இனக்கொலையாளி ராஜபக்சேவை அழைத்த மோடியை கண்டித்து ஆர்ப்பாட்டம் !
இடம் : சென்னை வள்ளுவர் கோட்டம்
நேரம் : காலை 11 மணி முதல் 12 மணி வரை
இந்தியாவின் பிரதமராக பதவியேற்க உள்ள பா.ஜ.கவின் மோடி தனது பதவி ஏற்பு விழாவிற்கு தமிழின அழிப்பு போர் குற்றவாளி இலங்கை அதிபர் இராஜபட்சேவை அழைத்ததைக் கண்டித்து 26.5.2014 அன்று காலை 11 மணி முதல் 12 மணி வரை வள்ளுவர் கோட்டம் அருகில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைச்செயலாளர் தோழர் ம.சி.சுதேஷ்குமார் தலைமை ஏற்று நடத்த பெண்கள் விடுதலை முன்னணியின் சென்னை செயலாளர் தோழர் உஷா கண்டன உரை நிகழ்த்த உள்ளார்.
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு
9444834519