விருத்தாசலத்தில் பள்ளிக் கூடம், சந்தை, மாவட்ட கல்வித் துறை அலுவலகம் முதலான இடங்கள் உள்ள மையமான பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை “மக்கள் அதிகாரம்” அமைப்பின் இளைஞர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. அவர்களை போலிசார் கைது செய்து கொலை வழக்கு போட்டிருக்கின்றனர். போராட்டத்திற்கு பிறகு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து நொறுக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பார்வையிட்டு போராட்டத்தை வாழ்த்திவிட்டு செல்கின்றனர்.
இன்னும் இது போல தமிழகமெங்கும் போராட்டம் தொடருமென்று “மக்கள்அதிகாரம்” தெரிவித்திருக்கின்றது.
படங்கள்:
மக்கள் அதிகாரம்
நெ. 5/9, எஃப்.எம். பிளாசா, 3-வது மாடி, பேக்கர் தெரு,
பாரிமுனை, சென்னை – 01.
தொடர்புக்கு : 99623 66321
அரசு மதுபான கடையை உடைப்பதை விட
மதுபானம் சப்ளை செய்கிற சாரய வியாபாரிகள்
நடத்தும் பேக்டரிகளை அடித்து நொருக்கினால்
நன்றாக இருக்கும் அல்லவா?
எரிகிறதை புடுங்கிட்ட
கொதிக்கிறது நின்றுவிடும் அல்லவா?
மது தயாரிக்கும் நிறுவனங்கள் யாருக்கு சொந்தமானவை… அறிந்து கொள்ளுங்கள்!
தமிழகத்தில் மொத்தம் 15 நிறுவனங்கள் மது தயாரிப்பில் ஈடுபட்டள்ளன. தமிழகத்தில் எந்த எந்த நிறுவனங்கள் மது உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. அதன் உரிமையாளர்கள் யார்? யார்? என்று பார்ப்போம்.
பீர் வகைகள்…
சென்னை புருவரீஸ்-பெங்களூரு தொழிலதிபர்.
மோகன் புருவரீஸ் – மருத்துவக் கல்லூரி உரிமையாளர்.
எம்.பி புருவரீஸ்- எம்.பி புருஷோத்தமன்.
கல்ஸ்- தி.மு.க. தலைமையின் வாரிசுகள்.
அப்பல்லோ- சென்னை தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமானது.
ஏ.எம். புருவரீஸ்- முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது.
மதுவகைகள்…
யுனைடெட் ஸ்பிரிட்ஸ்- பெங்களூரு பிரபல தொழிலதிபர்.
மோகன் புருவரீஸ்- மறைந்த முதல்வருக்கும் நெருக்கமான தொழிலதிபர்.
சிவா டிஸ்டில்லரீஸ்-மறைந்த பொள்ளாச்சி தொழிலதிபர் குழுமத்துக்கு சொந்தமானது.
எம்.பி டிஸ்டில்லரீஸ்- எம்.பி. புருஷோத்தமன்.
சபில் – பொழுது போக்கு பூங்கா உரிமையாளருக்கு சொந்தமானது.
மிடாஸ்- அ.தி.மு.க. தலைமை ஜெயலலிதா நெருக்கமானவருக்கு சொந்தமானது.
எலைட் டிஸ்டில்லரீஸ்- முன்னாள் மத்திய அமைச்சருக்கு சொந்தமானது.
எஸ்.என்.ஜே- கருணாநிதிக்கு நெருக்கமான சினிமா தயாரிப்பாளருக்கு சொந்தமானது.
கல்ஸ் – திமுக வாரிசுகளுக்கு சொந்தமானது.
கோல்டன் வாட்ஸ்-தஞ்சை தி.மு.க. அரசியல் தலைவருக்கு சொந்தமானது.
இம்பீரியல் ஸ்பிரிட்ஸ்- சென்னை தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமானது.
இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு லட்சம் பெட்டிகள் முதல் 8 லட்சம் பெட்டிகள் வரை உற்பத்தி செய்யும் திறன் படைத்தவை.
மதுவிலக்கு அமலாக்க நடக்கும் போராட்டம் அடுத்த கட்டமாக வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நட
நடக்கும் கிராம சபைக் கூட்டத்தில் மதுவிலக்கு தீர்மானம் கொண்டு வரவேண்டும். மேலும் இது குறித்து கிராம மக்கள் அனைவரிடமும் உடனே கையெழுத்து இயக்கம் நடத்த வேண்டும்.
முக்கிய எதிர்கட்சி மது விலக்கு கொள்கையை அறிவித்து இருக்கின்ற நிலையில் , ஜனநாயக முறைப்படி வாக்கு சீட்டுக்ளை பயன்படுத்தி மாற்றத்தை எளிதாக கொண்டுவர முடியும் . உணர்ச்சி பிழம்பான மக்களையும் மாணவர்களையும் இப்படி தூண்டி விடுவது ஆபத்தானது . மக்கள் அதிகாரம் என்பதே வாக்கு சீட்டுத்தான் . சட்டத்தை கையில் எடுக்கும் இது போன்ற அமைப்புகளை தடை செய்ய வேண்டும்
இராமன் அவர்களின் பேச்சு குடிகாரனின் பேச்சு போல் உள்ளது! மக்கள் அதிகாரம் மற்றும் மாணவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்திருப்பதாகச் சொல்கிறார். ஆனால் தற்போது வரை இவர்கள் மதுப்பாட்டில்களை கையில் எடுத்துதான் தெருவில் போட்டு உடைத்திருக்கிறார்கள். ஒருவேளை இராமன் சொல்வதுபடி பார்த்தால் மதுப்பாட்டில்களைக் காப்பதுதான் சட்டம் போலும்! அப்படி மக்களைக்கொன்று விட்டு இந்த அரசும் சட்டமும் மதுப்பாட்டில்களைத்தான் காக்க முனையுமாயின் அத்தகைய சட்டத்தையும் கையில் எடுத்து உடைப்பதுதான் சரியானது. மற்றபடி சனநாயக வாக்குசீட்டு என்பதெல்லாம் சானக்சான் இரண்டு பெக்கு போட்டவரின் பேச்சாகும்!
இங்கே இராமன் என்பவர் நடைமுறையில் இருக்கும் உண்மைகளை அறியாமலோ அறிந்தும் அறியாமலோ உளறி கொண்டு இருக்கிறார்.
ஆளும் கட்சிக்கு மட்டுமல்ல எதிர்கட்சிகள் மற்றும் எல்லா அல்லக்கை கட்சிகளின் தலிவர்களுக்கும் சாராய ஆலைகள் உள்ளன.
எங்கெல்லாம் மக்கள் தன்னெழுச்சியாக சாராய கடைகளை பொருத்தது போதும் என அடித்து உடைக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து போராட்டத்தின் பலன்களை கைப்பற்ற நினைக்கின்றனர் இந்த ஓட்டுப் பொறுக்கிகள்.
இது தான் வாக்குசீட்டுகளை பயன்படுத்தி மாற்றம் கொண்டு வருவது என்றால் இதை விட மானக்கேடானது எதுவும் இல்லை. அ
இந்த இராமனின் ஜனநாயக நம்பிக்கையையும் சசிபெருமாளின் ஜனநாயக நம்பிக்கையும் நாம் வேறுபடுத்தி புரிந்து கொள்ள வேண்டும்.
சசிபெருமாள் இந்த ஜனநாயகத்தில் உண்மையான நம்பிக்கை வைத்து டவரில் ஏறி உயிர் துறந்தார். பெரும்பாலான மக்களின் இந்த ஜனநாயக நம்பிக்கைகள் கானல் நீர்போல் என்றாலும் அதில் தமது உண்மையான நம்பிக்கையை அப்பாவித்தனமாக வைக்கின்றனர். அதனால் இந்த இராமன் போன்றவர்களின் ஜனநாயக நாம்பிக்கையின் போலித்தனத்தை அம்பலபடுத்த வேண்டும்.
இப்படி ஓட்டுப் பொறுக்கும் கோஷ்டிகளுக்கு ஆதரவாக இராமன் போன்றவர்கள் பேசுவது ஒன்றும் இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து அல்ல என்பது தெள்ளத்தெளிவு மாறாக எங்கே இந்த கம்யுனிஸ்டுகள் பெருந்திரல் மக்களின் கவனத்தை ஈர்த்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் தான்.
திமுகவுக்கு ஏராளமான சாராய ஆலைகள் இருப்பதால் அவர்கள் இதை செய்யப்போவதில்லை. ஒருவேளை நீங்க சொல்றபடி அவங்களை கொண்டு வந்தோம்னு வச்சிக்கங்க… அவங்க ஒன்னும் மாற்றம் கொண்டு வரலன்னு வச்சிக்கங்க. அப்போ என்ன செய்யணும்? மறுபடியும் அஞ்சு வருஷம் கழிச்சு வரப்போற வாக்குச்சீட்டுக்காக வெயிட் ப்ண்ணனுமா? அந்நேரம் சாராயக் கடை டார்கெட் முப்பது ஆயிரம் கோடி ஆயிருக்கும்னு உங்களுக்கு தெரியுமா?
தம்பி ராமன்!
நீங்கள்லாம் சுரா பானம் (சாராயம்) குடிக்கிறவுக; நாங்க அதை எதிர்க்கிறவுக. அதாவது அசுரர்கள்!
இதுவரைக்கும் மதுக்கடைகளை மூடச் சொல்லி முறைப்படி நாங்க கொடுத்த மனுக்களை என்ன செஞ்சீக தம்பி? ஆவணக் காப்பகத்தில் வைத்துள்ளீரா? எது ஜனநாயகம்? மக்களுக்கு எதிரானவற்றை, மக்களுக்கு ஆபத்தானவற்றை மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக் கருவி கொண்டுவரும் போது மக்களே தங்கள் வழியில் தீர்வு காண்பது தான் ஜனநாயகம்; அதாவது ‘மக்கள் ஆட்சி’. மக்களுக்கு எதிரான நிலையில் இருந்து மக்களாட்சி பற்றி பேசக் கூடாது. மக்கள் ஆட்சி என்பது மக்களுக்கான ஆட்சி; மக்களே அதிகாரம் செலுத்தும் ஆட்சி.
உங்கள் ஜனநாயக மலக் கழிவுகளின் மாண்புகளைப் பற்றி மோடியிடமும் ஜெயாவிடமும் சிலாகித்துக் கொள்ளுங்கள். மக்களிடம் இனியும் ஏமாற்ற முடியாது; காலம் கடந்து விட்டது. எல்லா அதிகாரமும் மக்களுக்கே!!