privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்கர்நாடகா: அவுட் ஆன பாஜகவிற்கு அம்பையர் சரியில்லையாம் !

கர்நாடகா: அவுட் ஆன பாஜகவிற்கு அம்பையர் சரியில்லையாம் !

-

டத் தெரியாத அல்லது ஆட்டத்தில் தவறிழைத்த பத்மா சேஷாத்ரிக்கள் தெரு கோணல் என்று காலம் தோறும் கலைப் பிரச்சாரம் செய்து வருவதால்தான் இந்த புண்ணான பூமியில், பார்ப்பனியம் இன்னும் பாடைக்கு போகாமல் பல்லக்கில் உலா வருகிறது.

இந்தியத் தொலைக்காட்சிகளில் அன்றும் இன்றும் – ஏன் – என்றும் விவாதங்களில் கலந்து கொள்ளும் சங்க பரிவார – பாஜக வகையறாக்கள் பொய்யை உண்மையாக பேசும் கதாகலாட்சேபத்தை கேட்டிருக்கிறீர்களா? கருத்து ரீதியாக பேச முடியாமல் போகும் போது ஆதிசங்கரன் கற்றுக்கொடுத்த விதண்டாவாதத்தை அண்டம் நடுங்கும் வகையில் இவர்கள் பேசுவதைப் பார்க்க வேண்டுமே! பெங்களூர் ரமணி, உஷா உத்தூப் தோற்றார்கள் போங்கள், அவ்வளவு சவுண்டு வேறு! மற்ற பொதுக்கூட்டங்களில் ஐந்தாறு ஆம்பிளிஃபயர் வைக்கும் மைக் செட்டுக்காரர்கள் இவர்களது கூட்டங்களில் பேச்சாளரே ஆம்பிளிஃபயராக இருப்பதால் அதை வைப்பதில்லை.

கர்நாடகாவில் பாஜக மண்ணைக் கவ்வியதை காங்கிரசு விண்ணதிர கொண்டாடுவதையும், ஊடகங்கள் கேலி செய்வதையும் பொறுக்காத சங்க பரிவார அம்பிகளும், மாமிகளும் தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் பயங்கரமான புள்ளி விவரங்களை ஏவிவிட்டு முகத்தில் மண் ஒட்டவில்லை என்று ‘அழகு’ காட்டுகிறார்கள். புள்ளிவிவரப் புழுதியை கிளப்பி விட்டு தப்பி ஓட நினைக்கும் இந்த வானரங்களின் வண்டவாளத்தைப் பார்ப்போம்.

பா.ஜ.கவின் தோல்வியை வைத்து காங்கிரசின் வெற்றி அமுல்பேபி ராகுல் காந்தியால் விளைந்த ஒன்று என்று கதர் வேட்டிகள் சொல்வது உண்மையில்லை எனும் அதே நேரத்தில் காவி வேட்டிகள் இது தோல்வியே இல்லை கொஞ்சூண்டு வாக்குகள் மட்டும் குறைந்திருக்கிறது என்று கிசுகிசுப்பதும் ஒரு மோசடியே!

2008-ம் ஆண்டில் பாஜக பெற்ற வாக்குகள் 88,57,340. மொத்த வாக்காளர்களில் இது 33.86 சதவீதம். 2013-தேர்தலில் பாஜக பெற்றிருக்கும் வாக்குகள் 62,73,768. சதவீதத்தில் 19.95. ஆக கடந்த தேர்தலில் இருந்து சுமார் 14 சதவீத வாக்குகளை குறைவாக பெற்றிருக்கிறது பா.ஜ.க. இதைத்தான் கடுந்தோல்வி என ஊடகங்கள் சொல்கின்றன. ஆனால் பா.ஜ.க மட்டும் கடந்த தேர்தலில் இருந்து வெறும் இரண்டு சதவீத வாக்குகள் மட்டும் குறைந்திருப்பதாக கரடியாக கத்துகிறது. அதற்கு ஒரு கணக்கையும் சொல்கிறார்கள்.

தென்னிந்தியாவின் முதல் இந்துத்துவ அரசின் முதலமைச்சராக இருந்த ஸ்வயம்சேவகரும், ஒழுக்க சீலரும், லஞ்ச லாவண்யங்களை எட்டிப் பார்க்காதவருமான எடியூரப்பா பாஜகவில் இருந்து நீங்கி, தனிக்கட்சி ஆரம்பித்து தேர்தலிலும் போட்டியிட்டார். அவரது கட்சி பெற்ற வாக்கு விகிதம் 9.85 சதவீதம். இத்தோடு கனிம வளங்களை மலை மலையாக ஆட்டையப் போட்ட சுஷ்மா ஸ்வராஜின் செல்லத் தம்பிகளும் கேடிகளுமான ரெட்டி பிரதர்சின் பி எஸ் ஆர் சி பி கட்சி இந்த தேர்தலில் போட்டியிட்டு 2.71 சதவீத வாக்குகள் பெற்றிருக்கிறது.

அந்தக் காலத்து வைமானிகா சாஸ்திரத்திலேயே அல்ஜிப்ராவையும், அண்டார்டிகாவையும் கண்டு பிடித்த அறிவாளிகளின் வாரிசுகளல்லவா இவர்கள். அதன்படி ரெட்டி மற்றும் எடியூரப்பாவின் வாக்கு விகிதங்களைக் கூட்டி இந்த ஆண்டு தேர்தலில் பாஜகவின் மொத்த வாக்கு சதவீதம் 32.51 என்று கூறுகிறார்கள். அதன்படி 2008 தேர்தலை விட சுமார் இரண்டு சதவீதம்தம்தான் இந்த தேர்தலில் குறைவு, எனவே மக்கள் பாஜகவை புறக்கணிக்கவில்லை என்று முடிவற்ற டெசிபலில் ஊடகங்களில் கத்துகிறார்கள்.

கர்நாடகா வாக்கு வீதம்
நன்றி : niticentral.com

புள்ளிவிவரங்களே உண்மைகளை கூறிவிடாது. புள்ளிகள் சேர்ந்து எழுப்பும் கோலங்களிலிருந்தே நாம் முழுமையான சித்திரத்தைப் பெற முடியும். ஆனாலும் இங்கே இந்த புள்ளிவிபரங்கள் சேர்ந்து பாஜகவிற்கு அபஸ்வரத்தையே கிளப்புகின்றன.

சென்ற 2008 தேர்தலில் பாஜக பெற்ற 33.86 சதவீத வாக்குகளை விட அதிகமாக காங்கிரசுக் கட்சி 34.76 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது. ஆனால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அப்போதெல்லாம் இந்த வாக்கு மேட்டரை யாராவது சொன்னால் அதை பாஜக ஏற்றதா என்றால் இல்லை.

தற்போதும் இவர்கள் இப்படி எடியூரப்பா மற்றும் ரெட்டி பிரதர்சின் வாக்குகளை அவர்களிடம் அனுமதி வாங்காமல் சேர்த்துச் சொல்வது இருக்கட்டும். இந்த தேர்தல் தோல்வி குறித்து அத்வானி முதல் பொன் இராதாகிருஷணன் வரைக்கும் என்ன சொல்கிறார்கள்? ஊழல் செய்த எடியூரப்பா மற்றும் ரெட்டி காருக்களை நீக்கியதால்தான் இந்த தோல்வி என்றும் கொள்கையில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது என்பதால் இந்த தோல்வி கவுரவமான தோல்வி என்று கௌரவம் சிவாஜி போல ‘கிளிக்கு இறக்கை முளைத்து ஆத்தை விட்டே போயிடுத்து’ என்று சோகப்பாட்டு பாடுகிறார்கள்.

yeddyurappa

இங்கேதான் இவர்களது ஃபிராடுத்தனம் வருகிறது. ஊழல் நடவடிக்கைக்காக வெளியேற்றப்பட்ட எடியூரப்பா தனிக்கட்சி ஆரம்பித்து வாங்கிய வாக்குகள் யாருக்கு விழுந்த வாக்குகள்? அதாவது ஊழல் குற்றச்சாட்டுகளை ஏற்றோ ஏற்காமலோ எடியூரப்பா முகத்திற்காக மட்டும் மக்கள் போட்ட வாக்குகள். அதற்கு எடியூரப்பா மட்டுமே சொந்தம் கொண்டாட வேண்டிய நிலைமையில் பாஜகவின் மொத்த விகிதத்தில் அதை சேர்ப்பது மோசடி இல்லையா?

அதாவது ஊழல் நபர்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அந்த நபர்கள் வாங்கிய வாக்கு சதவீதத்தை மட்டும் தனது மொத்தத்தில் கூட்டிக்கொண்டால் இது திருட்டு மட்டுமல்ல, பாஜகவும் ஊழலை ஆராதிக்கிறது என்றுதானே பொருள்? சூத்திரனைத் தொடமாட்டேன், ஆனால் அவனது கைகளிலிருந்து வரும் காந்தி நோட்டை மட்டும் தொடுவேன் என்ற பார்ப்பன அர்ச்சகர்களின் மோசடிக்கு இணையானது இது.

அடுத்து இது பாஜகவிற்கு விழுந்த வாக்கு என்று சொல்லும் பட்சத்தில் இது ஏன் உண்மையில் பாஜகவிற்கு விழாமல் எடியூரப்பாவிற்கு விழுந்தது என்று விளக்க வேண்டும்? இல்லை இது எடியூரப்பாவிற்கு விழுந்த ஓட்டு என்றால் அதை தனது சொந்தக் கணக்கில் சேர்க்காமல் இருக்க வேண்டும்.

மேலும் எடியூரப்பா ஊழல் செய்ததையும் அங்கீகரித்துக் கொண்டுதான் ஒன்பது சதவீத மக்கள் அவருக்கு வாக்குகள் அளித்திருக்கிறார்கள். அதை அபேஸ் செய்தால் பாஜகவும் ஊழல் தண்ணியில் விளைந்த தாமரைதான் என்று ஒத்துக் கொள்ள வேண்டும். அடுத்து பாஜகவில் கட்சி, கொள்கைக்காக யாரும் வாக்களிப்பதில்லை என்பதையும் இந்த தேர்தல் நிரூபித்திருக்கிறது. எடியூரப்பா என்ற தனிநபரே ஒன்பது சதவீத வாக்குகளை வாங்கியிருக்கிறார் என்றால் சென்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கும் இவரது தனிப்பட்ட செல்வாக்கே காரணம் என்று பொருள்.

அதன்படி தென்னிந்தியாவின் முதல் இந்துத்துவா அரசு என்பது எடியூரப்பா போட்ட பிச்சை என்று அவரது அடிப்பொடிகள் பேசினால் யாரால் மறுக்க முடியும்?

மேலும் வேறுபட்ட கட்சி, வித்தியாசமான கட்சி, என்று வெட்கம் கெட்ட முறையில் பாஜக இனி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். எல்லா ஓட்டுப்பொறுக்கி கட்சிகளைப் போல இங்கும் தனிநபர் வழிபாட்டில்தான் கட்சி ஓடுகிறது. சான்றாக நரவேட்டை மோடியை கட்சியில் இருந்து நீக்கிவிட்டால் குஜராத்தில் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க டெபாசிட் வாங்காது என்பதை சரக்கே இல்லாமல் சவுண்டு விடுவதில் ஆய்வாளரான அரவிந்தன் நீலகண்டன் கூட மறுக்க முடியாது. அதனால்தான் எடியூரப்பா வைத்த முள்ளை முழுங்கவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் அவஸ்தைப்படுகிறது பா.ஜ.க

ஆக “நாங்கள் ஊழலை ஆதரிக்கவில்லை” என்றால் எடியூரப்பா மற்றும் ரெட்டி பிரதர்சின் வாக்கு விகிதத்தை ஏற்கக் கூடாது. ஆனால் மக்கள் எங்களை புறக்கணிக்கவில்லை என்று நைசாக அந்த இருவரது வாக்கு விகிதத்தை சேர்த்தால் “நாங்கள் ஊழலை ஆதரிக்கிறோம்” என்று ஒத்துக் கொள்ள வேண்டும். பச்சரிச் சோற்றில் பருப்பு நெய்யுடன் உப்புப் போட்டு சாப்பிடும் ஸ்வயம் சேவக குஞ்சுகள் யாராவது பதில் தருவார்களா?