Saturday, May 10, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்விருதை அரசு அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் !

விருதை அரசு அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் !

-

ன்பார்ந்த பொதுமக்களே!

மணல்கொள்ளை லாரிகளால் குண்டும் குழியுமாக சேதமடைந்த சாலையை சீரமைக்க கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகிறோம், எந்த பயனுமில்லை.

பவழங்குடி-தேவங்குடி ரோடை போடு
நாய் போகாத ரோட்டில் நாம் போக வேண்டுமா? என ஆர்ப்பாட்டம் நடத்தினோம்

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், அமைச்சர்களும் மக்களுக்கு எதிரானவர்களாக மாறியுள்ளார்கள் என்பதற்கு வெள்ளப் பேரழிவும், வழங்கப்படும் நிவாரணமும் சாட்சி.

நிவாரணத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காகவே நீர்நிலைகளை தூர்வாராமல், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் கடலூர் மாவட்டத்தை மரணக் காடாக மாற்றுகின்றனர்.

கார்மாங்குடி மணல் குவாரி மூடும் போராட்டத்தின் போதே, விருத்தாசலம் ஆர்.டி.ஓ இரண்டு மாதத்தில் ரோடு போட்டுத் தரப்படும் என வாக்குறுதி கொடுத்தார், நடக்கவில்லை.

அதன் பிறகு நாம் பலமுறை மனு கொடுத்துள்ளோம். நாய் போகாத ரோட்டில் நாம் போக வேண்டுமா? என ஆர்ப்பாட்டம் நடத்தினோம். எந்த தீர்வும் இல்லை. தேவங்குடி பவழங்குடி ரோட்டில் பயணிப்பதால் வாகனம் பழுதடைவது மட்டும் இல்லை. பயணம் செய்பவர்களுக்கும் உடல்ரீதியாக, மனரீதியாக தினம் தோறும் பெருத்த சேதம் ஏற்படுகிறது.

இனியும் பொறுக்க முடியாது. நம்மை ஆளத் தகுதியற்றவர்களாக மாறிவிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்து பயனில்லை. குடும்பத்தோடு குடியேறுவோம் வாரீர்.

பவழங்குடி, கீரமங்கலம், காவனூர், கொடுமனூர், மருங்கூர், வல்லியம், சக்கரமங்கலம், மேலப்பாலையூர், கீரனூர், கார்மாங்குடி, தொழூர்-கீழப்பாலையூர்-தேவங்குடி, கருவேப்பிலங்குறிச்சி, நேரம் கிராம பொதுமக்கள்.

virudhai-pp-notice

நாய் போகாத ரோட்டில் நாம் போக முடியுமா?

பாழாய் போன பல்லாங்குழியான எங்கள் ஊர் சாலையை போடு

பாழடைந்த பயணிக்கத் தகுதியற்ற கருவேப்பிலங்குறிச்சி to தேவங்குடி-பவழங்குடி சாலையை சீரமைக்கக் கோரி

விருத்தாசலம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில்
குடியேறும் போராட்டம்

30-11-2015 திங்கள், காலை 11 மணி

கருவேப்பிலங்குறிச்சி to தேவங்குடி, மேலப்பாலையூர் to தே.பவழங்குடி கிராம பொதுமக்கள்
94863 07045, 87606 70553, 99762 20591

மக்கள் அதிகாரம் –
விருத்தாசலம் 97912 86994

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க