. If the government wants to act on a war footing, it could start with a serious expansion of the NREGS (about the only lifejacket people in districts like Anantapur in Andhra Pradesh have at this point, for instance).

        It could launch, among many other things, the pond-in-every-farm programme. It could restructure farm loan schedules. It could start getting the idea of monsoon management into its thinking. It could curb forward trading-linked speculation that was driving one of our worst price rises in history long before the drought was on the horizon. And it could declare universal access to the PDS. That cost could probably be easily covered by, say, cancelling the dessert from the menu of the unending corporate free lunch in this country.

        Printer friendly page
        Send this article to Friends by E-Mail

      • payasam,

        i had read P.Sainath’s article already. while his reports are indepth and gives a accurate picture of the rural India, his conclusions and interpretations are nonsenses and absurd to the say the least. without liberlisation, the situation would be even more terrible now. any idea about the net govt revenue figures and spending until 80s ?

        and if tax levels were maintaiend at pre-1991 levels, then total tax revenue too would be at the old levels. tax rates were highest in 1971 and were reduced slowly. but this propelled the industry to expand and grow and hence total tax revenue multiplied many times, which was unimaginable some decades ago.

        and Sainath is giving a incorrect picture of tax breaks to industry. they are not Payments or handouts but reductions of rates for special purposes (and i agree this is distorting the economy and is liable for corruption) ; but without these discounts there will be no new tax revenue for govt coffers. and he is talking like a nut about the taxes lost in trillions if the pre-1991 levels are maintained till date. if the rates were maintained at the old rates, there will be no growth and rise in taxes as on date. and we would have been bankrupt long back.

        While i appreciate the humanism and dedication of Thiru.Sainath, i must say he knows next to nothing about economics and growth. esp about tax policy, etc.

      • அதியமான் நான் ஒன்னும் உளரள, நீங்க சோறுதான் துன்றீங்கன்னு நான் நம்புறேன் ஆனா நீங்க அப்பப்ப, வினவு சைட்டு போட்டத கம்பூட்டர் வெல குறைஞ்சத, முதலாளித்துவ, தனியாரமைய சாதனையா சொல்லுறீங்க ஆனா இதே 15 வருசத்துல அரிசி பருப்பு வெல கன்னா பின்னான்னு கூடிப்போச்சு… கம்பூட்டர் வெல கொறஞ்சது சாதனைன்னா அரிசி விலை கூடினது தோல்வியில்லையா?… தயவு செஞ்சு தமிழ்ல எல்லாருக்கும் புரியர மாதிரி பதில் சொல்லுங்க

  4. மயிராண்டிகளா அப்புறம் இன்னும் ஏண்டா, இங்கே இந்தியாவில் பொறுக்கிக்கொண்டு இருக்கீங்க, போய் சீனா, கியுபா, வட கொரியா ன்னு புடுங்க வேண்டியது தானே. ( ஆனா அங்கன போய் இத மாதிரி பிளாக் எழுதினா சூத்த கிழிசிடுவாங்க என்பது வேறு விஷயம்).

    இங்கியே பொருக்கி தின்னுகினு நம்ப நாட்டையே குறை சொல்லி திரிகிறீர்கள்.

    • அகத்தியன். கெட்ட வார்த்தை பேசாம இதே கருத்தை சொல்லியிருக்கலாமே! தயவு செய்து சொல்லும் தகவலின் திசை ஆபாச மொழிகளால் மாறிப் போக விடாதீர்கள்.

    • Dear Mr.Agathiyan,
      இந்தியாவை அமெரிக்காவிற்கு அடகு வைத்து அவன் வீசும் எச்சில் டாலர்களை பொறுக்கி தின்னும் மேட்டுக்குடி இந்தியாவை (அம்பானிகள், அரசியல்கள், ரவுடிகள், பொறுக்கிகள்….) தோலுரிப்பது தான் இந்த கவிதையின் நோக்கம். உரிக்கப்பட்டதால் சுள்ளென்று *** எரிகிறதா. உப்பை தடவவும் (TATA Saaaalt)

      • ///அவன் வீசும் எச்சில் டாலர்களை பொறுக்கி தின்னும் மேட்டுக்குடி//// :)))))))) dollars are needed for ALL people of India to finance the vital imports like Petroleaum, etc. untll 1991 we were begging and borrowing for dollars from IMF.

        can anyone here answer my basic question about dollars and IMF at :

        http://nellikkani.blogspot.com/2008/05/1991.html

        1991இல் இந்தியா திவாலாகியிருந்தால் ?

      • விடிவெள்ளி.

        not only petrol, most of world trade is done thru USD only. simple reason is that USD is more trusted than any other currency. that is most people trust USD which is backed by US economy (for all its ills) to be the safest one. and most Asian Central banks (like our RBi or China’s RBI) park their trillions of dollar assets in US govt bonds creating imbalances and making USD over priced.

        and you will say all this is due to US conspiracy !! read my post about 1991 fully and answer the question at the end. also try this about the theories about US dollar conspiracy :

        Petro dollars Vs Petro Euros
        http://web.nps.navy.mil/~relooney/Rel_MEJ_S04.pdf

      • vidivelli,

        you have got the point correctly. trust of a currency of product or brand can only be EARNED slowly over time. there are no shot cuts or conspiracy. why do you trust intel chips or Cisco routers or Sony systems, etc ? same is true for currency. no idiot will trust our great Indian rupee. we print too much every year and reduct the net value of our rupee. hence they demand payment in dollars.
        British sterling pound was the reserve currency of the world until 40s. the trust placed on USD is solely based on US economy and stablity. this too may change in future, unless US is able to correct its follies and stablise its economy.
        in free markets, the value or trust can only be EARNED slowly. that is the key.

      • Athiyaman, I got your point. As you said British pound was the reserve currency till 40s, because it was the super power till second world war. And during the end of cold war US dominated the world. This resulted in US dollar supremacy.

        So as per your view, gaining the “trust” means becoming imperialist country by suppressing and oppressing other countries.

        “நம்பகத்தன்மை” பெற ஏகாதிபத்தியமாக வேண்டும்
        ஏகாதிபத்தியமாவதற்கு உலக வர்த்தகத்தை கைக்குள் கொண்டு வரவேண்டும்
        அதற்கு ராணுவ பலத்தை நிறுவ வேண்டும்
        அதற்கு அடுத்த நாடுகள் மீது போர் தொடுக்க வேண்டும்
        அல்லது அணு குண்டு போட வேண்டும்
        மக்களை கொல்ல வேண்டும்
        சதி செய்து மற்ற நாடுகளில் ஆட்சி கவிழ்க்க வேண்டும்
        நாடுகளுக்குள் சிண்டு முடிய வேண்டும்………………..

      • //“நம்பகத்தன்மை” பெற ஏகாதிபத்தியமாக வேண்டும்
        ஏகாதிபத்தியமாவதற்கு உலக வர்த்தகத்தை கைக்குள் கொண்டு வரவேண்டும்
        அதற்கு ராணுவ பலத்தை நிறுவ வேண்டும்
        அதற்கு அடுத்த நாடுகள் மீது போர் தொடுக்க வேண்டும்
        அல்லது அணு குண்டு போட வேண்டும்
        மக்களை கொல்ல வேண்டும்
        சதி செய்து மற்ற நாடுகளில் ஆட்சி கவிழ்க்க வேண்டும்
        நாடுகளுக்குள் சிண்டு முடிய வேண்டும்………………..///

        crazy and untrue. no naton can impose its currency on the world as reserve currency thru the above means. you have not read my links.

        and you cannot understand what earning trust or brand building thru good faith means. yet, you purchase only good quality products under established brands (brand value cocept is the same everywhere). e.g : you buy PC or cell from known brands, tea from known brands, etc. all these brands did not earn their trust or reputaton for qulaity overnight. but took decades..

  5. கருக்கரிவாளின் கைப்பிடியை கரையான் தின்கிறது

    வேலியில் காயும் வெளிர்பச்சை தாவணியை

    ஆடு மேய்கிறது.//

    அருமையாக எழுதியுள்ளீர்கள்…எல்லா வரிகளும் மனதை பிழையுது.
    சி.கருணாகரசு.

    • ரவி அவர்களுக்கு,

      புரட்சி வரும் நீங்கள் கவலைப்படாதீர்கள். அதற்குதானே நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கெல்லாம் இது போன்ற ஒரு ஆபாச இடுகையோடு மக்கள் பிரச்சினை பற்றிய இடுகைகளை இடுவது சிரமாக இருக்காது.ஏனெனில் இரண்டையும் ஒரே தட்டில் வைத்து பார்க்கிறீர்கள் போலும் . அதனால் தான் லக்கியால் பன்றிக்காய்ச்சல் இடுகையிலும் , தாங்கள் இங்கும் நையாண்டி செய்ய முடிகிறது.

      முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், பார்ப்பன இந்து மதவெறி ஆகியவற்றை எதிர்க்க வேண்டும் அதற்கு புரட்சி தேவை என்கிறோம், சாத்தியம் இல்லைஎன்றால் விளக்குங்கள் வெறும் நக்கல் எங்களை கோபம் கொள்ள செய்கிறது. அதற்கான பதில் சிலரிடம் சூடாக கூட வரலாம். உடனே லக்கி சொன்னது போல “இங்கு வந்திருக்கவே மாட்டேன்” எனச்சொல்லபோகிறீர்களா?

      மக்களை பாதிக்கும் அனைத்தையும் எதிர்க்கவே செய்கிறோம். ஒரு ரசிகனைப்போல், பக்தனைப்போல் அல்லாது இதற்குத்தான் இப்படித்தான் என மக்களுக்காக வாழவேண்டுமென்கிறோம் இருக்கிறோம். அதையும் தாண்டி உழுபவனுக்கு நிலம், உழைப்பவனுக்கே அதிகாரம் என்பதற்குத்தான் புரட்சி தேவை என்கிறோம். இதை விட தோழர்கள் சிறப்பாக விளக்குவார்கள் புரட்சியைப்பற்றி.

      தயவு செய்து தாங்கள் ஏன் நையாண்டி செய்கிறீர்கள் என்பதை மட்டும் கூறுங்கள். தற்போதுதான் உங்களின் தளத்தினைப்பார்த்தேன். அந்த ஆபாச சுட்டியை தாங்கள் விருப்பப்பட்டால் இடவும் தயார்.அது நோக்கமல்ல.
      விமர்சனம் செய்யுங்கள் எங்களை மெருகேற்றிக்கொள்கிறோம் அதை விட்டுவிட்டு இப்படி செய்தால் எப்படி? அதும் மூத்த பதிவரென்று வேறு உங்களை நண்பர் ஒருவர் சொன்னார். உங்களின் செயல் பாடு கலகத்தை போன்ற சிறுவர்களுக்கு வளர்ச்சிக்கானதாக அல்லவா இருக்க வேண்டும். பதில் சொல்வாரா ரவி(அவர் மட்டுமல்ல அவரைப்போன்ற சிலரும்)

      கலகம்

      • மூத்திர பதிவர்னு சொல்லிருப்பாங்க. உங்களுக்கு சரியாய் கேட்டிருக்காது

    • செந்தழல் ரவி…. நீங்க கருத்து சொல்றீங்களா. நக்கல் அடிக்கிறீங்களா. புரியிர மாதிரி பேசுங்க.

      விவசாயிகளை நக்கல் அடிப்பது அவர்களுக்கு புரியாதவரைக்கும் உங்களை மாதிரி ஆளுங்களுக்கு கொன்டாட்டமாத்தான் இருக்கும். விவசாயிகளுக்கு புரிஞ்சிரிச்சின்னா நீங்க எதிர்பார்க்கும் புரட்சி சீக்கிரம் வரும்.

  6. Vinavu pls feel free to write like this again. India is not Maoist China or Stalinist Russia. None would hang you for writing like this. In fact not even .00005% of India’s population takes you and your great movement seriously. You can even observe aug 15 as a sad day. Nobody forces you to salute the flag on 15th august. So enjoy all the freedoms and facilities even as you remain ungrateful to India. India has seen so many stooges like you and has outlived them.

    • “In fact not even .00005% of India’s population takes you and your great movement seriously”

      Let us remember that great movements started with only few individuals. Christianity began with Christ and his 12 disciples only. Marx had a believer in Engels only in the initial stage.

    • Mr.Hindu your FREE INDIAN STATE imprisoned and tortured Dr.Binayak Sen, a world famous Physician for expressing certain views. It is not an isolated incident. From kashmir to Kanya Kumari every nook and corner is full of stories like this. I salute the ‘ FREEDOM’ which allows you to selectively forget about these trivial incidents. GO CELEBRATE YOUR FREEDOM. HANG OUT WITH YOUR FRIENDS …………… pepsi, king fisher………..

  7. அய்யா,
    இந்திய இறையாண்மை என்பது பட்டாப்பட்டி நாடா மாதிரி. அது காஷ்மீரத்து, வட கிழக்கு மாநிலத்து, ஈழத் தமிழ் பெண்களை கற்பழிக்க மட்டுமே தளரும். மற்ற நேரத்தில் அது இறுக்கமாகவே இருக்கும். சுதந்திர தின அனுதாபங்கள்.

  8. அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிறது சுதந்திரம் பெற்று… ஆனால் இன்னும் அறுபதுசதவீத மக்கள் ஒரு வேலை உணவுதான் சுதந்திரமாய் உண்கின்றனர்…

    அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிறது சுதந்திரம் பெற்று… ஆனால் இன்னும் நமது அருமை இந்திய ராணுவம் இல்லாமல் கொடியேற்ற முடியாது வடகிழக்கில்…

    அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிறது சுதந்திரம் பெற்று… ஆனால் இன்னும் குழந்தைகளுக்கு ஆறாவது வரைகூட இலவசமாக கல்வி கொடுக்க வழியில்லை…

    அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிறது சுதந்திரம் பெற்று… ஆனால் இன்னும் சில ஆண்டுகள் வாழ முடியுமா என்பது சந்தேகமே அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றால்…

    அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிறது சுதந்திரம் பெற்று… ஆனால் இன்னும் மருந்து கம்பெனி சோதனையின் எலிகள்தான் ஏழைகள்…

    அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிறது சுதந்திரம் பெற்று… ஆனால் இன்னும் சிலர் அரசியல் சாக்கடையை பாலாறாய் நம்பிக்கொண்டு இருக்கின்றனர்…

    அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிறது சுதந்திரம் பெற்று… ஆனால் இன்னும் கொடியாய் தொங்குவதை நம்பிக்கொண்டு இருக்கின்றனர், கொடியில் தொங்குவது தனது கோவணம்தான் என்பது தெரியாமல்…

    • 60, 60 என்று வர வேண்டும் என்று நினைத்து ஏதேதோ எழுதி விட்டீர்கள்.

      //அறுபதுசதவீத மக்கள் ஒரு வேலை உணவுதான் சுதந்திரமாய் உண்கின்றனர்…//

      பொய். ஒரு வேளை உணவு உண்ணும் மக்கள் 12%. அதுவும் அநியாயம்தான். ஆனால் நீங்கள் சொல்வது போல 60% அல்ல.

      //அருமை இந்திய ராணுவம் இல்லாமல் கொடியேற்ற முடியாது வடகிழக்கில்…//

      உண்மை. அவர்களது தேவைகளும், குறைகளும் தீர்க்கப் படாமலே உள்ளன.

      //குழந்தைகளுக்கு ஆறாவது வரைகூட இலவசமாக கல்வி கொடுக்க வழியில்லை…//

      பொய். நாடு முழுவது எட்டாம் வகுப்பு வரையிலும் இலவச கல்வி உள்ளது. சில மாநிலங்களில் ஐந்தாம் வகுப்பு வரை புத்தகங்களும் இலவசமாகத் தரப் படுகின்றன. நான் சிறிய ஊரில் அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி கற்றவன் தான். சிறந்த பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கும் பின்னர் அமெரிக்காவில் மேல் படிப்பு படிப்பதற்கும் (ஸ்காலர்ஷிப்புடன்) அந்தக் கிராமத்துப் பள்ளியில் படித்த அடிப்படைக் கல்வியால் ஒரு தடையும் வரவில்லை. நான் பட்டினி கிடந்ததில்லை, ஆனால் வறுமையிலிருந்து அதிக தொலைவிலும் இருந்ததில்லை. இன்று, என் நிலைமைக்கு நம் கல்விக்கு நான் நன்றியுடன் இருக்கிறேன்.

      //ஆண்டுகள் வாழ முடியுமா என்பது சந்தேகமே அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றால்…//

      எல்லா நேரமும் உண்மையல்ல. அரசு மருத்துவ மனைகளின் குறைகளை சுட்டிக் காட்டிக் கொண்டே இருப்பது நம் கடமை. ஆனால் ஆண்டு தோறும் பல லட்சம் நோய்களுக்கு இலவச சிகிச்சை தரும் நம் மருத்துவ மனைகளால் ஏழைகள் பலன் பெறுவதை அடியோடு மறுக்காதீர்கள்.

      //ஆனால் இன்னும் மருந்து கம்பெனி சோதனையின் எலிகள்தான் ஏழைகள்…//

      இது conspiracy theory மட்டுமே.

      //அரசியல் சாக்கடையை பாலாறாய் நம்பிக்கொண்டு இருக்கின்றனர்…//

      கத்தி எடுப்பதற்கு இது எவ்வளவோ தேவலை. அக்கம் பக்கம் உள்ள நாடுகளைப் பாருங்கள். இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம். இங்கு, நான் பிரதமரையோ, ஜனாதிபதியையோ மேடை ஏறித் திட்டி விட்டு வீட்டில் போய் சீரியல் பார்க்க முடியும். சுதந்திரம்!

      • அரசு பள்ளிகளில் படித்த எத்தனையோ நண்பர்கள் பல நல்ல பதவிகளில், வேலைகளில் இருப்பது நிஜம் தான். ஆனால் நம் கண் முன்னே அரசு கல்வி பொறுப்பில் இருந்து வெளியேறுகிறது, கல்விக்கு நிதி ஒதுக்கீடு ரொம்ப குறைவு. மேலும் தனியார் கல்வி கொள்ளயர்களிடமும், பன்னாட்டு கல்வி கொள்ளையர்களிடமும் கற்று கொள்ளுமாறு மக்களை அறிவுறுத்துகிறது.

      • நண்பர் வித்தகன், நான் அறுபது சதவீத மக்கள் ஒரு வேலை உணவுதான் உண்கின்றனர் என்ற புள்ளி விவரத்தை நேற்று ஜெர்மானிய தொலைக்காட்சியில் வெளியான “Counting the cost of Biofule” என்ற நிகழ்ச்சியில் அளித்த புள்ளி விவரத்தை வைத்து சொன்னேன்.. நானாக உருவாக்கியது அல்ல. இந்தியாவில் அரசு கணக்குப்படியே 77% மக்கள் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கும் குறைவான ஊதியத்தில் வாழ்கின்றனர்…

        http://in.reuters.com/article/topNews/idINIndia-28923020070810

        நாடு முழுவதும் எட்டாம் வகுப்பு வரை இலவச கல்வி உள்ளது… ஆனால் படிப்பதற்கு மாணவர்கள்? நானும் அரசு பள்ளியில் படித்து , உயர் கல்வி பயின்றவன்தான்.. எனது தந்தையின் காலத்தில் பள்ளிக்கல்வி இலவசமாகவும், கல்லூரி கல்விக்கு சிறு தொகை செலுத்த வேண்டியும் இருந்தது, இப்பொழுது அரசு பள்ளிகளை தவிர ஏனைய பள்ளிகளில் வங்கிக்கணக்கை காண்பித்தால்தான் இடம் கிடைக்கும் என்ற நிலைமை , கல்லூரிக் கல்வியோ சில லட்சங்கள் இருந்தால்தான் முடியும் என்கிற நிலைமை… இதுதான் முன்னேற்றமா ? நான் சொன்னது தவறாகவே இருந்தாலும் உங்களின் தலைமுறையில் நூற்றில் பத்து பேர் அரசு பள்ளியில் படித்து நல்ல வேளையில் இருப்பதை பார்த்து இருப்பீர்கள், இன்றைய தலை முறையில் எத்தனை பேர் அரசு பள்ளியில் படித்து முன்னேற வாய்ப்பு உள்ளது… ? ஈரோடு, கோவை, திருப்பூர் பகுதுகளில் எனக்கு தெரிந்து பல மாணவர்கள் குடும்ப வருமானத்திற்காக சாயப் பட்டறையிலோ, பனியன் கம்பெனியிலோ வேலை செய்யும் அவலம் நிலவுகிறது…
        அறுபது ஆண்டுகளுக்கு பிறகும் ஒரு ஏழை மாணவன் அரசு கொடுக்கும் உதவி தொகை கொண்டு கல்லூரி கல்வி வரை படிக்க முடியாத நிலைமையை என்ன சொல்வது…

        அரசு மருத்துவ மனைகள் பல லட்சம் மக்களுக்கு சிகிச்சை அழித்துக் கொண்டு இருப்பது உண்மைதான்.. கடந்த பத்து வருடங்களில் உங்களுக்கு தெரிந்து எந்த்தனை அரசு மருத்துவமனைகள் கட்டப்பட்டு உள்ளன… 30 வருடங்களுக்கு முன்பு இருந்த அதே அளவு மருத்துவமனைகள் மக்கள் தொகை இரட்டிப்பு ஆன பிறகும் மக்களுக்கு சேவை ஆற்ற இயலுமா? இதனை தவிர மருத்துவ துறையில் வரும் நவீன உபகரணங்கள் எவ்வளவு அரசு மருத்துவ மனையில் உள்ளன…

        எழைகள் பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் புதிய மருந்துகளை பரிசோதிக்கும் சோதனைகளில் பயன்படுத்துவது பல நேரங்களில் வெளிப்பட்டு இருக்கிறது. அது நிச்சயமாக “conspiracy theory ” அல்ல . வெளிநாடுகளில் இம்மாதிரியான சோதனைகள் செய்வதற்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன.. சோதனையில் பங்கு பெரும் நபரை காப்பதற்கு என்றே பல்வேறு காப்பீடுகள் உள்ளன ஆனால் இந்தியாவில் இந்த சட்டங்கள் எல்லாம் கிடையாது… இந்த மாதிரியான சோதனைகள் படிப்பு அறிவு இல்லாத ஏழை கிராம மக்களிடம் நடத்தப் படுகின்றன… இதனை பற்றிய அதிக தகவல்கள் என்னிடம் இல்லை ஆனால் நான் சில மாதங்கள் முன்பு ஆஸ்த்ரேலிய தொலைக்காட்சியில் வழங்கிய ஒரு நிகழ்ச்சியில் இந்தியாவில் மருந்து சோதனைகள் எப்படி நடக்கின்றன என்பதை பட்டி ஒரு ஆய்வை நடத்தி இருந்தனர்… அதில் வட இந்தியாவில், கேரளாவில் புற்று நோய்க்கான மருந்து சோதனைக்கு உட்பட்டவர்களை பேட்டி கண்டத்தில் அவர்கள் சொன்னது… சோதனையை பற்றி எல்லாம் எதுவும் தெரியாது, இப்பொழுது கொடுக்கும் மருந்தை விட , நல்ல மருந்தை இலவசமாக கொடுப்பதாக மருத்துவர் சொன்னார், பிறகு ஒரு காகிதத்தில் கையொப்பம் இட்டோம்.
        நோயின் சிகிச்சைக்கு எப்படி பணம் புரட்டுவது என்று கையை பிசைத்து கொண்டு இருக்கும் ஏழை எளிய மக்கள் இலவசமாய் வரும் மருந்தினை மறுக்காமல் ஏற்றுக் கொள்கின்றனர்… சில சமயங்களில் இவர்களுக்கு ஒரு சில ஆயிரம் தொகையும் கொடுக்கப்படுவது உண்டு… அந்த நிகழ்ச்சியின் நிருபர் இந்திய மருத்துவ துறையின் உயர் அதிகாரியை சந்தித்து அவரிடம் இவ்வாறு எழைகள் ஏமாற்றப் படுவதை எடுத்துக் கூறியதில், அவர் இப்பொழுது இந்தியாவில் மருந்து சோதனைகளை நடத்துவதற்கு தெளிவான சட்டங்கள், கட்டுப்பாடுகள் இல்லை என ஒப்புக்கொண்டார்…

        http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article4568717.ece
        http://www.wired.com/medtech/drugs/news/2005/12/69595

        நம் நாட்டில் அரசியல் வாதிகளை திட்டத்தான் முடியும், அதற்க்கு மேல் ஒன்றும் செய்ய இயலாது.. எல்லா அரசியல்வாதிகளும் ஊழல் செய்கிறார்கள் என உங்களுக்கும் எனக்கும் தெரியும் இருந்தும் எத்தனை பேர் சிறையில் உள்ளனர்.. நீங்கள் ஒரு மாதம் உங்கள் வீட்டின் மின்சார வரியை கட்டாமல் இருங்கள் அடுத்த மாதம் உங்களின் மின்சாரம் துண்டிக்கப் படும்.. ஒரு அரசியல் வாதி தான் கொடுத்த வாக்குரிதியான பாலத்தை கட்டாமல் விட்டால் அல்லது அதில் ஊழல் செய்தால் அவன் அந்த பணத்தை கொண்டு அடுத்த தேர்தலில் மக்களை வாங்கி மந்திரி ஆவான்.. திருமங்கலம் இடை தேர்தலை பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன்…

      • Thanks for the detailed rpely bagath.

        sss. this is paranoia. i completely disagree with you. we are not living in an authoritarian state. there is no reason to scare ourselves to death. the countless public meetings i see are proof enough that anyone in india can be questioned by anybody without fearing for their life.

      • 60, 60 என்று வர வேண்டும் என்று நினைத்து ஏதேதோ எழுதி விட்டீர்கள்.//

        வித்தகன் கிண்டல் வேண்டாம், தோழர் பகத் எழுதிய ஒவ்வொரு வார்த்தையும்
        நெஞ்சில் குத்தும் உண்மைகள் இந்திய அரசு உங்களுக்கு வேண்டுமானால்
        சுதந்திரத்தை வாரி வழங்கியிருக்கலாம் 😆 பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு உங்கள் இந்தியா வாரி கொடுத்தது
        வறுமையையும் , அடக்குமுறையும்தான்

        //இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம்.//

        இங்கு மட்டும் என்ன வாழுதாம் அடிப்படை உரிமைகளுக்காக போராடிய எங்கள்
        தோழர்கள் எத்தனை பேர் சிறைவாசம், வழக்குகள் என உங்கள் பாசத்துக்குறிய இந்திய அரசினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியுமா
        இதையும் நீங்கள் பொய் என்று மறுக்கலாம் ஆனால் அவை ஆதாரமற்றவை உங்கள் இயல்பிலிருந்து வருபவை,
        பொதுவாக தாங்கள் இந்திய அரசின் அடக்கு முறையினால் ஏற்படும் பாதிப்பை அதிகம் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன்,

        நாங்கள் சொல்வது உண்மை என்று புரிய வேண்டுமானால் நீங்கள்
        மக்களிடம் வாழ வேண்டும் மக்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்

      • விடுதலை. உங்கள் அறிவுரை எனக்குத் தேவையில்லை. ஆதார பூர்வமாக எழுதுங்கள். விவாதிப்போம். மக்களிடம் வாழு கற்றுக்கொள் என்றெல்லாம் கருத்துச் சொல்லாமல், நீங்கள் அப்படி என்ன கற்றுக் கொண்டுவிட்டீர்கள் என்று சொல்லுங்கள் “உனக்கென்ன தெரியும்” தொனியில் பேசுவதாக இருந்தால் அதற்கு எனக்கு நேரமில்லை.

      • //விடுதலை. உங்கள் அறிவுரை எனக்குத் தேவையில்லை. //

        யாருக்கும் அறிவுரை நான் சொல்லுவதில்லை,(அதற்கு எனக்கு நேரமில்லை)
        //ஆதார பூர்வமாக எழுதுங்கள். விவாதிப்போம்.//
        சுதந்திரம்(?) கிடைத்து இத்தனை ஆண்டுகளில் என்ன சாதித்தது?
        பிரதமரை திட்டலாம் வீட்ல போய் தூங்கலாம் என்பதுதான் ஜனநாயகமா?
        நான் அரசுபள்ளியில் படித்தேன் இப்போது நல்ல நிலமையில் இருக்கிறேன்
        என்பதெல்லாம் திறமையிருந்தா டெவலப் ஆகலாம் என்ற அர்த்தம்தான் வருகிறது, எத்தனை அரசு துவக்க பள்ளிகள் தரமானவையாக இருக்கின்றன?
        100பேர் படித்தால் அதில் எத்தனை பேர் தேருகிறார்கள், வசதி வாய்ப்பற்றவர்களுக்கு படிப்பே எட்டாக்கனியாக தான இருக்கிறது, ஒரு அரசின் கடமைகளில் தன் மக்களை காப்பதும் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் (கல்வி,உணவு, தங்குமிடம், நீர் , கழிவறை இன்னும்…) ஏற்படுத்தி தருவதும் அல்லது அதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதும்தான்,இங்கு பெரும்பான்மையான மக்களுக்கு இந்த வசதிகள் இருக்கிறதா? நாடெங்கும் தனியார் கல்வி கொள்ளையால் நடுத்தர வர்க்கம் உட்பட பாதித்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தால் மளிகை பொருட்கள் விலை தாறுமாறாக ஏறிக்கொண்டிருக்கும் வேளையில் நாட்டை அன்னியனுக்கு தாரை வார்த்து கொண்டிருக்கும் இந்ததுரோக “அரசுக்கு” சுதந்திரதினம் அதுக்கு ஒரு வாழ்த்து இதெல்லாம் ஒரு கேடா? ஆனால் இந்த நிலைமகள் எல்லாம் தெரிந்தும் அறிவுஜீவி:?: என்று கூறிக்கொள்ளும் சோத்துக்கு பிரச்சனை இல்லாத பேர்வழிகள் இவற்றையெல்லாம் மறைத்து தங்களது பொய்களால் கிழிந்து கந்தலாகி கொண்டிருக்கும் இந்திய ஜனநாயகத்துக்கு பட்டாடை அணிவிக்கின்றனர்,
        ஆதாரம் கேட்கிறீர்கள் நான் பார்த்ததையும்,உணர்வதையும்தான் கூற முடியும்
        பத்திரிக்கையில் வந்திருக்கிறது, இந்த லிங்க்கை பாருங்கள் என்றெல்லாம்
        உங்களுக்கு தனி ஆதாரம் என்னிடமில்லை,

        நீங்கள் பிரதமரை திட்டலாம் ஆனால் தவறு செய்த லோக்கல் ஆளுங்கட்சி மாவட்ட செயலரையோ, மாவட்ட போலீஸ் அதிகாரியையோ மேடையில் தனி இந்திய பிரஜையாக திட்டிவிட்டு மேடையை விட்டு இறங்க முடியுமா?

        //“உனக்கென்ன தெரியும்” தொனியில் பேசுவதாக இருந்தால்// நான் அப்படி பேசவில்லை,

        கண்டிப்பாக இப்படி பேசுபவன் முட்டாளாகதான் இருப்பான், அவன் பிய்ந்த செருப்பக்கு ஈடாகாதவன்,
        \\மக்களிடம் வாழு கற்றுக்கொள் என்றெல்லாம் கருத்துச் சொல்லாமல், நீங்கள் அப்படி என்ன கற்றுக் கொண்டுவிட்டீர்கள் என்று சொல்லுங்கள் //
        உங்களிடம் இதை சொன்னதற்கு வருந்துகிறேன், மற்றபடி நான் மக்கள் சர்வாதிகார மன்றமே, புரட்சியே தீர்வு என்பதனை படிப்படியாக உணர்ந்து கற்றுக்கொண்டேன் (எப்படி என்பதை விலாவரியக இங்கு எழுத வாய்ப்பில்லை )

        நாட்டின் மக்கள் அன்னியனாலும், இந்த அரசாங்கத்தாலும் சுரண்டபடுகின்றனர்
        ரவுடிகள் கல்வி அதிபர்களாகவும் ஆட்சியாளர்களாகவும் உட்கார்ந்து கொண்டு மக்களை சுரண்டுவதோடில்லாமல் மறுகாலனியாதிக்கத்தால் அடிமையாக மாற்றி கொண்டிருக்கின்றனர், இப்படிபட்ட இந்த ஜனநாயக:!:நாட்டின் சுதந்தி தினத்துக்கு வாழ்த்து சொல்பவர்கள் ஒன்று ஏதும் தெரியாத அப்பாவியாக இருக்க வேண்டும் அல்ல்து ஆளும்வர்க்கத்தால் சில சலுகைகளை பெற்று செட்டிலான ‘பிழைப்புவாதிகளாக’ இருக்கவேண்டும் .
        போலி சுதந்திரத்தை கொண்டாடுபவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்,

    • //நான் அரசுபள்ளியில் படித்தேன் இப்போது நல்ல நிலமையில் இருக்கிறேன்
      என்பதெல்லாம் திறமையிருந்தா டெவலப் ஆகலாம் என்ற அர்த்தம்தான் வருகிறது, //

      இல்லை. என் பரம்பரை சொத்தையோ பெரிய மனிதர்கள் தொடர்பையோ வைத்து வரவில்லை. வாய்ப்புகள் இந்த நாடு வழங்கியிருக்கிறது என்று சொல்லுகிறேன்.

      உங்களுக்குத் தெரிய வேண்டுமானால் ஒரு தகவல்: என் தந்தையாரின் மாத வருமானம் 1983 வரை 200 ரூ. பின் 1989 வரை 1200 ரூ. இப்படி நடுத்தர வர்க்கத்திற்கு கீழிருந்தபோதும் அரசாங்கக் கல்வியால் பயன் பெற்றேன் என்கிறேன். இதனால், என் நிலையில் தொடங்கியவர்களுக்கு இந்த அமைப்பு கைகொடுத்தது என்பதை உணர்ந்து சொல்கிறேன்.

      இத்தனைக்கும் இட ஒதுக்கீடு கிடைக்கும் வகுப்பில் நான் பிறக்கவில்லை. 95% எடுத்தும் எனக்கு வேண்டிய கல்லூரியில் இடம் கிடைக்க வில்லை. ஆனால் என்னை விட குறைந்த மதிப்பெண் எடுத்த என் நண்பர்களுக்கு வாய்ப்புகள் அமைந்ததைப் பார்த்திருக்கிறேன். இதற்காக அவர்களைக் குறைவாக மதிப்பிட்டோ அரசைக் குறை சொல்லியோ நான் திரியவில்லை. இட ஒதுக்கீடின் அவசியம் எனக்குப் புரிகிறது. சிறு வயதிலும் புரிந்தது. அதைக் கொடுக்கும் இந்த அரசின் மேல் எனக்கு இன்றைக்கும் மதிப்பிருக்கிறது. மேல் நாட்டுப் படிப்பு முடித்துத் திரும்பிய பிறகும் எனக்கு இந்தியாவின் மேல் நன்றியே இருக்கிறது.

      உங்களுக்கு வாய்ப்பும் நேரமும் அமையும் போது உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டால் அதிலிருந்து கற்றுக்கொள்ள எனக்கு உதவியாக இருக்கும். அதுவரை உங்கள் இந்திய எதிர்ப்பிலிருந்து நான் கடுமையாக மாறுபடுவதை மட்டும் சொல்லி நிறுத்தி விடுகிறேன்.

  9. Excellent work by Mr.shanmugam.

    Very deep thoughts with clinical precision lines. What a poem ? it shares our feeling .. crisply . there is no place for the children to play in the city is very sorrowful thing .by the way pls do not air the comments from those people who are using bad languages and i think they are against all good deeds. i think they do not have any generations to come after them or they are im potent ! if they really care for the society how could they write such words … did he know that in north korea,china and in cuba that there is no freedom of speech ? even though they are closed countries they have nowadays aloowing alternate view points. they do not have caste, they do not distribute money in elections.. they are far better than us i freedom of speech and in many things.

  10. //ஒன்பது மாதம் இருட்டுச்சிறையில்
    நாளை வெளியுலகம்
    பார்க்க ஆவலாயிருந்ததாம்
    கரு
    மருத்துவச்சியாய் ஆட்லெறி
    குண்டுகள் மாற
    தாயும் சிசுவும் பரந்த வெளியில்
    சிதிலங்களாய்
    பிணதிண்ணியாய்
    இந்திய மேலாதிக்கம்…..
    ஆகத்து 15// ரணமான வரிகள். பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் இதனை உணரவேண்டும்.

  11. முன்னமொரு முறை வெளியான துரை.சண்முகம் கவிதையை விட இந்த கவிதை ரசிக்க வல்லதாக உள்ளது. ஜோடுக்கப்பட்ட மரம் போல் கவிதையின் முடிவும் ஜோடிக்கப் பட்டது போல தெரிகிறது.

  12. அதியமானுக்கு ஒரு பதவுரை:

    (கீழே உள்ளது அமர்தியா சென் சொன்னதுங்கோ…)

    http://www.righttofoodindia.org/data/amartya.pdf

    but there is also a gigantic prevalence
    of endemic hunger across much of India. Indeed, India does much worse in this respect
    than even Sub-Saharan Africa. Estimates of general undernourishment – what is
    sometimes called “protein-energy malnutrition” – are nearly twice as high in India as in sub-Saharan Africa. It is astonishing that despite the intermittent occurrence of famine in
    Africa, it too manages to ensure a much higher level of regular nourishment than does
    India. About half of all Indian children are, it appears, chronically undernourished, and
    more than half of all adult women suffer from anaemia. In maternal undernourishment as
    well as the incidence of underweight babies, and also in the frequency of cardiovascular
    diseases in later life (to which adults are particularly prone if nutritionally deprived in the
    womb), India’s record is among the very worst in the world.

  13. paayaayasam,

    sure, all that is true enough. so what solution do you propose ? something workable and practical. so don’t prescribe red revolution which is neither possible nor desirable. ok.

    and suppose if we had not liberalised this much since 1991, then things would be much much worser than now. ok.

    and pls try this too :

    விவசாயகள் தற்கொலைக்கு பல காரணிகள்
    http://nellikkani.blogspot.com/2008/05/blog-post_21.html

    • //sure, all that is true enough. so what solution do you propose ? something workable and practical. so don’t prescribe red revolution which is neither possible nor desirable. ok.//

      சுயூருன்னு ஆதாரம் கொடுத்த புறவு சொல்றது. பிறகு கொஞ்ச நாள் புறவு பொய்யின்னு சொல்றது..

      முதலாளிகளுக்கான சலுகைகளை குறைத்து மதிப்பிட்டு அதற்கு பிரதியாக அவ்ர்கள் ஏதோ மிக பெரிதாக திருப்பி தருவது போல அதியமான் தெரிவித்தார். அதனை மறுத்து சாய்நாத் வந்துள்ளார்….

      வறுமையை பற்றி சில கருத்துக்களை அதியமான் மறுத்தார். அதனை மறுத்து அமர்தியா சென் வந்துள்ளார். அம்புட்டுதேன்….

      இதச் சொன்னா அதியமான் திரும்பவும் நெல்லிக்கனி மரத்தில் ஏறிக் கொள்கிறார். அதெல்லாம் புறவு பாப்போம்…

  14. Amartya Sen SUPPORTS all this liberalisation, etc. get that first. and there is no disagreement in his views about human development index, etc. more money and effort should be spent on eradicating hunger and poverty and more into agri. no arguments. but for all that the govt needs money first which is only thru high tax revenues which can grow only if industry and business are allowed to grow without stupid shackles. and wasteful govt expenditure on defence, admin, etc should be reduced drastically first.

    and most importantly, while trillions are spent on all these, the main issue is good govenance and delivery which is leak proof. most of the funds are stolen on the way by the govt staff and politicians as we all know. and govt school teachers and medical staff in rural areas : what about their work ethics and accountability ? they are paid well (by normal standards) yet their performance ? why do you think most people prefer costly private schools and hospitals ?

    any idea about the theft and corruption in fertiliser subsidy, agri depts, power sector, farm loan waiver schemes, etc ? you cannot blame the effects of all these evils on the principles of capitalism.
    the same capitalistic principles lifted Japan, S.Korea, etc out of wretched poverty in a few decades.
    same with US and Europe. they were as bad as current Indian status until the 19the century. ok

    • தமிழுக்காகதான் வேர்ட்பிரஸ்ல தமிழ்பிளாக் இருக்கு
      இங்க எதுக்கு ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள்? உங்கள் ஆங்கில அறிவை வெள்ளகாரனோட நிறுத்துங்க, தமிழ்ல எழுது இல்லைனா வெளிய போகவும்.’
      ஆங்கிலத்துல எழுதி ரொம்பதான் சீன் காட்றானுங்க’

      • தல, தமிழ்ல எழுத சொல்லுங்க ஆனா வெளிய போக சொல்லாதிங்க அப்புறம் மாற்றுக்கருத்து சொல்ல யாருமே இல்லாம நாம மட்டுமே பேச வேண்டியிருக்கும்…

        அதியமான் உங்க தமிழ் டைப்பிங் மெதுவா இருந்தாலும் பரவாயில்ல ஆனா கொஞ்சம் தமிழ்ல பின்னூட்டம் போடுங்க அப்பத்தானே எல்லோரும் விவாதத்துல கலந்துக்கவும் முடியும் உங்க வேகமும் அதிகமாகும்…

      • //வறுமையை பற்றி சில கருத்துக்களை அதியமான் மறுத்தார். அதனை மறுத்து அமர்தியா சென் வந்துள்ளார். அம்புட்டுதேன்….
        ///

        இல்லை, மறுக்கவில்லை. வறுமையில் அளவை பற்றி இன்னும் சரியான தகவல்கள் இல்லை.
        அதாவது 1970களில் இருந்த விகுதம் இன்றைய விகுத்தை விட அதிகமா / குறைவா ?
        இக்கேள்விக்கு இன்னும் ஆதாரம் இல்லை. ஒரு நாளைகு 20 ரூ வில் 80 கோடி மக்கள்
        வாழ்கிறார்கள் என்று ஒரு தகவல். அதாவது சுமார் 75 சத இந்தியர்கள் வறுமைக்கோட்டிற்க்கு
        மிக மிக கீழாக இருக்கிறர்களா ? அப்ப 1970இல் எத்தனை சதம் இப்படி இருந்தனர் ? முன்பை விட‌
        இப்போது வறுமை மிக மிக மிக அதிகமாகிவிட்டதா என்ன ?

        ஆனால் அம்ர்திய சென் குறிப்பிடுவதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அமர்தியா சென்
        கம்யூனிசத்தை / சோசியலிசத்தை தீர்வாக வழிமொழியவில்லை. முக்கியமாக எவ்வித‌
        சர்வாதிகாரத்தையும் எதிர்க்கிறார். (முக்கியமாக தொழிலாளார் வர்க சர்வாதிகாரத்தையும் தான்).
        ஜனனாயகம் வலுப்படுத்தப்பட வேண்டும். மானியங்கள் சரியான மக்களிடம் சென்றடைய வேண்டும்.
        அரசின் செலவுகள் சரியா இருக்கவேண்டும். வெட்டிச்சொலவுகளை நிறுத்த வேண்டும். இதை தான்
        தீர்வாக சொல்கிறார். அதை தான் சொன்னேன். அமர்தியா சென்னின் வரிகளை ஆதாரம் காட்டும் நீங்கள்
        அவரின் தீர்வுகளையும் சொல்லியிருந்தால், அதுதான் நேர்மை. ஓ.கே.

  15. //human development index, etc. //

    அய்யா அதியமான், அமர்தியாசென் கூமேன் டெவலோப் மெண்டு இண்டேக்ஸாப் பத்தி பேசிராருன்னு உங்களுக்கு வசதியா சுருக்கக் கூடாது…. சரியா….

    அதையும் தாண்டி வறுமை, பஞ்சம், பசிப் பினி, குழந்தைகள் ஆரோக்கியம், உணவுப் பற்றாக்குறை உள்ளிட்ட விசயங்களை அவர் மையப்படுத்தி பேசுகிறார்.

    //. more money and effort should be spent on eradicating hunger and poverty and more into agri. no arguments. //

    எவ்ளோ மணியக் கொட்டினாலும் பெல் அடிக்காது. ஏன்னா பிரச்சினை வேற. இத்த புரிஞ்சிக்கனும்னா சமீபத்துல பஞ்சம் பட்டினி பத்தி நிவீஸ் வருதில்லயா? அத்த கொஞ்சம் டீப்பா ஆராய்ச்சி பன்னனும்.

    //any idea about the theft and corruption in fertiliser subsidy, agri depts, power sector, farm loan waiver schemes,//

    ஓ… நல்லாத் தெரியுமே.. உரக் கம்பேனி, பூச்சி மருந்து கம்பேனி உள்ளிட்டவங்கள்ளாம் ஆட்டைய போடுற கத நல்லாவே தெரியும்.

    //he same capitalistic principles lifted Japan, S.Korea, etc out of wretched poverty in a few decades.
    same with US and Europe.//

    ஏன் சப்பான், அமெரிக்கா, ஈரோப்பா எல்லாத்தையும் சேம், சேம் பப்பி சேம்னு கேவலப்படுத்துறீங்க….. அவையெல்லாம் முன்னேறி இன்று முதலாளித்து நாடாக இருப்பது என்னவோ வாஸ்தவம்தான். ஆனால் அந்த நாடுகள் எல்லாமே மூடிய பொருளாதாரத்தின் மூலமே முன்னேறி… திறந்து போட்டு (லிபெரேல்) அலைந்ததன் மூலம் முன்னேறவில்லை. இதை அதியமான் மறுக்கும் தைரியமிருந்தால் மறுத்துப் பார்க்கட்டும்.

  16. ////ஏன் சப்பான், அமெரிக்கா, ஈரோப்பா எல்லாத்தையும் சேம், சேம் பப்பி சேம்னு கேவலப்படுத்துறீங்க….. அவையெல்லாம் முன்னேறி இன்று முதலாளித்து நாடாக இருப்பது என்னவோ வாஸ்தவம்தான். ஆனால் அந்த நாடுகள் எல்லாமே மூடிய பொருளாதாரத்தின் மூலமே முன்னேறி… திறந்து போட்டு (லிபெரேல்) அலைந்ததன் மூலம் முன்னேறவில்லை. இதை அதியமான் மறுக்கும் தைரியமிருந்தால் மறுத்துப் பார்க்கட்டும்///

    இதுதான் உமது பதிலா ? :))))
    மூடிய பொருளாதாரமா ? மிக தவறு. இந்தியா போன்ற நாடுகள் தாம் 1991 வரை மூடிய பொருளாதாரமாக இருந்தது.
    உமக்கு விசிய ஞானம் இல்லை என்றுதான் முடிவு செய்கிறேன். பிறகு சந்திப்போம். நன்றி.

  17. //ஏன் சப்பான், அமெரிக்கா, ஈரோப்பா எல்லாத்தையும் சேம், சேம் பப்பி சேம்னு கேவலப்படுத்துறீங்க….. அவையெல்லாம் முன்னேறி இன்று முதலாளித்து நாடாக இருப்பது என்னவோ வாஸ்தவம்தான். ஆனால் அந்த நாடுகள் எல்லாமே மூடிய பொருளாதாரத்தின் மூலமே முன்னேறி… திறந்து போட்டு (லிபெரேல்) அலைந்ததன் மூலம் முன்னேறவில்லை. இதை அதியமான் மறுக்கும் தைரியமிருந்தால் மறுத்துப் பார்க்கட்டும்/// நூற்றுக்கு நூறு உண்மை. ஏன் இப்போதே அமெரிக்காவிற்கு இந்தியாவில் இருந்து சில பொருட்களை ஏற்றுமதி செய்யக் கட்டுப்பாடுகள் உள்ளன. மேலும் அதியமானின் குணமே இப்படிதான், நெல்லிக்கனியின் மீது ஏறி கொள்வார். ஸ்டாலின் மீதான அவதூறுகள் என்பார். அவருடைய அவதூறு ஸ்கிரிப் ரைட்டர்களின் யோக்கியதை பற்றி நாம் விளக்கினால், ‘அவர்கள் அப்படி கிடையாது, சுத்த தங்கம்’ என்பதோடு முடித்துக் கொள்வார். 1991 டாலர் என்பார் – உதாரணம் சிலி, ஜப்பான் என்பார். சிலியின் சோகத்திற்கும் அமெரிக்க செழிப்பிற்குமுள்ள உறவினை நாம் விளக்கினால், சிலி இடதுசாரிகள்தான் அதற்கு காரணம் என்பார். பிறகு வேறொரு பதிவில் போய் இதே ஸ்டாலின், 1991 டாலர், சிலி என்று பினாத்துவார். அங்கேயும் (வெட்கங்கெட்டுப் போய்) நாம் விளக்கினால், புரச்சி நடத்தி என்னத்தை கிழிப்பீர்கள் என்பதோடு முடித்துக் கொள்வார்.

    ஆனால் என்னவோ தெரியவில்லை. இவருடைய பின்னூட்டங்களை வாசித்தால், குருமூர்த்தி இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதும் எகனாமிக் தொடரின் தமிழ் மொழிபெயர்பு மாதிரி உள்ளது. இதை பற்றி பின்பு விரிவாக 6 வித்தியாசங்களாவது கண்டுபிடிக்க வேண்டும்.

  18. “அறிவு”டைய நம்பி,

    ஒப்பன எகனாமி என்றால் என்னவென்றே அறியாமல் இங்கு உளரல்கள்.
    சில பண்டங்கள் / பொருட்களை இறுக்குமதி செய்ய தடை அல்லது அதிக சுங்கவர் விதித்தல் எல்லா நாடுகளலாலும், இன்றும் செய்யப்படுகிறதுதான். அது புரொடக்ஸனிஸம் என்ற பிரிவில் வருகிறது.
    ஜப்பான் மற்றும் அமெரிக்க வர்த்தகத்தில் முன்பு இது அதிகமாக இருந்தது. அதாவது 80களில்.

    ஆனால் குளோஸ்ட் எகானாமி என்றால் இன்றைய வட கொரியா அல்லது 30 ஆண்டுகளுக்கு முன் இருந்த இந்தியாவை சொல்லலாம். அன்னிய முதலீடுகள் முற்றாக அல்லது பெரிய அளவில் தடை. ஏற்றுமதி / இறக்குமதியை மிக மிக குறைத்து, இம்போர்ட் ஸ்ப்ஸிட்டியுசன் எகானாமி என்ற விசியம். (இது கடுமையான எதிர்விளைவுகளை உண்டு பண்ணியது என்று இன்று உணாரப்பட்டது). முக்கியமாக பன்னாட்டு நிறுவனங்கள்
    குளோஸ்ட் எக்கானிமகளில் நுழைய முற்றாக தடை இருக்கும். ஆனால் ஜப்பான், அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகள் ஒப்பென் எக்கானமியாகத்தான் இயக்கின. இன்றும்தான். பன்னாட்டு மூலதனம் தங்குதடை இன்றி நுழையலாம் / வெளியேறலாம். கேபிடல் அக்கவண்ட் கட்டுபாடுகள் (இந்தியா போல) கிடையாது. அவர்களின் கரன்சிக்கள் முழு கண்வர்டபலிட்டியில் இருக்கின்றன. இந்தியாவில் 1990களில் கரண்ட் அக்கவண் கன்வெர்டிபிலிட்டி மட்டும் அனுமதிக்கப்பட்டது. இன்றும் காபிடல் அக்கவுன்டில் அனுமதி இல்லை. மேலும் உள்நாட்டு தொழில்துறைகளுக்கு கடும் கட்டுப்பாடு, வரி விதிப்பு, அரசு துறைகளுக்கு முக்கியத்தம் போன்ற பல பல இதர அம்சங்களும் குளோஸ்ட் எகானாமியில் உண்டு.

    ///திறந்து போட்டு (லிபெரேல்) அலைந்ததன் மூலம் முன்னேறவில்லை////

    என்ன ஒரு முத்து ? நிருபியிங்களேன். மேலும் அது உண்மை என்றால் அதையே செய்து, இந்தியாவும்
    முன்னேற ஏன் முயலவில்லை.

    //1991 டாலர், சிலி என்று பினாத்துவார். அங்கேயும் (வெட்கங்கெட்டுப் போய்) நாம் விளக்கினால், புரச்சி நடத்தி என்னத்தை கிழிப்பீர்கள் என்பதோடு முடித்துக் கொள்வார்.///

    உமக்குதான் வெட்கம், நேர்மை சிறிதும் இல்லை. சிலி பற்றியும், 1991 சிக்கல் பற்றியும் நான் பல விசியங்கள் ஆதாரத்துடன் எழுதியதை இதுவரை மறுக்க துப்பில்லாமல், ஓடிவிட்டு இப்ப வந்த இப்படி..
    முதலில் ஒழுங்கா பேச கற்றுக்கொள்ளுங்கள். என்னமோ புரட்சிக்காக களப்பணி செய்பவர் போல ஒரு பில்டப் !! பொட்டி தட்டுகிறவர்கள் பேசுகிறார்கள். :)))

    ///ஆனால் என்னவோ தெரியவில்லை. இவருடைய பின்னூட்டங்களை வாசித்தால், குருமூர்த்தி இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதும் எகனாமிக் தொடரின் தமிழ் மொழிபெயர்பு மாதிரி உள்ளது. இதை பற்றி பின்பு விரிவாக 6 வித்தியாசங்களாவது கண்டுபிடிக்க வேண்டும்.//

    6 வித்யாசங்களை எழுதுங்களேன். உருப்படியாக ஆதாரத்துடன், தர்க்கத்துடன் எழுத துப்பிலாதவர் கூற்று இது.

  19. “அறிவு”டைய நம்பி,

    1980களில் மத்தியில் இந்தியாவில் முதன்முதலில் கமயூட்டர்கள் பரவலாக உபயோப்படுத்த ஆரம்பித்தார்கள்.
    அரசு துரைகளில் மற்றும் பல இதர துறைகளில் கம்யூட்டர்களை பயன்படுத்துவதை கடுமையாக எதிர்த்தனர்
    தோழர்கள். கம்யூனிஸ் கட்சிகள், அனைத்து யூனியன்கள் மற்றும் ம.க.இ.க தோழர்கள், மாவோயிஸ்டுகள்,
    இடதுசாரிகள் என்று அனைத்துதரப்பு “இடதுசாரிகள்” கம்யூட்டர்களை கடுமையாக எதிர்த்தனர். அவற்றின் மூலம் வேலை இழப்பு ஏற்படும் என்ற வீண் பயம். எடுத்து சொல்லியும் கேட்க்கவில்லை. அமெரிக்க சதி,
    பன்னாட்டு நிறுவங்களில் ஏகாதிபத்திய சதி என்று பூச்சாண்டி விட்டனர். (அய்.பி.எம், இன்டெல்).
    தோழர்களில் ஞானத்திற்க்கு இது ஒரு ஸாம்பிள் !!

    இன்று திரும்பிப்பார்த்தால் தமாஸாக உள்ளது. கம்ப்யூட்டர் இல்லாமல் அரசு வங்கிகள் மற்றும் இதர துறைகளில் பணிகள் மிக மிக சிக்கலாக இருக்கும். முக்கியமாக இந்த வினவு தளமும், இந்த விவாதமும் சாத்தியமாகியிருக்காது. அதைவிட முக்கியமாக உமக்கு, இந்த வேலை கிடைத்திருக்காது. உமக்கு வேலை வாய்ப்பை அளித்த மகானுபாவர்களை சொல்லமும்.

    1980இல் வெளியான கமல் படமான “வறுமையில் நிறம் சிகப்பு” பார்க்கவும் முதலில். அன்று வேலை இல்லா திண்டாட்டம் எந்த அளவில் இருந்தது. வேலை வாய்ப்பு என்றாலே அரசு வேலை தான். தனியார் வேலை வாய்ப்புகள் மிக குறைவு. (காரணம் லைவென்ஸ் ராஜ்ஜியம், சோசியலிசம் மூலம் அவை முடக்க்கப்ப்டுகிடந்தன.) இத்தனைக்கும் அன்று ஜனத்தொகை இன்றில் பாதி அளவுதான். அவசியம் அந்த படத்தை பார்க்கவும். என்னிடம் ஒரிஜினல் சிடி உள்ளது. தேவையானால தருகிறேன்.

    • அதியமான் முதலில் ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள் விவாதத்தில்
      எதிரி தரப்பில் மரியாதையாக பேசினாலும் நீங்கள் அநாகரீகமாக பேசி விவாதத்தை ஒரு வழி பண்ணிவிடுகிறீர்கள்,

      நீங்கள் தூக்கிவைத்து ஆடும் முதலாளித்துவமே திவால் ஆகி திணறி கொண்டிருக்கிறது அதைபத்தி பேச முடியவில்லை ஆனால் அந்த தியரி
      இந்த தியரி வெங்காய தியரி என்று எதையாவது உளறுவது உங்களுக்கு எதிராக
      விவாதம் பண்ணுபவர்களை விசய ஞானம் இல்லை என்று உளறுவது ஒரு கட்டத்தில் கெட்டவார்த்தையில் திட்டுவது வெற்று சவடால் விடுவது இதையெல்லாம் தவிர்த்து விவாதம் செய்ய அதியமான் முன்வரவேண்டும்
      மற்ற தோழர்கள் அதியமானுக்கு பதில் தர முன்வர வேண்டும் அவர் இத்து போன காபிடலிசத்த வச்கிட்டு ஆட்டு ஆட்றாரே நாமும் அதியமானின்
      காபிடலிசத்த வெளிச்சத்துக்கு கொண்டு வரனும்

      பி்.கு: இதற்கு ஆகாவளித்தனமாக பின்னூட்டமிட்டால் அப்பறம் நானும
      ரம்ப மரியாதையா 😆 பேச ஆரம்பிச்சிடுவேன்,

      • //அந்த படத்தை பார்க்கவும். என்னிடம் ஒரிஜினல் சிடி உள்ளது//

        ஒரு காலகட்டத்தை சினிமா மூலம்தான் தெரிந்து கொள்ள முடியுமா
        அப்படியானால் அடிமைப்பெண் படம் வந்தபோது படத்தில் உள்ளது போலவா
        காலமிருந்தது, “வறுமையில் நிறம் சிகப்பு” படம் வந்தபோது விட இப்போதுதான் நிலமைமோசமாக இருக்கிறது இன்று மட்டுமென்ன நல்லா படித்தவர்களுக்கெல்லாம் வேலை உத்தரவாதம் இருக்கிறதா

        அதிமேன் பேச எதுவுமே கெடக்கலனுட்டு சினிமாவெல்லாம் ஆதாரம் காட்ட ஆரம்பிச்சிட்டிங்களே (என்ன கொடுமை சார் இது) அடுத்ததா உங்க தர்தனம்புடிச்ச காபிடலிசத்துக்கு ஆதாரமா சில படங்கள் நீங்க ரெக்கமண்ட் பண்ணலாம், அண்ணாமலை ,அருணாசலம்,முதல்வன், விக்ரமனின் எல்லா படங்களும்(ஒரிஜினல் சீடி ரம்ப முக்க்க்கியம்).

    • ///////தோழர்கள். கம்யூனிஸ் கட்சிகள், அனைத்து யூனியன்கள் மற்றும் ம.க.இ.க தோழர்கள், மாவோயிஸ்டுகள்,
      இடதுசாரிகள் என்று அனைத்துதரப்பு “இடதுசாரிகள்” கம்யூட்டர்களை கடுமையாக எதிர்த்தனர். அவற்றின் மூலம் வேலை இழப்பு ஏற்படும் என்ற வீண் பயம். எடுத்து சொல்லியும் கேட்க்கவில்லை. அமெரிக்க சதி,
      பன்னாட்டு நிறுவங்களில் ஏகாதிபத்திய சதி என்று பூச்சாண்டி விட்டனர். (அய்.பி.எம், இன்டெல்).
      தோழர்களில் ஞானத்திற்க்கு இது ஒரு ஸாம்பிள் !!////

      செம காமடிய்யா ஒன்னோட
      கம்யூனிஸ்டுகள் கம்ப்யூட்டர்களை எதிர்த்தார்களா ?

      புரட்சி வந்த பிறகும் கூட நீ புரட்சி வராதுன்னு பேசுவ‌
      உன்னையெல்லாம் ஒன்னும் பன்ன முடியாது,
      ஒன்னுமே பன்ன முடியாது.

      ஸ்.. அப்பா.. முடியலட சாமி…

  20. அ,நம்பி,

    குருமூர்த்தி என்ன பெரிய பார்பனிய நிபுணர் !!

    ஸ்வாமினாதன் அங்க்லேஸ்வர் ‘அய்யர்’ என்னும் அறிஞர் தாம் எமக்கு மிக மிக பிடித்த‌
    ஆய்வாளர் மற்றும் பத்திர்கையாளர்.

    முதலாளித்துவதில் “வீழ்ச்சி” பற்றிய அவரின் மிக முக்கிய கட்டுரை இது :

    Financial crisis? No, capitalism as usual

    http://swaminomics.org/articles/20090805.htm

  21. //உமக்குதான் வெட்கம், நேர்மை சிறிதும் இல்லை. சிலி பற்றியும், 1991 சிக்கல் பற்றியும் நான் பல விசியங்கள் ஆதாரத்துடன் எழுதியதை இதுவரை மறுக்க துப்பில்லாமல், ஓடிவிட்டு இப்ப வந்த இப்படி..
    முதலில் ஒழுங்கா பேச கற்றுக்கொள்ளுங்கள். என்னமோ புரட்சிக்காக களப்பணி செய்பவர் போல ஒரு பில்டப் !! பொட்டி தட்டுகிறவர்கள் பேசுகிறார்கள். :)))// யார் ஓடியது ? உங்களுடைய வினாக்களையும், என்னுடைய பதிலையும், என்னுடைய பதிலுக்கு பின்பு நீங்கள் உளறியவைகளையும் இதோ தருகிறேன். வேண்டுமானால் https://www.vinavu.com/2009/07/15/tata/ என்ற லிங்கில் போனாலும் பார்த்துக் கொள்ளலாம்.

    அதியமான் : communist bootham has not raised anywhere except in these websites. 🙂 )

    have you any idea of how Japan conquered poverty after 1945 ? and the miracle of Chile ? why Chile will never go back to the “socialistic” polices of Allende of 1970s, inspite of it being a democracy now and ruled by left govts recently ? and what happened in 1970 when hyper inflation destroyed its economy due to Allende’s polcies ? can you argue about this vital subject with info, instead of one liners about avathooru.

    நான் : ஜப்பான் ஏன் வளர்ந்த்து என்றால், ஜப்பான் மக்களுடைய எலெக்ரானிக் அறிவு – மிகக் குறைந்த கூலியில் பொருட்கள் தயாரிக்க முடியும் என்பதாலும், சீனக் கடலில் சீனத்திற்கு எதிரான ஒரு இராணுவக் கூட்டு வேண்டும் என்பதால்தான், குழந்தை பருவத்தில் இருந்த ஜப்பான் ஏகாதிபத்தியத்தை தனது நண்பனாக த்த்தெடுத்துக் கொண்டது. மேலும் அணுகுண்டு வீசிய பாப விமோசனத்திற்கு என்று பப்ளிசிட்டியும் தேடிக் கொண்டது. அதனால்தான் ஜப்பான் இன்று முன்னணியில் உள்ளது. ஆனால் ஜெர்மனியில் இப்போது உள்ள பொருளாதார மந்தம் அமெரிக்காவிற்கு இணையாக மந்தம். இரண்டாவது உலகப் போரே ஜெர்மனி முதலாளித்துவம் சந்தை பிடிக்கும் ஆசையில் மற்றைய ஏகாதிபத்தியங்களோடு மோதியதால்தான் ஏற்பட்டது.சிலியில் ஏற்பட்ட இடதுசாரி அரசை கவிழ்க்க உங்கள் வெள்ளை மாளிகை முதலாளித்துவம் நடத்திய நர வேட்டையே அலண்டேயின் ஆட்சி கவிழ்ப்பு. இதுதானே நீங்கள் சொல்ல விரும்பிய சிலி miracle ? இன்றும் சிலியின் மககளில் கால்வாசிப்பேர் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். வேலையில்லாத்திண்டாட்டம் அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையின் படியே 10 சதவீதமாக உள்ளது. சிலியில் இப்போதும் இடதுசாரிப் புரட்சிகள் நடந்து கொண்டுதான் உள்ளன. ஆனால் முதலாளித்துவம் நட்டத்திய கோரத்தாண்டவம் தான் உங்கள் சிலி மிராக்கிள். வேண்டுமானால் இந்த இணைப்பில் போய் பாருங்கள். சிலி நாட்டின் படிப்பினிகள் ஆகவே கம்பியூனிசக் கொள்கைகள் சிலியினை அழிக்கவில்லை. மாறாக அமெரிக்க முதலாளித்துவ லாப வெறிதான் அதனை அழித்தது. ஆகவே மீண்டும் மீண்டும் சொல்கிறேன் முதலாளித்துவம் என்றும் எங்கும் அழிவைத்தான் தந்தது, இனியும் தரும்.

    அதியமான் :
    Posted on August 5, 2009 at 10:46 am

    Arivu,

    i am amazed at your answer about Japan. fantastic answer. if only it were so simple. and Chile is much much better today than the 1000 % inflation days of Allende of 1972s. and it is the strongest and most prosperous economy in Latin America. poverty is much down at near 20 % than the 50 % of 60s and 70s ; and it is a much stable and liberal democracy now, than ever before. no one cares to re-implement Allende’s socilaistic polices of 70s which ended in disaster and bankruptcy and terrible price rise (those are NOT due to US conspiracy ; if you belive that then no use arguing with you anymore) ; try visitng Chile now and comparing with the older days. Charu Nivedita (for all his demrits) is a Chile buff and i had a talk with him some years ago about Chile, Cuba and France. Standard of living has grown much higher in Chile now and is almost like France is some ways, he says. well. the facts speak for themselves. and miracle of Chile is very much alive now. but they have a long way to go..

    Superlinks, first try to answer my questions about economy, 1991 crisis, Japanese growth, etc instead of pasting other’s posts. i know you are incapable of anything original or new. hence i do not want waste my time with the likes of you who can only laugh in this silly manner.

    bye. அதியமான் இப்படிதான் சொன்னதையே திரும்பச் சொல்லிவிட்டு அதாவது சிலிதான் சிறந்தது என்றும், சிலியில் அமெரிக்க முதலாளித்துவம் நடத்திய படுகொலைகள் பற்றிய நமது பதிலுக்கு கள்ள மெளனம் சாதித்து விட்டு ஓடிப்போனார்.

    நான் : //Standard of living has grown much higher in Chile now and is almost like France is some ways,// அடாஅடா நீங்கள் தான் மெச்ச வேண்டும். சிலி அரசினுடைய அதிகாரப்பூர்வ அறிக்கையின் படியே கால்வாசிப்பேர் வேலையின்றி உள்ளனர். மேலும், 10% பசிக்கொடுமையில் வாடுகின்றனர். அலண்டேயின் இடது அரசு இயங்குவதற்கு உள்ளேயே அவர் அரசு கவிழ்க்கப்பட்டு இராணுவக் கொடுங்கோல் ஆரம்பித்தது. நீங்கள் சொல்லிய அனைத்து சமூகக் கொடுமைகளும் இராணுவ அரசினால் ஏற்பட்டவை. நீங்கள் உங்கள் நண்பர் டோண்டு, சுயமோகன் முதலான முதலாளித்துவ வாதிகளைதான் நம்புவீர்கள். ஜப்பான் பொருளாதாரம் ஒரு chronical ecomomy. நம்மூர் ரியல் எஸ்டேட் போன்று பொருட்களை வாங்கி பின்பு அதிக விலைக்கு விற்பவர்கள். உங்களுடைய அனைத்து இடுகைகளுக்கும் எகனாமி டைம்ஸ் குருமூர்த்தி கட்டுரைகளுக்கும் அதிக ஒற்றுமை உள்ளது. நீங்கள் உங்கள் முதலாளித்துவதோடு நீடுழி வாழ்க. இனிமேல் உம்மோடு மல்லுகட்டி எங்கள் நேரத்தை விணாக்க விரும்பவில்லை. சூப்பர்லிங்க்ஸ், பகத் உங்கள் அனைவருக்கும் ஒரு தோழமையான வேண்டுகோள் : உங்கள் எந்த ஆதாரப்பூர்வமான தரவுகளையும் அதியமான் அவர்கள் படித்து தன்னை சுய பரிசோதனை செய்வதாகத் தெரியவில்லை. ஆகவே உங்கள் பொன்னான நேரங்களை நீங்கள் வீணாக்க வேண்டாம்.

    அதியமான் : i said it is not perfectt and a paradise but much higher when compared to 70s. understand that first.
    have you any idea what it was in 70s and 60s ? 50 % poverty and 1000 % inflation. you are totally ignorant of all this and moth cliches. see this first : http://en.wikipedia.org/wiki/Economic_history_of_Chile_(1973-1990) and i am not justfying Pinochets atrocites or US actions. but you have no idea of the climate of 70s when there was talk of “revolution” in Latin Americas. now that is very much subddued. WHY ? not because of US conspiracy. when people see the results of socilaistic polices and free market polices, people understand which is better and rational, that is all. your explanation for Jap revival is shallow and nonsense. try talking to a Jap client in your office. he will ask you to “….” ‘ they take pride in their enormous acheivement after near total destruction in WW 2 thru sheer hard work and rational market oriented polices. and German econoomy and most of world economy is in recession. yes. but that is not the end of capitalsim (like the fall of communism in 1991) .ok. things are recovering and lessons learnt. and try this post for my views about the real causes for this recession :

    பென் என்பவர் அதியமானுக்கு எழுதிய பதில் : ben
    Posted on August 6, 2009 at 8:10 pm

    athiyaman u have given out lot of links but everything seem to have capitalist inclinations. the intention of any capitalist would be to further profits at any cost which i believe cannot be denied by anyone. try seeing documentaries like corporation, rise of disaster capitalism and surplus which might give some insight into whats going on. pls consider beyond these man made inventions like money, value, stastical growths and so on.
    “Just as Darwin discovered the law of development or organic nature, so Marx discovered the law of development of human history: the simple fact, hitherto concealed by an overgrowth of ideology, that mankind must first of all eat, drink, have shelter and clothing, before it can pursue politics, science, art, religion, etc.; that therefore the production of the immediate material means, and consequently the degree of economic development attained by a given people or during a given epoch, form the foundation upon which the state institutions, the legal conceptions, art, and even the ideas on religion, of the people concerned have been evolved, and in the light of which they must, therefore, be explained, instead of vice versa, as had hitherto been the case.” Engels

    பின்பு சர்வதேசியவாதிகள் அதியமானுடைய ஸ்டாலின் அவதூறுக்கு பதில்வினையாக எழுதிய பதிவிற்கும் முதலாளியமானிடம் சாரி அதியமானிடம் எந்த பதிலும் இல்லை.ஆனால் சிலியில் நடந்த அமெரிக்கா நடத்திய இரத்தக்களறியைப் பற்றியோ, அதனைப் பற்றிய விசாரணைகளை தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டு வருவது பற்றியோ திருவாளர் ‘அதி’ யமானிடம் எந்த பதிலும் இல்லை. சிலி அரசினுடைய வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமை அறிக்கையை சுட்டிக்காட்டும் போதே, ”இருந்தாலும்….. இம்ப்ரூமெண்ட் ஆகி இருக்கிறது’ என்று இழுக்கிறார். சரி அரசினுடைய வறுமைக்கோட்டு அறிக்கையையே சுட்டிக்காட்டும்போது மட்டும் ‘அதி’ வேகமாக ரியாலிட்டிக்கு ஓடுகிறார் – 20 ரூபாய்க்கு கீழே வாழ்ந்தால், ருவாண்டா பஞ்சம் வந்திருக்க வேண்டுமே என்கிறார். புதிய ஜனநாயகத்தில் “தினம் கால்வயிற்றுப் பட்டினியோடு மெல்ல மெல்ல செத்துக் கொண்டிருப்பவர்களைப் பற்றியும்”, அதெல்லாம் அவர்களின் வினைப்பயன் – உயிரோடு இருப்பதற்கு அவர்கள் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் என்று தர்மம் பேசும் நடுத்தர வர்க்கத்தைப் பற்றியும் எழுதி இருந்தார்கள். ‘அதி’யமான் அந்த வர்க்கம் போலுள்ளது. இவருக்கு இந்தியாவில் பஞ்சம் வந்து மக்கள் இறந்தால் தான், வறுமைக்கோடு இல்லை இல்லை அதியமானின் அளவுகோலில் சொல்வதானால் 80% மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் (ஆல் ஸ்டாடிடிக்ஸ் பாஸ்) என்று ஒத்துக் கொள்வார் போலுள்ளது. ஸ்டாலினைப் பற்றிய அன்னாரின் அவதூறுக்கு பதிலாக சர்வதேசியவாதிகள் சுட்டி தந்த போது, அன்னாரின் பொறுப்பும், ஆதாரப்பூர்வமான பதில் :

    அதியமான் : ர‌ஸ்ஸ‌ல் எத‌ற்க்கு கையூட்டு பெற‌ வேண்டும் வீண் அவ‌தூறு. அவ‌ர் ஒரு த‌த்துவ‌ அறிஞ‌ர். பெரும் செல்வ‌ந்த‌ர்.
    கொள்கை பிடிப்பு உடைய‌ இட‌துசாரி சோசிய‌லிஸ்ட் தான். தான் ச‌ரி என்று ந‌ம்பிய‌தை ஆணித்த‌ர‌மாக‌
    எடுத்துறைத்த‌வ‌ர். கையூட்டு பெறும் அள‌விற்ற்கு கேவ‌ல‌மான‌வ‌ர் அல்ல‌. அவ‌ரை ப‌ற்றி உம‌க்கு தெரிந்த‌து மிக‌ குறைவே. ஆர்வெல் ஒரு நாவ‌லிஸ்ட். அவ்வ‌ள‌வுதான்.

    ரஸ்ஸல் போன்றோர் தம்மிடம் ஊதியம் பெற்றதை பணம் கொடுத்த துரை ஆண்டையே ஒத்துக் கொள்ளும்போதே ‘அதி’மான் எவ்வளவு ‘ஆணித்தரமாக’ எடுத்துரைக்கிறார் பாருங்கள்.

    //
    என்னமோ புரட்சிக்காக களப்பணி செய்பவர் போல ஒரு பில்டப் !! பொட்டி தட்டுகிறவர்கள் பேசுகிறார்கள். // அய்யா நாங்கள் புரட்சி வர வேண்டுமென்றுதான் ஆசைப்படுகிறோம். எந்த விதமான களப்பணி என்று (கருரூரில் எக்ஸ்போர் கம்பெனி போன்றா ?) சொன்னால் உதவியாக இருக்கும்.

    தோழர்களே ! இங்கு மீண்டும் நான் அதியமானோடு தர்க்கம் செய்தற்கு காரணம், புதிய தோழர்கள் அவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்குதான். மாறாக அதியமான் அவர்களை திருத்த வேண்டும் என்ற பகற்கனவெல்லாம் இல்லை.

    • //ஜப்பான் ஏன் வளர்ந்த்து என்றால், ஜப்பான் மக்களுடைய எலெக்ரானிக் அறிவு – மிகக் குறைந்த கூலியில் பொருட்கள் தயாரிக்க முடியும் என்பதாலும், சீனக் கடலில் சீனத்திற்கு எதிரான ஒரு இராணுவக் கூட்டு வேண்டும் என்பதால்தான், //

      what an explanation !!! so these two factors are enough to make a war devastated nation into the second richest nation of the world ? nothing about the manufaturing efficency of Jap steel, ship building, machine tools, automotives, etc. about MITI and polices, about effort and pride in their enterprises. you answer shows you shallow knowledge.

  22. //In sum, no major overhaul of capitalism seems on the cards. The rapid transition from despair in March to the stock market boom today suggests that the markets don’t really see the need for great change. The existing system has survived the Great Recession, and that is seen as Great News. //

    அடாடா !அமெரிக்க அரசு 60 பில்லியனைக் கள்ளத்தனமாக மார்கெட்டில் இல்லை இல்லை முதலாளிகளின் பாக்கெட்டில் கொட்டி உள்ளது. இதுதான் இப்போது வருகின்றா குறைந்த பட்ச பூமிங்க்.க்க்க்க்க். ஆனால் ஜாண் ஏறினால் முழம் சறுக்கிறதே அது ஏன் ?

    // Recessions are viewed by the public as outcomes of policy blunders, as tragedies that cost jobs and production. That’s certainly true. But recessions are also essential correctives to the excesses inbuilt in a capitalism system driven by animal spirits, innovation, the search for higher returns, and euphoria. The system works through creative destruction. This entails boom and bust, greed and failure, euphoria and panic, fast growth and recession. Recessions and financial crises may look like blemishes of capitalism, but are actually integral to its process of creative destruction.

    So, even after reforms, expect more financial crises and recessions in the future. We would be wise to institute reforms that reduce the risks, but even wiser to understand that the risks cannot be ended without ending enterprise and innovation too. //

    அ’மான் இதுதான் அந்த பதிவில் இருந்த ‘கிரியேடிவ் டிஸ்டிரக்ஸன்’. அவரே ஒத்துக் கொள்ளும் ஒன்று, முதலாளித்துவ லாபவெறி (அனிமல் ஸ்பிரிட்). இதற்கு என்ன சொல்கிறீர்கள் ?

    மேலும், நீங்கள், குருமூர்த்தி, மேலே சொன்ன ஸ்ஸ்வாமிநாதன் & கோ இவாளுடைய பயம் எல்லாம், முதலாளித்துவம் தோற்று விட்டது என்று, மக்கள் இடது (இந்திய CPM, CPI அல்ல) சாரிகளை நோக்கி சென்று விடுவதை தடுப்பதுதான்.

  23. //ம.க.இ.க தோழர்கள், மாவோயிஸ்டுகள்,
    இடதுசாரிகள் என்று அனைத்துதரப்பு “இடதுசாரிகள்” கம்யூட்டர்களை கடுமையாக எதிர்த்தனர். அவற்றின் மூலம் வேலை இழப்பு ஏற்படும் என்ற வீண் பயம். எடுத்து சொல்லியும் கேட்க்கவில்லை. அமெரிக்க சதி,
    பன்னாட்டு நிறுவங்களில் ஏகாதிபத்திய சதி என்று பூச்சாண்டி விட்டனர். (அய்.பி.எம், இன்டெல்).
    தோழர்களில் ஞானத்திற்க்கு இது ஒரு ஸாம்பிள் !!.// இதற்கு ஆதாரம் தாருங்கள் முதலில் பார்க்கலாம். மக இக எப்போது கம்பியூட்டர்களை எதிர்த்தது ? சுத்த அக்கபோராக அல்லவா இருக்கிறது.

    //வேலை வாய்ப்பு என்றாலே அரசு வேலை தான். தனியார் வேலை வாய்ப்புகள் மிக குறைவு. (காரணம் லைவென்ஸ் ராஜ்ஜியம், சோசியலிசம் மூலம் அவை முடக்க்கப்ப்டுகிடந்தன.)// அப்பாடா. அதியமானின் இன்னொரு முக்கிய வினை நுட்பத்தை தோழர்களுக்கு ஞாபகப்படுத்த மறந்தே போய்விட்டேன். அதாவது லைசன்ஸ் ராஜ்ஜியத்தை நாங்கள் ஆதரிக்கவே இல்லை. ஆனால் அதியமான் அவர்கள் நாங்கள் ஆதரிக்காத ஒன்றை (லைசன்ஸ் ராஜ்ஜியம்) நாங்கள் ஆதரிப்பதாகச் சொல்வார். பின்பு அதனையே இங்கு லைசன்ஸ் ராஜ்ஜியத்தையும் அதனை ஆதரிக்கின்ற எங்களையும் (?) பிடி பிடி என்று மைய பிரச்சனையை விட்டு நைசாக வெளியே இழுத்துச் செல்வார்.

    • //இதற்கு ஆதாரம் தாருங்கள் முதலில் பார்க்கலாம். மக இக எப்போது கம்பியூட்டர்களை எதிர்த்தது ? சுத்த அக்கபோராக அல்லவா இருக்கிறது.///
      read the 80s papers or ask any elder bank staff who participated in the bank strike of 80s against computarisation (supported by all trypes of communists and naxalites and maoisits). or aks your parents or older people.

      • ஒரு அமைப்பின் மீதான குறிப்பான விமர்சனத்தை கேள்விக்குள்ளாகினால் உடனே ஒரு மழுப்பலான பதில்… உங்க பதிலை உங்கள மாதிரியே ஆராய்ச்சி பண்ணினா 80களில் மாவோயிஸ்டுகள் இல்லை என்றுதான் வாதிட முடியும்…

  24. //அடாடா !அமெரிக்க அரசு 60 பில்லியனைக் கள்ளத்தனமாக மார்கெட்டில் இல்லை இல்லை முதலாளிகளின் பாக்கெட்டில் கொட்டி உள்ளது. இதுதான் இப்போது வருகின்றா குறைந்த பட்ச பூமிங்க்.க்க்க்க்க். ஆனால் ஜாண் ஏறினால் முழம் சறுக்கிறதே அது ஏன் ?//

    மன்னிக்கவும். சில லட்ச பின்னியன் கணக்கிலான தொகையை என்று வாசிக்கவும் .சரியான இலக்கம் ஞாபகத்தி இல்லை.

  25. டாடா பற்றிய பதிவில்.

    விஷம் 3 : லைசன்ஸ் கோட்டா -வினவு முதலிய கம்பியுனிஸ்டுகளின் கோரிக்கை – பதில் 3: அதியமான் முதலானவர்களின் சாதுர்யம் இதிலேயே அடங்கி உள்ளது. ரத்தன் டாட்டா பட்டைநாமம் போட்டார் என்று சொன்னால், அப்படியே 60-70,60-70 என்று கூவிக்கொண்டே, லைசன்ஸ் கோட்டா கெட்டது என்று நாம் பேசாத விடயத்திற்கு – பதிவின் கருப்பொருளிற்கு வெளியே உள்ள , நாம் ஆதரிக்காத ஒன்றினை நமது கருத்தாக அவர்களே கூறி, பின்பு இந்த நமது கூற்றினை அவர்களே மறுக்கவும் செய்வார்கள். ஆக படிப்பவர், பதிவு சொல்லவரும் கருத்தையும் தவறு என்று புரிந்து கொள்வார்.

    பதி 3 : நமது பதில், லைசன்ஸ் கோட்டா ஏன் ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் இந்திய தரகு முதலாளிகளுக்கு எப்படி உதவியது – அந்தக்கால சிறு தொழில்களை ஒழித்துக் கட்ட எப்படி டாடா, அம்பானிகளுக்கு உதவியது என்பதை தெளிவாக விளக்க வேண்டும். (குரு திரைப்பட விமரிசனம் : அம்பானி: முதலாளிகளின் குரு மோசடிகளின் கரு) http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=895:2008-04-26-08-52-54&catid=39:2007
    – இது லைசன்ஸ் ராஜ் பற்றிய தனிப்பட்ட பதிவு இல்லை என்றாலும், கட்டுரையின் ஒரு அங்கமாக இது விளக்கப்பட்டிருக்கும்.

    டாடா பற்றிய பதிவில் அதியமான் : ஒரு மார்க்ஸிய‌ வ‌ர‌லாற்று நிபுணாரான‌, திரு.பிபின் ச‌ந்த‌ரா (ஜெ.என்.யு)
    எழுதிய‌ India after 1947
    நூலில், இந்த‌ லைசென்ஸ் ராஜ் ம‌ற்றும் அத‌ன் விளைவுக‌ள் ப‌ற்றி
    ப‌டித்துப் பார்க்க‌வும்.
    ராயகரன் எழுதவது ராயகரனுக்கே புரியாது என்று ஒரு கூற்று உண்டு. 🙂 ) ராய‌க்ர‌னை நாங்க‌ சீரிய‌சா எடுத்துக்க‌ர‌த‌ல்ல‌

    நான் : பாருங்கள். லைசன்ஸ் ராஜ்ஜியம் நாங்கள் ஆதரிக்கின்ற ஒன்று என்று சொல்லும் போதே அவர் லைசன்ஸ் ராஜ்ஜியத்தைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறார் பாருங்கள்.

    இரயாகரனைப்பற்றி டாடாவைப் பற்றிய பதிவில் இப்படி சொல்லும் அதியமான், அசுரனுடைய பதிவில் அதியமான் அவர்கள்,

    //விடுதலை புலிகளை பற்றி அவர்கள் கருத்துக்கள் சரியே. முக்கியமாக ராயகரனில் நிலைபாடு மிகச் சரியானது மற்றும் தெளிவானது. ..//

    ஒரு சோறூக்கு ஒரு சோறு பதம்

    • //லைசன்ஸ் கோட்டா கெட்டது என்று நாம் பேசாத விடயத்திற்கு – பதிவின் கருப்பொருளிற்கு வெளியே உள்ள , நாம் ஆதரிக்காத ஒன்றினை நமது கருத்தாக அவர்களே கூறி,///

      Liberalisation process is basically to dsimantle the license quota Raj. and marxists of all varieties oppose liberalisation till date. and in the heydays of licensing in 60s and 70s, any small attempt to liberalise the licnese raaj was violently opposed my communists of all types. so you don’t know what you are talking about. esp :

      ‘தாரளமயமாக்கல்’ என்றால் என்ன ?

      http://nellikkani.blogspot.com/2008/01/blog-post_9749.html

    • அறிவு ! நம்ப “”சவுண்டு பார்ட்டிய” பிரிச்சி மேஞ்சிட்டிங்க போங்க

  26. //விடுதலை புலிகளை பற்றி அவர்கள் கருத்துக்கள் சரியே. முக்கியமாக ராயகரனில் நிலைபாடு மிகச் சரியானது மற்றும் தெளிவானது
    ஒரு சோறூக்கு ஒரு சோறு பதம்//
    (அதி) சவுண்டு மப்புல எழுதியிருக்கும்னு நான் நினைக்கிறேன்

  27. நண்பர் அதியமான், முதலில் நீங்கள் ஒரு விடயத்தை ஒப்புக் கொள்ள வேண்டும்.. அமர்த்திய சென்னில் இருந்து அருந்ததி ராய் வரை எல்லோரும் சொல்வது, அரசின் அறிக்கைகளில் தெளிவாக தெரிவது இந்தியாவில் வறுமையை பற்றிய விவரங்கள். பெரும்பான்மையான குழந்தைகளும், மகப்பேறு பெண்களும் ஊட்டச்சத்து குறைவில் ஆப்ரிக்காவை விட மோசமான நிலையில் உள்ளனர் என்பது உண்மை, இதனை இது நம்பும் படியாக இல்லை, இதற்கான தெளிவான விவரங்கள் இல்லை என நீங்கள் மறுப்பது அழகல்ல. இல்லை என்றால் சில மாதங்கள் முன்பு உணவு பொருட்களின் விலை ஏற்றத்திற்கு காரணம் இந்தியாவில் மக்கள் அதிகம் உண்பதால்தான் என சொன்னானே ஜார்ஜ் புஷ், அவனுக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதாக ஆகிவிடும்…

    • Thozar Bhagath,

      I had clearly agreed about the issues highlighted by Sen, etc. only dispute is about the exact numbers / data ; certainly Indian hunger levels are owrse than Sub Sahara. and the point is : are things worse or better than 1970s ? and solutions for eradicating all these.
      and i quoted Sen’s solutions and views about this. ok.

  28. //Author: ஸ்.. அப்பா.. முடியல
    Comment:
    ///////தோழர்கள். கம்யூனிஸ் கட்சிகள், அனைத்து யூனியன்கள் மற்றும் ம.க.இ.க தோழர்கள், மாவோயிஸ்டுகள்,

    இடதுசாரிகள் என்று அனைத்துதரப்பு “இடதுசாரிகள்” கம்யூட்டர்களை கடுமையாக எதிர்த்தனர். அவற்றின் மூலம் வேலை இழப்பு ஏற்படும் என்ற வீண் பயம். எடுத்து சொல்லியும் கேட்க்கவில்லை. அமெரிக்க சதி,
    பன்னாட்டு நிறுவங்களில் ஏகாதிபத்திய சதி என்று பூச்சாண்டி விட்டனர். (அய்.பி.எம், இன்டெல்).

    தோழர்களில் ஞானத்திற்க்கு இது ஒரு ஸாம்பிள் !!////

    செம காமடிய்யா ஒன்னோட
    கம்யூனிஸ்டுகள் கம்ப்யூட்டர்களை எதிர்த்தார்களா ?///

    first give respect and take respect. and yes, my facts are true. there was a massive bank strike in the 80s against computarisation. all unions and other fringe groups supported this. try old issues of MakaIkA journals or ask their older members.

  29. அறிவுடை நம்பி,

    சிலி மற்றும் ஜப்பான் பற்றிய எமது இறுதி பதிவுகளுக்கு நீங்க பதில் அளிக்கவில்லை.
    ஜப்பானின் வளர்ச்சிக்கான காரணிகள் நீங்க சொன்ன மாதுரி இல்லை என்றேன்.
    மேலும் பல விசியங்களை பற்றி பதில் இல்லை. மிராக்ல் ஆஃப் சில் ப‌ற்றி
    ஒரு ப‌திலும் இல்லை. மேலும் சிலியில் புர‌ட்சி ந‌ட‌ந்த்தாக‌ நான் சொல்ல‌வில்லையே.
    அலெந்தே ம‌ற்றும் பினோச்சொவின் பொருளாதார‌ கொள்கைக‌ள் ப‌ற்றிதான் எழுதினேன்.

    மேலோட்டமான எம்மைப்பற்றிய (எமது கருத்துக்களை பற்றி அல்லாமல்) கமென்டுகள்,
    நக்கல்க்கள். அது தனி மனித தாக்குதல் தான். அதனால் தான் எமது எதிர்வின்னை.
    என்னை ப‌ற்றி ஏன் பேச‌ வேண்டும் ? என் க‌ருத்துக்க‌ளோடு ம‌ட்டும் பேசுவ‌தே
    நாக‌ரீக‌ம். இங்கு உம‌து பின்னோட்ட‌ங்க‌ளை ம‌றுப‌டி பார்க்கவும்.

    ஸ்வாமினாத‌ன் அய்ய‌ர் எழுதிய‌தில் ஒரு ப‌குதியை ம‌ட்டும் தான் மேற்கோள் காட்ட‌றீக‌.
    இன்றைய‌ முத‌லாளித்துவ‌ம் 100 % பெர்ஃபெக்ட் அல்ல‌ என்பதை நீர் சொல்ல‌ தெரிந்து
    கொள்ள‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை. மேலும் அர‌சுக‌ளின் “சோசிய‌லிச‌”
    தீர்வுக‌ள் ம‌ற்றும் ப‌ண‌ வீக்க‌ங்க‌ளும் ம‌ந்த‌ங்க‌ளுக்கு ஒரு முக்கிய‌ கார‌ணி.
    தீர்வாக‌ அவ‌ர் சோசிய‌லிச‌த்தை சொல்ல‌வில்லை என்ப‌தே முக்கிய‌ம்.

    • சிலி நாட்டு பொருளாதாரம் என்பது ஒரு மிக பெரிய சீர் கேட்டில் உள்ளது. மில்டன் பிரிட்மன் என்னும் அயோக்கியனால் பயிற்றி விக்க பட்ட “Chicago boys” அர்ஜென்டின போன்ற நாடுகளில் செய்த காரியங்களால் அந்த நாடே கையேந்தும் நிலைக்கு தள்ள பட்டது. பின்பு kirchner அவர்களையும் IMF,World Bank போன்ற திருடர்களை நாட்டை விட்டே வெளியேற்றினார்கள். இப்போ அவர்கள் சிலேயை சுரண்டி கொண்டு இருக்கிறார்கள். Blanchet அதிபர் ஆனா பொழுதில் இருந்து கிட்டதட்ட பினோசெட் காலத்து அடாவடிகள் அங்கே நிகழல்கிறது. மற்ற தென் அமெரிக்க நாடுகளில் தன்யோடிய ஆதிக்கத்தை இழந்த USA இப்பொழுது சிலி மட்டும் தனக்கு மிஞ்சி உள்ளது என்பதை உணர்ந்து அடக்கி வசிக்கிறது தென் அமெரிக்காவில் ஆனால் அதைப்பற்றி செம சௌண்டு கொடுக்கிறது மற்ற இடத்தில். இந்த வண்ட வாளங்களை தண்டவாளம் ஏற்றி உள்ளார் John PIlger ‘War on Democracy’ என்னும் டோகிமேண்டறேயில். சிலி என்பது ஒரு ‘failed state’.
      ஜப்பான் என்பது ஒரு ‘failing state’. வெறும் material satisfaction மட்டும் தான் வாழ்க்கை என்பவருக்கு அது ஒரு சொர்க்கம் ஆனால் மனிதனுக்கும் இயந்திரதிற்கும் வித்தியாசம் காண விரும்புவோருக்கு ஜப்பான் ஒரு நரகம். அந்த வித்தியாசத்தை காண வேண்டும் என்றால் சார்லி சாப்ளின் இயக்கி நடித்த ‘Modern Times’ பாருங்கள் அதில் நகைச்சுவையோடு மனித அவலத்தை காண முடியும்.

      p.s: செப்டம்பர் 11, 1973 USA சிலி நாட்டில் நடத்திய பயங்கரவாதத்துக்கு காரணமான pinochet’வை கடைசிவரை UK காப்பாற்றியது எதற்காக.

  30. இல்லை. மிக மிக மேலோட்டமான வாதங்கள்.

    பினோஷே ஒரு கொடுங்கோலன், பல ஆயிரம் மக்களை கொன்றவன், சர்வாதிகாரி என்பதில் சந்தேகமில்லை.
    அவனின் அரசியல் செயல்களை யாரும் நியாயப்படுத்துவதில்லை.

    சிலியில், 1970இன் ஆரம்பங்களில் அலென்ந்தே தலைமையிலான “இடதுசாரி சோசியலிச” அரசு (ரஸ்ஸிய உதவியுடன்) ஆட்சியில் அமர்ந்தது. அவர்கள் செய்த பொருளாதாரப் “புரட்சி” நடவடிக்கைகளால் சிலியின்
    பொருளாதாரமே திவாலானாது. விலைவாசி பல நூறு மடங்கு உயர்ந்தது. இதெற்கெல்லாம் அமெரிக்க சதி தான் காரணம் என்பது முரண்நகை. அமெரிக்கா பல சதிகள் செய்தது உண்மைதான். ஆனால், தற்கொலை முயற்சி போன்ற பொருளாதார கொள்கைகளை ஒரு அரசு முழுமனதுடன் செய்துவிட்டு, பிறகு திவாலாவதற்க்கு, வேறு எந்த நாட்டையும் குறை சொல்ல முடியாது. http://en.wikipedia.org/wiki/Economic_history_of_Chile#Economic_Crisis_and_coup

    http://en.wikipedia.org/wiki/Economic_history_of_Chile_(1973-1990)

    பினோச்சே அரசுக்கு பொருளாதார ரீதியான ஆலோசனைகளை சிக்காகோ பாய்ஸ் மற்றும் மில்டன் ஃபிரீட்மேன் வழங்கினார்கள். அதன் பின், சிலியில் பொருளாதாரம் படிப்படியாக மீண்டது. பிறகு பினெச்சேவின் ச‌ர்வாதிகார‌ம் ஒழிக்க‌ப்ப‌ட்டு, ஜ‌ன‌னாய‌க‌ம் ம‌ல‌ர்ந்த‌து. “இட‌துசாரி” அர‌சுக‌ள் மீண்டும் தோன்றினாலும், யாரும் 1970இல் அலெந்தேவால் அம‌லாக்க‌ப்ப‌ட்ட‌ சோசிய‌லிச‌ பொருளாதா கொள்கைக‌ளை
    மீண்டும் கொண்டுவ‌ர‌ முய‌ல‌வில்லை. மூட‌த்த‌ன‌த்தை மீண்டும் செய்ய‌ அங்கு யாரும் த‌யாராக‌ இல்லை.

    அய்.எம்.எஃப் இட‌ம் க‌ட‌ன் வாங்க‌ அவ‌சிய‌ம் இன்று சிலிக்கு இல்லை. (இந்தியாவை போல‌) ;அத‌னால் தான்
    அங்கு அய்.எம்.எஃப் தேவை இல்லை. துர‌த்து அய்.எம்.எஃப் என்ன‌ ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌மா ? அந்நிய‌ செலாவ‌ணி ப‌ற்றாம‌ல் ப‌ல‌ நாடுக‌ள் தாமே அய்.எம்.எஃபிட‌ம் “உத‌வி” கேட்ப‌து ச‌க‌ஜ‌ம். மூட‌த்த‌ன‌மான‌
    பொருளாதார‌க் கொள்கைக‌ளால் அவை நிக‌ழும. இந்தியா ஒரு ந‌ல்ல‌ உதார‌ண‌ம். பின் தாராள‌ம‌ய‌மாக்க‌ல்
    கொள்கைக‌ள் அம‌லாக்க‌ப்ப‌ட்ட‌ பின், அன்னிய‌ செல‌வாணி மிக‌வும் சேர்ந்து, அய்.எம்.எஃபை “துர‌த்துவ‌து”
    மிக‌ மிக‌ சுல‌ப‌மாகிவிடுகிற‌து.

    Milton Friedman said :

    ///Commenting on his statement about the “Miracle”, Friedman says that “the emphasis of that talk was that free markets would undermine political centralization and political control.” [3] Friedman claimed that “The real miracle in Chile was not that those economic reforms worked so well, but because that’s what Adam Smith said they would do. Chile is by all odds the best economic success story in Latin America today. The real miracle is that a military junta was willing to let them do it.” [4] He says the “Chilean economy did very well, but more important, in the end the central government, the military junta, was replaced by a democratic society. So the really important thing about the Chilean business is that free markets did work their way in bringing about a free society.” [5] The term Miracle of Chile is also commonly used to refer to the favorable economic results of economic liberalization in that economy.

    Friedman has wondered why some have attacked him for giving a lecture in Chile: “I must say, it’s such a wonderful example of a double standard, because I had spent time in Yugoslavia, which was a communist country. I later gave a series of lectures in China. When I came back from communist China, I wrote a letter to the Stanford Daily newspaper in which I said, ‘”It’s curious. I gave exactly the same lectures in China that I gave in Chile. I have had many demonstrations against me for what I said in Chile. Nobody has made any objections to what I said in China. How come?”. He points out that his visit was unrelated to the political side of the regime and that during his visit to Chile he even stated that following his economic liberalization advice would help bring political freedom and the downfall of the regime.[6]

  31. The experience of Chile in the 1970s and 1980s, and especially the export of the Chilean pension model by former Labor Minister Jose Piñera, has influenced the policies of the Communist Party of China and has been invoked as a model by economic reformers in other countries, such as Boris Yeltsin in Russia and almost all Eastern European post-Communist societies

  32. //ஜப்பான் என்பது ஒரு ‘failing state’. வெறும் material satisfaction மட்டும் தான் வாழ்க்கை என்பவருக்கு அது ஒரு சொர்க்கம் ஆனால் மனிதனுக்கும் இயந்திரதிற்கும் வித்தியாசம் காண விரும்புவோருக்கு ஜப்பான் ஒரு நரகம். ///

    :)))) i see. then what do you prefer : the starvation of Rawanda or hunger in Africa or India ?
    no one wants to migrate to India or Africa while many want to get into Japan. ok. conquest of poverty in most basic. then we can talk about materialism.

  33. நண்பர் அதியமான் அவர்களுக்கு,

    நீங்கள் அடிக்கடி ஆங்கிலத்திற்கு தாவி விடுவது என்போன்றவர்களை வெளியே நின்று வேடிக்கை பார்க்கவைக்கிறது, எனவே உங்களுக்கு சிறிது சிரமம் இருந்தாலும் தமிழிலேயே எழுத முயலவும்.

    இந்திய அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்ட அடிப்படை உரிமைகளான அனைவருக்கும் கல்வி, சுகாதரம், குடிநீர் போன்றவை இன்னும் செயல்படுத்தப்படவில்லை. ஆனால் பிரிட்டனின் தொழில்நிறுவனங்களுக்கு தேவையான பாதுகாப்பும் கட்டமைப்புகளும் வசதிகளும் செய்து தரப்படும் என்பது மட்டும் தெளிவாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன மட்டுமல்லது இன்றைய ஏகாதிபத்திய தலைமையான அமெரிக்கா தொடங்கி ஏனைய ஏகாதிபத்திய நாடுகளுக்கும் அத்தகைய பாதுகாப்பும் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இப்படி தெளிவான பிரிவை கண்முன்னே கண்டும் இது அனைவருக்குமான சுதந்திரம் என்பதை எப்படி ஏற்கமுடியும்?

    தோழமையுடன்
    செங்கொடி

  34. //இல்லை. மிக மிக மேலோட்டமான வாதங்கள்.

    பினோஷே ஒரு கொடுங்கோலன், பல ஆயிரம் மக்களை கொன்றவன், சர்வாதிகாரி என்பதில் சந்தேகமில்லை. ….
    ……….
    இதெற்கெல்லாம் அமெரிக்க சதி தான் காரணம் என்பது முரண்நகை. அமெரிக்கா பல சதிகள் செய்தது உண்மைதான்
    //
    நண்பர் அதியமான், நாங்கள் சொல்லுகின்ற ஆதாரப்பூர்வமான தகவல்களையெல்லாம், ‘மேலோட்டாமான வாதம்’ என்ற ஒரே வரியில் மறுத்து விடுகிறீர்கள்.

    எப்படி இந்தியாவில் chellas impex போன்ற கம்பெனிகளின் முதலாளிகள் அன்னிய டாலர் மூலதனத்தின் மூலமாக தொழில் வளர்ச்சி பெற்று, கரூரில் தொழில் அதோடு, சென்னையில் பிளாஸ்டிக் தொழில் என்று வளர்ச்சி பெற்றாலும், பெரும்பான்மையான தொழிலாளர்கள் திருப்பூரில் சாய எச்சில், சாய வியர்வை என்று சாய சோக மயமாக மட்டும் வாழ்ந்து வருகிறார்கள்.

    இந்தியாவில் 500 கோடிகளுக்கு மேல் சொத்துள்ளவர்கள் 5000 பேருக்கு மேல், 1000 கோடிக்கு மேல் சொத்துள்ளவர்கள் 2000 பேருக்கு மேல் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. இந்த 2000 – 5000 பேர்களிலும் வட இந்தியாவில் வாழ்பவர்கள் தான் அதிகம் (பெரும்பாலும் சிங், பனியா, பூமிகா ஜாதி கும்பல்கள்).

    அதற்காக இந்தியாவில் வறுமை குறைந்து வருவதாக சொல்ல முடியுமா ? அரசின் புள்ளிவிவரங்களை விட்டுத் தள்ளுங்கள். ஒரு நாளைக்கு வெறும் 20 ரூபாயில் கால்வயிறு சோற்றோடு எத்தனை குழந்தைகள் சித்தாள் வேலைகள் செய்கின்றன தெரியுமா ? நான் படித்து முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருக்கும் போது, கொஞ்ச காலம் ‘அனைவருக்கும் கல்வி’ இயக்கத்தில் கணிப்பொறி உதவியாளராகப் பணிபுரிந்தேன்.அப்போது 3 இல் இருந்து 18 வயது வரையுள்ள – கல்வியின்றி கூலி வேலை செய்து வரும் குழந்தைகளின் – மாநில அளவிலான – தகவல்களைத் திரட்டி அளிப்போம். SSA (ஸர்வ ஸிக்ஸா அபியான்) பணியாளர்களோடு சில நேரம், டீகடைகள், பட்டறைகளுக்கு சோதனைகளுக்குச் சென்று இருக்கிறேன். அங்கு சிறுவர்கள் இருப்பார்கள். வயது கேட்டால் எல்லோரும் 17 வயதுக்கு மேல் என்பார்கள். 17 வயதுக்கு மேல் இருப்பவர்களை எல்லாம் நாங்கள் விசாரித்துப் பள்ளியில் சேர்க்க முடியாது. சிலபேரை மீட்டு பள்ளியில் சேர்த்தாலும் மீண்டும் குடும்ப வறுமையின் காரணமாக மீண்டும் பணிக்கு சேர்ந்து விடுகின்றனர். எங்களை SSA பணியாளர்களைப் பார்த்து அந்த சிறுவர்களின் பெற்றோர் கேட்கும் கேள்வி – என் குழந்தைக்கு இரண்டு வேளையாவது சோறு போடுவதற்கு வேலைக்கு அனுப்புகிறோம். அதையும் ஏன் கெடுக்கிறீர்கள் ?” என்பதுதான். ஆனால், 2000 – 5000 பேர் பில்லியர்களாக இருப்பதால் , அவர்களைச் சார்ந்த்து உள்ள வெகுசில ஒரு 10% வைத்துக் கொள்ளுங்கள் மத்திய தரவர்க்க உயர்நிலை அதிகாரிகள், மத்திய தர வர்க்க அன்றாடம் காய்ச்சிகள் முதலானவர்கள் போக மீதம் உள்ள 80% பேர் வறுமைக் கோட்டில்தான் உழல்கிறார்கள். இரண்டு வேளைச் சாப்பிடுவதால் அவர்கள் (அரசின் கொடுரமான சூழ்ச்சி நிறைந்த வறுமைக்கோட்டு அளவீடு) சந்தோஷமாக உள்ளனர் என்ற பொருளில்லை.

    அதாவது, உங்கள் மொழியில் ‘நிறைய முன்னேறியுள்ளனர்’ என்று பொருளில்லை.

    சிலி பற்றி நான் முன்பே பதிலளித்தேன். அதற்கு உங்கள் பதில் 70-80 ஐ விட எவ்வளவே மேல் என்பது. 70-80 களில் இடதுசாரி அரசு செய்த சீர்திருத்தங்களால் அல்ல, அமெரிக்க பெறு முதலாளிகளுக்குச் சொந்தமான மிகப் பரந்த விளைநிலங்களையும், காப்பர் சுரங்கங்களையும் அரசுடைமையாக்கப்பட்டதால், சிலி மீதான அமெரிக்கப் பொருளாதாரத் தடை, ஸ்டாலினிக்கு பின்னான சோவியத் சமூக ஏகாதிபத்தியவாதிகளின் அமெரிக்க முதலாளித்துவத்தோடு கூடிய கள்ள உறவு அவற்றால் அந்த அரசு மிக மோசமான பொருளாதார சீர்குலைவுகளைச் சந்தித்தது என்பது உண்மைதான். ஆனால், இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக லட்சக்கணக்கானவர்களைப் படுகொலை செய்த பினாசெட் பின்பும், சிகாகோ பாய்ஸ் பின் நின்றும் சிலியின் நவகாலனியமாக்கலை அமெரிக்க அரசு தான் செய்த்து என்பதை, பினாசெட்டின் மீதான சர்வதேச விசாரணையை பிரிட்டன் மூலமாக முடக்கியது என்பதிலிருந்து புலனாகிறது.

    ஆனால் சிலியின் இன்றைய நிலை என்ன ? – இந்தியாவில் உள்ளது போன்ற எகனாமிக் இன் இகியுவாலிடி தான்’. இது தென்னெமெரிக்க நாடுகளிலேயே மிக அதிகமாக உள்ளது.

    http://www.unc.edu/home/pconway/aea2000/Chilemac.pdf

    In spite of this, Chile still suffers from many problems common in Latin America, ranking higher than such countries as Mexico in terms of economic inequality and unemployment rate.[6][7][8]

    Chile had changed since the military takeover in 1973. After some rough economic times, the
    economy posted strong gains in the late 1980s. Real GDP growth had averaged 6.2 percent per
    year, unemployment fell to 6.3 percent from a peak of 30 percent in 1982, and export growth
    surged. However, sixteen years of conservative economic policies and authoritarian rule had
    taken their toll on the working class: almost half of the population was living below the poverty
    line, and real wages remained 19 percent below their 1970 level. Income inequality had
    worsened, especially in the first decade of the Pinochet regime, when the poor had seen their
    wages stagnate while social spending had fallen drastically.

    This was a paradoxical time in Chile’s economic history, a time that some Chileans referred to as
    the “boom”. Output growth averaged 7.9 percent per year from 1977 to 1981, the availability of
    imported goods increased dramatically, and inflation finally fell to 9 percent in 1981 (see Tables
    A1 through A3). But not all Chileans were taking part in this “boom”: unemployment remained
    stubbornly high at 15 percent, real wages were still 27 percent below their 1971 level, and income
    inequality was worsening as the richest 20 percent were gaining an ever-larger share of income.

    Despite the success of the structural reform and stabilization policies, not all is rosy. A high
    proportion of Chileans — estimated at around 45 percent by Torche (1987) — were living below
    the poverty line in the mid-1980s. Income inequality worsened through the crisis of 1982-83
    before recovering somewhat: Table 1 shows that the share in national income of the highest
    quintile increased steadily from 1970 to 1989, while the income share of the poorest two quintiles
    declined from 1970 to 1982-83 before rising in the late 1980s. While unemployment fell
    substantially in the late 1980s, real wages remain 22 percent below their 1970 level. Social
    spending suffered great cutbacks in the wake of the 1982-83 economic crisis: per capita health,
    housing and education budgets declined more than 20 percent.

    The UP’s program called for a democratic “Chilean road to socialism”. 1970-1971

    After assuming power in November 1970, the UP rapidly began to implement its program. In the area of structural reforms, two basic measures were immediately begun. First, agrarian reform was greatly intensified, and a large number of farms was expropriated. Second, the government proposed to change the constitution in order to nationalize the large copper mines, which were jointly owned by large United States firms and the Chilean state. Government expenditures expanded greatly, and in 1971 real salaries and wages in the public sector increased 48 percent, on average. Salaries in the private sector grew at approximately the same rate. Also, between 1970 and 1972 public sector employment grew at an average of 11.4 percent per year.[1] In the first two quarters of 1971, manufacturing output increased 6.2 percent and 10.6 percent compared with the same periods in the previous year. Manufacturing sales grew at even faster rates: 12 percent during the first quarter and 11 percent during the second quarter.

    Overall, the behavior of the economy in 1971 seemed to vindicate the UP economists: real GDP grew at 7.7 percent, average real wages increased by 17%, aggregate consumption grew at a real rate of 13.2 percent, and the rate of unemployment dipped below 4 percent.[1] Also, and more important for the UP political leaders, income distribution improved significantly. In 1971 labor’s share of GDP reached 61.7 percent, almost ten percentage points higher than in 1970. All of this created a sense of euphoria in the government. //

    இதோடு தோழர் பென் முதலியோர் கொடுத்த சுட்டிகளையும் பார்க்கவும்.

    //prove this with data first. actually, Chile is the most successful and properous democracy in all Latin America. // இதற்கு John PIlger ‘War on Democracy’ இதனையும், நான் கொடுத்துள்ள புள்ளிவிவரங்களும் போதுமானவை.

    ஜப்பான் பற்றி அரடிக்கெட் கொடுத்துள்ளதைப் பார்க்கவும். இதற்குப் பின்பும் நீங்கள் வேறு எதாவது கண்டத்திற்கும், வேறு ஏதாவது நாட்டின் மிராக்களிற்கும் தாவுவீர்கள் என்பது தெரியும்.

    எங்கள் (தமிழ்நாடு) சொந்த அனுபவத்தின் மூலமாக நாங்கள் காலனிய மாக்கலையும் அதன் விளைவுகளையும் உணர்ந்துள்ளோம். அதற்கு மேல் சொன்ன SSA குழந்தைகள் ஒரு உதாரணம்தான்.

    பின்குறிப்பு : // பொட்டி தட்டுப்பவர்கள் புரட்சி பேசுகிறார்கள்” // என்ற உமது தனிநபர் தாக்குதலுக்கு எனது பதிலடி செல்லாஸ் இண்டரெக்ஸ்’ . இனிமேலாவது தனிநபர் தாக்குதலை நிறுத்திக் கொள்ளுங்கள்.

    • //எங்கள் (தமிழ்நாடு) சொந்த அனுபவத்தின் மூலமாக நாங்கள் காலனிய மாக்கலையும் அதன் விளைவுகளையும் உணர்ந்துள்ளோம்.//// sure, you have a nice job in IT field. you have no idea what it was like in 70s and 80s. and your presciptions for all the ills would have made India banrupt by now and billions in hunger. ok.

  35. தூங்குபவனை தான் எழுப்ப முடியும், தோழர்களே !!! இங்கு அதியமான் போன்றோர் தூங்குபவன் போல் நடிக்க மட்டுமே செய்கின்றனர் !!

  36. Arivu,

    actually i worked as an employee in Chellas Impex at Karur ten years ago. and if anyone needs i can give the name and address of my current business in karur. what the hell can anyone do about it ? you still have not answerd any one my core arguments about Chile or Japan or trend towards free markets ALL over the world since 1980. and about the comparitive data on poverty in India when compared with 1970s. . and about IMF’s exit from India, Chile, etc.. try to visit Chile and discuss with them about their past and present.

  37. //தூங்குபவனை தான் எழுப்ப முடியும், தோழர்களே !!! இங்கு அதியமான் போன்றோர் தூங்குபவன் போல் நடிக்க மட்டுமே செய்கின்றனர் !!
    /////

    :))))

    JP, actually i have to say this about you and your comrades.

  38. //ஜப்பான் பற்றி அரடிக்கெட் கொடுத்துள்ளதைப் பார்க்கவும். இதற்குப் பின்பும் நீங்கள் வேறு எதாவது கண்டத்திற்கும், வேறு ஏதாவது நாட்டின் மிராக்களிற்கும் தாவுவீர்கள் என்பது தெரியும்.
    ////// sure there are problems in Japan as highlighed in that link from Ara Ticket (and thanks to him for this). but no nation is 100 % perfect and my basic argumets about Japan was about their status in 1945 when compared to now. they starved then and the whole nation was in ruins then. India was in a much much better shape then. compare now.

    and Japan’s current problems are due to its complex culture and ohter reasons. but they will try to correct them continiously and when this recession is over, the unempolyment and other problems in Japan will reduce slowly. now, tell me your SOLUTIONS for them , if you can. all you can crap about is old stuff about class war and exploitation.

  39. அறிவு,

    முதலாளித்துவதம் என்ற பெயரில் தற்போது நடக்கும் விசியங்களில் உள்ள குறைபாடுகளை, ஓட்டைகளை,
    அநீதிகளை, அக்கிரமங்களை பற்றி வெளிப்படையாக விவாதிக்க நான் எப்போதும் தயார் தான். புனித பிம்மங்கள் என்று எதுவும் எமக்கு இல்லை. அமெரிக்க மற்றும் பல நிறுவனங்கள் செய்யும் தவறுகளை, வெளிப்படையாக தவறுகள் என்று ஏற்று கண்டிக்கும் நேர்மை எமக்கு உள்ளது. மேலும் உண்மையான முதலாளித்துவம் எந்த நாடுகளில் எந்த அளவில் அமலாகி வருகின்றன என்பதை பற்றியும் விவாதிக்கிறேன் / எழுதுகிறேன். 100 % சரியான தீர்வு முதலாளித்துவத்தில் இல்லை. ஆனால் அதை விட சிறந்த தீர்வு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மாற்றாக நீங்க வைக்கும் மார்க்ஸிசம் நிலைமையை மிக மிக மோசமாக்கி, மனித உரிமைகளை அழித்து, நாட்டை நாசம் செய்யும் என்பதே கடந்த கால வரலாறு காட்டும் உண்மை.

    கம்யூனிசம் அல்லது சோசியலிசம் என்ற பெயரில் பல நாடுகளில் நடந்த கொடுமைகளை பற்றி வெளிப்படையாக விவாதிக்கும் நேர்மை உம்மிடமும் (பலரிடமும்) இல்லை. மாவோ மற்றும் ஸ்டாலின் பற்றி
    எழுதினால் அவதூறுகள் என்று ஒற்றை வரியில் மறுப்பீர்கள். அவர்களில் செயல்களால் கொல்லப்பட்டவர்களின்
    மொத்த எண்ணிக்கை பற்றிதான் சரியான தகவல்கள் இல்லை. (காரணம் அன்று சுதந்திரமான ஊடகங்கள் அங்கு அனுமதிக்கப்படவில்லை). ஆனால் பெரும் கொலைகள் மற்றும் சாவுகள் நடக்கவே இல்லை என்று சொல்வது சிறிதும் நேர்மை இல்லாத சொல். இங்கு இணைய்ததில் இப்படி எழுதலாம். ஆனால் சம்பந்தப்பட்ட நாடுகளில் (கிழக்கு அய்ரோப்பா, உக்ரேன், ரஸ்ஸியா, சீனா) போன்ற நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு உண்மைகள் தெளிவாக தெரியும். அவர்களில் முன்னோர்கள் பட்ட கொடுமைகளை யாரும் சதியால் உருவாக்க முடியாது. உண்மைகளைப் பற்றி அம்மக்களும், உலக அறிவு உலகமும், வரலாறும் தெளிவாக பதிவு செய்துள்ளன. இன்று ஸ்டாலின் மற்றும் மாவோ ஆட்சி திரும்ப வேண்டும் என்று எந்த மடையனும் அந்நாடுகளில் விரும்புவதில்லை. வேண்டுமானால் சென்று பாருங்கள்.

  40. /The UP’s program called for a democratic “Chilean road to socialism”. 1970-1971

    After assuming power in November 1970, the UP rapidly began to implement its program. In the area of structural reforms, two basic measures were immediately begun. First, agrarian reform was greatly intensified, and a large number of farms was expropriated. Second, the government proposed to change the constitution in order to nationalize the large copper mines, which were jointly owned by large United States firms and the Chilean state. Government expenditures expanded greatly, and in 1971 real salaries and wages in the public sector increased 48 percent, on average. Salaries in the private sector grew at approximately the same rate. Also, between 1970 and 1972 public sector employment grew at an average of 11.4 percent per year.[1] In the first two quarters of 1971, manufacturing output increased 6.2 percent and 10.6 percent compared with the same periods in the previous year. Manufacturing sales grew at even faster rates: 12 percent during the first quarter and 11 percent during the second quarter.

    Overall, the behavior of the economy in 1971 seemed to vindicate the UP economists: real GDP grew at 7.7 percent, average real wages increased by 17%, aggregate consumption grew at a real rate of 13.2 percent, and the rate of unemployment dipped below 4 percent.[1] Also, and more important for the UP political leaders, income distribution improved significantly. In 1971 labor’s share of GDP reached 61.7 percent, almost ten percentage points higher than in 1970. All of this created a sense of euphoria in the government. //
    ////// that is date for one year only. if you are honest, you should have put up the data for all the subsequent years and why no one cares to go back to the old policies now.

    • அதியமான் தமிழுக்கான பிளாக்கில் தமிழிலே எழுதவும்
      (உமது தாய் மொழி தமிழ்தானே ?)

  41. //
    Posted on August 25, 2009 at 10:40 am

    Arivu,

    actually i worked as an employee in Chellas Impex at Karur ten years ago. and if anyone needs i can give the name and address of my current business in karur. what the hell can anyone do about it ? you still have not answerd any one my core arguments about Chile or Japan or trend towards free markets ALL over the world since 1980. and about the comparitive data on poverty in India when compared with 1970s. . and about IMF’s exit from India, Chile, etc.. try to visit Chile and discuss with them about their past and present.// அதியமான், சிலி பற்றிய உங்கள் வினாக்களுக்கு என் பதில் தான் முன்றைய பதிவு. இருந்தாலும் மீண்டும் ஒரு copy & paste

    சிலி பற்றி நான் முன்பே பதிலளித்தேன். அதற்கு உங்கள் பதில் 70-80 ஐ விட எவ்வளவே மேல் என்பது. 70-80 களில் இடதுசாரி அரசு செய்த சீர்திருத்தங்களால் அல்ல, அமெரிக்க பெறு முதலாளிகளுக்குச் சொந்தமான மிகப் பரந்த விளைநிலங்களையும், காப்பர் சுரங்கங்களையும் அரசுடைமையாக்கப்பட்டதால், சிலி மீதான அமெரிக்கப் பொருளாதாரத் தடை, ஸ்டாலினிக்கு பின்னான சோவியத் சமூக ஏகாதிபத்தியவாதிகளின் அமெரிக்க முதலாளித்துவத்தோடு கூடிய கள்ள உறவு அவற்றால் அந்த அரசு மிக மோசமான பொருளாதார சீர்குலைவுகளைச் சந்தித்தது என்பது உண்மைதான். ஆனால், இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக லட்சக்கணக்கானவர்களைப் படுகொலை செய்த பினாசெட் பின்பும், சிகாகோ பாய்ஸ் பின் நின்றும் சிலியின் நவகாலனியமாக்கலை அமெரிக்க அரசு தான் செய்த்து என்பதை, பினாசெட்டின் மீதான சர்வதேச விசாரணையை பிரிட்டன் மூலமாக முடக்கியது என்பதிலிருந்து புலனாகிறது.

    ஆனால் சிலியின் இன்றைய நிலை என்ன ? – இந்தியாவில் உள்ளது போன்ற எகனாமிக் இன் இகியுவாலிடி தான்’. இது தென்னெமெரிக்க நாடுகளிலேயே மிக அதிகமாக உள்ளது.

    http://www.unc.edu/home/pconway/aea2000/Chilemac.pdf

    In spite of this, Chile still suffers from many problems common in Latin America, ranking higher than such countries as Mexico in terms of economic inequality and unemployment rate.[6][7][8]

    Chile had changed since the military takeover in 1973. After some rough economic times, the
    economy posted strong gains in the late 1980s. Real GDP growth had averaged 6.2 percent per
    year, unemployment fell to 6.3 percent from a peak of 30 percent in 1982, and export growth
    surged. However, sixteen years of conservative economic policies and authoritarian rule had
    taken their toll on the working class: almost half of the population was living below the poverty
    line, and real wages remained 19 percent below their 1970 level. Income inequality had
    worsened, especially in the first decade of the Pinochet regime, when the poor had seen their
    wages stagnate while social spending had fallen drastically.

    This was a paradoxical time in Chile’s economic history, a time that some Chileans referred to as
    the “boom”. Output growth averaged 7.9 percent per year from 1977 to 1981, the availability of
    imported goods increased dramatically, and inflation finally fell to 9 percent in 1981 (see Tables
    A1 through A3). But not all Chileans were taking part in this “boom”: unemployment remained
    stubbornly high at 15 percent, real wages were still 27 percent below their 1971 level, and income
    inequality was worsening as the richest 20 percent were gaining an ever-larger share of income.

    Despite the success of the structural reform and stabilization policies, not all is rosy. A high
    proportion of Chileans — estimated at around 45 percent by Torche (1987) — were living below
    the poverty line in the mid-1980s. Income inequality worsened through the crisis of 1982-83
    before recovering somewhat: Table 1 shows that the share in national income of the highest
    quintile increased steadily from 1970 to 1989, while the income share of the poorest two quintiles
    declined from 1970 to 1982-83 before rising in the late 1980s. While unemployment fell
    substantially in the late 1980s, real wages remain 22 percent below their 1970 level. Social
    spending suffered great cutbacks in the wake of the 1982-83 economic crisis: per capita health,
    housing and education budgets declined more than 20 percent.

    The UP’s program called for a democratic “Chilean road to socialism”. 1970-1971

    After assuming power in November 1970, the UP rapidly began to implement its program. In the area of structural reforms, two basic measures were immediately begun. First, agrarian reform was greatly intensified, and a large number of farms was expropriated. Second, the government proposed to change the constitution in order to nationalize the large copper mines, which were jointly owned by large United States firms and the Chilean state. Government expenditures expanded greatly, and in 1971 real salaries and wages in the public sector increased 48 percent, on average. Salaries in the private sector grew at approximately the same rate. Also, between 1970 and 1972 public sector employment grew at an average of 11.4 percent per year.[1] In the first two quarters of 1971, manufacturing output increased 6.2 percent and 10.6 percent compared with the same periods in the previous year. Manufacturing sales grew at even faster rates: 12 percent during the first quarter and 11 percent during the second quarter.

    Overall, the behavior of the economy in 1971 seemed to vindicate the UP economists: real GDP grew at 7.7 percent, average real wages increased by 17%, aggregate consumption grew at a real rate of 13.2 percent, and the rate of unemployment dipped below 4 percent.[1] Also, and more important for the UP political leaders, income distribution improved significantly. In 1971 labor’s share of GDP reached 61.7 percent, almost ten percentage points higher than in 1970. All of this created a sense of euphoria in the government. //

    இதோடு தோழர் பென் முதலியோர் கொடுத்த சுட்டிகளையும் பார்க்கவும்.

    //prove this with data first. actually, Chile is the most successful and properous democracy in all Latin America. // இதற்கு John PIlger ‘War on Democracy’ இதனையும், நான் கொடுத்துள்ள புள்ளிவிவரங்களும் போதுமானவை.

    சிலியின் வளர்ச்சி என்று எதனைக் குறிக்கிறீர்கள் ? எகனாமிக் இன்பேலன்ஸ் மிக அதிகமாக உள்ள – தென்னெமெரிக்க நாடுகளிலேயே மிக அதிகமாக உள்ளதாக நீங்கள் கொடுத்த விக்கி சுட்டிகளிலேயே உள்ளது. ஆக அமெரிக்க ஏகாதிபத்தியம், தனக்கென்று சில தரகு முதலாளிகளை சிலியில் உருவாக்கி (கோடிஸ்வர்கள் மிகச்சிலபேர்), அதன் மூலம் பெருவாரியான மக்களை சுரண்டும் ஒரு நிலைதான் இந்த எகனாமிக் இம்பேலன்ஸ். இதைத்தான் நான் பதிலாகச் சுட்டியுள்ளேன்.

  42. //actually i worked as an employee in Chellas Impex at Karur ten years ago. and if anyone needs i can give the name and address of my current business in karur. what the hell can anyone do about it ?// முதலில் கொடுங்கள் பார்க்கலாம். நீங்கள் முதலாளியா அல்லது தொழிலாளியா என்று தெரிந்து கொள்ளலாம்.

  43. //கம்யூனிசம் அல்லது சோசியலிசம் என்ற பெயரில் பல நாடுகளில் நடந்த கொடுமைகளை பற்றி வெளிப்படையாக விவாதிக்கும் நேர்மை உம்மிடமும் (பலரிடமும்) இல்லை. மாவோ மற்றும் ஸ்டாலின் பற்றி
    எழுதினால் அவதூறுகள் என்று ஒற்றை வரியில் மறுப்பீர்கள்.// அதியமான் யார் மறுப்பது ? உங்கள் ரஸ்ஸல் முதலானோரின் வண்டவாளங்களை அவர்களுக்கு லஞ்சம் கொடுத்த பிரிட்டிஷ் உளவு நிறுவனமே ஒப்புக் கொள்ளும்போது, நீங்கள் ஏன் “ரஸ்ஸல் அப்படியல்ல. அவர் கோடீஸ்வரர், அப்ப்டியெல்லாம் செய்ய மாட்டார்” என்று ஒற்றை வரியில் மறுக்கிறீர்கள் ?”

  44. /////// that is date for one year only. if you are honest, you should have put up the data for all the subsequent years and why no one cares to go back to the old policies now…// என் பதிவிலுள்ள மற்ற விடயங்களையும் பார்க்கவும். உங்களுக்காக மீண்டும் பதிவிட்டுள்ளேன்.

    கீழ் உள்ள பதிவினை ஏன் விட்டு விட்டீர்கள் ?

    http://www.unc.edu/home/pconway/aea2000/Chilemac.pdf

    In spite of this, Chile still suffers from many problems common in Latin America, ranking higher than such countries as Mexico in terms of economic inequality and unemployment rate.[6][7][8]

    Chile had changed since the military takeover in 1973. After some rough economic times, the
    economy posted strong gains in the late 1980s. Real GDP growth had averaged 6.2 percent per
    year, unemployment fell to 6.3 percent from a peak of 30 percent in 1982, and export growth
    surged. However, sixteen years of conservative economic policies and authoritarian rule had
    taken their toll on the working class: almost half of the population was living below the poverty
    line, and real wages remained 19 percent below their 1970 level. Income inequality had
    worsened, especially in the first decade of the Pinochet regime, when the poor had seen their
    wages stagnate while social spending had fallen drastically.

    This was a paradoxical time in Chile’s economic history, a time that some Chileans referred to as
    the “boom”. Output growth averaged 7.9 percent per year from 1977 to 1981, the availability of
    imported goods increased dramatically, and inflation finally fell to 9 percent in 1981 (see Tables
    A1 through A3). But not all Chileans were taking part in this “boom”: unemployment remained
    stubbornly high at 15 percent, real wages were still 27 percent below their 1971 level, and income
    inequality was worsening as the richest 20 percent were gaining an ever-larger share of income.

    Despite the success of the structural reform and stabilization policies, not all is rosy. A high
    proportion of Chileans — estimated at around 45 percent by Torche (1987) — were living below
    the poverty line in the mid-1980s. Income inequality worsened through the crisis of 1982-83
    before recovering somewhat: Table 1 shows that the share in national income of the highest
    quintile increased steadily from 1970 to 1989, while the income share of the poorest two quintiles
    declined from 1970 to 1982-83 before rising in the late 1980s. While unemployment fell
    substantially in the late 1980s, real wages remain 22 percent below their 1970 level. Social
    spending suffered great cutbacks in the wake of the 1982-83 economic crisis: per capita health,
    housing and education budgets declined more than 20 percent.

  45. //இன்று ஸ்டாலின் மற்றும் மாவோ ஆட்சி திரும்ப வேண்டும் என்று எந்த மடையனும் அந்நாடுகளில் விரும்புவதில்லை. வேண்டுமானால் சென்று பாருங்கள்./// அப்படியா ? இன்று ரஸ்யாவில் தன்னை குளிரில் இருந்து காத்துக் கொள்ள ஒரு பூட்ஸ் ஜோடிக்காக ஒரு ரஷ்யச் சிறுமி விபச்சாரி ஆகிறாள். அவர்கள் மீண்டும் கம்பியூனிஸத்திற்கு திரும்ப விரும்புகிறார்கள். இதனால்தான் உங்கள் IMFஎல்லாம். கம்பியூனிஸ பூதம் மீண்டும் எழுந்து விட்டதாகப் பினாற்றுகிறார்கள்.

  46. //and Japan’s current problems are due to its complex culture and ohter reasons. but they will try to correct them continiously and when this recession is over, the unempolyment and other problems in Japan will reduce slowly. now, tell me your SOLUTIONS for them , if you can. all you can crap about is old stuff about class war and exploitation.// அப்படியே மாற்றிச் சொல்லுகிறீர்களே ? ஜப்பானில் இப்போது வேலைவாய்ப்பின்மைப் பெருகி வருகிறது. நீங்கள் சிலி முதலான ஓல்டு ஸ்டப்களைச் சொல்லலாம். நாங்கள் அதற்கு பதிலளித்தால் அது நடந்த கதை, தொடங்கியப் பிரச்சனைக்கு வாரும் என்கீறீர் ?

  47. //Author: அறிவுடைநம்பி
    Comment:

    //actually i worked as an employee in Chellas Impex at Karur ten years ago. and if anyone needs i can give the name and address of my current business in karur. what the hell can anyone do about it ?// முதலில் கொடுங்கள் பார்க்கலாம். நீங்கள் முதலாளியா அல்லது தொழிலாளியா என்று தெரிந்து கொள்ளலாம்.///

    கரூர் என்று தவறுதலாக டைப் செய்து விட்டேன். 2001இல் இருந்து கீழ் கணட நிறுவனத்தை நடத்தி வருகிறேன். Skylark Plastic Industries, 10, Thiruvengadam Nagar, Kandanchavadi, Chennai – 96. Ph : 24541475

    என்ன மயர புடீங்கிடீர்களா ? தைரியம் இருந்தால் இதே போல உமது விலாசத்தை எழுதுவம்.

  48. Arvivu,
    there is acute poverty in russia, peru, etc. but there is no passion or movements there for the good old days of Stalinism or Allende’s socialism. in Chile, poverty ratio dropped from more than 50 % in 1970 to less than 20 % now. and your post too talks about the success of reforms. ok. people there and everywhere have realised the folly of statism or socilaism which is destructive in the long run. you have no idea about the support for these foolish polices in the 60s and 70s there. now there are no such mass movements or leanings there. old die hards exist in very small groups. and in Russia, the massive disparity and corruption is due to the CUMULATIVE effect of 80 years of soviet style marxism. compare France or W.Germany to Russia. Russia could have become prosperous under democratic and liberalism with a free market economy like W.Germany had easily. but…

  49. //கரூர் என்று தவறுதலாக டைப் செய்து விட்டேன். 2001இல் இருந்து கீழ் கணட நிறுவனத்தை நடத்தி வருகிறேன். Skylark Plastic Industries, 10, Thiruvengadam Nagar, Kandanchavadi, Chennai – 96. Ph : 24541475

    என்ன மயர புடீங்கிடீர்களா ? தைரியம் இருந்தால் இதே போல உமது விலாசத்தை எழுதுவம்.//

    மயிர் புடுங்குவோர் கவனத்திற்கு:

    முதலில் அவர் எவ்வளவு நல்ல முதலாளி என்பதை கண்டுபுடிக்கவும். முக்கியமாக எவ்வளவு நேரம் தொழிலாளியை வேலை வாங்குகிறார், வருட விடுமுறை எவ்வளவு, பயண படி எப்படி, மருத்துவ விடுமுறை எப்படி, வருங்கால வைப்பு நிதி போன்றவர்களுக்கு உதவுகிறாரா என்று சகல விசயங்களையும் தெரியபடுத்தவும் .

    அதற்கப்புறம் இதை படிக்கவும்:
    # Freedom in capitalist society always remains about the same as it was in the ancient Greek republics: freedom for the slave-owners. – lenin.

    அதியமாநிர்க்கு பதிலளிக்கும் தோழர்களுக்கு நன்றி. பல புதிய தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது.

  50. நேரில் வந்தால் பதில் சொல்கிறேன். உம்மைப் போல பொட்டி தட்டற வேலைக்கு போயிருக்கனும். ஏஸி அறையில் இருந்து கொண்டு பேசுவீர் நீர்.

    And Lenin’s statement is nonsense as proved in modern day Sweden or France or Canada. ok. and your quoting this crap blindly shows how realisitc you are !!

  51. //n modern day Sweden or France or Canada//

    what do you know about Modern sweden ? that shows how good you know about sweden.
    you are totally illterate.

    In sweden:

    alcohol distribution and sale is done by ONLY Govt
    Public transport is run by ONLY Govt
    Education and health care is run ONLY by Govt
    Medicine supply run ONLY by Govt
    giving 9 months paid leave for couple for every child

    This is NOT part of the CAPITALSM you talk about here.
    This is part of socialism, sir!

    while having all the above socialist status ( and i support them) , look how it is also a victim of american imperialism:

    Just look at the recent pirate bay case. how american RIAA MPAA made sweden to enforce their millianim copyright law,
    in the rencet past, employer no longer have to give “definded benefit pension” rather they can invest the money and give you the return (whatever it can be why you retire),
    find out how many of big swedish companies have how much american investment ( saab, volvo etc )
    people who protest for “selling aircraft (saab) to the counties in conflict” send to jail, letting the corporations hold seperate shares (class b etc) for control part…
    I can list 100s of them. are you ready to justify ?

    நானும் உங்கள மாதிரி மனிதர்களின் உழைப்பை சுரண்டும் முதலாளி வர்கமாக போயிருக்கனும். அதற்க்கு மணம் இல்லாததால் பொட்டி தட்டும் அடிமையாகவே இருக்க முடிவு செய்துவிட்டேன்.

    • JP.

      Sweden is a free market economy with a strong welfare set up. that is not the socilaism of communist variety. the private sector is dominanat in most sectors and except for the sectors which you had quoted, there is a vibrant private sector which is the back bone of Sweden. and try this definition of socialsim with Asuran !! there are many variations and models for capitalsim or whatever it is called now. and Sweden is one type. and our debtate was about Lenin’s quote equating modern liberal democratic capitalstic states with slave owning Greece. ok. isn’t it obvious that Lenin was wrong ?

  52. //sure Russel got bribes. prove this from sources. is it the same as confirmed death of crores of inncoent people ?//

    என்ன அதியமான் உமக்கு செலக்டிவ் ஆம்னிஸியாவா ? சர்வதேசியவாதிகள் கொடுத்த லிங்குலேயே, அந்த ரஸ்ஸல் யாரிடம் லஞ்சம் வாங்கினார் என்பதை பிரிட்டிஷ் உளவு துறையில் பணியாற்றிய உளவு பெண்மணி சொல்லியுள்ளதை குறிப்பிட்டுள்ளார். அதனைப் பாரும் முதலில்.

    இந்த தமிழ் சர்க்கிள் சுட்டியிலும் இதனைப் பார்க்கவும்

    ஸ்டாலின் மீதான அவதூறு : ஹிட்லர் முதல் இலக்கியவாதிகள் வரை

    • எவளோ ஒரு பெண் ஒற்றர் சொன்னால், அதுதான் ஆதாரமா ? நான் கேட்டது நிருபிக்கப்படத்தக்க ஆதாரம். லெனின் லஞ்சம் வாங்கினார் என்று ஒரு ஆங்கில ஒற்றன் சொன்னால் அது ஆதாரமாகிவிடுமா ? ரஸ்ஸல் பற்றி இன்றைய மதிப்பீடு என்ன என்று உமக்கு தெரியுமா ?
      விசாரித்து, படித்து பாரும். மேலும் லஞ்சம் வாங்கும் கேவலமானவராக இருந்தால், அவர் முதலாம் உலகபோரில் இங்கிலாந்திற்க்கு எதிராக கடுமையாக பிரச்சாரம் செய்து தடை செய்யப்படும் நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டார். அவரை பற்றி உமக்கும், உமது தோழர்களுக்கும் முழுமையாக தெரியாது.

      • //லெனின் லஞ்சம் வாங்கினார் என்று ஒரு ஆங்கில ஒற்றன் சொன்னால் அது ஆதாரமாகிவிடுமா ?//

        அப்படி ஒரு ஒற்றன் சொல்லுவதற்கு தேவை இருப்பதை உணர்கிறோம். ஆனால் ஆங்கில ஒற்றன் ஒருவர் ஏன், ரஸ்ஸலை அம்பலப்படுத்தி அவர்களின் எதிரியான ஸ்டாலினை புனிதப்படுத்த வேண்டும்?

        ஒருவேளை பிரிட்டன் (அல்லது குறைந்த பட்சம் பிரிட்டிஷ் உளவுத் துறை) கம்யுனிச நாடாக மாறிவிட்டதோ(அதியமான் பாசையில் ஸ்டாலினிச நாடாக மாறிவிட்டதோ)?

  53. //என்ன மயர புடீங்கிடீர்களா ? தைரியம் இருந்தால் இதே போல உமது விலாசத்தை எழுதுவம்.
    // அப்படியா ? என்னுடைய முகவரி : EDS, 7th Floor, Tidel Park, Tharamani, Chennai – 600301.வந்து நீங்கள் மயிர் பிடுங்குகள் பார்க்கலாம். சலூன் செலவாவது மிஞ்சும். உம்முடைய கரூர் முகவரியை நான் உமது ஆங்கில பிளாக்கில் இருந்து எல்லாம் எடுக்கவில்லை. உமது ஆங்கில பிளாக்கின் முகவரி எனக்கு தெரியாது. ஆனால் நீர்தான் செல்லாஸ் இம்பெக்ஸ் இன் முதலாளியாக இருந்தீர் என்பது மட்டும் தோழர்கள் சொல்லித் தெரியும்.

    • அறிவுடை நம்பி,

      பெர்ஸனல் அட்டாக் என்ற பெயரில் எனது பழைய கம்பெனி பெயரை இங்கு பிரசரித்தது நீதான்.
      பிறகு நான் எனது புதிய நிருவனத்தை பற்றி சொன்ன போது, விலாசம் கொடு என்றாய். முழு முகவரி மற்றும் தொலை பேசி எண் கொடுத்தேன். ஆனால் நீ உனது உண்மை பெயர் மற்ரும் தொலை பேசி எண்ணை தரவில்லை. டைடல் பார்க்கில் வேலை செய்து கொண்டு செம்புரட்சி செய்யப் போகிறாயா ? :)))) கடும் வெயிலில் ஒரு நாளைக்கு மிக குறைந்த கூலியில், கொடுமையான சூழலில் கல் உடைக்கும் தொழிலாளிகளும் நீரும் ஒரே வர்கமா ? நல்ல கதை. புரட்சி வரட்டும். பிறகு உமக்கு புரியும் யார் தொழிலாளிகள் என்று, யார் நசுக்கப்படுவார்கள் என்று.

      மயரபுடுங்குவது யார் என்று வாசகர்கள் முடிவு செய்யட்டும். உன்னை மாதுரி வெத்துவேட்டுகளை கண்டு பயந்துவிடுவேன் என்று நினைத்தாயா ?

      செல்லாஸ் இம்பெக்ஸ் முதலாளிகள் இதை அறிந்தால் சிரிப்பார்கள். அங்கு நான் ஒரு சாதாரண தொழிலாளியாகத்தான் இருந்தேன். வேண்டுமானால் கரூர் சென்று விசாரித்துப்பார். by the way EDS has been merged with Mphasis and is now called Mpashis an EDS company. isn’t it ?

  54. //Arivu, only a cheap coward like you would dig up my old company address chellas from my old english posts and paste here. as if it is personal attack//பொட்டி தட்டுவதாகப் பர்சனல் அட்டாக் கொடுத்தது நீர்தான் அதற்காகத்தான் உமது முதலாளித்துவ பின்னணியை வெளியிடுவது அவசியமாகி விட்டது.

    • இவரு பெரிய பாட்டளி வர்கம் பாரு.. நான் ஒரு பெரு முதலாளி பாரு ! :))
      உமது ஒரு வருட சம்பளமே எமது மொத்த முதலீடு.

      புரட்சி வரனும் அய்யா. அதன் பிறகுதான் சில விசியங்கள் பலருக்கும் புரியும். வட கொரியா நாட்டில் பிறந்து இன்று அங்கே புரட்சிகர தொழிலாளியாக வாழ வேண்டியவர் டைடல் பார்கில் “அடிமை” தொழில் புரிகிறார். அந்தோ !!

      கம்யூனிச அமைப்பில் தான் உண்மையான அடிமைகள் உருவாக்கப்படுவார்கள். ஸ்ட்ரைக் செய்ய உரிமை கிடையாது. விலைவாசி உயரும் போது சம்பள உயர்வோ / கோரிக்கைக‌ளை வைப்பது சுலபமல்ல. முக்கியமாக உற்பத்தி அளவு அல்லது வேலை நேரம் மத்திய கமிட்டி ஆணைபடி நிர்னியக்கப்படும். அதெல்லாம் அனுபவித்தால் தான் புரியும். சொல்லி புரிய வைக்க முடியாது. உடனே இந்தியாவில் உள்ள ஸ்வெட் ஷாப்புகளை ஒப்பிடுவீர்கள். இங்கு வறுமை காரணமாக அப்படி வேலை செய்ய வேண்டிய நிலை. மேலும் 110 கோடி மக்கள் தொகைக்கு போதிய வேலை வாய்ப்பு (எந்த அமைப்பாலும்) உருவாக்க முடியாது. ஆனால் அடிப்படை சுதந்திரம் உள்ளது. அதாவது வேலை வேண்டாம் என்று சொல்லி புலம் பெயரலாம், அல்லது ஊரை விட்டு ஊர் மாறலாம்.

  55. //but there is no passion or movements there for the good old days of Stalinism// அப்படியா அதியமான், ஸ்டாலின் அவர்களுடைய ஆட்சிக்காலத்தில்தான் ரஷ்யாவில் வேலையில்லாத்திண்டாட்டம் முழுமையாக ஒழிந்தது. மேல் சொன்ன தமிழ் சர்க்கிள் பதிவையோ, அசுரன் பதிவையோ பார்க்கவும்.

    • சூப்பர். நாட்டில் பல கோடி மக்கள் பஞ்சத்திலும், முகாம்களிலும் கொல்லப்பட்டால் பின் எப்படி வேலை இல்லாத் திண்டாட்டம் இருக்கும். ஸ்டாலின் காலத்தில் உக்ரேனில் பிறந்திருக்கனும் அய்யா நீர். இங்கு மென்பொருள் துறையில் சுகமாக வேலை பார்த்துக்கொண்டு இப்படிதான் அசுரனை மேற்கோள் காட்டுவீர். நான் ஏற்கெனவே சொன்னபடி, கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கைகளில் தான் விவாதம். மாபாதக கொலைகள், பட்டினிச்சாவுகள் நடக்கவில்லை என்று எந்த வரலாற்று ஆய்வுகளின் இன்று சொல்வதில்லை. சொல்லவும் முடியாது.

  56. தோழர் அறிவு,
    அதியமான் என்கிற இந்த நபருடன்
    நீங்கள் தான் நின்று மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.
    புரிந்து கொண்ட தோழர்கள் அனைவரும் ஒதுங்கி விட்டார்கள்.
    இது போன்றதுகள் புரட்சியே வந்தாலும்
    இல்லையில்லை வராது என்பார்கள் என்று ஒரு தோழர்
    பின்ணூட்டமிட்டிருந்தார்.
    அது தான் உண்மை
    நமக்கு வேற வேலை இல்லையா கத்துற வரைக்கும்
    கத்தட்டும்னு விட்ருங்க காம்.
    அப்புறம் தானா அடங்கிடும்.

    அதுவரைக்கும் நாம எதையாவது படிக்கலாம்.

    ஆமாம் நீங்க ஸ்டாலின் சகாப்தம் பார்த்தீங்களா தோழர் ?
    பாட்டாளி வர்க்கத்தினுடைய உறுதி மிக்க‌ தலைவனுடைய
    சாதனைகள் தான் எவ்வளவு வியக்க வைக்கிறது.

    • //அதுவரைக்கும் நாம எதையாவது படிக்கலாம்.

      ஆமாம் நீங்க ஸ்டாலின் சகாப்தம் பார்த்தீங்களா தோழர் ?
      பாட்டாளி வர்க்கத்தினுடைய உறுதி மிக்க‌ தலைவனுடைய
      சாதனைகள் தான் எவ்வளவு வியக்க வைக்கிறது.
      /// certainly that part of history is a stunner. actually read what Russians and East Europeans write about that now. :)))

  57. இது போன்றதுகளா ? சரிதான். ஜந்துகளோடு விவாதம் பண்ணினால், எம்மையும் ஜந்தாக மாற்றிவிடுவீர்கள் போல !! :))

    புரட்சி வந்தாலும், அதை மறுக்க எம்மைப்போன்றவர்களை உயரோடு விட்டுவைக்கமாட்டீர்களே ? பிறகு எங்க அதை மறுக்கு ?!!!
    :))

    சரி, இந்தியாவில் எப்ப புரட்சி கொண்டு வரப்போகிறீர்கள் ?
    அடுத்த வருடமா ? அல்லது இன்னும் பத்தாண்டுகளிலா ? அல்லது 100 அல்லது ஆயிரம் ஆண்டுகளிலா ? பதில கிடையாது அல்லது தெரியாது.

    சரி, அதுவரை இந்த பாழாப்போன முதலாளித்துவம் அதன் போக்கில் செல்லட்டுமே.
    உமது மேலானா ஆலோசனைகளை (அதாவது 80களில் கம்யூட்டரை கண்மூடித்தனமாக எதிர்தது போல, 70களி அய்.பி.எம் ஐ துரத்தியது போல, 1991இல் தாரளமயமாக்களை எதிர்த்தது போல, இன்று ரிலையன்ஸ் பிரஸ், ஜி.எம்.காட்டன் போன்றவைகளை குருட்டுத்தனமாக எதிர்ப்பது போன்ற ஞானம் மிக்க எண்ணங்களை) புரட்சிக்கு பின் செய்லபடுத்தலாமே !!

  58. அதியமான்,

    சொன்னதவே திருப்பி திருப்பி சொல்லுறீங்க. அப்புறம் நான் 10 பாயின்ட் சொன்னா , அதுல ரெண்டுத்துக்கு மட்டும் என் விவாதத்துக்கு சம்பந்தம் இல்லாம பதில் சொல்லுறீங்க ( நம் இலங்கையில் சகோதரனின் உரிமைக்காக செத்து ஒழிந்த ஒரு போராளி குழுவ பத்தி பேச கூட உரிமை இல்லாத நாட்டுல உங்களுக்கு எல்லாம் சுதந்திர தினம் கொண்டாட வெக்கமா இல்லை நு கேட்டா / அதுவும் ஆதாரமா தமிழக அரசே வெளியிட்ட அறிவிப்பை காண்பித்தால் கூட ஜம்மூ காச்மீரள போராடுரான்களே நே நு திசை திருப்புறீங்க. (நான் மாசிடோநியாவில மாதிரி வாக்கெடுப்பு எடுக்க தயாரான்னு கேட்டு கேட்டு உங்க லெவலுக்கு மாறி மாறி ஜம்ப் பண்ண நேரம் இல்லை.

    //Sweden is a free market economy with a strong welfare set up.//

    நீங்க மொதல்ல அதியாமான்ஸ் கைடு டு ஏக்கனாமிணு போட்டு உங்களுக்கு புடிச்சா மாதிரி ‘ப்ரீ மார்கெட்’ நுணா என்னனு எழுதுங்க.

    அரசு மட்டுமே மது விற்கும், அரசு மட்டுமே மருந்து விக்கும், அரசு மட்டுமே பள்ளி கூடம் நடத்தும், அரசு மட்டுமே பஸ் விடும், ரயில் விடும் எப்படி எல்லாம் இருந்தா அதுக்கு பேரு “free market” இல்லை. இன்னும் அங்கு தொழிலார் யூனியனை எந்த ஒரு நிறுவனமும் புறக்கணிப்பதோ, அங்கீகரிக்காமல் இருப்பதோ சட்டப்படி குற்றம். ஐ பி எம் ஆ இருந்தா கூட யுனியன ஒத்துகிட்ட தான் வேலை நடத்த முடியும். இதை எல்லாம் சோசலிசம் என்ற சொல்லில் உங்களுக்கு ஒத்துக்கொள்ள மனம் வராவிட்டால் உங்களை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது . ஏன்னா இதெல்ல்லாம் நடைமுறைக்கு கொண்டுவந்த கட்சிகள், அவுங்க காட்சிகளுக்கு வச்சிருந்தே பேரே சோசலிஸ்ட் தான்.

    மேலும் அந்த நாட்டின் (வளர்ந்து எல்லாரையும் அடிச்சு சாப்பிட்ட பின்னாடி) தற்பொழுதைய வலது சாரி முகத்தையும் – அதுவும் மற்ற எல்லா நாடுகளும் போல அமெரிக்க வல்லரசுகளோட சேர்ந்து கொள்ளை அடிப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

    தயவு செய்து நீங்கள் ஓடிக்கொண்டிருக்கும் குண்டு சட்டியில் இருந்து வெளியே வரவும்.

    அப்புறம் நீங்க சொன்ன “கடும் வெயிலில் ஒரு நாளைக்கு மிக குறைந்த கூலியில், கொடுமையான சூழலில் கல் உடைக்கும் தொழிலாளிகளும் நீரும் ஒரே வர்கமா ? ”

    சரியான வாசகம்

    “கடும் வெயிலில் ஒரு மனிதனை ஒரு நாளைக்கு மிக குறைந்த கூலியில் கொடுமையான கல் உடைக்க வைக்கும் நீயும் ஒரு மனிதனா என்றல்லவா, இருக்க வேண்டும். ”

    அம்பானிக்கும், பி ஆர் பி க்கும், பிரடரிக்கு ஹென்டைர்சனுக்கும் மயிரளவு கூட வித்தியாசம் இல்லை.

  59. அதியமான்,

    //சூப்பர். நாட்டில் பல கோடி மக்கள் பஞ்சத்திலும், முகாம்களிலும் கொல்லப்பட்டால் பின் எப்படி வேலை இல்லாத் திண்டாட்டம் இருக்கும். ஸ்டாலின் காலத்தில் உக்ரேனில் பிறந்திருக்கனும் அய்யா நீர்.//

    ராஜ பக்ஷே காலத்துல நீர் எல்லாம் இலங்கைல தமிழனா பிறந்திருக்கணும் அய்யா. டோனி பிளேர் காலத்துல ஈரக்க்ள பிறந்திருக்கணும் அய்யா… நீர் பேசுவதெல்லாம் விளையாட்டாக இல்லை ? இல்ல நேரு காலத்துல தமிழனா பிறந்து மொழி போராட்டத்துல கலந்திருக்கணும் அய்யா? இல்ல வாஜ் பாய் காலத்துல அவரோட பிறந்தநாளுக்கு அவர் கய்யால தூக்கி போட்ட சேலைய வாங்க பிறந்திருக்கணும் அய்யா …..

    • ஸ்டாலின் காலத்தில் நடந்த பெரும் கொடுமை இது. திறந்த மனதுடன், முழுவதுமாக படிக்கவும் :
      http://en.wikipedia.org/wiki/Holodomor

      உக்ரேன் நாட்டில் இன்றும் இதை யாரும் மறக்கவில்லை. அம்மக்களின் முன்னோர்கள் கொத்துதாக மடிந்ததையும், ஸ்டாலினின் சோவியத் ரஸ்ஸியா அவர்களை நசுக்கியதையும் அவர்களாள் எப்படி மறக்க முடியும். ரஸ்ஸியாவிற்க்கும், உக்ரேனிற்க்கும் இதை பற்றி இன்றும் கருத்து வேறுபாடுகள் உண்டு. இந்த‌
      ஹோலோடமர் என்ற பெரும் பஞ்சம் இன அழிப்பு அல்ல என்று ரஸ்ஸியா வாதிடுகிறது. ஆனால் பாதிக்கபாட்ட மக்களான உக்ரேனியர் அதை ஏற்பதில்லை.

      ஸ்டாலின் இன அழிப்பு பற்றி மேலும் அறிய :

      http://www.enotes.com/genocide-encyclopedia/stalin-joseph http://www.allacademic.com//meta/p_mla_apa_research_citation/3/1/3/9/2/pages313928/p313928-1.php http://www.thepeoplesvoice.org/cgi-bin/blogs/voices.php/2008/01/21/p22696 http://www.historyplace.com/worldhistory/genocide/stalin.htm
      இவை எல்லாம் ஏகாதிபத்திய கட்டுகதைகள், அவதூறுகள் என்று மறுப்பீர்கள். ஆனால் சம்பந்தப்பட்ட மக்களின் சந்ததியினருக்கு உண்மை எது, பொய் எது என்று தெரியும்.

  60. //சரி, இருக்கட்டும். நீங்க கட்டமைக்க விரும்பும் கம்யூனிச இந்தியாவில், ஒரு இனம் (அதாவது
    தமிழர்கள் போல) தனி நாடாக விழைந்தால் என்ன செய்வீக ?//

    நான் தான் முன்னாடியே சொன்னேனே.. நான் வினவு இல்லையப்பா. நான் தனி தமிழ் நாட்டுக்காக குரல் கொடுப்பவன். முதல்ல வினவு தளத்துல பதில் எழுதுறதால எல்லாரும் வினவோட எல்லா அரசியல் பார்வையையும் ஒத்துகிராங்கனு கற்ப்பனை பண்ணுறத நிப்பாட்டுங்க பாஸ்.

    // தமிழ மக்கள் அறப்போர் மற்றும் பிற மாநில பொருட்கள் மற்றும்
    சேவைகளை மறுத்தல் ; இது போன்ற முறைகளில் போராட தடை இல்லை.//

    நான் முன்னாடியே சொன்னது மாதிரி நீங்க கம்பி எண்ணிட்டு முப்பது வருஷம் கழிச்சு வந்துடீங்களா ?
    கல்லூரிக்கு போகாம வெளியே இருந்தா கல்லூரிய இழுத்து மூடுறீங்க, வழக்கறிஞர் எல்லாம் போராடினா ரவுடி போலிஸ அனுப்புறீங்க, உண்ணாவிரதம் இருந்தா பதிலுக்கு எனக்கும் உண்ணாவிரதம் இருக்க தெரியும்னு சொல்லுறீங்க, மண்மோகனுக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டத்த கூட நடத்தவிடாமா முன்னெச்சரிக்கையா கைது பன்ன்னுறீங்க…

    நான் இந்த பதிவில் உங்களிடம் கேட்டிருந்த கேள்விகள் பலவற்றிக்கு நீங்க பதிலே சொல்ல வில்லை . (நண்பர் ஜான் அருமையாக எளிமையாக உங்களிடம் கேட்ட கேள்விக்கு உங்களின் புரிதல் “உளறாதீங்க”. அதை படிக்கிற எல்லோருக்கும் தெரியும் உங்களின் வாதிடும் திறமை.) :
    ————–
    K.R.அதியமான்:
    //பணமுதலை கம்பனிகளுக்கு சலுகைகளும், கடன்களும் தாராளமாக கிடைக்கிறது. /// sure. 🙂 ) and hence this cheap website for vinavu hosted in a server dead cheap (when compared to 15 years ago) and all this free blogs, cheap cells, millions of new jobs in many sectors and huge tax revenue for govt. and much much more.
    ஜான்:
    ஏங்க அதியமான், நீங்க டிபனுக்கு செல்போனும், சாப்பாட்டுக்கு ஹார்ட்டிஸ்கும் சாப்புடறீங்களா?
    K.R.அதியமான்:
    ஜான்,
    சும்மா உளர வேண்டாம். உருப்படியாக வாதாட முயற்சிக்கவும்
    —————–
    இந்த ஒரு விவாதமே சொல்லிவிடுகிறது உங்களது திறமையை.

    வினவு , சூனா பாநா, வித்தகன், பாயாசம் , அர டிக்கட்டு மற்றும் அறிவு எல்லாருக்கும் ஒரு கேள்வி ” தாங்கள் எதன் அடிப்படையில் அதியமானை மதித்து பதில் சொல்லுகிறீர்கள். அவரோட புரொபைல அவரே தன்னை வலது சாரி வழக்கரிங்கன் என்று சொன்ன ஒரே காரணத்திற்காகவா ???

    நான் ஐ டி ஆசாமி கிடையாது. ஆனால் எனக்கு தெரிஞ்சு EDS ச HP தான் வெலைக்கு வாங்குச்சு. ( அதாவது மொதல்ல free market. அப்புறம் அவுங்களுக்கு தேவை காம்படீசன் பிரீ மார்க்கெட். அதுக்கு share holder (யாருட்ட மஜாரிட்டி ஷேர் இருக்குன்னு எல்லாம் கேள்வி கேட்டா அதியாமான் பதில் சொல்ல மாட்டார் ) value creation பண்ணுறேன்னு ஒரு பெரிய மொதலை உன்னொரு பெரிய மொதலய சாப்பிடும் )

  61. JP. in understood the context of John’s quip. but i am not talking about IT and telecom and net alone. about the tremendous growth of employment and tax revenue and cheap products generated by the unshackling of manufacturing and service sector. you all are too young to know the terrible situation until the 80s. and you are damn lucky to get your present job in IT for a good salary. do you know the prospects for a youth in 70s and 80s ? Naxalism developed in 60s and 70s due to the very high unempolyment levels of youth then due to the throttling of privatesector in the name of license raaj then. price rises, shortages, strikes and political feudalism was too high in those days. and comming to your point about subsidised loans for panamudalaihal. this is gross generalisations. but we too oppose the concepts of subsidies to corporate sector, the distortions and corruptions due to SEX concepts ,etc. when will you understand that the growth of big business ALWAYS helped the nation in terms of employment genration, higher tax revenue and wealth creation for all due to the ripple effect. that is the only way to prosperity and conquest of poverty on a large scale. Japan and EU and N.America acheieved them precisely due to free market capitalism.

    • //JP. in understood the context of John’s quip. but i am not talking about IT and telecom and net alone. about the tremendous growth of employment and tax revenue and cheap products generated by the unshackling of manufacturing and service sector.////

      cheap products மட்டும் சொன்ன அதியமான் சீப் லேபர் கிடைக்கும் மர்மத்தையும் சொல்லியிருக்கலாம். செர்விஸ் செக்டரில் வேலை வாய்ப்பு உருவாகும் வேகத்தை விட பல மடங்கு அதிகமாக விவசாயத்தின் சீரழிவால் வேலையிழப்பவர்கள் அதிகம். இதற்கு உதாரணம் அதியமானின் சர்வீஸ் செக்டரில் வேலை செய்ய ஒரிஸ்ஸாவிலிருந்து வரும் பஞ்சத்தில் அடிபட்ட ஏழைகள்.

      அதியமானின் வாழ்க்கை அனுபவமே உலகின் வாழ்க்கை அனுபவம். திருப்பூரே இந்தியா என்று கிணற்றுத் தவளையாக கதறுகிறார் அதியமான். நம்புங்கள் அவரது பார்வை உலகப் பார்வை…

      எதற்கெடுத்தாலும் நைந்டீன் எயிட்டி என்று கூறும் அதியமான் 1980களில் விவசாயம் இருந்த நிலைக்கும் இன்றைய நிலையில் சிரழிந்துள்ளது குறித்தும் தமது உலகளாவிய அனுபவத்தின் அடிப்படையில் கருத்து கூறுவார் என்று நம்புவோம்.

      அதியமான் உருவாக்கிய வேலைவாய்ப்புகள், சமீபத்திய உலகப் பொருளாதார மந்தத்தில் அழிந்து போயினவே ஏன்?

      இவரது அன்பு முதலாளிகள் சுமங்கலி திட்டத்தில் ஏழை விவசாய குடிகளின் தாலியறுத்து உருவாக்கும் சீப் புரோடகட்ஸ் அமெரிக்க சீமாட்டிகளுக்ககோ அல்லது அமெரிக்க சீமாட்டிகளை மனதில் இருத்தி அழையும் கீழைத்தேய சீமாட்டிகளுக்கோதானே செல்கிறது? அவற்றின் சமூக பயன் மதிப்பு என்ன? ஒரு பெரிய பூஜ்யம்?

      அதியமான் வகையாறாக்களின் வேலை வாய்ப்பு புலம்பலின் பின் உள்ள பித்தலாட்டத்திற்கு ஒரு சோற்று பதம், தேசிய கிராமப் புற வேலை வாய்ப்பு திட்டம் ஆகும். இதற்கு அதியமான் கூறும் பதில் இந்தியாவின் மக்கள் தொகைக்கு எல்லாருக்கும் வேலை என்பது யாராலும் கொடுக்க முடியாது என்பது.

      அய்யா, அதியமான் அவர்களே ஒரு நாளைக்கு 12/16 மணிநேரம் ஒரிஸ்ஸா தொழிலாளியை சுரண்டி சீப் புராடக்ட் கொடுத்து லாபம் அல்லும் முதலாளிகள் இருக்கும் வரை எல்லாருக்கும் வேலை என்பது சாத்தியமில்லை.

      சோசலிசத்தில் மனிதர்கள் எண்ணிக்கை பெருகினால் வேலை நேரம் குறையும். கேப்பிடலிசத்திலோ தற்கொலைகள், கொலைகள் பெருகும். அதியமான்களோ ஐ.நா. சபையின் மனித உரிமை சாசனத்தைத்தான் ‘யாம் மிகவும் உயிரினும் மேலாக மதிக்கிறோம்’ என்று உதார் விட்டுக் கொண்டே மக்கள் மடிவதை நியாயப்படுத்துவார்கள் – ‘எல்லாருக்கும் வேலை என்பது சாத்தியமில்லை’ என்று கூறி.

      அசுரன்

      • //Naxalism developed in 60s and 70s due to the very high unempolyment levels of youth then due to the throttling of privatesector in the name of license raaj then. price rises, shortages, strikes and political feudalism was too high in those days.//

        அய்யா ராசா, இந்திய வரலாற்றிலேயே இது வரை காணாத விலை உயர்வையும், பெட்ரோல் விலை உயர்வையும், உணவுத் தட்டுப்பாட்டையும் தற்போது நாம் பார்த்து வருகிறோம். இதற்குக் காரணம் சாட்சாத் அந்த தனியார்மய, தாராளமய, உலகமய பரமாத்மாதன். அந்த பரமாத்மா புண்ணியத்தில்தான் சர்வதேச் சூதாடிகள் (அதியமான் பாசையில் நெம்பத் திறமையான முதலாளிகள்) ஆன்லைன் சூதாட்டம், முன் பேர சூதாட்டம் என்று சூதாடி விலைவாசியை ஏற்றினர்.

        இதை அதியமான் மறுப்பார் என்று பெட் கட்டுபவர்கள் கட்டலாம்.(நாமலும் கொஞ்சம் சூதாடிப் பார்ப்போம்).

        நக்சல்பாரிகள் இன்றும் இருக்கிறார்கள். அது ஒரு அரசியல் தத்துவம்.

    • //and you are damn lucky to get your present job in IT for a good salary. //

      ஐடி, ஐடி இ எஸ் இவையணைத்தும் சேர்ந்து 2007 வரையான பத்தாண்டுகளில் உருவாக்கியுள்ள வேலைவாய்ப்பு வெறும் 16 லட்சம். இத நான் சொல்லல, அதியமானின் அன்பு முதலாளிகளின்(அல்லது சூதாடிகளின்) குழுமமான நாஸ்காம் சொல்லுது.

      இதே நேரத்தில் இந்திய தரகு முதலாளிகளின் தலைமை கொள்ளைக்காரனான பிக்பாக்கேட் டாடா ரத்தன், 2014ல் வேலையற்ற இளைஞர்கள் 44 கோடி பேர் இருப்பார்கள் இதுதான் மிகப் பெரிய அபாயம் என்கிறார். அதியமானின் அன்பு சர்வீஸ் செக்டரோ அல்லது ஐடி செக்டரோ 44 கோடி பேருக்கு வேலை தரும் வலுக் கொண்டவை அல்ல. இதற்கான தீர்வுக்கான சாவி இந்திய விவசாயத்தின் சீரழிவுக்கு காரணமான் எதிரிகளுக்கு எதிரான போராட்டத்தில் இருக்கிறது என்று நான் சொன்னால் அதியமான் ஒத்துக் கொள்வாரா என்ன?

  62. //பெர்ஸனல் அட்டாக் என்ற பெயரில் எனது பழைய கம்பெனி பெயரை இங்கு பிரசரித்தது நீதான்.//பொட்டி தட்டுபவர்கள் புரட்சி பேசுகிறார்கள் என்று பர்சனல் அட்டாக் தொடுத்தது நீர்தான். (கவனம் : பன்மையில் சொல்கிறேன். உமது பதிலை மீண்டும் படித்துப் பார்க்கவும்).

    //உமக்குதான் வெட்கம், நேர்மை சிறிதும் இல்லை. சிலி பற்றியும், 1991 சிக்கல் பற்றியும் நான் பல விசியங்கள் ஆதாரத்துடன் எழுதியதை இதுவரை மறுக்க துப்பில்லாமல், ஓடிவிட்டு இப்ப வந்த இப்படி..
    முதலில் ஒழுங்கா பேச கற்றுக்கொள்ளுங்கள். என்னமோ புரட்சிக்காக களப்பணி செய்பவர் போல ஒரு பில்டப் !! பொட்டி தட்டுகிறவர்கள் பேசுகிறார்கள். 🙂 ))// //எவளோ ஒரு பெண் ஒற்றர் சொன்னால், அதுதான் ஆதாரமா ? நான் கேட்டது நிருபிக்கப்படத்தக்க ஆதாரம்// சொன்னது ஆங்கிலேய பெண், ஆங்கிலேய உளவு நிறுவனத்தில், ரஸ்ஸல் விவகாரத்தை (பணம் பரிவர்த்தனை மற்றும் மற்றைய எலும்புத் துண்டுகள்) கவனித்துக் கொண்டவர். //மேலும் லஞ்சம் வாங்கும் கேவலமானவராக இருந்தால், அவர் முதலாம் உலகபோரில் இங்கிலாந்திற்க்கு எதிராக கடுமையாக பிரச்சாரம் செய்து தடை செய்யப்படும் நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டார். அவரை பற்றி உமக்கும், உமது தோழர்களுக்கும் முழுமையாக தெரியாது…// சாமி உலகையே கரைத்துக் குடித்தவர் நீங்கள் தான். நான் கம்பியுனிஸ்டாக இருந்தாலும் முதலாளிகளை உளவு பார்க்க வேண்டும் என்றால். கம்பியூனிஸ்டுகளைக் கேவலமாக – முதலாளிகளை விட கேவலமாக – திட்ட வேண்டும். அப்போதுதான் ஐந்தாம் படை வேலை செய்ய முடியும். கலையகத்தில் இந்த மாதிரி உளவாளிகளைப் பற்றி படித்திருக்கிறேன். இதைதான் ரஸ்ஸல் செய்தார். //முழு முகவரி மற்றும் தொலை பேசி எண் கொடுத்தேன். ஆனால் நீ உனது உண்மை பெயர் மற்ரும் தொலை பேசி எண்ணை தரவில்லை. டைடல் பார்க்கில் வேலை செய்து கொண்டு செம்புரட்சி செய்யப் போகிறாயா ? 🙂 ))) கடும் வெயிலில் ஒரு நாளைக்கு மிக குறைந்த கூலியில், கொடுமையான சூழலில் கல் உடைக்கும் தொழிலாளிகளும் நீரும் ஒரே வர்கமா ? நல்ல கதை.// என்னுடைய பெயர் அறிவுடைநம்பி தான். ஒருவேளை உமது பெயர் போலியோ ?. ஒரு சுயதொழில் முதலாளியான நீர் டாலர்களைப் பற்றிப் பேசும் போது, ஒரு தொழிலாளியான நான், புரட்சியைப் பற்றிப் பேச கூடாதா ?. வேறு வக்கின்றி இந்த வேலைக்கு நாங்கள் வந்துள்ளோம். கம்பியூட்டர் படித்த நாங்கள் ஒன்று, பிபிஓ வில் சேர வேண்டும். இல்லை சாப்ட்வேரில் வேலைப் பார்க்க வேண்டும். வேறு வழி ? நீங்கள் தான் சொல்லுங்கள் ? எனக்கு முதலீடு வேறு இல்லை. //நான் ஏற்கெனவே சொன்னபடி, கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கைகளில் தான் விவாதம். மாபாதக கொலைகள், பட்டினிச்சாவுகள் நடக்கவில்லை என்று எந்த வரலாற்று ஆய்வுகளின் இன்று சொல்வதில்லை. சொல்லவும் முடியாது.// இது உங்கள் அறியாமை. பட்டினிச் சாவுகள் நடந்த விதம் பற்றி தான் விவாதம். சுனாமியால் இந்தியாவில் ஏற்பட்ட சாவுகள் எப்படி இயற்கையோ அப்படிதான் ரஷ்யாவில் ஸ்டாலின் காலத்திற்கு முன்பு ஏற்பட்ட சாவுகளையும் ஸ்டாலின் செய்ததாக திரிக்கிறார்கள். //கம்யூனிச அமைப்பில் தான் உண்மையான அடிமைகள் உருவாக்கப்படுவார்கள். ஸ்ட்ரைக் செய்ய உரிமை கிடையாது. விலைவாசி உயரும் போது சம்பள உயர்வோ / கோரிக்கைக‌ளை வைப்பது சுலபமல்ல. முக்கியமாக உற்பத்தி அளவு அல்லது வேலை நேரம் மத்திய கமிட்டி ஆணைபடி நிர்னியக்கப்படும்.// அப்படியா ? கம்பியூனிசம் என்பது மத்திய கமிட்டி அல்ல. தொழிற்சாலையின் தொழிலாளர்கள் தங்களைத் தாங்களே நிர்வகிப்பதால் (முதலாளி இல்லை) வேலை நேரம், சம்பளம் அவர்களே தீர்மானிப்பார்கள். ஆகவே ஸ்டிரைக்கிற்கு அவசியம் இல்லை. மேலும் இப்போதுள்ள சீன போலி அமைப்போடு எம்மை ஒப்பிடாதீர்கள். புதிய ஜனநாயகத்தில் ஏற்கனவே பல கட்டுரைகள் சீனத்தில் தொழிலாளர்கள் துயரம் பற்றி வந்துள்ளன.

    போதும் !! சின்னஞ்சிறு முதலாள்யான நீர், சிறு முதலாளி, கொஞ்சம் பெரிய முதலாளி, பெரிய முதலாளி, மிகப் பெரிய முதலாளி என்று பல்கி வாழ்க !!!

    உம்முடைய எனது விவாதத்தை இத்தோடு முடித்துக் கொள்கிறேன். வணக்கம், வந்தனம், சுஸ்வாகிருதம்.

  63. //நமக்கு வேற வேலை இல்லையா கத்துற வரைக்கும்
    கத்தட்டும்னு விட்ருங்க காம்.
    அப்புறம் தானா அடங்கிடும்.

    அதுவரைக்கும் நாம எதையாவது படிக்கலாம்.

    ஆமாம் நீங்க ஸ்டாலின் சகாப்தம் பார்த்தீங்களா தோழர் ?
    பாட்டாளி வர்க்கத்தினுடைய உறுதி மிக்க‌ தலைவனுடைய
    சாதனைகள் தான் எவ்வளவு வியக்க வைக்கிறது.//
    தோழர் சர்வதேசியவாதிகள் ! நான் அதியமானோடு மல்லுக்கட்டுவதை விட்டு விட்டேன். அசுரன் ஒன்று சொன்னார் – “இப்படியான இணைய பயிற்சி, எதிர் விவாதம் செய்பவரை மாற்றுகிறதோ இல்லையோ நமது உலகறிவை விசாலப்படுத்திவிடும்.” அரடிக்கெட்டும் ஒன்று சொன்னார் – “நம்மை பற்றிய அவதூறுகளையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும் ” என்று. அதனால்தான் இந்த அக்கபோர். ஆனால் முடியவில்லை. விட்டு விட்டேன்.

    ஸ்டாலின் சகாப்தம், அம்பத்தூர் முதலாளித்துவ எதிர்ப்பு மாநாட்டில் வாங்கினேன். பார்த்தேன்.நன்றாக உள்ளது. இன்னும் நிறைய காட்சிகளை இணைத்து இருக்க வேண்டும். பெரும்பாலும் ஸ்டாலினுடைய புகைப்படங்களாகதான் உள்ளது. //பாட்டாளி வர்க்கத்தினுடைய உறுதி மிக்க‌ தலைவனுடைய
    சாதனைகள் தான் எவ்வளவு வியக்க வைக்கிறது.// அதனால் தான் ஸ்டாலினைப் பற்றி இவ்வளவு அவதூறுகள். எங்கே உலகத் தொழிலாளர்கள் எல்லாம் அவரைக் கற்றுக் கொண்டால் தமது சுகபோக வாழ்க்கைக்குஆபத்து வரும் என முதலாளிகள் பயப்படுகிறார்கள்.

  64. //அதனால் தான் ஸ்டாலினைப் பற்றி இவ்வளவு அவதூறுகள். எங்கே உலகத் தொழிலாளர்கள் எல்லாம் அவரைக் கற்றுக் கொண்டால் தமது சுகபோக வாழ்க்கைக்குஆபத்து வரும் என முதலாளிகள் பயப்படுகிறார்கள்.////

    hahahaha
    :)))))) good joke. actually, if workers and marxists like you learn the real truth about Stalin then you will never ever dream of bringing back Stalinism anywhere. once is enough for the world.

  65. அதியமான்,

    முதலில் ஏதேனும் விவாதித்தால் ஒன்றை நான் மறுத்து கூறினால் அதற்க்கு உங்கள் பதில் என்னவென்று சொல்லுங்கள் .

    * எந்த உரிமையும் இந்த மயிராண்டி நாட்டுல இல்லைன்னு சொன்ன – அமைதியா போராட வுரிமை இருக்குன்னு சொன்னீங்க. நானும் எம்புட்டு உதாரணத்தோட ஆதாரத்தோட விளக்கினேன். அதுக்கு பதில் சொல்ல துணிவோ நேர்மையோ இல்லை.

    * சுவீடன் ப்ரீ மர்கேட்டுனு கப்சா விடீங்க. அதுவும் அங்க இருக்கிறதுக்கும் சோசலிசத்துக்கும் சம்பந்தமே இல்லநினு சொன்னீங்க. அதுக்கும் பதில் சொன்னேன். இப்ப அத அத்துக்கிற துணிவு இல்லாம வேலை வாய்ப்பு, மயிருன்னு அடுத்த கிளைக்கு தாவுறீங்க.

    * மக்களின் போராட்டங்கள் ஆளுபவர்களின் நலனை பாதிக்குமானால் அந்த போராட்டங்களை எந்த விதமான அரசும் அடக்கும்னு எல்லா உதாரணத்தோட சொன்னாலும் அதை எல்லாம் அப்படியே விட்டுபுட்டு ஸ்டாலின் மட்டும் தான் கொண்டாரு. எங்க ராஜபக்சே எல்லாம் ரெம்ப நல்லவருன்னு பேசுறீங்க

    * கோடிக்கணக்கான மக்கள் ஏழ்மையில் இருக்காங்கனு சொன்ன, அத விடுங்கப்பா இப்ப டெல்லி ல எல்லாம் நைட் கிளப்புல பசங்க ஐ போட் வச்சிருக்காங்க, ஹார்டிஸ்க் விலை கோரஞ்சதால எல்லாபேரும் நெறைய போர்ன் வச்சிருக்காங்க ன்ற ரீதியில பேசுறீங்க.

    * ஜப்பான் ல பிரச்னை அமெரிக்கா பொருளாதரதுல பிரச்னை நா “மக்கள் தொகை, கலாசாரம் போன்ற எண்ணற்ற காரணங்கள்னு லிஸ்ட் போடுறீங்க. ஆனா (பழைய) சோசலிச நாட்டுல இருந்த எல்லா பிரச்சனைக்கும் சோசலிச கோட்பாடுகளே காரணம்னு சொல்லுறீங்க.

    * மொதலாளி எல்லாம் அடிமை வியாபாரம் தான் பண்ணுறாங்க. எங்க நீங்க உங்க தொழிலாளிக்கு செய்யும் நலன்கள சொல்லுங்கன்னு சொன்ன, நேர்ல வா சொல்லுறேன்னு சொல்லுறீங்க. இப்படி உழைப்பை சுரண்டுவதுக்கு ஒரே காரணம் தனி மனிதன் சொத்து பொருள் சேர்ப்பது தான். அதனால் தனி மனித உடமை இருக்க கூடாதுன்னு சொல்லறது தான் எங்க கொள்கைன்னு சொன்னா, நீ ஏசி ரூம்ல இருந்துட்டு டைப் அடிக்கிற அப்படின்னு சொல்லுறீங்க .

    நீங்க மொதலாளி துவம் பேசுறதுக்கு முன்னாடி, பேச மட்டுமாவது கத்துக்கங்க .

    இனிமேலும் உங்களை போன்றோருடன் பேச எனது உடல் நலமும் மன நலமும் அனுமதிக்காது.

  66. அதியமான் ஒரு கீழத்தரமான புலம்பல் பேர்வழி இதோடு ஆரோக்கியமான விவாதம் செய்யமுடியாது

  67. JP, i had answered all of your points earlier. and u didn’t teply to the quote about Lenin which led to Sweden. if Sweden is not a free market economy then what the hell is it ? marching towards towards communism then ? :))) and there is enough freedom in India for MaKaIKa to operate freely. only when they try to take the law into their hanss then they are arrested. even then there is atleast some basic legal system available for arguemtns, where as in your communisim there is no chance for such arguments. if anyone is labelled a “enemy of the state” then he can be jailed easily. read more about all that. and no one has answered my points about the sutpendous rise of Japan since 1945 from a war devastated nation to present status. u have not answed that comparision. and yes, Indian poverty levels are too high and there is lot of hunger here. but these are mainly due to stupid soclalistic polcies followed until recently. the cumulative effect will be there for many more decades. we missed the chance for propsperity like Japan or S.Korea or even Malaya. i had written extensively about all that. hence i ignored many of your latest arguments. and if you consider modern liberal free market capilalism is equal to slavery, then no use arguing further, as u had said. bye.

  68. அப்புறம் இன்னொரு விசயம அதியமான். நாம 1980ஸ் ஈஸ்டுமேன் கலருக்கெல்லாம் போக வேண்டாம். ஜெஸ்ட் 2006க்கு போயி டர்பன் மண்டையன் மன்மோகன் சிங் சொன்னத பார்ப்போம். கீழே கொடுத்துள்ளேன். இதில் ஒரு முக்கிய விசயம் ஏற்கனவே இருந்ததைவிட மோசமாகிப் போயுள்ளோம் என்பதாகவே மன்மோகன் சிங் குறிப்பிடுகிறார். அதியமான் சொல்வது போல முன்பிருந்ததை விட நன்றாக இருப்பதாக அல்ல.

    http://poar-parai.blogspot.com/2006/11/blog-post_23.html

    உலக மயம் தோற்றுவிக்கும் உலக உண்மை:

    * ஏழை பணக்காரன் பிளவு அதிகரித்து வருகிறது.

    * ஏழைகள் மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தருவதற்க்கான, அவர்களது பிரச்சனைகளை காது கொடுத்து கேட்ப்பதற்க்கான சக்தியை அரசு இழந்து வருகிறது. மருத்துவம், கல்வி போன்ற அடிப்படை வசதிகளை போதுமான அளவு செய்து தருவதற்க்கு வக்கற்று உள்ளது.

    * வளர்ச்சி கிராமங்களை அடைவதில்லை.

    * இந்த மேற்சொன்ன காரணங்களால், மக்கள் அரசை வேறுக்க தொடங்கியுள்ளனர். இது மாற்றுமைப்பு தேடும் சக்திகளை வளர்த்தெடுக்கிறது. இது ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தவிடாமல் அரசை தடுக்கிறது.

    இப்படித்தான் நாங்க முட்டாப்பயக கம்யுனிஸ்டுகள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இத திரும்ப போட வேண்டிய அவசியமென்ன?.
    இத இந்த முறை சொன்னது சாட்சாத் மாமா மன்மோகன் சிங்தான். அதுவும் பிரிட்டிஸ் ஜெண்டில் மேன், மற்றும் லேடிஸ் மத்தில போயி சொல்றாரு.

    • //* ஏழை பணக்காரன் பிளவு அதிகரித்து வருகிறது.
      /// true enough. but are the poor getting more poorer ? this cry of inequality is nonsense. suppose in a nation like say, Rawanda, if 100 % of population are in semi-starvation state and live on one meal a day, then that nation has the best equality of income than say, Denmark. the point is the net percentage of those below poverty line and the conditions of them. it is theoritically possible to prove that Rawanda has more income equality than Denmark !!

  69. குலோபல் வார்மிங் – அன் இன்கன்வீனியண்ட் ட்ரூத்-னு புவிச் சூடேற்றம் பற்றிய ஆவணப்படம். அதில் அல்கோர் ஒரு மேற்கோள் ஒன்றை சுட்டுவார். அது பின்வருமாறு:

    “”It’s difficult to get a man
    to understand something
    If his salary depends upon
    his not understanding it.””

    அதன் அர்த்தம்:

    “ஒரு விசயத்தை புரிந்து கொள்ளாதிருப்பதுதான் ஒருவனுடைய வயிற்றுப்பாட்டை தீர்மானிக்கிறது எனில், அவனுக்கு அந்த விசயத்தை புரியவைப்பது மிகச் சிரமமாகி விடுகிறது”

    அதியமானுக்கு எத்தனை முறை சொன்னாலும், எத்தனை வகையில் சொன்னாலும், எத்தனை ஆதாரங்கள் கொடுத்தாலும் இதே கீறல் விழுந்த ரிக்கார்டுதான். இதற்கு அதியமானைச் சொல்லிக் குற்றமில்லை. ஆனால் இதையே தனது உலகளாவிய பார்வை என்றும் அனைத்தும் தழுவிய பார்வையென்றும் அவர் முன் வைப்பதுதான் சகிக்க முடியாததாக இருக்கிறது.

  70. அசுரன்,

    தங்களது விளக்கங்களுக்கு நன்றி. எப்பொழுது போல் சிறப்பாகவே இருந்தது.

    இப்பொழுது தான் அதியமான் அவர்களின் ப்ரொபைலெ பார்த்தேன். ஏதோ ஜோதிட ஆராச்சி என்றெல்லாம் போட்டிருக்கார்.ஜோதிட ஆராய்ச்சி செயரவர்ட்டயா இம்புட்டு நேரம் பேசிட்டு இருந்தேன் !!! 🙁

  71. இந்தியாவின் முன்னேற்றம் குறித்த அதியமானின் கூற்றை இந்திய விவசாயத்தின் நிலையுடன் ஒப்பிட்டு நோக்கினால் உண்மை தெளிவாகிவிடும். பெரும்பான்மை மக்கள் ஈடுபட்டுள்ள விவசாயத்தின் சீரழிவை மீறி எப்படி ஒட்டுமொத்த செயல்பாட்டில் ஒரு நாடு முன்னேறியிருக்க இயலும்?

    இதோ விவசாயத் துறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா. அதியமானோ சேவைத் துறையை ஏதோ வராது வந்த மாமணி போல பேசுகிறார்.

    http://www.rbi.org.in/scripts/bs_viewcontent.aspx?Id=1911

    //Agriculture continues to be a prime pulse of the Indian economy and is at the core of socio-economic development of the country. It accounts for around 19 per cent of GDP and about two-thirds of the population is dependent on the sector. //

    இந்திய மக்களில் மூன்றில் இரு பங்கு பேர் இன்னமும் இந்த வீணாப் போன விவசாவ… சாரி விவசாயத்தை நம்பித்தான் இருக்காங்களாம்.

    //Growth of other sectors and overall economy hinges on the performance of agriculture to a considerable extent through its backward and forward linkages. It is not only a source of livelihood and food security for a large population of India but also has a special significance for low income, poor and vulnerable sections. //
    பிற துறைகளின் வளர்ச்சிக்கும் விவசாயத்தை நம்பியிருக்க வேண்டியுள்ளதாம். மிகப் பெருந்தொகையான இந்திய மக்களின் வாழ்வாதாரமாகவும், அடிப்படை உணவு உத்திரவாதத்தை வழங்குவதாகவும், குறிப்பாக வருமானம் குறைந்த ஏழை,பாழைகளுக்கு அதி அத்தியாவசியமானதாகவும் விவசாயம் உள்ளது.

    //
    The Indian agriculture notwithstanding its importance, suffers from various constraints//

    இப்படியாப்பட்ட விவசாயம் பல்வேறு இடர்பாடுகளுக்குள்ளாகியுள்ளது.

    //
    such as traditional methods of cultivation, heavy dependence on monsoon, fragmentation of land holdings, low productivity and low investment. Among others, declining investment over time has emerged//
    பழைய முறைகளில் விவசாயம் செய்வது, பருவ காலங்களை நம்பியிருப்பது, துண்டு துண்டாக நிலங்களை வைத்திருப்பது, குறைந்தளவிலான மூதலீடுதான் கிடைக்கிறது. இந்த தம்மாத்துண்டு முதலீடும் குறைந்து வருகிறது.

    ஆகக் கூடி பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் சீரழிந்து வரும் பொழுது அந்த மக்களைக் கொண்ட சமூகம் மட்டும் முன்னேறிவிட்டதாக அதியமான் சொல்லுவதை நாம் எப்படி நம்புவது?

    அசுரன்

    • ////
      such as traditional methods of cultivation, heavy dependence on monsoon, fragmentation of land holdings, low productivity and low investment. Among others, declining investment over time has emerged///// true enough. but who or what policy is responsible for this ? certainly not the free market policies which were never implemented in agriculture in India. if fact the staism and land “reforms” of past govts created this mess. no use blaming LPG or free market advocates for this mess created by leftist idealogy. ok

      • //Indian agriculture is in the presnt dire straits precisely because of stupid leftist polices followed till date. //

        ரிசர்வ் வங்கி இதுக்கு சொல்லும் காரணம்.

        ////
        such as traditional methods of cultivation, heavy dependence on monsoon, fragmentation of land holdings, low productivity and low investment. Among others, declining investment over time has emerged////

      • //but who or what policy is responsible for this ? //
        exactly the recolonization policies of Free market economy driven by liberalisation, privatisation, globalisation are the reasons for this.

        கட்டற்ற சந்தை என்ற பெயரில் கடை விரிக்கப்படும் மறுகாலனியாதிக்க கொள்கைகளான தாரளமயம், தனியார்மயம், உலகமயம் கொள்கைகள்தான் இவற்றுக்கு காரணம்.

        //leftist idealogy. ok//
        அதியமான் உங்களை மீண்டும் பொய்தியமான் என்று அழைக்க என்னை நிர்பந்திக்காதீர்கள்.

        கூட்டுறவு வங்கிகளை முடக்கி விவசாயத்தில் முதலீடு கிடைப்பதை கெடுத்தது உங்களது LPG கொள்கைகள்தான். விவரங்களுக்கு சாய்நாத்தை வினவுங்கள்.

        பாரம்பரிய விவசாய முறைகளை ஒழித்துக் கட்டி பசுமைப் புரட்சி என்ற பெயரில் அதனை முதலீடு செய்யும் துறையாக மாற்றி சீரழித்தது உங்களது முதலாளிகள்தான். இதனை இடதுசாரித்தனம் என்று சொல்வதன் மூலம் மோசடி வேலை செய்கிறார் அதியமான். பலமுறை சுட்டிக்காட்டிய பின்பும் இந்த க்ருத்தை அதியமான் முன்வைப்பதிலிருந்து அவரது நேர்மையின்மையையே காட்டுகிறார்.

        பசுமைப் புரட்சி என்ற பெயரில் பன்னாட்டு/உள்நாட்டு உரக்கம்பேனிகளும், விவசாய இடு பொருள் நிறுவனங்களும் மான்யங்களால் உப்பி பெருக வகை செயதது உங்களது முதலாளிகள்தான் அது இன்று வரை தொடர்கிறது.

        உணவுப் பயிர் செய்வதை சிதைத்து, பணப்பயிர் முறைக்கு மாற்றியதன் மூலம் உணவு உத்திரவாதத்தை கேள்விக்குறியாக்கியதும் உங்களது முதலாளிகள்தான் அதனது அடுத்த கட்ட வளர்ச்சிதான் இன்றைய கட்டாமனக்கு பயிரிடுதல், பூ பயிரிடுதல், ஒயினுக்கா திராட்சை பயிரிடுவதை ஊக்குவித்தல் உள்ளிட்டவை. இன்னும் 20 வருடம் கழித்து இவையும் இடதுசாரி திட்டங்கள் என்று அதியமான் பொய் பகரும் வாய்ப்புள்ளதை உணர்கிறேன்.

        மேலும், 1990களுக்கு முந்தைய இந்தியாவின் இடதுசாரி தவறுகள் இன்றும் வீரியமாக தொடர்வதேன்? யார் தடுத்தார்கள் இப்பொழுது அவற்றை சரி செய்ய?

      • Asuran,

        Co-op banks and rural co-op societies are nearly banrupt and unviable now due to corruption and will ful defaults and indsicriminate waiver of farm loan. there is no argument that farmers should be helped and subsidised by the govts. but have you any idea about the fraud and willful defaults in this sector. all parties have become cynical and corrupt now. hence the marginalisation of co-op sector. and Indian legal system is still in the old mode without any proper banruptcy or debt recovery mechanism. hence it is almost impossible to recover debts from many borrowers legally. so no new investments or lending from anyone now a days. do you know the level of undeserving waiver for this national and TN loan waiver scheme. most of them who were left out in our area lament that they had not borrowed from govt banks. and all this weakened the legal sector and drove them into private money lenders who charge exhorbitant rates. (this is due to high cost of recovery and inflation rates. i am researching on interest rates in india and its history). and any idea about tractors and farm machinery industry which was throttled by stupid govt polices in the past. Read Escorts founders biography here. and transport of farm produce depends on good roads and cheap transport system, which is again throttled by foolish polcies of high taxation on petroloeum and trcuks and industry, etc. and what is your comment on my vital post about farm sizes and viablity ? comparing will all other nations ?

        and it is a myth that agri is neglected. the total amount spent till date by govt in the form of susidies, cheap credit, irrigation and power, etc is in trillions. but the implementation mechanism is corrupt to the core. so don’t blame LPG. but for LPG, things would be much much much worse with no moeny for even this much spending. and crores of new jobs were created to absorb the miserable farm workers. and this is a complex subject and more inputs needed. P.Sainath is a great reporter and humanitarian. i respect his efforts. but his interpretations are crazy and what are his solutions ? read about the tax revenue now and then and total amount spent from this on agri, etc. defence spending ? did we call for this much stupidity

    • //ஆகக் கூடி பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் சீரழிந்து வரும் பொழுது அந்த மக்களைக் கொண்ட சமூகம் மட்டும் முன்னேறிவிட்டதாக அதியமான் சொல்லுவதை நாம் எப்படி நம்புவது?//

      அதியமான் மேலே உள்ளதுக்கும் பதில் புளீஸ்….

  72. http://rbidocs.rbi.org.in/rdocs/AnnualReport/PDFs/86538.pdf

    ரிசர்வ் பேங்கு ஆப்பு இந்தியாவின் 2008 ஆம் ஆண்டு அறிக்கையில் ஒரு பகுதி. கீழ இன்னா சொல்லிருக்கானுங்கன்னு பாத்துக்கோங்கப்பா….

    According to the Economic
    Survey 2007-08, the per capita availability of cereals and
    pulses declined during this period. The consumption of
    cereals declined from a peak of 468 grams per capita per
    day in 1990-91 to 412 grams per capita per day in 2005-06,
    while that of pulses declined from 42 grams per capita per
    day (72 grams in 1956-57) to 33 grams per capita per day
    during the same period. Furthermore, access to food for a
    large section of the population is hindered due to chronic
    poverty, unemployment and lack of purchasing power.

    நாட்டுல தலைக்கி இவ்வளவு சாப்பிடுறானுங்கன்னு சொல்லி இவிங்க் முன் வைக்கிய புள்ளி விவரப்பிரகாரம் 1991ல நிறைய பேரு நல்லாச் சாப்பிட்டுருக்கானுங்க. இப்போ கொஞ்ச பெரு ரொம்ப நல்லா சாப்பிடுறான் மீதிப் பேரு ஒன்னுத்தக்குமில்லாம இருக்குறான். இதுக்குக் காரணம், கடும் வறுமை, வேலையின்மை, வாங்கும் சக்தியில்லாமை. இப்படி சொல்லுது RBI. இதெல்லாம் 1991யை விட இப்போ மோசமாக இருக்கிறது என்பதுதான் புள்ளிவிவரங்கள் மூலம் நமக்குத் தெரிகிறது. அதியமானோ தலைகீழாகச் சொல்கிறார். அவரோட வர்க்கத்தை பத்தி பேசுறார் போலருக்கு….. அது கொஞ்சம் ஓவராச் சாப்பிட்டு கொழுத்துப் போய்தான் உள்ளது.

    இதே நேரத்துல மைக்ரோ மற்றும் சுமால் ஸ்கேல் தொழில்சாலைகளின் எண்ணிக்கை பெருக்கம், அது உருவாக்கிய வேலைவாய்ப்பு பெருக்கம், அது உருவாக்கிய உற்பத்திப் பொருட்களின் பெருக்கம் ஆகியவற்றைப் பார்க்கும் பொழுது ஒரு உண்மை பலிச்சென்று தெரிகிறது. அது லெனின் ‘ஏகாதிபத்தியம் – முதலாளித்துவத்தின் உச்ச்க்கட்டம்’ என்ற புத்தகத்தில் இதே போலான புள்ளிவிவரங்கள் மூலம் சில முடிவுகளை சொல்லுவார். அதே போலான முடிவுகளுக்கே இப்போதைய புள்ளிவிவரங்களும் இட்டுச் செல்கின்றன.

    2001ல் மொத்தம் யூனிட்டுகள் – 10.5 மில்லியன் 2006ல் 12.8 மில்லியன்

    பெருக்கம் ஜஸ்ட் 2 மில்லியன் மட்டுமே

    வேலைவாய்ப்பு – 25.2லிருந்து 31.3மில்லியனாக.

    பெருக்கம் ஜஸ்ட் – 6 மில்லியன்.

    முதலீடு – 1,60,673 கோடியிலிருந்து 2,07,307 கோடி
    பெருக்கம் ஜஸ்ட் – 40,000 கோடி

    ஆனால் உருவாக்கப்பட்டுள்ள செல்வம்?
    2001ல் 2,82,270 கோடி 2006ல் 4,97,842 கோடி அதாவது கிட்டத்தட்ட இரு மடங்கு வளர்ச்சி.

    வேலைவாய்ப்பு பெரிதாகக் அதிகமாகவில்லை முதலீடும் அதிகரிக்கவில்லை ஆனால் உற்பத்தி மட்டும் அதிகரித்திருக்கிறது எனில் இது யார் பாக்கேட்டிலிருந்து கொள்ளையடிக்கப்படுகிறது? ஏழை விவசாயக் கூலிகள் வேறு வழியின்றி இது போன்ற தொழில்கூடங்களில் வேலைக்கு சேர்ந்து கசக்கி பிழியப்பட்டே இந்த இரு மடங்கு உற்பத்தி வளர்ச்சி ஈட்டப்பட்டுள்ளது. இதுவும் ஏற்றுமதிக்கானது, இந்திய மக்களுக்கானது அல்ல.

    இந்நிலையில் சராசரி இந்தியனின் வாழ்க்கை தரம் எப்படி உயர்ந்திருக்கும்? அவனது வாங்கும் சக்தி எப்படி உயர்ந்திருக்கும்?

    பாதாளத்தை நோக்கி பாயும் ஒரு ச்மூகத்தை முன்னேறிவிட்டது என்று அதியமான் கூறுவது சரியல்ல.

    //The direct employment in the IT/ITES sector was expected to be 2.0
    million by end of 2007-08.//

    அதாவது 2007-08லதான் ஐடி ஐடி இ எஸ் வேலைகளின் எண்ணிக்கை 20லட்சம் ஆகுதாம். ஐடி ஐடி இ எஸ்லில் போடப்படும் ஒரு ரூபாய் உருவாக்கும் உண்மையான மதிப்பு 2 ருபாயாம். இத அப்படியே எம்பளாய்மெண்டுக்கும், அதியமானின் வசதிப்படியே போட்டுப்பாத்தாலும் மொத்தமா 40லட்சம் வேலை உருவாகியிருக்கு கடந்த பதினைந்து வருசமா. யானைப்பசிக்கு சோளப்பொறியாப் போடக் கூட காணாது.

    //
    Employment in the IT/ITES grew at a
    compound annual average rate of 26 per cent during 2000-01
    to 2007-08, making it the largest employer in the organised
    private sector in the country.//

    //the post-1991 reform period, the Indian IT/ITES
    industry contributed significantly to the economic
    growth in terms of GDP, foreign exchange earnings
    and employment generation.//

    ஐடி ஐடி இ எஸ்தான் அதிகபட்ச வேலைவாய்ப்பை அமைப்பு சார்ந்த துறையில் வழங்கியுள்ளது(அதியமானின் சேவைத் துறை அல்ல) எனில் அதன் அளவு கடந்த பதினைந்து வருடங்களில் 20லட்சத்திற்கும் குறைவானது எனும் போது இந்தியாவின் நிலை என்னவாக இருக்கும் என்பதை 1+1=2 கூட்டல் தெரிந்தவனால் கூட புரிந்து கொள்ள இயலும்.

    இந்த இடத்தில் ஒரு வருடத்திற்கு வெளியே வரும் இஞ்சினியரிங் மாணவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டு நோக்குவது தகும். தென்னிந்தியாவில் மட்டும்(மஹாராஸ்டிராவும் சேர்த்து) 6லட்சத்திற்கும் அதிகமான இன்ஞ்சினியரிங் பட்டாதாரிகள் வெளிவருகிறார்கள். இது ஒருவருடத்திற்கு, இது தவிர்த்து பிற பட்டதாரிகள், பள்ளி படிப்பு, அதையும் பாதிவரை படித்தவர்கள் (பாதில படிக்காம ஓடுனவனே மொத்த எண்ணிக்கையில் 40% மேல்) என்று கணக்கிட்டுப் பார்த்தால் அதியமான் குறிப்பிடும் வேலைவாய்ப்பு உருவாக்கம் மலைக்கு மடுவுக்குமான ஒப்பிடாக உள்ளது.

    இப்படிப்பட்ட சூழலில் முதலாளித்துவத்தின் இயலாமை, தோல்வி படு அப்பட்டமாக முகத்தில் அறைகிறது.

    அசுரன்

    • //அது லெனின் ‘ஏகாதிபத்தியம் – முதலாளித்துவத்தின் உச்ச்க்கட்டம்’ என்ற புத்தகத்தில் இதே போலான புள்ளிவிவரங்கள் மூலம் சில முடிவுகளை சொல்லுவார். அதே போலான முடிவுகளுக்கே இப்போதைய புள்ளிவிவரங்களும் இட்டுச் செல்கின்றன.

      2001ல் மொத்தம் யூனிட்டுகள் – 10.5 மில்லியன் 2006ல் 12.8 மில்லியன்

      பெருக்கம் ஜஸ்ட் 2 மில்லியன் மட்டுமே

      வேலைவாய்ப்பு – 25.2லிருந்து 31.3மில்லியனாக.

      பெருக்கம் ஜஸ்ட் – 6 மில்லியன்.

      முதலீடு – 1,60,673 கோடியிலிருந்து 2,07,307 கோடி
      பெருக்கம் ஜஸ்ட் – 40,000 கோடி

      ஆனால் உருவாக்கப்பட்டுள்ள செல்வம்?
      2001ல் 2,82,270 கோடி 2006ல் 4,97,842 கோடி அதாவது கிட்டத்தட்ட இரு மடங்கு வளர்ச்சி.

      வேலைவாய்ப்பு பெரிதாகக் அதிகமாகவில்லை முதலீடும் அதிகரிக்கவில்லை ஆனால் உற்பத்தி மட்டும் அதிகரித்திருக்கிறது எனில் இது யார் பாக்கேட்டிலிருந்து கொள்ளையடிக்கப்படுகிறது? ஏழை விவசாயக் கூலிகள் வேறு வழியின்றி இது போன்ற தொழில்கூடங்களில் வேலைக்கு சேர்ந்து கசக்கி பிழியப்பட்டே இந்த இரு மடங்கு உற்பத்தி வளர்ச்சி ஈட்டப்பட்டுள்ளது. இதுவும் ஏற்றுமதிக்கானது, இந்திய மக்களுக்கானது அல்ல.
      //// how can profits increase so much without proportionate new invetments or techonology ? if this proves Lenin’s ideas and leads to a sharp polarisation and a reveloution, then it great and excellent. your job would be easy !! :)) does this data include the millions of unregistered units ? indian govt stat are partial only simply due to the fact many many units and workers and people live and work without any legal papers, taxes, etc..

      • //your job would be easy !! 🙂 ) //

        உண்மைதான் எமது வேலை வெகு இலகுவானது.. அதனால்தான் அதியமான் போன்றோர் புரட்சி புரட்சி என்று தினம் நூறுமுறை பயத்தில் புலம்புக் கொண்டிருக்கும் அதே வேளையில், புரட்சி எப்போது வரும் என்பது குறித்து எமக்கு பெரிதாக ஒன்றும் கவலைகள் இல்லாமலிருப்பதன் காரணம் இதுவே.

        //indian govt stat are partial only simply due to the fact many many units and workers and people live and work without any legal papers, taxes, etc//
        ஆக மொத்தம் அத்தனைக்கு அத்தாரிட்டி அதியமானை நம்புங்கள் என்று ஒற்றை வரியில் சொல்ல வருகிறார். இருக்கட்டும் அதியமான் நன்றிகள்…. நாங்கள் ரிசர்வ் வங்கியையே இந்த விசயத்தில் நம்ப விரும்புகிறோம்.

        அசுரன்

    • //defaults and indsicriminate waiver of farm loan.//

      சாய்நாத் கட்டுரையை படித்ததாக கூறும் அதியமானா சாய்நாத் கட்டுரையில் மறுத்துரைக்கப்பட்டுள்ளதை தனது அடிப்படை வாதமாக கொள்கிறார்.?

      1991 முதல் அதியமானின் அன்பு முதலாளிகள் கபளிகரம் செய்துள்ள தொகையுடன் ஒப்பிடும் பொழுது விவசாயத் துறை மான்யங்களும் கடன் தள்ளுபடிகளும் ஒன்றுமே கிடையாது.

      அன்பு முதலாளிகளுக்கு ஒரு வருடத்தில் கொடுக்கப்படும் கடன் தள்ளுபடி மட்டும் 1லட்சம் கோடிகள், இது வருடா வருடம் கொடுக்கப்படுகிறது. ஆயினும் வங்கிகள் எதுவும் திவாலகிவிடவில்லை.

      விவசாயத்திற்கு பணம் கொடுப்பதற்கு ஊழல்மயமான, கேடுகெட்ட கூட்டுறவு வங்கி ஆனால் முதலாளிக்கு கடன் கொடுப்பதற்கு ஸ்டேட் பாங்கு ஆப்பு இந்தியா மாதிரியான அல்சாகுல்சா பெரிய வங்கிகள்… இதுவும் இடதுசாரி கொள்கை என்று கூறி நம்மீதே பாய்வார் பாருங்கள் இந்த அதியமான்….

      அசுரன்

  73. http://rbidocs.rbi.org.in/rdocs/Publications/PDFs/87396.pdf
    வேலைவாய்ப்பு குறித்த மேலேயுள்ள ரிசர்வ் வங்கி அறிக்கை வேலை வாய்ப்பு குறித்த அதியமானின் அத்தனை மாயஜாலங்களையும் திரை கிழிக்கிறது.

    (தோராயமான அளவு)
    1970-71ல் அரசு வேலைவாய்ப்பு 110லட்சம்
    தனியாரில் 67லட்சம்

    1990-91 அரசு 190 லட்சம்
    தனியார் 76 லட்சம்

    1991-92 அரசு 190 லட்சம்
    தனியார் 78 லட்சம்

    2004-05 அரசு – 180 லட்சம்
    தனியாரில் – 84 லட்சம்

    கடந்த 2004க்கு முன்பான 35 வருடங்களில் மொத்தமே 17 லட்சம் வேலை வாய்ப்பை மட்டுமே வழங்கியிருக்கும் தனியார் அமைப்பு சார்ந்த துறை இந்த காலகட்டத்தில் உலகமயக் கொள்கைகள் காரணமாக மக்களின் வரிப்பணத்தில் தின்று தீர்த்துள்ளது எந்தளவுக்கு என்பதை புரிந்து கொள்ள சாய்நாத்தின் கட்டுரையைப் பார்க்கலாம்.

    http://www.hindu.com/2009/08/15/stories/2009081555920800.htm

    அசுரன்

    • அருமையான விளக்கங்களும், தகவல்களும் தந்து உள்ளீர்கள் தோழர்.
      சாய்நாத் அவர்களின் கட்டுரை பல முக்கிய தகவல்களை தருகிறது.

    • Asuran,

      that stat is for organised sector only which is with records and in legal framework. do you honestly belvie that the rest of the people who are left out of this statistics are unemployed and starving. there are crores of new jobs created indirectly in tiny sectors. for example, the NASCOM data gives only the net employment created in IT and ITES. that is those who are directly employed by these. but for every such job, there are dozens of new sercvce and support jobs being created in areas like drivers, logistics, laundry, house keeping, security, caterers, electricians, plumbers, etc. have you any idea of the situation in 70s or 80s ? for a population base of around half of today’s 110 crore mass, there was acute shortage of jobs of most kinds then. i remember the pitable conditons of watchmen in the 70s. now they are comparitively better dressed and better payed. if the above data of govt is the gospel truth that reflects reality, then what is the status of the rest of the 110 crore population ? try that old film : varumaiyin niram sihappu of 1980…

      and by the way, suppose if India had been still in the closed economy and license raaj of pre 1991 era, would things have been better now ? ask your professor of economics

      • //and by the way, suppose if India had been still in the closed economy and license raaj of pre 1991 era, would things have been better now ? ask your professor of economics//

        இதுதான் மாற்றுன்னு நாங்க சொன்னமா? நீங்களா எதையாவது சொல்லி அதுக்கு பதில் சொல்லக் கூடாது. புரோபோசார்ஸ் ஆப்பு எக்கானாமிக்குகள் சொல்வது இருக்கட்டும். உங்களது சொந்த முதலாளித்துவ அரசு வரையறைகள், அளவுகோல்கள், புள்ளிவிவரங்கள் படியே 1980கள் இந்திய சமூகம் ஓரளவு நல்ல நிலையில் இருந்த காலகட்டம்.

    • //
      Posted on August 27, 2009 at 5:13 am

      http://rbidocs.rbi.org.in/rdocs/Publications/PDFs/87396.pdf
      வேலைவாய்ப்பு குறித்த மேலேயுள்ள ரிசர்வ் வங்கி அறிக்கை வேலை வாய்ப்பு குறித்த அதியமானின் அத்தனை மாயஜாலங்களையும் திரை கிழிக்கிறது.

      (தோராயமான அளவு)
      1970-71ல் அரசு வேலைவாய்ப்பு 110லட்சம்
      தனியாரில் 67லட்சம்

      1990-91 அரசு 190 லட்சம்
      தனியார் 76 லட்சம்

      1991-92 அரசு 190 லட்சம்
      தனியார் 78 லட்சம்

      2004-05 அரசு – 180 லட்சம்
      தனியாரில் – 84 லட்சம்//

      இதுக்கும் பதில் சொல்லுங்க அதியமான்.

  74. அசுரன் சிறப்பான பதில். அதியமான் எதற்கெடுத்தாலும் 80’s என்றும் சிலி, ஸ்வீடன், ஜப்பான் என்றும் பொய் விடுகிறார் ஆனால் நம் கண் முன்னே நிலவும் வறுமை அவருக்கு தென் பட வில்லை. ‘dunkel accord’ கையொப்பம் இட்ட பிறகு இதே மன்மோகன் மற்றும் சிதம்பரம் சில ஆண்டுகளில் வறுமை ஒழிக்கப்பட்டுவிடும் என்றும் இதன் பலன் ‘will trickle down’ என்றும் சொன்னார்கள். மேலும் ‘stock’ market economy தான் எல்லா வற்றையும் தூக்கி நிறுத்தும் என்றும் அந்த சிதம்பர பய பேசினான் ஆனால் அதே சிதம்பரம் இப்பொழுது market econmomy மற்றும் street economy வேற வேற என்று மழுப்புறான்.
    இப்பொழுது நிலவும் பொருளாதாரம் என்பது சார்புள்ள(dependent) ஒரு பொருளாதாரம் என் என்றால் நாம் இன்றளவும் ‘self sufficiency’ அடையவில்லை. இப்படி இருக்கும் நிலையில் அரசு மேலும் விவசாயம் மற்றும் சில அத்யாவசிய உற்பத்திகளை அழிப்பதற்கு துணை போகிறது. என்றைக்கும் இல்லாத அளவிலான விலைவாசி உயர்வினை நாம் இப்பொழுது காண்கிறோம். இவை எல்லாம் செயற்கை எல்லாம் தனியார்மயம் மற்றும் உலகமயமாக்கல் போன்ற நஞ்சுகளால் ஏற்பட்டவை என்பது அப்பட்டமாக அம்மபலமாகிவிட்டன. இந்த கொள்கைகளால் ‘disparity’ அதிகம் ஆவது என்பது தான் உண்மை.

    p.s: http://www.btinternet.com/~davidbeaumont/msf/listbombed.html will give the list of countries the savior of democracy and free trade has bombed leading to thousands of lives lost and millions of lives wrecked.

    தோழர் jp புதிய சர்ச்சை கிளப்ப வேண்டாம்…அறிவு உங்கள் முயற்சி வீண் போக வில்லை என்னை போன்றவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. நன்றி.

  75. வாங்க அசுரன்,

    இப்பதான் இந்த விவாதமே களை கட்டுது. இதே போல ஆதாரங்களோட மற்றவர்களும்
    வாதம் செய்தால் அருமையா இருக்கும்.

    ////அய்யா ராசா, இந்திய வரலாற்றிலேயே இது வரை காணாத விலை உயர்வையும், பெட்ரோல் விலை உயர்வையும், உணவுத் தட்டுப்பாட்டையும் தற்போது நாம் பார்த்து வருகிறோம். இதற்குக் காரணம் சாட்சாத் அந்த தனியார்மய, தாராளமய, உலகமய பரமாத்மாதன். அந்த பரமாத்மா புண்ணியத்தில்தான் சர்வதேச் சூதாடிகள் (அதியமான் பாசையில் நெம்பத் திறமையான முதலாளிகள்) ஆன்லைன் சூதாட்டம், முன் பேர சூதாட்டம் என்று சூதாடி விலைவாசியை ஏற்றினர்.

    இதை அதியமான் மறுப்பார் என்று பெட் கட்டுபவர்கள் கட்டலாம்.(நாமலும் கொஞ்சம் சூதாடிப் பார்ப்போம்)./////

    பெட் எவ்வளாவு ? நான் தயார். :)) வசமா மாட்டினீக தம்பி.

    இந்திய வரலாற்றிலேயே இதுவரை காணத விலை உயர்வா ? பெர் கெபிட்டா உணவு கன்ஸ்மஸன் பற்றி ஆர்.பி.அய் புள்ளிவிவரங்களை எடுத்து வைக்கும் நீங்க இதற்க்கும் ஆதாரம் காட்ட முடியுமா ?

    கடந்த 10 வருடங்களில் விலைவாசி உயர்வு, 7 % அய் தொட்டாலே அனைவரும் அலறுகிறோம். 60களில் மற்றும் 70களில் இது எத்தனை சதம் இருந்தது தெரியுமா ? ஆண்டுக்கு 20 % மிக சாதாரணமாக இருந்த கொடுமையான காலங்கள். சுதந்திர இந்தியாவில் இப்போது போல குறைவான இன்ஃப்லேஸன் முன்பு எப்போதும் இருந்ததில்லை. 1960இல் ராஜாஜி இதை பற்றி எழுதிய ஒரு அருமையான கட்டுரை இது : http://athiyaman.blogspot.com/2007/08/deficit-financing-rajaji-in-swarajya.html

    மேலும் விலைவாசி உயர்வின் அளவுகள் பற்றி :

    http://www.rbi.org.in/Scripts/PublicationsView.aspx?id=9545
    வட்டி விகிதங்கள் எப்போதும் இன்ஃப்லேசன் அளவை ஒட்டி அதற்கு நேர் விகிதத்தில் தான் இருக்கும். இது ஒரு அடிப்படை பொருளாதார விதி. வட்டி விகிதங்கள் 80கள் வரை ஆண்டுக்கு 24 சதம் மிக சாதாரணமாக இருந்தது. வங்கி வட்டி விகிதங்களை தான் சொல்கிறேன். அதாவது விலைவாசி உயர்வு அதற்கு சற்று குறைவான விகுதத்தில் இருந்தத. (வட்டி என்பது பணத்தின் வாடகை மற்றும் அட்மின் செலவுகளையும் உள்ளடுக்கும்.) இன்ஃப்லேசன் அளவு மிக குறைந்துள்ளது என்பதே உண்மை.

    உணவு பொருட்களில் சில வகைகள் சமீபத்தில் விலை உயர்ந்துள்ளதுதான். உற்பத்தி குறைவு, மற்றும் இதர காரணிகள். இதை பற்றி பிறகு சொல்கிறேன்.

    • ////
      ////அய்யா ராசா, இந்திய வரலாற்றிலேயே இது வரை காணாத விலை உயர்வையும், பெட்ரோல் விலை உயர்வையும், உணவுத் தட்டுப்பாட்டையும் தற்போது நாம் பார்த்து வருகிறோம். இதற்குக் காரணம் சாட்சாத் அந்த தனியார்மய, தாராளமய, உலகமய பரமாத்மாதன். அந்த பரமாத்மா புண்ணியத்தில்தான் சர்வதேச் சூதாடிகள் (அதியமான் பாசையில் நெம்பத் திறமையான முதலாளிகள்) ஆன்லைன் சூதாட்டம், முன் பேர சூதாட்டம் என்று சூதாடி விலைவாசியை ஏற்றினர்.

      இதை அதியமான் மறுப்பார் என்று பெட் கட்டுபவர்கள் கட்டலாம்.(நாமலும் கொஞ்சம் சூதாடிப் பார்ப்போம்)./////

      பெட் எவ்வளாவு ? நான் தயார். 🙂 ) வசமா மாட்டினீக தம்பி.

      ////

      நான் குறிப்பிட்டதில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. சாய்நாத்தின் வரிகளில் சொல்வதென்றால் எம்ர்ஜென்ஸிக்கு முந்தைய காலகட்டத்தை தவிர்த்துவிட்டு பார்த்தால், இந்திய வரலாற்றிலேயே விலைவாசி அதிகளவு உயர்ந்த காலகட்டம் உங்களது அபிமான LPG காலகட்டம்தான். இதைத்தான் சவால் விட்டு கேட்டிருந்தேன். மறுக்க இயலுமா என்று பாருங்கள்.

      1970 லிருந்து இன்று வரையான காலகட்டத்தை எடுத்துப் பார்த்தால் உலகமய கொள்கைகளுக்கு பிறகுதான் இந்த சீரழிவுகள் வீரியம் அடைகின்றன.

      இதே அதியமானுடனான அல்லது டாலர் செல்வனுடனான முன்பொரு விவாதத்தில் 1990களுக்கு முந்தைய காலகட்டம் இவர்களின் அளவீட்டின்படி சிறப்பானதாக இருந்த்தை சுட்டிக் காட்டி மடக்கியிருக்கிறேன்(வறுமைக் கோடு குறித்த கூகிள் குரூப் விவாதம்) என்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

      அசுரன்

    • //வட்டி விகிதங்கள் எப்போதும் இன்ஃப்லேசன் அளவை ஒட்டி அதற்கு நேர் விகிதத்தில் தான் இருக்கும். இது ஒரு அடிப்படை பொருளாதார விதி. வட்டி விகிதங்கள் 80கள் வரை ஆண்டுக்கு 24 சதம் மிக சாதாரணமாக இருந்தது. வங்கி வட்டி விகிதங்களை தான் சொல்கிறேன். அதாவது விலைவாசி உயர்வு அதற்கு சற்று குறைவான விகுதத்தில் இருந்தத. (வட்டி என்பது பணத்தின் வாடகை மற்றும் அட்மின் செலவுகளையும் உள்ளடுக்கும்.) இன்ஃப்லேசன் அளவு மிக குறைந்துள்ளது என்பதே உண்மை.//

      இன்பேலேசன் அளவுக்கும் மக்களின் வாழ்க்கை யை கெடுக்கும் விலைவாசி உயர்வுக்கும் சம்பந்தமில்லை என்பதை சமீபத்திய புள்ளிவிவரங்கள் நிருபிக்கும்.

      கடந்த சில வருடங்களில் இன்பெலேசன் மையமாக நின்று பவுசு காட்டிய பொழுதும் சரி இப்பொழுது கடந்த சில வாரங்களா நெகட்டிவ்வில் இருந்த போதும் சரி விலைவாசி என்னவோ உயர்ந்து கொண்டேதான் இருந்தது. இன்னும் சரியாகச் சொன்னால், இன்ப்லேசன் நெகட்டிவ்வில் இருந்த பொழுதுதான் துவ்ரம் பருப்பு 100 ரூபாயைத் தாண்டியது.

      விலைவாசி உயர்வுக்குக் காரணம், அன்னிய மூலதனத்தின் வருகை, ஊக வணிகம், பதுக்கல், விவசாயச் சீரழிவு ஆகியனவே…

      அசுரன்

  76. Asuran,

    Indian agriculture is in the presnt dire straits precisely because of stupid leftist polices followed till date. All (repeat ALL) developed nations in this world were like India in the 19th century. They followed free market polices and developed from a agri based nations to industrialised and properous nations. (imperialism and its effects are a different matter and cannot be held as the sole reason for development). If (repeat IF) India had not followed Nehru’s statist (or Indian brand of pseudo socilaism) polices from 1947 and instead opted for free market capitalism, then India agricuture and national economy will certaily would have been much much better by now. Industry was shackled by licensing raaj created by “planning” ; and land “reforms” and land ceiling acts reduced farm sizes to less then 2 acres now. and farmers are now trapped in their farms with no easy or viable exit options. In china or EU or US, the average farm size is in thousands of acres. whether they are collective farms or corporate farms, these economies of scale is a basic need for

    efficient production fo cheap food and crops. and in all those nations the farming population GARADUALLY shifted to the new oppurtunites created in manufacturing and fianally to services. not like our Indian experiment where leftists / marxists of all types blocked any move towards such rational policy. this is my old post :

    http://nellikkani.blogspot.com/2008/05/blog-post_21.html

    விவசாயகள் தற்கொலைக்கு பல காரணிகள்

    And Indian population is now more than 110 crores. if the total food production / consumption is divided by this 110 crores, then per capita consumption of food will certainly be lower as per RBI stat.

    and if we had not liberalised this much since 1991, we would have become bankrupt and mass starvation would have followed. and kindly state the link between opening up manufacturing sector and services to the problems in agriculture. you may quote the % of spending of govt which is lower on agri now than in the past. that is not the fault of free market advocates. the govt is able to get its TAX REVENUE only from manufacturing and services. this money is spent on agri. and compare the total tax revenue of GoI and all state govts now with that of 70s. (the net value shall be adjusted for inflation) ; u can know the enormous increase in the tax revenue. if we had listened to people like you till date, and not liberalised this much, then there will be no such increase in tax revenue or net employment….

    • //All (repeat ALL) developed nations in this world were like India in the 19th century. They followed free market polices and developed from a agri based nations to industrialised and properous nations.
      //

      Free market policy என்று எதை சொல்கிறீர்கள் அதியமான்?

    • //and if we had not liberalised this much since 1991, we would have become bankrupt and mass starvation would have followed. //

      சரி அதுக்கு இன்னா செய்யச் சொல்றீங்க? 1990க்கு முந்தி நாங்க ஆட்சி செஞ்சமா? அப்பயும் நீங்கதானே(முதலாளிகள்) ஆட்சி செஞ்சீங்க?

      1980களில் நாடே மூழ்கிவிட்டது என்று அதியமான் கூறும் அதே வேளையில் இந்தியாவின் சோசியல் இண்டிகேட்டர் வேற்ந்த காலத்தையும் நல்ல நிலையில் இருந்தது(ரிசர்வ் வங்கி முதல் பல்வேறு புள்ளிவிவரங்கள் கூறும் உண்மை இது). இதன் அர்த்தம் ஏதோ 1980கள் சுபிட்சமாக இருந்தததுஎன்பது அல்ல, மாறாக சீரழிவு காலகட்டத்திலேயே 1980கள் கொஞ்சம் ப்ரவாயில்லாத ஒன்றாக இருந்தது என்பதே ஆகும். இதன் ப்

    • //And Indian population is now more than 110 crores. if the total food production / consumption is divided by this 110 crores, then per capita consumption of food will certainly be lower as per RBI stat.//

      புள்ளக்குட்டிகள பெத்துக்காதீங்கன்னு சொல்ல வற்றீங்களா? சோறு போட வக்கில்லாத அரசு என்னாத்துக்கு உய்யாரமா வல்லரசு கனவு காணுது? ‘ ‘த்த மூடிக்கிட்டு வாய்க்கு என்ன வழியோ அத்த தேட வேண்டியதுதான?

      பிரச்சினை 110 கோடியல்ல என்பதையும், விவசாயத்தின் சீரழிவும், உணவுப் பயிருடுவதை திட்டமிட்டு ஒழித்ததுதான் என்பதையும், பசுமைப் புரட்சிதான் என்பதையும், இந்தியாவில் உணவுப் பயிரிடும் பரப்பளவு குறித்த புள்ளிவிவரங்களுட்ன் வாதாட இயலும். ஆனால் அதியமான் தாவித் தாவி பல்வேறு தளங்களுக்குச் செல்ல நாமே ஏன் வாய்ப்பேற்படுத்திக் கொடுப்பானேன் என்று அவற்றை தற்போது தவிர்க்கிறேன்

      அசுரன்

  77. எல்லா நோய்களையும் தீர்க்கும் ஒரே மருந்து “இன்னும் நல்லா திறந்து விடனும்” என்பதுதான்…
    1991 க்கு பிறகு இந்தியாவில தொறந்து உட்டுட்டுதானே உள்ளோம் அப்புறமும் ஏன் முன்னை விட இப்போ மோசம்னு கேட்டா.. மீண்டும் “இன்னும் நல்லா தொறந்துவுடனும்” என்பார்…

    இப்படி மீண்டும் மீண்டும் முருங்க மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டால் என்ன செய்வது என்று தெரியவில்லை…

    http://www.hindu.com/2009/08/15/stories/2009081555920800.htm

    சாய்நாத் அவர்களின் கட்டுரையை படித்த பின்பும் விவசாயத்தில் நாம் பின் தங்கி உள்ளதற்கு காரணம் இடதுசாரி கொள்கைகள் என்று சொன்னால்.. என்ன செய்ய..

    பைனல் கண்குளுசன்..

    ஏதாவது ஒரு புள்ளி விவரம் கொஞ்சம் ஏறு முகமா இருந்தால் அது நாம தொறந்து உட்டதால வந்தது…
    மற்ற புள்ளி விவரங்கள் இறங்கு முகமாக இருந்தால் அது நாம தொறந்து உடாம , இடது சாரி கொள்கைகளை அமுல்படுத்துவதால் வருவது…

    • //ஏதாவது ஒரு புள்ளி விவரம் கொஞ்சம் ஏறு முகமா இருந்தால் அது நாம தொறந்து உட்டதால வந்தது…
      மற்ற புள்ளி விவரங்கள் இறங்கு முகமாக இருந்தால் அது நாம தொறந்து உடாம , இடது சாரி கொள்கைகளை அமுல்படுத்துவதால் வருவது…//

      இன்னொரு கன்கூளசன் மிஸ்ஸிங்க்.. இது எதற்கும் அடங்காத நெகட்டிவ் புள்ளிவிவரம் எனில் அவை உண்மையானவை இல்லை என்று எல்லாம் வல்ல சிரி சிரி அதியமானந்தா மேல் பாரத்தை போட்டுவிட்டு ஒரே போடாக போடுவது…

  78. பகத்,

    1991 அய் விட இன்று நிலைமை பரவாயில்லை தான். ஆதாரங்கள் பல உள்ளன.
    சாய்நாத் அவர்களின் கட்டுரையை நான் முன்பே படித்துவிட்டேன். இங்கும் அதை பற்றி
    எழுதியிருக்கிறேன். அவரின் தகவல்கள் மற்றும் விவரங்கள் சரியானவைதாம். ஆனால்
    அவரின் கருத்துகள் தவறானவை. அதை பற்றி ஏற்கெனவெ எழுதியுள்ளேன். பார்க்கவும்.
    மேலும் இந்தியா முழுவதும் அனைத்து வகை விவசாயிகளும் சிக்கலில் இல்லை.
    நம் தமிழ்நாட்டில் நிலைமை அந்த அளவு மோசமில்லை. முக்கிய காரணி, இங்கு
    தொழில் துறை நன்கு வளர்ந்து உள்ளதால், மாற்று வேலை வாய்ப்புகள் உள்ளன.

    விவசாயம் பற்றிய எமது சுட்டி மட்டும் கருத்துக்களை பற்றி என்ன சொல்றீக ?

    மேலும் திறந்துவிட வேண்டாம் சாமி. பழைய படி முடிய பொருளாதார கொள்கைகளை
    அமல்படுத்தி பாருங்களேன், என்ன ஆகும் என்று..

    நம் நாடு, கச்சா எண்ணை மற்றும் பல முக்கிய பொருட்களை இறக்குமதி செய்தே
    ஆக வேண்டிய நிலையில் உள்ளது. இறக்குமதிக்கு அன்னிய செல்வானி தேவை. 1991 வரை
    அய்.எம்.எஃப் இடம் கடன் வாங்கி சீரழந்தோம். நமது ரூபாயின் மதிப்பு, மிக மிக குறைந்தது.
    (1947 இல் ஒரு டாலர் : 2 ரூபாய் அளவில் இருந்தது). கடன் மற்றும் வட்டி கட்ட முடியாமல்,
    1991இல் திவாலாகி, இறக்குமதி நின்று போய் நாடே அழியும் நிலை உருவானது. பிறகு புத்தி
    வந்து, பொருளாதாரத்தை “திறந்து விட்டோம்” ; அதை பற்றி விரிவாக எனது பிளாகில் எழுதியுள்ளேன். பதில் சொல்லுங்கள் முடிந்தால். அன்று உமது “தோழர்கள்” பேச்சை கேட்டிருந்தால் என்னவாகியிருக்கும் ? முக்கியமாக விவசாயிகள், ஏழைகள் நிலை இன்று என்ன ஆகியிருக்கும் ? வட கொரியா போல பஞ்சம், பட்டினி, அழிவை சந்தித்திருப்போம்..

    கம்யூனிச புரட்சி கொண்டுவந்தாலும், விவாயிகளின் நிலைய நீங்க முன்னேற்ற முடியாது. மாறாக,
    பல கோடி விவசாயிகள் செத்தொழிய வகை செய்வீர்கள். அதுதான் ரஸ்ஸியா. சீனாவின் கடந்த கால‌
    வரலாறு. நீங்க அதை அவதூறு என்று இங்கு “மறுக்கலாம்” ; ஆனால் வரலாறில் பொய்கள் நிலைக்காது.

  79. //try this about food consumption in India :// அதுல முடிவுக்கு வரக் கூடிய அளவுக்கு பெரிதாக விவ்ரம் எதுவும் இல்லையே?

  80. //All (repeat ALL) developed nations in this world were like India in the 19th century. They followed free market polices and developed from a agri based nations to industrialised and properous nations.
    //

    Free market policy என்று எதை சொல்கிறீர்கள் அதியமான்?/// i meant the way those nations did not try to control or limit farm sizes unlike Indian land ceiling act which made large farms of 1000s of acres and conversion to mechanised farming impossible. those nations did not throttle their economy with stupid controls and taxes which we did. hence their population engaged in farming slowly shifted to manufacturing while the farming was mechanised and made higly productive. and rational banruptcy and debt recovery mechanism enabled huge private investment into agri, unlike India. ok. read about the excellent farm and agri insititute developed in UP on 700 acres by Escorts company which was nationalsied and wasted away in 1973..

    • //those nations did not throttle their economy with stupid controls and taxes which we did. hence their population engaged in farming slowly shifted to manufacturing while the farming was mechanised and made higly productive.//

      இரண்டாவது பொய், //farming slowly shifted to manufacturing// அப்படியெல்லாம் நடக்கவில்லை. விவசாயத்திலிருந்து நவீன தொழில்த்துறை பொருளாதாரமாக இன்றைய நாடுகள் புரட்சி ஏற்பட்டே மாறின. அது இவர் சொல்வது போல சுலோ புரோசஸ் இல்லை. மேலும் பழைய உலகத்தின் நில் உடமை அடிப்படைகள் தகர்த்தெறியப்பட்டு அங்கு நவீன முதலாளித்துவம் நுழைக்கப்பட்ட நிகழ்வானது சுமோத்தாக, சுலோவாக நடந்த ஒரு செயல் அல்ல. மேலும் பிரி மார்க்கேட் என்பது அதியமான் சொல்கின்ற விசயம் மட்டுமே அல்ல.

      இந்தியாவில் பிரி மார்க்கெடு உருவாகமல் போனதற்கு காரணம் 1947க்கு முன்பு வ்ரை நேரடியான பிரிட்டிஷ் ஏகாதிபத்திய மூலதனம், அதற்கு பிறகு அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மறைமுக மூலதனம் ஆதிக்கமும் அதற்கு சேவை செய்யும் வகையில் தேசிய பொருளாதாரம் கடும் கட்டுப்பாடுகளுடன் ஒடுக்கப்பட்டதும். இன்று 1990க்கு பிறகு நேரடியான அன்னிய மூலதனம். இவையே அதியமான் குறிப்பிடும் பிரி மார்க்கெட் உருவாகமல் போனதன் அடிப்படை.

      ப்ரி மார்க்கெட் என்று சொல்லும் அதியமான் ஒரு முக்கியமான விசயத்தை மறைத்து விடுகிறார். ப்ரி மார்க்கெட் மூலம் முதலாளித்துவ நாடுகளாக பரிணமித்த நாடுகள் திறந்த பொருளாதாரமாக இருந்தனவா மூடிய பொருளாதாரமாக இருந்தனவா? இந்த காம்பினேசன்தான் பிரச்சினையே… இதற்கு அதியமான் என்ன பதில் சொல்கிறார் என்று பார்ப்போம்.

      அசுரன்

  81. //i meant the way those nations did not try to control or limit farm sizes unlike Indian land ceiling act which made large farms of 1000s of acres and conversion to mechanised farming impossible.//

    இந்திய விவசாயத்தின் இயல்பே குத்தககை விவசாயமும், துண்டு துண்டாக சிறுவீத விவசாயம் செய்வதும்தான். இது நீங்கள் குறிப்பிடும் சட்டம் வருவதற்கு முன்பும் இருந்தது. இந்த சட்டம் யாரை நோக்கி ஏவப்பட்டதாக சொல்ல்ப்பட்டதோ அந்த நிலபிரபு வர்க்கம் நில உச்சவரம்பு சட்டத்தால் பாதிக்கப்படவில்லை, சட்டத்தில் உள்ள ஓட்டைகள், தமது அதிகார பலம் போன்றவற்றால் இன்று வ்ரை தப்பித்தே வந்துள்ளது. விவசாயத்தில் முதலாளித்துவ உற்பத்தி முறை வரததற்கு காரணம் இந்த சட்டம்தான் என்று பேசுவது சுத்த சிறுபிள்ளைத்தனம். நில உச்ச வரம்பு சட்டம் படு தோல்விகரமானது என்பதை அரசினுடைய புள்ளிவிவர்ங்களே அம்பலப்படுத்துகின்றன.

    நில உச்ச வரம்பு சட்டம் ஓரளவு வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்ட மேற்குவங்கத்தில்தான் விவசாயம் ஒரளவு லாபகரமானதாக இருந்தது என்பது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

    • sirupillai thanmaha pesuvathu neerthaan asuran. ok. read about this isse from Rajaji’s collected works of his writings in 50s and 60s. ablosihing zamindars is correct and needed and was done. (by Rajaji too). but can you show any single farm unit of above 1000 acres anywhere now ? it is alleged Moopanar family has one such with benami holdings. but not sure now. anyway, the average farm size is now less than 2 acres now. it was NOT this bad before 1947. and corporates and MCS are / were prevented from entering farming like in the west. ok. hence no new investment or techonoly, etc. US and EU and Canadian farming grew and become extremely efficient in the past 200 years. HOW ? and why couldn’t we ? even Chinese (for all their follies and violations) are having a much much efficent farm size and technology now. you don’t know what happened in the past. ok. read more about this vital past history. i have lot of material about this in paper form. esp Rajaji’s penetrating analysis.

    • sirupillai thanmaha pesuvathu neerthaan asuran. ok. read about this isse from Rajaji’s collected works of his writings in 50s and 60s. ablosihing zamindars is correct and needed and was done. (by Rajaji too). but can you show any single farm unit of above 1000 acres anywhere now ? it is alleged Moopanar family has one such with benami holdings. but not sure now. anyway, the average farm size is now less than 2 acres now. it was NOT this bad before 1947. and corporates and MCS are / were prevented from entering farming like in the west. ok. hence no new investment or techonoly, etc. US and EU and Canadian farming grew and become extremely efficient in the past 200 years. HOW ? and why couldn’t we ? even Chinese (for all their follies and violations) are having a much much efficent farm size and technology now. you don’t know what happened in the past. ok. read more about this vital past history. i have lot of material about this in paper form. esp Rajaji’s penetrating analysis.

      • //but can you show any single farm unit of above 1000 acres anywhere now ?//

        ஜமீந்தார் முறை ஒழிக்கப்பட்டதாக நீங்கள் நம்பும் காலத்துக்கு முன்பு மட்டும் இருந்ததா என்ன? நில உச்ச வரம்பு சட்டம் ஒரு மோசடி, அதன் மூலம் மாற்றம் ஏற்பட்டது, நிலம் வினியோகிக்கப்பட்டது என்ற் அரசு புள்ளிவிவரம் இன்னும் பெரிய மோசடி என்பதை நிருபிக்க இயலும் எனினும் அனைத்தும் தழுவிய விவாதம் நடத்துவதில் எனக்கு விருப்பம் எப்போதுமே குறைவுதான். குறிப்பான தலைப்புகளில் ஊன்றி விவாதம் செய்வதே எனக்குப் பிடிக்கும்.

        அசுரன்

      • agreed that land “reforms” were not carried out fully and there was lot of fraud and benami tranascations. but this land ceiling act prevents large sized corporate farming in rural areas till date. no indian co or MNC can purchase 1000s of acres from farmers (directly) and start a modern farm. it is not allowed till date. ok. hence the poor farmers and peasants are unable to sell their lands at a better price andsand unviable farms. worse, they have not much alternative employment in many areas of the country due ot the CUMULATIVE effects of the past license raaj which thorttled the creating of a large and decentralised manufacturing base spread evenly across the nation. ok. China, for all its follies is very different in this vital matter. We have to compare India with only China due to the size, geography and demography..

  82. ///அன்பு முதலாளிகளுக்கு ஒரு வருடத்தில் கொடுக்கப்படும் கடன் தள்ளுபடி மட்டும் 1லட்சம் கோடிகள், இது வருடா வருடம் கொடுக்கப்படுகிறது. ஆயினும் வங்கிகள் எதுவும் திவாலகிவிடவில்லை//// prove this asuran. P.Sainah is crazy when he talks about trillions of “lost” tax revenue since 1991 ,when tax rates were reduced drastically. what he and you and your comrades do not understand is that without reducing tax rates from stupidly high levels, there would no gorwth of GDP and tax revenue to this levels. i had clearly stated about this nonsense in my earlier comments about Sainath’s ideas here. do you know that the highest marginal rate of IT was some 98 % in 1970. it is now 33 % only. so ? if the rate was maintained at 1970 level, would there be this much revenue now ? crazy. same with corporate tax rate which were higher than 60 or 70 % in the 70s. now it is 33 %. but look at the enormous tax revenue generated now and then. Sainath is nuts in this issue. he is no economict and so are you.

    RBI stat reflects official data of organised sector only if real job creations are only in lacs then there will be crores of unemployed now flooding the roads. the black economy supports them all. there is official statistics and the black and illegal economy here, unlike anywhere in the west. ok. there is acute labour shortage in many areas and sectors now. also in agriculture. there is demand for labout in many many areas of this nation. go see for yourself.

  83. //P.Sainah is crazy when he talks about trillions of “lost” tax revenue since 1991//

    I am not quoting Sainath when I said முதலாளிகளுக்கு ஒரு வருடத்தில் கொடுக்கப்படும் கடன் தள்ளுபடி மட்டும் 1லட்சம் கோடிகள். there are other statistics available to prove this point….

  84. //there would no gorwth of GDP and tax revenue to this levels.//

    Who bothers about your GDP and other blah blahs….. இவையெல்லாம் மக்களின் பொருளாதார வாழ்வை மேம்ப்படுத்தியுள்ளதா? இல்லையென்று சொல்கிறார்கள் மன்மோகன் சிங்கும் ரிசர்வ் வங்கியும். நீங்கள் விதம விதமாக குன்சு குன்சாக பெய்ர் வைத்துக் கொண்டு செய்வது எல்லாமே சுரண்டல் மட்டுமே. பிறகு இதில் தார்மீக ஆவேசம் வேறு….

    • தோழர் அசுரன்,

      உங்களுடைய email, முகவரியை பின்னூட்டப் பெட்டியில் இடவும், இல்லையெனில் பின்னூட்டங்கள் தானாக மட்டறுக்கப்பட்டு விடும்.. ஒவ்வொரு பின்னூட்டத்தையும் நாங்கள் வெளியிடுமாறு ஆகிவிடுகிறது.

      புரிதலுக்கு நன்றி

      வினவு

  85. நன்றி

    //உங்களுடைய email, முகவரியை பின்னூட்டப் பெட்டியில் இடவும், இல்லையெனில் பின்னூட்டங்கள் தானாக மட்டறுக்கப்பட்டு விடும்.. //

    அவ்வாறே செய்கிறேன்..

    அசுரன்

  86. அசுரன்,

    தார்மீக கோபம் என்பது உமது “தனி உடைமையா” என்ன ? எம்மைப் போன்றவர்களுக்கு வரக்கூடாதா என்ன ? உங்களை செலுத்தும் அதே மனிதனேயம் தான் எம்மையும் செலுத்துகிறது என்பதை புரிந்து கொள்ள முயலுங்கள். நம் வழிமுறைகள் தாம் வேறு. நோக்கங்கள் ஒன்றுதான்.

    ம‌ன்மோக‌ன் சிங் என்ன‌ சொன்னார் ? 1991க்கு பின் செய‌ல்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ தார‌ள‌ம‌ய‌மாக்க‌லால் தான் இன்று நிலைமை இப்ப‌டி ஆன‌து என்றாரா ? அவ‌ர் சொன்னது என்ன ? அரசு எந்திரத்தின் மொத்தன போக்கையும், ஊழலையும் ப‌ற்றி பேசினார். எத்தனை லச்சம் கோடிகள் செலவு செய்தாலும் அது சரியாக போய் சேருவதில்லை. அதற்கு காரணம் உலகமயமாக்கலா அல்லது லோக்கல் ஊழல் அமைப்பா ? வ‌றுமை அள‌வு பற்றி என்ன‌ சொல்கிறார் ? மேலும் அவ‌ர் க‌ம்யூனிச‌த்தைப் ப‌ற்றி, க‌ட‌ந்த‌ கால‌ இந்திய‌ பாணி பொருள‌தார‌ கொள்கைக‌ளின் நீண்ட‌ கால‌ விளைவுக‌ள் ப‌ற்றி சொன்ன‌தை ஏற்பீர்க‌ளா என்ன‌ ? இந்த‌ தாரள‌ம‌ய‌மாக்க‌லின் த‌ந்தையே அவ‌ர்தான்.

    அல்ல‌து தார‌ள‌மய‌மாக்க‌ல் செய்த‌து த‌வ‌று ; செய்யாம‌ல் ப‌ழைய‌ பாணியில் தொட‌ர்ந்திருந்தால் இன்று நிலைமை ப‌ல‌ ம‌ட‌ங்க‌ மேம்ப‌ட்டிருக்கும் என்கிறாரா ?

    ஜி.டி.பி அதிக‌மானால் தான் உற்ப‌த்தி, வேலை வாய்ப்பு ம‌ற்றும் நிக‌ர‌ வ‌ரி வ‌சுல் அதிக‌ரித்து, அத‌ன் மூல‌ம் ஏழ்மையை குறைக்க‌லாம் என்ப‌து பால‌பாட‌ம். இது க‌ம்யூனிச‌ நாடுக‌ளுக்கும் பொருந்தும் அடிப்ப‌டை பொருளாதார‌ விதி. பிளா பிளா என்றால் இது மாறுவிடுமா என்ன‌ ?

    இன்ஃப்லேஸ‌ன் ப‌ற்றிய‌ எம‌து க‌ருத்துக்க‌ளை, உம‌து பெட்டை ப‌ற்றி என்ன‌ ?

    க்லோஸ்ட் எகானாமி என்னால் என்ன‌வென்று அறியாம‌லே இப்ப‌டி “அருமையாக” விள‌க்க‌ம் அளிக்கிறீர்க‌ளே ?பார்க்க : http://en.wikipedia.org/wiki/Autarky
    வ‌ளர்ந்த‌ நாடுக‌ள் இப்ப‌டி செய்ய‌வில்லை. மாற்றாக‌ தென்.கொரியா, ல‌த்தின் அமெர்க்க‌ நாடுக‌ள் ம‌ற்றும் இந்தியா போன்ற‌ நாடுக‌ள் தாம் மூடிய‌ பொருளாதார‌ கொள்கைக‌ள் ம‌ற்றும், இம்போர்ட் ஸ்ப்ஸ்டிடுஸ‌ன் என்ற‌ மூட‌த்த‌ன‌மான் கொள்கைக‌ளால் முன்பு சீர‌ழ‌ந்த‌து.

    • //அதே மனிதனேயம் தான் எம்மையும் செலுத்துகிறது என்பதை புரிந்து கொள்ள முயலுங்கள்.//

      அதியமானின் மனிதாபிமானம் எப்படிப்பட்டது? சரியாகச் சொன்னால் எந்த வர்க்கத்துக்கானது என்பதை எமக்கு புரிந்த அளவில் முந்தையதொரு பின்னூட்டத்தில் சொல்லியிருந்தோம் அது மீண்டும் கீழே:

      cheap products மட்டும் சொன்ன அதியமான் சீப் லேபர் கிடைக்கும் மர்மத்தையும் சொல்லியிருக்கலாம். செர்விஸ் செக்டரில் வேலை வாய்ப்பு உருவாகும் வேகத்தை விட பல மடங்கு அதிகமாக விவசாயத்தின் சீரழிவால் வேலையிழப்பவர்கள் அதிகம். இதற்கு உதாரணம் அதியமானின் சர்வீஸ் செக்டரில் வேலை செய்ய ஒரிஸ்ஸாவிலிருந்து வரும் பஞ்சத்தில் அடிபட்ட ஏழைகள்.

      அதியமானின் வாழ்க்கை அனுபவமே உலகின் வாழ்க்கை அனுபவம். திருப்பூரே இந்தியா என்று கிணற்றுத் தவளையாக கதறுகிறார் அதியமான். நம்புங்கள் அவரது பார்வை உலகப் பார்வை…

      எதற்கெடுத்தாலும் நைந்டீன் எயிட்டி என்று கூறும் அதியமான் 1980களில் விவசாயம் இருந்த நிலைக்கும் இன்றைய நிலையில் சிரழிந்துள்ளது குறித்தும் தமது உலகளாவிய அனுபவத்தின் அடிப்படையில் கருத்து கூறுவார் என்று நம்புவோம்.

      அதியமான் உருவாக்கிய வேலைவாய்ப்புகள், சமீபத்திய உலகப் பொருளாதார மந்தத்தில் அழிந்து போயினவே ஏன்?

      இவரது அன்பு முதலாளிகள் சுமங்கலி திட்டத்தில் ஏழை விவசாய குடிகளின் தாலியறுத்து உருவாக்கும் சீப் புரோடகட்ஸ் அமெரிக்க சீமாட்டிகளுக்ககோ அல்லது அமெரிக்க சீமாட்டிகளை மனதில் இருத்தி அழையும் கீழைத்தேய சீமாட்டிகளுக்கோதானே செல்கிறது? அவற்றின் சமூக பயன் மதிப்பு என்ன? ஒரு பெரிய பூஜ்யம்?

      அதியமான் வகையாறாக்களின் வேலை வாய்ப்பு புலம்பலின் பின் உள்ள பித்தலாட்டத்திற்கு ஒரு சோற்று பதம், தேசிய கிராமப் புற வேலை வாய்ப்பு திட்டம் ஆகும். இதற்கு அதியமான் கூறும் பதில் இந்தியாவின் மக்கள் தொகைக்கு எல்லாருக்கும் வேலை என்பது யாராலும் கொடுக்க முடியாது என்பது.

      அய்யா, அதியமான் அவர்களே ஒரு நாளைக்கு 12/16 மணிநேரம் ஒரிஸ்ஸா தொழிலாளியை சுரண்டி சீப் புராடக்ட் கொடுத்து லாபம் அல்லும் முதலாளிகள் இருக்கும் வரை எல்லாருக்கும் வேலை என்பது சாத்தியமில்லை.

      சோசலிசத்தில் மனிதர்கள் எண்ணிக்கை பெருகினால் வேலை நேரம் குறையும். கேப்பிடலிசத்திலோ தற்கொலைகள், கொலைகள் பெருகும். அதியமான்களோ ஐ.நா. சபையின் மனித உரிமை சாசனத்தைத்தான் ‘யாம் மிகவும் உயிரினும் மேலாக மதிக்கிறோம்’ என்று உதார் விட்டுக் கொண்டே மக்கள் மடிவதை நியாயப்படுத்துவார்கள் – ‘எல்லாருக்கும் வேலை என்பது சாத்தியமில்லை’ என்று கூறி.

      அசுரன்

  87. /////இரண்டாவது பொய், //farming slowly shifted to manufacturing// அப்படியெல்லாம் நடக்கவில்லை. விவசாயத்திலிருந்து நவீன தொழில்த்துறை பொருளாதாரமாக இன்றைய நாடுகள் புரட்சி ஏற்பட்டே மாறின. அது இவர் சொல்வது போல சுலோ புரோசஸ் இல்லை. மேலும் பழைய உலகத்தின் நில் உடமை அடிப்படைகள் தகர்த்தெறியப்பட்டு அங்கு நவீன முதலாளித்துவம் நுழைக்கப்பட்ட நிகழ்வானது சுமோத்தாக, சுலோவாக நடந்த ஒரு செயல் அல்ல. மேலும் பிரி மார்க்கேட் என்பது அதியமான் சொல்கின்ற விசயம் மட்டுமே அல்ல.

    இந்தியாவில் பிரி மார்க்கெடு உருவாகமல் போனதற்கு காரணம் 1947க்கு முன்பு வ்ரை நேரடியான பிரிட்டிஷ் ஏகாதிபத்திய மூலதனம், அதற்கு பிறகு அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மறைமுக மூலதனம் ஆதிக்கமும் அதற்கு சேவை செய்யும் வகையில் தேசிய பொருளாதாரம் கடும் கட்டுப்பாடுகளுடன் ஒடுக்கப்பட்டதும். இன்று 1990க்கு பிறகு நேரடியான அன்னிய மூலதனம். இவையே அதியமான் குறிப்பிடும் பிரி மார்க்கெட் உருவாகமல் போனதன் அடிப்படை.

    ப்ரி மார்க்கெட் என்று சொல்லும் அதியமான் ஒரு முக்கியமான விசயத்தை மறைத்து விடுகிறார். ப்ரி மார்க்கெட் மூலம் முதலாளித்துவ நாடுகளாக பரிணமித்த நாடுகள் திறந்த பொருளாதாரமாக இருந்தனவா மூடிய பொருளாதாரமாக இருந்தனவா? இந்த காம்பினேசன்தான் பிரச்சினையே… இதற்கு அதியமான் என்ன பதில் சொல்கிறார் என்று பார்ப்போம்
    /////

    நடக்கவில்லையா. பின எப்படி நடந்ததாம். என்ன “புரட்சி” ? ஸ்லோ பிராஸல் இல்லாமல், உங்க ஸ்டாலின் மற்றும் மாவோ முயன்றது போல அதிரடி, வேகமான “பாய்ச்சலா” ? முன்னேறிய நாடுகளிலும் முன்பு கடுமையான வறுமை மற்றும் பல பிரச்சனைகள் இருந்தன. விவசாயம் படிப்படியாக நவீனப்படுத்தப்பட்டது.
    விவசாயத்தில் ஈடுப்பட்ட மக்கள் தொகையில் விகுதம் படிப்படியாக தொழில் துறைக்கு மாற்றியது. இன்று அங்கு விவசாயத்தில் நேரடியா ஈடுபபட்டுள்ள மக்கள் தொகை வெறும் 5 % அளவில் தான் உள்ளது. இது திடீரெனெ ஒரு சில வருடங்களில் நிகழவில்லை / முடியாது. அதைதான் குறிப்பிட்டேன். முக்கியமாக நில உச்ச வரம்பு போன்ற முட்டாள்தனக்கள் அங்கு இல்லை. அதனால் பெரிய அளவிலான பண்ணைகள உருவாக முடிந்தது. (இந்தியாவில் இன்றும் இது சாத்தியம் அல்ல).

    இந்தியாவில் ஃபிரி மார்க்கெட் உருவாகாமல் போக காரணம் வினோதமாக இருக்கிறது. 1947க்கு பின் உருவாகாமல் போனதற்க்கு நீங்க சொல்ற காரணம் அபத்தம். அமெர்க்கா, ரஸ்ஸியா, பிரட்டன் போன்ற நாடுகளின் மறைமுக மூலதனம், அதிக்கமா ? எப்படி ? விளக்குக. அவர்களின் மூலதனத்தை உள்ளே விடாமல், சீரழந்தோம். அதை விட முக்கியமாக இடதுசாரி திட்டமிட்ட பொருளாதா பாணி என்ற பெயரில், இந்திய தனியார் துறையை கடும் கட்டுப்பாடுகள் விதித்து முடக்கி, வளர்ச்சி மிக மிக மிக குறைவாக் இருந்து வறுமையை பரவலாக்கினோம். இதில் என்ன அன்னிய மூலதன ஆதிக்கம் ? அய்.எம்.எஃபிடம் இறக்குமதி செய்ய டாலர்கள் வேண்டி, கடன் வாங்க வேண்டி கெஞ்ச வேண்டிய சுழல் அன்று. இன்று அய்.எம்.எஃப் தேவை இல்லை..

  88. //ப்ரி மார்க்கெட் என்று சொல்லும் அதியமான் ஒரு முக்கியமான விசயத்தை மறைத்து விடுகிறார். ப்ரி மார்க்கெட் மூலம் முதலாளித்துவ நாடுகளாக பரிணமித்த நாடுகள் திறந்த பொருளாதாரமாக இருந்தனவா மூடிய பொருளாதாரமாக இருந்தனவா? இந்த காம்பினேசன்தான் பிரச்சினையே… இதற்கு அதியமான் என்ன பதில் சொல்கிறார் என்று பார்ப்போம்/// those nations were of course open economies. (protectionism is different, with seletive anti-dumping duties or quota or out right banning of certain imports ; this is not closed economy). and : closed economy

    Definition

    An economy that does not interact with the economy of any other country. A closed economy prohibits imports and exports, and prohibits any other country from participating in their stock market. There have been many examples of closed economies throughout history, but very few closed economies exist today. also called autarky.

    • //
      http://poar-parai.blogspot.com/2008/04/blog-post_28.html
      Free Trade குறித்து மார்க்ஸின் கட்டுரைக்கான ஏங்கெல்ஸின் முன்னுரை.
      http://www.marxists.org/archive/marx/works/1888/free-trade/index.htm

      “”After a long and violent struggle, the English industrial capitalists, already in reality the leading class of the nation, that class whose interests were then the chief national interests, were victorious. The landed aristocracy had to give in. The duties on corn and other raw materials were repealed. Free Trade became the watchword of the day. To convert all other countries to the gospel of Free Trade, and thus to create a world in which England was the great manufacturing centre, with all other countries for its independent agricultural districts, that was the next task before the English manufacturers and their mouthpieces, the political economists.””//

      ப்ரி ட்ரேட் என்பது உருவான பின்னணி… இதுதான்.. புரட்சி இன்றி ப்ரி ட்ரேட் இல்லை.

      புரோடக்சனிஸ்ட், மூடிய என்று வார்த்தைகளில் அதியமான் விளையாடிக் கொண்டிருக்கட்டும். ஆனால் அன்றைய முதலாளித்துவ நாடுகள் அன்னிய மூலதனத்திலிருந்தும், அன்னிய தொழில்துறைகளிடமிருந்தும் தமது தேசிய பொருளாதாரத்தை காப்பாற்றியதன் மூலம்தான் முதலாளித்துவ உற்பத்தியை அதன் உச்சக்கட்ட வளர்ச்சி நிலையான ஏகாதிபத்திய கட்டத்தை அடைந்தனர்.

      //அதே கட்டுரையில் ஏங்கெல்ஸ் மேலும் சொல்கிறார்:

      அன்றைய பிற முதலாளித்துவ நாடுகள் பிரிட்டனின் உலக மேலாதிக்க திட்டங்களைப் பார்த்துக் கொண்டு புளிய்ம பழமா பறித்துக் கொண்டிருந்தார்கள்? இல்லை மாறாக அவர்களும் தமது சொந்த உற்பத்தியை மிக வேகமாக வளர்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் சுதந்திர வர்த்தகம் மூலமாக இல்லை, மாறாக தமது பொருளாதாரத்தை இறுக்க மூடி வெளி நாட்டு மூலதனத்திலிருந்த பாதுகாத்தன் மூலமே தமது பொருளாதாரத்தை வளர்த்தனர்.

      “”The foreign countries did nothing of the kind. France, for nearly 200 years, had screened her manufactures behind a perfect Chinese wall of protection and prohibition, and had attained in all articles of luxury and of taste a supremacy which England did not even pretend to dispute.””

      இங்கு பிரான்ஸ் தேசம் தனது சொந்த நாட்டின் தொழில் வளர்ச்சியை புரொக்டசனிஸ்ட் முறை மூலம் காபந்து செய்து வளர்த்தது குறித்து ஏங்கெல்ஸ் சொல்கிறார். இது போலவே ஜெர்மனி, சுவிட்சர்லாந்து என எல்லா நாடுகளும் தமது தொழில் வளர்ச்சியை இப்படி பொத்தி பொத்தி பாதுகாத்துதான் வளர்த்தனர்.

      ஏங்கெல்ஸ் ஒரு ரயில் பிரயாணத்தில் தன்னுடம் பயணம் செய்த சக பயனியான இரும்பு வியாபாரியிடம் பேசுகிறார். இரும்பு வியாபாரி அமெரிக்காவின் protectionist பொருளாதார கொள்கையை விமர்சித்து பேசுகிறார்.

      “Was it not inconceivable that a nation of sharp businessmen like the Americans should pay tribute to indigenous ironmasters and manufacturers, when they could buy the same, if not a better article, ever so much cheaper in this country?”

      அதாவது இரும்பை குறைந்த விலைக்கு உற்பத்தி செய்யும் இங்கிலாந்திலிருந்து வாங்குவதை விடுத்து ஏன் உள்ளூர் இரும்பு உற்பத்தியாளர்களை அமெரிக்க ஊக்கப்படுத்துகிறது என்கிறார். மேலும் அவர் free trade என்ற இன்றைய உலகமயத்தின ஆதார நியதியை ஆதரித்து பேசுகீறார்.

      இதற்கு எங்கெல்ஸ் பின்வருமாறூ கூறுகிறார்,

      “”Well,” I replied, “I think there is another side to the question. You know that in coal, waterpower, iron, and other ores, cheap food, homegrown cotton, and other raw materials, America has resources and advantages unequalled by any European country; and that these resources cannot be fully developed except by America becoming a manufacturing country. You will admit, too, that nowadays a, great nation like the Americans’ cannot exist on agriculture alone; that would be tantamount to a condemnation to permanent barbarism and inferiority; no great nation can live, in our age, without manufactures of her own. Well, then, if America must become a manufacturing country, and if she has every chance of not only succeeding but even outstripping her rivals, there are two ways open to her: either to carry on for, let us say, 50 years under Free Trade an extremely expensive competitive war against English manufactures that have got nearly a hundred years start; or else to shut out, by protective duties, English manufactures for, say, 25 years, with the almost absolute certainty that at the end of the 25 years she will be able to hold her own in the open market of the world. Which of the two will be the cheapest and the shortest? That is the question. If you want to go from Glasgow to London, you take the parliamentary train at a penny a mile and travel at the rate of 12 miles an hour. But you do not; your time is too valuable, you take the express, pay twopence a mile and do 40 miles an hour. Very well, the Americans prefer to pay express fare and to go express speed.””

      அதாவது அமெரிக்காவில் அளப்பரிய வளங்கள் உள்ளன. இவற்றை வளர்த்தெடுக்க அமெரிக்க ஒரு உற்பத்தி பொருளாதாரமாக மாற வேண்டும். விவசாயத்தை மட்டும் நம்பி ஒன்றும் செய்ய முடியாது. இதை சாதிகக் இரு வழிகள் உள்ளன. ஒன்று தனது நாட்டை திறந்து விடுவதன் மூலம் இங்கிலாந்து முதலாளீகளுடன் முட்டி மோதி தந்து நாட்டு உற்பத்தியை வளர்ப்பது. இன்னொன்று தனது நாட்டை இறுக்கமாக மூடி சொந்த நாட்டு உற்பத்தியை வளர்த்தெடுப்பது.

      நீ ஒரு இடத்துக்கு போக சாதா ரெயிலும், எக்ஸ்பிரஸ் ரயிலும் இருந்தால் காசு கொஞச்ம் கூட ஆனாலும் பரவாயில்லை என்று எக்ஸ்பிரஸ் ரெயிலில்தானே செல்வாய்? அதைத்தான் அமெரிக்க செய்கீறது. தனது நாட்டின் உற்பத்தியை வேகமாக வளர்த்தெடுக்க காசு அதிகமாகா செல்வனாலும் பரவாயில்லை என்று அமெரிக்க த்னது கதவுகளை மூடி கொண்டுள்ளது. என்று ஏங்கெல்ஸ் பதில் சொல்கீறார்.

      இப்படி ஒவ்வொரு ஏகாதிபத்தியமும் தமது பொருளாதாரத்தை பொத்தி பொத்தி வளர்த்துவிட்டு இன்று இந்தியா போன்ற நாடுகளை கதவைத் திறந்து விடச் சொல்கின்ற்ன. அதற்க்கு சில அடிவருடிகளின் ஆதரவு வேறு.
      //

  89. நன்றி…..

    இதுதான் மாற்றுன்னு நாங்க சொன்னமா? நீங்களா எதையாவது சொல்லி அதுக்கு பதில் சொல்லக் கூடாது. புரோபோசார்ஸ் ஆப்பு எக்கானாமிக்குகள் சொல்வது இருக்கட்டும். உங்களது சொந்த முதலாளித்துவ அரசு வரையறைகள், அளவுகோல்கள், புள்ளிவிவரங்கள் படியே 1980கள் இந்திய சமூகம் ஓரளவு நல்ல நிலையில் இருந்த காலகட்டம்.

  90. brawin kumar,

    ///இதுதான் மாற்றுன்னு நாங்க சொன்னமா? நீங்களா எதையாவது சொல்லி அதுக்கு பதில் சொல்லக் கூடாது. புரோபோசார்ஸ் ஆப்பு எக்கானாமிக்குகள் சொல்வது இருக்கட்டும். உங்களது சொந்த முதலாளித்துவ அரசு வரையறைகள், அளவுகோல்கள், புள்ளிவிவரங்கள் படியே 1980கள் இந்திய சமூகம் ஓரளவு நல்ல நிலையில் இருந்த காலகட்டம்.//// prove this with stat and info, if you can.

    and for starters about the myth of Rs.20 per day try this :

    http://www.rediff.com/money/2008/sep/04poor.htm and Asuran : prove your tall claims (which are just hogwash) about price rise being the highest now in the history of modern india and about the 1,00,000 crores of debt waived for business men here. you claimed them and you have to prove them. ok. govt statistics are partial and incomplete in some sectors while accutate in some sectors. for example, the total tax revenue, total govt spending, etc are accurate and can be measured easily. but the total tax evaded and black economy are not easily measurable but is a large size. same with total employment generated year over year. unlike US or EU where every citizen has SS number and records, here there is a vast number who have no valid papers, etc. and millions of very tiny enterpirses and self employed people like plumbers or carpenters are not counted or recorded in any statistics as they do not have any tax number or employment record like PF, etc. hence the stats of the govt in these areas are approximate and understated. that is the point i was trying to make. and try that excellent refiif link about the Rs.20 per day. i too was under the impression that people lived on Rs.20 per day. that is only the amount that was suppossedly spent on food alone. repeat food intake only. the oother expenditures like clothing, shelter, transport, rentals, medicals, entertainment are NOT included in that NCER survery. re-read this link first.

    and all surveys by all agencies prove that after LPG things have IMPROVED for Indians. if it is not, then i have no objection to get back to license raaj and a closed economy..

    • அன்பு அதியமான் ஏற்கனவே புரூவ் செய்யப்பட்டவைக்கு(வேலைவாய்ப்பு, வறுமை, முதலாளிகளின் கொள்ளை லாபம், அவர்களுக்கு பொதுப்பணத்தில் உதவிகள், விவசாயத்தின் சீரழிவு, பஞ்சம்-பசி, அதியமானின் முன்னேற்றம் குறித்த பொய்கள், அதியமானின் போலி மனிதாபிமானம்) பதில் சொன்ன பிறபாடு மேலேயுள்ளவைகளுக்கு(closed or open economy, முதலாளிகளுக்கு கொடுக்கப்படும் மறைமுக கடன் தள்ளுபடிகள், 1980களின் இறுதியில் சோசியல் இண்டிகேட்டர்கள் சொல்லும் உண்மை) பூருவ்கள் கொடுக்கப்படும் என்பதற்கு உறுதியளிக்கிறேன். புள்ளிவிவ்ரங்கள் எங்கும் ஓடி விடுவதில்லை என்பதையும் உங்களுக்கு ஞ்பாகப்படுத்த மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.

      அசுரன்

  91. Bhahath, have you read my link fully ? there no need for any guts to publish this. only the parmeters and depth of survery for this kind of mass based survery are inaccurate. why should anyone be afraid to face truth about poverty. and u haven’t answerd py pointed questions to you about agriculuture, dollar crisis, etc so far..

  92. தோழர் அசுரன்,

    எமது மனிதாபிமானம் போலியா அசலா என்று நீர் முடிவு செய்வதை விட வாசகர்களும், எம் நண்பர்களும், சுற்றத்தாரும் முடிவு செய்வதே சரியாகும். ஓ.கே.

    எமது வாதங்கள் பொய்களா, தர்க்கம் மற்றும் தகவல்கள் பொய்யா என்பதையும் வாசகர்கள் முடிவு செய்யட்டும். ஓ.கே. உமது வாதங்கள் பொய் என்று ஒற்றை வரியில் என்னாலும் கூற இயலும்.

    ஒரு விசியத்தை உங்களைப் போன்றவர்கள் ஏற்க மறுக்கிறீர்கள். கடந்த 20 வருடங்களாக, உலகெங்கிலும்,
    அனைத்து வகை இடது சாரி சிந்தனைகளும், போக்குக்களும் மதிப்பிழந்து, மொத்த உலகமே சுதந்திர சந்தை பொருளாதாரத்தை நோக்கி பல வழிகளிலும், முறைகளிலும் நகர்ந்து கொண்டிருக்கிறது. காரணம், அது தான்
    வளம் பெற மற்றும் ஏழ்மையை ஒழிக்க சரியான மற்றும் ஒரே வழி என்ற ஞானோதையம் இன்று பரவலாக‌
    உருவாகியுள்ளது. இது ஒன்றும் அமெரிக்க ஏகாதிபத்திய சதிகளாள், பொய் பிரச்சாரத்தால் உருவானது அல்ல.
    அப்படி செய்யவும் முடியாது. முக்கியமாக, வளரும் நாடுகளில் இன்று 35 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சிந்தனை ஓட்டங்கள் மற்றும் பாலிஸ்க்கள் வெகுவாக மாற்றம் அடைந்துள்ளன. சிலி, இந்தியா, வியட்நாம், போஸ்ட்வானா போன்ற நாடுகள் நல்ல உதாரணங்கள்.

    வறுமை அளவு இது போன்ற நாடுகளில் துரிதமாக குறைந்துள்ளன என்பதே உண்மை. ஏழை பணக்கார இடைவெளி அதிகரித்துள்ளது என்பது உண்மைதான். ஆனால் ஏழைகள் பரம் ஏழைகளா ஆக்கப்பட்டுள்ளாதால் இது உருவாகவில்லை. பல புதிய பணக்கார்கள் உருவாகியும், மேலும் பணக்காரகள் ஆனதாலும் உருவான இடைவெளி இது.

    இன்னும் பல நூறு கோடி மக்கள் கடும் வறுமையில் தாம் உழல்கின்றனர். பல ஆண்டுகளாக தவறான, மூடத்தனமான பொருளாதார கொள்கைகள் மற்றும் அரசியல் வறட்சி காரணிகள். மேலும் பல சிக்கலான காரணிகள். ஆனால் இடது சாரி ஜனனாயக பாணி “போலி சோசியலிசம்” (இந்தியாவில் முன்பு இருந்ததை போல) அல்லது தூய கம்யூனிசம் போன்றவற்றிற்க்கு 35 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆதரவோ அல்லது நம்பகத்தன்மையோ இன்று இல்லை. 60களில், 70களில் இருந்த அரசியல் க்ளைமேட் பறறி உம்மைவிட எமக்கு அதிக புரிதல் உண்டு.

    சரி, இருக்கட்டும். இந்தியாவில் தாரளமயமாக்களை தடுத்து பழையபடி, மூடிய பொருளாதாரத்தை முதலில் கொண்டு வந்து, பிறகு படிப்படியாக செம்புரட்சி நோக்கி நகர்ந்து, செம்புரட்சி உருவாக்கி, பிறகு மெய்யான சோசியலிசத்தை கட்டமையுங்கள். யார் உங்களையும், தோழர்களையும் வேண்டாங்கறாங்க…

    குட் லக் டு யூ ஆல் !!

    • கருத்துக் கோர்வைகளை கட்டிச் செல்வதில் அதியமானுக்கு அலாதிப் பிரியம். ஆதாரம் கேட்டீர்களோ தொலைந்தீர்கள். அவ்ர 70களில் இருந்து இன்று வரை பெற்றுள்ள உலகனுபவ புலம்பல்களும், மீண்டும் பழைய கருத்துக் கோர்வைகளை புதிய வார்த்தைகளிலும், கூடவே கொஞ்சம் கம்யூனிச அவதூறும், அப்படியே புரட்சி வாரது என்பது குறித்து அவரது ஜோசியத்தையும் சேர்த்து கட்டி நமக்கு திகட்டத் திகட்ட புகட்டுவார். நல்லது அதியமான்.. உங்களது நாகரிகமான பின்வாங்கலை அங்கீகரிக்கிறேன்.. இன்று போய் நாளை வாருங்கள்….!!

  93. ////அதியமானின் வாழ்க்கை அனுபவமே உலகின் வாழ்க்கை அனுபவம். திருப்பூரே இந்தியா என்று கிணற்றுத் தவளையாக கதறுகிறார் அதியமான். நம்புங்கள் அவரது பார்வை உலகப் பார்வை…//////////

    அசுரன்,

    உமது பார்வைதான் உலகப்பர்வையோ அல்லது பிரபஞ்சப்பார்வையோ !! :))
    ஃபிரி டிரேட் ப‌ற்றி 19ஆம் நூற்ற‌ண்டு பார்வைதான் இன்னும் உம‌க்கு.
    20ஆம் நூற்றாண்டிற்க்கு வாங்க‌ முத‌லில் !!

    நீர் இன்னும் கல்லூரி படிப்பை கூட (பி.ஹெச்டி) முடிக்காத, மாணவர்தானே.
    எனக்காவது, கரூர், திருப்பூர், நாமக்கல், கோவை, டெல்லி மற்றும் சென்னை
    போன்ற இடங்களில் வேலை மற்றும் தொழில் அனுபவங்கள் கடந்த 20
    ஆண்டுகளாக உள்ளன. மேலும் பல இடங்களை சுற்றிய அனுபவங்களும்
    (வறுமை மிகுந்த கிராமங்களையும்தான்), பரவலான நண்பர் மற்றும்
    சகாக்கள் வட்டமும், இன்றும் கற்பதில் ஆர்வமும் உண்டு. சிறுவனான்
    நீர் எம்மை பற்றி சர்வசாதாரனமாக வார்த்தைகளை இறக்கிறீர்கள்.
    பரவாயில்லை.

    இது எமது பேராசியர் ஒருவர் சென்ற மாதம் எமக்கு அனுப்பிய‌
    மின்மடல் :
    Dear Athiyaman,
    I appreciate your perseverance and your enormous thirst for knowledge. To correspond with Ramachandra Guha is certainly a privilege. He has both width and depth – which is becoming rare nowadays. I am attracted by his occasional writings. I had not read his books; and his latest book – a survey of post Independent India – has received very favourable reviews in the western press.
    Turning to the other question, I still believe that it would be possible for a manipulator to jockey himself to power and become a dictator. The Indian tendency to hero (or heroine) worship is a contagious disease. I can understand Indira capturing power by underhand dealings and manipulations. But I cannot understand the heroine worship for Sonia Gandhi. Can she become a dictator? Yes, She can! Give the right time and mood – she can be projected as the only savior capable of saving India from doomsday – and the gullible people could be persuaded to believe that!
    I am in total agreement with you on the ‘government failure’ mechanisms/
    No one is certain about the optimal mix of free market and regulations. It might unravel itself gradually, after many more ‘meltdowns’. Now it remains still a mystery.
    S.Neelakantan

  94. //ஃபிரி டிரேட் ப‌ற்றி 19ஆம் நூற்ற‌ண்டு பார்வைதான் இன்னும் உம‌க்கு.
    20ஆம் நூற்றாண்டிற்க்கு வாங்க‌ முத‌லில் !!//

    19 ஆம் நூற்றாண்டின் ப்டி டிரேட் குறித்து பேசிய அதியமானுக்கு அதே ப்ரி ட்ரேட் குறித்துதான் நான் பதில் சொல்ல முடியும்.

    இந்த நூற்றாண்டின் ப்ரி ட்ரேட் குறித்து பேசலாம். ஆனால் அதற்கு முன்பு ப்ரிட் ரேட் என்ற பெயரில் தற்போது நிகழ்ந்துள்ளவை என்ன என்பது குறித்த எமது ஆதாரங்களுக்கு அதியமான் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார். அதற்கு பிற்பாடு இன்றைய ப்ரி ட்ரேட் எனும் நகைப்பிற்குரிய ஒன்று குறித்து விரிவாகவே பேசலாம்.

    அசுரன்

  95. இவரு பெரிய ராமர் பாரு. இன்று போய் நாளை வருவதா ? :)))

    முத‌லில் அந்த‌ 1,00,000 கோடிக‌ள் க‌ட‌ன் த‌ள்ளுப‌டி, இன்ஃப்லேசன், குலோஸ்ட்
    எகானாமி ப‌ற்றி முத‌லில் நீர் சொன்ன‌து ப‌ற்றி ச‌ரியான‌ ஆதார‌ங்க‌ள்
    அளியும். வ‌றுமை அள‌வு ப‌ற்றியும் தான். அந்த‌ ரெட்டிஃப்
    சுட்டி ப‌ற்றி என்ன‌ க‌ருத்து ?

    புரொச்க‌ஸ‌னிஸ‌ம் எல்லா கால‌ங்க‌ளிலும் ப‌ல‌ அள‌வுக‌ளில், ரூப‌ங்க‌ளில்
    உள்ளன‌ தாம். ஆனால் மூடிய‌ பொருளாதார‌ம் என்றால் இது அல்ல‌.
    அது இன்றைய‌ வ‌ட‌ கொரியா தான்.

    அமெரிக்க‌ “முத‌லாளிக‌ள்” ப‌ல‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் இந்த‌ ஃபீரி டிரேசினால்
    தாங்க‌ள் “ப‌திக்க‌ப‌டுவ‌து” ப‌ற்றி புல‌ம்பியுள்ள‌ன‌ர் !!

    அமெரிக்கா 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து, 1920 வ‌ரை
    கொண்டிருந்த‌ கொள்கைக‌ள்தாம் ஃபிரி டிரேட் நோக்கி மிக‌ மிக‌
    நெருங்கிய‌ த‌ருண‌ங்க‌ள்.

    அது இருக்க‌ட்டும். நாம் பேசிய‌து, இந்திய‌ விவ‌சாய‌ம் சீர‌ழ‌ந்த‌ வ‌ர‌லாறு
    ப‌ற்றிதானே. பெரிய‌ ப‌ண்ணைக‌ள் அமைய‌ நில‌ உச்ச‌ வ‌ர‌ம்பு ச‌ட்ட‌ம்,
    த‌டையாக் இருப்ப‌தை ப‌ற்றி பேசாமால் (அதாவ‌து இத‌ர‌ நாடுக‌ள்
    போல‌ இங்கு விவ‌சாயத்தில் சுத‌ந்திர‌ பொருளாதார‌ கொள்கைக‌ளை
    அமல்படுத்தப்பட வில்லை என்ற உணமை பற்றி) நீர் தான்
    மூடிய பொருளாதாரம் பற்றி ஆரம்பித்தீர். அதற்கான டெஃபனிஸன்
    நான் அளித்தேன். அந்த விக்கி சுட்டி மிக அழகாக விளக்குகிறதே.

  96. //இந்திய‌ விவ‌சாய‌ம் சீர‌ழ‌ந்த‌ வ‌ர‌லாறு
    ப‌ற்றிதானே.//

    இல்லை…. வேலைவாய்ப்பு குறித்தும், வறுமை குறித்தும், உங்களது அன்பு LPG இன்கு என்னவகைப்பட்ட முன்னேற்றத்தை உருவாக்கியுள்ளது என்பது குறித்துமே பேசியுள்ளோம். இதன் ஒரு பகுதியாக விவசாயத்தின் சீரழிவில் உங்களது அன்பு LPGன் பாத்திரம் குறித்து பேசியுள்ளோம்.. இதற்கான தரவுகளின் மீது உங்களது கருத்துக்கள் எஸ்கேப்பிசமாக இருப்பதை சிறிது கண்ணுறுமாறு வேண்டுகிறேன்.

  97. //முத‌லில் அந்த‌ 1,00,000 கோடிக‌ள் க‌ட‌ன் த‌ள்ளுப‌டி, இன்ஃப்லேசன், குலோஸ்ட்
    எகானாமி ப‌ற்றி முத‌லில் நீர் சொன்ன‌து ப‌ற்றி ச‌ரியான‌ ஆதார‌ங்க‌ள்
    அளியும். வ‌றுமை அள‌வு ப‌ற்றியும் தான். //

    ரிசர்வ் பேங்கு புள்ளிவிவரத்தை விட பெரிய ஆதாரத்தையும், அமர்தியா சென் போன்ற பொருளாதார மேதைகளின் வாக்குமூலங்களை விட பெரிய ஆதாரத்தையும் இனிமேல்தான் உருவாக்க வேண்டும் அதியமான்.

    இவர்களின் ஆதாரங்களையே ஏதோ புரளி போல உதாசினம் செய்யும் அதியமானிடம் ஆதாரம் என்பதற்கான வரையறை என்ன என்று ஒரு கேள்வியையும் கேட்டு வைப்போம். அவரும் நான்கைந்து லிங்குகளுடன் வந்து ஆதாரம் என்றால் என்னவென்று நமக்கு பாடம் எடுப்பார்.

  98. Asuran, The RBI data that you had given is not the proof for your other tall claims about inflation, poverty and employment generation. (i had written about the lack of complete survery or records and difference in quality of govt data in various sectors too). would your then accept RBI and GoI’s data on poverty levels in India now and whether it has been reducing or incresing. RBI and GoI commends about the postive effects of LPG on poverty and employment levels. i can give you links. the only data which made me ponder is the RBI link about social indicators. there are explanantions and certainly RBI is not blaming LPG for this. by the way, Kerala scores well above TN in this social indicator, but would you like to live and work and earn in Kerala or TN ? this data gives only a part of the reality. the most important of all data is poverty ratio of whole India. and net tax reveue and employment generation in India after LPG. all survery’s support that LPG has helped vastly to reduce poverty ratio and increase employment levels and tax revenue. Tax revenue detalis are very easy and tangible of this lot. and more later..

  99. //Asuran, The RBI data that you had given is not the proof for your other tall claims about inflation, poverty and employment generation. (i had written about the lack of complete survery or records and difference in quality of govt data in various sectors too).//

    இப்படி அதிகாரப்பூர்வ புள்ளிவிவர்ங்களை மறுத்து பேசும் அதியமான் பிறகு நம்மிடமே ஆதாரம் கொடு ஆதாரம் கொடு என்றும் கேட்பார்.

    இங்கு கவனிக்க வேண்டிய விசயம், தனியார்மயம், தாராளமயம, உலகமயம் இன்று குப்புறக் கவிழ்ந்து அரசாங்கங்களிடம் பிச்சை கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இதுநாள் வரை அவை உருவாக்கியதாக சொல்லப்படும் வேலைவாய்ப்புகள் பற்றிய பிரச்சாரம் பொய் என்று அரசு புள்ளிவிவரங்களே அறிவிக்கும் நிலையில், இந்த கேடான பொருளாதாரத்தை வானளாவ புகழும் அதியமான் தமது புகழ்ச்சிக்கு ஆதாரமாக இதுவரை ஒரு புள்ளிவிவரத்தைக் கூட வைத்ததில்லை.

    இந்த சூரப் புலி(அல்லது மான்)தான் நம்மிடம் ஆதாரம் கொடு ஆதாரம் கொடு என்று புலம்புகிறது… 🙂 .. என்ன செய்ய கொடுத்த ஆதாரங்களே சீரணிக்க இயலா கசப்பு மருந்துகளாயிற்றே….

  100. இந்த ஆர்.பி.அய் புள்ளி விவரப்படி, 1971 இல் மொத்த வேலை வாய்ப்பு, சுமார் 1.75 கோடியில் இருந்து 2004இல் சுமார் 2.75 கோடி அதிகரித்துள்ளது. இதில் தனியார் துறை என்று குறிப்பிடப்படுவது, ஆர்கனைஸ்ட் துறை மட்டும்தானா அல்லது ரிக்கார்டுகளே இல்லாத அன் ஆர்கனைஸ்ட் துறைகள் (விவசாயக் கூலி, இஸ்திரி போடுபவர்கள், ஓட்டுநர்கள், ப்ளம்பர்கள், கொத்தனார்கள், தச்சர்கள், மற்றும் இது போன்ற பல்லாயிரம் துறையுனரையும் சேர்த்தா ? கண்டிப்பாக இருக்க முடியாது. 1971 இல் இந்தய மக்கள் தொகை சுமார் 50 கோடிகள் இருக்கும். அதில் வேலை செய்யும் தொழிலாளர்கள் சுமார் 20 கோடிகளாவது இருப்பர்.
    ஆனால் இந்த புள்ளிவிவரம் 1.75 கோடிகளை மட்டும் காட்டுகிறது. அதே போல 2004இல் இந்திய மக்கட்தொகை சுமார் 106 கோடிகள். அதில் சுமார் 40 கோடிகளாவது வேலை செய்யும் மக்களாக இருப்பர். (மீதி குழந்தைகள், வயதானோர், போன்றவர்கள்). ஆனால் இந்த புள்ளி விவரம் சொல்வது சுமார் 2.75 கோடிகள் மட்டுமே. அரசு துறையில் மொத்த வேலை வாய்ப்பை சுலபமாக கணக்கெடுத்துவிடலாம். ஆனால்
    அனைத்து வகை தனியார் துறைகளையும் கணக்கிட முடியாது. (ரிக்கார்டுகள் இல்லை). ஆனால் இந்தியாவின் இன்றைய ஜி.டி.பி சுமார் 51 லச்சம் கோடிகள். உற்பத்தி அளவு, மற்றும் வரி வசூல் தொகைகள் அன்றைவிட மிக மிக மிக அதிகம். வெறும் 84 லச்சம் தனியார் தொழிளார்கள் இத்தனை லச்சம் கொடி ஜி.டி.பி உருவாக காரணியா ? இதிலிருந்தே இந்த புள்ளி விவரம் முழுமையானது அல்ல என்று தெளிவாகிறது. சரிதானே அசுரன் ? இதை வைத்துகொண்டு குதித்தீர்கள் !!

    அய்.நா வை சேர்ந்த உலக தொழிலாளர் அமைப்பில் சுமார் 36 கோடிகள் வேலை வாய்ப்பு என்று ஒரு சுட்டி சொல்கிறது. அந்த சுட்டிய காபி செய்ய முடியவில்லை. இந்த சுட்டியில் இருந்து பார்த்துச் செல்லவும் :
    http://laborsta.ilo.org

  101. /////இதுநாள் வரை அவை உருவாக்கியதாக சொல்லப்படும் வேலைவாய்ப்புகள் பற்றிய பிரச்சாரம் பொய் என்று அரசு புள்ளிவிவரங்களே அறிவிக்கும் நிலையில், இந்த கேடான பொருளாதாரத்தை வானளாவ புகழும் அதியமான் தமது புகழ்ச்சிக்கு ஆதாரமாக இதுவரை ஒரு புள்ளிவிவரத்தைக் கூட வைத்ததில்லை./////// Asuran, you claimed i am not backing my arguments with data. hence try these :

    http://indiabudget.nic.in/es98-99/chap102.pdf

    • /Asuran, you claimed i am not backing my arguments with data. hence try these :

      http://indiabudget.nic.in/es98-99/chap102.pdf//

      பழைய புள்ளிவிவ்ரம் அதுவும் ஏற்கனவே வறுமைக் கோடு குறித்த வரையரையே டூபாக்கூர் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள். வறுமைகோடு குறித்த இந்த மோசடியை அம்பலப்படுத்தி அசுரனில் முன்பு கட்டுரை இடப்பட்டது. அதன் மீது டாலர் செல்வனுடன் விவாதம் கூகிள் குழுமத்தில் நடந்தேறியது. அதில் பெரிதாக மறுக்க இயலாத டாலார் செல்வன் ஒரு பெயிண்ட மாசம் இத்தனை ருபாய் சம்பளம் வாங்குறான் அவனுக்கு இவ்வளவு செலவு என்று அனுபவவாத விவாத மூறைக்கு(பொய்தியமானைப் போலவே) சென்று தஞ்சமடைந்தார்.

      வறுமைக் கோடு குறித்த இந்த டூபாக்கூர் பற்றியும் அடுத்த கட்டமாக விவாதிக்கலாம்(மூன்றாம் கட்டமாக ?? :-)).

      வறுமைக் கோடு குறைந்திருக்கிறது எனில் ஒரு தலைக்கு நுகரப்படும் உணவின் அளவு ஏன் குறைய வேண்டும்? முரன்பாடாக உள்ளதே? பிரச்ச்னை வறுமைக் கோடு குறித்த அரசின் வரையரையில் உள்ளது.
      அசுரன்

  102. ஜிடிபி குறித்து பொய்தியமானுக்கு ஒரு மறுப்புரை மற்றும் விவாதம் குறித்து தொகுப்பாக ஒரு பார்வை:

    இந்தியாவின் ஜிடிபியில் விவசாயத்துறையின் பங்கு குறைந்து கொண்டே வருகிறது. இன்னிலையில் RBIயின் புள்ளிவிவரம் இந்திய விவசாயத்தில் மூன்றில் இரு பங்கு மக்கள் ஈடுபட்டுள்ளனர் என்று சொல்கிறது. ஆக, ஜிடிபி வளர்ச்சி பெரும்பான்மை மக்களின் வாழ்க்கையை உயர்த்தவில்லை எனப்தே அப்பட்டமான உண்மை. இன்னொரு பக்கம் ஜிடிபியில் பெரிய அளவில் பங்கு செலுத்தும் சேவைத் துறையில் நேரடியாக வளப்பமுறும் மக்கள் ஒரு சிறு தொகையினரே இதனையும் நாம் RBIயின் புள்ளிவிவரத்திலிருந்தே புரிந்து கொள்ள இயலும்(RBI புள்ளிவிவரங்கள்: ). இதனை குறித்துதான் அமர்தியாசென்னின் பஞ்சம்/வறுமை குறித்த கருத்துக்களும், மன்மோகன் சிங் இந்தியாவின் வளர்ச்சி மக்களைச் சென்றடையவில்லை என்று இங்கிலாந்தில் புலம்பியதும்.

    #1)
    http://www.tradechakra.com/indian-economy/gdp.html
    Indian GDP –Trend Of Growth Rate

    1960-1980 : 3.5%
    1980-1990 : 5.4%
    1990-2000 : 4.4%
    2000-2009 : 6.4%

    Contribution of Various Sectors in GDP

    The contributions of various sectors in the Indian GDP for 1990-1991 are as follows:

    Agriculture: – 32%
    Industry: – 27%
    Service Sector: – 41%

    The contributions of various sectors in the Indian GDP for 2005-2006 are as follows:

    Agriculture: – 20%
    Industry: – 26%
    Service Sector: – 54%

    The contributions of various sectors in the Indian GDP for 2007-2008 are as follows:

    Agriculture: – 17%
    Industry: – 29%
    Service Sector: – 54%

    #2)
    விவசாயம் குறித்த் RBI:
    http://www.rbi.org.in/scripts/bs_viewcontent.aspx?Id=1911

    //Agriculture continues to be a prime pulse of the Indian economy and is at the core of socio-economic development of the country. It accounts for around 19 per cent of GDP and about two-thirds of the population is dependent on the sector. //

    #3)
    விவசாயத்தின் முன்னேற்றமே பிற துறைகளின் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தகுந்தளவு காரணமாக இருக்கிறது. என்று RBI சொல்கிறது. RBIயைவிட அதிகம் தெரிந்த தனிமனிதர் அதியமான் இவற்றை மானாங்கானியமாக மறுப்பார்.
    http://www.rbi.org.in/scripts/bs_viewcontent.aspx?Id=1911
    //Growth of other sectors and overall economy hinges on the performance of agriculture to a considerable extent through its backward and forward linkages. It is not only a source of livelihood and food security for a large population of India but also has a special significance for low income, poor and vulnerable sections. //

    #4)
    பிரதமர் மன்மோகனின் கருத்து
    http://poar-parai.blogspot.com/2006/11/blog-post_23.html

    உலக மயம் தோற்றுவிக்கும் உலக உண்மை:

    * ஏழை பணக்காரன் பிளவு அதிகரித்து வருகிறது.

    * ஏழைகள் மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தருவதற்க்கான, அவர்களது பிரச்சனைகளை காது கொடுத்து கேட்ப்பதற்க்கான சக்தியை அரசு இழந்து வருகிறது. மருத்துவம், கல்வி போன்ற அடிப்படை வசதிகளை போதுமான அளவு செய்து தருவதற்க்கு வக்கற்று உள்ளது.

    * வளர்ச்சி கிராமங்களை அடைவதில்லை.

    * இந்த மேற்சொன்ன காரணங்களால், மக்கள் அரசை வேறுக்க தொடங்கியுள்ளனர். இது மாற்றுமைப்பு தேடும் சக்திகளை வளர்த்தெடுக்கிறது. இது ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தவிடாமல் அரசை தடுக்கிறது.

    இப்படித்தான் நாங்க முட்டாப்பயக கம்யுனிஸ்டுகள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இத திரும்ப போட வேண்டிய அவசியமென்ன?.
    இத இந்த முறை சொன்னது சாட்சாத் மாமா மன்மோகன் சிங்தான். அதுவும் பிரிட்டிஸ் ஜெண்டில் மேன், மற்றும் லேடிஸ் மத்தில போயி சொல்றாரு.

    #5)
    ஏழை பணக்காரன் பிளவுதான் அதிகமாகியுள்ளதே தவிர ஒபீட்டளவிள் மக்களின் வாழ்க்கைத் தரம்குறையவில்லை என்று பொய்தியமான் கூறிய கருத்தை மறுத்து மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்து போயுள்ளது என்பதை வலியுறுத்த முன்பு இடப்பட்ட பின்னூட்டம் (https://www.vinavu.com/2009/08/15/august15/#comment-8573):

    http://rbidocs.rbi.org.in/rdocs/AnnualReport/PDFs/86538.pdf

    ரிசர்வ் பேங்கு ஆப்பு இந்தியாவின் 2008 ஆம் ஆண்டு அறிக்கையில் ஒரு பகுதி. கீழ இன்னா சொல்லிருக்கானுங்கன்னு பாத்துக்கோங்கப்பா….

    According to the Economic
    Survey 2007-08, the per capita availability of cereals and
    pulses declined during this period. The consumption of
    cereals declined from a peak of 468 grams per capita per
    day in 1990-91 to 412 grams per capita per day in 2005-06,
    while that of pulses declined from 42 grams per capita per
    day (72 grams in 1956-57) to 33 grams per capita per day
    during the same period. Furthermore, access to food for a
    large section of the population is hindered due to chronic
    poverty, unemployment and lack of purchasing power.

    #########################

    //தார‌ள‌ம‌ய‌மாக்கம‌ல் இல்லாது இருந்தால் இந்த‌ அள‌வு வேலை வாய்ப்புக‌ளை கூட‌ உருவாக்கியிருக்க‌ முடியாது.//
    எந்தளவுக்கு வேலைவய்ப்பு உருவாகியுள்ளது என்பதை இதுவரை பொய்தியமான்(அதியமான்) நிரூபிக்கவில்லை. ஒரு துளி புள்ளிவிவ்ரம் கூட கொடுக்கவில்லை. நாமோ மீண்டும் மீண்டும் இவ்ற்றை மறுக்கும் புள்ளிவிவரங்களையும், சான்றாதாரங்களையும், தாராளமய தாசர்களின் மேற்கோள்களையும் கொடுக்கிறோம்.

    முதலாளிகள் கடனைப் பொறுத்தவரை இதனை படிக்கும் வாசகர்களுக்காக ஒரு சின்ன டிப்ஸ் கொடுக்கிறேன். வெளிநாடுகளில் முதலாளிகள் வாங்கும் கடனுக்கு இந்திய அரசு கட்டும் வட்டி 2008ல் மட்டும் 12,000 சொச்சம் கோடிகள். இதனை MSS அதாவது market stabilisation scheme என்று சொல்வார்கள். இன்னும் இது போல பல இன்ஸ்ட்ரூமெண்டுகள் உள்ளன. அவை குறித்து பொய்தியமானின் முதல் சுற்று முழுத் தோல்விக்கு பிற்பாடு.

    ##########
    பொய்தியமானை அவ்வாறு அழைக்க நிர்பந்திக்காதீர்கள் என்று எச்சரித்து இடப்பட்ட பின்னூட்டங்களில் ஒன்று:

    //leftist idealogy. ok//
    அதியமான் உங்களை மீண்டும் பொய்தியமான் என்று அழைக்க என்னை நிர்பந்திக்காதீர்கள்.

    கூட்டுறவு வங்கிகளை முடக்கி விவசாயத்தில் முதலீடு கிடைப்பதை கெடுத்தது உங்களது LPG கொள்கைகள்தான். விவரங்களுக்கு சாய்நாத்தை வினவுங்கள்.

    பாரம்பரிய விவசாய முறைகளை ஒழித்துக் கட்டி பசுமைப் புரட்சி என்ற பெயரில் அதனை முதலீடு செய்யும் துறையாக மாற்றி சீரழித்தது உங்களது முதலாளிகள்தான். இதனை இடதுசாரித்தனம் என்று சொல்வதன் மூலம் மோசடி வேலை செய்கிறார் அதியமான். பலமுறை சுட்டிக்காட்டிய பின்பும் இந்த க்ருத்தை அதியமான் முன்வைப்பதிலிருந்து அவரது நேர்மையின்மையையே காட்டுகிறார்.

    பசுமைப் புரட்சி என்ற பெயரில் பன்னாட்டு/உள்நாட்டு உரக்கம்பேனிகளும், விவசாய இடு பொருள் நிறுவனங்களும் மான்யங்களால் உப்பி பெருக வகை செயதது உங்களது முதலாளிகள்தான் அது இன்று வரை தொடர்கிறது.

    உணவுப் பயிர் செய்வதை சிதைத்து, பணப்பயிர் முறைக்கு மாற்றியதன் மூலம் உணவு உத்திரவாதத்தை கேள்விக்குறியாக்கியதும் உங்களது முதலாளிகள்தான் அதனது அடுத்த கட்ட வளர்ச்சிதான் இன்றைய கட்டாமனக்கு பயிரிடுதல், பூ பயிரிடுதல், ஒயினுக்கா திராட்சை பயிரிடுவதை ஊக்குவித்தல் உள்ளிட்டவை. இன்னும் 20 வருடம் கழித்து இவையும் இடதுசாரி திட்டங்கள் என்று அதியமான் பொய் பகரும் வாய்ப்புள்ளதை உணர்கிறேன்.

    மேலும், 1990களுக்கு முந்தைய இந்தியாவின் இடதுசாரி தவறுகள் இன்றும் வீரியமாக தொடர்வதேன்? யார் தடுத்தார்கள் இப்பொழுது அவற்றை சரி செய்ய?

    அசுரன்

  103. //அய்.நா வை சேர்ந்த உலக தொழிலாளர் அமைப்பில் சுமார் 36 கோடிகள் வேலை வாய்ப்பு என்று ஒரு சுட்டி சொல்கிறது. அந்த சுட்டிய காபி செய்ய முடியவில்லை. இந்த சுட்டியில் இருந்து பார்த்துச் செல்லவும் :
    http://laborsta.ilo.org//

    அந்த சுட்டியில் பல உபயோகமான தகவல்கள். சொந்த செலவில் கொஞ்சம் சூனியம் வைத்துக் கொண்டுள்ளார் பொய்தியமான்.

    அதில் இந்தியா குறித்து உள்ள சில புள்ளிவிவரங்கள்:

    முழுநேரமாக சம்பளத்திற்கு வேலை செய்பவர்கள் குறித்த புள்ளிவிவ்ரம் அது.(ஆயிரங்களில்)

    பின்வரும் தகுதிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
    (http://laborsta.ilo.org/applv8/data/SSM2/E/IN1.html)
    Industrial
    All private sector activities, excluding agriculture, and all public sector activities excluding the defence forces.
    விவசாயம் தவிர்த்து எல்லா தனியார்த் துறைகளும்

    All types of public sector establishments, and private sector establishments with ten or more persons employed, except for Bombay and Calcutta, where establishments with 25 or more persons employed are covered.

    Employees exclude: apprentices; piece workers; home workers; part-time workers; young workers below a certain age; unpaid family workers; and persons temporarily or indefinitely laid off.

    அந்த புள்ளிவிவ்ரம் இதுதான்

    Year 1999 2000 2001 2002 2003 2004 2005 2006 2007 2008
    Empl 28113 27960 27789 27206 27000 26443 26458

    இதன் படி விவசாயம் தவிர்த்த தனியார் துறையில் மாதச் சம்பளம் வாங்கும் முழு நேர ஊழியர்கள் 1999ல் 2கோடியே81லட்சம் சொச்சம், அதுவே 2005ல் 2கோடியே 64லட்சம் சொச்சம்… நல்ல முன்னேற்றம் பொய்தியமான்.

  104. தொடரும் லைசன்ஸு ராஜ்…..

    பொய்தியமானுடைய கருத்தில் 1990களுக்கு முந்தைய திட்டங்கள் இடதுசாரி லைசன்ஸு ராஜ். எனில் பின்வருபவை வலதுசாரி லைசன்ஸு ராஜா?

    #1) விவசாயிகள் விதை நெல் வைத்துக் கொள்ளும் பாரம்பரிய உரிமையை தடுத்து விதை வைத்துக் கொள்பவர் அதனை வேளான் கழகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது (விதை நெல் சீர்திருத்தச் சட்டம்).

    #2) கிராமங்களில் கிணறு வெட்டுவதற்கு அனுமதி மறுக்கப்படுவது.

    #3) உணவுக்காக மக்கள் தவிக்கும் நிலை ஒரு பக்கம் நிலவுகிறது. இன்னிலையில், விவசாயத்தில் அபரிமிதமாக உற்பத்தி செய்ய ஊக்குவிக்காமல் இருந்தால் கூட பரவாயில்லை, ஆனால் விளைவித்தைவைகளையே கூட வாங்காமல் கழுத்தறுக்கிறது அரசு. இது பின்வாசல் வழியாக உற்பத்தியின் மீது லைசன்ஸ் ராஜ் கட்டுப்பாட்டை நிறுவுவதே ஆகும்.

    #4) மஹாராஸ்டிராவில் விவசாயிகள் தண்ணீர் பயன்படுத்திக் கொள்ள வருடம் 8,000 ரூபாய் வரி விதிக்கப்படும் சட்டம் ஒரு லைசன்ஸ் ராஜ் எனில் இதற்கு எதிர்புறத்தில் மொத்தம் மொத்தமாக ஆறுகளே பன்னாட்டு கம்பேனிகளுக்கு தாரை வார்க்கப்படுகின்றன. (கோகோ கோலா தாமிரபரணியில் லிட்டர் 1.2 பைசாவிற்கு தண்ணீர் எடுக்கிறது). பொய்தியமானின் பிரி டிரேட் யாருக்கானது என்பதும், அது எந்த வகையிலும் தேசிய பொருளாதாரத்தை கட்டியமைப்பதற்கானது அல்ல என்பதும் புரிய வரும் இதன் மூலம்.

    #5) உர மான்யம் உள்ளிட்டவைகளை பன்னாட்டு, உள்நாட்டு பெரு நிறுவனங்களுக்கு வழங்குவதன் மூலம் அந்தந்த நிறுவனங்களிடம்தான் பொருட்களை வாங்க வேண்டும் என்று விவசாயிகளை நிர்பந்திக்கும் லைசன்ஸ் ராஜ் உங்களுடையது.

    #6) கூட்டுறவு வங்கிகளை கொஞ்சம் கொஞ்சமாக முடக்கி போட்டதன் மூலமும், விவசாயக் கடன்களை ஏட்டாக் கனியாக மாற்றியதன் மூலமும் விவசாயத்திற்கான நிதி ஆதாரத்தில் இன்றைய உலகமய லைசன்ஸ் ராஜ் உட்கார்ந்து கொண்டுள்ளது. இப்படி ஒரு பக்கம் மான்ய்ம் கொடுக்கக்கூடாது என்று சொல்லும் மேற்கு நாடுகள், தமது நாட்டு விவசாய உற்பத்திக்கு மான்யம் கொடுத்து அவற்றை நமக்கே ஏற்றுமதி செய்கிறார்கள், இன்னொரு பக்கம் பன்னாட்டு மூலதனத்த்து மறைமுகமாக பல்லாயிரம் கோடிகளில் சலுகைகள், மான்யம் எல்லாம். இதுதான் அதியமானின் சொல்லும் ப்ரி டிரேட். யாருக்கானது இது?

    #7) வேலை வாய்ப்பை உருவாக்கும் சாத்தியம் விவசாயம் சார்ந்ததாக இந்திய தொழில்துறையை கட்டமைத்து வளர்த்துச் செல்வதன் மூலம் அபரிமிதமாக இருக்கும் பொழுது, இந்திய வங்கிகளிலேயே பல கோடிகள் மூலதனம் கொட்டிக் கிடக்கும் பொழுது, பன்னாட்டு மூலதனத்தையும், அது சார்ந்த சமூக பயனற்ற ஏற்றுமதிக்கான தொழில்களையும் மட்டும் வளர்ப்பதன் மூலம், கல்வித் துறையை வேலை வாய்ப்பு மட்டும் சார்ந்ததாக மாற்றியதில் தெரிகிறது லைசன்ஸ் ராஜ். இதன் விளைவு மூளை வறட்சி.

    இன்னும் வரும்…..

    அசுரன்

  105. காட்டுப்ப்யல அசுரனே,

    நீ என்னை பொய் மான் என்றால் உன்னை நான் காட்டன் என்று அழைப்பதுதான் இந்த விளையாட்டின் முறை. சரிதானே !! முதலில் நீ சொன்ன விலைவாசி உயர்வு (இன்ஃப்லேசன்) பற்றி இதே போல ஆதாரங்களை எடுது விடும் பார்க்கலாம். அதே போலத்தான் 1,00,000 கோடிகள் தள்ளிபடி.

    விவசாயத்தில் லைசென்ஸ் ராஜ்யத்திற்க்கு நாங்கள் காரணமா அல்லது இடதுசாரி மனோபாவாத்தின் ஹெஙோவரா ? கூட்டுறவு துறை சீரழந்தற்க்கு யார் காரணம் ? தாரளமயமாக்கலா அல்லது சோசியலிச பானி காலத்தில் உருவான ஊழல் மற்றும் நேர்மை குறைவா ? விவாசியிகளுக்கு எந்த முறைபட்ட நிதி நிறுவனங்களும் கடன் தராதற்க்கு யார் காரணம் ? சட்டத்தின் ஓட்டைகள் கடனை வசூல் செய்ய முடியாதன் நிலை. மற்றும் பலரும் ஏமாற்ற கற்றுக்கொண்டனர். இவை பற்றி நாம் ஏற்கெனவே விவாதித்தும், சிறிதும் நேர்மை இல்லாமல், தாரளமயமாக்கம் மீது பழி போடுகறீர். இது உமது நேர்மைக்கு இரு ஸாம்பிள்.
    மிக மிக முக்கியமான அம்சமான, நில உச்ச வரம்பு சட்டத்தால், 15 ஏக்கர்களுக்கு மேல் ஒரு பெரிய நவீன பண்ணை அமைக்க இன்றும் முடியாது. இதெல்லாம் என்ன தாரளமயமாக்கலா அல்லது உம்மை போன்ற மூடர்களின் இடதுசாரி கொள்கையா ? உமது பழைய தோழர்கள் (சி.பி.எம்) போன்றவர்களின் உந்துதலால் விவசாயம் மற்றும் அனைத்து துறைகளையும் சீரழித்துவிட்டு, இன்று நிலைமை கொடுமையாகும் போது (விவசாயத்தில்) சம்பந்தமில்லாத விசியத்தின் மீது பழி போடுவதுதான் பகுத்தறிவா ? தொழில்துறையை தாரளமயமாக்க அனுமதித்தால், விவசாயம் எப்படி சீரழந்தது என்று விளக்க முடியுமா ? ஒரு சிமென்ட் அல்லது டிராக்டர் தொழிற்சாலையை விரிவு படுத்த அல்லது புதிதாக லைசென்ஸ் இல்லாமல் துவங்க அனுமதித்தால் விவசாயம் எப்படி சீரழந்தது ? மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போட்டிறிக. மேலும் தாரளமயமாக்கல் செய்யாமல் இருந்திருந்தால், விவசாயம் இனறு அருமையாக இருந்திருக்குமா ?
    சாய்நாத்தின் கேனத்தனமான இன்டெர்ப்ரெட்டேஸன் போன்றதுதான் உமது வாதமும்.

    அறிவுகெட்ட நம்பி,

    என்ன பெரிய அறிவாளி மாதிரி நடுவுல உழவோட்டறா ?
    சொந்த புத்தி இல்லாமல், அசுரன் வந்தவுடன் தான் உமது இந்த வீரமோ !!
    :))) சரி இருக்கட்டும். நீர் உண்மையில் ஒரு கம்யூனிஸ்ட் என்றால் (அதாவது திறமைக்கேற்ற வேலை. தேவைக்கேற்ற ஊதியம்), உமது கொழுத்த சம்பளத்தில் உமது தேவைகள் (சுமார் 15,000 போதும்) போக மிஞ்சய “உபரி” வருமானத்தை ஏழை தொழிலாளர்களுக்கு அல்லது செம்புரட்சியை உருவாக்கும் ம.க.இ.க அமைப்பினருக்கு நன்கொடையாக வழங்கத் தயாரா ?

    அசுரன்,

    மன்மோகன் சிங் சொன்னதை அவுட் ஆஃப் கான்டெக்ஸ்டில் சொல்கிறீர். அவர் இந்தியாவை பற்றி சொல்லவில்லை. மொத்த உலகை பற்றிதான் சொன்னார். மேலும் ஏழைகள் பரம் ஏழைகள் ஆவதால் இடைவெளி அதிகமாகவில்லை. அவர் தான் மாமா பயலாச்சா, உம்மை பொருத்த வரை. அவ்ர் சொன்னா, அதுதான் வேத வாக்கா. எம்மை பொருத்த வரை மன்மோகன் சிங், தாரளமயமாக்கல் இந்தியாவில் செய்தது தவறு என்று இதுவரை சொல்லவில்லை. பின் வாங்கவில்லை. உலகமயமாக்கல் சரியாக இன்னும் பல நாடுகளில் அமலாகவில்லை. மேலும் குமுலேட்டிவ் எஃபெக்ட் என்று ஒன்று உண்டு. பல ஆண்டுகள் மூடத்தனமான கொள்கைகளால் சீரழந்தவை சில ஆண்டுகளில் சரியாகாது. அமர்தியா சென் இவை பற்றி சொன்னது பற்றி எடுத்தியம்புங்களேன் !! முக்கியமாக அவர் தாரளமயமாக்கல் பற்றி அந்த அவுட்லுக் பேட்டியில் சொன்னது பற்றி.. அவரை உட்டுட்டீக ?

    அந்த‌ அய்.எல்.வோ த‌க‌வ‌ல்ப‌டி முத‌ல் ரிப்போர்ட் நிக‌ர‌ வேலை வாய்ப்பை ப‌ற்றியும் சொல்கிற‌து. அதை எடுத்து இய‌ம்ப‌வில்லை !! நீர் அளித்த‌ புள்ளிவிவ‌ர‌ம் 10 தொழிலாள‌ர்க‌ளுக்கும் அதிக‌மான‌ தொழிற்கூட‌ங‌க‌ளை ம‌ட்டும்தான் சொல்கிற‌து. 10ற்க்க்கும் குறைவான‌ சிறுதொழில்க‌ள் (எம்மை போன்ற‌வை) எத்த‌னை ல்ச்ச‌ம் உள்ள‌ன‌ ? அதில் வேலை செய்யும் தொழிலாள‌ர் எண்ணிக்கைக‌ள் எத்த‌னை கோடிக‌ள் ? அதெல்லாம் இந்த‌ விவ‌ர‌த்தில் அட‌ங்க‌வில்லையா ? ஆர்க‌னைஸ்ட் லேப‌ரில் இருந்து கான்ட்ராக்ட் லேப‌ராக‌வும் ப‌ல‌ இட‌ங்க‌ளில் மாற்ற‌ப்ப‌ட்டுள்ள‌து. கார‌ண‌ம் முத‌லாளித்துவ‌ கொடுமை ம‌னோபாவ‌ம் அல்ல‌. நிர‌ந்த‌ர‌ வேலை கொடுத்தால் பெரும்பாலான‌வ‌ர்க‌ள் ஒழுங்கா வேலை செய்யாம‌ல், மெத்த‌ன‌மாக‌ ஓ.பி அடிக்கின்ற‌ன‌ர். ஊழ‌ல் த‌லைவ‌ர்க‌ள் கொண்ட‌ யூனிய‌ன் தொழிலாள‌ர்க‌ளில் வேலை த‌ர‌ம் ப‌ற்றி உம‌க்கு என்ன‌ வெங்காய‌மா தெரியும் ? ர‌யில்வே (எஸ்.ஆர்.எம்.யூ) தொழிலாள‌ர் ச‌ங்க‌ உறுப்பின‌ர்க‌ளின் நேர்மை ம‌ற்றும் வேலைக‌ளின் த‌ர‌ம் ப‌ற்றி நேரில் சென்று பாரும். எம்.ஆர்.எல் (அர‌சு எண்ணை நிறுவ‌ன‌ம்) இல் ஷிஃப்டில் தூங்கும் தொழிலாள‌ர்க‌ளை போய் பாருங்க‌. இத்த‌னைக்கும் ந‌ல்ல‌ ச‌ம்ப‌ள‌ம். அதே வேலையை, அதே ச‌ம்ப‌ள‌த்தில் ரிலைய‌ன்ஸ் ஜாம் ந‌க‌ர் ரிஃபைன‌ரியில் செய்யும் தொழிலாளி எப்ப‌டி நேர்மையாக, திற‌மையாக‌, உருப்ப‌டியாக‌ செய‌ல்ப‌டுகிறார் என்ப‌தை ஒப்பிட்டி பாரும். அதெல்லாம் ந‌டைமுறையில் அறியாத‌ மாணவ‌ன் நீர்.

    இன்று எம‌து தொழில் பேட்டையில் வேலைக்கு ஆட்க‌ள் கிடைப்ப‌தில்லை. எம‌து ந‌ண்ப‌ரின் நிறுவ‌ன‌த்தில். ஆர‌ம்ப‌ நிலை தொழிலாளிக்கு மாத‌ம் 4500 அளித்தும் (த‌ங்கும் இட‌ம் ம‌ற்றும் உண‌வு இல‌வ‌ச‌ம்) ஆட்க்க‌ள் கிடைக்க‌வில்லை. விவ‌சாய‌த்தில் ப‌ல‌ இட‌ங்க‌ள் ஆட்க‌ள் இல்லை. அத‌னால் தான் பிற‌ ப‌குதிக‌ள் ம‌ற்றும் மாநில‌ங்க‌ள் இருந்து த‌ருவிக்க‌ப்ப‌டுகிறார்க‌ள். 1980இல் இதை விட‌ நிலைமை ப‌டு மோச‌ம். வேலை அளிக்க‌ புதிய‌ நிறுவன‌ங்க‌ள் உருவாவ‌து மிக‌ மிக‌ குறைவு.

    விலைவாசி உய‌ர்வு, ச‌ம்ப‌ள‌ உய‌ர்வை விட‌ அதிகமாக‌ இருப்ப‌தால், தொழிலாள‌ர்க‌ளின் நிலை வ‌ள‌ர்ந்த‌ நாடுக‌ள் போல‌ ந‌ல்ல் நிலையில் இருக்க‌ முடிவ‌தில்லை. மேலும் ஜ‌ன‌த்தொகை பெருக்க‌ம் வேறு. விலைவாசி உய‌ர்விற்ற்கு முட்டாள்த‌ன‌மான‌ இட‌துசாரி கொள்கைக‌ள் தான் அடிப்ப‌டை கார‌ண‌ம். இதை ப‌ற்றி விரிவாக‌ எம‌து பிளாகில் எழுதியுள்ளேன். உம‌க்கும் தெரியும். கார‌ணிக‌ள் ப‌ல‌ இருக்க‌, தார‌ள‌ம‌ய‌மாக்க‌லை, ச‌ந்தை பொருளாதார‌த்தை தான் கார‌ணியாக‌ சொல்வ‌து அறியாமை.

    1991இல் டால‌ர் ப‌ற்றாக்குறையை ச‌மாளிக்க‌ அன்று மாற்றுவ‌ழி என்ன‌ என்று எம‌து முக்கிய‌ ப‌திவில் “வின‌வி” உள்ளேன். இதுவ‌ரை எந்த‌ அசுர‌னும் ப‌தில் சொல்ல‌ முடிய‌வில்லை. அய்.எம்.எஃப் அய் இன்று துர‌த்திவிட்டோம். ஆனால் 90க‌ள் வரை வ‌ருட‌ந்தோரும் அச்ச‌த்தோடு வாழ்ந்தோம். க‌ட‌ன், மேலும் க‌ட‌ன். இதைப் ப‌ற்றி யாரும் பேசாம‌ல், அமெரிக்க‌ டால‌ர் ச‌தி, பெட்ரோ டால‌ர் ப‌ற்றிதான் பேசுகிறார்க‌ள். அசுர‌ன், உம‌க்கு ஒரு ச‌வால், எம‌து அந்த‌ ப‌திவில் கேட்ட‌ இறுதி கேள்விக்கு ப‌தில் சொல்ல‌ முடியுமா ?
    நேர‌டியான‌ ப‌தில் தேவை. இந்தியா என்ன‌ செய்திருக்க‌ வேண்டும் என்று. சும்மா அமெரிக்க‌ ச‌தி, ஏகாதிப‌த்திய‌ம் என்று க‌தைக்க‌ கூடாது. 1977இல் அய்.பி.எம் நிறுவ‌ன‌த்தை இந்தியாவில் இருந்து துர‌த்திய‌
    புண்ணிய‌வான்க‌ளின் கூட்ட‌த்தை சேர்ந்த‌வ‌ராயிற்றே நீர். 80க‌ளில் இந்தியாவில் க‌ம்யூட்ட‌ர் கொண்டு வ‌ர‌க்கூடாது என்ற‌ கூட்ட‌ம் அது. (ம‌.க‌.இ.க‌ வையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்)..

    மேலும்..

    • //மன்மோகன் சிங் சொன்னதை அவுட் ஆஃப் கான்டெக்ஸ்டில் சொல்கிறீர். அவர் இந்தியாவை பற்றி சொல்லவில்லை. மொத்த உலகை பற்றிதான் சொன்னார்.//

      ஆமாம்பா கேட்டுக்கோங்க.. அவர் இந்தியாவப் பத்தி சொல்லலா. ஏன்னா இந்தியா அவுட் ஆப் தி வோர்ல்டு….. பொய்தியமான் விசயங்களை புரிந்து கொள்ளும் விதமே அலாதியானது.. வாழ்த்துக்கள் பொய்தியமான்

    • //முதலில் நீ சொன்ன விலைவாசி உயர்வு (இன்ஃப்லேசன்) பற்றி இதே போல ஆதாரங்களை எடுது விடும் பார்க்கலாம். அதே போலத்தான் 1,00,000 கோடிகள் தள்ளிபடி.//

      ஏற்கனவே எடுத்து விட்ட ஆதாரங்களுக்கு அதியமானின் பதில் தாவியமானாக உள்ளது. .இதில் இன்னும் இவருக்கு ஆதாரம் வேண்டுமாம்… புலிஸ் ஹெல்ப் யுவர் செல்ப்…. இனி உங்களது நேரம் ஆரம்பிக்கிறது. இனிமேல் நீங்கள் வைக்கும் கருத்துக்களுக்கு ஆதாரம் கொடுத்தால் அதில் ஒரு சுயமரியாதை இருக்கும்.(இதுவர்ரை ஒரு துளி கூட ஆதாரம் கொடுக்காத தாவியமான் ஆதாரம் குறித்து பேசுவது ஒரு நகைமுரன்)

    • //அந்த‌ அய்.எல்.வோ த‌க‌வ‌ல்ப‌டி முத‌ல் ரிப்போர்ட் நிக‌ர‌ வேலை வாய்ப்பை ப‌ற்றியும் சொல்கிற‌து. அதை எடுத்து இய‌ம்ப‌வில்லை !! நீர் அளித்த‌ புள்ளிவிவ‌ர‌ம் 10 தொழிலாள‌ர்க‌ளுக்கும் அதிக‌மான‌ தொழிற்கூட‌ங‌க‌ளை ம‌ட்டும்தான் சொல்கிற‌து. 10ற்க்க்கும் குறைவான‌ சிறுதொழில்க‌ள் (எம்மை போன்ற‌வை) எத்த‌னை ல்ச்ச‌ம் உள்ள‌ன‌ ? அதில் வேலை செய்யும் தொழிலாள‌ர் எண்ணிக்கைக‌ள் எத்த‌னை கோடிக‌ள் ? அதெல்லாம் இந்த‌ விவ‌ர‌த்தில் அட‌ங்க‌வில்லையா ? ஆர்க‌னைஸ்ட் லேப‌ரில் இருந்து கான்ட்ராக்ட் லேப‌ராக‌வும் ப‌ல‌ இட‌ங்க‌ளில் மாற்ற‌ப்ப‌ட்டுள்ள‌து//

      ஆதாரம் புலீஸ்… வித் அவுட் ஆதாரம் வி கேனாட் கன்ஸிடர் யுவர் ஆர்க்யூமெண்டு…. 😉

    • //#5)
      ஏழை பணக்காரன் பிளவுதான் அதிகமாகியுள்ளதே தவிர ஒபீட்டளவிள் மக்களின் வாழ்க்கைத் தரம்குறையவில்லை என்று பொய்தியமான் கூறிய கருத்தை மறுத்து மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்து போயுள்ளது என்பதை வலியுறுத்த முன்பு இடப்பட்ட பின்னூட்டம் (https://www.vinavu.com/2009/08/15/august15/#comment-8573):

      http://rbidocs.rbi.org.in/rdocs/AnnualReport/PDFs/86538.pdf

      ரிசர்வ் பேங்கு ஆப்பு இந்தியாவின் 2008 ஆம் ஆண்டு அறிக்கையில் ஒரு பகுதி. கீழ இன்னா சொல்லிருக்கானுங்கன்னு பாத்துக்கோங்கப்பா….

      According to the Economic
      Survey 2007-08, the per capita availability of cereals and
      pulses declined during this period. The consumption of
      cereals declined from a peak of 468 grams per capita per
      day in 1990-91 to 412 grams per capita per day in 2005-06,
      while that of pulses declined from 42 grams per capita per
      day (72 grams in 1956-57) to 33 grams per capita per day
      during the same period. Furthermore, access to food for a
      large section of the population is hindered due to chronic
      poverty, unemployment and lack of purchasing power.

      #########################//

      புலீஸ் அன்ஸ்வர் திஸ் பொய்தியமான்

    • //இன்று எம‌து தொழில் பேட்டையில் வேலைக்கு ஆட்க‌ள் கிடைப்ப‌தில்லை. எம‌து ந‌ண்ப‌ரின் நிறுவ‌ன‌த்தில். ஆர‌ம்ப‌ நிலை தொழிலாளிக்கு மாத‌ம் 4500 அளித்தும் (த‌ங்கும் இட‌ம் ம‌ற்றும் உண‌வு இல‌வ‌ச‌ம்) ஆட்க்க‌ள் கிடைக்க‌வில்லை.//

      வருசத்துக்கு 100 நாள் வேலைதா என்று அரசை கேட்டு வாங்கும் அளவு வேலையில்லாத் திண்டாட்டம் விவசாயத்தில் தலைவிரித்தாடுகிறது. இன்னொரு பக்கம் ஒரிஸ்ஸா, பிஹார் தொழிலாளிகள் கொத்தடிமைகளைப் போல சுரண்டப்படுகீறார்கள்(பொய்தியமான் குறிப்பிடும் அதே தங்கும் இடம், உணவு இலவசம் என்ற முழக்கத்தின் கீழ்தான்). இன்னொரு பக்கம் சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் பெண்கள் மிகக் கோடூரமாக சுரண்டப்படுகிறார்கள். யாரேனும் ஆள் அனுப்பி பொய்தியமானுக்கு உதவ விரும்பினால் செய்யலாம் பாவம் மாதம் 4500 சம்பளம்(கையில் கிடைப்பதுதானே?) + தங்கும் இடம் + சாப்பாடு இலவசம்(அதாவது 24/7 hrs வேலை).

    • ///1991இல் டால‌ர் ப‌ற்றாக்குறையை ச‌மாளிக்க‌ அன்று மாற்றுவ‌ழி என்ன‌ என்று எம‌து முக்கிய‌ ப‌திவில் “வின‌வி” உள்ளேன். இதுவ‌ரை எந்த‌ அசுர‌னும் ப‌தில் சொல்ல‌ முடிய‌வில்லை. அய்.எம்.எஃப் அய் இன்று துர‌த்திவிட்டோம். ஆனால் 90க‌ள் வரை வ‌ருட‌ந்தோரும் அச்ச‌த்தோடு வாழ்ந்தோம். க‌ட‌ன், மேலும் க‌ட‌ன். இதைப் ப‌ற்றி யாரும் பேசாம‌ல், அமெரிக்க‌ டால‌ர் ச‌தி, பெட்ரோ டால‌ர் ப‌ற்றிதான் பேசுகிறார்க‌ள். அசுர‌ன், உம‌க்கு ஒரு ச‌வால், எம‌து அந்த‌ ப‌திவில் கேட்ட‌ இறுதி கேள்விக்கு ப‌தில் சொல்ல‌ முடியுமா ?
      நேர‌டியான‌ ப‌தில் தேவை. இந்தியா என்ன‌ செய்திருக்க‌ வேண்டும் என்று. சும்மா அமெரிக்க‌ ச‌தி, ஏகாதிப‌த்திய‌ம் என்று க‌தைக்க‌ கூடாது///

      இதே போல தற்போதைய உலக பொருளாதார மந்தத்திற்கும் நம்மிடமே தீர்வு சொல்லச் சொல்லுவார். நாம் சொல்லும் தீர்வோ அவருக்கு ஒவ்வாததாக இருக்கும் உடனே இத்தனைக்கும் காரணம் இடதுசாரிக் கொள்கையின் ஹேங் ஓவர்தான் என்று அடுத்த கட்டமாக இறங்குவர்…. இதெல்லாம் கொஞ்சம் சுலுவான வேலைதான் ஏனேனில் இப்படியெல்லாம் நேர்த்தியாக(???) விவாதம் செய்வதற்கு் எந்த தர்க்க நியாயமும் தேவையில்லை, ஆதாரமும் தேவையில்லை…. முக்கியமாக நேர்மை தேவையேயில்லை…

  106. அசுரன்,

    இந்த புத்தகத்தை முடிந்தால் படிக்கவும். இது ஒரு கொலம்பியா பல்கலைகழக‌
    பேராசியரால் 2004இல் எழுதப்பட்டது. .மிகவும்
    சிலாகிக்கப்பட்ட நூல் :
    http://www.complete-review.com/reviews/economic/bhagwj.htm http://books.google.co.in/books?id=s0hFC5vMh4kC&dq=in+defense+of+globalization&printsec=frontcover&source=bl&ots=BtNAkFC_YF&sig=Hz24TW2iqykkOzJMecTN4Lk_qD0&hl=en&ei=Ih-dSofCOoGVkAWd2rSzBg&sa=X&oi=book_result&ct=result&resnum=1#v=onepage&q=&f=false

  107. என்னை காட்டான் என்றே அழைக்கலாம் தவறில்லை இவ்வாறு அழைப்பதற்கு தகுந்த ஆதாரங்கள் வைப்பது அவரவரது நேர்மையைப் பொருத்த விசயம. பொய்தியமானிடம் நேர்மையாக இரு என்று சொல்லத்தான் என்னால் முடியும் அதனை நிர்பந்தித்து நடவடிக்கையில் கொண்டு வருவது அவரது சொந்த விருப்பம் சார்ந்தது. எனினும் காட்டான் என்ற பெயர் நன்றாகவே உள்ளது…. மேலும், இது விளையாட்டு அல்ல… I am serious

  108. //, 15 ஏக்கர்களுக்கு மேல் ஒரு பெரிய நவீன பண்ணை அமைக்க இன்றும் முடியாது. இதெல்லாம் என்ன தாரளமயமாக்கலா அல்லது உம்மை போன்ற மூடர்களின் இடதுசாரி கொள்கையா ?//
    ஓஹோ அதனால்தான் ரிலையன்ஸ் நிறுவனம் 200 ஹெக்டேரில் மாம்பழப் பண்ணை அமைக்க இயலுகிறதோ…

    http://www.rediff.com/money/2005/may/16ril.htm

    நல்ல இடதுசாரி கொள்கை..

  109. //1991இல் டால‌ர் ப‌ற்றாக்குறையை ச‌மாளிக்க‌ அன்று மாற்றுவ‌ழி என்ன‌ என்று எம‌து முக்கிய‌ ப‌திவில் “வின‌வி” உள்ளேன். இதுவ‌ரை எந்த‌ அசுர‌னும் ப‌தில் சொல்ல‌ முடிய‌வில்லை. அய்.எம்.எஃப் அய் இன்று துர‌த்திவிட்டோம். ஆனால் 90க‌ள் வரை வ‌ருட‌ந்தோரும் அச்ச‌த்தோடு வாழ்ந்தோம். க‌ட‌ன், மேலும் க‌ட‌ன். இதைப் ப‌ற்றி யாரும் பேசாம‌ல், அமெரிக்க‌ டால‌ர் ச‌தி, பெட்ரோ டால‌ர் ப‌ற்றிதான் பேசுகிறார்க‌ள். அசுர‌ன், உம‌க்கு ஒரு ச‌வால், எம‌து அந்த‌ ப‌திவில் கேட்ட‌ இறுதி கேள்விக்கு ப‌தில் சொல்ல‌ முடியுமா ?//

    உங்களுக்கு கேள்வி கேட்க மட்டும்தான் தெரியுமா பொய்தியமான்? வேலைவாய்ப்பு முதல் வறுமை, உணவு உத்திரவாதம் வரை கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு நாங்கள் அளித்துள்ள மறுக்க இயலாத் புள்ளிவிவரங்களுக்கு பதில் சொல்லவும் பிறகு உங்களது பிற கேள்விகள் எடுத்துக் கொள்ளப்படலாம்….

  110. //ஆர்க‌னைஸ்ட் லேப‌ரில் இருந்து கான்ட்ராக்ட் லேப‌ராக‌வும் ப‌ல‌ இட‌ங்க‌ளில் மாற்ற‌ப்ப‌ட்டுள்ள‌து. கார‌ண‌ம் முத‌லாளித்துவ‌ கொடுமை ம‌னோபாவ‌ம் அல்ல‌. நிர‌ந்த‌ர‌ வேலை கொடுத்தால் பெரும்பாலான‌வ‌ர்க‌ள் ஒழுங்கா வேலை செய்யாம‌ல், மெத்த‌ன‌மாக‌ ஓ.பி அடிக்கின்ற‌ன‌ர். ஊழ‌ல் த‌லைவ‌ர்க‌ள் கொண்ட‌ யூனிய‌ன் தொழிலாள‌ர்க‌ளில் வேலை த‌ர‌ம் ப‌ற்றி உம‌க்கு என்ன‌ வெங்காய‌மா தெரியும் ?//

    அது சரி, சத்யம் ராஜு, அம்பானி, கிங் பிஸ்ஸார் சாராய மல்லையா, டௌவ் கெமிக்கல்ஸ், பெப்ஸி, கோக், டாடா, இன்ன பிற முதலாளித்துவ பொறுக்கி கழிசடைகள் போன்ற சாலச் சிறந்தவர்களின் நாட்டில், அவ்ர்களின் பொருளாதாரத்தில் அண்டிப் பிழைப்பவர்களான தொழிலாளர்கள் நேர்மையாக இல்லாமல் இருப்பது மிகுந்த வருத்ததிற்குரியதே…..

  111. //அறிவுகெட்ட நம்பி,

    என்ன பெரிய அறிவாளி மாதிரி நடுவுல உழவோட்டறா ?
    சொந்த புத்தி இல்லாமல், அசுரன் வந்தவுடன் தான் உமது இந்த வீரமோ !! 🙂 )) சரி இருக்கட்டும். நீர் உண்மையில் ஒரு கம்யூனிஸ்ட் என்றால் (அதாவது திறமைக்கேற்ற வேலை. தேவைக்கேற்ற ஊதியம்), உமது கொழுத்த சம்பளத்தில் உமது தேவைகள் (சுமார் 15,000 போதும்) போக மிஞ்சய “உபரி” வருமானத்தை ஏழை தொழிலாளர்களுக்கு அல்லது செம்புரட்சியை உருவாக்கும் ம.க.இ.க அமைப்பினருக்கு நன்கொடையாக வழங்கத் தயாரா ? // அதியமான் உன்னைப் போன்று நான் ‘பெரிய்ய்ய்ய்ய்ய்ய’ அறிவாளி இல்லைதான். முதலில் திறமைக்கேற்ற ஊதியம் என்றால் – ஆன்சைட்டில் பத்தில் ஒரு பகுதி செலவில் (அதாவது, இன்ப்ரா ஸ்டிரக்சர், நெட் எக்ஸ்பென்ஸஸ் முதலானவைப் போக என் சம்பளம் ஒரு சிறு துளி) எனக்கு சம்பளமாக கொடுக்கப்படுகிறது. இதனால் பன்னாட்டு கம்பெனிக்கு இரண்டு வகையான லாபம் – ஒன்று இங்கே உம்மைப் போன்ற முதலாளித்துவ தாசர்கள் கிடைப்பார்கள் மற்றும் லாபம். இந்தியாவில் மற்ற பணியாளர்கள் மிகக் குறைவாக சம்பளம் கிடைப்பதால் என்னுடைய சம்பளம் மிகப் பெரியதாகத் தெரிகிறது. ஆனால் நான் வாங்கும் சம்பளத்தில் பாதி அளவு வீட்டுக் கடன் வட்டிக்கே சென்று விடுவதால் நீங்கள் சொன்ன 15000 அளவில்தான் என்னுடைய செலவிற்கு கிடைக்கும். மேலும் இயக்கத்திற்கு நான் எவ்வளவு செலவு செய்கிறேன் என்று உம்மிடம் நான் நியாயம் பேச ஆரம்பித்தால் – குரங்கு அப்பம் பிட்ட கதையாகி விடும். நீர் மட்டும் ஆதாரங்கள் இன்றி சவடால் விடலாம், நான் பொய்யதியமான் என்று உமது காரணவாகுப் பெயரை உபயோகித்தால் கோபம் வருகிறதா ? முதலில் அசுரனுக்கு முறையான தரவுகளுடன் பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்

  112. இந்தியாவில் க்ம்பூட்டர் விலை குறைஞ்சிருச்சி, ,லேப் ஆப்பு வில குறைஞ்சிருச்சி, ஆன வில குறஞ்சிருச்சி, குதிர வில குறஞ்சிருச்சி அதனால இந்தியா முன்னேற்றம் அடைஞ்சிருக்கு என்று பக்கா லாஜிக்கலாக பேசும் பொய்தியமானுக்காகவும் அப்படி நம்பும் பிறருக்காகவும் ஒரு தகவல்:

    http://lite.epaper.timesofindia.com/mobile.aspx?article=yes&pageid=13&sectid=edid=&edlabel=TOICH&mydateHid=02-09-2009&pubname=Times+of+India+-+Chennai&edname=&articleid=Ar01301&publabel=TOI

    மொத்தமே 7.1% பேர்தான் இணையத்தை பயன்படுத்துகிறார்களாம், அதாவது 9 கோடி பேர்தான்.

    மீதி இருக்குற 110 கோடிக்கு தெருக் கோடிதான்.

    மேலும், 10 பேருக்கு மேல் வேலை செய்யும் நிறுவனத்தில் சம்பளம் வாங்கி முழு நேரம் வேலை செய்பவ்ரகள் 2 கோடி பேர்தான். மீதியெல்லாம் அத்துக் கூலிக்கு சட்டி ஏந்துபவ்ர்கள். தாவியமானுடைய கணக்கில் வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ள வசதியானவர்கள்.
    அசுரன்

  113. அசுரன்,

    இந்திய அரசின் ஒரு அங்கமான ஆர்.பி.அய் யில் டேட்டாவை நீர் எடுத்திகாட்டியுள்ளீர். (அதிலும் வேலை வாய்பு பற்றி முழுமையான தகவல் இல்லை. அய்.எல்.வோ போல). நான் அதே இந்திய அரசின் இன்னோரு
    அங்கமான நிதியமைச்சகம் அளித்த பட்ஜெட் டேட்டாவில் வறுமை அளவு கடந்த 15 ஆண்டுகளில் குறைந்துள்ளதை பற்றிய சுட்டிய அளித்தேன். உடனே அது டுபாக்கூர் என்றீர். ஆனால் ஆர்.பி.அய் டுபாக்கூர் அல்ல. (இரண்டும் அரசு தகவல்தானே ?)

    சரி. இருக்கட்டும். உமக்கு உண்மையில் நேர்மை இருந்தால், கலிபோர்னிய பல்கலைகழக ஆய்வு கட்டுரை (வறுமை அளவை பற்றிய ஆய்வுகளின் தன்மை மற்றும் அலகுகள் பற்றியும்) பற்றி விவாதித்திறக்கு வேண்டும். முக்கியமாக அக்கட்டுரையில் சாரம்சம், இந்தியாவில் வறுமை அளவு குறைந்துள்ளது என்கிறது.http://www.econ.ucla.edu/workingpapers/wp822.pdf

    அதையே சொன்ன அந்த ரெட்டிஃப் சுட்டியும்தான்.

    நீர் காட்டுபயல மட்டும் அல்ல. எஸ்கேபிஸ்ட் கூடத்தான். இறக்குமதிகளில் விலை, ரூபாயின் வீழ்ச்சியால் உயர்ந்தால், இந்தியாவில் விலைவாசி எக்கசெக்கமாக உயர்ந்து, திவாலாகி, விவாசாயம் முற்றாக அழிந்திருக்க்கும். இந்த முக்கிய விசயம் பற்றி பல முறை கேட்டும் எஸ்கேபிஸ்ட் தான். தோழர்கள் யாராலும் எம் பதிவில் இறுதியில் கேட்ட மாற்று வழி பற்றிய கேள்விக்கு பதில் சொல்ல முடியாதுதான்.

    • // அசுரன்
      Posted on September 2, 2009 at 10:41 am

      //#5)
      ஏழை பணக்காரன் பிளவுதான் அதிகமாகியுள்ளதே தவிர ஒபீட்டளவிள் மக்களின் வாழ்க்கைத் தரம்குறையவில்லை என்று பொய்தியமான் கூறிய கருத்தை மறுத்து மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்து போயுள்ளது என்பதை வலியுறுத்த முன்பு இடப்பட்ட பின்னூட்டம் (https://www.vinavu.com/2009/08/15/august15/#comment-8573):

      http://rbidocs.rbi.org.in/rdocs/AnnualReport/PDFs/86538.pdf

      ரிசர்வ் பேங்கு ஆப்பு இந்தியாவின் 2008 ஆம் ஆண்டு அறிக்கையில் ஒரு பகுதி. கீழ இன்னா சொல்லிருக்கானுங்கன்னு பாத்துக்கோங்கப்பா….

      According to the Economic
      Survey 2007-08, the per capita availability of cereals and
      pulses declined during this period. The consumption of
      cereals declined from a peak of 468 grams per capita per
      day in 1990-91 to 412 grams per capita per day in 2005-06,
      while that of pulses declined from 42 grams per capita per
      day (72 grams in 1956-57) to 33 grams per capita per day
      during the same period. Furthermore, access to food for a
      large section of the population is hindered due to chronic
      poverty, unemployment and lack of purchasing power.

      #########################//

      புலீஸ் அன்ஸ்வர் திஸ் பொய்தியமான்///

      அதைவிட எளிமையாக நெத்தியில் அடித்தது போல RBI புள்ளிவிவரம் ஒரு தலைக்கான உணாவு அளவு குறைந்துள்ளதை காட்டுகிறதே. இதை விவாதிக்கலாமே?

    • //அங்கமான நிதியமைச்சகம் அளித்த பட்ஜெட் டேட்டாவில் வறுமை அளவு கடந்த 15 ஆண்டுகளில் குறைந்துள்ளதை பற்றிய சுட்டிய அளித்தேன். உடனே அது டுபாக்கூர் என்றீர். ஆனால் ஆர்.பி.அய் டுபாக்கூர் அல்ல. (இரண்டும் அரசு தகவல்தானே ?)//

      இரண்டும் அரசு தகவல்தான் ஒரு தகவல் நேரடியான தகவல் இன்னொரு தவகல் இண்டர்பிரடேசன். அதாவது வறுமைக் கோடு என்று ஒன்றை வரையறை செய்து(குறிப்பிட்ட அளவு கலோரி உணவு வாங்க ஆகும் செலவு மற்றும் வாங்கும் சக்தி) அதனடிப்படையில் வருவது,

      நேரடி தகவல் எளிமையாக சில விவரங்களை தருகிறது.

      அதாவது ஒரு தலைக்கு இவ்வளவு என்று நாம் நுகர்ந்த உணவின் மொத்த சராசரி தற்போது குறைந்துள்ளது(1991ல் இது நமது உணவு நுகர்வு அதிகமாக இருந்தது). இந்த் புள்ளிவிவரம் வெகு சுலபம்(மொத்த உணவு உள்வரத்து/மொத்த மக்கள் தொகை).

      இதே போல வேலைவாய்ப்பு குறித்த தகவலும்(நீங்கள் குறிப்பிட்ட 10பேருக்கு குறைவான சிறுபட்டறைகள் மற்றும் விவசாயம் தவிர்த்து) புள்ளிவிவரம் வெகு எளிமையானது.

      ஆனால் வறுமைக் கோட்டை வரையறையிட்டு இவர்கள் செய்யும் பித்தலாட்டமோ வெகு மொசடியானது இதனை பலரும் அம்பலப்படுத்தியுள்ளார்கள். இது குறித்து அசுரனிலும் இரண்டு வருடங்களுக்கு முன்பு கட்டுரை வந்து டாலர் செல்வனுடன் விவாதிக்கப்பட்டுள்ளது.

      இந்த அடிபப்டையில்தான் வறுமைக் கோடு குறித்த புள்ளிவிவரத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அது உண்மை என்று நீங்கள் நம்புகிற பட்சத்தில் முரன்படான இரு அரசு புள்ளிவிவரம் குறித்து நீங்கள்தான் விளக்க கடமைப்பட்டுள்ளீர்கள் ஏனேனில் இந்த அரசை தாங்கிப் பிடிப்பது நீங்கள்தான்

      அசுரன்

      • what about that UCLA report about the two surveys and its conclusions ? i had posted that link twice which is a very clear and scientific interpretion of data on poverty levels. and what about amartya Sen’s writings about this and LPG, etc.. so far you are dodging them.

    • பொய்தியமான்,

      தங்களுடைய நண்பர் ஒருவர் பாராட்டியுள்ளபடி பரந்து விரிந்த ஞானம் படைத்த நீங்களே உங்களது கட்டுரைகளில் உள்ள தகவல்களை உங்களது வாதங்களுக்கு பொருத்தமாக தொகுத்து கொடுத்து விடுங்களேன்.

      ஏனேனில் நான் அப்படித்தான் இதுவரை கொடுத்து வந்துள்ளேன். சும்மா சகட்டு மேனிக்கு லிங்குகளை கொடுப்பது என்பது பெரிய வேலையல்ல. மேலும் இதற்கு முன்பு நீங்கள் கொடுத்த புள்ளிவிவ்ர லிங்குகள் குறித்தும் எமக்கு அனுபவம் உண்டு எனவே எமது பொன்னான நேரத்தில் உமது ஊறுகாயாக நாம் காய விரும்பவில்லை.

      புலீஸ் ஹெல்ப் யுவர்செல்ப் என்று இதைத்தான் நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன்….

      நானும் உங்களைப் போலவே சொல்ல இயலும் அவ்ர சொன்னார், இவர் சொன்னார் அப்படி சொன்னார், இப்படிச் சொன்னார் என்று. அக்கறையுடன் இருந்தால் அந்தந்த குறிப்பான தகவல்களை வெட்டி ஒட்டி தரவும்.

      அசுரன்

  114. and you are too crazy to understand that the penetration of PC and telcom and net has enabled more efficeint dissimination of inofrmation to farmers and others. any idea about the huge improvement and viablity if Menthol farmers in North thru MCX exchanage and informantion kisoks. even accounting, biling and payment for all sectors is not much much easier and less costly and efficient after the arrival of cheap PCs. PCs enable efficiency. that is their purpose. and new oppurtunites to all sector workers thru dead cheap cell phones. i have seen agri labourers use them in salem district to locate work spot daily. foremen contact them thru cells to direct them to new workspots. paintersn, plumbers, carpenters, drivers, etc have a boon in this cheap life time prepaid cells. ok.

  115. ///என்னை காட்டான் என்றே அழைக்கலாம் தவறில்லை இவ்வாறு அழைப்பதற்கு தகுந்த ஆதாரங்கள் வைப்பது அவரவரது நேர்மையைப் பொருத்த விசயம. பொய்தியமானிடம் நேர்மையாக இரு என்று சொல்லத்தான் என்னால் முடியும் அதனை நிர்பந்தித்து நடவடிக்கையில் கொண்டு வருவது அவரது சொந்த விருப்பம் சார்ந்தது. எனினும் காட்டான் என்ற பெயர் நன்றாகவே உள்ளது…. மேலும், இது விளையாட்டு அல்ல… I am serious/////

    மன்மோகன் சிங் இன் கொள்கைகளை, அரசியலை, செயல்களை தாராளமாக விமர்சனம் செய்யலாம். யாரும் தடை சொல்லவில்லை. ஆனால் அவரை “டர்பன் மண்டையன்”, மாமா பயல் என்றெல்லாம் வசைபாடுவது
    காட்டுப்பயல்களில் பாணியா அல்லது பண்பாளர்களின் பாணியா ? அசுரன், இதே பாணியில் நீர் பலரையும்
    பல காலமாக வசைபாடினீர். அதனால் தாம் உமது பிளாக்கில் பின்னோட்டம் இடவே பலரும் அஞ்சினர்.

    இதே சொல்லாடல்களை நீர் ஒரு நேரடி விவாதத்தில் அல்லது ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் சொல்வீரா ?
    அப்படி டர்பன் மண்டையன் என்றால் உம்மை பார்ப்பவர்கள் காட்டுபயல் என்று நினைக்காமல் பண்பாளர் என்றா கருதுவார்கள் ? இப்படி எல்லாம் கீழ்தரமான சொல்லாடல்கள் பயன்படுத்துவதன் மூலம் மக்களிடன்
    கம்யூனிசத்தை பரப்ப முடியுமா என்ன ? அதுவும் இந்த “மாமா வேலை”, “கூட்டி கொடுப்பது” போன்ற சொல்லாடல்கள் உம்மை போன்றவர்கள் தார்மீக கோபம் என்ற பெயரில் சர்வசாதாரணமாக கையாள்கிறீர்கள்.
    இது என்ன மார்கிசிச அறமோ ! எதிர்ம்றையான விளைவுகளை தாம் ஏற்படுத்தும்.

    • //அதனால் தாம் உமது பிளாக்கில் பின்னோட்டம் இடவே பலரும் அஞ்சினர்.//

      அப்படியா அச்சத்தை மீறித்தான் பல விவாதங்கள் அசுரன் தளத்தை மையமாககவைத்து நடந்துள்ளது எனில் எமது எதிரி வர்க்கத்தினர் உண்மையிலேயே வீரமிக்கவ்ரகள்தான்.

      🙂
      அசுரன்

    • அதியமான்,
      நல்லாத்தான் தமிழ் வருதுல்ல! அப்புறம் என்ன அமெரிக்ககாரன் இங்கிலீசு! வேண்டாமே! ஒருவேளை அமெரிக்காவில் செட்டிலாகும்னு ஆசையில எழுதுறீங்களோ!

  116. //////
    அசுரன்
    Posted on September 2, 2009 at 10:23 am
    //, 15 ஏக்கர்களுக்கு மேல் ஒரு பெரிய நவீன பண்ணை அமைக்க இன்றும் முடியாது. இதெல்லாம் என்ன தாரளமயமாக்கலா அல்லது உம்மை போன்ற மூடர்களின் இடதுசாரி கொள்கையா ?//
    ஓஹோ அதனால்தான் ரிலையன்ஸ் நிறுவனம் 200 ஹெக்டேரில் மாம்பழப் பண்ணை அமைக்க இயலுகிறதோ…

    http://www.rediff.com/money/2005/may/16ril.htm

    நல்ல இடதுசாரி கொள்கை/////// there are excemtions in this law, esp to planations of fruits, tea, coffee estates ,etc. if this stupid policy was implemented for tee pr coffee plantaions, then those would certainly be not viable. the same logic and wisdom always applies to rice, wheat, sugarcane farming too. try buying 300 acres of wetlands in Tanjore dt to start a modern agri farm for rice. even if the tiny landholders are willing to sell, it is not possible due to this land ceiling act. anyway, more important is that the famring populaiton was trapped in their profession for decades due to throttling of the whole economy which prevented the gradual migration of farmers into manufacturing, like in ALL developed nations. and answer this basic question : if license raaj had continued as in 1991, that is expansion of industry and satrting of new units was tightly controlled and thorttled, then how the hell would have the employment situation be today ? better or worse off ?

  117. /////there are excemtions in this law//////

    that s what we are questioning, exemptions to whom?

    //////try buying 300 acres of wetlands in Tanjore dt to start a modern agri farm for rice//////

    we cant buy but TATA’s and MNC’s can…
    Government acquires cultivation land for cheaper prices and selling to MNC’s and TATAs for much cheaper…. Forcing formers to become economic refugees!!!

      • ////You have got it wrong Komaali/////

        certainly not.

        Fine to see you agree that the way Government grabbed Formers land is wrong.
        while doing so, what about the formers who lost their lands as well now job less and agricultural labour who lost their jobs.
        you may say this “the gradual migration of farmers into manufacturing” do you??

        i do not agree with you! there should not be a migration of farmers into some other manufacturing industry, making them more deprived.
        the Mode of production has to be changed, nor the migration to manufacturing. hope you agree with this!

        as you quoted about the present day employment situation. i repeat how about the people who lost their jobs?
        how can you call the scenario which forcing lakhs of people into job less in order to give jobs to few thousand, that too with much less salary?

        Its not at all the development, rather this is scripted to brainwash the peoples and keep them booze alike!!!!!

  118. ///////////// answer this basic question : if license raaj had continued as in 1991, that is expansion of industry and satrting of new units was tightly controlled and thorttled, then how the hell would have the employment situation be today ? better or worse off ?///////////////////////////////

    திரும்பவுமா….

    இதென்ன “மறுபடியும் முதல்ல இருந்து வா…. பொண்டாட்டி ஓடிப்போனதுல இருந்து வா” -ங்குற கதையா இல்ல இருக்கு!!!

    உங்க போதைக்கு நாங்க தான் ஊறுகாயா அதியமான்?
    என்ன கொடுமை சார் இது?

  119. தோழர் அசுரன் இந்த முறை ‘மானை’ நழுவவிட்றாதீங்க.
    காட்டுப்பயல்களுக்கு தான் விலங்குகளை பற்றி நன்கு
    தெரியும்.காட்டுவாசிகள் என்பவர்கள் காட்டில் மலரும்
    வெள்ளைப்பூக்கள்.தம்மை அநாகரீகமானவர்களாக
    கருதிய நாகரீக கோமான்களை ஏழுதலை முறையின்(நாவல்)
    குண்டாகிண்டே வெள்ளைப் பன்றிகள் என்றான்.

  120. //தோழர் அசுரன் இந்த முறை ‘மானை’ நழுவவிட்றாதீங்க..//அசுரன் அவர்களே எனது வேண்டுகோளும் அதுதான். அதியமானுடைய பஞ்சாயத்தை முடித்து தீர்ப்பைச் சொல்லுங்கள் நாட்டாமை !

  121. //அதியமானுடைய பஞ்சாயத்தை முடித்து தீர்ப்பைச் சொல்லுங்கள் நாட்டாமை !//

    தோழர் அறிவுடைநம்பி,

    நாட்டாமை போன்ற பெயர்கள் மிக அநாகரிகமாக இருக்கின்றன. அதியமான் ஒரு தனிநபர், அவருக்கு முதலாளித்துவம் குறித்து பல மயக்கங்கள் இருக்கின்றன. சில நடிப்புகளும் உள்ளன என்று சந்தேகிக்கிறேன். நாம் அனைவரும் சேர்ந்துதான் அதியமானை முகாந்திரமாக வைத்து இந்த மயக்கத்தை தெளிவிக்க வேண்டும். எனது தலை மீது ஏற்றுவது என்பதும் தனிநபராக என்னை முன்னுக்கு தள்ளுவது என்பதும் ஏற்றுக் கொள்ள இயலாதது.

    அவரது வாதத்தில் சில விசயங்களை கவனியுங்கள்:
    #1) LPG நல்லது செய்துள்ளது என்கிறார். ஆதாரம் தரவில்லை.
    #2) நாம் ஆதாரமாக தந்துள்ள அனைத்திற்கும் 1990க்கு முந்தைய இடதுசாரிக் கொள்கை காரணம் என்று மோசடியாக பேசுகிறார்.
    #3) LPGயும் தேசியப் பொருளாதாரமும் ஒன்றுக்கொன்று நட்பானவை என்கிறார்(அதாவது, ஏகாதிபத்திய மூலதனமும், தேசிய முதலாளியும் நெருங்கிய நண்பர்கள் என்கிறார்)
    #4) ப்ரி டிரேட் என்பதை மிக மோசடியாக சித்தரிக்கிறார்.
    #5) LPG மட்டும் இல்லையென்றால் என்று பீதியூட்டி நம்மை மிரட்ட எத்தனிக்கும் வடிவேலு பாணி லுலுவாய்க்கி வேலை செய்கிறார்.
    #6) விவசாயத்தின் சீரழிவு, அதனால் உருவாகும் பெருமளவிலான வேலையிழப்பு, இதை உறுதிப்படுத்தும் உணவு நுகர்வு குறித்த புள்ளிவிவரம் இவற்றை மறுத்து, சிறு பட்டறைகளின் மூலமான பொருளாதாரத்தை நம்பி மக்கள் இருப்பதாக காட்டுவதன் மூலம் ஈடு கட்ட நினைக்கிறார். இவற்றுக்கு எதுவும் ஆதாரம் காட்டவில்லை இவர்.
    #7) திருப்பூர் அல்லது அதிகபட்சம் தமிழகத்தைத் தாண்டி இவரது எந்த நடைமுறை அனுபவம் சார்ந்த உதாரணங்கள் பொருந்தாது என்பதை நாம் சுட்டிக்காட்டியுள்ளதை கள்ளத்தனமாக பைபாஸ் செய்கிறார்.
    #8) செலக்டிவான இவரது மனிதாபிமானம் குறித்தும் மழுப்பல்தான்.
    #9) இவையெல்லாவற்றிக்கும் பிறகு சோசலிசம், கம்யூனிசம், புதியஜனநாயகம் போன்றவை குறித்து பொத்தாம் பொதுவாகவே புரிந்து வைத்துள்ளார். அல்லது அவ்வாறு புரிந்து கொண்டது போல காட்டிக் கொள்கிறார்.

    இவற்றை இதுவரை செய்துள்ள விவாதங்கள் பகுதியளவில்தான் கையாண்டுள்ளன.

    தோழர்களே,

    இனி அதியமானுடன் பிரதானமாக விவாதிக்கப் போவது நாம்தான் நானல்ல.

    தோழமையுடன்,
    அசுரன்

  122. Kaattaan Asuran,

    you have very less exposure to real life and India than I do and yet talk like a fool and a person who has a Pan India or Pan universe view. Crazy. try this outside this Vinavu and your thozarhal. the world and net worild is a very big place and u are but a kinarru thavalai.

    ok

    what do you mean i have not given any proof for LPG;s effects ? Amartay Sen had clealy stated that in that Outlook interview. and the GoI budget link proves that. and the closely reasoned UCLA report clearly brings out the fallacies in NSS survey and compares it with the other survey which finally proves the postive effect of LPG on poverty alleviation. You are pretending not to read it, etc simply due to escapism and arrogance. My economics professor with whom i argue regularly over mails, thanked me for sending him that excellent link from UCLA. he knows his subject and is certainly not a vain fool like you and your mates who refuse to look at reality. and the there are millions of reports about the positve effects of LPG. Suppose if as you assert that LPG had made things worse, then there would be a great hue and cry from all over India to reverse it. and the most important aspect of LPG is allowing FDI and FII into Indian markets which filled our RBI with nearly 400 billion USD strenghtening our rupee and making us kick out IMF for good. you had so far not argued about my important post about this aspect. real employment has grown tremendously and but for that there would be chaos with this 110 crore population. and due to lack of LPG in agri it is still in doldrums and hence net agri output has not kept in pace with the population explosion. that is the simple explanation for the per capita grain and food consumption going down. even this data is disputed from that earlier link i had given from FAO.

    finally, you are the one who refuses to answer my most basic points which i had provided with ample proof. and you talked about Amartya Sen. yet, you dodge his views on LPG and its necessity for India as he had clearly stated in his outlook interview, link i hd given. and inflation rates and 1 lac crore debt waiver for businessmen : u had not cared to prove that with RBI or any other data so far. hence you are the one who is not proving this and you can got to hell with your :,,,,,,,,,,,,,,,,,”

  123. Asuran,

    i had given this link earlier and you said what is big in this, and i let off since you care not to read thru fully : http://www.fao.org/fileadmin/templates/ess/documents/food_security_statistics/monitoring_progress_by_country_2003-2005/India_e.pdf

    and this says :

    Selected statistics 1990-92 1995-97 2003-05
    1. Population (million) 878.9 972.9 1117.0
    2. Food consumption (kcal/person/day) 2320 2380 2360
    3. Number of undernourished (million) – WFS indicator 206.6 199.9 230.5
    4. Prevalence of undernourishment (%) – MDG indicator
    India 24 21 21
    South Asia 25 22 21
    Asia and the Pacific 20 17 16

    • 2. Food consumption (kcal/person/day) 2320 2380 2360

      இங்கே கலோரி/பேர்ஸன்/டே என்று கொடுக்கப்பட்டுள்ளதே இதன் அர்த்தம் என்னவென்று தெரியுமா அதியமான்?

      இந்த வகைப்பட்ட புள்ளிவிவரங்கள் குழப்புகின்ற இடமே இதுதான். இவற்றின் நமபகத்தன்மை கேள்விக்குள்ளாகுவதே இங்குதான்.

      ஏனேனில் இவை விலைவாயி உயர்வு, மக்களின் வாங்கும் சக்தி உட்பட பல்வேறு குழப்பமான விசயங்களின் மீது எழுப்பட்ட குறைபாடான கணக்கீடு.

      இதே இடத்தில் RBIயின் புள்ளிவரத்தை பாருங்கள் மிக எளிமையாக நேரடியாக மொத்த தானிய அளவை மக்கள்தொகையால் வகுத்து வந்த அளவை முன் வைக்கிறது. இது எனக்கு சரியானதாகவே படுகிறது. இது நேரடி புள்ளிவிவரம். எந்த வொரு கணக்கீட்டு அடிப்படையிலான இண்டர்பிரடேசன் அல்ல.

      //According to the Economic
      Survey 2007-08, the per capita availability of cereals and
      pulses declined during this period. The consumption of
      cereals declined from a peak of 468 grams per capita per
      day in 1990-91 to 412 grams per capita per day in 2005-06,
      while that of pulses declined from 42 grams per capita per
      day (72 grams in 1956-57) to 33 grams per capita per day
      during the same period. Furthermore, access to food for a
      large section of the population is hindered due to chronic
      poverty, unemployment and lack of purchasing power.//

  124. Kaataan and lier Asuran,

    you had read thru this UN report earlier which clearly proves that undernoushiment as a percentage of population fell from 24 % in 1990-92 (for a population of 87.8 crore) to 21 % (for a population of 111 crore) ; and the food cnsumption per capita has actually INCREASED as per this data. i had given this lin earlier instead of cpoying it like you do here. so you call me a lier. you are not only a lier but a vain fool who cannot see beong your nose. you call me a person in illusion. not kaattan, you are guy who is in deep illusion of a 19 century theory which is nowdefucnt and discredited for good all over the world. and your interpretations of current events and economics is crazy, illogical and foolish, to say the least. try showing this link to anyone outside this vinavu website for starters. you are too young, immatrue and brash to know reality. what is worse you are vain and arrogant and call anyone names when they disagree with you. and you are a coward who hides behind your asruan nickname and never ever dare to call these names with your real identity or in person. have you got the guts to come to a blogger meet in chennai are tyy your name calling there in perso. i know a shit like you are certainly incabable of this elemetary point. ok. so there.

    • அதியமான் ஒரு ஆளுமைப் பார்வை !

      ஒரு ஐ.டி துறை ஊழியரின் ஒராண்டு வருமானத்தில் முதலீடு செய்து பிளாஸ்டிக் தொழில் செய்யும் தொழிலதிபர் நண்பர் அதியமான் முதலாளித்துவத்தின் மீது இவ்வ்வளவு தீவிர பக்தராக இருப்பதன் காரணமென்ன? எப்போதும் அவர் வினவிலேயே குடியிருப்பதைப் பார்த்தால் தொழில் ஒழுங்காக நடக்கவில்லையோ என்ற கவலையும் எமக்குண்டு. அதியமான் ஒரு சிறு முதலாளி. சிறு முதலாளிகள்தான் பெருமுதலாளிகளைக் காட்டிலும் சொத்துடைமையின் காதலை தீவிரமாக வைத்திருப்பார்கள். சோசலிச சமூகத்தில் கூட முதலாளித்துவத்தின் ஊற்றுக்கண் இவர்கள்தான் என்கிறார் லெனின். தனது கண்பார்வைக்குள் முதலீடு, தொழில் எல்லாம் நடப்பதால் இலாபத்தின் மீதும், எதிர்கால பெரிய முதலாளி எனும் கனவின் மீதும் இவர்கள் வெறியாய் இருப்பார்கள். தொழில்தான் இவர்களது முதல் மனைவி என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அதனால்தான் அதியமான் எப்போதும் முதலாளித்துவத்தின் பக்தராக தன்னந்தனியராக வினவில் போராடுகிறார்.

      ஆனாலும் என்ன செய்ய? மேற்கில் அமெரிக்காவில் வெடித்த பொருளாதாரம் எழுந்திருக்க முடியாமல் அரசே முதலாளிகளைக்காப்பாற்ற வேண்டுமென்ற ‘சோசலிச’ கோரிக்கையை முதலாளிகள் வைக்கின்ற காலத்தில், பல இலட்சக்கணக்கில் வேலையிழந்த, வீடிழந்த மக்கள் முதலாளித்துவம் ஒழிக எனும் காலத்தில், மார்க்சின் மூலதனம் ஐரோப்பாவில் விற்பனையில் சக்கை போடும் நேரத்தில், பெயில்அவுட், சோசலிசம் இரண்டும்தான் கூகிளில் அதிகம் தேடப்படும் வார்த்தைகள் என்ற நேரத்தில் அய்யோ அதியமான் ஏதோ லைசன்சு ராஜ், என ஹதர் காலத்தில் வாழ்கிறார். எதற்கெடுத்தாலும் லிங்க் கொடுத்தே சாகப்போகும் முதலாளித்துவத்தை வாழவைக்கலாம் எனப் பகல் கனவை கணினியில் காண்கிறார், எழுதுகிறார்.

      முதலாளித்துவம் அமெரிக்காவில், ஐரோப்பாவில் அழிந்து வருவது இருக்கட்டும். அதியமானின் கதி என்ன? இவரைப் போன்ற சிறு முதலாளிகள் தயவு தாட்சண்யமின்றி பெரு முதலாளிகளாகல் அழிக்கப்பட்டு வருகிறார்கள். சென்னையில் கிண்டியிலும், அம்பத்தூரிலும் மூடப்பட்ட தொழிற்சாலைகள் ஆயிரக்கணக்கில் இருக்கும். உலகமயத்தின் தயவில் விரைவிலோ அல்லது ஒரிரு வருடத்திலோ அதியமானும் முதலாளி எனும் அந்தஸ்தை இழந்து ஏதேனும் வேலைக்குப் போகவேண்டுமென்ற தொழிலாளிநிலைக்கு வரப்போகிறார். அப்போது இப்போது உரைக்காத தோழர் அசுரனது அறிவுரைகள் உரைக்க்கஃகூடும். அது வரை காத்திருக்காலாம். விவாதிக்கலாம். மற்றபடி அம்பானி மாதிரியெல்லாம் ஆகலாம் என்று அதியமான் கனவு காணலாம். ஆனால் நடப்பில் அப்படி நடக்கப் போவதில்லை. தனியார் மயம், தாராளமயம், உலகமய காலத்தில்தான் இந்தியாவில் பல்லாயிரம் முதலாளிகள் சிறு முதலாளிகள், தேசிய முதலாளிகள் அழிக்கப்பட்டிருக்கிறார்கள். பெப்சி கோக் வந்த உடனேயே எத்தனை குளிர்பான முதலாளிகள் அழிந்திருக்கிறார்கள்? பார்லே நிறுவனம் கூட 200 கோடிக்கு தனது சாம்ராஜ்ஜியத்தை கோக்கிடம் பறிகொடுத்த்து.

      எனவே எந்தக் காலத்திலும் அதியமான் பெரு முதலாளிமட்டுமல்ல சிறு முதலாளியாக்கஃகூட நீடிக்க முடியாது. வேண்டுமானால் முதலாளித்துவ பொருளாதார பத்திரிகைகளில் அவர் கட்டுரை எழுதும் பணிக்கு செல்ல்லாம். ஆனால் அங்கேயும் லிங்கு மட்டும் கொடுத்து எழுதினால் ஒத்துக்கொள்ளமாட்டார்கள். முதலாளித்துவத்தின் நெருக்கடியையை புதிது புதிதான வாக்கியங்களில் எழுதி நம்பிக்கையூட்டும் கலையை கற்க வேண்டும். அதை வேண்டுமானால் நண்பர் அதியமானுக்கு பீஸ் வாங்கிக்கொண்டு டியூஷன் எடுக்க வினவு தயாராக இருக்கிறது. எமது கொள்கையின் படி சிறு முதலாளிகள் அழிவதை அரசியல் ரீதியாக எதிர்த்துப் போராடுகிறோம். அந்த வகையில் அதியமானுக்கு எங்கள் அட்வைஸ் இதைத் தவிர வேறு எதுவும் இல்லை.

      நட்புடன்
      வினவு

  125. After silently observing the debate in this page I want to jump in give my two cents. The fundamental fact is after the 1991 Liberalisation policies the average Indians life has changed for the better a lot. I know from my personal story I went to a underfunded Govt. school in a real small village while my parents struggling with their lower middle class salaries. Because of the growth in the opportunities in the private sector I was able to move in to relatively comfortable position very quickly. And our family and friends are leading a decent life because of the capitalistic policies. They provide equal opportunities for everyone and I took it and proud of it.. Yes there are problem in Capitalism and democracy. But the so called dictatorship of the proletariat is the worst form government in the entire human history and caused millions of deaths. So my point is Govt has a limited role in everybody’s life. It has certain basic function such as Securiyt,Education,Healthcare,Lawenforcement,Infrastructre other than that govt has no business of running or controlling any business. They should strive for Maximum Governance Least Government. Finally people are not starving or rioting in streets in America. In fact it is the opposite is what happening the people are showing up in town hall meeting with their elected representatives and shouting against socialism. Here is one video

    • சொர்க்கபுரி அமெரிக்காவில் வீடற்றோர் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியுள்ளது. அமெரிக்க நடுத்தர வர்க்கத்தினரையே வீட்டை விட்டு துரத்தியுள்ளது. அமெரிக்க பெயில்-அவுட் என்ற பெயரில் சூதாடிகளுக்கு சுமார் 4 கோடி கோடி ரூபாய்க்கு(பதினாலு சைபர்கள் – யம்மாடியோவ் – 8டிரில்லியன்$) மேல் மக்கள் வரிப்பணத்தில் இருந்து வாரி வழங்கியுள்ளனர். நாள்தோறும் வேலை இழப்புகள் அதிகரித்து வருகின்றது. வீடற்ற மக்கள் எண்ணிக்கை கூடி வருகிறது. டென்டு கொட்டகைகளிலுல்ம், கார் வீடுகளிலும், பிளாட்பாரங்களிலும் காலம் தள்ளுகின்றனர்.

      Which proletariat dictatorship drove this american people to suffer homeless and jobless. Please explain?

      http://www.homelessworldcup.org/content/homelessness-statistics
      http://www.sfgate.com/cgi-bin/article.cgi?f=/c/a/2008/11/26/MNVN14C8QR.DTL (Government bailout hits $8.5 trillion)

      • Ok dude your numbers are disputable. If you read the link correctly it says 3.5 million people “experience” homelessness. That means at one point in time in the year they spent a night without a home that doesn’t mean they are chronically homeless. I think the real number would be much less than that. Even If I take that number 3.5 million it works about to 1% of the population of the USA which i s (305 Million)that means 99% of the population has a decent houses. It is still much better than your Utopian North Korea where 80% of the people live in extreme poverty.Again there may be people who live in a tent or a car but the numbers are less than 1/10th of 1 %. So have some perspective. I do see that unemployment is nearing 10% but that is also easing up gradually. On the bailout there may be some merit in your argument against bailing out big banks because that is not capitalism. They should have let the banks fail and markets work their way through that should have been the correct thing.
        But that said America is not 100% capitalistic country they have social security for that provides retirement income and Medicare and Medicaid that provides insurance coverage for all Americans over 65. These are some form socialism not in tune with Capitalism. But I am Ok with that because as a human society we need to provide the necessary security, basic food,health care basic shelter for the people who can’t take care of themselves. All the rest of things should be left to free market.. What your suggesting is dictatorship that stifles individual freedom and liberty that I can never agree to. Oh by the way the homeless here don’t wander off in streets here they will be accomodated in city shelters with a decent bed and meal which is far better than any average person gets in North Korea or Cuba. They won’t be killed or exiled to sibera like they did in USSR or China. Another thing I have so many Russian and former USSR people who work with me they all hate communism and they told me horror stories about how the political prisoners were treated and how they never seen many of the food items before they came here. It was really gut wrenching to hear those stories.
        Cheers
        Hurray for Capitalism

      • பெயில் அவுட் பணம் பெரு முதலாளிகளின், பெரிய நிதி நிறுவனங்களுக்கும், பெரிய வங்கிகளுக்கும் தான் கொடுக்கப்பட்டது என ஒப்பு கொள்கிறீர்கள். ஆனால் இந்த வர்த்தக சூதாடிகளால் பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட ஏழை மற்றும் நடுத்தரவர்க்கத்தினருக்கு உதவவில்லை. மேலும் வேலையின்மையும் 10% தாண்டிவிட்டது. பொருளாதார நெருக்கடிகளில் பாதிக்கப்படுவது கீழ்த்தட்டு மக்களே. இதில் இருந்து தெரியவில்லையா அரசு யாருக்காக இயங்குகிறது. பெரிய முதலாளிகளுக்கும், அவர்களின் நிறுவனங்களுக்கும் தானே.

        People of America are shouting slogans like “Down down capitalism”. But you are saying “Hurray for Capitalism”. You can be proud to be a capitalist in a Capitalist world. But proletariats have nothing to lose than their chains and have a world to win”

  126. http://www.tehelka.com/story_main42.asp?filename=Bu050909the_great.asp
    தெஹல்கா கட்டுரை
    – இந்திய முதலாளிகளின் மொள்ளமாறித்தனம் குறித்து

    //The company in Kolkata, which had stashed more than Rs 15 crore in cash in its office, was among the unlucky 11 percent of an estimated 4,900 Indian companies listed on the Bombay Stock Exchange (3,000 companies actually trade actively while the rest are either defunct or close to it) which should pay taxes but owe the taxman lakhs in dues. Last fortnight, Minister of State for Finance SS Palanimanickam mentioned a few names in the Rajya Sabha — though he claimed he had a list of 100 companies that owe the exchequer a staggering Rs 1.41 lakh crore outstanding. That, incidentally, is more than three times the amount the Central government spends on its National Rural Employment Guarantee Act (NREGA) programme.//

    வரி கட்டாமல் ஏய்க்கும் கார்பரேட் நிறுவனங்கள் இதுவரை மொத்தமாக 1.41 லட்சம் கோடி பாக்கி வைத்துள்ளனர். 300 ரூபாய் கரண்டு பில் கட்டவில்லையென்றால் நமக்கு பியூஸ் பிடுங்கிவிடும் அரசு இவர்களுக்கு சலுகை மேல் சலுகைகளை அறிவித்துக் கொண்டிருக்கிறது. இதுதான் பொய்தியமான் முன்னிறுத்தும் இடதுசாரிக் கொள்கை. இதுதான் லைசன்ஸு ராஜ்

    //x). And there is the peculiar case of Kolkatabased Kashinath Tapuriah, named by the Centre as an alleged co-conspirator in a severely contentious case involving the stashing away of nearly Rs 1.2 lakh crore in overseas banks. Tapuriah is the brother of the late Priyamvada Birla, who inherited her husband’s (MP Birla) group of industries.//

    பிர்லா என்னும் உத்தம(இந்திய சுதந்திர போராட்டத்தின் கோடாலி காம்பு இந்த குரூப் இவர்களது முகமூடி இந்தியாவின் முதல் NGOவான காந்தி) கும்பலில் ஒருவரான பிரியம்வதா பிர்லா 1.2 லட்சம் கோடிகளை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள தபுரியாவின் சகோதரர். பெயரில் கம்யூனிசமும், புத்தகத்தில் சோசலிசம் இருந்தாலே அதனை சோசலிச திட்டம் என்று சுட்டும் அதியமான் சகோதர ரத்தம் செய்யும் மோசடிக்கும் இது போலவே தொடர்பு படுத்தி பார்க்க பழகிக் கொள்ள வேண்டும்.

    //When it comes to paying tax, the rules are different for taxpayers and corporations. Tapas Chakraborty, partner, Chakraborty & Nath, one of India’s top accounting firms, has researched the subject of taxes over a very long period. He says that there are four major methods of tax evasion practised by companies across the country. “First, it’s common to show inflated expenditures. Second, companies routinely reduce collection figures. Third, companies often reduce stock valuation and fourth, the trend is to make a capital expenditure, especially in real estate, and show it in accounts as repairs (which are not taxed)” explains Chakraborty. Most firms, if not all, try to win their tax cases by approaching adjudicating authorities such as the Income Tax Appellate Tribunal and the Settlement Commission.//

    வரி ஏய்பதற்கும், நிதி அறிக்கை மோசடிகளுக்கும் சட்ட ரீதியாகவே முதலாளித்துவ பெரு நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கிறது என்பதை லெனின் தனது ‘ஏகாதிபத்தியம் – முதலாளித்துவத்தின் உச்சகட்டம்’ புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பார். அது இதோ மேற்சொன்னதைத்தான்.

    //That the government is worried is understandable. It wants the tax net to double to cover more than 45 million homes. It also wants more companies — listed, unlisted, functioning and nonfunctioning — to adopt a much more transparent mode of functioning, so as to ease the pressure on the Income Tax department. New Delhi is also worried about large investments that are untaxed because they are routed through Mauritius to take advantage of the controversial Indo-Mauritius Double Taxation Avoidance Agreement. Between 2006-07 and 2008-09, foreign direct investment from Mauritius was estimated at Rs 1,24,141 crore. Many companies, it is alleged, were routing their investments in this manner to avoid paying taxes.//

    அதியமானின் ப்ரி டிரேடின் லட்சனம் மேலே உள்ளதுதான். வரி ஏய்ப்பு செய்வதற்காக மொரிசீயஸ் வழியே பணத்தை இங்கே கொண்டு வந்து கொட்டுகிறார்கள் அன்னிய மூலதனமாக. அதுவும் பெரும்பாலும் சூதாட்டத்திற்கு என்பது தனிக்கதை. இது போல ஒரு சிறு முதலாளி செய்ய இயலாது. அவன் தான் விற்கின்ற ஒரு சின்ன மாத்திரை குப்பிக்கூட கணக்கு வைத்து வாட் வரி கட்ட வேண்டும்.

    இதில் சுவிஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பல லட்சம் கோடிகள் வேறு உள்ளன.

    இவையனைத்திற்கும் அதியமான் பாணியில் சிந்தித்தால் நமக்கு தெரிய வருகிற காரணம்… 1990க்கு முன்பு கடைபிடிக்கப்பட்ட இடதுசாரிக் கொள்கைகள்…

    இதச் சொன்னா என்ன கேனைன்னு சொல்றாய்ங்க என்று அதியமான் வடிவேலு பாணியில் அங்கலாய்ப்பதில் அர்த்தம் ஒன்றும் இல்லை.

    அசுரன்

  127. தோழர் வினவு,

    எந்த உலகத்தில் இருக்கிறீர்கள் !! இந்தியாவில் சிறுதொழில் துறை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்க்கு நன்றாக வளர்ந்து கொண்டிருக்கிறது. புள்ளிவிவர சுட்டிகள் வேண்டுமா ? அம்பத்தூர் மற்றும் கிண்டி எஸ்டேடில் பல ஆண்டுகளுக்கு முன் மிக குறைந்த விலையில் நிலங்களை வாங்கிய சிறிதொழில் முனைவோர்கள் இன்று ஜாக்பாட் அடித்தா மாதுரி, நில விலை, ஜனத்தொகை பெருக்த்தாலும், பண வீக்கத்தாலும் பல ஆயிரம் மடங்கு விலை உயர்ந்துவிட்டதால், “ந்ல்ல விலைக்கு” விற்றுவிட்டு, தொலைதூரத்தில் பெரிய அளவில் நிலம் வாங்கி மாறி செல்கிறார்கள். எம் தொழிலும் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளது. உமது கவலைக்கு எமது நன்றிகள். சில காலம் முன்புதான்
    வையர்லஸ் பிராட்பேன்ட் கொண்ட மடிக்கணனி வாங்கினேன். அதனால் நேரம் கிடைக்கும் போது இணையத்தில் பல தளங்களில் “குடியிருக்கிறேன்” !! மேலும் எமது நிறுவனத்தில் என் வேலை அவ்வப்போதுதான். “ஆரியக் கூத்தாடினாலும் காசு காரியத்தில் கண் வையடா தாண்டவ்க்கோனே..” என்ற பாடலுற்கு ஏற்ப, சொந்த‌ வேலையை மறந்து இங்கு குடியிருக்கவில்லை !!

    பெப்ஸி, கோக் வந்து இந்திய கோல கம்பெனிகள் “அழிந்தது” மட்டும்தான் உமக்கு தெரியும் போல. பார்லே டிரிங்க்ஸ் அதிபர் கொழுத்த விலைக்கு தன் நிறுவனத்தை விற்றார். அழியவில்லை. ஹுன்டாய் மற்றும் ஃபோர்ட் நிறுவனங்கள் வந்த பின், சென்னையை சுற்றி பல ஆயிரம் துணை மற்றும் இணை நிறுவனங்கள் உருவாகியுள்ளன. சப்பளையர்ஸ், சப்பளயர்ஸ்களுக்கு சப்பளையர்ஸ், மற்றும் இணை சேவை நிறுவனங்கள் ;இப்படி கொழிக்கின்றனர். 25 ஆண்டுககுக்கு முன் இருந்த சென்னை போல இன்று இல்லை. இந்தியாவில் பல பகுதிகளிலும் இது போன்றே.

    உங்களைப் போன்றவர்கள் தாம் இன்னும் மார்க்ஸ் சென்னதை வேதவாக்காக இன்றும் நினைத்து கொண்டு,
    மாய உலகில் இருக்கின்றனர். சிறுதொழில்களை பற்றி கவலைப்பட வேண்டும். உண்மையில் நீங்க கருதுவதைப் போல அவை பெரு நிறுவனங்களால் அழியும் நிலை இன்று இருந்திருந்தால், சிறுதொழில் முனைவோர் சங்கம் பலத்த எதிர்ப்பு காட்டியிருக்கும். அரசியல் முதலைகளும் அதை பெரிதுபடுத்தியிருப்பார்கள். உமது அறியாமையே இங்கு தெரிகிறது.

    நான் அளித்து மிக முக்கிய ஆதாரங்களை பற்றி பேச மறுக்கும் அசுரனிடம் இனி பேசி என்ன ஆகப்போகிறது. பல காலமாக அவர் ரொம்ப‌ லொள்ளு பேசிக்கொண்டிறுந்தார். அவருக்கு “நல்லா” ஆப்பு வைக்க வேண்டும் என்று பல காலமாக நினைத்துகொண்டிருந்தேன். அதை செயல்படுத்த களம் அமைத்து கொடுத்த உமக்கு எம்
    நன்றிகள். இனி இந்த விவாததை ஜென்மத்திற்க்கு மறக்க மாட்டர். :))))

    • ஒரேயொரு மொக்கையான ஆதாரத்தை வைத்துவிட்டு அதை முக்கிய ஆதாரமென்று சொல்வதற்கும் ஒரு மன வலிமை வேண்டும்..

      இப்படியாப்பட்ட அந்த ஆதாரத்தை வைக்க எவ்வளவு நேரம் ‘முக்கி’னீர்கள் அதியமான்?

      உங்களது ‘முக்கி’ய ஆதாரம் கண்டு நாங்கள் மிகவும் பயந்து போய் கிடக்கிறோம்.. மேலும் பீதியூட்டாதீர்கள்.

      அதியமானிடமிருந்து இன்னும் என்னவிதமான ‘முக்கி’ய ஆதாரம் வர இருக்கிறது என்று பயத்துடன் பதுங்கிக் கிடக்கும்,

      அவரது அன்பு,
      அசுரன்

  128. //நான் அளித்து மிக முக்கிய ஆதாரங்களை பற்றி பேச மறுக்கும் அசுரனிடம் இனி பேசி என்ன ஆகப்போகிறது.//என்ன தலை ஜகா வாங்கியாச்சா ? அதியமான் சொன்ன ஆர்கனைஸ்டு செக்டாரில் வேலை வாய்ப்பு குறைந்து போய் விட்டது பற்றி நீர் சொன்ன பதில் – அன் ஆர்கனைஸ்டு செக்டாரில் வேலைவாய்ப்பு பெருகி விட்டது. அன் ஆர்கனைஸ்டு செக்டாரில் பணிதிறமையாக நடக்கு என்ற உமது “அதியமான் சிந்தனைகள்”தான். அசுரன் மற்றும் அனைவரும் உமது இந்த “அதியமான் சிந்தனைக்கு” ஆதாரங்களை கொடுப்பீர்கள என்று வினவின் மேல் விழி வைத்துக் காத்து இருக்கிறோம்.

    //இனி இந்த விவாததை ஜென்மத்திற்க்கு மறக்க மாட்டர்.// காதில் வந்த இரத்ததைத் துடையுங்கள், வலையின் வடிவேலு அவர்களே ! BE Cool

  129. //இவரைப் போன்ற சிறு முதலாளிகள் தயவு தாட்சண்யமின்றி பெரு முதலாளிகளாகல் அழிக்கப்பட்டு வருகிறார்கள்…// நூற்றுக்கு நூறு உண்மை. வேதாரண்யத்தில் ஸ்வஸ்திக் புகையிலை தொழிற்சாலை என்று என் உறவினர்கள் ஒரு தொழிற்சாலை வைத்து இருந்தார்கள். முன்பெல்லாம் மாதத்திற்கு ஒரு கோடி ருபாய் வியாபாரம் நடக்குமாம். 10 லாரிகள் சரக்குகளுடன் தினந்தோறும் சென்னைக்கு செல்லும். வேளைக்கு முன்னூறுக்கு குறையாத தொழிலாளர்கள் உணவகத்தில் சாப்பிடுவார்கள். ஆனால் இப்போது எல்லாம் பொய்யாய் பழங்கதையாய் இருக்கிறது.வாரத்திற்கு ஒருமுறை ஒரு சாக்கு பை மட்டுமே ரவிபாலா பஸ்சில் சென்னை போகிறது. 1000 பேருக்கு மேல் நேரடியாக உழைத்த தொழிலாளர்களில் இப்போது வெறும் 10 பேரோ 15 பேரோ மாதம் 15 நாள் வேலை செய்கிறார்கள். இதனால் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஸ்வஸ்திக் சால்ட், ஸ்வஸ்திக் பாக்கு என ஆரம்பித்தனர். முதலில் வியாபாரம் நன்றாகத்தான் இருந்தது. இப்போது எல்லாம் கடுமையான பிரச்சனைகள். பன்னாட்டு கம்பெனிகள் கெம்பிளாஸ்ட் என்று ஆரம்பிக்கும் வெடியுப்பால் மற்ற சிறு உப்பள முதலாளிகள் நொடித்து போகிறார்கள். இதனால் இவர்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களும் பணியிழக்கிறார்கள். இதுதான் சிறுதொழில் நிதர்சனம்.

  130. அசுரன்,

    யாருடைய ஆதாரங்கள் மொக்கை, யார் மொன்னையன் என்று வாசகர்கள் முடிவு செய்யட்டும். ஓ.கே.
    “முக்குனீர்” போன்ற சொல்லாடல்களை பயன்படுத்த வெக்கமாயில்லை ?

    புள்ளிவிவரங்களின் தரம் மற்றும் ஆழம் பற்றிய கலிஃபோர்னிய பல்கலைகழக ஆய்வு அறிக்கை சுட்டியை பல முறை அளித்தும் அதை பற்றி விவாதிக்காமல் இப்படி பேசுவதுதான் உமது பகுத்தறிவா ? எமது ஆதாரங்களில் அந்த சுட்டியை தான் முக்கியமானதாக வைத்தேன். அதை முழுவதுமாக உள்வாங்கி, விவாதிக்க “ஞானம்” வேண்டும் அப்பனே. அது உம்மிடம் இல்லை போல..

    அமர்தையா சென் அவர்களின் பேட்டி பற்றிய சுட்டியை பற்றியும் கள்ள மவுனம். அவர் தான் “உங்க ஆளாசே” ? ஆனாலும் அவரின் முழு கருத்துக்களை பற்றி பேசாமல், உமக்கு வேண்டிய தகவல்களை “மட்டும்” எடுத்துக்காட்டுவது தான் உமது அறமா ?

    அறிவுடை நம்பி,

    உங்க தோழர்களில் பேச்சை கேட்டிருந்தால், இன்று உமது நிறுவனமான ஈ.டி.எஸ் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் எதுவும் இங்கு கடை விரித்திறுக்க முடியாது. உமக்கு இந்த வேலை கூட கிடைக்காமல் தெருதெருவாக திரிந்திருப்பீர்கள். 80களில் படிப்பை முடித்துவிட்டு எம்மை போன்றவர்கள் 1000 ரூபாய் வேலைக்காக லோல் பட்ட கொடுமையான காலங்கள் பற்றி எல்லாம் உம்மால் புரிந்து கொள்ள முடியாது.

    அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும் இந்தியாவிற்க்குள் என்றும் நுழையக் கூடாது, அன்னிய முதலீடுகள் நம் பங்கு சந்தைகளில், நிதி சந்தைகளில் என்றும் நுழையக்கூடாது என்ற காட்டுக்கூச்சல் 90 வரை பலமாக ஒலித்தது. அனைத்து வகை இடதுசாரிகளும் இதில் ஒரே குரலில் பேசினார்கள். இன்று யாரும் அந்த பழைய கோசங்களை வைப்பதில்லை. ஏன் ? அய்.எம்.எஃப் இன் சதி பற்றி அன்று பலமான கூச்சல். இன்று மூச்சே இல்லை.

    பழையபடி லைசென்ஸ் ராஜியத்தை, 75 சத வரி விகிதங்களை, ஏற்றுமதி / இறக்குமதி கட்டுப்பாடுகளை,
    கொண்டுவருமாறு இன்று யாரும் சொல்வதில்லை. ஏன் ?

    இன்று காண்பது இறுதி நிலை அல்ல. இன்னும் 25 ஆண்டுகளில் பாரும் என்ன நிலையில் இருப்போம் என்று. பல நுறு ஆண்டுகள் காலனியாதிக்கம், நிலப்பிரவுத்துவம், போலி சோசியலிசம் ஆகியவைகளால் சீரழந்த இந்தியா 15 ஆண்டுகளில் இன்றைய நிலை. (30 வருடத்திற்க்கு முன் இன்றைய நிலை இப்படி இருக்க்கும் என்று யாராவது ஆருடம் கூறினால் பைத்தியக்காரன் என்று பெயர் வாங்கியிருப்பார்). இனி வரும் காலங்களில்
    தெரியும்.
    அசுரன், உணவு உட்கொள்ளும் அள‌வுக‌ளின் புள்ளிவிவ‌ர‌ங்க‌ள் ப‌ற்றியே ந‌ம் விவாத‌ம். உடை அடுத்து முக்கிய‌ தேவை. 35 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் ப‌ர‌ம் ஏழைக‌ளின் உடைக‌ளுக்கும், இன்றைய‌ அவ‌ர்க‌ளின் உடை ப‌ற்றியும் ஒப்பிட்டு பாரும். அன்று க‌ந்த‌ல் ஆடை மிக‌ மிக‌ மிக‌ ச‌க‌ஜ‌ம். இன்று இர‌ண்டு நாள் கூலியில் ஒரு ச‌ட்டை அல்ல‌து புட‌வை வாங்கும் அள‌விற்கு விலை குறைவு, ம‌ற்றும் ஏராள‌மான‌ உற்ப‌த்தி.

    • ஈ.டி.எஸ் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் எதுவும் இங்கு கடை விரித்திறுக்க முடியாது.
      இவர்களெல்லாம் கடை விரிக்கவில்லையென்றால் நாங்களெல்லாம் பரதேசிகளாக இருந்திருப்போமா! அதியமான்.
      உலக முதலாளித்துவத்துடன் இந்திய பொருளாதாரம் பிணைக்கப்பட்டபிறகு, ஆனந்த் மகிந்த்ரா என்ற முதலாளி கூறுகிறான்,” ஒரு சுத்திகரிப்பு நடக்கிறது.இந்த நிகழ்சிப்போக்கின் மனித மதிப்பு அதிகமாகத்தான் இருக்கும்”. இவன் கூறுவதற்கும் நீங்கள் கூறுவதற்கும் ந்றைய வித்தியாசங்கள் இருக்கிறதே. அவனும் முதலாளி நீங்களும் முதலாளிதான். எதைநம்புவது அதியமான்.
      ஒரு 50 பேர் சுகபோகமாக இருக்க 50000பேர் சாகலாம் என்பது சரியென்கிறீர்களா?
      ஆய்வு, ஆதாரம் இவைகளையெல்லாம் விடுங்கள் அதியமான். ஒரு 2 மாதம் இந்தியாவை சுற்றி வருவோமா உண்மை நிலையை நாமே கண்டுகொள்ளலாமே.

  131. this a from Amartya Sen’s interview in 1998 for outlook :

    Do you think the problem of Indian liberalisation has been that there’s been no social and public dimension?

    In a sense, yes. However, it’s not a problem of liberalisation but of governance. I disagree with the conventional Left position that Manmohan Singh was wrong to go for economic reforms. He was being visionary. But more radicalism was needed, not just economic reform but also much greater creation of social opportunities.

    But a lot of Left attitudes in India are a hangover from the past. Left politics has suffered from not being adequately critical in the past of the failings of the Soviet Union or China and also for not paying adequate attention to the market transformation in China. I admire the commitment of the Left to social justice and equity, but the Left has to pay greater attention to the contributions of democracy and the market.

    http://www.outlookindia.com/article.aspx?206089

  132. //புள்ளிவிவரங்களின் தரம் மற்றும் ஆழம் பற்றிய கலிஃபோர்னிய பல்கலைகழக ஆய்வு அறிக்கை சுட்டியை பல முறை அளித்தும் அதை பற்றி விவாதிக்காமல் இப்படி பேசுவதுதான் உமது பகுத்தறிவா ?// அசுரனுடைய பதில், இண்டர்பிரடேழன் அற்ற நேரடியான புள்ளிவிவரங்களைத் தரவும். ஆர்பிஐ இன் டேட்டா நேரடியானது. ஆனால் உமது சுட்டிகளிலுள்ள விடயங்கள் நேரடியானவை அல்ல. மோசடியான வறுமைகோடு முதலானவைகளை இது உபயோகப்படுத்துகிறது.

    அசுரன் :

    ஏனேனில் இவை விலைவாயி உயர்வு, மக்களின் வாங்கும் சக்தி உட்பட பல்வேறு குழப்பமான விசயங்களின் மீது எழுப்பட்ட குறைபாடான கணக்கீடு.

    இதே இடத்தில் RBIயின் புள்ளிவரத்தை பாருங்கள் மிக எளிமையாக நேரடியாக மொத்த தானிய அளவை மக்கள்தொகையால் வகுத்து வந்த அளவை முன் வைக்கிறது. இது எனக்கு சரியானதாகவே படுகிறது. இது நேரடி புள்ளிவிவரம். எந்த வொரு கணக்கீட்டு அடிப்படையிலான இண்டர்பிரடேசன் அல்ல.

Leave a Reply to kalagam பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க