privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்தமுமுக தாலிபான்களை முறியடித்த தோழர் பாத்திமா

தமுமுக தாலிபான்களை முறியடித்த தோழர் பாத்திமா

-

வேறு கிராமத்து பையனை காதலித்த ‘குற்றத்திற்காக’ 23 வயதான பழங்குடியினப் பெண்ணை கிராமத்தினர் யார் வேண்டுமானாலும் வன்புணர்ச்சி செய்யலாம் என்று உத்தரவு போட்டு 13 பேரை விட்டு குதற வைத்தது மேற்கு வங்க “காப் பஞ்சாயத்து”. இது பழங்குடிச் சமூக காட்டுமிராண்டிகளின் பொறுக்கித் தனம் என்பதை நாடே ஒத்துக் கொள்கிறது. ஆனால், பெண்களுக்கு உரிய மதிப்பளிக்கப்படும் தமிழகத்தில் இவ்வாறெல்லாம் நடக்கவே முடியாது, இங்கு ஜனநாயகம் தழைத்தோங்கியுள்ளது, என்று யாராவது நம்பியிருந்தால் இந்த கட்டுரையைப் படித்த பின் அவர்கள் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி வடக்கு அம்மாப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த அனிஷ் பாத்திமா என்ற பெண் கோவை அரசு சட்டக்கல்லுரியில் இரண்டாம் ஆண்டு சட்டம் படித்து வருகிறார். கோவை பகுதியில் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி அமைப்பிலும் செயல்பட்டு வருகிறார். இவரது அண்ணன் அலாவுதீனும் பு.மா.இ.மு தோழர்தான். சென்ற ஆண்டு வரை அதே கோவை அரசு சட்டக் கல்லூரியில் படித்து விட்டு தற்போது புதுக்கோட்டையில் வழக்கறிஞராகப் பணி புரிகிறார்.

பொங்கல் மற்றும் தேர்வு விடுமுறைக்கு தமது சொந்த ஊருக்கு வந்த தோழர் பாத்திமா, 27-1-2014 அன்று தமது சொந்த ஊரில் இருந்து கோவைக்கு வழக்கம் போல் தனியார் பேருந்தில் செல்வதற்காக அருகில் உள்ள மீமிசல் செல்லத் தயாரானார். மணமேல்குடியில் இருந்து கோவைக்கு நேரிடையாக பேருந்து இல்லை என்பதால் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மீமிசல் வந்து தனியார் பேருந்தில் கோவைக்கு செல்வது வழக்கம். லக்கேஜ்-ம் இருந்ததால் பஸ் ஏற்றி விடுவதற்காக, அவருடன் தோழர் முத்துகிருஷ்ணன் என்பவரை அவர்கள் குடும்பத்தார் ஏற்பாடு செய்து மீமிசலுக்கு அனுப்பி வைத்தனர்.

இரவு சுமார் 7.30 மணிக்கு இருவரும் மீமிசலில் உள்ள தனியார் பேருந்து அலுவலகம் வந்தனர். இதனை தமிழ்நாடு முசுலீம் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த சில இசுலாமிய இளைஞர்கள் நோட்டமிட்டனர். ஒரு இசுலாமியப் பெண் ‘இந்து’ பையனுடன் இருப்பதை கண்டு பிடித்த மதவெறியர்களின் கோணல் புத்தி தீவிரமாக செயல்பட ஆரம்பித்தது. அந்த தனியார் பேருந்து இரவு 8.00 மணிக்குதான் புறப்படும். நோட்டமிட்ட கோணல் புத்தி இந்த இடைவெளி நேரத்தைப் பயன்படுத்தி மேலும் சிலரை சேர்த்துக் கொண்டது.

இந்தக் கும்பல் அந்த தனியார் பேருந்தின் அலுவலகத்திற்கு ஒருவரை அனுப்பி கோவைக்கு டிக்கெட் இருக்கிறதா? யார், யார் செல்கிறார்கள் என பயணிகள் போல் நோட்டமிட்டு விசாரித்தது. இவர்கள் விசாரித்து முடித்த சில நிமிடங்களிலேயே கோவை செல்லும் பேருந்து அங்கு வந்தது. பேருந்துக்காக நின்ற பயணிகளுடன் தோழர் பாத்திமாவும் பேருந்தில் ஏறி தனது லக்கேஜ்களை ஒழுங்குபடுத்திக் கொண்டு இருந்தார். தோழர் முத்துகிருஷ்ணனும் அவருக்கு உதவியாக இருந்துள்ளார்.

அப்போது பேருந்தில் ஐந்து நபர் கொண்ட தமுமுக கும்பல் திமுதிமுவென ஏறியது. அதில் ஒருவன் தோழர் பாத்திமாவை நோக்கி “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கூறினான். அறிமுகம் இல்லாத நபர்கள் என்பதால் பதில் எதுவும் பேசாமல் லக்கேஜை ஒழுங்குபடுத்தும் வேலையை செய்தார் பாத்திமா.

உடனே அவர்கள், “உன் பெயர் என்ன? இவன் பெயர் என்ன?” என்று கேட்டு மிரட்டினர்.

“நீங்கள் யார்? உங்ககிட்டே என் பெயரை ஏன் சொல்ல வேண்டும்?” என்று கேட்டார் தோழர் பாத்திமா.

உடனே ஆத்திரம் அடைந்த அக்கும்பல், “என்னடி தேவடியா, நீ இந்தப் பயலோட ஓடிப் போறது எங்களுக்குத் தெரியாதுன்னு நெனைச்சிட்டியா? உன்னுடைய பிளான் எல்லாம் தெரியும். மரியாதையா உன் வீட்டு அட்ரசக் கொடு” என்று இசுலாமிய தாலிபான் போலிசாகி மிரட்டினர்.

தோழர் பாத்திமா, “மரியாதையாக பேசு” என்று எதிர்த்துக் கேட்கவே அந்த கும்பலுக்கு ஆத்திரம் தலைக்கேறி கத்த ஆரம்பித்தது. இதற்கிடையில் நேரமும் ஆகி விடவே பஸ் டிரைவர் பஸ்ஸை எடுக்க முயன்றார். ஆனால் அக்கும்பல் பஸ்ஸை எடுக்க விடாமல் டிரைவரை தடுத்தது.

மலாலாபிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட தோழர் முத்துகிருஷ்ணன் அக்கும்பலிடம், “இவங்க என் பிரண்டோட தங்கச்சி. கோவை சட்டக் கல்லுரியில் படிக்கிறாங்க. பேருந்து ஏற்றிவிட அவர்கள் குடும்பத்தினர்தான் என்னை அனுப்பி வைத்தனர்” என்று கூறியுள்ளார். மேலும் அவர் அண்ணன் வழக்கறிஞராக வெளியூரில் இருப்பதாலும், இவருடைய தாய் தந்தையர் வயதானவராகளாக இருப்பதாலும் தான் வந்துள்ளதாக விளக்கியுள்ளார்.

“நீ சொல்ற பொய்யை நாங்க நம்பணுமாடா” என்று கூறி தோழரின் நியாயமான தன்னிலை விளக்கத்தையும் நிராகரித்து விட்டது மதவெறி போதை கும்பல். பிரச்சனை செய்து பேருந்தையும் எடுக்க விடாத நிலையில் புதுக்கோட்டையில் இருக்கும் பாத்திமாவின் அண்ணன் அலாவுதீனின் போன் நம்பரை கொடுத்து பேசச் சொன்னார்கள்.

அப்போது, பேருந்து அலுவலகத்தில் இருந்த ஊழியர்களும், “இப்பெண் ஒரு வருடத்திற்கு மேலாக இப்பேருந்தில்தான் வருகிறார், நீங்கள் அந்த பெண்ணின் அண்ணனுக்கு போன் செய்து கேட்டுக் கொள்ளுங்கள்” என்று கூறி தகராறு செய்த கும்பலை பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்டனர். தோழர் முத்துகிருஷ்ணனும் கீழே இறங்கிவிட்டார்.

அக்கும்பல் அவர் அண்ணனுக்கு போன் செய்து, “உன் தங்கை பெயர் என்ன? ஒரு காஃபிர் பயலோடு ஓட முயற்சி பண்ணுது” என்று கூறியுள்ளனர்.

ஏற்கனவே முத்துகிருஷ்ணனுடன் சென்றதை அறிந்திருந்த அலாவுதீன், “அவர் எங்களுக்கு தெரிந்தவர்தான், நாங்கள்தான் அனுப்பிவைத்தோம், இதில் தலையிட உங்களுக்கு உரிமையில்லை” என்று கூறியுள்ளார்.

உடனே அந்த நபர், “போடா கூட்டிக் கொடுக்கிற பயலே” என்றும் இன்னும் பலவாறும் திட்டி போனை தூண்டித்து விட்டார்.

இந்த இடைவெளியில் பேருந்து புறப்பட்டு விட்டது. பேருந்து புறப்பட்டதை பார்த்த முத்துகிருஷ்ணன் இனி பிரச்சனை வர வாய்ப்பில்லை என்று கருதி மணமேல்குடிக்கு பஸ் ஏறிவிட்டார். ஆனால் வெறிகொண்ட இக்கும்பல் மேலும் சில இளைஞர்களை திரட்டிக்கொண்டு பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் சென்று தோழர் பாத்திமா சென்ற பேருந்தை காட்டுக் கூச்சலுடன் துரத்தினர். கொஞ்ச தூரம் சென்றிருந்த பேருந்தை வழிமறித்து தடுத்து பேருந்தின் முன்புறம் குறுக்கும் மறுக்குமாக இருசக்கர வாகனங்களை நிறுத்தி பேருந்தை செல்ல விடாமல் தடுத்து விட்டனர்.

உடனே வாகனங்களில் இருந்து இறங்கிய 25-க்கும் மேற்பட்ட காட்டுமிராண்டி கும்பல்,“அந்த தேவடியாள தப்பிக்க விட மாட்டோம்” என்று கத்திக் கொண்டு பேருந்துக்குள் ஏறி, “உன் காலேஜ் ஐடியை காண்பி, நீ உத்தமியான்னு பாக்குறோம்” என்று கூறினர். “இந்த தேவடியா இஸ்லாத்தை கெடுக்க வந்தவள் இவளையெல்லாம் கொல்லணும், படிக்கிற திமிருல விபச்சாரம் பண்ணுரா” என்று பலவாறாக வெறிக் கூச்சலிட்டனர்.

ஆனால், தோழர் பாத்திமாவோ தைரியமாக, “உன்னிடம் ஐடி (அடையாள அட்டை) காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை, போலீசை வரச்சொல் அவர்களிடம் காண்பிக்கிறேன்” என்று கூறினார்.

ஒரு பெண் தைரியமாக எதிர்ப்பதை சகிக்க முடியாத அக்கும்பலில் ஒருவன், “என்னடி பொட்ட தேவடியா ஆம்பளைய எதித்து பேசுற, அவள கன்னம் பழுக்குற மாதிரி அடிடா” என்று கத்தினான்.

தாக்குதலுக்கு அக்கும்பல் முயற்சிக்கும் போதும், “ அடித்துப் பாருடா ” என்று தைரியமாக பாத்திமா எதிர்த்தவுடன் சற்று பின்வாங்கிய கும்பல், “அவளை கீழே இறக்குடா” என்று கத்தியதுடன் நிர்ப்பந்தித்து பேருந்தை விட்டு இறக்கியது. தோழரின் லக்கேஜ்கள் அக்கும்பலால் பேருந்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டன. இப்படி தூக்கி வீசியவன் அக்கும்பலால் பாத்திமாவை வேவுபார்க்க முன்கூட்டியே பேருந்தில் ஏற்றி விடப்பட்டவன். அக்கும்பலில் பலர் மதபோதை மட்டுமின்றி குடிபோதையிலும் இருந்தனர்.

தோழர் பஸ்ஸைவிட்டு இறங்கியவுடன் அக்கும்பல் பஸ்ஸை புறப்படச் சொல்லி டிரைவரை மிரட்டியதால் பஸ் புறப்பட்டது. அப்பேருந்து புறப்படும் வரை அனைத்து இதர வாகனங்களும் தேங்கி நின்றன. பேருந்தை நிறுத்திய கும்பல் இட்ட கூச்சல் காரணமாக பொதுமக்கள் 150-க்கு மேற்பட்டோர் கூடி விட்டனர்.

“நைட்டுல தனியா போறியே நீயெல்லாம் நல்ல பொம்பளையா” என்று இறக்கி விட்ட திமிருடன்கேட்ட அந்த இசுலாமியம மதவெறிக் கும்பலிடம், “பொம்பளை என்பதால் தடுத்து நிறுத்துறீங்களே, ஆம்பளைங்க நீங்க இரவிலோ அல்லது யாராவது ஒரு பெண்ணுடனோ வரும் போது உங்களை நான் கேட்டால் பதில் சொல்லுவீங்களா? ஆம்பளைக்கு ஒரு நியாயம் பொம்பளைக்கு ஒரு நியாயமா?” என்று பதிலுக்கு பதில் பேசவே, “நீ படிக்கிற திமிர்லதான இப்படி பேசுற, இனி நீ எப்படி படிக்கிறன்னு நாங்க பாக்குறோம்” என்று மிரட்டினர்.

அதற்கும் “கொஞ்சம் நேரம் இரு; போலீசு வரும் நீங்கல்லாம் அங்க போய் படிப்பிங்க” என்று பதிலடி கொடுக்க அக்கும்பல், “சட்டம் படிக்கிற தைரியத்துல பேசுறீயா, எல்லா சட்ட மயிரும் எங்களுக்கும் தெரியும்.”  என்று கூச்சல் போட்டுக் கொண்டே இருந்தனர்.

குடித்துவிட்டு மதவெறியுடன் குதறும் மிருகங்களுடன் ஒரு இளம் பெண் சாலையில் நின்ற படி, தைரியமாக விவாதிப்பதைப் பார்த்த பொதுமக்கள் வியந்தனர். சிக்கலை சமாளிக்க அக்கும்பலிலேயே இருந்த சிலர் சமதானப் புறாவாக மாறி, “ஒரு பொண்ணு அதுவும் முஸ்லீம் பொண்ணு இப்படியெல்லாம் ஆம்பளைக்கு சமமாக பேசக் கூடாது” என்று கூறி, “நீ ரோட்டில் நிற்காதே, அருகில் உள்ள வீட்டுக்கு வா, அங்கே வைத்து பேசிக் கொள்ளலாம்” என்று கூறினர். இஸ்லாமிய பெண் எப்படி இருக்க வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தையும் தெரிவித்தனர்.

“பஸ்ஸை மறித்து நடு ரோட்டில் என்னை இறக்கும் போது உங்களுக்கு பெண் என்று தெரியலையா” என்று தோழர் கேட்டவுடன் “அது இல்லம்மா… ஒரு பொண்ணு… காலேஜ் போறதுக்கு… எதுக்கு இரவு நேரத்துல… தனியா…” என்று இழுத்துள்ளனர்.

“ஏன் பொம்பளைனா இரவு நேரத்துல பயணம் செய்யக் கூடாதா? அப்படி போனா விபச்சாரியாகவோ, ஓடிப் போறவளாகவோதான் இருக்கணுமா? முஸ்லீம் பொண்ணுன்னா ஆண்களுக்கு அடிமையாத்தான் இருக்கணுமா?” என்று தோழர் பாத்திமா கேட்டார்.

இதனை சகித்துக்கொள்ள முடியாத அக்கும்பல், “நீ ஓடிப்போனா இஸ்லாத்துக்கு அவமானம். நீ எப்படி ஒரு காஃபீர் பையனோட வரலாம்” என்று கேட்டு கூச்சல் போட்டனர்.

மேலும், “உன் அண்ணன், என் தங்கச்சிய யார் கூடவும் அனுப்புவோம். அதக் கேட்க நீ யாருடா என்று கேட்கிறான். இதை இஸ்லாம் ஆண்கள் கேட்டுகிட்டு இருக்கணுமாடி? நீ யாரு கூட வேண்டுமானாலும் பேசுவ, அதப்பாத்துக்கிட்டு சும்மா இருக்கணுமாடி” என்று கேட்டு அடிக்கப் பாய்ந்தனர்.

அதற்கும் தோழர், “என் தனி உரிமையில் தலையிட நீங்கள் யார்?” என்று கேட்க

“இருடி, நீ சட்டம் படிக்கிற திமிர்ல பேசுறியா! உன் ஊர்ல இருந்து நாலு பேர வரச்சொல்லி உன் லட்சணத்த சொல்லுறோம்” என்று பலவாறாக நாக்கூசும் வார்த்தைகளைப் பேசி அவமானப்படுத்த முயன்றனர்.

பஸ்ஸை விட்டு இறக்கியதில் இருந்து பாத்திமாவை முப்பது நிமிடத்திற்கு மேலாக மதவெறியுடன் துன்புறுத்தினர். ஜனநாயக உணர்வு – அதுவும் பெண்ணுக்கு – இருக்கவே கூடாது என்ற கீழ்த்தரமான மதவெறி கோபத்துடன் ஆடிய அந்த கும்பலை எதிர்த்து தன்னந்தனியாக, “பொம்பளையால என்ன செய்ய முடியும்னுதானே அராஜகம் பண்ணுறீங்க? பொம்பளைனா யாருன்னு காட்டுறேன்” என்று பாத்திமா சொன்னதும், “ஏ போடி தேவடியா, எல்லா போலிசும் எங்களுக்கு தெரியும், எல்லா சட்ட மசுறும் எங்களுக்கு தெரியும். சும்மா உதார் விடாதே” என்று திமிராகப் பேசினர்.

இந்நிலையில் தோழர் அலாவுதீன் மற்றும் அவரது மூத்த வழக்கறிஞர் தோழர் ராமலிங்கம் (மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாவட்ட அமைப்பாளர்) ஆகியோரின் நெருக்குதல் காரணமாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டார்கள். போலீசு மதவெறி கும்பலிடம் இருந்து தோழர் பாத்திமாவை மீட்டு விவரத்தை கேட்டுக் கொண்டு இருக்கும் போதே மதபோதையேறிய ‘வீரம் செறிந்த’ கும்பல் செத்த மாட்டிலிருந்து உண்ணி இறங்குவதைப் போல நழுவிக் கொண்டு இருந்தனர். போலீசார், குற்றவாளிகளைப் பிடிக்க முயலுவதை அறிந்தவுடன் இசுலாமைக் காக்க வந்த கும்பல் ஓடி ஒளிந்த விதம், வடிவேலு பாணி நகைச்சுவையை மிஞ்சுவதாக இருந்தது. எல்லா சாதி மதவெறியர்களும் இப்படித்தான் சவுண்டு விட்டு விட்டு யாராவது தட்டிக்கேட்டால் தலை புரண்டு ஓடிவிடுவார்கள்.

“நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று போலிசிடம் தோழர்கள் உறுதி காட்டியதை அறிந்த த.மு.மு.க. மற்றும் ஜமாத் நிர்வாகிகள் அனிஷ் பாத்திமாவை அணுகி, “நடந்த சம்பவம் துயரமானது, இஸ்லாத்தை காப்பதற்காக அவ்வாறு செய்து விட்டனர். ஒரு பெண், போலீஸ் ஸ்டேசனில் இருந்தால் நாலு பேர் நாலு விதமாக பேசுவார்கள். உன் வாழ்க்கை பாதிக்கும். நீ வீட்டுக்குப்போ காலையில் பேசிக் கொள்ளலாம்” என்று சமாதானம் பேசினர். இதுதான் பணிந்தால் அடிப்பது, எதிர்த்தால் கெஞ்சுவது எனும் ஆதிக்கப் பண்பு.

“நான் தவறு செய்யவில்லை; உங்களுடைய ஆட்கள்தான் தவறு செய்துள்ளார்கள்; நான் ஏன் பயப்பட வேண்டும். எனக்கு இதில் அவமானம் என்ன?” என்று கேட்டு வஞ்சகப்பேச்சுக்கு உடன் பட மறுத்து புகார் கொடுக்க தயாரானார்.

இரண்டுக்கும் மேற்பட்ட ஜமாத்தை சேர்ந்த நிர்வாகிகள், முக்கிய புள்ளிகள் உள்ளிட்டு சுமார் 50 – க்கும் மேற்பட்டவர்கள் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் விதத்தில் தோழருடன் சமாதானம் பேசினார்கள். “பல இந்து ஆண்கள் இசுலாமிய பெண்களை ஏமாற்றி லவ் பண்ணி திருமணம் செய்து கொள்ளுகிறார்கள். இதற்கெதிராகத்தான் ‘லவ் ஜிகாத்’ அவசியப்படுகிறது. அதனால்தான் இஸ்லாமிய அமைப்பில் உள்ளவர்கள் உன்னைப் போன்ற இளம் பெண்களை விசாரிக்க வேண்டி வருகிறது. எனவே இந்த நோக்கத்தைப் புரிந்து கொண்டு சமுதாயத்திற்காக விட்டுக் கொடு” என்றும் “வழக்கு கொடுத்தால் உனக்குதான் அசிங்கமாக முடியும்” என்றும் பலவாறாக பேசினர்.

ஆனால், தோழர் பாத்திமா எல்லாவற்றையும் நிராகரித்து விட்டு, போலீஸ் ஸ்டேசன் அருகில் இருந்த மெடிக்கலில் உட்கார்ந்து நடந்த சம்பவம் தொடர்பாக புகார் எழுத ஆரம்பித்த போது சமாதானம் பேச வந்தவர்கள் ஆத்திரம் அடைந்து, மெடிக்கல்காரரிடம் போய் “அந்தப் பெண்ணை வெளியே அனுப்பு. உனது கடையில் அவளுக்கு இடம் அளிக்க கூடாது, வெளியே அனுப்பு, மெடிக்கலை பூட்டு” என்று கூச்சல் போட்டனர்.

மெடிக்கல்காரரோ, “நீங்கள் யார் என் மெடிக்கலை பூட்டச் சொல்லுவதற்கு? அந்தப் பெண் என் நண்பரின் தங்கை. இங்கு இருந்துதான் புகார் மனு எழுதுவார். உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள்” என்று மதவெறி கும்பலை எதிர்த்து நின்றார்.

ஆனாலும், நண்பரின் கடைக்கு பிரச்சினை வேண்டாம் என்று கருதிய தோழர் பாத்திமா போலீசு ஸ்டேசனுக்கு சென்று போலீசாரிடமே பேப்பர் வாங்கி புகார் எழுதிக் கொடுத்தார். போலீசில் புகார் மனு கொடுக்கப்பட்டதை அறிந்தவுடன் சண்டமாருதம் செய்தவர்களும் சமரசம் பேச வந்தவர்களும் தங்களையும் போலீசு விசாரிக்கலாம் என்று கருதி இடத்தை காலி செய்து ஓடினர். போலிஸ் ஸ்டேசனுக்கு வந்த டி.எஸ்.பி இரவு 10.00 மணிக்கு மேல் ஆகிவிட்டதால் தனது வண்டியிலேயே மணமேல்குடிக்கு அழைத்துச் சென்று பாத்திமாவை பாதுகாப்பாக வீட்டில் விட்டுச் சென்றார்.

அடுத்த நாள் 28-1-2014 காலையில் தோழர்களுடன் மீமிசல் சென்று நடவடிக்கை எடுக்கச் சொல்லி வலியுறுத்தப்பட்டது. அப்போது தமுமுக நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் தோழர்களிடம் சமரசம் பேசினார்கள்.

அதாவது, ‘பெண்ணை விசாரித்தது சரி, விசாரித்த முறை சரியல்ல. விசாரித்தவர்கள் அனுபவம் இல்லாதவர்கள். அதனால் மன்னியுங்கள்’ என்று கூறினார்கள்.

“ஒருவரைப் பற்றி விசாரிக்க உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது?” என்று தோழர்கள் கேட்டதற்கு

“சமுதாய நன்மைக்குதான் விசாரிக்குறோம். இந்த விசாரணையை எதிர்ப்பவர்கள் சமுதாயத் துரோகிகள்” என்று கூறினர்.

இதைக் கேட்டவுடன், “ஜெயலலிதா பாபர் மசுதியை இடிக்க கரசேவைக்கு ஆள் அனுப்பியவர், கருணாநிதியோ பிஜேபியை தமிழ்நாட்டுக்குள் அறிமுகம் செய்தவர். அவர்களிடம் மாறி மாறி கூட்டணி வைக்கிறீர்களே, நீங்கள்தான் சமுதாயத் துரோகிகள்” என்று தோழர்கள் பதிலிறுத்தனர்.

அதன்பின், “காஃபீருடன் ஒரு பெண்ணை அனுப்புவது தவறு” என்று பேசினர். அதற்கும் தோழர்கள், “குஜராத் பிரச்சனையை வெளியை கொண்டு வந்தவர்கள் காஃபீர்கள்தான், தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்கள் ஜனநாயகத்துடன் பேசுவதற்கு காரணமே பெரியார் என்ற காஃபீர்தான்” என்று பதில் கூறி இவர்களின் கட்டப் பஞ்சாயத்தை ஏற்க மறுத்தனர். அத்துடன் பெண்களுக்கெதிரான வன்கொடுமை சட்டத்தில் வழக்குப் பதியவும் நிர்ப்பந்தித்தனர்.

இதற்கிடையே கோயமுத்தூர் அரசு சட்டக்கல்லுரி மாணவர்கள் மேற்படி மதவெறி சம்பவத்தை அறிந்து கல்லூரி முதல்வரிடம் முறையிட்டனர். மாணவர்களின் நிர்ப்பந்தத்தால் கல்லூரி முதல்வர் காவல் துறையைத் தொடர்பு கொண்டு நடவடிக்கை விவரங்களை விசாரித்தார். எஃப்.ஐ.ஆர் போடுவதற்கு போலீசும் தயாராகிக் கொண்டு இருந்தது.

எனவே, ‘எந்தப் பெண்ணையும் விசாரிக்கவும் தண்டிக்கவும் தமக்கு மத ரீதியில் உரிமை உண்டெ’ன முழங்கியவர்கள், தற்போது மேலும் இறங்கி வந்தனர். “நடந்தது மொத்தமும் தவறுதான். இனி எந்த பெண்ணின் தனி உரிமையிலும் தலையிட மாட்டோம்” எனப் பேசினர். தவறு செய்த இளைஞர்களின் எதிர்காலம் கருதி எப்படியாவது வழக்கு இல்லாமல் சமரசமாக முடித்துக் கொள்ள மன்றாடினர்.

தனி நபர்கள் மட்டுமே நமது இலக்கல்ல என்பதாலும் மதவெறியர்களை, அத்தகைய சிந்தனைப் போக்கை தவறென உணரச் செய்யும் வாய்ப்பாக பயன்படுத்த முடியும் என்பதாலும் தோழர்கள் பரிசீலித்து பிரச்சனைக்கு தலைமை தாங்கிய ஐந்து பேரும் (மற்றவர்கள் அடையாளம் தெரியததால் தப்பித்து விட்டனர்.)

  1. மதத்தின் பெயரால் தாங்கள் இழைத்த கொடுமைக்காக பொதுமக்கள் முன்னிலையில் தோழர் அனிஷ்பாத்திமாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
  2. மத உரிமை என்ற பெயரில் இனி யாருடைய தனி உரிமையிலும் தலையிடமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.இவற்றையே கடிதமாகவும் கொடுக்க வேண்டும்.

என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இந்த நிபந்தனைகளை தமுமுக நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் ஏற்றுக் கொண்டனர்.

சம்பவம் தொடங்கிய அதே கடைவீதியில், பேருந்து அலுவலகத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் 200 பேர் கூடினர். ஆனால், இந்த நேரத்தில் இந்துத்துவ மதவெறி ஓநாய்கள் இந்த சமரசத்தை தடுத்து கலவரமாக்க முயன்றனர்.

“முசுலிம் கடைகளில் இந்துப் பெண்கள் வேலை செய்கின்றனர். அவர்களின் வண்டிகளில் ஏற்றிச் செல்கின்றனர். இசுலாமிய பெண் மட்டும் இந்துப் பையனுடன் போகக் கூடாதா? இனி இந்துப் பெண்களும் இசுலாமிய கடைகளுக்கு வேலைக்கு போகக் கூடாது” என்பதாக அலப்பரை செய்தனர். மதவெறி நஞ்சைக் கக்கினர்.

இசுலாமிய மதவெறியை எதிர்க்கும் போராட்டத்தில் நைசாக நுழைந்து குளிர் காய நினைத்த இந்துமதவெறிஅமைப்புகளுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது என்பதால் அந்த இடத்தை தவிர்த்து மாற்றிடத்தில் மன்னிப்பு கேட்க வைத்தோம்.

அரை மனதாக சமாதானத்திற்கு ஒத்துக்கொண்ட தோழர் பாத்திமாவிடம் அப்போது, த.மு.மு.க நிர்வாகி ஒருவர், “உன் ஆசை தீர இவனுங்கள செருப்பால கூட அடிம்மா” என்று கூறினார். இவர்களை மன்னிக்கும் மனநிலை முழுமையாக இல்லாத போதும், நாகரீகம் கருதி அவர் அதைச் செய்யவில்லை.

மன்னிப்புக் கடிதம்
மன்னிப்புக் கடிதம்

[படத்தைப் பெரிதாகப் பார்க்க அதன் மீது கிளிக் செய்யவும்]

இந்த நாகரீகத்தை – பெருந்தன்மையை பாத்திமாக்கள் பராமரிப்பதா வேண்டாமா என்பது இசுலாமிய இளைஞர்களின் பொறுப்பிலேயே விடப்பட்டுள்ளது.

இத்தனை ஆண்களின் வெறிக்கூச்சலைக் கண்டும் கலங்காத பாத்திமாவை மிகவும் பாதித்தது சம்பவ இடத்திற்கு வந்த இசுலாமிய பெண்களின் பேச்சுதான். அங்கு குடிசையிலிருந்த இந்துப் பெண்கள் இந்தக் கொடுமை கண்டு கொதித்துப் போய், “பொம்பளைங்க படிக்கிறது தப்பாம்மா? நீ உறுதியா இரு!” என்று தைரியமூட்டிய நிலையில் அங்கு வந்த இசுலாமிய பெண்களோ, “இவளெல்லாம் பொம்பளையா? திமிராப் பேசுறா” என்று பேசியுள்ளனர். என்ன செய்வது, பெண்களேயானாலும் அவர்களிடம் இருப்பது மதக்கருத்து என்பதும் அது ஜனநாயக உணர்வுக்கு எதிரானது என்பதும்தானே கொடுமை!

இசுலாமிய மதவெறியர்களின் நடவடிக்கை இந்து மதவெறியை வளர்க்கவே உதவுகிறது என்பது இச்சம்பவத்திலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்து மதவெறியை எதிர்க்க விரும்பும் எந்த ஒரு இசுலாமிய ஆணும், பெண்ணும் தன் சொந்த மதத்தில் உள்ள தாலிபான்களின் காட்டுமிராண்டித் தனத்தை எதிர்த்து நிற்க வேண்டும் என்பதே கற்க வேண்டிய பாடமாகும்.

இச் சம்பவம் கடற்கரை பகுதி முழுவதும் மிகவும் பரப்பரப்பாக பேசப்படுகிறது. இஸ்லாத்தையும் அதன் பெண்ணடிமைத் தனத்தையும் காக்க வந்த ஆண்களின் ‘வீரம்’, ஜனநாயக உணர்வும் கம்யூனிச சிந்தனையும் கொண்ட பெண்ணின் போராட்டத்தின் முன் மண்டியிட்டது. இப் போராட்டம் இசுலாமிய பெண்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக உள்ளது.

ஒரு இசுலாமிய பெண் யாருடன் பைக்கில் போக வேண்டும் என்பதில் தொடங்கி யாரைக் கல்யாணம் செய்ய வேண்டும் என்பது வரை அவளுடைய சகல செயல்பாடுகளும் தமது ஆதிக்கத்திற்கு உட்பட்டது என்று இசுலாமிய மதவாதிகள் நம்புவதோடு அதை வெறியுடன் வன்முறையின் துணை கொண்டு அமல்படுத்தவும் செய்கிறார்கள். இப்படித்தான் இசுலாமிய மக்களை பொது நீரோட்டத்திலிருந்து பிரித்து தனிமைப்படுத்தி அவர்கள் மீது இந்துமதவெறியர்கள் தாக்குதல் நடத்துவதற்கு உதவி செய்கிறார்கள். எனவே இசுலாமிய மக்களுக்கு இசுலாமிய மதவாதிகள் ஒருபோதும் பிரதிநிதிகளாகவோ, காப்பாளர்களாகவோ இருக்க முடியாது என்பதுடன் அவர்களை பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளியும் விடுகிறார்கள்.

எனவே தமுமுக, தவ்ஹீத் ஜமாஅத் முதலான இசுலாமிய மதவாத அமைப்புகள் இத்தகைய தாலிபான் காட்டுமிராண்டித்தனங்களை நிறுத்த வேண்டும். இல்லையேல் அதே இசுலாமிய மக்களை வைத்து உங்களது நாட்டாமைத்தனத்தை முறியடிப்போம். அதற்கு தோழர் பாத்திமாவின் போராட்டம் ஒரு தொடக்கம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஏற்கனவே சாதி, மத மறுப்பு திருமணங்கள் எமது புரட்சிகர அமைப்புகளில் பகிரங்கமாக நடக்கின்றன. வருங்காலத்திலும் நடத்துவோம்.

இந்துமதவெறியர்களால் தாக்குதலுக்கும், தனிமைப்படுத்தலுக்கும் எதிராக சமரசமற்ற முறையில் போராடும் புரட்சிகர அமைப்புகள் என்ற வகையிலும், இசுலாமிய மக்களை வேறு மத உழைக்கும் மக்களுடன் இணைத்து எல்லா மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கும் போராடுகிறோம் என்ற வகையிலும் இசுலாமிய மக்களின் உண்மையான பிரதிநிதிகள் நாங்கள்தான், உங்களைப் போன்ற மதவெறியர்கள் அல்ல.

  • ஜனநாயக உணர்வு கொண்ட இசுலாமிய ஆண்களே, பெண்களே மதவாத அமைப்புகளிலிருந்து வெளியேறுங்கள்!
  • புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி போன்ற நக்சல்பாரி அமைப்புகளில் அணிதிரளுங்கள்!!

கம்யூனிசமே வெல்லும்!

தகவல் :
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
கோவை.

பின் குறிப்பு:

லவ் ஜிகாத் என்பது இந்து மதவெறி அமைப்புக்களால் உருவாக்கப்பட்ட ஒரு பொய்ப் பிரச்சாரம் என்பதுதான் உண்மை. அதாவது இந்து பெண்களை திட்டமிட்டு காதலித்து மதம் மாற்றி திருமணம் செய்து கொள்வதை இசுலாமிய தீவிரவாதிகள் சதி போல செய்கிறார்கள் என்றே ஆர்.எஸ்.எஸ் கூட்டம் அவதூறு பரப்பி வருகிறது. இந்த கட்டுரையில் லவ் ஜிகாத் எனும் வார்த்தையை பேசிய தமுமுகவைச் சேர்ந்தவர் இந்த பின்னணி, பொருள் தெரியாமல் கூட பேசியிருக்கலாம். ஆனால் இவர்களும் முசுலீம் பெண்களை இந்து மதவெறி அமைப்புகளின் தூண்டுதலால் இந்து ஆண்கள் திட்டமிட்டு காதலித்து திருமணம் செய்கிறார்கள், அதை தடுக்க வேண்டும் என்ற பொருளிலேயே பேசுகிறார்கள், நியாயப்படுத்துகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் மற்றும் இசுலமிய அடிப்படைவாத அமைப்புக்கள் இரண்டுமே தத்தமது பெண்களை வேற்று மத ஆண்களிடமிருந்து காக்க வேண்டும் என்பதையே சாராம்சத்தில் பேசுகிறார்கள். எனவே ஆர்.எஸ்.எஸ் கூறும் லவ் ஜிகாத் எனும் அவதூறை எதிர்க்கும் நாம் மறுபுறம் இசுலாமிய மதவெறியர்கள் இசுலாமிய பெண்களை இந்து அல்லது வேற்று மத ஆண்களிடமிருந்து காப்பாற்றுவதாக செய்யும் அடாவடித்தனத்தையும் கண்டிக்க வேண்டும்.

  1. இது தவறு. ஒரு மதத்தை/இனத்தை சேர்ந்தவர் இன்னொரு மதத்தை/இனத்தை சேர்ந்தவரோடு பழகவே கூடாது என்பது கடைந்தெடுத்த பழமைவாதம். ஒரு இனத்தை மொழியை மதத்தை சேர்ந்தவர் மற்ற பிரிவினரை காதலிப்பதே தவறில்லை எனும்போது அவரை வழி அனுப்ப வந்தது கூட தவறு என்றால் இவர்களை என்ன சொல்வது. உங்கள் மதத்தை நீங்கள் பின்பற்றுவதற்கு உங்களுக்கு எப்படி உரிமை உள்ளதோ, மற்ற மதத்தை பின்பற்றுவதற்கும், மதமே இல்லாமல் இருப்பதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு. ஒரு இசுலாமிய பெண் காபீர் ஆணோடு பேருந்தில் பயணித்தால் என்ன தவறு. என்னமோ நீங்கள் எல்லாம் அரேபியாவிலிருந்து நேரடியாக முளைத்து இங்கு தமிழகத்தில் வந்தீர்களா? 500 வருடங்களுக்கு முன்னர் உங்கள் மூதாதையர் அனைவரும் உங்கள் மொழியில் சொல்வதானால் காபீர் தான். காபீர் – இந்த வார்த்தையே எனக்கு பிடிக்கவில்லை. மதவெறியர்கள் மற்ற மதங்களை சேர்ந்தவரை கீழாக நினைக்க வைக்கும் வார்த்தை. It is a Highly Racial Word. Please, Believe in One God. But not in ONLY GOD. பிள்ளைகளை படிக்க வையுங்கள். முன்னேறுகிற வழியை பாருங்கள். நாலு பேருக்கு உதவுங்கள். நல்லது செய்தால் சொர்க்கம் கிட்டும், பாவம் செய்தால் நரகம் கிட்டும் என்ற அளவில் மட்டும் பிள்ளைகளுக்கு கற்று கொடுங்கள். உங்கள் மதவெறியை பிள்ளைகளிடம் பரப்பாதீர்கள். மதங்கள் மனிதர்களை நல்வழிப்படுத்த மட்டும் பயன்படுத்துங்கள். நாசப்படுத்த பயன்படுத்தாதீர்கள். செத்த பின் மண்ணோடு மண்ணாகவும் இல்லை எரிந்து சாம்பலாகவும் ஆனா பின்னர் மதம் ஏது, மொழி ஏது, இனம் ஏது, தேசம் ஏது. Be Good, Do Good, Simple. Please Don’t complicate.

  2. Nice article…..extremist in the Islamic community should realise this…..Dont try to be a moral police..be polite and humble……The fear of fascist make these moral police to behave like this….No need to fear educate the community and let them realise….u cant change a mind but u can give the knowledge abt who and what u r….so please stop this kind of nonscense….my fellow islamic brothers/////as u are a true muslim dont drag urself in to hellfire…by behaving like this and using the words are….slapping article editor….

  3. இசுலாமிய மதவெறியர்களின் நடவடிக்கை இந்து மதவெறியை வளர்க்கவே உதவுகிறது என்பது இச்சம்பவத்திலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்து மதவெறியை எதிர்க்க விரும்பும் எந்த ஒரு இசுலாமிய ஆணும், பெண்ணும் தன் சொந்த மத்த்தில் உள்ள தாலிஃபான்களின் காட்டுமிராண்டித் தனத்தை எதிர்த்து நிற்க வேண்டும் என்பதே கற்க வேண்டிய பாடமாகும்.

  4. வாழ்த்துக்கள் ஃபாத்திமா மத போதையில் உள்ள ஆண்களுக்கு நீங்கள் ஒர் எச்சரிக்கை மத அறியாமை /பயத்தில் வாழும் பெண்களுக்கு நீங்கள் ஒரு முன்மாதிரி

  5. மதவெறியை மாய்க்க ,

    மனித நேயம் காக்க,

    நக்சல்பாரி கட்சியில் இணையுங்கள்.

    பாத்திமா தோழரின் வீரத்திற்கு வாழ்த்துகள்.

  6. பாத்திமா பெண்களுக்கு முன்மாதிரியானவர்.
    //அக்கும்பலில் பலர் மதபோதை மட்டுமின்றி குடிபோதையிலும் இருந்தனர்//
    அவர்கள் மதுவும் வேறு அருந்துவார்களா?

  7. மதவெறி ஓனாய்களுக்கு தக்க முறையில் பதிலடி கொடுத்த தோழர் பாத்திமாவுக்கு வாழ்த்துக்கள்!!!

  8. குடிபோதையில் ஒரு பெண் என்றும் பாராமல் தகறாரு செய்பவர்கள் எல்லாம் இஸ்லாமியரே அல்ல இவர்களுக்கும் இஸ்லாமிய நெறிகளுக்கும் வெகு தூரம் ஒரு பெண்ணின் படிப்பை காப்பாற்றிய தோழர்களுக்கு வாழ்த்துக்க

  9. துணிச்சலான வீராங்கனை ஃபாத்திமாவுக்கும், துணை நின்ற தோழர்களுக்கும் பாராட்டுக்கள்.

    பயங்கரவாதிகளுக்கும் வெறியர்களுக்கும் மதம் என்று ஒன்று கிடையாது. ரவுடிகளில் கிறித்துவ ரவுடி, ஹிந்துத்துவ ரவுடி என்றெல்லாம் பிரிப்பது மட்டமானதொரு ஓட்டரசியல். தவறு செய்யும் மிருகம் தமுமுகவைச் சார்ந்தோ இருக்கலாம் – ஆனால், இதில் இஸ்லாமும் கம்யூனிஸமும் ஏன் நுழைந்தது?

    காட்டுமிராண்டித்தனத்தை யார் செய்தாலும் பாகுபாடுகள் ஏதுமின்றி தட்டிக் கேட்போம் என்ற நிலையில் இந்த சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதனை வெளியே கொண்டு வந்த வினவு தளம் பாராட்டத்தக்கது.

  10. ஜனநாயக உணர்வு கொண்ட இசுலாமிய ஆண்களே, பெண்களே மதவாத அமைப்புகளிலிருந்து வெளியேறுங்கள்!

    OK
    புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி போன்ற நக்சல்பாரி அமைப்புகளில் அணிதிரளுங்கள்!!
    கம்யூனிசமே வெல்லும்!

    NOT OK! நீங்க இதான் சாக்குன்னு சந்துல சிந்து பாடாதீங்க!

  11. // இசுலாமிய மதவெறியர்களின் நடவடிக்கை இந்து மதவெறியை வளர்க்கவே உதவுகிறது //
    point.

  12. தோழர் பாத்திமாவுக்கு வாழ்த்துகள்..மேலும் அவரின் அண்ணன் இந்த விடயத்தில், மிகவும் பாராட்ட பட வேண்டியவர்…அடக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை ஒதுக்கி, ஒடுக்க வேண்டும்…

    முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள், இந்து அடிப்படைவாத அமைப்புகளுக்கு கொஞ்சமும் குறைந்தது இல்லை என்பதின் எடுத்துக்காட்டு இது..

  13. துனிவுடன் இச்செயலில் ஈடுபட்டு மதவெறிபிடித்த கயவர்களுக்கு புத்தி புகட்டிய தோழர்களுக்கு வாழ்த்துக்கள். த.மு.மு.க நிர்வாகம் மேற்கண்ட இழிசெயலில் ஈடுபட்ட கயவர்களை அமைப்பிலிருந்து நீக்கவேண்டும்.

  14. மன்னிப்பு கடிதத்தின் உச்சியில் ‘அல்லாவின் திருப்பெயரால்’ அப்புடீன்னு இல்லை.இது சும்மா கட்டுக்கதை.

    ஒன்னு ரெண்டு பேர் இந்த மாதிரி நடந்துப்பாங்கன்னு சொன்னா நம்பலாம். ஒரு ஊர்ல இருக்கர எல்லா இசுலாமியர்களும் இப்படி நடந்துகிட்டாங்கன்னு சொன்னா குழந்தை கூட நம்பாது.

    இஸ்லாம் அமைதியின் மார்க்கம்.

    • இஸ்லாம் அமைதியின் மார்க்கம் என்பதில் மறுப்பில்லை. ஆனால் இஸ்லாமியர்கள் அனைவரும் அப்படியா என்பது,பிறப்பால் இந்துவான நான் உங்கள் வீட்டுப்பெண்ணை விரும்பி மனமுடித்துவைக்கச் சொல்லி உங்களிடம் கேட்டால் தெரிந்துவிடும்.

      • ///இஸ்லாம் அமைதியின் மார்க்கம் என்பதில் மறுப்பில்லை. ஆனால் இஸ்லாமியர்கள் அனைவரும் அப்படியா என்பது,பிறப்பால் இந்துவான நான் உங்கள் வீட்டுப்பெண்ணை விரும்பி மனமுடித்துவைக்கச் சொல்லி உங்களிடம் கேட்டால் தெரிந்துவிடும்.///
        இஸ்லாம் என்பது ஒரு வாழ்கை நெறி… அதை ஏற்றவர் தான் முஸ்லீம் .. நீங்கள் என் மகளை மணமுடிக்க வேண்டும் எனில் நீங்கள் முஸ்லீமாக மாற வேண்டும் அல்லது என் மகள் ஹிந்துவாக அல்லது உங்கள் மதத்திற்கு மாறி சென்று விட வேண்டும்.. இதை தான் இஸ்லாம் சொல்கிறது.

        முஸ்லீம்கள் என்றால் உள்ளதால் ஏற்று படைத்த ஓர் இறைவனை வணங்கி அந்த இறைவன் சொன்ன படி வாழ்பவன் தான் … பேர் வைத்தவர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல..

        இந்த உலகத்தில் உள்ளவர்களை முஸ்லீம்களாக மாற்ற வேண்டும் என்பது எங்களின் கொள்கை அல்ல.. எங்களுக்கு கிடைத்த சத்தியத்தை பிறருக்கு ஏத்தி வைக்க வேண்டியது தான் எங்கள் மீது கடமை .. இஸ்லாம் தெரியாதா பெயர் அளவில் முஸ்லீம்களாக வாழும் முஸ்லீம்களை பார்த்து நீங்கள் எடைபோடுகிறீர்கள் இஸ்லாமியர்கள் இப்படி தான் என்று…

        • abdullah,நான் இந்துவாவே இருக்க விரும்பி , என் மனைவி முஸ்லிமாவே இருக்க விரும்பினால் ?

        • abdullah,

          //நீங்கள் என் மகளை மணமுடிக்க வேண்டும் எனில் நீங்கள் முஸ்லீமாக மாற வேண்டும் அல்லது என் மகள் ஹிந்துவாக அல்லது உங்கள் மதத்திற்கு மாறி சென்று விட வேண்டும்.. இதை தான் இஸ்லாம் சொல்கிறது.//

          பொய்.

          ஒரு வரியில் இரண்டு பொய்கள்.

          முகமதியத்தின் படி,

          முகமதியப்பெண் முகமதியரல்லாதவரை மணமுடிக்கவும் முடியாது.

          முகமதியரல்லாதவரின் மதத்திற்கும் மாற முடியாது.

          மீதியுள்ள வரிகளிலும் பொய்கள் உள்ளன.

    • நீங்க லூசா இல்லை லூசு மாதிரி நடிக்குறீங்களா??? :p அந்த லெட்டெர போலீஸ் எழுதி கொடுத்து கையொப்பம் வாங்கியிருந்தால்???? போலிசும் கட்டாயம் ‘அல்லாவின் திருப்பெயரால்’ அப்புடின்னு போடணுமா??? :/ என்னய்யா உங்க அறிவு 🙁

  15. நான் ஒரு முஸ்லிம் பெண் என்பதால் தானே உங்களுக்கு இத்தனை ஆவேசம் ! நாங்கள் குடும்பத்தோடு இந்து மதத்துக்கு மாறி விடவா ? என்று ஒரு கேள்வி கேட்டிருந்தால் எல்லோரும் ஆடிப் போயிருப்பார்கள் !

  16. சகோதரி பாத்திமா அவர்களே,

    இந்தச்செயளை நீங்கள் வீரமாக நினைப்பதை நான் கோழைத்தனமாக நினைக்கிறேன். ஏன் என்றால் நீங்கள் நாத்தீக வாதியாக இருப்பது எந்த விதத்திலும் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பில்லை ஆனால் நாத்தீகவாதியாக இருந்துகொண்டு புர்க்காஹ் என்னும் இஸ்லாமியப் பெண்கள் அனியும் ஆடையை நீங்கள் அனிவது தான் ஒரு இழிவானச் செயலாக கருதுகிறேன். நீங்கள் நாத்தீக வாதியாக இருந்தால் அப்படியான ஒரு ஆடையை அனியும் அவசியம் உங்களுக்கு ஏன் வந்தது _______________________________________ உங்களை யாரும் கேட்க்கப்போவது இல்லை. ஏற்க்கனவே பலமுறை இதுபோன்ற பிரச்சனைகளில் தமுமுக போன்ற இஸ்லாமிய இயக்கங்கள் பெண்களை காதல் என்றப் பெயரால் மற்ற ஆண்களுடன் சென்று கற்ப்பு,மானம், பொறுளாதாரம் ஆகியவற்றை இலக்க இருந்த பெண்களை தடுத்து அவர்கள் குடும்பத்துடன் ஒப்படைத்த கதைகள் ஏராளம். இப்படி ஒரு சமுதாய அக்கறையை நீங்கள் தாலிபான்கள் என்றால் நாங்கள் தலீபான்களாகவே இருந்துவிட்டுப் போகிறோம்… இந்தச் செயல் ஒருபோதும் வீரம் ஆகாது… நடுநிலையாளர்களுக்கு புரியும் இது என்னவென்று…

    என்றும் அன்புடன்
    அ.மு.ஹாரிஸ்

    • //நாத்தீகவாதியாக இருந்துகொண்டு புர்க்காஹ் என்னும் இஸ்லாமியப் பெண்கள் அனியும் ஆடையை நீங்கள் அனிவது தான் ஒரு இழிவானச் செயலாக கருதுகிறேன். நீங்கள் நாத்தீக வாதியாக இருந்தால் அப்படியான ஒரு ஆடையை அனியும் அவசியம் உங்களுக்கு ஏன் வந்தது//
      புர்காவை பாத்திமா அணிந்திருந்தார் என்று கட்டுரையில் வினவு சொல்லவில்லை.வீரம் கொண்ட பாத்திமா பெண் அடிமைதன புர்காவை அணித்திருப்பார் என்பது நம்ப முடியாதது.
      பாத்திமாவின் சகோதரரின் பதில் மிக நியாயமானது “இதில் தலையிட தலிபான்களுக்கு உரிமையில்லை”

    • // இப்படி ஒரு சமுதாய அக்கறையை நீங்கள் தாலிபான்கள் என்றால் நாங்கள் தலீபான்களாகவே இருந்துவிட்டுப் போகிறோம்… இந்தச் செயல் ஒருபோதும் வீரம் ஆகாது… நடுநிலையாளர்களுக்கு புரியும் இது என்னவென்று…//

      அதான் அந்த வீரர்கள் மன்னிப்பு கடிதம் எழுதி விட்டனரே ,பொறவு நீ ஏன் பாய் டென்சன் ஆவுற…?

    • சகோதரி பாத்திமாவினை ‘நாத்திகவாதி’ என முத்திரை குத்தும் நீங்கள் என்ன புனிதரா ? அல்லது இறைதூதரா?

  17. ஐயோ, இவனுங்க பண்ற அடாவடிக்கு அளவே இல்லை. தென்காசி மெளண்ட் ரோடு, கொடிமரம், பெட்ரோல் பங்க் ஆட்டோ ஸ்டாண்டுலே இவனுங்க பண்ற “துப்பறியும்” வேலை சகிக்காது. த.மு.மு.க மட்டும் இல்லை, த.த.ஜ, இ.த.ஜ ந்னு எல்லா இயக்க வெறியர்களும் இந்த விஷயத்துலே ஒண்ணு கூடிடுவாய்ங்க. ஒரு இஸ்லாமியப் பெண் இஸ்லாமியரல்லாத ஆண் கூட பேசினாலோ, பழகினாலோ உடனே கண்ணு, காது, மூக்கு வைச்சு வீட்டுக்குத் தெரியப்படுத்தி, ஜமாத்லே சொல்லி அசிக்கப்படுத்திடுவானுங்க. இவர்களது வருமானம் பாதிக்கப்படுமென்று அந்தப்பகுதிலே இப்போ வரைக்கும் மினி பஸ் வசதியை வரவிடாமல் செய்வது இந்த தமுமுக ஆட்டோகாரர்கள்தான்.

  18. The author of this article tries hard to imply to the readers that those culprits are Islamic extremists by calling them Islamiya madhaveriyargal in each and every sentence, but does Islam support such immoral behavior? No! The author is probably an Atheist who just wants to defame a religion by name-calling. And, what is he trying to achieve by using cuss words which he may not even have heard himself? Yet he has written the article as if he had been on the bus. He is just an Islamophobic himself who is just furthering the hate. Islam is against women abuse and it also prohibits alcohol. Anyway, those culprits don’t represent Islam. This is a case of misogeny and male superiority complex.

  19. சாராயமும் சிகரெட்டும் கராம் என்ரு ஒரு இசுலாமிய நன்பர் சொல்லியதாய் நியாபகம்.இவர்கலுக்கு அந்த பென்னை மிரட்ட என்ன தகுதி இருக்கிரது

  20. நான் முன்பு இட்டகருத்தை வினவுதளம் ஏன் வெளியிடவிள்ளை இது தான் உங்கள் நடுநிலைமையா…? ஆசிரியரே…?

  21. அனிஸ் பாத்திமாவின் மனோதைரியம்!
    ____________________________________

    பாராட்டப்படவேண்டியது மிகவும் அவசியம்.தோழரின் தைரியத்தை அனைத்து பெண்களும்

    கைக்கொள்ளவேண்டும்.அன்றாடவாழ்வில் நாம் சந்திக்கும் பெண்கள், இவ்வாறு போராடுவது மிகவும்

    குறைவு.இவர் பு.மா.இ.மு இயக்கத்தில் இணைந்து போராட்டத்தில் பயிற்சி பெற்றதினால் ஏற்பட்ட

    மனோதிடம்தான் விட்டுக்கொடுக்காமல் போராடமுடிந்தது.எனவே அனைவரும் போராடுவோம்

    வெற்றி பெறுவோம்.

  22. சகோதரி பாத்திமா நாத்திகவாதி என்றால் எதற்கு இஸ்லாமிய மத கலாச்சரமான பர்தா அனிந்து சென்றார் என்று தெரியவில்லை. சரி இந்து நன்பரோடு சென்றார் என்று வைத்துக்கொள்வோம் பெண்ணின் சமுதாயத்தை சார்ந்தவர்கள் தங்கள் சகோதரி என்பதால் இரவு நேரத்தில் பஸ்ஸில் அதுவும் ஒரு மாற்று மத சகோதரோடு செல்லும் போது யாராக இருந்தாலும் கேட்க்கத்தான் செய்வார்கள் அது போல கேட்டதற்கு இவர்கள் காவல்நிலையத்தில் வழக்கு தொடுத்து அந்த வழக்கை காட்டி ஒரு சிலரிடம் இதனை எழுதி வாங்கிருப்பார்கள் என்று நினைக்கிறேன். தமுமுக விடம் இந்த பருப்பெல்லாம் வேகாது. ஆகவே இது யாரோ தனிப்பட்டவர்கள் எழுத்திகொடுத்த ஒன்றாக இருக்கும்.

    ஒரு ஹிந்து பெண் ஒரு முஸ்லிம் உடை அணிந்து முஸ்லிமாக அடையாளப்படுத்திக்கொள்ளும் இளைஞரோடு தனித்து இரவு நேரத்தில் பயணித்தால் அந்த சமூகத்தை சார்ந்தவர்கள் என்ன ஏது என விசாரிக்க மாட்டார்களா…. இதற்கும் தாலிபான்களுக்கும் என்ன சம்மந்தம். ஒரு தனிப்பட்ட முறையில் நடந்த பிரச்சனையை மதவாதிகளின் பிரச்சனைபோல சித்தரித்து வெளியிட்டுள்ள வினவை வண்மையாக கண்டிக்க வேண்டும்.

    இது குறித்து முழு விசாரணை நடைபெற்று வருகிறது உண்மையை விரைவில் வெளியிடுவோம்…

    • பாத்திமா ஏன் பர்தா அணிந்து போனார்….? நாத்திகவாதினா ஏன் மத அடையாளத்தோட போனாங்கன்னு கேட்கும் அறிவு ஜீவிகளே….! மற்றும் இதர அட்டகத்தி வீரர்களே…!

      இஸ்லாமிய மத வெறியர்களை களத்தில் நின்று எதிர்கொண்ட பெண்ணின் மீது அவதூறு சொல்ல உங்களுக்கு தகுதி இல்லை. அவர் மத அடையாளத்தை காட்டினார் என்பதா பிரச்சினை இப்போது…? அவர்களை கண்காணிக்கவும் கேள்வி கேட்கவும் மத வெறியர்களுக்கு யார் அதிகாரம் தந்தது….? என் நண்பனுடன் பேருந்தில் பயணிப்பது எனது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. சமுதாயம் என்ற பெயரால் பெண்களை அடிமைபடுத்தும் இந்த இழி நிலை இந்து இஸ்லாம் கிறித்தவம் என எதில் இருந்தாலும் தவறுதான்.

      இதில் நண்பர் அன்பரசன் ஆதாரத்தை வெளியிடுவேன் என்று வேறு கூறுகிறார்..! சீக்கிரம் ஆராய்ந்து ஆதாரங்களுடன் அறிக்கையை கொடுக்க வேண்டுகிறேன்.
      இது மெய் நிகர் உலகம் தானே என்ன வேண்டுமானாலும் பேசலாம் பின்னர் மறந்துவிடலாம் என்ற காரணத்தினால் விருப்பம் போல் பிதற்றுவது… சரியல்ல.

    • என்ன பாய் உளறுற…. //….எதற்கு இஸ்லாமிய மத கலாச்சரமான பர்தா அனிந்து சென்றார்// ஏன் ,பார்தாவுக்கு ஏதாவது பைரேடெட் ரைட்ஸ் வாங்கி வச்சிருக்கீயா.

      நீ எழுதி இருக்கறத ஒருக்கா நீயே படிச்சி பாரு …..

    • Who are u to ask questions with vulgar words in the public place ?

      //அது போல கேட்டதற்கு இவர்கள் காவல்நிலையத்தில் வழக்கு தொடுத்து அந்த வழக்கை காட்டி ஒரு சிலரிடம் இதனை எழுதி வாங்கிருப்பார்கள் என்று நினைக்கிறேன். தமுமுக விடம் இந்த பருப்பெல்லாம் வேகாது.

  23. எல்லா ஆதிக்க புத்தியும் பெண்களின் ….. தான் தனக்கான குலப்பெருமையை தேடுகின்றது… எல்லா மதமும் ஆணாதிக்க மதம்தான்
    குறிப்பாக வரதட்ச்சனை எனும் கொடுமையை கொடுக்க இயலாமல் முதிர் கன்னியாகும் பெண்களுக்கு எதிரா இந்த கொடுமையை முழுமையாக கலைய இயலாத இவர்கள் தான் (இதுல இஸ்லாம் வரதட்சனையை இஸ்லாம் ஆதரிக்க வில்லை என சொல்லுவாங்க) அந்த முதிர் கன்னி யாரிடமாவது பேசினா கூட தடி எடுத்துட்டு ஓடி வர்ரவனுக…
    ஒரு வேளை (மூணு பெண்ணுங்கள் எனும் மலையாளப்படத்தில் வரும் வ்சனம் போல்) இதற்க்கு காரணம் வாய்ப்பு கிடைக்காத கோவமா கூட இருக்கலாம்
    அந்த படத்க்தின் வசனம் “ஒரு வேளை எவனுக்காவது வாய்ப்பு கிடைச்சு உள்ள இருப்பானோனுதான் என் போன்ற முதிர் கன்னி வீட்டின் கதவை கூட்டமாக வந்து தட்டுகிறார்கள் வாய்ப்பு கிடைக்காதவனுக

  24. இந்தச்செயளை நீங்கள் வீரமாக நினைப்பதை நான் கோழைத்தனமாக நினைக்கிறேன். ஏன் என்றால் நீங்கள் நாத்தீக வாதியாக இருப்பது எந்த விதத்திலும் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பில்லை ஆனால் நாத்தீகவாதியாக இருந்துகொண்டு புர்க்காஹ் என்னும் இஸ்லாமியப் பெண்கள் அனியும் ஆடையை நீங்கள் அனிவது தான் ஒரு இழிவானச் செயலாக கருதுகிறேன்.

    • நல்ல தம்பி அருமையான பதிலுங்கோ ,இவர்களுக்கு மதம் வேண்டாம் ,பிறகு மதம் வலியுறுத்தும் ஆடை மற்றும் எதற்கு ? மதம் தவிர வேறு எவ்வகையிலும் தொடர்பு இல்லாத அரபு மொழியில் பெயர் எதற்கு ?மதத்தை துறந்து போல ஆடையையும் பெயரையும் மாற்றிக் கொள்ளவேண்டியதுதானே

      • எஸ்.இப்ராகிம் அவர்களே,

        உங்கள் ஆலோசணைக்கு மிக்க நன்றி,ஆடையயும் பெயரையும் மாற்றிக்கொள்வார்கள்

        விரைவில்.அராபியர்கள் மதத்தை துறந்துவிட்டால் எந்த ஆடையை உடுத்துவது எந்த மொழியில்

        பெயர்மாற்றிக்கொள்வது????

      • //இவர்களுக்கு மதம் வேண்டாம் ,பிறகு மதம் வலியுறுத்தும் ஆடை மற்றும் எதற்கு ?//

        பிறகு எதற்க்காக சௌதி அரேபியாவில் முஸ்லிம் அல்லாத பெண்களையும் புர்கா அணியுமாறு கட்டளையிடுகிறார்கள் ??

    • சகோதரி பாத்திமாவினை ‘நாத்திகவாதி’ என முத்திரை குத்தும் நீங்கள் என்ன புனிதரா? அல்லது இறைதூதரா?

  25. Well done Fathima,
    Well done Comrades,

    Those who say that those fanatics are not representing Islam are lying. It is those fanatics who represent the true Islam of Muhamad (Muhamadism).

    Travelling unaccompanied by a male muslim maharam relative is haraam.
    Marrying a non-muhamadan or befriending them is haraam.
    etc is true Muhamadism.

    I will explain my claim in the evening. Let’s see if the liers can prove their lies.

  26. இசுலாமிய மதவெறியர்களின் நடவடிக்கை இந்து மதவெறியை வளர்க்கவே உதவுகிறது என்பது இச்சம்பவத்திலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்து மதவெறியை எதிர்க்க விரும்பும் எந்த ஒரு இசுலாமிய ஆணும், பெண்ணும் தன் சொந்த மதத்தில் உள்ள தாலிபான்களின் காட்டுமிராண்டித் தனத்தை எதிர்த்து நிற்க வேண்டும் என்பதே கற்க வேண்டிய பாடமாகும்…………… அருமை. குஜராத்தில் கலவரத்திற்கு அடிப்படை காரணம் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில எரிப்பு.

  27. ஏழைப் பெண் ரிசானாவின் மரணத்தின்போது
    மவுனம் காத்த மரமண்டைகள்….
    நபிகள் நாயகம் சொல்வதை முழுதாக ஏற்கும்
    “தாடி” ஆசாமிகள் கீழே உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லவும்.
    1) இஸ்லாமியர்கள் செல்போன் வைத்துக் கொள்ளலாமா?
    2) ஒட்டகத்தில் பிரயானம் செய்யாமல் ஒய்யாரமாக போர்டு காரில் செல்லலாமா?
    3)நபிகள் நாயகம் ஓலைக் குடிசையில் வாழ்ந்தார்: 9 ஆம் மாடியில் அவரது
    வாரிசுகள் வாழலாமா?
    4) தலைக்கு கேசச் சாயம் பூசலாமா?
    இன்னம் இருக்கு….

  28. மிகவும் நடுநிலையாக எழுதப்பட்டுள்ள செய்தி. சகோதரி பாத்திமாவின் துணிச்சலுக்குப் பாராட்டுக்கள். முசுலிம்கள் மற்றைய மதத்தவர்களை காபிர்கள் என்று இகழ்வது அவர்களின் மதத்தின் கேவலமான தன்மையையே காட்டுகிறது. எந்த மதத்தினைக் கடைப்பிடிக்க வேண்டும், எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும், யாருடன் செல்ல வேண்டும், யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பதெல்லாம் தனிநபர் உரிமை. அவரின் குடும்பத்தவர்கள் வேண்டுமானால் அறிவுரை சொல்லலாம், முன்னுதாரணமாக நடந்து காட்டலாம், உதவிகள் புரியலாம். ஆனால் அவற்றை தீர்மானிக்க மற்றையவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. சகோதரி பாத்திமாவினை ‘நாத்திகவாதி’ என முத்திரை குத்தி இங்கே பின்னுட்டமிடும் நபர்களெல்லாம் புனிதர்களா? அல்லது இறைதூதர்களா?

  29. இந்த “கலாச்சாரக் காவலர்களில்” அத்தனை பேருமே ஊரரிந்த பொம்பள பொருக்கியாகத்தான் இருப்பான். தனக்கு இனங்காத பெண்களை பற்றி பொய்யான தகவல்களை பரப்புவதுதான் இவர்களின் முக்கிய வேலையே. இப்படியானர்களை தைரியமாக எதிர்கொன்ட தோழிக்கு வாழ்த்துகள்.

  30. நடந்த சம்பவம் கண்டிக்கதக்கது.ஒரு சில சமயத்தில் இது போல் அசம்பாவிதம் பரவலாக நடப்பதால் அவர்கள் அத்துமீறி இருக்கலாம்.சந்தடி சாக்கில் வினவு விஷத்தை கக்கி இருப்பதுதான் மிகவும் கண்டிக்க தக்கது.

    • ‘இது போல் அசம்பாவிதம் பரவலாக நடப்பதால்’???
      எதனை அசம்பாவிதம் என்கிறீர்கள்?

      • இனியன்,

        [1]உங்கள் வீட்டுப் பெண்களை “இந்து-முஸ்லீம்” மத வெறியர்கள் எப்படி ஏசினால் பொறுத்துக் கொள்ளவாயா ?

        [2]எம் தமிழ்ச் சகோதிரியை வார்த்தையால் அசிங்கப் படுத்தும் இந்த முஸ்லீம் மத வெறியர்களுக்கு நபிகள் தத்துவப்படி என்ன தண்டனை ? நாக்கை …..லாமா?

        They [Muslim Terrorist] used these words against my sister பாத்திமா:
        [1] “என்னடி தேவடியா, நீ இந்தப் பயலோட ஓடிப் போறது எங்களுக்குத் தெரியாதுன்னு நெனைச்சிட்டியா?

        [2]“போடா கூட்டிக் கொடுக்கிற பயலே”

        [3]“அந்த தேவடியாள தப்பிக்க விட மாட்டோம்”

        [4]“இருடி, நீ சட்டம் படிக்கிற திமிர்ல பேசுறியா!

        [5]“ஏ போடி தேவடியா, எல்லா போலிசும் எங்களுக்கு தெரியும், எல்லா சட்ட மசுறும் எங்களுக்கு தெரியும். சும்மா உதார் விடாதே”

        //எதனை அசம்பாவிதம் என்கிறீர்கள்?

        • இனியன்,

          I am really sorry for misinterpreting your comment 35.1 and answering in my comment 35.1.1.
          My comment is only fit for s.a.ibrahim. for his comment 35.

          I am really sorry for my mistake.

          I am having a doubt. Can you clarify?

          எம் தமிழ்ச் சகோதரியை[பாத்திமாவை] வார்த்தையால் அசிங்கப் படுத்தும் இந்த முஸ்லீம் மத வெறியர்களுக்கு நபிகள் தத்துவப்படி என்ன தண்டனை ? நாக்கை …..லாமா?

            • இனியன்,

              [1]எம் தமிழ்ச் சகோதரியை[பாத்திமாவை] வார்த்தையால் அசிங்கப் படுத்தும் இந்த முஸ்லீம் மத வெறியர்களுக்கு நபிகள் தத்துவப்படி[இஸ்லாமிய மார்க்கப்படி] என்ன தண்டனை ?

              [2]பொதுவாக பெண்களை வார்த்தையால் அசிங்கப் படுத்தும் குற்றதிற்க்கு சவூதி அரேபியாவில், நபிகள் தத்துவப்படி[இஸ்லாமிய மார்க்கப்படி] என்ன தண்டனை ?

              [3]என் கேள்வியை தவறாக நினைக்க வேண்டாம். உண்மை அறியவே கேட்கிரேன்.

              with regards,
              K.Senthilkumaran

              • இஸ்லாமியர் அல்லாதவர் என்ற வகையில் எனது பதிலை இங்கே கூற விரும்பவில்லை.

                ஆனால் உங்களது கேள்விகளை வெளிப்படையாக மதங்கள் குறித்து விவாதிக்கக்கூடிய எனது இஸ்லாமிய நண்பரிடம் கேட்டபோது அவர் கூறிய பதில் வருமாறு:

                “‘இஸ்லாமிய மார்க்கப்படி’ என்று பொதுவானதொன்றைக் கூற முடியாதென்றும் நாட்டுக்கு நாடு, கடும்போக்கு அல்லது மென்போக்குவாதிகளின் ஆதிக்கத்தைப் பொறுத்து, தீர்ப்புக்கள் அமையும். அதேநேரம் ஆனால் இஸ்லாமிய மார்க்கப்படி எடுக்கப்படும் தீர்ப்பு பெரும்பாலும் அந்தப் பெண்ணிற்கு எதிராகவே அமைவதற்கான சாத்தியங்கள் அதிகம். காலவோட்டத்திற்கும் நாகரீக வளர்ச்சிக்கும் ஏற்ப மாற்றங்களை உள்வாங்க மறுக்கும் பழைமைவாதிகள் மதத்தின், மதம்சார்ந்த கலாச்சாரத்தின் காவலர்களாக தம்மைக் காட்டிக்கொள்வதால் வரும் சிக்கல் இது.”

          • நபிகள் தத்துவ படி ,அந்த பொண்ணா தான் கல்லால அடிச்சு கொல்லணும். அங்க பிரச்சன பண்ணியவர்களுக்கு 15 அல்லது 16 வயது சிறுமியை நிக்கா செஞ்சு கொடுக்கணும். இதத்தான் நபி செஞ்சாரு….oooo…..

        • செந்தில்குமரன், உங்களுக்குத் தமிழில் எழுதப்பட்டுள்ளவற்றைப் புரிந்துகொள்ள முடியாதிருக்கிறதா?
          மேலே இப்ராஹிம் “ஒரு சில சமயத்தில் இது போல் அசம்பாவிதம் பரவலாக நடப்பதால் அவர்கள் அத்துமீறி இருக்கலாம்” என்று தமுமுக செய்திருக்கும் அத்துமீறலை நியாயப்படுத்துகிறார். இஸ்லாமியப் பெண்களுடன் வேற்றுமத ஆண்கள் பரவலாக ஏதோ அசம்பாவிதங்களில் ஈடுபடுவதாக அர்த்தப்படும் அந்தப் பின்னூட்டத்தைப் பற்றிக் கேள்வியெளுப்பினால் நீங்கள் எதற்குமே சம்பந்தமில்லாத பின்னூட்டமிடுகிறீர்கள்.

  31. காதலிக்கிறேன் என்ற பெயரில் பாஸிச சக்திகள் முஸ்லிம் பெண்களை சீரழிப்பதால் இது போன்று முஸ்லிம் பெண்கள் மாற்று மதத்தினருடன் செல்லும் போது அவர்களை விசாரித்து அந்த பெண்களை குடும்பத்துடன் சேர்த்த சம்பவங்கள் பல இஸ்லாமிய இயக்கங்களால் நடந்து இருக்கின்றன.ஆனால் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இந்த விசயத்தை கையாண்ட விதம் நாகரிகமற்றது.கண்டிக்கத்தக்கது.இவர்கள் இந்த அமைப்பில் இருந்து இருக்க மாட்டார்கள்.ஏனென்றால் நிர்வாகிகள் ஆலோசனைப்படிதான் செயல்பட்டு இருப்பார்கள்.அல்லது தனிச்சையாக செயல்பட்டு இருப்பார்கள்

    • இஸ்லாமிய இயக்கங்கள் பொதுவிடங்களில் யாரையும் விசாரிப்பதற்கு (அவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும் கூட) யார் அதிகாரம் கொடுத்தார்கள்? தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதற்கான அதிகாரத்தினை கையில் எடுப்பதற்கு நீங்கள் யார்?
      இந்தியாவொன்றும் சவூதி அரேபியா கிடையாது மதத்தின் பெயாரால் பெண்களை முடக்கி வைப்பதற்கு.

      • இஸ்லாமிய பெண்களை திட்டமிட்டு சிரழிக்க வேண்டும் என்ற நோக்கில் முஸ்லிம் பெண்களை காதலிப்பதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இஸ்லாமிய சமுதாய அமைப்புகள் ஈடுபடமால் வேறு யார் செய்வார்கள்.இது போன்று வரும் பெண்களை விசாரித்து அவர்கள் குடும்பத்தை வரவழைத்து ஒப்படதைத்த சம்பவங்கள் பல நடந்துள்ளன.இதில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் அணுகுமுறை தவறானது தவிர விசாரிப்பதில் தவறு காண இயலாது.இஸ்லாமிய மார்க்கப்படி ஒரு பெண் தகுந்த துணையின்றி மற்ற ஆண்களுடன் செல்வதை தவறு என்பதை எடுத்து சொல்வோம்.

        • “விசாரிப்பதில் தவறு காண இயலாது.”
          பொதுவிடங்களில் யாரையும் விசாரிப்பதற்கு (அவர் எந்த மதத்தவராயினும்) ஒரு மத அமைப்பிற்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? அதிகாரத்தை கையில் எடுக்க நீங்கள் யார்??
          வயதிற்கு வந்த ஒருவர் யாருடன் போகவேண்டும், யாரைக் காதலிக்கவேண்டும், யாரைக் கல்யாணம் பண்ண வேண்டும் என்று கட்டுப்படுத்தும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.
          மதவெறி மற்றும் சாதிவெறி _________ (மன்னிக்கவும் எனக்கு வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை), எந்தச் சமூகத்தைச் சார்ந்தவராயினும், இடங்கொடுக்க முடியாது.

    • மாற்று மதத்தவரை ஒருவர் காதலிப்பது தவறா?
      இதே ஒரு இசுலாமிய இளைஞன் மாற்று மத பெண்ணை காதலித்தால் இதே அளவு எதிர்ப்பீர்களா?
      எந்த நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் நண்பரே?
      மதத்தை நல்ல ஒழுக்கங்களை கற்று தர பயன்படுத்துங்கள்.
      மனிதர்களின் சுதந்திரத்தில் கையை வைக்காதீர்கள்.
      இனியனின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.
      பொது இடங்களில் தங்கள் குடும்பத்தை சேராத ஒரு பெண்ணை விசாரிக்க இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது. உங்கள் சுதந்திரம் உங்கள் வரை தான். தமிழ்நாடு தாலிபான் அல்ல.

  32. இது முற்றிலும் உண்மைக்கு முரணான செய்தி என்பதும் காவிகளின் சூழ்ச்சி என்பதும் அவர்களின் எழுத்துக்களில் இருந்து நன்கு தெரிகிறது. இந்த காவிக் கும்பல் சமீபகாலமாக தமிழ்நாட்டை குஜராத்தாக ஆக்க திட்டமிட்டுள்ளதும் அதற்கான சூழ்ச்சியில் இதுவும் ஒன்று என்பதும் நன்கு விளங்குகிறது.

    இவர்களின் எழுத்தில் இருந்து காவி வண்ணம் தெரிவதை நடுநிலையாளர்கள் அனைவரும அறிவர். இவர்களின் நோக்கம் பொய் பிரச்சாரத்தின் மூலம் உ.பி. முஸாபர் நகரில் இவர்கள் ஏற்படுத்திய மதக்கலவரத்தைப் போன்று அதே ஃபார்முலாவை பயன்படுத்தி தமிழகத்திலும் அதேகலவரத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். ஆனால் இந்த காவி மடையர்களுக்கு தமிழக மக்களின் ஒற்றுமையைக் குலைப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை அறியும் அளவுக்கு அறிவிருந்தால் இவர்கள் ஏன் காவிக் கூட்டத்தில் இருக்கப் போகிறார்கள்.

    இந்தியன் முஜாகிதீன் லவ் ஜிஹாத் போன்ற வார்த்தைகள் காவிகளிடம் இருந்து வந்தது தான். சமீபத்தில் மத்திய அமைச்சர் இந்திய முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு காவிகளுடையது என்பதை வெட்ட வெளிச்சமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஏய் நீ இந்த உலகத்துல இருக்கியா வேறு கிரகத்துல இருக்கியா? ஏய்…..இதில் எழுதப்பட்ட சம்பவம் நடந்திருகா இல்லை இப்படி ஒரு சம்பவமே நடக்கலன்றீயா ?

    • ஸேனி Mஒகம்மட் //இது முற்றிலும் உண்மைக்கு முரணான செய்தி என்பதும் காவிகளின் சூழ்ச்சி என்பதும் அவர்களின் எழுத்துக்களில் இருந்து நன்கு தெரிகிறது// இது காவிகளின் சதி மட்டுமல்ல இதன் கூடவே யூதர்களின் சதியும் இருக்கு இதனால் நம் சமுதாயம் மானம் காக்க பிப்ரவரி 28-ம் நாள் காவி மற்றும் யூதர்களின் கைக்கூலியான வினவுக்கு எதிராக போராடுவோம். Please Send SMS to All Muslim Brothers

  33. இது முற்றிலும் உண்மைக்கு முரணான செய்தி என்று வேற்றுக்கிரகவாசிகள் வேண்டுமானால் நம்பக்கூடும். வினவிற்கு ‘காவி’ பூசும் உங்கள் கற்பனைத்திறன் ‘மெச்சத்தக்கது’.

    • தமுமுகவினர் தண்ணியடித்து தகராறு செய்ததாக பொய் செய்தியை எழுதியவர் எந்த கிரகத்தில் இருந்து வந்துள்ளார் என்பதை விளக்கவும். தண்ணி அடிப்பவனுக்கு தமுமுகவில் என்ன வேலை சகோதரரே!!!! நிகழ்காலத்தில் பொய்யை உண்மை போல் சொல்வது காவிகள் மட்டுமே அதை முறியடிப்பது உண்மையை விளங்கி நம்பும் சகோதரத்துவமே!!! பொய்க்கு சப்பக்கட்டு கட்டுவதை விட்டுவிட்டு முடிந்தால் இந்த செய்தியின் உண்மைத் தன்மையை அறிய முயலவும்..

  34. தன் சமூகத்தின் பெண்கள் தவறான பாதைகளில் சென்று விடக்கூடாது என்பதற்கா அந்த சமூகத்தை சார்ந்த இளைஞர்கள் அந்த பெண்ணிடம் விசாரித்ததாக சொல்லப்படுகிறது. சரி அந்த பெண் தவறிழைக்காதவராக இருந்தால் நியாயமாக பதில் கொடுத்துவிட்டு சென்றிருக்கலாம் ஆனால் அந்த பெண் தான் அன்னிய ஆண்துணையோடு சென்றதை கூட தவறாக கருதாமல் இப்படி அவதூறுகளை அல்லி வீசியுள்ளதாகவே தெரிகிறது. இளைஞர்கள் விசாரித்ததில் தவறு இருக்கலாம், அதற்காக அவர்கள் அத்துமீறியெல்லாம் நடந்தாக எழுதப்பட்டது தவறான பொய் பிரச்சாரமே. ஆனாலும் இளைஞர்கள் அந்த கூட சென்ற இந்து இளைஞனை தாக்கவும் இல்லை, இந்த பெண்ணையும் தாக்கவும் இல்லை தாக்கிருந்தால் நானும் இஸ்லாமிய இளைஞர்களை கண்டிப்பேன்.

    சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்து சரியாகவே நடந்துள்ளார்கள். இதனால் வினவுக்கு என்ன வந்துவிட்டது என்று தெரியவில்லை. இவர்கள் தலிபானை இங்கே இழுத்துள்ளார்கள். தலிபானுக்கு கட்டுரையில் குறிப்பிட்டுள்ள தமுமுக என்ற இயக்கத்திற்கு என்ன தொடர்பு என்று யாருக்குமே புரியவில்லை விணவுக்கு மட்டும் யாரோ கணவில் வந்து சொல்லிவிட்டார்கள் போல அவதூறுகளை பரப்பியுள்ளனர். தலிபான்களோடு தொடர்பு படுத்தியதை வண்மையாக கண்டிக்கிறேன்… தலிபான்கள் தண் மன்னுக்காக போராடும் போராளிகள். ஆதிக்க சக்திகளை எதிர்க்க கூடியவர்கள். நாத்தீக சித்தாந்தம் படைத்த வினவு தலிபான்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதோடு அதில் தமுமுக என்ற மனிதநேய இயக்கத்தையும் இணைத்து சித்தரித்து தன் நாத்தீக சிந்தணையில் தன்னை மழுங்கடித்துகொண்டிருக்கிறது என்ற தெரிகிறது.

    அந்த பெண் தனிபட்ட முறையில் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும் ஆனால் ஒரு மத அடிப்படையில் இருந்துகொண்டு தவறாக நடந்தால் அதனை எந்த மதத்தினாரக இருந்தாலும் கேட்கத்தான் செய்வார்கள். நான் என் மதத்தில் நடந்தாலும் இதனைதான் செய்திருப்பேன். மற்றவர்களை போல வெட்டவில்லை குத்தவில்லை, வெறும் விசாரணையே செய்துள்ளார்கள் இதுவும் நியாயம்தான். அவர்கள் மதம் சார்ந்த பெண்ணை கண்ணியம் கருதி விசாரிப்பது சரியானது அல்லாமல் தவறாக சித்தரிப்பது நியாயமற்றது.

    • //தலிபானுக்கு கட்டுரையில் குறிப்பிட்டுள்ள தமுமுக என்ற இயக்கத்திற்கு என்ன தொடர்பு என்று யாருக்குமே புரியவில்லை விணவுக்கு மட்டும் யாரோ கணவில் வந்து சொல்லிவிட்டார்கள் போல அவதூறுகளை பரப்பியுள்ளனர். தலிபான்களோடு தொடர்பு படுத்தியதை வண்மையாக கண்டிக்கிறேன்… தலிபான்கள் தண் மன்னுக்காக போராடும் போராளிகள்.//

      அப்ப தமுமுக-வை போராளிகள்னு வினவு சொல்லுதுனு எடுத்துக்கோங்க.

      முஸ்லீம்கள் பெரும்பாலும் தாலிபன்களை ஆதரிப்பவர்கள்னு தெரிஞ்சுக்கோங்க. விஸ்வரூபம்/தஸ்லிமா விஷயத்துலயும் அதான் நடந்துச்சு. இரண்டும் பொதுவா முஸ்லீம்களை தவறா சித்தரிக்கல. விஸ்வரூபம் தாலிபன்களை விமரிசிச்சது தான் இவங்களுக்கு பொருக்கல. லஜ்ஜா-கூட இஸ்லாத்தை எதுவும் சொல்லலை. பங்களாதேஷில் இந்துக்கள் எப்படி இனப்படுகொலை மூலம் அழித்தொழிக்கப்பட்டார்கள்ன்னு தான் இருக்கு.

    • உன் வீட்டுப் பெண்களை “இந்து-முஸ்லீம்” மத வெறியர்கள் எப்படி ஏசினால் பொறுத்துக் கொள்ளவாயா ? துத்தேரி…..

      [1] “என்னடி தேவடியா, நீ இந்தப் பயலோட ஓடிப் போறது எங்களுக்குத் தெரியாதுன்னு நெனைச்சிட்டியா?

      [2]”போடா கூட்டிக் கொடுக்கிற பயலே”

      [3]“அந்த தேவடியாள தப்பிக்க விட மாட்டோம்”

      [4]“இருடி, நீ சட்டம் படிக்கிற திமிர்ல பேசுறியா!

      [5]“ஏ போடி தேவடியா, எல்லா போலிசும் எங்களுக்கு தெரியும், எல்லா சட்ட மசுறும் எங்களுக்கு தெரியும். சும்மா உதார் விடாதே”

      ANBARASAN//ஆனாலும் இளைஞர்கள் அந்த கூட சென்ற இந்து இளைஞனை தாக்கவும் இல்லை, இந்த பெண்ணையும் தாக்கவும் இல்லை தாக்கிருந்தால் நானும் இஸ்லாமிய இளைஞர்களை கண்டிப்பேன்.

    • நண்பர் அன்பரசன் சொல்வது எப்படி இருக்கிறதென்றால் நாம் அவரை காரணமில்லாமல் தே…. என ஆரம்பிக்கும் கெட்ட வார்த்தையில் திட்டினால்….
      “என்ன எதுக்கு சார் திட்டுறீங்க….?” நான் எந்த தப்பும் செய்யல.. என தன்னிலை விளக்கம் கொடுத்துவிட்டு விலகி விட வேண்டும் என சொல்கிறார்.

      இங்கிருக்கும் நபர்கள் நினைப்பெல்லாம் அவர்கள் ஏதோ லைட்டா விசாரித்திருக்கிறார்கள்… ஆனால் கெட்ட வார்த்தையில் பேசினதெல்லாம் வினவு ஏதோ இட்டுக்கட்டி எழுதுவது போல நினைப்பு…..!
      இதில் ஒருவர் குடிப்பவருக்கு தமுமுக வில் என்ன வேலை..? அறிவுபூர்வமான கேள்வி ஒன்றினை கேட்டிருக்கிறார். இந்த மாதிரியான “மொக்கையான” கண்ணோட்டம் கொண்டவர்களை என்ன செய்வது….?

    • அன்பரசன் உங்க பச்சை கோவணம் அவிழ்ந்து தொங்குது எடுத்து சரியா கட்டுங்க …. ஹிஹிஹி

    • @ANBARASAN!

      Do they have courage to go and check the tasmac shop to stop muslim males drink?

      Oh! you are in my religion and just to make sure you follow the rules

      I will come and check your house in the night just to make sure you are not sleeping with any other lady.

      I will visit your lunch time to make sure you are not eating beef

      I will….

  35. மலாலவோடு இந்த பாத்திமாவை சித்தரிக்கும் வண்ணமாக ஒரு படமும் வெளியிடப்பட்டுள்ளது. மலாலா கல்விக்கு செல்வதை தடுத்ததாக கூறப்படுகிறது இதன் உண்மைதன்மைக்குள் தற்போது செல்ல வேண்டாம். மலாலாவின் கல்விக்கு தலிபான் எதிர்ப்பு என்றும் சொல்கிறார்கள். ஆனால் இங்கே இந்த இளைஞர்கள் சகோதரி பாத்திமாவின் கல்வியை எதிர்க்கவில்லை, படிக்க போக வேண்டாம் என்று தடுக்கவில்லை மாறாக தன் சமூகத்து பெண் வேற்று அதாவது என் சமூகமான இந்து மத்தின் இளைஞரோடு சென்றதை கண்டவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்துள்ளனர். இதனை எப்படி தலிபான்களோடு சித்தரிப்பது.

    உதாரணத்திற்கு நாத்தீக அமைப்பைசார்ந்த பெண் ஒருவர் கடவுள் கொள்கை கொண்ட இளைஞனோடு இரவு நேரத்தில் தனிமையில் சென்றால் நாத்தீக அமைப்பைச்சார்ந்தவர்கள் விசாரிக்காமல் வழி அனுப்பி வைப்பார்களா. விசாரித்தவர்களின் மீது காவல்துறையில் வழக்கு கொடுக்கப்பட்டது காவல்துறையின் வழக்கை அஞ்சியோ என்னவோ இளைஞர்கள் எழுதி கொடுத்திருக்கலாம் அதற்காக பின்வாங்கி ஓடிவிட்டதாக அர்தமாகாது. அதிலும் தமுமுக நிர்வாகிகள் இவ்வாறு செய்திருக்கவும் மாட்டார்கள்.

    • “மலாலா” வுடனான பாத்திமா சித்தரிப்பு மத வெறியை எதிர்க்கிறார்.. என்ற அடிப்படையில் போடப்பட்டுள்ளது. முதலில் பதிவை புரிந்து கொண்டு பின்னூட்டம் இடவும்.

      // நாத்தீக அமைப்பைசார்ந்த பெண் ஒருவர் கடவுள் கொள்கை கொண்ட இளைஞனோடு இரவு நேரத்தில் தனிமையில் சென்றால் நாத்தீக அமைப்பைச்சார்ந்தவர்கள் விசாரிக்காமல் வழி அனுப்பி வைப்பார்களா//

      என்ன ஒரு அறிவார்ந்த கேள்வி..? இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று சுவற்றில் முட்டி முட்டி யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

      • // நாத்தீக அமைப்பைசார்ந்த பெண் ஒருவர் கடவுள் கொள்கை கொண்ட இளைஞனோடு இரவு நேரத்தில் தனிமையில் சென்றால் நாத்தீக அமைப்பைச்சார்ந்தவர்கள் விசாரிக்காமல் வழி அனுப்பி வைப்பார்களா//

        //என்ன ஒரு அறிவார்ந்த கேள்வி..? இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று சுவற்றில் முட்டி முட்டி யோசித்துக்கொண்டிருக்கிறேன்.// Sema Super

  36. //அந்த பெண் தான் அன்னிய ஆண்துணையோடு சென்றதை கூட தவறாக கருதாமல்//
    ஏன் தவறாக கருத வேண்டும்?
    //அந்த பெண் தனிபட்ட முறையில் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும் //
    இருந்து விட்டு போகட்டும் என்று விட வேண்டியது தானே. அந்த பெண் தவறான காரியம் ஒன்றும செய்யவில்லையே. பேருந்தில் நண்பருடன் பயணிப்பது உங்களை பொறுத்தவரை தவறென்றால் நீங்கள் தமிழ்நாட்டில் இருக்கவேண்டிய அவசியமே இல்லை. தயவு செய்து தாலிபான் ஆட்சி நடக்கும் இடத்திற்கு சென்று விடுங்கள். எங்களை விட்டு விடுங்கள்.
    தாலிபான்கள் தீவிரவாதிகள் இல்லையென்றால் பின் மிதவாதிகளா. மலாலாவை கேட்கலாமா?

  37. //முக்கிய புள்ளிகள் உள்ளிட்டு சுமார் 50 – க்கும் மேற்பட்டவர்கள் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் விதத்தில் தோழருடன் சமாதானம் பேசினார்கள். “பல இந்து ஆண்கள் இசுலாமிய பெண்களை ஏமாற்றி லவ் பண்ணி திருமணம் செய்து கொள்ளுகிறார்கள். இதற்கெதிராகத்தான் ‘லவ் ஜிகாத்’ அவசியப்படுகிறது.//

    ஆக, ‘லவ் ஜிகாத்’ நெசந்தான் போல…தேங்க்ஸ் வினவு.

  38. இஸ்லாமிய பெண்களை திட்டமிட்டு சிரழிக்க வேண்டும் என்ற நோக்கில் முஸ்லிம் பெண்களை காதலிப்பதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இஸ்லாமிய சமுதாய அமைப்புகள் ஈடுபடமால் வேறு யார் செய்வார்கள்.இது போன்று வரும் பெண்களை விசாரித்து அவர்கள் குடும்பத்தை வரவழைத்து ஒப்படதைத்த சம்பவங்கள் பல நடந்துள்ளன.இதில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் அணுகுமுறை தவறானது தவிர விசாரிப்பதில் தவறு காண இயலாது.இஸ்லாமிய மார்க்கப்படி ஒரு பெண் தகுந்த துணையின்றி மற்ற ஆண்களுடன் செல்வதை தவறு என்பதை எடுத்து சொல்வோம்.

    • உன் வீட்டுப் பெண்களை “இந்து-முஸ்லீம்” மத வெறியர்கள் எப்படி ஏசினால் பொறுத்துக் கொள்ளவாயா ?

      refer my comment 30.2

    • Sathik,

      [1]எம் தமிழ்ச் சகோதரியை[பாத்திமாவை] வார்த்தையால் அசிங்கப் படுத்தும் இந்த முஸ்லீம் மத வெறியர்களுக்கு நபிகள் தத்துவப்படி என்ன தண்டனை ? நாக்கை …..லாமா?
      //இஸ்லாமிய மார்க்கப்படி ஒரு பெண் தகுந்த துணையின்றி மற்ற ஆண்களுடன் செல்வதை தவறு என்பதை எடுத்து சொல்வோம்.

      2.சாதி இந்துக்களின் [ உம்: ராமதாஸ் ] தீண்டமைக் குரல் உன் வார்த்தைகளில் எதிரொலிக்கின்றது.

      3. இந்து-முஸ்லீம் கலப்பு திருமணத்தை-நிக்காவை தடுக்க நீ யார் ?

      4.பெண்களை வார்த்தையால் அசிங்கப் படுத்தும் இந்த முஸ்லீம் மத வெறியர்களுக்கு நபிகள் தத்துவப்படி[இஸ்லாமிய மார்க்கப்படி] என்ன தண்டனை ? நாக்கை …..லாமா?

      //இஸ்லாமிய பெண்களை திட்டமிட்டு சிரழிக்க வேண்டும் என்ற நோக்கில் முஸ்லிம் பெண்களை காதலிப்பதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இஸ்லாமிய சமுதாய அமைப்புகள் ஈடுபடமால் வேறு யார் செய்வார்கள்.

    • உங்கள் குடும்பத்துப்பெண்னுக்கு இப்படி நடந்திருந்தால்….?

      அவங்க உன்னோட நல்லதுக்கு தாம்மா கேட்டாங்க…! எனவும்

      மேற்குறிப்பிட்ட வார்த்தைகளை பிரயோகித்திருந்தாலும் இப்பிரச்சினையை மென்மையாகவே கையாளுவீர்கள் இல்ல…?

  39. உலகத்திலேயே எங்கள் அமைப்புதான் அக்மார்க் அமைப்பு என்றும், எங்கள் அமைப்பும் அதிலுள்ளவர்கள் மட்டுமே அக்மார்க் குஞ்சுகள் என்றும் கூப்பாடு போடும் இவர்கள் அம்பலமாகும் போது மட்டும் சிலர் தவறு செய்கிறார்கள் என்று பல்லிளிப்பதும் வழமையானது தானே. எப்போதும் பாஸிசத்தின் பங்காளிகள் பயந்தாங்கொள்ளிகள் என்பதும் தெரிந்த கதைதான். சில வெட்டிகள் இதில் இஸ்லாம் இப்படி கூறவில்லை, இஸ்லாமியர்கள் செய்யும் தவறுக்கு இஸ்லாம் பொறுப்பாகாது பருப்பாகாது, அவர்கள் உண்மையான இஸ்லாமியர்கள் இல்லை என்று ஒப்பாரி வைப்பதும் புதிதல்ல. இஸ்லாமிய அடிப்படை மதவெறியில்லை என்றால் இப்படிப்பட்ட வெறித்தனங்களுக்கு வேலையே இல்லை என்பதும் அனைவரும் எளிதாக புரிந்தகொள்ளக்கூடியதே. இது போன்ற பல நிகழ்வுகள் பல ஊரிகளில் நடந்துள்ளது. இவர்களுக்கு டிமிக்கி கொடுத்த பெண்களும் நிறைய உள்ளனர். காவல்துறை உதவியுடன் தப்பிப் பிழைத்தவர்களும் உண்டு. ஆனால் பல இஸ்லாமியப் பெண்கள் (இளம் பெண்கள் உட்பட) இவர்களின் பயமுறுத்தலால்தான் புர்கா அணிகிறார்கள் என்பதும் “நாங்கள் விருப்பத்துடன்தான் புர்கா போடுகிறோம் என்று கூறுவதும்” மறுக்க முடியாத உண்மை என்பதை வினவு வாசகர்கள் அறிந்துகொள்ளவும். அவ்வெறியரகள் அப்படி இல்லை என்று கூறுவது பித்தலாட்டம். அவர்களுக்கு ஒரு சவால். நாங்கள் புர்கா அணியாதவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று பிரச்சாரம் செய்வதுடன் உண்மையாகவும் நடந்து காட்ட முடியுமா? அப்பொழுது புர்காவின் உண்மை முகம் தெரிந்துவிடும்.

  40. தோழர் பாத்திமாவுக்கு வாழ்த்துக்கள்.அடிபனியாமல் தைரியமாக மதவெரி கும்பலை எதிர்கொண்ட வீரம் பாராட்டுக்குரியது.இந்த சம்பவத்தை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு அனைத்து இஸ்லாமிய பெண்களும் எதிர்த்து நின்றால் இஸ்லாமிய அமைப்புகள் காணாமல் போய்விடும் என்பது உண்மை.

  41. முகமதியரல்லாத அல்லது முகமதியக்குடும்பத்தில் பிறந்த ஆனால் முகமதியத்தில் நம்பிக்கையில்லாத பெண்கள் புர்கா அணிவதற்கு, ஹாரிஸ், ANBARASAN, nalla thampi , s.ibrahim போன்றோர்கள் ஏன் இப்படி பதறுகிறார்கள்?

    படியுங்கள் ‘புர்காவின் உட்பொருள்’
    http://tips4nonmuslims.blogspot.com/2014/01/blog-post.html

  42. டெய்ய் தமுமுக காரன் யாருடா விசாரிக்கவும் ,கட்டப்பன்சாயத்து பன்னவும் வெங்காயங்களா…… அன்னிய ஆடவருடன் சென்றால் விசாரிக்க தான் செய்வானுஙலாலம்ல…….

  43. தமுமுக காட்டுமிராண்டிக் கும்பல் என்ன சொல்கிறது?

    //எந்தப் பெண்ணையும் விசாரிக்கவும் தண்டிக்கவும் தமக்கு மத ரீதியில் உரிமை உண்டு//

    த.மு.மு.க. மற்றும் ஜமாத் நிர்வாகிகள் என்ன சொல்கிறார்கள்?

    //இஸ்லாத்தை காப்பதற்காக அவ்வாறு செய்து விட்டனர்//

    //காஃபீருடன் ஒரு பெண்ணை அனுப்புவது தவறு//

    With the help of Internet, i have learnt what is Muhamadism (the true Islam by Muhamad as written in Quran, Muhamads biography (sirat) and Hadiths (Muhamad’s sayings and actions), just a few years back. But the above people have been learning Muhamadism since a decade or two. This can be clear from that fact that one could not have seen faceless black burkas in our streets a decade ago. Why now? It is because the above people have learnt Muhamadism.

    As per Muhamadism,

    1.A woman cannot travel alone to another town.

    2.A woman must be accompanied by a male ‘maharam’ relative on any trip outside her house (for details on the aspect of ‘maharam’, see my post ‘சித்தி மகன் பார்க்க வரக்கூடாதா’ in my blog questionstomuhamadhians dot blogspot dot com)

    3.A muhamadan cannot befriend with kafirs (a derogatory word for non-muhamadans)

    4.A muhamadan woman cannot marry kafirs while a muhamadan man can do so.

    These are the rules that the above fanatics want to impose on muhamadan woman and us.

    Are we going to accept them?

  44. Except few muslims blinded by religious extremism, many muslims here posted in support of the girl. This shows that muslims are also progressing. days are coming when muslims will be as liberal as any other society. till that we all must work together.

  45. The family who stood behind their daughter by opposing their own community commands my respect.

    And the lady who acquired the social knowledge at this very young age , and has the courage to confront the society receives my respect

    This Ram Sena/Taliban groups are always uneducated,alcoholic with no proper business in hand commands no respect in society.

    To get some respect these people trying act as the protector of the society and wants to prove the society that they are indeed important part of the society and they think their contribution will yield some respect.

    Political parties with different agenda always use these people and protect these people which further empowers these useless creatures

  46. சங்கபரிவாரத்தின் கள்ளக்குழந்தை வினவு இணையதளம்:-

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி வடக்கு அம்மாப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த அனிஷ் பாத்திமா என்ற பெண் கோவை அரசு சட்டக்கல்லுரியில் இரண்டாம் ஆண்டு சட்டம் படித்து வருகிறார். கோவை பகுதியில் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி அமைப்பிலும் செயல்பட்டு வருகிறார். இவரது அண்ணன் அலாவுதீனும் பு.மா.இ.மு தோழர்தான். சென்ற ஆண்டு வரை அதே கோவை அரசு சட்டக் கல்லூரியில் படித்து விட்டு தற்போது புதுக்கோட்டையில் வழக்கறிஞராகப் பணி புரிகிறார்.
    பொங்கல் மற்றும் தேர்வு விடுமுறைக்கு தமது சொந்த ஊருக்கு வந்த தோழர் பாத்திமா, 27-1-2014 அன்று தமது சொந்த ஊரில் இருந்து கோவைக்கு வழக்கம் போல் தனியார் பேருந்தில் செல்வதற்காக அருகில் உள்ள மீமிசல் செல்லத் தயாரானார். மணமேல்குடியில் இருந்து கோவைக்கு நேரிடையாக பேருந்து இல்லை என்பதால் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மீமிசல் வந்து தனியார் பேருந்தில் கோவைக்கு செல்வது வழக்கம். லக்கேஜ்-ம் இருந்ததால் பஸ் ஏற்றி விடுவதற்காக, அவருடன் தோழர் முத்துகிருஷ்ணன் என்பவரை அவர்கள் குடும்பத்தார் ஏற்பாடு செய்து மீமிசலுக்கு அனுப்பி வைத்தனர்.

    இரவு சுமார் 7.30 மணிக்கு இருவரும் மீமிசலில் உள்ள தனியார் பேருந்து அலுவலகம் வந்தனர். இதனை தமிழ்நாடு முசுலீம் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த சில இசுலாமிய இளைஞர்கள் நோட்டமிட்டனர். ஒரு இசுலாமியப் பெண் ‘இந்து’ பையனுடன் இருப்பதை கண்டு பிடித்த மதவெறியர்களின் கோணல் புத்தி தீவிரமாக செயல்பட ஆரம்பித்தது. அந்த தனியார் பேருந்து இரவு 8.00 மணிக்குதான் புறப்படும். நோட்டமிட்ட கோணல் புத்தி இந்த இடைவெளி நேரத்தைப் பயன்படுத்தி மேலும் சிலரை சேர்த்துக் கொண்டது.

    இந்தக் கும்பல் அந்த தனியார் பேருந்தின் அலுவலகத்திற்கு ஒருவரை அனுப்பி கோவைக்கு டிக்கெட் இருக்கிறதா? யார், யார் செல்கிறார்கள் என பயணிகள் போல் நோட்டமிட்டு விசாரித்தது. இவர்கள் விசாரித்து முடித்த சில நிமிடங்களிலேயே கோவை செல்லும் பேருந்து அங்கு வந்தது. பேருந்துக்காக நின்ற பயணிகளுடன் தோழர் பாத்திமாவும் பேருந்தில் ஏறி தனது லக்கேஜ்களை ஒழுங்குபடுத்திக் கொண்டு இருந்தார். தோழர் முத்துகிருஷ்ணனும் அவருக்கு உதவியாக இருந்துள்ளார்.

    அப்போது பேருந்தில் ஐந்து நபர் கொண்ட தமுமுக கும்பல் திமுதிமுவென ஏறியது அதில் ஒருவன் “அஸ்ஸலாமு அலைக்கும்”(உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்) என்று கூறினானாம் , அறிமுகம் இல்லாதவர்கள் என்பதால் தோழர் பதிலளிக்கவில்லையாம்

    என்று சம்பவத்தை கூறிக்கொண்டு வந்து தனது இஸ்லாத்திற்கு எதிரான விஷக்கருத்தை தொடர்கிறது வினவு என்ற சங்கபரிவாரின் கள்ள இணையதளம்
    எதற்கு இந்த இணையதளத்தை சங்பரிவாரின் கள்ள பிள்ளை என்கிறோம் அந்த கட்டுரை முழுவதையும் படிப்பவர்களுக்கு தெரியும் இவர்களுக்கு இஸ்லாத்தின் மீதுள்ள வெறுப்பும் இஸ்லாமியர்களின் மீதுள்ள கழ்புனர்வும்.
    இஸ்லாத்தை பற்றிய அறிவு இல்லாத சில கிறுக்கன்கள் தவறு செய்தால் அவர்களை கண்டிக்கலாம் அல்லது சட்டப்படி தண்டிக்கலாம் ஏதேனும் இயக்கத்தில் இருந்தால் அந்த இயக்கத்தை சாடி கட்டுரையை அமைத்திருக்கலாம் அனால் இந்த சங்க்பரிவார இணைய தளம் கட்டுரை முழுக்க முழுக்க இஸ்லாத்தையே சாடுகிறது “எனவே தமுமுக, தவ்ஹீத் ஜமாஅத் முதலான இசுலாமிய மதவாத அமைப்புகள் இத்தகைய தாலிபான் காட்டுமிராண்டித்தனங்களை நிறுத்த வேண்டும்.” என்பதிலிருந்தும்,இவர்கள் கூறும் சம்பவத்தில் த.மு.மு.க தவிர்த்து தொடர்பில்லாத பிற இஸ்லாமிய இயக்கத்தை சாடுவதிலிருந்தும் இவர்களின் சங்கபரிவார கள்ள புத்தி அம்பலமாகிறது அதேபோன்று சங்பரிவார்தான் முஸ்லிம்கள் தேசிய நீரோட்டத்தில் (அதாவது சங்பரிவார கலாச்சாரத்தில்)இணைய வேண்டும் என்றும் கூப்பாடு போடக்கூடியவர்கள் அதே சொற்றொடரை சற்று மாற்றி பயன்படுத்தி இருக்கிற்றனர்
    “பொது நீரோட்டத்திலிருந்து பிரித்து தனிமைப்படுத்தி அவர்கள் மீது இந்துமதவெறியர்கள் தாக்குதல் நடத்துவதற்கு உதவி செய்கிறார்கள்” என்று நாத்திக வேடம் போட்டு கூப்பாடு போடுகின்றது
    இவர்கள் முழுக்க முழுக்க கடவுள் மறுப்புக்கொள்கை,கம்யுனிசம் என்ற பெயரில் வேடமிட்டுள்ள சங்பரிவார்தான் என்பது கீழ் கண்ட இவர்களின் கூற்றின் மூலம் சந்தேகத்திற்கு இடமிலாமல் நிரூபனமாகிறது “பல இந்து ஆண்கள் இசுலாமிய பெண்களை ஏமாற்றி லவ் பண்ணி திருமணம் செய்து கொள்ளுகிறார்கள். இதற்கெதிராகத்தான் ‘லவ் ஜிகாத்’ அவசியப்படுகிறது

    இந்தியன் முஜாகிதீன் லவ் ஜிஹாத் போன்ற வார்த்தைகள் காவிகளிடம் இருந்து வந்தது தான். சமீபத்தில் மத்திய அமைச்சர் இந்திய முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு காவிகளுடையது என்பதை வெட்ட வெளிச்சமாக்கினார் என்பது இங்கே உன்னிப்பாக கவனிக்கவேண்டிய விஷயம்.

    நாம் கூறிக்கொள்ளும் விஷயம் இதுதான் உங்களுடைய தோழர் பாத்திமா உண்மையில் உங்களது சங்கபரிவார கொள்கையில் நம்பிக்கை உடையவராக இருந்தால் ஏன் இஸ்லாமிய கொள்கையில் நம்பிக்கையுடைய இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்காவை அணிந்து இஸ்லாமிய பெண்போல் நாடகமாட வேண்டும் அப்படி அணிந்தால் ஓன்று வினவின் கொள்கையில் நம்பிக்கை இல்லை என்று அர்த்தம் ,அல்லது நான் முஸ்லிம் தான் என்று இஸ்லாமிய சமூகத்தையும் மற்றவர்களையும் ஏமாற்ற காந்தியை கொள்ளும் போது கோட்சே என்ற சங்க்பரிவார தீவிரவாதி தனது கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டு தன்னை இஸ்லாமியனாக காட்ட முனைந்தானல்லவா அது போன்ற செயல்தான் இதுவும்.

    அடுத்ததாக அனிஷ் பாத்திமா என்ற பெயர் எதற்கு யாரை ஏமாற்ற? அவர்தான் சட்டக்கல்லூரி மானவியாச்சே நம்நாட்டில் பெயர் மாற்றி கொள்வது ஒன்றும் பெரிய விசயமோ சிரமமான காரியமோ இல்லையே அதற்கான சட்ட வழிமுறையை அறிந்து தானே இருப்பார்? பெயரை மாற்றி கொள்ள வேண்டியதுதானே இஸ்லாமிய கொள்கைகளில் நம்பிகையோ,பிடிப்போ இல்லாதவற்கு எதற்காக இஸ்லாமிய ஆடையில் பிடிப்பும் பெயரில் பாசமும் வேண்டும் இதுவெல்லாம் இஸ்லாத்திகுள்ளும் இஸ்லாமியர்களுக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு தானே? இந்த சங்கபரிவாரத்தினர் உழைக்கும் மக்களையும் ஏழைகளையும் தங்கள் பக்கம் இழுப்பதற்காக நாத்திக வேசமும்,கம்யுனிச வேசமும் போடக்கூடியவர்கள் இஸ்லாம் என்று வந்துவிட்டால் தங்களின் உண்மை முகத்தினை காட்டிவிடுவார்கள் இதில் விட்டில் பூச்சிகளாய் அலாவுதீன்களும்,பாத்திமாக்களும் விழுகின்றனர்

    • GM.Basha,

      [1]பொதுவாக பெண்களை வார்த்தையால் அசிங்கப் படுத்தும் குற்றதிற்க்கு சவூதி அரேபியாவில், நபிகள் தத்துவப்படி[இஸ்லாமிய மார்க்கப்படி] என்ன தண்டனை ?

      [2]எம் தமிழ்ச் சகோதரியை[பாத்திமாவை] வார்த்தையால் அசிங்கப் படுத்தும் இந்த முஸ்லீம் மத வெறியர்களுக்கு நபிகள் தத்துவப்படி[இஸ்லாமிய மார்க்கப்படி] என்ன தண்டனை ?

    • இஸ்லாமியராக இருந்து புர்க்கா அணிந்து வேறு மத ஆடவருடன் சென்றால் விசாரிக்க நீ யார்? உனக்கு யார் அதிகாரம் கொடுத்தது..

    • செந்தில்குமரன்,மனோஜ்,உனிவெர்பட்ட்டி ஆகியொருக்கு. வினவு என்ற இனையதளம் சங்பரிவாரின் கள்ள குழந்தை என்பதற்கு நீங்கள் ஒப்புதல் அளிகின்றீர்கள் தானே. பிறகு என்ன தன்டனை என்பதயும் மட்ற விசயத்தயும் பார்ப்போம்.

      • Dear GMBASHA,

        [1] ம க இ க என்ற நக்சல்பாரி இயக்கத்தின் ஆதரவுத் தளம் இது [வினவு ]

        [2]இஸ்லாமிய மதத் தீவிர வாதிகள், எம் தமிழ்ச் சகோதரியை[பாத்திமாவை] வார்த்தையால் அசிங்கப் படுத்தும் செயலுக்கு நீர் பதில் கூறாமல் [நபிகள் தத்துவப்படி-இஸ்லாமிய மார்க்கப்படி என்ன தண்டனை எனக் கூறாமல்] ஏன் இந்த திசைத் திருப்பும் முயற்சி?

        [3] ம க இ க நக்சல்பாரி அமைப்பு ,இந்து மதத் தீவிரவாதிகலுடன் எந்த பிரச்சனையிலும் சமரசம் செய்து கொண்டது இல்லை.

        [4]எம் தமிழ்ச் சகோதரியை[பாத்திமாவை] வார்த்தையால் அசிங்கப் படுத்தும் இந்த முஸ்லீம் மத வெறியர்களுக்கு நபிகள் தத்துவப்படி[இஸ்லாமிய மார்க்கப்படி] என்ன தண்டனை ?நாக்கை அறுக்கலாமா? அல்லது முழுமையாக பிறப்பு உறுப்பை அகற்றும் [சுன்னத்-நல்ல] செயலை செய்யலாமா ?

        குறிப்பு : [பிறப்பு உறுப்பை] சுன்னத் செய்வது அறிவியல் பூர்வமானது ,தனி மனித சுகாதாரத்துக்கு நல்லது. அது போல பெண்களை மனம்,உடல் ரீதியாக அசிங்கப்படுத்தும் சமுக விரோதிகளுக்கு நாக்கை அறுக்கும் தண்டனை , அல்லது முழுமையாக பிறப்பு உறுப்பை அறுக்கும் தண்டனை கொடுப்பது சமுக ஆரோக்கியத்துக்கு நல்லது.

        [5]பொதுவாக பெண்களை வார்த்தையால்,செயலால் அசிங்கப் படுத்தும் குற்றதிற்க்கு ,குற்றம் செய்தவனுக்கு நான் பரிந்துவுரைக்கும் தண்டனை சரிதானே ?

        அன்புடன் ,

        கி.செந்தில்குமரன்

        • செந்தில் குமார் சார் நல்லா தான் கேக்குறிய ஆனா புரிஞ்சிதான் கேக்குரியலா அல்லது புரிந்தும் புரியாமலும் நடிக்கிரியலா என்று தெரிய வில்லை.
          //இஸ்லாத்தை பற்றிய அறிவு இல்லாத சில கிறுக்கன்கள் தவறு செய்தால் அவர்களை கண்டிக்கலாம் அல்லது சட்டப்படி தண்டிக்கலாம் ஏதேனும் இயக்கத்தில் இருந்தால் அந்த இயக்கத்தை சாடி கட்டுரையை அமைத்திருக்கலாம்// என்று தெளிவாத்தான் நான் எழுதியிருக்கேனே படிக்காட்டி திரும்ப நல்லா படிங்க. நீங்க அடுத்து என்ன கேக்கவரீங்கன்னு புரியுது நீங்க திரும்ப கேளுங்க அப்ப நா சொல்றேன்.
          ஆனா வினவு என்பது சங்கபரிவாரின் கள்ள குழந்தைதான் என்று அவர்கள் எழுதியதின் அடிப்படையில் நான் கேள்வி எழுப்பியிருந்தேன் அதற்கு பதிலளிக்காமல் நீங்கள் மழுப்புவதிளிருந்து என் கருத்துக்கு நீங்களும் உடன்படுகின்றீர்கள் என்று நினைக்கிறேன்.அண்ணே திசை நான் திருப்பல நீங்கதான் வேறு திசையில் திரும்பிட்டீங்க.
          அன்புடன்
          GMபாஷா.

          • உம்மைப் போன்ற மத போதை ஏறிய மத வெறியர்களுக்கு , ம க இ க என்ற நக்சல்பாரி அமைப்பும் அதன் ஆதரவு தளமும் சங்கபரிவாரின் கள்ள குழந்தையாக தெரிவது வியப்பு இல்லை.

            • நான் கேட்ட நியாயமான கேள்விக்கு பதிலளிக்க உங்களுக்கு தெரியவில்லை ஆனால் ஆத்திரம் மட்டும் தலைக்கேறுகிறது

              1,// “எனவே தமுமுக, தவ்ஹீத் ஜமாஅத் முதலான இசுலாமிய மதவாத அமைப்புகள் இத்தகைய தாலிபான் காட்டுமிராண்டித்தனங்களை நிறுத்த வேண்டும்.”// என்பதிலிருந்தும் இவர்கள் கூறும் சம்பவத்தில் த.மு.மு.க தவிர்த்து தொடர்பில்லாத பிற இஸ்லாமிய இயக்கத்தை சாடுவதிலிருந்தும் இவர்களின் சங்கபரிவார கள்ள புத்தி அம்பலமாகிறது.இவர்களின் காமாலை கண்ணுக்கு முஸ்லிம்கள் என்றாலே மத வெறியர்களாகவும்,தீவிரவாதிகளாகவும் தான் தெரிகிறார்கள் இந்த காமாலைப் பார்வை என்பது சங்பரிவாருடையது.

              இது ஓன்று போதாதா வினவு சங்கபரிவாரின் கள்ள தளம் தான் என்பதற்கு.

              2,//இவர்கள் முழுக்க முழுக்க கடவுள் மறுப்புக்கொள்கை,கம்யுனிசம் என்ற பெயரில் வேடமிட்டுள்ள சங்பரிவார குள்ள நரி கூட்டம் தான் என்பது கீழ் கண்ட இவர்களின் கூற்றின் மூலம் சந்தேகத்திற்கு இடமிலாமல் நிரூபனமாகிறது “பல இந்து ஆண்கள் இசுலாமிய பெண்களை ஏமாற்றி லவ் பண்ணி திருமணம் செய்து கொள்ளுகிறார்கள். இதற்கெதிராகத்தான் ‘லவ் ஜிகாத்’ அவசியப்படுகிறது.

              இந்தியன் முஜாகிதீன் லவ் ஜிஹாத் போன்ற வார்த்தைகள் காவிகளின் காட்டு கூப்பாடு . சமீபத்தில் மத்திய அமைச்சர் இந்திய முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு காவிகளுடையது என்பதை வெட்ட வெளிச்சமாக்கினார் என்பது இங்கே உன்னிப்பாக கவனிக்கவேண்டிய விஷயம்.

              வினவு என்பது சங்கபரிவாரின் கள்ள குழந்தை மட்டும் கிடையாது அது பொய்யை மூலதமாக கொண்டது. அங்கே லவ் ஜிஹாத் என்ற பதத்தை எந்த முஸ்லிமும் பயன்படுத்தவில்லை.

              3,//“பொது நீரோட்டத்திலிருந்து பிரித்து தனிமைப்படுத்தி அவர்கள் மீது இந்துமதவெறியர்கள் தாக்குதல் நடத்துவதற்கு உதவி செய்கிறார்கள்”.
              சங்பரிவார்தான் முஸ்லிம்கள் தேசிய நீரோட்டத்தில் (அதாவது சங்பரிவார கலாச்சாரத்தில்)இணைய வேண்டும் என்றும் கூப்பாடு போடக்கூடியவர்கள் அதே சொற்றொடரை சற்று மாற்றி பொது நீரோட்டம் என்று பயன்படுத்தி நாத்திக ,கம்யுனிஸ வேடம் போட்டு கூப்பாடு போடுகின்றது இந்த குள்ள நரி கூட்டம்
              ஆத்திரம் தலைக்கேறினால் நிதானம் இழந்துவிடும் ஆகவே பொறுமையாக நடுநிலையோடு சிந்தித்து பாருங்கள் உங்களுக்கு இப்பொழுது ஏறியுள்ள போதை என்ன போதை என்று?

              இஸ்லாம் என்பதை இப்படி சுருக்கமாக சொல்லலாம் “அத் தீனுன் நசீஹா” அதாவது இஸ்லாம் என்றாலே பிறர் நலன் நாடுவது.

              இப்படி பிறர் நலன் நாடுவதால் தான் இன்று தமிழகத்தில் குருதிக்கொடை அளிப்பதில் உங்கள் பார்வையில் சொல்வதென்றால் இஸ்லாமிய மத வெறியர்கள் தொடர்ந்து 9 ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கிறார்கள்
              இந்தியாவில் குருதிக்கொடையளிப்பதில் முதன்மை மாநிலம் தமிழகம் அதில் முதன்மையானவர்கள் முஸ்லிம்கள் உங்கள் காமலைப்பார்வயில் மத வெறியர்கள். இது உங்கள் காமளைப்பார்வையில் வெறி என்றால் இந்த வெறி எங்களுக்கு அவசியம் வேண்டும் நாங்கள் மத வெறியர்கலாகவே இருந்து விட்டு போகிறோம்.

              • பாஷா பாய்,

                பின் குறிப்பு by vinavu:

                லவ் ஜிகாத் என்பது இந்து மதவெறி அமைப்புக்களால் உருவாக்கப்பட்ட ஒரு பொய்ப் பிரச்சாரம் என்பதுதான் உண்மை. அதாவது இந்து பெண்களை திட்டமிட்டு காதலித்து மதம் மாற்றி திருமணம் செய்து கொள்வதை இசுலாமிய தீவிரவாதிகள் சதி போல செய்கிறார்கள் என்றே ஆர்.எஸ்.எஸ் கூட்டம் அவதூறு பரப்பி வருகிறது. இந்த கட்டுரையில் லவ் ஜிகாத் எனும் வார்த்தையை பேசிய தமுமுகவைச் சேர்ந்தவர் இந்த பின்னணி, பொருள் தெரியாமல் கூட பேசியிருக்கலாம். ஆனால் இவர்களும் முசுலீம் பெண்களை இந்து மதவெறி அமைப்புகளின் தூண்டுதலால் இந்து ஆண்கள் திட்டமிட்டு காதலித்து திருமணம் செய்கிறார்கள், அதை தடுக்க வேண்டும் என்ற பொருளிலேயே பேசுகிறார்கள், நியாயப்படுத்துகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் மற்றும் இசுலமிய அடிப்படைவாத அமைப்புக்கள் இரண்டுமே தத்தமது பெண்களை வேற்று மத ஆண்களிடமிருந்து காக்க வேண்டும் என்பதையே சாராம்சத்தில் பேசுகிறார்கள். எனவே ஆர்.எஸ்.எஸ் கூறும் லவ் ஜிகாத் எனும் அவதூறை எதிர்க்கும் நாம் மறுபுறம் இசுலாமிய மதவெறியர்கள் இசுலாமிய பெண்களை இந்து அல்லது வேற்று மத ஆண்களிடமிருந்து காப்பாற்றுவதாக செய்யும் அடாவடித்தனத்தையும் கண்டிக்க வேண்டும்.

                by vinavu.

                GMBASHA//இவர்கள் முழுக்க முழுக்க கடவுள் மறுப்புக்கொள்கை,கம்யுனிசம் என்ற பெயரில் வேடமிட்டுள்ள சங்பரிவார குள்ள நரி கூட்டம் தான் என்பது கீழ் கண்ட இவர்களின் கூற்றின் மூலம் சந்தேகத்திற்கு இடமிலாமல் நிரூபனமாகிறது “பல இந்து ஆண்கள் இசுலாமிய பெண்களை ஏமாற்றி லவ் பண்ணி திருமணம் செய்து கொள்ளுகிறார்கள். இதற்கெதிராகத்தான் ‘லவ் ஜிகாத்’ அவசியப்படுகிறது.
                GMBASHA//வினவு என்பது சங்கபரிவாரின் கள்ள குழந்தை மட்டும் கிடையாது அது பொய்யை மூலதமாக கொண்டது. அங்கே லவ் ஜிஹாத் என்ற பதத்தை எந்த முஸ்லிமும் பயன்படுத்தவில்லை.

              • பாஷா பாய்,

                உங்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளித்துவிட்டேன். உங்களின் நண்பன் யார் ? எதிரி யார் ? என பொறுமையாகச் சிந்தனை செய்யுங்கள்.

                பாஷா பாய்://நான் கேட்ட நியாயமான கேள்விக்கு பதிலளிக்க உங்களுக்கு தெரியவில்லை ஆனால் ஆத்திரம் மட்டும் தலைக்கேறுகிறது

                அன்புடன் மதம் மறுக்கும் உங்கள் சகோதரன் [காஃபிர்],

                கி.செந்தில்குமரன்

          • GMBASHA,

            [1] ‘லவ் ஜிகாத்’ என்ற சொற்களைச் சொன்னது தமுமுக தான் ! ம க இ க அல்ல ! இக் கட்டுரையை மீண்டும் ஒரு முறை படி , புரியும்.

            [2] இப்போது கூறு , யார் இந்து மத வெறி அமைப்பான சங்கபரிவாரின் கள்ள குழந்தை என்று ? தமுமுக-வா ? ம க இ க-வா ? மதவாதம் பேசி தன் சக மனிதர்களையே “காஃபிர்” என அழைக்கும் இந்த முஸ்லீம் மத வெறியர்கள் சங்கபரிவாரின் கள்ள குழந்தையா? இல்லை பார்பன இந்து மதத்துக்கு எதிராக போராடும் “ம க இ க” சங்கபரிவாரின் கள்ள குழந்தையா?

            [3] மத போதை ஏறிய உன் மண்டைக்கு எப்படி இது புரியும்?

            [4] இப்போது கூறு , பெண்களை வார்த்தையால்,செயலால் அசிங்கப் படுத்தும் குற்றதிற்க்கு ,குற்றம் செய்தவனுக்கு நான் பரிந்துவுரைக்கும் தண்டனை சரிதானே ?

            [5]பெண்களை வார்த்தையால் அசிங்கப் படுத்தும் இந்த முஸ்லீம் மத வெறியர்களுக்கு நபிகள் தத்துவப்படி[இஸ்லாமிய மார்க்கப்படி] என்ன தண்டனை என்றாவது கூறு ?

            GMBASHA://இவர்கள் முழுக்க முழுக்க கடவுள் மறுப்புக்கொள்கை,கம்யுனிசம் என்ற பெயரில் வேடமிட்டுள்ள சங்பரிவார்தான் என்பது கீழ் கண்ட இவர்களின் கூற்றின் மூலம் சந்தேகத்திற்கு இடமிலாமல் நிரூபனமாகிறது “பல இந்து ஆண்கள் இசுலாமிய பெண்களை ஏமாற்றி லவ் பண்ணி திருமணம் செய்து கொள்ளுகிறார்கள். இதற்கெதிராகத்தான் ‘லவ் ஜிகாத்’ அவசியப்படுகிறது

          • [1]இந்து மத வெறி சங்கபரிவார் அமைப்புகளான RSS,BJP, etc போலவே தமுமுக, தவ்ஹீத் ஜமாஅத் ஆகியவையும் இசுலாமிய மதவாத அமைப்புகள் தான் என்பதில் என்ன சந்தேகம்??!

            //இஸ்லாத்தை பற்றிய அறிவு இல்லாத சில கிறுக்கன்கள் தவறு செய்தால் அவர்களை கண்டிக்கலாம் அல்லது சட்டப்படி தண்டிக்கலாம் ஏதேனும் இயக்கத்தில் இருந்தால் அந்த இயக்கத்தை சாடி கட்டுரையை அமைத்திருக்கலாம் அனால் இந்த சங்க்பரிவார இணைய தளம் கட்டுரை முழுக்க முழுக்க இஸ்லாத்தையே சாடுகிறது “எனவே தமுமுக, தவ்ஹீத் ஜமாஅத் முதலான இசுலாமிய மதவாத அமைப்புகள் இத்தகைய தாலிபான் காட்டுமிராண்டித்தனங்களை நிறுத்த வேண்டும்.” என்பதிலிருந்தும்,இவர்கள் கூறும் சம்பவத்தில் த.மு.மு.க தவிர்த்து தொடர்பில்லாத பிற இஸ்லாமிய இயக்கத்தை சாடுவதிலிருந்தும் இவர்களின் சங்கபரிவார கள்ள புத்தி அம்பலமாகிறது அதேபோன்று சங்பரிவார்தான் முஸ்லிம்கள் தேசிய நீரோட்டத்தில் (அதாவது சங்பரிவார கலாச்சாரத்தில்)இணைய வேண்டும் என்றும் கூப்பாடு போடக்கூடியவர்கள் அதே சொற்றொடரை சற்று மாற்றி பயன்படுத்தி இருக்கிற்றனர்

            • உங்கள் காமாலை பார்வையை மாற்றுங்கள் சகோதரரே

              //இப்போது கூறு , யார் இந்து மத வெறி அமைப்பான சங்கபரிவாரின் கள்ள குழந்தை என்று ? தமுமுக-வா ? ம க இ க-வா ? மதவாதம் பேசி தன் சக மனிதர்களையே “காஃபிர்” என அழைக்கும் இந்த முஸ்லீம் மத வெறியர்கள் சங்கபரிவாரின் கள்ள குழந்தையா? இல்லை பார்பன இந்து மதத்துக்கு எதிராக போராடும் “ம க இ க” சங்கபரிவாரின் கள்ள குழந்தையா?//

              காஃபிர் என்ற பதம் மத வெறிப்பதமா? ஒரு விசயத்தில் தெளிவு இருந்தால் அதைப்பற்றி கூற வேண்டும் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று வாய்க்கு வந்ததை உளறிக்கொட்டி வாங்கிக்கட்டிக் கொள்ள கூடாது

              முஸ்லிம் என்ற பதத்திற்கு அர்த்தம் ஏற்றுக்கொண்டவன் அதாவது இஸ்லாமிய சட்ட திட்டங்களை ஏற்று கொண்டவன் “காஃபிர்” என்ற பதத்திற்கு அதை மறுப்பவன் அல்லது ஏற்றுக்கொள்ளாதவன் இதுதான் பொருள் போதை தலைக்கேறியவனைப்போல் எழுதக்கூடாது இப்பொழுது சொல்லுங்கள் சகோதரரே உங்களுக்கு பிடித்துள்ள இஸ்லாத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரான போதை,வெறி எந்த வகை என்று.

              • பாஷா பாய்,

                [0]உங்களின் “காஃபிர்” ஆகிய என்னையும் “சகோதரன்” என அழைப்பதற்கு மிக்க நன்றி பாஷா பாய் !

                [1]மதவாதம் பேசி தன் சக மனிதர்களையே “காஃபிர்” என அழைக்கும் இந்த முஸ்லீம் மத வெறியர்கள் சங்கபரிவாரின் கள்ள குழந்தையா? என் கேள்வியில் என்னத் தவறு ?

                [2] உங்களின் “காஃபிர்” ஆகிய என்னையும், நீங்கள் “சகோதரன்” என அழைப்பதால் காஃபிர் என்ற வார்த்தைக்கு இனி வேற்று மதச் சகோதரன் அல்லது மதம் மறுக்கும் சகோதரன் எனப் பொருள் கூறலாமா ?

                [3]நீங்கள் தொடங்கிய “கள்ள குழந்தை” விவாதம் “காஃபிர்” மூலம் திசை மாறுகின்றது !நாம் இருவரும் எச்சரிக்கையாக இருப்போம்! விவாதத்திற்க்கு மீண்டும் வருங்கள் பாஷா பாய் !

                [4]லவ் ஜிகாத்’ என்ற சொற்களைச் சொன்னது தமுமுக தான் ! ம க இ க அல்ல ! இக் கட்டுரையை மீண்டும் ஒரு முறை படியுங்கள் , புரியும். இப்போது சொல்லுங்கள் பாஷா பாய் சங்கபரிவாரின் கள்ள குழந்தை யார், யார், யார் ? தமுமுக-வா ? ம க இ க-வா ?

                அன்புடன் மதம் மறுக்கும் உங்கள் சகோதரன் [காஃபிர்],

                கி.செந்தில்குமரன்

              • பாஷா பாய்,

                [1]பொருள் புரியவில்லையா ?

                [a]”சகோதரி[பாத்திமா]விடம் மதவாதம் [கொட்ட வார்த்தையும்] பேசும், இந்த முஸ்லீம் மத வெறியர்கள்[தமுமுக] ,தன் சக மனிதர்களையே[தோழர் முத்துகிருஷ்ணன்] காஃபிர் என அழைக்கிறார்கள்”

                [b]”பார்பன இந்து மதத்துக்கு எதிராக போராடும் ம க இ க”

                இந்த இரு அமைப்புகளில் யார் சங்கபரிவாரின் கள்ள குழந்தை?? தமுமுக-வா ? ம க இ க-வா ?

                my comment: //இப்போது கூறு , யார் இந்து மத வெறி அமைப்பான சங்கபரிவாரின் கள்ள குழந்தை என்று ? தமுமுக-வா ? ம க இ க-வா ? மதவாதம் பேசி தன் சக மனிதர்களையே “காஃபிர்” என அழைக்கும் இந்த முஸ்லீம் மத வெறியர்கள் சங்கபரிவாரின் கள்ள குழந்தையா? இல்லை பார்பன இந்து மதத்துக்கு எதிராக போராடும் “ம க இ க” சங்கபரிவாரின் கள்ள குழந்தையா//

                GMBASHA//காஃபிர் என்ற பதம் மத வெறிப்பதமா? //

                • K.Senthilkumaran.
                  [1]பொருள் புரியவில்லையா ?
                  //இஸ்லாத்தை பற்றிய அறிவு இல்லாத சில கிறுக்கன்கள் தவறு செய்தால் அவர்களை கண்டிக்கலாம் அல்லது சட்டப்படி தண்டிக்கலாம் ஏதேனும் இயக்கத்தில் இருந்தால் அந்த இயக்கத்தை சாடி கட்டுரையை அமைத்திருக்கலாம் அனால் இந்த சங்க்பரிவார இணைய தளம் கட்டுரை முழுக்க முழுக்க இஸ்லாத்தையே சாடுகிறது//

                  மதவாதம் பேசி தன் சக மனிதர்களையே “காஃபிர்” என அழைக்கும் இந்த முஸ்லீம் மத வெறியர்கள் சங்கபரிவாரின் கள்ள குழந்தையா? இல்லை பார்பன இந்து மதத்துக்கு எதிராக போராடும் “ம க இ க” சங்கபரிவாரின் கள்ள குழந்தையா?

                  my comment://முஸ்லிம் என்ற பதத்திற்கு அர்த்தம் ஏற்றுக்கொண்டவன் அதாவது இஸ்லாமிய சட்ட திட்டங்களை ஏற்று கொண்டவன் “காஃபிர்” என்ற பதத்திற்கு அதை மறுப்பவன் அல்லது ஏற்றுக்கொள்ளாதவன் இதுதான் பொருள் போதை தலைக்கேறியவனைப்போல் எழுதக்கூடாது இப்பொழுது சொல்லுங்கள் சகோதரரே உங்களுக்கு பிடித்துள்ள இஸ்லாத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரான போதை,வெறி எந்த வகை என்று.

              • Odious: “(Such) as dispute about the signs of God, without any authority that hath reached them. Grievous and odious (is such conduct) in the sight of God and of the Believers.” [40: 35]
                Mocked: “But on this Day the Believers will laugh at the Unbelievers.” [83: 34]
                Punished: “But ye have indeed rejected (Him), and soon will come the inevitable (punishment)!” [25: 77]
                Terrorized: “[Remember] when your Lord inspired to the angels, “I am with you, so strengthen those who have believed. I will cast terror into the hearts of those who disbelieved, so strike [them] upon the necks and strike from them every fingertip.”” [8: 12]
                Destroyed: “Of the wrong-doers the last was remnant was cut off. Praise be to God, the Cherisher of the Worlds.” [6: 45]
                Slain: “You will find others who wish to obtain security from you and [to] obtain security from their people. Every time they are returned to [the influence of] disbelief, they fall back into it. So if they do not withdraw from you or offer you peace or restrain their hands, then seize them and kill them wherever you overtake them. And those – We have made for you against them a clear authorization.” [4: 91]
                Crucified: “Indeed, the penalty for those who wage war against Allah and His Messenger and strive upon earth [to cause] corruption is none but that they be killed or crucified or that their hands and feet be cut off from opposite sides or that they be exiled from the land. That is for them a disgrace in this world; and for them in the Hereafter is a great punishment.” [5: 33]
                Evil: “Say thou: ‘Yea, and ye shall then be humiliated (on account of your evil).” [37: 18]
                Cursed: “Accursed wherever they are found, [being] seized and massacred completely.” [33: 61]

          • [1] நண்பன் யார் ? எதிரி யார் ? என்பது கூட புரியாத பாஷா சங்கபரிவாரிடம் அடிபணிந்து போனாலும் ,தேசிய நீரோட்டத்தில் (அதாவது சங்பரிவார கலாச்சாரத்தில்) இணைந்தாலும் வியப்பு ஏதும் இல்லை.

            [2]”ஒரு இசுலாமிய பெண் யாருடன் பைக்கில் போக வேண்டும் என்பதில் தொடங்கி யாரைக் கல்யாணம் செய்ய வேண்டும் என்பது வரை அவளுடைய சகல செயல்பாடுகளும் தமது ஆதிக்கத்திற்கு உட்பட்டது என்று இசுலாமிய மதவாதிகள் நம்புவதோடு அதை வெறியுடன் வன்முறையின் துணை கொண்டு அமல்படுத்தவும் செய்கிறார்கள். இப்படித்தான் இசுலாமிய மக்களை பொது நீரோட்டத்திலிருந்து பிரித்து தனிமைப்படுத்தி அவர்கள் மீது இந்துமதவெறியர்கள் தாக்குதல் நடத்துவதற்கு உதவி செய்கிறார்கள். எனவே இசுலாமிய மக்களுக்கு இசுலாமிய மதவாதிகள் ஒருபோதும் பிரதிநிதிகளாகவோ, காப்பாளர்களாகவோ இருக்க முடியாது என்பதுடன் அவர்களை பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளியும் விடுகிறார்கள்.-Vinavu ”

            முழுமையாக இதைப் படி , உன் மத போதை குறைகின்றதா பார்ப்போம் !

            GMBASHA//இவர்களின் சங்கபரிவார கள்ள புத்தி அம்பலமாகிறது அதேபோன்று சங்பரிவார்தான் முஸ்லிம்கள் தேசிய நீரோட்டத்தில் (அதாவது சங்பரிவார கலாச்சாரத்தில்)இணைய வேண்டும் என்றும் கூப்பாடு போடக்கூடியவர்கள் அதே சொற்றொடரை சற்று மாற்றி பயன்படுத்தி இருக்கிற்றனர்.
            “பொது நீரோட்டத்திலிருந்து பிரித்து தனிமைப்படுத்தி அவர்கள் மீது இந்துமதவெறியர்கள் தாக்குதல் நடத்துவதற்கு உதவி செய்கிறார்கள்” என்று நாத்திக வேடம் போட்டு கூப்பாடு போடுகின்றது

          • GMBASHA,

            [1]காந்தியை படுக்கொலைச் செய்த கோட்சே என்ற சங்க்பரிவார தீவிரவாதியின் இழிச் செயலையும் உடனடியாக வான் ஒலி மூலம் மக்களிடம் அம்பலப்படுத்தி , காந்தியை படுக்கொலைச் செய்தது “ஹிந்து தான் ” எனக் கூறி , இந்து-முஸ்லீம் மதக் கலவரம் வராமல் தடுத்தது யார் ? இந்து-பார்பன சாதியில் பிறந்த ,ஆனால் மத நம்பிக்கைகளை முற்றும் துறந்த ,சோவியத்-ரஷயாவை[USSR] முன் மாதிரியாக கொண்டு இந்தியப் பொருளாதாரத்தை கட்டமைக்க முயன்ற நம் முன்னால் பிரதமர் திரு நேரு தானே ?

            [2] இப்போது கூறுங்கள் எந்த நாட்டிலும் சிறுபான்மை மக்களுக்கு நண்பன் யார் ?உங்கள் நண்பன் மதவாதிகளா இல்லை மதத்தை மறுக்கும் கம்யூனிஸ்ட்டுகளா ?

            GMBASHA//அல்லது நான் முஸ்லிம் தான் என்று இஸ்லாமிய சமூகத்தையும் மற்றவர்களையும் ஏமாற்ற காந்தியை கொள்ளும் போது கோட்சே என்ற சங்க்பரிவார தீவிரவாதி தனது கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டு தன்னை இஸ்லாமியனாக காட்ட முனைந்தானல்லவா அது போன்ற செயல்தான் இதுவும்.

          • GMBASHA,

            எம் தமிழ்ச் சகோதரி[பாத்திமா] மீதானா உடை ,பெயர் பற்றிய உன் விமர்சனம் தவறு.

            இசுலாமிய ஆண்களின் உடை ஐரோப்பிய நாகரிகம் சார்ந்து உள்ளது என்பதை மறக்க வேண்டாம்.

            பாத்திமா என்ற பெயருக்கு ஏதாவது காப்புரிமையை முஸ்லீம் மத வெறியர்கள் வைத்து உள்ளீர்களா ?

            GMBASHA//பெயரை மாற்றி கொள்ள வேண்டியதுதானே இஸ்லாமிய கொள்கைகளில் நம்பிகையோ,பிடிப்போ இல்லாதவற்கு எதற்காக இஸ்லாமிய ஆடையில் பிடிப்பும் பெயரில் பாசமும் வேண்டும் இதுவெல்லாம் இஸ்லாத்திகுள்ளும் இஸ்லாமியர்களுக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு தானே?

          • GMBASHA,

            [1]உலகில் இருந்த ஒரே ஒரு “நேப்பாள இந்து மன்னர் அரசையும்” தம் மக்கள் சக்தியுடன் போராடித் துரத்திய நேப்பாள கம்யூனிஸ்ட்டுகள்[ஐக்கிய நேபாள பொதுவுடமைக் கட்சி (மாவோயிஸ்ட்) [UCPN] ] கதை உமக்குத் தெரியுமா ? இக் கம்யூனிஸ்ட்டுகளும் , இம் மக்களும் பிறப்பால் இந்துக்கள் தான் என்ற உண்மை உமக்குத் தெரியுமா ?

            [2]கம்யூனிஸ்ட்டுகள் மதம் அற்றவர்கள், இனம் அற்றவர்கள் தான். உழைக்கும் வர்க்கம் சார்ந்து போராடக்கூடியவர்கள் தான். ஆனால் மதத்தின் பெயரால் ,இனத்தின் பெயரால் ஒடுக்கப்படும் மக்களுக்கும் [மனித உரிமைக்காகவும்] ஆதரவாக குரல் கொடுத்து செயல் ஆற்றுபவர்கள்.

            [3]இவை பாஷாவுக்கு புரிந்தால் , சிறுபான்மை மக்களுக்கு நண்பன் யார் ? எதிரி யார் ? என்பதும் புரிந்துவிடும்.

            //இந்த சங்கபரிவாரத்தினர் உழைக்கும் மக்களையும் ஏழைகளையும் தங்கள் பக்கம் இழுப்பதற்காக நாத்திக வேசமும்,கம்யுனிச வேசமும் போடக்கூடியவர்கள் இஸ்லாம் என்று வந்துவிட்டால் தங்களின் உண்மை முகத்தினை காட்டிவிடுவார்கள் இதில் விட்டில் பூச்சிகளாய் அலாவுதீன்களும்,பாத்திமாக்களும் விழுகின்றனர்

          • GMBASHA,

            என் பின்னூட்டங்களை படித்தப் பின்பாவது பாஷா தன் தவறானக் கருத்துக்களைக் கலைவாரா இல்லை மீண்டும் “கள்ள குழந்தை” அவதூரைத் தொடர்வாரா ?

  47. [1]What is the punishment in Islam for the people who spoil the Modesty of a Women by words and action?
    பெண்களை வார்த்தையால் அசிங்கப் படுத்தும் வெறியர்களுக்கு நபிகள் தத்துவப்படி[இஸ்லாமிய மார்க்கப்படி] என்ன தண்டனை ?

    [2] I really do not know, So If any one knows the true answer pls tell me

    • K.Senthilkumaran
      ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள்.குர்ஆன் 24;4
      அவதூறு கூறியோர் உங்களில் ஒரு பகுதியினரே. அதை உங்களுக்குத் தீங்காக நினைக்காதீர்கள்! மாறாக அது உங்களுக்கு நல்லது. அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர் செய்த பாவம் உள்ளது. அவர்களில் இந்த விஷயத்தில் பெரும் பங்கு எடுத்தவனுக்குக் கடும் வேதனை உண்டு.24;11
      நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு.24;23

  48. இங்கு இஸ்லாமிய பெண்களை இந்துக்கள் காதலிப்பதால் தான் இப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று சில இஸ்லாமிய வெறியர்கள் புலம்புகின்றார்கள்.

    அப்படி என்றால் இந்து பெண்ணை இஸ்லாமிய ஆண் காதலித்தால் இந்து அமைப்புகள் இப்படி வன்முறையில் ஈடுபடலாமா ?

  49. Whatever be the case. Vinavu used this “Opportunity” nicely to trumpet their propoganda ( whatever it may be)

    The real issue here is “Problems faced by Women in the So called Progressive TamilNadu”. What happened to Fathima is a shame for anyone who has the sixth sense and calls themselves human being. But Vinavu gave a relegious color to it or used the opportunity to gave the relegious color to it.

    Now wondering who really is relegious extremist. TMMK as stated in the article or Vinavu or both?. Both of them have used relegious for their own use.

    And vinavu calling Karunanithi , Jaya as opportunists. They should take training from Vinavu.

  50. பாத்திமாவிற்கும் அவருடன் இணைந்து குரல் கொடுத்தோர்க்கும் பாராட்டுகளும். வாழ்த்துக்களும்.

    இங்கே இரண்டு மூன்று கும்பல் இருக்கின்றது. இவங்க கிட்ட கேட்டுதான் பேரு வைக்கனும், படிக்கனும், புர்கா போடனும் இல்ல போடக்கூடாது, என்று சொல்ல எல்லா முஸ்லிம்களே கூட இவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை.

    பெண்களைக் காப்பாற்ற உறுதிப் பூண்டாரென்றால், அப்படியே கூட்டமான பேருந்துகளில் ஏறிக் காப்பாற்றலாம். எல்லா பள்ளி, கல்லூரிகளுக்கும் பக்கத்தில் இருக்கும் டாஸ்மாக் காஃபிர்களின் அத்துமீறல்களிலிருந்து காப்பாற்றலாம். முக்கியமாக கிலோ கணக்கில் வரதட்சணை கேட்கும் ஆர்தடாக்ஸ் அரபு பெயர் வைத்தவர்களிடமிருந்து காப்பாற்றலாம்.

    ஆண்களையும் காப்பாற்றியாக வேண்டும். ஏதாவது வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்து, பஸ் ஸ்டான்டில் நின்று போர வர பெண்களை நோட்டமிடும் ஈனத்தனத்தை விட்டு அவர்களையும் காக்கலாம்.

  51. //இங்கு இஸ்லாமிய பெண்களை இந்துக்கள் காதலிப்பதால் தான் இப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று சில இஸ்லாமிய வெறியர்கள் புலம்புகின்றார்கள்.

    அப்படி என்றால் இந்து பெண்ணை இஸ்லாமிய ஆண் காதலித்தால் இந்து அமைப்புகள் இப்படி வன்முறையில் ஈடுபடலாமா ?

    // good Question.. Any true muslim available to answer this?

    • காதல் என்ற பெயரில் காம இச்சைகளுக்கு பலியாகி ,தன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை துச்சம் என தூக்கி எறிந்து செல்லும் அனைத்து பெண்களையும் ,அவர்களுக்கு துணை போகிறவர்களையும் நான் கண்டிக்கிறேன்

  52. எதிரில் ஒரு ஆணுடன் முகத்தை மூடிய புர்காவுடன் இருப்பது தனது மனைவியாகக் கூட இருக்கலாம். மகளாகவோ, தங்கையாகவோ இருக்கலாம். தாயாகவோக் கூட இருக்கலாம். எப்படி உறுதிப்படுத்திக் கொள்வது. அடாவடியாக கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. முடியவில்லையென்றால் சந்தேகத்துடன் மூடிக்கொண்டு போகவேண்டியதுதான். பாவப்பட்ட மக்கள்.

  53. /// “பல இந்து ஆண்கள் இசுலாமிய பெண்களை ஏமாற்றி லவ் பண்ணி திருமணம் செய்து கொள்ளுகிறார்கள். இதற்கெதிராகத்தான் ‘லவ் ஜிகாத்’ அவசியப்படுகிறது./// இந்த வரிகள் மட்டும் மாற்றப்பட வேண்டியவை வினவு கட்டுரையில் இப்படியான ஒரு வரியை எதிர் பார்க்கவில்லை. லவ் ஜிஹாத் என்பது இல்லாத ஒன்று காவிகளால் இட்டுக்கட்டப்பட்ட ஒரு விடயம் அதை பற்றி இஸ்லாமியர்கள் அதிலும் குறிப்பாக இஸ்லாமிய அடிப்படை அமைப்புகளில் இருக்கும் அனைவருக்கும் நன்கு தெரியும் அப்படி இருக்க இப்படி சொல்லி இருப்பானா என்பது ஒருபுறம் இருக்க… அப்படியே சொல்லி இருந்தாலும் இந்த கட்டுரையில் அதை சொல்லும் இடத்தில் இல்லாத ஒரு விசயம் கூட ஒரு மத வெறியன் பார்வையில் எப்படி வந்தது என்பதையும் சேர்த்தே எழுதி இருக்கலாம்
    கோவை பகுதியில் பள்ளித்தோழன் ஒருவன் (காவிக் கொள்ளைகை கொண்டவன்) சொல்கிறான் லவ் ஜிஹாத் வினவுலயே இருக்கு பாருன்னு

    • நீங்கள் சொல்வது போல லவ் ஜிகாத் என்பது இந்து மதவெறி அமைப்புக்களால் உருவாக்கப்பட்ட ஒரு பொய்ப் பிரச்சாரம் என்பதுதான் உண்மை. அதாவது இந்து பெண்களை திட்டமிட்டு காதலித்து மதம் மாற்றி திருமணம் செய்து கொள்வதை இசுலாமிய தீவிரவாதிகள் சதி போல செய்கிறார்கள் என்றே ஆர்.எஸ்.எஸ் கூட்டம் அவதூறு பரப்பி வருகிறது. இந்த கட்டுரையில் லவ் ஜிகாத் எனும் வார்த்தையை பேசிய தமுமுகவைச் சேர்ந்தவர் இந்த பின்னணி, பொருள் தெரியாமல் கூட பேசியிருக்கலாம். ஆனால் இவர்களும் முசுலீம் பெண்களை இந்து மதவெறி அமைப்புகளின் தூண்டுதலால் இந்து ஆண்கள் திட்டமிட்டு காதலித்து திருமணம் செய்கிறார்கள், அதை தடுக்க வேண்டும் என்ற பொருளிலேயே பேசுகிறார்கள், நியாயப்படுத்துகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் மற்றும் இசுலமிய அடிப்படைவாத அமைப்புக்கள் இரண்டுமே தத்தமது பெண்களை வேற்று மத ஆண்களிடமிருந்து காக்க வேண்டும் என்பதையே சாராம்சத்தில் பேசுகிறார்கள். எனவே ஆர்.எஸ்.எஸ் கூறும் லவ் ஜிகாத் எனும் அவதூறை எதிர்க்கும் நாம் மறுபுறம் இசுலாமிய மதவெறியர்கள் இசுலாமிய பெண்களை இந்து அல்லது வேற்று மத ஆண்களிடமிருந்து காப்பாற்றுவதாக செய்யும் அடாவடித்தனத்தையும் கண்டிக்க வேண்டும்.

      • நன்றி மேலும் ஒரு ஐயம் உள்ளது. அதாவது நான் பள்ளி படிக்கும் காலத்திலே வெளியான ஒரு ஆர்.எஸ்.எஸ் சுற்றறிக்கையில் இது போல இஸ்லாமிய பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து இந்து குழந்தையை அவ்வர்கள் வயிற்றில் விதைக்கனும்னு இருந்தது வினவும் அறிவீர்கள் என நினைக்கிறேன் அது போலவே சம்மந்தமே இல்லாமல் விநாயகர் ஊர்வலத்தில் துலுக்கன வெட்டு துலுக்கச்சிய கட்டு எனவும் கோஷம் போடுவார்கள்.. ஆனால் இது போல அல்ல லவ் ஜிஹாத் என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு அதை அந்த இஸ்லாமிய அடிப்படை மதம் தலிக்கேரியவன் சொல்லி இருந்தால் அது தப்புதான் ஆனால் நாம் அதை அந்த பொய்யை கூட புரிந்து கொள்ளாமல் பேசுகிறான் என்பதை அழுத்தமாக பதிந்திருக்கலாம்.
        ஆனால் இந்த மதவெறி அமைப்புகளின் பிரதான பனியே இதுதான் முஸ்லீம் பெணிகள் யாராவது இந்து அல்லது கிறுஸ்த்துவ மத ஆண் நண்பர்களுடன் பேசினால் கூட பிரச்சனை செய்வது எனும் ரீதியில் மதம் மண்டைக்கு அடிச்சுத்தான் சுத்தரானுக என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை
        கோவையில் கூட சமீபத்தில் இப்படி இவனுக தவறான நபர்களை பிடிக்க போய் பெரிய பஞ்சாயத்து ஆய்டுச்சு காரணம் மதம் எனும் போதை மட்டுமே என்பதிலும் மாற்று கருத்துக்கு இடமில்லை

        • [1]இந்து-முஸ்லீம் கலப்பு திருமணத்தை-நிக்காவை தடுக்க இந்து , முஸ்லீம் மத வெறியர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

        • Please explain me why your prophet allowed muslim men to marry non-muslim women but banned muslim women marrying non-muslim men? Is your prophet any different than these RSS/Sang Parivar porukis?

      • vinavu,

        //லவ் ஜிகாத் என்பது இந்து மதவெறி அமைப்புக்களால் உருவாக்கப்பட்ட ஒரு பொய்ப் பிரச்சாரம் என்பதுதான் உண்மை. //

        Let it be so.

        But Muhamadism atleast theoratically enables it.

        Let me explain.

        1. Muhamadan can marry more than one woman legally while others cannot.
        2. He can marry non-Muhamadan too while others cannot marry a muslim woman.
        3. He need not inform the new wife about previous marriage.
        4. It is acceptable for him to house his different wives in different places.
        5. Muhamadism wants newer converts and commands Muhamadans to wage jihad for new converts.
        6. By winning a non-muhamadan girl, he brings in a new convert, adding in their ranks and reducing in others’ rank.

        Can anyone deny these facts?

        What is more, there are examples too.

    • இந்து இளைஞர்களிடமிருந்து இஸ்லாமிய பெண்களை பாதுகாக்கும் ஜிகாத்தை பற்றி தான் சம்பந்தபட்ட நபர் பேசியிருப்பபது போல் தெரிகிறது. இந்துத்துவ கும்பல கூறும் லவ்ஜிகாத் இல்லை..லவ்வுக்கு எதிரான ஜிகாத்

  54. You are deliberately slandering thowheed jamath for something which they have always stood against.

    For More than 20Years they have stood against community policing and have always argued among muslims that law should be upheld by the authority only, There has never once been an instance of thowheed jamath getting into these type of nonsense anytime anywhere.

    If you didnt know you should have kept quiet instead you are propagating lies.

    TMMK I dont doubt your claim, It has been a long standing problem of them taking law into their own hands and playing pseudo protection to muslims, Though within the community they are known for their notorious trouble making and policing

  55. இங்கு பெண்ணுரிமை போராளிகளாய் போர் பரணி பாடுபவர்கள் தங்கள் சாதி பெண்ணை இன்னொரு சாதிக்காரனுடன் சேர்த்து பார்த்தால் என்ன நடக்குமோ அதுவே இங்கும் நடந்துள்ளது.

    சந்தடி சாக்கில் சீனு,அஸ்வின் போன்ற RSS பெருச்சாளிகள் தங்கள் பற்களை கூர் தீட்ட
    வந்து விட்டன.யாராவது பாய் வீட்டு பிரியாணிய சாப்ட்டு அது செரிக்கிரதுக்குள்ள இங்க வந்துருக்கும்.
    ஏன்னா பகையாளி கூட்டத்தை உறவாடி கெடுப்பது என்பது RSS அஜெண்டா.

    தமுமுக மன்னிப்பு கேட்டதுங்கிறது ஆச்சரியமான விஷயம்.

    சீரணி அரங்க கூட்டத்தின்போது ஆணவத்தின் பிறப்பிடம் அகங்காரத்தின் அட்சய பாத்திரமாகிய
    அம்மாவையே BJPயுடன் கடந்த காலத்தில் கூட்டணி வைத்தது தவறு என்று மன்னிப்பு கேட்க
    வைத்தவர்கள் அவர்கள்.

    பின்னாளில் அம்மா முதல்வர் ஆனதும் நடந்ததை நினைத்து குமுறி சீரணி அரங்கத்தையே
    இடித்து தரை மட்டமாக்கியது வரலாறு.

    ஆணாதிக்கம் இல்லாத சமூகம் என்று ஒன்றுமே கிடையாது.படித்த கல்விக்கேற்ப
    அளவு கூடும் அல்லது குறையும்.

    இஸ்லாம் ஏதோ பெண்கள் படிப்பதையே கூடாது என்று சொல்வதுபோல் நிறுவ
    முயல்பவர்களின் கவனத்திற்கு.

    இந்தியா முழுவதும் படிக்கின்ற முஸ்லீம் பெண்கள் அனைவரும் தங்கள் மதத்தை
    விட்டு விரட்டபட்டவர்களா என்ன?

    • சங்கர் சலீம் சைமன்,

      [1]முன்று மதத்தையும் உங்கள் புனைப் பெயரில் வைத்து கொண்டு உள்ளது [உண்மையான பெயரே இது எனில் என்னை ம்ன்னிக்கவும்] , அம் மதங்கள் கூறும் பெண் அடிமைக் கருத்துகளுக்கு மிக்க பொருந்துகின்றது.

      [2]நாய் வாலை வெட்டினால் “மிருக வதைச் சட்டம்” நாய்க்கு ஆதரவாக வரும் போது , எம் சக மனிதரை முஸ்லீம் மத வெறியர்கள் கொட்ட வார்த்தையில் ஏசினால் நான் கேள்விக் கேட்கக் கூடாதா ?.

      [3]உங்கள் அறிவை மொக்கையடித்த [காயடித்த] இம் முன்று மதத்தில் ஓன்று, எம் சக மனிதரின் [பாத்திமா] மீது நடத்தப் பட்ட, மனித உரிமைக்கு எதிரான தாக்குதலுக்கு [வார்த்தையால் அசிங்கப் படுத்தும் தாக்குதலுக்கு ] எதிராக எப்படி பேசும். பேசுமா ?

      [4]சாதி இந்துக்களின் [ உம்: ராமதாஸ் ] தீண்டமைக் ஆதரவான
      குரல் உன் வார்த்தைகளில் எதிரொலிக்கின்றது.

      [5]உன் வீட்டுப் பெண்களை மத வெறியர்கள் இப்படி ஏசினால் பொறுத்துக் கொள்ளவாயா ?

      [6]எம் தமிழ்ச் சகோதரியை வார்த்தையால் அசிங்கப் படுத்தும் இந்த முஸ்லீம் மத வெறியர்களுக்கு நபிகள் தத்துவப்படி என்ன தண்டனை ? நாக்கை அறுக்கலாமா? அல்லது முழுமையாக பிறப்பு உறுப்பை அகற்றும் [சுன்னத்-நல்ல] செயலை செய்யலாமா ?

      குறிப்பு : [பிறப்பு உறுப்பை] சுன்னத் செய்வது அறிவியல் பூர்வமானது ,தனி மனித சுகாதாரத்துக்கு நல்லது. அது போல பெண்களை மனம்,உடல் ரீதியாக அசிங்கப்படுத்தும் சமுக விரோதிகளுக்கு நாக்கை அறுக்கும் தண்டனை , அல்லது முழுமையாக பிறப்பு உறுப்பை அறுக்கும் தண்டனை கொடுப்பது சமுக ஆரோக்கியத்துக்கு நல்லது.

      //ஆணாதிக்கம் இல்லாத சமூகம் என்று ஒன்றுமே கிடையாது.படித்த கல்விக்கேற்ப
      அளவு கூடும் அல்லது குறையும்.

      //இங்கு பெண்ணுரிமை போராளிகளாய் போர் பரணி பாடுபவர்கள் தங்கள் சாதி பெண்ணை இன்னொரு சாதிக்காரனுடன் சேர்த்து பார்த்தால் என்ன நடக்குமோ அதுவே இங்கும் நடந்துள்ளது.

  56. லவ் ஹிகாத் என்று சொன்னது தமுமுக காரன். வினவு இல்லை. கவனிக்: பெரோஸ்

    • எனது ஆதங்கத்தையும் கேள்வியையும் புரிந்து கொண்டு வினவு சரியான பதிலை அளித்து விட்டது உங்களுக்கு என் கேள்வியின் தன்மை புரியவில்லை விடுங்க….

    • லவ் ஜிகாத் என்பது மதவெறி தலைக்கேறிய சங்பரிவாரின் கள்ளக்குழந்தை வினவினால் இட்டுக்கட்டப்பட்ட வார்த்தை.

    • //லவ் ஹிகாத் என்று சொன்னது தமுமுக காரன். வினவு இல்லை.//

      ஆனா, வினவு தான இல்லைனு சொல்லுச்சு…

  57. பர்தா போட்ட ஒரு பெண் முகமதியம் அல்லாத வேறு மதத்தை சேர்ந்த ஒரு ஒழுக்கமான ஆணுடன் அதுவும் தன் குடும்பத்தினர் அனுமதியோடு பணி நிமித்தமாக பஸ்ஸில் பயணம் செய்தால் அது சந்தேகத்துக்குறியது. ஒரு கூட்டம் அந்த பெண்ணையும் அந்த வேற்று மதத்து ஆணையும் சந்தேகப்படும்.
    ஆனால் இதே பர்தா போட்ட பெண் தாடியும் குல்லாவும் உள்ள ஆனால் ஒழுக்கக்கேடும் கயமைத்தனமும் கொண்ட ஒரு ஆணுடன் பயணம் செய்தால் அதுவும் தன் வீட்டில் சொல்லாமல் பயணம் செய்தால் இந்த கூட்டத்துக்கு எந்த சந்தேகமும் வராது. அந்த ஆண் இந்த பெண்ணை பொது இடத்தில் மான பங்கம் செய்தால் கூட இந்த கூட்டத்தினர் அலட்டிக்கொள்ள மாட்டார்கள். அப்படியே ஏதாவது பிரச்சினை வந்தால் அந்த பெண்ணைத்தான் குறை கூறி தண்டிப்பார்கள். இதற்கு பெயர் தான் முகமதிய மத வெறி என்பது.
    உலகில் உள்ள எல்லா மதத்தினரையும் விட முகம்மதியர்களுக்கு தான் மாற்று மதங்களின் மீதும் பொதுவுடைமை சிந்தனைகளின் மீதும் தனி நபர் சுதந்திரம் மீதும் காழ்ப்புணர்ச்சியும் வன்மமும் அதிகம். இந்தியாவில் முகம்மதிய மதம் சார்ந்த தீவிரவாதம் தான் இந்து மதம் சார்ந்த தீவிரவாதத்துக்கு ஊற்றுக்கண். மோடி மாதிரியான ஆட்கள் பெரிய தலைவர்களாக வலம் வருவதற்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் பார்ப்பணிய வெறி கோட்பாடு இவ்வளவு செல்வாக்கு பெற்றதற்கும் முகம்மதிய மதம் சார்ந்த தீவிரவாதம் தான் காரணம்.
    இந்தியா பாக்கிஸ்தான் பிரிவினை மத ரீதியாக நடந்த ஒன்று. அப்போது பத்து கோடிப்பேர் இடம் பெயர்ந்தார்கள். ஒரு கோடிப்பேர் வன்முறையால் மடிந்தனர். இந்த விளைவில் இருந்து இன்றளவிலும் வட இந்தியா விடுபடவில்லை. போதாக்குறைக்கு பாக்கிஸ்தான். அப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேசம் ஆகிய நாடுகளில் அவ்வப்போது முகம்மதிய ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் இந்துக்களும் பவுத்தர்களும் சீக்கியர்களும் கொடூரமான கதைகளுடன் இந்தியாவுக்கு அகதிகளாக வருவதால் வட இந்தியாவில் மதவெறி தீ அணையாமல் எரிகிறது. இதனால் தான் தென்னிந்தியாவில் சமத்துவம் பேசும் இயக்கங்கள் வேர் பிடித்து வளர்ந்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியது மாதிரி வட இந்தியாவில் செய்ய முடியவில்லை. அங்கு பிற்படுத்தப்பட்ட மக்கள் அவ்வளவாக தலை எடுக்க முடிவதில்லை. இந்து மதத்தில் சாதி அடுக்கும் அது சார்ந்த ஒடுக்குமுறையும் அதிகம். இருந்தும் இந்துத்துவ கோட்பாடு செல்வாக்கு பெற்று வளர்ந்து வருவதற்கு காரணம் முகம்மதிய மத வெறியே!. இந்தியாவில் முகம்மதிய தீவிரவாதத்தை கட்டுப்படுத்தாமல் இந்துத்துவ தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது கடினம். இப்போது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களும் மத வெறியின் பிடிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக போய்க்கொண்டிருப்பது விசனத்துக்குறியது.

    • //இந்துத்துவ கோட்பாடு செல்வாக்கு பெற்று வளர்ந்து வருவதற்கு காரணம் முகம்மதிய மத வெறியே!. இந்தியாவில் முகம்மதிய தீவிரவாதத்தை கட்டுப்படுத்தாமல் இந்துத்துவ தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது கடினம்.//
      Well Said Periyasamy

  58. கிழக்குக் கடற்கரைச்சாலையில் குறிப்பாக மணமேல்குடியிலிருந்து ஏற்கனவே இந்த கலகக்காற்று வீசத்தொடங்கிவிட்டது. அது இப்போது தோழர் ஃபாத்திமாவை அழைத்து வந்திருக்கிறது. இது இன்னும் தொடரவேண்டும். தோழர் ஃபாத்திமாவிற்கு வாழ்த்துக்கள்!

    • Hi kurusamymayilvaganan

      // மணமேல்குடியிலிருந்து ஏற்கனவே இந்த கலகக்காற்று வீசத்தொடங்கிவிட்டது.//

      சற்று விரிவாகக் கூறவும். நன்றி.

  59. வினவு,

    தங்கள் அமைப்பை சேர்ந்தவர் என்பதற்காக தாங்கள் கவலைப்படும்போது, இஸ்லாமிய கொள்கையை சேர்ந்த ஒரு பெண் தவறிவிட கூடாது என்று கவலைபடுவது எப்படி தவறாகும்?

    சந்தேகம் கொள்வது தவறு, அதேபோன்று சந்தேகம் ஏற்படும்படி நடந்துகொள்ளாமல் இருப்பதுதான் புத்திசாலித்தனம்.

    உங்கள் கொள்கை மீது, கோட்பாடு மீது எப்படி உங்களுக்கு பிடிப்பு இருக்கின்றதோ, அதேபோன்று இஸ்லாத்தின் மீது முஸ்லிம்களுக்கு பிடிப்பு இருக்கத்தான் செய்யும்.

    தமுமுக சகோதரர்களுடைய அணுகுமுறையில் தவறு இருக்கலாம். இதனை காரணம் காட்டி நாத்தீகத்தையும், கம்யூனிசத்தையும் சரிகாண முடியாது.

    நாத்தீகமும், கம்யூனிசமும் ஒரு போதும் மனித குலத்திற்கு தீர்வை ஏற்படுத்த முடியாது.

    “நியாயத்தீர்ப்பு நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக. நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் – மனிதன் தன் இரு கைகளும் செய்து முற்படுத்தியவற்றை – அமல்களை – அந்நாளில் கண்டு கொள்வான் – மேலும் காஃபிர் “அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!” என்று (பிரலாபித்துக்) கூறுவான” – திருக்குர்ஆன் 78:39 & 40.

  60. லவ் ஜிகாத் இரண்டு விதங்களில் செயல்படும்.
    1. இஸ்லாம் இளைஞர்கள் மாற்று மதப் பெண்களை காதல் கொண்டால் அவர்களுக்கு சிறப்பு இஸ்லாம் கல்வி அளித்து மதமாற்றி திருமணம் செய்து கொள்ளலாம்.
    2. இஸ்லாம் பெண்கள் காதலித்தால் அல்லது பிற மத நண்பர்களோடு ஊர் சூற்றினால் அவர்களை நோட்டம் விட்டு கண்டிப்பு செய்யப்படுவார்கள். அதையும் மீறினால் மேலே குறிப்பிட்ட விரும்பத்தாகாத நிகழ்வுகள் நடைபெறும்.

    எது எப்படியோ.. அந்தப் பெண் அந்த கும்பலிடம் இருந்து தப்பியது உண்மையில் ஆச்சரியமான ஓன்று. எனினும் அவர்கள் திருப்பி அடிப்பார்கள்.

  61. பெரோஸ், என்ன இருந்தாலும் உண்மை இசுலாத்தின் மீதுள்ள பற்றும் பசாமும் அவ்வளவு சீக்கிரம் மறையாது என்பதுதான் நான் புரிந்துகொண்டது. கடைநிலையிலுள்ள என்னைப்போலுள்ளவர்களுக்கு உங்களின் மேதாவி அறிவின் கேள்வி தன்மை புரியாதுதான. உங்களின் மேதாவி அறிவை எற்கனவே பேஸ்புக்கில பார்த்ததுதானே.

    • நன்றி..! நன்றி..! நன்றி..!
      நாட்டு வேங்கைக்கு ஒரு நன்றி இஸ்லாம் மீதான என் பற்றை கண்டறிந்து சொன்னதற்க்கக

  62. இந்த தளத்தில் நடக்கும் கூதுகளைப் பார்த்தால் உணமைக்கு மாரான விசயங்களை வினவு தளம் நன்றாகப் பரப்புவதாக தெரியவில்லை…

    மேலும் இந்தக் கட்டுற்ரையில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்று ஆராய நான் தயார் இந்த தளத்தின் ஆசிரியர்கள் தயாரா?

    இல்லையேல் இவை அனைத்தும் இட்டுக்கட்டப்பட்டவை என்று ஒப்புக்கொள்ள தளத்தின் ஆசிரியர்கள் தயாரா?

    இவ்வறு தான் நாங்கள் வெளியிடுவேம் எங்களை யாரும் கேட்க முடியாது என்ற மமதை உள்ளவர்கள் நீங்கள் இல்லை என்று நான் நினைக்கின்றேன்… நீங்கள் எவ்வாறு?

    நடுநிலையோடு தளம் நடத்த முயற்ச்சியுங்கள் தோழர்களே…

    • // நடுநிலையோடு தளம் நடத்த முயற்ச்சியுங்கள் தோழர்களே… //
      என்னாது நடுநிலையா? comedy பண்ணாதீங்க boss.
      நண்பர்கள்:
      * தலித்கள்
      * தொழிலாளர்கள்
      * “புர்ச்சி” தோழர்கள்
      * கியூபா, வட கொரியா, வெனிசுலா

      எதிரிகள்:
      * பார்பனர்கள்
      * தேவர்கள்
      * RSS, BJP வகையறாக்கள்
      * முதலாளிகள்
      * அமெரிக்கா
      * “புர்ச்சி” பண்ணாத தோழர்கள்
      * விடுதலை புலிகள்
      * அன்னா ஹசாரே, கேஜ்ரிவல் மற்றும் இப்போது AAP
      * ஜெயமோகன்
      * மற்றும் பலர்… 🙂

      எதிரிகள் லிஸ்ட வெறும் “பார்பனர்கள்”னு சுருக்கினாலும் தவறல்ல.

      கட்டுரைகள் எவர் பக்கம் நியாயம் என்றெல்லாம் இருக்காது. உண்மைகளை எப்படி வேணும்னாலும் திரித்து “நண்பர்கள்” தான் பாதிக்கப்பட்டவர்கள் என்றே இருக்கும்.

  63. இறைவன் அவர்களை தண்டிப்பான் .கோழைகளுக்கு இப்படி சொல்லி ஒதுங்கிக்கொள்வது ஒரு பிழைப்பு .அவனுக்கு மறு உலகில் தண்டனை கிடைப்பது ஒரு பக்கம் இருக்கட்டும் .இந்த உலகில் என்ன கிழிக்கிறீர்கள் .நமக்குள் ஒற்றுமை கிடையாது .பரவலாக பிரிந்து கிடந்து அவர்களுக்கு மறைமுகமாக உதவி செய்து விட்டு ,இறைவன் பார்த்துக்கொள்வான் என்று தப்பித்து கொள்ளாதீர்கள் .கிணற்றுத்தவளைகள் போல் இருந்தால் அழிவுதான் .உங்கள் முட்டாள் தனத்திற்கெல்லாம் இறைவன் துணை வர மாட்டான் .ஹிந்துத்துவாவினர் சராசரி ஹிந்து நண்பர்களையும் தன வலையில் விழ வைப்பதில் வெற்றி கண்டதற்கும் முஸ்லீம்களாகிய நாமும் ஒரு காரணம் .இதை சரி செய்ய பல காலங்களாகும் .எம்மதமும் சம்மதம் என்ற வார்த்தையை சரிவர புரிந்து கொள்ளாமல் திமிர்த்தனமாக நமது வழிமுறை மட்டும் சரி .மற்றவர்கள் காபிர்கள் என்ற நினைப்பை ஒழியுங்கள் .முதலில் நாம் மனிதர்கள் .சக மனிதர்களையும் சமமாக மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் .எம்மதமும் சம்மதம் என்பதன் அர்த்தம் அதுதான் .அவர்களை படைத்ததும் ஒரே இறைவன்தான் .மொழியாலோ மதத்தாலோ நாம் வேறு பட்டிருந்தாலும் நாம் அனைவரும் ஒரே இனம்தான் .அடுத்தவர்களுக்கு சிறிதும் தீங்கிழைக்காதவனே சிறந்த மனிதன் .இறைவனின் பார்வை வேறு .மனிதனின் பார்வை வேறு .மனிதனை மனிதன் ஸ்தானத்திலிருந்து பார் .ஆனால் முஸ்லீம்களோ இறைவனின் பார்வையிலிருந்து பார்க்கிறார்கள்.யார் நடிக்கிறார்கள் யார் உண்மையாளர்கள் என்பது இறைவன் ஒருவனுக்கு மட்டுமே தெரியும் .ஆறறிவு மட்டுமே இருப்பதாக அறியப்படும் மனிதனுக்கல்ல .

  64. //“நியாயத்தீர்ப்பு நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக. நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் – மனிதன் தன் இரு கைகளும் செய்து முற்படுத்தியவற்றை – அமல்களை – அந்நாளில் கண்டு கொள்வான் – மேலும் காஃபிர் “அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!” என்று (பிரலாபித்துக்) கூறுவான” – திருக்குர்ஆன் 78:39 & 40.

    // So allah is like Jeyalalitha/Geroge bush – if you are not with us then you are Terrorist(kafir etc) – Means will get killed. Why should I respect Geroge bush or your Allah?

  65. வினவுத்தோழர்கள் எனது பின்னோட்டம் ஒன்றை வெளியிடவில்லை. பரவாயில்லை. சுரை ஒன்று விதைக்க பனை ஒன்று முளைக்காது. உணமைகள் சுடத்தான் செய்கிறது. இசுலாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் இது போன்ற பல நிகழ்வுகள் காதல் பிரச்சனை என்றில்லாது வேறு பல பிரச்சனைகளிலும் ரௌடித்தனங்கள் செய்து வருகின்றனர். இவர்களின் இந்த செயல் மீனவர்கள் மத்தியில் மட்டும் எடுபடவில்லை. காரணம் அவர்களில் பலர் பாரதிய ஊனதாவில் உள்ளனர். இப்பொழுது பிற இந்துக்களும் குறிப்பாக தலித்துக்கள் பாரதிய ஜனதாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். பொதுவாக இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் தலித்துக்களின் வேலை வாய்ப்பு இசுலாமியர்களைச் சார்ந்துள்ளதால் பல பிரச்சனகளில் தனிந்து போனார்கள். தொடர்ச்சியாக அப்படி போவார்கள் என்று நம்புவது யானை தன் மீது தானே மண்ணை வாரிக்கொட்டிக்கொண்டது போல்தான். அதனால் பல பிரச்சனைகளில் இசுலாமியர்களின் அடாவடித்தனங்கள் வெளிவந்தால்தான் அவர்களும் யோசிப்பார்கள். வினவுக் கொள்ளகையில் தலையிடுவதாக நினைக்க வேண்டாம். மனதில் பட்டதை கூறினேன்.
    நன்றி!

    • நாட்டு வேங்கை,
      நீங்க ரூம்ல உக்காந்துகிட்டு யோசிக்கப்படாது. களத்தில் நேரடியாக மக்களை சந்திக்கனும். நீங்க எழுதறதப் பாத்தா தமிழ்நாட்டுல பாஜக தனித்து நின்னே 39லயும் ஜெயிச்சுறும் போலருக்கே.

  66. tntj GM.Basha வினவை சங்க்பரிவாரின் கள்ளக்குழந்தை என்று சொல்லுகிறாயே! நீ rss காரர்கள் ஆக்கிரபித்துவைத்துயிருந்த பொதுஇடத்தை tntj சார்பாக மீட்டுதரேன் என்று கூறி மணமேல்குடி- வடக்குஅம்மாபட்டின்ம் ஜமாத்தில்ல் லெட்டர் தந்தால் நாங்கள் போரடுவோம் என கூறி ஜமாத லெட்டர் வாங்கினீர்கள். rssகாரர்கள் உங்களை மிரட்டிய உடன் எல்லாத்தையும் பொத்திக்கொண்டு நாங்கள் ஜமாத் லெட்டர் தந்ததால் தான் களத்திற்கு வந்தோம், இனி வரமாட்டோம் எனகூறி நீங்கள் rssகாரன் வீட்டில் டீ குடித்துவிட்டு வந்ததது மறந்துவிட்டதா? ஞாபகப்படுத்த வடக்குஅம்மாபட்டினம் ஜமாத் தலைவரை வரச்சொல்லட்டுமா? அதுமட்டுமல்ல சில மாதங்களுக்கு முன்பு மணமேல்குடியில் ஒரு இஸ்லாமிய பெண் தனது கணவரின் இந்து நண்பருடன் (கணவரின் அனுமதியுடன்) பைக்கில் சென்றார் என்பதற்காக அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று உன் தம்பி அப்பாஸ் கேட்ட போது அந்த பெண் “இனி இது போன்று கேட்டுவந்ததால் நடப்பதே வேறு, வெளியே போடா” என்று திட்டியவுடன் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடிவந்தது மறந்துவிட்டதா? பெண்களுக்கு எதிராக உங்கள் நடவடிக்கையை நிறுத்திக்கொள்ள வேண்டும், இல்லையைல் //எனவே தமுமுக, தவ்ஹீத் ஜமாஅத் முதலான இசுலாமிய மதவாத அமைப்புகள் இத்தகைய தாலிபான் காட்டுமிராண்டித்தனங்களை நிறுத்த வேண்டும். இல்லையேல் அதே இசுலாமிய மக்களை வைத்து உங்களது நாட்டாமைத்தனத்தை முறியடிப்போம். அதற்கு தோழர் பாத்திமாவின் போராட்டம் ஒரு தொடக்கம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஏற்கனவே சாதி, மத மறுப்பு திருமணங்கள் எமது புரட்சிகர அமைப்புகளில் பகிரங்கமாக நடக்கின்றன. வருங்காலத்திலும் நடத்துவோம்.//

    • நீங்க திருமணத்த நடத்திருவீங்க. திருமணத்துக்கு பிறகு நடக்கும் விசயத்துக்கு எல்லாம் நீங்க வருவீங்களா?

    • அயோக்கிய வெறி ஏறிய கரீம் பாய் உங்களது புரச்சிகர? கருத்துகளுக்கும் சிந்தனைக்கும் மூலதனம் பொய் மற்றும் அவதூறுகள் தான்.நீங்களும் பொய்யும் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் பொய்யென்ற மூலதனம் இல்லாவிட்டால் உங்களால் கடை விரிக்க முடியாது

      சரி விசயத்திற்கு வருகிறேன் வடக்கம்மா பட்டினத்தில் சங்க பரிவார் வீட்டில் நாங்கள் டி அருந்தியதாக கூறுகின்றாய்
      நீ கூறியுள்ள விஷயத்தை நிரூபித்து நீ ஒருவனுடைய இந்திரியத்திற்குதான் பிராந்தாய் என்பதை மெய்பிப்பாய் என்று கருதுகிறேன்

      //ஞாபகப்படுத்த வடக்குஅம்மாபட்டினம் ஜமாத் தலைவரை வரச்சொல்லட்டுமா?//என்றும் கேட்டுள்ளாய் அழைத்துவா சமதயும்.

      இந்நிகழ்வை பொதுமக்கள் மத்தியில் சம்பந்தப்பட்ட ஊரிலேயே வைத்துக்கொள்வோம் அதை வீடியோவாக பதிவு செய்து வினவு (சங்பரிவார் ஆதரவு )தளத்திலும் பதிவேற்றுவோம்

      சொம்பு தூக்கிகளே (உம் செந்தில் குமரன் ) அவன் வரவில்லை என்றால் கூட நிர்பந்தித்து நீங்கள் அழைத்து வருவீர்கள் என்று நம்புகிறேன்

  67. பாஷா பாய் RSS-காரன் வீட்டில் டீ குடித்துவிட்டு ,நண்பன் யார் ? எதிரி யார் ? என்பது கூட புரியாமல் பாஷா பாய் சங்கபரிவாரிடம் அடிபணிந்து போனாலும் ,தேசிய நீரோட்டத்தில் (அதாவது சங்பரிவார கலாச்சாரத்தில்) இணைந்தாலும் வியப்பு ஏதும் இல்லை.

    RSS-காரன் வீட்டில் டீ குடித்து RSS-கைக்கூலியான நீ….யும் , உன் இயக்கமும் [TNTJ] சங்கபரிவாரின் கள்ள குழந்தையா? இல்லை பார்பன இந்து மதத்துக்கு எதிராக போராடும் “ம க இ க” சங்கபரிவாரின் கள்ள குழந்தையா?

    தூத்தேரி பாஷா, வாய மூடக்கிட்டு போலே !

  68. அந்த மதவெறி மிருகங்களை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வாய்ப்பிருந்தும் தோழர்கள் முன்வைத்த ஆலோசனையை ஏற்று அவர்கள் மன்னிப்புக் கேட்டு திருந்த வாய்ப்பளித்தன் மூலம் மற்ற மதவெறி மிருகங்கள் மனதிலும் மதவாதம் தவறு என்று சிறு அளவிலாவது உணர வாய்ப்பளித்த பாத்திமா நம் மனதில் உயர்ந்து நிற்கிறார்.

    தமுமுக தலைவர்கள் டிவி நிகழ்ச்சிகளில் மாலை நேரங்களில் கவுரவ ஜனநாயக வேடம் போட்டாலும் கீழ்மட்ட அளவில் இந்துமதவெறியன்களுக்கு சற்றும் குறைவில்லாத கேவலங்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். ஹாஜாகனி, ஜவாகிருல்லா போன்றோர் தமது மவுனங்களை உடைத்து கொஞ்சம் பேச முயற்சிக்கலாமே. ஹெச். ராஜா போன்ற அயோக்கியன்களின் பங்காளிகள் அல்லர் தாம் என்பதை உரத்துச் சொல்ல வேண்டாமா ?

  69. இந்த அம்பிகளுக்கு பெண்ணுரிமை பற்றி கருத்து சொல்ல தகுதிதான் இருக்கா ?

      • ஹிஸ் பீட் ////ungalukku romba irukutho? sorgathula ambalaikku 72 kannigal. pombalaikku? 72 ambalaigala? unga matham koorum sorgam lodge-a vida kevalama irukke!////
        ,அப்படியெனில்,சொர்கத்திலும் பெண்கள் ஒரு ஆணுடன்தான் வாழ வேண்டுமா? ஆண்கள் பெண்களும் ஒழுக்கமுற வாழ இந்த உலகில் மட்டுமே நெறிமுறைகள் .அவ்வாறு வாலவர்புருட்தி இறைவன் வழங்க உள்ள பரிசுகள் .ஆண்களும் பெண்களும் அதை விரும்பும் பொழுது , லாட்ஜ் பேர்வழிகளுக்கு நரகம் எனபதை மனதிற் கொள்ளுங்கள்

    • ***’எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர்.*** ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது, ‘இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்?’ எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘கணவனை நிராகரிக்கிறார்கள். உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்தது, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் ‘உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை’ என்று பேசிவிடுவாள்’ என்றார்கள்” என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
      http://www.tamililquran.com/bukharidisp.php?start=29

      • @HisFeet//can you tell me what is the punishment prescribed by your prophet for those who leave islam?///
        அவர்களுக்கு எந்த தண்டனையும் கிடையாது .அவர்களை மீண்டும் இஸ்லாத்தை ஏற்க அழைக்குமாறே குர்ஆன் சொல்லுகிறது
        விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன். அல்குர்ஆன் 16:125

        • Ibrahim,

          // அவர்களை [Those who ditch muhamadism]மீண்டும் இஸ்லாத்தை ஏற்க அழைக்குமாறே குர்ஆன் சொல்லுகிறது//

          What is the punishment as per Sharia (i.e., quran, haddis et sira mixed together)?

          I have already asked you this question few months back. You disappeared.

          • ////What is the punishment as per Sharia (i.e., quran, haddis et sira mixed together)?

            I have already asked you this question few months back. You disappeared.///
            இஸ்லாத்தில் பனிஸ்மென்ட் இருக்கிறது என்று உங்களுக்கு சொன்னது யார் ? இப்படி அரைவேக்காட்டுத்தனமாக உளறுவதாலே உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லுவது கிடையாது

            • Ibrahim,

              Thanks for replying without replying to the question.

              I did a small research. I came to know that my question is indeed half-baked. I was not aware of Quran’s verses on Apostasy. I should have rebutted you with the full verse that you quoted leaving the command to muhamadans to decapitate the apostates.

              முகமதினால் என்னெவெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது என்று பாருங்கள். http://www.thereligionofpeace.com/Quran/012-apostasy.htm

      • ஒரு சமுதாயம் சிறப்படைய பெண்களே காரணமாக இருக்கின்றார்கள் .ஆதலால் அந்த பெண்களை நல்வழிப் படுத்த அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்துள்ளதை உங்களது விமர்சனத்துக்கு எடுத்துக் கொண்டது ஏற்புடையதா?

      • ////***’எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர்.*** ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது, ‘இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்?’ எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘கணவனை நிராகரிக்கிறார்கள். உதவிகளை நிராகரிக்கிறார்கள்.,,,,,,,,../////
        ஒரு சமுதாயம் சிறப்படைய பெண்களே காரணமாக இருக்கின்றார்கள் .ஆதலால் அந்த பெண்களை நல்வழிப் படுத்த அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்துள்ளதை உங்களது விமர்சனத்துக்கு எடுத்துக் கொண்டது ஏற்புடையதா?

      • ஹலோ அம்பி மேல் உலகத்தை அப்புறம் பாத்துக்கலாம். கீழ் உலகத்துக்கு வா… கணவன் இறந்த பிறகு மனைவியையும் சேர்த்து கொளுத்திய பார்பன பெண்ணுரிமை வரலாறு யாருக்கும் தெரியாது என்று நினைக்கிறாயா அம்பி ? கணவன் இறந்தபிறகு மனைவியை பிணத்தோடு உடன் வைத்து எரிக்கிற பழக்கம், பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டப் பிறகு, கணவனை இழந்த இளம் பெண்கள் அடுத்த ஆண்களின் பார்வைக்கு அசிங்கமாக தெரியவேண்டும் என்பதற்காக- மொட்டை அடித்து, காவிதுணி கொடுத்து, பெண்களை அவமானப்படுத்திய ஒரே சமூகம் பார்ப்பன சமூகம்தான்.இளம் விதவைகளை தன் பாலியல் வக்கிரங்களுக்கு பயன்படுத்திக் கொண்டு, அவர்களை கங்கையில் அமுக்கி கொன்றதும் பார்ப்பன சமூகம்தான்.அதனால்தான் கங்கையில் போய் (காசி) இறப்பது ‘புனிதம்‘ என்கிற பொய் இன்றுவரை நிலைத்து நிற்கிறது.
        கங்கை என்கிற அந்த நதி, இன்னும் வற்றாமல் ஓடிக் கொண்டிருப்பதிற்குக் காரணம், அதில் அமுக்கிக் கொல்லப்பட்ட பார்ப்பன இளம் விதவைகளின் கண்ணீரால்தான் என்றால் அது மிகையாகாது. மாதவிடாய் காலத்தில் பெண்களை வீட்டுக்குள் சேர்க்காமல் கொல்லைபுறம் ஒரு வாரம் தள்ளியது, இப்படி தங்கள் இன பெண்களுக்கே சாஸ்திரம் சம்பிரதாயம் என்று சொல்லி செய்த கொடுமைகள் தெரியாதா? இதில் மற்ற ஜாதி பெண்களை பற்றி சொல்லித்தெரிய வேண்டியதில்லை. வரதட்சனை கொடுத்து கல்யாணம் பண்ணும் ஈன செயலை இன்றும் செய்துக்கொண்டுத்தான் இருக்கிறீர்கள். முடி திருத்துபவர்களை அம்பட்டன் என்று கேவலப்படுத்தி ஒதுக்கி வைத்த பார்பான்…. இன்று ப்யூட்டி பார்லர் என்று நடத்துகிறார்கள். 90 % ப்யூட்டி பார்லர்கள் மாமிக்கள் தான் நடத்துகிறார்கள்.இந்த தொழிலில் இன்று பணம் கொட்டுகிறது அல்லவா அதனால் இந்த பெண்ணுரிமை. இப்போது மாமிக்கள் பெயர் நாசுவத்தி கிடையாது. ப்யூட்டிசியன். எப்படி இருக்கு கதை.இன்றைக்கு ஆண்களுக்கு நிகராய் பெண்களுக்கு சம்பாத்தியம் வருது என்றவுடன் இந்த சாஸ்திரம் சம்பிரதாயத்தை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு வருமானம் பார்க்கும் கூட்டத்திலிரிந்து பெண் உரிமையை பற்றி பேசுகிறீர்கள். நீங்களெல்லாம் பெண் உரிமையை பற்றி பேசுவது ரொம்ப சிரிப்பு சிரிப்பா வருது அம்பி. 1400 வருடங்களுக்கு முன்பே பெண்களுக்கு மறுமணத்தையும், அவர்களுக்கு ஆண்கள் மகர்தொகை (வரதட்சனை )கொடுத்து திருமணம் செய்வதையும், பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுப்பதையும் கடமை ஆக்கியது இஸ்லாம். வரதட்சனை வாங்காததை இன்றைக்கு கூட பெரிய சாதனையாக தெரிகிறது இந்த காலத்தில். 1400 வருடங்களுக்கு முன்பே (நினைத்து பாருங்கள் … அந்த காட்டுமிராண்டி காலத்தை) பெண்ணுக்கு வரதட்சனை கொடுத்து மனம் முடிக்க சொன்னது இஸ்லாம். பெண்ணுரிமை இஸ்லாத்தில் உள்ளது போல் வேறு எந்த சித்தாந்தத்திலும் இல்லை என்று தெரியும் இஸ்லாத்தை முழுமையாக புரிந்துக்கொண்டவர்களுக்கு.

        • // கணவன் இறந்தபிறகு மனைவியை பிணத்தோடு உடன் வைத்து எரிக்கிற பழக்க//

          சதி
          —-

          இது இந்தியா முழுக்க நடந்தது இல்லை . ராஜஸ்தானில் ஒரு சில சாதிக்கலில் மட்டும் இருந்த பழக்கம் . ஏதோ இந்து மதம் சட்டம் போட்டு செய்த மாதிரி எழுதவேண்டாம்

          தவறை திருத்தி கொள்கிறது இந்துமதம் . சரி என்று விதாண்டாவாதம் செய்யவில்லை

          இசுலாத்தில் பெண்ணுரிமை
          ——————————–

          கார் உன்னுடையது ஆனால் நீ ஓட்ட கூடாது
          சொத்து உன்னுடையது ஆனால் நீ என் துணை இல்லாமல் சென்று எதுவும் விற்க முடியாது

          பலி கொடுக்கப்படும் ஆட்டுக்கு அணிவிக்கப்டும் மாலை தங்கத்தில் இருப்பதால் என்ன புண்ணியம்

          வரதட்சினை
          —————————-
          பரிசம் போடுவது எனபது தமிழர்களிடம் இருக்க வில்லையா ?

          பாலைவனத்தில் நிலத்தை பிரிப்பதால் தீது இல்லை . ஆனால் நல்ல விலை நிலங்களை சொத்து பிரித்து வெளியூர் செல்லும் பெண்ணிற்கு கொடுக்காமல் தங்கமாக சொத்து கொடுப்பது தான் வரதட்சினை

          மண்ணிற்கு தகுந்தாற்போல தான் பண்பாடு பழக்கவழக்கம் உருவாகிறது

          • “”””
            பாலைவனத்தில் நிலத்தை பிரிப்பதால் தீது இல்லை . ஆனால் நல்ல விலை நிலங்களை சொத்து பிரித்து வெளியூர் செல்லும் பெண்ணிற்கு கொடுக்காமல் தங்கமாக சொத்து கொடுப்பது தான் வரதட்சினை

            மண்ணிற்கு தகுந்தாற்போல தான் பண்பாடு பழக்கவழக்கம் உருவாகிறது””” இது போன்ற கருத்துக்கள் எல்லாம் உங்களவா (பார்பனன்) தான் கொடுப்பான்.அதாவது நெற்றியில் விபூதி தடவுவதால் உடலில் உள்ள அசுத்த நீரை எல்லாம் அந்த விபூதி எடுத்த்துவிடுகிறதுன்னு ஒரு விளக்கம் கொடுப்பானுங்க பாருங்க… அது போல நீங்களும் நல்லா விளக்கம் கொடுக்குறீங்க ராமன். ஹ ஹா ஹா… நல்லா வருவீங்க தம்பி.

            • ஐய்யா , நபி பெருமான் ஒரு பணக்கார கைம்பெண்ணை மணந்த பின்னரே இசுலாமை தோற்றுவித்தார் இல்லையா ?

              பணக்கார விதவை மணந்தார் என்னும்போது அங்கே இசுலாத்திற்கு முன்னரே
              1) பெண்களுக்கு சொத்து உரிமை இருந்திருகிறது
              2) விதவையை மணப்பதை அந்த சமூகம் அனுமதித்து இருந்திருகிறது

              எனபது உண்மைதானே . அது மண்ணும் சமூகமும் சார்ந்த பழக்கம் இல்லாமல் வேறெதுவோ ?

              • வர வர இராமன் சிந்தித்து கணினியில் தட்டத் தொடங்கியுள்ளார் . வாழ்த்துகள்

                கேடு கெட்ட இந்து சனாதானத்துக்கு எதிராகவும் சிந்தித்தால் நன்று !!!

          • ராமன்
            இசுலாத்தில் பெண்ணுரிமை
            ——————————–

            கார் உன்னுடையது ஆனால் நீ ஓட்ட கூடாது
            சொத்து உன்னுடையது ஆனால் நீ என் துணை இல்லாமல் சென்று எதுவும் விற்க முடியாது

            பலி கொடுக்கப்படும் ஆட்டுக்கு அணிவிக்கப்டும் மாலை தங்கத்தில் இருப்பதால் என்ன புண்ணியம்

            கார் ஓட்ட சவுதியில் அனுமதி இல்லை .ஆனால் இஸ்லாம் அனுமதிக்கிறது பெண்ணுக்குரிய சொத்தை அவள் விருப்படி விற்கலாம் .ஆனால் விற்பதற்கு ஆண்துணை இந்தியாவிலும் தேவைப்படுகிறது

        • ஆணுக்குப் பெண் அல்லது பெண்வீட்டார் வரதட்சனை கொடுப்பது தவறு. அதேநேரம் பெண்ணுக்கு ஆண் அல்லது ஆண்வீட்டார் மஹர் கொடுப்பதனை கட்டாயப்படுத்துவது மட்டும் எப்படி சரியாகும்? மஹர் கொடுப்பதால் எப்படி பெண்ணுரிமை கிடைக்கிறது? கொஞ்சம் விளக்கவும்.

          பெண்ணுரிமை இஸ்லாத்தில் உள்ளது போல் வேறு எந்த சித்தாந்தத்திலும் இல்லையென்றால் இஸ்லாமிய நீதிமன்றங்களில் எதற்காக பெண்கள் கொடுக்கும் சாட்சிக்கும் ஆண்கள் கொடுக்கும் சாட்சிக்கும் சமமான மரியாதை வழங்கப்படுவதில்லை?

          • பெண்ணுக்கு மஹர் கொடுப்பது என்பது அவளுடைய மணவாழ்க்கைக்கு கிடைக்கும் உத்தரவாதம். சவுதியில் மிக ஏழ்மையான குடும்பத்து பெண் நம்ம ஊரு மதிப்பில் 50 லட்சத்திற்கு குறைந்து மஹர் வாங்குவதில்லை. இப்படி மஹர் கொடுக்க முடியாமல் மனம் முடிக்க முடியாமல் பல ஆண்கள் மனம் ஆகாமல் முதிர் இலைஞர்களாக இருக்கின்றனர். அரசே இவர்களுக்கு மஹர் பண கடன் வசதி எல்லாம் செய்துககொடுக்கிறது. இப்படி பெண்ணுக்கு மஹர் கொடுப்பதினால் கணவன் சரியான காரணம் இல்லாமல் மனைவிக்கு தலாக் கொடுக்க முடியாது. மனைவி மேல் தவறு இல்லாத பட்சத்தில் அந்த மஹர்பனம் முழுவதும் மனைவிக்கே சொந்தமாகிவிடும். அவள் அந்த பணத்துடம் மறுமனமும் புரிந்துக்கொள்வாள். தவறு செய்த கணவனுக்கு இப்படி மஹர் பணம் நஷ்டத்துடன் மீண்டும் மணமுடிக்க மறு பெண்ணுக்கு மஹர் பணம் இரண்டு மடங்குக்கு மேல் கொடுக்கவேண்டும். ஏனென்றால் இவர் ஏற்கனவே தவறான முறையில் தலாக் கொடுத்துள்ளதால் அவர் இப்படி அதிகம் கொடுக்கவேண்டும். அதாவது அவர் மதிப்பிழந்துவிடுகிறார். எவனும் பெண்ணுக்கு எதிராக நியாமற்ற தலாக் கொடுக்க துணிய மாட்டான். பெண்ணின் மணவாழ்க்கைக்கு ஒரு உத்தரவாதம் இருக்கிறது. இதுவல்லவோ பெண்ணுரிமை. ஆனால் இங்கு என்ன நடக்கிறது? வரதட்சனை பல லட்சங்கள் வாங்குகிறார்கள். மனம் முடிந்தபின் மீண்டும் மீதும் வரதட்சனை கேட்டு கொடுமை படுத்துகிறார்கள். கொடுக்க முடியலையா பிரச்னை பெரிதாகி டைவர்ஸ். டைவர்ஸ் வாங்கிய மனைவி அடுத்த திருமணம் செய்ய முடியாமல் மதிப்பிழந்துவிடுகிறாள். 100 ல் ஒன்று இரண்டு பேருக்கு மறுமணம் நடக்கிறது. இல்லை என்றால் ஜீவனாம்சம் என்ற பெயரில் விவாகரத்தான கணவனிடம் இருந்து மாதம் மாதம் இரண்டாயிரமோ.. மூன்றாயிரமொ…பிச்சை எடுத்துத்தான் வாழ வேண்டும். இன்னும் சாமர்த்தியமான கணவன் குடும்பத்தினராக இருந்தால் இந்த கோர்ட்டு கேசு இதெல்லாம் தேவை இல்லாத தொல்லைகள் என்று மனைவியை கொளுத்தி விட்டுவிடுகிறார்கள். சமையல் செய்யும்போது மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து மனைவி சாவு அல்லது வயிற்று வலியால் பெண் விஷம் குடித்து தற்கொலை எத்தனை செய்திகள் தினந்தோறும். இதுவா பெண்ணுரிமை
            ?

            “””” இஸ்லாமிய நீதிமன்றங்களில் எதற்காக பெண்கள் கொடுக்கும் சாட்சிக்கும் ஆண்கள் கொடுக்கும் சாட்சிக்கும் சமமான மரியாதை வழங்கப்படுவதில்லை?”””” இது உங்களுக்கு யாரோ இஸ்லாத்தை பற்றி தவறாக சொல்லி இருக்கிறார்கள். சாட்சி என்றால் ஆன் பெண் யாரானாலும் சமம் தான்.

            • <<>>
              வேறு யாரும் கூறவில்லை, மத்தியகிழக்கை பூர்வீகமாகக் கொண்ட இஸ்லாமிய நண்பனொருவன் கூறியது. உதாரணத்திற்கு பணம் சம்பந்தப்பட்ட விடையங்களில் இரண்டு பெண்களின் சாட்சியே ஒரு ஆணின் சாட்சிக்கு நிகராகக் கொள்ளப்படும் என்றார்.

  70. இங்கு இஸ்லாமிற்கு எதிராக கருத்து சொல்பவர்கள் தங்கள் சொந்தகாரப்பென்னொ இல்லை தெரிந்த பெண்ணோ ஒரு தாடிவச்ச பாயி பையனுடனோ தலைப்பாகை வைத்த சர்தார்ஜி கூடையோ இரவு நேரங்களில் பேருந்தில் சென்றால் கண்டுக்காமல் சந்தோசமாக அனுப்பி வச்சிடுவாங்க போல. ( இஸ்லாமின் மீது சேர்வாரி அடிக்க என்னாமா நடிக்கிறார்கள் ) இவர்கள் சொல்லும் முற்போக்கு அடுத்த வீட்டு பெண் வேறு எவனோட வேண்டும் என்றாலும் தனியாக பேருந்துகளில் செல்லலாம். இந்த முற்போக்குகளின் தன மனைவியோ அல்லது தன தங்கையோ மட்டும் செல்லக்கூடாது.இப்படி முற்போக்கு என்ற லேபிளை மாட்டிக்கொண்டு ஒரு ஆணும் பெண்ணு இரவு நேரத்தில் பயணம் செய்தால் அவர்கள் தங்களுக்குள் எல்லை மீற மாட்டார்கள் என்று (வினவு போன்ற முற்போக்குவாதிகள்)கியாரண்டி கொடுக்கிறார்கள். இந்த ஆன் பெண் விஷயத்தில் இவர்களின் முற்போக்கு என்ற சிந்தனை அமேரிக்கா போன்ற நாடுகளின் தாறுமாறான செக்ஸ் கலாசாரத்தில் தான் கொண்டு போய் முடியும் என்பது நன்றாக இவர்களுக்கு தெரியும். இருந்தாலும் நாம் முற்போக்கு வேஷம் கட்டியாச்சே… இப்படித்தான் பேசியாகவேண்டும். இவர்களாவது முற்போக்கு வேஷம் கட்டிவிட்டார்கள் இப்படி பேசுகிறார்கள் என்றால்… இந்த அம்பிகள் இருக்கிறதே….ஆஹா… இவர்களுக்கு பெண்ணுரிமை பற்றி கேட்க என்ன தகுதி இருக்கிறது ? சும்மாவே குதிப்பார்கள். வினவு இவர்களுக்கு சலங்கை வேறு கட்டியாச்சி .. கேட்கவா வேண்டும்…

    • When we ourselves send them with a thadi vecha bai or turban katna sardarji, then we don’t make a fuss about that. Even if she goes out without permission, we will ask, it as a family matter, not as a religious matter.

  71. ///எஸ்.இப்ராகிம் அவர்களே,

    உங்கள் ஆலோசணைக்கு மிக்க நன்றி,ஆடையயும் பெயரையும் மாற்றிக்கொள்வார்கள்

    விரைவில்.அராபியர்கள் மதத்தை துறந்துவிட்டால் எந்த ஆடையை உடுத்துவது எந்த மொழியில்

    பெயர்மாற்றிக்கொள்வது????////
    அராபியர்கள் அவர்கள் மொழியையும் அவர்கள் ஆடை கலாச்சாரத்தையும் பின்பற்றுவார்கள்

  72. /இவர்களுக்கு மதம் வேண்டாம் ,பிறகு மதம் வலியுறுத்தும் ஆடை மற்றும் எதற்கு ?//

    பிறகு எதற்க்காக சௌதி அரேபியாவில் முஸ்லிம் அல்லாத பெண்களையும் புர்கா அணியுமாறு கட்டளையிடுகிறார்கள் ??
    அங்கு இஸ்லாமிய சட்டம் நடைமுறையில் இருப்பதால்

    • சவூதி அரேபியாவில் இஸ்லாமிய சட்டம் நடைமுறையில் இருப்பதால் முஸ்லிம் அல்லாத பெண்களையும் புர்கா அணியுமாறு வற்புறுத்துவது சரியென்றே வைத்துக்கொள்வோம். அப்படியாயின் இஸ்லாமிய சட்டம் நடைமுறையில் இல்லாத பிரான்சில் முகத்தை மூடக்கூடாது என்று சட்டம் கொண்டுவந்தால் எதற்காக முஸ்லிம்கள் மேலும்கீழும் குதிக்கிறீர்கள்?

      • இனியன் ////அப்படியாயின் இஸ்லாமிய சட்டம் நடைமுறையில் இல்லாத பிரான்சில் முகத்தை மூடக்கூடாது என்று சட்டம் கொண்டுவந்தால் எதற்காக முஸ்லிம்கள் மேலும்கீழும் குதிக்கிறீர்கள்?////
        முகத்தை மறைக்குமாறு இஸ்லாம் கூறவில்லை என்பது வேறு விஷயம் .ஆனால் இஸ்லாமிய சட்டத்தை பின்பற்ற எங்களுக்கு இருக்கும் உரிமையை பறிப்பதை எதிர்ப்போம் .சவூதி அரேபியாவில் இஸ்லாம் அல்லாதவர்களும் பர்தா அணிய அந்த நாட்டின் சட்டம் ,மற்ற மதத்தினருக்கு எதிரானது அல்ல .

        • என்னதான் சொல்கிறீர்கள்? இஸ்லாமியர்களுக்கு மட்டும்தான் உலகில் எங்கு சென்றாலும் உரிமைகள் இருக்க வேண்டுமா?
          இஸ்லாமிய சட்டத்தின் பெயரால் முஸ்லிம் அல்லாத அனைவரையும் பர்தா அணிவதற்கு கட்டாயப்படுத்துதல் எந்தவகையில் சரி? வேற்று மதத்தவர்களுக்கு தாங்கள் விரும்பிய ஆடைகளை அணிய உரிமைகள் இல்லையா?
          பர்தா இஸ்லாம் மதத்திற்குரிய அடையாளம் என்றால் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை பர்தா அணியுமாறு வற்புறுத்துவது எப்படி மற்ற மதத்தினருக்கு எதிரானது அல்ல என்கிறீர்கள்?
          உங்கள் கருத்துகள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளனவே?

          • இனியன் ///வேற்று மதத்தவர்களுக்கு தாங்கள் விரும்பிய ஆடைகளை அணிய உரிமைகள் இல்லையா?///
            இந்தியாவில் கூட அவர்கள் விரும்பும் ஆடையை அணிய அனுமதி இல்லை .இந்தியா மனுஷிகளுக்கு என்று ஆடையை சட்டம் இல்லாத நெறிமுறைகளை வைத்திருக்கிறது .சவூதி அரேபியா மதரீதியாக மனுஷிகளுக்கு ஆடை அணிவது பற்றிய சட்டம் வைத்திருக்கிறது .வேற்று மதத்தவர்களுக்கு மதரீதியான ஆடை பற்றிய சட்டங்கள் இல்லை அதனால் ஒரு நாட்டின் சட்டத்திற்கு உடபடுகிறார்கள் .ஆடையை மட்டுமே வைத்து பார்க்காது பொதுவான கண்ணோட்டத்தில் பாருங்கள் .அமெரிக்க அனுமதித்த சில உரிமைகளை இந்தியா அனுமதிப்பதில்லை .இந்தியாவில் உள்ள சில உரிமைகள் அமெரிக்காவில் இல்லை

    • //அங்கு இஸ்லாமிய சட்டம் நடைமுறையில் இருப்பதால்//

      இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு இங்கு யார் வேண்டுமானாலும் விரும்பியதை அணிவதற்கு தடை எதுவும் இல்லை. ஆதலால் புர்க்கா அரசியலமைப்பின் படி எவர் வேண்டுமானாலும் அணியலாம். அதை மத அடிப்படை வாதிகள் தங்கள் மதத்தவர்க்கு மட்டுமே உரித்தானது என சொந்தம் கொண்டாட முடியாது என அறிந்து கொள்.

      • கந்தன் ////ஆதலால் புர்க்கா அரசியலமைப்பின் படி எவர் வேண்டுமானாலும் அணியலாம். அதை மத அடிப்படை வாதிகள் தங்கள் மதத்தவர்க்கு மட்டுமே உரித்தானது என சொந்தம் கொண்டாட முடியாது என அறிந்து கொள்.///
        எவர் வேண்டுமானாலும் அணியலாம் .மறுக்கவில்லை .ஆனால் இஸ்லாமிய கொள்கைகள் பெண்களை அடக்கி ஆள்கிறது பெண் உரிமைகளை தடுக்கிறது என்று விமர்சித்து புதிய கொள்கைகளை தெரிவு செய்தவர்கள் பெண்ணடிமைத்தனத்தை வெளிப்படுத்தும் புர்க்காவை ரசித்து அணிவது ஏன் என்பதுதான் கேள்வி?

  73. ஹிஸ் பீட் ,@HisFeet//can you tell me what is the punishment prescribed by your prophet for those who leave islam?///இதுதான் உங்கள் கேள்வி அதற்கு நான் பதில் அளித்துள்ளேன் .
    ///So, will you please protest against all the countries that have capital punishment for apostasy before commenting here again?////
    எந்த நாடு என்ன தண்டனை கொடுத்தது என்பதை சொல்லுங்கள் ? எனக்கு பாஸ்போர்டே இல்லை .ஆதலால நீங்கள் சொன்ன பிறகு அந்த நாடுகளுக்கு சென்று போராடா முயற்சிக்கிறேன் .அதுவரை எனது கமெண்ட்ஸ்களை ஏற்றுக் கொள்ளுங்கள்

    • ஆப்கான் மற்றும் பாக்கிஸ்தான் போன்ற நாடுகள்.. அங்கே போய் போராடு இப்ராகீம்

    • ஆப்கான் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தண்டனை கொடுத்ததை கல்லுக்கு எப்படி தெரியும்?

  74. தவறு செய்த கணவன் இரண்டு மடங்கு மஹர் பணம் கொடுத்து மற்றொரு பெண்ணை திருமணம் செய்தால் அவன் திரும்ப அநியாய தலாக் கொடுக்க பயம்கொள்வான். ஏனென்றால் இரண்டு மடங்கு மஹர் பணமும் அப்படியே பெண்ணிடம் போய்விடும்.

  75. // கணவன் இறந்தபிறகு மனைவியை பிணத்தோடு உடன் வைத்து எரிக்கிற பழக்க//

    சதி
    —-

    இது இந்தியா முழுக்க நடந்தது இல்லை . ராஜஸ்தானில் ஒரு சில சாதிக்கலில் மட்டும் இருந்த பழக்கம் . ஏதோ இந்து மதம் சட்டம் போட்டு செய்த மாதிரி எழுதவேண்டாம்

    தவறை திருத்தி கொள்கிறது இந்துமதம் . சரி என்று விதாண்டாவாதம் செய்யவில்லை
    /////////////////////////////////////////////////////////////////////

    சேதுபதிகளின் செப்பேடுகளின்படி பார்த்தால், கிழவன் சேதுபதியின் நாற்பத்தேழு பெண்டாட்டிகளில் ஒருத்தியின் பெயர் ‘காதலி ‘ என்று சொல்லப்பட்டுள்ளது. இது ராமேஸ்வரத்தில் உள்ள அம்மனான ‘பர்வத வர்த்தினி ‘ யின் தமிழ்ப்பெயர் சுருக்கம் என்று தெரிகிறது. (பர்வதவர்த்தினி – மலை வளர் காதலி). தடியத்தேவனின் மனைவியின் பெயர் ‘காதலி ‘ என்று இருக்கக்கூடும். 1710 ஆம் ஆண்டு கிழவன் சேதுபதி இறந்தபோது 47 மனைவியரும் உடன்கட்டை ஏறி இறந்தனர்.

Leave a Reply to kanthan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க