privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.ககங்கையை அசுத்தப்படுத்தியது பாகிஸ்தானா, பார்ப்பனியமா ?

கங்கையை அசுத்தப்படுத்தியது பாகிஸ்தானா, பார்ப்பனியமா ?

-

ங்கை நதியில் எச்சில் துப்பினாலோ, பாலித்தீன் பைகள் போன்ற குப்பைகள் போட்டாலோ, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 10,000 ரூபாய் அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டம் ஒன்றை விரைவில் நிறைவேற்ற மோடி அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. தனது தேர்தல் அறிக்கையிலேயே கங்கை நதியைத் தூய்மைப்படுத்துவதை வாக்குறுதியாக அறிவித்திருந்த பாரதிய ஜனதா, ஆட்சிக்கு வந்ததும் அதற்க்கென உமா பாரதியின் தலைமையில் ஒரு தனி அமைச்சகத்தையே அறிவித்தது.

சரி, இவ்வளவு மெனக்கெடும் அளவிற்கு கங்கையை அசுத்தமாக்கியது யார்? இதுவும் ஐஎஸ்ஐ ‘சதி’யாக இருக்குமோ?

பாகிஸ்தானா, பார்ப்பனியமா?
பாகிஸ்தானா, பார்ப்பனியமா?

விடை தேடினால் அது பார்ப்பனியத்தின் மூடநம்பிக்கைகளையே காரணமாக காட்டுவதால், தண்டனையும், அபராதமும் இந்துக்களிடம்தான் நிறைவேற்ற வேண்டும். எனில் சுத்த கங்கை அபராதத்தின் தொகை சில தினங்களிலேயே திருப்பதி மெகா வசூலை முறியடிப்பது உறுதி.

கங்கை நதியைச் சுற்றி ஏராளமான மூட நம்பிக்கைகள் இந்துக்களிடையே நிலவுகின்றன. இறந்தவர்களை கங்கைக் கரையில் எரியூட்டினால் பிறப்புச் சங்கிலி அறுந்து மறுபிறப்பிலிருந்து தப்பலாம், கங்கையில் குளித்தால் பாவங்கள் அகலும், அந்த நதியானது சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் ஏற்படும் மாசுபாட்டைக் களைந்து கொண்டு தன்னைத் தானே சுத்தப்படுத்தும் ஆற்றல் கொண்டது என்று கங்கையின் ‘புனிதத்தை’ நிலைநாட்ட பின்னப்பட்டுள்ள மூடத்தனங்களின் பட்டியல் மிக நீண்டது. ஆனால், உண்மை இதற்கு நேர்மாறானது.

’இந்துக்கள்’ நம்பும் புனிதமான சுத்தமான கங்கைதான், இன்றைய தேதியில் உலகிலேயே மிக அதிகமாக மாசடைந்த ஐந்து நதிகளில் ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் சுமார் நூறு கோடி லிட்டர் கழிவுகள் கங்கை நதியில் கலக்கின்றன. இதில் கங்கையின் கரையோர நகரங்களில் இருந்து ஆற்றில் கலக்கும் வீட்டுக் கழிவுகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளும் அடங்கும். அன்றாடம் சேரும் இந்த கழிவுகளை விட புனித நீராடல்களாலும் புனித சடங்குகளாலும் உருவாக்கப்படும் கழிவுகள் கணக்கு பிரம்மாண்டமானது.

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பிணங்கள் கங்கை நதிதீரத்தில் எரிக்கப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான பிணங்கள் அப்படியே ஆற்றில் வீசப்படுகின்றன. வாரணாசியில் சுமார் நூறு சுடுகாடுகள் உள்ளன. இவற்றில் பெரிய சுடுகாடான மணிகர்னிகாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40,000 பிணங்கள் எரிக்கப்படுகின்றன. பிணத்தை முழுவதும் எரிக்காமல் பாதி வெந்த நிலையில் ஆற்றில் இறக்கி விட்டால் மறுபிறவி இருக்காது என்பது பார்ப்பனியத்தை பின்பற்றும் இந்துக்களின் நம்பிக்கை.

பிணத்தை எரிக்க விறகு வாங்கும் வசதியில்லாத ஏழைகள் தங்கள் உறவினர்களின் சடலங்களை அப்படியே நதியில் எரிந்து விடுகிறார்கள். இவர்களது கணக்கில் மூடநம்பிக்கையை விட வாழ்நிலை பிரச்சினைகளே இருக்கிறது. எனவே கங்கை நதிப் பரப்பெங்கும் வெந்தும் வேகாததுமான நூற்றுக்கணக்கான பிணங்கள் நாள்தோறும் மிதந்து சென்றவாறே உள்ளன.

சாவின் நகரம் வாரணாசி!

கங்கை மாசு காரணம் யார் 3இங்கே சாவதற்கென்றே தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து குவிந்து கொண்டே இருக்கிறார்கள். அன்றாடம் நூற்றுக்கும் மேற்பட்டவர்களது பிணங்கள் வாரணாசியில் கங்கை நதிக்கரையில் உள்ள மணிகர்னிகாவில் எரியூட்டப்படுகின்றன – சில நாட்களில் இங்கே எரியூட்டப்படும் பிணங்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்து விடுகின்றது.  குழந்தைகளை வளர்க்க முடியாத ஏழைப் பெற்றோர்கள் குழந்தைகளை உயிரோடு கங்கையில் வீசும் சம்பவங்கள் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கில் நடக்கின்றது.

மேலும் ஒவ்வொரு கும்பமேளா நிகழ்வின் போதும் சுமார் எண்பது லட்சத்திலிருந்து ஒரு கோடி பக்தர்கள் வரை கங்கையில் முங்கியெழுகிறார்கள். சாதாரண நாட்களில் வாராணாசியில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 60,000 பேர் கங்கையில் குளிக்கிறார்கள். கும்பமேளா நாட்களில் மட்டும் ஒரு லிட்டர் நீரில் உயிரியல் கழிவுகளின் அளவு 7.4 மில்லி கிராம் அளவுக்கும் பிற நாட்களில் 4.8 மில்லி கிராம் அளவுக்கும் உள்ளது. இது அனுமதிக்கப்பட்ட உயிரியல் கழிவுகளின் அளவான லிட்டருக்கு 2 மில்லி கிராம் என்பதை விட இரண்டு பங்கு அதிகமாகும்.

வாழ்வின் கறைகளான பாவங்களை தீர்த்து விட்டு மறு ஜென்மத்தில் வசதியாக பிறப்பதற்கான கையூட்டாக மாறிவிட்ட கங்கை குளியல் மற்றும் கங்கா மரணம்தான் இன்றைக்கு அந்த நதிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இத்தகைய இழி நிலை ஏற்படுமளவுக்கு போன ஜென்மத்தில் கங்கை என்ன பாவம் பண்ணியதோ, தெரியவில்லை.

மணிகர்னிகா பகுதி மட்டுமின்றி, வாரணாசி நகரைத் தழுவிச் செல்லும் கங்கையின் நதிக்கரையோரங்களெல்லாம், சவுண்டிப் பார்ப்பனர்களுக்கு பக்தர்களால் தானமாக வழங்கப்பட்ட பசுமாடுகளாலும் அவை இட்ட சாணக் குவியலாலும் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றன. சொந்த இடங்களில் முறையாக பராமரிக்கப்படாத கோமாதாக்களும் தங்களது பங்குக்கு கழிவுகளை நதியில் கலக்கிறார்கள்.

இப்படி இந்து பக்தர்களாலும் அந்த பக்தர்களால் “கடவுளின் புரோக்கராக” கருதப்படும் அகோரி சாமியார் கும்பல்களாலும் சீரழிவுக்கு உள்ளாக்கப்பட்ட கங்கா மாதா, பீகாருக்குள்ளும் அதைத் தொடர்ந்து வங்கத்தினுள்ளும் நுழைகிறாள். இங்கோ அவளுக்கு வேறு விதமான பிரச்சினைகள். இங்கே இந்துக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பூஜையறைக் கழிவுகளை கங்கையில் எரிந்தால் புண்ணியம் என்று நம்புகிறார்கள். மேலும் துர்கா பூஜை விமரிசையாக நடக்கும் பிரதேசங்கள் இவை என்பதால், ப்ளாஸ்டர் ஆப் பாரீஸ் வேதிக்குழம்பினால் வார்க்கப்பட்ட துர்கா மாதா சிலைகள் கங்கையில் தான் கரைக்கப்படுகின்றன. அந்தப் படிக்கு உ.பியை விட்டு அகன்றாலும் கங்கா மாதாவுக்கு நிம்மதி இல்லை.

கங்கை மாசு காரணம் யார்இந்தச் சீரழிவுகளால் கங்கையை நம்பி வாழும் சுமார் 140 வகையான நீர் வாழ் உயிரினங்களும் ஏராளமான ஊர்வன விலங்குகளும் மட்டுமல்ல, கங்கை நதிக்கரையோரங்களில் வாழும் சுமார் 40 கோடி மக்களும் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். கங்கை அதன் மூலத்திலிருந்து வாரணாசியை அடைந்து சீரழிவதற்கு முன்பே பல பெரிய அணைக்கட்டுகளைக் கடந்து வரவேண்டியுள்ளது. அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள தெஹ்ரி அணையிலிருந்து தான் தில்லி நகருக்கான குடிநீரை உறிஞ்சியெடுத்து கொள்ளையடிக்கும் உரிமை பன்னாட்டுத் தொழிற்கழகமான சூயஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.  கங்கா மாதாவின் கையை அந்நிய நாட்டு கம்பேனி பிடித்து இழுந்த இந்த சம்பவம் நிகழ்ந்த போது மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது ‘உத்தமர்’ வாஜ்பாயி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி.

பார்ப்பனிய மூடத்தனங்கள் ஒரு பக்கத்திலிருந்து கங்கையை அரித்துத் தின்கின்றன என்றால், மறுகாலனியாதிக்க பொருளாதாரக் கொள்கை இன்னொரு புறத்திலிருந்து குதறித் தீர்க்கிறது. வாணாசியில் இருந்து சுமார் இருபது கிலோமீட்டர்கள் தொலைவில் மெஹ்திகன்ச் என்கிற சிறுநகரம் ஒன்றில் அமைந்துள்ள கோகோ கோலா நிறுவனத்தின் தொழிற்சாலை அங்கே உள்ள நிலத்தடி நீரை கடந்த பதினைந்து ஆண்டுகளில் முற்றாகக் குடித்துத் தீர்த்து, காட்மியம் நிறைந்த தனது ஆலைக் கழிவை கங்கையில் கலந்து விசமாக்கியுள்ளது. கோகோ கோலாவுக்கு உரிமம் வழங்கியதும் அதே ’உத்தமர்’ வாஜ்பாயி தலைமையிலான அரசு தான்.

உலகிலேயே மிக வேகமாக அழிந்து வரும் நதிகளின் பட்டியலில் பத்தாவது இடத்தைப் பிடித்திருக்கும் கங்கை நதியின் மரணத்தை நோக்கிய அந்தப் பயணம் இந்துக்களின் நம்பிக்கைகளை மாத்திரமின்றி கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை சூனியத்தில் தள்ளியிருக்கிறது.

கங்கை நீரில் மிக அதிகப்படியாக காணப்படும் காட்மியம், ஆர்சனிக், புளோரைடு, நைட்ரேட், குளோரைட் போன்ற வேதியல் கலவைகளும், கோலிபார்ம் பாக்டீரியாக்களும் அந்த நதி நீரை நுகரும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஏராளமான நோய்களை உண்டாக்குகின்றன.  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் தேசிய புற்றுநோய் பதிவு இயக்கத்தினால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ‘பித்தப்பை புற்றுநோயில் கங்கை வடிகால் பகுதிகள், உலகிலேயே இரண்டாவது இடத்திலும், விந்துப்பை புற்றுநோயில் நாட்டிலேயே முதல் இடத்திலும் உள்ளன’ என்று தெரிய வந்துள்ளது.

கங்கை மாசு - காரணம் யார்

கங்கை நதியை சாவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பது மோடியின் புத்தம் புதிய கண்டு பிடிப்பல்ல. கடந்த மூன்று பத்தாண்டுகளாகவே கங்கை நதியை ஒட்டி வாழும் மக்களிடையே நதியின் மரணம் குறித்த ஆதங்கமும் அதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் இருந்தே வருகிறது. இந்தக் கோரிக்கையின் பின்னே மதம் புனிதம் போன்றவைகள் இருந்தாலும், தங்கள் பொருளாதார வாழ்க்கையோடும் பிழைப்போடும் நேரடியாக தொடர்பு கொண்டுள்ள அந்நதியின் மறுபிறப்பை அம்மக்கள் நீண்ட காலமாகவே எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

எண்பதுகளில் இருந்தே கங்கையைக் காக்க ஏராளமான இயக்கங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. சூழலியல் தன்னார்வ குழுக்களில் இருந்து இந்து மத மடங்கள் வரை அவரவர் சொந்த நோக்கங்களுக்காக கங்கையைக் காக்கும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். எனவே தான், உத்திரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களின் ஓட்டுக் கட்சித் தேர்தல் வாக்குறுதிகளில் கங்கையைக் காப்பது என்கிற அம்சம் தவறாமல் இடம் பிடித்து வருகிறது. கங்கையை மீட்பதற்கான பல்வேறு திட்டங்களும் கடந்த காலங்களில் பல்வேறு அரசாங்கங்களால் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

கங்கையைக் காப்பாற்ற வேண்டும் என்பது மோடியின் சிந்தனையில் உதித்த புதிய கண்டுபிடிப்பல்ல. 1986-ல் மத்திய அரசால் கங்கை செயல் திட்டம் துவங்கப்பட்டு பின்னர் பிரதமரை தலைவராகவும், கங்கை பாயும் மாநிலங்களின் முதலமைச்சர்களை உறுப்பினர்களாகவும் கொண்டு தேசிய கங்கை பாசன மேலாண்மைத் துறை அமைக்கப்பட்டது. கங்கையைத் தூய்மைப்படுத்துவதற்காக இதுவரை பல்லாயிரம் கோடி ரூபாய்கள் கொட்டப்பட்டுள்ளன. கடைசியாக மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் 2,600 கோடி ரூபாய் கங்கையைத் தூய்மைப்படுத்தும் பணிக்காக ஒதுக்கப்பட்டது.

இரண்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளாலும், பல்லாயிரம் கோடி ரூபாய்களைக் கொட்டியும் செய்ய முடியாத பணியைத் தான், எச்சி துப்புவதைத் தடுப்பதன் மூலம் செய்து முடித்து விடுவேன் என்கிறார் மோடி. சோழியன் குடுமி சும்மா ஆடும் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை.

மோடி வாரணாசியில் போட்டியிட்டதில் இருந்து அமித் ஷாவை உத்திரபிரதேச பாரதிய ஜனதாவின் தேர்தல் பொறுப்பாளராக நியமித்தது, முசாபர்பூர் கலவரம், கங்கா மாதா மோடிக்கு அனுப்பிய ‘அழைப்பு’, கங்கையின் புனிதத்தை மீட்பேன் என்று மோடி பிரச்சாரத்தின் போது அடித்த சவடால் உள்ளிட்டு சகலமும் பாரதிய ஜனதாவின் தேர்தல் திட்டத்திற்கு உட்பட்டே நடந்தேறியது.

கங்கை மாசு காரணம் யார் 4பல கட்டங்களாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் துவக்கத்தில் தொழில் வளர்ச்சி குறித்த அளப்புகளும் இறுதியில் இந்துத்துவ பல்லிளிப்புகளுமாக பாரதிய ஜனதாவின் தேர்தல் அணுகுமுறை படு நேர்த்தியாக திட்டமிடப்பட்டிருந்தது. தேர்தலின் பிந்தைய கட்டத்தில் உத்திரபிரதேசம் மற்றும் இந்தி பேசும் மாநிலங்களுக்கான வாக்குப்பதிவுகள் நெருங்க நெருங்க பாரதிய ஜனதா தனது ’வளர்ச்சி’ முகமூடியை கழற்றி எறிந்து விட்டு உண்மையான இந்துத்துவ முகத்தோடு நின்றது.

கீழ்மட்டத்தில் கலவரங்களைத் தூண்டும் கிரிராஜ் கிஷோர், ப்ரவீன் தொகாடியா, அமித்ஷா வகையறாக்களின் வெறியூட்டும் பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்த அதே நேரம் மேல் மட்டத்தில் மோடி கங்கையின் புனிதம், வாரணாசியின் புராணப் பெருமை போன்ற ’சட்டை கசங்காத’ இந்துத்துத்துவ பாணி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். மேலதிகமாக கங்கை நதியை நம்பி வாழும் 40 கோடி மக்களின் வாக்குகளை அள்ளுவதற்கும் கங்கையின் புனித மீட்பர் அவதாரம் அவருக்கு தேவைப்பட்டது.

ஆனால், கங்கையின் புனிதம் உண்மையில் எச்சில் துப்பியதால் தான் கெட்டதா? இல்லை. அந்த நதியில் கலக்கும் பிணங்களும், இதர மதச் சடங்குகளும், தொழிற்சாலைக் கழிவுகளும் தான் கங்கையின் சீர்கேட்டுக்கு பிரதானமான காரணம். இதில் எதையுமே மோடி தொட முடியாது என்பது தான் எதார்த்தமான உண்மை.

தொழிற்சாலைகளைக் கட்டுப்படுத்த இறங்கினால் கார்ப்பரேட்டுகளின் டார்லிங்காக அவரால் தொடர முடியாது. மதச் சடங்குகளைக் கட்டுப்படுத்த முனைந்தால் ஆர்.எஸ்.எஸ் உடனடியாக மோடிக்கான கோட்சேவை அனுப்பி வைக்கும். கங்கையில் மிதந்து செல்லும் பிணங்களைத் தடுக்க நினைத்தால் அதைத் தின்று பிழைக்கும் அம்மணக் குண்டி அகோரிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே தான் எச்சில் துப்பாதீர்கள் என்று நம் குரல்வளையைப் பிடிக்கிறார்.

கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதும் பார்ப்பனிய மூட்த்தனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பதும், அதன் சுமையை மக்களின் மேல் ஏற்றுவதும் தான் பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் ‘இந்துத்துவ’ அரசியல் பாணி. வெற்று சவடால்களுக்குப் பின்னுள்ள இந்த உண்மையான நோக்கங்களை நாம் புரிந்து கொள்வதும் அதை பரந்துபட்ட மக்களிடம் எடுத்துச் செல்வதும் தான் இவர்களை முறியடிப்பதற்கான முன்தேவை.

–    தமிழரசன்

மேலும் படிக்க

  1. தலைப்பில் பாகிஸ்தான் பெயர் உள்ளது. வினவுக்கு பாகிஸ்தான் மேல் அப்படி என்ன பாசமோ தெரியவில்லை, சமீப காலங்களில் தேவை இருக்கிறதோ இல்லையோ, பாகிஸ்தான் பெயரை வினவு உபயோகப்படுத்துகிறது.

    அவ்வளவு பாசம் இருந்தால் கொஞ்ச நாள் அங்கு சென்று இருந்து விட்டு வாருங்களேன்.

    • நண்பர் கற்றது கையளவு,

      தலைப்பு தான் உங்களுக்கு பிரச்சினையா … கட்டுரையின் பேசுபொருள் பற்றி உங்களுக்கு கருத்தேதுமில்லையா?

  2. பிணத்தை எத்தனை லட்சம் வேண்டுமானாலும் வீசிவிட்டு போங்கள்… ஆனால் எச்சிலை மட்டும் துப்பிடாதீங்கப்பா … கங்கை அசுத்தமாகிடும்…ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அப்புறம்… இந்த பிரச்சனைல பாயுங்க மேல எந்த வகையிலும் குற்றம் சுமத்த முடியலையே…. இது பெரிய மன உளைச்சலா இருக்குமே…. நம்ம அம்பிகளுக்கு…. இருந்தாலும் அம்பிங்க ஏதாவது ஐடியா செய்து… பாயுங்கள எப்படி கோத்துவிடுவானுங்க பாருங்க wait & see
    start music ……

  3. கங்கையில் எச்சில் துப்பும் பயங்கரவாதிகளை பிடிக்க சில யோசனைகளை

    கங்கையில் குளிக்கும் போது வாயை பிளாஸ்திரி போட்டு ஒட்ட செய்யலாம். கீழே உச்சா போனால் என்ன பண்ணுறதுன்னு கேட்குறீங்களா ?? அது முக்கியமில்லை. நமக்கு எச்சில்தான் துப்பக்கூடாது. அதனால அங்கே பிளாஸ்திரி தேவை இல்லை.

    கங்கை கரையோரங்களில் சிசி டிவி வைத்து எல்லாருடைய வாயையும் கவர் பண்ணலாம். வாயை மட்டும் கவர் பண்ண போதும். ஏன்னா அங்கே இருந்துதான் எச்சில் வருது. குறிப்பா… கங்கையில் பிணத்தை எரிப்பவர்களும், ஆயி போறவங்களும் தான் நாற்றம் தாங்காம எச்சிலை அடிக்கடி துப்புவானுங்க அவங்களைத்தான் க்ளோசா வாட்ச் பண்ணனும். இதுக்காக தனி டிபார்ட்மண்ட் கூட ஆரம்பிக்கலாம் அதான் ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க போறாங்களே
    எச்சில் துப்பும் பயங்கரவாதிகளை புடிக்க மற்றவர்களும் ஐடியாக்கள் இருந்தால் பகிர்ந்துக்கலாம்

  4. கங்கை நதியை கூட ஒருவேளை சுத்தம் செய்துவிட முடியும்.ஆனால் அதைவிட பன்மடங்கு அதிகமாக அசுத்தமாகி மனதில் உறைந்து ,கெட்டிதட்டிப் போன இந்து மதத்தின் முட்டாள் தனமான மூடநம்பிக்கைகளை யாராலும் சுத்தப்படுத்த முடியாது.மக்கள் புரட்சியின் விளைவாக மதங்கள் ஒழிந்து மனிதங்கள் வளரும்போது மட்டுமே அது சாத்தியமாகும்.மற்றபடி மக்கள் வரி பணத்தில் ஒரு லட்சம் கோடி காவிகளுக்கு கமிசன் பார்க்க மட்டுமே பயன்படும்.

  5. மீண்டும் கோரிக்கை: வாரத்துக்கு ஒன்றாவது positive பதிவு இடுங்கள். மத்திய, மாநில, மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி அல்லது நிறுவனங்களில் பேருந்து நிலையத்தில் பள்ளியில் பயன் படக்கூடிய ,வேறு நாட்டில் மாநிலத்தில் முயன்ற, கொணர்ந்து உபயோகமான எதாவது ஒரு விஷயத்தைப் பற்றி பதிவு இடவும். Negative, குறை சொல்லியே, இகழ்ந்தே வசை பாடியே பிலாக்கணம் வைக்கும் பதிவுகள் மீண்டும் மீண்டும் இடுவது உங்களுக்கு நன்றாக இருக்கிறதா?

    • தும்பி ,

      [1]கங்கை நதியை ஹிந்து மத நம்பிக்கை அடிபடையில் அசுத்தம் செய்ய கூடாது என்ற வினவு கூறும் செய்தி உங்களுக்கு எதிர் மறையான செய்தியாக இருப்பது எமக்கு வியப்பு அளிகின்றது.

      [2]எச்சில் துப்புவதற்கு தடை போடும் போது, கங்கை நதியில் பிணங்களை ஏறிய கூடாது , தொழில்சாலை கழிவுகளை கொட்டக்கூடாது போன்ற வினவு கூறும் செய்திகள்,ஆலோசனைகள் நாட்டை ஆளும் மோடிக்கும் அவர் சகா திரு உமாபாரதிக்கும் பயன் அளிக்க வேண்டும் அல்லவா ?

      தும்பி://Negative, குறை சொல்லியே, இகழ்ந்தே வசை பாடியே பிலாக்கணம் வைக்கும் பதிவுகள் மீண்டும் மீண்டும் இடுவது உங்களுக்கு நன்றாக இருக்கிறதா?//

    • சாரி தும்பி,

      பாசிடிவ் பதிவை எதிர்பார்த்து நீங்கள் தவறான இடத்துக்கு வந்திருக்கிறீர்கள்.

    • நீங்க ஏங்க சார் அவங்கள அப்படி எழுத சொல்றீங்க ..
      நாட்டுல நடக்கற நல்ல விசியங்களை நீங்க எழுதுங்க… நாங்க தெரிஞ்சுக்குறோம் .

  6. //பிணத்தை முழுவதும் எரிக்காமல் பாதி வெந்த நிலையில் ஆற்றில் இறக்கி விட்டால் மறுபிறவி இருக்காது என்பது பார்ப்பனியத்தை பின்பற்றும் இந்துக்களின் நம்பிக்கை.///

    வினவு இந்துமதத்துக்கு எதிரானது தான் அதற்காக மற்றநாட்டு மக்களை விட இந்தியர்களிடம் குறைவாகக் காணப்படும் சுகாதார பழக்க வழக்க குறைபாடுகள் எல்லாவற்றுக்கும் இந்துமதமும் தான் காரணம் என்பது போல் கட்டுரைகள் எழுதுவது வெறும் அபத்தம். “பிணத்தை முழுவதும் எரிக்காமல் பாதி வெந்த நிலையில் ஆற்றில் இறக்கி விட்டால் மறுபிறவி இருக்காது” என்று எந்த இந்துமத நூலும் கூறவில்லை. இந்தியாவில் ஆண்டானிலிருந்து அடிமை வரை காணப்படும் குறுகிய லாப நோக்கமும், வறுமையும், படிப்பறிவின்மையும் தான் இப்படியான பழக்க வழக்கங்களுக்கெல்லாம் காரணமே தவிர இந்துமதமல்ல. ஒரு பிணத்தை எரிக்கக் கொண்டு வந்த விறகுகளில் இரண்டு, மூன்று பிணத்தை எரித்து விட்டு, இலாபம் காணுவதற்காக காசியில் பிணங்களை எரிக்கும் தாழ்த்தப்பட்ட புலையர் என்ற சாதியினர், பிணத்தை முழுவதும் எரிக்காமல் பாதி வெந்த நிலையில் ஆற்றில் இறக்கி விட்டால் மறுபிறவி இருக்காது என்ற கருத்தை படிப்பறிவற்ற ஏழைகளுக்குக் கூறி ஏமாற்றியிருக்கலாம், அதனால் கூட அந்த வழக்கம் நடைமுறையில் வந்திருக்கலாம். பார்ப்பனர்கள் அல்லது பார்ப்பனீயம் எப்பொழுதாவது, எப்படி பிணம் எரிக்கப்படுகிறது, அல்லது முழுசா எரிபடுகிறதா அல்லது பாதியில் எரிகிறதா என்று கவலைப்பட்டதுண்டா? பார்ப்பனர்கள் வெட்டியான் வேலை பார்த்ததில்லை. அதனால் இது பார்ப்பனீயத்தின் வேலை அல்ல பார்ப்பனரல்லாத இந்துக்களின் வேலையாகத் தானிருக்கும். 🙂

    உதாரணமாக தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் பெரிய கல்வீடுகளில் கூட மலகூடம் (Toilet) இல்லை. எல்லோரும் வயல் வெளிகளிலும், கடற்கரைக்கும் ஓடுகிறார்கள். ஆளுக்கொரு விலையுயர்ந்த Cell phone, TV, கழுத்து நிறைய தங்கநகையும், காது கிழிய பாம்படமும் அணியும் பெண்கள் உள்ள வீடுகளில் கூட Toilet கிடையாது. அதனாலும் பல நோய்கள் பரவுகின்றன, சுற்றாடல் அசுத்தமடைகிறது. அதற்குக் காரணம் கூட காரணம் பார்ப்பனீயத்தை நம்பும் இந்துக்களின் நம்பிக்கை என்பீர்கள் போலிருக்கிறது, தமிழ்நாட்டில் எப்படி பல கிராமங்களில் வயல் வெளியும், காய்ந்து போய்க் கிடக்கும் ஆற்றுப் படுகைகளும், வீதிகளும், ஒழுங்கைகளும், கடற்கரையும் மலம் கழிக்கப்பட்டு அசுத்தமாக்கப் படுகிறதோ அதே போல் தான் வடநாட்டிலுள்ளவர்களும் கங்கையை அசுத்தப் படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் இந்துக்களின் வீடுகளில் மட்டும் மலகூடமில்லாமல் இல்லை, இந்துக்கள் அல்லாதவர்களும் அப்படித் தான், உதாரணமாக தமிழ்நாட்டில் நான் போன சில முஸ்லீம் கிராமங்கில் கூட, அங்குள்ள பலர் துபாய்க்கும், சவுதிக்கும் போய் அவர்களின் குடிசை வீடுகளை எல்லாம் கல்வீடுகளாக மட்டுமன்றி, மாடி வீடுகளாகக் கட்டிய பின்பும், வயல்வெளியில் அல்லது கடற்கரையில் தான் மலம் கழிக்கிறார்கள். அவர்களிடம் வீட்டை பெரிதாகக் கட்டி விட்டு ஏன் டாய்லெட்டை கட்டவில்லையென்று கேட்டதற்கு, ஏதோ கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டது மாதிரி பார்த்தார்கள்.

    அதனால் பெரும்பான்மை இந்திய மக்களின் துப்புரவின்மைக்கும், சுகாதார பழக்க வழக்க குறைபாடுகளுக்கும், ஏன் கங்கை அசுத்தமடைந்ததற்கும் கூட இந்துமதம் மட்டும் காரணமல்ல. இளவயதிலேயே பாடசாலைகளில் சுகாதார பழக்க வழக்கங்கள் கற்பிக்கப்படாமையும், வறுமையும், சனத்தொகைப் பெருக்கமும் தான் காரணமே தவிர, இந்துமதமல்ல. இந்துமதம் ஏனைய மதங்களை விட சுகாதார பழக்க வழக்கங்களை வலியுறுத்துகிறது என்பது தான் உண்மை.

    • “””” உதாரணமாக தமிழ்நாட்டில் நான் போன சில முஸ்லீம் கிராமங்கில் கூட, அங்குள்ள பலர் துபாய்க்கும், சவுதிக்கும் போய் அவர்களின் குடிசை வீடுகளை எல்லாம் கல்வீடுகளாக மட்டுமன்றி, மாடி வீடுகளாகக் கட்டிய பின்பும், வயல்வெளியில் அல்லது கடற்கரையில் தான் மலம் கழிக்கிறார்கள். “”””
      நான்தான் சொன்னேனே… (எனது 3 வது கமெண்டை படியுங்கள்) பாயுங்கள எப்படி கோத்து விடுது பாருங்க ஒரு நூலு…

      • கோர்த்து விடும், சேர்த்து விடும் பழக்கமெல்லாம் எனக்குக் கிடையாது. இராமநாதபுரம் மாவட்டத்தில் பல கிராமங்களில் (மீன்பிடிக் கிராமங்கள் உட்பட) நான் நேரில் கண்டதைத் தான் கூறினேன். 🙂

        • பித்தம் தலைக்கேறி பிதற்றும் மனநோயாளி போல் முசுலிம் எதிர்ப்பு மதவெறி வியாசனின் அறிவை குருடாக்கி வளைகுடா நாடுகளில் பெரும் பொருளீட்டி வந்து மாடி வீடு கட்டினாலும் முசுலிம்கள் பலர் கழிப்பறை கட்டுவதில்லை என பிதற்றுகிறார்.கேக்குறவன் கேணப்பயல் என்றால் கேப்பையிலும் நெய் வடியும்.

          \\கோர்த்து விடும், சேர்த்து விடும் பழக்கமெல்லாம் எனக்குக் கிடையாது. //

          பொதுவுடைமையாளர்களின் இந்த பதிவு இந்து மத நம்பிக்கைகள் கங்கை ஆற்றை மாசு படுத்துவதாக குற்றம் சாட்டுகிறது.முடிந்தால் இந்து மத சகோதரர்கள் ஆதாரங்களுடன் மறுக்கலாம்.இதற்கும் இசுலாமிய மக்களுக்கும் என்ன சம்பந்தம்.தோழர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளது போல

          \\உதாரணமாக தமிழ்நாட்டில் நான் போன சில முஸ்லீம் கிராமங்கில் கூட, அங்குள்ள பலர் துபாய்க்கும், சவுதிக்கும் போய் அவர்களின் குடிசை வீடுகளை எல்லாம் கல்வீடுகளாக மட்டுமன்றி, மாடி வீடுகளாகக் கட்டிய பின்பும், வயல்வெளியில் அல்லது கடற்கரையில் தான் மலம் கழிக்கிறார்கள்//

          என பொய் சொல்லியேனும் முசுலிம் மக்களை இழிவாக சித்தரிப்பதும்,பிறரையும் அவ்வாறே பார்க்க வைப்பதும் கோர்த்து விடும் இழிசெயல் அன்றி வேறென்ன.

          இதற்கு மேலும் நான் சொல்வது உண்மை என வியாசன் அடம் பிடித்தால் அந்த ஊர்களின் பெயரையும் கழிப்பறை இல்லாமல் புதிதாக கட்டப்பட்ட மாடி வீடுகள் உள்ள தெருக்களின் விவரத்தையும் வியாசன் வெளியிட வேண்டும்.அந்த பகுதிகளில் இருந்து வினவு தளத்தை படிப்போர் மூலம் அவர் சொல்வது உண்மையா பொய்யா என தெரிந்து கொள்ளலாம்.

          கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு,வியாசன் புளுகு எத்தனை நாளைக்கு என பார்த்து விடலாம்.

          • நண்பர் திப்பு ,

            வியாசன் சரியான லூசு ____; அந்த கமெண்ட்டை விட்டு தள்ளுங்க திப்பு

            • To vinavu Readers,

              [1]வினவு சென்சார் செய்த மேல் உள்ள கோடு இட பட்ட இடத்தில் நான் எந்த ஆபாசமான; தீய; முறை தவறான வார்த்தையை பயன் படுத்த வீல்லை என்பதை தெரிவித்து கொள்கின்றேன்.

              [2]வினவுக்கு, வியாசன் மீது உள்ள பாசம் காரணமாக “பயல்” என்ற வார்த்தை கூட தவறாக தெரிவதற்கு நான் பொருப்பு ஏற்க இயலாது . 🙂

              • To Vinavu, [வினவு இந்த feedback அய் வெளியீடுமா ?]

                [1]ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்களையும் , தலித்தியர் மக்களையும் அவதூரு செய்யும் வியாசனின் அவதூரு கருத்துகளை வினவு மேள தளத்துடன் வரவேற்று சென்சர் செய்யாமல் பதிவு செய்யும் வினவு , அவருக்கு எதிராக நான் கொடுத்த பீன்னுட்டத்தை மட்டும் சென்சர் செய்தது ஏன் ?

                [2] வினவு செய்ய போகும் வர்க்க போராட்டத்துக்கு ஆதரவு கொடுக்கும் கரங்கள் யாருடையது ? வியாசனும் சைவ வெறி வெள்ளாள சாதி கூட்டமா ? அல்லது உழைக்கும் இஸ்லாமிய மக்களும் , முன்னேற போராடும் தலித்தியர் மக்களுமா ?

                [3] வினவு இந்த feedback அய் வெளியீடுமா ?

            • ஒரு சரியான Nutcase அண்ணன் சரவணன், தனது தம்பியை செல்லமாக லூசு என்று அழைத்தது போல் நான் எடுத்துக் கொண்டேன். 🙂

          • பெயர், ஊர் விலாசம் எல்லாம் கேட்டு விட்டு, பிறகு மண்ணடிக்கு வருமாறு கேட்டாலும் கேட்பார் திப்பு சுல்தான். 🙂

            இந்துக்களின் வீடுகளை விடுங்கள், இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள முஸ்லீம்கள் அதிகம் வாழும் இடங்களிலாவது எல்லோரிடமும் மலகூடம் உள்ளதா என்பதை முதலில் ஆராய்ந்து பார்த்து விட்டு வந்து பேசவும். என்னுடைய நேரடியான அனுபவத்தைத் தான் நான் குறிப்பிட்டேனே தவிர முஸ்லீம்களை இழிவாகச் சித்தரிப்பது என்னுடைய நோக்கமல்ல. ஊரில் அறைவாசிப்பெரிடம் மலகூடம் இல்லாமலிருக்கும் போது, முஸ்லீம்களிடமும் இல்லாமல் இருப்பது, அவர்களை இழிவாகச சித்தரிப்பதாகுமா? முஸ்லீம்களின் வீடுகளில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் எனக்குத் தெரிந்த பல இந்துக்களின், கிறித்தவர்களின் வீடுகளிலும் தான் மலகூடம் கிடையாது. அதனால் அண்மையிலுள்ள நகரங்களில் ஓட்டலில் தங்கிக் கொண்டு தான், நான் எனது நண்பர்களின் கிராமங்களுக்கே போனேன். அவர்களின் வீடுகளில் தங்குவது பிரச்சனையில்லை ஆனால் திறந்த வெளி மலகூடத்தைப் பாவித்து எனக்குப் பழக்கமில்லை.

            இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும், ஏன் முழு இந்தியாவிலுமே பெரும்பான்மை மக்களின் வீடுகளில் மலகூடம் கிடையாதென்பது தான் உண்மை. அதற்கிடையில் உண்மையைச் சொன்னால், விலாசம் கேட்க வந்து விட்டார். நான் ஒன்றும் இட்டுக்கட்டிச் சொல்லவில்லை, அந்தப் பழக்கமும் எனக்குக் கிடையாது. நான் கூறிய ஊரில் மத்திய கிழக்கிற்குச் சென்று மாடி வீடு கட்டியவரின் வீட்டில் மட்டுமல்ல, அந்த வீடுக்குப் பக்கத்து வீடுகளிலும் கூட மல கூடம் கிடையாது. எல்லோரும் கடற்கரைக்குப் போவார்களாம்.

            • //பித்தம் தலைக்கேறி பிதற்றும் மனநோயாளி போல் முசுலிம் எதிர்ப்பு மதவெறி வியாசனின் அறிவை குருடாக்கி வளைகுடா நாடுகளில் பெரும் பொருளீட்டி வந்து மாடி வீடு கட்டினாலும் முசுலிம்கள் பலர் கழிப்பறை கட்டுவதில்லை.//

              ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பது திப்புவின் உளறலிலிருந்து தெரிகிறது. நான் குறிப்பிட்ட மாடி வீடு கட்டியவர், “வளைகுடா நாடுகளில் பெரும் பொருளீட்டி வந்தவர்” என்று நான் கூறவில்லை, இது திப்புவின் கற்பனை. எல்லா தமிழ்நாட்டு முஸ்லீம்களும் வளைகுடாநாடுகளுக்குப் போய் பெரும் பொருளீட்டி வருவதில்லை. எனக்குத் தெரிந்த பலர், சென்னையில் ஓட்டல்களில், துணிக்கடைகளில் வேலை செய்தவர்கள். மனைவியின் அல்லது தாயின், நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் கூலிகளாக மத்திய கிழக்கிற்குப் போய், அரபுக்களுக்கு நாயாக உழைத்து, சேர்த்த பணத்தைக் கொண்டு வந்து, இருக்கிற சிறிய நிலத்தை முழுமையாகப் பயன்படுத்துவதற்காக சிறிய மாடி வீடு கட்டியவர்.

              அரபுக்களை, அரபு நாடுகளைப் பற்றிப் பீற்றித் தள்ளுவதில் திப்பு போன்ற சில முஸ்லீம்களுக்கு அலாதிப்பிரியம். அதனால் முஸ்லீம்கள் எல்லோருமே வளைகுடாவில் போய் “பெரும்பொருளீட்டி” வருகிறார்கள் என்பது போல் கதை விடுகிறார். 🙂

            • கழிப்பறை வசதி பொருளாதார நிலையுடன் தொடர்புடையது.இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் இந்து,முசுலிம்,கிருத்துவ மத வேறுபாடின்றி உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த ஏழைகளாக இருப்பதால் பலருக்கும் அந்த வசதி இருப்பதில்லை.இதை வியாசன் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.ஆனால் முசுலிம்கள் பலர் சவூதி,துபாய் என வெளிநாடு சென்று பொருளீட்டி வந்து மாடி வைத்து வீடு கட்டினாலும் கழிப்பறை வைத்து கட்டுவதில்லை என்று அடித்து விடுவது ”முசுலிம்கள் முட்டாள்கள்” என இட்டுக்கட்டி இழிவு படுத்தும் அவதூறு இல்லையா.

              \\உண்மையைச் சொன்னால், விலாசம் கேட்க வந்து விட்டார். நான் ஒன்றும் இட்டுக்கட்டிச் சொல்லவில்லை, அந்தப் பழக்கமும் எனக்குக் கிடையாது//.

              பித்தம் முத்திப் போய் விட்டது.எந்த இடத்திலும் முகவரி கேட்கவில்லை.கேட்டது நீங்கள் ”கண்ட” அந்த ஊர்களின் பெயரையும் தெருக்களின் பெயரையும்தான்.

              \\ நான் கூறிய ஊரில் மத்திய கிழக்கிற்குச் சென்று மாடி வீடு கட்டியவரின் வீட்டில் மட்டுமல்ல, அந்த வீடுக்குப் பக்கத்து வீடுகளிலும் கூட மல கூடம் கிடையாது. எல்லோரும் கடற்கரைக்குப் போவார்களாம்.//

              எந்த இடத்திலும் ஒரு ஊர் பெயர் கூட இல்லை.ஆனாலும் கூறினாராம்.எந்த ஊர்னே சொல்லாம அங்க மைய கிழக்குக்கு போக சொன்னால் என்ன சொல்வது.

              சொல்லாததை சொன்னதாக கற்பித்துக் கொள்வது ”லூசுத்தனம்” என்று நான் கருதுகிறேன்.இல்லை அது பெரிய புத்திசாலித்தனம் என வியாசு கருதினால் ஒன்றும் சொல்வதற்கில்லை ”விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்” என்று சொல்வதை தவிர.

          • To vinavu readers…,

            [1]இங்கு பின்னுட்டம் இடும் நண்பர் திப்பு மண்ணடிக்கு அழைக்கும் திப்பு அல்ல, ஆனால் அவர் மார்சீயம் பேசும், மனித உரிமைக்கு குரல் கொடுக்கும் , தமிழ் மீது பற்றும் காதலும் உள்ள தமிழன் திப்பு என்பது வினவில் அவருடன் விவாதித்த ; வினவில் அவர் பின்னுட்டங்களை படித்த அனைவருக்கும் தெரியும்

            [2] இந்த விடையம் வியாசனுக்கு தெரியாதற்க்கு காரணம் , இஸ்லாமிய மக்கள் மீது உள்ள பாசிச கொலை வெறியே . 🙂

            //பெயர், ஊர் விலாசம் எல்லாம் கேட்டு விட்டு, பிறகு மண்ணடிக்கு வருமாறு கேட்டாலும் கேட்பார் திப்பு சுல்தான்//

      • நண்பரே … வியாசனை குறை கூறும் முன் சற்று சிந்தியுங்கள்.. யார் யாரை கோர்த்துவிடுவது? வினவு ஏன் தலைப்பில் கோர்த்துவிட வேண்டும்?

    • Hi Viyasan,

      //ஒரு பிணத்தை எரிக்கக் கொண்டு வந்த விறகுகளில் இரண்டு, மூன்று பிணத்தை எரித்து விட்டு, *** ஏமாற்றியிருக்கலாம்//

      உங்களின் இது போன்ற அவதூறுகள் தான் உங்களை அடையாளம் காட்டுகின்றன.
      தூர தூரத்தில் இருந்தெல்லாம் பிணங்கள் இங்கே வந்து குவிகின்றன. வாரணாசியில் சாவதற்கென்றே தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து குவிகிறார்கள். இது எல்லாம் மூட(மத)நம்பிக்கைகளினாலா? இல்லை துப்புரவைப்பற்றிய அறிவு இல்லாததாலா?. அன்றாடம் நூற்றுக்கும் மேற்பட்டவர்களது பிணங்கள் அங்கே எரியூட்டப்படுகின்றன. அவைகள் எல்லாம் முழுமையாக சாம்பலாக்குவதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும். தொடர்ந்து வரும் பிணங்களை காக்க வைக்க முடியுமா? பிணங்கள் வர வர அவைகளை கிடத்துவதற்கு போதுமான இடம் அங்கே இருக்கிறதா? அங்கே ஏன் அவ்வளவு பிணங்கள் வரவேண்டும்?
      ஒரு வேளை பார்ப்பனர்கள் அல்லது பார்ப்பனீயர்கள் இப்பொழுதேனும், எப்படி பிணம் எரிக்கப்படுகிறது, முழுசா எரிபடுகிறதா அல்லது பாதியில் எரிகிறதா என்று கவலைப்பட்டு பார்ப்பனர்களும் பார்ப்பனீயர்களும் பிணமெரிக்கும் வேலையை ஏற்று தில்லுமுல்லுகள் ஏதுமின்றி திறம் பட செய்ய முன் வருவார்களேயானால் அப்போது சொல்லாம் இது பார்ப்பனர்கள் அல்லது பார்ப்பனீயர்களின் வேலை அல்ல என்று. அவர்கள் பிணங்கள் முழுதும் எரிந்து சாம்பலாகும் வரை அருகிலேயே இருந்து பார்த்துக் கொள்ளட்டும். எரிந்த சாம்பலையெல்லாம் ஆற்றில் ஏன் தள்ளிவிடாமல் மூட்டைகளாகக் கட்டி தூக்கிக்கொண்டு போய் நிலங்களுக்கு உரமாக போடட்டும்.
      அதுவரை இது பிணங்களின் மற்றும் பாதிவெந்த பிணங்களின் மத்தியில் வாழும் நடைப்பிணங்களின் தேசமாகத்தான் இருக்கும்.

      • Hello Univerbuddy,

        //உங்களின் இது போன்ற அவதூறுகள் தான் உங்களை அடையாளம் காட்டுகின்றன.//

        நான் காசிக்கு இதுவரை போனதில்லை. இந்த ஆண்டு முடிவில் தான் போகலாம் என்று எண்ணியுள்ளேன். இந்த விவாதம் கங்கையை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவலை மேலும் தூண்டியுள்ளது. அதனால் நான் கங்கைக்குச் சென்று வந்த பின்னர் தான் என்னுடைய சொந்தக் கருத்தைக் கூற முடியும். ‘ஒரு பிணத்தை எரிக்கக் கொண்டு வந்த விறகுகளில் இரண்டு, மூன்று பிணத்தை எரித்து விட்டு, ஏமாற்றியிருக்கலாம்’ என்று நான் கூறியது, நான் கங்கை அசுத்தமாவதைப் பற்றியும், BBC யில் Michael Woods இன் இந்தியாவைப் பற்றிய காணொளிகளின் அடிப்படையிலும் தான், அந்தக் காணொளியை YouTube இல் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் இங்கு பதிவு செய்கிறேன். அந்த விவரணப்படத்தில் தான் விறகுக்குப் பணம் கொடுக்க முடியாத ஏழைகளும், அங்கு பிணங்களை எரிப்பவர்களும் அடுத்த பிணத்தை அதே சிதையில் வைத்து எரிப்பதற்காக அரை குறையாக எரிந்த நிலையில் பிணங்களைக் கங்கையில் விடுவதாகவும், அத்துடன் கால்கள் அப்படியே இருக்க இழுத்து கங்கையில் விடுவதையும் காட்டினார்கள். பிணம் எரியுமிடத்தில் பார்ப்பனர்கள் இருப்பதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அதனால் அந்தப் பிணங்களை முழுமையாக எரிப்பதா அல்லது அரைகுறையில் இழுத்து கங்ககைக்குள் போடுவதா என்பதைத் தீர்மானிப்பவர்கள் பார்ப்பனர்கள் அல்ல. அதனால் கங்கையில் பிணங்கள் மிதப்பதற்கு பார்ப்பனீயமோ அல்லது பார்ப்பனர்களோ காரணம் என்பது உண்மையாக இருக்க முடியாது. நான் பார்ப்பன விசிறி அல்ல, ஆனால் எனது கருத்தைக் கூற நான் ஒருபோதும் தயங்கியதில்லை. அது உங்களுக்கு என்னை அடையாளம் காட்டுவதாக நீங்கள் நினைத்தால், நான் ஒன்றும் செய்ய முடியாது. அது தான் என்னுடைய அடையாளம். 🙂

        • Hi Viyasan,

          // அந்தப் பிணங்களை முழுமையாக எரிப்பதா அல்லது அரைகுறையில் இழுத்து கங்ககைக்குள் போடுவதா என்பதைத் தீர்மானிப்பவர்கள் பார்ப்பனர்கள் அல்ல.//

          Thanks for this info. You have to note that when we say Paarpaneeyan, it not only includes Paarpanars, but also Paarpaneeyars. பிணங்களின் இடைவிடாத அணிவகுப்பை கருத்தில் கொண்டு அடுத்தடுத்து தங்கள் தங்கள் பிணங்களை வைத்துக்கொண்டு காத்திருக்கும் பார்ப்பன பார்ப்பனீயர்கள் தங்கள் தங்கள் பிணங்களை சிதையேற்றிவிட்டு இடைத்தைக் காலி செய்தால் வேலை முடிந்த தென்று எண்ணி பிணமெரிப்பவர்களை இந்நிலைக்குத் தள்ளியிருப்பது தான் சாத்தியம்.

          // அதனால் கங்கையில் பிணங்கள் மிதப்பதற்கு பார்ப்பனீயமோ அல்லது பார்ப்பனர்களோ காரணம் என்பது உண்மையாக இருக்க முடியாது.//

          The river is polluted by not only dead bodies. The article speaks about other forms too. From gaint painted plaster of paris statues to annual ‘pindams’ for ancestors, all these pollute the rivers. And in all of these things, Paarpanars are not only involved but also benefit from them. So a major blame should go to them.

      • தோழர் யுனிவர்படி,

        நீங்கள் தான் இன்னும் வியாசரைப் புரிந்துகொள்ளவில்லை. இந்துக்களில் வெட்டியான்கள் தங்களது சாதித்தொழிலை ஒழுங்காக செய்யவில்லை. வியாசன் சொல்வதைப் போல நாம் பார்ப்பனர்கள் மேலேயே பழிபோடுகிறோம். இதுவே மனுவும் கவுடியல்யனும் இருந்திருந்தால் தன் சாதித்தொழிலை ஒழுங்காகச் செய்யாத வெட்டியான்களை வெட்டி எறிந்திருந்திருப்பர். இந்துமதத்தின் மேன்மையையும் வியாசரின் பெருந்தன்மையையும் புரிந்துகொள்ளுங்கள் யுனிவர்படி,

        வியாசன் கருத்தை உங்களுக்காக வைக்கிறேன்; \\பிணம் எரியுமிடத்தில் பார்ப்பனர்கள் இருப்பதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அதனால் அந்தப் பிணங்களை முழுமையாக எரிப்பதா அல்லது அரைகுறையில் இழுத்து கங்ககைக்குள் போடுவதா என்பதைத் தீர்மானிப்பவர்கள் பார்ப்பனர்கள் அல்ல. அதனால் கங்கையில் பிணங்கள் மிதப்பதற்கு பார்ப்பனீயமோ அல்லது பார்ப்பனர்களோ காரணம் என்பது உண்மையாக இருக்க முடியாது.\\

  7. திருத்தம்:

    **மற்றநாட்டு மக்களை விட இந்தியர்களிடம் காணப்படும் சுகாதார பழக்க வழக்க குறைபாடுகள்….. 🙂

  8. Viyasan,

    [1]கங்கையில் குளித்தால் செய்த பாவங்கள் எல்லாம் விலகிவிடும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.இந்த ஆறு இந்துக்களால் கடவுளாகப் போற்றப்படுகிறது. [இக் கருத்தை பார்பனியம் வளியுறுத்தாமல் , எந்த ஊரு சுடு காட்டு வெட்டியார் ஓலைச் சுவடியில் எழுதிவைத்து உள்ளார் ?]

    [2]நாட்டின் பலபகுதிகளில் இருந்தும் வரும் இந்துக்கள், இறந்துபோன தங்கள் உறவினர்களின் சாம்பலை கங்கையில் கரைக்கின்றனர். இதனால் இறந்தவர் சொர்க்கத்தை அடைவார் என்பது நம்பிக்கையாகும்.[பிணத்தீன் சாம்பலை கூட , கங்கையில் கரைக்கும் படி பார்பனியம் வளியுறுத்தாமல் , எந்த ஊரு சுடு காட்டு வெட்டியார் ஞான தீருஷ்டியில் கண்டு கூறி உள்ளார் !]

    [3]சைவ சமயத்தில் கங்கை சிவபெருமானின் மனைவியாகவும், சிவபெருமானின் அடையாளங்களுள் ஒன்றாகவும் அறியப்படுகிறார். அத்துடன் சிவருத்திர புராணம் எனும் நூல் வீரபத்திரனை சிவகங்கை மகனாக சித்தரிக்கிறது.[ஆமாம் வியாசன் இந்த முற்போக்கான !!! கருத்தை கூட பார்பனியம் கூற வீல்லை.காசி,மணிகர்னிகா சுடுகாட்டு வெட்டியார் அவர்கள் தான் கூறுகின்றார் ]

  9. viyasan,

    பாவம் போக்கும் கங்கை:
    ——————————————

    சிவபெருமான் கங்கைக்கு புனிதமான அந்தஸ்தினை தந்தார். அவ்வரத்தினால் கங்கை நதியில் குளிப்பவர்களுக்கு பாவங்கள் தொலைந்தன. இதனால் பூலோக மனிதர்கள் அனைவரும், அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபட்டு சொர்க்கத்தினை அடைவார்களே என்ற வருத்தம் கொண்டார் நாரத முனிவர். தன்னுடைய எண்ணத்தினை கையிலையில் பார்வதி தேவியிடம் கூறினார். பார்வதி தேவிக்கும் அதே சந்தேகம் ஏற்பட்டது. அதனையறிந்த சிவபெருமான் ஒரு உபாயம் கூறினார். அதன் படி கங்கை நதிக்கரையில் சிவபெருமானும் பார்வதியும் மானுட ரூபம் கொண்டு சென்றனர். வயதானவரான சிவபெருமானும், பெண்ணாக மாறிய பார்வதியும் நதியில் குளிக்கும் பொழுது வெள்ளம் வந்தது. நீச்சல் தெரிந்த அந்தப் பெண் கரையை அடைந்தாள், தன்னுடைய கணவன் நீரில் மாட்டிக் கொண்டதை கண்டு அருகிலுள்ளோரை காக்கும்படி வேண்டினாள். சிலர் வயதானவரை காப்பாற்ற சென்றனர். ஆனால் அவர்களை தடுத்த அப்பெண், அவர்களில் பாவம் செய்யாதவர் மட்டுமே தன்னுடைய கணவனை காப்பாற்ற வேண்டும் என்றாள். அனைவரும் சிலையாக நின்றனர். ஒரு இளைஞன் மட்டும் கங்கை நீரில் மூழ்கி தன்னுடைய பாவங்களை தீர்த்து, அவள் கணவனை காப்பாற்றினான். கங்கையில் மூழ்கி அனைவரின் பாவங்களையும் தீர்க்கலாம் எனும் பொழுதும், அதனை முழுமையாக நம்பிய அந்த இளைஞனை போலுள்ளவர்கள் மட்டுமே கங்கையில் பாவங்களை தீர்க்க இயலும் என்பது நம்பிக்கையாகும்.

    ஆமாங்க வியாசன் , மேல் உள்ள கதையை கூட பார்பனியம் கூறாமல் எங்க ஊரு சுடுகாட்டு வெட்டியார் அவர்கள் தான் கூறுகின்றார்.. 🙂

  10. “கங்கையில் மிதந்து செல்லும் பிணங்களைத் தடுக்க நினைத்தால் அதைத் தின்று பிழைக்கும் அம்மணக் குண்டி அகோரிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ”

    கையில வெப் சைட் இருக்கு. கேள்வி கேட்க ஆள் கிடையாது. பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. என்ன வேணா எழுதித் தள்ளு கண்ணா !

    • ஏன் ?? அகோரிகள் அம்மன குண்டி கிடையாதா? இல்லை அவர்கள் பிணம் தின்ன மாட்டார்களா ? உண்மைய எழுதுனா உங்களுக்கு ஏன் கொந்தளிக்குது சிவா ?

    • இதோ ஒரு அகோரி கிறுக்கன் பொணத்த அறுத்து திங்குறது இந்த வீடியோல மூணாவது நிமிசத்துல வருது.இதுல என்னென்ன இந்து மத பெருமைகள் துலங்குதுன்னு வியாசன் போன்ற அறிஞர் பெரு மக்[கு]கள் விளக்க வேண்டும் என அருவருப்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

      தாழ்த்தப்பட்ட வெட்டியான்கள் தான் அகோரி பிணம் திங்க காரணம்னு பழியை எம் மக்கள் மீது போட கூடாது என வியாசன் என்கிற சாதி வெறி ________ எச்சரிக்கிறேன்.

      • இங்கு பேசிக் கொண்டிருக்கும் விடயம், கங்கை அசுத்தப்படுவதற்குக் காரணம் இந்துமதமா அல்லது இந்து மதத்தில் அரைகுறையாக எரிந்த பிணத்தை இழுத்து கங்கையில் விட்டு, கங்கையை அசுத்தப்படுத்துமாறு கூறப்பட்டிருக்கிறதா என்பதே தானே தவிர அகோரிகள் நரமாமிசம் தின்பதல்ல. இந்தியாவில் அகோரிகள் மட்டுமல்ல, உலகில் பல நாடுகளில் மனிதமாமிசத்தை உண்ண விரும்புகிறவர்கள், இறந்த உடலைப் புணர விரும்புகிறவர்கள் எல்லாம் உள்ளனர். இது தான் சொல்லுறது, படித்துப் பார்க்காமல் சும்மா உளறக் கூடாதென்று. 🙂

        • வியாசன் ,

          [1]நீர் உண்மையாகவே முட்டாள் தான்!

          [2] ஏன் வியாசன் கலைசெல்வன் அவர்கள் ,

          “கங்கையில் மிதந்து செல்லும் பிணங்களைத் தடுக்க நினைத்தால் அதைத் தின்று பிழைக்கும் அம்மணக் குண்டி அகோரிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ”

          என்ற வினவு கருத்தை மறுத்த மணவை சிவா அவர்களீன் கருத்துகள் அடிபட்டையிலும் , நீர் வெட்டியாரை வம்புக்கு இழுத்து அவர்கள் தான் கங்கா மாசு அடைகின்றது என்று சாதி வெறியுடன் பெனாத்துவது அடிபடையிலும் தானே உமக்கு எச்சரிக்கை செய்கின்றார்!

          [3]இது தான் சொல்லுறது, படித்துப் பார்க்காமல் சும்மா உளறக் கூடாதென்று. 🙂 _____ வியாசன்

          Note to Vinavu:
          —————————

          வினவு , என் கருத்துகளை சென்சார் செய்வது என்றால் வழக்கம் போல எடுத்த வார்த்தைக்கு பதில் கோடு இடவும். அதை விடுத்து வார்த்தைகளை மட்டும் எடுத்து விட்டு நயவஞசகமாக புது வழியில் என் கருத்துகளை வெளியீட வேண்டாம் !

          viyasan://இங்கு பேசிக் கொண்டிருக்கும் விடயம், கங்கை அசுத்தப்படுவதற்குக் காரணம் இந்துமதமா அல்லது இந்து மதத்தில் அரைகுறையாக எரிந்த பிணத்தை இழுத்து கங்கையில் விட்டு, கங்கையை அசுத்தப்படுத்துமாறு கூறப்பட்டிருக்கிறதா என்பதே தானே தவிர அகோரிகள் நரமாமிசம் தின்பதல்ல//

          • நன்றி சரவணன்,

            நான் சொல்ல வேண்டியதை நீங்களே சொல்லிட்டீங்க.பதிவில் உள்ள இரண்டு வரிகளை காட்டி ஒருவர் விமரிசிக்கிறார்.அதற்கு நாம் பதில் சொல்றோம்.ஆனா நாம சம்பந்தம் இல்லாம பேசுறதா கொநதளிக்குது இந்த அறிவு கொழுந்து.இந்த தத்து பித்து உளறலுக்காக வியாசனுக்கு பொருத்தமான பெயர் சூட்டி அழைத்தால் வினவு மாடரேட் பண்ணிர்ராங்க.சரி நாம சொல்லாட்டா என்ன.வியாசன் எப்பேர்பட்ட ”அறிவாளி” ன்னு இத படிக்கும் வாசகர்களுக்கு தெரியத்தானே போவுது.

  11. viyasan,

    [1]தற்போது கங்கை நதிக்கு செல்பவ்ர்கள் புனித நீராடலாம் என்று மூழ்கி எழுந்தால், அவர்களை உரசிக்கொண்டு ஒரு பிணம் மிதந்து செல்வதை சர்வ சாதாரணமாக காணலாம்.இந்நிலையில், மாசடைந்துபோயிருக்கும் கங்கை நீரில், புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்ஸ்(carcinogens)எனப்படும் புற்று நோயை உண்டாக்கக்கூடிய காரணிகள் இருப்பது ஆய்வுகள் மூலம் தெரியவருகின்றது

    [2]ஆண்டுதோறும் 9000 கிழப் பசுக்கள் உயிரோடு கங்கை யில் தள்ளப் பட்டுக் கொல்லப்படுகின்றன – மோட்சத்துக்காக. இதன்விளைவாக 1927, 1963, 1970 ஆகிய ஆண்டுகளில் காசி அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள மக்கள் கடுமையான நோய்க்கு ஆளாகி ஆயிரக் கணக்கில் மாண்டனர்.

    [3]பீகார் தலைநகரமான பாட்னாவில் மட்டும் நிமிடம் ஒன்றுக்கு 34 முதல் 41 பிணங்கள் எரிக்கப்பட்டு மோட்ச த்திற்குச் செத்தவர்களை அனுப்புவதற்காக(?) அந்தச் சாம்பல் கங்கைக்கரையில் கரைக்கப்படுகின்றன.

    ஆமாம் வியாசன் , கங்கை மாசு அடைவதற்கு காரணம் பார்பனியம் அல்ல !ஹிந்து மதத்துக்கு தலைமை ஏற்று உள்ள காசி,மணிகர்னிகா சுடுகாட்டு வெட்டியார் தான் மூல,முழு காரணம் . 🙂

  12. VIYASAN,

    கங்கை நதியை பல முறை பார்த்து அதில் இருந்து வெவ்வேறு பருவகாலத்திலும், சூழலிலும் நீர் சேகரித்து வந்துள்ளேன். நம் ஊரில் இருக்கும் குழாய் நீர் மேலும் சுத்திகரிக்கபட்ட நீர் என பாட்டிலில் விற்கும் நீர் என எந்த நீரையும் ஆறு மாதத்திற்கு மேல் பயன்படுத்த முடியாது. சுத்திகரிக்கபடாத நீரில் புழுக்களும், சுத்திகரிக்கபட்ட நீரில் பாக்டீரியா உருவாக்கத்தால் ஒருவித வழுவழுப்பு இருக்கும்.

    ஆனால் கங்கை எத்தனை நாட்கள் ஆனாலும் அதன் நிலையில் இருந்து மாறுவதில்லை. கலங்கிய நீராக இருந்தாலும் அவை அசுத்தமடைவதில்லை. புழுக்கள் வருவதில்லை. இன்னிடம் இருக்கும் நீரி இன்னும் தூய்மை நிலையிலேயே இருக்கிறது என்பதை கண்ட பின்பே கூறுகிறேன்.

    ரிஷிகேஷ், ஹரித்துவாரில் இருக்கும் நீரின் தன்மையை விட காசியில் அதிர்வலைகள் அதிகம் கொண்ட கங்கை நீர் இருக்கிறது என்பதை வெளிப்படையாக கூறவேண்டும். ரிஷிகேஷ், ஹரித்துவாரில் கண்களால் பார்த்தால் தூய நீர் இருக்கிறது என்பது உண்மை. ஆனால் அதில் காசியில் இருக்கும் கங்கையின் ஆற்றல் உண்டா என்றால் குறைவே.

    Note:

    வியாசன் ,இந்த அறிவியல் ஆய்வை செய்தவர் கூட ஸ்வாமி ஓம்கார் என்ற பார்பனர் கிடையாது ,ஆனா காசி,மணிகர்னிகா சுடுகாட்டு வெட்டியார் தானுங்க

    • To Viyasan,

      [1]ஸ்வாமி ஓம்கார் என்ற பார்பனர் கங்கா நீர் மாசு அடைந்ததுக்கு கீழ் கூறும் வாக்குமூலத்தை பாருங்கள். நீரில் உள்ள ஆக்சிஜன் அளவு [ DO level] 7 mg/l என்ற அளவுக்காவது இருந்தால் தான் நீர் வாழ் உயிரினங்கள் [Aquatic organisms] உயிர் வாழ முடியும். ஆனால் ஹிந்து மக்கள் குழும்பும் கங்கா,வாரனாசியில் நீரில் இருக்கும் ஆக்சிஜன் அளவு [DO level] 4 mg /l. இந்த குறைந்த கங்கா நீரில் உள்ள ஆக்சிஜன் அளவில் நீர் வாழ் உயிரினங்கள் [Aquatic organisms] உயிர் வாழ முடியுமா ? முடியாது அல்லவா ?

      [2]உயிரினங்கள் [Aquatic organisms] உயிர் வாழ முடியாத கங்கா நீரை தூய்மையானது என்று ஸ்வாமி ஓம்கார் என்ற பார்பனர் கூறுவது அறிவியலுக்கு முரணாக இருக்கிறது.

      ————————————————————-
      ஸ்வாமி ஓம்கார் என்ற பார்பனர் வாக்குமூலம் ://ஆனால் கங்கை எத்தனை நாட்கள் ஆனாலும் அதன் நிலையில் இருந்து மாறுவதில்லை. கலங்கிய நீராக இருந்தாலும் அவை அசுத்தமடைவதில்லை. புழுக்கள் வருவதில்லை. இன்னிடம் இருக்கும் நீரி இன்னும் தூய்மை நிலையிலேயே இருக்கிறது என்பதை கண்ட பின்பே கூறுகிறேன்.//
      ————————————————————

  13. என்னுடைய கருத்து என்னவென்றால், சென்னையில் கூவம் நதி சாக்கடையாகிப் போனதற்கும் இந்துமதத்திற்கும் எப்படி சம்பந்தம் இல்லையோ அதே போல் தான் கங்கையும் அசுத்தமடைந்ததற்கும் இந்துமதம் காரணமல்ல. இந்தியர்களுக்கு நீர்நிலைகளை சுத்தமாக வைத்திருக்கத் தெரியாது. வைகை நதிக்குள் குப்பைகளை எறியும், எந்த நீர் நிலைக்குள்ளும் மலம் கழிக்கும் அதே இந்தியர்கள் தான் கங்கையையும் அசுத்தப்படுத்துகிறார்கள். கங்கை நதி மட்டுமல்ல, எல்லா நதிகளுமே புனிதமானதென்கிறது இந்துமதம். அப்படி நீரை, நதிகளை தாயாக, தெய்வமாக உருவகப்படுத்தியமைக்குக் காரணமே நீர் நிலைகளை மக்கள் அசுத்தப்படுத்தாமல் , பாதுகாக்க வேண்டுமென்பதற்காகத் தானே தவிர வேறெந்தக் காரணமும் அல்ல. அக்காலத்தில் கடவுளின் மீது பழியைப் போட்டால் தான் பாமரர்கள் நம்புவார்கள். அதற்காகத் தான் இப்படியான புராணக்கதைகள் உருவாக்கப்பட்டன. இந்துமதம் கங்கையைப் புனிதமானதேன்று கூறியதே தவிரா அதை அசுத்தப்படுத்துமாறும், பிணங்களை அப்படியே கங்கையில் எறிந்து விடும்படியும் என்று கூறவில்லை. இந்தியர்கள் அனைவருக்கும் உள்ள பொதுவான கஞ்சத்தனம், சுயநலம், சுகாதார பழக்க வழக்க குறைபாடு, படிப்பறிவின்மை, குறுகிய இலாப நோக்கம், பழமையைப் பாதுகாக்கத் தெரியாத தன்மை,நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டியது பற்றிய விழிப்புணர்வின்மை, சாதிப்பிரிவுகள், வறுமை என்பன தான் கங்கை மட்டுமல்ல, இந்தியாவில் வேறு நதிகளும் அசுத்தமடைவதற்குக் காரணமே தவிர இந்து மதமல்ல.

  14. viyasan,

    Ganga is Now Dieing : [Based on BOD level]
    ———————————————–

    [1]Waters having a BOD of less than 1 mg/l can be relatively un-impacted to humans and primary candidates for conservation.[Japanese high BOD standard level]

    [2]The BOD level at Ganga is keep on increasing and reaching the highest level of 13.0+ in the year 2011 at the place of Ganga Varanasi.

    Note:
    ——–
    ### BOD—>Biological Oxygen Demand[உயிரியல் ஆக்சிஜன் தேவை]

    ###BOD is one of the parameter considered for measuring the water quality among pH, DO, COD, coliform groups and n-hexane Extract.

    ### 1 mg/l அளவுக்கு மட்டுமே இருக்க வேண்டிய கங்கா நதி நீர் BOD level 13.0+ mg / l என்ற அளவுக்கு கங்கா,வாரணசியில் ஆவதற்கும் காரணம் யார் ? ஹிந்து மத மூட நம்பிக்கைகளும் அதனை ஒட்டிய செயல்பாடுகளும் தானே இன்றி வேறு என்னவாக இருக்க முடியும் வியாசன் ?

  15. Viyasan,

    Ganga is Now Dieing : [Based on DO level]
    —————————————————————————————-–

    [1]Rule 64 of the Michigan Water Quality Standards says minimum dissolved oxygen standard must meet 7 mg/l

    [2]But at Ganga,Varanasi Dissolved Oxygen level is below 4 mg /l.

    [3] வாரணசிக்கு போய் ஹிந்து மத சடங்குகளை செய்து [மோடி உட்பட ], கங்கா நதியை ஆக்சிஜன் குறைபாடு உள்ள நதியாக மாற்றுவதற்கு யார் காரணம் வியாசன் ?

    [4]இலச்ச கணக்கான பிஜேபி தொண்டார்களுடன் தேர்தலுக்கு முன் வாரணசிக்கு போய் ஹிந்து மத சடங்குகளை செய்த மோடியும் கங்கா மாசு [Increasing BOD and Decreasing DO levels] பட காரணம் தானே ?

    [5]இவ்வாறாக கங்கா நதியை புனிதம் என்று கூறிகொண்டு அதனை மாசு படுத்துவது ஹிந்துக்கள்,அவர்கள் ஹிந்து மத சடங்குகள் தானே ?

    Note:

    ### DO—> Dissolved Oxygen[நீரில் இருக்கும் ஆக்சிஜன்]

    ###நீரில் உள்ள ஆக்சிஜன் அளவு [ DO level] 7 mg/l என்ற அளவுக்காவது இருந்தால் தான் நீர் வாழ் உயிரினங்கள் [Aquatic organisms] உயிர் வாழ முடியும்

  16. According to Vyasan,if you take bath in Holy Ganga,your soul would be purified.But what will cure his sadist habit of calling the workmen at grave-yard as “Thazhtthapatta saadhiyai serntha pulayar”?Every one here knows that they are from the lower rungs of the society.What pleasure you are getting by calling them with those adjectives?Maybe Modi may succeed in purifying Ganga.But to cure these sadist habits of individuals,the birth of another Periyar is needed.

    • Translating Sooriyan comment to Tamil:

      பிறர் துன்பத்தில் இன்பம் காணும்[sadist]மன நோய் வியாசன் :
      ————————————————————————————–

      வியாசன் கூற்று படி கங்கா நீரில் குளித்தால் ஆண்மா புனிதம் அடையும். ஆனால் சுடுகாட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களை “தாழ்த்தப்பட்ட புலையர் என்ற சாதியினர்” என்று கூறும் வியாசனின் பிறர் துன்பத்தில் இன்பம் காணும்[sadist] மன நோய்க்கு என்ன மருந்து ? சுடுகாட்டில் வேலை செய்யும் தொழிலாளர்கள் சமுகத்தீன் கீழ் நிலையில் தள்ளபட்டு உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். வியாசன் சுடுகாட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களை அவ்வாறு அழைப்பதால் அடையும் இன்பம் என்ன ?ஒரு வேலை மோடி கங்கா நதியை சுத்தம் செய்து விடலாம். ஆனால் வியாசனுக்கு உள்ள பிறர் துன்பத்தில் இன்பம் காணும்[sadist] மன நோயை சிகிச்சை செய்ய மற்றொரு பெரியார் பிறப்பு தேவைப்படுகிறது.

  17. To Vinavu Readers,

    [1]நீர் மாசுபடும் அளவை கணக்கீடு செய்ய சுற்றுச்சூழல் அறிவியல் [Environment Science] துறையில் பயன்படுத்தபடும் இரு ஆய்வு முறைகளுக்கு பெயர் BOD-Biological(Biochemical) Oxygen Demand[உயிரியல் ஆக்சிஜன் தேவை] மற்றும் DO-Dissolved Oxygen[நீரில் இருக்கும் ஆக்சிஜன்].

    [2]BOD-Biological or Biochemical Oxygen Demand[உயிரியல் ஆக்சிஜன் தேவை] என்பது நுண்உயிர்களால் [microorganisms] (e.g., aerobic bacteria) எவ்வளவு ஆக்சிஜனை உயிர்ம விஷத்தன்மை உள்ள நீரில்[oxidation of organic matter] பயன் படுத்த முடிகின்றது என்பது ஆகும். இதன் அளவு ஜப்பான் தர அளவான 1மிகி/லிட்டர் [1 mg/ l] என்ற அளவில் இருப்பின் அந்த நீர் மாசுபடாதது என்று பொருள். ஆனால் ஹிந்து மக்கள் குழும்பும் கங்கா,வாரனாசியில் BOD level 13.0 மிகி/லிட்டர்க்கு மேல். இது மிகவும் அபாயகரமான அளவு;உயிரினிங்களுக்கு புற்று நோய் வருவதற்கு சாத்தியம் அதிகம்.

    [3]DO-Dissolved Oxygen[நீரில் இருக்கும் ஆக்சிஜன்] என்பது நீரில் இருக்கும் ஆக்சிஜன் அளவு. இது அதிக அளவு இருப்பீன் நீர் வாழ் உயிரினங்கள் [Aquatic organisms] சிரப்பாக உயிர் வாழ முடியும்.மிக துல்லியமாக கூறுவது எனில் நீரில் உள்ள ஆக்சிஜன் அளவு [ DO level] 7 mg/l என்ற அளவுக்காவது இருந்தால் தான் நீர் வாழ் உயிரினங்கள் [Aquatic organisms] உயிர் வாழ முடியும். ஆனால் ஹிந்து மக்கள் குழும்பும் கங்கா,வாரனாசியில் நீரில் இருக்கும் ஆக்சிஜன் அளவு [DO level] 4 mg /l. இந்த குறைந்த கங்கா நீரில் உள்ள ஆக்சிஜன் அளவில் நீர் வாழ் உயிரினங்கள் [Aquatic organisms] உயிர் வாழ முடியுமா ?

    • இராமன் ,

      [1]எம் மொழி தமிழ் சுற்றுச்சூழல் அறிவியல் [Environment Science] உட்பட அனைத்து துறைகளையும் பேசும். உம் சம்ஸ்கிருதம் கோவில் கருவரையில் மட்டும் மணியாட்டும்.

      [2]கோவில் கருவரையில் தமிழ் புகுந்தால் , அன்றே சம்ஸ்கிருதம் முற்றிலும் அழீயும். ஆனால் சம்ஸ்கிருதம் அழீய முழு முதல் காரணமும் பார்பனர்கள் தான் ! சம்ஸ்கிருதத்தை தாய் மொழியாக கொண்ட பார்பனர்கள் அதை தம் வீட்டில் பயன் படுத்துவது இல்லையே ! பின்பு சம்ஸ்கிருதம் அழியாமல் என்ன செய்யும் ?

    • இராமன் ,

      [1]தமிழ் நாட்டில் வாழும் மொழி சிறுபான்மை மக்களுக்காக[தெலுங்கு,கன்னடம்,மலையாளம்] தமிழக அரசு மாநில எல்லை ஒர மாவட்டங்களில் அவர்கள் மொழியில் கல்வி பயில பள்ளிகூடங்களை அமைத்து உள்ளது.

      [2] ஆனால் தமிழகத்தீன் சமஸ்கிருத மொழி சிறுபான்மை மக்களான பார்பனர்கலுக்காக சமஸ்கிருத மொழி வழி பள்ளிகூடங்கள் உள்ளனவா ? இல்லையே ஏன் ? சமஸ்கிருத மொழியை தாய் மொழியாக கொண்ட பார்பனர்கள் அம் மொழியை கோவில் கருவறையில் மணி ஆட்டியே அழீக்க உறுதி கொண்டது உள்ள போது; தம் வீடுகளில் பயன் படுத்தாத போது சமஸ்கிருத மொழி தானே அழீயும் நிலை அல்லவா ஏற்பட்டு உள்ளது !

      [3]மொழி சிறுபான்மை [தெலுங்கு,கன்னடம்,மலையாளம்] மக்கள் தம் வீடுகளில் போசுவது அவர் அவர் தாய் மொழி தானே. அப்படி இருக்கையில் பார்பனர்கள் மட்டும் சமஸ்கிருத மொழியை வீடுகளில் போசாமைக்கு காரணம் என்ன ? கோவிலில் மணி ஆட்ட மட்டும் சமஸ்கிருத மொழி என்ற போக்கு எவ்வளவு அம் மொழீக்கு தீங்கானது என்பதை பார்பனர்கள் உணர்ந்ததாக தெரியவிலையே !

      [4] இந்த நிலையில் தமிழ் மொழி வழி கல்வி வேண்டாம் ; ஆங்கில வழி கல்வியே போதும் என்று நரி தனமாக நீர் கூறும் உள் நோக்கம் என்ன ? சமஸ்கிருத மொழியை பார்பனர்கள் அழிப்பது போல தமிழ் மொழியையும் தமிழர்கள் பயன் படுத்தாமல் அழீக்க வேண்டும் என்ற தீங்கான எண்ணம் தானே உமக்கும் உம் பார்பன சாதிக்கும் !

  18. மூடனம்பிக்கையே பார்ப்பனர்களின் பிழைப்புக்கு ஆதாரம்! மக்களின் மூடநம்பிக்கை வளர்த்தே மதங்கள் வாழ்கின்றன! நாசவில் வேலை செய்தாலும் நமது மூடனம்பிக்கைகளை விடுவதில்லை, இந்தியர்கள்! வியாசன் போன்றோர் வக்காலத்து வாங்குவது சிலரது இன நலன் காக்கவே! பல உபயோகமான கருத்துக்களையளிக்கும் சரவணநுக்கு நன்றி! சில சமயங்களில் தோன்றும் வியாசனின் பார்ப்பன எதிர்ப்பு, தமிழ் தேசிய பற்று எல்லாமே போலியானது! மூடனம்பிக்கைகளை விஞ்ஞான கருத்தாக நிரூபிக்க முயலும் பார்ப்பன தந்திரங்களை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்!

    • மிக சரியாக சொன்னீர்கள் அய்யா,பார்ப்பனீயத்திற்கு பல்லக்கு தூக்கும் திரு வியாசனின்முகத்திரையை திரு தென்றல் சரியாகவே கிழித்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக,திரு சரவணனின் தரவுகளை எதிர்கொள்ள மறுத்து ஒதுங்கி செல்வதையும் இந்த விவாத பின்னூட்டங்களை கவனித்து வரும் அனைவரும் அறிவர். இங்கு தங்கள் கருத்தில் தவறிருப்பின் தயங்காது ஒத்துக்கொள்ளும் நாகரீக மரபை பலர் கைகொண்டுள்ள சூழலில் வறட்டு/வெற்று வாதம் செய்யும் திரு வியாசனின் நிலை அந்தோ பரிதாபம்.

      • நண்பரே ,

        [1]வியாசன் செய்வது வறட்டு/வெற்று வாதம் மட்டும் அல்ல!

        [2]வியாசனின் வாதங்களில் தலித்தியர் மக்களுக்கு எதிரான அவரின் சைவ வெள்ளாள சாதி வெறியும் , இஸ்லாமியருக்கு எதிரான ஹிந்து மத ______ வெறியும் தான் வெளிபடுகின்றது.

        ///வறட்டு/வெற்று வாதம் செய்யும் திரு வியாசனின் நிலை அந்தோ பரிதாபம்.///

      • வியாசன் ஈழத்தமிழர்,தமிழர், இந்து, இலங்கையர் என பல அவதாரங்கள் எடுப்பார். கடந்த வருடம் வரை “இலங்கையர்” என்று பெருமை பேசி திரிந்தவர்.

        • நான் ஒரு தமிழன், ஈழத்தமிழன், இந்து, இலங்கையர் தான், அதிலென்ன சந்தேகம்? இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட அனைவருமே இலங்கையர் தான். 🙂

    • //சில சமயங்களில் தோன்றும் வியாசனின் பார்ப்பன எதிர்ப்பு, தமிழ் தேசிய பற்று எல்லாமே போலியானது!///

      திரு. Ajaathasathru,

      ஒவ்வொருவருக்கும் தமது கருத்தைத் தெரிவிக்கும் சுதந்திரம் உண்டு என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு எதுவும் கிடையாது. அதனால் நான் உங்களுடன் வாதாடப் போவதில்லை.
      நான் ஒரு தமிழன், என்னுடைய அடையாளம் தமிழ். அதனால் எனக்கு தமிழிலும் தமிழ்த்தேசியத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு, அதனால் தமிழையும், தமிழ்த்தேசியத்தையும் எதிர்க்கும் எவரையும், அது – இந்துக்களாக, பார்ப்பனர்களாக, கிறித்தவர்களாக, பெரியாரிஸ்டுகளாக, திராவிடவீரர்களாக ஏன் இஸ்லாமியர்களாக – இருந்தாலும் அவர்களுக்கு நான் எனது எதிர்ப்பைத் தெரிவிப்பேன். ஆனால் பெரியாரிஸ்டுக்களைப் போல தமிழர்களின் பிரச்சனைகளுக்கேலாம் பார்ப்பனர்கள் மட்டும் தான் காரணம் என்பது போல், பார்ப்பன எதிர்ப்பை மட்டும் காட்டும் பம்மாத்தைத் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, அதில் எனக்கு உடன்பாடுமில்லை. தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கூட விட மறுக்கும் மலையாளிகளும், கன்னடர்களும், ஏனையோரும் அவர்கள் பல தலைமுறைகள் தமிழ்நாட்டில் வாழ்ந்தும், வீட்டில் தமது மொழியையே இன்றும் பேசினாலும் அவர்கள் தமிழர்கள், ஆனால் வீட்டிலும் வெளியிலும் தமிழை மட்டும் பேசி, எங்கிருந்தாலும் தமது குழந்தைகளுக்குத் தமிழையும் கற்பிக்கும் தமிழ்ப் பிராமணர்கள் தமிழர்கள் அல்ல எனும் திராவிடமாயையிலும் எனக்கு நம்பிக்கையில்லை. அத்துடன் சைவமும்(மாலியமும்) தமிழும் பிரிக்க முடியாதவை என்பதிலும் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கையுண்டு. தமிழர்களின் மத்தியில் சாதியொழிக்கப்பட வேண்டும் ஆனால் எமது முன்னோர்கள் கட்டிக் காத்த தமிழர்களின் சைவமும், மாலியமும் காக்கப்பட வேண்டும், அத்துடன் தமிழாக்கப்பட வேண்டும். இது தான் எனது பதிவுகளினதும், பதில்களினதும் அடிப்படை. இதற்குப் பின்பும் என்னுடைய தமிழ்ப்பற்று போலியானது என்று யாரும் கருதினால் அது அவர்களின் பிரச்சனை, அதற்காக நான் கவலைப்படப் போவதில்லை. 🙂

      • viyasan,

        [1]உலக அளவில் மொழி சிறுபன்மையீனருக்கு உள்ள உரிமைகள் கூட உமக்கு தெரியவில்லை. அவர்கள் அவர் மொழீயீல் கல்வி கற்பது ,வீட்டில் தாய் மொழியில் பேசுவது எல்லாம் அவர்கள் உரிமை.

        [2]ஆனால் தமிழகத்தீன் சமஸ்கிருத மொழி போசும் சிறுபான்மை மக்களான பார்பனர்கலுக்காக சமஸ்கிருத மொழி வழி பள்ளிகூடங்கள் உள்ளனவா ? இல்லையே ஏன் ? சமஸ்கிருத மொழியை தாய் மொழியாக கொண்ட பார்பனர்கள் அம் மொழியை கோவில் கருவறையில் மணி ஆட்டியே அழீக்க உறுதி கொண்டது உள்ள போது; தம் வீடுகளில் பயன் படுத்தாத போது; சமஸ்கிருத மொழியில் கல்வி கற்காத போது ; சமஸ்கிருத மொழி தானே அழீயும் நிலை அல்லவா ஏற்பட்டு உள்ளது ! ஒரு மொழியீன் அழிவில் வியாசன் போல இன்பம் காணும் மன நிலை தமிழர்க்கு இல்லை!

        [3]ஆமாம் வியாசன் ,தமிழ் நாட்டில் பல தலைமுறைகளாக வாழும் மொழி சிறுபான்மை மக்களை [தெலுங்கு,கன்னடம்,மலையாளம்] தமிழர்களாக நீங்கள் ஏற்காதபோது , பார்பனர்களை மட்டும் தமிழ் பிராமணர்கள் என்று அழைக்கும் காரணம் என்ன வியாசன் ? தமிழ் நாடு வாழ் பார்பனர்கள் தமிழ் உடன் சம்ஸ்கிருத வார்த்தைகளை இணைத்து பேசி புது மொழியை உருவாக நினைக்கும் கயமை தனத்துக்கு வியாசன் உடன் போவதால் தானே தமிழ் நாடு வாழ் பார்பனர்களை மட்டும் தமிழர்கள் என்று அழைக்க முடிகின்றது ??!

        [4]வியாசன் பிற நாடுகளில் வாழும் தமிழர்கள் ,ஈழத்தமிழர்கள் வீடுகளில் தம் தாய் மொழியை பேசுவது இல்லையா ? பேசுவது தவறா ?

        //தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கூட விட மறுக்கும் மலையாளிகளும், கன்னடர்களும், ஏனையோரும் அவர்கள் பல தலைமுறைகள் தமிழ்நாட்டில் வாழ்ந்தும், வீட்டில் தமது மொழியையே இன்றும் பேசினாலும் அவர்கள் தமிழர்கள், ஆனால் வீட்டிலும் வெளியிலும் தமிழை மட்டும் பேசி, எங்கிருந்தாலும் தமது குழந்தைகளுக்குத் தமிழையும் கற்பிக்கும் தமிழ்ப் பிராமணர்கள் தமிழர்கள் அல்ல எனும் திராவிடமாயையிலும் எனக்கு நம்பிக்கையில்லை.//

        • பார்பன எழுத்தாளர் கு.ப.ரா வின் தமிழ் + சம்ஸ்கிருத கலப்புக்கு உதாரணம் :

          [1]பங்குனி மாஸத்து வெய்யில் சுள்ளென்று அடித்தது. தலை வெடித்துப்போகும் போன்ற தாபம். உச்சி கால வேட்கை மிகுதியால் உலகமே மயங்கியிருந்தது. காக்கை கூட வாயைத்திறந்துகொண்டு மௌனமாக உட்கார்ந்திருந்தன. நாய்கள் மட்டும் எச்சில் இலைகளுக்காக பிரமாதமாக ரகளை செய்துகொண்டிருந்தன. பிராமணர்கள் துடித்துக்கொண்டு நடந்துவந்து சோ்ந்தார்கள்

          புரோஹிதர் கண்ணை மூடிக்கொண்டு மந்திரங்களை அர்த்தமில்லாமல் ஓட்டினார். “பிராசீநவிதி“kupara4 “பவித்ரம் த்ருத்வா“ என்பவைகளையும் மந்திரத்துடன் சேர்த்து ஒரு ராகத்தில் பாடிக்கொண்டே போனார். பிராமணர்களுக்கு வஸ்திரம் கும்பம் தட்சிணை இவைகள் கொடுக்கப்பட்டு சாப்பிட உட்கார்ந்தார்கள்.

          [2]“நீங்கள் சும்மா இருங்கள் ஸார்! நீங்கள் தாக்‌ஷிண்ணியப்படுகிறீர்கள், நான் எல்லாம் ஏற்பாடு செய்து விடுகிறேன். மேலும் பாருங்கள். ஊரோடு ஒத்து வாழ வேண்டும். ஊரில் ஏற்பட்ட குத்தகை வர வேண்டாமோ?” நீங்கள் இப்படிவிட்டால் குடிப்பிரியம் கெட்டுப்போகும்.

          ### வியாசன் , தமிழ் நாட்டு பார்பனர்கள் முயன்ற தமிழ் + சம்ஸ்கிருத கலப்பு மொழி நடை காரணமாக தான் அவர்களை தமிழர் என்று கூறுகீன்றாரா ????

  19. அய்யா அஜாதசத்ரு,

    நன்றி எதற்கு அய்யா ?

    சரியான அறிவியல் பூர்வமான கருத்துகளை அளிக்க வேண்டியது தமிழர்களாகிய நம் கடமை என்று மட்டுமே நான் உணருகின்றேன்.

    ///பல உபயோகமான கருத்துக்களையளிக்கும் சரவணநுக்கு நன்றி!//

  20. //தலைப்பு தான் உங்களுக்கு பிரச்சினையா … கட்டுரையின் பேசுபொருள் பற்றி உங்களுக்கு கருத்தேதுமில்லையா?//

    கட்டுரையின் நோக்கம் கங்கை சுத்தம் செய்வது பற்றி இல்லை – இந்து மதக் கருத்துக்களை வெறுக்க வேண்டும் என்பதுதான். பரவாயில்லை இது போன்ற கருத்துக்களைப் படித்தாவது கங்கையை மாசு படுத்துபவர்களுக்கு புத்தி வரட்டும். அதுவும் இறந்த உடல்களை நதியில் மிதக்கவிடுவது என்பது மிகவும் அருவருக்கத் தக்க செயல். ( இந்த செயலை நிறுத்த முடியும் என்றால் அது BJP யால்தான் முடியும் )

    ஆனால் கட்டுரைத் தலைப்பு கண்டிப்பாக பிரச்சினை நண்பரே. பின்னூட்டத்தில் ஒரே ஒருவரைத் தவிர இது பற்றி யாரும் பேசக் காணோம். மிகவும் தெளிவாகப் பேசும் நண்பர் சரவணன் கூட இதை சொல்லவில்லை.

    யாராவது உங்களிடம் வந்து சொன்னார்களா ISI தான் காரணம் என்று ? அல்லது நமது நாட்டை துண்டாடும் எண்ணத்துடன்தான் ISI செயல் படுகிறது என்பதை நீங்கள் மறுக்கிறீர்களா ? இந்து மதத்தை தாரளமாக வெறுத்து எழுதித் த்கல்லுங்கள் – அதனால் அது ஒன்றும் அழிந்து போய் விடப்போவதில்லை. ஆனால் இந்த மாதிரி தலைப்புகள் அபாயகரமானவை. இறையாண்மை என்று சொல்லாடலை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

    • இரங்கன்,

      [1]உங்கள் கேள்விக்கு உங்களீன் அடுத்த பத்தியிலேயே பதில் இருக்கு திரு இரங்கன்.

      [2]நம் நாட்டு பிரச்சனைக்கு எல்லாம் பாக்கிஸ்தானை கைகாட்டும் பிஜேபி/இரங்கன், “கங்கா தேவி” அசுத்தம் ஆனதற்கு காரணம் ஹிந்து மத முட்டாள் தனமான செயல்பாடுகளும் ,மூட நம்பிகைகளும் , தொழில்துறை வெளியீடும் சுத்திகரிக்கபடாத இரசாயன கழீவுகளும் மட்டும் தான் காரணம் என்பதை உணருமா/உணருவாரா ?

      //ஆனால் கட்டுரைத் தலைப்பு கண்டிப்பாக பிரச்சினை நண்பரே. பின்னூட்டத்தில் ஒரே ஒருவரைத் தவிர இது பற்றி யாரும் பேசக் காணோம். மிகவும் தெளிவாகப் பேசும் நண்பர் சரவணன் கூட இதை சொல்லவில்லை.//

      • கங்கை மாசு பட அதன் கரையில் அமைந்துள்ள எண்ணற்ற தோல் பதனிடும் தொழிற்சாலைகளும் காரணம். அவைகளை யார் நடத்துகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

        இதை மனதில் வைத்து ஒருவேளை வினவு இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் !!

        • CAUSES OF POLLUTION IN GANGA:

          [1]Human waste:

          Patna and Varanasi cities are more responsible to water pollution in Ganga and 80 % sewage wastes are responsible to water pollution of Ganga

          [2]Industrial waste:

          Countless industries lies on the bank of the Ganga river from Uttrakhand to West Bengal like chemical plants, textile mills, paper mills, fertilizer plants and hospitals waste. These industries are 20 % responsible to water pollution and run off solid waste and liquid waste in the Ganga river.

          [3]Religious factor:

          Religious factor Festivals are very important and heartiest to every person of India. During festival seasons a lot of peoples come to Ganga Snans to cleanse themselves. After death of the people dump their asthia in Ganga river it is a tradition of India because they think that Ganga gives mukti from the human world. Khumbha Mela is a very big festival of the world and billion peoples come to Ganga Snans at Allahabad, Hard
          war in India. They through some materials like food, waste or leaves in the Ganges
          for spiritualistic reasons.

          Report from:
          http://www.ijsrp.org/research-paper-0413/ijsrp-p1634.pdf

        • மணவை சிவா,

          இந்தியாவில் செயல் பட்டு வந்த குரோமியம் மூலம் தோல் பதனிடும் தொழிற்சாலைகளை [ chromium Based Tanning Industry] எல்லாம் மூடும்படி கோர்ட் உத்தரவு இட்டு நீங்கள் நீனைக்கும் “பாகிஸ்தான் சார்பு முதலாளிகளை” எல்லாம் Sep 30 2011 அன்று முதல் முடக்கி உள்ளது

          மணவை சிவா, இன்றும் கங்கை மாசு பட யார் காரணம் ?பாகிஸ்தானா, பார்ப்பனியமா ?

          கங்கை கரையில் அமைந்துள்ள தோல் பதனிடும் தொழிற்சாலை[Tanning Industry] பற்றீய சிறு குறிப்பு :

          HC orders shutdown of Kanpur tanneries for ‘polluting’ Ganga:
          The Allahabad High Court on Friday Sep 30 2011 directed that chromium-based tanneries in Kanpur be closed as they contributed to pollution in the river Ganga in an unprecedented manner. The court was informed the current chromium level in the Ganga water was well over 100 times the permissible limit. There are nearly 100 such listed tanneries operating in Kanpur.

          http://archive.indianexpress.com/news/hc-orders-shutdown-of-kanpur-tanneries-for–polluting–ganga/854272/

  21. //வியாசன் ,இந்த அறிவியல் ஆய்வை செய்தவர் கூட ஸ்வாமி ஓம்கார் என்ற பார்பனர் கிடையாது ,ஆனா காசி,மணிகர்னிகா சுடுகாட்டு வெட்டியார் தானுங்க//

    சரவணன் – என்ன சொல்ல வருகிறீர்கள் ? சுவாமி ஓம்கார் ஒரு ஆர்ப்பட்டமில்லாத ஆன்மிகவாதி. அவர் ஜாதி மதங்களுக்கு அப்பால் இருந்து கொண்டு ஆன்மிகத்தை வளர்ப்பதை மிக அருமையாகச் செய்து கொண்டு வருகின்றவர். அவரை ஏன் வம்புக்கு இழுக்கின்றீர்கள் ?

    • இரங்கன்,

      [1]அறிவியலுக்கு முரணாக முட்டாள் தனமாக பேசாதிங்க என்று !

      [2]மேலும் புரிய வேண்டும் என்றால் சுவாமி ஓம்கார் எப்படி அறிவியலுக்கு முரணாக பேசுகின்றார் என்று என் பின்னுட்டம் 13.1ல் கூறிஉள்ளேன். படிக்கவும் இரங்கன் !!

      இரங்கன்: //சரவணன் – என்ன சொல்ல வருகிறீர்கள் ?//

  22. பா.ஜ.க அரசின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தும் சிறந்த படைப்பு.

    “புனிதம் மதத்தோடு தொடர்புடையது. இந்து – இஸ்லாம் – கிருஸ்துவம் உள்ளிட்ட அனைத்து மதங்களுக்கும் புனிதம் பொருந்தும் என்றாலும். இங்கே கங்கை இந்து மதத்தின் புனிதமாக கருதப்படுகிறது. மினரல் வாட்டரில் நீங்கள் முங்கி எழுந்தாலும் அது புனித நீராடல் ஆகிவிடாது. ஆனால் கூவத்தைவிடக் கேவலமான நிலையில் கங்கை இருந்தாலும் அந்தக் கங்கையில் முங்கி எழுந்தால் அது புனித நீராடலாகிவிடும். புனிதமே இங்குப் பிரதானமானது; காக்கப்பட வேண்டியது. அதனால்தான் எச்சில் துப்பினால் கங்கையின் புனிதம் கெட்டவிடும் என்பதால் அபராதம் – சிறை பற்றி பேசுகிறது அரசு.”

    எச்சிலால் கங்கையை நிரப்புவோம்!
    http://hooraan.blogspot.in/2014/06/blog-post_14.html

  23. அது செரி!!நம்ம ஊரில் அடையார், கூவம் நதிகள் ஏன் அழுக்கு? அதுவும் பார்பனீயமா?

    • அது செரி!அடையார், கூவம் ஆறுகளை எல்லாம் விட்டு விட்டு “கங்கா தேவி” யை மட்டும் சுத்தம் செய்ய மோடி காவி படையுடன் புறப்பதுவது ஏன் ?

    • அது செரி வேணுகோபால் ,

      நதிளை தூய்மை செய்வது என்றால் மோடி நம்ம ஊரில் அடையார், கூவம் ஆறுகளில் இருந்து தொடங்கலாமே! அதை விட்டு விட்டு பார்பன ஹிந்து மத முட்டாள் தனமான செயல்பாடுகலாலும் ,மூட நம்பிகைகளாலும் மாசு அடைந்த “கங்கா தேவி”யை தூய்மை செய்ய காவி படை மோடி தலைமையில் செல்ல காரணம் என்ன ?

  24. இரங்கன்,

    [1]என்னது மானம்,வெட்கம் அற்ற இந்திய அரசுக்கு இறையாண்மை என்று ஒன்று இருக்கிறதா ?இந்தியா வின் இறையாண்மை,மற்றும் பாதுகாப்பை அமெரிக்காவிடமும் ,ருஷ்யவிடமும் அடமானம் வைக்கும் அரசு அல்லவா வாஜிபாய்-பிஜேபி ,மன்மோகன்-காங்கிரஸ் ,மோடி-பிஜேபி அரசுகள் !

    அட்மிரல் கோர்ஸ்கோவ் [ஐ.என்.எஸ்., விக்கிரமாதித்யா] கதை:
    —————————————————————————————————————————————————————

    [2]அட்மிரல் கோர்ஸ்கோவ் என்ற ஒரு போர் விமானம் தாங்கீய கப்பல் ருசியாவில் வடிவமைக்கபட்டு 1987முதல் 1996 வரை ருசிய நாட்டு கடல் படையீல் இருந்தது. 1994 ஆம் ஆண்டில், அதன் ஒரு கொதிகலன் அறையில் ஏற்பட்ட வெடிப்பை தொடர்ந்து, கப்பலை பழுது செய்ய ஒரு ஆண்டு ஆனது.1996 ஆம் ஆண்டு அதனை விற்பனை செய்ய ருசிய அரசு விளம்பரம் செய்தது.

    [3]20 ஜனவரி 2004 அன்று, ரஷ்யா அட்மிரல் கோர்ஷ்கோவ் இந்தியாவுக்கு[வாஜிபாய்-பிஜேபி அரசு] US$ 2.3 billion க்கு விற்க ஒத்துக்கொண்டது.கப்பலில் பல சீரமைப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, 2013 நவம்பரில்[மன்மோகன்-காங்கிரஸ் அரசு], இந்திய கடற்படையிடம், கப்பல் ஒப்படைக்கப்பட்டது.முந்தைய ராணுவ அமைச்சர், ஏ.கே.அந்தோணியால் துவக்கி வைக்கப்பட்ட இந்தக் கப்பலுக்கு, ‘ஐ.என்.எஸ்., விக்கிரமாதித்யா’ என, பெயர் சூட்டப்பட்டது.

    [4]இந்த நிலையில் கோவாவில் 14/06/2014 அன்று நடைபெற்ற பிரமாண்ட வண்ணமிகு விழாவில், ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டு உள்ளது . இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி[மோடி-பிஜேபி அரசு] கலந்து கொண்டு, கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்!
    ——-கதை முற்றும்———–.

    [4]ஏன் இரங்கன் நாட்டின் பாதுகாப்பு என்ன second hand சமாச்சாரமா ?ருசிய நாட்டு கடல் படையீல் 1987முதல் 1996 வரை [வெறும் 9 ஆண்டுகள் மட்டும்] பயன் படுத்தபட்ட போர் கப்பலை ரஷ்யா , இந்தியாவின் தலையில் செகண்ட் ஹண்ட் ஆக கட்டுவதன் நோக்கம் என்ன ? ரஷ்யாவுக்கு அது இனி பயன் அற்றது எனவே ஏமாந்தவன் தலையில் கட்ட வேண்டும் என்பது தானே ?

    [3]நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் கூட சமரசம் செய்து கொண்டு கழிசடை போர் கப்பலை[Soviet aircraft carrier Admiral Gorshkov] வாங்கும் இந்திய அரசுக்கு இறையாண்மை என்பது எங்கு இருக்கிறது? ஆம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மட்டுமே இறையாண்மை என்ற சொல்லாடல் இருக்கிறது!

    Note:
    ———

    ### The Indian Constitution declares India to be a sovereign, socialist,secular, democratic republic, assuring its citizens of justice, equality, and liberty, and endeavors to promote fraternity among them.

    sovereign->இறையாண்மை
    socialist->சோசலிச
    secular->மதச்சார்பற்ற
    democratic republic->ஜனநாயக குடியரசு
    fraternity->சகோதரத்துவம்

    //ஆனால் இந்த மாதிரி தலைப்புகள் அபாயகரமானவை. இறையாண்மை என்று சொல்லாடலை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.//

    • இந்தியா வின் இறையாண்மை, பாதுகாப்பை அடமானம் வைக்கும் இந்திய அரசு:
      ——————————————————————————————————————–

      இந்த அரதப் பழசான கப்பலுக்கு[அட்மிரல் கோர்ஸ்கோவ்] இவ்வளவு விலை தருவது வேஸ்ட் என்கிறது ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம். இது குறித்து மத்திய அரசின் தணிக்கை அதிகாரி (Comptroller and Auditor General of India-CAG) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதிய கப்பலே இந்த விலைக்குத் தயாராக இருக்கும்போது ஏன் இவ்வளவு விலையை கொடுத்து இதை வாங்க வேண்டும் என்று தெரியவில்லை. மேலும் இந்தக் கப்பலின் ஆயுட்காலம் முடிந்துபோய் அது புதுப்பிக்கப்படுகிறது. இந்தக் கப்பலை 2007 முதல் 2011ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பயன்படுத்தவே இந்திய கடற்படை திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்தக் கப்பலின் டிரையல் முடியவே 2012ம் ஆகிவிடும். இதனால் இந்திய கடற்படைக்கும் நீண்ட நாட்களுக்கு இது பயனுடையதாக இருக்காது. மேலும் இந்தக் கப்பலில் ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களும் இல்லை. இது தொடர்பான முழு விசாரணைக்கு எங்களுக்கு போதிய ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. 65 சதவீதம் அளவுக்கு பணத்தை இந்தியா கொடுத்துவிட்டாலும் 35 சதவீதப் பணிகளே முடிவடைந்துள்ளன என்று கூறியுள்ளார் ஆடிட்டர் ஜெனரல். இந்தக் கப்பல் வந்து சேர தாமதமாவவை லேட்டாகவே உணர்ந்த கடற்படை இப்போது ஐஎன்எஸ் விராட் கப்பலை கொச்சி யார்டில் வைத்து மேம்படுத்திக் கொண்டுள்ளது. இன்னும் இந்தக் கப்பலே தயாராகாத நிலையில் அதற்கு ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ என்று பெயரை மட்டும் முதலில் வைத்துவிட்டது இந்திய கடற்படை. மறுபடியும் ரஷ்யா முருங்கை மரத்தில் ஏறாமல் இருந்தால் சரி..!

      Published: Saturday, July 25, 2009,

      Thanks to tamil.oneindia.in

    • இரங்கன்,

      கழிசடை போர் கப்பலை[Soviet aircraft carrier Admiral Gorshkov] வாங்க இவ் விலை ஏற்றம் ஏன் இரங்கன் ?
      ———————————————————————————————————————————————————————————

      [1]ரூ. 5,000 கோடிக்கு இந்தக் கப்பலை இந்தியாவுக்குத் தரவும், அதை ரிப்பேர் செய்வது, புதிய ஆயுதங்களைப் பொறுத்துவது ஆகிய பணிகளை ரஷ்யா இலவசமாக செய்து தரும் என்றும் கூறப்பட்டது.

      [2]ஆனால், திடீரென ரஷ்யா கப்பலுக்கு கூடுதல் விலையைக் கோரியது. இதை இந்தியா ஏற்றது. மீண்டும் மீண்டும் விலையை ஏற்றிக் கொண்டே போனது ரஷ்யா. இந்த விமானம் தாங்கிக் கப்பலில் செயல்படும் விமானங்களின் விலையையும் கூட்டியது.

      [3]இப்படியாக கடந்த 4 வருடங்களில விலையை ஏற்றி ஏற்றி இப்போது இதன் விலை இரண்டு மடங்கை விட அதிகமாகிவிட்டது. அதாவது, இப்போது இந்தக் கப்பலை 1.82 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கவுள்ளது இந்தியா.

      [4]இருதியில் 2013 நவம்பரில்[மன்மோகன்-காங்கிரஸ் அரசு], இந்திய கடற்படையிடம், கப்பல் US$ 2.3 billion [Rs 15,000 கோடிகள்]விலைக்கு ஒப்படைக்கப்பட்டது.

      Note:
      ——-
      ####கழிசடை போர் கப்பலை[Soviet aircraft carrier Admiral Gorshkov] வாங்க இவ் விலை ஏற்றம் ஏன் இரங்கன் ?

      ####இப்போது கூறுங்கள் இரங்கன் ,இறையாண்மை என்று சொல்லாடல் காகிதத்தில்/டிஜிட்டல் மீடியாவில் உள்ள இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மட்டுமே இருக்கிறது அல்லவா ????!

      //20 ஜனவரி 2004 அன்று, ரஷ்யா அட்மிரல் கோர்ஷ்கோவ் இந்தியாவுக்கு[வாஜிபாய்-பிஜேபி அரசு] US$ 2.3 billion க்கு விற்க ஒத்துக்கொண்டது.//

  25. வேணுகோபால் .. நீங்கள் இப்படி கேட்டிருக்கலாம். நம்ம ஊரு சாக்கடை எல்லாம் ஏன் அழுக்காக ஓடுகின்றன இதுக்கும் பார்பாநியம்தான் காரணமா என்று ???? எல்லா பெரிய நகரங்களிலும் சாக்கடைகள் இருக்கத்தான் செய்கின்றன. இப்போ அதுவா கேள்வி. ஒருத்தர் பாயுங்க வீட்ல கக்கூசே இல்லை என்று சம்பந்தம் இல்லாமல் பொய் சொல்லி பாயுங்கள வம்புக்கிழுக்கிறார்.
    எப்படி எல்லாம் திசை திருப்புகிறார்கள் கட்டுரையின் மைய்யகருவைவிட்டு.

  26. சரவணன் – இரங்கன் அல்ல – அரங்கன் என்று கூற வேண்டும் ( உதாரணம் இராம அரங்கண்ணல் ) பரவாஇல்லை உங்கள் இஷ்டம்.

    என் பதில் 21 ஐ திரும்பப் படிக்கவும்.

    //நம் நாட்டு பிரச்சனைக்கு எல்லாம் பாக்கிஸ்தானை கைகாட்டும் பிஜேபி/இரங்கன் //

    அதிர்கிறேன் – தீவிரவாதப் பிரச்சினைகளுக்கு பாகிஸ்தான் பொறுப்பு இல்லை என்கிறீர்களா ? நம் ராணுவ வீரனின் தலையை வெட்டி அனுப்பினார்களே அது சரி என்கிறீர்களா ? நம்முடைய பொருளாதார சிக்கல்களுக்கும் கங்கை மாசு படுத்தலுக்கும் எப்போது யார் பாகிஸ்தானை குறை சொன்னது.? நம்மை நிலை குலையச் செய்ய தீவிரமாக முனையும் நாடு பாகிஸ்தான் – அதில் முக்கியமாக அங்குள்ள தீவிரவாதிகள். உதாரணத்துக்கு – கராச்சி விமான நிலைய தாக்குதலுக்கு நாம் காரணம் என்று அங்குள்ள வெறியன் ஒருவன் கூறுகிறான் – அதை ஒத்துகொள்வீர்களா ?ஹிந்து மதம் – பார்பனீயம் – எப்படி வேண்டுமானாலும் திட்டுங்கள் – அது உங்கள் உரிமை. – அதற்காக பாகிஸ்தானுக்கு ஜால்ரா போடாதிர்கள்

  27. பிழைக்கு மன்னிக்கவும் அரங்கன்!

    //இரங்கன் அல்ல – அரங்கன் என்று கூற வேண்டும்

    [1]1970-71,இந்திய – பாக்கிஸ்தான் போர் நடந்த போது இந்திய படை முன்னேறுவதற்கு முன்பே ,நம் உளவுப்படை [RAW -Research And Analysis Wing] எதிரி நாட்டுக்குள் [பாக்கிஸ்தானுக்குள்] ஊடுருவி சென்று பாக்கிஸ்தான் நாட்டின் கட்டுமானங்களை சீதைத்த வரலாறு உங்களுக்கு மறந்தது ஏன் அரங்கன்?

    [2]பாக்கிஸ்தான் தீவீ ரவாதிகள் மூலம் தாக்குதல் நடத்தும் போது அதை எதீர் கொண்டு பதில் தாக்குதல் நடத்த இயலாத அளவுக்கா இந்தியா சகிப்பு தன்மை உள்ள நாடு ?

    [3]பாக்கிஸ்தனுக்கு ஜால்ரா போடும் விடயத்தை திரு மோடி அவர்களீடம் கூறுங்கள் ,கேளுங்கள்? பாக்கிஸ்தனுடன் ராஜாங்க உறவுகளை மோன்படுத்துவதாக கூறிக்கொண்டு நம் ராணுவ வீரனின் தலையை வெட்டி அனுப்பிய பாக்கிஸ்தன் நாட்டை சேர்ந்த பிரதமரை பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்ததும் ,தாய்க்கு பாக்கிஸ்தன் பிரதமரிடம் இருந்து பரிசு பொருட்களை பெற்ற கயமைதனத்தை செய்ததும் நான் இல்லை அரங்கன்!நான் அவர் இல்லை அரங்கன்!

    [4]1970-71,இந்திய – பாக்கிஸ்தான் போரில் இந்தியாவின் வெற்றியை சுவாசித்துகொண்டு,கிழக்கு வங்கத்தின் சுதந்திரத்தை நேசித்துக்கொண்டு 6th September 1971 அன்று பிறந்தவன் நான் என்பதை எப்போதும் பொருமையுடன் கூறுவேன், திரு அரங்கன்!

    //அதிர்கிறேன் – தீவிரவாதப் பிரச்சினைகளுக்கு பாகிஸ்தான் பொறுப்பு இல்லை என்கிறீர்களா ? நம் ராணுவ வீரனின் தலையை வெட்டி அனுப்பினார்களே அது சரி என்கிறீர்களா ? நம்முடைய பொருளாதார சிக்கல்களுக்கும் கங்கை மாசு படுத்தலுக்கும் எப்போது யார் பாகிஸ்தானை குறை சொன்னது.? நம்மை நிலை குலையச் செய்ய தீவிரமாக முனையும் நாடு பாகிஸ்தான் – அதில் முக்கியமாக அங்குள்ள தீவிரவாதிகள். உதாரணத்துக்கு – கராச்சி விமான நிலைய தாக்குதலுக்கு நாம் காரணம் என்று அங்குள்ள வெறியன் ஒருவன் கூறுகிறான் – அதை ஒத்துகொள்வீர்களா ?ஹிந்து மதம் – பார்பனீயம் – எப்படி வேண்டுமானாலும் திட்டுங்கள் – அது உங்கள் உரிமை. – அதற்காக பாகிஸ்தானுக்கு ஜால்ரா போடாதிர்கள்//

  28. சரவணன்
    ( அரங்கன் என்று என்னை அழையுங்கள் என்று கோரவில்லை – அது திருவரங்கனுக்கு மட்டும் உரித்தான் பெயர் என்பது எனது நபிக்கை )

    ரஷ்யாஉடனான உறவு இந்திரா காந்தி செய்த தவறு – ஆனால் அன்று நீங்கள் சொன்ன 1971 இல் அமெரிக்கா தனது கப்பல் படையை காட்டி நம்மை மிரட்டியது. அதனால் வேறு வழி இன்றி இந்திரா காந்தி ரஷ்ய உதவி கோரப் பொய் அது இன்று வரை பொரளாதார அடிப்படையில் நடந்து கொண்டு வருகின்றது. நீங்கள் சொல்கின்ற எதையும் மறுக்க வில்லை – அதற்காக கங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் கட்டுரை ஆசிரயர் முடிச்சிப் போடவேண்டிய அவசியம் இல்லை.

    RAW – என்ன சொல்கிறீகள் – உளவுத்துறை பாகிஸ்தான் மட்டும் தான் வைத்துக் கொள்ள வேண்டுமா ? அவர்கள் மதத்தின் பெயரால் என்ன வேண்டுமானாலும் நமக்குத் தொல்லை கொடுப்பார்கள் – ஆனால் நாம் ஒன்றும் செய்யக் கூடாதா ? மோடி வந்தால் உடனே பாகிஸ்தான் மேல் போர் தொடுப்பார் அதனால் வோட்டு போடாதீர்கள் என்று சென்ற மாதம் வரை பிரச்சாரம். இன்று நட்பு காட்டலாம் என் மோடி நினைத்தால் – மோடி பயந்து விட்டார் என் கேலி.

    1971 – பங்களதேஷ் உருவான வெற்றியை நாங்கள் எங்கள் கல்லுரி வகுப்பில் கொண்டாடும் பொது எங்களது
    வகுப்பாசிரியர் கூறியது – ” ரொம்ப சந்தோஷப் படாதீங்க – எதிர் காலத்தில் இதே பங்களா தேஷ் நமக்குத் தொல்லை தரும் நாடாக மாறும் ” என்றார். – என்னதான் நட்பு பார்த்தாலும் இந்த இரு நாடுகளும் நம்மை நேசத்துடன் பார்ப்பதில்லை. அதை மறந்து விடாதீர்கள்.

    • திரு அரங்கன்,
      We are not both disagree with the activities of RAW!

      My comment about RAW:
      —————————————-

      1]1970-71,இந்திய – பாக்கிஸ்தான் போர் நடந்த போது இந்திய படை முன்னேறுவதற்கு முன்பே ,நம் உளவுப்படை [RAW -Research And Analysis Wing] எதிரி நாட்டுக்குள் [பாக்கிஸ்தானுக்குள்] ஊடுருவி சென்று பாக்கிஸ்தான் நாட்டின் கட்டுமானங்களை சீதைத்த வரலாறு உங்களுக்கு மறந்தது ஏன் அரங்கன்?
      [2]பாக்கிஸ்தான் தீவீ ரவாதிகள் மூலம் தாக்குதல் நடத்தும் போது அதை எதீர் கொண்டு பதில் தாக்குதல் நடத்த இயலாத அளவுக்கா இந்தியா சகிப்பு தன்மை உள்ள நாடு ?

      Your Comment about RAW:
      ——————————————
      RAW – என்ன சொல்கிறீகள் – உளவுத்துறை பாகிஸ்தான் மட்டும் தான் வைத்துக் கொள்ள வேண்டுமா ? அவர்கள் மதத்தின் பெயரால் என்ன வேண்டுமானாலும் நமக்குத் தொல்லை கொடுப்பார்கள் – ஆனால் நாம் ஒன்றும் செய்யக் கூடாதா ?

    • திரு அரங்கன்,

      [1]சரவணனை பார்த்து ஆக்ரோசமாக பாகிஸ்தானுக்கு ஜால்ரா போடாதிர்கள் என்று பொய்யாக அறிவுரை கூறும் திருவரங்கனுடைய அதரங்கள்[உதடு] ,பாக்கிஸ்தனுடன் ராஜாங்க உறவுகளை மோன்படுத்துவதாக கூறிக்கொண்டு நம் ராணுவ வீரனின் தலையை வெட்டி அனுப்பிய பாக்கிஸ்தன் நாட்டை சேர்ந்த பிரதமரை பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்ததும் ,தாய்க்கு பாக்கிஸ்தன் பிரதமரிடம் இருந்து பரிசு பொருட்களை பெற்ற கயமைதனத்தை செய்யும் போது மட்டும் அவருக்கு [மோடிக்கு] ஆதரவாக தேன் ஒழுக பேசுவது ஏன் அய்யா அரங்கன்?

      [2]நீங்கள் கூறும் அறிவுரைகள் , எச்சரிக்கைகள் ……

      [i ]நம் ராணுவ வீரனின் தலையை வெட்டி அனுப்பிய பாக்கிஸ்தன்
      [ii ]நம்மை நிலை குலையச் செய்ய தீவிரமாக முனையும் நாடு பாகிஸ்தான்

      இவை எல்லாம் சரவணனுக்கு மட்டும் தானா ? மோடிக்கு கிடையாதா ?

      [3]பாக்கிஸ்தன் நாட்டை சேர்ந்த பிரதமரை பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்த ,தாய்க்கு பாக்கிஸ்தன் பிரதமரிடம் இருந்து பரிசு பொருட்களை பெற்ற மோடிக்கு வேண்டுமானால் போஸ்ட் கார்டு மூலம் அறிவுரை கூறுங்கள்; எமக்கு தேவை இல்லை அறிவுரை !

      [4]எம் எதிகள் யார் என்றாலும் [pak or US or srilanka ] ஒன்று போராடி வெல்வோம் அல்லது போராடி மடிவோம். எதிரியிடம் மண்டியீடும் ஈனத்தனம் என் தமிழ் இனத்துக்கு இல்லை !

      //மோடி வந்தால் உடனே பாகிஸ்தான் மேல் போர் தொடுப்பார் அதனால் வோட்டு போடாதீர்கள் என்று சென்ற மாதம் வரை பிரச்சாரம். இன்று நட்பு காட்டலாம் என் மோடி நினைத்தால் – மோடி பயந்து விட்டார் என் கேலி. //

    • திரு அரங்கன்,

      [1]இந்தியாவின் பாதுகாப்புத்துறை உத்தி [Defence strategy] என்ற அடிப்படையில் பார்த்தால் நீங்களும் ,உங்கள் பேராசிரியாரும் தவறாக கணிக்கின்றீர்கள்.

      [2]கிழக்கு வங்கம் விடுதல் பெற்றது மூலம் ஒரு நீண்ட கால பொது எதிரியை, பெரிய எதிரியை [pak ] இரண்டாக பிளந்து உள்ளேம். நீண்ட கால அல்லது குறிகிய கால அடிப்படையில் பார்த்தால் இந்தியாவுக்கு,அதன் பாதுகாப்புக்கு இது மிக்க சாதகமான அம்சம்

      [3]இந்தியாவுக்கு,அதன் பாதுகாப்புக்கு தேவை பட்டால் இப்போதைய பாக்கிஸ்தானை மேலும் மூன்று நாடுகளாக பீரிக்க முயலுவது கூட தவறு இல்லை. தொலை நோக்கு உடன் சிந்தியுங்கள் அய்யா !

      [4]எம் தந்தை நாட்டை காக்க நான் எதுவும் செய்வேன். நீங்களும் ,மோடியும் தயாரா ?

      //1971 – பங்களதேஷ் உருவான வெற்றியை நாங்கள் எங்கள் கல்லுரி வகுப்பில் கொண்டாடும் பொது எங்களது வகுப்பாசிரியர் கூறியது – ” ரொம்ப சந்தோஷப் படாதீங்க – எதிர் காலத்தில் இதே பங்களா தேஷ் நமக்குத் தொல்லை தரும் நாடாக மாறும் ” என்றார். – என்னதான் நட்பு பார்த்தாலும் இந்த இரு நாடுகளும் நம்மை நேசத்துடன் பார்ப்பதில்லை. அதை மறந்து விடாதீர்கள்.//

    • திரு அரங்கன்,

      [1]இந்தியாவின் எல்லைகளில் மிக சிறீய ,பொருளாதார ,இராணுவ வலிமை அற்ற நாடுகள் [பூட்டான்,மியன்மார்,பங்கலாதேசம்,ஆப்கான், இரண்டாக பிரிக்க பட போகும் லங்கா(srilanka and EElam) , மூன்றாக பிரிக்க பட போகும் பாக் ] இருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கும் ,இறையாண்மைக்கும் நல்லது என்பது திருவரங்கனுக்கு தெரியாமைக்கு காரணம் என்ன ?

      [2]இச் சிறு நாடுகள் பொருளாதார ,இராணுவ விடயங்களில் இந்தியாவை சார்ந்து இருக்க தானே வேண்டும். அவை ஒரு வேலை வாலாட்டினால் வாலை ஓட்ட நறுக்குவது இந்தியாவுக்கு எளிது தானே ?

      //1971 – பங்களதேஷ் உருவான வெற்றியை நாங்கள் எங்கள் கல்லுரி வகுப்பில் கொண்டாடும் பொது எங்களது வகுப்பாசிரியர் கூறியது – ” ரொம்ப சந்தோஷப் படாதீங்க – எதிர் காலத்தில் இதே பங்களா தேஷ் நமக்குத் தொல்லை தரும் நாடாக மாறும் ” என்றார். – என்னதான் நட்பு பார்த்தாலும் இந்த இரு நாடுகளும் நம்மை நேசத்துடன் பார்ப்பதில்லை. அதை மறந்து விடாதீர்கள்.//

    • திரு அரங்கன்,

      சரவணன் , அல்லது வினவு எப்போதாவது மோடி ஆட்சிக்கு வந்தால் உடனே பாகிஸ்தான் மேல் போர் தொடுப்பார் அதனால் வோட்டு போடாதீர்கள் என்று கூறியதை நீங்கள் ஆதரத்துடன் காட்ட முடியுமா ?

      //மோடி வந்தால் உடனே பாகிஸ்தான் மேல் போர் தொடுப்பார் அதனால் வோட்டு போடாதீர்கள் என்று சென்ற மாதம் வரை பிரச்சாரம். இன்று நட்பு காட்டலாம் என் மோடி நினைத்தால் – மோடி பயந்து விட்டார் என் கேலி. //

    • நன்றி திரு அரங்கன் அய்யா .

      [1] 1971 ஆண்டு நீங்கள் கல்லூரி மாணவர் எனில் தற்போது உங்கள் வயது My age 43 + 20 = 63 இருக்கும்.

      [2]இவ் வயதிலும் கணினியில் அமர்ந்து நாட்டுக்காக வாதாடும் உங்கள் தேச பற்றுக்காக என் மனமார்ந்த நன்றிகளும் ,வணக்கங்களும்

    • திரு அரங்கன்,

      இந்தியாவின் உள் நாட்டு பாதுகாப்பு:
      —————————————————–

      [1]இவ்வளவு நேரம் இந்தியாவின் எல்லை பாதுகாப்புக்கும் ,இறையாண்மைக்கும் சாதகமான External Affairs மற்றும் Defense Strategies விடயங்கள் பற்றி விவாதித்து கொண்டு இருந்தோம்.

      [2] இவை எல்லாம் சாத்தியம் ஆவதற்கு உள் நாட்டு பாதுகாப்பு மற்றும் நாட்டு மக்களீடம் அமைதி ஆகியவை அவசியம் அல்லவா ?இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களீன் உரிமைகளையும் மதிக்கும் ,அனைத்து மொழிகளையும் சமமாக கருதும் ,இந்தியாவின் இயற்க்கை வளங்களை பாகுபாடு இன்றி பங்கீடு செய்து மக்களீன் வாழ்வு ஆதாரத்தை மேன்படுத்தும், நதி நீரை முறையாக பாகுபாடு இன்றி பங்கீடு செய்து கொடுக்கும் , பரந்து பட்ட இந்தியாவில் சிதறி கிடக்கும் [17.7 கோடி 14.6%] இஸ்லாமியர்களையும் தம் மக்களாக பாவிக்கும், இந்தியாவின் இயற்க்கை வளங்களை அந்நிய நாட்டுகளுக்கு தரைவார்க்காத இந்திய அரசு தான் நமக்கு தேவை !

      [2]காங்கிரஸ் கட்சியீன் புதீய பொருளாதார கொள்ளையோ , பிஜேபியீன் ஹிந்துத்துவ மத வாதமே நம் உள் நாட்டு பாதுகாப்பை வலுபடுத்துமா ? இயற்க்கை வளங்களை அந்நிய நாட்டுகளுக்கு தரைவார்ப்பது, நதி நீர் பங்கீடு, தேசிய இனங்களீன் உரிமை, ஆகிய விடயங்களில் இவர்கள் இருவரும் [காங்கிரஸ்,பிஜேபி ஆகியவை] எவ்வளவு பிற்போக்கு தன்மையுடன் உள்ளார்கள் என்று நாம் அனைவரும் அறிந்த ஒன்று தானே ?

  29. திரு அரங்கன்,சீனு,கற்றது கையளவு,

    [1]கங்கையை அசுத்தப்படுத்தியது பாகிஸ்தானா, பார்ப்பனியமா ? என்ற தலைப்பில் பாகிஸ்தானை சேர்த்தமைக்காக கோபப்பட்டு உரிமையுடன் கேள்வி கேட்க வேண்டியர்கள் பாகிஸ்தானியர்கள் தானே ? இந்தியர்கள் அல்லவே ?

    [2]வினவு எழுதீய இக் கட்டுரையீன் தலைப்பு Declarative [அறிவித்தலா ] அல்லது question [கேள்வியா ] ?

    [3]வினவு கட்டுரை தலைப்பு கேள்வி[question] எனில், பாகிஸ்தான் இல்லை கங்கையை அசுத்தப்படுத்தியது பார்ப்பனியம் தான் என்று பதில் கூறுங்கள்

    [4]வினவு கட்டுரை தலைப்பு Declarative[அறிவித்தல்] என்று நீங்கள் உணர்ந்தால் பாகிஸ்தானை கங்கையை அசுத்தப்படுத்தியதுக்கு குற்றம் கூறிய வினவை பாகிஸ்தான் நாட்டவர் தானே குறை கூற வேண்டும் ?

    [5] தேவையில்லாமல் பாகிஸ்தான் மீது உங்களுக்கு எல்லாம் ஏன் இந்த பாசம் !

    கற்றது கையளவு://தலைப்பில் பாகிஸ்தான் பெயர் உள்ளது. வினவுக்கு பாகிஸ்தான் மேல் அப்படி என்ன பாசமோ தெரியவில்லை, சமீப காலங்களில் தேவை இருக்கிறதோ இல்லையோ, பாகிஸ்தான் பெயரை வினவு உபயோகப்படுத்துகிறது.அவ்வளவு பாசம் இருந்தால் கொஞ்ச நாள் அங்கு சென்று இருந்து விட்டு வாருங்களே//
    senu://தலைப்பை கூட ஒழுங்கா வெக்கலியேங்கிறார்…சிம்பிள்.//
    rangan//அதற்காக கங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் கட்டுரை ஆசிரயர் முடிச்சிப் போடவேண்டிய அவசியம் இல்லை. //

    • ant,

      good points என்பது இருக்கட்டும் அன்ட் [ant ] ! ஆனா பாருங்க கேள்வி கேட்டு விட்டு ஒடி போன சூர புலிகளை[திரு அரங்கன்,சீனு,கற்றது கையளவு] காணவீல்லையே !

  30. திரு அரங்கன்,

    [1]கடந்த பத்து நாட்களாக ஈராக்கில் ஏற்பட்டு உள்ள உள்நாட்டு போரில் பாதிக்க பட்டு உள்ள 18 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை மீட்க மோடியீன் இந்திய அரசு என்ன செய்கின்றது ?

    [2]40 தொழிலாளர்கள் ISIS ஆல் கடத்தபட்டு உள்ள நீலையீல் வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டு உள்ள மோடியீன் இந்திய அரசின் செயல் திரனை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.

    [3] ஈராக்கில் உள்ள 18 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை மீட்க கிழக்கு வங்க மக்களை காத்த திரு இந்திரா காந்தி அம்மா மீண்டும் உயிர் பெற்று வரவேண்டுமா ?

    [4]இந்திய இறையாண்மை பற்றி பேசும் நீங்கள் இவ் விடயத்தில் அமைதி காப்பது ஏன் ?உங்கள் இந்திய இறையாண்மை எல்லாம் மலேசியா சென்று தொழில் ஒப்பந்த முறைகேடுகளில் கைது செய்ய பட்ட போலரிசிஸ் ஒன்ரை[Arun Jain Executive Chairman] காக்கவும் ,அமெரிக்க இந்திய தூதரகத்தி வேலையில் இருந்து விசா முறைகேடுகளில் ஈடுபட்ட தூதரக அதிகாரியை[தேவ்யானி கோப்ரகடே] காக்க மட்டும் தானா ????

    வெட்கமாக இல்லையா உங்களுக்கு ?

  31. திரு அரங்கன்,

    [1]உங்களுக்கும், மோடியீன் இந்திய அரசுக்கும் ஈராக்கில் சிக்கி தவிக்கும் 18 ஆயிரம் இந்திய தொழிலாளர்களும் இந்தியாவுக்கு டாலர் சம்பாரிக்கும் இயந்திரங்கள் மட்டும் தானா ? அவர்கள் சதையும் ,இரத்தமும் ஆனா உணர்வு உள்ள உயிர்கள் இல்லையா ?

Leave a Reply to திப்பு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க