மர்மயோகி ஜக்கி வாசுதேவ் கம்பெனி தயாரித்துள்ள வானுயர்ந்த சிவன் சிலையைத் திறந்து வைக்க வரும் 2017 பிப் 24-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கோவைக்கு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஈஷா ஆசிரமம் என்ற பெயரில் ஜக்கி வாசுதேவ் என்னும் கார்ப்பரேட் சாமியார் பல பத்தாண்டுகளாக இயற்கையின் மீதும் மக்களின் மீதும் நடத்திவரும் யுத்தம் இப்போது ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மோடியை வரவேற்பதற்காக மட்டுமே கோவையில் 6000-த்துக்கும் அதிகமான விளம்பர ஹோர்டிங்ஸ் வைக்கப்பட்டுள்ளது என்றால் மொத்த ஏற்பாட்டின் பணமதிப்பைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
ஆனால் இந்த ஈஷா யோகா மையம் பற்றியும், சத்குரு என்னும் இந்த மோசடி பேர்வழியின் ஆசிரமத்துக்குப் பிரதமர் வருவதற்கு எழுந்துள்ள கடும் எதிர்ப்பு குறித்தும் எந்த ஊடகமும் பேச மறுப்பது ஏன்? ட்விட்டரில் கமல்ஹாசன் ஆய் போனால் கூட பிரேக்கிங் நியூஸ் போடும் இவர்கள் அதேச் சமூக வலைதளங்களில், சத்குரு-மோடி-கோவை வருகைக் குறித்து எண்ணற்ற எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் அதுகுறித்து கண்டுகொள்ளாதது ஏன்? ’அதற்கான தகுதி தங்களுக்கு இல்லை’ என உளப்பூர்வமாக உணர்ந்து குற்றவுணர்ச்சியில் குனிந்துகொண்டே கடந்து செல்கிறார்களா? அப்படி அவசரப்பட்டு தப்புக்கணக்குப் போடத் தேவையில்லை. அவர்களின் ஒரிஜினல் கணக்கு வேறு.
ஏன் மீடியா பேச மறுக்கிறது? விளம்பரங்களை அள்ளித் தருகிறார்கள் என்பது ஒரு கோணம். அது மட்டுமே காரணமாக இருக்க முடியாது. ஏனெனில் இப்போது மோடியின் வருகையை ஒட்டிதான் ஜக்கி விளம்பரம் டி.வி.யில் வருகிறது. இதற்கு முன்பு ஈஷா நிகழ்ச்சிகளுக்கான அவ்வப்போதைய விளம்பரம்தானே தவிர, அட்டிகா கோல்ட் கம்பெனி போலவோ, லலிதா ஜூவல்லரி போலவோ தொடர் விளம்பரங்கள் ஈஷாவில் இருந்து வருவது இல்லை. எனவே விளம்பரம் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. மாறாக இந்த கார்ப்பரேட் சாமியார் முன்வைக்கும் யோகா ஆன்மீகத்தில் இவர்கள் லயித்துப் போகிறார்கள். அதில் உண்மையாகவே மன அமைதி கிடைப்பதாக நம்புகின்றனர். அப்படி நம்ப வைப்பதற்காக வெள்ளியங்கிரி ஈஷா ஆசிரமத்தில் பத்திரிகையாளர்களுக்குச் சிறப்பு யோகா சலுகைகள் வழங்கப்படுகின்றன.
அதனால் தான் சத்குரு மனைவியின் மர்ம மரணம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும் அதைப்பற்றி எந்த மீடியாவும் பேச மறுக்கிறது. ஈஷாவில் தங்களின் இரண்டு மகள்களை வலுக்கட்டாயமாக அடைத்து வைத்துள்ளதாக கடந்த ஆண்டு வெளிவந்த ஒரு பெற்றோரின் கண்ணீர் பேட்டிகள் பரபரப்பான ஊடக விவாதமாக மாறாமல் அந்த நேரத்து துணுக்குச் செய்தியாக மாறிப்போனதன் பின்னே உள்ளது இதுதான்.
எனவே தற்போது ஜக்கி வாசுதேவின் அட்டகாசம் குறித்தும், விதிகளை மீறி காடுகளை ஆக்கிரமித்து அழித்துள்ளது குறித்தும், யானைகளின் வழித்தடம் அழிக்கப்படுவது குறித்தும் எந்த ஊடகமும் பேசப்போவது இல்லை. நேர்ப்பட பேச்சு, ஆயுத எழுத்து, கேள்வி நேரம், காலத்தின் குரல் என எந்த நிகழ்ச்சியிலும் ஜக்கியைக் கண்டு கொள்ளக் கூட மாட்டார்கள். மோடி என்னும் பெரிய கேடியே ஆசீர்வாதம் செய்ய வரும்போது சின்னக் கேடியைப் பற்றி இவர்கள் வாய் திறப்பார்களா என்ன? அப்படி வாய் திறக்கும் யோக்கியத் தன்மை எந்த மீடியாவுக்காவது இருக்கிறதா?
தென் தமிழ்நாட்டு கடலோரத்தின் மணல் வளத்தை வெட்டி கூறுபோடும் கொள்ளையன் வைகுண்டராஜன் நடத்தும் நியூஸ் 7 சேனலுக்கு அந்தத் தகுதி இருக்கிறதா, வைகுண்டராஜனின் தேசிய வெர்ஷன்; நாட்டை கொள்ளை அடிப்பதில் இரண்டு தலைமுறை அனுபவம் கொண்ட ரிலையன்ஸ் அம்பானி நடத்தும் நியூஸ் 18, பொத்தேரி என்னும் பத்து ஏரிகள் நிறைந்த ஊரை கபளீகரம் செய்து எஸ்.ஆர்.எம் கல்வி கொள்ளை வளாகத்தை நிறுவி இன்று அதை நாடு தழுவிய அளவில் விஸ்தரித்துள்ள புதிய தலைமுறை, ஆளும் வர்க்கத்துக்கு கூழை கும்பிடு போட்டு அண்டிப் பிழைப்பதைப் பெருமையென கருதும் தந்தி டி.வி… என யாரும் இதுகுறித்துப் பேசப் போவது இல்லை.
மற்ற நேரத்தில் தங்களுக்குள் போட்டி இருப்பதைப் போலக் காட்டிக்கொள்ளும் இவர்கள், டி.ஆர்.பி.யை பிக்-அப் செய்யும் நோக்கத்தில் கூட ஜக்கியின் பக்கித்தனத்தைப் பற்றிப் பேசமாட்டார்கள். நொடிக்கு ஒரு தரம் பிரேக்கிங் நியூஸ் போட்டு பார்வையாளர்களை எந்நேரமும் பதற்றத்திலேயே வைத்திருக்கும் இவர்கள், பல புதிய பிரேக்கிங் செய்திகளுக்கு வாய்ப்பு இருந்தும் வாயை மூடிக்கொண்டிருக்கிறார்கள். மாறாக வரும் 24-ம் தேதி மோடியின் கோவை வருகையைப் போட்டிப் போட்டுக்கொண்டு லைவ் கவரேஜ் செய்வார்கள். தங்கள் ஓபி வேன்களை நிறுத்தி நிருபர்களை லைவில் கதறவிட்டு அந்த பரபரப்பின் வெளிச்சத்தில் ஜக்கியின் மொத்த பித்தலாட்டங்களையும் மறக்கடிப்பார்கள்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி தினத்தில் நடுக்குப்பம் உள்ளிட்ட கடலோர பகுதிகளுக்குள் புகுந்த போலீஸ் வெறியாட்டம் நடத்தியது. அதற்கு முந்தைய கணம் வரைக்கும் இடைவிடாமல் லைவ் செய்தவர்கள், போலீஸ் அடிக்கத் தொடங்கிய அந்த நொடி முதல் கேமராவை வேறுபக்கம் திருப்பிவிட்டார்கள். ஒரு வார காலமாக மல்டி கேமரா செட்-அப்புடன், ஜிம்மி-ஜிப் எல்லாம் போட்டு கடற்கரையே கதி என கிடந்த தமிழக தொலைகாட்சிகள், குப்பத்து மக்கள் அடித்து நொறுக்கப்படுவதைக் காட்ட மறுத்தன. போலீஸ், லத்தியால் மக்களின் மண்டையைப் பிளந்தது என்றால் மீடியாக்கள் தங்களின் கேமராக்களை வேறுபக்கம் திருப்பி அந்த மக்கள் அடிபட்டு சாவதற்கு தங்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்கியது. அந்தச் சதியின் கூட்டுப் பங்காளிகளாக இவர்கள் இருந்தார்கள். நடுக்குப்பம் வன்முறையை ஒட்டி மீடியாவில் வெளிவந்த காட்சிகள் மிக, மிகக் குறைவு. மாறாக அங்கே இருந்த தனிநபர்கள் தங்கள் செல்போன் வழியே எடுத்து பதிவேற்றிய காட்சிகளே அதிகம். அவற்றைக் கூட எந்த தொலைகாட்சியும் எடுத்து ஒளிபரப்பவில்லை.
எனவே இந்தத் தொலைகாட்சிகள் காட்டும் பரபரப்பின் பரப்பு மிகவும் ஆபத்தானது. அது நம்மை பரபரப்பில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டது. மாறாக உண்மையாகவே மக்கள் பாதிக்கப்படும் காட்சிகள், அது எவ்வளவு பரபரப்புத் தன்மை கொண்டதாயினும் இவர்கள் அதைக் காட்டப்போவது இல்லை.
ஜக்கி வாசுதேவ் என்னும் ஆன்மிகக் கொள்ளைக்காரனின் வன ஆக்கிரமிப்பை, ஈஷா என்ற பெயரில் தமிழகத்தில் நடத்திவரும் ஒரு கருத்தியல்-பொருளியல் சூறையாடலை வெளிப்படையாக விவாதிக்கும் துப்பு தமிழகத்தின் எந்த மீடியாவுக்கும் இல்லை. ஜெகத்குரு, சங்கர்ராமனை கழுத்தறுத்தபோது மௌனம் காத்த இவர்கள், இப்போது சத்குரு வெள்ளியங்கிரி மலைக்காட்டை வெட்டி கூறுபோடும் போதும் தங்கள் நவ துவாரங்களையும் பொத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கேடுகெட்ட மீடியாக்கள் தாங்கள் மக்களின் பக்கம் இருப்பதாகவும், நடுநிலையோடு நட்ட நடு சென்டரில் நிற்பதாகவும் அடித்துக்கொள்ளும் ஜம்பம் மட்டும் தாங்க முடியவில்லை.
ஆனால் இது பேச வேண்டிய தருணம். இன்னும் இரண்டு நாட்கள். இன்று தேதி 22. வரும் 24-ம் தேதி மோடி கோவை வருகிறார். இப்போது தொடங்கி இன்னும் இரண்டு நாட்களுக்கு நாம் ஜக்கி வாசுதேவ் என்னும் கொள்ளைக்காரனின் திருட்டுப் பக்கங்களையும், இதற்கு ஆசீர்வாதம் அளிக்கவரும் பெரிய கேடி மோடியைப் பற்றியும், இவை எவற்றையும் பேசாத தமிழக ஊடகங்களையும் அம்பலப்படுத்தி தொடர்ந்து எழுதுவோம்; பேசுவோம்; விவாதிப்போம். இதை நாடு தழுவிய விவாதப் பொருளாக மாற்றுவோம். மெய்நிகர் உலகின் சூடு மெய்யுலகை தழுவட்டும்.
ஜக்கியின் சொத்துக்களைப் பறிமுதல் செய்! மோடியே திரும்பிப் போ! பேச மறுக்கும் மீடியாவே பேசு!
– முத்து
வினவின் வயித்தெரிச்சல் இந்த கட்டுரையில் நன்றாகவே தெரிகிறது, ஹிந்து மதத்தை அழிக்க வேண்டும் என்று நாம் திட்டம் தீட்டினால் இந்த மக்களும் பத்திரிகைகளும் ஹிந்து மதத்தின் பின்னாலேயே போகிறார்களே என்ற வினவின் வயித்தெரிச்சல் பொறாமை நன்றாகவே தெரிகிறது.
தண்ணிய குடிங்க அப்பவாவுது உங்க வயித்தெரிச்சல் அடங்குதானு பார்ப்போம்
ஹிந்து மதத்தை அழிக்கவெல்லாம் யாரும் முனைப்புடன் செயல்பட தேவையில்லை, அதுவே தன் அகங்காரத்தால் தானே அழியும்
ஒரு பயணமும் சில படிப்பினைகளும்
தமிழக சட்ட சபையில் பதிலி ஜனநாயகம் (praxy democracy) தன் இறுதி பிழைப்பை அரசியல் விபச்சாரத்துக்கு உட்படுத்திக்கொண்டு இருந்த அந்த நாளின் இரவு தொடங்கிய பயணம் விடியற்காலை நான்கு மணி அளவில் வைதீஸ்வரன் கோவிலில் சென்றடைந்தது…. காலை நேர போர் தண்ணீரின் வெதுவெதுப்பான குளியலும், கோவிலுக்கு எதிரில் உள்ள கடையின் காப்பியும் புத்துணர்ச்சி அளிக்க கால்கள் செல்லும் பாதையில் மெல்ல நடந்தேன்….
சில பத்தாண்டுகள் கழித்த பின் மீண்டும் நான் செல்கின்ற சாலை அது. வைதீஸ்வரன் கோவிலில் இருந்து அந்த ஊர் இரயில் நிலையம் வரையிலான விடியற்காலை பனிமூட்டத்தில் மெல்ல நடந்து சென்றேன். வயல்வெளிகளும் ,சின்ன சின்ன குடிசை வீடுகளுமாக இருந்த அந்த சாலை ஓரங்கள் இன்று வீடுகளாகவும் , சிறு தொழில் பட்டறைகளாகவும் மாறியிருந்தன. சில வீடுகளில் இன்னும் மாட்டுத்தொழுவங்கள் பழைய நினைவுகளுக்கு என்ன அழைத்துச்சென்றன… இரயில் நிலையத்தில் இருந்து கோவில் செல்லும் சாலையில் இடது பக்கத்தில் அன்று இருந்த சில வீடுகளை இன்று காணவில்லை.. வைதீஸ்வரன் கோவிலில் வேலை செய்த தேவர் அடியார்களுக்கான வீடுகள் அவை… அன்று பாழடைந்து இருந்த வீடுகளை கூட இன்று காணவில்லை. இன்று அவை இருந்த இடம் கூட தெரியாத வகையில் வேறு என்னவாகவோ மாறியிருந்தன….
இரயில்வே கேட் மூடப்படும் மணி ஓசை என்னை நிகழ்விற்கு கொண்டுவர திரும்ப கோவிலை நோக்கி நடந்தேன். மணி ஐந்தரை இருக்கும்.. கோவிலின் நடை திறக்க பக்தர்கள் உள் நுழைந்து கொண்டு இருந்தார்கள்..கோவிலும் ,கோபுரமும் மின்விளக்கு இன்றி மேகம் கவ்விய இருட்டில் கிடக்க நானும் உள் சென்றேன்… வைதீஸ்வரனும் அவன் மனைவியுமாகிய தையல் நாயகியும் இன்னும் நித்திரையில் தான் இருந்தார்கள். பக்தர்களின் வருகைக்கு பின் வேகவேகமாக வந்த அர்சகர்கள் ஒருவர் பின் ஒருவராக தையல் நாயகியின் அறைக்குள் ஓடி திரையிட்டார்கள்… பத்து நிமிடம் கழித்து அர்சகர்கள் திரையை விலக்கினார்கள்…வெளியே சென்றார்கள்….பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக உள் நுழைய முந்திக்கொண்டு சென்றார் எங்கள் குழுவில் இருந்த அந்த பெரியவர்… “ஏய் ஏய் ஏய் “ என்று கொடுரமாக கத்திக்கொண்டு ஒரு அர்ச்சகர் உள்ளே ஓடினார்… பெரியவரை பார்த்து ”வெளியே போ” என்று சத்தமிட்டார். எங்கள் பயண குழுவில் வந்த 74 வயது நிரம்பிய பெரியவர் அவர்… கட்டிட மேஸ்திரி… 30 வயது அர்சகரின் குரல் கேட்டு திகைத்து வெளியேவந்தவரிடம் “திருப்பதி மாதிரி 300 ரூபா டோக்கன் இங்கேயும் வாங்கனும்” என்றார் அர்சகர். தையல் நாயகிக்கு எதிரே நெய்விளக்கு விற்கும் இடத்தில் இருந்து இவற்றை பார்த்துக்கொண்டு இருந்த நான் ரத்தம் சூடேர “மரியாதையா பேச தெரியாதா உங்களுக்கு எதுக்கு ஏய் ஏய் என்று கத்துறிங்க ” என்று ஓங்கி குரல் கொடுத்தேன். ” 300 ரூபா டோக்கன் கொடுங்க” சாமி கும்பிட போறான் என்றார் அந்த பெரியவர் பணிவாக…… பெரிய பூசாரி அந்த வாக்குவாதத்தில் உள் நுழைந்தார்… “தொறந்து இருந்தா உள்ளே போவியா” என்று பெரியவரை பார்த்து சத்தமிட்டார்… “ஐயா காலையிலேயே எதுக்கு இப்பிடி ? “ அமைதியாக இருங்க என்று பெரிய பூசாரியை பார்த்து சமரசம் செய்யதற்காக கூறினேன்…… எதற்கும் படிவதாக அவர் இல்லை… சத்தமிட்டுக்கொண்டே இருந்தார்.
என்னிடம் இருந்த கடைசி அஸ்திரத்தை ஏவினேன்.
“யார் கட்டிய கோவிலுக்குள்ள யாரை வரக்கூடானு சொல்ற….” என்று நரப்பு புடைக்க
கத்தினேன்…… “எங்க பாட்டன் முப்பாட்டன் கட்டின கோவில்குள்ள எங்களையே வரகூடாதுன்னு சொல்றியா?…நீயா கட்டன இந்த கோவில?” என்று சத்தமிட்டேன்…
அந்த இடமே நிசப்தம் ஆனது… பெரிய பூசாரி பதில் பேசாமல் தையல் நாயகிக்கு எதிரே இருந்த குளத்துப்பக்கம் எஸ்கேப் ஆனார்…ஆனாலும் என் கோபம் இன்னும் தீர வில்லை…
குழுவில் இருந்த நண்பனிடம் “சிதம்பரத்துக்கு போவோமில்ல அங்க இன்னும் பாப்பிங்க பாருங்க “ என்றேன்.
தையல் நாயகியை மட்டும் வணங்கிவிட்டு மேலும் அங்கு நிற்க மனம் இல்லாமல், வைதீஸ்வரனை வணங்காமல் வெளியேறினேன்… எங்கள் பயண பேருந்தில் தனித்து வந்து அமர்ந்தவன்….யோசனையில் ஆழ்ந்தேன்…
எது என்னை “யார் கட்டிய கோவிலுக்குள்ள யாரை வரக்கூடானு சொல்ற….” என்று சத்தம் போட வைத்தது என்று யோசித்தேன்… எங்க கரும்பூர் – கருநிலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட இடத்தில் சோழர் கால சிவன் கோவில் பாழடைந்து பல நூற்றாண்டாக இருந்தது… கடந்த மூன்று வருடமாக அந்தக்கோவிலை முழுமையாக புதுபிக்கும் வேலையை செய்கின்றார் இந்த பெரியவர் மேஸ்திரி… அந்த ஊரில் பல ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரர்… கூலி வாங்காம இந்த சிவன் கோவில் கட்டிட புணரமைப்பு வேலையை செய்துகிட்டு இருகாரு இவரு…. தனக்கு தெரிந்தவங்க கிட்ட இருந்து நன்கொடையை வாங்கி கோவில் வேலைக்கு செலவு செய்துகிட்டு இருகாரு….கோவில சுத்தி விவசாய நிலமா இருப்பதால விவசாயிங்க கிட்ட பேசி கோவிலுக்கு வழியும் ஏற்படுத்திக்கொடுத்து இருக்காரு… அப்பேர்பட்ட 74 வயசு “ராஜா ராஜா சோழனையே” கோவில விட்டு துரத்தின அந்த அந்த முப்பது வயசு பூசாரிக்கு அந்த உரிமையை கொடுத்தது யாரு? என்று யோசித்தேன்… சிவனுக்கு சேவகம் செய்ய அன்றைக்கு சோழன் நியமித்த தேவர் அடியார்களை விபச்சாரிகளாக மாத்தியது யாரு ? என்று சிந்தித்தேன்.. அந்த தேவர் அடியார்களுடன் பாலியல் உறவு வைத்து குழந்தைகளை உருவாக்கி அவர்களை ஒரு சாதியா மாற்றிய கயவர்கள் யாராக இருக்கும் என்று சிந்தித்தேன்….தேவர் அடியார்கள் முறையையே டாக்டர் சுப்பு லச்சுமி அம்மா அன்னிக்கு சட்டசபையில் காங்கிரஸ்-சத்தியமூர்த்திய பார்த்து நாக்க புடுங்கற மாதிரி “உன் வீட்டு பொம்பளைங்கள வேண்டுமானால் நீ அந்த தேவரடியார் வேலைக்கு அனுப்பு” என்று கூறி சட்டபூர்வமாக அழித்து நினைவுக்கு வந்தது….
சிவ-சாமிக்கு கண் இருக்கா இல்லையானு எனக்கு தெரியாது…. ஆனா நெற்றியில மட்டும் கண்ணு கண்டிப்பா இல்லை என்பது மட்டும் எனக்கு ஊர்ஜிதம் ஆனது. மீண்டும் பஸ்ஸை விட்டு இறங்கி நடந்தவன் கோவில் எதிரே நின்றேன்….
“ பாழ்பட்டு சிதைந்தழியும் உன் வீடு
ஆனாலும் என்மனதுள் என்றுமென்சிவனே “
என்று அவனை குரல் பாவில் மனமாற வாழ்த்திப்பாடிவிட்டு அடுத்த ஊருக்கு புறப்பட்டேன்…
One correction MrAalavayan,Devadasi system was abolished not by Dr Subbulakshmi but by Dr Muthulakshmi Reddy.
Thanks lot for your correction sooriyan sir….. What my request is why do ‘t we avoid the cast name with her name sir?
உங்களை போல் எனக்கும் தலைகுனிவான சம்பவம் வைதீஸ்வரன் கோவிலிலும் சிதம்பரத்திலும் ஏற்பட்டு இருக்கிறது, வைதீஸ்வரன் கோவிலுக்கு என் வெளிநாட்டு நண்பர்களோடு சென்றேன் (இந்தியாவின் பெருமைகளை காட்ட)… கோவிலின் உள்ளே நுழைந்ததில் இருந்து வெளியே வரும் வரையில் எனக்கான செலவு 2000 ரூபாய் அது கூட தேங்காய் பூ பழம் வெள்ளியில் செய்யப்பட்ட உடல் (உண்டியலில் போட) என்று அங்கே இருந்த வியாபாரிகள் கொடுத்தார்கள் அதற்கு 2000 ரூபாய் வாங்கி கொண்டார்கள் (ஏமாற்றுகிறார்கள் என்று என்று தெரிந்தே ஏமாந்த கதை இது). ஆனால் கோவிலை விட்டு வெளியே வந்த பிறகு நடந்தது தான் மிக பெரிய தலைகுனிவாக இருந்தது எங்கள் காரை சுற்றி கிட்டத்தட்ட 30 பேர் பிச்சை கேட்டு, காரை நகர விடவில்லை, என் வாழ்வில் மறக்க முடியாத இன்றும் கூட கண் முன்னே நிற்கும் சம்பவம் அது.
எங்கள் எல்லோருக்கும் மிகவும் வேதனையாக இருந்தது அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது, ஏண்டா கோவிலுக்கு போனோம் என்று அன்று தான் என் வாழ்வில் முதல்முதலாக வேதனை அடைந்தேன்.
அர்ச்சகராக இருந்தாலும் சரி பிச்சைக்காரர்களாக இருந்தாலும் சரி எல்லோரும் பணத்திற்காக அலையும் இடம் கோவில், இந்த கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்கிறேன் அதற்காக மனம் வேதனையும் அடைகிறேன்…
ஒரு வகையில் பார்த்தால் கோவில் காட்டியதே வியாபாரத்திற்காக தானே சிதம்பரம் போன்ற ஒரு ஊரில் நடராஜர் கோவிலும் அண்ணாமலை பல்கலைக்கழகமும் இல்லையென்றால் அது கிராமாக தான் இருந்து இருக்கும், அந்த கோவிலை சுற்றி தானே சிதம்பரத்தின் வியாபாரமே இயங்கி கொண்டு இருக்கிறது பல ஆயிரம் மக்களையும் வாழ வைக்கிறது.
மணிகண்டன்…., உங்களுடைய இரண்டு பிரச்சனைகள் அதாங்க வியாபாரிகள் மற்றும் பிச்சைகாரர்கள் எளிதில் தீர்க்க கூடியது தான் என்று நினைகின்றேன். அவர்களிடம் மோடி ஸ்வீபிங் மிசின் பயன்படுத்த கூறினார் ஸ்வீபிங் மிசின் இருக்கின்றதா? என்று வியாபாரிகள் மற்றும் பிச்சைகாரர்களிடம் கேட்டு இருப்பிர்கள் என்றால் ஓடியே போய் இருப்பார்கள்…. உங்களுக்கும் ரூபாய் ௨௦௦௦ நட்டம் ஏற்பட்டு இருக்காது. ஆனால் இந்த அர்ச்கர்கள் அராஜகம் செய்யும் விசயத்தில் என்ன செய்யலாம் மணிகண்டன்?
நான் இதற்கு ஏற்கனவே வினவு தலத்தில் பதில் சொல்லியிருக்கிறேன், மேலும் நான் எல்லோரையும் குற்றம் சொல்லமாட்டேன் எனக்கு தெரிந்து ஒரு சிலர் கோவிலில் உண்மையான பக்தியோடு கடவுளுக்கு பூஜை செய்கிறார்கள் அவர்களின் மந்திரம் அதன் உச்சரிப்பு எல்லாம் மிக சரியாக இருக்கும் அவர்கள் பணத்திற்கும் ஆசைப்படுவதில்லை ஆனால் பெரும்பாலானவர்கள் நீங்கள் சொல்வது போல் மிக தவறாகவே நடக்கிறார்கள் அதுவும் மந்திரத்தை எப்படி எல்லாம் உச்சரிக்க கூடாதோ அப்படியெல்லாம் செய்கிறார்கள் தட்டில் பணம் போட்டால் விபூதி பொட்டலம் மற்றும் பூ போடவில்லை என்றால் கையில் விபூதி மட்டுமே…
கோவில் ஒரு வியாபாரதலமாக தான் இருக்கிறது வேளாங்கண்ணி மாதா கோவிலும் இதற்கு விதிவிலக்கு அல்லது நாகூர் தர்காவும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
ஆனால் உண்மையான பக்தி என்பது இதையெல்லாம் தாண்டியது என்பதே என் கருத்து.
உங்க பதிலில் பாதி உண்மை மறைக்கப்பட்டு உள்ளது மணிகண்டன்…. பிரச்சனை சமஸ்கிருத சுலோக உச்சரிப்பில் உள்ள கோளாறு மட்டும் அல்ல… சமஸ்கிருத மந்திரங்களின் பொருள் புரிந்துக்கொள்ள இயலாமையும் முக்கிய பிரச்சனை. எனது தமிழ் ஆசிரிய நண்பர் அனனவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தில் கோவிலில் அரசு வேலை பெற்று மாணவர்களுக்கு சமஸ்கிருத சுலோகன்கள் செல்லிகொடுக்க முயன்றார். அவர் கூறும் பிரச்சனை யாது எனில் மாணவர்கள் ஒவ்வொரு சுலோக்னுக்கும் அர்த்தம் கேட்கின்றார்கள் என்பது தான். சமஸ்கிருதத்தை பட்டைய படிப்பு மட்டுமே பெற்று தேர்ந்த அந்த தமிழ் ஆசிரியர் பொருள் தெரியாமல் திணறி இருக்கின்றார். சமஸ்கிருத உயர் கல்வி பெற்றவர்களே பொருள் கூற முடியாத போது நான் எப்படி பொருள் கூறுவது என்று புலம்புகின்றார். அவருக்கு இப்ப அந்த வேலையும் இல்லாமல் அதே கோவிலில் சாமி படம்,பொருட்கள் விற்றுக்கொண்டு இருக்கின்றார். சும்மா இருந்து சம்பளம் வாங்குவதனை விட இது மேல் என்கின்றார். ஆனாலும் அவர் பேச்சில் தனியார் கல்லூரியில் செய்த தமிழ் ஆசிரியர் வேலையை விட்டுவிட்டுமே என்ற வலி அடிக்கடி வெளிப்படும். எதுக்கு இந்த வீராப்பு மணிகண்டன்? பார்பனர்களும் தமிழ் மொழியில் தான் தினம் தினம் பேசிக்கொண்டு உள்ளார்கள். பொருள் அறிந்த தமிழ் மொழி இறை பாடல்கள் (தேவாரம் ,திருவாசகம்,திருப்பாவை)மூலம் இறைவனை தொழுவத்தில் அவர்களுக்கு என்ன பிரச்சனையோ?
(அடுத்த முறைகோவில் வியாபாரிகளிடம் ஸ்வீபிங் மிசின் இருக்கா என்று கேட்டு எஸ்கேப் ஆயிடுங்க மணிகண்டன்….தேவையில்லாம பந்தாவுக்கு ரூபாய் 2000 வரைக்கும் செலவு செயாதீங்க மணி! )
இந்த நாட்டிற்கு இழைக்கப்பட்ட பல அநீதிகளில் சமஸ்கிரத அழிப்பும் ஒன்று, உலகிலேயே இந்தியாவில் மட்டுமே நடந்த மிக பெரிய அக்கரமம் இது. பல ஆயிரம் வருட பாரம்பரியம் உங்களை போன்ற ஆட்களால் இழிவுபடுத்தப்படுகிறது. அதுவும் போதாது என்று கோவிலில் மட்டும் எப்படி சமஸ்கிரதம் வாழலாம் அதையும் அழிக்க தமிழ் அது இது என்று கிளம்பி இருக்கிறீர்கள் (நல்ல வேலை சாதாரண மக்கள் உங்களின் சதிவலையில் விழவில்லை). சமஸ்கிருதத்தை வைத்து சம்பாதிக்க வேண்டும் என்றால் அதற்கு ஆராய்ச்சி போன்ற எவ்வுளவோ வழி இருக்கிறது அதில் முயற்சி செய்யுங்கள். அர்த்தம் தெரியாமல் உச்சரிப்பு தவறாக சொல்லப்படும் மந்திரம் கூட தோஷம் தான்.
மேலும் சமஸ்கிருதத்தை பள்ளிகளில் சொல்லி கொடுக்கும் முயற்சியை கூட இந்த அயோக்கிய கம்யூனிஸ்ட்கள் திராவிட கட்சியினர் தடுக்கிறார்கள், இந்தியாவில் மட்டுமே நடக்க கூடிய வினோதம் இது.
மணிகண்டன் உங்க வலியும் வேதனையும் எனக்கு புரியுது… ஆனாலும் பாருங்க Google Input Tools என்ற மென்பொருளில் கூட சமஸ்கிருதத்தில் எழுத (டைப் செய்ய) சாத்தியம் இருக்கு! ஆனாலும் அதனை பயன் படுத்தும் மக்களின் எண்ணிக்கை தான் மிகவும் அரிதினும் அரிதாக இருக்கு! உலக நாடுகள் சபையில் கூட சமஸ்கிருதத்தை ஒரு மொழியாக ஏற்கின்றார்கள்! இப்படி உலகளாவிய நிலையில் சமஸ்கிருதத்துக்கு ஆதரவு இருக்க தன்னுடைய தாய் மொழியாகிய சமஸ்கிருதத்தை வீடுகளில் இந்திய பார்பனர்களே பேசாமல் புறக்கணிக்கும் போது அது எப்படி வளரும் சொல்லுங்க பார்கலாம்? ஏன் நீங்களே கூட சமஸ்கிருதத்தில் எந்த பின்னுட்டத்தையும் வினவில் அளிப்பது இல்லை! இப்படி அவாள் அவாள் மொழியை அவாளே பயன்படுத்தாத போது அது சமஸ்கிருதம் என்ன எந்த மொழியாக இருந்தாலும் அழியத்தானே செய்யும்!
அடுத்தது பார்தீர்கள் என்றால் அனைவரும் அர்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் தமிழ் நாட்டில் உள்ள பார்பனர் அல்லாதவர்கள் கூட சமஸ்கிருதம் பயின்றார்கள்… ஆனால் அவர்களின் நிலை என்ன? கோவில்களில் அவர்கள் சமஸ்கிருதத்தில் வேதம் ஓத அனுமதிக்கபடாமல் தானே உள்ளார்கள்… அப்புறம் எப்படி சமஸ்கிருதம் வளரும்?
சென்னை பல்கலைகழகத்தில் கூட சமஸ்கிருத துறை இருக்குங்க! ஆனாலும் அதில் சேர்ந்து பயிலும் மாணவர்கள் வெகு சிலரே. பெரும்பான்மையான சீட்டுகள் காலியாகத்தான் இருக்கு!
கடைசியா ஒன்னு! சமஸ்கிருதத்தில் அர்த்தம் தெரியாமல் உச்சரிப்பு தவறாக சொல்லப்படும் மந்திரம் கூட தோஷம் தான் என்று தெளிவா சொல்றீங்க! ஏத்துக்கொள்கின்றேன்! எந்த மொழியாக இருந்தாலும் அப்படி பயன்படுத்துவது தவறுதான்… அப்ப அதே சமஸ்கிருதத்தில் அர்த்தம் தெரியாமல் உச்சரிப்பும் தெரியாமல் கோவில்களில் தமிழ் மக்கள் கேட்கும் மந்திரத்தால் ஏதேனும் “மகா தோஷம்” தமிழ் மக்களுக்கு ஏற்படாதா மணிகண்டன்?
மணிகண்டன் எங்கிருந்தாலும் வினவு விவாத மேடைக்கு வரவும்… தாங்கள் பதிலை நோக்கி பல கேள்விகளும் காத்திருப்பில் உள்ளன….
ஏன் செந்தில் என்னை வம்புக்கு இழுக்கிறீர்கள் ஏற்கனவே இப்படி கூப்பிட்டு, என்னிடம் மொக்கை வாங்கி சென்றிர்கள் மீண்டும்மா ?
மணிகண்டன் விவாதத்தில் உங்கள் பதிலை கேட்டால் மொக்கையாக தான் பேசுவேன் என்று வாக்குமூலம் கொடுகின்றீர்களே நியாயமா? மேலும் ஹிந்து மதத்தை பிச்சைகாரர்கள் தான் அழிகின்றார்கள் என்று கூறுகின்றீர்கள்! விளக்கலாம் அல்லவா? மொக்கையாகவாது விளக்கலாம் அல்லவா?
மணிகண்டன், சமஸ்கிருதம் அழியுது என்று அழுது புரண்டு புலம்பித்திரிந்த அயோக்கிய சிகாமணி நீர் தான்…! எனவே நான் உமக்கு அளித்த என்னுடைய சமஸ்கிருதத்தின் மீதான கருத்துகளுக்கு நீர் பதில் அளித்தே தீரவேண்டும் ….முடியுமா?
கம்யூனிஸ்ட்கள் பள்ளிகளில் சமஸ்கிரதம் கற்று கொடுப்பதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவிப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று, அவர்கள் சொல்லும் காரணம் ஹிந்துத்துவா… உலகில் எந்த ஒரு நாட்டிலும் நடக்காத ஒரு அக்கரமாம் இது பல ஆயிரம் வருடங்கள் பாரம்பரியம் மிக ஒரு மொழியை அந்த நாட்டின் பள்ளிகளில் சொல்லி கொடுக்க கூடாது என்று சொல்வது எந்த வகையில் நியாயம் ? இதில் கோவில் அர்ச்சகர் ஆவதற்கு பயிற்சி எடுத்தார்கள் ஆக முடியவில்லை என்ற வருத்தம் வேறு உங்களுக்கு ?
சமஸ்கிருதத்திற்கு மட்டும் அல்ல தமிழை விரும்பி படிப்பவர்களுக்கும் கல்லூரிகளில் மிக குறைவே, BA தமிழ் படிக்க ஒரு வகுப்பில் 2 மாணவர்கள் இருந்தாலே பெரிய விஷயம் தமிழ் வழி அரசு பள்ளிகள் எல்லாம் மூடும் நிலை தான் தமிழகம் முழுவதும் இருக்கிறது. எப்படி தமிழை வளர்க்க வேண்டும் அதற்கு சற்றும் குறையாமல் சமஸ்கிருதத்தையும் வளர்க்க வேண்டும்.
கம்யூனிஸ்ட்கள் ஹிந்து மதத்தை எதிர்ப்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே
கம்யூனிஸ்ட்கள் பிஜேபி மற்றும் RSS அவர்களின் திட்டங்களை மற்றவர்கள் மீது திணிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டுகிறார்கள் அதனால் அவர்களை எதிர்க்கிறோம் என்கிறார்கள், சரி கம்யூனிஸ்ட்கள் அவர்களின் கொள்கைகளை மற்றவர்கள் மீது திணிக்கவில்லையா ? உதாரணம் சபரிமலை கோவிலில் கம்யூனிஸ்ட்கள் தலையீடு கடவுள் நம்பிக்கையற்ற கம்யூனிஸ்ட்களுக்கு என்ன தகுதி இருக்கிறது ஹிந்து மத கோவிலில் தலையிட ?
கம்யூனிஸ்ட்கள் பற்றி எவ்வுளவோ சொல்லலாம்.
மணிகண்டன்,
[1]தமிழ் மொழியை ,தெலுங்கு மொழியை என்ன இந்தியா முழுமைக்குமா செல்லிக்கொடுகின்றார்கள்? பிற மொழிகளுக்கு என்ன இடமோ அதே இடத்தை தானே சமஸ்கிருதத்துக்கும் தரமுடியும்! அது யாருடைய தாய் மொழியோ அந்த பார்பனர்களே அதனை புறம் தள்ளிய பின் என்ன காரணத்துக்காக இந்தியா முழுவதும் அதனை கற்றுத்தரவேண்டும்? முதலில் சமஸ்கிருதத்தை பார்பனர்களை கற்ற சொல்லுங்கள்… அவர்களை பேச சொல்லுங்கள்! தமிழ் நாட்டில் வெறும் 3% உள்ள பார்ணர்களுக்காக மீதம் உள்ள 97 % மக்களும் சமஸ்கிருதத்தை பயிலவேண்டும் என்று நீங்கள் கோருவது உங்களுக்கே பயித்தியகார தனமாக இல்லையா மணி?
மணிகண்டன்,
[2] சமஸ்கிருதம் யாருக்கு பல ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் உரிய மொழி மணிகண்டன்? தமிழ் மக்களின் மொழியாக அது இருந்து இருந்தால் அவர்கள் அதனை ஏன் புறக்கணிகின்றார்கள்? அது பார்பனர்களின் மொழி என்பதால் அந்த மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் யாதொரு கலாச்சார பண்பாட்டு தொடர்பும் இல்லை என்பதால் சமஸ்கிருதம் தமிழ் மக்களால் புறம் தள்ளபடுகிறது…சமஸ்கிருதத்தில் பேசவேண்டியர்களே பேசாத போது தமிழ் மக்களின் தலையில் எதற்காக சமஸ்கிருதத்தை திணிக்கின்றீர்கள்?
[3] கோவிலுக்குள் தலித் மக்கள் போககூடாது என்று வைக்கத்தில் தடை செய்தீர்கள்! பெரியார் சென்று உங்கள் ஹிந்துத்துவா ஆதிகத்தை அடித்து நொறுக்கி வந்தார்… இப்ப ஐயப்பன் கோவிலில் பெண்கள் போக கூடாது என்று தடை செய்கின்றீர்கள்…. அதனை கம்யுனிஸ்டுகள் எதிர்ப்பதில் என்ன தவறு மணிகண்டன்?
செந்தில் நான் சொல்லும் கருத்து உங்களுக்கு புரிவதற்கு கடினமாக இருக்கும், புரிந்துகொள்ள முயற்சி செய்யவும்.
பார்ப்பனர்கள் பேசாமல் புறக்கணிக்கவில்லை அவர்களை பேசவிடாமல் தடுத்து இருக்கிறீர்கள். பார்ப்பனர்களின் பூணுல் போட்டு சென்றால் கூட அவர்களை தாக்கி பூணுலை அறுத்து எரிவதை பெருமையாக நினைக்கும் கூட்டங்கள் இருக்கும் போது அவர்களால் எப்படி சமஸ்கிரதம் பேச முடியும் ?
தற்போது கோவில்களில் சொல்லப்படும் மந்திரம் பெரிதாக ஒன்றும் இல்லை, இதனால் பெரிய தோஷம் மக்களுக்கு இல்லை, சில மந்திரங்கள் இருக்கிறது அதை தப்பும் தவறுமாக உச்சரித்தால் நிச்சயம் பாதிப்பு இருக்கும்.
நான் பார்த்தவரையில் அந்த மாதிரியான மந்திரங்களை எந்த கோவிலிலும் சொன்னது இல்லை.
மந்திரம் என்பது sound தான் அதை சரியாக உச்சரிக்கும் போது அந்த sound vibration நம்மிடம் மாற்றங்களை உருவாக்குகிறது இதை உங்களை போன்ற ஆட்கள் மூட நம்பிக்கை என்று சொல்கிறீர்கள் ஆனால் இதை விஞ்ஞனம் மூலம் நிரூபிக்கலாம்… ஒரு மிக சிறிய உதாரணம் சொல்கிறேன், பாலங்களில் ராணுவ வீரர்கள் மார்ச் பாஸ்ட் செய்ய மாட்டார்கள் காரணம் அவர்கள் பாலங்கள் மீது மார்ச் பாஸ்ட் செய்தால் பாலம் உடைந்து விடும்.
If soldiers march in unison across a bridge, they apply a force at the frequency of their step.
If their frequency is closely matched to the bridge’s frequency, the soldiers’ rhythmic marching will amplify the vibrational frequency of the bridge. If the mechanical resonance is strong enough, the bridge can vibrate until it collapses from the movement.
இது நமக்கு தெரிந்த சிறிய உதாரணம் சமஸ்கிரத மந்திரங்களும் அப்படி தான் நம் நாட்டின் பெரியவர்கள் தவம் இருந்து கண்டு பிடித்த விஷயங்களை மூட நம்பிக்கை ஹிந்து மதம் சார்ந்த விஷயம் அதனால் அழிக்கபட வேண்டும் என்று சொல்வது தான் மூடத்தனம். ஒரு கண்டுபிடிப்பை பயன்படுத்தி அதை மேலும் மெருகேற்ற வேண்டும் அதை ப்ராமண எதிர்ப்பு ஹிந்து மத எதிர்ப்பு என்று சொல்லி நம் நாட்டின் பொக்கிஷங்களை தூக்கி குப்பையில் போட்டு கொண்டு இருக்கிறோம்.
கம்யூனிஸ்ட்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை அது அவர்களின் விருப்பம், ஆனால் கம்யூனிஸ்ட்கள் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் வழிபடும் ஹிந்து கடவுளை அவமதிப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை.
வெட்கமாக இல்லையா மணிகண்டன்? தங்கள் தாய் மொழியில் தெலுங்கர்கள், குஜராதிகள், சீக்கியர்கள், பீகாரிகள் என்று தமிழ் நாட்டில் வந்து பிழைப்பை நடத்துபவர்கள் எல்லாம் பேசிக்கொண்டு இருக்க பார்பனர்கள் சமஸ்கிருதம் பேச தமிழ் மக்கள் தடையாக இருகின்றார்கள் என்று கூறி அழுது புலம்ப உங்களுக்கு வெக்கமாக ,மானக்கேடாக இல்லையா மணிகண்டன்… ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் புழக்கத்தில் இல்லாதா மொழி தானே அழியும் என்பது தான் நிதர்சனம்… ஒரு மொழி பயன்பாட்டில் உள்ளபோது மட்டுமே அதில் வினைசொற்கலும், பெயர்சொற்களும் பிறந்து வளரும்… அந்த மொழியின் இலக்கணமும் வளர்சி பெரும்… அதனால் பழக்கத்தில் இல்லாத சமஸ்கிருதத்தில் அத்தகைய முன்ன்றேரங்க்களை நாம் எதிர்பார்க்க முடியாது… உதாரணத்துக்கு computer என்பதற்க்கான கலை சொல் கணினி என்று தமிழில் உருவாக்கபட்டு அது மிகுந்த பயன்பாட்டிலும் உள்ளது… ஆனால் சமஸ்கிருதத்தில் அத்தகைய கலை சொற்கள் இல்லையே! பயன்பாட்டில் இருக்கும் மொழியில் மட்டும் தானே கலை சொற்களும் வளரும்!
அடுத்தது எந்த மொழியானாலும் பேசப்படும் போது ஒலியாகத்தான் காற்றில் பரவும். அது சமஸ்கிருதத்துக்கு மட்டும் அல்ல எல்லா மொழிகளுக்குமே பொருந்தும்…. அதே மொழியில் ஒரு விசயத்தை பாடலாக இசையுடன் பாடும் போது அது அறிவைவிட , உணர்வுக்கு மிகவும் விருப்பமுடையாதாக இருக்கத்தான் செய்யும்… தேவாரம் , திருவாசகம், திருவம்பாவை என்று எந்த இறைபாடலை பாடினாலும் அதுஇறை நம்பிக்கை உடையவர்களுக்கு மனதுக்கு இனியதாகவே இருக்கும் ! ஆனால் சமஸ்கிருதத்தை தம் தாய் மொழியாக கொண்ட பார்பனர்கள் தம் வீட்டில் கூட அந்த மொழியில் பேசாமல் அல்லது பேச இயலாமல் கோவில்களில் வலிய சமஸ்கிருத சுலோகங்களை பொருள் புரியாமல் பூசைகளின் போது திணிக்கின்றார்கள்… முரண்பாடே இதுதான்…. தம் தாய் மொழியை வீட்டில் பேசாத பார்பனர்கள்கோவில்களில் மட்டும் அதனை பயன்படுத்துவது தான் மிக பேசிய நகை முரண்….!
அதற்கு அடுத்ததாக நான் உறுதியாக கூற விரும்புவது என்னவென்றால் கம்யுனிஸ்டுகள் எந்த மொழியையும் ஒரு இனத்தின் அடையாளமாக தான் பார்கின்றார்கள்… எப்போது ஒரு மொழி அழிகின்றதோ அப்போது அந்த இனமும் காணாமல் போகத்தான் செய்கின்றது…எனவே ஒரு மொழியின் அழிவில் கம்யுனிஸ்டுகள் மகிழ்ச்சி அடைய எத்தகைய காரணமும் இல்லை…
இறுதியாக ஹிந்து மத கடவுள் பற்றி பெரியாரும், அம்பேத்காரும் செய்த விமர்சனங்களில் நூற்றில் ஒரு பங்கு கூட கம்யுனிஸ்டுகள் பேசுவது இல்லை…. ராமனை பற்றிய அம்பேத்காரின் விமர்சனங்கள் மீது இன்று வரையில் ஹிந்துத்துவா வாதிகளால் எதிர்த்து விவாதிக்க இயலவில்லை… ஆனாலும் அம்பேத்காரையும் ஹிந்துத்துவா வாதிகள் தம்முடன் சேர்த்துகொண்டு தலித் மக்களின் ஆதரவை பெறவே முனைகின்றார்கள்…. இது நேர்மையற்ற செயல் அல்லவா? ஹிந்து மதத்தை விட்டு ஏன் அம்பேத்கார் ஏன் வெளியேறினார்? தம் மக்களுக்கு ஹிந்து மதத்தில் மரியாதை இல்லை சமத்தும் இல்லை என்ற காரணத்தை தவிர வேறு எதுவும் இல்லை….அதனால் தானே அவர் ஹிந்து மதத்தில் இருந்து வெளியேறினார்…!
என்னுடைய பின்னுட்டம் 1.1.2.1.1.1.1.1 ல் நான் எழுப்பியிருந்த எந்த சமஸ்கிருதம் தொடர்பான எந்த கேள்விகளுக்குமே உங்களிடம் இருந்து பதில் இல்லை மணிகண்டன்…. ஒரு வேலை ஹிந்து கடவுள்கள் மீது பற்றுள்ள குறிப்பாக சைவ சிவன் மீது பற்று உள்ள ஆலாவாயன் கூறுவது போன்று விவாதத்தில் இருந்து விலகி ஓடும் உங்களை கழுவில் ஏற்றினால் தான் சரியாக இருக்கும் என்று நம்புகின்றேன்….
உண்மையான பக்தி எதையெல்லாம் தாண்டி இருக்கிறது என்று கூறினால் இந்த கம்யுனிஸ்டுகளுக்கு உபயோகமாக இருக்கும். எனக்கு தெரிஞ்சு புதுசா ஏழு கோள்களை நாசகாரக கண்டுபுடிச்சு இருக்காங்களாமே. ஒருவேளை அங்க இருக்குமோ….இல்லை அதையும் தாண்டி இருக்குமோ ….. எதுக்கும் ஆதியோகிய கேட்டு சொல்லுங்க…..அவருக்கும் தான் அடியும் கிடையாது முடியும் கிடையாதாமே………
Manikandan may share his experience in temples.But at the same time,he will not hesitate to support the lavish spending on construction of 112 feet Siva statue and 1 lakh and odd sqft “asramam”in the elephant corridor and will not condemn “5 lakh”people gathering there today disturbing the wild life.He says he could not forget the seize of his car by beggars at VaitheeswaranKoil.Yet,he will never think of eradication of beggars(not by killing them but by rehabilitating them or by abolishing poverty)On the other hand,he is so proud of Hinduism fostering the inequality and caste differences.
He says that Archagars in these temples are fleecing money from the devotees.But,he would have supported the efforts taken by the Deekshidars to regain control of Chidambaram temple.He would have supported the case filed by one section of Archagars for preventing aagama trained Archagar trainees of other castes to do pooja in TN temples.In other temples under HR&CE deptt,hundis are there to receive donations from the devotees.But the Deeshidars have removed hundies from Chidambaram temple so as to loot entire money from the devotees.
சூரியன் சார் …, இந்த மணிகண்டனுக்கு தமிழில் பதில் அளித்தாலே அதனை புரிந்துக்கொண்டு முறையாக பதில் அளிக்கும் திறமை அற்றவர் நீங்க வேற ஆங்கிலத்தில் வேறு பதில் அளித்து உள்ளீர்கள்! என்ன செய்யலாம்? மொழி பெயர்கலாமா தமிழில்? முயற்சிகின்றேன்….
மணிகண்டன் அவரின் கோவில் அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஆனால் அவர் 112 அடி உயர ஆடம்பர சிவ சிலையையும் , யானைகளின் பாதையில் கட்டமைக்கப்பட்டு உள்ள ஒரு லச்சம் சதுர அடி பரப்பளவு உள்ளஇஷா ஆசிரமத்தையும் அங்கு குவியும் ஐந்து லச்சம் மக்களால் ஏற்படும் வன சுற்று சூழல் கேடுகளை பற்றியும் ஏதும் அவர் கண்டனம் தெரிவிக்க மாட்டார்….
மணிகண்டன் அவர்கள் தன்னுடைய கார் பிச்சைகாரர்க்ளால் சுற்றி வலைக்கபட்டது பற்றி பேசும் அதே நேரத்தில் அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது பற்றி ஏதும் பேசமாட்டார்… அதே நேரத்தில் ஹிந்துயிசம் முன்மொழியும் சமத்துவ இன்மை பற்றியோ அதில் பிரிக்க இயலாத வகையில் இயங்கும் சாதிய வேறுபாடுகள் பற்றியோ ஏதும் பேசமாட்டார்…..
கோவில் அர்சகர்கள் பகதர்களிடம் இருந்து பெரும் பணத்தை பற்றி பேசும் மணிகண்டன் அதே நேரத்தில் சிதம்பரம் கோவில் தீர்சகர்கள் அந்த கோவிலை அரசிடம் இருந்து மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வர செய்த முயற்சிகளை பற்றி ஏதும் வாய் திறக்க மாட்டார்…. பார்பனர் அல்லாதவர்கள் பூசை செய்ய ஆகம விதிகள் படி பயிற்சி பெற்று இருந்தாலும் அதனை பார்பனர்கள் எதிர்த்து வழக்கு தொடுக்கும் போது மணிகண்டன் அவர்கள் பார்பனர்களுக்கு ஆதரவாக தான் இருப்பார்….
இந்து அற நிலை துரையின் கீழ் உள்ள தமிழ் நாட்டு கோவில்களில் உண்டியல்கள் இருக்க , சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீர்சகர்கள் அதனை அப்புரப்டுத்திவிட்டு முழு பக்தர்கள் பணத்தையும் கொள்ளை அடிப்பத்தும் நடந்து கொண்டு தான் இருக்கிறது…..!
Thank you very much Senthilkumaran for your translation.At my advanced age (70)I have not learnt to type in Tamil.
Sooriyan sir, It is my pleasure to do such translation for valuable content in the interest of our society. Sir I hope it is my duty….
சூப்பரப்பு…
இந்த பாப்பார பயலுக பண்ற அடாவடித்தனம் உங்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தவில்லையாம். அங்கிருக்கும் வியாபாரிகள் மற்றும் பிச்சைகாரர்கள் தான் தலைகுனிவை ஏற்படுத்து விட்டார்களாம்.
யாரங்கே!…எங்கள் அண்ணனுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய அந்த பிச்சைக்காரர்களை இழுத்து வரவும். சபையில் வைத்து விசாரிக்க வேண்டும்.
@@@@Manikandan :
உங்கள் பின்னுட்டம் வியப்பை அளிக்கின்றது. பிச்சைகாரர்கள் தான் ஹிந்து மதத்தை அழிக்கப்போகின்றார்களா ? ஆச்சிரியமாக இருக்கிறது. மாற்றி யோசியுங்கள் நண்பரே. ஆழ்ந்து யோசியுங்கள் நண்பரே. பிச்சைகாரர்களுக்கும் கோவிலை தன் சொத்தாக பாவித்து அராஜகம் செய்வோருக்கும்-அர்சகர்களுக்கும் என்னங்க தொடர்பு? பிச்சைகாரர்கள் வெளியில் பிச்சை எடுகின்றார்கள்… அர்ச்கர்கள் உள்ளே பிச்சை எடுக்கின்றார்கள் என்று கூற வருகின்றீர்களா? ஹிந்து மதத்தில் வரலாற்று காலபோக்கில் என்ன என்ன மாற்றங்கள் இதுவரையில் நடந்து உள்ளது? தேவரடியார் முறை ஏன் ஒழிக்கப்பட்டது? கோவிலுக்குள் sc-st மக்கள் நுழையும் வாய்ப்பை எப்போது சட்டபூர்வமாக பெற்றார்கள்? இனி என்ன என்ன மாற்றங்கள் நடைப்பெற்றால் ஹிந்து மதம் பிழைக்கும் என்று யோசியுங்கள் நண்பரே.
Thank you. Realy real y satisfying confrontation – when I am reading. A Very Big salute to you.
ஜக்கி வாசுதேவின் மனைவி 1997 இல் மர்மமான முறையில் இறந்தார் கேட்டால் தன் மனைவி ஒரு விதமான பிராணாயமா பயிற்சி செய்த போது மூர்ச்சையாகி விட்டார் என்றார்.
Retired HIgh Court Judge Hariparanthaman says that a murder case was filed by Bangalore police against Jakki in the above matter.
14-11-09 ஆம் தேதி ஜக்கி வாசுதேவ் பேசியது
//ஒரு பிரசினையால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கு எதிராக போராடும்போது, மற்றொரு தரப்பு பாதிக்கப்படும். பிறகு அந்த தரப்பு போராடும். எனவே போராடுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.
அநீதிக்கு எதிராக உன் ரத்தம் கொதி்த்தால் நீயும் நானும் சகோதரர்கள் என்று “சே குவேரா” கூறியதாக குறி்ப்பிட்ட “சத்குரு”, இது மிகவும் தவறான கருத்து என்று குறிப்பிட்டார்.
சே குவேராவின் கூற்றிற்கு எதிராக இருத்தலே நல்லது என்று கூறிய சத்குரு, சே குவேராவின் கருத்திற்கு எதிரான கருத்து கொண்டவர்கள் தமது சகோதரர்கள் என்று பிரகடனம் செய்தார்.//
அதாவது யாராவது அடிச்சா கூட கொஞ்சம் கூட சொரணை இல்லாம சிவனே என்று இருக்க சொல்கிறார்.
பிரேமானந்தாவை ஆதரித்த அர்ஜுன் சம்பத் பற்றிய தங்கள் கருத்து என்ன
///‘பிரேமானந்தாவுக்கு ஆதரவாக மூவர் கூட்டணி ஒன்று களமிறங்கி இருந்தது , இன்னொரு திருப்பம்! ‘தனித் தமிழர் சேனை’ நகைமுகன், ‘இந்து மக்கள் கட்சி’ அர்ஜுன் சம்பத், ‘பாரதிய ஃபார்வர்ட் பிளாக்’ முருகன்ஜி ஆகிய மூவரும் ‘பிரேமானந்தா நற்பணி பாதுகாப்பு இயக்கம்’ என்ற இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்த மூவர் கூட்டணி உதிர்த்த முத்துக்களில் சில இதோ…
‘‘பிரேமானந்தா சாமிகளைவிட கொடூரமான குற்றங்களை செய்தவர்கள்கூட சட்டத்தின் பார்வையில் நிரபராதிகளாகக் கருதப்பட்டு, வெளியில் சுற்றி வருகிறார்கள். சாமிகளுக்கு நடந்ததோ உச்சக்கட்டக் கொடுமை. அதனால்தான் சற்று தாமதமாகவாவது சாமிகளுக்கு நியாயம் தேடித் தருவதற்காக ஒன்று சேர்ந்திருக்கிறோம்’’ என்று நகைமுகன் சொல்லி நிறுத்த, அர்ஜுன் சம்பத் தொடர்ந்தார்.
‘‘அரசாங்கம் செய்ய வேண்டிய காரியத்தை சாமிகள் தனியாக செய்து கொண்டிருக்கிறார். ஆயிரம் குழந்தை களைப் படிக்கவைத்துக் கொண்டிருக்கிறார். இதில் 250&க்கும் அதிகமான குழந்தைகள் அநாதைக் குழந்தைகள். சாமி ஆசிரமத்துக்கு வந்ததுமே இந்தக் குழந்தைகள் எல்லாம் ‘அப்பா, அப்பா’ என அன்போடு ஓடிவருகின்றன. நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய கிலானியை விடுதலை பண்ணியிருக்கிறோம். அப்சலுக்கு தூக்குத் தண்டனையையே நிறுத்தியிருக்கிறோம். நாகர்கோவிலில் ஆசிரமம் நடத்தி கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் சிக்கிய கிறிஸ்தவ சாமியார் ஜான் ஜோஸப்பை நிரபராதி என விடுவித்திருக்கிறோம். ஆக, இந்துக்கள் அதிகமாக வாழ்கிற ஒரு நாட்டில் ‘முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு ஒரு நீதி… இந்துக்களுக்கு ஒரு நீதி’ என்கிற அளவில்தானே எல்லாமே நடந்து கொண்டிருக்கிறது. ‘இந்து என்கிற காரணத்துக்காக பிரேமானந்தா மட்டும் சிறையிலிருக்க வேண்டுமா?’ என்றார் அர்ஜுன்சம்பத்.///
இவங்க அநியாயத்துக்கு ஒரு அளவே இல்லையா? எதோ அவங்க கோவில் கட்டறாங்க எங்களை கட்ட விடமாட்டேங்கறாங்கன்னு சொல்றா மாதிரி மத்த மதத்துக்காரங்க கற்பழிச்சா விட்டுடறாங்க, எங்களை மட்டும் விடமாட்டேங்கறாங்களேன்னு கேக்கறாங்க
ஹஹஹஹா,
இந்து மதம் வரலாற்றுல எப்படி தோன்றியதோ அது போலவே அழிந்து போகும்.
புரியலையா? இல்லாத இந்து மதம் என்று ஒன்று எப்படி வரலாற்றில் தோன்றியதோ அது போலவே அஸ்திவாரம் குலுங்கி கொண்டிருக்கும் இன்றைய இந்து மதம் மண்ணோடு புதைந்து வரலாறாக போகும் நாட்கள் வெகுதூரம் இல்லை என்பதற்கு நாட்டில் நாள்தோறும் நடக்கும் நிகழ்சிகள் கட்டியங்கூறுகின்றன.
தங்களது வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு எப்பொழுது இந்த மாதங்கள் தீரவில்லை என்ற நிலைபாட்டிற்கு மக்கள் வருகின்றனரோ அன்றிலிருந்து அங்கிங்கெனாதபடி எங்கும் அஸ்திவாரம் ஆட்டம் கண்டு கொண்டிருக்கும் இந்து மதம் புதைய தொடங்கும்.
டாஸ்மாக்கை ஒழிக்க தான் மக்கள் அதிகாரம் வேண்டும். ஆனால் இந்து மத போதையை அழிக்க பார்ப்பன வானர கூட்டமே போதுமானது….
முதல்ல இந்து மதம்னா இன்னா தலிவரே….சும்மா சீன போட்டுக்கிட்டு ….
இந்து மதத்தை அழிக்க உள்நாட்டு சதி அண்டை நாட்டு சதின்னு ….சும்மா கத்திகினு…இந்து மதம் என்ன பசுமாட்டு எலும்புதுண்டா அதன் பின்னாடியே போய்கினு இருக்கறதுக்கு.
நாங்க தண்ணிய குடிக்கறோம்.நீங்க பசுமாட்டு மூத்திரத்தையே குடிங்க..
Mr Mannangatti Manikandan.Tell your replies for the charges or close your navathuvaaraas.
14-11-09 ஆம் தேதி ஜக்கி வாசுதேவ் பேசியது
//ஒரு பிரசினையால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கு எதிராக போராடும்போது, மற்றொரு தரப்பு பாதிக்கப்படும். பிறகு அந்த தரப்பு போராடும். எனவே போராடுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.
அநீதிக்கு எதிராக உன் ரத்தம் கொதி்த்தால் நீயும் நானும் சகோதரர்கள் என்று “சே குவேரா” கூறியதாக குறி்ப்பிட்ட “சத்குரு”, இது மிகவும் தவறான கருத்து என்று குறிப்பிட்டார்.
சே குவேராவின் கூற்றிற்கு எதிராக இருத்தலே நல்லது என்று கூறிய சத்குரு, சே குவேராவின் கருத்திற்கு எதிரான கருத்து கொண்டவர்கள் தமது சகோதரர்கள் என்று பிரகடனம் செய்தார்.//
அதாவது யாராவது அடிச்சா கூட கொஞ்சம் கூட சொரணை இல்லாம சிவனே என்று இருக்க சொல்கிறார்.
Hello MR. Mani, You are a good example for “HOW AN ARGUMENT SHOUD NOT BE”.
Comeon Mr. Mani, Let’s put your pints againts this article. Then we can discuss about that.
இஷாவின் சுற்றுப்புற சூழல் கேடுகளை பற்றிய நக்கிரன் இணைய தளத்தில் வந்து உள்ள ஆதார பூர்வமான கட்டுரைகளை இங்கு சமர்பிக்க விரும்புகின்றேன்…
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=185058
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=185057
உங்கள் ஆதங்கம் ஒரு பக்கம் இருக்கட்டும்… இந்த காருண்யா அருகிலேயே இருக்கிறதே? ஒரு கட்டுரையாவது, எழுதி இருப்பிங்களா?? கொண்டையை மறைங்க… அசிங்கமா இருக்கு!!! பகுத்தறிவு பல் இளிக்கிறது !!!
ஆதங்கம் புரிந்தால் பதில் சொல்லவும்
தாங்கல் வினவுக்கு புதியவரா
டி.ஜி.எஸ் தினகரன்: கள்ளப் பிரசங்கிகள் ‘அற்புதசுகம்’ கொள்ளை!
https://www.vinavu.com/2012/08/10/dgs-dinakaran/
இந்த கட்டுரை இரண்டு பேத்தையும் அம்பலபடுத்துகிறது
/// ஜக்கி வாசுதேவுக்கு சற்றும் குறையாத கிரிமினல் வேலைகளை பால் தினகரனின் காருண்யாவும் அதே சிறுவாணி பகுதியில் அதே காலகட்டத்தில் நடத்தி வந்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நல்லூர்பதி என்கிற ஆதிவாசி கிராமத்தை முற்றிலுமாக கபளீகரம் செய்து கொண்ட ‘ஏசு வருகிறார்’ கும்பல், அந்த ஊரின் பெயரையே காருண்யா நகர் என்று மாற்றிக் கொண்டதோடு அப்பகுதியில் ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே கட்டியெழுப்பினர். அதே பகுதியில் இயங்கி வரும் சின்மயா மிஷன், ஏசு கும்பலான காருண்யா மற்றும் ஈஷா ஜக்கி கும்பலிடையே அந்தப் பகுதியை யார் கட்டுப்படுத்துவது என்கிற போட்டி இரண்டாயிரங்களின் துவக்கத்தில் ஏற்பட்டது.///
https://www.vinavu.com/2013/03/12/savukku-exposes-jaggi-vasudev/
இரண்டு கட்டுரைகள் குடுத்தாயிற்று
இப்ப என்ன சொல்வீங்க
இந்த நாடு நலமாக இருக்க வேண்டும் என்றால் முதலில் இந்த கம்யூனிஸ்ட் அயோக்கியர்களை எல்லாம் நாடு கடத்த வேண்டும், இந்த நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்றுவரையில் அவர்கள் இந்த நாட்டிற்கு செய்தது எல்லாம் பச்சை துரோகம் மட்டுமே
மணிகண்டன்
நீங்க நாடு கடத்துங்க,போட்டு தள்ளுங்க,ஏன் கொன்னதுக்கு அப்புறம் எண்ணெய் சட்டியில் போட்டு வறுத்தெடுங்க.
அதுக்கெல்லாம் முன்னாள் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிவிடுங்கள் .
பிரேமானந்தாவை ஆதரித்த அர்ஜுன் சம்பத் பற்றிய தங்கள் கருத்து என்ன?
ஒரு பிரசினையால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கு எதிராக போராடும்போது, மற்றொரு தரப்பு பாதிக்கப்படும். பிறகு அந்த தரப்பு போராடும். எனவே போராடுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.
அநீதிக்கு எதிராக உன் ரத்தம் கொதி்த்தால் நீயும் நானும் சகோதரர்கள் என்று “சே குவேரா” கூறியதாக குறி்ப்பிட்ட “சத்குரு”, இது மிகவும் தவறான கருத்து என்று குறிப்பிட்டார் ஜக்கி வாசுதேவ் .
ஒருவேளை நீங்கள் அநீதிக்கு எதிராக நாங்கள் பாதிக்கப்பட்டவர்களை போராட சொல்வதால் எங்களை நாடு கடத்த சொல்கிறீர்களா.
கம்யூனிஸ்ட்கள் மீது எனக்கு எந்த நல்லெண்ணமும் கிடையாது,
அட்ரா சக்கை அட்ரா சக்கை ……கம்யுனிஸ்டுகள் வரிசையில் வரவும்…வந்து மனிகன்டரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு நல்லெண்ண நற்சான்று பெற்று முக்தியடையவும்.
மணிகண்டன், உங்களை போன்ற அயோக்கியர்களுக்கு கம்யூனிஸ்ட்டுகள் மீது நல்ல அபிப்பிராயம் இருந்தால் தான் தவறு…. மற்றபடி உங்கள் கருத்தில் ஏதும் தவறு இல்லை மணிகண்டன்…
But for Communists,our economy would have ended in doldrums during 1998 European and American crisis.Only because of Communists,at least the liability clause was included in the Civil Nuclear Agreement with USA.The minimum safeguards in labor laws are still protected by them.It is strange and pathetic to witness RSS people calling communists as “un-patriotic”Mallikarjuna Garge rightfully asked in the Lok Sabha whether the “patriotism”is taken on lease by the BJP.
கம்யூனிஸ்ட்கள் ஏழைகளுக்காக போராடுகிறோம் என்ற இருக்கிறார்களே தவிர அவர்கள் இந்த நாட்டிற்காக விசுவமாக இருப்பவர்கள் என்பது தான் என் குற்றச்சாட்டே… இந்திய அமெரிக்கா அணு ஒப்பந்தம் உள்ள சிறு விஷயத்தை பற்றி மட்டுமே நீங்கள் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் நம் கம்யூனிஸ்ட்கள் அணு ஒப்பந்தத்தை தடுக்க அனைத்து செயல்களையும் செய்தார்கள் மத்திய அரசை கவிழ்க்க வேண்டும் என்ற நிலைக்கு கூட சென்றார்கள்.
அணு ஒப்பந்தம் போடுவது, தண்டகாரண்யா மலைகளை கபளீகரம் செய்வது, மணல் கொள்ளை அடிப்பது , கல்விதந்தைகளாகி கொள்ளையடிப்பது, அம்பானி அதானிகளுக்கு இலட்சக்கணக்கான கோடிகள் கடன் தள்ளுபடி செய்வது, மதத்தின் பெயரால் இயற்கையை நாசம் செய்வது, தாழ்த்தப்பட்ட மக்களை அடக்குவது, பெண்களை நாசம் செய்வது …இதுபோன்ற ஈனசெயல்களுக்கு எதிராக போராடுவது என்பதும் ஏழை மக்களுக்காக போராடுவது என்பதும் ஒன்றுதான். அதாவது ஒரு கம்யுனிஸ்டு ஏழை மக்களுக்காக தான் போராடுகிறான்.
இந்த ஈனச்செயல்களுக்கு துணைபோகும் இந்த அரசை ஒழிக்க வேண்டும் என்று கம்யுனிஸ்டு மட்டுமல்ல காமன்மேனும் தான் நினைக்கிறான்.
ஆதலால் விசுவாசம் என்ற உமது பல்லவியை பாடிக்கொண்டிரும்……..
ஆமா, அதாம்பா, உங்கம்மா டாஸ்மாக் ஜெயா..நீங்க கூட லிஸ்ட் போட்டு அவுங்க செஞ்ச நல்லதெல்லாம் ஒரு மீட்டர் நீளத்திற்கு சொன்னீர்களே …….அவுக கூட ஒரு தபா வாஜ்பேயி அரசை கவுத்துட்டாங்களாமே..அப்போ உங்க பாஷைல டாஸ்மாக் ஜெயா கூட தேச துரோகி தானே?.
client state என்றால் அடிமை அரசு என்று அர்த்தம்
இந்திய அமரிக்க அணு ஆயுத ஒப்பந்தத்தை பற்றி சொல்லும் போது அத்வானி இந்தியா இதன் மூலம் அடிமை அரசு ஆகிவிட்டது என்று சொன்னார்.
அப்படி அடிமை அரசு ஆவதை தடுப்பதற்காக காங்கிரஸ் அரசை கவிழ்க்க முயற்சி செய்தால் என்ன தவறு.
India reduced to client state of US: Advani
http://timesofindia.indiatimes.com/india/India-reduced-to-client-state-of-US-Advani/articleshow/843291.cms
Civil Nuclear Agreement is not good for our country.That is why,communists withdrawn their support to UPA govt.The agreement was signed without the liability clause.Only because of the stiff opposition by the communists,the liability clause was included in it by the present govt.Even today the Labor Minister announces that amendments to the Industrial Disputes Act will get Council of Ministers’s nod shortly to allow individual industrial unit with 500 workers to declare lock-out (at present only units with 100 workers can declare lock-out without prior permission from the government)in spite of opposition from Central Trade Unions.How communists who protect the interests of local workers can be called un-patriotic?Let Manikandan list out instances where communists acted against the interest of our country.He cannot call their protest against the Civil Nuclear Agreement as un-patrotic.If Manikandan says so,he could not differentiate between opposition to ruling party and the national welfare.
இன்று உலகில் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் அனைத்தும் அணுசக்தி உதவியால் தான் வளர்ந்தார்கள் (உதாரணம் ஜேர்மன், ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா, சீனா) இதில் ஜேர்மன் பொருளாதாரத்தில் வளர்ந்த பிறகு தான் அவர்கள் மாற்று எரிசக்திக்கு மாறுகிறார்கள் (இன்றும் முழுமையாக மாறவில்லை) ஜப்பான் பிக்குஷிமா அணுவிபத்திற்கு பிறகும் மீண்டும் அணு சக்திக்கே திரும்பி இருக்கிறார்கள்… பிக்குஷிமா அணு விபத்தில் இறந்தவர்கள் வெறும் 6 பேர் தான் மற்றவர்கள் எல்லாம் சுனாமி மற்றும் பூகம்பத்தால் இறந்தவர்கள். அந்த பழையகால அணு மின்நிலையம் அவ்வுளவு பாதுகாப்பாக இருக்கும் போது இந்திய அணு மின் நிலையங்கள் மேலும் பாதுகாப்பாக இருக்கிறது…
சூரியன் சார் எந்தனை பற்றி விவாதிக்கின்றார் என்றாவது புரிகின்றதா மண்டு மணிகண்டன்.. மரண மொக்கையாக பேசிக்கொண்டு உள்ளீர்கள்நீங்கள் ! அமெரிக்க-இந்திய அணு சக்தி ஒப்பந்தத்தில் உள்ள சாராம்சம் இந்தியாவின் சுயசார்பை உடைத்தெரிகின்றது என்ற விசயத்தை பேசிக்கொண்டு உள்ளார்.. இதனையே உங்கள் திரு அத்வானியும் பேசியுள்ளார்… அத்வானி என்ன என்ன பேசினார் தெரியுமா மண்டு மணிகண்டன்..? மன்மோகன் சிங் அவர்கள் அமெரிக்காவுடன் செய்துகொண்டு உள்ள அணுசக்தி ஒப்பந்தம் இந்தியா அமெரிக்காவின் அடிமை தேசமாகின்றது(client state) என்று தெளிவாகவே பேசியுள்ளார்..( L K Advani accusing the UPA government of reducing India to a “client state” of Washington.)
அப்படிபட்ட நிலையில் தேர்தலில் பங்கு எடுக்கும் இந்திய கம்யுனிஸ்டுகள் அந்த ஒப்பந்தத்துக்கு எதிராக மன்மோகன் சிங் அரசை கவிழ்க்க நினைத்தது,நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தது முற்றிலும் சரியானதே! ஆனால் நீங்கள் கம்ம்யுநிச்டுகளை குற்றம் சொல்கின்றீர்கள்!
The opposition on Monday launched a scathing attack on the Indo-US nuclear deal with Leader of Opposition L K Advani accusing the UPA government of reducing India to a “client state” of Washington.
அந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள சரத்துக்கள் இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது என்பதனால் தான் கம்யுனிஸ்டுகள் அதனை எதிர்த்தார்கள்… ஏன் இங்கு டைம்ஸ் ஒப் இந்தியாவின் செய்தியை மேற்கோள் காட்டும் நண்பர்களும் அதவானியும் அத்ததைய கருத்தை தான் கூறியுள்ளார் என்று நிருபிகின்றார்கள்… (தேங்க்ஸ் டு நாகராஜ் )
India reduced to client state of US: Advani
http://timesofindia.indiatimes.com/india/India-reduced-to-client-state-of-US-Advani/articleshow/843291.cms
அப்படி இருக்க அந்த மன்மோகன் சிங் காங்கிரஸ் அரசை கவிழ்க்க நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கம்யுனிஸ்டுகள் கொண்டு வந்ததில் என்ன தவறு ? இந்தியாவின் நலன்களுக்கு எதிராக செயல்பட்ட அந்த காங்கிரஸ் அரசை கவிழ்க்கத்தானே வேண்டும்? அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை ?
இந்திய அமெரிக்கா அணு ஒப்பந்தத்திற்கு அடித்தளம் அமைத்தவர்கள் அத்வானியும் வாஜ்பாயியும் தான், அவர்கள் அமைத்த பாதையில் மன்மோகன் சிங் சென்று இந்திய அமெரிக்கா அணு ஒப்பந்தத்தை கொண்டு வந்தார், அப்போது மன்மோகன் சிங் கொடுத்த வாக்குறுதியை இன்று மோடி அமெரிக்கா அணு உலைகளை வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு நிறைவேற்றி இருக்கிறார்… பிஜேபியை பொறுத்தவரையில் அணு உலைக்கு தேவையான யுரேனியம் தொடர்ந்து தடையில்லாமல் கிடைக்க வேண்டும் அது பற்றி இந்திய அமெரிக்கா ஒப்பந்தத்தில் இல்லை அதனால் அவர்கள் எதிர்த்தார்கள் பிஜேபியின் எதிர்ப்பு என்பது வேற்று அரசியல் தான்.
இந்தியாவுக்கு யுரேனியம் கிடைகவில்லை என்று பிஜேபியினர் அந்த அணுசக்தி ஒப்பந்தத்தை எதிப்பதாக கூறுகின்றீர்கள்…இந்தியாவுக்கு தங்கு தடை இன்றி யுரேனியம் கிடைக்கவேண்டும் என்றால் இந்தியா தன்னுடைய சுயசார்பையும்,இறையாண்மையையும் விட்டுகொடுத்து நடந்துகொள்ளவேண்டும் என்று அமெரிக்காவின் ஒப்பதந்தம் கோருகின்றது… அப்படி பட்ட நிலையில் பிஜேபி போன்று கம்யுனிஸ்டுகள் வேற்று அரசியல் செய்ய முடியாது அல்லவா? இந்தியாவின் நலன்களை புறக்கணிக்கும் மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் அரசை கவிழ்க்க தானே கம்யுனிஸ்டுகள் முயல்வார்கள்? அதில் என்ன தவறு? தேச பக்தி என்ற பெயரில் வேற்று அரசியல் பேசும் பிஜேபி உண்மையில் தேச துரோகிகள் தானே? நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் அரசை கவிழ்க்க முயன்ற கம்யுனிஸ்டுகள் தானே உண்மையில் தேச பக்தர்கள்!
அப்ப அடிமை அரசுன்னு சொல்லி அத்வானி ஒரு அறிக்கை விட்டாரே அது மானக்கேட்டதனம் தானே.
மணிகண்டன் , பச்சை பசுமைகளுக்கும் , வன விலங்குகளுக்கும் துரோகம் செய்து கொண்டு இருப்பது இஷாவும் அதனை வாழத்த வரும் மோடியும் தானே தவிர கம்யுனிஸ்டுகள் அல்ல
இந்து மதநம்பிகைகளை இழித்தும் பழித்தும் பேசி வயிறு வளர்க்கும் ” நன்னம்பிக்கை ப்ரச்சாரக்கூட்டம்” “ஒரு மார்க்கமான கூட்டம்” மற்றும் மாவோயிச பிரிவினைவாத கூட்டம் ஆகியோரின் சூழ்ச்சி கூட்டணி தோல்வியை சந்திக்கும்
பிரேமானந்தாவை ஆதரித்த அர்ஜுன் சம்பத் பற்றிய தங்கள் கருத்து என்ன?
பிரேமானந்தா,ஜக்கி வாசுதேவிடம் தான் இந்து மத நம்பிக்கை இருக்கா?.
இது என்னடா இந்து மதத்துக்கு வந்த சோதனை.
யோவ் அடாவடி,
இன்னாது சும்மா இந்து மத நம்பிக்கை அது இதுன்னு……புலம்பிகினு…
சரி எந்த புக்குல உங்க இந்து மத நம்பிக்கை கீது……அத சொல்லு பஸ்டு அடாவடி .
kudikkave kanji illa ,intha 127 adi silai avasiyama?naatil nilavum panjathai intha 127 adi silai theerthu viduma?nalla vullangalil than kadavul vaalukirar.
Vaayaa Vakkeelu!Jakki Vasudev mele ulla kutrachaattugalukku umakku thiraani irunthaal padil sollum aiyaa!
சொரியன் சார், ஈஷாவின் இயற்கை விவாசயம் மற்றும் Zero budget Agri க்கு விவசாயிகளிடையே ஆதரவு பெருகி வருவதால் பலருக்கு பயம் வந்துவிட்டது
தயானந்த சரஸ்வதி
பாபாராம்தேவ்
ரவிசங்கர் ஜி
சத்குரு
அமிர்தானந்தமயி
இவர்களை ஒழித்துவிட்டால் ! இந்துமதத்தை அழித்துவிடலாம் ! என்ற நம்பிக்கையில் ?
இதற்காக மிகப்பெரிய தொகை இறக்கப்பட்டுள்ளது!
ஈஷா போகும் வழியில் ஆலந்துறையிலிருந்து #கிறிஸ்தவ மத வியாபாரி pastor தினகரனின் #காருண்யா_பல்கலைக்கழகம் மற்றும் ஈஷா செம்மேடு கிராமம் வரை சுமாராக 8 கி மீ தோட்டங்களும் பண்ணைகளும் கிறிஸ்துவர் வசம் போய்விட்டது. இரண்டு மூன்று #சர்ச்கள் வந்துவிட்டன.
விவசாய நிலங்களெல்லாம் #கிறிஸ்தவ மிஷினரிகள் கையில் சிறிது சிறிதாக போய்க்கொண்டிருக்கிறது.
#சின்மயாவின் சர்வதேச பள்ளியினர் அங்கே திணறிக்கொண்டிருந்த போது ஈஷாவின் வரவு #காருண்யாவின் வீச்சை அடக்கியது. அதன் எதிரொலிதான் ஈஷாவின் மீது ஒவ்வொரு முறையும் தாக்குதல்.
#கிறிஸ்தவ_மத_வியாபாரி பால் தினகரனின் காருண்யா #சோனியா காந்தியால் தொடங்கிவைக்கப்பட்டது!
#நல்லூர்வயல் என்ற பெயர் காருண்யா நகராகிவிட்டது.காவல்நிலையம் , வங்கி அஞ்சலகம் என்று கிறிஸ்தவ சோனியாவின் தயவால் உடனே வந்துவிட்டது. 90% மாணவர்கள் கேரள #கிறிஸ்தவர்கள்.
அங்கு வெளிப்படையாகவே #மதமாற்றம் நடக்கிறது. இளகிய மனம் படைத்த இந்துக்கள் மூளைச்சலவையால் அவர்களது வளையில் எளிதில் விழுந்துவிடுகிறார்கள். #இந்து என்றால் அன்னியனைப்போல் பார்ப்பார்கள்.
#காருண்யாநகர் என்பது ஏதோ சிறு இடம் இல்லை. சுமார் 750 ஏக்கரை வளைத்துப் போட்டு இருக்கிறார் இந்த #பால்_தினகரன். மாணவர்கள் தற்கொலை, அடிதடிகள் அடிக்கடி அரங்கேறும். ஆனால் காவல் நிலையம் அவர்களிடத்தில் இருப்பதால் மூடி மறைத்து விடுவார்கள்.
இத்தனைக்கும் நடுவே #ஈஷா_யோகா மையம் எழுந்து நிற்பது கிறிஸ்தவ மத வியாபாரிகளுக்கு பொறுக்க முடியவில்லை.தங்கள் மத மாற்றத்துக்கு பெரும் தடையாக உள்ள ஈஷாவை அழிக்க துடிக்கிறார்கள் !
#யோகா என்றால் #ஐக்கிய_நாடுகள்_சபை அவரை அழைக்கிறது. அமெரிக்க நிறுவனங்கள் அழைக்கின்றன. இந்தியா சார்பில் பிரதிநிதியாகச் செல்கிறார். #ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளிக்கிறார்.#ஆன்மீகத்தை அனைவருக்கும் புரியும்படி பேசுகிறார். அதனால் ‘வியாபாரம்’ பாதிக்கப்படுகிறது. வேறென்ன? #கிறிஸ்தவ_மத_வியாபாரம் தான்……
யோவ் அடாவடிகேசு,
மலைய ஆட்டயப்போட்டு இயற்க்கை விவசாயம் பண்றானாம். கேக்குறவன் மணிகண்டனா இருந்தா ஆதியோகிதான் இயற்கை விவசாயத்த கண்டுபிடிச்சானு கூட அவுத்து விடுவீங்க போல.
தயானந்த சரஸ்வதி
பாபாராம்தேவ்
ரவிசங்கர் ஜி
சத்குரு
அமிர்தானந்தமயி இந்த டுபாக்கூரு சமியார்களை எல்லாம் அழித்து விட்டால் இந்து மதம் அழியாதுயா அடாவடி.
இவிங்களால தான் இந்து மதம் அழியுமுனு சொல்றேன். சும்மா 1 ரூபா கொடுத்து ஒரு சூடத்த வாங்கி கொளுத்திட்டு கன்னத்துல போட்டுக்கிட்டு அவன் பாட்டுக்கு போயிட்டு இருந்தான். ஆதி யோகினு பாதி யோகினு அடிச்சுட்டு கடைசில பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லைன்னு தெரிஞ்ச பிறகு இருக்குடா உங்களுக்கு எல்லாம் ஆப்பு. அப்போ பாரு ஜக்கிய ஜட்டிய கழட்டி விட்டு ஜாக்கி ஏத்துவாங்க நம்ம மக்கள்.
இளகிய மனம் படைத்த இந்துக்கள் எங்கிருந்தாலும் மணியையடிக்க வரவும்.
ஈஷா மையம் இதை கட்டும் போது இவர்கள் யாரும் இந்தளவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ஆனால் கட்டி முடித்து திறப்பு விழாவிற்கு பாரத பிரதமர் மோடி வருகிறார் என்றவுடன் ஆளாளுக்கு யானை மீது பாசம் பூனை மீது பாசம் என்று வேடம் போடுகிறார்கள்…. வினவு கூட்டத்திற்கும் யானை பாசத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை
மோடி வாக்கிங் போனால் கூட புற்களின் மீது புதிதாக பாசம் பொங்கி எழுந்து போராட்டம் நடத்தும் நேர்மையற்ற கூட்டங்கள் இது.
இஷாவின் வன ஆக்கிரிமிப்பு அகிரமங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டு தான் இருக்கிறது என்ற உண்மையை அறியா மண்டுகமாக இருக்கின்றீரே மணிகண்டன்…! சட்டத்துக்கு புறம்பாக கட்டபடும் இஷா கட்டிடங்கள்…, சிவன் சிலை அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காத மாநில மத்திய அரசுகள் என்று உண்மை நிலவரம் இருக்க நீங்கள் பேசுவது எப்படி சரியானதாக இருக்க முடியும்…. ?
I called you only as “Advocate”even though I am not sure whether you are really an advocate.But instead of answering the charges against Jakki you have mis spelt my name.Instead of answering the charges,you are equating Jakki with Karunya.A demolition notice was issued against the building under construction in 2012 itself.Yet,the construction was continued with impunity by Esha.A person who willfully violate the rules of the govt would not be eligible for Padma award.
லட்சுமி மில்ஸ் அதிபர் 80 களில் ஈஷா யோகா மையத்திற்கு நன்கொடையாக கொடுக்கபட்ட இடம் தான் அந்த. இருபத்தாறு ஏக்கர்.
பட்டா நிலம் என்றாலே அது தனியார் நிலம் தான்…
பட்டா நலத்தை எப்படி ஆக்கிரமிக்க முடியும்..?
ஈஷா யோகா மையத்திற்கு கொடுக்கபட்ட பொழுது அது தென்னம்தோப்பு ,
பாக்கு தோப்பு
மற்றும்
அறுவடை முடிந்த நிலம் …….
இதில் காடு எங்க இருந்து வருகிறது …..
என்னமோ சந்தனக்கடத்தல் வீரப்பன் ரேஞ்சுக்கு சீன் போடுறீங்க…..
அப்துல்கலாம் ஐய்யா ,
நம்மாழ்வார் ஐய்யா
ஆகியாேருடன் இணைந்து ஈஷா ஆரம்பித்த Project Green Hands
பத்தி தெரியுமா ?
நடிகர் விவேக்காேடு இணைந்து ஈஷா நட்டிருக்கும் மரக்கன்றுகள் எத்தனை தெரியுமா..?
ஈஷாவிற்கு தமிழ்நாட்டில் மட்டும் மரக்கன்றுகள் வளர்க்கும் அறுபது இடஙமகளில் Nursery உள்ளது .அதை பத்தி தெரியுமா ?
Facebookல சும்மா ரெண்டு MEMES மேஞ்சுட்டு வந்து ….
காட்ட அழிச்சிட்டாங்க …..
வீட்டப் பூட்டிட்டாங்கனு
கத்திட்டு இருக்க கூடாது …
ஆத்துமணல் அள்றவன கேட்க பயமா இருக்குதுன்னு …
இல்லாததை சொல்லி
soft ஆன ஆளாப் பாத்து திட்டிக்கிட்டு இருக்கிங்க ..
சும்மாவா சொன்னாங்க …
ஊருக்கு இளிச்சவாயன் பிள்ளையார் கோயில் ஆண்டி ன்னு……
Nobody can claim that Jakki is a “soft”and “Pillayar Koil Aandi”Will PM grace the function got up by Pillayar Koil Aandi?You,yourself are again equating your revered Guru with sand mafia.
@@@Manikandan
நண்பரே , கோவில்களில் அர்ச்சனை செய்ய பார்பனர் அல்லாதோர் தமிழ் நாடு அரசின் முயற்சியால் முறையாக சமஸ்கிருதம் பயின்று முயன்றால் நீதி மன்ற ஆணையை பார்பனர்கள் பெற்று தடை செய்கின்றீர்கள். அப்படி பட்ட லோகாயித சூழலில் சமஸ்கிருதம் பரந்துபட்ட மக்களின் மொழியாக எப்படி பரிமாணம் எடுக்கும்? பொருள் அறியாமல் தவறான உச்சரிப்புடன் சமஸ்கிருதத்தை பேசுவது மட்டும் தான் தோஷமா ? அல்லது பொருள் அறியாமல் சமஸ்கிருதத்தை கோவில்களில் மக்கள் பூசைகளின் போது கேட்பதும் தோஷமா ?
மணிகண்டனிடம் இப்படியெல்லாம் நேரடியாக கேள்வி கேட்டால் அவரால் எப்படிங்க பதில் சொல்ல முடியும் ஆலவாயன் ? அவர் கிரேட் எஸ்கேப் தானே ஆவார்! இன்னும் வேறு ஒரு கட்டுரையின் பின்னுட்டத்தில் அவர் மீண்டும் அவரின் பழைய விஷ கருத்தையே வாந்திஎடுத்துவைப்பார்…! அங்கு நீங்கள் இதே கேள்வியை மீண்டும் கேட்டாலும் பதில் கூற மாட்டார்…. எனக்கு அவருடன் ஏற்பட்ட அனுபவம் அப்படி சார்!
நண்பர் மணிகண்டனிடம் பதில் இல்லாத நிலையில் அவரை ஏன் துன்பத்துக்கு ஆள்படுத்துகின்றீர்கள் ? பதில் கூற இயலாமல் விவாதத்தில் இருந்து விலகி செல்லும் மணிகண்டரை ஏன் மீண்டும் அவரின் ஈகோ என்ற சங்கிலி கட்டி பிடித்து இழுத்து வருகின்றீர்கள்? இப்படி அவரை கொடுமை படுத்துவதற்கு பதிலாக விவாதத்தில் தோற்ற சமணர்களை சைவர்கள் கழுவேற்றம் செய்தது போன்று இவரையும் ………
High Court has issued notices to the Pollution Control Boards of both the Central and State Govts,DTCP,State Housing Board,The Ministry of Environment & Forests asking all of them to explain as to how the buildings with more than 1 lakh sqft were constructed without getting approval from the concerned authorities in a case filed by the Hills Protection Association.These authorities have to file their response before 3-3-2017.The High Court bench has also asked as to why the Central as well as State Govts have not taken any action against Esha for violations in construction of buildings in the illegally encroached forest area.The bench has also asked as to why departmental as well as legal action should not be taken against the Collector of Coimbatore for connivance in the environmental violations by Esha.
The Hills Protection Association in their petition has stated that the buildings and the huge statue were constructed in the Govt’s puramboku land and reserve forest.In 2012 itself,State Govt issued a stop construction notice to Esha.
If Esha has constructed buildings in their patta land as claimed by Rangarajan,why stop notice was issued and how High Court has issued notices to Central and State Govts?
மணிகண்டன்., பொருள் அறியாமலும், உச்சரிப்பு தவறாகவும் சமஸ்கிருதத்தை பயன்படுத்த கூடாது என்று கூறினீர்கள்…அப்படி செய்தால் தோஷம் ஏற்படும் என்றீகள்….. உங்கள் கருத்தை ஏற்றேன்… அதே போன்று தமிழ் மக்கள் பொருள் அறியாமலும், உச்சரிப்பு தெரியாமலும் சமஸ்கிருத சுலோகன்களை கோவில்களில் கேட்பதால் அவர்களுக்கு ஏதேனும் “மகா தோஷம்” ஏற்படுமா? என்று கேள்வி எழுப்பி இருந்தேன்… இன்னும் உங்களிடம் இருந்து பதில் இல்லையே ராசா………!
மணிகண்டன் அவர்கள் ஹிந்து மதம் அழிய காரணம் கம்யுனிஸ்டுகள் தான் என்று முதலில் குற்றம் சாட்டினார். அவருக்கு பதில் அளித்த ஆலவாயன் ஹிந்து மதம் அழிய ஹிந்து மதத்தின் அகங்காரம் தான் அது அழிய காரணமாக இருக்கிறது என்று தன் சொந்த அனுபவங்களில் இருந்து விளக்கினார். அவருக்கு பதில் அளித்த மணிகண்டன் ஹிந்து மதம் அழிய காரணம் பிச்சைகாரர்கள் தான் என்று அவரின் அனுபவம் மூலம் கண்டுணர்ந்தார். அப்போதும் கூட கோவிளுக்குள் தட்டு ஏந்தும் பார்பன பிச்சைகாரர்கள் தான் காரணமா அல்லது கோவிலுக்கு வெளியே கையேந்தும் பிச்சைகாரர்களா என்று தெளிவாக விளக்கவில்லை…! அடுத்து சமஸ்கிருதம் பொருள் அறியாமலும், உச்சரிப்பு தவறாகவும் பயன்படுத்த கூடாது அப்படி பயன்படுத்துவது தோஷம் ஆகும் என்று கூறினார். அதற்கு நான் பதில் அளிக்கும் போது அவர் கருத்தை ஏற்றுக்கொண்டு தமிழ் மக்கள் பொருள் அறியாமலும், உச்சரிப்பு தெரியாமலும் சமஸ்கிருத சுலோகன்களை கோவில்களில் கேட்பதால் அவர்களுக்கு ஏதேனும் “மகா தோஷம்” ஏற்படுமா? என்று எதிர் கேள்வி எழுப்பி இருந்தேன்.. அதற்கும் மணிகண்டன் இன்னும் பதில் அளிக்கவில்லை… கள்ள மவுனம் சாதிகின்றார்… அதற்கு அடுத்ததாக இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை கம்யுனிஸ்டுகள் எதிர்த்தால் அவர்கள் தேச துரோகிகள் என்றார். அப்படி அவர் கூறும் நிலையில் இந்திய இறையாண்மைக்கு எதிரான அந்த ஒப்பந்தத்தை கம்யுனிஸ்டுகள் எதிர்பதில் என்ன தவறு என்ற கேள்வியையும் எழுப்பினேன்… இன்னும் அவரிடம் இருந்து பதில் இல்லை! நாகராஜனும் கூட தன் கருத்தில் அந்த ஒப்பந்தத்தை எதிர்த்த பிஜேபி அத்வானியும் “ இந்த அணுசக்தி ஒப்பந்தத்தால் இந்தியா அமெரிக்காவின் அடிமை தேசமாகிறது” என்று கூறியதனை சுட்டிகாட்டியுள்ளார். அதற்கும் மணிகண்டனிடம் இருந்து பதில் இல்லை….
மணிகண்டன் இந்த பிழைப்புக்கு நீங்கள் குறைந்தது ஒரு மாதமாவது மவுன விரதம் இருந்து உங்கள் சிந்தனையை வளர்த்துகொண்டு மீண்டும் வினவில் விவாதிக்கலாம்…