privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்போராடும் உலகம்மீனவர்களுக்காக தமிழ் இணையத்தின் போர்க் குரல்! #tnfisherman

மீனவர்களுக்காக தமிழ் இணையத்தின் போர்க் குரல்! #tnfisherman

-

கொல்லப்படும் தமிழ் மீனவர்களுக்காக கடந்த சில நாட்களில் டிவிட்டர் நண்பர்கள் ஓயாது பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதன் மூலம் இருண்டு கிடந்த இந்திய ஊடகங்களின் கோட்டைக் கதவுகள் லேசாவாவது தட்டப்பட்டிருக்கின்றன. மீனவர் டிவிட்டுக்களுக்காகவும், கட்டுரைகளுக்காகவும் ஆங்கிலத்தில் http://www.savetnfisherman.org/ எனும் தளத்தையும், தமிழ் பதிவுகளுக்காக  http://savetnfisherman.blogspot.com/ ஆர்வலர்கள் சிலர் ஆரம்பித்திருக்கின்றனர். இந்திய அளவில் டிவிட்டரது பேசப்படும் விசயாமாக மீனவர் பிரச்சினை மாற்றப்பட்டிருப்பது ஒரு சாதனைதான். இது போக பதிவர்கள் பலரும் இது தொடர்பான கட்டுரைகளை சமீபத்திய நாட்களில் எழுதி வருகின்றனர்.

ஆனாலும் இந்த பிரச்சார யுத்தம் காரணமாக “நாம் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லையோ,” என்று சிலருக்கு தோன்றலாம். மீனவர் பிரச்சினையை நாம் கருதுவது போல பிற மாநிலத்தவர் கருதவில்லை என்பதற்கு வட இந்திய ஊடகங்களின் புறக்கணிப்பு ஒரு காரணம்தான். உலக ஊடகங்களில் இது செய்தியாக வரும்படி செய்வதற்கு நாம் இன்னும் நிறைய உழைக்க வேண்டியிருக்கும்.

ஏனெனில் உலக அளவில் பல நாடுகளில் பல போராட்டங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. நாம் மீனவர் பிரச்சினையை பேசிய நாட்களில் எகிப்தில் மாபெரும் மக்கள் போராட்டம் வெடித்துப் பரவி வருகிறது. உலக ஊடகங்களின் பார்வையில் இதுவே இப்போது மையம்.

இணையத்தில் நாம் மற்ற நாட்டவர், மாநிலத்தவர் பிரச்சினை குறித்து எந்த அளவுக்கு கவலைப்படுகிறோமோ, கருத்து ரீதியாக பங்கேற்கிறோமோ அந்த அளவுக்கு நமது பிரச்சினைகளையும் அவர்களது கவனத்திற்கு கொண்டு செல்ல முடியும். இந்தியாவிலேயே காஷ்மீர், தண்டகாரன்யா, வட கிழக்கு மாநிலங்களில் இருந்து வரும் அரசு ஒடுக்குமுறை குறித்து தமிழ் பதிவுலகம் அவ்வளவாக கவலைப்பட்டதில்லை. அதே போல உலக பிரச்சினைகள் குறித்தும் அப்படித்தான் பாராமுகமாக இருந்து வருகிறோம்.

இத்தகைய பிரச்சினைகளில் நாம் பங்கேற்று அந்த நாட்டு மக்களகுக்கு நமது ஆதரவை தெரிவிப்பதன் மூலமே அவர்களோடு நாமது நட்புறவை ஆரம்பிக்க முடியும். அதன் போக்கில் நமது பிரச்சினைகளை அவர்களது அக்கறைக்குரியதாக மாற்ற முடியும். மீனவர் பிரச்சினை குறித்த நமது முயற்சி இத்தகைய புரிதலுடன் விரிந்தால் அது ஆரோக்கியமான மாற்றத்தை, வெற்றியை நிச்சயமாக கொண்டுவரும்.

இங்கு வினவு சார்பில் போடப்பட்ட டிவிட்டுக்களை பதிவு செய்கிறோம். இந்த டிவிட்டுகளிலேயே இது மீனவர் பிரச்சினையோடு பல பிரச்சினைகளை இணைத்து பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் எழுதினோம். ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினை அனைத்தம் தேசம்,மொழி, மதம் கடந்து இணையும் போதுதான் இந்த உலகில் கேட்பாரின்றி தொடரும் அந்தீகளை வேரோடு அறுக்க முடியும்.

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

முப்பது ஆண்டுகள், 500 மீனவர்கள், குருதியான வங்கக் கடல், தாகம் தீராத இலங்கை , ஆசீர்வதிக்கும் இந்தியா, முடிவு எப்போது? #tnfisherman

இலங்கையில் போர் முடிந்து விட்டது, ராமேஸ்வரத்தில் போர் முடியவில்லை, பிணங்கள் விழுவதும் தீரவில்லை, வெஞ்சினம் எப்போது? #tnfisherman

வட இந்தியாவின் காசி ஒரு புனித நகரம். தென்னிந்தியாவின் ராமேஸ்வரம் ஒரு கொலை நகரம். பக்தர்களுக்கு  இரத்த்தீர்த்தம் நிச்சயம் #tnfisherman

இராமேஸ்வரம் இராமநாதனுக்கு தினமும் மீனவர் ரத்த அபிஷோகம், காசி விசுவநாதனுக்கு பாலாபிஷேகம், இந்து  பக்தர்கள் அறிவார்களா? #tnfisherman

காசிக்கு போனா புண்ணியம் கிடைக்குமாம். இராமேஸ்வரம் வந்தா சுடுகாட்டு ஓலம் நிச்சயம். மீனவர் சுடுகாடு பராமரிப்பு இந்திய அரசு #tnfisherman

காசி முதல் ராமேஸ்வரம் பாரத ஒற்றுமையாம். செத்து விழும் மீனவனுக்கு உதவாத அந்த ஒட்டுமை – அழகா, அருவெறுப்பா, அலட்சியமா? #tnfisherman

அமர்நாத்துல 5லட்சம் பக்தர்களுக்கு 5லட்சம் இராணுவம் பாதுகாப்பு! இராமேஸவரத்துல ஐநூறு மீனவர்களப் செத்ததுக்கு யார் பொறுப்பு? #tnfisherman

அன்று ஈழத்தமிழர்களை கொன்றது இந்திய அமைதிப்படை. இன்று தமிழக மீனவர்களை கொல்லப்படுவதை வேடிக்கை பார்ப்பது கடலோரகாவல் படை! #tnfisherman

மாவோயிஸ்ட்டுகளை கொல்வதற்கு ஆபரேஷன் கிரீண்ஹண்ட்! மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டுக்காதே- இலங்கை இந்திய பிரண்ட் ஹண்ட்! #tnfisherman

தண்டகாரன்யா பழங்குடிகள் அகதிகளாக சாகிறார்கள்! தமிழக மீனவர்கள் அனாதைகளாக  சாகிறார்கள். வாழ்க இந்திய ஒற்றுமை! ஜெய் ஹிந்த்! #tnfisherman

எல்லை தாண்டுற மீனவரை கைது செய்யுது பாக் அரசு. எல்லை தாண்டுற தமிழ் மீனவரை கொல்லுது இலங்கை அரசு!  பதில் சொல் இந்தியஅரசு! #tnfisherman

காஷ்மீரில கல்லெறியும் சிறுவர்களை கொல்வது இந்திய அரசு! வங்க கடலில் மீன்படிக்கும் மீனவரை கொல்வது இலங்கை அரசு! #tnfisherman

காஷ்மீரை சுடுகாடாக்குனது இந்திய இராணுவம். வங்க்கடலை குருதிக்கடலாக்குனது இலங்கை கடற்படை! ஸ்ரீநகர் முதல் குமரி வரை ஓலம்! #tnfisherman

காஷ்மீருக்கு ஆசாதின்னு அருந்ததிராய் சொன்னா கைது செய்வான்! பாம்பனில் மீனவர் ஆயுதம் ஏந்துனா என்ன செய்வான்? #tnfisherman

சென்னையில் கடலோரகாவல் படை சாகசத்தை நாம் வேடிக்கை பாக்கலாம். வங்ககடலில் மீனவர் சடலத்தை அந்த வீரர்கள் வேடிக்கை பார்ப்பர்! #tnfisherman

வாஷிங்கடன்னுல ஒரு அமெரிக்கன் மாரடைப்பில் செத்தா அது உலக செய்தி! தமிழகத்தில் 500 மீனவர் செத்தா அது வெறும் புள்ளிவிவரம்! #tnfisherman

இங்கிலாந்து மன்னர் வரலாறு உலகம் முழுவதும் ஆஸ்கரில்! கொல்லப்படும் தமிழ் மீனவர்களின் வரலாறு உசிலம்பட்டி தினத்தந்தியில்! #tnfisherman

ஈராக்குல பத்துலட்சம் மக்களை கொன்றது அமெரிக்க படை! தமிழகத்தில் 500 மீனவர்களை கொன்றது இலங்கை படை! பெருசுக்கேத்த சிறுசு! #tnfisherman

ஆபாகானில் ராக்கட் மூலம் மக்களைக் கொல்லது அமெரிக்கா! வங்க்கடலில் வெறும் கயித்தை போட்டு மீனவர்களை கொல்லது இலங்கை! #tnfisherman

அமெரிக்கா உலக ரவுடி, இந்தியா பிராந்திய ரவுடி, இலங்கை லோக்கல் ரவுடி! ரவுடிகளின் கூட்டணிக்கு வேட்டு வைப்பது எப்போது? #tnfisherman

தமிழக மீனவர்களுக்கு அடையாள அட்டை தரப்படுமாம்-ப.சிதம்பரம்! அட்டை இருக்கா இல்லேங்குறதா பிரச்சினை மிஸ்டர் செட்டிநாடு! #tnfisherman

கொல்லப்படும் மீனவர்களுக்கு, கொல்லும் இலங்கைக்கு, வேடிக்கை பார்க்கும் இந்தியாவுக்கு – அடையாளமில்லையா? மிஸ்டர் செட்டிநாடு? #tnfisherman

தப்பு செய்யுற மீனவர்கள கொல்லக்கூடாதாம், கைது செய்யணுமாம்-பிரணாப் முகர்ஜி. எங்க மீனவர்கள் என்ன சாராயமா காய்ச்சுராங்க? #tnfisherman

எல்லை தாண்டிபோறதுனாலாதான் இந்த பிரச்சினையாம்-இந்தியன் நேவி. மீன்பிடிக்கிற மீனவருக்கு எல்லை எப்படி தெரியும் முட்டாள் நேவி? #tnfisherman

கல்லுளிமங்கள் மன்மோகன்சிங் வைகோவ பாத்துட்டு மீனவர் பிரச்சினை குறித்து பாக்கலாம்னு சொன்னாராம். இதுவே அம்பானின்னா குதிப்பியே? #tnfisherman

பங்கு சந்தையின் சரிவோ, உயர்வோ ஊடகங்களின் முதன்மை செய்தியில். மீனவர்களின் கொலையோ ஊடகங்களின் மூலைச் செய்தியில். #tnfisherman

நக்சலைட்டுகளை ஒழிக்க போலீசுக்கு ஏ.கே 47னாம். மீனவரை ஒழிப்பதற்கு இந்திய அரசு ஏற்பாடு செய்திருப்பது இலங்கை கப்பற் படையை! #tnfisherman

புதுவை பல்கலை வழங்கும் டாக்டர் பட்டம் டெண்டுல்கருக்கு! இந்திய இலங்கை கூட்டணியின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் மீனவருக்கு! #tnfisherman

ரேஷன் கடையில  ஒரு ரூபாய் அரிசிக்கு மானியம் வழங்கும் இந்திய அரசு, வங்க கடலில் மீனவர் உயிர் பறிக்க இலங்கைக்கும் மானியம்! #tnfisherman

சிவசங்கர் மேனன் சென்று வந்ததும் ஈழத்தில் முள்ளிவாய்க்கால்! நிரூபமாராவ் போய் வந்தால் வங்கவிரிகுடாவில் மரணவாய்க்கால்! #tnfisherman

ராமன் பாலம் கட்டுனான்ற புளுகு மூட்டைக்கு சேது திட்டத்தை நிறுத்துன உச்சிகுடுமி மன்றம் 500 மீனவர்களுக்கு என்ன பிடுங்கியது? #tnfisherman

நிரூபமா விஜயம்! கொன்னவன்கிட்ட கூட இருந்து உதவுனவன் போய் நல்லா கொல்லுன்னு சொல்லுற விஜயம்! நல்லாத்தான் ஏமாத்துறான் நிஜம்! #tnfisherman

நிரூபமா விஜயம்! கொலைகார ராஜபக்சேவுக்கு உதவும் இந்தியாவுக்கு அங்கீகரிக்கும் உலகத்துக்கு ஒரு நாடக விஜயம்! #tnfisherman

ரஜினி எந்திரனுக்கு பீராபிஷேகம் செய்த ரசிகனே, எம் மீனவர் இரத்தம் சிந்தியபோது உன் சூப்பர்ஸ்டார் எங்கே, சரக்கு அடிக்கிறானோ! #tnfisherman

காவலன் படம் ரீலீசாகவில்லை என்று பொங்கிய இளையதளபதி நம் மீனவர் வீழும்போது அடுத்த பட ஷூட்டிங்கில் பொங்குகிறாரா? #tnfisherman

சீதையை இராவணன் தூக்கியதாக இராமன் தொடுத்தான் யுத்தம். 500 மீனவர் செத்தாலும் இங்கே ஒன்றுமேயில்லை என வெறும் நிசப்தம்! #tnfisherman

ஸ்ரீநகருல கொடி ஏத்த துடிச்ச குரங்கு கூட்டம், சேது திட்டத்தை நிறுத்துன வானரக் கூட்டம் மீனவர் சாகும் போது நல்லா நாடகமாடும் #tnfisherman

தமிழக மீனவர்கள் நடுக்கடலில் பலி என்று கொன்னவனை மறைத்து செய்தி போடும் இந்துராம்- லங்காரத்னாராம்- வெட்கம் கெட்டவராம்! #tnfisherman

ராஜபக்சேக்கு இருமல்னா இந்துராம் தும்முவாறு! இலங்கைக்கு பிரச்சினைன்னா இந்து பத்திரிகை பொங்கிஎழும்! இது இந்திய இலங்கை கூட்டு #tnfisherman

மீனவர் செத்தா கருணாநிதிக்கு தந்தி செலவு, ஜெயாவுக்கு அறிக்கை செலவு, வைகோவுக்கு ‘உணர்ச்சி’ செலவு, மன்மோகனுக்கு மவுனமே செலவு #tnfisherman

செத்து விழும் மீனவரை காப்பாற்றவோ, தடுக்கவோ  வக்கில்லாத இந்திய அரசுக்கு, ஐ.நா சபையில் வல்லரசு தகுதி ஒரு கேடா? #tnfisherman

இயற்கை தாயின் பேராற்றலோடு, கடலில் போராடும் அந்த உழைப்பாளிகள், சுட்டுக் கொல்லப்படுவதை நிறுத்தாமல் இது என்ன ஜனநாயகநாடு? #tnfisherman

காஷ்மீரை விடமாட்டோமென கொக்கரிக்கும் தேசபக்த குஞ்சுகளே, எம் மீனவரை காப்பாற்றாத இந்தியாவில் நாங்கள் ஏன் இருக்க வேண்டும்? #tnfisherman

இலங்கையில் மிட்டலின் ஏர்டெல் கம்பெனிக்கு ராஜ உபசரிப்பு! அதனால் மீனவரை கொல்லும் இலங்கை அரசுக்கு இந்திய அரசு ராஜ உபசரிப்பு #tnfisherman

இந்திய முதலாளிகளின் இலங்கை சந்தைக்காக, தமிழக மீனவர்கள் இலங்கை படையால் கொல்லபடுவது இங்கே பாராமுகமாக இருக்கிறது! #tnfisherman

____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

மீனவர்கள் சடலங்களுக்கு ஏன் உயிர் வருகிறது? #tnfisherman

கச்சத்தீவு : அனாதைகளாய் தமிழக மீனவர்கள்! – சிறப்புக் கட்டுரை!

ஜெயக்குமார்: இந்திய ஆசியோடு சிங்களக் கடற்படையின் நரபலி!