privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்ஜனவரி 25 : இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் பொன்விழா

ஜனவரி 25 : இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் பொன்விழா

-

rsyf

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

ன்பார்ந்த மாணவர்களே, உழைக்கும் மக்களே,

1937-ம் ஆண்டிலேயே, அன்று சென்னை மாநிலத்தின் முதலமைச்சர் பதவியை கொல்லைப்புற வழியாக கைப்பற்றிய பார்ப்பன ராஜகோபாலாச்சாரி, 1937 ஏப்ரல் முதல் இந்தியை கட்டாய பாடமாக்கினார். இந்தியா முழுமைக்கும் சமஸ்கிருதத்தை ஆட்சிமொழியாக்கும் நோக்கத்துடன் தான் இந்தியை கட்டாய பாடமாக்குவதாக பகிரங்கமாகவே அறிவித்தார்.

பார்ப்பனராஜாஜிக்குபாடம் புகட்டிய முதல் மொழிப்போர் தியாகிகள் நடராசன் – தளமுத்து;

இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாணவர் போராட்டம்கொதித்தெழுந்த தமிழக மக்கள் தமிழறிஞர் சோமசுந்தர பாரதியார், தந்தை பெரியார், கி.ஆ.பெ விசுவநாதம் போன்றவர்களின் தலைமையில் இந்தித் திணிப்பை எதிர்த்து வீறுகொண்ட போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் சிறை சென்ற நடராசனும் (1939 சனவரி 15- ம் தேதி ), தாளமுத்துவும் (1939 மார்ச்-12 ம் தேதி) தியாகி ஆனார்கள். தமிழகமெங்கும் பற்றிப் படர்ந்த போராட்டத் தீயின் வலிமையால் ராஜகோபாலாச்சாரி பணிந்து இந்தித் திணிப்பு உத்தரவை திரும்பப் பெற்றார்.

இந்தியை கட்டாயமாக்குவதில் இருந்து அன்றைய காங்கிரசு அரசு தற்காலிகமாக பின்வாங்கியதேயொழிய, திட்டத்தைக் கைவிடவில்லை. 1965 சனவரி – 26, குடியரசு தினத்தன்று இந்தியை ஆட்சிமொழியாக அறிவிக்க முடிவுசெய்தது.

1965 சனவரி-25; அரசைநிலைகுலையச்செய்த வீரம் செறிந்த மாணவர் போராட்டம்!

சென்னையில் கூடிய அனைத்துக் கல்லூரி மாணவர் போரட்டக் குழு அன்றைய நாளை துக்க நாளாக அறிவித்தது. இந்தி ஆட்சி மொழியாவதை எதிர்த்து சனவரி 25-ம் தேதி மதுரையில் தொடங்கிய மாணவர்களின் போராட்டத் தீ சென்னை, நெல்லை, கோவை, திருச்சி என தமிழகம் முழுவதும் கொழுந்துவிட்டெறிந்தது. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து சுமார் 55 நாட்கள் வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தினர்.

மாணவர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது, ஆனால், போரட்டம் ஓயவில்லை. திமிறி எழுந்த மாணவர்களை ஒடுக்க இந்திய ராணுவம் வந்து கொலை வெறியாட்டம் போட்டது. மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க இந்திய ராணுவமே இறங்கியது இதுவே முதல் தடவையாகும். திருச்சி மாவட்டம் கீழப்பழவூர் சின்னசாமி, சென்னை கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழக மாணவர் ராஜேந்திரன் என வீரமிக்க மாணவர்கள், இளைஞர்களின் உயிர்த் தியாகத்தால் தமிழகமே சிவந்தது. 55 நாட்கள் நீடித்த மாணவர் போராட்டம் இறுதியில் வெற்றி கண்டது.

இது வெறும் இந்தித் திணிப்பு அல்ல -நாட்டை வருண, சாதி – பார்ப்பன சமஸ்கிருதமயமாக்கும் சதி!

அவ்வப்போது பின்வாங்கிய ஆரிய – பார்ப்பன கூட்டம் என்றைக்குமே இந்தியை மட்டும் தனியாக திணிக்க முயன்றதில்லை. நாட்டை ஆரிய பார்ப்பன – சமஸ்கிருதமயமாக்குவதற்கான ஒரு முகாந்திரமாகத்தான் இந்தியை முன்னிறுத்துகிறது. 1937-ல் ராஜாஜி தொடங்கி, பக்தவச்சலம், இன்று மோடி என அனைவரின் நோக்கமும் இதுதான்.

இந்துமதவெறி பாசிஸ்டு மோடி கும்பல் ஆட்சிக்கு வந்தவுடன் அரசு சமூக வலைதளங்களில் இந்தியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில் தொடங்கி அடுத்தடுத்து இந்துத்துவா வருணாசிரம – சாதி – தீண்மையைக் கொள்கைகளை புகுத்த முயன்றது. இவை வெறும் இந்தியை திணிக்கும் நடவடிக்கைகள் மட்டுமல்ல. பல் தேசிய இனம், மொழி, பண்பாடு கொண்ட நாட்டில் இவற்றையெல்லாம் அழித்து ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு எனும் ஆரிய – பார்ப்பன கும்பலின் நீண்டநாள் கனவான அகண்ட பாரதத்தை உருவாக்குவது, சமஸ்கிருதமயமாக்குவது, பார்ப்பனியமயக்குவது என்ற திட்டத்தின் பகுதிகள் தாம் இவை.

இன்று நேற்றல்ல, ஆரிய – பார்ப்பன கூட்டம் கி.பி 6-ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் மீது ஆரிய – பார்ப்பன, வேத, வைதீக, சமஸ்கிருத ஆதிக்க பண்பாட்டு படையெடுப்பை நிகழ்த்தியது, இன்று மீண்டும் ஆரிய பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி தலைமையில் இரண்டாவது முறையாக படையெடுத்து வருகிறது.

சமஸ்கிருதத்தை ஒரு மொழி என்பதைவிட பார்ப்பன (இந்து) மதத்தின் கொலைக்கருவி என்றுதான் சொல்ல வேண்டும். அது எப்பொழுதுமே ஆளும் வர்க்கங்களான டாடா, அம்பானி போன்ற தரகு அதிகார வர்க்க முதலாளிகள் மற்றும் நிலபிரபுக்களின் ஆதிக்க கருவியாகத்தான் இருந்து வருகிறது. பிற்போக்குத்தனத்தை – மூடத்தனத்தை, வேத, வைதீக, புராண கட்டுக் கதைகளை போதிக்கும், சனாதன வருணாசிரம தர்மத்தை நியாயப்படுத்தும், தீண்டாமையை அரங்கேற்றும், இவற்றிற்காக கொலை, களவு, பொய், கற்பழிப்பு போன்ற கிரிமினல் குற்றங்கள் செய்யத் தூண்டும், நியாயப்படுத்தும் பகவத் கீதையையும், மனுதர்மத்தையும் வேதநூல்களாக கொண்டதுதான் சமஸ்கிருத மொழியின் பண்பாடு.

வேத, வைதீக – பார்ப்பன – சமஸ்கிருத -இந்தி எதிர்ப்புப் போரின் தளப்பிரதேசமாக தமிழ்நாட்டை கட்டியமைப்போம்!

ஆனால், அன்றும், இன்றும் ஆரிய – பார்ப்பன கூட்டத்திற்கு சவாலாக இருப்பது தமிழ் தேசிய இனத்தின் கடவுள் – ஆன்மீக மறுப்பு, வேத, வைதீக – பார்ப்பன, சமஸ்கிருத – இந்தி வருணாசிரம – சாதி – தீண்டாமை எதிர்ப்பு பாரம்பரியம்தான். ஆரியத்தை எதிர்த்துப் போராடி இன்றளவும் அழியாமல் புகழோடு நிற்பது நமது தமிழ் மொழியும், பண்பாடும்தான்.

சமஸ்கிருதத்தைக் காட்டிலும் தொன்மைவாய்ந்த, வேறு ஒரு பண்பாட்டுத் தளத்தில் தோன்றிய, இலக்கண, இலக்கிய வளம் பொருந்திய, செம்மொழிக்கான அனைத்து தகுதிகளும் கொண்ட ஒரே மொழி நமது தமிழ் மொழிதான். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பொதுவுடைமை பேசிய, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சமத்துவத்தைக் உயர்த்திப் பிடித்த, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், கொல்லாமை, கள்ளுண்ணாமை, பொய் சொல்லாமை, பிறன்மனை நோக்காமை போன்ற உயரிய அறங்களை கற்பிக்கின்ற பண்பாடுதான் நமது தமிழ் பண்பாடு.

இத்தகைய தமிழ் மொழியை, பண்பாட்டை போர்வாளாக ஏந்தித்தான் மீண்டும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி தலைமையில் படையெடுத்து வருகிற ஆரிய – பார்ப்பன, வேத, வைதீக, சமஸ்கிருத – இந்தி ஆதிக்க பண்பாட்டை வெட்டி வீழ்த்த முடியும். இதை சாதிக்க மாணவர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் அமைப்பாக அணிதிரள்வோம். 1937 லும், 1965 களிலும் தமிழ்மொழி, இனம் காக்க போராட்டக் களம் கண்ட மொழிப்போர் தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்தி வீறுகொண்டெழுவோம்! வேத, வைதீக – பார்ப்பன – சமஸ்கிருத – இந்தி, வருணாசிரம – சாதி – தீண்டாமை எதிர்ப்புப் போரின் தளப்பிரதேசமாக தமிழ்நாட்டை கட்டியமைப்போம்!

2015 சனவரி-25

தமிழ்நாட்டு மாணவர்களின்

இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் பொன்விழா ஆண்டு.

  • மொழிப்போர் தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்தி வீறுகொண்டெழுவோம்!
  • தமிழ் தேசிய இனத்தின் கடவுள் – ஆன்மீக மறுப்பு, வேத, வைதீக – பார்ப்பன, சமஸ்கிருத – இந்தி எதிர்ப்பு பாரம்பரியத்தை போர்வாளாக ஏந்துவோம்!
  • மீண்டும் படையெடுத்து வருகிற ஆரிய – பார்ப்பன, வேத, வைதீக, சமஸ்கிருத – இந்தி ஆதிக்க பண்பாட்டை போரிட்டு வீழ்த்துவோம்!
  • ஆரிய – பார்ப்பன எதிர்ப்புப் போரின் தளப்பிரதேசமாக தமிழ் நாட்டை கட்டியமைப்போம்!

சென்னை நிகழ்ச்சி நிரல்:

சனவரி – 15 முதல் மொழிப்போர் தியாகி நடராசன் நினைவுநாள்
அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து – நினைவேந்தல் கூட்டம்:
இடம்; மூலக்கொத்தரம், தியாகி நடராசன் நினைவிடம்.
சனவரி – 15, மாலை 5.00 மணி.

மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் கூட்டம்
சனவரி – 25, மாலை- 6 மணி
இடம்: கோடம்பாக்கம்,சென்னை.

 

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி
தமிழ்நாடு.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாணவர் போராட்டம் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாணவர் போராட்டம்

  1. இன்னமும் இந்தி எதிர்ப்பு என்பது முட்டாள்தனம், அயோக்கியத்தனம் . தமிழ்நாட்டைத்தவிர மற்ற எல்லா மாநில மக்களும் இந்தி கற்று தங்களின் மொழி சிரமமில்லாமல் புழங்கும் எல்லையை விஸ்தரித்துகொண்டார்கள். தமிழன் மட்டும் தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டு கிணற்று தவளையாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறான். தமிழ் மட்டுமே தெரிந்த , இந்தி தெரியாத தமிழன் ஏதாவது வேலை விஷயமாக டெல்லி அல்லது பாம்பே போன்ற நகரங்களுக்கு செல்லும்போது, மற்ற மாநில மக்கள் அங்கெல்லாம் சாதாரணமாக புழங்கும்போது தான் மட்டும் வேற்று கிரகவாசியாக உலவும் நிலையில் நினைத்துக்கொள்வான் “இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?”.

    • நண்பா.,

      இந்தி எதிர்ப்பு அல்ல. இந்தி சமஸ்கிருத “திணிப்பு” எதிர்ப்பு. இப்படி அவசர அவசரமாக படித்து விட்டு பின்னூட்டமிட வேண்டாம். சரி இந்தி படிப்பதாகவே இருந்தாலும், இந்தி பதிவில் இருக்கும் இதர விசயங்களுக்கும் விளக்கம் கொடுங்கள். சமஸ்கிருத ஆரிய பார்ப்பன வைதீக மரபை எதிர்க்க வேண்டும் அதற்கு என்ன செய்யலாம் என சொல்லுங்கள். தனது இயல்பிலேயே சாதி கடவுள் மறுப்பு தன்மை கொண்ட தொன்மையான தமிழ் மரபின் மூலமே தமிழை முன்னிறுத்துவதன் மூலமே அதை நிறுவ முடியும் என ஒரே ஒரு வாய்ப்புதான் இருக்கிறது. இதனால் எப்படி முடியாது என்றாவது சொல்லுங்கள். விஷயத்தை மடைமாற்ற முயலாதீர்கள்.

    • இந்தி தெரிந்த வடஇந்தியர்கள் தமிழகத்திற்கு வரும்போது தமிழை கற்றுக்கொள்கிறார்கள் அல்லவா, அதே போல வடஇந்தியா போக வேண்டிய நிர்பந்தம் வரும்போது தமிழர்களாகிய நாங்களும் இந்தி கற்று கொள்வோம். ஆனால் எல்லா தமிழர்களையும் கட்டாயம் இந்தி கற்க நிர்பந்திக்கும் இந்தி திணிப்பை தான் நாங்கள் எதிர்க்கிறோம். அப்படி தமிழர்கள் அனைவரும் இந்தி கற்க வேண்டும் என்று நிர்பந்தித்தால், பின் அனைத்து மாநில மொழிகளையும் வடஇந்தியர்கள் இந்தியுடன் சேர்ந்து கற்கட்டும். பிறகு நாங்களும் இந்தியை கற்கிறோம்.

      இன்னும் எத்தனை காலம் தான் இந்தி கற்றால் வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும் என்று நீங்கள் எமாற்றிக்கொண்டிருக்க போகிறீர்கள்? இப்போது அமெரிக்காவிலும் கனடாவிலும் இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும், சிங்கபூர், மலேசியாவிலும் உள்ள தமிழர்கள் இந்தி கற்றதால் தான் அங்கே அவர்களால் வாழ முடிகிறதா? உண்மையில் கிணற்று தவளை யார் என்பது உங்களுக்கு விளங்கவில்லையா? 🙂

    • நீங்கள் எத்தனை முறை இந்தி தெரியாததால் கஷ்டபட்டுள்ளீர்கள்; எனக்கு இந்தி தெரியும், அதனால் இது வரை எந்த பயனும் இல்லை (ஐடி துறையில் பணியாற்றுகிறேன்);
      இந்தியில்/ சமஸ்கிருத்தில் எந்த ஒரு அறிவு சார்ந்த இலக்கிய படைப்பு இருப்பதாக நான் கன்டிரவில்லை; இந்தி பிரசார் சபா நடத்தும் பல இந்தி வகுப்புகளில் வரும் பாடம் எல்லாம் மிகவும் பிற்போக்கு தனங்களை சுமந்து வரும். வட இந்தியாவில் வியாபாரம் செய்யும் சிலருக்காக அனைவருக்கும் இந்தி வேண்டும் என்பது அபத்தம் என்று நான் கருதுகிறேன். இந்தி கற்றுக்கொள்வதற்கும் மிக எளிது, தேவை படும்போது கற்றுக்கொள்ளலாம்.
      இந்தி தினிபிற்கு ஆதரவு என்பது நமக்கு இருக்கும் தனித்துவத்தை இழக்க சம்மதம் சொல்வது போலாகும். தற்போது தமிழ் சார்ந்த வர்தகம் இல்லாததால் நமக்கு தமிழ் இளக்காரமாக தேரியுது போல.

    • எத்தன தமிழர்கள் வேறு மாநிலத்துக்கு வேலைக்கு போகிறார்கள்? ஒரு பத்து லட்சம். அந்த பத்து லட்சத்துக்கு ஏழு கோடி பெரும் இந்தி படிக்கனுமா? மடத்தனமா இல்லையா? அப்பிடியே அந்த பத்து லட்சம் பெரும் இந்தி தெரிந்தாலும், எதறுக்கு பயன்படுத்த முடியும்? கடைக்கரகளிடம் பேசுவதற்கும், ஆட்டோகாரரிடம் பெசுவதருக்கும் மட்டுமே பெரும்பாலும் பயன்படும்!!! அதற்காக இந்தி படிக்கனுமா? ஐயா, பெங்களுரு, ஹைதராபாத், மும்பை போன்ற இடங்களில் வாசித்துவிட்டு தான் எழுதுகிறேன். மும்பை வந்து ஆறு மாதத்தில், ஒன்றாம் வகுப்பில் இருந்து இந்தி படித்த திருப்திகாரரை விட நன்றாக பேச கட்ட்ருகொண்டேன். நம் முநேற்றதிர்க்கு தடையை இருப்பது, நம் தாழ்வு மனப்பான்மையே அன்றி மொழி அல்ல!!!!!

  2. பாம்பே, டெல்லி செல்லும்போது மட்டுமல்ல தமிழ்நாட்டிலேயே தமிழ் பேசும் மக்கள் வர்க்க ரீதியாக வேற்றுக் கிரகவாசிகளாகத்தான் உலவுகிறார்கள். நண்பன் இதைப்பற்றிக் கவலைப்படவில்லை. இந்தித் திணிப்பு என்பது மொழித் திணிப்பு மட்டுமல்ல என்பதை இக்கட்டுரை விரிவாகப் பேசுகிறது. இந்த விரிந்த பார்வைக்கு தமிழனை அழைத்துச் செல்லாமல், தமிழனை கிணற்றுத் தவளையாக்கி அவனுக்கு இந்திமொழி என்னும் மந்திரக்கோல் கிடைத்தால், சகலமும் கிடைக்கும் என்று இனிமேலும் ஏமாற்ற முடியாது.

    இந்தியை தாய்மொழியாகக்கொண்ட மக்கள்தான், ஒருவேளை சோற்றுக்கு உழைப்பைத்தேடி தமிழகத்தை நோக்கி புற்றீசலாக படையெடுக்கிறார்கள். இந்தித் தெரிந்த இந்த ஏழைக்களுக்கு நண்பனின் வழிகாட்டுதல் என்ன?

  3. தமிழ் மொழிக்காக உயிர் தியாகம் செய்த நடராசன் மற்றும் தாளமுத்து அவர்களின் நினைவை நினைவில் ஏந்துவோம.

  4. அட கிணற்று தவளையே , என் தாய்திருநாட்டில் தமிழ் நாட்டில் என்ன இல்லை எல்லாம் இருக்கிறது .எல்லாம் திருட்டு அரசியல்வாதிகள், அக்கறை இல்லாத அதிகாரிகளினாலும் பாழ்பட்டு கிடக்கிறது .அதை மீட்க அறிவு சார்ந்தவர்களும், அயராது உழைப்பவர்களும் தேவை .அனைத்து மொழிகளும் அதன் வரலாற்று ரீதியில் ஆராய்ந்து அதன் சிறப்பை கூறினால் ok இல்லை ஒரு வரலாறு இல்லாத மொழி அனைத்தையும் சமமாக நடத்தினாலும் ok மற்ற மொழிகளை அடக்க நினைத்தால் உன் இந்தி என் மயி….க்கு சமம்.

  5. இந்தியில் ஒரு வாக்கியம் எழுதுவதற்கு ஆகும் நேரத்தில், ஆங்கிலத்தில் ஒரு பத்தியையே எழுதி விடலாம். தட்டச்சு செய்வதிலும் இதே நிலை தான். ரோமன் லிபியுடன் ஒப்பிடும்போது இந்தி மொழிக்கான தேவநாகரி எழுத்து வடிவம் மிகவும் சிரமமானது. ஆனால் இதை இந்தியாவின் ராஜ் பாஷா என்று சொல்லி சாதாரண மக்களின் தலையில் கட்டுவதற்கு காரணம் ஆதிக்க மனப்பாண்மை தான். ஆங்கிலம் என்பது வெளியுலகத்தை தெரிந்து கொள்ள உதவும் சாளரம். அதை அடைத்து விட்டால் சாதாரண மக்களை இருட்டிலேயே எப்போதும் வைத்து இருக்கலாம். தேஷ பக்தி, பண்பாடு, கலாச்சாரம் என்றெல்லாம் சொல்லி சாதி மற்றும் மத ரீதியாக ஆதிக்கம் செலுத்தலாம். இது தான் காரணம். “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்று சொல்லிக்கொண்டிருக்கும் தமிழுணர்வு கூட்டத்தினர் தெரிந்தோ தெரியாமலோ இந்த சதிக்கு துணை போவது வருத்தத்திற்குறியது. இப்போது திருவள்ளுவர் பெயரை சொல்லி நடைபயணம் மேற்கொண்டிருக்கும் தருண் விஜய் என்னும் மாமனிதர் (?!) தமிழர்கள் தமிழை விட்டுவிட்டு ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் தருவதை நினைத்து தாம் வருந்துவதாக கூறியிருப்பதன் பின்னணியில் இருப்பது குள்ளநரித்தனம். இதை தமிழர்கள் புரிந்து கொள்ளவேண்டும். அடிமைக்கு அடிமையாக இருப்பதை விட அடிமையாக இருப்பதே மேலானது.

Leave a Reply to nanban பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க