privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்போராடும் உலகம்நவம்பர் புரட்சி நாள் விழாவில் பங்கேற்க அனைவரும் வருக!

நவம்பர் புரட்சி நாள் விழாவில் பங்கேற்க அனைவரும் வருக!

-

அன்பார்ந்த உழைக்கும் மக்களே !

நவம்பர் 7,  1917 உழைப்பது மட்டுமல்ல நமது வேலை, நாட்டை ஆளவும் முடியும் என்பதை நிரூபித்த நாள். சுரண்டும் வர்க்கத்தை வீழ்த்தி உழைப்பவர்களுக்கான புதிய அரசியல் அதிகாரத்தை படைத்த நாள். இந்த பூவுலகில் சோசலிசம் என்கிற சொர்க்கத்தை உழைக்கும் மக்களுக்கு அறுமுகப்படுத்திய நாள். அது தான் ரசியப் புரட்சி நாள். உழைக்கும் மக்களின் உண்மையான கொண்டாட்ட நாளும் இதே தான் என்பதை நாம் நினைவில் நிறுத்துவோம்!

பாட்டாளி வர்க்கத்தின் தலைவரான தோழர் லெனின் தலைமையில், ரசிய  கம்யூனிஸ்ட் கட்சியால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் சோசலிச அரசு, தமது குடிமக்கள் அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம், குடிநீர், சுகாதாரம் என அனைத்து அத்தியாவசியத் தேவைகளையும் உடானடியாகத் தீர்த்து வைத்ததோடு, அனைவருக்கும் கல்வியையும் வேலையையும் உத்திரவாதப்படுத்தி சாதனை படைத்தது.

ஆனால் நமது நாட்டின் நிலை ?

விலைவாசி விசம் போல் ஏறி வருகிறது. தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வீதிகளில் வீசப்படுகிறார்கள். விவசாயம் அழிந்து தற்கொலைகள், பட்டினிச்சாவுகள் என விவசாயிகள் லட்சக்கணக்கில் மடிந்து வருகிறார்கள். கல்வி வியாபாரமயமாக்கப்பட்டு விட்டதால் ஏழை மாணவர்கள் தற்குறிகளாக்கப்படுகிறார்கள்.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்கிற பெயரில் இந்த நாடே பன்னாட்டு கம்பெனிகளின் லாப வெறிக்காக கூறுபோட்டு விற்கப்படுகிறது. அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்ததன் மூலம் கோடிக்கணக்கான சிறு வணிகர்களின் வயிற்றில் அடித்துள்ளது. வால்மார்ட் போன்ற பன்னாடு நிறுவனங்கள் கொழுக்கவும் வழிவகுத்துள்ளது. மேலும் காப்பீட்டுத்துறை, ஓய்வூதியத்துறையிலும் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்து மக்களின் சேமிப்பை பன்னாட்டு கம்பெனிகள், மற்றும் உள்நாட்டு தரகு முதலாளிகள் சூறையாடவும் பட்டுக் கம்பளம் விரித்துள்ளது மன்மோகன் கும்பல்.

மானிய வெட்டு என்கிற பெயரில் கேஸ் சிலிண்டருக்கு கட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் போன்ற இதர பொருட்களின் விலையை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கிறது. அதே நேரத்தில் பன்னாட்டு கம்பெனிகளுக்கும் உள்நாட்டு தரகு முதலாளிகளுக்கும் பல லட்சக்கணக்கான, கோடி ரூபாய்களை வரிச்சலுகைகளாக வாரி வழங்குகின்றன மத்திய மாநில அரசுகள். இக்கொடுமைகளை எதிர்த்துப் போராடும் மக்கள் மீதோ இராணுவம், போலீசை ஏவி அடக்குமுறைகளை  கட்டவிழ்த்து விட்டு ஒரு உள்நாட்டுப் போரையே நடத்தி வருகிறது மன்மோகன்-சோனியா-சிதம்பரம் கும்பலின் காங்கிரசு அரசு.

இதற்கெல்லாம் என்ன காரணம் ?

இந்த அரசு மனமுவந்து ஏற்று நடைமுறைப்படுத்தி வரும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்னும் மறுகாலனியாக்கக் கொள்கை தான் காரணம். இது தான் இன்று உலக மக்களை மரணக்குழியில் தள்ளி வருவதோடு நாட்டையும் அடிமையாக்கி வருகிறது.

இதெற்கெல்லாம் என்ன காரணம் ? உலகம் முழுவதும் உள்ள ஏழை நாடுகள் மீது உலக முதலாளித்துவம் திணித்து வரும் சுரண்டல் கொள்கையான மறுகாலனியாக்க கொள்கை தான் காரணம். இதை ஒழிப்பதே உலக உழைக்கும் மக்களின் இன்றைய உடனடி கடமை, இக்கடமையை நிறைவேற்ற ஏழை நாட்டு உழைக்கும் மக்களோடு ஒன்றிணைவோம். உலக முதலாளித்துவ சுரண்டலை, மறுகாலனியாக்கக் கொள்கையை முறியடிப்போம். தெற்காசிய மக்களுக்கு ஒரு விடிவெள்ளியாகத் திகழ்வோம்.

மறுகாலனியாக்கத்தை முறியடிக்க முதலில் நமது நாட்டில் ஒரு விடுதலைப் போரை நக்சல்பாரிகள் தலைமையில் கட்டியமைப்போம். பன்னாட்டு முதலாளிகள் மற்றும் தரகு முதலாளிகளுக்கு மரண அடி கொடுப்போம். புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி சமூக விடுதலையையும் சாதிப்போம். அதற்காக இன்றைய நவம்பர் புரட்சி நாளில் உறுதியேற்போம்.

 நவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம் !

______________________________________________________

சென்னையில் நவம்பர் புரட்சி நாள் நிகழ்ச்சிகள்.

நிகழ்ச்சி நிரல்

நாள்  : 7.11.2012
நேரம் : பிற்பகல் 2 மணி.

தலைமை : தோழர் த. நெடுஞ்செழியன்
இணைச் செயலாளர்,  புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி. சென்னைக் கிளை.

நவம்பர் தின உரை :  தோழர் வெற்றிவேல் செழியன்
மாநில அமைப்புச் செயலாளர்,புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. தமிழ்நாடு.

நாடகம்,  உரைவீச்சு,  விவாத மேடை. கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இளம் தோழர்களின் புரட்சிகர பாடல்கள்.

உழைக்கும் மக்களின் பண்பாட்டை உயர்த்திப்பிடிக்கும் நவம்பர் புரட்சி நாள் விழாவில் பங்கேற்க அனைவரும் வருக !

தொடர்புக்கு
வினவு -97100 82506
புதிய கலாச்சாரம்  -99411 75876

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

  1. உழைக்கும் மக்கள்———– எங்கிருந்து இந்த வார்த்தைய கண்டுபிடிசிங்கலோ தெரியல ….. யோவ் போயா .. இதுக்கு மேல என்னால எழுத முடியல

    • ஓசியிலேயே தின்னு உடம்பு வளர்ப்பவர்களுக்கு ” உழைக்கும் மக்கள்” என்ற வார்த்தை எரியத்தான் செய்யும்….

  2. மாருதி சுசுகி தொழிளார்கள் சங்கம்,

    ஆர்ப்பாட்டம் & வேலைநிறுத்த போராட்டம்
    நவம்பர் 7 மற்றும் நவம்பர் 8

    Maruti Suzuki Workers Union Release – Dharna & Strike on 7th, 8th November. Guest Post by Nayan
    NOVEMBER 6, 2012
    by Shuddhabrata Sengupta
    MSWU Release: Onwards to the Dharna and Hunger Strike of 7th and 8th November !!

    The Maruti Suzuki Workers Union (MSWU: Reg. no. 1923) has decided to hold a protest dharna in the form of a two-day hunger strike on 7th and 8th November 2012. Our family members, relatives and well-wishers and organizations have staged regular protests across Haryana and given memorandum to all the ministers in the state but to no avail. We were not allowed to unite and express our side of the story and our indignation atbeing falsely implicated in the unfortunate incident of 18th July 2012.

    So we are doing a united protest action of the 149 workers languishing in Gurgaon Central Jail for the last three-and-a-half months, and the 546 permanent workers who have been terminated from their jobs. We have all the solidarity of the around 2000 contract and casual workers who have also been unceremoniously thrown out of their jobs. All 149 workers will be on hunger strike inside the jail, and over 500 workers will sit in front of the Gurgaon Court/D.C. Office in Gurgaon from 10am on 7th November till 4pm on 8th November 2012, after which we will take out a rally to submit a memorandum to the local minister. When this protest program was declared the day-before on 4th November, police intimidation, which we have already witnessed these three months, has increased manifold. The jail authorities of Gurgaon Central Jail have threatened to ‘beat up’ and increase the torture on our 149 fellow workers who go on hunger strike. All our elected Union representatives are lodged in jail – Among those in Gurgaon Central Jail include the entire leadership of our MARUTI SUZUKI WORKERS UNION body, who are portrayed as ‘killers’ even without any due impartial investigation, and having a complete silence on the role played by the company management in the incident of violence on 18 July 2012. The Maurti Suzuki company, IMT Manesar currently operates under police cover and the condition of the few workers who work there are fear and overwork. The Manesar police summoned each worker inside the company to the police station and has threatened all of them of ‘dire consequences’ and termination if found to be even remotely in touch with any of the terminated workers and having found to be attending any meeting or dharna. This is complete violation of all democratic norms in the country.

    We will however go ahead with our scheduled program and call upon all sections of workers, unions and common people to come in our support and join us on 7th and 8thNovember in front of the D.C. Office, Gurgaon, to bring out our side of the story which has been buried in the heap of company-driven misinformation and pro-company government actions. We have and will stand for our legitimate rights, the unity of all the workers against the exploitation by the Maruti management and its continuous attempts to ‘divide and rule’ over us, by segmenting us into permanent and contract, and now into jailed, terminated and working in intimidation. We appeal to all to join us and strengthen our struggle!

    Institute an independent impartial probe into the incident of 18th July 2012, and into the role of the management in it.
    2. Immediately release all the arrested workers. Stop all repressive measures by the police on workers-inside the jail, inside the company and outside- and on their family members and relatives.
    3. Immediately reinstate all the 546 terminated workers and also give priority to reinstate temporary workers as permanents.

    Inquilab Zindabad!

    Imaan Khan, Ram Niwas, O. P. Jat, Katar Singh, Yogesh, Raj Pal, Mahabir

    Provisional Working Committee,
    MARUTI SUZUKI WORKERS UNION (MSWU)

    November 6, 2012

    http://kafila.org/2012/11/06/maruti-suzuki-workers-union-release-dharna-strike-on-7th-8th-november-guest-post-by-nayan/

  3. தோழர்கள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள், தொழிலாளர்கள் ஒற்றுமை ஓங்குக…

  4. ஒன்றாம் வகுப்பு படிக்கும் என் பெண்ணுடன் பள்ளி செல்லும் வழியில்..

    “புது டிரஸ் போட்டா பிறந்தநாள்னு நினைப்பாங்கப்பா!”

    “பிறந்தநாள் கிடையாது! புரட்சி நாள்னு சொல்லு! எல்லோரும் ஸ்வீட் சாப்பிட்டு, கொண்டாட வேண்டிய நாளுன்னு உன் பிரண்ட்ஸ்கிட்ட‌ சொல்லு!”

    போகிற வழியில் ஸ்வீட் கடையை பார்த்ததும், லட்டு சாப்பிடுகிற ‘பீம்’ நினைவுக்கு வந்து…

    “எல்லோருக்கும் லட்டு கொடுக்கலாமா!”

    “நிறைய செலவாகும் பாப்பா! அவ்வளவு வசதி கிடையாது. எல்லோருக்கும் சாக்லெட் கொடுக்கலாம்!”

    சாக்லெட் வாங்கி, பள்ளி ஆசிரியரிடம் ரசிய புரட்சி தினத்தை சுருக்கமாய் விளக்கி, சக மாணவர்களுக்கு தரச்சொல்லி பேசும் பொழுது, சமீப காலங்களில் குழந்தைகளுக்கு சாக்லெட் தரக்கூடாது என பள்ளி விதிமுறை இருக்கிறது. ஏதாவது சாப்பிட்டு விட்டு தொந்தரவு ஆனால், சிக்கலாகிவிடும் என்பதால் இந்த விதிமுறை என்றார். பரவாயில்லை என வாழ்த்துக்களை மட்டும் பகிர்ந்துவிட்டு விடைபெற்றேன்.

    • புரட்சிகர வாழ்த்துக்கள்

      புரட்சிகர வாழ்த்துக்கள்

      புரட்சிகர வாழ்த்துக்கள்

    • @vinoth and Bala….

      எங்க போனாலும் உம்மை போன்ற அறிவுஜீவிகள் தொல்லை தாங்க முடியல!

      உங்களுக்கெல்லாம் என்ன தான் வேண்டும்?

      • பாலா கொஞ்சம் கொச்சையா சொல்றார்.. ஆனா அதான உண்மை..கொஞ்சம் கௌரவமா பேசுவேர்ம்…(1) லெனின் ரசியவ புடிச்சார்..(2) பாட்டாளிவர்க நாடா மாத்தினார்..
        ஆனா sustain ஆச்சா என்பது முக்கிய விசயம்… ஆவல.. காரணம் புரட்சி நடத்தி பாட்டாளி வர்க பண்பாட்டை மேலிருந்து திணிச்சார் இது மார்க்சியம் இல்லைன்னு ஃபூக்கோ சொன்னார்.. மார்க்ஸ் தன் கல்லறையில் நெ ளிவார்னு சொன்னார்.. அதான உண்மையில நடந்தது..

        • சந்திரசேகரன் கொஞ்சமாவது வரலாறு தெரிந்து கொண்டு பேச வேண்டும்…லெனின் அண்ணனை கொன்னதால் லெனின் புரட்சி செய்தார்னு நம்ம ‘வரலாறு” பாடத்தில் இருப்பது மாதிரி பேசக்கூடாது. என்னுடைய கேள்வி லெனின் காலத்தில் “புரட்சி நடத்தி பாட்டாளி வர்க பண்பாட்டை மேலிருந்து திணிச்சதால்தான்(!) சஸ்டைன் ஆகவில்லையாமா? நல்ல விக்கிரமாதித்யன் கதை…. என்ன செய்வது மனு ஸ்ருமிதி மாதிரி இல்லாம இது பற்றி நிறைய ஆதார நூல்கள் உள்ளன. வேண்டுமென்றால் விலாசம் தருகின்றேன் வாங்கி செல்லுங்கள்….அப்புறம் குருசேவ், கோர்ப்பசேவ் இவர்களெல்லாம் உசிலம்பட்டி, ஈரோட்டில் காய்கறி கடை வைத்தவர்கள், அவர்களுக்கும் ரசியாவில் புரட்சிகர அரசு வீழ்த்தப்பட்டதற்கும் சம்பந்தமில்லையென்று கூறுங்கள்…என்ன செய்ய கேக்குறவன் கேணையனா இருந்தா ————?

  5. சந்திரசேகரன் கொஞ்சமாவது வரலாறு தெரிந்து கொண்டு பேச வேண்டும்…லெனின் அண்ணனை கொன்னதால் லெனின் புரட்சி செய்தார்னு நம்ம ‘வரலாறு” பாடத்தில் இருப்பது மாதிரி பேசக்கூடாது. என்னுடைய கேள்வி லெனின் காலத்தில் “புரட்சி நடத்தி பாட்டாளி வர்க பண்பாட்டை மேலிருந்து திணிச்சதால்தான்(!) சஸ்டைன் ஆகவில்லையாமா? நல்ல விக்கிரமாதித்யன் கதை…. என்ன செய்வது மனு ஸ்ருமிதி மாதிரி இல்லாம இது பற்றி நிறைய ஆதார நூல்கள் உள்ளன. வேண்டுமென்றால் விலாசம் தருகின்றேன் வாங்கி செல்லுங்கள்….அப்புறம் குருசேவ், கோர்ப்பசேவ் இவர்களெல்லாம் உசிலம்பட்டி, ஈரோட்டில் காய்கறி கடை வைத்தவர்கள், அவர்களுக்கும் ரசியாவில் புரட்சிகர அரசு வீழ்த்தப்பட்டதற்கும் சம்பந்தமில்லையென்று கூறுங்கள்…என்ன செய்ய கேக்குறவன் கேணையனா இருந்தா ————?

Leave a Reply to கருப்பன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க