Wednesday, May 7, 2025
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்திருடனுக்கு பதுக்கத் தெரியாதா ? - இட்லிக் கடை அம்மா

திருடனுக்கு பதுக்கத் தெரியாதா ? – இட்லிக் கடை அம்மா

-

இட்லிக் கடை அம்மாவின் குமுறல் – சென்னை சைதாப்பேட்டை சலவைத் துறை

தினமலர் பத்திரிக்கையை மட்டும் படித்து மோடியை கருப்புப் பணம் ஒழிக்க வந்த கண்ணன் என்றும் நாட்டுக்காக இந்த கஷ்டத்தை பொறுத்துக் கொள்ளுங்கள், நாட்டின் பொருளாதாரம் முன்னேற ஒருசில தியாகங்களை செய்ய வேண்டும் என ஒரு பக்கம் மென்மையாக பேசுகிறார்கள். இன்னொரு பக்கம் ரெண்டு நாள் சாப்பிடாவிட்டால் செத்துப்போக மாட்டாங்க… என்று பேசும் அறிவாளிகளுக்கும், ஆர்.எஸ்.எஸ் – குண்டர்களுக்கும் சாதாரண மக்களின் கஷ்டங்கள் ஒருபோதும் தெரியாது. அடிப்படை வசதிகளே இல்லாமல் தினசரி வாழ்க்கையும் கேள்விக்குறியாக உள்ள சென்னை சைதைப் பகுதியில் சாதரண இட்லிக்கடை வைத்திருக்கும் அம்மாவின் குரலைக் கேளுங்கள். 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பைப் பற்றியும், அதன் பாதிப்பை பற்றியும் முகத்தில் அறைவது போல கேட்கிறார். பாருங்கள், பகிருங்கள்!

நேர்காணல்: வினவு செய்தியாளர்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க