privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்முத்துக்குமார் ... மன்னித்து விடு... சந்தர்ப்பவாதிகளிடம் நாங்கள் தோற்றுப் போனோம் !!

முத்துக்குமார் … மன்னித்து விடு… சந்தர்ப்பவாதிகளிடம் நாங்கள் தோற்றுப் போனோம் !!

-

vote-0122009 ஜனவரி 29 அன்று காலை 10.45 – லிருந்து 11 மணிக்குள் இருக்கும். சென்னை சாஸ்திரி பவனுக்கு ஒரு வேலையின் நிமித்தம் சென்றிருந்த என் நண்பர். படபடப்போடு தொலைபேசி மூலம் அந்தத் தகவலைச் சொன்னார். ”இங்கே ஒருவர் ஈழப் பிரச்சினைக்காக தீக்குளித்து விட்டார். அவர் எரிந்தபடியே கீழே விழுகிறார்… எரிந்து கொண்டிருக்கிறார்” என்றார். ஒரு விதமான பரபரப்பு என்னிடம் தொற்றிக் கொண்டது. உணர்வலைகளால் உந்தப்பட்டு எரிந்து கொண்டிருக்கும் ஒரு மனிதன் தமிழக அரசியல் வரலாற்றில் ஆழமான பாதிப்பு ஒன்றை ஏற்படுத்தப் போகிறான் என்றும் நான்  நினைத்தேன்.

என்னிடம் தகவலைச் சொன்ன என் நண்பரிடம் ”அங்கே என்ன இருக்கு?” என்றேன். ”நிறைய பேப்பர்ஸ் வைத்திருக்கிறார் அந்த பேப்பர்களும் அவரோடு எரிகிறது” என்றார். ”நீ உடனே அந்த பேப்பரை எடு”என்று சொல்லி விட்டு நானும் அங்கே சென்றேன்.

அந்த இளைஞர் விழுந்து கிடந்த இடத்தில் கரும்படலம் பரவியிருந்தது. இருபத்தைந்து லிட்டர் தண்ணீர் பிடிக்கக் கூடிய வெள்ளை நிற கேன் ஒன்று அங்கே காலியாகக் கிடந்தது. எரிந்து கிடக்கும் அந்த மனிதர் தன் மேல் ஊற்றுவதற்கான பெட்ரோலை  அந்த வெள்ளை நிற கேனில்தான் எடுத்து வந்திருக்க வேண்டும். போலிசார் அவரோடு சேர்ந்து அந்தக் கேனையும் எடுத்துச் சென்றனர். முதலில் அவர் குப்புற விழுந்து கிடந்ததாக நினைவு. போலீசார் வந்து கூட்டத்தை விலக்கி விட்டு எரிந்து கிடந்த அந்த இளைஞரின் அருகே அமர்ந்து வாக்குமூலம் பெறும் முயற்ச்சியில் ஈடுபட்டிருந்தார்கள். குடும்ப பிரச்சனையா? காதல் தோல்வியா? என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தனர். முழுக்க கருகி கரிக்கட்டையாகிக் கிடந்த அந்த இளைஞனோ ”யோவ் அதான் எரிஞ்சுட்டேன்ல தூக்கிட்டுப் போய்யா” என்று ஈனஸ்வரத்தில் வெறுப்போடு முனகிக் கொண்டிருந்தான். காக்கிச் சட்டைகள் கைபிசைந்து நின்றார்கள். பிறகு முத்துக்கமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வரை அருகிலேயே செய்வதறியாது யோசித்துக் கொண்டிருந்தேன்.

முத்துகுமாரின் கடிதம் – வாசிக்க படத்தின் மேல் சொடுக்கவும்

அப்புறம்தான் அந்தக் கடிதத்தை நான் வாசித்த போது அந்த நேரத்தில் இந்த மரணமும் அவர் எழுதி வைத்துள்ள மரணசாசனமும் எவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் உள்ளது என்பதை புரிந்து கொண்டேன். உடனடியாக அக்கடிதத்தை ஸ்கேன் செய்வதற்காக வெளியில் வந்தேன். சாலையின் சந்திப்பில் இருந்த கடையில் ஸ்கேன் செய்து அக்கடிதத்தின் ஜெராக்ஸ் நகலை ஒரு முக்கியமான ஊடகவியலாளருக்கும் கொடுத்தேன்.  என்னுடன் இருந்த பத்திரிகை நண்பர் ஒருவர் அங்கிருந்த படியே முக்கியமான சில முக்கிய பிரமுகர்களுக்கு அக்கடிதத்தின் முக்கியத்துவம் உள்ள வரிகளை வாசித்துக் காட்டத் துவங்கினார். அவர் வாசித்துக் காட்டிய அந்த பிரமுகர்கள் அனைவருமே ஈழத் தமிழர் போராட்டங்களை வழி நடத்தியவர்கள். ஈழப் போராட்டத்திற்கு தாங்கள் மட்டுமே உண்மையானவர்கள் என்ற தோற்றத்தையும் உருவாக்கியிருந்தார்கள்.

“உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள்.”

”என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்.” என்ற வரிகளை வாசித்துக் காட்டி விட்டு, அத்தோடு நிற்காமல் எனக்குத் தெரிந்த எல்லா நண்பர்களுக்கும் தொலைபேசி மூலம் கடிதத்தை வாசித்துக் காட்டி “இதை விடக் கூடாது, ஈழத் தமிழ் மக்கள் மீதான போரை முன்னெடுக்கும் இந்தியாவுக்கு தமிழ் மக்களின் எதிர்ப்பைக் காட்டவும், போர் நிறுத்தம் கோரவும் வந்து வாய்த்திருக்கும் அரிய தருணம் இது. ஒரு மாபெரும் எழுச்சியையும் மக்கள் திரள் போராட்டங்களையும் தூண்டி விடும் சாத்தியங்களை இக்கடிதம் கொண்டிருக்கிறது. ஆகவே நாம் போராட்டங்களைத் தூண்டி விட வேண்டும்” என்று சொன்னேன்.

நான் தொலைபேசியில் வாசிப்பதைக் கேட்ட சில நண்பர்கள் உணர்வெழுச்சியால் உந்தப்பட்டு அப்படியே அலுவலக வேலைகளைப் போட்டு விட்டு ஒன்று கூடினோம். கடிதத்தை முதலில் டைப் செய்து சில இணையதளங்களில் சில மணிநேரங்களில் வெளியிட முடிவு செய்தோம்.

முத்துக்குமாரின் உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். அங்கே நெடுமாறன், வைகோ, வெள்ளையன் ஆகியோர் முத்துக்குமாரின் உடலருகே இருந்தனர். அங்கு எடுத்துச் செல்லப்பட்ட முக்கால் மணிநேரத்திற்குள் முத்துக்குமார் இறந்து போனார். பொதுவாக அறுபது சத தீக்காயம் அடைகிறவர்கள் கூட இரண்டு நாள் உயிரோடு இருந்துதான் மரணிப்பார்கள். ஆனால் முத்துக்குமார் எரிந்து ஒரு மணிநேரம் கூட உயிரோடு இருக்க வில்லை. ஏனென்றால் அவரது உடலில் எரிந்த தீ நின்று எரிந்த தீ. அது உடலை மட்டுமல்ல இதயத்தை கடுமையாக பாதித்தபடியால் உடனடியாக உயிர் போகும்படியாயிற்று.

சாவது என்று முடிவெடுத்து அதை ஒரு உண்மையான வீரனாக செய்து முடித்தவன் முத்துக்குமார். பொதுவாக தற்கொலையை அமல்படுத்துவது கண நேர முடிவு என்பார்கள். அந்தக் கணத்தில் சிந்தனை தடுமாற்றம் ஏற்பட்டால் அவர் அந்த முடிவைக் கைவிட நேரும். ஆனால் முத்துக்குமார் செத்தே தீருவது என்ற முடிவோடும், யாரும் தன்னைக் காப்பாற்றி விடக் கூடாது என்பதிலும் உறுதியாக நின்றான். தான் பலியாகி தமிழகத்தில் ஈழ மக்களுக்கான ஒரு எழுச்சியை உருவாக்குவது; தனது மரணத்திற்கான சாசன வாக்குமூலம் ஒன்றை எழுதுவது என்பதும்தான் முத்துக்குமாரின் இறுதித் திட்டம்.

உண்மையில் முத்துக்குமாரின் உயிர்த்தியாகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி எது என்று யாராவது கேட்டால் மரணசாசனத்தை விட அவர் செத்துப் போவதென்று முடிவெடுத்த அந்த தருணம். ஆம். அந்தக் காலத்தில் இங்குள்ள ஆட்சியாளர்கள் ஈழ மக்களுக்காக ஏதாவது செய்து விட மாட்டார்களா? என்கிற ஏக்கம் எல்லோருக்கும் இருந்தது. எங்கே ஈழம் என்கிற இழவு வீடு நம் சந்தோசத்தை பிடுங்கி பதவியைப் பறித்து விடுமோ என்று பதறினார் கருணாநிதி. அந்த பயம்தான் கருணாநிதியை அசிங்கமான பல நாடகங்களை அரங்கேற்றத் தூண்டியது. கருணாநிதி மட்டுமல்ல ராமதாஸ், வைகோ, திருமாவளவன் என எல்லோருமே கருணாநிதிக்கு இணையான நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள்.

ஊடகங்களுக்கோ, ஆளும் வர்க்கங்களுக்கோ, தமிழார்வலர்களுக்கோ, கருணாநிதிக்கோ, ஜெயலலிதாவுக்கோ, நடிகை, நடிகர்களுகோ யாருக்குமே ஈழ மக்களின் கண்ணீர் பற்றிய அக்கறை இல்லை. போரால் கொல்லப்பட்ட மக்களின் கொடூரப் படங்கள் முதலில் இணையதளங்களில் மட்டுமே வெளியாகின . ஜெயா, கலைஞர், சன் என எந்தத் தொலைக்காட்சிகளும் போர் குறித்தும் தமிழ் மக்கள் கொல்லபடுவது குறித்தும் ஒரு வார்த்தை கூட வாயே திறக்கவில்லை. ஊடகங்களின் மௌனம், கருணாநிதியின் நாடகம், ஜெயலலிதாவின் பொறுப்பற்ற பேச்சுக்கள் என மக்கள், ஈழம் தொடர்பாக அருவறுப்படைந்திருந்தார்கள்.

இந்த அருவறுப்பு மக்களிடம் இருந்தது என்று சொல்வதை விட தமிழார்வலர்கள், முற்போக்குச் சக்திகள், அறிவுஜீவிகள் மத்தியில் அதிகம் இருந்தது. அப்போது ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திடமும் இருந்தது கழிவிரக்கமும்,கையாலாகாத்தனமும் மட்டுமே. இந்த இரண்டு உண்மைகளையும் புரிந்து கொண்ட முத்துக்குமார் தன் உடலை முதல் முதலாக பலீபிடத்தின் மீது வைத்தான். தானே பலியானான் அதுதான் தீக்குளிப்பின் வரலாற்றுத் தருணம்.

சரி சம்பவத்திற்கு வருவோம். கீழ்பாக்கம் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடலைக் காண அங்கே கொஞ்சம் இளைஞர்கள் கூழுமியிருந்தனர். அங்கே இருந்த ஒரு போலீஸ் அதிகாரியின் மீது இளைஞர்கள் கோபத்தைக் காட்டினார்கள். அங்கே குழுமியிருந்த தலைவர்கள் முத்துக்குமார் தொடர்பாக என்ன முடிவு எடுத்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள நான் எனது பத்திரிகை நண்பரிடம் கேட்டேன். அவர் ஒரு முக்கியமான தலைவரிடம் பேசியதைக் கூறினார். அதன்படி  முத்துக்குமாரின் உடலை கொளத்தூருக்குக் கொண்டு சென்று ஒரு மண்டபத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்க தீர்மானித்திருப்பதை அறிந்தேன்.

இந்த செய்தி எனக்கு ஏமாற்றமாக இருந்தது. என் நண்பர் சில மணி நேரங்களுக்கு முன்பு அந்தத் தலைவரிடம் பேசும் போது ‘‘முத்துக்குமாரின் உடலை ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் முன்னால் வைத்தி நீதி கேட்க வேண்டும்’”’ என்றிருக்கிறார். அவர் ஆமாம் ஆமாம் என்று தலையாட்டிருக்கிறார். இப்போதோ அவர் சொன்ன பதில் எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. என் நண்பர் அவரிடம் உணர்ச்சிவசப்பட்டு ‘‘முத்துக்குமாரின் உடலை சட்டக் கல்லூரி மாணவர்களிடமும், வழக்கறிஞர்களிடமும் ஒப்படைத்து விடுவதுதானே சரி. வேண்டுமென்றால் நீங்கள் பின்னால் இருந்து அவர்களுக்கு வழிகாட்டலாம் இல்லையா?” என்று கேட்டிருக்கிறார். அவர் என் நண்பருக்கு உருப்படியாக எந்தப் பதிலையும் சொல்லவில்லை.

பல பிரமுகர்களிடம் பேசிய போதும் முழுமையான விபரங்களையோ, என்ன செய்யப் போகிறார்கள் என்பதையோ மறுத்து விட்ட்னர். நானும் எனது நண்பரும் கொளத்தூருக்குக் கிளம்பினோம், அங்கே ஒரு பந்தலின் கீழ் முத்துக்குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்தது. சாயங்காலம் 6.45 மணி இருக்கும். அப்போது சுமார் முப்பது பேர் அங்கு குழுமியிருந்தனர்.

அப்போதே தலைவர்கள் மீதாதன நம்பிக்கை தகர்ந்து விட்டது. நாங்கள் எங்கள் கைகளில் இருந்த பணத்தைப் போட்டு முத்துக்குமாரின் கடிதத்தை நம்மால் முடிந்தவரை மாணவர்களிடமும் வழக்கறிஞர்களிடமும் கொண்டு செல்வோம் என்று இரவோடு இரவாக பிரதி எடுத்தோம். முத்துக்குமாரின் செய்தியை மாணவர்களிடமும்  வழக்கறிஞர்களிடமும் கொண்டு சென்று சம்பவ இடத்திற்கு வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தோம். இது போன்ற எண்ணம் ஏராளமான இளைஞர்களுக்கு இருந்த படியால் அவர்களும் இது போன்ற போராட்டங்களை தூண்டி விடும் வேலைகளில் இறங்கினார்கள். கிளர்ச்சியை நம்பும் ஒருவன் என்ன செய்வானோ அதை நேர்மையாகச் செய்தோம்.

ஆனால் முத்துக்குமாரின் மரணசாசனம் குறித்து திருமாவளவனின், ராமதாஸின், வைகோவின், நெடுமாறனின் ஆதரவாளர்கள் இன்று வரை மௌனம் சாதிக்கிறார்கள்.

அப்பந்தலின் வலது புறமாக உள்வாங்கியிருந்த ஒரு வீட்டினுள் முக்கியஸ்தர்கள் அமர்ந்து ஆலோசனை நடத்தினார்கள்….நடத்தினார்கள்… நடத்திக் கொண்டே இருந்தார்கள். ஆனால் அவர்கள் என்ன பேசினார்கள்? முத்துக்குமாரின் இறுதி நிகழ்வுகள் தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் வழங்கினார்கள், என்பது குறித்த கேள்விகள் அந்த இரவே பலருக்கும் எழுந்தது.

ஆனால் அந்தக் கேள்வியை கேட்கும் துணிச்சலோ, இவர்களுக்கு மாற்றாக முத்துக்குமாரின் விருப்பங்களை நிறைவேற்றும் மாற்று அரசியல் தலைமையோ அங்கு இல்லை. தலைமையற்ற இந்த கையறு நிலைதான் வைகோவையும், நெடுமாறனையும், திருமாவளவனையும் முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தின் அதாரிட்டிகளாக தாங்களே அந்த உரிமையை எடுத்துக் கொள்ள வைத்தது. ஆனால் மாணவர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் அனைவருமே முத்துக்குமார் உடல் வைக்கப்பட்டிருந்த அந்த இடத்தில் இவர்களுக்கு தங்களுடைய கடும் எதிர்ப்புகளைக் காட்டத் தொடங்கினார்கள்.

ஒரு கட்டத்தில் வேக வேகமாக முத்துக்குமாரின் சடலத்தை புதைக்கத் திட்டமிட்டவர்கள், எழுந்து வரும் எதிர்ப்பை சமாளித்து எப்படியாவது சவ அடக்கத்தை நடத்தி முடித்து விடுவது என்று காய் நகர்த்தினார்கள். முத்துக்குமாரின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக இருந்தால் அவரது உடலை அடக்கம் செய்யாமல் ஈழப் போராட்டத்தை மக்களிடம் எடுத்துச் சென்றிருக்க வேண்டும். இதுதான் முத்துக்குமார் சொல்கிற போராட்டத்தை கூர்மையாக்குதல். இரண்டாவது அவர் சுட்டிக் காட்டுகிற சட்டக்கல்லூரி மாணவர்கள். அவர்களிடமும், தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்த வழக்கறிஞர்களிடமும் முத்துக்குமாரின் உடலை ஒப்படைத்திருக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளின் முதிர்ந்த வடிவமாக இன்னொரு கோரிக்கையும் அங்கு முன் வைக்கப்பட்டது. முத்துக்குமாரின் உடலை தமிழகம் முழுக்க ஊர்வலமாகக் கொண்டு சென்று தூத்துக்குடியில் இருக்கிற அவனது சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் அந்தக் கோரிக்கை.  (இவர்களோ முத்துக்குமாரின் அஸ்தியை ஒரு அம்பாஸ்டர் காரில் கொண்டு சென்று கடலில் கரைத்தார்கள். அது யாருக்கும் தெரியாமல் போனது.)

மறு நாள் எப்படியாவது உடலை புதைத்து விட வேண்டும் என்பதுதான் அங்கிருந்த நெடுமாறன், ராமதாஸ், வைகோ, திருமா, ஆகியோரின் முடிவு. முத்துக்குமாரின் விருப்பத்தை மீறி, அங்கு குழுமியிருந்த ஏராளமான உணர்வாளர்களின் விருப்பத்தையும் மீறி அவர்கள் அந்த முடிவை எடுத்தார்கள். ஆனால் மாணவர்களும், வழக்கறிஞர்களும் வந்து நிலைமை சிக்கலான பின் அவர்கள் அடக்கத்தை ஒரு நாள் தள்ளிப் போட்டார்கள். தலைவர்கள் அவசரப்படுவதன் நோக்கமென்ன? ஒரு தன்னெழுச்சியான கிளர்ச்சி பிறந்து அது கையை விட்டுப் போய்விட்டால், ஈழத்திற்கான போராளிகள் என்ற வேடம் கலைந்து விடும் என்ற அச்சமே. தேர்தல் வழியில் அதிகார வர்க்க முறையில் இந்திய அரசின் ஒப்புதலோடுதான் ஈழத்தில் தலையிட முடியும் என்ற அடிமைத்தனமாக சிந்தனையும் யதார்த்தமும் அவர்களை இயக்கின.

அதனால்தான் “உண்ணாவிரதம், மனுகொடுப்பது என சம்பிரதாய போராட்டங்களை தூக்கி எரிந்து களம் காணுங்கள்” என்று அறைகூவல் விட்ட முத்துக்குமாரின் விருப்பத்திற்கு மாறாக முத்துக்குமாரின் உடலை உடனே புதைப்பதில் அக்கறை காட்டினார்கள். முத்துக்குமாரின் உடலை வைத்து கிளர்ச்சியை உருவாக்கும் அளவுக்கு மாணவர்களிடம் அரசியலோ, தலைமையோ இல்லாத சூழல். ஆதலால் தலைவர்கள் முத்துக்குமாரின் வீரச்சாவை ஒட்டி இயல்பாக எழும் ஈழ ஆதரவு கொந்தளிப்புகளை மீண்டும் மீண்டும் சடங்காக மாற்றுவதன் மூலம் அந்த சடங்கிற்குள் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்த கருணாநிதிக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தார்கள்.

சந்தர்ப்பவாதிகளிடம் எப்படித் தோற்றோம்?

சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகள் ஒன்று சேர்ந்து ஒரு எதிர்ப்பியக்கத்தை கட்டினால் என்ன நடக்கும் என்பதற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பியக்கம் ஒரு உதாரணம். அப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டே, தனது மகன் அன்புமணியை மத்திய அமைச்சராக வைத்துக் கொண்டே ஈழப் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு எதிராக போராடுவதாக நாடகமாடினார் டாக்டர் இராமதாஸ். அதனால்தான் ”யாரும் யாரையும் திட்டக் கூடாது, துண்டறிக்கை வெளியிடக் கூடாது, கொடும்பாவி கொளுத்தக் கூடாது, வன்முறையில் இறங்கக் கூடாது, பந்த் நடந்தால் அமைதியாக வீட்டில் இருக்க வேண்டும்” என்றெல்லாம்  பேசி ஈழப் போராட்டங்களுக்கு ஆப்பு வைத்தார் ராமதாஸ்.

இப்படி ஈழத் தமிழினத்திற்காக போராட வந்த தைலாபுரத்து நாயகன் கடைசியில் போயஸ் கார்டனில் போய் கூட்டு வைத்தார். அந்தக் கூட்டு காங்கிரஸ், திமுகவின் கூட்டணிக்கு முன்னால் தோல்வியுற்ற பின்பு இப்போது மீண்டும் காங்கிரஸ், திமுக கூட்டணியில் சேர தூது விடுகிறார் இந்த தமிழினப் போராளி.

சாதாரதண போராட்ட வடிவங்களையே தவிர்க்கச் சொல்லும் தமிழினப் போராளிகளின் காலத்தில்தான் முத்துக்குமார் ” உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! ” என்று ஒடுக்கபப்டும் மக்கள் குறித்து சரியாகவே உணர்த்தி விட்டுச் செல்கிறான்.

திருமா அப்போது திமுகவோடும் கருணாநிதியோடும் அனுசரணையோடு இருந்தார். ராமதாஸ் காங்கிரஸ் கூட்டணியில் பதவியை பங்கிட்டிருந்தார். வைகோ ஜெயலலிதா கூட்டணியில் இருந்தார். தா.பாண்டியன் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேரும் முடிவில் இருந்தார். இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்த நெடுமாறனோ ஜெயலலிதா கூட்டணியின் ஆதரவாளராக இருந்தார். திருமா, வைகோ, ராமதாஸ், தா.பாண்டியன், இவர்களுடன் இல.கணேசன் உள்ளிட இந்துத்துவ சக்திகள். இந்த இந்துத்துவ சக்திகளையும் தமிழார்வலர்களையும் இணைக்கும் புள்ளியாய் நெடுமாறன். இதுதான் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை.

இவர்கள்தான் ஈழப் போருக்கு எதிராக தமிழகத்தில் எழுச்சியை ஏற்படுத்தும் பொறுப்பை ஏற்று களம் கண்டவர்கள். புலிகளும் தங்களின் தமிழக ஆதரவாளர்களாக நம்பியது இவர்களைத்தான். ஆனால் முத்துக்குமாரின் மரணசாசனமோ கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட எல்லா ஒட்டுண்ணி துரோகிகளையும் சம தூரத்தில் விலக்கி வைத்து எழுச்சிக்கான புதிய பாதையைக் கோரி நின்றது. ஆனால் உணர்வு கொண்டு எழும் இளைஞர்களுக்கு வழிவிடாமல் முத்துக்குமாரை கொண்டு போய் வெகு வேகமாக புதைத்ததன்  மூலம் இவர்கள் துரோகம் செய்தது முத்துக்குமாருக்கு மட்டுமல்ல ஈழத்தை ஒரு கருவியாகக் கொண்டு தமிழகத்தில் ஏற்பட்டிருக்க வேண்டிய அரசியல் எழுச்சியையும் பாழ் படுத்து தமிழ் மக்களுக்கும் சேர்த்தே இவர்கள் துரோகம் செய்தார்கள். அந்த மரணசானத்தை வைகோவோ, திருமாவளனோ, ராமதாஸோ மேடையில் கடைசி வரை வாசிக்கவே இல்லை.

ஏனென்றால் அதை வாசித்தால் கருணாநிதி மனம் புண்படும் என்று திருமாவளவன் நினைத்தார், சோனியாவின் மனம் புண்படும் கூட்டணிக்கு குடைச்சல் வரும் என்று இராமதாஸ் நினைத்தார், ஜெயலலிதாவின் மனம் புண்படும் என்று வைகோ நினைத்தார், உண்மையிலேயே தமிழகத்தில் கிளர்ச்சி எதுவும் ஏற்பட்டு விடுமோ என நெடுமாறன் நினைத்தார். அத்தனை பேரும் சேர்ந்து முத்துக்குமாரை ஊத்தி மூடினார்கள்.

”உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள்.” என்று முத்துக்குமார் எச்சரித்தது கருணாநிதியை…. ஆமாம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் பலனை திருடி அதை வைத்து பதவிக்கு வந்த சந்தர்ப்பவாதியான கருணா குறித்த எச்சரிக்கைதான் அது. ஆனால் ஈழப் போராட்டத்தில் கருணாநிதியின் துரோகத்தை மட்டுமே பேசிய இவர்கள் முத்துக்குமாருக்குச் செய்த துரோகத்தை நாம் என்ன பெயரிட்டு அழைப்பது? முத்துக்குமார் சொன்ன சுயநலமிகள் என்ற வார்த்தை இவர்களுக்கு எவ்வளவு கச்சிதமாக கடைசியில் பொருந்திப் போயிற்று….

முப்பதாம் தேதி மாலை தூத்துக்குடியில் இருந்து அவரது பாட்டி உள்ளிட்ட சில உறவினர்கள் வந்திருந்தார்கள். அவர்களிடம் போய் நாங்கள் பேசினோம். ஆனால் அவர்களிடம் பேச விடாமல் எங்களை தடுத்தார்கள் சிலர், அவர்கள் நிலத் தரகர்கள் சங்க நிர்வாகிகள். அவர்கள் நாடார் என்கிற சாதியின் அடிப்படையில் முத்துக்குமாரின் உறவினர்களை கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள். கடைசியில் முத்துக்குமாரின் உடலை துருப்புச் சீட்டாக பயன்படுத்த முடியாமல் ஊர்வலமாக கொண்டு சென்று புதைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.  ஒரு பக்கம் கருணாநிதி போலீசின் கொடூரமான அடக்குமுறை, இன்னொரு பக்கம் சந்தர்ப்பவாத ஓட்டுண்ணி அரசியல் தலைவர்கள் என மாணவர்களும் இளைஞர்களும் அவர்களால் தாக்கப்படும் சூழலும் முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் நடந்தது.

ஜனவரி 31&ஆம் தேதி மாலை நான்கு மணிக்கு மேல் முத்துக்குமாரின் ஊர்வலம் கொளத்தூரில் இருந்து புறப்பட்ட போது பெரும் உணர்ச்சி நெருப்பும் மக்கள் வெள்ளமும் அந்த இடத்தை நிறைவித்திருந்தது. சாலையெங்கும் மக்கள் வெள்ளம். அவனது உடலை எடுத்துச் செல்ல ஊர்வலம் புறப்பட்ட போது தன்னெழுச்சியாக ஐம்பதாயிரம் பேர் வரை திரண்டிருந்தார்கள். வீதியெங்கும் மக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள். வட இந்திய மார்வாடிப் பெண்கள் தண்ணீரும் மோரும் கொடுத்தார்கள். பலரும் தங்களின் வீடுகளுக்கு முன்னே வாசலில் நின்றபடி மெழுகுவர்த்தி ஏந்தி முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இவர்கள் எல்லாம் யார் திருமாவின் தொண்டர்களா? அல்லது வைகோவின் ரத்தத்தின் ரத்தங்களா? அல்லது இராமதாஸின் கைப்பிள்ளைகளா? இல்லையே? பொது மக்கள்………… எங்கோ நடக்கும் ஒரு பிரச்சினையைப் பார்த்து பொறுக்க முடியாமல் தன்னை எரித்துக் கொண்ட ஒரு தியாகிக்கு வணக்கமாவது செலுத்துவோம் என்று வீதிக்கு வந்தவர்கள்.

உண்மையில் இவர்கள் உட்பட, நாங்கள் உட்பட அனைவருமே தமிழகத்தில் நாம் எதிர்பாத்த எழுச்சி ஏற்பட்டு விட்டது என்றே நம்பினோம். அது உண்மையும் கூட. எழுச்சிக்கான கருவியைத்தான் நாம் சுமந்து சென்று கொண்டிருக்கிறோம். ஆனால் அது சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட வேண்டிய சடலமல்ல. மாறாக தமிழக மக்களை நோக்கி எடுத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டிய ஆயுதம் அது. ஒரு எழுச்சியை ஏற்படுத்த வல்ல எல்லா சாத்தியங்களோடும்தான் முத்துக்குமார் மரணித்திருக்கிறான். ஆனால் எழுச்சிக்கான மிகச் சிறந்த கருவியாக இருந்த………….. இனி எப்போதும் வரலாற்றில் கிடைக்க வாய்ப்பில்லாத முத்துக்குமாரை இவர்கள் வீணடித்து விட்டார்கள் என்கிற கோபம் எல்லோருக்குமே அந்த இடத்தில் இருந்தது.

கிட்டத்தட்ட ஏழு கிலோ மீட்டர் நீளமான ஊர்வலப்பாதை எங்கிலும் மக்கள் வெள்ளம். இறுதிவரை நாங்கள் சோர்ந்து போகவில்லை. மக்களும் சோர்ந்து போகவில்லை. சுடுகாட்டை ஊர்வலம் நெருங்கிய போது தமிழகத்தின் அனைத்து சட்டக் கல்லூரிகளையும் காலவரையற்று இழுத்து மூடியது கருணாநிதி அரசு. இந்தச் செய்தி மாணவர்களுக்கு எட்டியதும்  சினமடைந்த அவர்கள் முத்துக்குமாரின் உடலோடு சாலையிலேயே அமர்ந்தனர். உடலை திருப்பி கோபாலபுரத்தில் இருக்கும் கருணாநிதியின் வீட்டுக்குக் கொண்டு செல்வோம் என்று ஆக்ரோஷமாக கிளம்பினார்கள். ஆனால் அப்போது மாணவர்களைத் தாக்கி முத்துக்குமாரின் உடலை வேக வேகமாக சுடுகாட்டிற்குக் கொண்டு சென்று புதைத்தவர்கள் யார் தெரியுமா?

“நான் ராஜபட்சேவை நேரில் பார்த்தால் கொல்வேன்” என்று சொல்லி விட்டு பின்னர் கொழும்புவிற்குச் சென்று நேரில் பார்த்து கைகுலுக்கி பொன்னாடை போர்த்தி பரிசும் வாங்கி சிரித்துப்பேசி வந்துவிட்டு… இப்போது மீண்டும் இனப்படுகொலை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார் அல்லவா, அந்த திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள்தான் மாணவர்களைக் கடுமையாக அங்கே தாக்கினார்கள். அவர்கள்தான் முத்துக்குமாரின் உடலை தரதரவென இழுத்துச் சென்று புதைத்தார்கள். ஆனால் முத்துக்குமாரின் உடல் எரிந்த சுடுகாட்டில் போடப்பட்டிருந்த மேடையில் எல்லா சந்தர்ப்பவாதிகளுக்கு முன்னால் முதல் ஆளாக மேடையில் ஏறி நின்றார் உலகத் தமிழர்களின் உள்ளூர்க் காவலன் திருமாவளவன்.

இப்படித்தான் முத்துக்குமார் மூட்டிய தீயை ராமாதாசும், வைகோவும், திருமாவும், நெடுமாறனும் சேர்ந்தே நீரூற்றி அணைத்தனர். கருணாநிதியோ அதை மணல் மூடி புதைத்தார். முத்துக்குமார் இன்று ஒரு நினைவாக மட்டுமே வேதனை கலந்த நினைவாக மட்டுமே நம்மிடம் இருக்கிறான். இவ்விதமாய் அந்த நாடகம் நள்ளிரவு ஒரு மணிவரை நீண்டது. சுடுகாட்டில் எரிந்த நெருப்பை விட கனதியான தீயொன்று எங்கள் உள்ளங்களின் எரியத் துவங்கியது அன்றுதான்.

முத்துக்குமாரின் மரண சாசனம் ஒரு அப்பாவியான புலி ஆதரவாளரின் கோணத்தில்  முக்கியமாக ஈழமக்களின் துயரங்களை நினைத்து எழுதப்பட்டதுதான். அந்தக்கடிதம் அரசியல் தொலைநோக்கில் எழுதப்பட்டத்தல்ல. ஆனால் தமிழகத்தின் இயலாமை குறித்து உணர்ச்சிப் பிழம்பாய் எழுதப்பட்டது. அதில் கருணாநிதி, ஜெயாவைத் தாண்டி மற்ற தலைவர்களின் சந்தர்ப்பவாதங்கள் குறித்து இல்லை. எல்லோரையும் போல முத்துக்குமாரும் அவர்களை நம்பியிருக்கக்கூடும். முத்துக்குமாரை விடுங்கள், புலிகளும் கூட தேர்தல் முடிவு வரை இவர்களைத்தானே நம்பினார்கள். இன்று முத்துக்குமார் உயிரோடு இருந்திருந்தால் துரோகிகளின் பட்டியலை முழுமையாக உணர்ந்திருப்பார். ஈழத்திற்கான வீழ்ச்சியை அறிவுப்பூர்வமாக பரிசீலிக்க முனைந்திருப்பார். ஆயினும் இன்று அவர் இல்லை. ஆனால் தமிழார்வலர்களும், புலி ஆதரவாளர்களும் இருக்கிறார்கள். அவர்களாவது முத்துக்குமாருக்குப் பதில் அந்த சுயபரிசீலனையை செய்வார்களா?

மறுநாள் பிப்ரவரி ஒன்றாம் தேதி அதிகாலை அங்கிருந்து கலைந்து சென்றோம். முத்துக்குமார் உயிர்த்தியாகம் செய்து ஒரு வருடம் ஓடிக்கழிந்து விட்டது. இப்போது மறுபடியும் இவர்கள் முத்துக்குமாரின் நினைவைப் போற்றுவதாக அறிக்கைகள் வெளியிடுகிறார்கள். ஊர்வலங்கள், மலர்க் கோபுரம், என முத்துக்குமாரை நினைவு படுத்துகிறார்கள்.

ஆனால் அந்த நினைவுகளில் மனம் இன்னொறு முறை ஏமாற மறுக்கிறது. காரணம் தான் சந்தர்ப்பவாதிகளிடம் தோற்றுப் போனதைக் காண முத்துக்குமார் இல்லை. அவரது மரண சாசனத்தை வாசித்த நாம் மட்டுமே இருக்கிறோம். மீண்டும் மீண்டும் அந்த அறையை நான் கடந்து செல்லும் போதெல்லாம் பாதி எரிந்த அந்தக் கடிதம் என்னை தொல்லையுறுத்துகிறது. மரணத்தை ஆயுதமாகத் தந்து போராடு என்றவனுக்கு உயிரோடு இருப்பவர்கள், வாழ்க்கையை நேசிப்பவர்கள் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற எண்ணம் என்னைச் சித்திரவதை செய்கிறது. தோற்கடிக்கப்பட்டவனின், ஏமாற்றப்பட்டவனின் மனச்சாட்சியாய் உள்ளுக்குள் இப்போதும் குமைந்து கொண்டிருக்கிறேன்.

முத்துக்குமார் எங்களை மன்னித்துவிடு……….

………………………………………………………………………………………………………………………………………………………………………………
vote-012

தொடர்புடைய பதிவுகள்


  1. வெண்மணி, மிக மிக உணர்வுபூர்வமான பதிவு, இதை படிப்பவர்களுக்கும் உங்கள் மனக்குமைச்சல் உடனே தொற்றிக்கொள்ளும் என்பது உறுதி. 

  2. எல்லோரும் அரசியல் செய்தார்கள் ம.க.இ.க உட்பட. முத்துகுமாருக்கு இப்படி நடக்கும் என்று தெரியாது. தெரிந்திருந்தால் ஒருவேளை முடிவினை மாற்றிக் கொண்டிருப்பார்.

    • தேவதாஸ், முத்துக்குமாரின் ஆசையே தனது மரணம் அரசியலாக்கப்பட வேண்டும் என்பது, ம.க.இ.க மற்றும் சந்தர்ப்பவாதிகளை சாராத உணர்வாளர்கள் முத்துக்குமாரின் மரணத்தை அரசியலாக்க போராடினார்கள். துரோகிகளோ அவரின் மரணதின் அரசியல் தீ பற்றிப்டர்ந்து தமிழகத்தையும் தங்களின் முகமூடிகளையும்   எரிந்துவிடுமோ என்ற அச்சத்தில் அதை அணைத்தார்கள். அதுதான் இந்த கட்டுரையின் மையக்கருத்து. படித்துவிட்டு பொறுமையாக பின்னூட்டமிட்டால் என்ன? ஏன் அவசரப்பட்டு கருத்துரைக்கின்றீர்கள்

      • துக்கம் தாங்க முடியாம அவர் தற்கொலை பணிகிடாறு அதை அரசியல்
        ஆக்கதிக. முத்துக்குமார் மாதிரி நிறைய உயிர் போய்ட்டு இருக்கு முடிஞ்சா
        அதை தடுக்க பாருங்க . வெடியா பேச வேண்டாம்

  3. ஏக இறைவனின் அமைதி அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக.
    புலிப் பாசிசம் தெரியாமல் புலித் தலைமை மீது அபார நம்பிக்கை வைத்து தன் உயிரையே மாய்த்துக் கொண்ட முத்துக் குமாரின் செயல் கடுமையான கண்டனத்துக்குரியது. ஏனெனில் வாழ்க்கை வாழ்வதற்குரியது. எப்படிப் பட்ட நிலையிலும் போராடித்தான் ஆக வேண்டுமேயொழிய தன் உயிரை மாய்த்துக் கொள்ளுதல் தீர்வாக இருக்காது.

    ஆனால் முத்துக் குமார் செய்தது “தியாகம்” என்ற தொனியில் இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கின்றது. இதே மாதிரி தமிழ் மொழிக்காக தன் உயிரை மாத்துக் கொண்ட பல அறிவிலிகளும் இத்தகைய “தியாகிகள்” என்ற பட்டத்துடன் அழைக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றனர். உயிரை மாய்த்து கொள்ளுதலும் “தியாகம்” தான் என்று கட்டுரை எழுதிய வெண்மணி தன் உயிரை ஈழத்திற்காக ஏன் மாய்த்துக் கொள்ளவில்லை? கட்டுரை வெளியிட்ட வினவு தளத்தினரும் தங்களுடைய உயிரை மாய்த்துக் கொள்ள வேடியது தானே? இதை ஆதரிக்கும் ம.க.இ.க வினர் தங்களுடைய உயிரை மாய்த்து கொள்ளலாமே? எந்த ஒரு சுயநலமின்றி ஈழத்திற்காக பாடுபடுவார்கள் ம.க.இ.க வினர் (அப்படித்தான் சொல்லிகிறாங்கோ) தான் என்கிற போது ஏன் ஒட்டு மொத்த ம.க.இ.க வினரும் கூட்டு தியாகத்திற்கு ( தற்கொலைக்கு தான்) முயற்சி செய்யக் கூடாது?

    “தியாகம்” செய்ய முத்துக் குமார் போன்ற அப்பாவிகள் வேண்டும். ம.க.இ.க வினர்கள் மறந்தும் கூட இந்த மாதிரியான தியாகத்தை செய்து விட மாட்டார்கள். எப்படி முத்துக் குமார் என்ற அப்பாவியின் மரணத்தில் திருமா ராமதாஸ் நெடுமாறன் போன்றோர் அரசியல் செய்கிறார்களோ அதற்கு சற்றும் குறையாத பிழைப்புவாத அரசியல் தான் ம.க.இ. க வின் அரசியலும்.
    இதை மறுத்தால் மருதையன் தலைமையில் ஒட்டுமொத்தமாக ம.க.இ.க வினர்களும் எப்போது முத்துக் குமார் மாதிரி தியாகம் செய்ய போகின்றீர்கள் என்பதை இந்த தளம் மூலமாக சொல்லுங்கள். தியாகம் அப்பாவிகள் மட்டும் செய்யக் கூடியதாக இருக்க கூடாது. ம.க.இ.க. வினர்கள் போன்ற பெறும் பெறும் அறிவாளிகளும் செய்ய வேண்டும்.

    • ஷாஜஹான், எல்லா அறிவாளிகளும் சாக வேண்டும் என்ற உங்கள் நினைப்பு நியாயமானதுதான்!  என்ன செய்ய உங்களைப்போன்ற மதவெறி பிடித்த பன்றிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுவதற்காவது நாங்கள் உயிரோடு இருக்க வேண்டுமே… உங்களை ஒழித்த பின்னர் வேண்டுமானால் உங்கள் வேண்டுகோளை பரிசீலிக்கிறோம். அமைதியும் மயிறும் மட்டையும் உங்கள் மீது நிலவட்டும்

      • //இதை மறுத்தால் மருதையன் தலைமையில் ஒட்டுமொத்தமாக ம.க.இ.க வினர்களும் எப்போது முத்துக் குமார் மாதிரி தியாகம் செய்ய போகின்றீர்கள் என்பதை இந்த தளம் மூலமாக சொல்லுங்கள்.//

        எவ்வளவு பொ.அரிப்பு பாருங்கள்,  அய்யா சாஜகான் நான் தற்கொலையை ஆதரிப்பதில்லை எனக்கு தெரிந்தவரை  எங்கள் தோழர்களும் ஆதரிக்கவில்லை

        இங்கே முத்துகுமாரை தியாகி என்று கூறுவது ஏன் என்று அவரின் இறுதி கடிதத்தை படித்துப் பாருங்கள், சரியான அரசியல் இல்லாத ஒரு இளைஞன் ஈழ சிக்கலில் தமிழக அரசியல் நாய்களின் துரோகத்தால் மனமுடைந்து எதாவது செய்யமுடியாதா? என்ற ஆற்றாமையின் விளைவே தற்கொலை.

        ஈழ சிக்கலுக்காக தற்கொலை செய்யத்துணிந்த அந்த சகோதரன் நம் மண்ணையும்நம் இனத்தையும் எந்தளவு நேசித்திருப்பார், தமிழினத்திற்காக ஒரு சாதாரண இளைஞன் தன்னை தீ-க்கு பலியிட்டது ஈழ அரசியல் பேசி பொறுக்கிதின்னும் ஓட்டு கட்சி அரசியல் நாய்களுக்கும், தேர்தலில் போட்டியிடாத தமிழ்தேசியம் பேசி வயிற்றை கழுவிய கழிசடைகளின் முகத்தில் காறி துப்பியதற்கு சமம்.

        இன்று முத்துகுமாரின் மரணத்தை வைத்து இந்த கழிசடை கும்பல் பிழைப்பை நடத்துகிறது. இதை நம் சமுதாயம் அனுமதித்து கொண்டு இருக்கிறது,என்ன ஒரு இழிநிலை வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்இப்படி பட்ட சூழலில் உண்மை உரத்துக்கூறும் வினவு போன்ற தளங்கள்பாராட்டப்படவேண்டியது,

         இப்படிபட்ட கட்டுரைகள், விவாதங்கள் மூலமாகவாவது நமது இழிநிலை தீராதா என்பது நம் ஏக்கமாகவுள்ளது ,

        நீங்கள்(சாஜகான்) என்னவென்றால் குஷ்டரோகி கணக்காக எதாவது குறைசொல்லவேண்டும் என்று திரிகிறீர்கள்,

        ஒரு வேளை முத்துக்குமார் முகமதாக இருந்தால்? உங்கள் கருத்து மாறியிருக்கலாம் ஆனால் எங்களின் கருத்து ஒன்றுதான் அது தியாகம் தான்வெறும் தற்கொலை என்ற வார்த்தைபிடித்து கொண்டு பேயாட்டம் ஆடாதீர்கள்

        முத்துக்குமார் என்ன காதல் தோல்வி என்று உயிர் துறந்தாரா?, இல்லை ஜெயலலிதா, கருணாநிதி போன்ற கசுமாலங்களுக்காக உயிர் துறந்தாரா? அல்லது அல்லா வந்து காப்பாத்துவான் என்று முட்டாள்த்தனமாக உயிர் துறந்தாரா? இல்லை ஈழத்தில் எனது சகோதரன் சாகிறான் எனது தாய் கொல்லப்படுகிறார் , எனது தங்கை வன்புணர்ச்சி செய்யபட்டு வீசி எறியப்படுகிறார், இதில் நான் உயிர் வாழ்வதை விட எதாவது ஒரு மாற்றம்தன் மரணத்தால் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தானே உயிரை பலியிட்டார்.

        சாஜகான் முதலில் மனிதனாக சிந்தியுங்கள் அதை விட்டு விட்டுஅரேபியாவுல இருந்து நேரடியாக குல்லா போட்டுகிட்டு குதித்தவர்களை போல் பேசாதீர்கள்.

    • ஷாஜகான், கட்டுரைக்கு தொடர்பில்லாமல் நீங்கள் கூறும் உளறல்களை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் மறுமொழிகள் ஒதுக்கப்படும். வேண்டுமானால் ஆன்லைன் பிஜே தளத்தில் போய் பிரச்சாரம் செய்யுங்கள். இங்கே மதவெறியர்களுக்கு இடமில்லை. நண்பர்கள் இவருக்கு பதில் சொல்லி நேரத்தை வீண்டிக்க வேண்டாம். மதவாதிகளை பொருத்தமான இடத்தில் கவனிக்கலாம்.

    • அய்யா ஷாஜஹான் & coஒவ்வொரு தற்கொலையும் அநீதியான இந்த சமூக அமைப்பிற்கு எதிராக நடத்தப்படும் கலகம் என்றார் மாவோ.ஈழ விவகாரத்தில் பாராமுகமாக இருந்த தமிழகமக்களின் உணர்வுகளை தட்டியெழுப்பியது முத்துக்குமாரின் தற்கொலைதான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அவரின் முடிவு ஆற்றாமையின் வெளிப்பாடு. துரோகிகளுக்கு மத்தியில் ஏதாவது செய்யமுடியாதா என்ற மனக்குமுறல். எல்லா முஸ்லீம்களுக்கும் ஐவேளை தொழவேண்டும் என்ற அறிவில்லாததுபோல எல்லோருக்கும் அரசியல் அறிவு இருப்பதில்லை. முத்துக்குமாரின் இறுதிக்கடிதத்தை படித்தபின்னும் கோழைத்தனம் என்று நீங்கள் கூறினால் உங்களின் புரிதலை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது, எல்லோருக்கும் அரசியல் அறிவு இருப்பதில்லையே!. அய்யா ஷாஜஹான்,தோழர்கள் யாரும் தற்கொலையை ஆதரிக்கவில்லை.

    • சரியாக சொன்னாய் ஷாஜகான் , முத்துக்குமார் போன்றவர்களுக்கு Psychiatric பிரச்சனைகள் இருக்கக்கூடும் இதனை மூடி மறைத்து அதில் அரசியல் ஆதாயம்தான் பலர் தேடினார்கள். இப்படி போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்றும் யோசிகவேண்டுமே ஒழிய இதை போற்றி பாராட்டகூடாது

    • தற்கொலை ஏற்றுக்கொள்ளக்கூடியதில்லைதான்…….ஆனால், முத்துக்குமார் தன்னுடைய சுயநலத்திற்காக இந்த உயிர்த்தியாயம் செய்யவில்லை….என்ற அளவில் உயர்ந்து நிற்கிறது. முத்துக்குமார் செய்தது தியாகமில்லையென்றால், செய்தது முட்டாள்த்தனமென்றால்…………அதை பார்த்துக் கொண்டிருந்த உங்கள் ஏக கடவுளை ஏக வசனத்தில் திட்டாமல் எந்தச் சொல்லை தேர்ந்தெடுத்து திட்டுவது.

      ஈழத்தில் மக்கள் கொல்லப்பட்ட பொழுது வராத உங்கள் புடலங்காய் கடவுள்………இப்பொழுது திடீரென்று எங்கிருந்து வந்தார்……….

      அவரை சந்திச்சா……அவருக்கு ஏதாவது தெரியுமென்றால் அதையாவது உருப்படியாக செய்யச் சொல்லுங்கள்……….

      எங்கள் மனித இன சகோதரர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ? அதை நாங்கள் செய்துகொள்கிறோம்………உங்கள் ஆத்மா இறைவனோடு சுவர்க்க கனவில் மிதக்கட்டும்

  4. உணர்வுப்பூர்வமான கட்டுரை. படிக்க படிக்க கையாலாகாத்தனமும், வெஞ்சினமும் மனதில் நிறைகிறது. என்ன சொல்லி திட்ட இவர்களை?

  5. முத்துக்குமார் … மன்னித்து விடு… சந்தர்ப்பவாதிகளிடம் நாங்கள் தோற்றுப் போனோம் !! நிஜம் நாங்கள் தோற்றுப்போனோம்.

  6. உழைக்கும் இசுலாமிய மக்கள் வேறு, வேலை வெட்டியில்லாமல் மூக்குப்பிடிக்க கறிசோறு தின்றுவிட்டு ஐந்து வேளை தொழுதுவிட்டு, புர்கா போட்ட பெண்களை அடக்கியாளும் ஷாஜகான் போன்ற கொட்டை போட்ட பெருச்சாளிகள் வேறு! பாலஸ்தீனத்திலும்,ஈராக்கிலும், ஆப்கானிலும் கூட பலர் தற்கொலை செய்து கொண்டு போரிடுகிறார்கள். காலை மலம் கழிக்கும் போது மட்டும் மலச்சிக்கலால் ஏதோ கீழே பார்த்து யோசிக்கும் வழக்குமுள்ள ஷாஜகான் போன்றோருக்கு அதிகபட்சம் தெருப்பிரச்சினை கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோ முத்துக்குமார் வேலை வெட்டியில்லாமல் செத்தது போலவும், அதை புளித்த ஏப்பத்துடன் ஷாஜகான் போன்ற பன்றிகள் நொள்ளை சொல்வதும் சகிக்க முடியவில்லை.

  7. முத்துக்குமார் என்னை மன்னித்துவிடு. கையாலாகமல்தான் போய்விட்டேன்.

  8. எங்களை நீ மன்னிக்கதே அப்படி நீ செய்தால் எப்போதாவது வரும் உணர்வுகள் கூட மீண்டும் மீளா துயில் கொண்டு விடும் .

    • சரிதான் பாஸ்கர். மன்னிப்பு கேட்கக்கூட தகுதியில்லைதான்.

  9. வாவ் நல்ல கட்டுரை.நான் சொல்லபோவது இக்கட்டுரை பற்றியது அல்ல.உங்கள் இணையதளத்தை பற்றி.எனக்கு மிகவும் பிடித்த இணையதளங்களில் இதுவும் ஒன்று.நல்ல முயற்சி.நன்றி

  10. முத்துக்குமாரை தியாகியல்ல கோழை என்றழைக்கும், பார்பனியத்திடம் சரணைட்ந்த மானங்கெட்ட இசுலாமிய மதவெறியர் அண்ணன் ஷாஜகானுக்கு, வணக்கம்.

    தனது வாழ்நாளில் எதையாவது தியாகம் செய்திருப்போரோக்கே முத்துக்குமாரின் தியாகத்தை புரிந்துகொள்ளக்கூடிய அறிவும், மனமும் இருக்கும்.. ஆனால் முதல்நாளுண்ட பிரியாணியை மறுநாள் மலமாக பிரியும் ‘தியாகத்தை’ தவிர நீங்களும், உங்கள் ஆசான்(வாய்) பி.ஜேவும் வேறெதும் செய்வதாக தெரியவில்லை, எனவே உங்கள் பார்வையில் முத்துக்குமாரின் தியாகம் கோழைத்தனமாகவும் முட்டாள்தனமாகவும் தெரிவதில் ஆச்சரியமில்லை.

    உங்கள் கருத்து உங்களுக்கு என்று விடலாம்தான், ஆனால் நீங்கள் பெரிய்ய்ய்ய்ய மானஸ்தர்களாயிற்றே, அப்படி விடமுடியுமா? உங்களுக்கு வெட்கம், மானம், ரோசம், சூடு, சுரணை, துணிவு போன்ற மனித பண்புகள் இருந்தால் — இருக்காது— ஒரு வேளை ”இருந்தால்” முத்துக்குமார் ஒரு கோழை, அவன் செய்த்து தியாகமில்லை.. இதைப்பற்றி யாரிடமும் இணையத்திலோ, நேரிலோ விவாதிக்க தயார் என்று உங்கள் கழிப்பிட சுவரான http://onlinepj.com தளத்தில் இந்த பகிரங்க அழைப்பை அறிவிக்க முடியுமா? எழுத முடியுமா?? பதிய முடியுமா??? முடியுமா..முடியுமா..முடியுமா????? முடியாதுன்னா மூடிக்கு போங்க! சத்தம் வரப்டாது… BE CAREFUL – உன்னத்தான் சொன்னேன்!

  11. நீங்கள்லெல்லாம் அம்மா ஆட்சிக்கு வந்தால்தான் அடங்குவிர்கள்.அப்ப பேசுவிங்களா ஈழம் கொழுகட்டனு. பொத்திக்கிட்டு உக்காதுருபிங்க.லச்சகனக்கான மக்களின் துன்பத்திற்கு காரணம் புலிகள்.

    • தமிழகத்தில், இந்திய போலி தேசியத்தில் மக்கள் அவதிப்படுவது………….பார்ப்பனீயத்தால்…………..பார்ப்பனீயத்தை ஆதரிக்கும் எந்த நா..க்கும் புலிகள் பற்றி பேச தகுதியில்லை………….

      எம் மக்கள், எம் பிள்ளைகள் நாங்கள் அவர்களை விமர்சித்துக் கொள்கிறோம்……….

      நீங்கள் குடுமி மயிறுக்குள் ஒழிந்து கொள்ளுங்கள்

      • என்னடா பொழுது போய்டுச்சே இன்னும் பார்ப்பனியத இழுகளையே அப்படினு பாத்தான்.

      • அய்யா மகிழ்நன்,”தமிழகத்தில், இந்திய போலி தேசியத்தில் மக்கள் ” 
        தமிழகம் என்ற அமைப்பு உண்டானதே britishraj ஆல. பின்னாடி வந்த இந்திய  வும் கூட்டம் சேர்க்க அத அப்படியே செர்த்துகிச்சு.  உங்களுக்கு கூட்டம் சேர்க்க மட்டும்  தமிழகம் நு ஒன்னு வேணும்ல. அது எப்போ வந்துச்சு. அது போலி இல்லையா . ஓஹோ உங்களுக்கு அது மட்டும் வசதியோ. தமிழ்நாடு பாத்தா உடன்சிருந்த உங்க வேலை நடக்காது. இலங்கைல நடக்கற அநியாயத்த எதிர்க்கணும்ன முத்துக்குமார் வன்னில பொய் சண்டை போடு செத்து மடிஞ்சு  இருக்கலாம். அது இந்த தீகுளிக்கரதொட நல்லது. அத பார்த்து இன்னும் சில பேர் அது மாதிரியே பண்ணுவாங்கன்னு ஏதிர்பார்கலாம். அத விட்டுட்டு இந்த மாதிரி வீட்ல கொளுத்தறது, பஸ்ஸ கொளுத்தறது , ஆளையே கொளுதரதுன்னு ஒரு முட்டாள் தனமான பண்பாட்ட வளர்கவேணாம். 

  12. முத்துகுமார் நினைவு நெஞ்சுக்குள் அனலாய் அரற்றிக் கொண்டுள்ளது..

    வரலாற்றில் முத்துகுமாரின் வீரம் என்றென்றும் நிலைத்து நிற்கும்..
    நாம் நமது மனசாட்சியை தொலைத்து நிற்கிறோம்..

    முத்துகுமாரின் உடலில் பற்றிய தீ, சுயமரியாதையை தேடிய ஒடுக்கப்பட்ட இனத்தின் மீது இந்திய துணைகண்டம் ஏவிவிட்ட வன்முறையின் குறியீடு.. முத்துகுமாரின் மரணசாசனம் அதன் உரைகல்..

    ஓங்குக முத்துகுமாரின் புகழ்!

  13. //அப்போது மாணவர்களைத் தாக்கி முத்துக்குமாரின் உடலை வேக வேகமாக சுடுகாட்டிற்குக் கொண்டு சென்று புதைத்தவர்கள் யார் தெரியுமா?“நான் ராஜபட்சேவை நேரில் பார்த்தால் கொல்வேன்” என்று சொல்லி விட்டு பின்னர் கொழும்புவிற்குச் சென்று நேரில் பார்த்து கைகுலுக்கி பொன்னாடை போர்த்தி பரிசும் வாங்கி சிரித்துப்பேசி வந்துவிட்டு… இப்போது மீண்டும் இனப்படுகொலை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார் அல்லவா, அந்த திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள்தான் மாணவர்களைக் கடுமையாக அங்கே தாக்கினார்கள். அவர்கள்தான் முத்துக்குமாரின் உடலை தரதரவென இழுத்துச் சென்று புதைத்தார்கள். ஆனால் முத்துக்குமாரின் உடல் எரிந்த சுடுகாட்டில் போடப்பட்டிருந்த மேடையில் எல்லா சந்தர்ப்பவாதிகளுக்கு முன்னால் முதல் ஆளாக மேடையில் ஏறி நின்றார் உலகத் தமிழர்களின் உள்ளூர்க் காவலன் திருமாவளவன்.//

    சரியான தோலுரிப்பு!

  14. நிதர்சனமான பதிவு. முத்துக்குமாரின் ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஒரு தோழர் சொன்னார் – முத்துக்குமாரின் உடல் ஒரு குறியீடாக வைக்கப்பட வேண்டும் என்ற அவரது ஆசை பிழைப்புவாதிகளால் சிதைக்கப்பட்டபோது, குறைந்த பட்சம் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கொண்டு செல்ல வேண்டும் என்று அங்குள்ள தன்னெழுச்சியான மககள்திரளும், மாணவர்களும் முயன்றனர். ஆனால், காவல்துறை அவர் உடலை சுற்றி சுற்றி எடுத்துச் சென்று, மக்கள் அதிகம் நடமாட்டமுள்ள சாலைகளை தவிர்க்க முயன்றது. திருமாவளவனும், ஒரு காரை மெயின் ரோட்டுக்கு குறுக்கே போட்டு மேலேறிக் கொண்டு, சுற்றிச் செல்லவே தூண்டினார். மனம் தாளாமல் அந்த தோழர் ஆற்றி ஆற்றிச் சொன்ன விடையம் இது. ஆனால் திருமாவளவன், நக்கீரனில் எழுதும் கட்டுரைகளில் முத்துக்குமார் இவர் கூட்டங்களில் கலந்து கொண்டதாக கதை விடுகிறார். (ஒரு நக்கீரன் கட்டுரையில் முத்துக்குமார் பார்த்திருக்க திருமாவளவன் பிரச்சாரம் செய்வது மாதிரி ஒரு படம் போட்டிருந்தார்கள்).

    அயோக்கியர்கள். இவர்களின் முகமுடிகளை முற்றிலும் கிழித்து எறிய வேண்டும். ‘துடிக்கும் முள்ளிவாய்க்கால்’ கட்டுரையில் சொல்லி உள்ளது போல வைகோ, நெடுமாறன் போன்றோருக்கு புலிகள் தங்கள் இறுதி மணித்தியாலங்களில் எப்படிப்பட்ட நிலையில் பரிதவிப்போடு செல்பேசிகள் மூலமாக தொடர்பு கொள்ள முயன்றிருப்பார்கள் ? ஒன்றுமே நடவாதது போல இந்த அயோக்கியர்கள் நடிக்கிறார்கள் – கல் அல்ல பாறை மனதுக்காரர்கள் !!!!

  15. முத்துக்குமாரிடம் மன்னிப்புக் கேட்டு இதை முடிவுக்கு கொண்டுவரவேண்டாம்.
    கொலைவாளினை எடுப்போம்
    மிக கொடியோர் கதை முடிப்போம்.

    • ஏனப்பா , செத்துப்போனவங்க கிட்ட எல்லாம் பேசுறீங்களே , இது என்ன பகுத்தறிவோ …கம்யுனிசமோ. ஓஹோ செண்டிமென்ட தூண்டுரீங்கள . அப்போ உங்களுக்கும் கருணாநிதிக்கும் என்ன வித்தியாசமாம் .அவன் என்ன பண்ணன் இவன் என்ன பண்ணான் அப்படின்னு பேசறீங்களே , ஆறு கோடி பெரும் சும்மா தான் இருக்கான், அவங்களே நேர்ல திட்டுங்களேன், அவங்க ஆதரவு போய்டும்னு தான் , நீங்க திட்டறவன் எல்லாம் சும்மா இருக்கான், சோனியா, இந்திய சர்வதிகாரம் எல்லாம் ரெண்டாம் பட்சம், எதோ தமிழ்நாட்ல இருக்கற மக்கள் எல்லாம் இலங்கைக்கு கப்பல் ஏற ரெடியா இருக்க மாதிரியும், இவங்க எல்லாம அவங்களா போக விடாம தடுக்கற மாதிரியும் தான். நீங்க எல்லாம் முதல்ல பொய் சண்டை போடுங்க . இப்போ தான் எல்லாம் முடுஞ்சு போச்சே . இனி என்ன பண்ண. அப்பறம் இன்னொரு விஷயம், இத சொல்லியே ஆகணும், உங்க சீனா  comrades  கிட்ட ஹெல்ப் கேக்க வேண்டியது தானே. அவங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு முத்துக்குமார் சொன்னாரா. இந்திய சர்வதிகரம்னு ஒன்னு இருக்கே அதோட அண்ணன் சீன சர்வதிகாரம், அதான்பா திபெத் ல  சமத்துவத நிலைநாடரவங்க , அவங்க இலங்கையோட  deal  போட்டசாமே .   இப்போ என்ன பண்ணுவீங்க. உங்க comrade தானப்பா கொஞ்சம் எடுத்து சொல்றது . ஓஹோ அவங்க அங்க மெயின் பிளான் போடுவாங்க, நீங்க இங்க அதுகேதாபுல ஒத்து ஊதுவீன்களாம்.  

  16. முத்துக்குமாரை பயித்தியம் என்று சொல்லும் ஷாஜஹானே நீ ஈழத்துக்காக என்ன …புடுங்கினாய்? முத்துகுமார் தியாகி, ஷாஜஹான் பயித்தியம். முத்துக்குமார் தனது இனத்துக்காக செஞ்ச தியாகத்த மதிக்க அவரது மரண அறிக்கையை மதித்து அதை பிரச்சாரம் செய்வது தான் சரி. அதுதான் அவருக்கு செய்யும் மரியாதை, அதை விட்டு நீ ஏன் சாகலைன்னு கேட்பது சுத்த லூசுத்தனம். அவர் செத்து போராட்டத்த துவக்கினார், என்னைப்போன்ற ஈழ ஆதரவாளர்களும் , மற்ற புரட்சிகர தோழமை சக்திகளும் உயிரோடிருந்து அந்த போராட்டத்த தொடர்ந்து நடத்திக்கிட்டிருக்கோம். ஷாஜகான் மாதிரியானவங்க ஒன்னும் செய்யாம நொட்ட சொல்லிகிட்டிருக்காங்க

  17. முத்துக்குமார் எங்களை மன்னித்துவிடு……….

    கட்டுரையில் குறிப்பிட்டவர்கள் மட்டும் சந்தர்ப்பவாதிகள் அல்ல..
    குறிபிடாத பலரும் இருக்கிறார்கள். சீமான் முதல் அனைத்து திரைத்துறையினரும் எதை புடுங்கினார்கள்?

    மக்கள் மீது சவாரி செய்யும் அனைவருக்கும் மக்களால் தண்டனை கிடைக்க செய்ய வேண்டும்.

  18. முத்துக்குமரனுக்கு வீர வணக்கம், அவன் மரணத்தை அர்த்த படுத்தி இருக்க வேண்டும் ……………..கலைஞர் திருமா எல்லாரும் சோனியா பக்கம் ……………..வைகோ ராம டோஸ் அம்மா பக்கம் இவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்

  19. இயல்பான வரலாற்றை திசை திருப்பி தமிழனை இன்னும் புதை குழிக்குள் தள்ளியவர்கள்தான் நெடுமாறனும், வைகோவும், திருமாவளவனும், ஜெகத் கஸ்பரும், தா.பண்டியனும், கருணாநிதியும், இராமதாசுவும் …….

    தமிழனுக்கு மறக்கும் பழக்கமும் மன்னிப்பு கேட்கும் பழக்கமும் உள்ளவரை தமிழினை வழிநடத்துவதாக காட்டிக் கொள்ளும் தலைகளுக்கு கவலையும் வராது, பயமும் வராது.

    ‘முத்துக்குமார் … மன்னித்து விடு… ‘ கட்டுரையில் விட்டுப்போன சில வரலாற்று பிழைகளை தமிழர்களின் நினைவுக்காக…

    மாணவர்கள் சிலர் முத்துக்குமார் உடலுடனேயே காத்து கிடந்தனர். அப்போது அரசியல் நாடகங்கள் பல அரங்கேறின.

    முத்துக்குமார் புதைக்கப்படும் கடைசி நாள். அன்று காலை சென்னை தி.நகரில் உள்ள சர்.பி.டி.தியாகராஜர் அரங்கில் அனைத்து தலைகளும் வந்திருந்தன. மேடையை ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. கூட்டமும் சொன்ன நேரத்தில் ஆரம்பிக்காமல், முத்துக் குமார் என்ற தியாக சுடரின் பெயரை பயன்படுத்தி மேடை ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது, அரசியல் சாயம் வெளி தெரிந்தது.

    கூட்டம் பரபரப்பாய் நடந்து கொண்டிருந்தது. முன் வரிசையில் இட ஓரத்தில் அம்ர்ந்திருந்த வைக்கோவும், திருமாவளவனும் உக்கார்ந்து நாடகம் நன்றாய் நடக்கிறது என கண்காணித்து வந்தனர். அப்போது, திருமாவளவனின் எடுபிடி வன்னியரசு திருமா காதில் செய்தி சொன்னார்.

    “முத்துக்குமாரின் உடல் அருகே மாணவர்கள் சிலர் இருக்கின்றனர். அவர்கள் இன்று மாலை முத்துக்குமாரை புதைக்க விட மாட்டார்கள் போல் இருக்கிறது. என்ன செய்யலாம்”

    திருமா உடனே மண்டையை பியித்துக்கொண்டு, வைகோவை பார்க்கிறார். வைகோ என்னவென்று விசாரித்து விட்டு, நெடுமாறன் காதில் இதை ஓதுகிறார். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், அடுத்த நாடகத்தை நடத்த கலந்துரையாடலும் மேடையில் குசு, குசுவென அவர்களுடைய இருக்கையை விட்டு கொடுக்காமல் நடத்துகிறார்கள். இறுதியாக வைகோவில் ரவுடி தளபதி வேளச்சேரி மணிமாறன் அழைக்கப்படுகிறார்.

    “மணிமாறா உன்னுடைய ஆட்களையும், திருமாவின் எடுபிடியான வன்னியரசு ஆட்களையும் கூட்டிக் கொண்டு, முத்துக் குமார் உடல் இருக்கு கொளத்தூருக்கு உடனே சென்று, முத்துக்குமாரின் உடலை நமது கட்டுபாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.”

    பொடிப் பசங்களை எளிதாய் முத்துக் குமார் உடல் இருக்கும் இடத்திலிருந்து ஓட்டி விடலாம் என நினைப்பு தலைக்கேறி, உடனே திபு, திபுவென ரவுடிக் கூட்டம் கொளத்தூர் நோக்கி பயணிக்கிறது.
    ஆனால், உண்மையான மாணவர்கள் கூட்டம் முத்துக்குமாரின் உடலருகே அமர்ந்து கொண்டு இருந்தால், ஒரு மயி….ரயும் இந்த ரவுடி கும்பலால் பிடுங்க முடியவில்லை.

    ஈழத்தமிழனை காப்பாற்றுவோர் என தாங்கள் தண்டுரா போட்ட தமிழக தலைகள் கூட்டத்திற்கு முத்துக்குமார் கொடுத்த முதல் அடி.

    ஆனாலும், நம் தமிழக தலைகளுக்குத்தான் பெரு நம்பிக்கை நம் தமிழ் மக்களின் மறதி மீது உள்ளதே. வரலாற்று பிழை தொடருகிறது.

    முள்ளிவாய்க்கால் – மே 17, 2009. ஈழத்துத் தலைவன் கொல்லப்பட்டான். காலை செய்தி காட்டுத்தீயாய் உலகமெங்கும் பரவியது. தமிழகத்தில் 6.5 கோடி தமிழர்கள் மனதில் முள் தைத்தது. சிங்களவனையும், இந்தியாவையும் நோக்கி ஒரு வெறி பொறி மக்களிடத்தில் பற்றியது. மக்களிடம் மனதுக்குள் வேகம் பிறந்தது. தமிழக இரகசிய காவல்துறை செய்தி தமிழக முதல்வருக்கு சொல்லப்பட்டது.

    “தமிழகம் அடுத்த 12 மணி நேரத்திற்குள் நெருப்பு ஜீவலையாய் மாறப்போகிறது. என்ன செய்வது. என்ன நடவடிக்கை எடுப்பது”. இரசிய கூட்டம் மேல்மட்ட அதிகாரிகள் நடத்தினர்.

    நெடுமாறன் அன்று எப்பொழுதும் போல் ஒன்றும் தெரியாமல் காலையில் அலுவலகம் வந்தார். வந்தவரிடத்தில் செய்தி சொல்லப்பட்டது. இடிந்து உக்கார்ந்தார். என்ன செய்வது. புரியவில்லை. எழுந்தார். கைப்பேசியை அணைத்தார். நேரே வீட்டிற்குச் சென்று தனது அறையில் போய் கட்டிலில் படுத்து கொண்டு யோசித்தார். மதியம் உணவருந்தவில்லை. அடுத்து என்ன செய்வது?

    நேரம் ஒடிக்கொண்டிருக்கிறது. அன்று மாலை நாளிதழ்களில் தலைப்புச் செய்தி “பிரபாகரன் கொல்லப்பட்டார்”. தமிழகமெங்கும் மாலை இதழ்கள் தீர்ந்து போயிற்று. மறுபதிப்பு திரும்ப திரும்ப அச்சடிக்கப்பட்டு விற்றக்கப்பட்டது. தொலைக்காட்சி ஊடகங்கள் செய்தியை திரும்ப திரும்ப சொல்லி வந்தது.

    மக்களின் கொதி நிலை ஊச்சத்தை அடைந்த நிலை. தமிழகத்தை யார் காப்பாற்றப்போகிறார்கள் – தமிழக அரசுக்கு தெரியவில்லை. விழி பிதுங்கி ஒன்று அறியாது திகைத்து நின்றது.

    மாலை மணி 5. நெடுமாறன் உற்சாகமாய் தனது கைப்பேசியை இயக்கினார். புதிதாய் மறுமுறை குளித்து விட்டு நேரே அலுவலகம் வருவதாய் தொலைப்பேசியில் அறிவித்தார். ஊடகங்கள் காலையிலிருந்து நெடுமாறனை வலை வீசி தேடிவந்தனர். ஈழத்தில் என்ன நடந்து? செய்தி உண்மையா?

    ஊடகவியலாளர்கள் பறந்தடித்து நெடுமாறன் அலுவலம் வர தொடங்கினர்.

    சிறிது நேரத்தில் நெடுமாறன், மருத்துவர் இராமதாஸ், வைகோ, தா.பாண்டியன் போன்றோரை அழைத்தார். மருத்துவர் இராமதாஸ் எல்லோரும் இரவு 6.30 மணிக்கு இராமதாசுக்கு சொந்தமான தி.நகரில் அமைந்துள்ள கொங்கு தமிழ் அறக்கட்டளையில் சந்திக்க முடிவாயிற்று.

    வைகோ ஆட்களும், இராமதாஸ் ஆட்களும் ஊடகங்களுக்கு செய்தி கொடுத்தனர். தமிழக தலைகள் இங்கு சந்திக்கின்றனர்.

    ஊடகங்கள் பறந்தடுத்து கொங்கு தமிழ் அறக்கட்டளை கட்டிடத்தை நோக்கி வந்து காத்திருந்தனர். தமிழக உளவுத்துறையும் ஊடகங்களோடு கலத்திருந்தது.

    தமிழகம் கொதி நிலையில் உள்ளது. கேள்விப்பட்ட செய்திகள் உண்மையா? உண்மை செய்தியை சொன்னாதான் மக்கள் விடுவார்கள். இல்லையேல், தமிழகம் இரண்டுபட போகிறது.

    நெடுமாறன் காரைவிட்டு இறங்க இறங்க ஊடகங்கள் அவரை நோக்கி ஓடின. “அய்யா செய்தி சொல்லுங்கள்”….

    “பிரபாகரன் உயிரோடு நலமுடன் இருக்கிறார். தேவைப்படும் போது வருவார்” – நெடுமாறன்.

    உளவுத்துறை அதிகாரிகள் தமிழக அரசுக்கும் மத்திய இந்திய அரசுக்கு உடனே செய்தி கொடுத்தார்கள். தமிழகத்தில் ஒன்றும் நடக்காது தமிழகம் அமைதிப்பூங்கா தான். கவலை கொள்ள வேண்டாம். நெடுமாறன் நமக்கு உதவி செய்து விட்டார்.

    ஆனால், தமிழினம் மட்டும் அழுதது. திரும்பவும் வரலாற்றுப் பிழையை கண கச்சிதமாய் அரங்கேற்றி விட்டனர் நம் தமிழக தலைகள்.

    திரும்பவும் நினைவுக்கு – தமிழனுக்கு மறக்கும் பழக்கமும் மன்னிப்பு கேட்கும் பழக்கமும் உள்ளவரை தமிழினை வழிநடத்துவதாக காட்டிக் கொள்ளும் தலைகளுக்கு கவலையும் வராது, பயமும் வராது.

    – வரலாற்றுப் பிழை தொடரும், தமிழினம் அழிக்கப்படும் வரை…

    • வீரத்தமிழ் மகன். நீங்கள் அரசியல்வாதிகள், மாணவர்கள் பற்றி எல்லாம் சொல்லியிருப்பதை அப்படியே ஏற்கிறேன். ஆனால் தமிழகம் கொந்தளித்தத்து என்பதெல்லாம் புருடா. பிரபாகரனின் மரணம் அவரை நேசித்தவர்கள் மட்டுமன்றி வெறுத்தவர்களுக்கும் ஒரு கணம் துயரம் தந்தது என்பது உண்மையே. ஆனால் அதன் பிறகு தமிழகத்தின் அமைதியைக் குலைக்கும் வண்ணம் எந்தக் செயல் நடப்பதையும் யாரும் விரும்பவில்லை. ஒரு வேளை அரசு அடக்கியிராவிடால் சமூக விரோதிகளாலும் புலி ஆதரவாளர்களாலும் பொதுச் சொத்துகள் சேதம் அடைந்திருக்கலாம். ஆனால் பிரபாகரனுக்காக அப்படி நடப்பதை சாதாரண மக்கள் துளியும் விரும்பவில்லை. அந்த அளவுக்கு அவர் மேல் தமிழகத்து மக்களுக்கு அன்பு இல்லை. இதற்கு அன்றும் அடுத்த நாளும் அரங்கு நிறைத்த காட்சிகளாக ஓடிய திரைப் படங்களும் இன்று வரை ஒரு தடவை கூட கதறி அழாத பொது மக்களுமே சாட்சி. அவர் மரணத்தன்று பெரும் நாடகம் நடத்தவில்லையென்ற வருத்தம் வன்முறையாளர்களுக்கு மட்டுமே இருக்கலாம். மற்றவர்களுக்கு, பெரும்பான்மையினருக்கு, அவர் மரணம் ஒரு பொருட்டே இல்லை.

      • இல்லை வித்தகன்,நீங்கள் கூறுவதை ஏற்கமுடியவில்லை.  பிரபாகரன் இறந்த்தற்காக ஒரு கலவரம் நடப்பதை வேண்டுமானால் தமிழகம் விரும்பாமல் இருந்திருக்கலாம்,ஆனால் அதுவே பிரபாகரன் மீது அன்பு இல்லை என்று அர்த்தமாகிவிடாது. இன்றளவும் நாங்கள் சந்திக்கும் எண்ணற்ற மக்கள் குறிப்பாக இளைஞ்ர்கள் ஈழம் மற்றும் பிரபாகரன் இழப்பை உணர்ச்சியுடனும் கவலையுடனுமே பேசுகின்றனர்.  இதை நான் வெறும் கணிணி முன் உட்கார்ந்து மட்டும் கூறவில்லை.

        • கலை. நாம் பேசும் பொருள் ஒரு கிரே ஏரியா என்று ஒப்புக் கொள்கிறேன். ஈழத் தமிழர் பால் தமிழகம் கொண்ட அன்பு என்றும் குறையாது. ஆனால் புலித் தலைவர் மீதுள்ள மரியாதை அளவுக்கு அதிகமாகவே
          பிரச்சாரப் படுத்தப் படுகிறது என்றே கருதுகிறேன்.

      • //அன்றும் அடுத்த நாளும் அரங்கு நிறைத்த காட்சிகளாக ஓடிய திரைப் படங்களும்..//
        வரலாற்றை திசை திருப்பி விடப்பட்ட பிறகு சினிமா என்ன, பப்புகளும், டாஸ்மாக் கடைகளும் திறந்தே இருந்தன. இதுதான் தமிழன் செய்த வரலாற்றுப் பிழை. இன்று ஆந்திர இரண்டு பட வேண்டி, கொந்தளிக்கிறது. அன்று இனமே அழிக்கப்பட்ட பிறகும், இங்கு வரலாற்றின் இயல்பான கொந்தளிப்பை திசை திருப்பியதன் விழைவுதான் நீங்கள் குறிப்பிட்ட சினிமா மற்றும் இத்தியாதி, இத்தியாதிகள் எல்லாம்.
        ஆந்திராசில் இன்று நடைபெறுவது சமூக விரோத கும்பலாளா? என் பேசுகிறீர்கள்! இயல்பான மக்கள் கொந்தளிப்புக்கும் செயற்கையான வன்முறை செயலுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது நண்பரே!
        இன்றும் தமிழக மக்கள் தேசிய தலைவரின் மரணத்தை மனதளவில் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏன் தெரியுமா, தமி்ழக மக்கள் அவர் மீது கொண்டுள்ள அன்புதான் காரணம். ஆனால், வரலாற்றை எப்பொழுதும் மேகம் முடி மறைக்க முடியாது. நாம் நமது அடுத்த கடமையை எதிர்கொள்ள ஆயத்தப்படுத்த வேண்டும். அதை இன்று தமிழினம் விட்டு விட்டதாலேயே, ஈழ மண் முழுக்க இன்று சிங்கள மயமாக்கப்பட்டு வருகிறது. தமிழக தலைகளும் தங்களது அரசியல் விட்டு போகக்கூகூடாது என நினைத்தே, இன்று வரை தமிழனை மழுங்கடித்து வருகின்றனர். இன்னும் இரண்டு தலைமுறைக்கு பிறகே இதை புரிந்து கொண்டு, வருத்தப்படுவோம். நாம் வருத்தப்படும் போது, நம் மண் நம் கைகளில் இல்லாமல் போயி விடும். இதெல்லாம் நடக்க வேண்டுமா? அல்லது நாம் தமிழர்களுக்கு ஒரு நாடு எடுக்க வேண்டுமா? நாடு வேண்டுமெனில் இன்றே அதற்கான ஆயத்த வேலையை சிந்தித்து செயல்பட வேண்டும். என்ன தோழரே ஏற்றுக் கொள்கிறீர்களா!!??

        • வீரத்தமிழ் மகன். ஈழம் அமைய வேண்டும் என்ற ஆசை எல்லாத் தமிழர்களுக்கும், எனக்கும், உண்டு. ஆனால் அதில் இந்தியத் தமிசர்கள் தலையீடு இல்லாமல் இருப்பதே இருவருக்கும் சிறந்தது என்பதே என் எண்ணம். மற்றபடி உங்களுடைய துடிப்பான இன உணர்வுக்கு என் வாழ்த்துக்கள்.

  20. எல்லா சந்தர்ப்பவாதிகளும் முத்துக்குமாருக்கு முதலாமாண்டு அஞ்சலிகளை செலுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். முத்துக்குமாரின் மரணத்துக்கு செய்யும் அஞ்சலியானது… சந்தர்ப்பவாதிகளை தொடர்ச்சியாக அம்பலப்படுத்ததி, தனிமைப்படுத்துவது தான். இந்த கட்டுரை அதன் தொடர்ச்சியில் தான் இருக்கிறது.

  21. டோண்டு,

    பக்கத்துல இருந்து ரூ 5 இலட்சம்
    வாங்கி கொடுத்த புரோக்கர் மாதிரியில்ல பேசறிங்க.
    ஆதாரம் இருந்தா பேசுங்க இல்லைன்னா வாயை மூடிட்டு இருங்க

  22. நீ ஒரு அப்பனுன்னு பிறந்தது உண்மைனா முத்து செய்தது தியாகம் தான் .

    முத்து எங்கள் சொத்து ….

  23. ஒவ்வொரு தமிழனும் முத்து குமார் மற்றும் ஈழ அண்ணன் படத்தை வீட்டில் மாட்ட வேண்டும்

    • நாட்டுல பாலரும் தேனாறும் ஓட ஆரம்பிச்சுடும்.எல்லாரும் மாட்டுகபா. பல லச்ச மக்கள் நிம்மதி இல்லாமல் போனதற்கு யார் காரணம். உங்கள் ஈழ அண்ணன்.

  24. மிக அருமையான கட்டுரை. வீர தமிழ் மகன் கருத்து மறுக்கமுடியாதது. அப்புறம் நாடு கடந்த தமிழ் ஈழம் பற்றி எழுதுங்களேன்..

  25. உண்மை முற்றிலும் உண்மை ! நாங்கள் கையலகதவர்கள் தான் என்பதை ஒப்புகொல்கிறோம் ! மன்னித்து விடு ! முடிந்த உதவிகளை செய்ய முற்படுவோம் !

  26. உயிர் நீப்பது என்பது வேண்டாத ஒன்று அதில் மாற்று கருத்து இருக்க முடியாது ! ஆனால் நோக்கம் வேறொன்று ! புனிதமானது ! மற்றவருக்காக அழுவதே அரிது, ஆனால், தன்னை மாய்த்து மக்களை, அவர்களை சுற்றி நடக்கும் நாடகங்களை தன் தியாகத்தால் உலகறிய செய்வதே நோக்கமாக கொண்டிருந்தான் அந்த தியாகி! நம் கலைஞர் (ஈன பிறவி) அனைத்தையும் மழுங்கடித்தார் ! மத்திய அரசு இதற்கு துணை ! திரைமறைவில் ஆயிரம் நடந்தது! கண் முன்னே ஒன்று தான் நடந்தது ஈழம் அழிந்தது!

  27. MUTHUKUMAR WAS DIED IN THIS DATE, EXACTLY ONE YEAR OVER THANKS TO REMAMBER, SEE ALL TAMIL LEADRES FORGOT IN THAT INCEDENT, KURUNANEDHI ELEBIRATE FOR TAMIL SEMMOZHI CONFRANCE IN ONE OR TWO MANTH, THIS IS FOR WHAT, NOW A DAYS KARUNANIDHI,THRIUMA. RAMADASU, NEDUMARAN ALL THIS PEPOLE DONT WANT SPEAK THIS MATTER.

  28. நன்றி ! அனைத்தும் நன்று ! நன் பதிவர்களுக்கு
    என்னுடைய தாழ்மையான யோசனை தெரிவிக்க
    விரும்புகிறேன் ! அரசியல் தீர்வு அனைத்தும் ஒரு பக்கம்
    இருக்கட்டும் ! ஆனால் அதுவரை உண்மையில் ஈழத்தின் முன்னேற்றத்தில் பதிவர்களாகிய அனைவரின் பங்கு என்ன ? எதாவது
    செய்ய முடியுமா ? நாம் செய்வது அறியாது, மனக்குமுறலை
    கோவமாக இங்கு பதிக்கிறோம் ! ஆனால் ஈழ மக்கள் ஆண்டாண்டு
    காலமாக சுகாதாரம், கல்வி, கட்டமைப்பு இவற்றில்
    பின்தங்கி உள்ளனர். எதாவது செய்ய வேண்டும் !

  29. நானும் முத்துகுமாரின் இறுதி ஊர்வலத்தில் இருந்தேன், அன்று யார் அங்கு தலைமை ஏற்று முத்துகுமாரின் இறுதி சாசனப்படி செயல் பட்டு இருந்தாலும் நான் அவர்களை பின் தொடர்ந்திருப்பேன். ஆனால் அன்று ஒன்றுமே நடக்க வில்லை , முத்துக்குமார உன்னிடம் மன்னிப்பு கேட்கிற தகுதியை கூட நாங்கள் இழந்து விட்டோம்

  30. முத்துகுமரா!
    “ஈழம்” என்ற சொல்லை அது நாள் வரை உச்சரிக்காத உதடுகளை, உச்சரிக்க வைத்தவன் நீ. உன் இதயத்தில் மட்டும் எரிந்த தீயை, ஓர் நாள் உடல் முழுவதிலும் பரவ விட்டவன். தமிழகம் முழுவதும் எரியவிருந்த தீயை,சந்தர்ப்பவாதிகள் சென்னையிலேயே அணைத்து விட்டனர். இருப்பினும், தாய் அன்பையும் மிஞ்சும் அன்பு கொண்ட நீ, என்றும் எங்கள் மனதில் வாழ்வாய்.

  31. சந்தர்ப்பவாதிகளை சரியாகவே அடையாளம் கண்டு சாடியிருக்கிறீர்கள்.முத்துக்குமார் இருந்திருந்தால் கருணாநிதி மட்டுமல்ல, இவர்களையும் அடையாளம் காட்டியிருப்பார் என நினைககிறேன் .தேர்தல்அரசியலுக்காக பிணத்தையும் அரசியல் செய்தார்கள் என்பது உயிரோடும் உயிர்ப்போடும் உள்ளவர்களால் புரிந்து கொள்ள முடியும். அனால் தொலைநோக்கில் எழுதப்பட்டது அல்ல என்றகருத்து சரியா?இந்திய விரிவாதிக்கதினை கள்ள மௌனம் எனத் தோலுரிப்பது, சர்வதேச மௌனத்தை சாடுவது போன்ற புள்ளிகளில் முதுகோமா மா.லெ அரசியலை கிரகித்தவர் என்பது வெளிப்படை அதேபொழுதில் தமிழரின் இயலாமை குற்த்து உணர்ச்சிப் பிழம்பாயும் இருக்கிறார்.முன்பு தீராநதியில் எழுதிய முத்துக் குமாரைக் கொலை செய்தோம் என்ற எனது கட்டுரையில் கொலைக் குற்றவாளிகள் யார் யார் என வரிசைப்படுத்தி இருந்தேன். அந்த வரிசையில் இப்போது இவர்களையும் இணைத்துக் கொள்ளலாம்.
    தோழமையுடன் சூரியதீபன் .

    • நான் மணி

      சூரியதீபன் உங்களது மறுமொழி தெளிவாக இல்லையே.. எதனை தவறு என்கிறீர்கள்.. யாருடையதை சரியான மா.லெ பார்வை என்றும் அதனை எப்படி கண்டுணர்ந்தீர்கள் என்றும் விளக்கினால் விவாதிக்க விரும்புகிறேன்.

    • //முன்பு தீராநதியில் எழுதிய முத்துக் குமாரைக் கொலை செய்தோம் என்ற எனது கட்டுரையில் கொலைக் குற்றவாளிகள் யார் யார் என வரிசைப்படுத்தி இருந்தேன். அந்த வரிசையில் இப்போது இவர்களையும் இணைத்துக் கொள்ளலாம்..//

      நான் மணி

      மேற்கண்ட தங்களது மறுமொழியில் இணைத்துக் கொள்ளலாம் என தாங்கள் குறிப்பிட்டது வினவு தோழர்களை எனப் புரிந்து கொண்டு பேசி வருகிறேன். எனது புரிதல் தவறு என்றால் உடனடியாகத் தெரிவித்தால் நான் எனது விவாத்த்தை தொடராமல் இருக்கவும், எனது இத்தவறான புரிதலுக்காக வருத்தம் தெரிவிக்கவும் வாய்ப்பாக இருக்கும். ஏனெனில் என்னுடைய முந்தைய பின்னூட்டம் ஒன்று நீக்கப்பட்டுள்ளது. அதனால்தான் எனக்கு தவறாக புரிந்து கொண்டேனா எனச் சந்தேகமாக உள்ளது. உதவுவீர்கள் என நம்புகிறேன்.

      • மணி, தோழர் சூரியதீபன் குறிப்படும் ‘இவர்கள்’ கட்டுரை குறிப்பிடும் சந்தர்ப்பவாதிகளை மட்டும் குறிக்கிறது. வினவை அல்ல.

  32. ///முத்துக்குமார் வீரவணக்க நிகழ்விற்கு தமிழக அரசு தடை

    தியாகி முத்துக்குமார் அவர்களின் ஓராண்டு நினைவு நாள் நினைவு கூறப்படவிருக்கிறது. இந்த நினைவுநாளை தமிழகத்திலுள்ள எமது உறவுகளும் நிகழ்த்துவதற்கு பல ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள்.

    இருப்பினும் அதனை நிகழ்த்துவதற்கு தமிழக காவற்துறை அனுமதி மறுத்திருப்பதாக///

    ஈழத்தில் பிறந்தவர்களெல்லாம் ஒடி ஓடி அகதி அடிக்க தொப்பிள் கொடி உறவு என்பதற்காக உயிர் நீத்த வீரத்தமிழ் மக்கள்

    முத்துக்குமாருக்கும் ஏனைய குமாரர்களுக்கும் எமது வீரவணக்கம்

  33. இவை எல்லாம் அச்சு ஊடகங்களிலும் வெளிவந்தால் தான் துரோகத்தனங்களை சாதாரண மக்களும் அறிய முடியும்.

  34. முத்துக்குமாருக்கு வீரவணக்கம்…..

    மிக அருமையான கட்டுரை
    துரோகிகள் வீழ்வார்கள்

  35. தோழர் மணிக்கு,அந்தக்கடிதம் அரசியல் தொலைநோக்குடன் எழுதப்பட்டதல்ல என்ற கருத்து சரியா என்றுதான் கேள்வி எழுப்பியிருந்தேன்.இந்திய விரிவாதிக்கம் பற்றியும் அதன் சதிகள் பற்றியும் முத்துக்குமார் அம்பலப்படுத்தினார். சர்வதேச ஜாம்பவான்கள் பற்றியும் விமரிசித்திருந்தார். இந்த ஞானம் என்பது தானாக உருவானதல்ல. ஆசிரியர் தம்ழ்மாறனோடு தொடர்பிலிருந்தபோது ,அவர் த.நா. மா.லெ.அமைப்பில் செயல்பட்டகாலத்தில் அந்த வகுப்பில் பார்வையாளராக இருந்து கவனித்தவர். பின்னர் வழ்வின்போருட்டு அவர் சென்னை வந்து விடுகிறார். அதனுள்ளேயே தொடர்ந்திருந்தால் மாரக்சிய வல்லமை பெற்றிருக்க கூடும்.அதேபொழுதில் உணர்ச்சிக் கொந்தொளிப்போடும் இயங்கக் கூடியவர்.. ஒரு எல்லைவரையான சமூக அறிவியலும் உணர்ச்சிகரமான செயல்பாடுகளும் இணைந்தவராக வெளிப்பட்டார். தோழமையுடன் சூரியதீபன்.

  36. தியாகி முத்துக்குமரா உன்னிடம் மன்னிப்பு கேட்கும் தகுதி கூட எங்களிடம் கிடையாது.

  37. நான் மணி

    நல்லது சூரியதீபன். தங்களை மார்க்சிய லெனிய அமைப்பு என்று அழைத்துக் கொள்ளும் தாங்கள் தங்களது அரசியல் வகுப்பில் பார்வையாளராக வந்தால் கூட ஒருவர் மா.லெ. சிந்தனையில் தேறிவிட முடியும் அல்லது சரியானதை கண்ட்டைய முடியும் என்பதை அவர்தம்மின் எழுத்து வழி நிரூபிப்பதுதானே சரியானது. இந்திய விரிவாக்கத்தை அம்பலப்படுத்தும் அதேநேரத்தில் இந்திய நலன்களுக்கு உகந்த வகையில் ஈழம் அமையும் என உறுதிமொழி தந்த புலி ஆதரவு பற்றி என்ன சொல்லி உள்ளார் கடித்த்தில் எனப் பார்த்தீர்களா இன்னும் பல விமர்சனங்கள் உள்ளது. ஆனால் அவை இரண்டாம்பட்சமானவை என்பதால் குறிப்பிடவில்லை

  38. //என்ன சொல்லி அஞ்சலி செலுத்த, தமிழகத்தின் ஈழ ஆதரவுப்போராட்டத்தில் உன்னை மிஞ்சிய போராளி இல்லை என்றா?//

    //ஆயிரமாயிரம்பேரைக் கொன்ற பேரினவாதம் கடைசியில் தமிழீழத் தேசியத்தின் ஆத்மாவை முள்ளிவாய்காலில் வைத்து தன் கடமையை முடித்துக்கொண்டது என்ற தகவலைச் சொல்லி அஞ்சலி செலுத்தவா? //

    //இன்போதமிழுக்காய், தமிழகத்திலிருந்து சட்டவாளர் மணிசெந்தில். மற்றும் வில்லவன்//

    http://www.infotamil.ch/ta/view.php?2b34OSg4a4cJd4Y34beEEQM0e22o0AKdcd2AcoC3e0dg0Mqsce04cYJd2cdaMgmO20

  39. //தியாகம்” செய்ய முத்துக் குமார் போன்ற அப்பாவிகள் வேண்டும். ம.க.இ.க வினர்கள் மறந்தும் கூட இந்த மாதிரியான தியாகத்தை செய்து விட மாட்டார்கள். எப்படி முத்துக் குமார் என்ற அப்பாவியின் மரணத்தில் திருமா ராமதாஸ் நெடுமாறன் போன்றோர் அரசியல் செய்கிறார்களோ அதற்கு சற்றும் குறையாத பிழைப்புவாத அரசியல் தான் ம.க.இ. க வின் அரசியலும்.//
    சாஜ கான்

    நீங்கள் மக இக முத்துகுமாரை தீக்குளிக்க சொன்னதுபோல எழுதி இருக்கிறீர்கள்

    உங்களை போல லூசுகளுக்கெல்லாம் பதில் சொல்லும் வினவுக்கு எனது பாராட்டுக்கள்

    எல்லாரும் சாகும் போது நீங்க கொள்ளி வைக்க் வறீங்களா சாஜகான்

  40. முத்துகுமார் ஒரு முழு கிறுக்கன் … அவனுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் அரை கிறுக்கன்கள் நீங்கள்….
    அவன் ஒரு கேனை என்பற்கு
    “இந்திய விரிவாக்கத்தை அம்பலப்படுத்தும் அதேநேரத்தில் இந்திய நலன்களுக்கு உகந்த வகையில் ஈழம் அமையும் என உறுதிமொழி தந்த புலி ஆதரவு பற்றி என்ன சொல்லி உள்ளார்”..இதை விட என்ன சாட்சி வேணும்… இதெல்லாம் விளங்குபவனுக்கு .. தெரிந்த ஒரே வழி தன்னை எரிப்பது தான் 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 இவன் மாதிரி முட்டாளுகள் உலகத்திற்கு செய்யும் ஒரே நன்மை இப்படி செத்து போவது தான்… இருந்தும் பூமிக்கு பாரம் தான் 🙂
    இதற்காகவே நான் முத்துக்குமாரை போற்றுகிறேன்.. சீக்கிரமாக இடத்தை காழிசெய்ததற்காக … வாழ்க முத்து குமார்.. இங்குள்ள அவனின் ஆதரவாளர்களும் சீக்கிரம் அவனை மாதிரி தியாகம் செய்யவேண்டும் …

    • இவ்வளவு கீழ்த்தரமாக, தரமாக சிந்திக்க எப்படி உங்களால் மட்டும் முடிகிறது…………

      முத்துக்குமார் செயத தியாகத்தை கொச்சைப்படுத்த உங்களுக்கு என்ன தகுதியிருக்கிறது………..

      குஜராத்தில் நம் இஸ்லாமிய சகோதரர்கள் கொல்லப்பட்டால் எங்களுக்கு வலிக்கிறது……….நாங்கள் அவர்களை எம் மனித இன சகோதரர்களாகவே கருதுகிறோம்……..பார்ப்பனீயத்திற்கு பலியாகிவிட்டார்களே என்று கொதிக்கிறோம்……….

      ஆனால், உங்களை போன்ற குப்பைகளுக்கு நண்பர்களானால்……………

      நல்ல வேளை உலகை காலி செய்துவிட்டார்கள் என்றுதான் சிந்திக்க வேண்டும்

  41. முத்துக்குமார் தியாகம் பற்றியும், இசுலாமிய பிற்போக்குவாதிகளின் இது தொடர்பான விமர்சனத்திற்கும், கம்யூனிஸ்ட்களின் போலி முகர் மற்றும் ஆண்மையற்ற செயலுக்கும் பிஜேவின் சிறு வீடியோவுடன் எமது இடுக்கையில் பதில் உள்ளது.படிக்கவும்.

  42. ”புலித் தலைவர் மீதுள்ள மரியாதை அளவுக்கு அதிகமாகவேபிரச்சாரப் படுத்தப் படுகிறது என்றே கருதுகிறேன்” 
    உண்மைதான். இருந்தபோதிலும் சாமானியன் இதை உணர்ந்திருக்கவில்லையே.

  43. உணர்வு பூர்வமாக மட்டுமே சிந்திப்பதால் வரும் விளைவுகள். ஒன்று முத்துகுமாரின் மரணம் இன்னொன்று இந்த மாதிரி கட்டுரைகள். அறிவு பூர்வமாக செயல்பட்டால் மட்டுமே சாதிக்க முடியும். சாவு ஈழ பிரச்சனைக்கு தீர்வாகாது என்பது பல வருடங்களுக்கு முன்பே நிரூபணமானது… அதன் பின்னரும் இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவது, மற்றும் அதனை “தெய்வீக படுத்துவது” (இந்த மாதிரி கட்டுரை மூலம்) தவறு….

Leave a Reply to பிரகாஷ் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க