Monday, May 5, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅரசு மிக்ஸியில் குற்றவாளி ஜெயா படம் அகற்றப்பட்டது !

அரசு மிக்ஸியில் குற்றவாளி ஜெயா படம் அகற்றப்பட்டது !

-

மிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் பொதுச் சொத்துக்களில் மற்றும் மக்கள் பணத்தில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களில் குற்றவாளியின் படத்தை ஒட்டிவைத்திருப்பது அவமானம், அவற்றை அகற்ற வேண்டும் என்ற தலைப்பின் கீழ் பிரச்சாரம் மற்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக 20.02.2017 அன்று விருத்தாச்சலத்தில் அரசு மக்களின் வரிப்பணத்தில் வழங்கியுள்ள விலையில்லா மிக்ஸியில் உள்ள குற்றவாளி ஜெயா படத்தின் மீது திருவள்ளுவரின் படம் ஒட்டப்பட்டது. இதனை ஏராளமான மக்கள் கவனித்தனர். மேலும் பொது மக்களிடமும் அவர்களின் வீடுகளில் உள்ள பொருட்கள் மற்றும் பள்ளிப்பாட புத்தகங்கள், நோட்டுக்களில் ஜெயாவின் படங்களை நீக்கச்சொல்லி பிரச்சாரம் செய்யப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்.
விருத்தாச்சலம்.