privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விவீட்டில் தெலுங்கு, வெளியே தமிழ்...நான் யார்? எனது அடையாளம் எது?

வீட்டில் தெலுங்கு, வெளியே தமிழ்…நான் யார்? எனது அடையாளம் எது?

-

கேள்வி :
நான் பிறந்தது முதல் கடந்த 27 வருடங்களாக நம் தமிழ் நாட்டில் வசித்து வருகிறேன்….குறிப்பாக வேலை காரணமாக சென்னையில் கடந்த 6 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். சமீபத்தில் நான் தங்கியிருந்த தனியார் விடுதியில் ஒரு நாள் நான் தெலுங்கில் பேசிய காரணத்திற்காக என் பக்கத்து அறையை சேர்ந்த சில அன்பர்களால் தாக்கப்பட்டேன். என்னை கொல்டி என்றும் வந்தேறி என்றும் அர்ச்சித்து என்னை அந்த இடத்தை விட்டு வெளியேறச் சொன்னார்கள். நான் என்னை பற்றி எடுத்து சொன்னேன்…நாங்கள் எப்போதோ நாயக்கர் ஆட்சிக்காலத்தில் குடிபெயர்ந்து கடந்த சில நூற்றாண்டுகளாகவே தமிழர் பண்பாடோடு கலந்து எங்கள் வாழ்கை முறையை கொண்டுள்ளோம் என்றும்…தெலுங்கில் ஒன்றும் எழுதவோ முழுமையாக பேசவோ வாசிக்கவோ தெரியாது…..எனக்கு தமிழ் தான் எல்லாமும் என்று வாதிட்டேன். பயனாக மேலும் இரண்டு குத்துகள் மார்பில் விழுந்தன. நான் என்னை மனப்பூர்வமாக ஒரு தமிழனாகவே கருதுகிறேன். எனக்கு பல நேரங்களில் என்னைப் பற்றி தர்மசங்கடமாகவே உணர்கிறேன். நான் தமிழன்தான் என்பதை மற்றவர்கள் எப்படி உணர்வார்கள்..?என் தாய் மொழி தெலுங்கு என்ற காரணத்திற்காக நான் தமிழில் சிந்திப்பதை எழுதுவதை யாராலும் தடுக்க முடியாது அல்லவா? என் கேள்வி இதுதான்…நான் என்னை யாராக நினைப்பது?? இதை பற்றி நியாமான பதிலுக்கு வினவை விட்டால் நாதியில்லை. ஒருவேளை இந்த கேள்வி மிகவும் மொன்னையாகவோ ஒரு சரியான புரிதலுடனோ இல்லாமலிருப்பின் மன்னிக்கவும்.

–       கார்த்திகேயன்

அன்புள்ள கார்த்திகேயன்,

உங்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி குறித்து மிகவும் வருந்துகிறோம், கோபம் கொள்கிறோம், கண்டனம் தெரிவிக்கிறோம்.

உங்களை யாராக நினைப்பது என்ற கேள்விக்கு பதில், தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட தமிழன் என்று தைரியமாக சொல்லுங்கள்! இதில் மூடி மறைப்பதற்கோ, தற்காப்பு நிலையில் நின்று பேசுவதோ தேவையில்லை.

தமிழக எல்லைகளில் வாழும் மக்கள் அனைவரும் இரு மொழிகளையும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமிருக்கிறது. கேரள, கர்நாடக, ஆந்திர எல்லையில் இருக்கும் மக்கள் தேவை கருதி இப்படி இரு மொழி பயன்பாட்டுக்காரர்களாக இருக்கிறார்கள். சில நேரம் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் எல்லைக்கு அந்தப்புறத்திலும், மற்ற மாநில மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் இங்கேயும் வாழவேண்டியிருக்கலாம். எல்லை என்பது நிர்வாக வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்றே அன்றி அதுவே எல்லாமும் அல்ல.

பாக் இந்திய எல்லையில் இருக்கும் மக்களுக்கு இரண்டு நாடுகளும் ஒன்றுதான். இங்கே ஊதிவிடப்படும் தேசபக்தி காய்ச்சலோடெல்லாம் அங்கே  அவர்கள் வாழ முடியாது. அவர்களது கால்நடைகள் எல்லையைத் தாண்டி மேயும். திருமண மற்றும் இதர விசேட நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் அடிக்கடி எல்லையை தாண்ட வேண்டியிருக்கும். இருநாட்டு இராணுவங்களில் யார் தாக்கினாலும் அதன் பாதிப்பு இருநாட்டு மக்களுக்கும் உண்டு. எனவே இந்தியாவில் பாதுகாப்பாக இருந்து கொண்டு தேசபக்தி சாமியாடும் அம்பிகளின் மனநிலைக்கும் எல்லையில் வாழும் அந்த மக்களின் மனநிலைக்கும் பாரிய வேறுபாடு உண்டு.

எனவே எந்த தேசிய இன மக்கள் வாழும் நாட்டிலும் இது போன்ற வேற்று மொழி பேசும் மக்கள் சிறுபான்மையினராக இருப்பார்கள். இங்கே பெரும்பான்மையாக இருக்கும் தமிழ் மொழி பேசும் மக்கள் கூட பெங்களூருவிலோ இல்லை மும்பை தாரவியிலோ, திருவனந்தபுரத்திலோ  மொழிச் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். இங்கு மற்ற மொழி மக்கள் கேலி செய்யப்படுவது போல அங்கே அவர்கள் மதராசி, பாண்டிக்காரன் என்று கேலி செய்யப்படுகிறார்கள். இதைத் தாண்டி எல்லா இடங்களிலும் உழைக்கும் மக்களிடையே மொழிவெறி என்பது கிஞ்சித்தும் கிடையாது.

மேலும் நீங்கள் குறிப்பிட்டது போல நாயக்கர் காலம் போல பல்வேறு வரலாற்றுக் காலங்களினூடாக தமிழகத்தில் பல்வேறு தேசிய இன மக்கள் குடியேறியிருக்கிறார்கள். அதில் மராத்தி, கன்னடம், மலையாளம், உருது,  இந்தி என்று பல மொழி பேசுபவர்கள் உண்டு. இந்தியா முழுவதுமே பல நூற்றாண்டுகளாக இந்த மொழிக் கலப்பு நடந்திருக்கிறது. இதில் தூய தேசிய ரத்தத்தைக் கொண்ட இனம் என்று எதுவும் இல்லை. எனவே வெவ்வேறு தாய்மொழிகளைக் கொண்டவர்கள் ஒரு தேசிய இனத்தில் இருப்பது இந்தியா முழுமைக்கும் உள்ள ஒன்று. இத்தகைய கலப்பு இன்றி எந்த தேசிய இனமும், மாநிலமும் இல்லை.

நீங்கள் கேரளத்தில் கொல்லம் நகர் வரையிலும் முழுக்க தமிழ் மொழி மட்டுமே கூட பேசி வாழ முடியும். முழு கேரளத்திலும் கூட தமிழை மட்டும் வைத்துக் கொண்டு பயணம் செய்யலாம். அதே போல திருப்பதி, சித்தூர் மாவட்டங்களில் தமிழும் முழுப் பயன்பாட்டில் உள்ளது. தெலுங்கு பேசும் மக்கள் வேலூர் வரையிலும் வந்து செல்ல முடியும். கன்னட மொழி பேசும் மக்கள் ஓசூர் வரையிலும் புழங்குகிறார்கள். இவையெல்லாம் யதார்த்தமாக மக்களிடையே தவிர்க்கவியலாமல் இருக்கின்ற மொழிக் கலப்பு அம்சங்கள்.

உங்களைப் போன்ற பின்னணி கொண்டவர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே குடியேறி வீட்டில் மட்டும் அதுவும் கொச்சைத் தெலுங்கு பேசிவிட்டு, பொதுவெளியில் தமிழராக வாழ்ந்து வருபவர்கள். ஆனால் தற்போது கூட ஆந்திராவிலோ, இல்லை கேரளாவிலோ இருந்து மக்கள் இங்கு குடியேறி வாழலாம். தத்தமது தாய்மொழிகளைப் பேசும் மலையாளியாகவோ இல்லை தெலுங்கராகவோ தமிழ்நாட்டில் வாழலாம். இதை தவறு என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. தமிழ்நாட்டில் தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்தான் வாழ முடியும் என்பது சட்டப்படியும், தார்மீகரீதியாகவும், யதார்த்தமாகவும் சரியல்ல.

இந்தியாவில்  காலனிய ஆட்சிக் காலத்தில்தான் தேசிய இனங்கள் தத்தமது அடையாளங்களோடு தோன்றத் துவங்கியிருந்தது. அவை முழு நிறைவான வளர்ச்சி பெற்ற தேசிய இனங்களாக மாறிக் கொள்வதற்கு காலனிய ஆட்சி தடையாக இருந்தது. ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னர் தமிழன் என்ற உணர்வோ இல்லை நாடோ இங்கு இருந்ததில்லை. சங்ககாலம் தொட்டு தமிழனது அடையாளங்கள் பாடல்கள் மூலம் பேசப்பட்டாலும் அவை இன்றைய தமிழனது தேசிய உணர்வை கொண்டிருக்கவில்லை, கொண்டிருக்கவும் வாய்ப்பில்லை. அன்று சேர, சோழ, பாண்டிய நாடுகளாகத்தான் மக்கள் இருந்தார்கள். இன்றும் தென்கேரள மக்கள் தமிழ் மக்களை பாண்டிக்காரர்கள் என்றுதான் அழைக்கிறார்கள். இன்று நாம் பேசும் பொதுவான தமிழ்மொழி கூட அன்று இருந்ததில்லை. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு பொருளாதாரப் பரிவர்த்தனை காரணமாகவே நாம் பேசும் இன்றைய பொதுத் தமிழ் உருவாகியிருக்கிறது. இன்றும் கச்சாவான கொங்கு தமிழ், திருவிதாங்கூர் தமிழ், மலைவாழ் மக்களின் தமிழ், சென்னைத் தமிழ் , தெலுங்குத் தமிழ், கன்னடத் தமிழ், மலையாளத் தமிழ் முதலான வழக்குகளை பொதுவான தமிழர்களே புரிந்து கொள்வது கடினம்.

முன்னர் வட்டாரத் தமிழ் வழக்கு மட்டும் பேசி வந்தவர்கள் இன்று உள்ளூரில் மட்டும் அப்படிப் பேசிவிட்டு பிழைக்க வந்த இடத்தில் பொதுத் தமிழை பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர். இப்படித்தான் பத்திரிகைகள், சினிமா, இலக்கியம், அலுவலங்களில் பயன்படும் பொதுத் தமிழ் உருவாகியிருக்கிறது.

ஆங்கிலேயருக்கு முன்னர் தமிழ்நாட்டு மக்களிடையே ஒன்று சேர்ந்து வாழ்வதற்கான பொருளாதாரத் தேவையோ, சாத்தியமோ இருந்ததில்லை. ஒரு நபர் என்ன மொழியைப் பேசுகிறார் என்பது அவருடைய சமூக – பொருளாதார வாழ்க்கையே தீர்மானிக்கின்றது. நாமக்கல் லாரி டிரைவர்கள் வட இந்தியாவுக்கு அடிக்கடி செல்வதன் மூலம் இந்தி மொழியைக் கற்கின்றனர். பஞ்சாபிலிருந்து இங்கு வரும் சிங் டிரைவர்கள் தமிழைக் கற்கின்றனர். கன்னியாகுமாரியில் மணல், சிப்பி விற்கும் சிறுவன் ஐந்தாறு இந்திய மொழிகளைப் பேசுகிறான். சென்னை அண்ணா சமாதியில் மீன் வருவலை விற்கும் மீனவர் வங்க மொழியை சரளமாகப் பேசுகிறார். மும்பையில் வாழும் பிற தேசிய இன மக்கள் தத்தமது தாய் மொழியோடு மராத்தி, இந்தி, உருதுவை கற்றுத் தேர்கின்றனர். இன்று தமிழகத்தில் அதிகார, நிர்வாக, பொழுது போக்கு துறைகளில் ஆங்கிலம் கோலேச்சுகிறது. ஏழை எளிய மக்கள் கூட சரளமான ஆங்கில வார்த்தைகளை தமது பயன்பாட்டுக்கு பயன்படுத்துகின்றனர். இவற்றை யதார்த்தமாக புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து இயல்பாகவே இப்படி மொழிக்கலப்பு ஏற்படுவதை, ஏற்பட்டு விட்டதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. மேலும் பல்வேறு தேசிய இன மக்கள் இப்படி கலந்து வாழும் சூழலை நாம் கைதட்டி வரவேற்க வேண்டும். சாதிகளுக்குள் சாதி மறுப்பு மணம் நடக்க வேண்டும் என்று விரும்புவது போல தேசிய இனங்களுக்குள்ளும் இனமறுப்பு மணங்கள் நடக்க வேண்டும் என்கிறோம். எதிர்காலத்தில் இத்தகைய இனங்கள் கலந்து மனித இனம் ஒன்றே எனும் நிலை வருவதே தேவையானது, சாத்தியமானது, அறிவியல் பூர்வமானது, எதிர்காலத்தைக் கொண்டிருப்பது என்கிறோம். அப்பா பஞ்சாபியாகவும், அம்மா தமிழாகவும் இருந்தால் பிள்ளைகள் இரண்டு மொழிகளையும் தெரிந்து கொள்வதோடு, இரு மாநில பண்பாடுகளையும் அறிந்து கொண்டு முன்னோக்கி செல்லும். மக்களிடையே ஒற்றுமை வளரும். இப்படி தமிழ், மலையாள, கன்னட, தெலுங்கு, மராத்தி, பீகாரி, உ.பி என எல்லா இனங்களும் கலக்க வேண்டும். நம்நாட்டில் மட்டுமல்ல உலக அளவிலும் இப்போது இருக்கும் இனங்கள் எதிர்காலத்தில் இப்படித்தான் கலந்து எழும். தூய இனம் என்பதற்கு வரலாற்றில் எதிர்காலமில்லை.

இப்படி மற்ற தேசிய இனமக்கள் தமிழ்நாட்டில் குடியேறினால் தமிழர் வளம் அழியும் என்று தமிழின வெறியர்கள் கூப்பாடு போடுவார்கள். இது உண்மையெனக் கொண்டால் இன்று ஈழத்தமிழர்கள் ஐரோப்பாவிலும், கனடாவிலும் இலட்சக்கணக்கில் வாழ்கிறார்கள். இவர்களைப் போன்ற அகதிகள் அங்கே வாழ்வதால் அந்தந்த நாடுகளின் வெள்ளையர்களுக்கு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்று அங்கே புதிய நாசிசக் கட்சிகள் தோன்றி ஓரளவுக்கு செல்வாக்கோடு இருக்கின்றன. தமிழ்நாட்டில் மற்ற மொழிக்காரர்கள் இருக்க்க் கூடாது என்று பாசிசம் பேசும் தமிழினவெறியர்கள் ஐரோப்பிய பாசிஸ்ட்டுகள் சொல்வதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இன்று மும்பையில் ஏழை பீகாரிகளை வெறிகொண்டு தாக்கும் சிவசேனா வெறிநாய்களை மனிதநேயம் கொண்டோர் எவரேனும் ஏற்றுக் கொள்வார்களா? தமிழ்நாட்டில் இருக்கும் அதுவும் டாடா சுமோவில் நிரப்புமளவு தொண்டர் படையுள்ள கட்சிகளைச் சேர்ந்த சில தமிழின வெறியர்கள்தான் அப்படி ராஜ்தாக்கரேவுக்கு பல்லக்கு தூக்குகிறார்கள். தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டு தெருக்களையும், கழிப்பறைகளையும் தெலுங்கு பேசும் அருந்ததி இன மக்கள்தான் சுத்தம் செய்கின்றனர். எங்கள் கழிவுகளை அகற்றுவதற்குத் தெலுங்கர்கள்  தேவையில்லை, இனி நாங்களே முதலியார், கவுண்டர், தேவர், கோனார் என்று முறை வைத்து சுத்தம் செய்து கொள்கிறோம் என்று சுத்த தமிழர்கள் முன்வருவார்களா? அதே போன்று இரவுக் காவல் காக்கும் நேபாளத்து கூர்காக்கள், தச்சு வேலை செய்யும் ராஜஸ்தானத்து தொழிலாளர்கள், காங்கிரீட் கலவை போடும் தெலங்கு தொழிலாளர்கள், சாலையில் குழி பறிக்கும் கன்னட தொழிலாளர்கள், உணவகங்களில் மேசையை துடைக்கும் வடகிழக்கு தொழிலாளர்கள் என்று இவர்களது வேலையை தமிழன்தான் செய்ய வேண்டும் என்று யாராவது கேட்க முன்வருவார்களா என்ன?

அதே போன்று நாமக்கல் முட்டை, கோழியை மலையாளிகளுக்கு விற்க கூடாது, கம்பத்தின் காய்கனிகளை கேரளாவுக்கு கொண்டு செல்லக்கூடாது, ஈரோட்டின் மஞ்சள் தமிழக எல்லையைத் தாண்ட முடியாது, திருப்பூரின் உள்ளாடைகள் மற்ற மாநிலங்களுக்கு விற்க கூடாது என்று தூய தமிழினவாதிகள் பிரச்சாரம் செய்தால் மக்களே நையப் புடைப்பார்கள். அதே போன்று இன்று தமிழகம் சாப்பிடும் சோறு, காய்கள், மளிகைப் பொருட்களில் கணிசமானவை அண்டை மாநிலங்களிலிருந்து வருவபைதான்.

இன்று தமிழக வளத்தை அப்படியே கொள்ளையடிப்பவர்கள் மலையாளிகளோ, தெலுங்கர்களோ அல்லர். பன்னாட்டு நிறுவனங்களும், தரகு முதலாளிகளும்தான் நம் வளத்தை சுருட்டிக் கொண்டு செல்கின்றனர். இவர்களுக்கெல்லாம் இன அடையாளம் ஏதுதமில்லை. ரிலையன்ஸ், ஹூண்டாய், ஃபோர்டு, செயின்ட் கோபெய்ன் முதலான நிறுவனங்களை வெளியேற்றுவதற்கு இந்த தமிழினவாதிகள் வருவார்களா? மாட்டார்கள். மாறாக டீக்கடை வைத்திருக்கும் மலையாளிகளை விரட்ட வேண்டுமென்று துள்ளிக் குதித்து வருவார்கள். இதுதான் இவர்களது தமிழ் வீரத்தின் இலட்சணம்.

இதனால் இந்தியாவில் தேசிய இன ஒடுக்குமுறை இல்லை என்று பொருளல்ல. பார்ப்பனிய இந்து தேசிய ஒடுக்கு முறையினால் தமிழ் மட்டுமல்ல பிற தேசிய இனங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதனால்தான் இந்தியாவில் உள்ள தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்கிறோம். மொழி, பண்பாடு, கல்வி என்று எல்லாத் துறைகளிலும் இந்த ஒடுக்கு முறையை நாம் எதிர்த்துப் போராட வேண்டும். காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது என்பதற்காக நாம் மைய அரசை எதிர்த்து போர்க்குணத்தோடு போராட வேண்டும். மாறாக அதன் பொருட்டு கன்னட, மலையாள மக்களை இனவெறி கொண்டு பகைத்துக் கொள்வதில் பயனில்லை.

எனினும் இந்திய மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பது பொது எதிரியை அவர்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பதிலேயே வரும். அதை பிரிந்து கொண்டு செய்வதால் பயனில்லை. சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று சொல்வதோடு இந்தியாவின் தேசிய இன மக்கள் வர்க்க ரீதியாக ஒன்று சேர்ந்து வாழவேண்டும் என்பதையும் சேர்த்தே சொல்கிறோம். அதே போன்று ஒவ்வொரு தேசிய இனத்தின் தனித்தன்மை என்பது அதனுடைய ஜனநாயக விழுமியங்களுக்காகவே போற்றப்படவேண்டும். அவற்றில் இருக்கும் நிலவுடமை பிற்போக்குத்தனங்களை எதிர்க்க வேண்டும்.

தமிழிசை மரபு, பார்ப்பனிய எதிர்ப்பு மரபு போன்றவைதான் தமிழின் போற்றுதலுக்குரிய மரபுகள். இதைத் தவிர தமிழில் இன்று கோலேச்சுவது சாதிய ஆதிக்கம்தான். தாழத்த்தப்பட்ட தமிழர்களை ஊருக்குள் செருப்போடு செல்லக்கூடாது என்றுதான் ஆதிக்க சாதி தமிழர்கள் நடத்துகிறார்கள். இந்நிலையில் தலித் தமிழன் எங்கனம் தமிழனென்று உணர முடியும்? இப்படி சாதியால் மட்டுமல்ல வர்க்க ரீதியாகவும் தமிழர்கள் பிரிந்து கிடக்கிறார்கள். டி.வி.எஸ் அய்யங்காரும், ஸ்பிக் முத்தையா செட்டியாரும், பொள்ளாச்சி மகாலிங்கமும் வேண்டுமானால் முதலாளிகள் என்ற முறையில் தமிழன் என்று பேச முடியும். ஆனால் இவர்களோடு சரிக்கு சமமாக தொழிலாளிகள், நிலமற்ற விவசாயிகள் தமிழனென்று பழக முடியுமா என்ன?

ஆகவே சாதி, மத, மொழி அடையாளங்களையெல்லாம் விட வர்க்க அடையாளமே நம் வாழ்க்கையை தீர்மானிக்கின்ற ஒன்றாக இருக்கிறது. கார்த்திகேயன், அதன்படி நீங்கள் உங்களை உழைக்கின்ற வர்க்கமாக நினைத்து வாழுங்கள். உழைக்கும் வர்க்கத்தில் விவசாயிகள், தொழிலாளிகள், நடுத்தர வர்க்கம் போன்றவர்களோடு இணைந்து எழும் அந்த வர்க்க உணர்வே நமது வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு தீர்க்கும் வல்லமையை தரும்.

எனினும் தமிழின வெறியர்களுக்கு எதிர்காலமில்லை என்று நாம் அவரசமாக முடிவெடுத்துவிடக்கூடாது. இன்று வட மாநிலத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் தமிழகம் வந்து வேலை செய்கின்றனர். நாளை இவர்கள் இன வேறுபாடு கடந்து தமிழக தொழிலாளிகளோடு சேர்ந்து போராடும் நேரத்தில் முதலாளிகள் இதை திட்டமிட்டு பிரிக்கும் வண்ணம் தமிழின வெறியை தூண்டிவிடலாம். அப்படித்தான் மும்பை டெக்ஸ்டைல்ஸ் தொழிலாளர் சங்கங்களை உடைப்பதற்கு முதலாளிகள் சிவசேனாவை வளர்த்து விட்டனர்.

தமிழகத்தில் அப்படி ஒரு நிலை வந்தால் நாம் இனவேறுபாடு இன்றி தொழிலாளிகளை அணிதிரட்டி முதலாளிகளையும் அவர்களது காசில் வரும் தமிழின வெறியர்களையும் வேரறுக்க வேண்டும். கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் அதை நிச்சயம் செய்வோம். மதவெறி, சாதிவெறிக்கு மட்டுமல்ல இனவெறிக்கும் தமிழகத்தில் இடமில்லை என்று காட்டுவோம்.

கார்த்திகேயன்,

இந்த பதில் உங்களது குழப்பத்தையும், துயரத்தையும் தணித்து விட்டு தலைநிமிர்ந்து வாழும் தைரியத்தை தந்திருக்கிறதா? அறிய ஆவலாயிருக்கிறோம். நன்றி

_____________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்

[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. அவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் மனநிம்மதியுடன் உஙகள் வெலையைப் பாருஙகள்..

    முதலில் வேரு தங்குமிடத்திற்க்கு மாறவும்….

    உங்கள் மனத்தால்நீ ஒரு பச்சைத் தாமிழன்…

    • இது ஒரு மிகப்பெரிய பொய் – இதுவரை தமிழகத்தை ஆண்டவரெல்லாம் தெலுங்கர்கள் ( அண்ணாதுரை , கருநாய் நிதி) , கன்னடர் ( செயலலித ) மற்றும் மலையாளி ( எம்கியார்) – ஒரோ ஒரு தமிழன் மட்டும் தான் தமிழகத்தை இதுவரை ஆண்டுள்ளான் – காமராஜ். அவரையும் இந்த திராவிடர்கள் தமிழை வைத்தே தோற்கடித்தனர். இப்போதைய எதிர்க்கட்சி தலைவர் கூட தெலுங்கர் தான். மிகப்பெரிய தமிழ் உணர்வாளராக காட்டிகொள்ளும் வைகோ கூட தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்தான். முல்லைபெரியாறு நீரை நாம் மலையாளிகளிடம் கேட்கக் கூடாதாம் – ஏனென்றால் அங்கே கேட்டால் கம்யுனிஸ்ட் கட்சி மறுபடியும் அங்கே ஆட்சியை பிடிக்க முடியாது . தமிழ்நாட்டு கம்யுனிஸ்ட்கள் முல்லை பெரியாறு நீரை கேட்டு போராட்டம் செய்யச் சொல்லுங்கள் – கேரளா கொம்யுநிச்ட்கள் நேராக வந்து அவர்களின் கொட்டையை நசுக்கி விட்டு செல்வார்கள்

  2. இந்த விசயத்தில் 100 சத ஆதரவை வினவிற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்…‘
    தமிழ் பேசும் மக்கள் தனது வேலைக்காக பெங்களுர் மும்பை என்று பரந்து விரிந்து கிடக்கிறார்கள்… அவர்கள் வாழ்வில் தமிழ் தலிபான்கள் மண் அள்ளிப் போடப் போகிறார்கள்… அவர்கள் (hypothetically) வேலையற்று வந்தால், அப்படிப் பல கோடி மக்களுக்கு சோறு போட இந்த தமிழ் தலிபான்களால் இயலவே இயலாது… அதை அந்தத் தமிழ் தலிபான்களுக்கு நாம் உணர்ந்த வேண்டும்.. அதில் உங்கள் பணி முக்கியமானது மகத்தானது

  3. புரட்சிக்கு தமிழனை நம்பி புரியோஜனமில்லைன்னு- மனவாடுகளையும், சேட்டன்களையும் தயார் பண்ணிறிங்களா. நடத்துங்க, நடத்துங்க…

  4. கார்த்திகேயனுக்கு மட்டுமல்ல படிக்கிற எல்லோருக்கும் தலை நிமிர்ந்து வாழும் தைரியத்தை கொடுக்கும் பதிவு இது.ஓடுகாலிகள்,பெ.மணியரசன் கும்பல் போன்றவர்கள் இந்த பதிவை படித்தவுடன் ஓடியே போய் விடுவார்கள்

  5. கார்த்திகேயன் நீங்கள் தெலுங்கு பேசியகாரணத்தால் அடிவிழுந்தது என்று கூறுகிறீர்களே இதை ஏற்றுக்கொள்ள்வே முடியவில்லை.அப்படி தமிழ் வெறி பிடித்தவர்கள் கண்டிப்பாக தமிழ்நாட்டில் இல்லை. ஏன்னென்றால் இங்கு இன ஒன்றுமையே கிடையாது.எல்லாம் சாதி ஒற்றுமைதான். நீங்களோ அல்லது உங்களை அடித்தவர்களோ வேறு ஏதாவது உள்காரணம் இருக்கலாம் என்று நினைக்கிறேன். இங்கு சிலபேர் தமிழ் தாலிபன்கள் என்று தமிழ்களை கூறுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.பார்ப்பனர்களை எதிர்ப்பதால் குறிப்பாக தமிழகம் முக்கிய பங்கு வகிப்பதால் இப்படி கூப்பிட்டு சில கருங்காளிகள் ஆனந்தம் அடைகின்றனர்கள்.

  6. எங்க வீட்டுக் கல்யாண ஆல்பத்தைப் பார்த்த இலங்கைத் தோழி
    ஒருவர், ‘நீங்க கள்ளத் தமிழரா?’ன்னு கேட்டாங்க:(

    பிகு: நியூஸி நாட்டில் கிறைஸ்ட்சர்ச் மாநகரில் தமிழ்ச்சங்கம் ஆரம்பித்த குழுவில் நாங்களும் இருவர்.

  7. இந்தக் கட்டுரையின் பொதுக் கருத்தோடு ஒன்றுபடும் அதே நேரத்தில் கார்த்திகேயனின் கேள்வி பல சந்தேகங்களை எழுப்புகிறது. தமிழின வெறியோடு இவரை அடித்தவர்கள் யார்? நான் சென்னையின் பல இடங்களில் இந்தி மொழி பேசும் மக்கள் வாய் விட்டு சிரித்து, கும்மாளமிடுவதை பார்த்திருக்கிறேன். யாரும் ஒரு சின்ன நியுசன்ஸ் என்ற வகையில் கூட முறைத்துப் பார்த்ததில்லை. என் பணியிடத்திலும் அடிக்கிற அளவுக்கு ஒரு இனவெறி பிரச்சினையை பார்த்ததில்லை. சாதிப் பிரச்சினையும், மதப் பிரச்சினையும் இங்கு கொலோச்சுகின்றனவே தவிர இனவெறி மற்றவரை தாக்குமளவு இல்லை என்பதே தமிழகத்தின் சிறப்பு. ஐதராபாத்தை சேர்ந்த நண்பன் ஒருவன் சென்னை ஒரு முழு காஸ்மோபாலிட்டன் என்று மன நிறைவோடு என்னிடம் சொல்லி அல்லாவுக்கு நன்றி தெரிவித்தான். நான் அவனிடம் முதலில் தந்தை பெரியாருக்கு நன்றி தெரிவிக்க சொன்னேன். எழுத்திலும், பேச்சிலும் இங்கு தமிழ் தேசிய வெறி சிறிய அளவுக்கு இருப்பதை ஏற்கிறேன். அது மிக சிறுபான்மையிரால் எழுப்பப்படுகிறது. கார்த்திகேயனின் கேள்வியில் அவரை அடித்த நபர்களின் அரசியலையோ, காரணத்தையோ தெரிவிக்கவில்லை. இந்த கேள்வியின் உண்மை தன்மையை தோழர்கள் பரிசீலிப்பது நல்லது. தமிழ் சமூகத்தை இழிவுபடுத்தும் நோக்கத்தற்காக ஜெயமோகன் பதிலளிக்க விரும்பும் பாணியில் கார்த்திகேயனின் கேள்வி உள்ளது..

    • திரு சுக்டெவ்,

      I agree with you and your comments. I was in Chennai nearly 10 years with multiple language, culture people as you said i never faced any kind of incidents even debates also like Mr. Karthikeyan said. And also, the people in Chennai mansion and bachelors are running behind the jobs and careers from other parts of Tamilnadu. No body doesn’t have that mind and time to think.

      I think, this issue is been created intentionally to spoil our Tamilians culture. Why the issue came here that is the big question now…

      As of my knowledge, this is the first debate for Tamil people attacks other language people in Chennai. It can’t believable….

      I really don’t know how Vinavu has given the importance without cross check the incident..

      • Hi Bilal,

        Vinavu has made its stance clear on the misgivings of the reply to Karthikeyan somewhere down the line of comments here. Kindly read that also. But I wonder why Mr. Karthikeyan doesn’t have anything to say further on this issue.

      • Dear Aliyar,

        What you have wriiten is absolutely right. this has been created intentionally and it is quite surprising. As a Tamilian, no one will hit anybody because they speak in other language. And Especially Telugu and Telugu people are very much friendly with our people.

        So, he might have been beaten for some other valid reasons.

        Please ignore this topic

    • சரியான மதிப்பீடு. உங்கள் கருத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

  8. பெரியாருக்கு எதற்கு நன்றி என்று தெரியவிலையே? சென்னை காஸ்மோபொலிட்டன் சிட்டியானதற்கு நம் பொருளாதாரக் கொள்கைகளும் அதன் விளைவாய் வந்தேரிய பன்னாட்டு நிறுவனங்களின் விருப்பத்திற்கேற்ற மந்தைகளாய் மாறிவிட்ட சமகாலத்து சமூகமும்தானே?
    இதில் பெரியார் எங்கே வந்தார். இன்னும் சொல்லப்போனால் பெரியாருக்கு தமிழ்மேலும் தமிழர்மேலும் மதிப்போ மரியாதையோ இருந்தது கிடையாது.

    • பெரியாருக்குத் தமிழும் தமிழனும் இருந்த நிலை பற்றிய மனவருத்தம் தான் அவரைக் கடிந்து பேச வைத்தது.
      தமிழன் உருப்பட வேன்டுமானால் தமிழன் நவீன பகுத்தறிவுச் சிந்தனையை உள்வாங்க வேண்டும் என்பது அவரது கருத்து.
      தமிழர் “காட்டுமிராண்டிகளாக” வாழும் காரணங்களுள் அவர்கள் உள்வாங்கிய சாதிய வர்ணாசிரமச் சிந்தனை மூடநம்பிக்கைகள் போன்றன உள்ளடங்குமென்பது அவரது மதிப்பீடு.
      தமிழர், முக்கியமாகத்த் தமிழன் தமிழன் என மார்தட்டியவர்கள், பெரியாரின் மதிப்புக்கு ஏற்ற மக்களாக இருந்தார்களா?

      • “தமிழன் தமிழன் என மார்தட்டியவர்கள், பெரியாரின் மதிப்புக்கு ஏற்ற மக்களாக இருந்தார்களா?”

        பெரியாரின் மதிப்பை பெறவேண்டிய அளவிற்கு அவர் எந்த வகையில் சிறந்தவர். சிலப்பதிகாரத்தையும், கம்பராமாயணத்தையும் சிறு ஆராய்ச்சியும் அனுகுமுறையும் இல்லாமலேயே கண்டபடி விமர்சித்தவர் அவர். அன்றைய தமிழர்களின் மதிப்புக்கு ஏற்றபடிதான் பெரியார் இருந்தாரா?

        • //பெரியாரின் மதிப்பை பெறவேண்டிய அளவிற்கு அவர் எந்த வகையில் சிறந்தவர்.//

          வேற்றுகிரக வாசிகள் தமிழ்நாட்டிலும் இருக்காய்ங்களோ 🙂

        • தமிழரிடையே, முக்கியமாக ஒடுக்கப்பட்ட தமிழரிடையே, பெரியாருக்கு அன்றும் இன்றும் மதிப்பு உள்ளது.
          பெரியாருடன்நன் பல விடயங்களில் மறுபடுகிறேன், ஆனால் அவர் வாயில்வந்தபடி பேசுகிற ஒருவராக இருக்கவில்லை. அவர் சொன்ன ஒவ்வொன்றுக்கும் மதிக்கத்தக்க காரணம் இருந்தது.

    • ஒரு சமூகத்தில் நிலவும் ஜனநாயக பண்பு வலுவான ஒரு சமூக இயக்கத்தின் பங்களிப்பு இல்லாமல் சாத்தியமில்லை என்பதை முதலில் புரிந்து கொள்க. நன்கு துலக்கமான ஒரு உண்மையை சொல்ல வேண்டுமானால், வேறு மாநிலத்தவர்களின் பெயருக்கு பின்னால் ஒட்டிக்கொண்டிருக்கும் சாதிய வால்– யாதவ், ரெட்டி, குட்டி என்பன தமிழகத்தில் இல்லை. குறைந்தபட்சம் அத்தகைய சாதி அடையாளத்தை போட்டு கொள்வது குறித்த வெட்க உணர்வு இங்கு இருப்பதற்கு காரணம் பெரியார் இயக்கத்தின் பங்களிப்பே. பிரஞ்சு புரட்சி தோல்விதான். ஜிரோண்டின்களும், ஜேக்கொபின்களும் தோற்றுப் போனார்கள். நெப்போலியன் போனபார்த்தின் military despotism வந்தது. ஆனாலும் பல நேர்மறையான அம்சங்களை பிரஞ்சு சமூகம் கண்டது. மதம் அரசியல் விவகாரங்களில் இருந்து ஒதுக்கப்பட்டது, போராட்டங்கள் logical conclusion நோக்கி சென்றது போன்றன. துக்ளக் சோ விடம் அரசியல் பயிலும் உங்கள் வறுமையை எண்ணி பரிதாபப்படுகிறேன்.

      பெரியார் தமிழர்களை இழிவுபடுத்தினார் என்று நீங்கள் சொல்வதை மெய்ப்பிக்க அவருடைய கூற்றுகளை உள்ளடக்கத்தோடு முன் வைத்து விவாதிக்க தாயாரா ?

  9. சாதி, மத, மொழி அடையாளங்களையெல்லாம் விட வர்க்க அடையாளமே நம் வாழ்க்கையை தீர்மானிக்கின்ற ஒன்றாக இருக்கிறது.பாட்டாளி வர்க்கமா? முதலாளி வர்க்கமா? இதுதான் உன்மை.

  10. “தமில் வால்க, வலர்க; தமிலால்தான் நாங்கல் தமிலர்கலாயிருக்கிறோம், தானைத் தமிலன் வால்க…”
    என்கிற மேடைப் பேச்சைக் கேட்டு வருத்தமுற்ற தெலுங்கரா நீங்கள்?

    தாய் மொழி தெலுங்காயினும் உங்கள் நாக்கு தமிழைத் தவறாகப் பேசத்தெரியாத வரையிலும், நீங்கள் தமிழை சரியாக உச்சரிக்கும் வரையிலும், நீங்கள்தான் உண்மைத் தமிழர்!
    அவ்வகையில் எத்தனையோ மேன்மைமிகு தெலுங்கு பேசும், அல்லது கவியெழுதும், உண்மைத் தமிழர்களை நானறிவேன்.

    தங்களின் பதவியேற்பு உறுதிமொழியைக்கூட தெளிவாக படிக்க முடியாத, மிகச் சிறந்த சூறாவளி மேடைப்பேச்சாளர்கள் தமிழகத்தே மெத்தவும் உள்ளனர்.

    “நான் படிக்காதவன், தமிழை எழுதவோ,படிக்கவோ தெரியாது, என்னுடைய தமிழ் உச்சரிப்பில் ஏதேனும் தவறிருந்தால், நான் அதை திருத்திக் கொண்டாகவேண்டும்” என்கிற முகவுரையோடு தமிழ் நாட்டில் பதவிஏற்பவர்கள், பதவியேற்றால் அதை
    நீங்கள் மனிதாபிமானத்தோடு மன்னித்தருள்க!

    அவ்வாறில்லாமல், எனோதானோவென்று அவர்கள் வெட்கமற்று, தம் உறுதிமொழியைப் படித்திருந்தால் அவர்களைவிட தெலுங்கராகிய உங்களைத்தான் நாங்கள் சிரமேற்கொண்டு தமிழனென்று போற்றுவோம்!

    பரம்பரைத் தமிழர்கள், அல்லது மறத்தமிழர்கள், அல்லது புரட்சித் தமிழர்கள்;
    எப்படியாவது வைத்துக் கொள்ளுங்கள்.
    அத்தகைய தமிழர்கள் ‘நடாத்தும்’, தமிழ் வளர்க்கும், தொலைக்காட்சிப் பெட்டிக்குள்ளிருந்து பேசும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் தடுமாற்றமான, ததிங்கிணத்தோம் தமிழை கேட்க நேர்ந்து, நீங்கள் தெலுங்கராயிருந்தும், தூக்குப் போட்டுக்கொள்ள தவிக்கிறீர்களென்றால் ;

    நீங்கள்தான் உண்மையான தமிழ் வளர்க்கும் தெலுங்குத் தாய்மொழியாளர்!

    உங்கள் தாய்மொழி தெலுங்காயினும், நீங்கள் சிறந்த தமிழ்ப் படிப்பாளியென்றால்…,
    தயவு செய்து தவறாகத் தமிழ் பேசும் தமிழரை பிடறியிலடித்து திருத்துங்கள்!

  11. வன்முறை என்பது எதற்காக என்றாலும் கண்டிக்க தக்கது.அடித்தவர்கள் மீது புகார் கொடுக்காமல் பதிவிட்டு என்ன செய்யலாம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.அடித்தவர்கள் இவருக்கு தெரிந்தவர்கள் போல் தெரிகிறது,பிற்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?.

    தமிழ் பேசும் அனைவரும் கூட சமாக நட‌த்தப்படுவது இல்லை.ஒரு வேளை பிறமொழி தாழ்த்தப்பட்டவராக இருக்கும் பட்சத்தில் ,தாழ்த்தப்பட்ட தமிழர் நடைமுறையில் சந்திக்கும் அவலங்களை நீங்களும் சந்திக்க நேரிடும்.

    தமிழ்நாட்டில் வாழும் ,இந்திய குடிய்யுரிமை உள்ள அனைவருமே சம உரிமை உடையவர்கள்.தமிழ் பேச தெரிய வேண்டிய அவசியம் கூட கிடையாது.பிற மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள்(உயர் சாதி,இடைப்ப்ட்ட சாதியினர்) அரசியலில் பெரிய பதவிகள் அடைவதற்கு கூட தடையில்லாத மாநிலம் இது.இதில் தவறு இல்லை.தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை பற்றி வினவில் ஒரு பதிவிடுமாறு ஒரு வேண்டுகோள்.

  12. அந்த அன்பர் வெறியர்களால் தாக்கப்பட்டது மிகுந்த வருத்ததை ஏற்படுத்துகின்றது. இந்த நவநாகரிக உலகில் ஒற்றை அடையாளம் என்பதில் இருந்து விலகி ஒரு மனிதருக்கு பன்முக அடையாளம் வரத் தொடங்கிவிட்டது. நான் ஒரு இந்தோ- சீனன், ஒரு அமெரிக்க-இத்தாலியன், ஒரு ஆங்கிலோ-இந்தியன் எனக் கூறும் அளவுக்குப் பன்முகமாக மனிதன் மாறிவருகின்றான் ……..

    தமிழ்நாட்டில் நெடுங்காலமாக வாழ்பவர்கள், தம்மை தமிழர்களாக உணர்பவர்கள் முழுமையாக தமிழர்களாகவே வாழ்வது சிறந்தது என்பது எனது தனிப்பட்டக் கருத்து… இங்குள்ள தெலுங்கு வம்சாவளியினர் அகமணமுறையைத் தவிர்த்து தமிழர்களோடு கலப்பு மணம் புரிந்தால் வெகுவிரைவில் யாவரும் தமிழர்கள் என கொண்டாடப்படலாமே !!!

    மற்றப்படி வீட்டில் விரும்பிய மொழி பேசுவதில் தடைப் போடுவது நியாயமாகப் படவில்லை, மலையாளி, கொல்டி, மார்வாரி என அவர்களைத் தாக்குவதிலும் எனக்கு உடன்பாடில்லை.. தமிழ்நாட்டில் தமிழ் மொழி பேசவும், படிக்கவும் தெரிந்திருந்தால் போதுமானது.. அதையும் தாண்டி தமிழை திணித்தல் மனிதாபிமானமற்ற செயல்… அதே போல இங்கு தமிழே தெரியாமலும் இருத்தல் முறையற்ற செயல் ..

  13. தமிழர்களிடம் இன அல்லது மொழிவெறி என்பதை என்னால்
    நினைத்துக்கூட பார்க்க இயலவில்லை.
    உண்மையாக பார்த்தால் ஏனைய மாநிலங்களோடு ஒப்பிடுகையில்
    கொஞ்சம் பரிதாபப்படும் நிலையிலேயே தமிழனின் மொழிப்பற்று உள்ளது.
    இதை பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் உணர்ந்திருப்பார்கள்.
    இந்த சம்பவம் உண்மையெனில் மிக மோசமான ஒன்று.

  14. பல நூறாண்டுகள் தமிழகத்தில் வாழ்ந்துவரும் பிறமொழிகளை தாய்மொழியாக கொண்டோரும் தமிழர்களே.வரலாற்றின் போக்கில் பலமொழிகாரர்கள் ஒரேநிலப்பரப்பில் குடியேறி வாழ்வது தவிர்க்க முடியாதது.பிற மொழிகளை தாய்மொழியாக கொண்டோரும் அந்த நிலப்பரப்பில் பெரும்பான்மையாக வாழும் மொழியினரின் தேசிய இனத்தை சேர்ந்தவர்களாகத்தான் கொள்ளமுடியும்.தமிழகத்தில் வாழும் பிற மொழிகளை தாய்மொழியாக கொண்டோரும் தமிழர்களே.இது குறித்த வினவின் கருத்துக்கள் ஏற்கத்தக்கவை.

    ஆனால் கார்த்திகேயன் தான் தெலுங்கில் பேசியதற்காக தாக்கப்பட்டேன் என்று சொல்வது நம்புகிறார் போலில்லை.அப்படியான இனவெறி இங்கு கிடையாது.தமிழர்களை இனவெறியர்களாக சித்தரிக்கும் கெட்ட உள்நோக்கத்துடன் இப்படி ஒரு புனைசுருட்டு அவிழ்த்து விடப்படுகிறது.
    கேள்வி என்ற பெயரில் யார் எதைக்கேட்டாலும் அதை ஆராயாமல் அப்படியே வெளியிட்டு இந்த மோசடிப் பரப்புரைக்கு வினவும் துணை போயிருப்பது கண்டனத்திற்குரியது.

    • நண்பர்களே,
      இங்கு கார்த்திகேயன் குறிப்பிட்டிருக்கும் சம்பவம் தமிழகத்தில் சரளமாக நடக்கும் ஒன்று என்பது போல நாங்கள் கருதவில்லை. இது நடந்திருந்தாலும் அரிதினும் அரிதான ஒன்றாகவே கருதுகிறோம். இங்கு வினவு சார்பில் அளிக்கப்பட்டிருக்கும் கருத்து பொதுவில் பல் தேசிய இனங்களின் ஐக்கியமும், முரண்பாடும் யதார்த்தத்தில் என்னவாக இருக்கிறது என்பதை பற்றிய ஒரு பறவைப் பார்வையே. அதே நேரம் இனவெறியின் கருத்து ரீதியான அடிப்படை எப்படி தோன்றும் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறோம். பொதுவில் தமிழக மக்கள் இனவெறி கொண்டவர்களல்ல என்பதுதான் எமது கருத்தும். கட்டுரையில் கூட எல்லா தேசிய இனங்களிலும் உழைக்கும் மக்களிடம் இனவெறி பெரிய அளவு இருக்காது என்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இனவெறி தாண்டவாமடுகிறது என்பது போன்ற தொனியை இந்த கட்டுரை அளிக்கவில்லை என்றுதான் கருதுகிறோம்.

      அடுத்து கார்த்திகேயன் கேட்டிருப்பது போல உண்மையிலேயே அந்த சம்பவம் நடந்திருக்கிறதா என்று நாங்கள் கண்டுபிடிக்க இயலாது. ஆனால் அந்த கேள்வில் வேறு மொழி பேசுபவர்கள் தமிழகத்தில் இருப்பது குறித்த சிக்கல்களை புரிந்து கொள்ள முடியும் என்று கருதுகிறோம். மேலும் கார்த்திகேயன் தமிழர்கள் மீதான விசமப் பிரச்சாரத்திற்காக கேட்டிருப்பதாக நாங்கள் கருதவில்லை. ஆனால் அந்த கேள்வி மூலம் தமிழர்கள் இனவெறி கொண்டவர்கள் என்ற சித்திரம் தருவதாக உள்ளது என்பதை கட்டுரையில் குறிப்பிட்டு அப்படி இல்லை என்பதை எழுதியிருக்க வேண்டும். அதற்காக சுயவிமரிசனம் செய்து கொள்கிறோம்.

      • Well said. Can you please include an example of E.V.R.Periyar who’s mother tongue is Kannada and Bharathiyar who’s mother tongue is Telugu. We accept them as our Tamil leaders….

      • வினவுக்கு…
        காங்ரஸ் பெரியார் ஏன் திராவிடத்தை வளார்க்க வேண்டும், தமிழின உணர்வை வளார்க்க வேண்டும்.

        சுதந்திரத்திற்க்கு போராடும் போதே இரு பானை வைத்த பாப்பனிய ஆதிக்கத்தை அளிக்க வேண்டும், அதற்க்கு கடவுளின் முகவரா அவர்களைநினைக்கும் பாமரன் ஒன்று சேரவேண்டும். அப்படி உருவனது தான் திராவிடம், தமிழினம் உணர்வு.

        மற்றபடி தமிழற்கள் வெறியர்கள் அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். ரஜினிகாந்திற்க்காக பல்வேறு நேற்த்திகள் செய்வது இதற்க்கு உதாரணம்.

  15. வணக்கம்……
    மேற்படி கட்டுரை எழுதிய ஆசிரியருக்கு தமிழின வாதிகள் மேல் அப்படி என்ன கோபமோ தெரியவில்லை. கார்த்திகேயனுக்கு நடந்திருப்பது உண்மை என்றால் அது கண்டிக்க பட வேண்டியது தான். அனால் இது வரை எந்த தமிழ் அமைப்பை சேர்ந்தவர்கள் பிற மொழி பேசும் மக்களை இங்கு தாக்கி இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா, இந்தியன் என்கிற வார்த்தைக்கு உண்மையான அர்த்தத்தை இந்த தமிழ் மண்ணில் தான் காண முடியும். வந்தாரை வாழ வைக்கும் பூமி என்பது தான் இன்று வரை இந்த தமிழ்நாட்டிற்க்கு காலம் காலமாக உள்ள பெயர். இல்லை என்றால் மராத்திய சரபோஜிகளும். ஆந்திர நாயகர்களும் தமிழர்களை ஆண்டிருக்க முடியுமா. அவ்வுளவு ஏன் இன்று தமிழகத்தின் சென்னை,கோவை,மதுரை என்று அணைத்து முக்கிய மாவட்டங்களிலும் மின்னணு பொருட்கள் முதல் மளிகை பொருட்கள் வரை மொத்த வர்த்தக தொழிலில் (whole sale business) கோலோச்சி வருபவர்களில் நூற்றுக்கு 80 விழுக்காடு வடநாட்டை சேர்ந்த மார்வாடிகள் தான். எந்த மாநிலத்தில் தமிழன் தன் சொந்த அடையாளத்தோடு வாழ முடிகிறது . கர்நாடக மாநிலத்தில் எந்த அசம்பாவிதம் நடந்தாலும் முதலில் தாக்கி சூறை ஆட படுவது அங்கு இருக்கும் தமிழர்களின் வணிக நிறுவனங்கள் தான். காவேரி நீரை திறந்து விட சொல்லி இங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினால் உடனே கன்னட வெறியர்களால் அங்கு இருக்கும் தமிழனின் சொத்து தான் சுரண்டி சூறை ஆட படுகிறது. அவ்வுளவு ஏன் கன்னட நடிகர் ராஜ்குமார் இறந்து போன அன்று கலவரத்தில் இடு பட்ட கன்னட வெறி நாய்கள் தமிழனின் கடைகளில் வீடுகளில் புகுந்து தாக்குதல் நடத்தினார்களே.

    //இதைத் தாண்டி எல்லா இடங்களிலும் உழைக்கும் மக்களிடையே மொழிவெறி என்பது கிஞ்சித்தும் கிடையாது.//

    எதன் அடிப்படையில் ஆசிரியர் இப்படி சொல்கிறார் என்று தெரியவில்லை. காவேரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் தர கூடாது என்று போரடிவர்களில் பெரும்பான்மையோர் மாண்டியா என்னும் ஊரின் விவசாய பாட்டாளி வர்க்கம் தான். ஏன் காவேரியில் இருந்து பெரும் தண்ணீரை என்ன தமிழகத்தில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களும் பணக்கார சாராய ஆலைகளுமா பயன்படுத்த போகிறது தினமும் வானத்தை பார்த்து மழைக்கு ஏங்கும் தமிழக விவசாயி தான் பயன் அடைய போகிறான். இந்த உண்மையை ஒன்றும் உணராதவர்கள் இல்லை மாண்டியா விவசாயிகள். அதே போன்று பெரியார் அணையை உடைக்க வேண்டும் என்று கூறும் மலையாளிகளின் திமிரை என்னென்று சொல்வது. இங்கு இருந்து பால், அரிசி, மாட்டிறைச்சி, காய்கறி போன்றைவைகளை பெற்று கொன்று தமிழ் நாட்டிற்க்கு தண்ணீர் தர முடியாது பெரியார் அணையை உடைப்பேன் என்று கூறும் மலையாளிகளின் பரந்த மனப்பான்மையை என்னென்று சொல்வது. சொன்னாரே கேரளா நீர் பாசன துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் பெரியார் அணையை உடைத்தால் அந்த அணையின் நீரை நம்பி இருக்கும் தமிழக மக்கள் விவசாயிகள் பாதிக்க படமாட்டார்கள என்ற கேள்விக்கு உடனே அவர் ” பெரியார் ஆணை மிக பலவீனமாக உள்ளது எந்நேரத்திலும் அது உடைந்து அணையை சுற்றி இருக்கும் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். தமிழ்நாட்டின் விவசாயத்தை விட இங்கு இருக்கும் எங்கள் மக்களின் உயிர் தான் முக்கியம்” என்று ஒரு அண்ட புளுகு புளுகினாரே. பெரியார் ஆணை நல்ல நிலையில் தான் இருக்கிறது. இதை எதிர்த்து எந்த கம்யூனிஸ்ட் கட்சி இங்கு ஆர்ப்பாட்டம் நடத்தியது. பிரேமச்சந்திரன் சொன்ன கருத்தை தமிழ்நாட்டில் இருக்கும் டீ கடை நடத்தும் மலையாளி கூட ஆதரிக்கிறான். வேண்டுமானால் தமிழன் என்கிற அடையாளம் தெரியாமல் கேரளாவை சேர்ந்தவன் என்று கூறி மலையாளத்தில் பேசி பாருங்கள் அப்போது தெரியும் மலையாள பாட்டாளி வர்க்கம் எப்படி யோசிக்கிறது என்று. முல்லை பெரியார் ஆணை மீது கை வைத்து பார்க்கட்டும் அப்போது மலையாளிகள் தெரிந்து கொள்வார்கள் தமிழர்கள் யார் என்று. ஒவ்வொரு தமிழனும் கேரளாந்தகனாக மாறுவான். தமிழரின் இன எழுச்சி ஏற்றம் பெறுமாக.

    • நண்பரே, உங்கள் வாதப்படி காவிரியிலும், முல்லைப் பெரியாரிலும் நீர் தர முறையே கன்னட, மலையாள மக்கள் மறுக்கிறார்கள். சரி, இதற்கு நீங்கள் என்ன தீர்வு வைத்திருக்கிறீர்கள்? தமிழன் உணர்வு பெற்று இரு மாநில மக்களோடு போர் தொடுக்க வேண்டுமா? இதன்றி வேறென்ன தீர்வு சாத்தியமாகும், கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்.

      கர்நாடகா, கேரளா இரண்டிலும் கட்சிகளும், சில இனவெறி அமைப்புகளும் இத்தகைய இனவெறியைத் தூண்டுகிறார்கள். அதற்கு ஓரளவு அந்த மக்களும் பலியாகியிருக்கிறார்கள் என்பது உண்மைதான். அதற்கு நாம் மாநிலங்களை சமத்துவத்தோடு ஆட்சி செய்வதாக கூறும் மத்திய அரசைத்தான் மிரட்ட வேண்டும். தமிழகத்தின் நியாயமான பங்கை உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் அமல்படுத்த மறுக்கும் மத்திய அரசை எதிர்த்து போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்த வேண்டும். மத்திய அரசுக்கு தமிழக மக்கள் வரி கொடுக்க மாட்டார்கள், நிர்வாக அமைப்புக்கு அடிபணிய மாட்டார்கள் என்று போராடினால் அது மத்திய அரசுக்கு பெரும் சிக்கலை தோற்றுவிக்கும். ஏனெனில் இப்போதுள்ள மாநிலங்களை ஆளுவது மத்திய அரசுதானே?

  16. காலம் தந்த படிப்பினைகளில் இருந்து வினவு திருந்தியதாகத் தெரியவில்லை.வினவு ஒரு தமிழினத் துரோகி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டீர்கள்.இப்படி வந்தேறிகளுக்கு சாமரசம் வீசியதால் தான் சிங்களன் என்ற வந்தேறி தமிழனை ஒடுக்கும்படி ஆயிற்று.நிச்சயம் தமிழர்கள் இப்படி செய்திருக்க மாட்டார்கள் பதில் இப்படி தமிழனை தமிழ் சமூகத்தையும் இழிவு படுத்துவது போல தான் இருக்கும் என்பதை தெரிந்து கொண்டே கேட்கப் பட்ட கேள்வி தான் இது.ஆந்த்ராவில் தமிழர்கள் எப்படி மதிக்கப் படுகிறார்கள் என்பதையும் கொஞ்சம் ஒரு எட்டு போய் பார்த்து விட்டு வந்து அதையும் எழுதினால் உங்களின் நடு நிலையை ஏற்றுக் கொள்ளலாம்.மிக மோசமான தன்னலவாதிகள் தான் இந்த கூட்டம்.கொங்குத் தமிழ் கச்சடாவா? கச்சடா என்ற வார்த்தையே கொங்குத் தமிழில் இல்லை மிகவும் மரியாதையான தமிழ் கொங்குத் தமிழ்

    • எழில், புலி படத்தை போட்டுவிட்டு புலியின் உறுமலுக்குப் பதில் பூனை கத்துவது போல பேசினால் எப்படி?

      தமிழ்நாட்டு தமிழர்களும், ஈழத்தமிழர்களும் ஒரே தேசிய இனமல்ல. இருவேறு தேசிய இன மக்கள். இருவருக்கும் மொழி, பண்பாடு என்று பல ஒற்றுமை இருந்தாலும் இருவேறுதேசிய இனங்கள்தான். அமெரிக்காவிலும் ஆங்கிலம், இங்கிலாந்திலும் ஆங்கிலம் என்றாலும் இருவரும் வேறு நாட்டு மக்கள்தானே?

      இலங்கையில் சிங்கள மக்கள்தான் பெரும்பான்மை தேசிய இனம். அவ்வளவு பெரிய கூட்டத்தை சிறுபான்மை தமிழ் மக்கள் உள்ளே விட்டு ஆட்சியில் அமர்த்தினார்களா? கணக்குக்கு பொருத்தமாக பேசுங்கள் எழில். அடுத்து கொங்கு தமிழ் கச்சடா என்று எழுதவில்லை. கச்சாவான என்றுதான் எழுதியிருக்கிறோம். கச்சா என்றால் ராவான அல்லது சமையல் செய்யப்படாதா காய்கறிகள் போல என்று வையுங்களேன். இழிவு படுத்தும் பொருள் அதில் இல்லை. மேலும் கொங்கு தமிழ், கொங்கு பண்பாடு, கொங்கு நாட்டு மக்கள் அனைத்திலும் உள்ள கொங்கு என்பது கொங்கு வேளாள கவுண்டர்களின் ஆதிக்க சாதிப் பண்பாட்டையே குறிக்கிறது.

      இறுதியாக ஏற்கனவே சொன்னதுதான். உங்களுக்கு வரலாறு, புவியியல் எதுவுமே தெரியவில்லை. வாருங்கள் நேரில் பேசி கற்கலாம் என்றாலும் உங்கள் ஈகோ தடுக்கிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை. நீங்களே ஒரு வழி சொல்லுங்கள். எல்லா பிரச்சினைகளையும் மொத்தமாக ஃபைசல் செய்யலாம்.

      • ” இலங்கையில் சிங்கள மக்கள்தான் பெரும்பான்மை தேசிய இனம். அவ்வளவு பெரிய கூட்டத்தை சிறுபான்மை தமிழ் மக்கள் உள்ளே விட்டு ஆட்சியில் அமர்த்தினார்களா? ”

        உண்மையான கருத்து…

      • வினவு உங்களுக்குதான் வரலாறு புவியியல் மட்டுமல்ல குடிமையியல், சமூகவியல் கூடத் தெரியவில்லை. ஈழத்தமிழனும் இந்தியத் தமிழனும் இரு வேறு தேசிய இனம். அது தனித்தனி நாட்டில் வசிப்பதால் தனி தனி தேசிய இனம் என்ற வகைப்பாடு எந்த அடிப்படையில் சரி? முதலில் இந்த தேசிய இனம் என்ற முட்டாள் தனமான வாதத்தை தூக்கி எறியுங்கள். ருசியாவில் கேக் சாப்பிடுகிறார்கள் என்றால் இங்கும் சாப்பிட முடியாது.ருசிய மாதிரியை இங்கு கொண்டு வந்து காபி பேஸ்ட் செய்ய முயலாதீர்கள்.
        ஜிம்பாப்வே யில் வெள்ளையன் அடிபடும் போது அமெரிக்கா,பிரிட்டன்,ஆஸ்திரேலிய வெள்ளையனுக்கும் துடிக்கிறதே அது எந்த உணர்வு? அது வேறு நாடு அது அவர்கள் பிரச்சினை என்று விட முடியுமா?
        உலகத்திலேயே வினவிற்கு மட்டும் தான் இது போன்ற சிந்தனைகள் வரும்.

        // தமிழ்நாட்டில் இருக்கும் அதுவும் டாடா சுமோவில் நிரப்புமளவு தொண்டர் படையுள்ள கட்சிகளைச் சேர்ந்த சில தமிழின வெறியர்கள்தான்// உங்களுக்கு மட்டும் பல கோடி வேண்டாம் லட்சக் கணக்கான உறுப்பினர்கள் உள்ளார்களா? உங்களது அமைப்பு இயங்குவதே இணையத்தில்தான் என்று ஒரு தோற்றம் இருக்கிறது உங்களது புரட்சி அல்லது நீங்கள் நம்பும் புரட்சி என்பது இணையத்தில் தோன்றி இணையத்தில் வளர்ந்து இணையத்திலேயே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலை நாட்டி பின்னர் இணையத்திலேயே திரிபு வாதிகளும் வந்து இணையத்திலேயே மரித்து விடும் என்று தான் தோன்றுகிறது. அவர்கள் எண்ணிக்கையில் சிறிதாக இருக்கலாம் நீங்கள் சொன்னதைப் போலவே தான் இது பச்சை மிளகாய்க்கும் ம.க.இ.க வினவு என்ற பூசணிக்காய்க்கும் உள்ள வேறுபாடு தான் என்றே வைத்துக் கொள்ளுங்கள்

        இங்கு இனம் என்ற சொல் தான் முதன்மையானது.அது மொழியை மட்டும் அடிப்படையாகக் கொண்டது.அதற்குள் தாய்மொழியை கொண்டவர்கள் மட்டுமே அடங்குவார்கள்.வந்தேறிகள் தமிழ் பேசுகிறார்கள் தமிழனை விட நன்றாக எழுதுகிறார்கள் என்பதெல்லாம் வெறும் அறிவு தொடர்புடையது மட்டுமே. அவர்களின் உணர்வென்பது அவர்களின் அவர்களின் தாய் மொழி வழிப்பட்டது மட்டுமே

        அதாவது காவிரி கலவரத்தின் போது இங்குள்ள கன்னடர்கள் கள்ள மௌனம் சாதிப்பதும் முல்லைப் பெரியாரில் இங்குள்ள மலையாளிகள் கள்ள மௌனம் சாதிப்பதும் அந்தப் புள்ளியில் தான்.கருநாடகத்தில் தமிழன் தாக்கப்படும்போது தமிழர்கள் கன்னடர்களைத் தாக்கினார்களா? அந்த பெருந்தன்மை எனும் இளிச்சவாயத்தனம் என்ன தீர்வைக் கொண்டு வந்தது? காவிரியில் தண்ணீரே தர முடியாது என்று ஆணவமாகத் தான் முடிந்தது. இதே நாம் தனித் தனி நாடுகளாக இருந்தால் என்ன நடந்திருக்கும்? போர் அறிவிப்பு வந்து ஐ.நா தலையிட்டு ஒரு தீர்வைக் கொண்டு வந்திருக்கும் இந்தியா பாக்கிஸ்தானுக்கு இடையில் வந்த சிந்து நதி நீர் பிரச்சினைக்கு வந்த தீர்வு போல நிச்சயம் ஒரு தீர்வு வந்திருக்கும். சிங்களவன் ஒரு வந்தேறி என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் இருக்கிறது ஒரு ஒரியக் காட்டுமிராண்டி கூட்டம் தான் சிங்களவன்.
        அடுத்தது கொங்கு //மேலும் கொங்கு தமிழ், கொங்கு பண்பாடு, கொங்கு நாட்டு மக்கள் அனைத்திலும் உள்ள கொங்கு என்பது கொங்கு வேளாள கவுண்டர்களின் ஆதிக்க சாதிப் பண்பாட்டையே குறிக்கிறது. //

        உங்களின் சுடலை ஞானம் புல்லரிக்க வைக்கறது வினவு. ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்
        கொங்கு என்ற அடை மொழி கொங்கு வெள்ளாளர்களுக்கு மட்டுமே உரித்தானது அல்ல அது கொங்கு செட்டியார்கள் கொங்கு நாவிதர்கள்,வளர் கொங்கு வெள்ளாளர் என்ற மற்ற சாதிகளுக்கும் உரித்தானது.கொங்கு செட்டியார்கள் கொங்கு மண்டலத்தில் மட்டும் அவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று அரசாங்கமே அறிவித்துள்ளது. மண்ணின் பெயர் தான் மக்களுக்கு சூட்டப் பட்டதே தவிர மக்களின் பெயர் மண்ணுக்கு சூட்டப் படவில்லை இந்த குறைந்தபட்ச அறிவு கூட உங்களுக்கு கிடையாதா? சென்னையின் வெப்பம் உங்களது மூளையையும் சேர்த்து வரள செய்து விட்டதா?

        கர்நாடகா, கேரளா இரண்டிலும் கட்சிகளும், சில இனவெறி அமைப்புகளும் இத்தகைய இனவெறியைத் தூண்டுகிறார்கள். அதற்கு ஓரளவு அந்த மக்களும் பலியாகியிருக்கிறார்கள் என்பது உண்மைதான்// எப்பேர்ப்பட்ட உண்மை இது. ஓரளவாம் ஓரளவு அண்ணாச்சி ஓரளவு அல்ல முழுமையாக பலி ஆகி இருக்கிறார்கள். உங்களுக்கு தான் எந்த ஊருக்கும் போகாமலேயே சென்னையில் இருந்தே உங்களின் ஆழ் மன உணர்வு எல்லா தகவல்களையும் தருகிறதே. இது ஜெயமோகன் பாணியில் உள்ளொளி என்று கருதலாமா?

        இறுதியாக
        உங்களிடம் பாடம் படிக்கும் அளவுக்கு நான் இல்லை என்று பல முறை சொல்லிவிட்டேன் அந்தத் தகுதி சென்னையில் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் உங்களுக்கு இல்லை. ஓர் Phd ஆய்வாளன் இரண்டாம் வகுப்பு மாணவனிடம் பாடம் படிக்க முடியுமா? அதியமானின் நிலைப்பாடு தான் எனதும்.

        • எழில்:
          “ஓர் PhD ஆய்வாளன் இரண்டாம் வகுப்பு மாணவனிடம் பாடம் படிக்க முடியுமா?

          பல பி.எச்டிக்களுக்கு உலக அறிவு கம்மி.

          பல PhD ஆய்வாளர்களுக்கு உலக அறிவை வழங்க இரண்டாம் வகுப்புப் படிப்பே அதிகம்.”

        • எழில், செயமோகன் இருவருமே பெற்று Pக்D பலருக்கு அதைபெற்றுத்தரும்பணியில் இருக்கும் என்னிடம் பாடம் பயில தயாரா?
          ஓர் Pக்D , அல்ல ஒரு Pக்D என்பதே சரி. பிழைநீக்கி எழுதும் முறை – கி-ஆ-பே-வி யின் நூலை நீஙகள் அவசியம் படிக்க வேண்டும். செயமோகனுக்கு அந்த நூல் அவசியமில்லை. ஏனெனில் அவர் பெயரே தமிழ் இல்லையே!

          இனம் மொழியால், பண்பாட்டால், நாட்டால் வருவதல்ல. பிறப்பால் வருவது. தென்னாப்பிரிக்காவில் தமிழ் குடும்பத்தில் பிறந்து, ஆங்கிலமே பிறப்பு தொடங்கி தாய்மிழியாய்ப் பேசினாலும் அக்குழந்தை தமிழ்க்குழந்தை. தமிழ்நாட்டிட்டிலே பிறந்து, தமிழ் மட்டுமே பேசினாலும், ஐரோப்பியர்களுக்கு பிறந்த குழந்தை ஐரோப்பிய குழந்தையேதான். இனம் மரபணுவால் கெனெடிச்ச் தீர்மானிக்கப் படுகிறது.

          என்ன எழில், செயமோகன் உங்கள் அறிவுக்கு அப்பால் எழுதிவிட்டேனோ?

          ஈழத்தமிழனும் தமிழகத் தமிழனும் ஒரே இனமா இல்லையா என்பது அவர்களின் பரபணுவை ஆய்ந்தால் தெரியும். சோழனும் ஈழத்தமிழனும் மண உறவு கொண்ட்டிருந்ததற்கும் பாண்டியனும் சிங்களனும் மண உறவு கொண்ட்டிருந்ததற்கும் கல்வெட்டு செப்பேடு சான்றுகள் உள்ளன. பிற்காலச் சோழர்கள் சளுக்கியர்களோடு மண உறவு கொண்ட்டிருந்ததற்கும் கல்வெட்டு செப்பேடு சான்றுகள் உள்ளன. பிற்காலத்தில் கிழக்கு சளுக்கியர்களே தெலுங்கர் என்றும் மேற்கு சளுக்கியர்களே கன்னடியர்கள் என்றும் ஆனார்கள். இன்றும் கன்னடதில் 50 விழுக்காடு தமிழ்ச் சொற்களே இருக்கின்றன. வட்டல் நாகராசு வாரிசுகள் வேண்டுமானால் வேண்டுமானால் மீதமுள்ள 50 விழுக்காடு கன்னட சொற்களோடு உரையாடிக்கொள்ளலாம்.

          சளுக்கியர்கள் தங்களுக்கு வடக்கே இருந்த அங்க, வங்க, பாஞ்சால, மகத மக்களோடு மண உறவு வைத்திருந்தார்கள். இராசராசனுக்கும் சளுக்கிய இளவரசிக்கும் பிறந்த்தவன் தான் தமிழினம் மிகப்போற்றும் மாவீரன் இராசேந்திரன்.

          தமிழ் மன்னர்கள் சளுக்கியர்களையும் பிற அரசுகளையும் வென்றபோது தமிழ் வீரர்கள் அந்தந்த நாட்டிலேயே தங்கி அந்த நாட்டுப்பெண்களை மணந்து பின் சோழ, சேர, பாண்டிய நாட்டுக்கு குடிபெயர்ந்ததும், பிற நாட்டு மன்னர்கள் சோழ, சேர, பாண்டிய நாடுகளை வென்றபோது அந்த நாட்டு வீரர்கள் தமிழ்ப் பெண்களை மணந்து தமிழ்நாட்டிலேயே வாழ்ந்த்ததும் அன்றி அவர்கள் நாட்டுக்கு குடிபெயர்ந்ததும் நிறைய நடந்தன. தமிழ் மன்னர்களின் கல்வெட்டுகள் மனிப்பிரவாளம் மற்றும் கிரந்த எழுத்துக்களை கையாண்டிருப்பதும் நிறையக் காணலாம்.

          என்ன எழில், உங்கள் புலிப் படத்தை தாண்டி எழுதுகிறேனோ?

          கொஞ்சம் குழப்பம்தான், யார் எந்த இனம் என்பது? கலப்புக்கு கலப்புக்கு கலப்புக்கு கலப்பு என பல நூற்றாண்டுகளைத் தாண்டியது இந்திய ஈழ மக்கள் வரலாறூ. சிங்களர்கள் ஒன்றும் வங்க அரசிக்கும் சிங்கத்துக்கும் பிறந்தவர்கள் என்று மகாவம்சம் பிதற்றுவதை நான் நம்பவில்லை. நாங்குனேரி நாஞ்சில் வின்சென்ட் நாசரேத்திலிருந்தும், அறந்தாங்கி அல்லாபிச்சை அரேபியாவிலிருந்தும் குதிக்கவில்லை.

          ஆனால் ஐரோப்பிய, அரேபிய கலப்பின மக்களும், கலப்பின மக்களோடு கலந்த மக்களும் இருக்கிறார்கள்.

          ஆங்கிலேயர்களுக்குமுன் இந்தியா என்ற நாடும் இருந்ததில்லை, தமிழ்நாடு என்று ஒன்றும் இருந்ததில்லை. ஆங்கிலேயர் வந்த போது ஏன், சேர, சோழ, பாண்டிய நாடுகளே இருக்கவில்லை. புதுக்கோட்டை, சிவகங்கை, பாஞ்சாலங்குறிச்சி என்பது போன்று பலகுட்டி அரசுகளே இருந்தன. பல தமிழர் பகுதிகள் நாயக்கர்களால் (கட்டபொம்மன் உட்பட)ஆளப்பட்டிருந்தன.

          தமிழ்பேசும் பார்ப்பணர்களின் தாய்மொழி முழுக்க முழுக்க 100 விழுக்காடு தமிழே. அகம் என்பதுபோன்ற பல தூய தமிழ்ச் சொற்கள் பார்ப்பணர்களால் மட்டுமே வழங்கப்படுகிறது. சமசுகிரதம் என்றால் முழுவதும் ஆக்கப்படாத (சமைக்கப்படாத) மொழி என்றே பெயர். இதை ஒரு பார்ப்பணரிடம் இருந்த்துதால் கற்றுக்கொண்டேன். கட்டளைக்களித்துரையில் கவிதைபாடி மாநில அளவில் கதை கட்டுரை கவிதைப்போட்டிகளில் வென்ற நான் இந்தியும் சமக்கிரதமும் கல்லூரிநாட்களில் பயின்றேன். பார்ப்பணர்களின் தாய்மொழி சமக்கிரதமல்ல, தமிழே. ஆங்கிலத்தில் science, engineering,medicine, law , பயின்றதால் தமிழர் ஐரோப்பியரும் அல்லர்; வேதங்களை சமக்கிரதத்தில் பயின்று ஓதிய பார்ப்பணர்கள் ஆரியர்களூம் அல்லர். உண்மையைச் சொல்லப்போனால் நிறையப் பார்ப்பணர்களுக்கு சமக்கிரதத்தில் வேதங்களை மனப்பாடம் செய்தார்களே தவிர அதன் பொருள் தெரியாது. நாம் எப்படி பல ஆங்கில பாடங்களை ஆங்கிலத்திலேயே படிக்கிறோமோ அதேபோல் வேதங்களை சமக்கிரதத்திலேயே பயில்கிறார்கள். பாவம். நம்மவர்கள் பலர் பொருள் புரியாமல் அப்படி ஆங்கிலத்தில் மனப்பாடம் செய்து தேர்வு எழுதி மாநில அளவில் முதலிடம் வருவதுபோல் பார்ப்பணர்களில் பலரும் வேதங்களை சமக்கிரதத்திலேயே மனப்பாடம் செய்து ஓதிக்கொண்டிருக்கிறார்கள். அந்த உண்மையான தமிழர்களை ஆரியர் என்று அநியாயமாக அறிவில்லாமல் சொல்வதை நிறுத்துங்கள்.

          என்னளவுக்கு மொழி, இலக்கியம், இலக்கணம், பண்டைதமிழர் வரலாறு நீங்கள் படித்திருக்க வாய்ப்பில்லை. நீங்கள் மட்டுமல்ல, நீங்கள்நினைத்துக்கொண்டிருக்கிறீர்களே பெரிய அறிஞர்கள் என்று அவர்களுக்கும் முடியாத ஒன்றே.

          • பிரியா என்னைத் திருத்துவது இருக்கட்டும் முதலில் நீங்கள் பிழை இல்லாமல் எழுதுகிறீர்களா என்று பாருங்கள். கடைசி வரை வரலாற்றைப் பேசிவிட்டு கடைசியில் எதற்காக பார்ப்பனர் தமிழர் என்று முழங்குகிறீர்கள் என்று புரியவில்லை. சந்தடி சாக்கில் உங்களது பார்ப்பனர்களை விஞ்சிய பார்ப்பன விசுவாசம் தான் துருத்தி நிற்கிறது. நான் எங்கே பார்ப்பனர்களைப் பற்றிப் பேசினேன்? உங்களது நோக்கம் தான் என்ன ? பார்ப்பனர்கள் நல்லவர்கள் அவர்கள் தமிழர்கள் என்று நிறுவுவதா? அப்படியானால் உங்களுக்கான இடம் இதுவல்ல ஏனெனில் இங்கே பார்ப்பன விசுவாசத்தை ஒலித்தீர்களானால் உங்களுக்கு மரண அடி காத்திருக்கிறது.அகம் என்ற ஒரு வார்த்தையை மட்டும் சொல்கிறீர்களே மீதி வார்த்தைகளையும் கொஞ்சம் சொல்லுங்களேன்

            • ஏழில்,நீங்கள் வாழ்நாள் முழுதும் திருந்தப் போவதில்லை.
              நான் முழங்கவில்லை “பார்ப்பனர் தமிழர் என்று”. உங்கள் மடமூளையில் நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் தமிழினம் என்று வரலாற்றில் இருந்ததே இல்லை என்பதையும் அப்படி நீங்கள் யாரை தமிழர் என நம்புகிறீர்களோ அவரைப்போன்றவர்களே உங்கள் மட மூளைக்கு பார்ர்பணர்களாய் தெரிபவர்களூம் என்று சொன்னேன். எனக்கு பாப்பான் பரையன் பல்லன் தமிழன், இந்தியன், அமேரிக்கன் ஆப்பிரிக்கன் என்ற பாகுபாடு இல்லை. நான் என்னைப்போல் வெகு சில மனிதர்களையும் உங்களைப்போள் மனித உடம்பில் மனிதனில்லாவற்றையும் காண்கிறேன்.

              ஏதோ இருக்க இடம் இல்லாமல் எழுத இடாம் இல்லாமல் உங்களிடம் பிச்சை கேட்பது போல், “உங்களுக்கான இடம் இதுவல்ல” என்று எழுதுகிறீர்கள். என்னால் ஆரம்பிக்கப்பட்டு இயக்கப்படும் இணயத்தளங்கள் உள்ளன. அறிவியல், இளையோர் முன்னேற்றம் தொடர்பான இணையத் தளம், வார இதழ் என பல தொடங்க இருக்கிறோம். ப்
              இழை இன்றி தமிழே எழுதத் தெரியாத சிறுவன் நீ.(வயதும் அறிவும் ஒப்பு நோக்கி சிறுமையில் குறிப்பிட்டேன்.) நானோ முத்தமிழ் காவலர் கி. ஆ.பே. வியுடம் மிகப்பெரிய வாதங்களை புரிந்தவர். தமிழைக் கற்றுக்கொள்ள மறுக்கும் நீ தமிழையும் கொன்று தமிழனையும் கொன்ற, கொல்லுகின்ற பாவி. நான் ஆங்கிலத்தில் “மதம்..” பற்றி எழுதியவற்றைப்படி. ஆங்கிலமாவது தெரிந்தால். உன் தனி ஒருவனுக்கு பாடம் நடத்துவதல்ல என்பணி. நான் பேராசிரியாக வேளைபார்க்கும் பல்கலையில் நீ மாணவனாய் நுழைய ஆண்டுக்கு 40 லட்ச ரூபாய் கட்டணம் கட்டவேண்டும்.

              வினவைப்பற்றி ஈழத் தமிழர் ஒருவர் என்பார்வைக்கு கொண்டுவந்தார். “உங்கள் பொன்னான வாக்குகளை குப்பைத் தொட்டியில் போடவும்” என்றும் வாக்கு சார்ந்த போலி மக்களாடிசித் தத்துவத்தை எதிர்த்தும், நாய்க்கு வாக்கு கேட்ட நகைச்சுவையும் என் புரட்சிகர கருத்ட்குக்களோடு ஒத்துப்போனதால் ஒரு புனைப்பெயரில் சில கருத்துக்களை வைத்தேன். மற்றபடி, சாதி, மொழி, இன, நாடு கடந்த மனித குமுகாயத்தை படைக்க முயற்சிக்கும் எனக்கும் – மனிதனை இந்தியன் அமெரிக்கன் என இ பிரித்து, இந்தியனை, தமிழன், தெலுங்கன் என பிரித்து, தமிழனை சாதிவாரியாய் பிரித்து, இறுதியில் மக்கள் கலை இலக்கியக்கழகம் இல்லாத அல்லது இருக்கக் கூடாத பரயன் பல்லன் என்ற பிரிவுக்காய் வாதாடுவது கண்டு சில அறிவுரைகளை அளித்தேன். தாய்-தந்தை தந்த அறிவுரை கேட்டு ஆசிரியர் தந்த அறிவுரை கேட்டு நூலாயிரம் படைத்த நூலாசிரியர்களின் அறிவுரை கேட்டு கருத்துக்களை உள் வாங்கும் திறன் உங்களிடம் இருந்திருந்தால் என் பேச்சை கேட்க நூறு ஆயிரம் விஞ்ஞானிகள் கூடுவது போல் உமக்கும் கூடுவார்கள். முன்பே சொன்னதுபோல் பதிலுக்கு பதில் எழுதி விலை மதிப்பு பெற்ற என் நேரத்தை வினவில் என்னால் செலவிட முடியாது. வினவு இன்னும் வளர்ந்து பல கோடி வாசகர்களைப் பெறட்டும் என்று வாழ்த்துகிறேன்.

              • பார்ர்பணர்களாய்,பரையன் பல்லன், வேளைபார்க்கும்,மக்களாடிசித்,கருத்ட்குக்களோடு,இடாம்,உங்களைப்போள்//இது போன்ற அதி அற்புதமான உங்களது தமிழ்ப் பணி மேலும் செழித்தோங்க வாழ்த்துகிறேன்.எல்லா இடத்திலும் “நான்” “நான்” என தனி மனித ஆணவத்தின் உச்சியில் நின்று கொண்டு முழங்குகிறீர்கள்.பேராசியர்களின் யோக்கிதை எங்களுக்குத் தெரியாதா? எவ்வளவு கற்றாலும் ஒரு மனிதனுக்கு ஆணவம் தலைக்கேறினால் உங்களைப்போல் தான் மதி கேட்டு யாரையும் மதிக்காமல் அலைவார்கள். மூளையற்ற பேராசியர்களின் பூட்ஸ் கால்கள் எங்களது மூளையின் மீது மட்டுமல்ல மக்களின் மூளையின் மீதும் நடந்து செல்ல ஒருபொழுதும் அனுமதிக்க முடியாது. எனது எழுத்துப் பிழைகளை கொஞ்சம் குறிப்பிட்டிருந்தால் நன்மையாக இருந்திர்க்கும்

              • திருத்தம்- மதி கேட்டு,இருந்திர்க்கும் என்பதை மதிகெட்டு,இருந்திருக்கும் என திருத்தி வாசியுங்கள்.

                //நான் பேராசிரியாக வேளைபார்க்கும் பல்கலையில் நீ மாணவனாய் நுழைய ஆண்டுக்கு 40 லட்ச ரூபாய் கட்டணம் கட்டவேண்டும்// ஆம் உங்களைப் போன்ற கல்வி வணிகம் செய்பவர்களையும் சேர்த்து தான் வினவு எதிர்த்து வருகிறது. துறை சார்ந்த அறிவு வேண்டுமானால் இந்த பேராசியர்களிடம் மிகுந்து இருக்கலாம். ஆனால் சமூக அறிவில் அப்படி எதிர்பார்க்க முடியாது என்பதை உங்கள் மூலம் கண்டடையலாம்.அதாவது தான் சொல்வதை அப்படியே கேட்க வேண்டும் எதிர்த்துக் கேள்வி கேட்டால் உடனே நான் அப்படி இப்படி நான் மேதாவி அறிவாளி என்று ஆணவம் கொப்பளிப்பது இந்திய கல்வி நிறுவனங்களில் நாள் தோறும் நாம் காணக் கிடைக்கும் காட்சி. நீங்கள் வெளி நாட்டில் உள்ள பல்கலையில் பணி புரிகிறீர்கள் என்று தோன்றுகிறது அங்கே சென்றும் உங்களது இந்தியத் தனத்தைக் காட்ட வேண்டாம் பாவம் வெளிநாட்டு மாணவர்கள். ஆனால் அவர்கள் கடுமையாக எதிர்வினை புரிவார்கள் இங்கே போல நான் அமைச்சருக்கு உறவினர் என்றெல்லாம் தப்பிக்க முடியாது.நீங்கள் சொல்வதை அப்படியே கேட்க நான் ஒன்றும் உங்களது மாணவனும் அல்ல வினவு ஒன்றும் உங்களது பல்கலை வகுப்பறையும் அல்ல என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். இது பொதுவெளி இதில் நீங்கள் வரம்பு மீறி வார்த்தைகளைப் பயன்படுத்தினால் அதே அளவு ஏன் அதை விட மோசமாகவும் எங்களால் பேசமுடியும் என்பதையும் உணர்ந்துகொள்ளுங்கள். விவாதத்தின் நாகரீகம் கருதி நான் நாகரீகமான வார்த்தைகளைத்தான் பயன்படுத்தியுள்ளேன்

              • ஐயா/அம்மணி (@priya)!
                உங்கள் தற்பெருமைகளை தண்டோராப் போடுவதற்கு வினவு தளமா கிடைத்தது?
                உங்கள் பல்கலைக்கழகத்தில் எவ்வளவு பணம் பறிக்கின்றீர்கள் என்றோ நீங்கள் எத்தனை இணையத்தளங்களை வைத்துள்ளீர்கள் என்றோ இங்கு யாரும் கேட்கவில்லை.

    • ஆந்திராவில் தமிழனுக்கு எந்த மரியாதைக் குறைச்சலும் இல்லை. என் அலுவலக நண்பர்கள், வீட்டைச் சுற்றி இருக்கிற குடும்பத்தார் அனைவரும் என்னைத் தமிழன் என்று தெரிந்து தான் பழகுகிறார்கள். அவர்கள் வசதிக்காக நான் தெலுங்கு கற்று பேசுகிறேன், என் வசதிக்காக அவர்கள் தமிழ் பேச வேண்டும் என்று கருதவில்லை. இங்கே முக்கியமான செய்தி இது தான்.

      பன்மொழிக் கலப்பு என்பது ஆந்திராவில் சர்வ சாதாரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டது. மராட்டியும் இந்தியும் தெலுங்கும் தெரிந்த மராட்டியரைப் பார்த்திருக்கிறேன், இந்தியும் தெலுங்கும் பஞ்சாபியும் பேசுகிற சீக்கியரைப் பார்த்திருக்கிறேன், தமிழ், தெலுங்கு, இந்தி பேசுகிற தமிழனையும் பார்த்திருக்கிறேன், தெலுங்கு, இந்தி, கன்னடம் பேசுகிற கன்னடரையும் பார்த்திருக்கிறேன். சும்மா, ஆந்திராவுல மத்த மொழி பேசுறவன மதிக்கிறானா, கேரளாவுல மதிக்கிறானா என்கிற ஊளை உதாரையெல்லாம் நிறுத்துங்கள். உருப்படியாக எதாவது கருத்து இருந்தால் சொல்லுங்கள்.

      • நீங்கள் ஆந்திராவில் வாழ்கிறிர்கள். எப்படி கேரள வாழ் தமிழ் மக்களைப்பற்றி எழுத் முடியும் அதுவும் எளக்காரமா ?

        நண்பரே, நான் போன வருடம் கொச்சியில் இருந்த போது, ஒரு ஊர்வலம் கலெகடர் ஆபிசில் முன்.

        தமிழ் பேசும் கூலித்தொழிலாளர்கள், தாங்கல் ஏறக்குறைய 40 ஆண்டுகளாக அங்கு வாழ்ந்தும் தமிழ்பேசும் ஒரே ஒரு காரணத்தால் தங்களுக்கு குடும்ப அட்டை வழங்க மறுக்கிறார்கள் என்று சொல்லி மனு கொடுத்தார்கள். எந்த மலையாள அரசியல் வாதியும்
        அவர்களுக்கு உதவ முன்வரவைல்லை.

        ஆந்திராவைப்பற்றி மட்டும் பேசுங்கள்

      • நீங்கள் கீழே விஜய் கிருஷ்ணா என்பவற்றின் பின்னூட்டத்தைப் படித்து உண்மையை அறிந்து கொள்ளலாம். நம்மை சுற்றியுள்ள வீடுகள் நபர்கள் மட்டுமே முழு ஆந்திராவையும் அதன் பொது புத்தியையும் பிரதிபலிக்கிறது என நம்பும் உங்கள் முட்டாள் தனத்தை எண்ணி வருந்துகிறேன்

  17. #தமிழ்நாட்டு தமிழர்களும், ஈழத்தமிழர்களும் ஒரே தேசிய இனமல்ல. இருவேறு தேசிய இன மக்கள்.#
    இவ்வாறு வினவு கூறியிருப்பது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. பெரும்பான்மையான, சிங்கள பொது மக்களே ஈழத் தமிழர்களுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் போது, வினவு இவ்வாறு கூறுவது, ஈழத்தமிழர்களின் நிலையை மேலும் பலவீனப் படுத்தாதா? ஈழத் தமிழர்கள் நமது தொப்புள் கொடி உறவுகள் அல்லவா? இனி, மலேசியத் தமிழர்களும், சிங்கப்பூர் தமிழர்களும் ஒரே தேசிய இனமல்ல என்று கூறுவீர்களா?

    • விருமாண்டி,
      இருவேறு தேசிய இனம் என்பதால் நாம் ஈழத்து மக்களின் உரிமைக்காக போராடக்கூடாது என்று சொல்லவில்லையே. நாம் எப்போதும் போல அவர்களது உரிமைக்க்காக குரல் கொடுப்போம். இதை பகை விசயமாக பார்க்கத் தேவையில்லையே. மலையகத்தில் உள்ள தமிழர்கள்தான் இங்கிருந்து சென்றவர்கள். வடக்கிலும், கிழக்கிலும் உள்ள தமிழ் மக்கள் அங்கேயே வசிக்கும் பூர்வகுடி மக்கள். தொப்புள் கொடி என்று சொல்வதால் அந்த மக்கள் இங்கிருந்து சென்றவர்கள் என்ற பொருளும் வரும். அது தவறில்லையா?

      • மலையகத் தமிழர்கள் இங்கிருந்து மிகவும் அண்மைக் காலத்தில் சென்றவர்கள். சிங்களர்கள், இவர்களை விட சுமார் 8 மடங்கு காலத்துக்கு முன் ஈழத் தீவுக்கு, வங்காளத்திலிருந்து, ஈழத் தீவை, கவினி என்னும் தமிழ் அரசி ஆண்டு கொண்டு இருந்த போது, புகலிடம் தேடிச் சென்றவர்கள். ஈழத் தமிழர்கள் எப்போதில் இருந்து ஈழத்தில் இருக்கிறார்கள், என்பதைக் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு பழமையான வரலாற்றைக் கொண்டவர்கள் என்பதற்காக, அவர்களுக்கும் நமக்கும் தொடர்பு இல்லை என்று ஆகாதல்லவா? அவர்கலும் தமிழர்கள்தானே. இனத்தால் ஒன்றுதானே.

    • தமிழ்நாட்டுத் தமிழர்களும், ஈழத்தமிழர்களும் தற்சமயம் வெவ்வேறு தேசிய இனங்கள் தான் !

      இரண்டும் ஒரு இனத்தில் இருந்து கிளைத்ததாக இருக்கலாம், ஆனால் கடந்த 800 ஆண்டுகளுக்கு மேல் அவை தனித் தேசியமாக உருவாகி விட்டது எனலாம் ……… !!!

      தேசியம் என்பது மொழியால் மட்டும் உருவானது அல்ல, பூகோளம், தனி வாழ்விடம், கலாச்சார, மதம், பழக்க வழக்கம் என அனைத்தையும் உள்ளட்டக்கும் …………

      இலங்கையிலேயே மலையகத் தமிழர் தனித் தேசிய இனமாக கருதப்படவில்லை. !!

      ஒருவேளை ஈழத்தமிழரும், தமிழ்நாட்டுத் தமிழரும் ஒரே தேசிய இனமாக தற்சமயம் ஏற்றுகொள்வோமாயின், சிங்களவரின் கூற்றும் செயலும் சரியென்றே ஏற்றுக் கொள்ள வேண்டும்…. !!!

      • “ஒரு வேளை ஈழத்தமிழரும், தமிழ்நாட்டுத் தமிழரும் ஒரே தேசிய இனமாக தற்சமயம் ஏற்றுகொள்வோமாயின், சிங்களவரின் கூற்றும் செயலும் சரியென்றே ஏற்றுக் கொள்ள வேண்டும்”
        இதை எந்த அடிப்படையில் சொல்லுகிறீர்கள்?

        .
        சிங்களவர் எல்லாரும் தமிழரின் எதிரிகளல்ல. அவர்களைப் பேரினவாத நிலைப்பாட்டுக்குள் தள்ளியதில் தமிழ்த் தேசியவாதத்துக்கும் பங்குண்டு.
        “மலையகத் தமிழர் தனித் தேசிய இனமாகக் கருதப்படவில்லை” என்கிறீர்கள். யாரால்? மலையகத் தமிழர் தெளிவாகவே உள்ளனர். இப்போது தமிழ்த் தேசியவதிகளும் நடைமுறையில் ஏற்கிறர்கள்.

        பிரச்சனை அவர்களின் தனித்துவமல்ல. அவர்களை இலங்கை அரசு ஒரு தேசிய இனமாக ஏற்பது பற்றியதே!

      • ஈழதமிழர்களின் போராட்டம் அடிப்படை உரிமையில் சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் காட்டப்படும் பேதம் என்பதை, இலங்கையில் வசிக்கும் ஒரு இந்திய தமிழ் தோழி சொல்ல 2001 கேட்டுள்ளேன். இது ஈழதமிழர் போரட்டம் பற்றி பேசுபவருக்கு முக்கிய குறிப்பாக இருக்கும் என நம்புகிறேன்.

  18. இதெல்லாம் நல்லாதான் இங்கு, இப்ப பேசறீக. நானும் உடன் படுகிறேன். சரி.

    ஆனால் நீங்க தெய்வமா வழிபடுகிற மாவோயிஸ்டுகள் அதிகாரத்தை கைபற்றி, மொத்த இந்தியாவையும் தங்கள் முறையில் ‘பாட்டளி வரக் சர்வாதிகாரத்தை’ நிலை நாட்ட முயல்கிறார்கள் என்று வைத்து கொண்டால், (ஒரு கற்பனைதான்), அப்ப இந்தியை இந்தியா முழுவதும் திணித்து, இந்த இதர ‘தேசிய இனங்களை’ முன்பு அண்ணன் ஸ்டாலின் சோவியத் குடியரசுகளை நசுக்கியது போல், நசுக்க தலைபட மாட்டார்கள் என்பதற்க்கு என்ன கியாரண்டி ?

    One of the devices Stalin used to “protect” Belorussia (and the rest of the Soviet Union) against possible Western influences was a program of intensive Russification, thus creating a cordon sanitaire for Russia along the Polish border. Consequently, most key positions in Minsk, as well as in the western provincial cities of Hrodna (Grodno, in Russian) and Brest, were filled by Russians sent from elsewhere in the Soviet Union. The Belorussian language was unofficially banned from official use, educational and cultural institutions, and the mass media, and Belorussian national culture was suppressed by Moscow. This so-called cultural cleansing intensified greatly after 1959, when Nikita S. Khrushchev, the CPSU leader at the time, pronounced in Minsk, “The sooner we all start speaking Russian, the faster we shall build communism.” The resistance of some students, writers, and intellectuals in Minsk during the 1960s and 1970s was met with harassment by the Committee for State Security and firing from jobs rather than arrests. Among the best-known dissidents were the writer Vasil’ Bykaw, the historian Mykola Prashkovich, and the worker Mikhal Kukabaka, who spent seventeen years in confinement.

    உடனே இவை எல்லாம் முதலாளித்துவ கட்டுகதைகள் என்று பேசுவீக என்று தெரியும். இது வாசகர்களுக்காக தான்.

    • //இதெல்லாம் நல்லாதான் இங்கு, இப்ப பேசறீக. நானும் உடன் படுகிறேன். சரி.//

      கன்ட்ரோல் பண்ண முடியல இல்ல? :):)
      இந்த முறை லிங்க் எதுவும் இல்லையா?

  19. எதிர்காலத்தில் இத்தகைய இனங்கள் கலந்து மனித இனம் ஒன்றே எனும் நிலை வருவதே தேவையானது, சாத்தியமானது, அறிவியல் பூர்வமானது, எதிர்காலத்தைக் கொண்டிருப்பது என்கிறோம்//

    இது சிங்களருக்கும் தமிழருக்கும் பொருந்துமா?..

    தாய்லாந்து வந்த சீக்கியர்கள் தங்கள் கலாச்சாரத்தை பின்பற்றினாலும் , தாய் மக்கள் போலவே வாழ்கின்றனர் பல விதத்தில்.. மணமுடிக்கின்றனர்.. அரசு பதவி உண்டு..

    இது சிங்களத்திலும் நடக்குதா.? நடக்குமா?.

    • இலங்கையில் புத்த பிட்சு ஆட்சி முடிவுக்கு வரும் போது நீங்கள்நினைப்பது அனைத்தும் நிறைவேறும். தமிழர்கள் அனைவரும் பெளத்தர்கள் அல்லாதவராக இருப்பதே இதற்க்கு முக்கிய காரணம்.

  20. வினவுக்கு என் கேள்வி :

    கடந்த 100 ஆண்டு கால உலக வரலாற்றில், செம்புரட்சி நடந்து, பின் சோசியலிச அமைப்பை நிறுவிய நாடுகள் அனைத்திலும், போக போக ‘திரிபுவாதிகள்’ தோன்றி, சீரழித்தனர். நூத்துக்கு நூறு சதம், விதிவிலக்கில்லாமல் அனைத்து நாடுகளிலும் இதே கதை. சரி, இந்தியாவில் நீங்களும், உங்க பங்காளிகளான நக்ஸல்பாரிகளும் வென்று, செம்புரட்சி அரசை நிறுவினால், பிறகு ஒரு 40 ஆண்டுகள் கழித்து, அதே போல் சீரழியாது என்று எந்த அடிப்படையில் நம்புகிறீர்கள். உங்க அரசும் போகப் போக ஒரு ‘சமூக ஏகாதிபத்தியமாக’ உருமாறாது என்று என்ன நிச்சியம் ? இதுக்கு பதில் சொல்ல முடியுமா ?

    • Dear Mr.K.R.A,
      You have raised so many doubts and always seems to roam with a list of questionnaire to Vinavu. I appreciate your active participation. First of all there is no warranty or guarantee given by Vinavu & co about the the product called “communist revolution” . In my opinion Vinavu is not an authority for the Indian Revolution and i feel, it never acted like that. In my understanding this blog or website whatever may be it is called is a platform for the social conscious people to share the present crisis people face and how to over come that . so my humble request is stop asking irritating and kindergarten questions like what will if this or that happen after 40 years ?

      Today we witness the barbarians are attacking Iraq,Af-Pak,Libya and the list of countries continues. POSCO has been granted permission,health care,education,all gone to neo sultans. Food is being contaminated with pesticides and fertilizers.We import more and export less .Interest rates are high among the world countries which makes business a shit and eventually makes us less competitive in the world market… when the WHOLE WORLD IS TALKING ABOUT THE CRISIS THE HUMANITY FACES , YOU ARE MORE IMMERSED IN A NEVERLAND. UR COMMENTS ARE A DIVERSION .I AM NOT SURE WHETHER IT IS A PLANNED DIVERSION OR A NATURAL DIVERSION. BUT IT IS A CLEAR CASE OF DIVERSION FROM THE MAIN LINE . U R NOT TRYING TO BE HONEST IN UR COMMENTS. U R LOOKING FOR AN ATTRACTION AND THIS IS NOT THE PLACE TO DO SO.

      WRITE A 1000(ONE THOUSAND PAGES ) BOOK ABOUT THE “D A N G E R S” OF COMMUNISM AND THE GOODNESS OF “CAPITALISM” AND ITS OVERALL BENEFITS TO THE MANKIND. WRITE ABOUT THE “ATROCITIES” COMMITTED BY STALIN AND CO AND WHO KNOWS U MAY BE NOMINATED TO NOBEL PRIZE . (U WILL BE JOINING THE CLUB WITH THE PROUD MEMBERS LIKE HUMAN BUTCHER OBAMA) SO PLEASE LEAVE VINAVU AND BE A SELF MADE STAR OF ATTRACTION SOMEWHERE ELSE. REGARDS .S.RAMESH

      • Ramesh,

        I asked Vinavu a very basic question to be answered in their new column “Ques & ans” ; and this question is very relevant and pertinent here because, for all the problems and violations within the existing set up of ‘capitalism in India’, Vinavu and their associates only solution is communism to be ushered in thru a violent red revolution across of whole of India. Only no one is sure of when it will occur, but they are very sure this is will certainly be possible one day in the distant future. As i consider their ‘solution’ or ‘cure’ to the problem worse than than the disease, my question here.

        and thanks for your unsolicited advice to me about writing books. In fact i am already planning to do so.

        ////SO PLEASE LEAVE VINAVU AND BE A SELF MADE STAR OF ATTRACTION SOMEWHERE ELSE./// Who the hell are you to tell me this ? you sound like a typical fascist ; intolerant, arrogant and narrow minded, who is incapable of answering or arguing to the point with any of my posts / comments ? and i perceive that the board of directors of Vinavu would like me to continue here commenting continuously so that it may serve as a good academic exercise to the thozharhal here !! only i am not in my former form to play this game any more !!

        //TALKING ABOUT THE CRISIS THE HUMANITY FACES , YOU ARE MORE IMMERSED IN A NEVERLAND. UR COMMENTS ARE A DIVERSION .I AM NOT SURE WHETHER IT IS A PLANNED DIVERSION OR A NATURAL DIVERSION. BUT IT IS A CLEAR CASE OF DIVERSION FROM THE MAIN LINE . U R NOT TRYING TO BE HONEST IN UR COMMENTS. U R LOOKING FOR AN ATTRACTION AND THIS IS NOT THE PLACE TO DO SO.///

        this is your personal opinion and i consider it be irrational and very wrong. என்ன பெரிய டைவர்சன். இங்க என்னமோ மிக சிறந்த, அறிவார்ந்த, informed debates நடக்கிறமாதி பில்டப் !!! :)))

        • Athiyaman,
          First of all I have to say sorry that my comments made you anger . nothing personal.ok let us leave this . if had a chance i will try to debate with u politically based on facts. may be i am the person who may leave vinavu shortly.

      • //Interest rates are high among the world countries which makes business a shit and eventually makes us less competitive in the world market///

        இத பத்தி பேசலாமா ? ரண்டு மணி நேரம் இடைவிடாமல் பேச முடியும். இந்த பொருளாதார மந்தம் ஏன் உருவானது, அதற்க்கு தீர்வுகள் என்ன, இப்ப என்ன நடக்கிறது, ஏன் இவை மீண்டும் உருவாக வாய்ப்பு அதிகம் (காரணம் மார்க்ஸ் சொன்ன காரணிகள் அல்ல, but due to chronic deficit financing which created these business cycles…)

        எனது ஆங்கில பிளாக்கில் இதை பற்றி மிக விரிவாக பல பதிவுகள் எழுதியுள்ளேன்.

      • Dear Ramesh,

        Neither communism nor capitalism/democracy is good for people.

        You wrote, “Interest rates are high among the world countries which makes business a shit and eventually makes us less competitive in the world market”

        Have you heard the word LIBOR or interest rate in USA? Don’t write lies. If you do not know, skip commenting on those issues.

        K.R.A is wrong that he puts about communism becoming dictatorship in the future tense. The truth is it is what actually happened in all the so called communist/socialist countries. Socialism/communism is a dictatorship of oligarchs very much similar to the political structure in the so called democratic countries. You may have to read Sheldon Wolmin’s “democracy incorporated”. He has covered from Socialist Soviet, Chinese, British, Nazis and American invincible oligarch system that prevail in all the above political system. So democracy (I call it “demonstrated money crazy”, or “demon crazy”,) and other crazy isms are all bye the people, off the people, and far from the people. I heard a new political system invented by a Harvard University professor (a Tamil guy) during a flight from Chennai to Boston. That is really amazing.

        • Dear Priya,
          I hope you would have read my statement that “let us leave this issue”. I am not that much capable or intellectual to write in this blogs and counter the well experienced persons.
          before signing out i just want to make a clarification that i wrote the interest rates are high among the world because of my personal experience . A machinery to produce the automobile components cost aprrox Rs 1 crore @ the interest rate of some were around 13 to 15 % from govt banks . In Japan the cost is almost 40% cheaper in the capital amount and the interest rates are ranging from 4% to 8%.
          bye for ever.i do not want to discuss any more in Vinavu. but i will be reading the main articles except i will avoid entering in to the comments section.

          • Dear RV,

            I respect your understanding. Vinavu is not up to my standard to write either. I have created my own websites (not blogs), schools, college, Research institutes to uplift poor people in Tamilnadu and thus getting involved in social development works a lot. We have a strong highly educated intelligent dedicated youth network that is preparing itself to liberate themselves from the evil clutches of politicians, governments and oligarchs.

            Interest rate is so high in India, not in USA and Europe. A home buying loan will be anywhere 3-7% in USA. For small businesses interest free loans, free grant money are also there in USA. If you are interested in joining that intellectual network send me a mail to priyax1990@yahoo.com.

            In India not only the interest rates are very high but also cost of procuring a loan is so high. People like valuer, legal opinion provider and project preparer all demand huge fee. I was luck that a high profile auditor after knowing who I am, prepared a project proposal for free and said, “I would be fortunate to even talk you”. But I also met others who demanded money no matter who I am or that my entire earnings and wealth all I donated for bringing Tamilnadu people up.

            Your writing implied that the interest rate is higher in abroad. That was wrong. Interest rates are higher only in third world country. This interest rate and also enormous over pricing of land are the two evil that is going to hit India and rob all the poor people so badly. I argued with and advises so many IAS officers of both TN and Delhi on this. Also talked with Dr, Kalam a few times. But nothing changed in India.

            Sorry if had hurt your feelings.

  21. செம்புரட்சி செம்புரட்சி செம்புரட்சி. தோழர்களை விடவும் கே.ஆர்.ஏ. தான் அதிகமாகச் செம்புரட்சியைப் பயன்படுத்துகிறார். அதனால் தோழர்கள் இனி செம்புரட்சி என்ற சொல்லடலைத் தவிர்த்து கரும்புரட்சி என்று பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில் கே.ஆர்.ஏ. என்ன செய்வாரோ ஏது செய்வாரோ தெரியாது? வெயில் வேறு கடுமையாக இருக்கிறதாம்.

  22. கேள்வி பதில் என்று ஒரு பிரிவு இப்ப வினவு துவங்கியிருக்காக. அதற்கான கேள்வி தான் இது. வினவு குழு தீவிரமாக ‘உழைப்பதே’ இந்தியாவில் செம்புரட்சி கொண்டு வரத்தானே ? அது தான் அடிப்படை நோக்கம் ? அதை பற்றி கேள்வி கேட்க விட மாட்டேன்னா எப்படி ?

  23. \\அதே போன்று நாமக்கல் முட்டை, கோழியை மலையாளிகளுக்கு விற்க கூடாது, கம்பத்தின் காய்கனிகளை கேரளாவுக்கு கொண்டு செல்லக்கூடாது, ஈரோட்டின் மஞ்சள் தமிழக எல்லையைத் தாண்ட முடியாது, திருப்பூரின் உள்ளாடைகள் மற்ற மாநிலங்களுக்கு விற்க கூடாது என்று தூய தமிழினவாதிகள் பிரச்சாரம் செய்தால் மக்களே நையப் புடைப்பார்கள்.\\ இதெல்லாம் வேண்டாம், கேரளாக்காரன் லாரி லாரியாக கோழி மயிர், பிஞ்சு போன செருப்புக் குப்பைகள், பிளாஸ்டிக் குப்பைகள் இவற்றைக் கொண்டுவந்து கோயம்புத்தூர் அருகே தமிழக எல்லையில் கொட்டக் கூடாது. கோழியை அதன் இரகொடுதான் விற்றோம் இல்லையென்று சொல்லவில்லை, ஆனால் அதை சமித்து சாப்பிட்ட பின்னர் அதன் கோப்பையை தமிழகத்துக்கே அனுப்புவோம் என்பது சரியா? இதை யார் செய்வது? அங்கே செக் போஸ்டில் இருக்கும் தமிழக அதிகாரிகள் பணத்திற்கு சோரம் போகிறவர்களாக இருக்கிறார்கள். தனது மாநிலம் சுத்தமாக இருக்க வேண்டுமென்று நினைக்கும் கேரள தலைமைக்கு இருக்கும் மாநிலப் பற்று தமிழகத்தில் உள்ளவர்களுக்கு என் இல்லை? இதற்க்கு பதில் என்ன?

  24. I am with jayadev!. come to kovai border (valayar) or pollachi and see it all by urself. they tell us that TN is a dumpyard and do these things every day. do you have any idea how much vegetables and milk from TN is taken to kerala? how many people are depended on this business in palghat etc? for hospitals, colleges, shopping and almost every amenity people from kerala have to come to kovai but what do we get in return from them ? poultry waste, rubber waste, plastic waste etc. i am writing this because i witnessed it myself.

  25. @vinavu answer this. How many such naikars and other telegu people will get their children married to a tamil family. if they do so, i will accept them as tamilans. this alleged attack on karthikeyan is a total fake. do you really belive it. (i agree if it happened, it has to be condemned). telugu origin people are the worst paarpans (in my opinion because they are the real dominating race here in kovai). though kongu people speak their own way, it is becoz they cannot speak like any others, they cant pronounce ‘zha’, ‘sha’, ‘ha’. will a naidu speak in tamil if he meets a naidu? never. never once in my life i have seen this happening. i have been told by friends from AP that these telugu origin ppl here ruin the beauty of the language and they are not at all understandable. ask them to either speak in proper telugu or to use tamil, but not a crappy language.

    • சென்னையில் ஆந்திர மகிளா சபா என்று ஒன்று உள்ளது. அதன் ஒரு ஆண்டு விழாவுக்கு ஆந்திர முதல்வரும் அவரின் சில அமைச்சர்களும் வருகை புரிந்தார்கள். அம்மாநாட்டில் தமிழக தெலுங்கைத தாய்மொழியாகக்கொண்டோர் அமைப்பின் தலைவரும் அழைக்கப்பட்டிருந்தார். அவர் பேசுவதைக் கேட்டு ஆந்திர முதல்வர் விழுந்துவிழுந்து சிரித்தார் என்று தினமணி எழுதியது. மற்றவர்கள் மரியாதை கருதி அமைதி காத்தார்கள்.

    • @sathis kongu region people will be able to pronounce ‘zha’ bcos its tamil letter but not ‘sha’ or ‘ha’ where its originated from sanskrit.these two words are not only tough to pronounce by kongu region people but also other regions as well. whenever a tamilian pronunce ‘hosur’ he pronunce ‘osur’ only also ‘mahesh’we pronounce makesh only. this becomes a comedy for non tamilians particularly bu kannadigas and telugus. i have always clarified them that we dont have those letters actually and it was inducted by aryans and if we mix more sanskrit letters then tamil become more rough. this happening to kannada also.This is a hot topic in kannada blogs now a days.my fellow colleaque a kannadiga and a brahmin agreed that if we use sa instead of sha the language becomes more sweet and soft.still backward,dalit people of kannada society not able to pronounce those rough sanskrit words properly he added.

  26. பாட்டாளி வர்க்கத்திற்கு இனபேதவுணர்வு இல்லாமைக்குக் காரணம் ஏதோ அவர்களுக்கு இயல்பிலேயே அப்படிப்பட்ட குணம் இருக்கிறது என்று சொல்லமுடியாது. வந்தேறிகள் என்று சொல்லப்படுவோர் பலவகை பொருளாதாரத் தட்டுக்களில் வாழ்கின்றார்கள். சென்னையில், பாட்டாளி மக்களும், சினிமா நடிகை நடிகைகளும் தொழிலதிபர்களும் என்று தனித்தனியாக. இதில் பாட்டாளிமக்கள் மட்டும் சேரிகளில் வாழ்கிறார்கள்.

    இவர்கள் வாழ்க்கையும் அங்கு வாழும் தமிழ்ர்கள் வாழ்க்கையும் ஒன்றாக் இருப்பதனாலேயே இவர்களிடையே இனபேத வழிவரும் பொறாமை, புகைச்சல் போன்றவை இரா. எனினும் அங்கும் பலவேளைகளில் தெருச்சண்டை வரும்போது ‘இனபேதங்களும்’ சுட்டிக்காட்டப்படும். ஆனால் அது நிரந்தரப்பகையை உருவாக்காது. பகலில் ஆட்டம், இரவில் கூட்டம் என்பதுதான் சேரி வாழ்க்கை என்பதால் எதுவும் நிரந்தரமல்ல.

    எனின்

  27. I agree with Satish somewhat.

    I can speak from my experience.

    I have a friend. His parents came to live in Chennai 50 years ago. His bro is employed as PG teacher in TN government. His father worked for bank. They never felt belonged to TN people. There s always some superior attitude. The sense of alienation they feel with the locals s more or less akin to Tamil paarpanars as Satish has pointed out except in the matter of language.

    There was a backlash against Tamil paarppnars because of this which has made a very interesting in modern history of Tamilnadu i.e just b4 and after indepen. But there cant be any such backlash against Telugu speakers because they have powerful politicians scattered across all parties, major and minor.

    When there s a talk about language or culture, my friend speaks only from the plane of being a Telugu man, his mother tongue and his culture. In their house, only Telugu channels will be on whenever I enter.

    I need to add one more: God. Only Tirupathi, do u know y?

    The Lord is their cultural icon. Never Murugan.

    Tirupathi Balaji is a Telugu speakers’ God.

    Telugu speaking Vijaykanth’s favorite as he stands for a symbol of what I am writing here. One of his points in his party election manifesto is ‘Let there be Hindu teaching in TN if we come to power!’ Not in what way we can promote Tamil language. If possible, he will find ways to promote Telugu. But that s impossible.

    Among the TN population, we don’t find this ‘we are different or superior to u’ with any other people, except Tamil paarppnars (except in language) Only with these people who have Telugu as mother tongue.

    அவர்கள் உறவினர்கள் வீட்டிற்கு ஆந்திர செல்வதனால், நான் கேட்டேன்

    ” அந்த ஊரில் தமிழர்கள் உண்டா ?”

    சிறிது நேரம் கழித்து:

    ‘ஆம். ரயில்வே ஸ்டேசன் பக்கத்தில ஒரு டீக்கடை, கருப்பா பெரிய மீசையோடு ஒருவன்’

    நான் சிரிக்கவேண்டியதாயிற்று. மகாராட்டிராவைத்தாண்டி சிருப்புர் காகஸ் நகர் வரும் ஆந்திர எல்லையில் அதிலிருந்து கருப்பு உருவங்கள்தான். ஆனால் இவன் தமிழர்களை நிறவழியாக எள்ளுகிறான்.

    இது ஒரு உதாரணம். தெலுங்கு பேசும் மக்கள் தங்களை தமிழர்களை விட உயர்வானவர்கள் என மனப்பாங்கு உடையவர்கள் என்பது வாழ்க்கையில் காணக்கிடைக்கும் ஒரு அசிங்கம். வாழ்க்கையப்பார்த்து விட்டுத்தான் இதற்குப்பதில் சொல்லமுடியும்.

    இங்கே சொன்னது போல இவர்கள் தமிழைக்கற்றுக்கொள்ளுவதில்லை. விரும்புவதுமில்லை.

    அப்படியே செய்யினும் அதிலும் இளக்காரம் உண்டு. சென்னைத்தமிழ் என்று ஒன்று பிறந்து தமிழ்மக்கள் மொழிப்பண்ப்பாட்டைச்சீரழித்த ‘பெருமை’ சென்னையில் வந்தேறிய‌ இத்தெலுங்கு பேசுவோருக்கே உண்டு.

    தன் தாய்மொழியையும் சரியாகப்பேசத்தெரியவில்லை. தமிழையும் சரியாகப்பேசத்தெரியவில்லை.

    என்ன மக்கள் இவர்கள் ?

    • பக்தவத்சலு
      ஆதிகேசவலு
      கேசவலு

      இவைகளெல்லாம் நாயுடுக்களின் ;பெயர்கள்.

      ஏன்

      பக்தவத்சலம்
      ஆதிகேசவன்
      கேசவன்

      என்றால் பெருமாள் விரட்டி விடுவாரா ?

      இவர்கள் பெரியாரோடு சேர்ந்து தோள் தட்டியவர்கள். காரணம் இவர்களுக்கும் தமிழ் பார்ப்ப்னர்களுக்கும் ஒத்து வராதாம்.

      • Not just that amalan, if you see consider a few areas here in CBE, they are fully occupied by these intruders and they are so possesive about their caste and never let

        others caste people to stay in their locality. BTW, they hail lord balaji to compete with brahmins and to show others that they are also a superior caste. and they never

        respect an indegenious caste (no matter kounder or dalit or any other). they control the business and industries here and they name every road and street after their

        ancestors (who were scoundrels disguised as great industrialists, for example GD naidu). even now they claim that the region became wealthy because of their

        ancestors and they never allow any other caste people to sprout up!. whats more funny is nowadays these rich brats portray themselves as social workers and care

        takers. i studied in a govt aided school managed by them and believe it, 100% of teachers and office staff belonged to their caste. How is that possible in a govt aided

        school?. If an incident like karthikeyan said had happened in daylight, would you think these people would let us walk away? no. if they claim as tamilians, why havent

        they condemned lanka issue? . they are tamilians only when it comes to getting jobs and buying lands. stop supporting them and look at our own people! there is no one

        in the world who could match the culture, humanity, and ability of tamils.

    • ஜோ
      சென்னைத்தமிழ் என்று ஒன்று பிறந்து தமிழ்மக்கள் மொழிப்பண்ப்பாட்டைச்சீரழித்த ‘பெருமை’ சென்னையில் வந்தேறிய‌ இத்தெலுங்கு பேசுவோருக்கே உண்டு.//
      நூறு விகிதம் உண்மை.பேஜார், கலீஜு,இஸ்துகுனு போன்ற வார்த்தைகளை தமிழுக்கு அருளியவர்கள் அல்லவா?

      உங்களது கருத்தில் சிறு திருத்தம். திருப்பதி பாலாஜி தெலுங்கர்களின் கடவுள் என்று எந்த பத்திரமும் இல்லை. பெருமாளைப் புகழ்ந்து பாடும் பல பாசுரங்களை தமிழில் இருந்து தெலுங்கில் மொழி மாற்றம் செய்து பாடுகிறார்கள். எனது உறவினர் ஒருவர் விஜயவாடாவில் பணி நிமித்தம் தங்கி இருந்த போது அவரிடம் அந்த தெலுங்கு மொழி மாற்றத்தை காட்டி இதை எப்படி வாசிப்பது என்று கேட்டார்களாம். மந்திரம் மட்டுமே சமற்கிருதத்தில் உள்ளது மற்றவை எல்லாம் தமிழ் தான். கன்னடத்தில் கூட அவ்வாறே. இறைவனைத் துதிக்கும் துதிப் பாடல்கள் அனைத்தும் தமிழில் தான் அதையும் மொழி மாற்றம் செய்து வாசிக்கிறார்கள் அதாவது தமிழ் தெரிந்தவர்கள் தமிழ் நூலையும் கன்னடம் மட்டும் தெரிந்தவர்கள் அதன் மொழி மாற்ற நூலையும் வைத்துக் கொண்டு ஒன்றாக அமர்ந்து ஒரே நேரத்தில் வாசிக்கிறார்கள். இதை பெங்களுருவில் ஒரு கோவிலில் நண்பரை சந்திக்க அங்கே சென்ற போது நேரடியாகவே கண்டேன்.

      • திரு எழில் அவர்களே சென்னைக்கு வந்தேரியது தெலுங்கர்கள் அல்ல தமிழர்களே. நீங்கள் சென்னையின் வரலாற்றை புரட்டி பாருங்கள். உங்களுக்கு புரியும்.

    • திரு அமலன் அவர்களே இங்கு குறிப்பிட்டிருப்பது 500 வருடங்களுக்கு முன்பு குடியேறிய தெலுங்கு மக்களை பற்றி. தற்காலத்தில் குடியேறியவர்களை பற்றி அல்ல. நானும் அவர்களில் ஒருவனே. நாங்கள் கண்டிப்பாக ஆந்திரா மக்களின் பக்கம் நிற்க மாட்டோம் என் என்றால் அவர்கள் எங்களை தெலுங்கர்களாக ஏற்று கொள்ள மாட்டார்கள். நாங்களும் அந்த கலாச்சாரத்தோடு ஒன்றி வாழ முடியாது. மற்றபடி ஆந்திரா மக்களுக்கு தமிழர்கள் என்றாலே ஒரு தாழ்வான எண்ணம் இருப்பது உண்மையே. இது என் சொந்த அனுபவத்தின் வெளிப்பாடே ஆகும். நாங்கள் பேசும் தெலுங்கு என்பது இன்றைக்கும் கிராமங்களில் பேசப்படும் சமஸ்க்ரிதம் கலப்பில்லாத தெலுங்கு என்றே மிகவும் ஆணித்தரமாக நம்புகிறேன். மேம்போக்காக இதை குறித்து விவாதிப்பது மிகவும் ஆபத்தானது. இதை பற்றிய ஆய்வுகள் எதாவது இருந்தால் தயவு செய்து எனக்கு தெரியப்படுத்தவும். நீங்களும் தெரிந்து கொள்ளவும். தயவு எந்த மொழி சார்ந்த இயக்கங்களால் மேட்க்கொள்ளப்பட ஆய்வை நம்ப வேண்டாம்.

      • திரு விஜய் கிருஷ்ணா அப்புறம் ஏன் சென்னையை விட்டு ஓடினீர்கள்? போராடி சென்னையை மீட்டிருக்கலாமே. எங்களுக்கும் தெலுங்கர்கள் மீது தாழ்வான எண்ணம் தான் இருக்கிறது.இதுவும் எனது சொந்த அனுபவம் தான். தகவல் தொழில் நுட்பத்துறையில் ஆந்த்ரகாரன் என்றால் ஒரு முறைக்கு இரு முறை சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என கருதுகிறார்கள் அந்த அளவு போலி அனுபவங்களையும் சான்றிதழ்களையும் பயன்படுத்துபவர்கள்.ஆந்த்ராகாரன் என்றாலே அவன் ஒரு பிராட் என்ற எண்ணத்தை விதைத்துள்ளார்கள்.மிக மோசமான சுயநலவாதிகள் தங்களது சாதி மொழிக்கரர்களுக்கே தங்களது நிறுவனங்களில் முன்னுரிமை கொடுப்பவர்கள் என்ற எண்ணம் தமிழர்கள் மத்தியில் இருக்கிறது.கோவையில் ஒருவர் அரசியலில் இருந்தார் மேயர் தேர்தலில் நிற்கும்வரை கோபாலகிருஷ்ணன் ஆகா இருந்தார் தேர்தலில் நிற்கும் போது திடீரென கோபாலக்ருஷ்ண நாய்டு என வால் முளைத்தது.இதைப் பார்த்து மற்றவர்களுக்கும் சாதி உணர்வு கிளர்ந்தெழ இன்று அவர்கள் அரசியலில் இருந்தே அப்புறப் படுத்தப் பட்டிருக்கிறார்கள்.வைகோ கட்சி ஆரம்பித்த போது தனது சாதிக்காரர் என்ற அடிப்படையிலேயே அவரை ஆதரித்தார்கள் ஆனால் தமிழர்கள் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நல்ல தலைவர் என்று ஆதரித்தார்கள் இன்றும் கோவையில் ஆதரிக்கிறார்கள்.
        சமற்கிருதம் கலப்பில்லாத தெலுங்கு என்ற ஒன்று இருக்கிறதா? தெலுங்கு என்பதே சமற்கிருதத்தில் இருந்து தோன்றியது என்று தான் எமது தெலுங்கு நண்பர் சொன்னார் அவரின் அறியாமையை கண்டு அழுவதா சிரிப்பதா? அப்படி ஒன்று இருந்தால் அது தமிழாகத்தான் இருக்க முடியும்

        • தெலுங்கு மட்டுமல்ல மலையாளம், கன்னடம் கூடவும் சமஸ்கிருதத்தில் இருந்து தான் தோன்றியதாம். அவர்கள் அப்படி தான் பள்ளியில் படிக்கிறார்களாம். மலையாளம் தமிழிலிருந்து தான் வந்தது என்று நானும், மலையாளத்தின் மூலம் சமஸ்கிருதம், மலையாளம் தமிழ் “கலப்பில்லாத” மொழி என்று எனது மலையாளி நண்பரும் சட்டைக் காலரை பிடிக்காத குறையாக விவாதித்திருக்கிறோம்!

          தமிழ் ஹிந்தி போன்ற பிற மொழி சினிமா, பாடல்களையும் ஒளிபரப்பும் அதே மலையாள தொலைகாட்சிகள் தான் “உலகக் கோப்பை வென்ற ஹிந்திய அணியில் மலையாளி ஸ்ரீசாந்த் இருந்தது மலையாளிகளாகிய நமக்கெல்லாம் பெருமை” என்று உச்சஸ்தாயில் கத்தின. இன உணர்வை அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டும்! இங்கு பிற மொழியனைத்தும் தமிழாக்கம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டாலும் அவர்கள் அளவிற்கு இன உணர்வு இல்லை என்பது தான் உண்மை.

          நேற்று முன்தினம் நடந்த IPL ஆட்டத்தில் பெங்களுரு வெற்றிபெற்றாலும் பரவாயில்லை சென்னை தோல்வியுற வேண்டும் என்பது தான் தெலுங்கு மற்றும் மலையாளி நண்பர்களின் எண்ணமாக இருந்தது. திராவிட உணர்வு என்பது தமிழர்களின் பலவீனம என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.

          ஹிந்திய பொது புத்தியில் பாகிஸ்தான் எப்படி எதிரியாக இருக்கிறதோ அதே போன்று தமிழ்நாட்டை சுற்றுயுள்ள கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநில மக்கள் மனதிலும் வடவர்களை விட தமிழர்களே முதல் எதிரியாக இருக்கிறார்கள் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

          இவையெல்லாம் வேலைக்காக வெளிநாட்டிற்கு வந்த பிறகு நாளும் தெரிந்து கொண்டிருக்கும் உண்மைகள்.

        • An idiot who came to chennai for job scolded us for making their ‘Nana’ to ‘Naina’ and felt that Tamil is a funny language and tamil script is like ‘Kozhi kirukkal’.. i couldn’t help but laugh at that BAEMALI. i told him to first solve telangana issue and then to talk about tamilans. Telungu without sanskrit is like kalaignar TV without Nameetha! . Can you list the name of 7 days in a week? . you fllow the sanskrit more than any other south indian languages.

        • திரு எழில் அவர்களே நீங்கள் குறிப்பிடுவது ஒரு செயலை சார்ந்த பார்வை. நீங்கள் சொல்வதுபோல் போலி சான்றிதழ்கள் கொடுத்து வேலை வாங்குவது என்பது அங்கே பரவலாக நிகழ்வது உண்மையே. தேர்தல் குறித்து பேசினால் உங்கள் கூற்று முற்றிலும் தவறானதாகவே இருக்கும். சாதி அடிப்படையில் ஒருவரை ஆதரிப்பது என்பது தெலுங்கர்கள் மட்டுமே செய்யும் காரியமா என்ன. தேவர், கவுண்டர், பறையர், நாடார் மற்றும் பல சாதிகள் தங்களை சார்ந்தவர்களை தேர்தலில் ஆதரிப்பதில்லையா. அல்லது இவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா. நான் நினைக்கிறன் உங்களுக்கு இன்னும் நிறைய தகவல்கள் தெரிய வேண்டி இருக்கிறது. சென்னையில் பெரும்பான்மையான மக்கள் தெலுங்கு பேசும் மக்கள் ஆகவே இருப்பார்கள். பிறர் எல்லோரும் மொழி வாரி மாநிலமாக பிரிக்கப்பட்டு சென்னை தமிழக தலைநகராக ஆன பின்பு வந்தேரியவர்கள். இதில் என் கருது ஒன்றும் இல்லை. கோவை மற்றும் தமிழகத்தில் பேசும் தெலுங்கு மொழியில் சமஸ்க்ரிதம் குறைந்த அளவே கலந்து இருக்கிறது என்பது என் கருத்து. நீங்கள் ஒன்றை உணர வேண்டும். ஈழத்தமிழரை பற்றி குரல் கொடுப்பதும் வைகோ என்ற தெலுங்கரே. அதனால் அவருக்கு தெலுங்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவு குறைந்து விட்டதா என்ன.தாங்கள் வாதம் செய்வது நன்றாக உள்ளது. ஆனால் சில நேரங்களில் மேம்போக்காக பேசுகிறீர்கள். நீங்கள் களத்தில் இருப்பதற்கு எனது வாழ்த்துக்கள்.

          • DEAR MR. VIJAI

            THERE IS A KIND OF CULTURAL REVIVAL AND REDISCOVERY AMONG TAMIL DALITS

            WHO LIKE TO CALL THEMSELVES AS DEVENDRAS NOT PALLAS WHO CLAIM THAT THEIR

            STATUS AS MOOVENDERS WAS DEGRADED TO WORKING CLASS. THEY CALL THE TELUGU

            COMMUNITIES AS ” VANDERIKAL”‘. BUT PERIYARS MOTHER TONGUE IS TELUGU AND ORGIN IS FROM KARNATAKA.ALSO THIER NEW THEORY SAYS EVEN TAMIL NADUS LEADERS SUCH AS KARUNANIDHI AND ANNA DURAI ALSO OF TELUGU ORGIN. I FEEL ALL WHO LIVE IN TAMIL COUNTRY ARE TAMILS ONLY

  28. அதே வேளையில் சௌராட்ர மக்களை எடுத்துக்கொள்ளுங்கள். 300 ஆண்டுகளுக்கு முன் கட்ச் பகுதியில் கடும்பஞ்சம் நிலவ பஞ்சம் பிழைக்க இவர்கள் வெளியேறி அதை சில குழுக்கள் தமிழகம் வந்து மதுரையில் நெசவுக்த்தொழில் செய்யத்தொடங்கினார்கள். மதுரை மினாட்சிஅம்மன் கோயிலைச்சுற்றித்தான்.

    இன்றும் அவர்கள் வீடுகளில் அவர்கள் மொழியைத்தான் பேசுவார்கள். இதைத்தவிற அவர்களுக்கும் பிற தமிழர்களுக்கு வேறுபாடு இல்லை.

    அவர்கள் தெய்வங்கள். வழிபாடு, கலாச்சாரம், பண்டிகைகள் போன்று – எல்லாவற்றிலுமே அவர்கள் தமிழர்கள். பெயர்கள் எதிலும் சவுராட்டிரம் கிடையாது. அவர்கள் விரும்பியிருந்தால் அவர்கள் பெண்களை ‘பாய்’ என்று அடையிட்டிருக்கலாம். ஆனால் இல்லை. அனைத்தும் தமிழ்ப்பெயர்கள்.

    என் நண்பர் என்னிடம் தன் இரண்டாம் மகளை கூட்டிவந்தார். பெயரென்ன ? என்றதற்கு உங்களுக்குப்பிடித்த பெயர்தான் என்றார். அதாவது ‘மதுரவல்லி’ . மதுரை மீனாட்சி அம்மன் கோயிலருகிலுருக்கும் பெரியாழ்வாரால் பாடப்பட்ட கூடலழகரின் துணவியாரின் திருபெயர்தான் அது.

    இன்னொரு நணபர் பூர்விகமே கோவைக்குப்பக்கதிலுள்ள சிற்றூர். ஆதி காலமுதல். அவர் குழந்தையின் பெயர், ரகோத்தம ராஜீ. இவர் ஒரு நாயுடு.

  29. The style of reply given by Vinavu is exactly like that expected from Jaya mohan.

    He chooses only such qns for which he has already written the answers with the objective of promoting his agenda. Perhaps he may b ghosting the qns too.

    Of course Vinavu has denied that there was any prearrangments.

    So, I am just wondering: What a coincidence! What a coincidence !! ஏடு கொண்டல வாடா !

    (அப்படின்னாத்தான் பெருமாள் காதிலே விழுமென்று என் நாயுடு ந்ணபர் சொல்கிறார்.)

  30. என்னால் நம்ப முடியல .,.,இருக்காது.,.,.,.,.,கன்டிப்பா.,.,என் தமிழ் மக்கல் .,.,இருக்காது.,.,.,அப்படி நடந்து இருக்காது .,.,.,.,அதுவும்

  31. தமிழில் இருந்துதானே மலையாளம்,தெலுங்கு, கன்னடம், துளு போன்ற மொழிகள் தோன்றின ..ஒருவகையில் அனைவருக்குமே தாய் மொழி தமிழ் தான்….

    இப்போதெல்லாம் நாங்கள் தெலுங்கில் பேசுவதை மிகவும் குறைத்து விட்டோம்..

    தமிழில் பேசி,படித்து,எழுதி வருகிறேன் ..

    கடைசி வரை தமிழன் என்ற அடையாலதிலிலேயே இருப்போமே ???

  32. I Un following “Vinavu” from Twitter: because the “Vinavu” writing and concentrating about religion, Caste and Diversity.!This will not be a good media role and i Ashamed to followed this

  33. மக்கள் கலை இலக்கிய கழகமே, மொழிச் சிறுபாண்மையினர் தொடர்பாக சரியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. வாழ்த்துகிறேன். நாம் தமிழர் இயக்க சீமான், தமிழர் களம் அரிமாவளவன், எழுத்தாளர் அரு. கோபாலன், ஆய்வாளர் குணா போன்றவர்கள் இயற்கைக்கு ஒவ்வாத இனத்தூய்மைவாத நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

    • தமிழர்கள் மட்டுமே உள்ள கர்நாடகாவில் உள்ள கத்தோலிக்க திருச்சபைகளில் பிரர்த்தனை மொழியாக கன்னடம் மட்டுமே பயண்படுத்த வேண்டும் என கன்னடச் சாலுவாலிகள் சதிராடிய போது மம்தாவின் புதிய மச்சான்களான மக்கள் கலை இலக்கிய கழக கண்மணிகள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் எது இயற்கைக்கு ஒவ்வாத இனத்தூய்மைவாத நிலைப்பாடு? யார் இயற்கைக்கு ஒவ்வாத இனத்தூய்மைவாத நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்?

  34. தமிழனுக்கு தாலிபான்கள் தேவைதான் 1991 காவிரி க்ல்வரத்தின் போது எங்கே போனது இந்த புத்திமதி புரட்சி கும்பள்

  35. சதீஸ் சொல்கிறார் – தமிழர்களை மணந்து கொள்ள முன்வரும் தெலுங்கர்களைத் தான் தமிழர்களாகக் கருதுவாராம்.
    நல்லது.
    அப்படியே பறையர்களைத் திருமணம் செய்ய முன்வரும் தேவர்களையும் பள்ளர்களைத் திருமணம் செய்ய முன்வரும் நாடார்களையும் சக்கிலியர்களை மணந்து கொள்ள முன்வரும் கவுண்டர்களையும் தான் மனிதர்களாக ஏற்றுக் கொள்வோம் என்றும் சேர்த்து சொல்லியிருக்கலாம். முதலில் மனிதனாக மாறிவிட்டு அப்புறம் தமிழனாக மாறுவதில் உங்களுக்கு எதாவது பிரச்சினை இருக்கிறதா சதீஸ்?
    முதலில் திருமணங்கள் சாதி அமைப்பு முறையில் தான் சிக்குண்டு கிடக்கிறது. அதில் தமிழ் தெலுங்கு பிரச்சினையில்லை. பத்தாண்டுகளுக்கு முன் நாங்கள் நண்பர்கள் சேர்ந்து கோவை கலிக்கநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் (தெலுங்கு) ஓநாபாளையத்தைச் சேர்ந்த பைய்யனுக்கும் (தமிழ்) காதல் திருமணம் முடித்து வைத்தோம். ஆயிரக்கணக்கான திருமணங்கள் அப்படி நடந்து கொண்டு தான் இருக்கிறது. பெண்ணின் வீட்டார் பைய்யன் கவுண்டன் என்று தெரிந்த பின் அடங்கித் தான் போனார்கள்….
    ஏன்… தெலுங்கர்கள் எனும் அடிப்படையில் நாயுடுக்கள் அருந்ததியினரோடு திருமண உறவு வைத்துக் கொள்கிறார்களா என்ன? உங்களோடு லூசுத் தனத்துக்கு ஒரு அளவே இல்லையா சதீசு?
    கோவையில் தெலுங்கு பேசும் மக்களின் ஆதிக்கம் நிலவுகிறது என்கிறார். இதை சக்தி சுகர்சின் வாசலில் நின்று சொன்னாரென்றால் மஹாலிங்கமே இறங்கி வந்து உதைத்திருப்பார். இன்றைக்கு தெலுங்கு பேசும் மக்கள் ஆதிக்கம் செய்வதை விட ஆயிரம் மடங்கு அதிகமாக கவுண்டர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். பெரியார் தி.க தயாரித்த இரட்டைக் குவளை முறை பின்பற்றப்படும் கிராமங்களின் பட்டியலில் இருக்கும் பெரும்பாலான கிராமங்கள் கவுண்டமார்களின் கிராமங்கள் தான்.
    நீங்கள் தமிழிணவாதம் பேசுபவர் தானே? தமிழர்களாக திருமணத்தில் இணைவோம் என்று கவுண்டச்சிகளை பறையர்களுக்குத் திருமணம் பேசி முடிக்க வரத் தயாரா?

    அடுத்து தெலுங்கர்கள் தமிழர்களை அரவாடு என்கிறார்களாம் – மலையாளிகள் தமிழர்களைப் பாண்டி என்கிறார்களாம்.
    ஏண்டா நீ அவனை கொல்டின்னு கூப்பிடலை? கஞ்சியான் என்று கூப்பிடலை? உனக்கொரு நியாயம் அவனுக்கொரு நியாயமா?
    பொதுவில் ஒரு கலாச்சார பின்னணி கொண்ட மக்கள் இன்னொரு கலாச்சார பின்னணி கொண்ட மக்களை வேடிக்கையாக இப்படிக் குறிப்பிடுவது ஒரு பிரச்சினையில்லை. அவர்கள் அவ்வாறு குறிப்பிடுவதோடு மட்டும் நின்று விடுகிறார்கள்… ஆனால், மலையாளப் பெண்கள் என்றாலே காம உணர்வு அதிகம் என்பது போலெல்லாம் தமிழ்த் திரைப்படங்களில் சித்தரிக்கிறார்களே நியாயமாகப் பார்த்தால் மலையாளிகள் இந்தத் தமிழ் திரையுலக நாய்களை செருப்பால் அடித்தால் கூட தப்பில்லை.
    நானும் வேலை காரணமாக சில வருடங்கள் ஆந்திராவில் தங்கியிருக்கிறேன். உண்மையில் தெலுங்கு பேசும் மக்கள் பழக்கத்தில் கொஞ்சம் கரடுமுரடானவர்கள் என்றாலும் பழகிவிட்டால் உயிரையே கொடுக்கக் கூடியவர்கள். அதிலும் ஆந்திரத்தின் கீழ்மட்ட உழைக்கும் மக்களின் அன்பை நீங்கள் நேரில் அனுபவித்துப் பார்த்தால் தான் புரியும். காக்கிநாடா அருகே ஒருமுறை இரவு வண்டி பழுதாகி நின்ற போது யாரென்றே தெரியாத என்னை ஒரு விவசாயக் கூலி வேலை செய்யும் குடும்பத்தினர் அழைத்து தங்களோடு தங்கவைத்தனர். எட்டுக்குப் பத்து அளவு கொண்ட அந்த அறையில் தான் அன்றைக்கு அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் கூட இருந்தனர். காலைல அந்த வயசான ஆள் ஒரு அஞ்சாறு பேரைக் கூப்பிட்டு தக்கிமுக்கி என்னோட பைக்கை மாட்டு வண்டில ஏத்தி ஆறு கிலோ மீட்டர் கொண்டாந்து மெக்கானிக் கடைல சேர்த்தார்.
    எளிமையான உழைக்கிற மக்கள் கிட்ட இந்த மொழிப்பெருமையெல்லாம் ஒரு மயிரளவுக்குக் கூட கிடையாது. அதுக்கு நேரமும் கிடையாது. நீ கஞ்சின்னு சொல்லி கேவலமா பேசற அதே மலையாளி கிட்ட தாண்யா உன்னோட சக தமிழன் கூலி வேலைக்குப் போய் கஞ்சி குடிக்கிறான். அந்த மக்களுக்கு தமிழன் எனும் உணர்வை விட உழைத்தால் தான் உணவு என்று எளிய உண்மை தான் பெரிசு. உன்னைப் போல தின்னுட்டு அல்லைல கொழுப்பெடுத்து அலையிற பயலுகளுக்குத் தான் நான் தமிழன் நான் தெலுங்கன்னு நான் மலையாளி வெட்டி வாதமெல்லாம் தேவை.

    தமிழ்நாட்டிலேர்ந்து எல்லா காய்கறியும் கேரளாவுக்கு கடத்திட்டுப் போறாய்ங்கன்னு ஒரு சூப்பர் லூசு அலந்து விட்டிருந்ததைப் பார்த்தேன். இத அப்படியே போய் கோயமுத்தூரைச் சுத்தி இருக்கிற விவசாயி யார் கிட்டயாவது சொல்லிப் பாரு அப்பத் தெரியும். பத்துக் கூடை தக்காளிய முன்னாடி வச்சி அத்தனையையும் நீயே தின்னு தீத்துட்டு காசை எண்ணைக் குடுத்துட்டுப் போடான்னு சொல்வார். தெம்பிருந்த முயற்சி செஞ்சு பாரு…

    • யோவ் முதல்ல நீ மரியாதையா பேச கத்துக்கோ. ஒரு சிலர் சொல்றத ஒட்டு மொத்த சமூகத்தோட மன நிலைனு சொல்லாத ஏன் நம்மள பாண்டி சொல்ற மலையாளத்தானும் கூடத்தான் கூலி வேலைக்கு வர்றான் அதையும் கொஞ்சம் சொல்லே அப்பறம் தமிழனுக்கே உலை வைக்கறான். அந்த மலையாளத் திரை உலக நாய்களை செருப்பால் அடித்தால் என்ன? நீ ஒரு தெலுங்கு வந்தேறி என்று தெளிவாகவே தெரிகிறது பழகி விட்டா மட்டும் உயிரக் கொடுக்கறது தான் மனிதநேயமா என்னய்யா முட்டாள் தனம் இது. இங்க வந்து பாரு மக்கள் பழகாமலே உதவி பண்ணுவாங்க கோவை பகுதில கிரமாங்களுக்குள்ள நீ போனதே இல்லையா ? அங்கே உன்னோட வண்டி பஞ்சர் ஆனா மக்கள் தங்க வைக்க மாட்டாங்களா? எனக்கு கூட நேரிடயா அந்த அனுபவம் இருக்கு இரவு இரண்டு மணிக்கு பஞ்சர் ஆகி ஒரு வீட்ல தங்கி இருந்துட்டு காலைல வந்தோம் அதுவோம் மூணு பேர் இருந்தோம் இதெல்லாம் ஒரு மனித நேயமா? வந்துட்டானுக கப்பித் தனமா பேசிக்கிட்டு

      • யாரு கோவைப் பகுதி கிராமங்களுக்குப் போனதில்லே?

        வாங்க சார் போகலாம்… வாங்க போகலாம். எந்த கிராமத்திலேர்ந்து ஆரம்பிக்கலாம்? சிறுவானி நல்லூர்பதியில் இருந்து ஆரம்பிக்கலாமா? தமிழர்களான இருளர்களை தமிழர்களான கவுண்டர்கள் சுரண்டுவதில் இருந்து ஆரம்பிக்கலாமா?

        யாருகிட்டே கதை விடறீங்க சாமி… அதே கோயமுத்தூர்ல வாழ்ந்தவன்கிற அனுபவத்தில சொல்றேன். மேற்கே எடுத்துக்கிட்டா இன்னைக்கும் நாதேகவுன்டன் புதூர், தொண்டாமுத்தூர், பூலுவப்பட்டி, போளுவம்பட்டி, மாதம்பட்டி என்று தமிழ் பேசும் கவுண்ட சாதி வெறியர்களோட கொட்டத்தை யாரும் சொல்லாமலே புரிந்து கொள்ளலாம். கிழக்கே எடுத்துக் கொண்டால் வெள்ளகோயில், திருப்பூர், காங்கேயம், பல்லடம், கருமத்தம்பட்டி, சோமனூர், மங்கலம் என்று இந்த சாதி வெறியர்களின் எல்லை கொங்கு பெல்ட் முழுக்க நீள்கிறது.

        வடமாவட்டங்களில் ஒரு திருமாவளவன் போல கோவை வட்டாரத்தில் பேர் சொல்லும் படிக்கு ஒரு தலித் இயக்கத் தலைவரைக் காட்டமுடியுமா? சர்வகட்சியிலும் செல்வாக்கு செலுத்துவது கவுண்டர்கள் தானே?

        நீ சொல்றதையே திரும்ப சொல்றேன். ஒருசிலர் சொல்றதை வைச்சிட்டு ஒட்டுமொத்த சமூகத்தை ஏன் நீ மதிப்பிடுறீங்க? இத்தன வீர ரோசம் பேசரவன், காவிரில தண்ணி குடுக்காத கன்னட தலைநகர் பெங்களூர்ல வேலை செய்ய மாட்டேன்னு எல்லாத்தையும் திருப்பி அழைக்க வேண்டியது தானே?

        ஆக, இவரு இங்கேர்ந்து பெங்களூரு போயி எல்லா வேலையையும் பிடிச்சி ஐந்திலக்க சம்பளம் வாங்கிக் கொண்டு வீட்டு வாடகைல இருந்து காய்கறி வரைக்கும் அத்தினி வெல வாசியையும் ஏத்தி விட்டுட்டு குளிர்காய்வாராம் அங்கெ கார்மென்ட்ஸ் பேக்ட்டரில வேலை பாக்கும் கன்னடத்தான் பாதிக்கப்படுவது பத்தி கவலையில்லையாம்.. எங்கைய்யா போச்சு உங்க தமிழுணர்வு??? தமிழனுக்கு மான ரோசம் அதிகம் அதனால கன்னட பூமில கால் வைக்க மாட்டோம்னு உங்க சீமான சொல்லச் சொல்லு. அத்தினி தமிழ்காரனையும் கன்னட தேசத்திலேர்ந்து திருப்பியழைப்போம்னு சொல்லச் சொல்லு… வந்துட்டாரு பேச..

        தாமிரபரணில தண்ணிய எடுத்து இங்கிலீசு பேசற வெள்ளக்காரனுக்கு மம்மானியமா வித்த போது வராத தமிழுணர்வு இங்க விவசாயிகள் தங்களோட விவசாய விளை பொருட்களை கேரளாவுக்கு வித்த போது பொங்கிட்டு வந்துச்சாம்… யாரு காதுல பூ சுத்தறீங்க?

        ராஜுலுன்னு பேரு வச்சானாம் அதனால தமிழர்கள் இல்லையாம்… அண்ணே… நீங்க மொதல்ல மேட்ரிமோனியல்ல வார ‘தமிழ்’ பேர்களைப் படிச்சிப் பாத்தியளா? பாதித் தமிழ்க்காரவுக வூட்ல ஜோஷிக்கா, பூஷனா, ஆஷிக்கான்னு பேரு வச்சிருக்கான். அப்ப அவிங்கெல்லாம் ஈரான் ஈராக்லேர்ந்து வந்தாங்களா? என்னய்யா லாஜிக் இது??? தமிழ்ல பேர் வைக்காதவனெல்லாம் தமிழனே இல்லைன்னு சொன்னா முக்காவாசி தமிழ்நாடே காலியாயிடும். பேசறதுக்கு மின்ன ஒரு வாட்டிக்கு பத்து வாட்டி நல்லா ரோசிச்சி பேசனும்.

        சரிங்களா சார்ர்ர்???

        • தமிழனை மலையாளத்தான் பாண்டின்னு சொல்றான். தெலுங்கன் அரவாடுன்னு சொல்றான்.. ஆனால் இவரு கஞ்சின்னு சொல்றதோ கொல்டின்னு சொல்றதோ பிரச்சினையில்லை.

          சரி போகட்டும்.

          வடநாட்டுக்குப் போனா மொத்தமா நாலு மாநிலத்தைச் சேர்ந்தவங்களையும் மதறாஸின்னு சொல்வான்.

          ஐரோப்பாவுக்கோ அமெரிக்காவுக்கோ போனா ப்ளடி இன்டியன்ஸ்னு சொல்வான்.

          செவ்வாய் கிரகத்துக்குப் போனா பீ பேள்ற மனுசப் பயலுகன்னு சொல்வான்.

          இதெல்லாம் ஒரு பிரச்சினையா இங்க???

          யாரு சொல்றா இதெல்லாம்? ஏற்கனவே சொன்னாப்ல, தின்னுட்டு அல்லை வீங்கி அலையறவனுக்குத தான் பாஷாபிமானமும் தேசாபிமானமும்.. மற்ற சாதாரண மக்கள்; உழைக்கும் மக்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. தாராவி சேரில தமிழனும் ஒன்னு தான் மலையாளியும் ஒன்னு தான் மராட்டியனும் ஒன்னு தான். உழைச்சா தான் அடுத்தவேளை சோறுன்னு வாழ்ற மக்களுக்கு நீ தமிழன் நீ மலையாளி என்றெல்லாம் நொண்ணாட்டியம் பேசிக் கொண்டிருக்க நேரமும் இல்லை – அது தேவையும் இல்லை.

          எழில், முதலில் உங்களோட தமிழ்வெறி என்கிற கண்ணாடியின் ஊடாக சமூகத்தைப் பார்த்துப் புரிந்து கொள்ளும் முயற்சியை விட்டீர்கள் என்றாலே உங்களின் பாதி பிரச்சினை தீர்ந்து விடும். உங்களை ஒருத்தன் பாண்டின்னு கூப்பிட்டால் முதலில் அவன் மலையாளிகளின் ஏகப் பிரதிநிதியல்லவென்று புரிந்து கொள்ள முயலுங்கள். உங்களைப் போன்றவர்களின் மொழி / இன வெறி தான் எளிய மக்களின் வாழ்க்கையை மேலும் மேலும் சிக்கலாக்குகிறது. இன்றைக்கு மக்களை நேரிடையாகத் தாக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு இந்த மொழி இன தேசப் பாகுபாடெல்லாம் கிடையாது. மக்களை நேரிடையாகத் தாக்கி வருத்தும் மக்களின் விரோதிகள் ஒரேயணியில் தேச இன மொழி வேறுபாடுகளையெல்லாம் கடந்து ஒன்றுபட்டு நிற்கும் போது நாம் மட்டும் ஏன் இப்படி பிரிந்து நின்று நமக்குள் இனத்தாலும் மொழியாலும் அடித்துக் கொள்ள வேண்டும்? அனில் அம்பானியும் கருணாநிதி குடும்பமும் தமிழன் வடநாட்டான் என்று பிரிந்து மோதிக் கொள்கிறார்களா என்ன? கோக்கோ கோலாவும் மஹாலிங்கமும் ஒன்று சேர்ந்து தானே இங்கேயிருந்த ஆயிரக்கணக்கான குளிபான சிறு தொழில்களை ஓய்த்தார்கள்? அவர்களுக்கும் என்ன மொழி பேதமா இருந்தது? இப்போது புதிதாய் உருவெடுத்து வரும் வட்டிக் கடையான முத்தூட்டின் விளம்பரம் தமிழர்களின் சேனல்களில் தானே ஒலிபரப்பாகிறது. அவர்களை இணைப்பது வர்க்கம் எனும் போது நாமும் ஏன் ஒரு வர்க்கமாய் இணைந்து அவர்களின் சுரண்டலை எதிர்க்கக் கூடாது?

          எனது விவாத மொழியில் வெளிப்பட்ட கடுமைக்காக வருந்துகிறேன். ஆனால், உங்களுக்குள் கெட்டிப்பட்டு இறுகிப் போயிருக்கும் இன/மொழி வெறியை கடுமையாக உலுக்க இது போன்ற மொழி தான் அவசியம் என்கிற அடிப்படையிலேயே அவ்வாறு பேச நேர்ந்தது.

          பொறுமையாக யோசித்துப் பார்த்து இவைகளைப் புரிந்து கொள்ள நீங்கள் முயற்சி செய்யுங்கள். அப்போது தான் இனவாதியாகவும், மொழிவெறியராகவும் உங்கள் வாழ்க்கையும் அதன் நோக்கமும் சீரழிந்து போவதைக் காட்டிலும் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு போராட எம்மோடு தோள் கொடுக்க முன்வருவீர்கள்

          வாழ்த்துக்கள.

          • அய்யா மயில்சாமி கொஞ்சம் உணர்ச்சிவசப் படாம தர்க்க ரீதியா சிந்தியுங்க சாமி.எனக்கென்னமோ கே கே (கேள்விக்குறி) தான் இந்தப் பேர்ல வந்திருக்கார்னு தோணுது.எப்ப இந்த மாற்று பேர் வேசத்த நிறுத்தறதா உத்தேசம்? சரி அத ஒதுக்குவோம்.
            குறிப்பிட்ட சாதி மக்கள் அந்தப் பகுதியில இருக்காங்கனா அந்த மக்கள் அனைவரும் சாதிவெறியர்கள் நு நீங்க மட்டும் லேபில் ஓட்டறீங்க. இது என்ன இசமோ? மொழிப் பிரச்சினைக்குள்ள எதுக்கு சாதியக் கொண்டு வந்து நிறுத்தறீங்க? நான் சொன்னது மக்களோட மனிதநேயத்தைப் பத்தி இதுக்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம்? நாங்க வண்டி பழுதானது கூட நீங்க சொல்ற சிறுவாணி ரோட்ல இருக்கற மாதம்பட்டிக்குப் பக்கத்துல தான். அங்க எங்கள தங்க வச்ச மக்கள்கிட்ட மனித நேயம் இல்லையா ? அவர்கள் பழகியா அத செஞ்சாங்க ?
            இப்படி எல்லாத்தையும் சாதி வெறியர்கள்னு சொன்னா நடு நிலையா இருக்கறவன் கூட சாதி வெறியனா மாறுவான் அதெல்லாம் புரிஞ்சிக்கற அளவுக்கு உங்களுக்கு ஏது அறிவு?. இந்த சினிமா காரனுக மாதிரி பழகிட்ட உயிரையே கொடுப்பாங்கனு உளறாதீங்க உயிரக் கொடுத்திட்டா அப்பறம் என்ன பண்றது எப்படி வாழறது?

            //வடமாவட்டங்களில் ஒரு திருமாவளவன் போல கோவை வட்டாரத்தில் பேர் சொல்லும் படிக்கு ஒரு தலித் இயக்கத் தலைவரைக் காட்டமுடியுமா? சர்வகட்சியிலும் செல்வாக்கு செலுத்துவது கவுண்டர்கள் தானே?// என்னையா உளருறீங்க தலித் தலைவர் உருவாவதற்கும் கவுண்டர்கள் எல்லா கட்சியிலும் ஆதிக்கம் செலுத்தறதுக்கும் என்ன தொடர்பு?திருமாவளவன் என்ன பா ம க விலா இருக்கிறார் தலித்துக்களுக்கு தனிக் கட்சி தானே நடத்துகிறார் கவுண்டர்களை எதிர்த்து தானே தலித் தலைவர் உருவாக முடியும்? அப்படி எதிர்க்கின்ற தேவை எதில் இருந்து ஆரம்பிக்கிறது? இங்க எல்லோருக்கும் வேலை இருக்கிறது பணம் சம்பாதிக்க வேண்டும் முன்னேற வேண்டும் என்ற உந்துதல் இருக்கிறது அதனால் காலை எழுந்தவுடனே யாரோடாவது நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தாலே எனக்கு நேரமாச்சு பொழப்பப் பாக்கனும்னு ஓடுவாங்க.அப்படி இருக்கறப்ப சாதிக்கலவரம் பண்றதுக்கு ஏது நேரம் ? இதெல்லாம் புரியாம சும்மா உளறக்கூடாது.

            ஆக, இவரு இங்கேர்ந்து பெங்களூரு போயி எல்லா வேலையையும் பிடிச்சி ஐந்திலக்க சம்பளம் வாங்கிக் கொண்டு வீட்டு வாடகைல இருந்து காய்கறி வரைக்கும் அத்தினி வெல வாசியையும் ஏத்தி விட்டுட்டு குளிர்காய்வாராம் அங்கெ கார்மென்ட்ஸ் பேக்ட்டரில வேலை பாக்கும் கன்னடத்தான் பாதிக்கப்படுவது பத்தி கவலையில்லையாம்.. எங்கைய்யா போச்சு உங்க தமிழுணர்வு??? தமிழனுக்கு மான ரோசம் அதிகம் அதனால கன்னட பூமில கால் வைக்க மாட்டோம்னு உங்க சீமான சொல்லச் சொல்லு. அத்தினி தமிழ்காரனையும் கன்னட தேசத்திலேர்ந்து திருப்பியழைப்போம்னு சொல்லச் சொல்லு… வந்துட்டாரு பேச..//

            இத விட மோசமான உளறல் இருக்க முடியாது தமிழர்கள் மட்டும் இங்கே வேலைல இல்ல எல்லா மாநிலத்துக்காரனும் தான் இருக்கான்.வீட்டு வாடகை ஏறுவதக்கு எந்த வகையில் மென்பொருள் துறை காரணம் கிடையாது அது வீட்டு சொந்தக்காரர்களின் பேராசை தான் காரணம் எங்களுக்கு குறைஞ்ச வாடைக்கு தர சொல்லு வேண்டானா சொல்றோம் அத விட்டு வெறும் ஐயாயிரம் பெறாத வீட்டை பத்தாயிரம் சொன்னா நாங்க என்ன பண்ண முடியும் விதியேனு கொடுத்துட்டு இருக்க வேணும் தான் வாங்கற சம்பளத்துல வாடகையை கொடுத்தே பாதி சம்பளம் போய்விடுகிறது காய்கறி விலைக்கும் நாங்க காரணம் கெடயாது விளைவிக்கரதுக்கு ஆள் இருந்தா தானே தண்ணி இருந்தா தானே அப்படியே விளைவிச்சாலும் கட்டுபடியான விலை கெடைக்குதா? உடனே ஊடகங்கள் விலைவாசி உயர்வு அது இதுன்னு கூப்பாடு போடுது நகரத்துல இருக்கறவனுக்கு எல்லாமே குறைவா கெடைக்கணும் அப்படினா விவசாயி எத்தனை நாளைக்கு தியாகம் பண்ணிட்டே இருப்பான்? இது உலகம் பூரா இருக்கற பிரச்சினை தொடர்ந்து விலைவாசி ஏறிக்கிட்டே இருக்கும்.

            அப்பறம் கார்மெண்ட்ஸ் பாக்டரில ஏதோ கன்னடத்துக்காரன் மட்டும் தான் வெலை பாக்கறதா உளறாதீங்க சார். அங்கே எல்லா மொழிக்காரனும் இருக்கான்.மென்பொருள் துறை சீரடைந்து இருக்கறதால சில்லறை வணிகம் வளர்ச்சி அடையறதால கார்மெண்ட்ஸ் வேலையில் இருந்த ஆட்கள் இப்ப பெரிய மால்களுக்கு வேலைக்கு போயிட்டாங்க அதனால கடந்த ஒன்னரை வருடமா புதியதா எந்த கார்மெண்ட்ஸ் பாக்டரியும் திறக்கல இருக்கறதையும் மூடத்தான் போறாங்க அந்த அளவுக்கு உழைப்பு சுரண்டலும் சூழல் சீர்கேடும் உடல் நலக்கேடும் அந்த துறைல இருக்கு.

            நான் ஏற்கனவே சொன்ன மாதிரி தான் நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தை தமிழ் நிலத்தை ஆக்கிரமித்துள்ள கன்னட ஒக்கலியர்,குறும்பர் (வாட்டாள் நாகராசு சாதி தான் இவங்க. இங்க இவங்களும் இருக்காங்க அப்படிங்கறது அந்த முட்டாளுக்கு தெரியுமான்னு தெரியல ) தேவாங்கர்,பலிஜா கன்னடியர் அனுப்பர் உள்ளிட்ட அத்தனை பேரையும் திருப்பி அனுப்புங்க அப்பறம் சில ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய அத்தனை தமிழர்களும் அங்க வந்து விடுகிறோம் இவங்க இடத்த காலி பண்ணுனா நிச்சயம் கருனாடகாவுல இருந்து வர்ற தமிழர்களுக்கும் நெறைய இடம் தமிழகத்தில் இருக்கும் அப்பறம் கடுமுழைப்பு தேவைப்படற எந்த வேலைக்கும் கருனாட்காவுல தமிழன் அடிமையா இருக்க வேண்டியதில்லை கன்னடர்களே அந்த வேலைய கன்னட உழைப்பாளிகளே (?!?!?!) செய்வாங்க அந்த அளவு கன்னட உழைப்பு பிரசித்தி பெற்றது இதை சொன்னது நான் இல்ல எமது கன்னட நண்பர்கள் தான்

            //பொறுமையாக யோசித்துப் பார்த்து இவைகளைப் புரிந்து கொள்ள நீங்கள் முயற்சி செய்யுங்கள். அப்போது தான் இனவாதியாகவும், மொழிவெறியராகவும் உங்கள் வாழ்க்கையும் அதன் நோக்கமும் சீரழிந்து போவதைக் காட்டிலும் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு போராட எம்மோடு தோள் கொடுக்க முன்வருவீர்கள்//
            வினவின் கம்யுநிசத்தொடு எமக்கு எந்த உடன்பாடும் இல்லை நான் உங்களோடு உடன்படுவது உங்களின் அடிப்படை நேர்மை,பாரபட்சமற்ற அணுகுமுறை, தன்னலமற்ற சிந்தனை,சமரசமற்ற கோட்பாட்டு நிலைப்பாடுகளுக்காக மட்டும் தான்.எமது தமழ் தேசிய நிலைப்பாட்டில் நீங்கள் குறுக்கிடும் பொழுதுதான் பிரச்சினை.அதனால் தான் வினவு இருக்க வேண்டும் பணி தொடர வேண்டும் (சண்டைப்போடவாவது :)) வினவுக்கு நன்கொடை தரலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். எனது கடன் அட்டை மோசடி செய்யப்பட்டதில் இருந்து நான் பயன் படுத்துவதில்லை நண்பரின் கடன் அட்டை வழியாக உங்களுக்கு நன்கொடை அனுப்புவேன். நன்றி .

    • mr.peacock, why so emotional. i didnt talk about koundans, devans etc becoz they are tamil origin. you have unleashed nonsense depending on ur personal experience. did i say that vegetables are smuggled? i just said that TN has been helping them with supplying vegetables and milk. (what else could be a basic amenity). dumping wastes inside TN is an open secret so dont argue on that. BTW all working class people are same because they dont have time to differentiate among race etc and they concentrate only on their livelihood. I agree prejudice is stupid but i just gave the ground reality. why do u quote tamil movies as examples? these fellows are cheap so they claim mallu women are bad in nature. if we take movies, why do u forget about A** H*** Mohan lal who always portray tamilians as beggars? and Jeyaram who called a tamil woman as a black pig. has anyone in TN spoken abt Mallus like that in pulic. Mr. Ezhil, u deal with Mr.Mayil.

      • Mr Satish,

        // just said that TN has been helping them with supplying vegetables//

        that is not a help per se Mr. That is a business. They pay the right money and get what they paid for.

        //dumping wastes inside TN is an open secret //

        Ohh I see… how about dumping load of shit in Sabari by the entire TN / AP & KA ppl?

        OK. Lets leave it. May be a burden for being “god’s own land”.

        Why do you not opening your mouth of dumping wastages from western countries in Tuticorin harbor and in indian ocean?

        If you are really against dumping wastages in Tamil land, are you ready to fight the imperial powers dumping their toxic & atomic wastages in our land and ocean???

        If you are really interested. come join us. OR if you are only interested in mallu wastes. Then fix a cork in the A-hole of Tamil ayyappa samy’s when they go to sabari.

        • mayil.. are you aware about what you are talking? What a BS reply? See they are dumping dangerous wastes intentionally. Tamil ayyappa samy’s are not doing intentionally. Its the kerala govt’s responsibilty to provide enough toilet facility and guide them to follow rules. The B** Mallu mons only getting money from so called tamil (aa)samy’s and not providing any facility that causes the issue.So many mallus visiting Pazhani also Why are they not doing here? because there is no such situation here. You should be more conscious. Easier said than done.

          • Ezhil,

            I was just pointing to the double standard in that argument.

            See, if you are really bothered about wastes getting dumped in Tamil land, then you should see the larger and more dangerous part of it.

            You have just given your personal experience – but not substantiated with any evidence on mallus dumping agri wastes in the border. Well.. let me go with your words. Do you know the same mallus buying loads & loads of cow dung from the coimbatore area?

            Also, compared to the danger created by the computer / silicon wastages, medicinal wastages and the more and more hazardes atomic wastages this is very very little.

            Now. Back to your interest of keeping Tamail nadu as a clean land. Will you also raise your voice against US and other imperial powers who put the safetly of our Tamils in danger? If not. AND if you are interested only with mally wastes… then thats what I call hypocracy.

            • Mayil, I can’t understand your reply. This shows your pattukottai-kottaippaakku aproach and selective amnesia.You should answer straight forward and relational and dont try to divert the arquement. Its related with mallus dumping waste not related with US or imperial powers dumping e wastes in TN,also if we are criticizing mallus doesn’t mean that we are not criticizing US.Yes, We are.

              I criticized local dyeing units as well. refer jothiji’s post.For evidence you should ask sathish not me as he only can answer this. I had read lots of news about their activities in news papers and i dont have any link on those. They are not only dumping the agri wastes but also medical wastes as well which is more hazardous.

            • Mr. Mayilsamy, I don’t know were r you from. But the Keralites dump wastes from hospitals in the areas inside Tamilnadu. Medical wastes means not only the disposed syringes, cotton, gauss cloth e.t.c. It is literally human body parts like removed tumors e.t.c. Usually these waste are to be incinerated at a far off place from city using a incinerator. What if a infectious disease spreads from these waste. Who is responsible for that. One should keep your environment clean and then should go for issues which have far greater impact as in the case of atomic and other waste. Please be rational in your thinking. Don’t give way to emotions.

  36. பல்வேறு கருத்துக்கள் விவாதத்தில்

    மொழி என்பது ஒரு கருவி என்பதை அனைவரும் புரிந்து கொண்டால் தேவையற்ற உப தலைப்புகளுக்கு செல்ல வேண்டியதில்லை. யாரொருவர் பேசினாலும் எதிராளி புரிந்து கொண்டு பதில் சொல்ல வேண்டும். அதனால்தான் இங்கே தமிழும், ஆங்கிலமும் தெரிந்தவர்கள் தவிர வேறு மொழி அறிந்தவர்கள் விவாதிக்கவில்லை.

    தாய் மொழி என்பது நன்கு பழகிய மொழி என்றும் வைத்துக் கொள்ளலாம். எந்தவொரு மொழியில் எதையும் கூர்மையாக சொல்ல முடியுமோ மிக எளிதாக புரிந்து கொண்டு எதிராளியுடன் அளவளாவ முடியுமோ அதை தாய்மொழி என்று எடுத்துக் கொள்ளலாம்.

    இன்றைய சூழலில் தமிழை தாய்மொழியை கொண்ட பலர் தமிழ் பேசத் தெரியாதர்வகள்தான். உலகமயமாக்கலின் விளைவு. தொன்மையான ஒரு மொழி அழியாமல் இருக்க அனைவரும் அம் மொழியில் பேசினால்தான் அதை நீடித்து காக்க முடியும்.

    செம்புரட்சியில் என்ன சாதிக்கலாம் என்பதை அப்போது வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும் அதியமான் போன்றோருக்கு. அவர்கள் வாழும் செம்புரட்சி வாராத இந்த காலத்தில் முதலாளி டாடா போன்றோரே முதலை கண்ணீர் வடிக்கின்றனர். இருப்பவனுக்கு இல்லாதவனுக்குமான இடைவெளி நீண்டுக் கொண்டே போகிறது என்று.

    மொழி வெறி என்பது குறுகிய நோக்கோடு செயல்படும் சிலருக்கு வேண்டுமானால் ஆதாயம் தரும். ஆனால் ஓட்டு மொத்த மக்களுக்கு அல்லது அந்த மொழிக்கு?……

  37. கணினி யுகத்தில் உலகம் எங்கே சென்று கொண்டிருக்க..இங்கு இன்னும் தொடர்கின்றன இத்தகைய சர்ச்சைகள். வாழ்வை சிறு வட்டத்திற்குள் வைத்து பார்க்கும் கூட்டம் அடித்து கொண்டு இருக்கட்டும். மற்ற அனைவருக்கும்…………………………வேலை இருக்கு!!

  38. ’காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது என்பதற்காக நாம் மைய அரசை எதிர்த்து போர்க்குணத்தோடு போராட வேண்டும். மாறாக அதன் பொருட்டு கன்னட, மலையாள மக்களை இனவெறி கொண்டு பகைத்துக் கொள்வதில் பயனில்லை’
    வினவு அவர்களே, முல்லைப் பெரியாறு பிரச்சினையில் முட்டுக்கட்டை போடுவது கேரள அரசுதானே தவிர மத்திய அரசு அல்ல.அது போல் காவிரி பிரச்சினையிலும் மத்திய அரசு கர்நாடக அரசை ஆதரிக்கவில்லை,கர்நாடக அரசுதான் உரிய அளவு தண்ணீரை தர மறுக்கிறது. பல மாநிலங்களில் ஒடும் ஆற்றின் தண்ணீர் நிர்வாகம் மைய அரசின் கீழ் இருந்தால் மாநில அரசு இப்படி அடாவடி செய்ய முடியாது.அப்படி இல்லை.அப்படி இருந்தால், மைய அரசு கர்நாடக அரசை மீறி ஏதாவது செய்தால் தேசிய இனத்தின் நீர் வள உரிமையை பறிக்கும் இந்த்துவ/பார்பனிய மத்திய அரசு என்று வினவில் வசை பாடுவீர்கள்.இந்தப் பிரச்சினையில் கேரளா,கர்நாடாகாவில் உள்ள உங்களுடைய தோழமை புரட்சி அமைப்புகள் என்ன நிலைப்பாடு எடுத்துள்ளன,அவை யாரை ஆதரிக்கின்றன.பதில் சொல்வீர்களா.கேரளாவில், கர்நாடாகாவில் உள்ள பாட்டாளி வர்க்கம் இந்தப் பிரச்சினையை எப்படி அணுகுகிறது என்பதை எழுதுவீர்களா.

  39. ஒருவரின் தாய்மொழி எதுவாக இருப்பினும் அதைக் காரணமாகக் கொண்டு அவர் தாக்கப்படுவது கண்டனத்திற்குரியது. ஆனால் த்மிழர் யாரெனக் கேட்டால் வீட்டில் தமிழ் பேசுபவர் என்பதே சரியான விளக்கம்.

    • எழில்,
      //kongu region people will be able to pronounce ‘zha’ bcos its tamil letter but not ‘sha’ or ‘ha’ where its originated from sanskrit.these two words are not only tough to pronounce by kongu region people but also other regions as well. whenever a tamilian pronunce ‘hosur’ he pronunce ‘osur’ only also ‘mahesh’we pronounce makesh only. this becomes a comedy for non tamilians particularly bu kannadigas and telugus. i have always clarified them that we dont have those letters actually and it was inducted by aryans and if we mix more sanskrit letters then tamil become more rough. this happening to kannada also.This is a hot topic in kannada blogs now a days.my fellow colleaque a kannadiga and a brahmin agreed that if we use sa instead of sha the language becomes more sweet and soft.still backward,dalit people of kannada society not able to pronounce those rough sanskrit words properly he added.//
      நீங்கள் கூறுவது உண்மைதான். இந்த அனுபவம் எனக்கும் இருக்கிறது. இதை தமிழின் சிறப்பாகவே சொல்லலாம்.
      //
      வினவு,

      //தமிழ்நாட்டு தமிழர்களும், ஈழத்தமிழர்களும் ஒரே தேசிய இனமல்ல. இருவேறு தேசிய இன மக்கள். இருவருக்கும் மொழி, பண்பாடு என்று பல ஒற்றுமை இருந்தாலும் இருவேறுதேசிய இனங்கள்தான். அமெரிக்காவிலும் ஆங்கிலம், இங்கிலாந்திலும் ஆங்கிலம் என்றாலும் இருவரும் வேறு நாட்டு மக்கள்தானே?//

      ஆங்கிலேயே-அமெரிக்க சூழல் ஈழ-தமிழக மக்களுக்கு பொருந்தாது. ஆங்கிலம் பேசும் அமெரிக்காவில் எல்லா நாட்டு மக்களுமே இருகிறார்கள். பல இனங்கள் வாழும் தேசம்.
      தேசிய இனம் என்பதற்கான வரையறை மொழியை அடிப்படையாக கொண்டது.ஈழ தமிழர்களும் தமிழக தமிழர்களும் இரு வேறு இனம் என்பது ஏற்று கொள்ள கூடியதல்ல.

      இங்கிருக்கும் உழைக்கும் வெளி மாநில மக்களை எதிரிகளாக சித்தரிப்பது தவறானது. அப்படி பார்த்தால் அதிக நாடுகளில் வந்தேறி நம் தமிழர்கள் தான். சாதி வெறி தமிழனை கண்டிக்க வக்கில்லாத தமிழ் தேசியவாதிகளுக்கு அல்லது சாதி வெறியர்களிடம் ஆதரவு தேடும் தமிழ் தேசியவாதிகளுக்கு ரஜினிகாந்தை பற்றி பேச கூட தகுதி இல்லை.

    • //ஆனால் த்மிழர் யாரெனக் கேட்டால் வீட்டில் தமிழ் பேசுபவர் என்பதே சரியான விளக்கம்.//
      சரியெனப்படுகிறது.

  40. அனைவருக்கும் வணக்கம்.
    எனது மறுமொழியிடுதழில் ஏற்பட்ட காலதாமதத்திற்கும், அதனால் ஏதேனும் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தாலும் வினவும் வினவின் சக வாசகர்களும் என்னை மன்னிக்க. மறுமொழியிட்ட அனைவருக்கும் என் நன்றி. குறிப்பாக திப்பு, மீரா, சுகதேவ் ஆகியோரின் மாறுபட்ட கருத்துக்களை வரவேற்கும் அதே வேலையில், நான் என் கேள்வியில் குறிப்பிட்ட நிகழ்வு உண்மைதான் என்பதை இங்கு அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை சொல்லிக்கொள்கிறேன். நான் இப்படி சொல்வதால் நம்முடைய தமிழ் சமூகத்தைப்பற்றி தவறான் என்னத்தையோ பிம்பத்தையோ பரப்ப விளைவதாக கருத வேண்டாம். மனதளவில் முழுமையான தமிழனாக வாழும் நான் அந்த காரியத்தை ஒருபோதும் செய்ய மாட்டேன். இந்த நேரத்த்தில் மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நான் தாக்கப்பட்டதாக சொன்ன அந்த இரவு என்னை தாக்கியவர்கள் குடிபோதையில் இருந்தார்கள். அனால் ஒரு சிலநாள் கழித்து மீண்டும் என்னை பார்த்து மன்னிப்பு கேட்டார்கள். இதுவும் நடந்த உண்மை.

    மேற்பட்ட மறுமொழிகளுக்கும் எதிர்வினைகளுக்கும் வினவு “மே 24 நேரம் 10.45 க்கு’ கொடுத்திருக்கும் விளக்கத்தையே என்னுடைய பதிலாக கொள்கிறேன். வினவின் அந்த விளக்கத்தில் என் எல்ல நியாயங்களும் இருக்கிறது. மேலும் என்னுடைய கேள்வி தமிழ் மக்கள் இனவெறி கொண்டவர்கள் என்ற தவறான உணர்வையோ பிம்பத்தையோ ஏற்படுத்த முனைந்திருந்தால் என்னை தயவு செய்து வினவும் சக வாசகர்களும் மன்னியுங்கள்.

    இவை எல்லாவற்றுக்கும் மேலாக வினவின் இந்த அற்புதமான பதில், என் கேள்வியின் நியாயத்தை புரிந்து கொண்டதுடன், என் பற்பல சந்தேகளுக்கும் விடை அளித்து என்னை தெளிவு பெறச்செய்துள்ளது. வினாவுக்கு மிக்க நன்றி.

  41. Tamil is a language just for communication and dont think beyond that. It never helps for poor people but its always help full for politician ,news papaer and bloggers. Because they want to survive there life using this language.
    Karuna, jaya kind of politician running there parties by using language and caste.It never help full for newer generation.

  42. தெலுங்குக்காரர்கள் எல்லாம் மனிதாபிமானம் மிக்கவர்கள் ஆனால் கேரளாவில் உள்ள மலையாளிகள் தமிழர்கள் என்றால் தரும் மரியாதை மிக குறைவு.
    ஆனைகட்டி முக்காலி பகுதியில் தமிழர் ஒருவர் மலையாளி ஒருவர் என்று ஊராட்சி தலைவர் பதவியில் சுழற்சி முறையில் இருந்து கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட பிறகு மலயாளி இருந்து முடிந்ததும் தமிழர் (முதலியார் ) அமர்ந்ததும் அவரை கொலை செய்து விட்டார்கள் இந்த மலையாளத்தான்கள்!
    ஏன்டா கொங்கு தமிழ் கச்சாவாக இருக்கிறது என்று எழுதுகிறாய் ! முதலில் நீ ஒரு தமிழன் தானா??

  43. தமிழ் .. தமிழ் ரத்தம்னு ஆராய ஆரம்பிச்சா.. தமிழகத்துல நீக்ரொ சாயல்ல இருக்கறவந்தான் உண்மையான பூர்வ குடி.. ஆனா அவனும் ஆப்ரிக்காவிலிருந்து பொழைக்கவந்த வந்தேறி.. ஊரவிட்டு தொறத்தனும்னா முதல்ல பாய்”ங்கல பாகிஸ்தானுக்கு பேக் பண்ணுங்க.. மார்வாரி, மலயாளி, தெலுங்கல்லாம் ஒன் பய் ஒன்னா .. ஒகெ.. ஒங்களுக்கு சுதந்திரம் கொடுத்தானெ வெள்ளக்காரன் அவன சொல்லணும்..

    சுத்த தமிழன்னு சொல்றவனுங்க பாதிபேர அவனுங்க முடி, கண்ணு, கலரு, மூக்கு, ஒசரம்னு உத்து பாத்தாலே தெரியும் எவ்வளவு ரத்தம் மிக்ஸிங்குன்னு..

    இதுல.. வெள்ளக்காரனுக்கு பொறந்தாமாதிரி இங்கிலீஷ் பீத்தல் வேற.. கர்மம்.

  44. சமுதாயம் வர்க்கத்தின் அடிப்படையில் இருக்கிறது, இனமொழி அடிப்படையில் இல்லை என்ற வாதம் அடிபட்டுப் போய்விட்டது. சிறிலங்கா இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. சிங்களத் தொழிலாளர்களும் அவர்களைச் சுரண்டும் முதலாளிகள் போல தமிழர்களை தங்கள் விரோதிகளாகவே பார்க்கிறார்கள். ஒரு காலத்தில் சிங்களவர் – தமிழர் சேர்ந்து உருவாக்கிய தொழிற்சங்கங்கள் தமிழ் – சிங்களம் என மொழிஇன அடிப்படையில் பிரிந்து போயின.

  45. nothing wrong.. why the hell those bloody telugu people are tlaking in telugu still.. they should forget it completely.. first you people here has to understand onething.. in Hosur area those people want ot join Andhra as 42% people are talking in telugu in that area.. and Telugu people of other parts are supporting them.. You want this to go ahead… Non sense.. even if i see the people tlak in telugu in tamil nadu definitely i would beat them.. living in tn for ten generation then why they have to speak in telugu still??

  46. அநேகருடைய அறிவுக்கண்களை திறக்கும் வேலையை “வினவு” செய்துமுடிக்கின்றது.நன்றி ஏராளம்.

  47. காணாச்சாதிகள் தீண்டாச்சாதிகள் ஆகிய நாடார்கள்(சாணார்கள்)எப்பொழுது தேவர் சாதிக்கு சமமானார்கள்?இவர்கள் சோழமன்னனால் அடிமைகளாக சிறைப்பிடித்துக்கொண்டுவரப்பட்டவர்கள்.வரலாற்றை கவனமாகப்படிக்கவும்.இவர்கள் சிங்கள மரமேறிகள்.

  48. தமிழர்கள் அரசியலில் சம பங்கும், மலையாளி/தெலுங்கர்/கன்னடர் என இனத்தகுதி அடையும், இரட்டை கலையை கொஞ்சம் கற்று கொடுங்களேன்.???

    தமிழகப் பிரச்னைகளுக்காக மீண்டும் போராட்டம்: விஜயகாந்த்

    தமிழர்கள் நலன் காக்கும் இந்த விஷயத்தில் -உங்களுக்கு என்ன வேலை???

    ஹி… ஹி….ஹி… என்னங்க அண்டைமாநிலங்களில் நூற்றாண்டுகளாக வாழும் தமிழர்கள் தனது ஏழு அறிவை பயன்படுத்தி அரசியலில் சம பங்கும், மலையாளி/தெலுங்கர்/கன்னடர் என இனத்தகுதி அடையும், இரட்டை கலையை தமிழர்களுக்கு கொஞ்சம் கற்று கொடுங்களேன். வாழ்க தேசியம்.

  49. தமிழர்களுக்கென்று தனி அப்பா, அம்மா வேண்டுமென்று தானே நாங்கள் கேட்கிறோம்?

    முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நடிகர்கள் சங்கம் ஏன் குரல் கொடுக்கவில்லை? தென்னிந்திய நடிகர்கள் சங்கம் என்ற பெயர் இனி இருக்கக்கூடாது.- பாரதிராஜா

    திராவிட அரசியல் வாதி வைகோ அவர்களை யார் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தார்கள்? எங்களுக்கென்று தனி அப்பா, அம்மா வேண்டுமென்று தானே நாங்கள் கேட்கிறோம்? இதில் என்ன தவறு கண்டீர்கள்? தர்மம் ஒரு நாள் வெல்லும். வாழ்க பத்திரிகை தர்மம். வாழ்க வையகம்.

    • // திராவிட அரசியல் வாதி வைகோ அவர்களை யார் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தார்கள்? //

      உண்மை,

      வைகோ செயலில் திராவிட அரசியல்வாதியல்ல, அக்மார்க் தமிழ் தேசியவாதி. தமிழ்ப் பற்றாளர்களை ஒதுக்கி ஓடவைத்துவிடாதீர்கள்.

  50. ஆங்கிலம் தாய்மொழியாக கொண்டவர்களை விட,வேறு மொழியை தாய்மொழியாக கொண்ட- ஆங்கிலம் பேசுவோர்களின் எண்ணிக்கை உலகில் அதிகமாயுள்ளது; ஆங்கிலேயரின் வாழ்க்கைதரம் குறையவில்லை.
    தமிழகத்தில்,அதேநிலை தமிழ் மொழிக்கும் உருவாகியுள்ளது. ஆனால் தமிழரின் வாழ்க்கைத் தரம் பரிதாபமாக உள்ளது; இது இந்திய ஒருமைப்பாட்டுக்கு நல்லதல்ல.
    வாய்ப்புக்கு நன்றி.

  51. தமிழுனர்வை மேலும் நீர்த்து போகாமல் செய்த விஜய T. ராஜேந்தர் வாழ்க!

    நயனதாராவிடமிருந்து தங்கள் புதல்வனும்/தமிழ்நாடும் தப்பித்துள்ளது; இது ஒரு பெரிய தமிழக அரசியல் போட்டியை தவிர்த்து உள்ளது.- இதன் மூலமாக தமிழுனர்வை மேலும் நீர்த்து போகாமல் செய்த தங்களுக்கு மொட்டை அடித்து வேண்டுதல் செய்வதாக தமிழ் கடவுள் பழனி முருகனிடம் வேண்டியுள்ளோம் . ஆகையால் அந்நாளில் செந்தமிழ் திரைப்பட உலகத்தினர் அனைவரும்,அண்டைமாநில நடிகைகளுடன் பழனியில் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுகிறோம்- பகுத்தறிவு தமிழர் பேரவை.

  52. வாழ்க- யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று வாழ்ந்து கெட்ட தமிழகம்”

    “1979 எம்.ஜி.ஆர் – அச்சுதமேனன் ஒப்பந்தத்துக்கு முன்பு வரை 48 அடி நீர் தமிழகம் வசம் இருந்தது. அது மூன்றில் ஒரு பங்காக்கப்பட்டது. அணைப் பாதுகாப்பு, தமிழக காவல் துறையிடமிருந்து கேரள காவல் துறைக்குப் பிடுங்கித் தரப்பட்டது. ஆனால் கேரள போலீசுக்கான சம்பளத்தை, தமிழகமே தருகிறது. அணையில் படகு விடும் உரிமை தமிழகத்திடமிருந்து பறி போனது. மீன் பிடிக்கும் உரிமையும் போயிற்று. அணை வரையிலான சாலையும் தமிழக அரசிடமிருந்து பிடுங்கப்பட்டது. அணை தமிழகத்துக்குச் சொந்தமென்றாலும் அணைக்குச் செல்ல, பொறியாளர்கள் உட்பட எல்லாரும் கேரள அரசின் அனுமதி பெற வேண்டும். இவையெதுவும் 1979க்கு முன்னர் இல்லாதவை. கடைசியாக இப்போது அணையையே பறிக்க விரும்புகிறது. அணையின் பாதுகாப்பு மட்டும்தான் அசல் கவலையென்றால் புது அணையை தமிழகமே கட்டட்டுமென்றல்லவா சொல்ல வேண்டும்? தான் கட்டித் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புவதாக ஏன் சொல்ல வேண்டும்?”

    இது தான் நம் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். மலையாளிகளுக்கு பெற்றுத் தந்த மண்ணின் பாச உணர்வு; அதன் பரிசாக மலையாள சகோதரர்கள் நமக்கு காட்டும் விசுவாசம்./. நம்பிக்கைத் துரோகம். …. தூ….????
    தமிழா மண்ணின் மீதும் உனது மக்கள் மீதும் ஞாய உணர்வு கொள்!

  53. சூடுபட்டும் சொரணை வரவில்லையா தமிழனுக்கு?”-
    “தமிழர்களுக்கு என்று தனி அமைப்புகள், தமிழ்த் திரைப்பட துறையில் மட்டும் இல்லை”- டிசம்பர் 30-ல் திரைப்பட இயக்குநர்கள் உண்ணாவிரதம்.-பாரதிராஜா
    பகுத்தறிவு தமிழர்களே!
    தெலுங்கருக்கு – நைனா, அம்மா;
    மலையாலத்தவருக்கு -அச்சன், அம்மா;
    கன்னடத்தவருக்கு – தந்தே, தாயி;
    தமிழருக்கு – பொது அப்பா, அம்மா;
    தமிழர் விரோத கொள்கைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வருவது சோனியா அரசு மட்டும் தானா???? இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே/ வாழும் நாட்டிலே??? சூடுபட்டும் சொரணை வரவில்லையா தமிழனுக்கு?

  54. முல்லைப் பெரியாறு விவகாரம்: பிரதமரைச் சந்திக்கிறார் கருணாநிதி
    பகுத்தறிவு தமிழர்களின் தலைவரே!
    தெலுங்கருக்கு – நைனா, அம்மா;
    மலையாலத்தவருக்கு -அச்சன், அம்மா;
    கன்னடத்தவருக்கு – தந்தே, தாயி;
    தமிழருக்கு – பொது அப்பா, அம்மா;
    என்ன ஞாயம் இது???? திராவிடம், திராவிடம் என்று ஏமாத்தியதை சொல்லுகிறோம்.
    கேரள எல்லைப் பகுதிகளில் தமிழர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க மத்திய அரசு காலதாமதம் செய்யாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இருக்கட்டும். கச்ச தீவை இழந்தது போதும். தமிழகத்தில் கையாலாகதவனாக தமிழர்களை ஆக்கியதற்கு மக்கள் தான் தண்டனை கொடுத்துவிட்டார்களே என்று சும்மா இருந்து விடாதீர்கள் ; பாவ மன்னிப்பு பெற உருப்படியாக ஏதாவது செய்யுங்கள்-அல்லது கடையை மூடுங்கள் ; தானே நல்ல வழி பிறக்கும் . தர்மம் வெல்லும். —பாமரத் தமிழன்

  55. தமிழர் நலம் நாடுவோர் அஹிம்சை முறையில் மனதளவில் கடைபிடிக்க வேண்டிய ஆறு (6) உறுதிமொழிகள்:

    1) தமிழர் கடைகளிலேயே வணிகம் செய்வோம்.

    2) உற்பத்தியாகும் பொருட்களை, நமது நலன் விரும்பாதவர்கள்- பயன்படுத்தும் எல்லா செயல்களின்/ ஒத்துழுயாமைக்கு, ஒத்துழைப்போம்.

    3)பெரியதிரை/சின்ன திரை- அண்டை மாநில கவர்ச்சிக்கு கொடுக்கும் பேராதவருக்கு முடிவு கட்டுவோம்.

    4) எங்கெங்கு காணினும் சக்தியடா என்பதை உணர்வோம்.

    5) சாதி,மத,அரசியல் பேதமின்றி- தமிழர்கள் எல்லோரும் அரசுடன் நல்ல செயல்களுக்கு ஒத்துழைப்போம்.

    6)நமக்கு நண்பன் யார்? பகைவன் யார்?—-நல்லவன் யார்? கெட்டவன் யார் ?- என்பதை எப்போதும் ஞாபகத்தில் கொண்டு – பகுத்தறிவுடன் செயல்படுவோம்.

    வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!
    வாய்ப்புக்கு நன்றி.

  56. ஐயா! கார்த்திகேயன் நீங்கள் இந்த கேள்வியை கேட்டிருக்கவே கூடாது. ஒவ்வொரு ஊருலயும் நாலு நார நாய்கள் இருக்கத்தான் செய்யுது. உண்மையான தமிழன் அனைவரையும் அரவணித்துதான் செல்வான். அவன் குணத்தை வைத்தே சொல்லலாம் அவன் தமிழன் இல்லையான்னு. அதற்கு சாட்சி இவ்வளவு தலைமுறைகளாய் நாம் சகோதரர்களாய் வாழ்வதுதான். எவனோ ஒருவன் உன்னை அடித்தான் என்பதால் கேள்வி கேட்கும் நீங்கள். எத்தனை தமிழர்களை சாதியை வைத்து அடித்திருபீர்கள்(வெண்மணி கலவரமே சாட்சி). இன்னொன்றையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் இப்படி நுட்பமான விஷயத்தை இப்படி பொது இடங்களில் விவாதிக்கவே கூடாது. அது இன்னும் பல புதிய பிரச்சனையை உண்டாக்கிவிடும். ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள் எவன் ஒருவன் இருதலைமுறைக்குமேல் வாழ்ந்திருந்தாலும் அவன் அந்த மண்ணிற்கு சொந்தக்காரன் அவன் அந்த இனத்தோட சொந்தக்காரன். அதனால் அந்த பாவிகளை மன்னித்து கம்பீரமாக வாழுங்கள். இந்த மாதிரி தேவை இல்லாத கேள்விகளை கேட்டு மற்றவர்களை குற்றவாளியாக்காதீர்கள்.

  57. எவன் ஒருவன் இருதலைமுறைக்குமேல் வாழ்ந்திருந்தாலும் அவன் அந்த மண்ணிற்கு சொந்தக்காரன் அவன் அந்த இனத்தோட சொந்தக்காரன்.???

    ஹி… ஹி….ஹி… என்னங்க அண்டைமாநிலங்களில் நூற்றாண்டுகளாக வாழும் தமிழர்கள் தனது ஏழு அறிவை பயன்படுத்தி அரசியலில் சம பங்கும், மலையாளி/தெலுங்கர்/கன்னடர் என இனத்தகுதி அடையும், இரட்டை கலையை தமிழர்களுக்கு கொஞ்சம் கற்று கொடுங்களேன். வாழ்க தேசியம்.

  58. தமிழர்கள் நம்முடன் வாழும் அணைத்து மொழி பேசுபவர்களையும் நல்லபடியாக தான் பார்க்கிறோம். இல்லாவிடில் 234 எம்.எல்.ஏ. மற்றும் மந்திரிகளில் 20% அண்டைமாநில மொழியை பேசுபவர்கள் சென்ற முறை பதவி வகித்திருக்க முடியுமா?

    அண்டைமாநிலங்களி ல் நம்மால் இப்படி நினைத்து பார்க்க முடியுமா? “யாதும் ஊரே யாவரும் கேளீர்”- என்று வாழ்ந்த தமிழர்களை சீண்டிவிட்டது யார்? /சிந்திக்க வைத்தது
    எது??? வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

    வாழ்க அறம் வளர்த்த தமிழகம்!
    வாழ்க இன உணர்வு!

    ஹி… ஹி…ஹி…
    என் அருமை திராவிடத் தமிழா!!!
    நாங்க உங்க வீட்டிற்கு வரும் போது எனக்கு என்ன கொடுப்பாய் என கேட்பதும் ;
    நீ எங்கள் வீட்டிற்கு வரும்போது என்ன கொண்டு வந்தாய் என்பதும் எப்போதும் திராவிடர்களாகிய நாங்கள் கடை பிடிப்பது தானே??? இப்பொழுது
    ஏன் நீ சிந்திக்க ஆரம்பித்து விட்டாய்???

    THIS IS NOT GOOD FOR YOUR HEALTH.

  59. இரண்டு தலைமுறைக்குமேல் ஸ்ரீலங்கா/மலேசியா/சிங்கபூர்/பர்மா/கனடா/அமெரிக்க/ஆஸ்திரேலியா/இங்கிலாந்த்/ அனைவரும் அந்த நாட்டு மொழியை சரளமாக பேசினால் அவர்கள் சின்காலவாகவும்/மலாய்/பர்மீசே/அமெரிக்கன்/ஆங்கிலேயன் / தெலுங்கன் /மலையாளி/கன்னடர்/பெங்காலி தகுதியை பெற்றுவிடுவார்களா??? ரொம்ப
    சந்தோசமா இருக்கே!!!

  60. தில்லி தழிழ்ச் சங்கம் நடத்தும் இசைப் போட்டிகள்

    புது தில்லி, டிச.24: தில்லித் தமிழ்ச் சங்கம் திருவள்ளுவர் விழா போட்டிகளை நடத்தவுள்ளது. நாளை டிச.25 காலை 10 மணிக்கு 6,7,8ம் வகுப்புகளுக்கும், காலை 11 மணிக்கு 9,10 ஆம் வகுப்புகளும், பகல் 12 மணிக்கு 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கும் என்று இசைப்போட்டிகளை நடத்தவுள்ளதாக சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலுக்கு… பி.ராகவன் நாயுடு : 9891816605, எம்.ஆறுமுகம்:9868530644, பி.ராமமூர்த்தி: 9968328116, ஏ.வெங்கடேசன்: 9313006908 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
    கருத்துகள்
    தமிழ்ச் சங்கமா? நாயுடுகள் சங்கமமா?? தமிழ் இசை எப்படி வளரும்??? ஹி….ஹி….ஹி…. அதனால் தாங்கோ செயற்கை முறையில் அண்டை மாநில மக்களின் உதவியுடன் தமிழ் இசையை உருவாக்கி கேட்டு/ரசித்து இன்புறுகிறோம்! – செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே!.
    Pl c link:
    http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&artid=527395&SectionID=164&MainSectionID=164&SectionName=Latest%20News&SEO=

  61. பெரியார் தமிழ்த்தேசியம் பேசினால் அது சரி. தமிழன் பேசினால் அது தவரறா?- Dr. V. Pandian….

    நன்றாகச் சொன்னீர்கள். எத்தனை பேருக்கு புரியபோகிறது???

    தமிழன் நெல்லுக்காக இரைத்த நீர் எத்தனை சதவிகிதம் தமிழனை சேர்க்கிறது என்று கேட்ட ஒரே தலைவன் மருத்துவர் ராமதாஸ் மட்டுமே?? என்ன செய்வது – எல்லாருக்கும் பேராசை- ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று புரிய மறுக்கிறார்களே???

    கணக்கெடுக்க தயாரா திராவிடம் பேசுவோர்??? DK/ DMK – கட்சிகளை TK/TMK என்று மாற்ற அடம் பிடித்தால்- இருக்கும் மற்றவர்களும் சிந்திக்க வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம். வாழ்க வாடிய பயிரைக் கண்டு மனம் வாடிய, வள்ளலார் பிறந்த தமிழ் நாடு. தமிழா இன உணர்வு கொள்.

  62. வினவு மே 24
    //அடுத்து கார்த்திகேயன் கேட்டிருப்பது போல உண்மையிலேயே அந்த சம்பவம் நடந்திருக்கிறதா என்று நாங்கள் கண்டுபிடிக்க இயலாது. ஆனால் அந்த கேள்வில் வேறு மொழி பேசுபவர்கள் தமிழகத்தில் இருப்பது குறித்த சிக்கல்களை புரிந்து கொள்ள முடியும் என்று கருதுகிறோம்//

    கார்த்திகேயன் மே 28
    //நான் தாக்கப்பட்டதாக சொன்ன அந்த இரவு என்னை தாக்கியவர்கள் குடிபோதையில் இருந்தார்கள். அனால் ஒரு சிலநாள் கழித்து மீண்டும் என்னை பார்த்து மன்னிப்பு கேட்டார்கள். இதுவும் நடந்த உண்மை.//

    உண்மையை நடந்த உண்மை என்று ஏலம் போடும்போதே தெரிகிறதே… இது ஒரு செட்அப்-னு
    இன்னும் இரண்டு நாள் கழித்து நானும் குடித்திருந்தேன் என்று சொல், பின்னர் இரண்டு நாள் கழித்து கனவு கண்டேன் என்று மாற்றி சொல்… நல்லா இருக்கு..

    கார்த்திகேயன் என்ற கதாபாத்திரம் எழுப்பிய கேள்வி பொய் அது அனைவருக்கும் தெரிகிறது… ஆனால் கார்த்திகேயன் என்ற பாத்திரம் உண்மையா பொய்யா என்பதுதான் கேள்வி… சமீப காலமாக வினவும் விகடனைப்போல், குமுதனை போல், கீரனை போல், அந்துமணி போல் கற்பனை கதாபத்திரங்களை கொண்டு பதிவெழுதும் நிலைக்கு போய் கொண்டிருக்கிறது… (ஆட்டோ காரன் பேச்சு மற்றுமோர் உதாரணம்…) அந்த பத்திரிகைகள் காசுக்காக அப்படி எழுதுகின்றன… உனக்கு ஏனையா இந்த விபரீத ஆசை?

  63. யார் பச்சை தமிழர்கள்???

    திருக்குறள், பொங்கல் விழா,தமிழர் பெருமை, தமிழ் உணர்வு, செம்மொழி தமிழ்,
    தமிழில் குழந்தைகளுக்கு பெயரிடுதல்,சாதனை புரிந்த பச்சை தமிழர் – இவைகளைப்பற்றி பேசினால் ஆர்வம் காண்பிக்காதது மட்டுமல்லாமல் கிண்டலடிக்கும் நம்மக்களும்/ வீட்டில் தமிழ் பேசாத அணைத்து தமிழ் பேசும் மக்களும்- தன் சாதி அடையாளமாக சமஸ்கிருதம் கலந்த தனி அடையாள பெயர் வைத்திருப்பவர்களும் தமிழர்கள் அல்லர்….
    இந்த கூட்டம் இல்லாத மற்ற கனவிலும்/நனவிலும், வீட்டிலும், வெளியிலும்,
    உணர்விலும் உள்ள – இளிச்ச வாயன்களும்/ ஏமாளிகளும்/ சொரனையற்றவர்களும்/ வெட்டுரவனை நம்புகிறவர்களும்,பகுத்தறிவை பயன்படுத்தாததும் ஆன அனைத்து மக்களும் – தமிழரே!!!!

  64. தாய்மொழியைக் காப்பாற்றும் பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு உண்டு: கருணாநிதி.

    இனத்தின் அடையாளங்களை மறந்துவிடக் கூடாது- தினமணி ஆசிரியர்.

    தமிழர்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் எழுத்துதான்: உதயச்சந்திரன்.

    நல்ல வேண்டுகோள்!!! இந்தியாவில் தாய் மொழியை மதிக்காத/ நேசிக்காத ஒரே

    இனம் தமிழினமாகத் தான் இருக்கின்றது- குறிப்பாக நம் இளைய தலைமுறை தமிழ்

    மக்கள். அவர்கள் இப்படி ஆனதிற்கு நாமே பொறுப்பு. குழந்தை யாருக்கு சொந்தம் என்ற

    போட்டியில் குழந்தை வஞ்சிக்கப்பட்டு/ கவனிக்கப்படாமல்/ வளராமல் இருக்கிறது

    என்பதை அனைவரும் உணரவேண்டும். சக்களத்திகள் சண்டை போட்டது போதும்.

    தமிழ்க் குழந்தையை காப்பாற்றுங்கள்.ஊரு ரெண்டு பட்டதால் யாருக்கு லாபம்????

    வாழ்க இன ஒற்றுமை!!!

  65. Mother tongue ll survive only from Mother and Father.Government can do anything they want,if mother and father talk to the kid sin Tamizh properly then the kids ll also have a positive self esteem about their mother tongue.The ultimate fault is of the parents.

  66. வாழ்க உலக மக்கள் அனைவரும்! வாழ்க ஈரேழு லோகங்களும்!!!

    “தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றமாட்டோம்:

    தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் என்ற பெயரைக் கொண்டிருப்பதால், இந்தப் பிரச்னையில் எந்த தர்மசங்கடமும் இல்லை. தமிழ்த் திரைப்பட நடிகர் சங்கம் என்று உருவாக்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள்.

    கலைக்கு மொழி, மதம், சாதி கிடையாது. பல திரைப்பட பிரபலங்கள் பொறுப்பு வகித்த பாரம்பரியம் மிக்க அமைப்பு இது. இதன் பெயரை மாற்ற முடியாது. தொடர்ந்து இந்தப் பெயரிலேயே சங்கம் செயல்படும். விருப்பம் இருப்பவர்கள் புதிதாகத் தொடங்கலாம். மாற்றுக் கருத்து இல்லை.”-சரத்குமார்”

    நீங்க சொல்வது உங்கள் சம்பத்தப்பட்ட வகையில் மிகவும் சரியே. ஹி…ஹி..ஹி.. ஏன்னா திராவிடத்தையும் தாண்டி நீங்க பொது கலாசார முன்னேற்றத்தின் தலைவர் என்பது எங்களுக்கு தெரியாதா என்ன??? வாழ்க உலக மக்கள் அனைவரும்! வாழ்க ஈரேழு லோகங்களும்!!!

    Pl c Link:
    http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Tamilnadu&artid=544550&SectionID=129&MainSectionID=

  67. திராவிடத் தமிழருக்கு எத்தனை தாய்மொழிகள்???

    “மொழிப்போரில் மொத்தத் தமிழர்களும் குதிப்போம்: கருணாநிதி அழைப்பு

    ஏமாற்றக்கூடாது: திராவிட என்பது ஒரு கற்பனைச் சொல் அல்ல. மானத்தை காப்பாற்ற, உரமான கொள்கைகள், உறுதியான
    லட்சியங்கள் ஆகியவற்றுக்கு ஆணி வேராக இருப்பது திராவிட என்ற சொல்லாகும். அந்த சொல்லை யார் எந்த இயக்கத்துக்கு வைத்துக் கொண்டாலும் அவர்களை பாராட்டுகிறேன். மதிக்கிறேன்.

    ஆனால், அதை வைத்து திராவிடர் அல்லாதோரை மட்டுமல்லாது திராவிடர்களையும் ஏமாற்றக் கூடாது. நாமும் நம்பி ஏமாந்து விடக்கூடாது. எனவே, திராவிட தமிழ் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.”-

    Pl c Link:
    http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Tamilnadu&artid=543005&SectionID=129&MainSectionID=129

  68. தமிழா!!! நாய் செய்த பாக்கியம் நாம் செய்யவில்லையா???

    ஜப்பான் தபால்தலையில் இடம்பெற்ற தமிழர்!!!

    சினிமா நடிகை த்ரிஷாவுக்கு நாய் வளர்பவரை கல்யாணம் செய்துகொள்ள பிடிக்கும் என்கிற சேதி மறு நாளே நமக்கு தெரிந்து விடுகிறது – ஜப்பான் தபால்தலையில் இடம்பெற்ற தமிழர் பற்றிய தகவல் ஐந்து வருடங்களுக்குப் பிறகாவது தெரியும் இந்நிலை – வரும் காலத்தில் இருக்குமா என்பது சந்தேகமே????-தங்கராஜா/தினமணிக்கு நன்றி.

    Pl c link:
    http://www.dinamani.com/edition/story.aspx?artid=545532

  69. “வீட்டிலும், வெளியிலும், கனவிலும் நனவிலும்/உணர்விலும், எம்மொழியை பேசுகிறார்களோ அம்மொழியைச் சேர்த்தவர்களே அவர்கள்- என்று சொல்லித் தெரிய வேண்டுமோ???”

    ஏய் எல்லாரும் வந்து ஸ்டேஷன்ல கையெழுத்துப் போட்டுட்டு போங்க.

    நீ யாருடா கோமாளி?

    நானும் ரவுடி தான்.

    நீ ரவுடின்றதுக்கு என்ன ஆதாரம் இருக்கு?

    ஈக்குவலா பேசறேன் இல்லே?

    எங்கம்மா சத்தியமா நானும் ரவுடி தாங்க.

    உன்னை இந்த ஏரியாவிலே பார்த்ததில்லையே?

    நான் இந்த ஏரியாவிலே ரவுடின்னு பார்ம் ஆயிட்டேன்ல. சரி ஏறித் தொல.

    நான் ஜெயிலுக்கு போறேன்.நான் ஜெயிலுக்கு போறேன்.

    நல்லா பாத்துகுங்க நான் ஜெயிலுக்கு போறேன்.//”நல்ல வடிவேலு காமெடி”.

    வீட்டிலும், வெளியிலும், கனவிலும் நனவிலும்/உணர்விலும், எம்மொழியை பேசுகிறார்களோ அம்மொழியைச் சேர்த்தவர்களே அவர்கள்- என்று சொல்லித் தெரிய வேண்டுமோ???

    ஹி..ஹி..ஹி இங்கிலீஷ் பேசறவன் எல்லாம் இங்கிலீஷ்காரன்.பிரெஞ்சு பேசறவன் எல்லாம் பிரெஞ்சுகாரன்.

  70. நானும் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவன்….
    எத்தனையோ தமிழர்கள் எதற்கும் போரடாமல் குரட்டை எழும்ப தூங்கும்போது
    நான் விழித்து குரல் கொடுக்கிறேன்…..
    எனது வீட்டில் பெரிய நூலகம் உள்ளது(அனத்தும் தமிழ் நூல்கள்)
    இறந்து போன எனது தங்கை தமிழ் புலவர்…
    எனது அண்ணன் மனைவியும் தமிழ் புலவர்….
    ஒரே ஒரு வருத்தம்….மஞ்சல் துண்டு கருனாநிதியை தெலுஙராக சித்தரிப்பது ஏன்?எல்லோருக்கும் தெரியும்-இசை வேளாளர் பிரிவைச் சேர்ந்தவர்….எனக்கும் நெருக்குதல் உண்டு…அஞ்சுவதில்லை…வேறு வழி இல்லையென்றால்….? ஏதேனும் ஒரு தேசம்…மனிதனை மனிதனாக நடத்தும்..தேடிப் பார்த்தால் போகிறது……

  71. “வீட்டில் தெலுங்கு, வெளியே தமிழ்…நான் யார்? எனது அடையாளம் எது?”

    தமிழ்நாட்டை வாழ்விடமாக கொண்ட வேற்று இனத்தை சேர்ந்தவர், தமிழ்நாட்டில் பிறந்த தெலுங்கர். அவ்வளவு தான்.

Leave a Reply to Aliyar Bilal பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க