privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரகேலிச் சித்திரங்கள்ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு யோகா - பன்னாட்டு நிறுவனங்களுக்கு அன்னிய முதலீடு !

ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு யோகா – பன்னாட்டு நிறுவனங்களுக்கு அன்னிய முதலீடு !

-

RAPE-ஐ தடுக்க முடியவில்லையா? அனுபவி!
அறிஞர் பத்ரி சேஷாத்ரியின் திகில் அறிவிப்பு!

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ராணுவத் தளவாடங்களை நம் நாடு வாங்கிக்கொண்டுதான் இருக்கும். உலகச் சந்தைகளில் மிகப் பெரிய அளவில் ராணுவத் தளவாடங்களை வாங்கும் நாடு இந்தியா. அரசின் தளவாடங்கள் தயாரிக்கும் சில தொழிற்சாலைகள் தவிர்த்து, தேவைகள் அனைத்தையும் நாம் வெளிநாடுகளில்தான் வாங்கிக்கொண்டிருக்கிறோம். போர் விமானங்கள், கனரக ஆயுதங்கள், டாங்கிகள், பீரங்கிகள் முதல் பைனாக்குலர் வரை. இவற்றை அந்நிய நிறுவனங்களைக் கொண்டு இந்தியாவிலேயே உற்பத்தி செய்து வாங்கிக்கொண்டால் செலவு குறையும், ஊழல் குறையும், உள்நாட்டுப் பொருளாதாரம் வளரும், உள்ளூர்த் தொழில்கள் வளரும் என்பது புரிந்துகொள்ள எளிதானது.

– மருந்து உற்பத்தி, விமான போக்குவரத்து, இராணுவ தளவாடத் துறைகளில், 100% அந்நிய முதலீட்டை திறந்து விடும் மோடி அரசைப் பாராட்டி, கிழக்கு பதிப்பக உரிமையாளர் பத்ரி அவர்கள் வெளியிட்டிருக்கும் பிரகடனத்திலிருந்து…

இந்தப் பிரகடனத்தின் தமிழாக்கம் கீழே:

badhri
இனியும் “ரேப்பை” நம்பியார் காலத்து துகிலுரியும் செக்ஸ் திரில்லராக புலம்பாமல், டிரில்லியன் கணக்கில் பணத்தை கொட்டும் கார்ப்பரேட் தொழிலாக பாருங்கள்!

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை நடந்து கொண்டுதான் இருக்கும். உலக அளவில் மிகப் பெரிய அளவில் பாலியல் வன்முறை நடக்கும் நாடு இந்தியா. வண்ணத்திரை, சினிக்கூத்து, டைம் பாஸ், சாரு போன்ற சில்லறைகளைத் தவிர்த்து போர்னோவுக்கு நாம் வெளிநாடுகளையே சார்ந்து இருக்கிறோம். போர்னோ தளங்கள், நடிகர்கள், பொருட்கள், நேரலை வரை. இவற்றை அந்நிய நிறுவனங்களைக் கொண்டு இந்தியாவிலேயே சர்வர் வைத்து நடத்தினால் செலவு குறையும், ஓசியில் பார்ப்பது குறையும், உள்நாட்டு போர்னோ ரசனை வளரும், காண்டம் பயன்பாடு அதிகரிக்கும், உள்ளூர வேலை வாய்ப்புகள் பெருகும் என்பது புரிந்து கொள்ள எளிதானது. இனியும் “ரேப்பை” நம்பியார் காலத்து துகிலுரியும் செக்ஸ் திரில்லராக புலம்பாமல், டிரில்லியன் கணக்கில் பணத்தை கொட்டும் கார்ப்பரேட் தொழிலாக பாருங்கள்!

————————————————————————

யோகா உங்களை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பது மட்டுமல்ல அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் ‘விடுதலை’ செய்கிறது!

யோகா உங்களை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பது மட்டுமல்ல அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் ‘விடுதலை’ செய்கிறது!
யோகா உங்களை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பது மட்டுமல்ல அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் ‘விடுதலை’ செய்கிறது!

கார்ட்டூன் நன்றி: Ila Joshi

———————————————————————–

சர்வதேச யோகா தினம்: “ஷாகா”வுக்குப் பதிலாக யோகா !

பொய் புரட்டுகளால் கட்டமைக்கப்பட்ட இந்து பாரம்பரியம் குறித்த பார்ப்பன பாசிஸ்டுகளின் பெருமிதமும், தன்னை தேசத்தின் மீட்பனாகக் கற்பித்துக் கொண்ட மோடி என்ற வெட்கங்கெட்ட அற்பவாதியின் சுய விளம்பர மோகமும் கூடிப் பெற்றெடுத்திருக்கும் கேலிக்கூத்துக்குப் பெயர் – “சர்வதேச யோகா தினம்.

செல்ஃபியாசனம்“கழிவறைக்கு ஒரு ஐ.நா. தினம் இருக்கும்போது, யோகாவுக்கு ஒரு தினம் இருக்கக்கூடாதா?” என்று கேட்டிருக்கிறார் ரவி சங்கர்ஜி. பொருத்தமான கேள்விதான்!

வருடம் 365 நாட்களுக்கும் ஏதாவது ஒரு தினம் என்று ஐ.நா. அறிவிக்கத்தான் செய்கிறது. இப்படி ஐ.நா. அறிவிக்கும் தினங்கள் குறித்து யாரும் பெருமை கொள்வதில்லை. ஆனால், மோடி பெருமை கொள்கிறார். “இது உலக அரங்கில் இந்தியா பெற்றிருக்கும் அங்கீகாரம்” என்றும், “இதன்மூலம் பாரதம் உலகத்துக்கே வழிகாட்டுகின்ற விசுவ குரு” ஆகிவிட்டதாகவும் பீற்றிக் கொள்கிறார். காஞ்சி சங்கராச்சாரி தன்னைத்தானே ஜெகத்குரு என்று கூறிக்கொள்வதைப் போல!

விவகாரம் இத்துடன் முடியவில்லை. பிரதமர் பதவியை கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பதற்குக் கிடைத்த குறுக்கு வழியாகப் பயன்படுத்துகிறார் மோடி. ஜூன் 21 அன்று டில்லியில் ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் யோகாசனம் செய்தார்களாம்; 84 நாடுகளைச் சேர்ந்தோர் இந்நிகழ்வில் பங்கேற்றார்களாம்; இப்படி இரண்டு கின்னஸ் சாதனைகள் யோகா தினத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றனவாம். உலகிலேயே “பெரிய மீசை”, “பெரிய நகம்” வளர்த்து கின்னஸில் இடம்பிடித்த இந்தியர்கள் இருக்கிறார்கள். அவர்களாவது இச்சாதனைகளுக்காக சோந்த முறையில் ‘முயற்சி’ செய்திருக்கிறார்கள். பிரதமர் மோடியோ பயில்வான் படத்தின்மீது தனது மூஞ்சியை வரைந்து கொண்ட 23-ஆம் புலிகேசியைப் போல, அரசு எந்திரத்தை ஏவி வரலாறு படைத்திருக்கிறார்.

(மேலும் படிக்க)

சர்வதேச யோகா தினம்: “ஷாகா”வுக்குப் பதிலாக யோகா !

————————————————————————-

மோடி – ஜக்கியின் யோகா தினம் – வினவு நேரலை

jaggi-vasudev-1யோகா தினத்தை ஐ.நா அங்கீகரித்த மாதத்தில் பல்வேறு தினங்களும் உள்ளன, ரசிய மொழி தினம் அவற்றில் ஒன்று. ஒரு மாதத்தில் ஒரு டசனுக்கும் மேற்பட்ட தினங்கள் இப்படி ஐ.நா-வால் ‘கொண்டாடப்’ படுகின்றன. அந்தந்த நாடுகளைச் சேர்ந்தோர் இதை உலகமே கொண்டாடுவதாக பீற்றுவது விளம்பரச் செலவைப் பொறுத்தது. கூடுதலாக ஸ்வயம் சேவக அம்பிகள், ‘இந்த தினம்தான் ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கேசவ பலிராம் ஹெட்கேவார் செத்துப்போன நாள், இதையே கொண்டாடுமாறு உலகத்தை மாற்றிவிட்டார் மோடி’ என்று பெருமையடிக்கிறார்கள். செத்ததுக்கு கொண்டாட்டம் என்றால் நாமும் கூட கொண்டாடலாம்.

செல்ஃபி புகழ் மோடி தனது போட்டோ மற்றும் செல்ஃபிக்கள் இணையத்தில் கண்டபடி கிண்டலடிக்கப்படுவதால், இம்முறை பல்லாயிரம் பேரைக் கூட்டி வைத்து கின்னஸ் சாதனை படைக்க முயற்சி செய்திருக்கிறார்.

இந்த நேரத்தில் யோகா வியாபாரத்தின் ஒரிஜினல் முதலாளிகளான ஜக்கி, ரவிசங்கர், ராம்தேவ் உள்ளிட்ட கார்ப்பரேட் குருக்கள் தமது வழக்கமான முறுக்கும் எள்ளுருண்டயும் விற்று கல்லா கட்டியிருக்கிறார்கள்.

தன் ஜிப்பா பாக்கெட்டில் மட்டுமே இருக்கும் ஒரிஜினல் அக்மார்க் யோகாவை தன் வாழ்நாளுக்குள் விற்று தீர்த்துவிடும் லட்சியத்தைக் கொண்ட, யோக உலகின் ஸ்டீவ் ஜாப்ஸான தொழிலதிபர் ஜக்கி இந்த அளப்பரிய வாய்ப்பை எப்படி பயன்படுத்தினார்?

(மேலும் படிக்க)

மோடி – ஜக்கியின் யோகா தினம் – வினவு நேரலை

வினவு பேஸ்புக் பக்கங்களில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள் மற்றும் கேலிச்சித்திரங்கள்.

  1. To know about the strange experience of a rationalist in a yoga class,read this link-keetru.com/index/php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/11473-2010-11-19-02-20-03.Amidst lot of articles describing the “magical”results of yoga,for the past few days,I came across a news item in The Hindu today(22-6-2016) about the plight of about 150 children from the villages of Podur,Aliyalam and Ramapuram in Kaamanthotty Panchayat of Krishnagiri.They lug their school bags on their shoulders or carry them on their heads,clutch their school shoes,balancing each other,as they wade through the currents of the Thenpennai river to reach their school every day.The river is perennial thanks to flows from the Kelavarapalli dam.To avoid the river crossing,children and elders here must take an eight-km detour along a forest-fringed path that elephants often visit.The river rings three hamlets,cutting off a population of over 1000 from the rest of Kaamanthotty Panchayat.During monsoons,when the river is in spate,children are cut off.”Even for a matchbox,we have to step into the water”says Manju,a housewife.Kaamanthotty Panchayat,ironically,has the means to fund a bridge and actually presented a Rs1.30 crore proposal to the district administration.All that they need now is clearance from the district authorities to build the bridge.But their proposal has been rejected.They were told that there was no provision for low-level bridges anymore on safety grounds.Stange logic.Will all those people who are engrossed in” magical” yoga exercises have empathy with these school children?They should at least know that it is the “real”India.

  2. உடலை வருத்தி உழைத்து வாழ்பவர்களுக்கு யோகா தேவையில்லை.
    ஒரே இடத்திலேயே உட்கார்ந்து வேலை செய்பவர்கள் கொஞ்சம் இப்படி அப்படி உடலை வளைத்து நெட்டி முறித்து செய்யலாம்.

Leave a Reply to sooriyan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க