privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரகேலிச் சித்திரங்கள்சாதீ - முகிலனின் ஓவியங்கள் !

சாதீ – முகிலனின் ஓவியங்கள் !

-

தாழ்த்தப்பட்ட மக்களை சமூகத்திலிருந்து வெறுத்து ஒதுக்குவது மரண தண்டனையை விட கொடியது என்றார் டாக்கடர் அம்பேத்கர். ஆனால் அவருக்கு முன்பும், அவர் வாழ்ந்த காலத்திற்கு பின்பும் இந்திய சமூகச் சூழலில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதி வெறியர்களால் அவிழ்த்து விடப்பட்ட தீண்டாமை கொடுமைகள் ஆயிரம்..ஆயிரம். தஞ்சை மாவட்டம் கீழ் வெண்மணியில் தாழ்த்தப்பட்ட விவாசாயத் தொழிலாளர்கள் உயிரோடு கொளுத்தப்பட்ட கொடூரம் இப்பொழுதும் நெஞ்சை விட்டு அகலாத வடு. இப்படி எண்ணற்ற வடுக்களை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு வகிப்பது இங்கு நிலவும் தீண்டாமை கொடுமை, அதை தூக்கிச் சுமக்கும் வர்ணாசிரமம், அந்த வர்ணாசிரமத்தை உயிருக்கு நிகராக பாதுகாக்கும் பார்ப்பனியம். இந்த சமூக அமைப்பின் கீழ் படிந்திருக்கும் இந்த வர்ணாசிரமக்க கசடுகளையெல்லாம் அகற்றாத வரை கீழ்வெண்மணிகள் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அப்படி தொடர்ந்த, தொடர்கின்ற வன்கொடுமையின் சித்திரப்பதிவுக்களே இவை!

கீழ் வெண்மனி தியாகிகளுக்கு வீர வணக்கம்

கூலி உயர்வுக்கு போராடிய கீழ் வெண்மனி விவசாயிகளை உயிரோடு எரித்த ஆதிக்க சாதி வெறியர்கள்

மேலவளவு

மேலவளவு – பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற காரணத்திற்காக ”நமக்கு மேல் இவனா” என்ற ஆதிக்க சாதி வெறி மேலோங்க முருகேசன் என்ற தாழ்த்தப்பட்டவர் உட்பட 6 பேரை வெட்டி படுகொலை செய்தனர் ஆதிக்க சாதி வெறியர்கள்

திண்ணியத்தில், கருப்பையா என்ற தலித் இளைஞனின் வாயில் மலத்தை தினித்த ஆதிக்க சாதி வெறியர்கள்

திருச்சி மாவட்டம், திண்ணியத்தில், கருப்பையா என்ற தலித் இளைஞனின் வாயில் மலத்தை திணித்த ஆதிக்க சாதி வெறியர்கள்

1992, வீரப்பன் தேடுதல் வேட்டையில் தரும்புரி வாச்சாத்தி பழங்குடியின மக்கள் மீது போலீசு நடத்திய மிருகத்தனமான தாக்குதல்

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி பழங்குடியின மக்கள் மீது போலீசு நடத்திய மிருகத்தனமான தாக்குதல்

பாப்பாபட்டி – கீரிப்பட்டியில் அரசை மிரட்டி தன்னை நிலைநிறுத்தி வரும் தேவர் சாதி ஆதிக்கம்

குரங்கு பேட்டையில், மரத்திலிருந்து வீழ்ந்த நாவல் கனியை தின்ற தலித் சிறுவனுக்கு இழைக்கப்பட்ட வண்கொடுமை
திருச்சி மாவட்டம், குரங்கு பேட்டையில், மரத்திலிருந்து வீழ்ந்த நாவல் கனியை தின்ற தலித் சிறுவனுக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமை

மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு அருகில் உள்ள வில்லூரில் தாழ்த்ப்பட்டவர்கள் தங்கள் தெருப்பக்கம் இரு சக்கர வண்டிகளை ஓட்ட தடைவிதித்தனர் ஆதிக்க சாதியினர்
மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு அருகில் உள்ள வில்லூரில் தாழ்த்ப்பட்டவர்கள் தங்கள் தெருப்பக்கம் இரு சக்கர வண்டிகளை ஓட்ட தடைவிதித்தனர் ஆதிக்க சாதியினர்

பொது நீர் நிலைகளில் குடிநீர் எடுக்க தாழ்த்தப்பட்டவர்களுக்கு தடை
பொது நீர் நிலைகளில் குடிநீர் எடுக்க தாழ்த்தப்பட்டவர்களுக்கு தடை

மனித மலத்தை மனிதன் சுமக்கும் அவலம்

மனிதனின் மலத்தை மனிதன் சுமக்கும் அவலம்

செருப்பு தைப்பது இன்னமும் ஒரு சாதிக்கு மட்டுமேயான தொழிலாக இருக்கிறது
செருப்பு தைப்பது இன்னமும் ஒரு சாதிக்கு மட்டுமேயான தொழிலாக இருக்கிறது

பொதுக்குவளைக்கு மறுப்பு - தனிக்குவளை அல்லது கையேந்த்தல் என்பதே நடைமுறையில் உள்ளது

பொதுக் குவளைக்கு மறுப்பு – தனிக்குவளை அல்லது கையேந்த்தல் என்பதே நடைமுறையில் உள்ளது

மதுரை மாவட்டத்தில் உள்ள 83 கிராமங்களில் 73 ல் இன்னமும் இரட்டை குவளை முறை அமலில் உள்ளது
மதுரை மாவட்டத்தில் உள்ள 83 கிராமங்களில் 73 ல் இன்னமும் இரட்டை குவளை முறை அமலில் உள்ளது

கோவிலில் சம வழிபாட்டு உரிமை கோரியதற்காக செந்தட்டியில் இரண்டு தலித்துகள் ஆதிக்க சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டன்ர்
கோவிலில் சம வழிபாட்டு உரிமை கோரியதற்காக செந்தட்டியில் இரண்டு தலித்துகள் ஆதிக்க சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டன்ர்

கயர்லாஞ்சியில் போட்மாங்கே குடும்பத்து பெண்கள் ஆதிக்க சாதியினரால் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு படுகொலை
கயர்லாஞ்சியில் போட்மாங்கே குடும்பத்து பெண்கள் ஆதிக்க சாதியினரால் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு படுகொலை

____________________

– ஓவியங்கள் முகிலன்
____________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்