Thursday, May 8, 2025
முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்கோவன் பாடல் - டாஸ்மாக் கொடூரங்கள் மக்கள் நேருரை

கோவன் பாடல் – டாஸ்மாக் கொடூரங்கள் மக்கள் நேருரை

-

கோவன் பாடல்: குடி …… சிந்திக்காதே குடி ……..!

திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய “மூடு டாஸ்மாக்கை” – சிறப்பு மாநாட்டின் கலை நிகழ்ச்சியில், ம.க.இ.க பாடகர் தோழர் கோவன் பாடிய புதிய பாடல்! சாராய போதையில் சுயமரியாதை அற்றும், தமிழக வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் பாரமுகத்தையும் கேலி செய்கிறது இந்தப் பாடல்! பாருங்கள், பகிருங்கள்!

மூடு டாஸ்மாக்கை : சான்றிதழைக் கிழித்த டேவிட்ராஜ்

திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய “மூடு டாஸ்மாக்கை” – சிறப்பு மாநாட்டில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த டேவிட்ராஜின் உரை இது.

அவர் விளையாட்டில் சாதிக்க வேண்டும், ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டும் என்கிற தனது பழைய லட்சியங்களை தூக்கிப் போட்டு விட்டு மக்களை விடுவிக்க வேண்டும் என்கிற உயரிய லட்சியத்தை வரித்துக் கொண்டார். அதற்கு அடையாளமாக அவர் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் வாள் வீச்சில் பெற்ற சான்றிதழ்களை மேடையின் மீதே தூள் தூளாக கிழித்தெறிந்தார். மதவெறிக்கு எதிராக மத்திய அரசு வழங்கிய விருதுகளைத் திருப்பிக் கொடுத்த ஆளும் வர்க்கங்களின் மனசாட்சியை உலுக்கிய சொரணை மிக்க அறிஞர்களின் வரிசையில் துணைக்கண்டத்தின் தென் கோடியிலிருந்து இன்னுமொரு இளைஞன். சான்றிதழ்களைக் கிழித்துப் போடு இவன் அந்த வரிசையில் சேர்ந்திருப்பதோடு செயலில் இறங்கியதன் மூலம் முன்னுதாரணமாகவும் திகழ்கிறான்.

டாஸ்மாக்கிற்கு மனைவியை பலி கொடுத்த நாகராஜ்

திருப்பூரைச் சேர்ந்த நாகராஜின் கதை கொடூரமானது. குடிமைக்கு அடிமையாக இருந்த காலத்தில் அவரது மனைவி தீ வைத்து எரித்துக் கொண்டார். அந்த துயரத்தை முன்வைத்து டாஸ்மாக்கை மூடுமாறு மன்றாடுகிறார் இந்த ஏழை! பாருங்கள், பகிருங்கள்!

குடியால் அழிக்கும் அரசை கேள்வி கேட்கிறார் தெய்வக்கண்ணு!

டலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி தெய்வக்கண்ணு தனது ஊரில் டாஸ்மாக் ஏற்படுத்திய பேரழிவை விவரிக்கிறார். கூடவே ஊற்றிக் கொடுக்கும் அரசை தூக்கி எறிய வேண்டாமா என்று மக்களிடம் கேட்கிறார். பாருங்கள், பகிருங்கள்!

எங்களை விதவைகளாக்கியது யார்? மந்திரகுமாரி

டலூர் மாவட்டத்தின் கச்சிராயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மந்திரகுமாரி தனது கிராமத்தில் டாஸ்மாக் நடத்திய பேரழிவினால் தோற்றுவிக்கப்பட்ட விதவைகளில் ஒருவர். தற்போது அரசை எதிர்த்து போராடும் வீராங்கனை! பாருங்கள், பகிருங்கள்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க