மழை வெள்ளத்தில் தமிழகம் மூழ்கிய போது குறிப்பாக சென்னை – கடலூர் மக்கள் பட்ட அவதிகளையும், செம்பரபாக்கம் புகழ் அம்மாவின் அலட்சிய நிர்வாகத்தினையும் பார்த்தோம். இது இந்தியாவின் பல மாநிலங்களில் வருடம் தோறும் நடக்கின்ற துயரமாக மாறி வருகிறது. இந்தியத் தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டுநிறுவனங்களின் வேட்டைக் காடாக மாற்றப்படும் இந்தியாவில் அவர்களது நலனுக்காக மக்களின் வாழ்வாதாரங்கள் பலி கொடுக்கப்பட்டு வளர்ச்சி எனும் மாயையை முன்னிறுத்துகிறார்கள்.
விளைவு எல்லா நகரங்களிலும் எந்த வசதிகளும் இல்லாத சேரிகளில் கோடிக்கணக்கான மக்கள் அவதிப்படுகின்றனர். நடுத்தர வர்க்கமும் ஓரளவு பாதிக்கப்படுகிறது. கனிம வளங்கள், சுற்றுலா பகுதிகளிலும் இந்த அழிவு பெரும் பாதிப்புகளை தோற்றுவித்திருக்கிறது. மும்பை முதல் அஸ்ஸாம் வரை இந்தியா முழுவதும் மழை வெள்ளத்தில் தத்தளிக்கின்றனது. அரசு நிர்வாகமோ செயலிழந்து போயிருக்கிறது. இந்த புகைப்படங்களின் மூலம் நமது மக்கள் எத்தகைய அபாயங்களில் வாழ்கிறார்கள் என்பது தெரிகிறது.


















நன்றி : அவுட்லுக் – OutLook ஆங்கில வார இதழ்