privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்தி.மு.கதி.மு.கவில் குஷ்புவா, குஷ்புவுக்கான தி.மு.கவா?

தி.மு.கவில் குஷ்புவா, குஷ்புவுக்கான தி.மு.கவா?

-


vote-012எதோ ஒரு பெந்தகோஸ்தே சுவரொட்டி! உற்றுப் பார்த்தால் சுவிஷேகராக நம்ம குமரி முத்து. அதாங்க ஒன்றறைப் பார்வையுடன் WinAmp தீம் மீயுசிக் போல சிரிப்பாரே, மறந்துவிட்டீர்களா? தி.மு.கவின் பிரச்சார பேச்சாளராகவும் குமுரி முத்துவை அறிந்திருக்கிறேன். தகவல் பிழை என்றால் லக்கிலுக் திருத்துவார். அவர் வேறு எதையும் தி.மு.கவில் திருத்த முடியாது என்பது வேறு விசயம்.

சினிமாவில் பிரபலமாகி சுவிஷேகர்களாக ஏவி.எம்.ராஜன், தீபா, நக்மா இன்னும் நமக்கு தெரியாமல் பலர் இருக்கலாம். சினிமா உலகிலிருந்து கர்த்தரின் ராஜ்ஜியத்திற்கு அவர்கள் இடம்பெயர்வது ஒரு சுவாரசியமான ஆய்வுக்குரியது. அதை விடுத்தால் சினிமா பிரபலங்கள் சந்தை ஓய்ந்ததும் இப்போது தொலைக்காட்சிக்கு ஒதுங்குகிறார்கள். முன்பு அரசியலுக்கும் ஒதுங்கினார்கள்.

சென்ற தேர்தலில் சிம்ரன், கோவை சரளா, முரளி, செந்தில் என்று அ.தி.மு.க களை கட்டியபோது தியேட்டரில் சினிமா, பத்திரிகையில் சினிமா, தொலைக்காட்சியில் சினிமா, இப்போது அரசியல் கூட்டத்திலுமா என்று சிலர் அதிர்ந்திருக்கலாம். பலரும் இரசித்திருப்பார்கள் – அதிலும் சிம்ரன் ஸ்டைலாக தமிலில் இரட்டை லீஃப்புக்கு ஓட்டு கேட்டது நாகப்பட்டினம் சுனாமி காட்சிகளை விட தமிழ் மக்களிடம் பசுமையாய் பதிந்திருக்கும்!

இருந்தாலும் தி.மு.கவில் இருக்கும் சினிமா பிரபலங்களை, நெப்போலியன், சந்திரசேகர் போன்றவர்களை அ.தி.மு.க போலவே மதிப்பிட முடியாது. அவர்களிடம் கொஞ்சமாவது திராவிட பூண்டு வாசனை அடிக்கும். குமரி முத்துவும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். தீப்பொறி அ.தி.மு.கவுக்கு கட்சி மாறியது ஒரு ரகமென்றாலும் குமரி முத்து இப்படி ‘பகுத்தறிவு’ இயக்கத்திலிருந்து சம்மர்சால்ட் அடித்து அய்யோ பாவம் பெந்தகோஸ்தே அழுகைக்கு எப்படி போனார்?

யோசித்துப் பார்க்கையில் குஷ்பு இருக்குமிடத்தில் குமரிமுத்துவுக்கு என்ன வேலையிருந்திருக்கும்? சாமானியர் குமரி முத்துவின் கட்சியாய் இருந்த தி.மு.க இப்போது சீமான்கள்-சீமாட்டிகளின் கட்சியாக நிலைபெற்றுவிட்டதுதான் காரணமோ?
___________________________________________________________

குஷ்பு தி.மு.கவில் சேர்வது உறுதியானதும் அறிவாலயம் அல்லோகலப்பட்டது. தி.மு.கவின் உயர்மட்டக்குழு சந்திக்கும் முக்கியமான இடம் காமராக்களின் மின்னும் புனித ஒளி பட்டுத்தெறிப்பதற்கு ஏற்ப பயபக்தியுடன் தயார் செய்யப்பட்டது. எல்லா அமைச்சர்களும், பகுதித் தளபதிகளும் வெள்ளை வெளேர் உடைகளுடன் கடமையுணர்வோடு ஆஜர்.

நெற்றிப் பொட்டு, மனைவிமார்களின் சுமங்கலிப் பொட்டு, தாலி, பட்டுச்சேலை சகிதம் அம்மா அக்மார்க் தமிழ்பெண்ணாக வருகிறார். அய்யாவுக்கும், தளபதிக்கும் சால்வை போர்த்துகிறார். தளபதி தி.மு.க உறுப்பினர் படிவத்தை நிரப்பி அம்மையாரின் கையெழுத்தை கோருகிறார். அம்மா எழுத்து கோலுக்காக நிமிர்ந்த போது தளபதி தனது எழுத்தாணியையே தருகிறார். உறுப்பினர் கட்டணத்திற்கான தொகையையும் தளபதியே சட்டைப் பையிலிருந்து எடுத்து தருகிறார். அன்பழகன், துரை.முருகன், ஸ்டாலின், கருணாநிதிக்கு அருகே அம்மாவும் உயர்மட்டக்குழு ஆலோசகர் போல அமர்ந்திருக்க ஒளிப்படக் கருவியின் மின்னல்கள் வெட்ட, ஊடகங்களில் செய்திகள் இடியாய் ஒலிக்கின்றன.

தி.மு.கவில் குஷ்புவா, குஷ்புவுக்கான தி.மு.கவா?
____________________________________________

குஷ்புவின் திருமணத்திற்கு முந்தைய பாதுகாப்பான உறவு, தமிழச்சிகளின் கற்பு, பா.ம.க, வி.சிக்களின் எதிர்ப்பு, 23 வழக்குகள், உச்சநீதிமன்ற தீர்ப்பு எல்லாம் எல்லாரும் அறிந்திருப்பீர்கள். அந்தியூர் விஜயாவை விட குஷ்புவின் ‘தியாகம்’ ததும்பும் போராட்டம் தமிழ் மனங்களுக்கு முக்கியமானதில்லையா? இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தை குஷ்புவும் இழக்கத் தயாரில்லை.

அரசியலென்றால் சாக்கடை என்ற ஆனந்த விகடனது நடுத்தர வர்க்க சலம்பல்கள் மேல்தட்டுக்கு பொருந்தாது. தங்களது தொழிலுக்கு பாதுகாப்பாகவோ, தொழிலை விரிவுபடுத்தவோ, அம்பானி, மல்லையா, இராமசாமி, அமிதப், வினோத் கன்னா, சஞ்சய் தத், ஹேமமாலினி போன்ற முதலாளிகள், நட்சத்திரங்களெல்லாம் எம்.பிக்களாகவோ இல்லை அரசியல் கட்சிகளின் லாபி பிரச்சார்களாகவோ பவனி வரும்போது, கோவில் கட்டப்பட்ட நாட்டில் இலட்சகணக்கான இரசிகர்களைக் கொண்ட குஷ்பு, சொந்தப்படம் எடுக்கும் வண்ணம் ஆளாகிவிட்டவர், இல்லத்தரசிகளை ஜாக்பாக்ட் அடிக்க வைத்தவர் இந்த பொன்னாண தருணத்தை இழப்பாரா என்ன?

இந்தியா டுடே பத்திரிகை திருமணத்துக்கு முந்தைய பாதுகாப்பான உறவு குறித்து, குஷ்புவை விருந்தினர் பக்கமாக எழுதச் சொன்னதற்கு என்ன காரணம்? இந்தியா டுடே கடந்த இருபதாண்டுகளில் வளர்ந்துவிட்ட மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தின் அபிலாஷைகளை அப்பட்டமான பிரச்சாரமாக, வாய்ப்புகளாக, அறிமுகங்களாக வாரம் தோறும் பளபளப்பு தாளில் வடிக்கின்ற பத்திரிகை. உலகமயமாக்கத்தால் ஆதாயம் அடைந்த பிரிவினருக்கு இந்தியாவின் சமூக அமைப்பு எண்ணிறந்த வாய்ப்புளை உருவாக்கி கொடுத்திருப்பதை பறைசாற்றுவதே அதன் நோக்கம். அப்படியே அதைவைத்து நுகர்வு கலாச்சாரத்தை விற்பனை செய்யும் முதலாளிகளின் விளம்பரங்களை வைத்து கல்லாவும் கட்டும்.

இந்த திட்டத்திற்கு உட்பட்டே செக்ஸ் சர்வேக்களும் விதவிதமான ஆணுறை விளம்பரங்களுக்கிடையே கொட்டப்படுகின்றன. எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வின் பின்னே ஆணுறைகளில் விற்பனையும் இருக்கிறது, அதை சற்றே பயத்துடன் அணுகும் பெண் மனங்களும் இருக்கிறது. விற்பனைக்காக வாடிக்கையாளரின் மனங்களைத் தயார் செய்யும் பணிதான் இந்தியா டுடேயின் ஊடக தந்திரம். அப்படித்தான் அங்கே குஷ்பு வருகிறார்.

குஷ்புவே திருமணத்திற்கு முந்தைய உறவை பாதுகாப்பாக பின்பற்ற சொல்லிவிட்டார் என்றால் அது ஆணுறைகளின் விற்பனையை தமிழ் சென்டிமெண்ட்டை தாண்டி அதிகரித்து விடதா என்ன? இந்தப் பிரச்சினையில் சீமாட்டிகளுக்கே உரிய முறுக்கு குஷ்புவிடம் வெளிப்பட்டாலும் அதை வைத்து தான் ஒரு முன்னுதாரணமான ஆளுமையாக முன்னிறுத்தப்படுவோம் என்பதும் அவருக்கு சற்று தாமதமாக கூட தெரியாமலா போயிருக்கும்? சில தற்செயலான விசயங்களுக்கு பின்னே திட்டமிட்ட உத்தி அவசியமாக தோன்றலாம் என்பது அரசியலில் சகஜம்.

தமிழ் கற்புக்கரசர்களின் கூச்சலைத் தவிர்த்து தமிழகம் ஒன்றும் அதனால் அதிர்ந்துவிடவில்லை. குஷ்புவின் தொலைக்காட்சித் தொடர்கள் எல்லாம் இந்த விளம்பரத்தை வைத்து சூடு பிடித்தன. ராதிகா போல குஷ்புவும் தமிழ் இல்லத்தரசிகளின் நேசத்திற்குரிய நட்சத்திரமாக நிலைபெற்றார். தொழிலிலும் ராதிகா அளவுக்கு இல்லையென்றாலும் ஒரு தொழில் முனைவராக ஆளானார். பொருத்தமாக அவரது இயக்குநர் கணவரும் இப்போது நடிகராக நிலைபெற்றுவிட்டார்.

மேல்தட்டினரது தொழிலும், அதற்கேற்ற பண்பாடு குறித்த சிந்தனைகளும் கட்டுப்பாடாய் சேர்ந்தே இயங்குகின்றன. ஒன்றின் தேவையை பிறிதொன்று நிறைவு செய்கின்றது. குஷ்புவின் கற்பு விவகாரத்தில் இந்த உள் கூட்டணியை பலரும் காணாமல் அதை வெறும் பாலியல் சுதந்திரமாகவோ, இல்லை கற்பாகவோ மட்டும் பார்க்கிறார்கள். ஆனால் குஷ்பு அதைத் தாண்டி அந்த உள்கூட்டணியின் நோக்கில் பார்த்திருக்கிறார் என்பது இப்போது தெரிகிறது.
________________________________________________

ஒரு சீமாட்டி கவிதை எழுதினாலும், கற்பு குறித்து பயமுறுத்தினாலும் அவர்களை மாதர் குல மாணிக்கங்களாய் சம்பளம் வாங்காமால் இலவசமாய் பாராட்ட தமிழகத்தில் சில பின்நவீன பண்டிதர்கள் உண்டு. தங்கள் வாழ்க்கையில் கலகத்தை சொற்களாய் மட்டும் பருகியிருப்பவர்களுக்கு இத்தகைய ஜோடனைகள் ஆசுவாசப்படுத்துகின்றன. ஆனால் இவையெல்லாம் இந்திய முதலாளிகளின் அஜெண்டாவில் விற்பனைத் தந்திரங்களாக மிகச் சாதாரணமாக இருக்கின்றன என்பதோ, அதன் விற்பனையாளர்களாக உச்சநீதிமன்றம், காங்கிரசு, இந்தியாடுடே, தி.மு.க இருக்கின்றன என்பதோ இந்தக் கலக கடுகுமணிகளுக்கு புரிவதில்லை.

உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்ததுமே தனியாளாய் தான் நடத்திய நெடும் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் பரிசு என்பதாய் குஷ்பு வீரவசனம் பேசிய போது “இனி அரசியல்தான், காங்கிரசில் சேருவேன்” என்பதை பக்காவான டைமிங்கில் நெத்தியடியாய் அடித்தார். கட்சி, அரசியல், பிரபலம், சர்ச்சை எல்லாம் சேர்ந்து டெல்லி, பாராளுமன்ற உறுப்பினர், முடிந்தால் மந்திரி என்பதெல்லாம் அவருக்கு அவ்வ்வளவு கஷ்டமான விசயங்களில்லையே?

ஆனால் திடீரென்று தி.மு.கவை எப்படி தேர்ந்தெடுத்தார்? அல்லது தி.மு.கதான் காங்கிரசாய் மாறியது எப்படி?
__________________________________________________

எப்படிப் பார்த்தாலும் இது சரியான பொருத்தமான முடிவுதான். இதன் சாமர்த்தியம் தி.மு.கவிற்கா, இல்லை குஷ்புவுக்கா இல்லை இருவருக்குமே கூட இருக்கலாம்.

“உலக அளவில் சிந்தித்து உள்ளூர் மணத்துடன் விற்கவேண்டும்” என்று சொல்வார்களே அதற்கு பொருத்தமான அரசியல் எடுத்துக்காட்டாய் குஷ்பு தி.மு.கவில் இணைந்ததை சொல்லலாம்.

காங்கிரசில் இணைவேன் என்று அவர் சொன்னது தமிழகத்திற்கு அவ்வளவு எடுப்பாக பொருந்தாது. ஒருவேளை அவர் இந்தி நட்சத்திரமாகி, டெல்லியில் வாழ்ந்து, கற்பு மேட்டருக்காக அவரை லல்லு, மாயாவதி எதிர்த்திருந்தால் காங்கிரசில் சேருவது பொருத்தமாக இருந்திருக்கும். தமிழகத்தில் காங்கிரசு ஒரு கட்சியென்றே கூற முடியாது. பல ரோட்டரி, லயன் கிளப் கனவான்கள் ஆளுக்கொரு தொழிலையும், ஒரு கோஷ்டியையும் வைத்து கருணாநிதியின் டெல்லி வருமானங்களுக்காக காட்டும் கருணையில், இங்கே ஒரு கட்சியை சத்தியமூர்த்தி பவனை தலைமையிடமாகக் கொண்டு நடத்தி வருகிறார்கள்.

ஆக தமிழக காங்கிரசின் தலைமைகள், கோஷ்டிகள், வாரிசுகள் எல்லாம் ஹவுஸ்ஃபுல்லான நிலையில் குஷ்பு காங்கிரசை தெரிவு செய்திருந்தால் அவரது எதிர்காலக் கனவுகளுக்கு வாய்ப்பிருந்திருக்காது. இந்த இடத்தில்தான் தி.மு.கவை அவர் தெரிவு செய்தது ஒரு நிர்ப்பந்தம் என்று சிலர் நினைக்கலாம். இல்லை அது சாமர்த்தியமான தெரிவு என்கிறோம்.

காங்கிரசு ஒரு தரகு முதலாளித்துவக் கட்சி அல்லது இந்திய முதலாளிகளின் பிரதிநிதியாய் செயல்படும் கட்சி. பா.ஜ.கவும் அப்படித்தான். என்ன இங்கு தீவிர இந்துத்துவம் என்றால் அங்கே கொஞ்சம் மிதவாக இந்துத்வம். மற்றபடி இருவருமே முதலாளிகளின் விருப்பத்திற்குரிய பிரதிநிதிகள்தான்.

தி.மு.க, அ.தி.மு.க போன்ற பிராந்திய கட்சிகள் இப்படி அகில இந்திய அளவில் செயல்படும் முதலாளிகளின் பிரதிநிதிகளாக செயல்படுமா என்ற கேள்வி இப்போது இல்லை. வள்ளலார், ஆர்.எஸ்.எஸ், ஜெயமோகன் வாசகர் என்று முகம் காட்டும் தரகு முதலாளியான பொள்ளாச்சி மகாலிங்கம் அமெரிக்க கோக்கின் முகவராக இருக்கும் போது, இந்த கட்சிகள்தான் தமிழகத்தில் தமது அடியாட்களாக அரசியல் செய்வார்கள் என்பதை முதலாளிகள் உணர்ந்தே இருக்கிறார்கள். சரத்குமார் அ.தி.மு.கவில் சேர்வதற்கு விஜய் மல்லையா தனி விமானம் அனுப்புவதும், தொலைத்தொடர்பு அமைச்சர் ராஜா தனியார் தொலைத்தொடர்பு முதலாளிகளின் ஏவலாளாக பணிபுரிவதும் எதைக்காட்டுகிறது?

மேலதிகமாக இந்த இருகட்சிகளின் தலைமையுமே தரகு முதலாளிகளாக உயர்ந்து விட்டனர். தொலைக்காட்சிகள், மதுபான ஆலைகள், தெற்காசிய பணக்காரர்களின் பட்டியல் என்று ஆளாகிவிட்ட நிலையில் இனியும் தி.மு.கவை பாமரர்களின் கட்சி என்று அழைப்பதை அக்மார்க் தி.மு.க தொண்டன் கூட ஒத்துக் கொள்ளமாட்டான். அ.தி.மு.க தொண்டனும் அப்படித்தான். காங்கிரசின் பொருளாதாரக் கொள்கைகளில் கடுகளவு கூட தி.மு.கவிற்கு மாறுபாடில்லை. கனிமொழி தனது கன்னி பாராளுமன்ற பேச்சைக் கூட இந்திய அமெரிக்க அணுசக்தி அடிமை ஒப்பந்தத்தை பாராட்டுவதற்குத்தான் அர்ப்பணித்தார். மதுரை ரவுடி அழகிரி இன்று இந்திய அரசின் அமைச்சராக ஆஸ்திரேலியா, அமெரிக்காவிற்கு பறக்கிறார். சென்னை வரும் பன்னாட்டு முதலாளிகளை முதல் ஆளாய் ஸ்டாலின் வரவேற்கிறார். ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு நிறைவேறுகின்றன.

விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்ற பிரச்சினைகளுக்காக போலிக் கம்யூனிஸ்டுகள் காட்டும் வறண்டு போன அழுகை எதிர்ப்புகள் கூட கருணாநிதியிடமிருந்து வருவதில்லை. தமிழ், தமிழினம், செம்மொழி மாநாடு, புதிய சட்டப்பேரவை வளாகம் என்று லோக்கல் ஃப்ளேவரில் தி.மு.க முதலாளிகளின் பாதந்தாங்கியாக மாறிவிட்டது. ஆனானப்பட்ட மவுண்ரோடு மகாவிஷ்ணு கூட இன்று கருணாநிதியன் புகழ்பாடவேண்டுமென்றால் அது வர்க்க நலனின்றி சாத்தியமில்லை.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம், மக்களுக்கு தடையற்ற மின்தடை என்று இருந்தாலும் ஊடகங்களில் இலவச தொலைக்காட்சிதான் சாதனையாக வலம் வருகிறது. கிட்டத்தட்ட எல்லா பத்திரிகைகளுமே இன்று தி.மு.கவின் கொ.ப.செயலாளர்களாக இருப்பதும் தி.மு.க முதலாளிகளின் கட்சியாக மாறிவிட்டதும் வேறு வேறல்ல.

இன்று தி.மு.கவின் கூட்டங்கள் ஒட்டுமொத்தமாக கான்ட்ராக்ட்டுக்கு விடப்பட்டு நடத்தப்படுகின்றன. தோரணம் கட்டுவதோ, சுவரொட்டி ஒட்டுவதோ, பிளக்ஸ் பேனரை நிறுத்துவதோ இன்று தி.மு.க தொண்டன் செய்யும் வேலையில்லை. மேல்மட்டம் தரகு முதலாளிகளாக உருவெடுத்த மாதிரி அடுத்த தலைமை லோக்கல் முதலாளிகளாக மாறிவிட்டனர். சுயநிதிக் கல்லூரி இல்லாத தி.மு.க தலைவரைப் பார்ப்பது கடினம்.

தி.மு.கவின் கவுன்சிலர் கூட இன்று ஸ்கார்ப்பியோவிற்கு கம்மியாக பவனி வருவதில்லை. வட்டத்தலைவர் பதவி கூட பெரும் செலவழிப்புகளுடன் அடையும் ஒன்றாக மாறிவிட்டது. சலூனில் முரசொலி படித்து விவாதிக்கும் தொண்டனை இன்று வலைவீசித் தேடினாலும் காணமுடியாது. ரியல் எஸ்டேட் தரகனாக வேலை பார்த்துவிட்டு சன் டி.வியோ, கலைஞர் டி.வியோ பார்ப்பவன்தான் இன்று உண்மையான தி.மு.க தொண்டன்.

இப்படி காங்கிரசு போல தி.மு.கவும் மாறிவிட்ட நிலையில் தமிழகத்தில் முதலாளிகளுக்கான தீர்மனகரமான கட்சியாய் ஆதிக்கம் செய்யும் நிலையில் குஷ்பு எடுத்திருக்கும் முடிவை ஒரு நிர்ப்பந்தம் என்று பரிதாபப்படுபவர்கள் அறிவிலிகளே.

அடுத்து இந்தியாடுடேயின் நாயகியான குஷ்புவை தி.மு.கவும் பயன்படுத்தவேண்டியிருக்கிறது என்பது அதன் வர்க்க சாய்வுக்கு அடுத்த எடுத்துக்காட்டாகும். என்ஜியனரிங், மருத்துவம், அமெரிக்கா, பங்குச்சந்தை என்று மாறிவிட்ட மேல்தட்டு நடுத்தரவர்க்கமும், இந்த வாழ்வை எட்ட முடியாவிட்டாலும் இதையே முன்னுதாரணமாக கொண்டு வாழும் நடுத்தர வர்க்கமும் இன்று தமிழகத்தின் முக்கிய பகுதி மக்களாகி விட்டனர். இவர்களது உலகத்தை ஊதிப்பெருக்கும் இந்தியாடுடே போல, தி.மு.கவும் அதைச் செய்யவேண்டியிருக்கிறது.

இந்த வர்க்கத்திற்கு இனியும் தமிழ், தமிழன் என்ற உணர்ச்சிகரமான ஆனால் என்றோ உணர்ச்சியை இழந்துவிட்ட மனோகரா டைப் வசனங்களெல்லாம் பலனில்லை. சொந்த வாழ்க்கை முன்னேற்றத்தை மட்டுமே தாரக மந்திரமாக வைத்து வாழும் மக்களிடையே அப்துல் கலாம் மட்டுமல்ல, குஷ்புவும் தேவைப்படுகிறார். அதனால்தால் குஷ்பு துணிந்து விடுதலை சிறுத்தைகளையும், பா.ம.கவையும் தி.மு.கவில் சேர்ந்த பிறகு கேலிசெய்கிறார்.

தான் ஒரு தமிழ்ப் பெண்ணாகவே வாழ்கிறேன் என்று அவர் சொல்வதெல்லாம் பிரச்சினையல்ல. அவையெல்லாம் தி.மு.க என்ற உள்ளூர் மணத்தின் பொருட்டு ஏதாவது சொல்ல வேண்டியிருக்கிறது என்பதே. ஆனால் அவர் கூறிய “பாதுகாப்பான உறவு குறித்து தனது கருத்தை மாற்றவில்லை” என்பதும், “தி.மு.கதான் தனக்கு கருத்துச்சுதந்திரம் கொடுக்கக்கூடிய ஒரு கட்சி” என்பதும்தான் முக்கியமான விடயங்கள். கருணாநிதியும், கனிமொழியும் கூட சங்க கால கள்ள காதல் குறித்த தமிழர்களது மரபை குஷ்புவுக்காக மீள் நினைவு செய்கிறார்கள். குஷ்புவின் கருத்துரிமையும், தி.மு.கவின் புதிய வர்க்க சேர்க்கைகளும் இப்படி பரஸ்பரம் கச்சிதமாகப் பொருந்துகின்றன. காங்கிரசுக் கட்சியின் முதலாளித்துவ தாராளவாத ஜனநாயகம் என்ற பண்பாடு திராவிடக் கட்சியான தி.மு.கவிற்கும் உண்டு என்றால் அது ஒரு பெரிய மாற்றம் இல்லையா?

இப்போது சொல்லுங்கள்!

தி.மு.கவில் குஷ்புவா, தி.மு.கவுக்காக குஷ்புவா?

____________________________

  1. நல்ல பதிவு. திமுக அதிமுக பாமக என்ற எல்லா க வும் முதலாளித்துவ கம்முனாட்டிகள் என்று தெளிவாக தெரிவித்து உள்ளீர்கள்.

  2. //குமரி முத்து இப்படி ‘பகுத்தறிவு’ இயக்கத்திலிருந்து சம்மர்சால்ட் அடித்து அய்யோ பாவம் பெந்தகோஸ்தே அழுகைக்கு எப்படி போனார்?//
    ஏதோ இதுவரைக்கும் திமுக கட்சி காரர்கள் ,அனுதாபிகள் எல்லாம் கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் போல எதுக்கு இந்த பில்டப் ? 

    குமரி முத்து பெந்தகோஸ்தே-விலும் திமுக-விலும் ஒரு சேர இருக்க முடியாது-ண்ணு நீங்க எடுத்த முடிவா?

    அப்புறம் பகுத்தறிவு -ன்னா கடவுள் மறுப்பு மட்டும் தானா?

  3. இந்த வலைத்தளம் சொல்லுவதெல்லாம் உண்மை என்று எடுத்து விட முடியாது. இது எப்போதும் எதிர்மறையான விவாதங்கலேயே முன் வைத்து உள்ளது. இதில் எழுதும் எல்லாரும் பிச்சைகாரர்கள். ஒருவரும் சாப்பாடுக்கு வழி இல்லாதவர்கள். எப்பொதும் பணக்காகளை நையாண்டி செய்வது இந்த வலைதளத்துக்கு வேலை. புல் ஷிட்…எழுத்தாளர்கள் இந்த வலைத்தளத்தில் அதிகம் உள்ளனர். எல்லா பணகார்களும் கஷ்டப்பட்டு தான் இந்த உயரத்திற்கு வந்து உள்ளனர். உங்களைபோல் உட்கார்ந்த இடத்தில் நையாண்டி பேசவில்லை. முதலில் இந்த நையாண்டி வலைதளத்தை மூடி விட்டு பணம் சம்பாதிக்கும் வழியை பாருங்கள். இதற்கும் மேலும் இந்த வலைத்தளம் நன் பார்த்தால் கேட்ட வார்த்தை போட்டு எழுதிவிடுவேன்.

    • I too agree with Saravanan on few points. All the rich people are not bad people. Many struggled in life and become good position. Not that sitting and commenting on others.
      Anyone can crtisize others. Before that we need to think that are we alright?
      Apart from that what wrote here on Kusboo is correct only. Few bastards who made temple for Kusboo to be killed. No such guys are not necessary for this society.

    • கெட்ட வார்த்தை சரவணா,
      நீ என்ன லீனாவை விட அதில் பெரிய ஆளா! உன் உடன்பிறவாத் தலிவரும், உடன்குடிக் கோயில் தெய்வமும் எப்படி பணக்காரர்களாக ஆனார்கள் என்பதை விளக்க முடியுமா! புல்ஷிட். நீ கூடத்தான் இங்கு எதிர்விவாதம் பேசுகிறாய், முதலாளித்துவ விதிக்கு (சுரண்டல்) எதிராக எல்லா பணகாரர்களும் கஷ்டப்பட்டு தான் உயரத்திற்கு வந்து உள்ளனர் என்று.  ஒருவேளை கஷ்டப்பட்டு அடுத்தவனை சுரண்டி வந்தார்கள் என்கிறாயா! சர்தான். நண்பா!

    • கட்டுப்பாடற்ற ஆண்-பெண் புணர்ச்சி,ஐடி என்ற ஈவுஇரக்கமற்ற வணிகம் இன்று மிகப் பெரிய சுரண்டல்காரணாய் டெட் ஈவிலாய் மாறிவிட்டதே,ஆமா பிரபு விக்கு தெரியுமா

  4. Vinavu, A fitting comment on TN’s rotten politics ! Anyway Moona Kaana, Adhanga nambha mudalvar Kushboo vai rombha valara vidamattaru YEnna avarukku yaarume stalinukku pottiya vandha pidikkadhu! Tamilnattai thavira Indiale verengum ivvalavu tharam kettuppogalai arasiyal ! Thanks for exposing these ,..

  5. கருணாநிதியை உற்சாகப்படுத்துவதற்காக வாங்கப்பட்ட அல்லது வந்த புதிய “டானிக்” குஷ்பு. ரம்பா டானிக் காலாவதி ஆனதால் புதிய டானிக் வாங்கப்பட்டுள்ளது.

  6. இன்று உண்மை கம்யூநிஸ்டுகள் இருக்கிறார்களா ? அவர்களை அடையாளம் காட்ட முடியுமா ? கலைஞரை விட சிறந்த , கம்யுனிஸ்ட் இன்று நம் நாட்டில் யார்? கை ரிக்ஷா ஒழிப்பு முதல் ஊரக வேலை திட்டம் வரை அவரது கனவு திட்டங்கள் முலம் பாமரர்கள் பயன் பெற்று வருகின்றனர் . அவர் மேல் குறைகள் சொன்னாலும் , மக்கள் நலத் திட்டங்களை , கலைஞரைப் போல அமல் படுத்தியவர் யார்?

    மேலும், இன்றைய உலகில் பணக்காரர்களை , முதலாளிகளை தூற்றுவது , பரிகசிப்பது எல்லாமே சோம்பேறிகளின் வேலையே! ஆலையின் முதலாளி இன்று ஆலையின் முதல் தொழிலாளி ! செல்வந்தனாக மாற வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் கனவு !

    • அட்ரா சக்கை! கட்டுரையின் மையப்பொருளை இப்படி நாலுவரியில் நறுக்கென்று கூறி எமது வாதத்தை வலுப்படுத்திய நண்பர் ராமிக்கு நன்றிகள். கூடவே ஒரு கேள்வி?

      தமிழ்நாட்டில் இப்போது சுமார் ஏழுகோடி மக்கள் இருப்பதாக வைப்போம். இதில் எத்தனைபேரை கலைஞர் உதவியால் முதலாளிகளாக மாற்றுவீர்கள், அப்புறம் எல்லாரும் முதலாளிகளாக மாற்றினால் சாதா வேலைகளுக்கு ஆப்ரிக்காவிலோ, அமெரிக்காவிலோ இருந்து ஆள் இற்க்குமதி செய்வீர்க்ளா?

      • என் கருத்து மாறுபட்டது.கலைஞரின் மக்கள் நலத் திட்டங்களால் பாமரன் தன் நிலையில் இருந்து மேலே வருகிறான்! எல்லாரும் எல்லாவும் பெறும் நிலை தற்போது உள்ளது! மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒரு பயனாளி என்னிடம் தெரிவித்த கருத்து இது!செல்வந்தர் அனுபவிக்கும் பொருட்கள், மருத்துவ வசதிகள், இன்னபிர நாங்களும் பெற்று வருகிறோம் என்று அவர் கூறினார்.இதுவன்றோ கம்யூனிசம்! போராட்டம் இல்லை! கூப்பாடு இல்லை! சாப்பாடு கிடைக்கிறது! வசதி கிடைக்கிறது! அரசாங்க பணம் தான் என்றாலும் கலைஞரின் முயற்சியால் தான் இது நடக்கிறது!

        தொழில் முனைவோருக்கு எதிராக எப்போதும் கச்சை கட்டுவது , பிரசங்களுக்கு பயன்படுமே தவிர, பயன் ஏதுமில்லை. தமிழ் நாட்டில் தற்போது, எங்கு நோக்கினும் ஆட்கள் தேவை போர்டுகள்! மனிப்பூர்,அஸ்ஸாம் மாநிலங்களில் இருந்து ஆட்களை தருவித்து தொழில் திணறிக் கொண்டு நடந்து வருகிறது. சந்தேகம் இருப்பின் உங்கள் கொங்கு மண்டலத் தோழர்களை வினவுங்கள்.

        முதலாளியும், தொழிலாளியும் – கோழியும், கோழி முட்டையையும் போல! ஒன்றில்லை எனில் மற்றது இல்லை! ஆதிக்கம் செய்யும் காலம் சென்றுவிட்டது! முதலாளி தொழிலாளியை அண்டிப் பிழிக்கும் காலம் இது! கற்காலப் பேச்சுக்களில் இருந்து தற்காலத்துக்கு வாருங்கள்.! தொழிலாளி ஒருவர் முதலாளியாக வழி விடுங்கள்.

        இறுதி வரைப் போராடுவோம் என்று சொல்லி தொழிலாளியை கட்டிப் போடாதீர்! எல்லாரும் இந்நாட்டு மன்னர் ஆகும்போது, எல்லோரும் முதலாளி ஆக முடியாதா? இல்லையெனினும் முயற்சி செய்ய என்ன தடை?

        • அருமையாக சொன்னீர்கள் அருமை ராமி நண்பா. தொழிலாளிகளை
          தொழிலாளிகளாக வைத்துக்கொண்டால்தான்
          வினவை போல கம்முனி வியாதி உள்ளவர்கள் ஈன பிழைப்பை ஓட்ட முடியும்.

      • பிசாத்து….கலைஞர் உதவியை தூக்கி அந்தாண்டை வையுங்கள்….
        ஒரு அடிமட்ட கூலித்தொழிலாளி தன் உழைப்பால் வளர்ந்து தன்னிறைவு கண்ட ஒரு முதலாளியாக ஆக விட மாட்டீர்களா? ஒருவன் தன் உழைப்பின் மூலம் கிடைக்கும் ஊதியத்தில் சிக்கனமாக செலவு செய்தது போக மீதப்படும் தொகையை என்ன செய்வது? அதை சேமித்து தொழில் தொடங்கி முதலாளியாகினால் எதிர்ப்பீர்களா? அது — ம க இ க – வில் தண்டைனைக்குரிய குற்றமா? விளக்கம் தேவை, வினவு.    

        • ஒரு அடிமட்ட கூலித்தொழிலாளி தன் உழைப்பால் வளர்ந்து தன்னிறைவு காண்பதற்குரிய சீரான வழிமுறைகளை உருவாக்கி கொடுக்கவேண்டியது ஒரு அரசின் கடமை தூரதிஸ்டவசமாக இந்தியா போன்ற நாடுகளில் தொழிலாளிகளை பாதுகாக்கும் சட்டங்கள் இருந்தாலும் அவை தூங்கிக்கொண்டிருக்கின்றன.  அடிமட்டத்திலிருந்து முன்னேறுபவன் அரசியல்வாதி தொடக்கம் அடிமட்ட அதிகாரிகள் வரையிலும் சுரண்டப்படுகிறான் அவர்கள் காலைப்பிடித்து கையில் கொடுக்காதவரை முன்னேறமுடியாது. முன்னேற முயற்சிப்பவனுக்கும் அடுத்தவனை சுரண்டவேண்டிய தேவை ஏற்படுகிறது. ஒரு தொழிலாளிக்கு கொடுக்கப்படவேண்டிய கொடுப்பனவு அரசினால் நிர்ணயிக்கப்படுவதில்லை முதலாளியே நிர்ணயம் செய்கிறான் அதன்வழியே ஒரு தொழிலாளி முன்னேறும் வழிகள் ஏற்படும்போது சக தொழிலாளியின் கொடுப்பனவை தானே நிர்ணயம் செய்து அவனை சுரண்ட முடிகிறது. முதலாளித்துவ ஆட்சிநடக்கும் மேலைநாடுகளில் ஒரு அடிமட்ட தொழிலாளி தனது உழைப்பினால் உண்டு, உடுத்தி, உறங்குவதற்கு வேண்டிய கொடுப்பனவை பெறுவதற்கு அந்நாட்டு அரசுகள் பெரும் பாதுகாப்பாக செயல்படுகிறது. உழைப்பின் தராதரத்திற்கேற்ப கொடுப்பனவுகளுக்கான ஒரு தொகையை அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஜனநாயகமென்றும், மக்களாட்சியென்றும், கம்யூனிசமென்றும் பம்மாத்துக்காட்டும் இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டு அரசாட்சியில் சமீபத்தில் முதலாளித்தரத்துக்கு வந்துள்ள ஒருவனின் பாதையை கூர்ந்து பார்த்தால் சுரண்டலின் உண்மைகள் நிச்சயம் புலப்படும். ஒருவன் தன் உழைப்பின் மூலம் கிடைக்கும் ஊதியத்தில் சிக்கனமாக செலவு செய்தது போக மீதப்படும் தொகையை சுரண்டுவதற்கு வாயைபிளந்து பிசாசுகள் நிற்கும்போது சுரண்டல் முடிவில்லாது தொடர்கிறது.

        • இது தான் ஜாக்பாட் முதலாளித்துவத்தை புரியாத நம்மள மாதிரியான ஆட்களுக்கு பிரச்சனை. டாடாவும், பிர்லாவும் சைக்களில் டீ விற்று அதில் வந்த பணத்தில் மிச்சம் பிடித்து தான் டாடாவும் பிர்லாவுமாக ஆகியிருக்கிறார்கள் என்பது உண்மையென்றால் சைக்கிளில் டீ விற்கும் நூறு பேரை எனக்குத் தெரியும். ஏன் நிறைய டாடாக்கள் வரவில்லை. அப்போ டாடாவின் ‘திறமை’யும் என்று அடுத்து சொல்வீ்ர்கள்.

          மூலதனம்.
          இந்தச் சிறிய வார்த்தையில் தான் சூட்சுமம் இருக்கு. டாடா, பிர்லா வாழ்க்கை வரலாற்றை படித்தால் எங்கியாவது மூலதனம் ‘பணம் புரட்டினார்’ என்று கண்டிப்பாய் வரும். நீங்களும் நானும் 2 லட்சம் முதலீடு செய்து ஒரு சின்ன ஓட்டல் ஆரம்பித்தால் அதில் நானும் நீங்களும் வேலை செய்தே ஆக வேண்டும். அங்கே சுரண்டல் பெரிதான அளவுக்கு இல்லை (உடன் வேலை செய்யும் தொழிலாளர்களின் உழைப்பை நீங்கள் சுரண்டுகிறீர்கள் என்பது உண்மையென்றாலும்).

          டாடா, பிர்லா போன்ற பணக்காரர்கள் முதலீட்டுக்கு கஷ்டப்பட வேண்டியதில்லை. டாடா 1910களில் வெள்ளைக்கார அரசிடம் இந்தியன் ரயில்வேயை 10 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி நடத்த பேரம் பேசுமளவு அப்போதே பணம் கொழித்த கம்பெனி.
          அதனால் அவர்கள் அரசு மூலமே மற்றும் பல ஜனநாயக, சட்டபூர்வமான வழிகளிலேயே பணம் கடன் பெறலாம். நெல்லுக்கு கடன் வாங்கும் விவசாயி பத்தாயிரம் ரூபாயை திருப்பித் தர முடியாத வட்டி போல முதலாளிகளுக்கு வட்டி, ஈட்டிக்காரன் போன்ற பிரச்சனைகள் இல்லை. அரசு பார்த்துக்கொள்ளும் (முதலாளிகள் உருவாக்கிய அரசு பின்னே உங்களையா பார்த்துக்கும். ஆதாரம் வேண்டுமெனில் சமீபத்தில் வினவில் வந்த ‘டாடா உலக முதலாளியா இல்லை பிளேடு பக்கிரியா’ கட்டுரையை பார்க்கவும்). நானூறு கோடி முதல் நாலாயிரம் கோடி வரை வாங்கலாம். இருபதாயிரம் கோடி லாபம் சம்பாதிக்கலாம்.

          மூலதனம் வேண்டுமென்றால் ஒன்று பரம்பரை பணக்காரனாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் MNC பாங்கைக் கொள்ளையடித்திருக்க வேண்டும். நம்மளை மாதிரி நடுத்தர மக்கள் கொஞ்சம் நிலங்களை சொந்தமாக்கி வைச்சிருப்பாங்க.. அதை வித்து மூலதனம் ரெடி பண்ணுவாங்க. இது பெரிய கிரிமினல் குத்தமா ? இல்லை. ஆனால் நீங்கள் உருவாக்கும் தொழிற்சாலையில் பணம் போட்ட ஒரே காரணத்துக்காக உழைப்பினால் வரும் லாபத்தின் 80 சதவீதமும் உங்களுக்கல்லவா சேருகிறது. உங்கள் நெசவாலையில் பஞ்சு பிரிப்பவள் முதல், நூல் பாவு பார்ப்பவன் வரை எல்லாரும் பார்த்த வேலையில் வந்த துணியின் லாபத்தில் முதல் போட்டவனுக்குத்தான் எல்லாம். மற்றவர்களுக்கு தின்னுட்டு, தூங்கிட்டு, புள்ள பெத்துட்டு வாழற அளவு ‘கூலி’ மட்டும் தான்னு சொல்ற அநியாயத்தை செய்யறதுதான் முதலாளித்துவம்.

          இந்த உலகில் பணம் எதையும் மாற்றம் செய்துவிடாது. மனிதனின் உழைப்பு தான் எதையும் எதுவாகவும் மாற்றும். பஞ்சை நூலாக்கும். இரும்பை பஸ்ஸாக மாற்றும். உழைப்பு. அதற்கு சரியான பங்கு லாபத்தில் கொடுக்காமல் ஏமாற்றி நான் தான் பணம் போட்டேன் அதனால் எல்லாம் எனக்கே என்று கொழுப்பது தான் முதலாளித்துவம்.

          நம்ப மக்கள் டாடவையும், பிர்லாவையும் படித்து கண்கலங்கி நாமும் ஒருநாள் டாடாவாக ஆவோம் என்று தனக்குள் நினைத்துக் கொள்வதால் டாடா நமக்கு குடும்ப தாத்தாவாகிப் போனார். டாடாவின் 5 லட்சம் கோடி ரூபாய் மூலதனம் டாடாவைத் தவிர யாருக்கும் பயன்படாது. உங்களிடம் 1 ஆம் தேதி கிடைத்த போனஸ், பஞ்சப்படி 3000 ரூபாய் டாஸ்மார்க்கிலும், பின்னர் படிக்காத ஏழை வாட்ச் மேனின் பெண்ணின் படிப்புக்கு பீஸ் கட்டியதிலும் போய் விடும். டாடாவின் ஆயிரம் தலைமுறை வெறுமனே தினமும், தின்று, பேண்டு, தின்று கிடந்தால் கூட இந்தச் சொத்து தீராது. இது தான் வித்தியாசம். ஆனால் அவர்கள் நம்மை விட புத்திசாலிகள். அவர்கள் இந்த 5 லட்சம் கோடியை, 50 லட்சம் கோடியாக்குவார்கள் 50 வருடத்தில். முதல் சேரும் வரைதான் பிரச்சனை. முதல் சேரச் சேர நாமும் டாடாதான், பிர்லா தான்.
          இப்பவே கம்யூனிஸமாவது தொழிலாளியாவது என்று சொல்லும் நீங்கள் பிர்லாவாகிவிட்டால் எப்படி இருப்பீர்களோ.

  7. சரவணன் நீகள் சொல்லுவது சரியே, சும்மா மொக்கையா யதசும் எழுதுறது.. போயி அறிவ வளதுகுங்க…

  8. என்ன கொடுமை சரவணன் புகழ் பிரபுவை பற்றி , அவருக்கும் குஸ்ஸுபூவுக்கும் இருந்த சகவாசம் பற்றி நீங்கள் எதுவும் எழுதிவிடுவீர்களோ என்று இங்கே ஒருவருக்கு பயம்..யார் சொல்லுங்க ?

  9. வினவு கடையில் ஆட்கள் வருகை டல்லடிக்கும் போது இப்படி எதையாவது எடுத்து விட வேண்டியதுதான்.குஷ்பு பா.ம.கவை, வி.சியை கேலி செய்வதில் என்ன தவறு.அந்த நாள் திமுக இன்று இல்லையே அது ஏன் அது ஏன் உடன்பிறப்பே உடன்பிறப்பே என்று வினவு அங்கிள் உருகியிருப்பதை படித்து மனம் பதைத்தோம்.யாரங்கே வினவு அங்கிளை அறிவாலய நூலகத்திற்கு அழைத்து செல்.பழைய நம் நாடு,முரெசொலி இதழ்களை காண்பி, அப்படியே கண்ணீரை துடைக்க 5/6 கைக்குடைகளையும் கொடு.அங்கிள் ஆரஅமர படித்து பொற்கால நினைவுகளில் திளைக்கட்டும்.குஷ்பு அங்கும் வந்துவிட்டால் 🙂

  10. நல்ல கட்டுரை தோழர் வினவு //நாகப்பட்டினம் சுனாமி காட்சிகளை விட தமிழ் மக்களிடம் பசுமையாய் பதிந்திருக்கும்!// இது போன்ற வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம் சுனாமி என்பது ஆறாத மாபெரும் சோக வடு அதை இப்படி நகைச்சுவைக்காக பயன்படுத்தியிருக்க வேண்டாம் நீக்கி விடுங்கள்.

  11. In Andhra Pradesh, devadasi practice is prevalent in Karimnagar, Warangal, Nizamabad, Mahaboobnagar, Kurnool, Hyderabad, Ananthapur, Medak, Adilabad, Chittoor, Rangareddy, Nellore, Nalgonda, and Srikakulam.KUSHBOO was introduced to South India by the Telugu Movie Kaliyuga Pandavulu opp venkatesh in the direction of K Raghavendra rao. Kushboo Sundar (born Naggarth Khan, on 19 September 1970) is an Indian actress, television hostess and producer. She is also a judge in the MAANADA MAYILAADA.KUSHHBOO WAS BORN IN A MUSLIM FAMILY and she has three brothers.The Chola empire encouraged the devadasi system . Men and women were dedicated to temple service. They developed the system of music and dance employed during temple festivals.Although the original devadasis were brahmacharinis their entire life, even the contemporary sexual aspects of the rituals that accompany dedication are now considered by many Hindus to be exploitative and not mandatory.From the late medieval period until 1910, the Pottukattu or tali-tying dedication ceremony, was a widely advertised community event requiring the full cooperation of the local religious authorities. It initiates the a young girl into the devadasi profession and is performed in the temple by the priest.The first legal initiative to outlaw the devadasi system dates back to the 1934 Bombay Devadasi Protection Act.Devadasi originally described a Hindu religious practice in which girls were “married” and dedicated to a deity (deva or devi). In addition to taking care of the temple and performing rituals, they learned and practiced Bharatanatyam and other classical Indian arts traditions and enjoyed a high social status.
    Following the demise of the great Hindu kingdoms the practice degenerated. Adherents of this movement considered devadasis immoral since they engaged in sex outside of the traditional concept of marriage, and described them as prostitutes.The Hindu revival movement consciously stepped outside the requirements of state electoral politics and western scientific traditions. The movement received strong support from the Theosophical Society of India, whose anti-official stance and strong interest in Indian home rule bound them with the revival of dance and music.

    Pioneers like Madam H.P.BLAVATSKY and Colonel H.S.OLCOTT, the founders of the Theosophical movement, had undertaken an extensive tour of South India and propagated the revival of devadasi institutions and the associated art of sadir. They gained support from some sections of the native elite by their public denouncement of western Christian morality and materialism. In 1882, the Theosophical Society of India had set up its headquarters in Adyar, Chennai with the set goal of working towards the restoration of India’s ancient glory in art, science, and philosophy.
    The support later given to a revival of sadir as Bharatnatyam by the Theosophical Society was largely due to the efforts ofRUKMINI DEVI ARUNDALE , an eminent theosophist herself. She took up the cause of evolution of sadir and Bharatnatyam, another traditional dance.
    The Theosophical Society Adyar provided the necessary funds and organization to back Arundale as the champion for India’s renaissance in the arts, especially Bharatnatyam. The revivalists tried to present the idealistic view of the institution of devadasi. According to their view, it was the model of the ancient temple dancer as pure, sacred, and chaste women, as they were originally.
    Kamathipura (also spelled Kamthipura) is Mumbai’s oldest and Asia’s largest red-light district. The area was set up by the British for their troops, which acted as their official “comfort zone”. This small region boasted the most exotic consorts. In the 19th and early 20th centuries, a large number women and girls from continental Europe and Japan were trafficked into Kamathipura, where they worked as prostitutes servicing both British soldiers and local Indian men. When the British left India, the Indian sex workers took over. In recent decades, large numbers of Nepalese women and girls have also been trafficked into the district as sex workers.In colonial era DEVADASIS?, from ANDHRAPREDESH were the main sourse for women in Kamatipura!.The late Mr. Linganna Puttal Pujari (1915–1999), who migrated to Mumbai from Nizamabad in Andhra Pradesh in the year 1928, a prominent social worker and city and state legislator, was largely responsible for most of the civic amenities available to the residents of Kamathipura today.

  12. //தி.மு.கவில் குஷ்புவா, குஷ்புவுக்கான தி.மு.கவா?//

    அதுக்கு முன்னாடி ஒரு விஷயம்…

    குஷ்பு திமுக-வில் சேர்ந்த்தது சத்தியமா குஷ்புவுக்கே தெரியாதாம்பா…

  13. மற்ற பதிவர்களின் படிக்கவேண்டிய நல்ல இடுகைகளையும் ஒரு ஓரமா போட்டு ரெகமெண்ட் பண்ணலாமே.

  14. கலைஞரின் மக்கள் நலத் திட்டங்களால் பாமரன் தன் நிலையில் இருந்து மேலே வருகிறான்! எப்படி மேலே வருகிறான் என்பது இங்கு விபரிக்கப்படவில்லை. தனது உழைப்பால் வருகிறானா? சக பாமரனை சுரண்டி வருகிறானா? ´´அங்காடித்தெரு´´ கலைஞரின் மாயைகளை எல்லாம் போட்டுடைத்திருக்கிறது. கருனாநிதி என்ன விஞ்ஞான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயம், தொழில்வளம், வியாபாரமூலமாக இந்தியாவின் பெரும் பணக்காரர் வரிசையில் இடம்பிடித்தவரா? சினிமாவுக்கு கதையும் பாட்டும் எழுதி இத்தனை செல்வந்தனாக முடியுமா மக்களைச் சுரண்டித்தானே வளர்ந்தார். அவரின் வழியில்தானே பாமரன் பணக்காரனாகி நீதிபதியின் மண்டையை உடைக்கிறான், அதே நீதிபதிகளை விலைக்குவாங்கி குஷ்புவின் 23 வழக்குகளில் ஒன்றைக்கூட செல்லுபடியற்றதாக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவைக்கிறான். இத்தனை உதவிகள்புரிந்துள்ள கருனாநிதியோடு சேராமல் குஷ்பு கண்ணகிக்கு மாலைபோடவா செல்வார். இனி கற்பு பற்றி கலைஞரோடு கலந்துறவாடி தமிழ்மக்களுக்கு அறியத்தருவார். திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ‘தி மு க’ இனி திருமணத்தின் முன் கலவிசெய் என்ற ‘தி மு க’ ஆக மாறிவிடும்.

    இதுதான் தி.மு.கவில் குஷ்புவா, குஷ்புவுக்கான தி.மு.கவா? என்பதற்கான பதில்.

    • குஷ்பு கருத்து சொல்லுவதற்கு முன்னும், பின்னும் திருமணத்திற்கு முன்னும்,பின்னும் உறவுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது!விஷயத்தை உடைத்து சொல்லியவிதத்தில், குஷ்பு, பெரியாரை பின் பற்றுகிறார்! சோளக் காட்டு மூலையிலே, சோடி ஒன்னு சேர்ந்திடுச்சு! எனும் பாடலில் வரும் சோடிக்கு திருமணம் ஆகிடுச்சா?இல்லையா?

    • கலைஞர் கம்யூனிசத்தை செயல் படுத்தினார் எனும் உண்மையை எந்த விதத்திலும் மூடி மறைக்கமுடியாது!என்னையா கருத்து சொல்லுகிறீர்? பாமரன் எந்த பாமரனை சுரண்டி மேலே வருகிறான்? அரசாங்க சலுகை பெற்று தான் முன்னேறுகிறான்!இங்கே சுரண்டல் எங்கிருந்து வருகிறது? லாவ்லின் ஊழலை எந்த கம்யூனிஸ்ட் எதிர்த்தான்?

  15. Dear JAMES FRIEDRICH with reference to your மறுமொழி No.12….

    You have taken information from “Wikipedia” for your “மறுமொழி.” But it would have been nice if you have added some more from the same “Wikipedia”.that you left out.
    For example…///The devadasi’s sexual partner was always chosen by ‘arrangement’ with her mother and grandmother acting as prime movers in the veto system. Alliance with a Muslim, a Christian, or a lower caste was forbidden while a Brahmin or member of the royal elite was preferred for the good breeding and/or wealth he would bring into the family. The non-domestic nature of the contract was an understood part of the agreement with the devadasi owing the man neither any householding services nor her offspring. The children in turn could not hope to make any legal claim on the ancestral property of their father whom they met largely in their mother’s home when he came to visit.///

    Ref: http://en.wikipedia.org/wiki/Devadasi#Devadasis_in_South_India_and_the_Chola_empire

    ///In addition to taking care of the temple and performing rituals, they learned and practiced Bharatanatyam and other classical Indian arts traditions and enjoyed a high social status///

    =====>”Enjoyed a high social status” I challenge this statement. This is an utter lie trying to rewrite the facts. There are some answers from the first paragraph given above from Wikipedia. They were treated as SLAVE CONCUBINES and girls were SELECTED from ONLY one community in Tamil Nadu. The noted people from that community are 1). Dr. Muthu Lakshmi Reddy, founder of the Adyar cancer institue, first lady doctor from the Great India. She was also the first WOMAN M.L.C (Member of Legislative Council). 2). M.S. Subbulakshmi..she is a converted iyer and NOT an Agmark Iyer, and 3) MK, Tamil Nadu CM.

    If Dr. Muthulaksmi Reddy was alive she would have taken you to task. The great Mr. Satya Murthy Iyer, in whose name the Congress Headquarters now functions at Chennai, said in the Madras Assembly somewhere in 1932. The following is recorded in Madras Assembly notes as follows…

    சத்யமூர்த்தி ஐயர்: தேவதாசி முறையை ஒழித்தால் நமது தமிழ் கலாச்சாரம் கெட்டுவிடும். எனவே தேவதாசி முறை தொடரவேண்டும்.
    முத்துலக்ஷ்மி ரெட்டி: (ரெட்டிஐ திருமணம் செய்ததால் வந்த ரெட்டி): இத்தனை நாள் வரை எங்கள் பெண்கள் தேவதாசியாக இருந்தார்கள். நீங்கள் கூறியபடி நமது தமிழ் கலாச்சாரம் நன்றாக இருக்கவேண்டும் என்று நீங்கள் நினத்தால் உங்கள் குலபெண்மணிகளை இந்த தொழிலுக்கு விடுங்கள்.

    அப்ப உக்காந்த சத்யமூர்த்தி ஐயர் அப்புறம் எந்திரிக்கவே இல்லை என்று கேள்வி!

    Dr. MuthuKaksmi Reddy is the foreruner to eradicate Devadasi Sytem and Child Marrigaes in India. அதெல்லாம் சரி, Dear JAMES FRIEDRICH: தேவதாசிகளை ஐயர் அப்புறம் “royal elite” மட்டும் தான் வச்சுக்கணும். மற்றபடி கிருத்துவர்கள், முஸ்லிம்கள், கீழ்ஜாதிக்காரர்கள் வச்சுக்ககூடாது என்ற நாட்டாமை ஏன்? இதுக்கு பெயர் தானோ அந்த “high social status”??? கேவலம். ஆபாசம்…அப்புறம் அந்த ” Contract” இல் உள்ள “clause” – ஐ படித்தால்….. The non-domestic nature of the contract was an understood part of the agreement with the devadasi owing the man neither any householding services nor her offspring… அப்படின்னா அந்த ஒரு வேலைக்குத்தான் தேவதாசிகளை வைத்து இருந்தார்கள். அது தான் உண்மையும் கூட. இது உலகத்தின் தொன்மையான தொழில் தான் என்று அறிவில்லாத குழந்தைக்கு கூட புரியுமே?

    ////The children in turn could not hope to make any legal claim on the ancestral property of their father whom they met largely in their mother’s home when he came to visit.///

    ====>கண்டவன் வந்து போற வீட்டில புறக்கிர குழந்தைகளுக்கு என்ன பெயர்? இந்த குழந்தைகளுக்கு ஒரே ஒரு பெயர் தான் …அப்படி போடு அருவாளை…இது தான் “high social status”…..ஆ! ஆ!ஆ!

    The following is from your post….
    ///Pioneers like Madam H.P.BLAVATSKY and Colonel H.S.OLCOTT, the founders of the Theosophical movement, had undertaken an extensive tour of South India and propagated the revival of devadasi institutions and the associated art of sadir.///

    ====>இந்த தேவதாசி கருமாந்திரத்தை நிலை நிறுத்த பாடு பட்ட கழிசடைகள் தான் Madam H.P.BLAVATSKY and Colonel H.S.OLCOTT. You can also add Dr. Annie Besant, Rukmani Arundlae to the list with H.P.BLAVATSKY and Colonel H.S.OLCOTT, and the GREAT Mr. Sathya Murthy Iyer—-இவர்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

    இவாளப்பத்தி நன்னா தெரியும்னுன்னா நம்ம மதிமாறன், தமிழ் ஓவியா அப்புறம் சங்க மித்திரன் அவர்களைக் கேளுங்கள். இந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளை பிச்சு எடுத்துடுவாங்க. அப்படியே கூடவே காயப்போட்டுறுவாங்க.

    என்றும் அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி!?

    PS: Shame on Congress to have the headquarters at Chennai in the name of Mr. Sathya Murthy Iyer who encouraged prostitution….Wait…wait…But NOT from his OWN Brahmin caste—-That is why he is called as GREAT Sathya Murthy ஐயர்….ர் .ர் .ர் .ர் .ர் ருங்கோ..ஓ..ஓ…ஓ….

    • திரு ஆட்டையாம்பட்டி அம்பி!,தேவதாசிகள் என்பது அடிப்படையில் விபச்சாரிகள் அல்ல!.அவர்களுக்கு அளிக்கப்பட “சமுக அந்தஸ்தானது” அவர்களுடன் அரசர்கள் உடலுறவு கொள்ள அல்ல!.பல அரசர்கள் தேவதாசிகளின் காலில் விழுந்து வணங்கியமை இதற்கு உதாரணம்,பின்னாளில்(கலியுகம்) நீங்கள் சொல்லுவது போல நடந்தது உண்மை!.”In addition to taking care of the temple and performing rituals, they learned and practiced Bharatanatyam and other classical Indian arts traditions and enjoyed a high social status.
      Following the demise of the great Hindu kingdoms the practice degenerated.”.தேவதாசிகள் பெரும்பாலும் உடலுறவு கொள்ளாத பிரம்மச்சாரிகளாகவே இருந்தார்கள்.”Kamathipura (also spelled Kamthipura) is Mumbai’s oldest and Asia’s largest red-light district. The area was set up by the British for their troops, which acted as their official “comfort zone”.”- இந்த நிலைக்குப் பிறகு,இது ஒரு “ஏலியன் ஐடியாலஜியே”!.
      In Kali Yuga, the center of most arts in India is Bhakti (devotion) and therefore, Bharata Natyam as a dance form and carnatic music set to it are deeply grounded in Bhakti.In ancient times it was performed as dasiattam by mandir (Hindu temple) Devadasis. Many of the ancient sculptures in Hindu temples are based on Bharata Natyam dance postures karanas.Bharatanatyam proper is a solo dance, with two aspects, lasya, the graceful feminine lines and movements, and tandava Ananda Thandavam (Tamil) (the dance of Shiva), masculine aspect, which is identical to the Yin and Yang in the Chinese culture.Spiritual symbolism:Bharatanatyam is the manifestation of the ancient idea of the celebration of the eternal universe through the celebration of the beauty of the material body.Medieval decline:Local kings often invited temple dancers (devadasi) to dance in their courts, the occurrence of which created a new category of dancers — rajanarthakis — and modified the technique and themes of the recitals.Balasaraswati (13 May 1918 – 9 February 1984) was a celebrated Indian dancer, and her rendering of Bharatanatyam, a classical dance style, made this style of dancing of south India well known in different parts of India, as also many parts of the world.Balasaraswati was a seventh generation representative of a traditional marilineal family of musicians and dancers who have been described as the greatest single repository of the traditional performing arts of music and dance of the southern region of India [(“Balasaraswati” by V.K. Narayana Menon)]. Her anscestor Papammal was a musician and dancer patronized in the mid-eighteenth century by the court of Thanjavur. Natya Yoga, popularly known as Dance Yoga, the all-inclusive spiritual path of action, is a combination of mainly Bhakti Yoga and Karma Yoga with many elements of Hatha Yoga and Raja Yoga.
      IN THIS THE “HATHA YOGA” concept WHICH COULD BEUNDERSTOOD more or less BY WESTERNERS HAS CHANGED THIS TRADITION INTO A MESS!.
      Hatha Yoga , also called Hatha Vidya , is a system of Yoga introduced by Yogi Swatmarama, a sage of 15th century India, and compiler of the Hatha Yoga Pradipika.Hatha Yoga is what most people in the Western world associate with the word “Yoga” and is most commonly practiced for mental and physical health.The most comprehensive text of Hatha Yoga is the Hatha Yoga Pradipika by Yogi Swatmarama. This work is nonetheless derived from older Sanskrit texts on Yoga besides Yogi Swatmarama’s own yogic experiences. It includes information about shatkarma (purification), asana (postures), pranayama (subtle energy control), chakras (centers of energy), kundalini (instinct), bandhas (muscle force), kriyas (techniques; manifestations of kundalini), shakti (sacred force), nadis (channels), and mudras (symbolic gestures) among other topics.KUNDALINI YOGA:Kundalini literally means coiled. In Indian yoga, a “corporeal energy” – an unconscious, instinctive or libidinal force or Shakti, lies coiled at the base of the spine. It is envisioned either as a goddess or else as a sleeping serpent hence a number of English renderings of the term such as ‘serpent power’. The Kundalini resides in the sacrum bone in three and a half coils and has been described as a residual power of pure desire…

      • ஆட்டையாம்பட்டி அம்பி!,இப்படியாக சிரழிக்கப்பட்ட சமூகத்தில்….”அரசன் மட்டும் உடலுறவு கொள்ளலாமா ?,எனக்கும் உடலுறவு கொள்ள இட ஒதுக்கிட்டு கொடு என்று அடம் பிடிக்கக் கூடாது!.திப்பு சுல்தான் வாரிசுகள் போல்,அரச வாரிசுகள் தற்போது யாராவது உடலுறவு கொள்ளும் நிலையில் உள்ளனரா?.அவன் பேங்கில் வேலை செய்கிறான்,எனக்கும் பேங்கில் இட ஒதுக்கிட்டு கொடு என்று அடம்பிடிப்பது சரி,ஆனால்,தற்போதுள்ள “வேலைகள்”,ஒழுங்கமைப்பு எல்லாம,மேற்கத்திய வெள்ளைக்கார வசதிக்காக ஒழுங்கமைக்கப்பட்ட,சமசீரற்ற அநியாய அமைப்பு,இதில் எல்லோருமே அநியாயமாக “சர்வைவலுக்காக” போடிப்போடுகிறோம்.இதி பச்சாதாபப்பட்டு,”தமிழகத்தில் மட்டுமே” “தாழ்த்தப்பட்டவர்களுக்கு” சமுக நீதிக்காக போராடிய அனைத்து வகுப்பினராலும் அதிக சலுகை அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலை,வட இந்தியாவில் உள்ளதா?.இதை உணர்ந்து,கிழே விழுந்து விட்டவர்கள் மீது(போராடி) பச்சாதாபம் காட்டவேண்டும்- ஏறி மிதிக்கக் கூடாது !.

        • நான் கூறியது ஏன் அந்த தகுதி பார்ப்பனர்களுக்கு மட்டும்.ஏன்?.

          இந்தக்காலத்தில் தான்—-இந்த சம காலத்தில் தான்—- இந்த தேவதாசி கருமாந்திரத்தை நிலை நிறுத்த பாடு பட்ட கழிசடைகள்—நீங்கள் மேற்கோள் காட்டிய Madam H.P.BLAVATSKY and Colonel H.S.OLCOTT. You can also add Dr. Annie Besant, Rukmani Arundlae to the list with H.P.BLAVATSKY and Colonel H.S.OLCOTT, and the GREAT Mr. Sathya Murthy Iyer—-

          அதெல்லாம் சரி, Dear JAMES FRIEDRICH:

          நான் கேட்டது ” Wikipedia” -வில் இருந்த இதை (கீழே உள்ளதை) நீங்கள் எழுதி இருக்கணும்.

          தேவதாசிகளை ஐயர் அப்புறம் “royal elite” மட்டும் தான் வச்சுக்கணும். மற்றபடி கிருத்துவர்கள், முஸ்லிம்கள், கீழ்ஜாதிக்காரர்கள் வச்சுக்ககூடாது என்ற நாட்டாமை ஏன்? இதுக்கு பெயர் தானோ அந்த “high social status”??? கேவலம். ஆபாசம்…அப்புறம் அந்த ” Contract” இல் உள்ள “clause” – ஐ படித்தால்….. The non-domestic nature of the contract was an understood part of the agreement with the devadasi owing the man neither any householding services nor her offspring…

          ===>அப்படின்னா அந்த ஒரு வேலைக்குத்தான் தேவதாசிகளை வைத்து இருந்தார்கள். அது தான் உண்மையும் கூட. இது உலகத்தின் தொன்மையான தொழில் தான் என்று அறிவில்லாத குழந்தைக்கு கூட புரியுமே?

          ////The children in turn could not hope to make any legal claim on the ancestral property of their father whom they met largely in their mother’s home when he came to visit.///

          ====>கண்டவன் வந்து போற வீட்டில புறக்கிர குழந்தைகளுக்கு என்ன பெயர்? இந்த குழந்தைகளுக்கு ஒரே ஒரு பெயர் தான்

          நான் கூறியது ஏன் அந்த தகுதி பார்ப்பனர்களுக்கு மட்டும்.ஏன்?.

  16. உலகின் பழமையான தொழிலான விபச்சாரத்தை உங்களால் தடுக்க முடியவில்லை என்கிறீர்கள். சட்டத்தால் அதைத் தடுக்க முடியவில்லை என்கிறீர்கள். அப்படியானால் அதை ஏன் சட்டப்பூர்வமாக மாற்றி விடக் கூடாது?

    பெண்கள் கடத்தப்படுவது, விபச்சாரத்தில் தள்ளப்படுவது போன்ற செயல்களைத் தடுக்க அதை பேசாமல் சட்டப்பூர்வமாக்கி விடலாம்.
    விபச்சாரத்தில் ஈடுபட முடிவு செய்து விட்டவர்கள் ஏதாவது ஒரு வழியில் ஈடுபடத்தான் செய்கிறார்கள். ஒரு வழியை அடைத்தால் இன்னொரு வழியில் போய் விடுகிறார்கள். சிலர் மிகவும் ஆடம்பரமாக இந்தத் தொழிலை நடத்தி வருவதையும் நாம் பார்க்கிறோம். சட்டம் போட்டெல்லாம் இதைத் தடுக்க முடியாது. எனவே இதை ஏன் பேசாமல் சட்டப்பூர்வமான தொழிலாக மாற்றக் கூடாது?

    http://ns3.greynium.com/art-culture/essays/2009/1210-sc-tells-govt-legalise-sex-trade.html

    • கொலை, கொள்ளை, லஞ்சம் , ஊழல் எல்லாமேதான் ஜாம் ஜாம் – ணு நடந்துகிட்டுருக்கு… சட்டம் போட்டெல்லாம் ஒன்னும் நடக்கலை…. ஒருத்தன் வீட்டிலே ஒன்னேமுக்கா டன் தங்கத்தொடவும் ஆயிரம் கோடி ரூபாயுடனும் பிடிபடுறான்… தினம் நூத்துக்கணக்கிலே கொலை… என்னத்துக்கு சட்டம் போட்டுக்கிட்டு… பேசாம அதெல்லாம் நீங்க சொல்றாப்போல சட்டப்பூர்வமா ஆக்கிடுவோமா? என்னான்றீங்க….

      • உங்களுக்கு இருக்கும் தெளிவு உச்ச நீதி மன்ற நீதிபதிகளுக்கும் இல்லை . பதில் அளிக்க வாய்த்த கேட்ட அரசு வக்கிலுக்கும் இல்லை 

        • விபச்சாரத்தை சட்டரீதியான ஒரு தொழிலாக மாற்றினால், பெருமளவு எய்ட்ஸ் போன்ற பாலுறவு நோய்கள் கட்டுப்படுத்தப்படலாம் என்று நான் கருதுவதன் விளைவு இந்தக் கட்டுரை.
          விபச்சாரம் சட்டரீதியான தொழிலாக அங்கீகரிக்கப்பட்டால், விபச்சாரிகள் அரசாங்கத்தில் பதிவு செய்து கொள்வதும், இலவசமாக மருத்துவ உதவி பெறுவதும், இறுதிக்காலத்தில் பென்ஷன் போன்ற உதவிப்பணம் பெறுவதும் நிச்சயமாகும்.
          விபச்சாரிகளிடம் செல்லும் மனிதர்களும், மருத்துவ ஆலோசனை பெறுவதும், ஆணுறைகளை அணிந்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்படுவதும் நடக்கும்.
          தொழிலில் இருக்கும் விபச்சாரிகள் மாதம் ஒரு முறையாவது மருத்துவ சோதனை செய்து கொள்ள கட்டாயப்படுத்தப்படுவதும் நடக்கும்.
          விபச்சாரத்தை சட்டப்படியான ஒரு தொழிலாக அங்கீகரிப்பது என்பது நம் நாட்டில் இடதுசாரிகளாலும், வலதுசாரிகளாலும், காந்தீயவாதிகளாலும், காந்தீய எதிர்ப்புவாதிகளாலும், போலீஸாலும், குற்றவாளிகளாலும் அனைவராலும் எதிர்க்கப்படும் ஒரே விஷயம்.
          http://www.thinnai.com/?module=displaystory&story_id=200111212&format=print

        • ///விபச்சாரம் சட்டரீதியான தொழிலாக அங்கீகரிக்கப்பட்டால், விபச்சாரிகள் அரசாங்கத்தில் பதிவு செய்து கொள்வதும், இலவசமாக மருத்துவ உதவி பெறுவதும், இறுதிக்காலத்தில் பென்ஷன் போன்ற உதவிப்பணம் பெறுவதும் நிச்சயமாகும்./// ரொம்ப நல்லது சுரேசு ராமு … உங்க வீட்டிலே உள்ள பெண்களை இதற்கு தயார்படுத்தி இதன் பலாபலன்களை பெற்றுக்கொள்ள அனுமதிப்பீர்களா? ஆம் என்பீர்களாயின் நீங்கள் நேர்மையானவர்.

  17. எல்லாம் இருக்குதான் அதுக்காக சொல்லிகொல்வதில்ல
    திருமணத்தின் பின் வேறு ஆண்களிடம் உறவு வைக்கலாம்
    ஆண் வேறு பெண்களை வைத்திருக்கலாம்,
    இது தன இந்த அனைவருக்கும் ஒள்ள உரு ஒற்றுமை, அல்லமாக யோசித்து ஆய்ந்து பாருங்க எல்லாம் புரியும்,

    தவிர இந்த பொம்பிளை தன ஒரு களத்தில் செய்ததை நியயபடுத்த்வே சொல்லுற

  18. ஜாக்பாட் ஜெ says:/ ரொம்ப நல்லது சுரேசு ராமு … உங்க வீட்டிலே உள்ள பெண்களை இதற்கு தயார்படுத்தி இதன் பலாபலன்களை பெற்றுக்கொள்ள அனுமதிப்பீர்களா? ஆம் என்பீர்களாயின் நீங்கள் நேர்மையானவர்./
    நன்றி ஜாக்பாட் ஜெ.
    வினவில் கருது தெரிவிக்க எனது நேர்மையை உங்களுக்கு நிரூபணம் செய்ய வேண்டும் என்பது முன் நிபந்தனை அல்ல .
    அல்லது நீங்கள் உங்கள் நேர்மையை நிரூபித்து விட்டீர்களா ? அதே முறையில் அதாவது உங்கள் வீட்டு பெண்கள் தாங்களாகவே முன்வந்து விபச்சாரத்தில் ஈடுபட்ட போது நீங்கள் அதை தடுத்து நிறுத்திய விதத்தை ஆதாரத்துடன் அளித்தால் நான் எனது நேர்மையை நிருபிக்க வேண்டிய அவசியத்தை உணருவேன்

    • ம்ம்ம்ம் … அப்படி வாங்க வழிக்கு… புரியுதா… உங்கள் வாதம் எவ்வளவு கேவலம் & அபத்தம்னு… ஊராருக்கு மட்டும்தான் உபதேசமா?… “ஊர நரடிப்பேன்…ஆனா என் வீடு மட்டும் சுத்தமாயிருக்கணும்..” …..சரிங்….
      அப்படியே அபௌட் டர்ன் அடிச்சு உங்க வாதத்தை தூக்கிட்டு ஓடிருங்க….

      • //ஊர நரடிப்பேன்…ஆனா என் வீடு மட்டும் சுத்தமாயிருக்கணும்//.. உங்கள் வாதம் எவ்வளவு கேவலம் & அபத்தம்????நான் பெண்களை மதிப்பவன். உங்கள் வீட்டு பெண்கள் உட்பட 
        கீழே உள்ள சுட்டிகளை முழுமையாக படிக்கவும் 
        http://ns3.greynium.com/art-culture/essays/2009/1210-sc-tells-govt-legalise-sex-trade.html
        உங்கள் வாதத்தில் நேர்மை இல்லை

        • வந்துட்டாரு நேர்மையாளரு விபச்சாரத்த சட்டமாக்க கிறுக்குபயல்க நாட்டுல கேனப்பயலுக நாட்டாம என்கிற கிராம சொல்லடல் நினைவுக்கு வருகிறது 

        • சுரேசு ராமு….நீங்கள் சுட்டிகள் தரலாம் பல… அதனாலெல்லாம் குற்றம் சட்டப்பூர்வமாகிவிடாது …
          நானும் தரவா…? ‘பயங்கரவாதம் சரியானதே’ … ‘மக்கள் கூடும் இடங்களில் குண்டுகள் வைத்து பெண்கள் குழந்தைகள் உட்பட எல்லாரையும் கொல்லலாம்’ என்பதற்கு சப்பைக்கட்ட நூத்துக்கணக்கில் வெப்சைட்டுகள் இருகின்றன… அப்படி குண்டு வைக்க ஆசை ஆசையாய் ஆயிரக்கணக்கில் உலகில் கிறுக்கன்கள இருக்கின்றனர்…சுட்டிகள் தரவா…? அதன் மூலம் குண்டு வைப்பதை நியாயம் எனக்கூறி சட்டப்பூர்வமாக்கிவிடலாமா? லூசா சார் நீங்க…?

          இப்படித்தான் சூதாட்டம் குற்றம் என்றார்கள்… நாம் பிறக்கும் முன்னர்… ஆனால், எவ்வருவாயுமற்ற வடகிழக்கு மாநிலங்கள் ‘பிழைக்க’ லாட்டரி ரூபத்தில் ‘சூதாட்டத்தை அரசே நடத்தும்’ என சட்டப்பூர்வமாக்கியதும் ரொம்ப லேட்டாய் அதன் கேட்டை உணர்ந்து தமிழ்நாட்டில் தடைபோட்டுள்ளனர்… (ஜெயலலிதா பண்ணிய ஒரே நல்ல காரியம்) அதனால், முன்னர் லாட்டரியால் கெட்டழிந்த குடி கெட்டதுதானே… பரிகாரம்…?

          அதன்பிறகு… மது குடிப்பது-தயாரிப்பது குற்றம் என்றார்கள்… பின்னர் சட்டப்பூர்வமாக்கி இன்று தமிழகஅரசே சாராயக்கடை ஓணர் ஆனதும் (ஜெயலலிதா பண்ணிய மிகப்பெரிய கெட்ட காரியம்) என்னாயிற்று…? அன்று குடிப்பவர்களை விரல்விட்டு என்னும் நிலையில் இருந்த நாம் இன்று குடிக்காத பள்ளி சிறுவர்கள் எத்தனை பேர் என்று தேடி அலைய வேண்டியுள்ளது… “குடிப்பது உயிருக்கும் வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு” என்று என் தாத்தா காலத்திய அரசாங்கங்கள் கூறியதாக சங்க ஓலைச்சுவடிகளை தோண்டிப்பார்த்தால்தான் தெரியும் என்ற நிலை… கிட்டத்தட்ட அணைவரும் குடிக்கிறார்கள்…

          ஒருகாலத்தில் விபச்சாரம் என்றாலே முகம் சுளித்தவர்கள், பின்னர் கல்கத்தாவிலும், பம்பாயிலும் அங்கீகாரம் தந்து திறந்து விட்டார்கள்… விளைவு…? இந்தியாவிலேயே எயிட்ஸ் நோயாளிகள் அதிகம் இருக்கும் ஊர்கள் இவை இரண்டும்தான்… இதேபோல இந்தியா முழுதும் எயிட்ஸ் நோயாளிகளாக ஆக்க ஆசைப்படுகிறீர்கள்… கொடுமை….

          அதுபோல விபச்சாரத்துக்கு நாடு முழுதும் அரசு அங்கீகாரம் வந்து விட்டால், இன்று கம்பி என்னும் ‘மாமாக்கள்’ எல்லாம் மந்திரிகளாக வளம் வருவர்… குடும்பப்பெண்கள், இரவு முழுதும் கால் சென்டர்களில் வேலை பார்ப்பது அந்தளவு பணம் சம்பாதித்து கொடுக்காது என்று ‘அரசு விபச்சார விடுதிகளில்’ இரவுப்பணி புரியக்கூடும்… அதற்கு ‘விபச்சார அமைச்சகம்'(!!??) மூலம் பஞ்சிங் கார்ட் போட்டு கணக்கு பண்ணி தனி ஓவர்டைம் சம்பளம் பேன்க் அக்கௌண்டில் மாதாமாதம் கிரடிட் செய்யப்படும் ….பாக்கெட் மணிக்காக பள்ளி-கல்லூரி மாணவிகளும் பார்ட்-டைமாக, அரசு ஐடி பெற்று, ஆங்காங்கே(??!!) இருக்கும் ‘அரசு விபச்சார விடுதிகளில்’ , “அந்த இரவு நேர அரசு அலுவலில்” சட்டப்பூர்வமாக ஈடுபடலாம்…

          கோபப்படாதீகள்…. ஏன் நடக்காது? நடக்கலாம்… ஏனென்றால்…. ////அன்று குடிப்பவர்களை விரல்விட்டு என்னும் நிலையில் இருந்த நாம் இன்று குடிக்காத பள்ளி சிறுவர்கள் எத்தனை பேர் என்று தேடி அலைய வேண்டியுள்ளது… ////

          நீங்கள் இந்தியாவை அதி விரைவாக அழிக்க நினைக்கும் ஒரு அரக்கன் -அல்லது- சாத்தான் -அல்லது- ஒரு பன்னாட்டுக்கம்பெனி ஓனர் -அல்லது- அவர்களுக்கு அடிபணியும் ஆளும் இந்திய அரசியல்வாதி….! இதில் எதுவும் இல்லாவிட்டால் நீங்கள் ஒரு அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கக்கூடும்….

      • Hello mr. Jackpot J, Ur arguement is very rough and bad.
        What Suresh Ram told here that those who wanted to do prostituion (not forced)…..but u r commenting his family and after that telling that run away with comments. Here we are just sharing thoughts, not skolding others. I feel you are not matured enough to discuss. If you still reply with rough words, no other go we have to be rough with you. careful….no one is having rights to hurt others. Everybody can talk/write rougly and skold in bad words…not only you. Differencce is others are matured and you are a half boiled idiot.
        (I am writing in english here, bcaz some problem in my computer to type in Tamil)

  19. indru தமிழக அரசியலில் TELUNGAN,KANNADAN MALAIYAALI yena karunaanidhiyaal திராவிடன் yena azhaikka படுபவன் yellaam sattasabaiyil aakkiramiththullaargal ippo puthiya வரவு vadakkaththiya vantheari vipachchaari kooththaadi குஷ்பூ ! karunaanidhiyin seyal thodarattum….tamizhargale ungalukkuthaan MADHUVUM, ORU ருபாய் ARISIYUM TELUNGAN கருணாநிதி vazhanghi vittaare!

  20. மிக நல்ல நேர்மையான கட்டுரை வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் .

  21. குஷ்புவுக்கு எதிராக தொடை தட்டிய கனவான்கள் இப்பொது தி.மு.க கூட்டணியில்தான் இருக்கிறார்கள்.
    23 வழக்குகள், உயர் நீதிமன்றம், தீர்ப்பு – ஆக இப்போது குஷ்பு தி.மு.க வின் பிரச்சார பீரங்கி.
    தமிழ் பெண்களின் கற்புக்கு குஷ்புவால் அவமதிப்பு என்று துடைப்பம் தூக்கியவர்கள் இனி குஷ்புவுக்கு கொடி பிடிக்கும் வேண்டும்.
    ஆகா…
    சகல அரசியல் தந்திரங்களையும் கற்றுகுடிக்கிறாயடா புலிகேசி..
    வறலாறு முக்கியம் மன்னா..னா…

  22. Dear JAMES FRIEDRICH: நீங்கள் ஏன் “Wikipedia” வில் உள்ள கீழ் கண்டவற்றை மறைத்தீர்கள்?

    ///தேவதாசிகளை ஐயர் அப்புறம் “royal elite” மட்டும் தான் வச்சுக்கணும். மற்றபடி கிருத்துவர்கள், முஸ்லிம்கள், கீழ்ஜாதிக்காரர்கள் வச்சுக்ககூடாது என்ற நாட்டாமை ஏன்? அப்புறம் அந்த ” Contract” இல் உள்ள “clause” – ஐ படித்தால்….. The non-domestic nature of the contract was an understood part of the agreement with the devadasi owing the man neither any householding services nor her offspring… அப்படின்னா அந்த ஒரு வேலைக்குத்தான் தேவதாசிகளை வைத்து இருந்தார்கள். அது தான் உண்மையும் கூட. இது உலகத்தின் தொன்மையான தொழில் தான் என்று அறிவில்லாத குழந்தைக்கு கூட புரியுமே? ////The children in turn could not hope to make any legal claim on the ancestral property of their father whom they met largely in their mother’s home when he came to visit./// கண்டவன் வந்து போற வீட்டில புறக்கிர குழந்தைகளுக்கு என்ன பெயர்? இந்த குழந்தைகளுக்கு ஒரே ஒரு பெயர் தான். இந்த குழந்தைகளுக்கு என்ன மரியாதை?

    The following is from your post….

    ///Pioneers like Madam H.P.BLAVATSKY and Colonel H.S.OLCOTT, the founders of the Theosophical movement, had undertaken an extensive tour of South India and propagated the revival of devadasi institutions and the associated art of sadir.///

    ===>இவர்கள் காலத்தில் தான் பார்ப்பனர்களுக்கு இந்த பஜனையை (அந்த வேலை) செய்ய முன்னுரிமை. ஏன் மற்ற ஜாதிக்காரர்களுக்கு எல்லாம் இந்த பஜனையை (அந்த வேலை) செய்ய முடியாதா? அது இல்லையா? கடவுள் பெயரை சொல்லி பார்பனர்கள் அடித்த கூத்தை தான்—இந்த தேவதாசி கருமாந்திரத்தை நிலை நிறுத்த பாடு பட்ட கழிசடைகள் தான் Madam H.P.BLAVATSKY and Colonel H.S.OLCOTT, Dr. Annie Besant, Rukmani Arundlae, and the GREAT Mr. Sathya Murthy இயர்.

    Dr. MuthuLaksmi Reddy பார்ப்பன பெண்களை தேவதாசி முறைக்கு விட “Madras Assembly”–இல் சொன்ன பொது குத்த வச்சு உக்காந்த சத்யமூர்த்தி ஐயர் அப்புறம் எந்திரிக்கவே இல்லை என்று கேள்வி!

  23. ஹைதர் அலி says://கிறுக்குபயல்க நாட்டுல கேனப்பயலுக நாட்டாம//
    நீங்க யார் நாட்டாமை செய்யும் நாட்டில் உள்ளீர்கள் ? 
    உடல் உறவு கொள்ளும் நேரத்தில் மட்டுமாவது ”  LIVE IN RELETIONSHIP ” என உயர் நீதி மன்றம் குடும்ப வன்முறை சட்டப்படி விபச்சாரத்தை சட்ட பூர்வமாக ஆக்கி உள்ளது.
    (IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRASPresent : K. Venkataraman, J.Case Number(s) : C.R.P. (PD) No. 238 of 2008 and M.P. No. 1 of 2008)

     உச்ச நீதி மன்றம் விபச்சாரத்தை சட்ட பூர்வமாக்க ஆலோசனை வழங்கி உள்ளது. மனித உரிமை அமைப்பின் தேசிய துணைத் தலைவர் சுதா ராமலிங்கம் அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்களை இங்கு கேட்கலாம்.
    http://www.bbc.co.uk/tamil/highlights/story/2009/12/091212_prosti.shtml

    இந்த நீதிபதிகள் கிறுக்கு பய நாட்டில் தான் உள்ளார்களா? 

    • //கிறுக்குபயல்க நாட்டுல கேனப்பயலுக நாட்டாம//

      நான் கூட லட்சக்கணக்கான யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரும், அதற்கு உதவி புரிந்த அவர் ராணுவம்/நீதிமன்றம்…

      ஜப்பானில் அனுகுண்டுபோட்டு இலட்சக்கணக்கான அப்பாவி ஜப்பானிய பொதுமக்களை நொடியில் பஸ்பமாக்கிய அமேரிக்கா, அதற்கு துணை புரிந்த அமெரிக்க அதிபர்/அமெரிக்க செனட்/நீதிமன்றம்/விஞ்ஞானிகள்/விமானப்படை…

      குஜராத்…மோடி…போலிஸ்…சங்க பரிவார் பயங்கரவாதிகள் …சட்டம் ஒழுங்குக்கு மூன்றுநாள் விடுமுறை…ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்றது… அதன் பிறகு தேஹல்கா விடியோ…ரயில்வே அறிக்கை…உச்சநீதிமன்றம் … கையாலாகாத மத்திய அரசு…

      என்று பல உதாரணங்களை நினைத்தேன்….

      இதற்கு நீங்களே நல்ல உதாரணங்களை அழகாய் எடுத்துத்தந்ததுக்கு நன்றி.

    • சுரேஷ் ராம் : டாஸ்மார்க்க கவர்மேன்டே எடுத்து நடத்துவாதல் ஏற்ப்பட்ட தீமைகளை கண் முண்ணே பார்த்துக்கொண்டிருக்கிறேம் திருப்பூர் போன்ற ஊர்களில் வேலை பார்க்கும் அடிமட்ட தொழிலாளின் முழு சம்பளத்தையும் இந்த டாஸ்மார்க் கடைகள் அபகரிக்கின்றன முன்பேல்லாம் ஒரு இரு கடைகளுக்கு இருந்த அனுமதி இப்ப கவர்மேன்டு வியாபரம் செய்யுவாதல் (திருப்பூரில்)தெருவுக்கு ஒரு டாஸ்மார்க் கடை இருக்கிறது இதேபோல் விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக அனுமதித்தால் விளைவுகள் இன்னும் மோசம் மாகும் ஆங்கிலேய காலனியவாதிகளின் படைவீரர்களின் செக்ஸ் டென்ஷானை குறைப்பதற்காக அரசு அனுமதியுடன் ஏற்ப்படுத்தப்பட்ட ரெட்லைட் ஏரியாக்கள் சுகந்திர இந்தியாவிலும் தொடர்ந்து இருப்பதே அவமானத்துக்குரியது இதனால் எத்தனை அப்பாவி பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் தெரியுமா ஒவ்வோரு வருடமும் விபச்சாரத்திற்காக நேபள் நாட்டிலிருந்து கடத்தி வரப்படுகின்ற பெண்கள் நூற்றுக்கணக்கில் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன இதையே சட்டப்பூர்வமாக்கினாள் விபாச்சரத்திற்காக நேபள் பங்களதேஷ் நாடுகளின் எழைப்பெண்கள் ஆயிரக்கணக்கில் இந்தியாவிற்குள் இரக்கப்படுவர்கள் அப்புறம் எல்லாம் நாசமா போயிரும் ஆனா ஒங்களா மாதிரி ஆளுங்களுக்கு ஒரே குஜால் தான் 

  24. பாமரன் எந்த பாமரனை சுரண்டி மேலே வருகிறான்? அரசாங்க சலுகை பெற்று தான் முன்னேறுகிறான்!-rammy.
    ஒரு அடிமட்ட கூலித்தொழிலாளி தன் உழைப்பால் வளர்ந்து தன்னிறைவு காண்பதற்குரிய சீரான வழிமுறைகளை உருவாக்கி கொடுக்கவேண்டியது ஒரு அரசின் கடமை தூரதிஸ்டவசமாக இந்தியா போன்ற நாடுகளில் தொழிலாளிகளை பாதுகாக்கும் சட்டங்கள் இருந்தாலும் அவை தூங்கிக்கொண்டிருக்கின்றன. அடிமட்டத்திலிருந்து முன்னேறுபவன் அரசியல்வாதி தொடக்கம் அடிமட்ட அதிகாரிகள் வரையிலும் சுரண்டப்படுகிறான் அவர்கள் காலைப்பிடித்து கையில் கொடுக்காதவரை முன்னேறமுடியாது. இதனால் முன்னேற முயற்சிப்பவனுக்கும் அடுத்தவனை சுரண்டவேண்டிய தேவை ஏற்படுகிறது. ஒரு தொழிலாளிக்கு கொடுக்கப்படவேண்டிய கொடுப்பனவு அரசினால் நிர்ணயிக்கப்படுவதில்லை முதலாளியே நிர்ணயம் செய்கிறான் அதன்வழியே ஒரு தொழிலாளி முன்னேறும் வழிகள் ஏற்படும்போது சக தொழிலாளியின் கொடுப்பனவை தானே நிர்ணயம் செய்து அவனை சுரண்ட முடிகிறது. முதலாளித்துவ ஆட்சிநடக்கும் மேலைநாடுகளில் கூட ஒரு அடிமட்ட தொழிலாளி தனது உழைப்பினால் உண்டு, உடுத்தி, உறங்குவதற்கு வேண்டிய கொடுப்பனவை பெறுவதற்கு அந்நாட்டு அரசுகள் பெரும் பாதுகாப்பாக செயல்படுகிறது. உழைப்பின் தராதரத்திற்கேற்ப கொடுப்பனவுகளுக்கான ஒரு தொகையை அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஜனநாயகமென்றும், மக்களாட்சியென்றும், கம்யூனிசமென்றும் பம்மாத்துக்காட்டும் இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டு அரசாட்சியில் சமீபத்தில் முதலாளித்தரத்துக்கு வந்துள்ள ஒருவனின் பாதையை கூர்ந்து பார்த்தால் சுரண்டலின் உண்மைகள் நிச்சயம் புலப்படும். ஒருவன் தன் உழைப்பின் மூலம் கிடைக்கும் ஊதியத்தில் சிக்கனமாக செலவு செய்தது போக மீதப்படும் தொகையை மூலதனமாக்கி ஒரு தொழிலிலை தொடங்கும்போது அவனுக்கான வரிச்சலுகை, வட்டிச்சலுகை கொடுக்காது அவனது மூலதனத்தையே சுரண்டுவதற்கு வாய்பிளந்து அரச, அதிகார பிசாசுகள் நிற்கும்போது முதலாளியாகட்டும் தொழிலாளியாகட்டும் ஒருவரை ஒருவர் சுரண்டுவது முடிவில்லாது தொடரும்.

    கலைஞர் கம்யூனிசத்தை செயல் படுத்தினார் எனும் உண்மையை எந்த விதத்திலும் மூடி மறைக்கமுடியாது! என்பது உண்மைதான். இலவச ரிவீ, இலவச அரிசி, ஒட்டுக்கு ஆயிரம் ரூபா என லெனின், கார்ள்ஸ்மார்க் எழுதிவைத்த கம்யூனிச சித்தாந்தங்களை மக்கள் அறிவதற்கு வெளியிடுங்கள்.

    • நன்பரே! சில தொழிலாளிகள் தங்கள் சம்பளத்தை நிர்ணயிக்கும் நிலை தற்போது உருவாகி உள்ளது! உதா: கட்டிடத் தொழிலாளர்கள், தையல் கலைஞர்கள், ப்ளம்பர்கள், எலெக்ட்ரிசியன்கள்,விவசாயத் தொழிலாளார்கள் ஆகிய திறன் அடிப்படை தொழிலாளர்கள், தங்கள் சம்பளத்தை நிர்ணயித்து பெற்று வருகிறார்கள். இதே நிலையில், தொழில் மயமாக்கல் தொடர்ந்தால், தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு, மற்ற தொழிலாளியும் சுய சம்பள நிர்ணயம் செய்து கொள்ளும் நாள் விரைவில்!

      சுரண்டல் எங்கில்லை? உங்கள் கட்சியில், குடும்பத்தில், நண்பர்களிடத்தில்,தொழிற் சங்கத்தில்…? புரியவில்லை எனில் விளக்குகிறேன்?

      வோட்காவை ஊற்றி, அறிவை மழுங்கடித்து சர்வாதிகார சுரண்டலைச் செய்தது, உங்கள் மார்க்ஸ், லெனின் வழி வந்த சோவியத் அரசில் தானே! அதே போல் தான், கலைஞரும் இலவசங்களை வாரி இறைத்து, டாஸ்மேக்கை திறந்து, மானையும் மார்பையும் ஆட்டி, மக்களை மழுங்கடிக்கிறார்.இப்போது சொல்லுங்கள்! கலைஞர் தானே உண்மையான கம்யுனிஸ்ட்?

      தீவிர கம்யுனிஸ நாடான சீனத்தை விட, அமெரிக்காவில் தான் அதிக அளவில் தொழிலாளர்களுக்கு அதிக உரிமையும், வருவாயும் கிட்டுகிறது! ஆதாரம் – அமெரிக்காவில் அதிக அளவில் சீன இறக்குமதி, அமரிக்காவில் அதிக அளவில் தொழிற்சாலைகள் மூடல்!

  25. பணக்காரர்கள் எல்லாம் கெட்டவர்கள் இல்லை ஆனால் கேட்டவர்கள் எல்லாம் பணக்காரர்கள்!. இதை ஒத்து கொள்வீர்கள். குஷ்புவின் இமேஜ் கனியின் இமேஜை உயர்த்த நிச்சயம் உதவும். கனியின் ஆளுமை அதிகரிக்க உதவும் ஒரு காரணி மட்டுமே குஷ்பு.

      • rammy said:
        ////கெட்டவன் என்பதற்கு விளக்கம் தேவை!///

        Dr. Muthu Laksmi Reddy பார்ப்பன பெண்களை தேவதாசி முறைக்கு விட “Madras Assembly”–இல் சொன்ன பொது குத்த வச்சு உக்காந்த சத்யமூர்த்தி ஐயர் அப்புறம் எந்திரிக்கவே இல்லை என்று கேள்வி!

        இதுமாதிரி ஊரான் பொம்பளைங்க எங்களுக்கு வேணும் ஆனால் எங்க வீடு பொண்ணுங்கள பூட்டி வச்சுக்குவம் என்று சொன்ன
        சத்யமூர்த்தி ஐயர்..தான் நீங்கள் கேட்ட கெட்டவனுக்கு விளக்கம்…

        அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி !?

        • //ஊரான் பொம்பளைங்க எங்களுக்கு வேணும் ஆனால் எங்க வீடு பொண்ணுங்கள பூட்டி வச்சுக்குவம் என்று சொன்னசத்யமூர்த்தி ஐயர்//
           இந்தியாவில் பாலியல் தொழிலை பலனளிக்கும் வகையில் தடைசெய்ய அரசாங்கத்தால் இயலவில்லை என்கிற ஓர் நிலையில், பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்குவது பற்றி இந்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்நாட்டின் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
          http://www.bbc.co.uk/tamil/highlights/story/2009/12/091212_prosti.shtml

          சத்தியமூர்த்தி அய்யர் அன்று சொன்னதை இன்று உச்ச நீதி மன்றமும், உயர் நீதி மன்றமும்,  சி பீ ஐ சுதா ராமலிங்கமும் சொல்கிறார்களே?

          குஸ்பு சொன்னால் என்ன தவறு? தி மு க வில் ஏன் இணய கூடாது? கண்ணகி யின் கற்பு கணவன் ஒன்றுக்கு மேலான பெண்களுடன் கூடுவதற்கு உதவுவது தான் . [obscured] சத்தியமூர்த்தி எப்போதுஎங்க வீடு பொண்ணுங்கள பூட்டி வச்சுக்குவம்  என்று சொன்னார்? 
          பணம் தேவையானால் விபச்சாரம் செய்யலாம் என்பது சரி தான் என பாலச்சந்தர் அரங்கேற்றம் படத்தில் தெளிவாக எடுத்துள்ளார் .
          குடும்ப வன்முறை சட்டம் ஒரு ஆண் ஒரே நேரத்தில் எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் உறவு வைத்துகொள்ள சட்டபூர்வ அனுமதி அளிக்கிறதே?
          தணிக்கை செய்யப்பட்டுள்ளது – வினவு

        • தமிழக முதல்வர்?,கலைஞர் கருணநாதியின் “செம்மொழி மாநாட்டு பாடல்” வந்துவிட்டது!.-http://beta.thehindu.com/multimedia/archive/00117/WCTC_Theme_117421a.mp3 – “ஐயன் வள்ளுவன்படி,”தீதும் நன்றும் பிறர் தர வாரா,போரை தவிர்த்து பொருளைத் தேடு” என்பதே இவரின் சந்தர்ப்ப வாத “ஜாதிரீரீயான” அறிவுரை!.”பணம் பந்தியிலே குணம் குப்பையிலே” என்று,ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே அனைவருக்கும் தெரியும்.கலைஞரும் அவர் குடும்பத்தவரும் என்ன மின்சாரம் கண்டிபிடித்து,”பேட்டண்ட் வாங்கி”,அதை சந்தைப்படுத்தியா பொருளீட்டினார்கள்?.தங்கள் “குலத்தொழிலான மானாட்டம்,மயிலாட்டம்” மூலமாகத்தானே பொருளீட்டினார்கள்.புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர் மட்டும் என்னவாம்,தங்கள் “குலத்தொழிலான அதிகார வர்கங்களின் காலைக் கழுவிக் குடித்துதானே(ஆங்கிலேய அடிவருடிகள்) பொருளீட்டினார்கள்.இதில் “வெங்காய தமிழ்த் தேசியம்” எங்கேயாவது காப்பாற்றப்பட்டதா?.இந்திய தேசிய தொலைக்கட்சியான என்.டி.டிவி. ஏற்கனவே இதை நக்கலடிக்கிறது.தமிழ்தேசியத்தை பேசியவர்கள்,நீங்கள் இருவரும்தானே!.ஆயுதம் தூக்கக் கூடாது,இந்திய இராணுவமே எங்கள் இறமையின் பாதுகாவலன்,என்று நூறாண்டு காலமாக கூறுகிறவர்கள் நாங்கள்!.தமிழ் என்ற சொல்லை வைத்து,வாய் சவாடல் விட்டு,ஹிந்தி அரக்கன்,சிங்களவன் தோலை செருப்பாக தைப்போம் என்றவர்கள் நீங்கள்!.இப்போது,”நீ தமிழனாக இரு ஆனால் ஆயுதத்தை தூக்காதே”! என்று சந்தர்ப்பவாதமாக பாடல் எழுதுகிறீர்கள்.தவளை தன் கத்தலால் கெட்ட மாதிரி,வல்லரசு பாம்புகளை வரவழைத்து விட்டு,எப்படி தடுப்பீர்கள்.ஓ!… அதுதான் இரண்டுபெண்டாட்டி முருகன் மாதிரிகட்ட வேண்டு,யாழ்ப்பாண்த்தில்,விதவைப் பெண்களுக்கு,உல்லாச பயணிகள் சேவை செய்ய,”ஹோட்டல்கள் கட்டவேண்டு” என்று “இளையோருக்கு” அறிவுறுத்துகிறீர்கள்!.ஒன்று செய்யுங்கள்,முன்பு தாய்லாந்தில்,உலகப் போரில் செய்தது போல்,உங்கள் வீட்டு பெண்களையெல்லாம் வீட்டு வாசலில் திரும்பி நிற்க சொல்லுங்கள்,நீங்கள் வெத்திலைப் பாக்கு பெட்டியுடன் வாசலில் நில்லுங்கள்!.

        • சுரேஷ் ராம் …..
          ஒரு குற்றத்தை தடுக்க/ஒழித்துக்கட்ட தண்டனை கடுமையாக்கப்பட வேண்டுமேயன்றி அதனை சட்டப்போர்வமாக்கூடாது கண்ணு….
          நம் நாட்டில், கோவை/பம்பாய் குண்டு வெடிப்புகளுக்கு மட்டும் தண்டனை கொடுக்கப்பட்டுவிட்டது…விளைவு..? இந்திய முஸ்லிம்கள் இனி யாரும் குண்டு வைப்பதில் ஈடுபடவில்லை… எனினும் பல குண்டுகள் பிறகு வெடித்தனவே…. அதைத்தான், கர்மவீரர்-அஞ்சாநெஞ்சர் -நேர்மையின் போர்வாள் , ஹேமந்த் கார்கரே கண்டுபிடித்து கைது செய்து ஒப்புதல் வாக்குமூலத்துடன் ஆர்.எஸ்.எஸ்.-இனரின் கைங்கர்யத்தை துகிளுரித்துக்காட்டினாரே….? தற்காலிகமாக நின்று விடவில்லையா குண்டுவெடிப்புகள்..? நிரந்தரமாக நிற்க வேண்டுமானால், தீர்ப்பு கொடுக்கப்பட வேண்டும்… அவர்களுக்கு மரணதண்டனை தீர்ப்பு… இனி ஒரு ஆர்.எஸ்.எஸ். பயலுக்கு குண்டு வைக்க எண்ணம் வருமா? ஒரு ஆர் எஸ் எஸ் ராணுவ அதிகாரிக்கு பயங்கரவாதிகளுக்கு குண்டு சப்ளை பண்ண எண்ணம் வருமா? ஆனால், கார்கரேயை கொன்ற பிறகு, வழக்கை இழுத்தடித்து கைது செய்யப்பட்டவர்களையும்,ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவர்களையும் ராக்கேஷ் ஷர்மா மூலம் தப்பிக்கவிட்டால், மீண்டும் ஆர் எஸ் எஸ் காரர்கள் குண்டு வைப்பார்கள்…

          அன்றே மும்பைக்கலவரம் செய்தவர்களை (ஸ்ரீ கிருஷ்ணா விசாரணை கமிஷன் அறிக்கை)தூக்கில் போட்டிருந்தால், குஜராத் கலவரம் நடந்திருக்குமா? தேஹல்கா ஆதாரம் மூலம் மோடி மச்தான்கலுக்கு தண்டனை அளித்திருந்தால், ராம் சேனா முத்தாலிக் அறுபது லட்சம் பேரம் பேசி இருப்பானா?

          இப்படித்தான், குற்றவாளிகள் தம் குற்றத்துக்கு தண்டனை தரப்படாது என்று நம்பும்போதும், சட்டத்தின் மீதும் நீதியின் மீதும் பயம்/நம்பிக்கை போய்விடுமாயின் குற்றங்கள் பெருகும்… நீங்கள் சொல்வதுபோல அக்குற்றங்களை சட்டப்பூர்வமாக்கி விட்டால் குற்றங்கள் ஒழியும் என்று தப்புக்கணக்கு போடாதீர்கள்… மாறாக புற்றீசல் போல கன்னாபின்னா வென்று இனி எப்போதும் கட்டுப்படுத்தவே முடியாதபடிக்கு பல்கிப்பெருகும். இனி அக்குற்றத்தை ஒழிக்கவே இயலாமல் போய்விடும்…(உதாரணம்: குடி. — இதுபற்றி உங்களுக்கான என் முந்தய பின்னூட்டம் # 19.1.1.2 — இதற்கு பதில் சொல்லாமல் ஏன் ஓடி விட்டீர்கள்…சுரேஷ் ராம் ?)

          விபச்சாரத்தை ஒழிக்க, அதனை செய்த ஆணுக்கும் பெண்ணுக்கும் மரணதண்டனை என்று அறிவியுங்கள், அடுத்தநாள் பாதி விபச்சாரிகள் திருந்தி விடுவார்கள். மீதம் இருக்கும் விபச்சாரிகளில் விபச்சாரம் செய்த ஒரு ஜோடியை தூக்கில் இடுங்கள். அடுத்த நாள் விபச்சாரமே இருக்காது. ஆனால், அவர்களை லஞ்சம் வாங்கிக்கொண்டு தப்பிக்கவிட்டால், மீண்டும் விபச்சாரம் ஸ்லோவாக பெருகும். சட்ட்ப்போர்வமாக்கினால், அடுத்தவருடம் என்பது சதவீத இந்தியர்கள் விபச்சாரிகளாக இருப்பர்…

          நீங்கள் சொல்வதனால் மட்டுமே இக்கருத்தை நான் தவறு என்று சொல்லவில்லை… இதை எவர் சொன்னாலும்… எந்த நாட்டு உச்சநீதி மன்றம் சொன்னாலும், எந்தநாட்டு மன்னர்/அதிபர்/பிரதமர்/நாடாளுமன்றம் சொன்னாலும் தவறுதான்… முட்டாள்த்தனம்தான்… குற்றம்தான்… அயோக்கியத்தனம்தான்… என்கிறேன்….

        • ஈரோடு காவிரி ஆற்றுப் படுகையில் பரத்தையரோடு புரண்டவர் ,நல்லவரா இல்லை கெட்டவரா?

  26. //இன்று தி.மு.கவின் கூட்டங்கள் ஒட்டுமொத்தமாக கான்ட்ராக்ட்டுக்கு விடப்பட்டு நடத்தப்படுகின்றன. தோரணம் கட்டுவதோ, சுவரொட்டி ஒட்டுவதோ, பிளக்ஸ் பேனரை நிறுத்துவதோ இன்று தி.மு.க தொண்டன் செய்யும் வேலையில்லை. மேல்மட்டம் தரகு முதலாளிகளாக உருவெடுத்த மாதிரி அடுத்த தலைமை லோக்கல் முதலாளிகளாக மாறிவிட்டனர். சுயநிதிக் கல்லூரி இல்லாத தி.மு.க தலைவரைப் பார்ப்பது கடினம்.//

    தோழர் வினவு மிக சிறப்பான கட்டுரை,
    அடிமட்டத்தொண்டனின் உழைப்பில் அவன் வியர்வைத் துளியில் உருவான திமுக வளர்ச்சி இப்போது முழுக்க முழுக்க கார்ப்பரேட் மயமாகி விட்டது, ஒரு பல வருடங்களுக்கு முன் கருணாவை கைது செய்த போது கண்ணீர் விட்டு அழுதவன் நான். அந்தக்கட்சியின் சில தொண்டர்களும் கதறினார்கள். ஆனால் அக்கட்சியின் உள்ளூர் தலைமைகள் கொட்டாவி விடும் போது கூட கண்ணீரை சிந்த வில்லை. இப்போது அக்கட்சியே வர்க்கசேவைகட்சியாகி விட்டது. திமுக தொண்டர்கள் கருணாவை இப்போது தி மு க இளசுகள் கிழவன் சாவமாட்டேங்குறான் என்கின்றன.

    திமுகவில் இப்போது இருக்கும் எத்தனை பேருக்கு அக்கட்சி 1949-ம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது எனத்தெரியும்? அது அவசியமல்ல பொறுக்கித்தின்பதற்கு என்பதை தலைமை முதல் தொண்டன் வரை நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள்.

    கலகம்

    • அந்தியூர் விஜயா,பலானது விஜயா தாயன்பன்,ஆரம்ப காலத்து கலைஞரின் கதாநாயகி ஆச்சி மனோரமா,போன்றவர்களை விட,”நடிகை ரம்பா” தி.மு.க. வின் ஆரம்ப கால தொண்டரா?!.1970 களில்,திருநெல்வேலி தி.மு.க. மாவட்ட செயலாளராக இருந்த,நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் கட்சியிலிருந்து விலகி சொந்த உழைப்பில் “சூப்ரீம் கோர்ட் நீதிபதியாகி”,அவரின் மனைவி இறந்த்போது கூட,சமீபத்தில் பல கட்சிகாரர்கள் “தார் குச்சியல் குத்தி”- நிழல் உதவியாளர் சண்முகநாதன் உட்பட,கலைஞர் அந்த சாவு வீட்டில் கலந்துக் கொண்டார்.மதுரை தா.கிருட்டிணன் போல இவர் கடுமையான் தி.மு.கா. விசுவாசி.பல விசுவாசமான கட்சிகாரர்களை யார் என்று கேட்கும் உளவியல் நிலையிலிருக்கும் கடுமையான கலைஞர் கிழம்!,வீட்டு வாசலி வந்து நின்றால் “கட்சிகாரன்,கட்சிகாரன்” என்று பிச்சைக்காரன் வந்துவிட்டது போல் கத்திக்கொண்டு ஓடும் கலைஞர் வீட்டு பேரக் குழந்தைகள்!.இந்து மாச்சரியங்களை எதிர்ப்பேன் என்று “மஞ்சள் துண்டு” போட்டிருக்கும் இவர்!,”இந்திரன் – ரம்பா” திருமணத்திற்கு மட்டும் எப்படி சுயநினைவுடன் ஓடோடி வந்தார்!.இவர்களின் “பர்னீச்சர் தொழிலும்”,சென்னை இராயப் பேட்டையில் இருக்கும்,கலைஞரின் மூன்றாவது மனைவி இராசாத்தி அம்மாளின் “இராயல் ஃபர்னீச்சர்” தொழிலும்,கவிஞர்? கனிமொழியின் “புலி வேண்டாம் புலிப் பணம் வேண்டும்” என்ற “வெங்காய டெசோ(செந்தமிழீழம்)” தொழிலும் ஒத்துப் போவதாலோ??!.
      இது புலிப்பணம் அல்ல!,புலிப் பினாமிகளின் பணம்!!.

  27. செம்மொழி மாநாட்டில் கலைன்ஜ்ரி பேத்தியின் விணை இசை நிகழ்ச்சி!!.
    /போர்வாளா, பூவிதழா என்ற தலைப்பில் பத்மா சுப்பிரமணியம் குழுவினரின் நிகழ்ச்சியும், …/–
    பூவிதழ்தான்!!,கலைஞருக்கு மேடையிலேயே “மல்லிகைப் பூ” தொங்க விட்டால்தான் பிடிக்கும்.கைகளில் மல்லிகைப் பூ சுற்றி,மைனர் செயின் அணிந்து,பையில் பணத்துடன் வந்தால்தானே கலைஞர்கள் வாழ முடியும்!.பேத்தியென்ன,கொள்ளுப் பேத்திக்கு,கொள்ளு பேத்தி காலத்திலும் அசைக்க முடியாது,”போர்வாளை தூக்கினால்தானே” அழிவு!!,பாவாடையை தூக்கினால் அல்லவே!..மன்னிக்கவும்…அண்ணா காலத்தில்..ஒரு நாடகமேடையில்..கலைஞர் இரு பொருள்,ஒரு மொழியில் பேசியது “பாவாடையை தூக்கினால்(திரை) காட்சிகள் தெரியும்” என்பது.நான் சொல்லுவதும் அரங்க நிகழ்வுகளை.

  28. Suresh ram said:///சத்தியமூர்த்தி அய்யர் அன்று சொன்னதை இன்று உச்ச நீதி மன்றமும், உயர் நீதி மன்றமும், சி பீ ஐ சுதா ராமலிங்கமும் சொல்கிறார்களே?///

    Wikipedia—வில் இருந்து எடுத்தது: ///The devadasi’s sexual partner was always chosen by ‘arrangement’ with her mother and grandmother acting as prime movers in the veto system……a Brahmin or member of the royal elite was preferred for the good breeding and/or wealth he would bring into the family/// All the girls were SELECTED from ONLY one community in Tamil Nadu….

    சத்தியமூர்த்தி அய்யர் இந்த தேவதாசி முறையை ஒரு குலத்தில் இருக்கும் பெண்களை மட்டும் தேவதாசிகலாக ஆக்கும் முறை தொடர வேண்டும் என்று சொன்னார். கடவுள் பெயரால் பார்பனர்கள் மட்டும் அந்த பெண்களை அனுபவத்தார்கள். அந்த ஆனந்த கும்மியைத்தான் Dr Muthulakshmi Reddy நிறுத்த சொன்னார். தேவதாசிகலாக ஆக்கும் முறை தொடர வேண்டும் என்று சத்தியமூர்த்தி அய்யர் விரும்பினால் அவர்கள் குல பெண்களான பார்ப்பனத்திகளை அந்த வேலைக்கு வைத்துக்கொள்ள சொன்னார். உடனே சத்தியமூர்த்தி அய்யர் கம்முனு குந்திக்கிட்டார். தேவதாசி முறையும் ஒழிந்த்தது. இது தான் உண்மை.

    அவாள் Suresh ram சொன்னது வேறு. இது வேறு….இது ஏதோ சத்தியமூர்த்தி அய்யர் தீர்க்கதரிசி மாதிரி காட்டுவதற்காண முயற்சி. இதுதான் கேடு கேட்ட சத்தியமூர்த்தி அய்யர் உண்மையான பவிசு—அதாவது போன பத்தியில் நீங்கள் படித்தது. இந்த பதில் அவாள் JAMES FRIEDRICH–க்கும் (in all பின்னூட்டம்) சேர்த்து சொன்ன பதிலாக்கும்.

    கெட்டவன் மட்டுமல்லாமல் “கேடு கேட்டவனுக்கும்” முழ விளக்கம் இந்த சத்தியமூர்த்தி அய்யர் தான்.

    ////அவாள் Suresh ram said:///சத்தியமூர்த்தி அய்யர் அன்று சொன்னதை இன்று உச்ச நீதி மன்றமும், உயர் நீதி மன்றமும், சி பீ ஐ சுதா ராமலிங்கமும் சொல்கிறார்களே?///
    அவாள் JAMES FRIEDRICH எல்லா பின்னூட்டத்திலும் சொன்னது////

    கன்னியாகுமரியில் தேள் கடித்தால் காஷ்மீரத்தில் நெறி காட்டுவது எனபது இது தானோ?

  29. To demoralise and de-stabilise from inside, குஷ்பு அவர்கள் அ தி மு க செயலாளர் ஜெ-வின் சொல் படியே தி மு க வில் சேர்ந்ததாக நினைக்கிறேன்.  உள்ளிருந்து கொண்டே இந்து கடவுள் மறுப்பு, nepotism போன்ற கொள்கைகளை நீர்த்து போக செய்ய . Any comments ? 

  30. இதற்கு பதில் சொல்லாமல் ஏன் ஓடி விட்டீர்கள்…சுரேஷ் ராம் ?/””பட்டுகோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைபாக்கு ரெண்டு ரூபாய்” என்கிற சொல்லாடல் உண்டு.விவாதம் கொட்டை பாக்கு விலையை பற்றி அல்ல.சுரேசு ராமு லூசா என்பது பற்றியும் அல்ல .
    //19.1.1.2ஜாக்பாட் ஜெ says:சுரேசு ராமு….நீங்கள் சுட்டிகள் தரலாம் பல… அதனாலெல்லாம் குற்றம் சட்டப்பூர்வமாகிவிடாது …நானும் தரவா…? ‘பயங்கரவாதம் சரியானதே’ …………… குண்டு வைப்பதை நியாயம் எனக்கூறி சட்டப்பூர்வமாக்கிவிடலாமா? லூசா சார் நீங்க……நீங்கள் இந்தியாவை அதி விரைவாக அழிக்க நினைக்கும் ஒரு அரக்கன் -அல்லது- சாத்தான் -அல்லது- ஒரு பன்னாட்டுக்கம்பெனி ஓனர் -அல்லது- அவர்களுக்கு அடிபணியும் ஆளும் இந்திய அரசியல்வாதி….! இதில் எதுவும் இல்லாவிட்டால் நீங்கள் ஒரு அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கக்கூடும்….
    ///28.1.1.1 Suresh ram………..பொம்பளைங்க எங்களுக்கு வேணும் ஆனால் எங்க வீடு பொண்ணுங்கள பூட்டி வச்சுக்குவம் என்று சொன்னசத்யமூர்த்தி ஐயர்//குஸ்பு சொன்னால் என்ன தவறு? தி மு க வில் ஏன் இணய கூடாது? கண்ணகி யின் கற்பு கணவன் ஒன்றுக்கு மேலான பெண்களுடன் கூடுவதற்கு உதவுவது தான் . [obscured] சத்தியமூர்த்தி எப்போதுஎங்க வீடு பொண்ணுங்கள பூட்டி வச்சுக்குவம் என்று சொன்னார்? பணம் தேவையானால் விபச்சாரம் செய்யலாம் என்பது சரி தான் என பாலச்சந்தர் அரங்கேற்றம் படத்தில் தெளிவாக எடுத்துள்ளார் .குடும்ப வன்முறை சட்டம் ஒரு ஆண் ஒரே நேரத்தில் எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் உறவு வைத்துகொள்ள சட்டபூர்வ அனுமதி அளிக்கிறதே?…///
     
       

  31. // Suresh ram சொன்னது வேறு. இது வேறு….இது ஏதோ சத்தியமூர்த்தி அய்யர் தீர்க்கதரிசி மாதிரி காட்டுவதற்காண முயற்சி. இதுதான் கேடு கேட்ட சத்தியமூர்த்தி அய்யர் உண்மையான பவிசு//
    “”பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்குவது பற்றி இந்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று நாட்டின் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.””
    சத்தியமுர்த்தி தான் அய்யர் என்பதால் தான் தேவதாசி முறை நீக்க கூடது என்று வைத்துகொண்டால் , பெண்ணுரிமை பாடும், கட்டுபாடு அற்ற உடலுறவு உரிமை அளிக்கும்(Live in relationship)   “குடும்ப வன்முறை சட்ட” இயற்றிய எல்லா கட்சியினரும்(பிருந்தா காரத்,  சோனியா , கம்யுனிச  வாதிகள் உட்பட ) “அய்யர்” என கொள்ளலாமா?
     

  32. Suresh ram said ///சத்தியமூர்த்தி எப்போதுஎங்க வீடு பொண்ணுங்கள பூட்டி வச்சுக்குவம் என்று சொன்னார்? ////

    ஆயிரம் தடவை சொன்னாலும் அரைச்ச மாவையே அரைச்சு ஒரு உண்மையை நீத்துப்போகடிப்பதை தொழிலாகவே உங்கவாள் கூட்டம் அலைகிறது? வினவும் சளைக்காமல் அதையே திருப்பி திருப்பி போடுகிறார்.

    உண்மையை மறைக்க இப்படி முயல வேண்டாம் !

    உங்கள் கேள்விக்கு பதில் இந்த பின்னூட் தடத்தில் உள்ளது.

    Please see no. 25. 28.1.1 and 31.

    அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி!?

  33. @ 31.ஆட்டையாம்பட்டி அம்பி
    “”தேவதாசி முறையும் ஒழிந்த்தது. இது தான் உண்மை”
    @25. 28.1.௧ சுரேஷ் ram
    “”பணம் தேவையானால் விபச்சாரம் செய்யலாம் என்பது சரி தான் என பாலச்சந்தர் அரங்கேற்றம் படத்தில் தெளிவாக எடுத்துள்ளார் ”
    @ 25
    “தேவதாசிகளை ஐயர் அப்புறம் “royal elite” மட்டும் தான் வச்சுக்கணும். மற்றபடி கிருத்துவர்கள், முஸ்லிம்கள், கீழ்ஜாதிக்காரர்கள் வச்சுக்ககூடாது”
    commercial sex workers (சங்கம் வைத்து வளர்கிறார்கள்)  அதாவது விபச்சாரிகளை கேட்டு பாருங்கள் . பணம் தான் முக்கியமே தவிர ஜாதியோ மதமோ அல்ல. தற்போது தேவதாசி முறை ஒழிக்கப்பட்டு விட்டது.  ஆனால் விபச்சாரம் தழைத்து வளர்கிறது . பெண் உரிமை போராட்ட வீரர்களுக்கு நன்றி
     

    • அப்படியா? நான் அரங்கேற்றம் படம் பார்க்கவில்லை. எப்படி”பணம் தேவையானால் விபச்சாரம் செய்யலாம்” என்ற பாலச்சந்தரின் அபூர்வ தத்துவத்திற்கு நமது Censor Board- அனுமதி அளித்தது? அது சரி! Censor Board- எல்லாம் அவாளுக்கு கிடையாதே? அவாளுக்கு எப்பவும் இந்தியாவில் தனி சட்டம் தான்.

      இதுமாதிரி ஒரு அபூர்வமான தத்துவத்தை ஒரு சூத்திரன் எடுத்து இருந்ததால் இந்நேரம் அவன் படமும் வெளி வந்த்திருக்காது. அவனும் போண்டி ஆகியிருப்பான். அவனை கொன்னும் போட்டிருப்பார்கள்.

      நான் பாத்த ஒரே பாலச்சந்தர் படம் நெற்றிக்கண். பொதுவாக பாலச்சந்தர் படம் எல்லாம் ஒரே போர். எப்பவும் அவா பாஷையிலே பேசிக்கொண்டு. எதோ உலகத்தில அவாள் மட்டும் இருக்கிறா மாதிரியும் அந்த பாஷை எல்லாருக்கும் புடிக்கும் அப்புறம் புரியும் என்று எடுக்கும் படங்கள்.

      “பணம் தேவையானால் விபச்சாரம் செய்யலாம் என்பது சரி தான் என பாலச்சந்தர் அரங்கேற்றம் படத்தில் தெளிவாக எடுத்துள்ளார்” —- என்ற அபூர்வ தத்துவத்தை விட பல்லாயிரம் மடங்கு உளறலை நெற்றிக்கண் படத்தில் பாலச்சந்தர் சொல்லியுள்ளார்.

      தசரதனுக்கு 60,000 பொண்டாட்டிகளாம். எந்த அடிமுட்டாள் மர மண்டையன் கூட இப்படி சொல்ல முடியாது. ஒரு நாளக்கி ஒரு பொண்டாட்டி பஜXக்கு என்று வைத்துக்கொண்டாலும் வருடத்திற்கு 365 பொண்டாட்டிகள். அப்ப குறைந்தது 180 வருடங்களாவது பஜXக்கு வேணும். தசரதனோ அல்ப ஆயுசுல போயிட்டான். அப்புறம் எப்படி? அப்படியே 15 வயதில் இருந்து 50 வயது வரை தினமும் இந்த ஒரே பXனையை பண்ணி இருந்ததாலும் அவுத்த கோமXத்தை திருப்பி கூட கட்டி இருக்க முடியாது. ஏன் கோXணமே கட்டி இருக்க முடியாது! அப்புறம் என்ன ராஜா? நாடு? மக்கள்? இதைத்தவிர, அந்த பஜXயைத் தவிர அவர் வேறு வேலையே செய்யலியா?

      ஒரு வேலை Work-Load தாங்காமல் அதான் அல்ப ஆயுசில பூட்டாரா? எப்படி இருந்ததாலும் இந்த உலக மகா உளறலை என்னதான் அவாளுக்கு என்று இந்தியாவில் தனி சட்டம் இருந்ததாலும் எப்படி நமது நமது Censor Board—அனுமதி அளித்தது?

      அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி!?

    • ////“”பணம் தேவையானால் விபச்சாரம் செய்யலாம் என்பது சரி தான் என பாலச்சந்தர் அரங்கேற்றம் படத்தில் தெளிவாக எடுத்துள்ளார் /// நீங்க சினிமா காரேன் சொல்லுறதையேல்லாம் கேக்கிற ஆளா நீங்க வேளங்கிபோயிரும் குடும்பம்

      • சுரேஷ் ராம் said ://“”பணம் தேவையானால் விபச்சாரம் செய்யலாம் என்பது சரி தான் என பாலச்சந்தர் அரங்கேற்றம் படத்தில் தெளிவாக எடுத்துள்ளார் /// அகவே அவரிடம் நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி.

        ஓவர் to சுரேஷ் ராம்..

        அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி!?

  34. அப்படியா? நான் அரங்கேற்றம் படம் பார்க்கவில்லை………..எப்படி நமது நமது Censor Board—அனுமதி அளித்தது// இதையும் தெரிந்து கொள்ளுங்கள் :://கருணாநிதியும், கனிமொழியும் கூட சங்க கால கள்ள காதல் குறித்த தமிழர்களது மரபை குஷ்புவுக்காக மீள் நினைவு செய்கிறார்கள்//பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்குவது பற்றி இந்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று நாட்டின் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. கட்டுபாடு அற்ற பல ஆண்களுடன்  உடலுறவு உரிமை அளிக்கும் Live in relationship உரிமையை “குடும்ப வன்முறை சட்டம் ” எல்லா பெண்களுக்கும் அளிக்கிறது .திருமணத்துக்கு முன்னால் எந்த பெண்ணும் பாலுறவு கொள்ளவில்லை என எந்த படித்த ஆணும் எதிர்பார்பதில்லை குஷ்பூ 

  35. அன்றுமேடை நாடகங்களுக்கு,நாடகக் கதைகள் நகர்வதற்காககோமாளிகளைக் கொண்டுவந்தார்கள்.
    இன்றுஅரசியல் நாடகத்தை நகர்துவதற்காககுஷ்பூக்கள் தேவைப்படுகிறார்கள்.
    – புதிய பாமரன்.

  36. திரிஷா நமீதா என்று சொன்னால் உதடுகள் வொட்டாது . குஷ்பு என்று சொன்னால் வுதடுகள் கூட வொட்டும்.

Leave a Reply to mootoo பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க