privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஇஸ்லாத்தின் பெயரில் இன்னுமொரு அமெரிக்க கூலிப்படை!

இஸ்லாத்தின் பெயரில் இன்னுமொரு அமெரிக்க கூலிப்படை!

-

சன்னி மார்க்க ஐ.எஸ்.பயங்கரவாதிகள்: இஸ்லாத்தின் பெயரில் இன்னுமொரு அமெரிக்க கூலிப்படை!

துருக்கியில் அன்றைய ஒட்டோமான் பேரரசின் இஸ்லாமிய மதரீதியான கிலாஃபத் அரசாட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு, இப்போது மீண்டும் அத்தகைய கிலாஃபத் அரசாட்சி நிறுவப்பட்டுள்ளதாக “ஐ.எஸ்.” எனும் சன்னி மார்க்க இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்தினர் அண்மையில் அறிவித்துள்ளனர். இராக் மற்றும் சிரியாவில் தங்களது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை இணைத்துத் தனி நாடாக அறிவித்து, இதனை இஸ்லாமிய அரசு (கிலாஃபத்) என்று பிரகடனப்படுத்தியுள்ளனர். ஐ.எஸ். இயக்கத்தின் தலைவரான அபுபக்கர் அல் பாக்தாதி இப்புதிய அரசின் தலைவராக தன்னையே நியமித்துக் கொண்டு, இப்புதிய கிலாஃபத் அரசானது வடசிரியாவின் அலெப்போ நகரிலிருந்து இராக்கின் தியாலா மாகாணம் வரை பரவியிருக்கும் என்றும், உலகெங்குமுள்ள சன்னி மார்க்க முஸ்லிம்கள் இந்தப் புனித ஆட்சிக்கு ஆதரவளிக்குமாறும், இப்புனித நாட்டில் வந்து குடியேறுமாறும் அறைகூவல் விடுத்துள்ளார்.

ஐ.எஸ். பயங்கரவாதிகள்
தங்களது கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் ஷியா பிரிவு முஸ்லிம் ஒருவரின் கழுத்தையறுத்துப் படுகொலை செய்து, ஷியா முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை விடுத்து எக்காளமிடும் சன்னி மார்க்க ஐ.எஸ். பயங்கரவாதிகள்.

மேற்காசியாவில், குறிப்பாக இராக்கில் அதிருப்தியிலும் விரக்தியிலுமுள்ள சன்னி முஸ்லிம் மக்களை இந்த இயக்கத்தினர் தமக்கு ஆதரவாகக் கவர்ந்திழுப்பதில் கணிசமான வெற்றியைச் சாதித்துள்ளனர். இஸ்ரேலின் இனவெறி பயங்கரவாதத் தாக்குதலாலும், பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்கத் தாக்குதலாலும், இராக்கிலும் ஆப்கானிலும் நடந்துள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பாலும், இப்பிராந்திய மக்களிடம் நிலவும் ஆத்திரத்தையும் நம்பிக்கையின்மையையும் சாதகமாக்கிக் கொண்டு இந்த இயக்கத்தினர் அண்மைக்காலமாக பிரபலமடைந்து வருகின்றனர்.

இராக்கின் அமெரிக்க பொம்மை அரசப் படைகளுக்கு எதிராகவும், சிரிய அரசப் படைகளுக்கு எதிராகவும் நடத்திவரும் தாக்குதல்களையும், பிற சிறுபான்மை மத, இனக்குழுவினர் மீதான படுகொலைகளையும், அமெரிக்கப் பத்திரிகையாளரைப் பகிரங்கமாகக் கழுத்தறுத்துப் படுகொலை செய்துள்ளதையும் வீடியோ படம் எடுத்து இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் இவ்வியக்கத்தினர் பரப்பிவருகின்றனர். இவற்றின் மூலம், தங்களை உண்மையான இஸ்லாமிய விடுதலை இயக்கமாகச் சித்தரித்துக் கொண்டு தங்களை யாராலும் வெல்ல முடியாது என்ற பிரச்சாரத்துடன் இணையத்தின் மூலமாக சன்னி முஸ்லிம்களை இவ்வியக்கத்தினர் ஈர்க்கின்றனர்.

யேசிடி பழங்குடி மக்கள்
ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கொலைவெறி தாக்குதலிலிருந்து தப்பித்து, அகதிகளாக அண்டை நாடுகளுக்கு ஓடும் இராக்கின் சிறுபான்மையினரான யேசிடி பழங்குடி மக்கள்.

இவற்றைக் கண்டு சில சன்னி முஸ்லிம்கள், இது நம்ம ஆளு என்று இந்த இயக்கத்தினரை ஆதரிப்பதோடு, ஏதோ ஒரு வகையில் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையிலான அரசாட்சி உலகில் உதயமாகியிருப்பதைப் புதிய நம்பிக்கையாகவும் பார்க்கின்றனர். இஸ்லாம்தான் ஒரே தீர்வு என்று இந்தியாவிலிருந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் சில சன்னி முஸ்லிம் இளைஞர்கள் இந்த ஐ.எஸ்.படையில் இணைந்துள்ளதோடு, தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் 26 இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற முத்திரை பதித்த டி-சர்டுகள் அணிந்து புகைப்படம் எடுத்து அதனை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுத் தமது ஆதரவைக் காட்டியுள்ளனர். “எங்களை மிகவும் கண்ணியமாக நடத்தினர்; எங்கள் மீது ஐ.எஸ். இயக்கத்தினரின் விரல்கள்கூடப் படவில்லை” என்று இராக்கிலிருந்து மீண்டு வந்த இந்தியச் செவிலியர்கள் அளித்த பேட்டியைக் குறிப்பிட்டு, இஸ்லாத்தின் நெறிப்படி நடப்பவர்கள்தான் பெண்களைக் கண்ணியமாக நடத்துவார்கள் என்றும், ஐ.எஸ். இயக்கத்தினர் இஸ்லாமிய மார்க்க நெறிப்படி நடக்கும் புனிதப் போராளிகள் என்றும் சில சன்னி மார்க்க முஸ்லிம்கள் இந்த இயக்கத்தினரை ஆதரிக்கின்றனர்.

இஸ்லாமிய நெறிப்படி நடப்பதாக ஐ.எஸ். இயக்கத்தினர் விளம்பரப்படுத்திக் கொண்ட போதிலும், இந்த இயக்கம் மேற்காசிய முஸ்லிம் மக்களின் விடுதலைக்கான, முன்னேற்றத்துக்கான இயக்கமே அல்ல. கடந்த இருபது ஆண்டுகளாக முஜாஹிதீன்கள், தாலிபான்கள், அல்கய்தாக்கள் எனப் பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள் உருவாகியுள்ள போதிலும், தாங்கள்தான் உண்மையான இஸ்லாமிய நெறிப்படி நடப்பவர்கள் என்று அவை கூறிக் கொண்ட போதிலும், ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சி செய்த போதிலும் இத்தகைய இயக்கங்களால் ஏகாதிபத்தியத்தையோ, காலனியாதிக்கத்தையோ வீழ்த்த முடியவில்லை. இக்குறுங்குழுவாத சன்னி மார்க்கப் பயங்கரவாத இயக்கங்கள் அமெரிக்காவை எதிர்ப்பதைப் போலக் காட்டிக் கொண்டாலும், பல நாடுகளில் அமெரிக்காவின் கூலிப்படையாகவே இயங்கியுள்ளன.

1970-களில் எகிப்து, சிரியா, இராக் ஆகிய நாடுகள் அரபு தேசியவாத முழக்கத்துடன் பெயரளவிலான ஏகாதிபத்திய எதிர்ப்பைக் காட்டின. ஆனால் இஸ்லாமிய சர்வதேசியம் பற்றிப் பேசும் இத்தகைய இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களோ, ஏகாதிபத்தியங்களுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூட்டுச் சேர்ந்து தமது நிலையை வலுப்படுத்திக் கொண்டு, கூட்டுக் கொள்ளையில் ஈடுபடுவதோடு, பெயரளவுக்குக் கூட ஜனநாயகமே இல்லாமல் அப்பட்டமான கொடுங்கோன்மையைத்தான் நிலைநாட்டின. ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கொண்ட தேசியத்தைக் கட்டியமைப்பதற்கான நோக்கமோ, அதற்கான அரசியல்-பொருளாதாரத் திட்டமோ, நடைமுறையோ இந்த இயக்கங்களிடம் இல்லை என்பதோடு, துருக்கியின் கமால்பாட்சாவும், எகிப்தின் நாசரும், இராக்கின் சதாமும் மேற்கொண்ட பெயரளவிலான சமூக சீர்திருத்தங்களைக்கூட இத்தகைய இயக்கங்கள் கீழறுத்துப் போட்டன. இவற்றின் விளைவாக, நாகரிகத்தால் முன்னேறிய மேற்காசிய சமூகம், பல நூற்றாண்டுகள் பின்னுக்கு இழுக்கப்பட்டு இருண்ட காலத்திற்குள் தள்ளப்பட்ட அவலம்தான் நடந்துள்ளது.

அல் பாக்தாதி
இசுலாமிய அரசின் (கிலாஃபத்) தலைவராகத் தன்னையே நியமித்துக் கொண்டுள்ள ஐ.எஸ் இயக்கத்தின் தலைவரான அபுபக்கர் அல் பாக்தாதி

சதாம் உசேனின் சர்வாதிகார ஆட்சியில்கூட ஷியா, சன்னி எனும் இஸ்லாமிய மதப்பிரிவினருக்கிடையே மோதல்கள் இருந்ததில்லை. அவரது ஆட்சியில் பெண்கள் கல்வி கற்க எந்தத் தடையும் இருந்ததில்லை. ஆனால், பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியில் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று கல்வி கற்கும் உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்த காரணத்துக்காக சிறுமி மாலாலாவைச் சுட்ட கொடூரத்தைச் செய்த தாலிபான்கள், இதனை இஸ்லாத்தின் பெயரால் நியாயப்படுத்தினர். அபின் பயிரிட்டு போதை வியாபாரமும், அந்தந்த வட்டாரத்தில் யுத்தப் பிரபுக்கள் ஷாரியத் சட்டப்படி தன்னிச்சையாக நாட்டாமை செலுத்துவதுமாகவே ஆப்கானில் தாலிபான்களது ஆட்சி நடந்தது.

தங்களை இஸ்லாத்தின் மார்க்க நெறிப்படி நடப்பவர்களாகக் காட்டிக் கொண்ட தாலிபான்களும், அவர்களைவிட இன்னும் தீவிரமாக இஸ்லாத்தை செயல்படுத்துவதாகக் காட்டிக் கொண்டு பயங்கரவாதத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்ட அல் கய்தாக்களும் சன்னி மார்க்க இஸ்லாமிய ஆயுதக் குழுக்களைக்கூட ஐக்கியப்படுத்த முடியாமல் போனதோடு, தங்களுக்குள்ளேயே பிளவுபட்டு மோதிக் கொண்டார்கள். இவற்றுக்குப் பிறகு அல் கய்தாவைவிட இன்னும் மூர்க்கமாக இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவதாகக் காட்டிக் கொண்டு இப்போது புதிதாக ஐ.எஸ். என்ற சன்னி மார்க்க இயக்கம் முளைத்துள்ளது. இந்த ஐ.எஸ். இயக்கத்தின் பின்னணிதான் என்ன?

இராக்கின் அண்டை நாடான சிரியாவில் அதிபர் ஆசாத் தலைமையிலான அரசைக் கவிழ்க்கும் நோக்கத்தோடு, இராக்கின் வடபகுதியில் இயங்கிவந்த அல் பாக்தாதி என்பவர் தலைமையிலான “இராக்கிய அல்கய்தா” என்ற சன்னி மார்க்க ஆயுதக்குழுவை ஆதரித்து வளர்த்த அமெரிக்கா, இவர்களை விடுதலைப் போராளிகளாகச் சித்தரித்து ஜோர்டானில் ராணுவப் பயிற்சி அளித்து தனது கூலிப்படையாகப் பயன்படுத்திக் கொண்டது. இக்குழுவுக்கு சவூதி அரேபியா, கட்டார் ஆகிய நாடுகளிலிருந்து தாராளமாக நிதியும், அமெரிக்காவிடமிருந்து அதிநவீன ஆயுதங்களும் வாரிவழங்கப்பட்டன.

சிரியாவில் அமெரிக்காவால் ஊட்டி வளர்க்கப்பட்டு அதிபர் ஆசாத் அரசுக்கு எதிரான தாக்குதல்களை நடத்திவந்த “அல் நுஸ்ரா”, “எஃப்.எஸ்.ஏ.” முதலான சன்னி மார்க்க ஆயுதக் குழுக்களுடன் இணைந்தும், இதர குழுக்களை அணிதிரட்டியும் அல் பாக்தாதி தலைமையில் உருவானதுதான் “இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் அண்டு சிரியா (ஐ.எஸ்.ஐ.எஸ்.)” எனப்படும் இயக்கமாகும். சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடுத்துவந்த இந்த இயக்கத்தினர் ஆயுதக் கொள்ளைகளிலும் வங்கிக் கொள்ளைகளிலும் ஈடுபட்டதோடு, சிரிய நாட்டின் அருங்காட்சியகத்திலிருந்த அரிய கலைப்பொருட்களைக் களவாடி விற்றும், தமது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் கட்டாய வரிவசூல் செய்தும் பணபலமும் ஆயுத பலமும் கொண்ட பயங்கரவாத இயக்கமாக வளர்ந்தனர். “ஐ.எஸ்.ஐ.எஸ்.” என்ற பெயரில் இயங்கி வந்த இப்பயங்கரவாத இயக்கம்தான் இப்போது “ஐ.எஸ்.” (இஸ்லாமிக் ஸ்டேட்) என்று பெயர் மாற்றம் செய்து கொண்டு, புதிய கிலாஃபத் அரசை நிறுவியுள்ளதாக அறிவித்துள்ளதோடு, அதன் தலைவரான அபுபக்கர் அல் பாக்தாதி, தன்னையே இந்த அரசின் கலீஃபாவாக நியமித்துக் கொண்டுள்ளார்.

ராமநாதபுர இளைஞர்கள்
இது நம்ம ஆளு என்று ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் காட்டுமிராண்டித்தனத்தை ஆதரித்து டி-சர்ட்டின் விளம்பரப்படுத்திக் கொண்ட இராமநாதபுரம் மாவட்ட சன்னி முஸ்லிம் இளைஞர்கள்.

யார் இந்து என்று இந்துவெறி பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். கும்பல் கூறுவதைப் போலத்தான், யார் முஸ்லிம் என்பதை இந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினரும் வரையறுக்கின்றனர். ஷியா, சன்னி, சுஃபி என வேறுபட்ட இஸ்லாமிய மார்க்கங்கள் இருந்த போதிலும், வாஹாபி சன்னி மார்க்கம் மட்டும்தான் உண்மையான இஸ்லாமிய மார்க்கம் என்று கூறி, இதர இஸ்லாமிய மார்க்கத்தினரின் மசூதிகள் மீது குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தி அவற்றைத் தரைமட்டமாக்கியுள்ளனர். குர்து மொழி பேசும் யேசிடி எனும் பழங்குடியினக் குழுவினரது வழிபாட்டு முறையை பேய் வழிபாடு என்று சாடும் ஐ.எஸ். இயக்கத்தினர், இராக்கின் சிறுபான்மையினரான இப்பழங்குடி இனத்தவர் மீது தாக்குதல் தொடுத்து அவர்களைத் தமது ஆதிக்கத்திலுள்ள பிராந்தியத்திலிருந்து விரட்டியடித்து வருகின்றனர். மெக்காவின் காஃபாவில் உள்ள கருப்புக் கல்லை அகற்றாவிடில், அம்மசூதியைத் தகர்க்கப்போவதாக சௌதி அரேபியாவுக்கு எதிராகச் சவடால் அடித்து, தங்களை இஸ்லாத்துக்கு அத்தாரிட்டியாகக் காட்டிக் கொள்கின்றனர். யேசிடி, ஷாபக், சால்டியன் கிறித்துவர்கள், சிரிய கிறித்துவர்கள் முதலான மத, இனச் சிறுபான்மையினரும் ஷியா பிரிவு முஸ்லிம்களும் சன்னி மார்க்க இஸ்லாமிய

மதத்துக்கு மாற வேண்டும், அல்லது ஜெஷியா வரி கொடுக்க வேண்டுமென இப்பயங்கரவாதிகள் எச்சரித்து, அவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தொடுத்து வருகின்றனர். இதனால் சிறுபான்மையின மக்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டுவருவதோடு, எஞ்சியோர் அகதிகளாக இராக்கிலிருந்து தப்பியோடுகின்றனர்.

இந்தியாவில் காலனிய ஆட்சிக் காலத்தில் இந்துவெறியர்களின் ஆசானாகிய சாவர்க்கர் இந்துத்துவ தேசியத்தை முன்வைத்து அணிதிரட்டியதைப் போலவே, இஸ்லாமிய சர்வதேசியம் எனும் கற்பனாவாத பிற்போக்கு முழக்கத்துடன், கிலாபத் எனப்படும் இஸ்லாமியத் தாயகத்தை உருவாக்கப் போவதாகக் கூறிக்கொண்டு இந்த சன்னி மார்க்கப் பிற்போக்குச் சக்திகள் சமூகத்தை இருண்ட காலத்துக்கு இழுத்துச் செல்கின்றன. மறுபுறம், இஸ்லாமிய பயங்கரவாதத்தைக் காட்டி அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் தனது மேலாதிக்கத் தாக்குதலுக்கு நியாயம் கற்பித்துக் கொள்கின்றன.

இசுலாமிய குறுங்குழுக்கள்
கடந்த 20 ஆண்டுகளாக முஜாஹிதீன்கள், தாலிபான்கள், அல் கய்தாக்கள் எனப் பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள் உருவாகியுள்ள போதிலும், இத்தகைய இயக்கங்களால் ஏகாதிபத்தியத்தையோ, காலனியாதிக்கத்தையோ வீழ்த்த முடியவில்லை. இக்குறுங்குழுவாத சன்ன மார்க்கப் பயங்கரவாத இயக்கங்கள் பல நாடுகளில் அமெரிக்காவின் கூலிப்படையாகவே இயங்கியுள்ளன.

இப்படித்தான் கடந்த ஆண்டில் வட ஆப்பிரிக்காவிலுள்ள மாலி நாட்டிலும், அதற்கு முன்னர் ஆப்கானிலும் நடந்தது. அமெரிக்க ஆதரவு பெற்ற மாலி நாட்டின் சர்வாதிகார அரசிடமிருந்து விடுதலை கோரி மாலியின் வடபகுதியிலுள்ள அசாவத் பிராந்தியத்தில் தூவாரக் இனக்குழுவினர் நீண்ட காலமாகப் போராடி வந்த நிலையில், அல்கய்தாவுடன் தொடர்புடைய இப்பகுதியிலுள்ள சன்னி மார்க்க இஸ்லாமிய தீவிரவாதிகள் இவர்களுடன் சேர்ந்து கொண்டு மாலி ராணுவத்துக்கு எதிரான தாக்குதல்களைத் தொடுத்து, 2013-ல் அசாவத் பிராந்தியத்தைத் தனிநாடாக அறிவித்தனர். இதர சன்னி தீவிரவாதக் குழுக்களை இணைத்துக் கொண்டு “இஸ்லாமிய மெஹ்ரப் அல்கய்தா குழு” என்ற பெயரில் திரண்ட இப்பயங்கரவாதிகள், இப்பகுதியில் சுஃபி மார்க்கத்தைப் பின்பற்றும் இஸ்லாமிய மக்களிடம் வாஹாபி சன்னி மார்க்கத்தைத் திணித்து ஷாரியத் சட்டத்தை ஏவி ஒடுக்கத் தொடங்கினர். இச்சன்னி மார்க்கப் பயங்கரவாதிகள் இராக்கிய ஐ.எஸ். இயக்கத்தினரைப் போலத் தனியொரு கிலாஃபத் ஆட்சியையும் கலீஃபாவையும் அறிவிக்கவில்லையே தவிர, இந்த நோக்கத்தோடுதான் இயங்கினர். இந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள், லிபியாவில் கடாபியின் ஆட்சியைக் கவிழ்க்க சி.ஐ.ஏ.வினால் பயன்படுத்திக்

கொள்ளப்பட்டவர்கள். இப்பிற்போக்குச் சக்திகளை வளர்த்துவிட்டு பகடைக்காயாகப் பயன்படுத்திக் கொண்ட அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள், மாலியின் ஒருபகுதியை இப்பயங்கரவாதக் குழுவினர் தனிநாடாக அறிவித்ததும், இஸ்லாமிய தீவிரவாதத்தை முறியடிப்பது என்ற பெயரில் ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்து அந்நாட்டைத் தனது மேலாதிக்கத்தின் கீழ் இருத்தி வைத்துள்ளன.

இதேபோலத்தான் இப்போது இஸ்லாமிய தீவிரவாதத்தை முறியடிப்பது என்ற பெயரில் ஐ.எஸ். இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளின் மீது அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் ஆளில்லா போர் விமானங்கள் மூலம் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தி வருகின்றன. குர்து இனக்குழுக்கள், ஷியா பிரிவு முஸ்லிம்கள் மற்றும் இராக்கிய பொம்மை அரசுப்படைகளுக்கு ஆயுதங்களை வழங்கி போர் வியூகங்களை வகுத்து வழிகாட்டும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள், இதனைப் பயங்கரவாதத்துக்கு எதிரான அவசியமான நடவடிக்கையாகச் சித்தரித்து, மேற்காசியப் பிராந்தியத்தில் தமது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றன.

ஐ.எஸ். இயக்கத்தைப் போன்ற பிற்போக்கு சக்திகளைப் பற்றியும், பின்தங்கிய நாடுகளில் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டக் கடமைகளைப் பற்றியும் நீண்ட காலத்துக்கு முன்னரே தோழர் லெனின் சுட்டிக்காட்டியுள்ளார். 1920-ல் நடந்த கம்யூனிச அகிலத்தின் இரண்டாவது மாநாட்டில், பின்தங்கிய நாடுகளில் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டம் பற்றிய ஆய்வுக் கட்டுரையை முன்வைத்த தோழர் லெனின், “மதகுருமார்களையும் செல்வாக்கு செலுத்தும் பிற்போக்கு மற்றும் மத்தியகால சக்திகளையும் எதிர்த்து பின்தங்கிய நாடுகளில் போராட்டம் நடத்துவது அவசியமாகும். இஸ்லாமிய சர்வதேசியம் மற்றும் இதைப் போன்ற போக்குகளை எதிர்த்து முறியடிக்க வேண்டும். நிலப்பிரபுக்கள், கான்கள், முல்லாக்கள் மற்றும் பிற சக்திகளின் நிலையை வலுப்படுத்தவே இத்தகைய போக்குகள் முயற்சிக்கின்றன” என்று உணர்த்தியுள்ளார்.

லெனின் எத்தகைய பிற்போக்குச் சக்திகளை எதிர்த்துப் போராட்டம் நடத்த வேண்டுமென வலியுறுத்தினோரோ, அத்தகைய பிற்போக்குச் சக்திகள் இன்று உலகின் பல நாடுகளில் வளர்ந்துள்ளதோடு, மத அடிப்படைவாத பிற்போக்குச் சக்திகளும் மதவெறி பயங்கரவாத இயக்கங்களும் ஆதிக்கம் செலுத்தும் போக்கு உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தப் பிற்போக்குச் சக்திகள் ஏகாதிபத்தியங்களுடன் கள்ளக் கூட்டு கொண்டவையாகவும் அவற்றின் கூலிப்படையாகவும் இருப்பதோடு, வரலாற்றைப் பின்னுக்கு இழுத்து சமூகத்தைக் காட்டுமிராண்டி நிலைக்குத் தள்ளவும் துடிக்கின்றன. அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் இத்தகைய பிற்போக்குச் சக்திகளைப் பயன்படுத்திக் கொண்டு தமது காலனியாதிக்கத்தையும் மேலாதிக்கத்தையும் நிலைநாட்டிக் கொள்கின்றன. எதிரெதிரானவையாகத் தோன்றினாலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக உள்ள இத்தகைய ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் வரலாற்றைப் பின்னுக்கு இழுக்கும் இத்தகைய பிற்போக்கு சக்திகளுக்கு எதிரான உறுதியான விடாப்பிடியான போராட்டம்தான் இன்று அவசியமாகவுள்ளது.

– குமார்
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2014
________________________________

  1. Dear Vinavu,

    //கடந்த இருபது ஆண்டுகளாக முஜாஹிதீன்கள், தாலிபான்கள், அல்கய்தாக்கள்
    *** இத்தகைய இயக்கங்களால் ஏகாதிபத்தியத்தையோ, காலனியாதிக்கத்தையோ வீழ்த்த முடியவில்லை.//

    முகமதியமே ஒரு ஏகாதிபத்தியம் தான். நடப்பது ஒன்றுக்கொன்று போட்டி தான்.

    //இத்தகைய இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களோ, ***, பெயரளவுக்குக் கூட ஜனநாயகமே இல்லாமல் அப்பட்டமான கொடுங்கோன்மையைத்தான் நிலைநாட்டின.//

    அவர்கள் ஜனநாயகமே ஷைத்தானின் வேலை என்று தான் சொல்கிறார்கள். அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்.

  2. இசுலாம் பேற சொல்லிக்கிட்டு எவன் யாரக்கொண்டாலும் அது அமெரிக்க கூலிப்படை ,விட்டா இசுலாமில சியா சன்னினு பிரிவுகள உறுவாக்குனதே அமெரிக்காதான் அல்லா இல்லைனு சொல்லுவிங்க போல இருக்கே நபி யொட குடும்ப சண்டையும் குருட்டு கொள்கைகளும்தான் இசுலாமிய உட்பிரிவுகளுக்கு காரணம் ,அல்லாவே இசுலாம் 75 ஆ பிரியும் அதுல ஒன்னுதான் சொர்க்கத்துக்கு போகுமுனு சொல்லி இருக்காராம் அதால அவனவன் குரான வச்சுகிட்டு அடுத்த பிரிவுகாரன அல்லாகு அக்பர் பண்ண கிளம்பிட்டான் இதுல அமெரிக்காகாரனுதான் அடி வாங்குனான் பேசாம அமெரிக்காகாரன கழுத்த அறுத்ததுக்கு பதிலா முக்கியமான கம்மூனிஸ்டு தலைவன கலால் பன்னி இருந்தா இந்த மாரி கட்டுரையே வந்து இருக்காது……

    • இயேசு பெயரை செல்லி நேரடியாக சிலுவை போர் செய்தவார்கள் இப்போது மறைமுகமக அமெரிக்க பெயரில் செய்கிறர்க்ள் அவ்வளுவுதன் கிறிஸ்டின் திவிரவாதிகள் ஒழங்காக இருந்த நாட்டை அரபு நாட்டில் எண்ணெய் திருடுவதுக்கு அவர் மேல் போர் தொடுத்து இயேசுவின் சீடன் என நிறுபித்த அமெரிக்க ஒரு கிறுத்துவ வெறி பிடித்த நாடு அதிலும் p.joseph போன்றவர் கருத்து என்ன பெயரில் மத காழ்ப்புஉணர்ச்சி கொண்டவர்கள் எல்லாம் நியாயம் பேசுவது வேடிக்கை

    • joseph

      //இசுலாம் பேற சொல்லிக்கிட்டு எவன் யாரக்கொண்டாலும் அது அமெரிக்க கூலிப்படை ,விட்டா இசுலாமில சியா சன்னினு பிரிவுகள உறுவாக்குனதே அமெரிக்காதான் அல்லா இல்லைனு சொல்லுவிங்க…….\\
      இந்த மாதிரி கூருகெட்டட்தனமா எதையாவது கருத்து என்ற பெயரில் எழுதவேண்டியது, அப்பறம் அதற்க்கு விளக்கம் கேட்டால் உமக்கு விளக்கம் கொடுக்க அவசியம் இல்லை என்று சொல்லே நழுவ வேண்டியது… இதெல்ல்லாம் ஒரு பொழப்பா ?

      எந்த வொரு கூட்டத்தையும் பற்றிய தெளிவான செய்திகள் வெளிவராத நிலையில் நிலையில் மக்கள் அவர்களின் மேல் நம்பிக்கை கொள்வதும் ஆதரவு தெரிவிப்பதும் இயல்பே,,, ஆனால் ஒரு தெளிந்த மனநிளையாலரின் நிலை எவ்வாறு இருக்கும் என்றால் தெளிவான ஆதாரமான செய்திகள் வரும்வரை பொறுமை காப்பர் , அதே நிலையில் சாதகமான மற்றும் பாதகமான கருத்துக்களை வெளி இடாமல் அதனின் அடிப்படையை ஆராயவே முயல்வார். ஆனால் நம்மில் எத்தனை பேர் அந்தசிந்தனையை கொண்டுள்ளோம் என்பது கேள்விக்குறி…

      நம் நாட்டின் அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் பற்றிய ஒரு தெளிவான சிந்தனைக்கு வருவதற்கே பாதகமாக பல ஊடகங்கள் சாதக மற்றும் பாதக செயல்பாடுகளில் ஈடுபட்டு நம்மை ஒரு குழப்ப நிலைலேயே வைத்து காய்நகர்த்தும் அரசியல் வியாதிக்களை இனம் காண முடியவில்லையே அப்படி இருக்கையில் அங்கு நடப்பதை எதனை வைத்து தெளிந்த ஒரு முடிவுக்கு வரமுடியும் என்று நினைக்கிறீர்கள் தோழர்களே..

      நம் நாட்டு மக்களில் ஒரு பிரிவினர் கொல்லப்பட்டாலோ இயற்க்கை சீற்றத்தினால் பலியானலோ அந்த செய்தியை கேட்க்கும் மற்ற பிரிவினரால் ஆனந்த கண்ணீர் விடும் நிலையை இந்தக்காலக்கட்டத்தில் காண முடிகிறதே.. மனிதன் மனநிலையால் மிருகம் ஆகிறானே என்று என்றாவது நாம் கண்டனக்குரல் எழுப்ப நினைத்ததுண்டா?
      காஷ்மீர் மக்களின் துயரில் இன்பம் அனுபவித்தவர்களையும் , பாதிரியார்களையும் குழந்தைகளையும் உயிருடன் எரித்து ஆனந்த தாண்டவம் ஆடியவர்கள் , இன்னும் ஆதிக்க வர்க்கத்தின் வக்கரங்கள் ஏராளம் சில மாதங்களுக்கு முன் இரு சகோதரிகள் நாசம்சையப்பட்டு தூக்கிலடப்பட்ட விவகாரம் என்று நீண்டுக்கொண்டே போகும் ஒரு சாராரின் செயல்பாடுகளை எதிர்க்கும் மனப்பாங்கு கொண்ட அனைவரின் நலம் விரும்பும் சமூகமாக, எண்ணிக்கையில் அதிகமாக உள்ள நம்மவர்களின் மத்தியிலே மேற்குறிப்பிட்ட அனாச்சாரங்கள் மிக சுதந்திரமாக நடைபெரத்தானே செய்கிறது , இன்னும் இவர்களுக்கு ஒட்டுமொத்த மக்களின் ஆதரவு கிடைத்து விட்டால் இவர்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதை நாம் சிந்தித்தித்திருந்தால் இவர்கள இன்று ஆட்சி கட்டில்லில் ஏறீருக்க முடியுமா? ஆக தீயசக்திகள் தனக்கு கிடைக்கும் சிருவிரிசலை கூட தனக்கு சாதகமான ஓட்டுவங்கியாக பயன்படுத்தி உள்ளதே , படிப்பறிவில் ஓரளவுக்கு தன்னிறைவு பெற்ற நம்நாட்டு மக்களே இவர்களிடம் ஏமாறும்போது , பிறந்த நாள் முதல் போர் குண்டுவெடிப்பு கொலை போன்றவற்றை மட்டுமே தனது கண்களில் பாடமாக பார்த்து வளரும் இராகியர்களிடமும் இன்னும் இதுபோன்ற கல்வி அறிவு அறவே அற்ற நாட்டினரை ஒரு நாடு ஏமாற்றி ஆசைக்காட்டி சுரண்டி வாழ்வது ஒன்னும் பெரிய சவாலாக இருக்க முடியாது என்பதுதான் என்னுடைய பார்வை.

      கடைசியாக வன்முறையோ ஆயுதமோ எந்தவொரு விஷயத்திலும் ஒரு நல்ல முடிவின் பால் இழுத்துசெல்லாது என்பதனை நாம் அறிந்தவாறு , பிறந்ததுமுதல் இறக்கும் வரை வன்முறையையும் ஆயுதத்தையும் கையில் எடுக்கும் கூட்டம் உணராதவரை வன்முறைக்கும் ஆயுதத்திட்க்கும் அழிவு இல்லை அதனை எடுப்போருக்கு மட்டுமே அழிவு நிச்சயம். ஒவ்வொரு நாட்டினரின் ஒரு உயர்வான வலுவான ஆயுதமாக அந்தந்தா நாட்டில் வாழும் மக்களின் ஒற்றுமை இருக்கும் வரை எந்தவொரு நாட்டிற்க்கும் அவர்களின் மக்களுக்கும் அழிவே வராது என்று தான் கடந்த பல வரலாறுகளும் பறைசாற்றுகின்றது..

      • என்ன கூறு கெட்டதனமா எழுதி இருக்கு அதிக கூறு உள்ள நீங்க அடிச்சு விடுங்க அல்லாகூ அப்பர்

        • இங்கே கிருத்துவர்களும் முசுலீம்களும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு அனைவரையும் ஏமாற்றிக்கொண்டு உள்ளார்கள். எதோ இவர்கள்தான் கடவுள் என்பதுபோல் கொண்டாடுகிறார்கள். இவர்களில் யாரேனும் கடவுளை நேரில் பார்த்தார்களா என்றால் அதுவும் இல்லை. கடவுள் இருக்கிறார் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் இவர்களால் கொடுக்க முடியவில்லை. இந்த நிலையில் ஏசுவாம் முகமதுவாம்!!! இவர்களில் யார் பெரியவர்கள் என்றுவேறு பீற்றிக்கொள்கிறார்கள். இதெல்லாம் கொடுமைதான். மனிதர்களாகிய இவர்கள் ஏன் அடித்துக்கொள்கிறார்கள்?? மேலே கண்ட கடவுளர்கள் அடித்துக்கொள்ளட்டுமே. நாம் அனைவரும் வேடிக்கை பார்க்கலாம்.

          இந்தியாவில் எத்தனையோ கடவுளை வணக்குகிறார்கள். இவர்கள் யாரும் இப்படி அடித்துக்கொவது இல்லை. இரண்டு கடவுளாம்!!! அதிலும் அடிதிடி வேறு! மனிதனின் தலையைவேறு துண்டிக்கிறார்கள். அதுவும் கடவுளின் பெயரால்!! அவர் இருந்தால் தான் படைத்த (?) மனிதர்களின் தலையை துண்டிப்பாரா?

          • மு.நாட்ராயன்

            //இங்கே கிருத்துவர்களும் முசுலீம்களும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு அனைவரையும் ஏமாற்றிக்கொண்டு உள்ளார்கள். \\ சரிப்பா ஒரு வாதத்திற்க்கு நானும் ஜோசப் பும் குரைகூரிக்கொல்வதாகவெ வைத்துக்கொள்வோம் தற்போது தாங்கள் என்ன செய்கிறீர்கள் என்று விளக்கவும்.

            //எதோ இவர்கள்தான் கடவுள் என்பதுபோல் கொண்டாடுகிறார்கள். இவர்களில் யாரேனும் கடவுளை நேரில் பார்த்தார்களா என்றால் அதுவும் இல்லை. கடவுள் இருக்கிறார் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் இவர்களால் கொடுக்க முடியவில்லை. இந்த நிலையில் ஏசுவாம் முகமதுவாம்!!! இவர்களில் யார் பெரியவர்கள் என்றுவேறு பீற்றிக்கொள்கிறார்கள்.\\

            இப்போது முஹம்மது (ஸல்) அவர்கள் கடவுள் என்று யார் கொண்டாடியது? ஏதேனும் ஒரு அடிப்படை அறிவுடன் தங்களின் கருத்துக்களை பதிவிட்டால் பதில் அளிப்பதற்கு எதுவாக இருக்கும் . நான் எங்குமே இயேசுவை ஏச வில்லையே அப்படி எப்படி தாங்கள் கிறித்துவத்துக்கும் இஸ்லாத்திட்க்குமான சண்டையாக பார்க்கிறீர். ? தெரிந்துக்கொள்ளுங்கள் நாங்கள் ஈஸாவை ஒரு கிறித்துவன் மதிப்பதை காட்டிலும் அதிகமாக மதிக்கிறோம் நபி (ஸல்) அளவிற்க்கு மதிக்கிறோம்.
            இங்கு எனக்கும் ஜோசப் என்ற கோமாளிக்கும் ஏற்பட்ட வாதமே வேறு.

            //இதெல்லாம் கொடுமைதான். மனிதர்களாகிய இவர்கள் ஏன் அடித்துக்கொள்கிறார்கள்?? மேலே கண்ட கடவுளர்கள் அடித்துக்கொள்ளட்டுமே. நாம் அனைவரும் வேடிக்கை பார்க்கலாம். \\
            யார் அடித்துக்கொள்கிறார்களோ அவர்களை பார்த்து சொல்ல வேண்டிய விஷயம் எங்களை பார்த்து சொல்வதற்கான காரணத்தை பதிவிடுங்கள் . கண்ணால் பார்க்காத கடவுளை எப்படி நம்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளீர்கள் . கண்ணால் காண்பது மட்டும் தான் உண்மை மற்றவைகள் எல்லாம் பொய் , ஏற்றுக்கொள்ள முடியாது என்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்தால் தாங்கள் பார்க்காத காற்றை சுவாசிப்பதாக சொல்ல இயலாது , இன்னும் தாங்கள் வெறும் கண்களால் பார்க்க இயலாத கோள்கள் நோன்னுஎரிகள் போன்றவற்றை எல்லாம் மறுக்கத்தான் வேணும் .

            இன்னும் கண்ணில் பார்ப்பது அனைத்தும் உண்மை என்ற கொள்கையை செயல்வடிவில் கொண்டுவர நினைக்கும் உம்மால் கானல் நீரை சுடுநீராக்கி உமக்கு குடிநீராக்கிக்கொள்ள இயலுமா?

            வந்துட்டார் பஞ்சாயத்து பண்ண…

            //இந்தியாவில் எத்தனையோ கடவுளை வணக்குகிறார்கள். இவர்கள் யாரும் இப்படி அடித்துக்கொவது இல்லை. இரண்டு கடவுளாம்!!! அதிலும் அடிதிடி வேறு! மனிதனின் தலையைவேறு துண்டிக்கிறார்கள். அதுவும் கடவுளின் பெயரால்!! அவர் இருந்தால் தான் படைத்த (?) மனிதர்களின் தலையை துண்டிப்பாரா?\\ கடவுளின் பெயரால் தவறுகள் சைகிறவள் இருக்கத்தான் செய்கிறார்கள் அதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல . ஆனால் தாங்கள் தான் எஅதோ வேற்று கிரகத்தில் இருந்து இறங்கிவந்து கருத்தை சொல்வது போல் பதிவிடுகிறீர்கள். இந்தியாவில் நடக்காத ஜாதிச்ச்சண்டைகளா? இன மோதல்களா? சமீபத்தில் இளவரசன் விஷயத்தில் நடந்தது என்ன ஜாதி நல்லிணக்கமா? இவர்கள் சையும் குற்றத்திற்க்கு இறைவன் எப்படி பொறுப்பாவான்.

      • zahir

        என்ன செல்லவரிங்க எனக்கே ஒன்னும் புரியலா இதுலா p.joseph பதில்லு செல்லுரிங்க அவரே கிறுக்கு கிறுத்துவா மதவெறி பிடித்த காவிகைகூலி நீங்க என்ன சென்னாலும் ஒத்துக்க மாட்டார். அப்பாவிகளை கொல்பவன் திவிரவாதியே அந்த திவிரவாதியை அதரிப்பவனும் திவிரவாதிதான் அப்படி பார்த்தால் isis திவிரவாதியைதான் நம்ம ஊர் காவிளை போல்

        • Tamil,

          ஒற்றுமையை இழந்த எந்தவொரு கூட்டமும் கடைசி வரை சுமூக வாழ்வை எட்டவே முடியாது என்று தான் சொல்லவருகிறேன் . இவர்களை ஒன்றுபடவிடாமல் வைக்கும் வேலையை முகமூடி அணிந்தவர்கள் திறம்பட செய்வார்கள் என்கிறேன். இவர்கள் இதே நாட்டை (இராக்கை) சேர்ந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் , அவர்களின் நிலையில் நியாயம் இருக்கும் பட்சத்தில் முகத்தை மூடி ஏன் போராடுதல் வேண்டும் என்கிறேன். ஆக மொத்தத்தில் இவர்களை இயக்கம் ரிமோட் கண்ட்ரோல் எது இவர்களின் ஆயுத குவிப்பிட்க்கு காரணகர்த்தாக்கள் யார்? சொந்த நாட்டிற்க்காக போராடும் ஒவ்வொரு வீரனும் தன்னை தன மக்களிடத்தில் வெளிப்படுத்திக்கொள்ள அல்லவா நினைப்பான் , அதுவும் எதிரிப்படையை எதிர்க்கும் விஷயத்தில் காட்டப்படும் வன்மத்தை காட்டிலும் சொந்த மக்களின் (ஷியா) மேல் காட்டப்படும் வன்மம் அதிகமாக இருப்பது போன்றவற்றின் அடிப்படையில் இவர்களை அமெரிக்க கைகூலிகலாகவெ நம்மால் என்ன முடிகிறது . ஆனால் உண்மை நிலை வல்ல இறைவனுக்கே தெரியும்.மக்களின் உயிரின் மீதும் உடைமைகள் மீதும் மரியாதையையும் கண்ணியத்தையும் கொடுக்கும் எந்த ஒரு குழுவாக இருந்தாலும் அது வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

        • ///நம்ம ஊர் காவிளை போல்////

          இந்தியாவில் உள்ள காவிகள் இதுவரை யாரையும் குண்டுவைத்து கொல்லவிலை. இஸ்லாமிய நாடுகளில் உள்ளதுபோல் இங்கு உள்ள இந்துக்கள்(காவிகள்)பயங்கரவாதிகள் அல்ல. அப்படி யாராவது கூறினால் அது தங்கள் மதத்தின் மீதுள்ள வெறித்தனம்தான் காரணமாக இருக்கும்!! எங்கும் துப்பாக்கி சப்தத்தால் மக்கள் யாரும் அல்லல்படுவதில்லை. வினவு போன்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்களின் ஆதரவாளர்கள்தான் இந்துக்களை பற்றி குறை கூறிவருகின்றன. இஸ்லாமிய அமைப்புக்களைப் பற்றி இதுபோல் குறை கூறியிருந்தால் இந்நேரம் வினவு தப்பித்து ஓடியிருக்கும்.( ஏற்கனவே இஸ்லாமிய அமைப்பு ஒன்று எச்சரிக்கை விடுத்தது என்று கேள்விப்பட்டேன்). இந்து அமைப்புக்கள் அப்படி இல்லை. சுதந்தரமான ஜனாநாயக அமைப்புக்கள்.

          பல கடவுள்களை வழிபாடும் இந்தியாவில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட மேலும் இரண்டு கடவுள்களைம் சேர்த்து வழிபாடுவதை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அந்த கடவுளின் பெயரால் நடக்கும் பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

          • நண்பர் நாட்ராயனின் கருத்து உண்மையே இந்துக்கள் சகிப்புதன்மையுடந்தான் இருக்கிறார்கள் எங்க ஊரிலேயே இந்துக்கள் வணங்கும் கோவில்நிலத்தில் முசிலீம்களின் சுடுகாட்டை அமைக்க பார்த்து அது மிகபெரிய சண்டை ஆனது தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதால் தங்களின் பிர்ச்சனையை மத வாத அமைப்புகளிடம் கொன்டு செல்லவில்லை செல்லவும் விரும்ப வில்லை அனால் முஸீலீம் மதவாத அமைப்புகள் முஸிலீம்களுக்கு பண உதவி செய்தார்கள், இசிஸ் தீவிரவாத அமைப்பி இந்தையாவையும் உள்ளடக்கிய இசுலாமிய பேரசுக்கான வரை படத்தை வைத்து இருக்கிறார்கள் 8000 கும் மேற்ப்பட்ட இந்திய இளைஞ்ஞர்கள் ஈராக் செல்ல பதிவு செய்துள்ளார்களாம் நமது தேசத்தில் தின்று உறங்கி எழும் இந்த பொருக்கி இளைஞ்ஞர்கள் இசிஸ்க்கு சப்போர் பன்னுறானுக ………..

            • p.joseph,

              //நண்பர் நாட்ராயனின் கருத்து உண்மையே இந்துக்கள் சகிப்புதன்மையுடந்தான் இருக்கிறார்கள் எங்க ஊரிலேயே இந்துக்கள் வணங்கும் கோவில்நிலத்தில் முசிலீம்களின் சுடுகாட்டை அமைக்க பார்த்து அது மிகபெரிய சண்டை ஆனது தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதால் தங்களின் பிர்ச்சனையை மத வாத அமைப்புகளிடம் கொன்டு செல்லவில்லை செல்லவும் விரும்ப வில்லை\\ ஹிந்து என்ற போர்வையில் ஒழிந்துள்ள காவிகளை தான் தீயவர்கள் என்கிறோம். அதுவும் அவர்கள் ஹிந்துமதத்தை பின்பற்றுவதால் அல்ல, அவர்களின் கீழ்த்தரமான செயல்பாடுகளால்(கலவரம், விஷக்கருத்துக்கள், காழ்ப்புணர்வு) அவர்கள் தீயவர்கள் என்று அடையாளம் காட்டப்படுகிறார்கள்.

              எல்லாம் சரி இதுதங்களின் ஊரில் நடந்தது என்கிறீர்கள் , தாங்கள் இந்த பிரச்சனையை நல்ல முறையில் முடித்துவைக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் , எந்த தரப்பின் மீது தவறு இருந்தாலும் உடனே காவல்துறை உதவியையோ அல்ல்லது நீதித்துறையையோ நாடி இருக்க வேண்டியது தானே.. ஏன் செய்யவில்லை. இப்போது இங்கு இதனை பதிவிட சலவளித்த நேரத்தை அங்கு ஒரு நல்ல நியாயமான முடிவு ஏற்படுத்துவதற்கு செலவழித்து இருக்கலாமே. தாங்கள் சொல்வது உண்மையானால் அந்த செய்தி எந்தப்பத்திரிக்கையில் வந்துள்ளது என்பதை பதிவிட்டிருக்கலாம் இல்லையேல் குறைந்த பட்சம் எந்தவூர் என்றாவது பதிவிட்டிருக்கலாம் .
              கெட்டிகாரனின் பொய் 10 நாளைக்கு தான் தாங்கும் என்பது பழமொழி , ஆனால் நடைமுறையில் அதன் ஆயுட்காலம் 10 நாளைக்காட்டிலும் குறைவே என்று நிரூபிட்டுவிட்டீர்கல். நன்றி.

              \\இசிஸ் தீவிரவாத அமைப்பி இந்தையாவையும் உள்ளடக்கிய இசுலாமிய பேரசுக்கான வரை படத்தை வைத்து இருக்கிறார்கள் 8000 கும் மேற்ப்பட்ட இந்திய இளைஞ்ஞர்கள் ஈராக் செல்ல பதிவு செய்துள்ளார்களாம் \\

              அப்படியே ஆதாரத்தை வெளி இட்டால் அதன் உண்மைத்தன்மை அறிய ஏதுவாக இருக்குமே? ஆனாலும் உங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதும் சக்தி அபாரமாகவே உள்ளது . அப்படியே ஒரு பாட்டு பாடுங்களேன்…

            • இந்துக்கள் என்று பொத்தாம் பொதுவாக சொன்னால் எப்படி. அசுரர்கள் என்றக்க்குமே சகிப்புதன்னை உடையவர்கள் தான்.தன்னை ஒடிக்கிவரும் ஆரிய பார்ப்ன மதத்திற்கு அடிமையாகி தங்களை இந்து என்று கருதிக்கொள்ளும் அளவுக்கு சகிப்புதன்னை உள்ளவர்கள்.

              உண்மையான இந்துக்களான ஆரிய பார்பனர்களுக்கு சகிப்பு தன்மை என்றால் என்ன என்று தெரியுமா ஜோசப் அவர்களே?

              • அய்யா ரமேசு முதல்ல மூமீன் காபீர்கள் கதைகளை எல்லாம் படிச்சிட்டு வாங்க நபி மற்றும் இசுலாமிய மன்னர்கள் செய்த கொலைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்க அப்புறமா ஆரியர்கள் எத்துனை சூத்திரர்களை அரக்கர்களை கொலை செய்தார்கள் யார் சகிப்பு தன்மை அற்றவர்கள் என்பதை பற்றி விவாதிக்கலாம்………..

                • p.joseph,

                  //முதல்ல மூமீன் காபீர்கள் கதைகளை எல்லாம் படிச்சிட்டு வாங்க நபி மற்றும் இசுலாமிய மன்னர்கள் செய்த கொலைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்க அப்புறமா ஆரியர்கள் எத்துனை சூத்திரர்களை அரக்கர்களை கொலை செய்தார்கள்\\ ஜோசப் வித்யாசமாக சிந்திப்பவர் என்பதை இப்போவாவது இங்குள்ள வாசகர்கள் புரிந்துக்கொள்வார்கள் என்று எண்ணுகிறேன். ரமேஷ் என்னும் தோழர் ஹிந்து மதத்தை பின்பற்றக்கூடியவர் எனவே தன் மதத்தில் உள்ள குளறுபிடிகளை முதலில் களைதல் வேண்டும் என்ற கருத்தை வெளி இடுகிறார். அவருடைய கருத்தில் ஏதும் தவறு இருப்பதாக தெரியவில்லை . ஆனால் இங்கு ஒருவர் சம்பந்தமே இல்லாமல் முதல்ல அடுத்தவனின் குறைகளை எல்லாம் பார்த்துவிட்டு தன்னிடம் உள்ள குறையை நியாயப்படுத்திக்கொள் என்கிற ரீதியில் தனது கருத்தை பதிவிடுகிறார். சரி அப்படி அவர் சொல்லும் கருத்தில் தான் உண்மை உள்ளதா என்றால் அதுவும் இல்லை . கேட்டால் போரில் முஹம்மது நபி (ஸல்) அவரை கொன்றார் இவரை கொன்றார் என்பார்? போரில் கொல்லப்படுவதும் கொள்ளுவதும் இயல்பு தங்களின் நிலைப்பாடு என்ன போரில் ஈடுபடும் எதிரிப்படைக்கு பிரியாணியும் வருத்தக்கரியையும் கொடுத்து விருந்து உபசரிப்பீர்களா ? என்றேன் அதற்கும் இதுவரை பதில் இல்லை இந்த காவி கிருத்துவரிடம்.

                  முதலில் ஹிந்து மதத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக்கொண்டவருக்கு இஸ்லாத்தை பற்றியோ முஹம்மதை பற்றியோ அறிந்துக்கொல்லுமாறு அறிவுரை கூருவதர்க்கு இவருக்கு என்ன யோக்கியதை உள்ளது… இதுவரை கேட்கப்பட்ட எந்த கேள்விக்காகவாது இல்லை விளக்கத்திட்க்காகவாவ்து உருப்படியான பதிலை தந்துள்ளாரா?

          • மு.நாட்ராயன்
            //இந்தியாவில் உள்ள காவிகள் இதுவரை யாரையும் குண்டுவைத்து கொல்லவிலை. இஸ்லாமிய நாடுகளில் உள்ளதுபோல் இங்கு உள்ள இந்துக்கள்(காவிகள்)பயங்கரவாதிகள் அல்ல. அப்படி யாராவது கூறினால் அது தங்கள் மதத்தின் மீதுள்ள வெறித்தனம்தான் காரணமாக இருக்கும்!! \\

            இதைத்தான் முன்னவே சொன்னேன் இங்கு இவ்வகையான கீழ்த்தரமான் செயல்களில் ஈடுபடும் காவிகளை குற்றவாளிகளாய் பார்ப்பதை விடுத்து அவர்களை தேசப்பக்தர்கள் அளவிற்க்கு உயர்த்தி மகிழ்ச்சி அடைவீர்கள் என்பதற்கு தங்களின் வார்த்தைகளே சாட்சி…
            மாலேகான் மற்றும் தர்காக்கள் குண்டிவெடிப்பில் சம்பந்தப்பட்ட அசீமானந்த காவிக்கொம்பல்கள் தங்களின் பார்வையில் யார் ? மேலும் இதனை விசாரணை செய்து கண்டுப்பிடித்த ஹேமந்த் கர்கரே, இன்று உயிருடன் இல்லை. இதன் பின்னணி என்ன.

            \\இந்து அமைப்புக்கள் அப்படி இல்லை. சுதந்தரமான ஜனாநாயக அமைப்புக்கள். \\ உண்மைதான் இவர்கள் உலக நாடுகளில் உள்ள அனைத்து தீவிரவாதிகளை காட்டிலும் கொடியவர்கள் . நெஞ்சில் நஞ்சை வைத்து வெளியில் தேச பக்தர் போடும் நயவஞ்சகர்கள்.

            \\பல கடவுள்களை வழிபாடும் இந்தியாவில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட மேலும் இரண்டு கடவுள்களைம் சேர்த்து வழிபாடுவதை ஏற்றுக்கொள்வார்கள்\\ முதலில் கடவுளுக்கு இறப்பு பிறப்பு பூர்வீகம் சொந்தநாடு அசல்நாடு போன்ற வரையறைக்குள் கொண்டுவர முடியுமா? இந்த நாட்டில் வணங்கப்படும் கடவுள் ஒருவராகவும் மற்றநாடுகளில் வேறொரு கடவுள் இருப்பதாகவும் கொள்ளும் உங்களின் அறிவீனம் கடவுள் இல்லை என்று வாதிடுபவர்களை காட்டிலும் கேலிக்கூத்தானது.
            //ஆனால் அந்த கடவுளின் பெயரால் நடக்கும் பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\\ அப்போ மற்ற கடவுளின் பெயரால் உருவாக்கப்படும் பயங்கரவாதத்தை ஆதரிப்பீர்கள் என்று ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி . மக்கள் தங்களின் உண்மை முகத்தினை அறிந்துக்கொள்ளட்டும்.
            மதத்தின் பெயரால் ஜாதி இன் பெயரால் வன்முறைகளில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுதல் வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்துக்கள் இல்லை. ஆனால் ஒரு வன்முறைக்குழு அல்லது தனிநபரை வைத்து அவர்சார்ந்துள்ள மதத்தையோ ஜாதியையோ கணக்கிட்டு விடலாம் என்ற தங்களின் காழ்ப்புணர்ச்சியை தான் எதிர்க்கிறேன். ஜோசெப்ன் உடனான தங்களின் கூட்டனி நிச்சயமாக சிரிப்பு கூட்டனியாக விளங்குவதை எதிர்ப்பார்க்கலாம்.

      • //அனைவரின் நலம் விரும்பும் சமூகமாக// மன்னிக்கவும் : “சுன்னி முஸ்லிம்கள் அனைவரின் விரும்பும் சமூகமாக”என்று இருக்க வேண்டும்./ சுன்னி முஸ்லிம்கள் இல்லாத – ஷியா, சூபி, ஏஜ்டி, சபக், கிறிஸ்துவர்கள் மாறு அல்லது செத்து மடி என்று கோஷம் இட்டு அவர்களை விரட்டியவர்கள்/கொன்றவர்கள் என்பதை மறைத்துவிட வேண்டாம்

        • vignaani@

          You are trying to misquote or misunderstood my quote. Because //அனைவரின் நலம் விரும்பும் சமூகமாக// this has been said about us Indian and you are trying to link it with Ira k.Please read it again you may get, what i meant to say.

  3. I was waiting for this article.

    இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளால் முன்வைக்கப்படும் இஸ்லாமிய சர்வதேசியம், முஸ்லிம் மக்களையே பிளவுபடுத்துவதுடன் அவர்களை மத்தியகால அடிமைத்தனத்திற்குள்ளேயும் தள்ளிவிடும்.

  4. நிச்சயமாக மனித உயிரை மதியாமல் கொள்ளும் இவர்களையும் இவர்களை ஊக்குவிக்கும் செயல்களிலும் இறங்கும் ஒவ்வொருவரும் குற்றவாளிகளே , இவர்களுக்கு தக்க தண்டனையை படைத்த இறைவன் வழங்கவேண்டும் என்று இறைஞ்சுவதுடன், ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் அவர்களுடைய ஒற்றுமைதான் பெரிய கேடயம் அந்த கேடயத்தை அற்பப காரனத்திட்க்காக கைவிடுவார்களேயானால் பின்பு அவர்களுக்கு மிஞ்சுவது நிம்மதி இன்மையும் மற்றவர்களுக்கு அடிமை படும் நிலைமையும்தான் மிஞ்சும் என்பதை உணர்ந்து நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற நாட்டுனரவுடனும் , தமிழன் என்ற கலாச்சார உணர்வுடனும் ஒற்றுமையுடன் வாழ்வோம் உலக அரங்கில் உயர்வு பெறுவோம்.

    • இஸ்லாம் ,அமைதி மார்க்கம். இந்த உலகில் சண்டை சச்சரவு, கொலை, கழுத்தை அறுத்து, கொல்லுதல், நடு வீதியில் தூக்கலிடல், குண்டு வெடிப்பு, ஷியா, சபக், அஹ்மெடியாக்கலின் மசூதிகளுக்கு வைத்தல், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட சரித்திர சின்னங்கள் (புத்தர் சிலை போன்றவை)​ உடைப்பது இவை அனைத்தும் அமெரிக்க அல்லது அதன் கைக்கூலிகள் அல்லது RSS அம்பிகள் அதாவது காபிர்கள் வேலை தான். இஸ்லாமியர்களுக்காக ஒரு தனி உலகம் அமைப்போம் அது பாகிஸ்தான் (தூய இடம்) ஆகட்டும்.

      • அண்ணன் விக்னானி இசுலாம் இனிய மார்க்கம் கழுத்த அறுத்து கொள்ளுரவன் எல்லாம் இசுலாமியன் இல்லை அவங்களாம் முகமுடி போட்ட யூத காபீர்கள் அப்பிடினு சொல்லுவாங்க இந்திய முஸிலீம்கள் இதுக்கு வக்காள்த்து வாங்க நம்ம ஆளுக நிறைய பேரு முற்போக்குனு பேசிக்கிட்டு வருவாங்க ராமநாதபுரம் பொறுக்கி முஸிலீம் இளைஞ்சர்கள் மட்டும் இல்லை இங்க எனக்கு தெரிஞ்சு நிறைய முஸிலீம் இளைஞ்ஞர்கள் பலர் பாக்கிஸ்தானுக்கும் இசிஸ்க்கும் சப்போர்ட் பன்றவங்கதான் அனா வெளில தேச பக்தி வேசம் போடுவாங்க உள்ளுக்குள்ள அவங்க இசிஸ்க்கு ஆதரவுதான் மும்பை தாக்குதல் நடந்தப்ப இங்க குதுகலிச்ச முஸிலீம்கள் உண்டு அனா இந்துக்களும் மத்த மதத்துகாரங்களும் இவங்களுக்கு மரியாத குடுத்து சமமா பாவிக்கனுமா என்ன நியாமோ அல்லாவோட நியாயமும் அதுதான் இசிஸ் செய்யுர கொடுமை இப்ப மட்டும் இல்லை இசுலாமின் தொடக்க காலத்துலயே இருந்ததுதான் ஒரே நாளில் 600 கும் மேற்ப்பட்ட யூதர்கள் கொல்லப்பட்டனர் நபி முன்னிலையில் அதனால் இசிஸ் செய்யுரது எல்லாம் புதுசும் இல்ல அமேரிக்காவின் தூண்டனும்னு அவசியமும் இல்லை அனா பேசுவாங்க பாரு இந்த உத்தமர்கள் உலக்த்துலயே சமாதானமான மதம் இசுலாம்தான்னு அய்யோ அய்யோ………

        • மொத்தத்தில் நான் சொன்னதற்கும் நீங்க இருவர் அளித்த கதறலுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பது போல் தான் உள்ளது . நான் அனைவரும் உற்றுமையாக வாழ்ந்தால் பிரச்சனை இருக்காது என்று சொன்னால் . ஒருத்தன் இஸ்லாத்தில் ஒருசிலர் வரம்புமீரியத்தை மட்டும் வைத்து அடுக்குகிறார். இன்னொருத்தர் சம்பந்தமில்லாமல் தன்னுடைய கற்பனை கதைகளை எல்லாம் கொட்டி தீர்க்கிறார். பாவம் யார் பெத்த பிள்ளையோ சம்பந்தமே இல்லாமல் மற்றவர்களை விரோதியாக நினைத்தே காலத்தை ஒட்டுகிறது..

        • சோசப்பு , தலைப்பை சரியா படிக்கலையா நீங்க ? “இசுலாத்தின் பெயரால்” தீயவர்கள் கொடுமை செய்கிறார்கள் .

          • ராமன் தலைப்ப சரியா படிச்சுட்டுதான் எழுதுறேன் இசுலாத்தின் பெயரால் அமெரிக்க கூலிப்படைனு தலைப்பு இசுலாத்தின் பெயரால் தீயவரகள் கொடுமை என்று இல்லை அதனால தான் இசுலாமிய ஆரம்ப கால வரலாற்றுல நபி 600க்கும் அதிகமான யூதர்கள கொண்டாருனு சொன்னேன் பனு முத்தலிக் குல யூதர்களை அவர்கள் அமைதியாய் இருந்த போது முற்றுகை இட்டு பிடித்து கொண்டு வந்து மதினாவில் பெரிய குழி வெட்டி பிறப்பு உறுப்பில் முடி முளைத்த ஆண்கள் அனைவரையும் கொன்று புதைத்தார்கள் இதற்க்கு சகியான அதிஸ் ஆதாரம் இருக்கிறது அதனாலதான் சொன்னேன் இசுலாமில கொலை செய்யிறது கொள்ளை அடிக்கிறது எல்லாம் புதுசு இல்ல இத அமேரிக்காகாரன் தூண்டனுமுனு அவசியம் இல்ல மதத்த காப்பாத்த மத்தவங்க மேல பழி போடுரது இசுலாமிய இணையதளம் போலவே வினவும் பேசுது

            • joseph,

              அட __________ , சஹீஹான ஆதாரம் இருந்தால் அதனை சேர்த்து பதிவு செய்திருக்க வேண்டியது தானே? இப்படி கேட்டால் இல்லை இல்லை வரலாற்று நூலின் விளக்கவுரையில் உள்ளது ஆனால் அதன் மூல நூல் காணக்கிடைக்கவில்லை என்று அடித்து விடவேண்டியது? இதுதான் _______ வழக்கமான பொழப்பு ? இன்னும் கொஞ்சம் விலாவாரியாக விவாதிக்க முற்பட்டால் உடனே தன்னை கோழையாக தானே ஒப்புக்கொண்டு கோழை இடம் ஏன் விவாதிக்க நினைக்கிறீர்கள் . எனக்கு தாங்கள் பதில் சொல்ல வேண்டாம் என்று ஜகா வாங்கவேண்டியது. ஒரு சில ஜென்மங்களுக்கு எத்தனை முறை சொன்னாலும் உரைக்கவில்லை என்றால் நாம் என்ன செய்ய இயலும்.

              நான் வெறும் சாதாரணமான அடிப்படை கேள்வியைத்தான் கேட்க்கிறேன், அமெரிக்க இராக்கில் கால் பதிக்கும்முன் இத்தகைய மோதல்கள் இருந்தனவா? மேலும் அடுத்தவன் நாட்டு விவகாரத்தில் பஞ்சாயத்து பண்ணுவதை எதன் அடிப்படையில் நீங்கள் ஆதரிக்கிறீர்கள் ? அதுவும் தன சொந்தநாட்டிலேயே பலவகையான பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் அமெரிக்காவிற்க்கு, மற்ற நாடுகளுக்கு பஞ்சாயத்து பண்ணும் யோக்கியதை இருக்கிறதா?

              • “இப்னு அஉன் அறிவித்தார்: போரில் அவர்களை சந்திப்பதற்கு முன்பாக, (இஸ்லாத்தை) ஏற்றுக்கொள்ளும்படி (காபிர்களுக்கு/ நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு) அழைப்பு விடுப்பது அவசியமானதா என்று அவரிடம் விசாரித்து நபி( Nafi) க்கு நான் (கடிதம்) எழுதினேன். இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் அது அவசியமாக இருந்தது என்று அவர் (பதில்) எழுதினார். பனு முஸ்தலிக் (குலத்தினர்) மீது அவர்கள் அசதியாக இருந்து, அவர்களுடைய அவர்களுடைய கால்நடைகள் நீர்நிலைகளில் குடித்துக்கொண்டு இருந்த வேளையில் அல்லாஹ்வின் தூதர்(அவர் மேல் சாந்தி உண்டாகட்டும்) அதிரடி தாக்குதல் நடத்தினார். அவர் (எதிர்த்து சண்டையிட்டவர்களை) கொன்றுவிட்டு மற்றவர்களை சிறை பிடித்தார். அதேநாளில் அவர் ஜுவைரியா பின்த் அல் ஹரித் என்பவளையும் சிறை பிடித்தார். அதிரடி தாக்குதல் புரிந்த படையினரில் இருந்த அப்துல்லாஹ் பின் உமர் என்பவரால் இந்த ஹதீத் தனக்கு கூறப்பட்டதாக நபி (Nafi) கூறினார்.” முஸ்லிம் 19:4292

                ” முஹம்மதுவும் அவரது அவருடைய படையும் (வந்துவிட்டனர்)! என்று கூறிக்கொண்டு மக்கள் தெருக்களுக்கு வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களை பலமாக தோற்கடித்தார். அவர்களுடைய போராளிகள் கொல்லப்பட்டனர்; குழந்தைகளும் பெண்களும் சிறை கைதிகளாக பிடிக்கப்பட்டனர். சபிய்யா என்பவள் திஹ்யா அல் கல்பி என்பவனால் எடுத்துக்கொள்ளப்பட்டாள். பிறகு அவளை மணந்துகொண்ட அல்லாஹ்வின் தூதருக்கு அவள் சொந்தமானாள். அவளுடைய விடுதலையே அவளுக்குரிய மஹராக இருந்தது. புஹாரி 2.14.068

                முஹம்மது தன்னுடைய உள்நோக்கங்களை வெளிப்படுத்தியபோது, அவருடைய சித்தப்பா மகனும் தீவிர பின்பற்றியுமான அலி, அவர்களுடைய கோட்டையை பாதுகாக்கும் படையை திடீரென தாக்கி கைப்பற்றுவேன் அல்லது கொல்லப்படுவேன் என்று சபதம் செய்தார். இந்த முற்றுகை 25 நாட்களுக்கு நீடித்தது. இறுதியாக பனு குரைலாவினர் நிபந்தனை இன்றி சரணடைந்தனர். பெண்களும் குழந்தைகளும் தனிமையில் சிறைவைக்கபடும் அதே நேரத்தில், ஆண்களுக்கு கைவிலங்கு இடும்படி முஹம்மது ஆணையிட்டார். அப்பொழுது, பனு குரைலாவின் நண்பர்களான அவ்ஸ் குலத்தினர் அவர்களிடம் மென்மையாக இருக்குமாறு முஹம்மதிடம் சிபாரிசுசெய்து வேண்டினர். அவர்களிடையே முரட்டு துஷ்டனாக இருந்த, அம்பினால் மிக மோசமாக காயப்பட்டிருந்த சஅத் பின் முஆத் என்பவன் யூதர்களின்மேல் தீர்ப்பு வழங்கட்டும் என்று முஹம்மது பிரேரணை வைத்தார். சஅத் பனு குரைலாவின் முன்னாள் நண்பனாக இருந்தான், ஆனால் இஸ்லாத்திற்கு அவன் மதம் மாறியபின்பு அவர்களுக்கு எதிராக அவன் மனம் மாறி இருந்தான். அகழ் யுத்தத்தின்போது ஒரு மக்காவாசி எறிந்த அம்பினால் தான் அடைந்த மிக மோசமான காயத்திற்கு அவன் அவர்களை குறை கூறி இருந்தான். சஅத் பனு குரைலாவை பற்றி எப்படிப்பட்ட உணர்வுள்ளவனாக இருந்தான் என்பதை முஹம்மது அறிந்தே இருந்தார். அவன் அவருடைய மெய்பாதுகாவலனாக இருந்தவன் தானே, அவன் மசூதியிலேயே தூங்குவான்.
                “அந்த குலத்தை சேர்ந்த வலிமையுள்ள எல்லா ஆண்களும் கொல்லப்பட வேண்டும், பெண்களும் குழந்தைகளும் கைதிகளாக்கப்பட வேண்டும், அவர்களுடைய செல்வம் முஸ்லிம் வீரர்களுக்கு பங்கிட்டு கொடுக்கப்பட வேண்டும்” என்பதே சஅத் தின் தீர்ப்பாக அமைந்தது.
                இந்த கொடூரமான தீர்ப்பினால் முஹம்மது மகிழ்ச்சியடைந்து அல்லாஹ்வின் கட்டளையைகொண்டே சஅத் தீர்ப்பு வழங்கினார் என்று கூறினார். அவர் தன்னுடைய சொந்த முடிவுகளுக்கு அல்லாஹ்வையே அடிக்கடி காரணம் காட்டினார். இந்த முறை அவர் தன்னுடைய அபிலாஷைகளை வாய்மொழியாக்க சஅதை தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
                AR-Raheeq Al-Makhtum by Saifur Rahman al-Mubarakpuri http://islamweb.islam.gov.qa/english/sira/raheek/PAGE-26.HTM
                [2] Ibid.
                [3] Ayatollah Khomeini: A speech delivered on the commemoration of the Birth of Muhammad, in 1981.
                [4] Bukhari, Volume 4, Book 52, Number 280:
                [5] Sunan Abu-Dawud Book 38, Number 4390. Sunan Abu-Dawud is another collection of hadith regarded to be sahih.
                [6] Bukhari Volume 4, Book 52, Number 288
                [7] Bukhari Volume 4, Book 52, Number 176

                • Joseph,
                  //இப்னு அஉன் அறிவித்தார்: போரில் அவர்களை சந்திப்பதற்கு முன்பாக, (இஸ்லாத்தை) ஏற்றுக்கொள்ளும்படி (காபிர்களுக்கு/ நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு) அழைப்பு விடுப்பது அவசியமானதா என்று அவரிடம் விசாரித்து நபி( Nafi) க்கு நான் (கடிதம்) எழுதினேன். இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் அது அவசியமாக இருந்தது என்று அவர் (பதில்) எழுதினார். பனு முஸ்தலிக் (குலத்தினர்) மீது அவர்கள் அசதியாக இருந்து, அவர்களுடைய அவர்களுடைய கால்நடைகள்……\\
                  இந்த ஆதாரங்களை எல்லாம் வைத்துக்கொண்டு என்ன சையப்போரதாக உத்தேசம்… ? என்னில் போர் என்றால் எதிராளியை கொள்வது அல்லது புறமுதுகிடாமல் எதிராளியால் கொலை செய்யப்படுவது தான் வீரம். இன்று வரை அதுதான் நடைமுறை .. இன்னும் போரில் தோற்றவர்களை சிறைவைப்பார்கள் அன்றைய காலகட்டத்தில் அடிமைமுறை இருந்ததால் அடிமையாக வைத்துக்கொண்டனர்.

                  தாங்கள் எப்படி போர் சையவருபவர்களுக்கு பிரியாணி சைதுப்போட்டு பந்திப்பரிமாரி மொய்யும் எழுதி அனுப்பிவைப்பீர்களா? கொஞ்சமாவது மூலையை வளர்த்துக்கோங்க பாஸ், இப்படியெல்லாம் சிருபுல்லைத்தனமா உங்க வெப்பில் எழுதி உள்ளீர்கள் என்று சொன்னால் மீண்டும் அதையே இங்கேயும் வாந்தி எடுத்து தங்களை தாங்களே அசிங்கப்படுத்திக்கொண்டீர்களே..

                  • அன்றைய காலக்கட்டத்தில் நபி(ஸல்) அவர்களை அவர்களின் சொந்தக்காரர்கள் உட்பட பலர் நபியை எதிர்த்து போரிடுவதற்கு காரணம் அவர் இஸ்லாம் என்ற ஓரிறை கொள்கையின் பக்கம் அழைப்பு விடித்ததினால் தான். .எனவே தான் போர் வீரர்களில் , போரை தவிர்த்துக்கொல்வதர்க்கு விரும்புவோருக்கு மூன்று வகையான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன..1)ஜிஸ்யா என்னும் வரிமுறை , 2)நாட்டை விட்டு செல்வது அல்லது 3) இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வது ….. மொத்தத்தில் எதிர்ப்பவர்களின் உயெரை எடுக்கவேண்டும் என்பது அல்ல நோக்கம் , இனி பிரச்சனை எழாமல் பார்ப்பதே நோக்கம் .

                    • Zahir,

                      //எனவே தான் போர் வீரர்களில் , போரை தவிர்த்துக்கொல்வதர்க்கு விரும்புவோருக்கு மூன்று வகையான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன//

                      உங்கள் வார்த்தை ஜாலத்திற்கு ஒரு பெயர் இருக்கிறது. தக்கியா.

                      முகமதியம் அதை எதிர்த்துப் போரிட்ட வீரர்களை மட்டும் இந்த மூன்று வாய்ப்புக்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கச்சொல்வதில்லை. அது தான் வெற்றிகண்ட இடத்தின் எல்லா ஆண்களையுமே இதற்கு உட்படுத்துகிறது. கவனிக்கவும். வீரர்களை மட்டுமல்ல. எல்லா ஆண்களையுமே. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரே தீர்வுதான் என்பதும் நாமெல்லோரும் அறிந்ததே.

                      Islamic State அதன் கட்டுப்பாட்டில் உள்ள காபிர் குடிமக்களை பெண்களை எப்படி நடத்துகிறது என்பது இதற்கு ஒரு நல்ல அன்மைக்கால எடுத்துக்காட்டு.

        • Joseph,

          உங்கள் பின்னூட்டங்களில் குறைந்த பட்சம் முற்றுப்புள்ளிகளைப் பயன்படுத்தி வாக்கியங்களை தெளிவு படுத்துங்கள்.

          நன்றி.

          • நன்பர் உனிவர்புட்டி மன்னுச்சுடுங்க இனி மேல் நான் என் எழுத்தை தெளிவாக எழுதுரேன் ,ஆனா இங்க ரெம்பதான் இசுலாமிற்க்கு சப்போற்ட் பன்றாங்க நான் முகமது செய்த யூத கொலைகளை கதிஸ் ஆதாரத்துடன் பதிவிட்டேன் நன்பர் ஜாகிர் கேட்டுக்கோண்டதற்க்காக அனால் அதை வெளியிட வில்லை ஏன் என்று தெரியவில்லை இப்ப ஜாகிர் என்ற இசுலாமிய வெறியர் என்னை தூற்றுவார் பரவாயில்லை எல்லாம் போலி கம்மூனிஸ்டுகளை தெரிந்து கொண்டது நல்லத்தான்…..

          • //உங்கள் வார்த்தை ஜாலத்திற்கு ஒரு பெயர் இருக்கிறது. தக்கியா.\\என்வார்த்தைகளில் எவ்வித ஜாலங்களும் இல்லை , எவ்வித மாய ஜாலமும் இல்லை… இதற்க்கு நீங்கள் தர்க்கிய என்று பெயர்வைத்தாலும் துருக்கியா என்று பெயர்வைத்தாலும் எனக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை.

            \\முகமதியம் அதை எதிர்த்துப் போரிட்ட வீரர்களை மட்டும் இந்த மூன்று வாய்ப்புக்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கச்சொல்வதில்லை. \\ அடிப்படையே தவறு முகம்மதியம் என்ற ஒரு வழிபாட்டு முறை எங்களிடம் இல்லை நாங்கள் நபியை (ஸல்) அவர்களை வணங்குபவர்கள் அல்ல . இன்னும் ஆதம்(அலை) முதல் முஹம்மது நபி (ஸல்) வரை அனைவர்கள் மீதும் கண்ணியமும் மரியாதையும் செலுத்துகிறோம் என்பதனை கருத்தில் கொள்க . எனவே முகம்மதியம் என்ற தங்களின் சொற்றடர் அர்த்தமற்றது என்பதை அறிந்துக்கொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

            போரில் ஈடுபடாதவர்களை மதம்மாருவதர்க்கோ நாட்டை விட்டு செல்லவோ எவ்வித நிர்பந்தமும் இஸ்லாமிய ஆட்சியில் கொடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை . மேலும் மாற்று மதத்தை சார்ந்தவர்களுக்கு ஜிஸ்யா என்னும் வரி முறை இருந்தது உண்மை ஆனால் அந்த வரி முறையானது அவர்களின் உயெருக்கும் உடமைகளுக்கும் எவ்வித பங்கமும் உள்நாட்டில் உள்ளவர்களின் மூலமொ வெளிநாட்டில் இருப்பவர்களின் மூலமொ ஏற்படாமல் பாதுகாப்பை இஸ்லாமிய அரசு தருவதற்கான ஒரு வழிமுறை ஆகும் . மேலும் இது நிச்சயமாக ஆண்கள் இல்லா பெண்களிடமிருந்து பெறப்படுதலும் கூடாது மேலும் அந்த ஜிஸ்யா தொகையானது சொற்பமான அனைவராலும் கொடுக்க சக்தியுடைய தொகையாகவே இருக்க வேண்டும் என்பது தான் நிபந்தனை . இந்த நிபந்தனைகளை தவிர்த்து உருவாக்கப்படும் வரிமுறை ஜிஸ்யா ஆகாது என்பதையும் கருத்தில் கொள்க.

            \\Islamic State அதன் கட்டுப்பாட்டில் உள்ள காபிர் குடிமக்களை பெண்களை எப்படி நடத்துகிறது என்பது இதற்கு ஒரு நல்ல அன்மைக்கால எடுத்துக்காட்டு.\\ இஸ்லாமிக் ஸ்டேட் பற்றிய விஷயங்களில் நான் கருத்து ஏதும் சொல்லும் அளவிற்க்கு நான் அவர்களை பற்றிய தெளிவான விஷயங்களை இதுவரை அறிந்திருக்கவில்லை. மேலும் மீடிய சொல்லும் விஷயங்களை வைத்து நான் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை . ஏனனில் மீடியா தன்னுடிய தொழில் தர்மத்தை பலமுறை மீறிய வரலாற்றை காணமுடிகிறது.

  5. ‘ஒரு’ ஐசிஸை குறை சொல்றதுன்னா கூட இந்து இயக்கங்களை சார்ந்து குறை கூறினால் தான் ‘பிழைக்க’ முடிகிறது, வினவால் என்பது நகைமுரன். நீங்களெல்லாம் புரட்சி போராட்டம்னு எப்படித்தான காலம் தள்ள போறீங்களோ!!!

    முஜாஹிதீன்கள், தாலிபான்கள், அல்கய்தாக்கள் இப்ப ஐசிஸ். இவங்கள அமெரிக்கா எப்படி சுலபமா தங்களோட வழிக்கு கொண்டு வர முடியுது. அதற்கு எது உதவுதுனு கொஞ்சம் விளக்கினால் நல்லது.

    • இது யூத அமெரிக்க கூட்டு களவாணிகள் எதிர்பாராத ஒரு திருப்பம் .எகிப்து வீழ்ந்தால் இஸ்ரேல் பாடு இனிமேல் திண்டாட்டம்தான் .இதில் ஹமாசும் இந்த கூட்டணியில் சேர்ந்தால் அவ்வளவுதான் .இவ்வளவு வருட சூழ்ச்சியில் அரேபிய நாடுகளை பிரித்து அதன் மூலம் பலனை அனுபவித்து வந்த அமெரிக்க கூட்டு களவாணிகளுக்கு இனிமேல்தான் உண்மையான பிரச்சனையே .உள்நாட்டு கலவரத்தை பல நாடுகளில் மூட்டி உலகத்தை இவ்வளவு நாள் ஏமாற்றி வந்ததற்கு இன்னொரு காட்டுமிராண்டிகள் கூட்டத்தின் மூலம் அடி விழப்போகிறது .நேர்மையாக நடந்த அரபு வசந்தத்தை சூழ்ச்சியில் உடைத்ததற்கு சரியான தண்டனை கிடைக்க போகிறது .இந்தியாவிலும் ஹிந்துத்வா பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்கவில்லை என்றால் வெறுப்படையும் இந்திய முஸ்லீம்கள் அந்த கூட்டத்தில் சேர நிறைய வாய்ப்புள்ளது .குடும்பம் என்ற வட்டத்தை சுற்றியே பெரும்பாலான முஸ்லீம்கள் இருப்பதால் தங்களுக்கு கொடுமை நடந்து கொண்டிருந்தாலும் அமைதியாக இருக்கிறார்கள் .அதற்கு வேட்டு வைக்கும் வகையில் ஹிந்துத்வாவினரின் நடவடிக்கைகள் கட்டுக்கடங்காமல் போகும்போது ஒரு நேரத்தில் எதிர் விளைவுகள் மிகக்கடுமையாக இருக்கும் .

      • இந்திய சட்டத்துறையும் நீதித்துறையும் நேர்மையாக நடக்கவில்லை என்பதே உண்மை .பெரும்பாலான குண்டுவெடிப்புகள் /கலவரங்கள் திட்டமிட்ட செய்யப்படுகின்றன .அதிகம் சாவது அப்பாவிகளே .ஆனால் பழியோ முஸ்லீம்கள் மேல் .ஆனால் சட்டம் தன கடமையை நேர்மையாக செய்வதில்லை . மக்கள் எப்போது அதன் மேல் நம்பிக்கையை முழுமையாக இழக்கிறார்களோ அப்போதுதான் அந்த கோபமானது தீவிரவாத எண்ணமாக மாறும் .நமது அண்டை நாடுகள் எதுவும் இந்தியாவின் நட்பு நாடுகள் கிடையாது .எதிரிகளே அதிகம் .இந்தியா உடையவேண்டும் என்று நினைப்பவை .மதத்தின் பெயரால் நேரடியாகவோ மறைமுகமாகவோ செயல்படும் இயக்கங்கள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும் .தொண்டு நிறுவனம் அறக்கட்டளை என்பவைகளையும் கண்காணிக்க வேண்டும் .துவேஷ எண்ணங்களை பிரிவினை தூண்டுபவர்களை யாராக இருந்தாலும் உள்ளே தள்ள வேண்டும் .ஆனால் என்ன கொடுமை என்றால் யார் ஒற்றுமையான கலவையான இந்தியாவிற்கு எதிரானவர்களோ அவர்களே ஆட்சியில் இருக்கிறார்கள் ..இது எங்கே போய் முடியப்போகிறது என்று தெரியவில்லை .இந்தியா ஒரு அற்புதமான நாடு .அது ஒற்றுமையாக நிலையாக என்றென்றும் நீடித்திருக்க விரும்புகிறேன் .இறைவன் அருள் புரியட்டும் .

      • “எகிப்து வீழ்ந்தால் இஸ்ரேல் பாடு இனிமேல் திண்டாட்டம்தான் .இதில் ஹமாசும் இந்த கூட்டணியில் சேர்ந்தால் அவ்வளவுதான் .” This article is about the terrorism.. but you are not able to understand. What is your problem? You have written some unnecessary things.

      • //இவ்வளவு வருட சூழ்ச்சியில் அரேபிய நாடுகளை பிரித்து அதன் மூலம் பலனை அனுபவித்து வந்த அமெரிக்க கூட்டு களவாணிகளுக்கு இனிமேல்தான் உண்மையான பிரச்சனையே .இனிமேல் பிரச்னை குறைந்து விடும்:// அப்படியா? isis இஸ்லாத்தின் ஷியா, சூபி, ஈஜ்டி/சபக் ஆகிய பிரிவுகளை இஸ்லாமியர்கள் இல்லை என்று சொல்லி வதைக்கின்றனர். அவர்களின் மசூதியை கொளுத்துகின்றனர். இரான் தைரியமாக ஷியா பெரும்பான்மை சமூகம் என்று அறிவித்துக்கொண்டு ஷியாக்கள் எங்கிருந்தாலும் உதவ /முயல்கிறது. isis-யை அடக்குவதற்காக இராணும் அமெரிக்காவும் கூட்டு சேர்ந்தாலும் ஆச்சரியமில்லை. பாகிஸ்தானில் புனித யாத்திரை முடித்து வந்த ஷியா முஸ்லிம்கள் இருந்த பேருந்துகளை தீயிட்டுக் கொளுத்தி, ஷியாக்களை உயிரோடு எரித்து சுன்னி-ஷியா சண்டைக்கு ஊக்கம் கொடுக்கின்றனர். அஹ்மெடியர்கலை கொடுமைப் படுத்துவது தொடர்கிறது. ஆகவே, முஸ்லிம்கள் அவர்களுக்குள்ளேயே நிறைய அடித்துக் கொள்வார்கள். அமெரிக்காவுக்கு கொஞ்சம் பளு குறைவு

  6. Nice article. People have to realize that Governments encourage terrorist groups of neighbour countries (America supports terrorist groups worldwide) to gain political advantage over the neigbouring country. When the Government gets a deal with the neighbouring country then it will destroy the same extremist/terrorist groups in the name eradicating terrorism.

    This is a successful formula used by most of the big nations like US, Britain etc and even India did that.

  7. வெகுஜன முஸ்லிம்களுக்கும், இந்த மாதிரியான அமைப்புகளுக்கும் ஆன தொடர்பு ஒரு வழிப்பாதையானது. சாதாரண இஸ்லாமியன் இறைவனைத் தொழுது கொண்டு, அச்சுறுத்தப்ப்டும் சூழலில் ஒற்றுமையாய் இருக்க வேண்டிய கட்டாயத்திற்குள் இருப்பதால், இந்த மாதிரியான பன்னாடைப் பரதேசி கைக்கூலிகள் எல்லாம் அமெரிக்க வழங்கிய ஆயுதத்தை ஏந்திக்கொண்டு அமெரிக்க வழங்கும் பணத்தில் உண்டு கொண்டு இயக்கம் ஆரம்பித்து மார்க்கெட்டிங் செய்கிறார்கள்.

    எல்லா இன மத மக்களையும் போலத்தான் ஒரு சராசரி இஸ்லாமியனும் வறுமையை எதிர்த்து ஒரு சாதாரணமான அன்றாடச் சிக்கல்கலுடலான வாழ்க்கையை வாழ்ந்துவிடநினைக்கிறான். அமெரிக்கா, ஆர்.எஸ்.எஸ். என்று உயிருக்கும் வாழும் வாழ்க்கைக்குமான அச்சுறுத்தல்கள் தொடர்ந்து வருவதும், கட்டமைப்புகளில் பட்டம் கட்டி தனிமைப் படுத்தப் படுவதும், ஒரு சமூகத்தையே ஒரு மூலையை நோக்கி துரத்துகிறது. தப்பிக்க வழியில்லாத மூலைக்குள் அடைபடும் பூனை கூட திருப்பித் தாக்க முனைகிறது. அதுதான் இங்கு நடக்கிறது.

    மக்களுக்கு பாதுகாப்பு உணர்வு நம்பிக்கை தர வேண்டிய அரசின் பிரதினிதியே அப்படிப்பட்ட அச்சுறுத்தல் செய்யும் ஒரு அமைப்பிலிருந்து வந்தவர் எனும்போது, ஒரு சாதாரணனின் மனநிலை என்ன?

    மாற்றாக, சிங்கப்பூர் போன்ற பலமத மக்கள் வாழும்நாட்டினில் இஸ்லாமியர்கள் மைனாரிட்டியினர்தான், ஆனாலும் எந்த அச்சுறுத்தலும் இன்றி, கட்டம் கட்டப்படுதலின்றி வாழுகிறார்கள். அங்கு இந்த மாதிரியான குழு மனப்பான்மை, ஆயுதம் தூக்குதல் போன்றவை காணபதில்லை.

    மொத்தத்தில் இந்த மாதிரியான இயக்கங்களால், சாதாரண இஸ்லாமியனுக்கு எந்தப் பயனும் இல்லை, மாறாக அச்சுறுத்தல்கள், பயங்கள்தான் அதிகமாகின்றன. அன்றாட வாழ்க்கையில் மற்றுமொரு சிக்கல். இதனால்தான், ஜவாகிரி வெளியிட்ட அல்காயிதா ப்ராஞ்சுக்கு முஸ்லிகளிடமிருந்தே எதிர்ப்பு.

    இஸ்லாம் இறைவனுக்கும் மனிதனுக்கும் ஆனநேரடியான தொழுகை பிரார்த்தனையை முன்மொழிகிறது. வழக்கம்போல் மத வியாபாரிகள் தம் சுயநலத்திற்காக அமைப்புகளை உருவாகியிருக்கிறார்கள். அதற்கும் இஸ்லாமியக் கொள்கைகளின் அடிப்படைக் கட்டுமானத்திற்கும் தொடர்பேயில்லை. உண்மையில் சாதாரண இஸ்லாமியன் இம்மாதிரியான அமைப்புகளிலிருந்து தம்மை விலக்கிவைத்துக் கொள்ளத்தான் விரும்புகிறான். ஆனால் தொடர்ந்து ஒவ்வொரு இஸ்லாமியனையும் வெகுஜன ஊடக பிம்பஙளின் அடிப்படையில் குற்றவாளியாய்ப் பார்ப்பது அவர்களைமேலும் தனிமைப் படுத்துகிறது.

    நாமும் எப்போது அமைதியாய் ஒரு வாழ்வு வாழ்வோம் என்கிற ஏக்கத்துடனேயே ஒவ்வொருநாளும் விடிகிறது. அது நிறைவேறாத ஏக்கமாகவே தொடர்ந்து இருக்கிறது என்பது தான் இந்திய முஸ்லிம்களின் சாபக்கேடு.

    • ஜமால்,
      உங்கள் கருத்து உண்மையானது.

      இதனை நான் வழி மொழிகிறேன். நீங்களே சொன்ன மாதிரி இது அரசியல் வியாபாரிகளின் தந்திரம் என்பதை இந்து, முஸ்லிம், கிறித்துவர் ஆகிய பொது ஜனம் உணர்ந்தாலே போதும்.

    • வெகு ஜன மக்கள் விலகி இருக்கிறார்கள் என்பதை ஏற்று கொள்ள முடியவில்லை . தங்கள் மதம் தனி நாடு நிறுவி மத புதகபடி நல்வாழ்வு வழங்கப்படும் என்பதை ஏற்று கொள்கிறான் . மேலும் தவறுகளை எல்லாம் , மதம் மூல காரணம் என்பதை மறுத்து அமேரிக்கா போன்ற நாடுக்களின் மீது போட்டு மதத்தை புனிதமாக்கி மகிழ்கிறான் .

      ஹைதிராபாத் இளைஞர்கள் மதம் அடிப்படையில் சென்றார்களா , இல்லை அரசியல் காரணுங்களுக்காக செல்கிறார்களா?

      ஆம் மதம் தான் காரணம் என்று ஏற்று கொள்ளாத வரை , புற காரணிகளை தேடி தூற்றுவதை நிறுத்தாதா வரை , தீர்வு இல்லை

      • //வெகு ஜன மக்கள் விலகி இருக்கிறார்கள் என்பதை ஏற்று கொள்ள முடியவில்லை . தங்கள் மதம் தனி நாடு நிறுவி மத புதகபடி நல்வாழ்வு வழங்கப்படும் என்பதை ஏற்று கொள்கிறான் . மேலும் தவறுகளை எல்லாம் , மதம் மூல காரணம் என்பதை மறுத்து அமேரிக்கா போன்ற நாடுக்களின் மீது போட்டு மதத்தை புனிதமாக்கி மகிழ்கிறான் .\\தாங்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும், அது தங்களின் காவி சித்தாந்திட்க்கு மாற்றம் ஆகிவிடுமே. காவி கண்ணாடியை இல்லாமல் பார்க்கப்படும் உலகம் மிகவும் அமைதியானது விசாலமானது என்பதை கூடியவிரைவில் தாங்கள் உணர்வதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

  8. வினவுக்கு அமெரிக்க,காலனி,ஏகாதிபத்தியம் இந்த வார்த்தைகள் இல்லாமல் கட்டூரைகள் எழுத முடியாது.என்ன காழ்ப்பு உணர்ச்சியோ தெரியவில்லை.isis பயங்கரவாதி பற்றி எதையும் காணோம்….அமெரிக்காவை தாக்கி எழுத isis தீவரவாதிகள் என்ற சிறு குறிப்பை மட்டும் வைத்து தனது கொலைவெறி எழுத்தை வடிதிருகின்றது.இது காட்டுமிராண்டி காலம் அல்ல.இதற்கு முன் மதத்தின் பெயரால் எத்தனயோ போர்கள் நடந்திருந்தாலும் அதையே திருப்பி செய்வதும், அப்படியே நடப்பதை சொன்னால் சிலுவை போர்கள் நடக்கவில்லையா என்று கேட்பது isis தீவரவாதியின் எண்ணத்தை விட மோசமான சிந்தனை.போரில் இருவரும் சமபலத்துடன் ஆயுதத்துடன் போரிட்டனர்.ஆனால் கூட்டம் கூட்டமாக அப்பாவி மக்களை கையை கட்டி கண்ணை கட்டி,கத்தியாலும் துப்பாக்கியாலும் சுட்டு வீழ்த்துவது என்ன நியாயம்?.காவி பயங்கரவாதி என்றால் அவன்,இவன்,தலைவன் என்று எழுதுவதும் isis தலைவனை தலைவர் என்று “அன்போடு ” விளிப்பதும் என்ன எழுத்து நேர்மை.!..isis ஆடை அணிந்த பொறுக்கிகளை “இளைஞர்கள்” என்று பாசமாய் குறிப்பிடும் வினவு காவி கொலைகார்களை “பொறுக்கி” என்று எழுதும் நேர்மை…தினமலம்,தினமணி தந்தி குமுதம் இவர்களை விஞ்சிவிட்டது வினவு.

  9. From your aricle and reders’opinion, one thing is clear.
    RSS is worst than ISLAMIC STATE ORGANIZATION.
    Two things are not clear.
    a) the people who got arms / ammunition / money from USA, dont know anything about USA and simply accepted it. SO innocent?
    b) Like Mr. Jamal, Indian muslims are feeling unsafe in India. Is pakistan a better place for minorities?

    • isis காட்டுமிராண்டிகள் என்பது உண்மை .ஆனால் அவர்கள் கண்ணுக்கு தெரியும் கொடியவர்கள் .ஆனால் ஹிந்துத்வாவினரோ நல்லவர்கள் போல் நடிக்கும் நாசக்கார கும்பல் .isis சை விட நீங்களே அபாயகரமானவர்கள் .உங்கள் நாசக்கார கும்பலை ஒழித்தாலே நாட்டிற்கு நலம் பயக்கும்

  10. இப்போதுதான் வினவு இஸ்லாமின் பயங்கரத்தை உணர்ந்துள்ளது போலும். இதில் வேடிக்கை என்னவென்றால் இதிலும் இஸ்லாமின் மீது ஒரு மென்மையான போக்கு காணப்படுகிறது. அது ஏன் என்று தெரியவில்லை. இந்த பயங்கரவாதிகளைப் பற்றி கட்டுரை எழுதும்போதும் இந்துக்களை பற்றி ஓரிரு வரிகளாவது எழுதி அதை குறை சொல்வது இதன் செயல்!! வினவு ஈராக்கிற்கு சென்று அங்கு என்ன நடக்கிறது என்று நேரடியாக தெரிந்து அதனை இங்கு எழுதி இருந்தால் நன்றாக இருக்கும். ஒருவேளை அமெரிக்க பத்திரிக்கையாளர்களுக்கு நடந்த அதே கெதி தனக்கும் ஏற்படும் என்ற பயத்தில் அங்கு செல்லவில்லை போலும். தமிழ் நாட்டில் உள்ள சன்னி பிரிவு இஸ்லாமிய இளைஞர்கள் பலர் ஐ.எஸ்.ஐ.எஸ். டி.சட்டையுடன் இருந்தது அனைவருக்கும் தெரியும். வினவு அவர்களை சந்தித்து அவர்களின் அனுமதியுடன் ஈராக் சென்றிறுக்கலாம். சன்னி பிரிவு மற்றுமல்ல இஸ்லாமியத்தில் உள்ள அனைத்து பிரிவுகளும் பயங்கரவாதத்தை கையில் எடுத்துக்கொண்டுதான் உள்ளன. இதில் வேறுபாடுகள் இல்லை. இதில் அமெரிக்காவை குறை சொல்ல என்ன இருக்கிறது? அமெரிக்காவுடன் இஸ்லாமிய நாடுகள் பல பல்வேறு ஒப்பந்தங்கள் செய்துள்ளன. வேண்டுமென்றால் அனைத்து ஒப்பந்தங்களையும் அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ரத்து செய்து கொள்ள வேண்டியதுதானே.

    இஸ்லாமிய நாடுகள் எண்ணையை ஒன்றும் இலவசமாக தரவில்லை.அதற்கு இணையாக உணவுப்பொருள்களை பல நாடுகளும் கொடுக்கின்றன.எண்ணை இல்லாவிட்டால் யாரும் வாழமுடியாமல் போகாது. ஆனால் உணவு இல்லாவிட்டால் இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் அழிந்துவிடும். இந்த எண்ணையும் இன்னும் சில பத்தாண்டுகள் மட்டுமே. அதன் பிறகு இஸ்லாமியர்களின் பயங்கரவாதம் தானாக ஒழிந்துவிடும்!! ஆப்பிரிக்கா கண்டநாடுகள் போல் இஸ்லாமியநாடுகளிலும் பட்டினிதான். மக்கள் தொகை தானாக குறையும்.

    • இந்த கிழட்டு ஹிந்துத்வா நாறவாயன் தொல்லை தாங்க முடியவில்லை .இந்த லூசை யாராவது பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுங்கப்பா .

      • ஏன்டா அம்பி குஜராத்ல வாங்குனது உங்கள்லுக்கு பத்தலையா. இன்னும் வேணுமா. அப்ப அவரு முதல்வர் . இப்ப ? பாத்து சூதனமா நடந்துக்கோ

      • ஏன்டா அம்பி குஜராத்ல வாங்குனது உங்கள்லுக்கு பத்தலையா. இன்னும் வேணுமா. அப்ப அவரு முதல்வர் . இப்ப ? பாத்து சூதனமா நடந்துக்கோ

        • //ஏன்டா அம்பி குஜராத்ல வாங்குனது உங்கள்லுக்கு பத்தலையா. இன்னும் வேணுமா. அப்ப அவரு முதல்வர் . இப்ப ? பாத்து சூதனமா நடந்துக்கோ\\

          உங்களைபோன்ற கீழ்த்தரமானவர்களால் தூவப்படும் விஷவிதைகள் தான் நாளை நாட்டை அழிக்கும் ஆயுதமாக இருசாராரிலும் உருவாகிறது…

          எதனை பார்த்து நடந்துக்கு சொல்கிறாய் , நக்கி வாழும் நாய்களாக வாழ நாங்கள் ஒன்னும் கைபர் வழியாக வந்த ஓநாய் கூட்டம் அல்ல.. எங்களுடன் சேர்ந்து வாழ்ந்தால் எங்களில் நீயும் ஒருவன் , எங்களுக்குள் பிரிவினையை தூவ நினைத்தால் உம்மை போன்றோருக்கு வாயில் மணல் தான் மிஞ்சும். இனத்தால் திராவிடன் , கலாச்சாரத்தால் தமிழனான , மதத்தால் இஸ்லாமியனான எங்களுக்கு நாயை நக்கி உயிர் வாழ்வதை விட சிங்கமாய் கர்ஜித்து சாவதையே விரும்புவோம்.

          கோழையாய் நூரு ஆண்டுகள் வாழ்வதை காட்டிலும் வீரனாய் ஒரு நாள் வாழ்வதே சிறந்தது.. dippu sultan.

          சொந்த நாட்டிற்க்கு ரெண்டகம் பண்ணி ஆங்கிலேயன் அரசியல் அவையில் அவனது மொழியை கற்று ஆங்கிலேயனின் …….. நக்கி வாழ்ந்த கூட்டதிட்க்கு இதுவெல்லாம் புரிய வைப்பே இல்லை.

          • //எங்களுக்குள் பிரிவினையை தூவ நினைத்தால் உம்மை போன்றோருக்கு வாயில் மணல் தான் மிஞ்சும். இனத்தால் திராவிடன் , கலாச்சாரத்தால் தமிழனான , மதத்தால் இஸ்லாமியனான எங்களுக்கு நாயை நக்கி உயிர் வாழ்வதை விட சிங்கமாய் கர்ஜித்து சாவதையே விரும்புவோம்// அப்பிடினா ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிட்ட போய் கழுத்த காட்டுங்க மத்த மதத்துகாரன ஏன் டிஸ்ரப் பன்றீங்க முஸுலீம் மன்னன் எவனுமே ஆங்கிலேயன நக்கி வாழழயா பொருக்கிக இருபது பேர் போட்டா எடுத்து போட்டு இருக்கானுகள்ள அவனுகள போலீஸ் வேட்டையாடுனா தப்பே இல்ல …..

          • //நக்கி வாழும் நாய்களாக வாழ நாங்கள் ஒன்னும் கைபர் வழியாக வந்த ஓநாய் கூட்டம் அல்ல.. எங்களுடன் சேர்ந்து வாழ்ந்தால் எங்களில் நீயும் ஒருவன் , எங்களுக்குள் பிரிவினையை தூவ நினைத்தால் உம்மை போன்றோருக்கு வாயில் மணல் தான் மிஞ்சும். இனத்தால் திராவிடன் , கலாச்சாரத்தால் தமிழனான , மதத்தால் இஸ்லாமியனான எங்களுக்கு நாயை நக்கி உயிர் வாழ்வதை விட சிங்கமாய் கர்ஜித்து சாவதையே விரும்புவோம்.//அப்பிடினா போய் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகிட்ட போய் உங்க கழுத்த காமிங்க யார் வேணாமுன்னா மத்த மதத்துகாரன ஏன் குண்டு வச்சு கொல்லனும் ஆங்கிலேயன்ட நக்கி வாழ்ந்த இசுலாமிய மன்னர் யாருமே இல்லையா வீரன் பூலித்தேவன புடிக்க வந்த நாவாபும் இந்துவா என்னமோ போங்க உங்களுக்குதான வினவு வெப்சைட்டே நடத்துது போட்டு தாக்குங்க ஆன்லைன் பிஜை மாறி…..

            • அட டுபாக்குர்

              ஆங்கிலேயன் யாரு கிறுத்துவன் அவனிடம் அடிமையாக இருந்த அற்காடுநவாப் என்ற ஒரு முஸ்லிம்தன் , வீரபாண்டி கட்டபெம்ன்,புலிதேவன், மருதுவை காட்டி கொடுத்தது யாரு தென்டைமன், எட்டப்பன் போன்ற இந்துமன்னன்கள்தன் ஆங்கிலேயன்க்கு மாமா வேலைபார்த்த பாதர்மார்கள்

              ஆங்கிலேயன்ட நக்கி வாழ்ந்த இசுலாமிய மன்னர் யாருமே இல்லையா?

              அற்காடுநவாப் தவிர வேறு யாரும் இல்லை அனால் இந்து மன்னன்கள் சிலரை தவிர மற்ற எல்லரும் ஆங்கிலேயன்ட நக்கி வாழ்தன் கிறுத்துவ பாதர் உள்பட

              காவி,வெள்ளை,பச்சை திவிரவாதிகள் ஒழித்தால் போதும் நாடு முன்னேறும்

              • இத படி p.joseph

                மருதுபாண்டியரின் போர்ப் படைத் தளபதிகள் பற்றிய வரலாற்று தகவல்

                சிவகங்கை சீமையின் திருப்பத்தூர் கோட்டை வாயில். சுற்றிலும் மக்கள் வெள்ளம். ஒவ்வொருவர் முகத்திலும் ஆறாத் துயரம். ஒருவர் இருவர் அல்ல. ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ்ப் போராளிகளை தூக்கிலிட்டுக் கொண்டிருக்கிறார்கள் வெள்ளையர்கள்.

                முதலில் அஞ்சாநெஞ்சன் சின்னமருது. மக்கள் இதயம் துடிதுடித்தது. அடுத்தது சின்ன மருதுவின் மூத்தமகன், உற்றார் உறவினர், போர் வீரர்கள், கடைசியாக பெரிய மருது. இப்படி மருதுபாண்டியர்வம்சத்தையே கூண்டோடு தூக்கிலிட்டனர்.அழுவதைத் தவிர அந்த மக்களுக்கு எதுவும் செய்யமுடியாத நிலை.

                கடைசியாக சின்ன மருதுவின் இளையமகன் துரைச்சாமி. பதினைந்து வயது பாலகன். வயதைக் காரணம் காட்டி அவனைத் தூக்கிலிடவில்லை. ஆனால் அவன் உடல் முழுதும் சங்கிலியால் பிணைத்திருந்தனர். கால்களில் இரும்பு குண்டை கட்டிவிட்டிருந்தனர். தந்தை, பெரியப்பா, சகோதரன், பங்காளிகள் தூக்கில் தொங்கும் காட்சியைக் காணவைத்தது கொடுமை.

                அவனோடு சேர்த்து ஒரு மாவீரனையும் உடல் முழுதும் இரும்புச் சங்கிலிகளால் பிணைத்து வைத்திருந்தார்கள். நடக்க முடியாத அளவிற்கு இரும்பு குண்டுகளை அந்த வீரனின் கால்களிலும் கட்டிவிட்டிருந்தார்கள்.

                இந்த மாவீரனை விட்டு வைத்தால், துரைச்சாமியை வெள்ளையருக்கு எதிராகவளர்த்து உருவாக்கி விடுவான் என்ற பயம் பறங்கியருக்கு.. அந்த மாவீரனையும் சேர்த்து 72 பேரை சங்கிலியால் கட்டி நாடு கடத்த உத்தரவிட்டான் கர்னல் வெல்ஷ் என்ற வெள்ளை அதிகாரி. 72 பேரில் இவர்கள் இருவருக்கு மட்டுமே காலில் இரும்பு குண்டு களைப் பிணைத்திருந்தார்கள்.

                அந்த மாவீரன் தான் இச்சப்பட்டி அமில்தார் சேக் உசேன். மருது பாண்டியரின் போர்ப் படைத் தளபதிகளில் முதன்மையானவர்.

                நாட்டுப்பற்றுள்ள இஸ்லாமிய வீரராக சின்னமருதுவின் படைத்தளபதி சேக் உசேன் விளங்கினார் என வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் (பேரா.வானமாமலை பதிப்பு – 1971) கூறுகிறது.

                மாவீரன் சேக் உசேனின் வீரம் :

                இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் ஆரம்ப கட்ட புரட்சிகளுள் தென்னிந்தியக் கிளர்ச்சி [1800-1801] முக்கியத்துவம் பெற்றதாகும். ஆங்கிலேயர்க்கு எதிராகத் தென்னிந்திய குறு நில மன்னர்களும் பாளையக்காரர்களும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கையாக இக்கிளர்ச்சி அமைந்தது. மலபார் கேரளவர்மா, மருது பாண்டியர், திப்புசுல்தானின் குதிரைப்படைத் தலைவராகப் பணியாற்றிய கனீஷாகான் (Khan-i-Jah-Khan), மராத்தியில் சிமோகா (Shimoga) பகுதியை ஆண்ட தூண்டாஜி வோக் (Dhondaji Waug), விருப்பாச்சி பாளையக்காரர் கோபால நாயக்கர், திண்டுக்கல் பாளையக்காரர் போன்றோர் ஒரு கூட்டமைப்பை உருவாக்கினர்.

                இக்கூட்டமைப்பைச் சார்ந்த வடக்கு-தெற்கு ஆட்சியாளர்களை இணைக்கும் வாயிலாக கனீஷ்கான் செயல்பட்டார். இந்தப் புரட்சிப்படை யுத்தத்திற்குத் தலைமை தாங்கி, காவிரிக்கு வடக்கிலுள்ள படைகளை நடத்தும் பொறுப்பு கனீஷ்கானிடம் ஒப்படைக்கப் பட்டது. இக்கூட்டமைப்பின் முக்கிய திட்டமே கோவையிலுள்ள பிரிட்டீஷாரின் ராணுவக் கோட்டையைத் தகர்ப்பதாகும். அந்தப் பொறுப்பையும், கோவை-சேலம் பகுதிகளைக் கைப்பற்றும் பொறுப்பையும் கனீஷ்கான் ஏற்றிருந்தார். 4000 குதிரைப்படை வீரர்களுடன் இத்தாக்குதலில் கனீஷ்கான் ஈடுபட்டார். ரகசியமாகத் தீட்டப்பட்ட இத்திட்டம் பிரிட்டீஷாருக்குத் தெரிந்துவிட, இம்முயற்சி தோல்வியில் முடிவடைகிறது. இக்கிளர்ச்சிஙில் கைதான 42 பேருக்கு சேலம் கலெக்டர் மாக்லியோட் (Macleod) உத்தரவுப்படி சேலம் ராணுவ கோர்ட்டில் தூக்குத்தணடனை என தீர்ப்பு வழங்கப்பட்டு அனைவரும் தூக்கிலிடப்பட்டனர்.
                அவ்வாறு தூக்கிலிடப்பட்டவர்களில் ஒரு சிலரைத் தவிர அனைவரும் முஸ்லிம் வீரர்களாவர். இம்மண்ணின் விடுதலைக்காக ஜமாத்தாக (கூட்டாக) தூக்கு கயிற்றை முத்தமிட்ட தியாக வரலாற்றினை இஸ்லாமியர் படைத்துள்ளனர்.
                இந்த தென்னிந்தியக் கிளர்ச்சியில் மருதுபாண்டியர் படையைத்தலைமை, தெற்கே சின்ன மருதும், ஊமைத் துரையும், விருப்பாச்சி கோபால் நாயக்கரும், தீரன் சின்னமலையும் சேர்ந்து உருவாக்கிய திண்டுக்கல் புரட்சிப் படைக்கு யாரைத் தளபதியாக அறிவிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.

                ‘நானே அதற்கு தலைமை ஏற்பேன்’ என்று திண்டுக்கல் புரட்சிப் படையின் எழுச்சி மிக்க வீரராக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டவர் இந்த சேக் உசேன்தான்.

                வெள்ளையரை இந்த நாட்டை விட்டே விரட்ட, உருவான கூட்டுப்படையின் முதல் தாக்குதலுக்கு தலைமை தாங்குவது என்பது சாதாரண விஷயமல்ல.

                அதற்கு வீரம் மட்டுமல்ல விவேகம், நாட்டுப்பற்று, நிர்வாகத்திறன் என்று சகல விஷயங்களிலும் திறமை வேண்டும். அந்தச் செயலை செய்து தன்னை சிறந்த தமிழ்ப் போராளியாக பிற்காலத்தில் வரலாற்று ஆசிரியர்கள் புகழும் அளவிற்கு உயர்ந்து நின்ற வீரர் சேக் உசேன்.

                சின்னமருது பல வெற்றிகளைக் குவிக்க பக்கபலமாக இருந்ததால் இவர்மேல் வெள்ளையருக்குக் கோபம். கடைசியாக நடந்த காளையார்கோயில் போர் பல மாதங்களாக முடிவுக்கு வராமல் இருந்ததற்கு சேக் உசேன் போன்ற சின்னமருதுவின் படைத்தளபதிகளின் வீரமிக்க போராட்டமே என்று கருதினர். அதனால் போர் முடிந்ததும் சேக் உசேனை பொறி வைத்துப் பிடித்து வந்தனர். மலேசியாவிற்குச் சொந்தமான பினாங்கு தீவுக்கு உடனே இவரை நாடு கடத்த உத்தரவிட்டார்கள்.

                இரும்பு குண்டுகள் பிணைக்கப்பட்ட நிலையில் சேக் உசேனும் துரைச்சாமியும் கப்பலில் ஏற்றப்பட்டனர். கப்பல் நகர்ந்தது. அது எங்கே போகிறது? என்றே அவர்களுக்குத் தெரியாது. கப்பலில் இருந்தபடி தன் தாய்நாட்டையும் 15 வயது துரைச்சாமியையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார் சேக் உசேன். துரைச்சாமிக்கு முடிந்த அளவுக்கு உதவவேண்டும் என்று உறுதி பூண்டார். கடலிலேயே நாட்கள் பல கடந்தன.

                சேக் உசேன், துரைச்சாமி உட்பட 72 பேரும் இந்தத் தீவில் கொண்டு வந்து விடப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு இது எந்த இடம், இங்குள்ளவர்கள் என்ன மொழி பேசுவார்கள் என்றே தெரியாது.

                கிளிங்கர்கள் :

                மாவீரன் சேக் உசேன், துரைச்சாமி உட்பட 72 பேர்களின் உடல் முழுதும் இரும்புச்சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருப்பதால், இவர்கள் நடக்கும்போது ‘கிளிங்! கிளிங்!’ என்ற சத்தம் எழுந்தது. இவர்கள் தப்பிப் போகாமல் இருக்கவே இப்படியொரு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அங்குள்ளவர்கள், ‘கிளிங் கிளிங்’ என்ற சத்தம் வந்ததால் இவர்களை ‘கிளிங்கர்கள்’ என்றே அழைத்தனர். இதுவே நாளடைவில் பிறமொழியைச் சேர்ந்தவர்கள் பினாங்கு சென்ற தமிழர்கள் அனைவரையும் ‘கிளிங்கர்கள்’ என்றே அழைத்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

                சேக் உசேனுக்கு இரு கால்களிலும் இரும்பு குண்டுகள் இணைக்கப்பட்டிருந்ததால், அவரால் சிறிதுதூரம் கூட நடக்க முடியாது. என்றாலும் கடுமையான வேலைகளைக் கொடுத்து வாட்டினார்கள். சரியாக உணவு தராமல் வாட்டி வதைத்தார்கள். ஒரு கட்டத்திற்குமேல் உணவே தராமல் சித்திரவதை செய்யத் தொடங்கிவிட்டனர்.

                எந்த நாட்டில் இருக்கிறோம் என்பதே தெரியாமல் உணவுகூட தராமல் காலம் தள்ளியது கொடுமை.

                ஒரு நாள், தங்களை எந்த வெள்ளைக்கார அதிகாரி இந்தத் தீவிற்கு நாடு கடத்தச் சொல்லி உத்தரவிட்டானோ, அதே கர்னல் வெல்ஷ் துரை தன் மனைவி மக்களோடு விடுமுறையைக் கழிக்க, இந்தத் தீவிற்கு வந்திருந்தான்.

                உடன் இருந்தவர்கள் எல்லாம் வெல்ஷை பார்த்து கருணை மனு கொடுக்கச் சொன்னார்கள். காலில் உள்ள இரும்பு குண்டுகளை மட்டுமாவது அகற்றச் சொல்லச் சொல்லி மனு கொடுக்குமாறு அறிவுறுத்தினார்கள்.

                நீண்ட மௌனத்திற்குப்பிறகு சேக் உசேன், ‘‘என் தாய் மண்ணிற்காகப் போராடியவன் நான். என்னை விடுவிக்க இந்த இழிநிலை வெள்ளையர்களிடம் போய் கெஞ்சமாட்டேன். செத்தாலும் சாவேனே தவிர, அந்தச் செயலை மட்டும் செய்யமாட்டேன்’’ என்று வீராவேசமாகப் பேசியிருக்கிறார்.

                ஆனால் துரைச்சாமி, ‘‘நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன் என்பதை என் தாய் நாட்டிற்குத் தெரியப் படுத்துங்கள்’’ என்று ஒரு மனு கொடுத்தார் அது நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

                ஒரு கட்டத்தில் உணவு இன்றி, இரும்பு குண்டுகளால் நகரக்கூட முடியாமல் யாரிடமும் எதையும் யாசகமாகக் கேட்காமல் சேக் உசேனின் உயிர் அந்த பினாங்கு மண்ணில் அடங்கியது.

                இவர்கள் பினாங்கு தீவிற்கு நாடு கடத்தப்பட்ட விஷயமே, கர்னல் வெல்ஷ் துரை, ‘‘எனது இராணுவ நினைவுகள்’’ என்ற நூலில் குறிப்பிட்ட பின்னர்தான் உலகிற்கே தெரியும். இவ்வாறு, தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்காய் போராடிய போராளிகளில் முஸ்லிம்கள் முதன்மையானவர்களாய் திகழ்ந்தனர்.

                • //இவ்வாறு, தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்காய் போராடிய போராளிகளில் முஸ்லிம்கள் முதன்மையானவர்களாய் திகழ்ந்தனர்.//

                  அப்படின்னா அம்பிகள் ரெண்டாவதாய் திகழ்ந்தனர்.. இந்த புலித்தேவர், மருது பாண்டியர், தீரன் சின்னமலை, கட்டபொம்மன், ஊமைத்துரை, கோபால நாயக்கர் எல்லாம் அதுக்கப்பறம்தான்.. ஹி..ஹீ..

                  • அப்படின்னா அம்பிகள் ரெண்டாவதாய் திகழ்ந்தனர்.

                    அப்பிகள் முதல்வாய் திகழ்ந்தர்கள் ஆங்கிலேயக்கு மாமா வேலை பார்க்க (பாரதியை தவிர்த்து)

                    • தமிழ்நாட்டையே ஒட்டு மொத்தமாக ஆங்கிலேயனுக்கு திறந்துவிட்ட ஆற்காடு நவாபு (ஆந்திராவில் நிஜாம், வங்கத்தில் நவாப் மிர் ஜாஃபர்..) போல வருமா..

                      பாரதியோட சுப்ரமணிய சிவா, வவேசு, வாஞ்சிநாதன், நீலகண்ட பிரம்மசாரி மற்றும் பலரையும் சேத்துக்கோங்க.. பிளீஸ்..

                  • //அப்படின்னா அம்பிகள் ரெண்டாவதாய் திகழ்ந்தனர்..\\அம்பிகளில் பலர் , அன்றும் இன்றும் என்றும் எதில் சிறந்து விளங்கினார்கள் என்பதை தாங்கள் இதுவரை அறியாமல் இருந்ததே மிகவும் ஆச்சிரியத்தை தரும் விஷயம்…. இனியும் அறியாமல் இருக்காதீர்கள் வரலாற்றையும் சமிபத்திய செயல்முறைகளையும் பார்த்து அறிந்துக்கொள்ளுங்கள். மேலும் நான் எந்தவொரு சமுதாயத்தையும் கீழ்த்தரமாகவோ , குறைத்தோ மதிப்பிட விரும்பவில்லை ஏனனில் அனைத்து சமுதாயத்திலும் நல்லவர்கள் இருக்கவே செய்கிறார்கள் , தீமை சையும் ஒரு குறிப்பிட்டவர்களை வைத்து முழு சமுதாயத்தையும் குற்றவாளியாக என்னும் மனப்போக்கிட்க்கு நான் அப்பாற்பட்டவன்.

                  • //இந்த புலித்தேவர், மருது பாண்டியர், தீரன் சின்னமலை, கட்டபொம்மன், ஊமைத்துரை, கோபால நாயக்கர் எல்லாம் அதுக்கப்பறம்தான்.. ///

                    //தமிழ்நாட்டையே ஒட்டு மொத்தமாக ஆங்கிலேயனுக்கு திறந்துவிட்ட ஆற்காடு நவாபு (ஆந்திராவில் நிஜாம், வங்கத்தில் நவாப் மிர் ஜாஃபர்..) போல வருமா.. ///

                    ஹைதர் அலி, திப்பு சுல்தான், இவர்களை நீங்கள் மறந்தும் குறிப்பிடமாட்டீர்கள்..
                    காட்டிக்கொடுத்தவர்களில் எட்டப்பன், தொண்டைமான், சரபோஜி இவர்களெல்லாம் கூட முஸ்லீம்களா?

                    உங்க நூல் அந்து போயி நெம்ப நாளாச்சு அம்பி.. இப்ப பெரிய தாம்புகயித்த கட்டிகிட்டு வந்திருக்கீங்க போலிருக்கு.. ம் நடத்துங்க..

                    பாத்தீங்களா, உங்களாலயும் வினவுக்கு வராம இருக்க முடியல, வந்தாலும் பதட்டப்படாம இருக்க ம்மிடியல..

            • Joseph,
              நான் என்ன சொல்கிறேன் இந்த ஒளரு வாயேன் என்ன சொல்றான் , இந்தியர்களான எங்களுக்குள் பிரிவினையை தூவி அரசியல் செய்ய நினைக்கும் வந்தேறி கூட்டட்தை சொன்னால் இங்கு ஒன்னு சம்பந்தமில்லாமல் லொள் லொள் என்று அவர்களுக்கு வாலாட்டி விட்டு என்னை இசிஸ் இடம் சண்டை இடசொல்கிறது… இந்தியாவுக்கும் இசிஸ் இக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. இதைத்தான் சொன்னேன் கூருகெட்டட்தனமா எதையாது பதிவு செய்ய வேண்டியது அப்பறம் விளக்கம் கேட்டா வாயையும் ……………… யும் மூடிக்கிட்ட்டு போய்ட வேண்டியது .

              • உணர்ச்சிவசப்படாதீங்க பாய்.. இஸ்லாம் அழகான சமாதான மார்க்கங்கறத மறந்துட்டீங்களா..
                சிவப்பா, பூனைகண்ணோட நெறைய பாய்ங்க இங்க இருக்காங்களே அவங்கதான் ஒரிஜினல் திராவிடர்களா..

                • இல்ல அம்பி,

                  சாவுக்கார் பேட்டையில சேட்டு, மயிலாபூர்லா அம்பி , தேனப்பேட்டையில மார்வடி, திருவள்ளிக்கேணி உள்பட பல பாய்,மலையாளிகள்தன் உன்னையான திராவிடர்கள்

                  மலையாளிக்கு ரெட்டிகடை
                  இந்திகாரனுக்கு வட்டி கடை
                  ஆந்தரகாரனுக்கு பொட்டி கடை

                  தமிழனுக்கு பிச்சை எடுக்கும் நிலை இதுதான்
                  தமிழ்நாட்டில் தமிழன் நிலை

                • //இஸ்லாம் அழகான சமாதான மார்க்கங்கறத மறந்துட்டீங்களா..
                  சிவப்பா, பூனைகண்ணோட நெறைய பாய்ங்க இங்க இருக்காங்களே அவங்கதான் ஒரிஜினல் திராவிடர்களா..\\ முதலில் இங்குள்ள இஸ்லாமியர்களோ கிருத்துவர்களோ வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல என்பதை கருத்தில் கொள்க, அவர்கள் இஸ்லாத்தை அல்லது கிருத்துவத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக்கொண்டார்கள் அவ்வளவுதான். அவர்கள் இப்படி மாறுவதற்கு முன் எந்த ஜாதியாக இருந்தார்கள் அவர்களின் குலத்தொழில் என்ன என்பதை கூட அவர்கள் மரந்திருக்கக்கூடும்.

                  தங்களின் ஒரிஜினல் ஆர்டிபிசியல் ஆராய்ச்சியால் யாருக்கு என்ன பயன் ? அனைவரும் திராவிடர்கள் என்ற ரீதியில் சமமானவர்கள் என்ற கருத்தை தானே நான் பதிவு செய்துள்ளேன். அதிலும் உயர்ந்தவ தாழ்ந்தவ என்ற ரீதியில் தங்களின் சிந்தனை தாவுவதர்க்கான காரணம் என்ன ? பிறப்பால் உயர்ந்தவன் என்ற மமதை தன்னுள் குடிகொண்டுள்ளதாக எடுத்துக்கொல்லாமா இதனை? உங்களை போன்றோரை திருத்துவதற்கு இன்னும் தாங்கள் வணங்கும் இறைவனே அவதாரம் எடுத்து வந்து சொன்னாலும் மாற்றம் ஏற்படாது .

                  • ’வந்தேறி கூட்டட்தை’ என்று நீங்கள் குறிப்பிட்டதால் வந்த சந்தேகம்தான் அது.. மற்றபடி திராவிடம் ஆரியம் என்பதெல்லாம் நிலப்பகுதியால் ஏற்பட்ட அடையாளம் என்பதே எனது கருத்து..

                    • வருவோரை வாங்க என்று வரவேற்று விருந்தாளியாகவும் கண்ணியமாகவும் நடத்துவது தான் தமிழரின் , திராவிடரின் பண்பாடு. ஆனால் அவர்களின் ஒற்றுமையை கலைத்து ஓட்டாண்டி ஆக்கி தான் ஆட்சிக்கட்டில்லில் உக்கார்ந்து கொண்டு மற்றவர்களின் தலையில் முளகாய் அரைக்கலாம் என்று நினைத்து அம்பிக்களில் சொட்பமானோர் கட்சியை அமைத்து தேர்தல் நேரத்தில் கலவரத்தை உண்டுபண்ணி அதனை லாவகமாக ஓட்டுஎண்ணிக்கையாக மாற்றும் சூல்சியை என்று கையில் எடுத்தார்களோ அன்றிலிருந்துதான் அம்பிகளை வந்தேறிகளாக பார்க்கவேண்டிய கட்டாயத்திட்க்கு தள்ளப்பட்டோம். மேலும் அனைவரையும் சமமாக என்னும் தோழர்களின் மனம் புண்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

        • அடேய் குஜராத்ல அப்பவியை அடிச்சிங்க வேணுனா திவிரவாதி அடிங்கட பாப்போம்

          என்னா காவி திவிரவாதிங்க அப்பாவி முஸ்லிம கெள்ளுரனுங்க ,முஸ்லிம் திவிராவாதி இந்து அப்பாவி மட்டும் இல்ல எல்லரையும் கெள்ளுரனுங்க

          இந்த காவி திவிரவாதிகளும் முஸ்லிம் திவிராவாதிகளும் நேரடியா அடிச்சுக்கிட்டு சாவுங்கடா அப்பவிகளை கெள்ளாமல் மக்களும் சந்தோசம இருப்பங்க

    • மு.நாட்ராயன்

      இந்துக்களை பற்றி ஓரிரு வரிகளாவது எழுதி அதை குறை சொல்வது இதன் செயல்!!

      நடுநிலையான இந்து,முஸ்லிம்களை வினவு என்னுமே சாடவில்லை உழைப்பாளிகளை என்றும் வினவு அதரிக்கும் ஆனால் இஸ்லாமிய பயங்கரவாதிகளைவிட இந்தியா காவி திவிரவாதிகள் மிக ஆபத்தனவர்கள் இன்று இந்தியவில் முஸ்லிம் திவிரவாதி உருவாக முக்கிய காரணம் இந்த காவி திவிரவாதிகள்தன்

      ஆப்பிரிக்கா கண்டநாடுகள் போல் இஸ்லாமியநாடுகளிலும் பட்டினிதான். மக்கள் தொகை தானாக குறையும்.

      நல்ல எண்ணம் வேணும்னா நம் நாடுதன் ஆப்பிரிக்காமாதிரி பட்டினயில் அழியும் ஏன் என்றால் நம்நாட்டில் விவசயம் அழிகின்றன , இங்கு பாலைவனத்தை உழுது காய்கறி நெல்
      போன்வற்றை அரபி உற்பத்தி செய்கிறான் அரபு நாடு நேத்து வாந்தது இல்லை கேளரவில் பாதிபேர் இங்குதன் இருக்கன் இந்தியக்கு அன்னிய செலவனி அதிக கிடைக்க செய்வது இந்த அரபு நாடு அழிக்க நினைக்கும் உன் காவிபுத்தியை என்ன செல்வது

  11. இந்த கட்டுரையை படித்துவிட்டு மைக் மோகன் தன் தளத்தில் ஏதோ உளறி இருக்கிறார் போல. இந்த தீவிரவாதிகள் எப்படி உருவாகிறார்கள், யார் அவர்களுக்கு நீதி உதவி அளிக்கிறார்கள் என்பதை பற்றி மைக் மோகன் எதுவும் பேசாமல் சும்மா ஒரு காமடி கதை சொல்லி கம்யுநிசத்தை சாடுகிறார். இதுபோன்று வரலாற்று ஆவணங்கள் மற்றும் நிகல்வுகளை வைத்து பேசாமல் சும்மா தன் வாயில் வந்ததை அடித்து விடுவது மைக் மோகனுக்கு கை வந்த கலைதான்.

  12. போன முறை ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டில் யாராவது ஒரு பெரிய இடத்தையோ அல்லது முக்கியமான இடத்தில் ஒரு அரை கிரவுண்டை வாங்கினாலோ அதை வாங்கியவர் ஜெயலலிதா அல்லது சசிகலாதான் என பலரும் ( பக்கத்தில் இருந்து பணத்தை வாங்கி கொடுத்து பதிவு செய்து தந்தது போல) கூறி கொண்டிருந்த காலம் நாம் அறிந்ததே. அது போல உலகத்தில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் அமெரிக்காதான் என்பது போன்ற பேச்சு எனக்கு விளங்கவில்லை. மனிதனுக்கு உள்ள அடிப்படையான பேராசை பணத்தாசை மண்ணாசை ஆகியவையே இதற்கு காரணம்.
    உண்மையிலேயே அரபு நாடுகளில் இஸ்லாம் இனத்தவர் ஒருவருக்கொருஅவர் அடித்து கொண்டு சாகவேண்டும் என அமெரிக்கா விரும்பி இருந்தால் சன்னி முஸ்லீம்களுக்கு கொஞ்சம் ஆயுதமும் ஷியா முஸ்லீம்களுக்கு கொஞ்சம் ஆயுதமும் கொடுத்திருக்க வேண்டும்.
    முஸ்லீம்கள் உட்பிரிவுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமை காத்தாலே வேறு நாட்டவன் உள்ளே நுழைய முடியாது.
    தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற பழமொழிக்கு உதாரணமாய் இருப்பவர்கள் இவர்கள்.ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் அவர்களுடைய ஒற்றுமைதான் பெரிய கேடயம் அந்த கேடயத்தை அற்ப காரணத்திற்காக கைவிடுவார்களேயானால் பின்பு அவர்களுக்கு மிஞ்சுவது நிம்மதி இன்மையும் மற்றவர்களுக்கு அடிமை படும் நிலைமையும்தான் மிஞ்சும் என்பதை உணராதவரை இம்மாதிரியான சன்டைகள் ஓயாது.

  13. ///குர்து மொழி பேசும் யேசிடி எனும் பழங்குடியினக் குழுவினரது வழிபாட்டு முறையை பேய் வழிபாடு என்று /////

    யேசிடி பழங்குடியினர் இந்துக்கள் என்கின்றனர் சிலர், அதிலும் குறிப்பாக பழனி முருகன் தான் அவர்களின் கடவுள் என்கிறார்கள்….ரொம்ப சுவாரசியமாக செல்கிறது இந்த தொடர்பு.

    சுட்டியை காண்க…

    http://kiranasis.blogspot.in/2014/08/yazidi-and-hindu-similarity.html

    http://ajitvadakayil.blogspot.in/2014/08/the-yazidis-of-iraq-ethnic-cleansing-by.html

  14. இந்திய விடுதலை பெற நேதாஜிக்கு ஜப்பான் உதவி செய்கிறது, அதனை நாம் ஜப்பானின் கூலிப்படை என்று கூறலாமா ? ஒரு வேளை நேதாஜி,நேபாளத்தை இணைத்து இந்து தேசிய நாடு அமைக்க முற்பட்டு இருந்தால் அதை ஜப்பானின் நோக்கம் என்று கூறி விட முடியுமா ?

    சர்வாதிகார ஆட்சியை கவிழ்க்க அமேரிக்கா செய்தது உதவி , அதை பெற்று கொண்டு தங்கள் மத ஆட்சியை நிறுவ முயல்வது துரோகம் .

    மத புத்தகத்தை மட்டும் படித்து , மதத்தை வைத்து தீர்வை எழுத நினைக்கும் மனோபாவம். மாற்று தீர்வு சொல்வ்பவர்கள் உடனே கொன்று மதத்தின் எதிரியாகக முயல்வது என்று அந்த மதத்திற்கே உரிய சர்வாதிகாரத்தனம் தான் இங்கே காரணம் .

    அமெரிக்க ஆட்சியால் தான் இளைஞர்கள் இதில் சேருகிறார்கள் எனபது தவறு . படித்த ஹைதிராபாத் இளைஞர்களுக்கு ஏன் அத்தகை எண்ணம் ஏற்பட்டது ? மதம் கண்ணை அறிவை மறைக்கும் மதம்.

    உலகில் மாற்று சிந்தனைகள் இருப்பதே தெரியாமல் வளருகிறார்கள் . நமது கல்வி கூடங்களில் கிடைப்பது இல்லை என்னும் போது சிரியா ஆப்கானிஸ்தான் நிலைமையை பற்றி சொல்லவேண்டியது இல்லை

  15. உண்மையில் அமெரிக்காவிற்க்கு வக்காலத்து வாங்கும் நம்மில் ஒரு சிலர் இருக்கவே செய்கிறார்கள் ஆனால் அவர்கள் வக்காலத்து வாங்குவது எந்தவிதத்தில் நியாயமானது என்று நம்மால் புரிய முடியவில்லை. என்னில் இராக் சம்பந்தமான விஷயத்தில் சம்பந்தமே இல்லாமல் அமெரிக்க தலை இடுவது ஏன், இது இராக்கியரின் பிரச்சனை நிச்சயமாக தானாக உருவான பிரச்சனை அன்று சிறந்தமுறையில் திட்டம்போட்டு நடத்தப்படும் பிரிவினைவாத பிரச்சனை இதில் அமெரிக்காவின் பங்கு அபாரம் ஏனனில் இதே இராக்கில் சதாமின் ஆட்சிக்காலத்தில் உள்நாட்டு பிரச்சனை ஏற்படவில்லை( அன்றும் ஷியா சன்னி பிரிவினர் இருக்கவே செய்தனர்) .தற்போது அவ்வாறு ஒரு பிரச்சனை எழுவதற்கு காரணம் என்ன ? மேலும் ஒரு நாட்டின் சொந்த விவகாரங்களில் மற்ற நாடுகள் தலை ஈடு நியாயமானதாக இருக்க முடியுமா? சமீபத்தில் இங்கிலாந்த் பாராளுமன்றத்தில் காஷ்மீர் சம்பந்தமான விவாதம் நடைப்பெற்றபோது இங்குள்ள ஆளும் கட்சி பிஜேபி கடுமையான விமர்சனத்தை பதிவு செய்ததை யாரும் மறந்திருக்க முடியாது என்றே நம்புகிறேன். எனவே , அந்த நாட்டின் பிரச்சனையை அவர்கள் தான் தீர்த்துக்கொள்ள வேண்டும் , மேலும் பிரச்சனைக்கு முக்கிய காரணகர்த்தாவான அமெரிக்க தற்போது பஞ்சாயத்தில் இறங்கி நீதி வழங்கும் என்று நம்பும் மனப்போக்கானது அப்பத்தை பிரித்துக்கொடுத்த குரங்கின் கதையை போலும், திருடன் கையில் சாவியை கொடுப்பதை போன்றதொரு நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

    • //உண்மையில் அமெரிக்காவிற்க்கு வக்காலத்து வாங்கும் நம்மில் ஒரு சிலர் இருக்கவே செய்கிறார்கள் ஆனால் அவர்கள் வக்காலத்து வாங்குவது எந்தவிதத்தில் நியாயமானது என்று நம்மால் புரிய முடியவில்லை//
      இவ்வளவு கொடூரமாக நடந்துகொள்ளும் (கழுத்தை அறுத்தது அதை காணோளியாக உலகுக்கே ஒளிபரப்பும்) தீவிரவாதிகளுக்கு வக்காலத்து வாங்க இவ்வளவு இருக்கிறீர்களே!

      • vignaani,
        //இவ்வளவு கொடூரமாக நடந்துகொள்ளும் (கழுத்தை அறுத்தது அதை காணோளியாக உலகுக்கே ஒளிபரப்பும்) தீவிரவாதிகளுக்கு வக்காலத்து வாங்க இவ்வளவு இருக்கிறீர்களே!\\
        என்னுடைய கருத்துக்கள் அமெரிக்காவிற்க்கு எதிராக இருப்பதால், நான் இசிஸ் அமைப்பை ஆதரிப்பதாக தாங்கள் அர்த்தம் கொள்கிறீர்களா? என்று புரியவில்லை. நான் எங்குமே இசிஸ் அமைப்பிற்க்கு ஆதரவு தெரிவிக்க வில்லையே? என்னுடைய எந்த வாக்கியம் இசிஸ் அமைப்பை ஆதரிப்பதாக தாங்கள் கருதுகிறார்கள் என்று சொல்ல முடியுமா?

    • Zahir,

      //ஏனனில் இதே இராக்கில் சதாமின் ஆட்சிக்காலத்தில் உள்நாட்டு பிரச்சனை ஏற்படவில்லை( அன்றும் ஷியா சன்னி பிரிவினர் இருக்கவே செய்தனர்) .தற்போது அவ்வாறு ஒரு பிரச்சனை எழுவதற்கு காரணம் என்ன ?//

      Saddam was a Sunni Muslim. Almost all his cronies in admin and soldiers in army were sunnis.

      Following the invasion, the US issued orders to exclude Saddam Party members from the new Iraqi government and to disband the Iraqi Army. The decision dissolved the largely Sunni Iraqi Army and excluded many of the country’s former government officials from participating in the country’s governance. So, sunnis, particularly those who were in positions, are not happy.

      As Sunni heads were excluded and as new sunni heads could not emerge due to boycott of the decision of exclusion, Shias benefited. And with a coalition, a Shia could form the government. How can sunnis tolerate this? Thats why they have declared Khilaafa and enacting many colorful Sunnas.

      • In every countries there will be ruling party and against party in Iraq’s case sunnis were ruling party and the shia’s were against party in politics. It is natural and why should America interferes in there problems(only reason is Oil). The people of Iraq should consider who should rule them not America.

        I am not willing to support sadam’s ruling but trying to say that , irakians were very safe in sadaam’s ruling and there only enemy is America.But now they were fighting themselves for the sake of political reasons.

        • Mr.Zahir:
          Maybe. But, the problem is in other countries, fighting with the Opposition means Fighting in the Elections, holding dharnas, Hartals, etc. In Islamic countries, fighting means killing, beheading, bombing the Ruling Party and Govt offices, institutions.

          • Vignaani,

            //Maybe. But, the problem is in other countries, fighting with the Opposition means Fighting in the Elections, holding dharnas, Hartals, etc. In Islamic countries, fighting means killing, beheading, bombing the Ruling Party and Govt offices, institutions.\\

            சூப்பெர் அப்பு,

            அப்படினா இந்தியா உள்பட மற்ற நாடுகளில் தேர்தல் நேரத்தில் அல்லது மற்ற நேரத்தில் கலவரமோ , குண்டு வெடிப்போ கொலையோ சூரையாடலொ நடக்கவே இல்லை. பாவம் தாங்கள் இப்போது தான் உலகத்தை புதியதாக பார்க்கிறீர்கள் என்று எண்ணுகிறேன் அல்லது சுற்றிநடக்கும் எந்த செய்தியும் தெரியாமல் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இன்னும் மற்ற நாடுகளிலாவது இத்தகைய செயல்களை செய்வோரை தீயவர்கள் என்ற அடைமொழியுடன் சைதிகலாவது வருகிறது ஆனால் இந்தியாவில் பிரிவினை விதையை தூவி கலவரத்தை உருவாக்கியே ஆட்சியை பிடித்த இன்னும் பல இடங்களையும் பிடிக்க நினைக்கும் தீவிரவாத குழுக்களுக்கு ஊடகங்களால் வழங்கப்படும் பெயர் தேசப்பக்தர்கள்…..

Leave a Reply to ramesh பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க