privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கவிஸ்வரூபம் : " வீழ்ந்தால் விதையாக வீழ்வேன் - காலில் ! "

விஸ்வரூபம் : ” வீழ்ந்தால் விதையாக வீழ்வேன் – காலில் ! “

-

து நேற்று 31.1.2013 மதியம் மும்பையிலிருந்து வெளிவரும் மிட் டே நாளிதழில் வெளிவந்துள்ள கமலஹாசனின் பேட்டி. இது தொலைபேசியில் எடுக்கப்பட்ட பேட்டி என்பது இப்பேட்டியைப் படிக்கும்போது புரிகிறது. இந்தப் பேட்டி வெளிவந்த பின்னர் தான் அம்மாவின் சமரச அறிக்கை வெளிவருகிறது.

அதாவது இந்தப் பேட்டியைப் படித்த பிறகுதான் அம்மாவின் தாயுள்ளம் உருகியது. அப்புறம் கொதிக்கத் தொடங்கியிருக்கிறது என்று தெரிகிறது.

30 ம் தேதி இரவு என்.டி.டி.வி ஒளிபரப்பிய விவாதத்தின் போது, சோவின் முகத்தில் வழக்கமான தெனாவெட்டையும், குரலில் திமிரையும் காணவில்லை. பீதியும் அதை மறைக்க முயன்றதால் தோன்றிய கடுப்புமே இருந்தது.

“மிட் டே” பேட்டியையும் அம்மா படித்திருக்கக் கூடும். “என் திரைப்படத்தின் படச்சுருளை (சென்னையில்) கொளுத்தப் போகிறேன். பாசிசத்திடம் மண்டியிட மாட்டேன்”  என்றெல்லாம் பேட்டியில் கமலஹாசன் பேசியிருக்கிறார். ஒருவேளை ஏடாகூடமாக ஏதாவது செய்து கமலஹாசனுக்கு விளம்பரம் இன்னும் கூடிவிட்டால்? அந்த நினைப்பே திகிலூட்டியிருக்கும். விளைவுதான் அம்மாவின் அறிவிப்பு.

இந்தப் பேட்டியை மொழிபெயர்த்து வெளியிடக் காரணம் இருக்கிறது. இது வெளிவரும் இந்த நேரத்தில் பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்திருக்கலாம். ஜெயலலிதா உதவுவதாகச் சொன்ன பிறகு நான் ஏன் உச்ச நீதிமன்றம் போகவேண்டும் (நியூ காஸிலுக்கு – இங்கிலாந்தின் நிலக்கரி சுரங்கவளம் நிரம்பிய பகுதி – எதற்கு நிலக்கரியை தூக்கிக் கொண்டு நடக்க வேண்டும்?) என்று நேற்று இரவு கூறியிருக்கிறார் கமலஹாசன்.

முப்பதாம் தேதி காலை “வீழ்வேன் என்று நினைத்தாயோ?” என்று வசனம் பேசியவர், அடுத்த நாள் “பாசிசத்திடம் சரணடைய மாட்டேன்” என்று பேட்டி கொடுத்தவர், 31 மாலையே அம்மாவுக்கு நன்றி தெரிவித்து விட்டாரே,  எவ்வளவு உயரத்திலிருந்து அவர் பல்டி அடித்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள இந்தப் பேட்டியில் அவர் காட்டும் ‘விசுவரூபம்’ நமக்கு தெரிந்திருப்பது அவசியம்.

தனக்கு எதிராக இப்படி ஒரு பேட்டி கொடுத்திருப்பது தெரிந்தும், அதைப் படித்து கொதித்த பின்னரும் அடங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகி விட்டாரே அம்மா, அதைப் புரிந்து ரசிப்பதற்கும் இதைப் படிக்க வேண்டும்.

________________________________________________________________________________________________________________

‘It’s creative abortion’

பேட்டி கண்டவர் : சுபாஷ் கே ஜா

கேள்வி: தமிழ்நாடு உங்களை ஏன் பழி வாங்க வேண்டும்? நீங்கள் தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்த நட்சத்திர நடிகர்.

கமல்: அவங்க அப்படி நினைக்கவில்லை. நான் சச்சரவு ஏற்படுத்தும் படங்கள் நிறைய எடுக்கிறேன் என்றும் என்னை அடக்கி மண்டியிட வைக்க வேண்டும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். ஆகவே, எனது படத்தில் வரும் பயங்கரவாதிகள் அல்-கொய்தாவைச் சேர்ந்தவர்கள் என்பதை வைத்து என்னை இஸ்லாமுக்கு எதிரானவன் என்று முத்திரை குத்துகிறார்கள். நான் இந்து தீவிரவாதம் பற்றி ஹே ராம் என்ற படம் எடுத்தவன் என்பது அவர்களுக்கு நினைவில்லை. பாப்ரி மசூதி இடிக்கப்பட்ட போது அதனை குரல் எழுப்பி கண்டித்த முதல் நடிகன் நான்தான் என்பதையும் அவர்கள் மறந்து விடுகிறார்கள். நான் முஸ்லீம் சமுதாயத்தின் நண்பன். சொல்லப் போனால், பல பன்னாட்டு விமான நிலையங்களில் எனது பெயரை வைத்து என்னை ஒரு முஸ்லீமாக பார்த்திருக்கிறார்கள்.

கேள்வி: விஸ்வரூபம் திரைப்படத்தில் இஸ்லாமிய பயங்கரவாதத்தைக் காட்டுவதால் நீங்கள் எப்படி இஸ்லாமுக்கு எதிரி ஆகி விடுவீர்கள்? பார்க்கப் போனால், சுபாஷ் கெய்யின் பிளாக் & வொயிட், ரென்சில் டி’சில்வாவின் குர்பான் போன பல நல்ல இந்தி படங்கள் இந்திய முஸ்லீமின் அடையாள நெருக்கடியையும் பயங்கரவாதத்துடனான உறவையும் பற்றி காட்டியிருக்கின்றன.

கமல்: அதையெல்லாம் பற்றி அவர்களுக்கு கவலையே இல்லை. எனது படத்தில் ஒரு பயங்கரவாதி கூட இந்தியன் கிடையாது என்பதை கவனிக்க வேண்டும். திரைப்படத்தில் வரும் எல்லா பயங்கரவாத நடவடிக்கைகளும் ஆப்கானிஸ்தானில் நடக்கின்றன. அல்-கொய்தாவைப் பற்றி குறிப்பிடும் இடங்களுக்கு சில முஸ்லீம் சகோதரர்கள் ஆட்சேபணை தெரிவித்தார்கள், நான் அவற்றை நீக்கி விட்டேன்.

கேள்வி: அல்-கொய்தாவை பயங்கரவாத நடவடிக்கைகளுடன் இணைப்பதை ஏன் ஆட்சேபிக்க வேண்டும்?

கமல்: பகுத்தறிவு வாதத்தையா நாம் இங்கு வழிபடுகிறோம்? நான் செல்வி ஜெயலலிதாவிடம் விளக்கமளிக்க விரும்பினேன். நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு அவரைச் சந்தித்து என் நிலைப்பாட்டை விளக்க முயற்சித்தேன். ஆனால், வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாகச் சொல்லி என்னை சந்திக்க மறுத்தார். நான் உள்துறை அமைச்சரைத்தான் சந்திக்க வேண்டும் என்று சொன்னார். உள்துறை அமைச்சரும் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது என்ற அதை கருத்தைதான் சொல்லப் போகிறார். நான் அவரை சந்தித்து எனது திரைப்படம் பற்றியும், வழக்கின் நிலையைப் பற்றியும் விளக்கியிருக்கிறேன். நான் உள்துறை அமைச்சரை சந்தித்தேன் என்பது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தெரியாமல் இருக்க வழியே இல்லை. ஜெயலலிதாவின் கவனத்துக்கு வராமல் தமிழ்நாட்டில் ஒரு இலை கூட அசைவதில்லை.

கேள்வி: இந்த பிரச்சனை ஒரு திரைப்பட வெளியீட்டைத் தாண்டிய வடிவங்களை எடுத்திருக்கிறது.

கமல்: எல்லாவற்றையும் உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. பிரச்சனை எனது திரைப்படத்தைத் தாண்டி வெகு தூரம் போய் விட்டது என்று நினைக்கிறேன். விளைவுகளை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். விஸ்வரூபம் திரைப்படத்தின் தமிழ் பிரிண்டை கொண்டு போய் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகம் முன்பு எரிக்கப் போகிறேன்.

அவர்கள் என் குழந்தையை கருவிலேயே கொல்கிறார்கள். அதற்கு அப்படி ஒரு முறையான சிதையை நான் வழங்கி விட்டுப் போகிறேன். நான் பாசிசத்துக்கு அடிபணிய மாட்டேன். இது என்னை பொருளாதார ரீதியாக முடித்துக் கட்டும் சதி. என்னைக் கொன்று போடும் சதி. நான் இன்னொரு படம் எடுக்கவே முடியாது என்ற நிலையை ஏற்படுத்தும் சதி, அப்படிப்பட்ட ஒரு நிலை என்னைப் பொறுத்தவரை சாவுக்கு நிகரானது.

நான் சொன்னது போல, இது பகுத்தறிவால் புரிந்து கொள்ள முடியாத ஒரு தாக்குதல். ஆனால், நான் அதை பகுத்தறிவுக்கு உகந்த முறையில்தான் எதிர் கொள்ள வேண்டும், ஏனென்றால் மற்றவர்கள் அப்படி இல்லை என்றாலும் கலைஞர்களான நாங்கள் பகுத்தறிவுவாதிகள்.

கேள்வி: விஸ்வரூபத்தை டி.டி.எச்.சில் வெளியிடுவதற்கான உங்கள் விடாப்பிடியான முயற்சியும், இப்போது தமிழ்நாட்டில் அடிப்படைவாத சக்திகளை எதிர்க்கும் உங்கள் போராட்டமும், திரைப்படத்தை வெளியிடுவதை தமிழ்நாடு அரசு தடை செய்திருப்பதும் பாலிவுட்டில் உங்களை ஒரு புகழ்பெற்ற போராளியாக ஆக்கியிருக்கிறது என்பதை உணர்கிறீர்களா?

கமல்: அப்படியா? இப்பவாவது நடந்ததே! (சிரிக்கிறார்). இந்த விஷயம் நம் எல்லோரையும் பாதிக்கக் கூடிய ஒன்று. இந்தத் தடைகளுக்கு எதிராக சிலர் குரல் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்த எதிர்ப்புக் குரல்கள் எதையும் மாற்றி விடப் போவதில்லை. அவர்கள் (தமிழ்நாடு அரசு) நான் அழிந்து போகும் வரை படத்தை தாக்கப் போகிறார்கள். பிறப்பதற்கு முன்பே என் குழந்தையை கொல்வதைப் போன்றது அது. ஒரு கலையின் சிதைவு அது.

கேள்வி: அவர்கள் உங்களை ஏன் தாக்க வேண்டும்.? நீங்கள் டி.டி.எச் விஷயத்தை கையில் எடுத்ததாலா?

கமல்: அதை விட ஆழமானது இது. ஆனால் அதைப்பற்றி நாம் பேச வேண்டாம். எனது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது.

கேள்வி: கேட்கவே கஷ்டமாக இருக்கிறதே…. அவர்களால் உங்களை அழித்து விட முடியுமா?

கமல்: அவர்கள் என்னை அழித்து விட முடியும்! நான் மிகவும் கர்வம் பிடித்த மனிதன். லாஸ் ஏஞ்சலீசில் என் திரைப்படத்தின் வெற்றிகரமான உலக வெளியீட்டை முடித்துக் கொண்டு திரும்பி வந்திருக்கிறேன். நான் கேள்விப்பட்டது வரை, இது வரை அமெரிக்காவில் வெளியான வெளிநாட்டுப் படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய படம் அது.

கேள்வி: விஸ்வரூபத்தின் இந்தி பதிப்பு எப்போது வெளியிடப்படவிருக்கிறது?

கமல்: பிப்ரவரி 1 என்று திட்டமிட்டிருக்கிறோம். வியாழக்கிழமை அன்று மும்பையில் வெளியீட்டு விழாவுக்கும் திட்டமிட்டிருக்கிறோம். ஆனால், படத்தை வெளியிட விடுவார்களா என்று தெரியவில்லை. என் திரைப்பட வெளியீட்டு திட்டங்கள் பெண்களால் தடுத்து நிறுத்தப்படுவது எனக்கு பழகிப் போன ஒன்றுதான்.

கேள்வி: இந்த முறை உங்கள் வெளியீட்டுத் திட்டங்களை தடுத்து நிறுத்துவதாக நீங்கள் எந்தப் பெண்ணை சொல்கிறீர்கள்?

கமல்: நான் எதையும் சொல்ல விரும்பவில்லை.

கேள்வி: தணிக்கைக் குழு அனுமதி கிடைத்த பிறகும் தமிழ்நாடு அரசு உங்கள் திரைப்படத்தை ஏன் தடை செய்தது?

கமல்: தமிழ்நாட்டில் தணிக்கைக் குழு தேவையில்லை என்பது தெளிவு. அவர்கள் தமிழ்நாடு அலுவலகத்தை இழுத்து மூட வேண்டியதுதான்.

கேள்வி: உங்களுக்கு பெருமளவு ரசிகர்கள் இருக்கும் மலேசியாவிலும் இந்த படம் தடை செய்யப்பட்டிருக்கிறது?

கமல்: ஆம். இந்தியாவில் இங்கு இருக்கும் எனது முஸ்லீம் சகோதரர்கள் மலேசியாவில் இருக்கும் அவர்களது முஸ்லீம் சகோதரர்களிடம் பேசியிருக்கிறார்கள்.

கேள்வி: விஸ்வரூபத்துக்கு எதிரான போராட்டங்களை ஆரம்பித்து வைத்த டி.டி.எச். பிரச்சனை உங்கள் திரைப்படத்துக்கான இஸ்லாமிய எதிர்ப்புகளுடன் இணைந்து கொண்டது எப்படி?

கமல்: எனக்கு அந்த கருத்தில் உடன்பாடு இல்லாவிட்டாலும், என் திரைப்படத்தின் டி.டி.எச். வெளியீடு திருட்டு வி.சி.டி. சந்தையை முழுமையாக அழித்து விடும் என்று நான் மதிக்கும் சிலர் கருதுகிறார்கள்.

கேள்வி: வட இந்திய மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளும் விஸ்வரூபத்தை டி.டி.எச்.சில் வெளியிடும் உங்கள் திட்டத்திற்கு எதிராக இருக்கிறார்கள்?

கமல்: என்னுடைய டி.டி.எச். திட்டத்தை எதிர்ப்பதன் மூலம் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் கலைத் திருடர்களுடன் சேர்ந்திருக்கிறார்கள் என்பதுதான் கவனிக்க வேண்டியது.

கேள்வி: அப்படீன்னா, கதை இன்னும் மர்மமாகிறது?

கமல்: என் காவல் துறை நண்பர்கள் ஒட்டுக் கேட்கிறார்கள் என்று நம்புகிறேன். போலீஸ்படை மதத்துக்கு அப்பாற்பட்டது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஒரு வேளை, காக்கி நிறமே ஒரு மதம்தானோ?

கேள்வி: உங்களுக்கு நகைச்சுவை உணர்வு குறையாமல் இருக்கிறது தெரிகிறது.

கமல்: எனது வீழ்ச்சியை அனுபவித்து மகிழும் பலரைப் போல நானும் நடப்பது அனைத்தையும்  அனுபவித்து மகிழ்கிறேன்.

கேள்வி: இது சிரிக்கக் கூடிய விஷயம் இல்லை.

கமல்: நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை, உண்மையிலேயே சொல்கிறேன். என் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டாலும் நான் இதை சொல்ல முடியும்: என் சொத்து முழுவதும், எல்லாமே அடகு வைக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 1க்கு முன்பு நிதி திரட்டி கொடுக்கா விட்டால் எனக்கு சொந்தமான அனைத்தையும் இழந்து விடுவேன்.

கேள்வி: உங்கள் வீட்டை அடகு வைத்தா உங்கள் கனவுகளுக்கு பணம் திரட்டினீர்கள்? அது பழங்கால பழக்கம் இல்லையா.

கமல்: ஆம்! அது பழங்கால பழக்கமாக இருக்கலாம். ஆனால் அதைத்தான் நான் எப்போதும் செய்திருக்கிறேன். ஏன் பழங்கால பழக்கம்? அது சத்யஜித் ரே உணர்வு. பதேர் பாஞ்சாலி எடுப்பதற்கு அவர் எல்லாவற்றையும் அடகு வைத்தார். ரே சார் தனது மனைவியின் நகைகள் அனைத்தையும் அடகு வைத்து பதேர் பாஞ்சாலி எடுத்த கதையை கேட்டு வளர்ந்தவன் நான். நான் இன்னும் பல படிகள் போக விரும்பினேன். சரி, இப்போது என்னை ஒரு ரே-பேன் என்று கூப்பிடலாம் (மனம் விட்டு சிரிக்கிறார்)

கேள்வி: விளையாடுகிறீர்களா, என்ன?

கமல்: ஒரு விளையாட்டு மயிரும் இல்லை. உண்மையாக சொல்கிறேன். திரைப்படம் வெளியாகா விட்டால் நான் எல்லாவற்றையும் இழந்து விடுவேன். நான் ஒரு ஓட்டாண்டியாகி விடுவேன். எந்த ஒரு தனிமனிதனும் சொத்து வைத்திருக்கக் கூடாது என்று நான் நம்புகிறேன். அது மக்களுக்காக இருக்க வேண்டும். நான் என்னவெல்லாம் சொத்து வைத்திருக்கிறேனோ அது எல்லாம் சினிமா மூலம் வந்தது. நான் சினிமாவுக்கே திரும்ப கொடுக்கிறேன். அதனால்தான் நான் அதை சினிமாவில் திரும்பக் கொட்டினேன். எனக்கு கடன் கொடுத்தவர்களுக்கு பிப்ரவரி 1க்குள் பணம் கொடுக்கா விட்டால், எல்லா சொத்துக்களையும் எடுத்துக் கொள்வார்கள். என் கடன்காரர்கள் எனது நிலையைப் பார்த்து பரிதாபப்படப் போவதில்லை. நான் கைது செய்யப்படலாம். அது பிரச்சனையில்லை. காந்திஜி கூட கைது செய்யப்பட்டார்.

கேள்வி: உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்று உங்களுக்கு எப்படி தெரியும்?

கமல்: இதை எல்லாம் நான் முன்பே பார்த்திருக்கிறேன். நான் ஒரு ‘டேப்’ (tap) ஆட்டக்காரன்.

கேள்வி: இந்த நேரத்தில் சினிமா மீது எவ்வளவு காதலை உணர்கிறீர்கள்?

கமல்: நிறைய. எல்லா திரைப்பட தயாரிப்பாளர்களும் சம்பாதிக்கும் அத்தனையையும் சினிமாவுக்கே திருப்பிக் கொடுக்கும்படி நான் கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி: ஒட்டு மொத்த திரைப்படத் துறையும் உங்களுக்கு ஆதரவாக ஏன் வரவில்லை?

கமல்: அவர்களுக்கு என்னை தெரியக் கூட செய்யாது. பாலிவுட்டில் சிலர் என் பக்கம் இருக்கிறார்கள்.

கேள்வி: விஸ்வரூபம்தான் உங்கள் எதிரியா?

கமல்: இல்லை. விஸ்வரூபம் எனது குழந்தை, அரசியல்தான் எனது எதிரி. அவர்கள் என் குழந்தையை கருவிலேயே கலைக்க விரும்புகிறார்கள். கிறிஸ்துவர்களுடனும், முஸ்லீம்களுடனும், அரசியல்வாதிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தி என் குழந்தையை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமாம். என் படைப்புத் திறனை நான் ஏன் பாசிசத்துக்கு முன் வைக்க வேண்டும்?

கேள்வி: உங்கள் நிதி நெருக்கடி இப்படி இருக்கும் போது, உங்கள் அடுத்த படத்தை எப்படி எடுப்பீர்கள்?

கமல்: ஒரு பொது நிறுவனம் மூலம் நான் பணம் திரட்டுவேன். என்னைப் போலவே சிந்திப்பவர்களை வைத்து என் கனவுகளுக்கு பணம் திரட்டுவேன். ஆனால் நான் மண்டியிட மாட்டேன். பாசிசத்துக்கு அடிபணிய மாட்டேன்.