privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதோழர் கோவனுக்கு திருச்சி மக்கள் வரவேற்பு !

தோழர் கோவனுக்கு திருச்சி மக்கள் வரவேற்பு !

-

க்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக் குழு தோழர் கோவன் விடுதலையானதையொட்டி, அவர் விடுதலைக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராடிய மக்களுக்கும், கட்சிகள், ஊடகத்தார்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக 23-11-2015 அன்று மாலை திருச்சியில் அரங்குக் கூட்டம் நடைபெற்றது.

அன்று காலையிலேயே தனக்கு ஆதரவாக கருப்புக் கொடி ஏந்தி போரட்டம் நடத்திய தில்லைநகர் காந்திபுரம் பகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார். மக்கள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

[படங்களைப்  பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பிறகு மாலை 6 மணிக்கு திருச்சி புத்தூர் சண்முகா திருமண மண்டபத்தில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இந்நிகழ்வில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்பைச் சார்ந்த தோழர்களும் மக்கள் அதிகாரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், புதிய தமிழகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு ( ML) மக்கள் விடுதலை அமைப்பு, SDPI கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகம், ஆதித் தமிழர் கட்சி, ஆதித் தமிழர் பேரவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி என அனைவரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

தோழர் தமிழாதன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர் தமிழாதன்

இக்கூட்டத்தினை ம.க.இ.க.வின் மாவட்ட செயலர் தோழர் ஜீவா தலைமையேற்றி துவக்கி வைத்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் தமிழாதன் பேசுகையில்:

“ம.க.இ.க தோழர்களை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும் அவர்களுடன் நான் குடும்ப உறுப்பினர் போல பழகியுள்ளேன். தோழர்களின் போர்க்குணமிக்க போராட்டங்களை நேரில் பார்த்துள்ளேன். அவர்களது அமைப்பின் போராட்டங்களுக்கு நான் என்றும் துணை நிற்பேன்” என தோழர் கோவனுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

வாழையூர் குணா
புதிய தமிழகம் வாழையூர் குணா

புதிய தமிழகம் வாழையூர் குணா பேசும் போது:

“தோழர் கோவன் சமூக சீரழிவை எப்போதும் கோபத்தோடு பார்ப்பவர், பாடுபவர். இவரை தேசதுரோக வழக்கில் நள்ளிரவில் திருடனை கைது செய்வதை போல நடத்து கொண்டது பாசிச ஜெயா அரசு. 2 இலட்சத்திற்கும் மேல் பெண்களின் தாலி அறுப்பு, 3 கிலோ மீட்டருக்கு ஒரு டாஸ்மாக் கடை இதை பார்த்தால் கோவனுக்கு மட்டுமா கோபம் வரும், உலக மக்கள் அனைவரும் கோபம் வந்தது. மூடு டாஸ்மாக்கை மூடு இந்தப் பாடலில் என்ன தவறு உள்ளது. தீபாவளிக்கு 372 கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்று கட்டளை. 472 கொள்ளை அடித்து விட்டார். மது விலக்கிற்காக யார் வேண்டுமானாலும் போராடி இருக்கலாம். ஆனால் உண்மையாக போராடியது மக்கள் அதிகாரம் அமைப்பு தான். 30 ஆண்டுகளாக பாடிக் கொண்டிருப்பவரை எந்த வழக்கினாலும் வாயை மூடிவிட முடியாது” என்று தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ம.பா.சின்னதுரை:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ம.பா.சின்னதுரை:

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ம.பா.சின்னதுரை:

“கோவன் பாடியதில் என்ன தவறு. காந்தி, பெரியார், கள்ளுண்ணாமை எழுதிய திருவள்ளுவர் இவர்களும் தேச துரோகிகள் தான். காலை 7 மணிக்கெல்லாம் டாஸ்மாக் கடையை அரசு திறந்துவிடுகிறது. 2000-ல் தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா இந்திரா காந்தியை ‘பதிபக்தி இல்லாதவள்’ என்று பேசினார். இது தரக்குறைவு இல்லையா? கோவன் பாடியதில் எந்த தரக்குறைவும் இல்லை. மக்கள் அதிகாரம் போராட்டம் அனைத்திலும் உடன் இருப்பேன் முழுமையாக போராடுவேன்” என்றார்.

புத்தனாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தங்கவேல்
புத்தனாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தங்கவேல்

புத்தனாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தங்கவேல்:

“இன்று 6863 கடைகள் உள்ளன, 2004-ல் 4,800 கோடி வருவாய், 2016-ல் 24,760 கோடி வருவாய். இனி சமூகச் சீரழிவு அதிகமாகும். இது அரசின் கொள்கை என்கிறது நீதிமன்றம். கொள்கை என்றால் என்ன என்பதற்கு பதில் இல்லை. தமிழ் இனத்தையே அழிப்பதுதான் அரசின் கொள்கை. இனி தமிழன் அழிக்கப்படுவான், தமிழினத்தின் அடையாளத்தை இனி நாம் தேட வேண்டும். அ.தி.மு.கவை தேர்தலில் மாற்று அமைப்புகள் புரட்டி போட்டு மாற்றி அமைக்க வேண்டும்” என்றார்.

தோழர் தர்மராஜ், மக்கள் அதிகாரம் மாநில செயற்குழு உறுப்பினர்:
தோழர் தர்மராஜ், மக்கள் அதிகாரம் மாநில செயற்குழு உறுப்பினர்:

தோழர் தர்மராஜ், மக்கள் அதிகாரம் மாநில செயற்குழு உறுப்பினர்:

” இப்பொழுதும் எங்கள் மீது தேசத் துரோக வழக்கு உள்ளது. கொடைக்கானலில் பழங்குடி இன மக்களுக்கு ஆதரவாக பாட்டு பாடியதற்கு எங்கள் நால்வர் மீது இந்திய தேசத்திற்கு எதிராக போர் தொடுத்ததாக வழக்கு. மேலும் புதிய தலைமுறை விவாதத்தில் அ.தி.மு.க சி.ஆர்.சரஸ்வதியிடம் விவாதம் செய்ததற்கு பெண் போலீசு ஒருவர் தோழர் ஓவியாவிடம் உங்களை நேரில் வந்து பார்த்து கொள்கிறேன் என்று கூறி உள்ளார். இன்னும் பல வழக்குகள் நம் மீது விழும். இவற்றை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். கோவன் மட்டும் அமைப்பு கிடையாது. அவரை இந்த அளவிற்கு கொண்டு வந்த ம.க.இ.க வின் அரசியல் தான் காரணம். நாம் அனைவரும் இணைந்து ஒன்று சேர்ந்து போராட வேண்டும். ” என்றார்.

தோழர் பக்ரூதின், SDPI மாவட்ட செயலாளர்
தோழர் பக்ரூதின், SDPI மாவட்ட செயலாளர்

தோழர் பக்ரூதின், SDPI மாவட்ட செயலாளர்:

“கோவனை கைது செய்யவில்லை என்றால் தமிழ்நாடு அளவில் தான் தெரியும். ஆனால் இன்று உலக அளவில் ஹிட் ஆகி விட்டது. இந்தப் பாடல் 1 லட்சம் பேரின் ரிங்டோனாக உள்ளது. கோவன் மீது ஜெயாவிற்கு கோபம். ஜெயாவிற்கு நன்றி தெரிவிக்கிறேன். ஏனென்றால், எல்லாக் கட்சிகளையும் இன்று ஒன்று சேர்ந்து போராட தூண்டி உள்ளது. சசிகலா உள்ளே போனால் 16 சாராய ஆலையும் உள்ளே போகும். எனவே மூடாது அரசு. இனி நாம் அனைவமும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்” என்றார்.

கராத்தே வீரமுருகன், ஆதி தமிழர் கட்சி
கராத்தே வீரமுருகன், ஆதி தமிழர் கட்சி

கராத்தே வீரமுருகன், ஆதி தமிழர் கட்சி:

“நாம் கோவன் கைதை பற்றி விவரமாக பேச வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அரசே இதை செய்து விட்டது. இந்த அரசிற்கு எதிராக நாம் மாவோ வழியில் நின்று போராட வேண்டும். மக்கள் அதிகாரத்துடன் எல்லா போராட்டங்களிலும் நான் கலந்து கொள்வேன்.”

கென்னடி, வழக்கறிஞர், மக்கள் விடுதலை (CPML):

கென்னடி, வழக்கறிஞர், மக்கள் விடுதலை
கென்னடி, வழக்கறிஞர், மக்கள் விடுதலை

“ம.க.இ.க வை சேர்ந்த தோழர்கள் மீது ஏற்கனவே NSA போட்டு இருக்கிறார்கள். பார்ப்பன பனியா கும்பலின் ஆளாக தான் ஜெ. அரசு செயல்படுகிறது. அனைத்தும் தனியார்மயம். 1996 BHEL வேலை வேண்டாம் என்று எழுதி கொடுத்து விட்டு கோவன் வெளியில் வந்தார். நாம் நீதிமன்றத்தை நம்புகிறோம் என்றால் நமக்கு நாமே தூக்கு கயிறு மாட்டிக்கொள்வது போல்தான். ஆளும் வர்க்கத்தின் அடியாள் படையாகவும் ஏகாதிபத்தியத்திற்கு துணை போவது BJP அரசு தான். இப்பொழுது நாம் ஐக்கிய முன்னணி ஆக வேண்டும். நாம் டாஸ்மாக்கை இழுத்து மூட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தேச பக்தனாக உருவெடுத்த ம.க.இ.க, மக்கள் அதிகாரம் போலவே நாம் அனைவரும் போராட வேண்டும். ”

சுரேஷ், சி.பி.ஐ-ன் மாவட்டச் செயலாளர்
சுரேஷ், சி.பி.ஐ-ன் மாவட்டச் செயலாளர்

சுரேஷ், சி.பி.ஐ-ன் மாவட்டச் செயலாளர்:

“மது விலக்கிற்கு கோவன் அவர்கள் பாடல் பாடி கைது ஆனதற்கு முதல் கண்டனம் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட கட்சிதான். எல்லாரும் போராடினார்கள். மக்கள் அதிகாரம் தீவிரமாக போராடியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எல்லா வகையிலும் போராடினோம். ஆண்ட கட்சியும் ஆளும் கட்சியும் தான் டாஸ்மாக்கை நடத்துகிறது. எனவே மதுவை ஒழிக்க மக்களுடன் நாமும் இணைந்து போராட வேண்டும்” என்றார்.

இந்திரஜித், சி.பி.ஐ-ன் புறநகர் மாவட்ட செயலாளர்:

இந்திரஜித், சி.பி.ஐ-ன் புறநகர் மாவட்ட செயலாளர்
இந்திரஜித், சி.பி.ஐ-ன் புறநகர் மாவட்ட செயலாளர்

“சிறைக்கு வாய் இருந்தால் அது கம்யூனிஸ்டுகளின் கதை தான் சொல்லும். நாம் சிறைக்கு செல்லலாம். கோவன் செல்லலாம். ஆனால் இனி நம் போராட்டத்தின் மூலம் ஜெயா சென்றால் இனி வெளியே வரவே முடியாது. தேசத் துரோகிகள் ஆட்சி என்றால் தேசப் பற்றாளர்கள் அனைவருமே தேசத் துரோகிகள் தான். இந்தப் பாடலுக்கு மட்டும் சிறை அல்ல. எதை பாடினாலும் சிறை தான். எழுத்தாளர்களுக்கு சிறை. பா.ஜ.க-வில் உள்ளவரே கவிஞர்களுக்கு ஆதரவாக பேசினால் அடி தான்.

மதுவிலக்கு துறை விஸ்வநாதன், “மதுவை பற்றி அம்மாவுக்கு தெரியாததா உங்களுக்கு தெரியும்” என்று கூறி உள்ளார். இதை விடவா ஆதாரம் வேண்டும்.

200 வருடங்களுக்கு பிறகு அ.தி.மு.க அமைச்சர்களின் முதுகெலும்பை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தால் மனித இனம் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியே அடைய வில்லை என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு அமைச்சர்கள் அடிமையாக உள்ளனர்.

கோவன் பாடினால் புரட்சியாளனாக தெரிகிறது. அநீதியை கண்டு வெகுண்டு எழுந்தால் நீயும் தோழனே என்றார் சேகுவேரா. அந்த அடிப்படையில் நாம் போராடுவோம்.

கோவன் இனி தனி நபர் கிடையாது. மேலும் இவர் தமிழ்நாட்டின் கத்தார்” என்றார்.

தோழர் சத்யா, ம.க.இ.க
தோழர் சத்யா, ம.க.இ.க

தோழர் சத்யா, ம.க.இ.க:

“கைது செய்யப்பட்ட விதத்தை பார்த்தால் மிகவும் கொடுமை. மாஃபியா கும்பல் கூட இப்படி கைது செய்யப்படவில்லை. அவனுக்கு பாதுகாப்பு. ஆனால் தோழர் கோவனை நள்ளிரவில் 10 பேர் கொண்டு தகவல் ஏதும் கொடுக்காமல் கைது செய்தது ஜெயாவின் பாசிசத்தை வெளிப்படுத்துகிறது.

அழிவிடைதாங்கியில் பு.மா.இ.மு டாஸ்மாக் உடைப்பு தான் முதல் போராட்டம். இனியும் போராட்டம் தொடரும். இனி அனைவரும் சேர்ந்து மக்களை திரட்டி மக்கள் அதிகாரத்தின் தலைமையில் டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டத்தை தமிழகம் முழுவதும் தீவிரப்படுத்துவோம்” என்றார்.

தோழர்.கோவன், ம.க.இ.க வின் மையக்கலைக்குழு:
தோழர்.கோவன், ம.க.இ.க வின் மையக்கலைக்குழு:

தோழர்.கோவன், ம.க.இ.க வின் மையக்கலைக்குழு:

“நான் சிறையிலிருந்த போது எனக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராடிய மக்களுக்கும், மாற்று கட்சி நண்பர்கள் ஊடகத்தார்கள் அனைவருக்கும் முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஜெயாவின் பாசிசஅடக்குமுறையை கண்டு எங்கள் அமைப்பு அஞ்சாது. மதுக் கடைகளை மூடும் வரை எங்களின் போராட்டம் ஓயாது தொடர்ந்து கொண்டே இருக்கும்” என்றார்.

பிறகு, “மூடு டாஸ்மாக்கை மூடு“, “ஊருக் கூரு சாராயம்“, “பாடு அஞ்சாதே பாடு” ஆகிய பாடல்களை பாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

ம.க.இ.கவின் பொருளாளர் தோழர் சரவணன்
ம.க.இ.கவின் பொருளாளர் தோழர் சரவணன்

இறுதியாக ம.க.இ.கவின் பொருளாளர் தோழர் சரவணன் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த புரட்சிகர அமைப்புகளின் தோழர்களுக்கும், பகுதி மக்களுக்கும், மாற்றுக்கட்சி நண்பர்களுக்கும், ஊடகத்துறையினருக்கும் நன்றி தெரிவித்து கூட்டத்தை முடித்து வைத்தார்.

 

 

 

இக்கூட்டத்தில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

செய்தி:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி.