மக்கள் கலை இலக்கியக் கழகம்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
பெறுநர்: ஆசிரியர், வலைப்பூக்கள், தமிழ்நாடு
பொருள்: துவாக்குடி ஆய்வாளரின் ஜனநாயக உரிமை மறுப்பை கண்டித்து திருவாளர் நாய்க்கு ஓட்டுக் கேட்டு பிரச்சாரம் – கைது – தொடர்பாக
அய்யா, அம்மா,
நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு “எங்களுக்கு ஓட்டுப்போடுங்கள்” என்று எல்லா கட்சிகளும் வாக்கு சேகரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், துவாக்குடி காவல்நிலைய சரகத்தில் “யாருக்கும் வாக்களிக்க வேண்டாம்” என்று பேச எமது அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மாற்றுக் கருத்தை முன்வைக்க மக்களுக்குள்ள உரிமைதான் ஜனநாயகம். ஆனால், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக நடத்தப்படும் தேர்தல் பிரச்சாரத்திலேயே இந்த உரிமை மறுப்பு துவங்கிவிடுகிறது. இதைத்தான் போலி ஜனநாயகம் என்கிறோம். இது மட்டுமல்ல,
* தேர்ந்தெடுக்கப்பட் மக்கள் பிரதிநிதி மக்களிடம் வாக்குறுதி அளித்ததற்கு எதிராக, மக்கள் விரோதமாக செயல்படும்போது தட்டிக்கேட்கவோ, தண்டிக்கவோ, திருப்பி அழைக்கவோ வாக்களித்த மக்களுக்கு உரிமையில்லை.
* தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிக்கு சட்டம் இயற்ற மட்டுமே அதிகாரம்; அதை அமல்படுத்தும் அதிகாரமோ அதிகாரவர்க்கத்திடம். ஆனால் இந்த அதிகார வர்க்கம் மக்களை மதிக்காமல் அடாவடியாக செயல்படும்போது அவர்களைத் தட்டிக் கேட்கவோ தண்டிக்கவோ மக்களால் முடியாது. ஏனெனில் இவர்கள் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை; இவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கில்லை.
* உண்மையில் மக்கள் பிரதிநிதிகளும், அதிகார வர்க்கத்தினரும் மக்களுக்காக ஆட்சி செய்வதில்லை. அவர்கள் அமெரிக்காவுக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும்தான் சேவை செய்கிறார்கள் என்பதுதான் எமது கருத்து. விக்கிலீக்ஸ் மூலம் கசிந்த செய்திகளும் இதையே உறுதி செய்துள்ளன.
இவற்றை முன்வைத்து, தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி தவறு செய்யும் போது திருப்பியழைக்கும் உரிமை; தேர்ந்தெடுத்த பிரதிநிதிக்கே சட்டம் இயற்றவும் அதை அமல்படுத்தவும் உரிமை; அனைத்து அதிகாரிகளும் கூட தேர்ந்தெடுக்கப்படவும் திருப்பியழைக்கப்படவுமானவர்களாக ஆக்கப்படுதல் என்ற உண்மையான மக்களாட்சிக் கோட்பாடு கொண்ட புதிய ஜனநாயக முறை வேண்டும். இதை ஒரு மக்கள் புரட்சியின் மூலமே அடைய முடியும் என்று விளக்கிப் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரியிருந்தோம். திருச்சி மாநகரத்தில் அனுமதி தரும்போது இங்கு மட்டும் அனுமதி தர மறுத்தது இந்த காவல் ஆய்வாளரின் தனிப்பட்ட வெறுப்புணர்ச்சியன்றி வேறென்ன?
இத்தகைய சூழலில், இதைக் கண்டிக்கும் முகமாகவும் எமது கருத்தை மக்களிடம் முன்வைத்து ஆதரவு திரட்டும் முகமாகவும் எமது இன்றைய பிரச்சாரம் திட்டமிடப்பட்டது. தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கான ஆட்சியாக இருக்கப் போவதில்லை. தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற பெயரில் நாட்டையும் வளங்களையும் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விற்பதையே நோக்கமாகக் கொண்ட ஆட்சியாகத்தான் இருக்கப் போகிறது, ஊழல் ஆட்சியாகத்தான் இருக்கப் போகிறது. இதை மறைக்க டாஸ்மாக் மூலம் மக்களிடம் பறித்த பணத்தில் மக்களுக்கு இலவசங்களை வழங்கி ஏய்க்கின்றனர் இந்த ஓட்டுக்கட்சிகள்… என்ற கருத்துக்களை முன்னிறுத்தி, “உலக வங்கியின் உத்தரவுக்கு நாய் ஆடினால் என்ன, நரி ஆடினால் என்ன? இதற்கு தேர்தல் ஒரு கேடா?” என்ற தலைப்பில் நாய் வேட்பாளர் பைரவனுக்கு ஓட்டுகேட்டு எமது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினோம்.
காலை 11 மணிக்கு துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் இந்த பிரச்சார இயக்கத்துக்கு தோழர் சங்கர் தலைமை தாங்க, ம.க.இ.க தோழர் ஜீவா துவக்கி வைத்து உரையாற்றினார்.
பட்டாசு வெடித்து தாரை, தப்பட்டை முழங்க திரளாகக் கூடிசெய்த இந்த பிரச்சாரத்திற்கு பகுதி வாழ் உழைக்கும் மக்களிடையே ஆரவாரத்துடன் கூடிய பெருத்த வரவேற்பு கிடைத்தது. பிரச்சாரத்தையும் மக்களின் பேராதரவையும் கண்ட காவல்துறை ஜனநாயக விரோதமாக பெண்கள் குழந்தைகள் உட்பட 40க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்துள்ளது. இச்செயலை வன்மையாக கண்டிப்பதுடன் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி
இப்படிக்கு
தோழர் து.ராஜா
மாவட்ட செயலாளர், ம.க.இ.க.
__________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
தொடர்புடைய பதிவுகள்:
தேர்தல் 2011
- டாஸ்மாக் அருளும் இலவசங்கள்! தமிழகத்தை அழிக்கும் வக்கிரம்!!
- வாக்களிக்க பணம் வாங்குவது குற்றமா?
- எம்.எல்.ஏ வுக்கு பொறுக்கித் தின்ன மட்டுமே அதிகாரம்! ஆள்வதற்கல்ல!!
- கார்ப்பரேட் கொள்ளையர்களின் தேர்தலை புறக்கணிப்போம் !
- உங்கள் பொன்னான வாக்கை குப்பைத் தொட்டியில் போடுங்கள் !
- தளியில் இளிக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளின் சந்தர்ப்பவாதம்!
- சோனியா,ஜெயா, குஷ்பு, புவனேஸ்வரி, கனிமொழி…பெண்களின் பெருமையா?
- காங்கிரசின் வேட்டி கிழிப்பும், கோஷ்டி மோதலும் ஒரு ‘ஆய்வு’ !
- திமுக : திராவிட முதலாளிகள் கம்பெனி !
- ஆருயிர் நண்பன் சாதிக் பாட்சாவிற்கு ஆ.ராசாவின் இரங்கற் கவிதை!
- வைகோ vs போலி கம்யூனிஸ்டுகள் – ஒன்னு பெருசா இல்ல ரெண்டு பெருசா?ஆ
- வைகோ – ஒரு அரசியல் அனாதையின் கதை!
- ஃபியூஸ் போன ரஜினிக்கு மவுசு காட்டும் ஜூ.வி !
- பின்நவீனத்துவ மஹா அவ்தார் புரட்சித் தலைவிஜி வாழ்க!
- கூட்டணி காமெடிகளின் சிச்சுவேசன் பாடல்கள் !
- வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல்!
- அரசியலில் விஜய் ! எ.கொ.இது சரவணா?!
- தேர்தல்: தமிழக அரசியல் கூத்துக்கள் !!
- கூட்டணி ப்ளாக்மெயிலுக்கு பயன்படும் ஸ்பெக்ட்ரம் ஊழல்!!