ஐஸ் – அதி இனிப்பும், உயர் குளிரும் கொண்ட உறைந்த பனிக்கூழ் கட்டி, கோடை காலத்தில் குழந்தைகளின் மனதைக் கவர்ந்த பண்டம். விரைவில் உருகும் பொருள் என்றாலும் குழந்தைகள் அதிகம் அடம்பிடிக்கும் தீனியும் கூட.
ஆனால் மீடியாக்களின் தயவில் படையெடுக்கும் காவி ஐஸ்?
“நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே” என்ற திருவிளையாடல் டிஎம்எஸ் பாட்டை உண்மையென நம்பும் பக்தர்கள் இப்போதுமிருக்கிறார்கள். ஒருக்கால் அந்த உண்மையை ஏற்றுக் கொண்டு மனித இதயங்கள் சில மணித்துளிகளுக்கு துடிப்பை நிறுத்தினால் சங்கூதுவதற்கு காக்காய் கூட இருக்காதே?
மோடி பிரதமராக பதவியேற்ற பிரம்ம முகூர்த்த நேரத்தில், உலகம் தனது இயக்கத்தை நிறுத்திக் கொள்ளாமல் தொடர்கிறது. இதையெல்லாம் ஏதோ அறிவியல் உண்மை போல சொல்லும் அவலத்தில் வினவு இருக்கிறது.
விட்டுத் தொலையுங்கள். மோடி பதவியேற்பு நேரத்தில் கோடிக்கணக்கானோர் யூரின் போகலாம், ஃபாரின் பறக்கலாம், பாருக்குள் கிடக்கலாம், அல்லது போர் கூட அடிக்கலாம். இதனால் மோடி முகூர்த்த நேரத்தில் ஒன்னுக்கடித்தவர்களுக்கு, மோடி பெயரிட்ட ஜாக்கி பிராண்ட் ஜட்டி இலவசம் என்று கொண்டாடினால் என்ன சொல்வீர்கள்?
மோடி பிரதமரான நேரத்தில் மைசூரில் உள்ள அரசுக்கு சொந்தமான செலுவம்பா மகப்பேறு மருத்துவமனையில் இரு குழந்தைகள் பிறந்துள்ளன. ஒன்று பெண், மற்றது ஆண். இதை ஆள் போட்டு தெரிந்து கொண்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான எஸ்.ஏ.ராமதாஸ் தனது ஆதரவாளர் படை சூழ பிரசவ வார்டுக்கு படையெடுக்கிறார். அனைவருக்கும் இனிப்பு வழங்குகிறார்.
பிறகு அவரது படையாட்கள் வேண்டுகோள் விடுக்க பெற்றவர் சம்மதம் கேட்காமல் இரு குழந்தைகளுக்கும் நரேந்திர கிருஷ்ண மோடி, தன்மயி மோடி என பெயர் சூட்டுகிறாராம். பச்சிளம் குழந்தைகளுக்கு கண்ணைப் பறிக்கும் காவி நிற உடைகளை வழங்கி வேறு அச்சுறுத்தியிருக்கிறார்.
இனிப்பு வழங்கி, பெயர் சூட்டினால் மட்டும் மீடியாவின் கவரேஜுக்கு போதுமானதில்லை என்பதால் அந்த குழந்தைகளின் முழுக்கல்வி செலவையும் ஏற்பதாக அறிவித்தார். போனசாக அந்த குழந்தைகளின் பெற்றோருக்கும் விரைவில் நல்ல வேலை ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். இறுதியில் அந்த குழந்தைகள் மோடி போல நாட்டை ஆளும் வல்லவர்களாக வளர வாழ்த்து தெரிவித்து நடையைக் கட்டினார்.
இது இங்கிலீஷ் ஹிந்து, டெக்கான் குரோனிக்கிளில் இன்னும் மேம்பட வந்திருக்கிறது. அதாவது பெற்றோரே மோடி பெயர் சூட்டி அது தெரிந்து ராம்தாஸ் வந்து பாராட்டியதாக எழுதியிருக்கிறார்கள். என்ன இருந்தாலும் இவர்கள் அளவுக்கு யாரும் ‘கவர்’ பண்ண முடியாது. (இங்கிலீஷ் ஹிந்துவில் இரண்டு குழந்தைகளுமே ஆண் குழந்தை என்று எழுதியிருக்கிறார்கள்).
தமிழ் இந்துவிலோ இந்த செய்தியை கொஞ்சம் உண்மையாக தெரியாத்தனமாக வெளியிட்டுவிட்டார்கள். அதன்படி, இரு குழந்தைகளின் பெற்றோரும் தமது விருப்பத்திற்கு மாறாக மோடி பெயர் சூட்டிய ராம்தாஸ் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.
பெண் குழந்தையின் தந்தையான மஞ்சுநாத் கவுடா பேசும் போது, தான் மருந்து வாங்க வெளியே சென்றிருக்கும் போது யாரிடமும் அனுமதி கேட்காமல் தன் குழந்தைக்கு தன்மயி மோடி என்று பெயர் சூட்டியிருக்கிறார் இந்த ராமதாஸ் என்று கோபப்பட்டிருக்கிறார். மேலும், “ஏற்கனவே பெண்கள் விவகாரத்தில் சிக்கிய இவர் மீது ஏகப்பட்ட அவப்பெயர்கள் இருக்கிறது. இந்த பேர்வழியா எனது குழந்தைக்கு பெயர் சூட்டுவது” என்று எகிறியிருக்கிறார்.
கூடவே, “எனது தாயார் பெயரையே குழந்தைக்கு சூட்ட நினைத்தேன். இப்போது மருத்துவமனை பதிவேடுகளிலும் ராமதாஸ் சூட்டிய பெயரே உள்ளது. அதனால்தான் புகார் கொடுத்தேன்”, என்றிருக்கிறார். மோடியின் தாயார் லட்டு ஊட்டியதை மோமெண்ட் ஆஃப் இந்தியா என்று உருகியவர்கள் இங்கே ஒரு ஏழை இந்தியன் தனது தாயார் பெயரை சூட்ட முடியாமல் போனதை எப்படி விளிப்பார்கள்?
இந்தக் குழந்தைகளின் பெற்றோர் கூலி வேலை செய்து பிழைப்பவர்கள். அவர்கள் வாழ்வில் மோடி என்ற பெயரையும் அதன் மீடியா ஜாக்கி பரிமாணத்தையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு வந்தவர்களுக்கு மோடி பதவியேற்போ இல்லை ஒபாமா வாழ்த்தோ எல்லாம் கேள்விப்படுவதற்கு கூட சாத்தியமற்ற ஆடம்பரம்.
இந்த மைனர் ராமதாஸ் எதற்கய்யா அரசு மருத்துவமனைகளுக்கு வந்தார்? அப்பல்லோ போன்ற மோடியின் வர்க்கம் பாதுகாப்பாக சிகிச்சை பெறும் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு சென்று அங்கிருக்கும் மேட்டுக்குடி குலக் கொழுந்துகளுக்கு மோடி என்று பெயரிட்டால் பொருத்தமாகவும் இருக்கும். ஆனால் அப்படி சென்று பெயரிட்டால் என்ன நடக்கும்? பிசா வர்க்கம் பிய்த்து உதறிவிடும்.
கட்சிகளின் விளம்பரத்திற்கு ஏழைகள்தான் பலிகடாக்கள் என்றாலும் பெற்ற குழந்தைகளுக்கு பெயர் வைக்க உரிமை இல்லை, போலீஸ் புகார் என்று இதுவரை அம்மா ஆட்சியில் கூட நடந்ததில்லை.
புரட்சித் தலைவி ‘அம்மா’வின் அடிமைகள் கூட தங்களைத்தான் இடுப்பு ஒடிய சித்திரவதை செய்து கொள்கிறார்கள். கட்அவுட்டோ, சுவரோட்டியோ, எல்லாம் அவர்கள் உலகோடு முடிகிறது. ஜெயாவின் பிறந்த நாளுக்கு போக்குவரத்து தொழிலாளிகளின் ரத்தத்தை தானமாக வாங்கி கின்னசில் கொடி பறக்கச் செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூட நல்ல வேளை கிட்னியை எடுக்கவில்லை. அல்லது ஒரு இலட்சம் தொழிலாளிகள் தமது குழந்தைகளுக்கு ஜெயா, ஜெயவர்மன் என்ற பெயர்களை சூட்டினார்கள் என்றெல்லாம் போகவில்லை.
ஆனால் பாசிஸ்டுகளை எப்படி குளிர்வித்தாலும் அவர்களது நார்சிச பசி அடங்காது. அது தமிழகத்தின் தலைவிக்கே இப்படி இருக்குமென்றால் இந்தியாவின் தலைவருக்கு எப்படி இருக்கும் என்பதை சென்னை – தில்லி தூரத்தால் பெருக்கிக் கொள்க.
பாஜக மைனர் ராமதாஸ், மோடியின் குட்புக்கில் இடம்பிடிக்க, இரு ஏழைகளின் எளிய மகிழ்ச்சியான குழந்தைகளின் பெயர் சூட்டும் உரிமையை அதுவும் ரெண்டு லட்டு போட்டு பிடுங்கிக் கொண்டார் என்றால்……
மோடி பிரதமர் பதவியேற்றால் நான் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று இதே பெங்களூருவில் சொன்ன யூ.ஆர்.அனந்த மூர்த்தியின் வாக்கு சத்தியம் என்பதை இப்போதாவது நம்புகிறீர்களா?
There are many priority matters pending before the new Govt. why are they wasting time in such useless publicity stunts.
முடியல.
காவிகளிடம் வரலாறு படும் பாட்டை பாருங்கள். சாவர்க்கர் விடுதலை போராட்ட வீரராம்.http://www.maalaimalar.com/2014/05/28140954/modi-respects-the-freedom-figh.html
Dear AAR ,
Do u really think that. this govt will do usefull things ??? No. even new or old govt is always govt.
ஒரு பாசிஸ்டுக்கு எப்படி ஐஸ் வைக்கறதுன்னு இவாளுக்கு சரியா தெரியல. கத்துக்குட்டியா இருக்கா. ராம் லீலா மைதானத்துல ஒரு பெரிய சினிமா செட் போடுங்கோ. பாலிவுட், கோலிவுட், ரப்பர்வுட் நடிகைகளை கூப்ட்டு டான்ஸ் ஆடச் சொல்லுங்கோ. நவரச நாயகன் ஆரம்பிச்சு தக்காளிரச நாயகன் முடிய எல்லா ஆக்டர்சையும் வரச் சொல்லுங்கோ. நான் அங்க வந்து பேஸ் மாட்டேன்னு ஒருத்தர் அடம் பிடிப்பார். அவரை கால்ல சங்கிலி போட்டு கட்டி இழுத்துண்டு வாங்கோ. கவிஞர் போலியை கூப்ட்டு முன்னூறு பக்க கவிதை பாட சொல்லுங்கோ. “இது ஒரு பொன்மாலைப் பொழுது. நீ மோடியை புகழ்ந்து ஒரு பாட்டு எழுது” அப்பிடின்னு சொல்லி கவிபேரரசு டயமண்ட்முத்துவை கூட்டிண்டு வாங்கோ. “நீயே இந்தியின் தாய். நீ இல்லாவிட்டால் அதோட கதை கந்தல் டோய்” அப்பிடின்னு ஏதாவது கவிதை படிங்கோ. “முத்தமிழ் வித்தகன்”, “3.1415 இந்தி முதல்வன்” அப்படின்னு ஏதாவது பட்டம் தாங்கோ. தாரை தப்பட்டம் கிழிந்து தொங்கட்டும்!
இங்கிலீஷ் இந்து ………………..
அந்தக் குழந்தையின் தாய் மகிழ்ச்சியோடு இருக்கும் போட்டோவைப் பார்த்தால் அவருக்கு எதுவும் ஆட்சேபணை இருப்பதாகத் தெரியவில்லையே !
இதுவே காவிச் சட்டைக்குப் பதில் சிவப்புச் சட்டை அணிவித்திருந்தால் வினவு வியந்து பாராட்டியிருக்கும்.
மணவை சிவா,
[1]உங்கள் குழந்தைக்கோ அல்லது உங்கள் போர குழந்தைக்கோ பெயர் சூட்ட தராளமாக நீங்கள் மோடியை கூட அழைக்கலாம்! எங்களுக்கு ஏதும் ஆட்சோபனை இல்லை !
[2]ஆனால் ஊரான் வீட்டு பிள்ளைக்கு பெயர் சூட்டும் விடயத்தில் குழந்தையீன் தாய் புகைபடத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் psychology யை சம்மதம் என்று விமர்சனம் செய்ய உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது ?
note:
குழந்தையீன் தாய் புகைபடத்தில் மகிழ்ச்சியாக இருக்க காரணம் அறிய குறங்கு ,தொப்பி, வியாபாரி கதையை மீண்டும் ஒன்றாம் வகுப்புக்கு சென்று படிக்கவும்
//அந்தக் குழந்தையின் தாய் மகிழ்ச்சியோடு இருக்கும் போட்டோவைப் பார்த்தால் அவருக்கு எதுவும் ஆட்சேபணை இருப்பதாகத் தெரியவில்லையே ! //
எங்கள் வீட்டுக் குழந்தைக்குப் பெயர் சூட்ட மோடியை கூப்பிட்டால் உங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அந்தக் குழந்தைக்குப் பெயர் சூட்டியதில் உங்களுக்கு என்ன ஆட்சேபணை? உங்கள் அத்தை பெரியம்மா வீட்டுக் குழந்தையோ?
மகிழ்ச்சியாக இல்லை என்று பொய் சொல்ல உங்களுக்கு யார் உரிமை கொடுத்தார்கள் ?
வினவு நேராக சொன்னாலே பொய்யும் குழப்பமும்தான். இதில் ஒண்ணாப்பு கதையிலிருந்து வேறு infer பண்ண வேண்டுமா? கண்ணைக் கட்டுது
ஊரான் வீட்டு பிள்ளைக்கு பெயர் சூட்டும் விடயத்தில்….
//உங்கள் அத்தை பெரியம்மா வீட்டுக் குழந்தையோ?
குழந்தையீன் தாய் புகைபடத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் psychology யை …
//மகிழ்ச்சியாக இல்லை என்று பொய் சொல்ல உங்களுக்கு யார் உரிமை கொடுத்தார்கள் ?
[1]அறிவுபூர்வமா போசுவதாக நினைத்து கொண்டு அறீவிலியாக பேச வேண்டாம் சிவா !
[2]என் பின்னுட்டத்தில் ஊரான் வீட்டு பிள்ளை,குழந்தையீன் தாய் புகைபடத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் psychology என்று தானே கூறினேன்.
[3]சிவாவுக்கு லாஜிக் மற்றும் தமிழ் இரண்டுமே தட்டுபாடா ? ஏன் இந்த தடுமாற்றம் சிவாவுக்கு ?
Note : Your Emotions will reduce your thinking power SIVA !
மணவை சிவா,
[1]குழந்தைக்கு பெயர் வைக்க யாரும் யாரையும் அழைக்க வீல்லையே !
[2]அழையா விருந்தாளியாக ,அதுவும் குழந்தை பெற்று உள்ள ஒரு பெண்னை காண மூன்ராம் மனிதர்கள் செல்வது தான் உங்கள் பண்பாடா சிவா ?
//ஆனால் அந்தக் குழந்தைக்குப் பெயர் சூட்டியதில் உங்களுக்கு என்ன ஆட்சேபணை?//
மணவை சிவா,
[1]அது எப்படி சிவா …? காங்கிரஸ்க்கு மட்டும் சங்கு ஊத ஆசை படும் நீங்கள் BJP ,மோடி என்று வரும் போது மட்டும் அடக்கி வாசிக்கிறீர்கள் ?
[2]உங்கள் மனசாட்சியை BJPக்கு அடகு வைப்பதால் வரும் பெரும் குழப்பம் தான் அது. அதற்கு வினவு எப்படி பொறுப்பாக முடியும் ?
[3]Alphabets தெரியாவிட்டால் நாம் கற்க வேண்டும் அல்லவா ? அது போல அப் பெண்னின் புகைபடத்தில் அவர் மனதை நீங்கள் தவறாக decode செய்யும் போது basic psychologyயை ஒன்றாம் வகுப்பு கதையில் இருந்து நீங்கள் கற்பதில் உங்களுக்கு என்ன வலி சிவா ?
குறங்கு ,தொப்பி, வியாபாரி கதை:
http://www.panncom.net/p/392/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88:_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF_
[4]இக் கட்டுரையில் குறங்கு யாரு ,தொப்பியாரு ,வியாபாரி யாரு என்று சிவாவுக்கு வீளக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று நம்புகின்றேன் ![உங்கள் IQ மீது ஓரளவுக்கு எனக்கு நம்பிக்கை உள்ளது சிவா :- ]
//வினவு நேராக சொன்னாலே பொய்யும் குழப்பமும்தான். இதில் ஒண்ணாப்பு கதையிலிருந்து வேறு infer பண்ண வேண்டுமா? கண்ணைக் கட்டுது//
ஏன் வினவு சனி கீழமை என்றால் நன்றாக வீடிந்த பீன்பூம் தூங்குவீர்களா ? மணி 9:21am ஆனா பீன்பூம் feedback updates செய்ய வீல்லை !
பெற்ற தாய் தந்தை ஒப்புதலின்றி வலுக்கட்டாயமாக அல்லது பரிசு,பணம் கொடுத்து அவர்களது குழந்தைகளுக்கு பெயர் வைப்பதாக இந்த கிழி கிழிப்பவர்கள் அக்காலம் முதல் இக்காலம் வரை உயிரையும் பணம் மற்றும் வேலையை ஆசைகாட்டி மதம் மாற்றுபவர்களை என்ன புரட்டு புரட்டி எடுப்பார்கள்?
ம்ம்ம்,அதைபற்றிய இடுகை வினவில் வந்தால் அந்த அனலுக்கு இந்த இணையம் தாங்காது என்று கருதியே எழுதாமல் இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.
இந்துக்களின் காசி யாத்திரை பற்றி கிடைத்த சந்துகளில் சங்கூதுபவர்கள் முஸ்லிம்களின் மெக்கா யாத்திரை பற்றி மறந்தும் வாய் திறப்பதில்லை.
ஒருவகுப்பினரின் நம்பிக்கைகள் மட்டும் மூட நம்பிக்கை என நையாண்டி செய்வதும் அதே நம்பிக்கைகள் அடுத்தவகுப்பினரிடம் காணப்பட்டால் அவை இறை நம்பிக்கையாக கருதப்படுவதும் எந்த பகுத்தறிவு வகையறாவோ?