privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஇலங்கை விமானங்கள் முற்றுகை! மாணவர் முன்னணி அறிவிப்பு!!

இலங்கை விமானங்கள் முற்றுகை! மாணவர் முன்னணி அறிவிப்பு!!

-

ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் போராட்ட அறிவிப்பு!

lanka airlinesஎங்களுடைய இந்த அமைப்பின் உடனடி செயல்திட்டமாக சென்னையிலுள்ள பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து இலங்கை செல்லும் விமானங்களை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளோம்.

ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி சார்பில்

ஈழத் தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு
    ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும்,
    பங்காளி ஐ.நா.வுக்கும் காவடி தூக்குவதை நிராகரிப்போம்!
    நூரம்பர்க் போன்ற போர்க்குற்ற விசாரணைக்குக்
    குறைவான எதையும் ஏற்க மறுப்போம்!

    ஈழத்தமிழின மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக
    பொதுவாக்கெடுப்பு நடத்தப் போராடுவோம்!

    தமிழகத்தின் வீதிகளில் 80களின்
    மக்கள் எழுச்சியை மீண்டும் வெடிக்கச் செய்வோம்!

என்ற முழக்கத்தின் அடிப்படையில், அனைத்துக் கல்லூரிகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களை அணிதிரட்டி,

18.03.2013 திங்கட்கிழமையன்று காலை 11.30 மணியளவில், திரிசூலத்தில் அமைந்துள்ள பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து இலங்கை செல்லும் விமானங்களை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த இருக்கிறோம்.

எமது இப்போராட்ட அறிவிப்பை நிகழ்வை தங்களது ஊடகத்தில் வெளியிடுமாறும்,  நாளை நடைபெறவிருக்கிற இப்போராட்டத்தைப் பதிவுசெய்ய தங்களது செய்தியாளரை அனுப்பி வைத்து ஆதரவளிக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

இப்போராட்ட நிகழ்வு குறித்த விரிவான தகவல்களுக்கும், எம்முடனான தொடர்பிற்கும் 95661 49374 என்ற எண்ணை அழைக்கவும் விழைகிறோம்.

இவண்
கணேசன், ஒருங்கிணைப்பாளர்,
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி