‘மேலும் மேலும் மதச்சார்பற்றதாக மாறி வரும் உலகின் ஆன்மீக பாலைவனத்தை எதிர் கொண்டு கத்தோலிக்கர்களும், சர்ச்சுகளும் மீண்டும் எழுச்சி அடைய வேண்டும், நம்பிக்கையின் உண்மையையும் அழகையும் உணர்ந்து ஆன்மீக வீழ்ச்சியை தடுக்க வேண்டும்’ என அறைகூவல் விடுத்துள்ளார் போப்.
உலக ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் இரண்டாம் வாட்டிகன் கவுன்சில் துவங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டிய விழாவில் போப் பென்டிக்ட் பேசினார். வியாழக்கிழமை (அக்டோபர் 10) புனித பீட்டர் சதுக்கத்தில் நடந்த வழிபாட்டுக் கூட்டத்தில் பல்லாயிரக் கணக்கான மக்களும் உலகம் முழுவதிலும் உள்ள சர்ச்சுகளிலிருந்து வந்த நூற்றுக்கணக்கான் பாதிரியார்களும் குவிந்திருந்தனர்.
‘நம்பிக்கையின் ஆண்டு’ ஆரம்பத்தை குறிக்கும் இந்த நிகழ்வைத் தொடர்ந்து கிருத்துவ அமைப்புகள் மத நம்பிக்கைக்கு புத்துயிர் ஊட்டுவதற்கான நிகழ்வுகளை ஒரு ஆண்டு நடத்தவுள்ளன. “சமீபத்திய பத்தாண்டுகளில் ஆன்மீக பாலைவனம் வளர்ந்திருக்கிறது. நாம் தினமும் நம்மைச் சுற்றிலும் அதை உணர்கிறோம். வெறுமை பரவியிருக்கிறது” என்றார் போப்.
ஞாயிற்றுக் கிழமை பிஷப்புகளின் மூன்று வார மாநாட்டை போப் தொடங்கி வைத்தார். கத்தோலிக்க திருச்சபை சமீப காலம் வரை செல்வாக்கு செலுத்தி வந்த பகுதிகளில் கூட மத நம்பிக்கை குறைந்திருப்பதை எதிர் கொள்வதற்காக “புதிய சுவிசேஷத்தில்” அவர்கள் கவனம் செலுத்தவிருக்கிறார்கள்.
1962 முதல் 1965 வரை நடந்த இரண்டாம் வாட்டிகன் கவுன்சில் ஆரம்பித்து வைத்த மாற்றங்கள்தான் இன்றைய நெருக்கடிக்குக் காரணம் என்று போப் பெனடிக்ட் கருதுகிறார். அது நாள் வரை லத்தீனில் வழிபாடு நடத்துவதை மாற்றி மக்களுக்கு புரியும் அவர்கள் சொந்த மொழியில் படிக்க ஆரம்பித்தனர். யூதர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் ஏசுவை தண்டித்தனால் ஏற்பட்டதாக சொல்லப்படும் பகையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
“தனது மதத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து நவீன உலகத்துடனான கருத்துப் பரிமாற்றத்தை வாட்டிகன் ஆரம்பித்தது. ஆனால், மக்கள் பெரும்பான்மைப் போக்கை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டு கத்தோலிக்க நம்பிக்கையின் அடிப்படையையே சந்தேகிக்கிறார்கள்” என்று போப் புலம்பியிருக்கிறார். ‘கத்தோலிக்கர்கள் காலத்தை மிஞ்சிய தாவலுக்கான ஆவலை தவிர்த்து அளவுக்கதிகமாக முன்னேறி போக முயற்சிப்பதை கை விட வேண்டும்’ என்று எச்சரித்திருக்கிறார்.
ஒரு காலத்தில் வாட்டிகன் திருச்சபை அழைப்பு விடுத்தால் ஐரோப்பிய மக்கள் அடிமைகளாக கட்டளைகளுக்கு அடி பணிந்தனர். வாட்டிகன் திருச்சபையின் அதிகாரமும், அதன் தலைமை குருவான போப்பின் கடவுள் மமதையும் கொள்ளை நோய்க்கடுத்து ஐரோப்பிய மக்களை கொல்லும் காரணமாக இருந்தது. சிலுவைப் போர், ரோஜா போர் போன்றவை ஐரோப்பிய நிலவுடமை சமூகம் சார்ந்த சர்ச்சின் அதிகாரத்தை நிலை நிறுத்த நடத்தப்பட்ட யுத்தங்கள். இதில் மாண்டவர்கள் எத்தனை ஆயிரம்! சூனியக் காரிகள் என்று எரிக்கப்பட்ட பெண்கள் எத்தனை பேர்!
விஞ்ஞானத்தை தங்கள் அதிகாரத்திற்குள் வைத்துக் கொள்ள முயற்சித்ததும், விஞ்ஞானிகளை துன்புறுத்தியதும் சர்ச்சின் பெருமைமிகு வரலாற்றில் அடங்கும். 18-ம் நூற்றாண்டில் திருச்சபை மேல் இடியென இறங்கிய பிரெஞ்சுப் புரட்சி நிலப்பிரபுத்துவ அரசர்களின் அதிகாரங்களை வீழ்த்தியதுடன், சர்ச்சுகளை சக்தி இழக்கச் செய்தது. ஐரோப்பாவெங்கும் முதலாளித்துவத்தின் வளர்ச்சி கத்தோலிக்க திருச்சபையை மேலும் ஓரம் கட்டியது.
பின்னர் ஜெர்மன் இங்கிலாந்து முதலாளிகள், ‘தங்களது வர்க்க நலன்களுக்கு மதம் வேண்டும்’ என முதலாளித்துவ சமூகத்துக்கு ஏற்ற புதிய திருச்சபைகளை ஏற்படுத்தி அவற்றுடன் புனிதக் கூட்டணி வைத்துக் கொண்டனர். அந்தக் கூட்டணி கடந்த 50 ஆண்டுகளில் புதிய நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது. உலகம் முழுவதிலும் சர்ச்சுகள் மீது வைக்கப்படும் நிதி மோசடி புகார்கள், பாதிரிகள் மேல் சுமத்தப்பட்டு வரும் செக்ஸ் குற்றச்சாட்டுக்கள் கத்தோலிக்க மதத்தை பலமாக பதம் பார்த்திருக்கின்றன.
லத்தின் அமெரிக்க நாடுகளில் பெண்கள் முதல், குழந்தைகள் வரை மத போதகர்களால் துன்புறுத்தப்பட்டுள்ளனர். ஓரினச் சேர்க்கை, விஞ்ஞான வளர்ச்சி போன்றவற்றில் முன்னுக்கு பின் முரணான கருத்துகள் கத்தோலிக்க மதத்தின் மீது மக்களை நம்பிக்கை இழக்கச் செய்திருக்கின்றன.
வாட்டிகனில் நடக்கும் சர்ச்சைகளையும், ஊழல்களையும் கேள்வி கேட்பவர்கள் வெளியே போய் உண்மையைச் சொல்லி விடாமல் தடுக்க வாட்டிகன் நகரில் பாதாளச் சிறைகளை ஏற்படுத்தி அடைத்து கொடுமைப்படுத்துகிறார்கள். வெளியே “யேசு உங்களை நேசிக்கிறார்” என்று எழுதி வைப்பது ஒரு வித குரூர நகைச்சுவை. வாட்டிகனில் இருந்த சமையல்காரர் அம்பலப்படுத்திய பல ரகசிய தகவல்கள் முதலில் பரபரப்பாக இருந்து பின் காணமல் போயின.
உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையும் ஐரோப்பாவைச் சூழ்ந்துள்ள போராட்ட மனநிலையும் திருச்சபையையும் அதன் செல்வாக்கையும் நிலை குலையச் செய்துள்ளன. ‘தங்கள் சமூக பொருளாதார பிரச்சனைகளுக்கு கடவுளிடம் தீர்வில்லை’ என்று மக்கள் உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஆனாலும், நுகர்வு கலச்சாரத்திற்கு மதம் தேவைப்படுகிறது. கிறிஸ்துமஸ் பருவம்தான் அமெரிக்க ஐரோப்பிய முதலாளிகளின் விற்பனை எகிறும் நாட்கள் (இந்தியாவில் தீபாவளி பொங்கல் பண்டிகை காலங்களைப் போல). சமீபத்தில் உலகின் மிக விலையுர்ந்த பைக்குகளை தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தங்கள் 110 வது ஆண்டு விழாவை ஒட்டி வாடிகனுக்கு பரிசுகள் கொடுத்து மகிழ்ந்தது. விஜய் மல்லையா கூட சுப்ரமணியர் கோவிலுக்கு தங்கக் கதவுகளை பரிசாக கொடுத்தது நினைவிருக்கலாம்.
மக்கள் மதத்தை மறுத்து விழிப்புணர்வு பெறுவது முதலாளிகளுக்கும் சர்ச்சுக்கும் ஆபத்து. மத நம்பிக்கை குறைந்தால் வாட்டிகன் எப்படி நடக்கும், நிதி எப்படி திரளும், உழைக்காமல் வாழும் சுகம் என்ன ஆகும்?
இதை எல்லாம் நினைத்து போப் கவலைப்படுகிறார். சர்ச்சுகளின் செல்வாக்கை மீட்கத் திட்டம் கேட்கிறார். பாதிரியார்களை கவுரவத்துடன் நடந்து கொள்ளச் சொல்கிறார்.
- நம்பிக்கையற்று கிறிஸ்துவத்தை விட்டுச் சென்றவர்கள் தங்கள் தவறை உணர்ந்து, வாழ்க்கையின் உண்மையான பயனை அறிய கிறிஸ்துவத்தின் பால் திரும்ப வேண்டும்.
- குழந்தைகளுக்கு பைபிள் வகுப்புகள் எடுக்க வேண்டும். அவர்கள் ஆன்மீக கல்வி பயில வேண்டும். அதற்கு உள்ளூர்வாசிகள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்
என்பவைதான் திருச்சபையின் இப்போதைய அறைகூவல்.
உலக அளவில் வேலையில்லாமல் உழைக்கும் மக்கள் கஷ்டப்பட, பணக்காரர்களின் மனம் புண்படாமல் அவர்களின் சுரண்டலை எதிர்க்காமல் புத்திசாலித்தனமாக அவர்களுடன் கூட்டமைத்து மதத்தை வளர்க்க நினைக்கிறார் போப். பிழைக்கத் தெரிந்தவர்தான். ஆனால் யதார்த்த வாழ்க்கைதான் அந்தப் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடுகிறது. இதனால் திருச்சபை திவாலாகி வருகிறது.
படிக்க:
//ஆனாலும், நுகர்வு கலச்சாரத்திற்கு மதம் தேவைப்படுகிறது. கிறிஸ்துமஸ் பருவம்தான் அமெரிக்க ஐரோப்பிய முதலாளிகளின் விற்பனை எகிறும் நாட்கள்//
Please be truthful and reply this. Did Jesus preached consumerism? Don’t blame Christianity for mistakes of Christians.
ரோம சாம்ராஜ்யத்தின் அடிமை சமூக அமைப்பிற்கு எதிராக கலகம் செய்தவர் இயேசு.
பண்டைய யூதர்களிந்த பழக்க வழக்கங்கலில் சீர்திருத்தத்தை கோரியவர் இயேசு..
இதற்காகவே அவர் ஆயிரமாயிரம் அடிமைகளைப் போல் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்.
அவர் கர்தர் கிறிஸ்து ஆனதும், உயிர்த்தெழுந்ததும் முன்னூறு ஆண்டுகளுக்கு பின்னர் தான்..
இயேசு கிறிஸ்துவ மதத்தை துவக்க வில்லை.. இஸ்தான்புல் மன்னன் கான்ஸ்டான்டைன் தான் கிறிஸ்துவ மதத்தை துவக்கினான்.
அடிமைத்தனத்தை ஒழிக்க விரும்பிய இயேசுவின் பெயரை சொல்லிக்கொண்டு, உலகையே அடிமைப்படுத்த கிளம்பியுள்ள அமெரிக்கா முதலிய ஏகாதிபத்தியங்களை மக்களிடமிருந்து காப்பாற்றும் வேலையைத் தான் திருச்சபை செய்து வருகிறது.
கர்தரில் நம்பிக்கை உள்ளவரே…
கட்டுரை இயேசுவை அல்ல, திருச்சபையை தான் விமர்சனம் செய்கிறது..
நல்ல ஆரோக்கியமான, திறந்த மனநிலையுடன் உலகை காண ஆண்டவன் உங்களுக்கு அருள்வானாக..
‘தங்கள் சமூக பொருளாதார பிரச்சனைகளுக்கு கடவுளிடம் தீர்வில்லை’- ஒவ்வொருவர் மனதிலும் பொறிக்க வேண்டிய முத்தான வரிகள். மதம் தேவைகள் தாண்டிய நுகர்வு கலாசசாரத்தின் முக்கிய பொறி.
பரம பிதாவே!
பஷ்ஷை சேலைக்கு ஒரு பஷ்ஷை சிலுவையும்,
மஞல் துண்டுவுக்கு ஒரு மஞல்நிற சிலுவையும்( இலவசமாக)
கொடுத்து இவர்களின் பாவஙளை உலக வஙியில் கரைக்க வேண்டும்
என்று மன்றாடி ( காணிக்கை) கொடுத்து
வாக்கு தத்தம் செஇகிரேன்…..
//அவர் கர்தர் கிறிஸ்து ஆனதும், உயிர்த்தெழுந்ததும் முன்னூறு ஆண்டுகளுக்கு பின்னர் தான்..
இயேசு கிறிஸ்துவ மதத்தை துவக்க வில்லை.. இஸ்தான்புல் மன்னன் கான்ஸ்டான்டைன் தான் கிறிஸ்துவ மதத்தை துவக்கினான்.//
Thallus (52AD)
Thallus is perhaps the earliest secular writer to mention Jesus and he is so ancient that his writings don’t even exist anymore. But Julius Africanus, writing around 221AD does quote Thallus who had previously tried to explain away the darkness that occurred at the point of Jesus’ crucifixion:
“On the whole world there pressed a most fearful darkness; and the rocks were rent by an earthquake, and many places in Judea and other districts were thrown down. This darkness Thallus, in the third book of his History, calls, as appears to me without reason, an eclipse of the sun.” (Julius Africanus, Chronography, 18:1)
Pliny the Younger (61-113AD)
Early Christians are also described in secular history. Pliny the Younger, in a letter to the Roman emperor Trajan, describes the lifestyles of early Christians:
“They (the Christians) were in the habit of meeting on a certain fixed day before it was light, when they sang in alternate verses a hymn to Christ, as to a god, and bound themselves by a solemn oath, not to any wicked deeds, but never to commit any fraud, theft or adultery, never to falsify their word, nor deny a trust when they should be called upon to deliver it up; after which it was their custom to separate, and then reassemble to partake of food—but food of an ordinary and innocent kind.”
If you look at what Pliny had mentioned, you can see for yourself that Christians worshipped Jesus and practices communion (bread and wine) even before Constantine was born. Pliny is NOT a Christian. Same Pliny mentions about killing Christians for their faith in Jesus. Why to die for a dead leader if they believed that Jesus is just a man?
Similarly Catholic Church had 3 African popes, some even before 300 AD and after 300 AD too. According to the Liber Pontificalis, three popes-Pope St Victor I (ca186-198), Pope St Miltiades (311-14), and Pope St Gelasius (492-496)-were Africans.
So, if Catholic Church is defending Roman empire, why to allow Africans in papacy?
I accept there are lot of things like child molestation, corruption, superstitions etc are there in Church today. But these are all done because these bishops and priests don’t believe or follow Christ’s teaching.
//அடிமைத்தனத்தை ஒழிக்க விரும்பிய இயேசுவின் பெயரை சொல்லிக்கொண்டு, உலகையே அடிமைப்படுத்த கிளம்பியுள்ள அமெரிக்கா முதலிய ஏகாதிபத்தியங்களை மக்களிடமிருந்து காப்பாற்றும் வேலையைத் தான் திருச்சபை செய்து வருகிறது.//
America’s first aim is to separate Chruch and state, which had its own benefits and drawbacks. Can you tell me how Catholic Church is supporting USA? US evangelists are the main reason for decline in Catholic population. They just “convert” Catholics, Anglicans, Lutherens etc to Pentecostals/AG. So please don’t equate traditional Churches like RC, Anglicans etc with USA.
அப்புறம் ஏனுங்க உங்க போப்பாண்டவரு, ஈராக், ஆப்கன், போபால் படுகொலை பத்தியெல்லாம் திருவாய் மலர மாட்டேங்குறாரு.
(ஒரு வேளை.. அங்கு செத்தவர்கள் அனைவருமே பாவிகளோ? ஆண்டவர் தான் அவர்களுக்கு சம்பளம் கொடுத்தாரோ ?)
நீங்களே சொல்வது போல திருச்சபைக்குள் இருக்கும் ‘பாவிகளை’ பற்றி கூட பேச மாட்றாரே .. ஏன்?
மத்தபடி.. இயற்கை வழிபாடு நடத்திய பண்டைய பாகன் மதத்தை சேர்ந்த கான்ஸ்டான்டைன் தான் மூண்றாம் நூற்றாண்டுல ஊரைக்கூட்டி கதோலிக மதத்தை நிறுவினான். பழைய மதத்தின் பல பழக்க வழக்கங்களையும் கதோலிக மதத்தில் புகுத்தினான்.. ஆதாரம் ‘கருங்கடல் ஆவணங்கள்’.
It is to be noted that there were many cruel chapters in the history of Europe expanding its territories over the other parts of the world.Non catholic protestands ,jews, muslims were subjected to worst forms of subjucation in the form of insquitition . After discovery of new continent by Columbous (Still many indians have romantic idea about Coulumbus )ancient races
of South America like Mayans, Aztecs were destroyed by the catholic spaniards. That shows the
gentle message of love of Christ highlighted in Bible had not civilised the latin Europeans.
But it is note worthy that in India though their aim was converting and forming new flocks of sheep, many working class communities such as Nadars,Pariahs who were in the lower starta of societies found somerelief and social upliftment in the form of education recieved
from the missionary activities of jesuits and protestand missionaries. Portuguiese who also
expansionist plans converted the fishermen commuities of Tamil nadu and Kerala suppressed the growth and culture of native Konkani speaking people of Goa. Jewish Synagauge at Mattancherry , Kochin Was demolished by them. Even modern day Kapaleeswarar temple was earlier located at the place where todays Santhome church stands.Catholic Leadership should confess such crimes in History for a liberal free thinking world
I am talking only about Christ’s teaching. You are replying with what some people did/doing. Tell me where Christ asked to expand borders, kill others etc?
இன்று ஒரு [மத] நிறுவனமாக இயேசுவை தாங்கி பிடிக்கும் இந்த ஏற்பாட்டிற்கு எதிராகவே இயேசுவின் கலகம் அன்றிருந்தது. மருத்துவச்சிகளான ‘சூனியக்காரிகளை’ எப்படி திருச்சபை துரத்தி வேட்டையாடியதோ அது போன்றே இயேசுவும் தன வாழ்நாளில் வேட்டையாடப்பட்டார். கத்தோலிக்கம் சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆனால் தான் கைகழுவாமல் உணவு உண்பதை நகையாடிய பரசேயர்களிடம் ‘நீங்கள் வெளிப்புற தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்; பிதாவோ உள்ளத்தூய்மையை நம்மிடம் எதிர்பார்க்கிறார்’ என்றார். கன்ச்டாண்டைன் காலத்தில் [கி.பி 2 ஆக இருக்கலாம்] இன்றைய கிறித்தவ மதத்திற்கான கட்டுமானம் துவங்கியது. பல பழக்கவழக்கங்கள் பேகநிசம் என்ற பழங்குடி வழிபாட்டுமுறையிலிருந்து கடன் வாங்கப்பட்டது. எப்படி பார்ப்பனியம் இந்திய பழங்குடி வழிபாட்டுமுறையிலிருந்து, சிவப்பு பொடியில் பொட்டு அணிதல், போன்றவற்றை கடன் வாங்கியதோ அதை போன்று.
சிவராஜ் சித்தவைத்தியசாலையின் பரம்பரை போன்று இவாஞ்சலிசத்தில் தினகரன் குடும்பமும் ஒரு பரம்பரையை உருவாக்கி விட்டது. கள்ள தீர்க்கதரிசிகள் குறித்து கடுமையான எச்சரிக்கைகள் பைபிளில் இருக்கிறது.