Friday, May 9, 2025
முகப்புகட்சிகள்பா.ஜ.ககாஞ்சா அய்லய்யாவை மிரட்டும் பார்ப்பனியம் !

காஞ்சா அய்லய்யாவை மிரட்டும் பார்ப்பனியம் !

-

மூத்த எழுத்தாளரும், தலித் மக்கள் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் இலக்கியவாதியும், பேராசியருமான காஞ்சா அய்லய்யா தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக போலீசில் புகாரளித்துள்ளார்.

பார்ப்பனிய வருணாசிரமக் கருத்துக்களுக்கு எதிராகப் பேசி எழுதி வரும் பேரா.காஞ்சா அய்லய்யா, சமாஜிக்கா சுமக்லர்லு கொமாடொல்லு (Samajika Smugglurlu Komatollu – Vysyas as Social Smugglers என்பது இதன் ஆங்கில மொழியாக்கம்) என்ற தெலுங்கு மொழியில் அச்சிடப்பட்ட புத்தகத்தை செப்டம்பர் 2017 தொடக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

காஞ்சா அய்லய்யா – ”இந்து இந்தியாவிற்குப் பிறகு”

இவர் வெளியிட்ட இந்த மொழிபெயர்ப்பு ஏற்கனவே 2009-ல் Post Hindu India (இந்து இந்தியாவிற்குப் பிறகு) என்ற ஆங்கிலப் புத்தகத்தின் பதிப்பில் ஒரு பகுதியாக வெளிவந்துள்ளது. மோடியின் பொருளாதார ‘சாதனைகள்’ வேதனையாக மக்களைத் தாக்கி வரும் நேரத்தில் பண்பாட்டு தாக்குதலாக இத்தகைய விசயங்களை தேடிப்பிடித்து மதவெறி ஊட்டுகிறது பாஜக கூட்டம். இந்த மனுதர்ம ஆட்சியின்படி தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் பேராசிரியருக்கு எதிராக ஊளைச்சத்தம் பலமாக கேட்கின்றனது. தென்னிந்தியாவில் வைசியர்கள் எனப்படுபவர்கள் வட இந்தியாவில் பனியாக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். வைசியர்களைத் தாக்கிவிட்டார் பேராசிரியர் என்பதே ஆர்.எஸ்.எஸ் கூட்டம் அங்கே நடத்தும் பிரச்சாரத்தின் தலைப்பு.

பேராசிரியர் இது குறித்துக் கூறுகையில் ‘முதலில் இந்தப் புத்தகம் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டது; எனவே கடத்தல் என்பதற்கு சட்டவிரோதமாகக் கடத்தல் தொழில் செய்வது என்பது பொருளாகாது. ஆரிய வைசியர்கள் தங்கள் தொழில் மூலம் சம்பாதிக்கும் பணத்தை சமூக வளர்ச்சிகளுக்காக ஒருபோதும் பயன்படுத்துவதில்லை. ஆரிய வைசியர்கள் எண்ணிக்கையில் சிறிய அளவில் இருந்தாலும் பெருமளவு செல்வங்களை வைத்திருப்பதாலும் மற்றும் தனியார் நிறுவனங்களுக்குக் கடனுதவி செய்யும் தொழிலில் ஈடுபடுவதாலும் மேலும் தங்கள் தொழிலைப் பாதுகாத்துக் கொள்ள மற்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரை வெகுவாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதற்காகத் தான் அவர்களை சமூகக் கடத்தல்காரர்கள் என்றழைப்பதாகவும், மேலும் இவர்களும் ஒரு காலத்தில் புலால் உணவு உண்டது மட்டுமன்றி விவசாயத் தொழிலிலும் ஈடுபட்டார்கள்’ என்கிறார்.

காஞ்சா அய்லய்யாவிற்கு எதிராக தெலுங்கானாவில் ஆரிய வைசியர்கள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டம்

இது போதாதா? உடனே வைசியர்களை இழிவுபடுத்திவிட்டார், கடத்தல் காரராக சித்தரித்து விட்டார் என்று பாஜகவும் ஆந்திர மாநிலக் கட்சிகள் பலவும் கூப்பாடு போடுகின்றன.  அவை பிறகு கொலைமிரட்டல் வரைக்கும் போய்விட்டது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் அமைச்சர் ஒருவர் ஒரு படி மேலே போய்  பேரா. காஞ்சா அய்லய்யாவை பொதுவெளியில் வைத்து தூக்கிலிட வேண்டும் என்று கொக்கரித்துள்ளார். சந்திரபாபு நாயுடுவும் தன் பங்குக்கு இந்தப் புத்தகத்தை ஆந்திர மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் அனுமதிக்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

மோடியிடம் கெட்டப்பெயர் வாங்கிவிடக்கூடாதல்லவா?

இந்தப் பின்னணியில் பேராசிரியரும் அவருடைய நண்பரும் சக பேராசிரியருமான பினாவேணி ராமய்யாவும் தெலுங்கானா மாநிலத்தில் பரக்கல் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த போது 30 பேர் கொண்ட கும்பல் ஒன்று இவர்களின் கார் மீது கல் வீசித் தாக்கியுள்ளது. ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் தப்பிப் பிழைத்த இவர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து போலீசு இவர்களைப் பாதுகாப்பாக வீடு வரை அழைத்துச் சென்றுள்ளது.

தெலுங்கானா மாநில முதல்வர் இதுகுறித்து வாய் திறக்காமல் மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். பாஜக-வோ தன் பங்குக்கு பேராசிரியரைப் பைத்தியம் என்றும் இந்து சமூகத்தைப் பிளவுபடுத்தி கலவரத்தைத் தூண்டப்பார்க்கிறார் என்றும் கரித்துக் கொட்டியுள்ளது. தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டேயிருப்பதால் தன் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்று பேராசிரியர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதேசமயம் பேராசிரியர் இவர்களுடைய மிரட்டல்களுக்குப் பயந்து தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவே முடியாது என்று தெரிவித்துள்ளார். அப்படி ஒருவேளை மாற்ற வேண்டுமானால் வைசியர்கள் தங்கள் தொழிலில் 5%  சதவீத வேலை வாய்ப்புக்களை தாழ்த்தப்பட்டவர்களுக்கும் மேலும் தங்கள் இலாபத்தில் குறிப்பிட்ட தொகையை விவசாயிகளுக்கான நிவாரணத் தொகையாக அளிக்க முன்வரும் பட்சத்தில் வேண்டுமானால் இந்தத் தலைப்பை மாற்றிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பார்ப்பன பனியா சாதிகளை அடிப்படையாகக் கொண்ட பாரதிய ஜனதா தற்போது ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பழிப்பு நடவடிக்கைகளால் சிறு வணிகர்களின் வயிற்றில் அடித்து வருகிறது. அப்படி அவர்களது வாழ்வை ஒடுக்கிக் கொண்டே மற்றொரு புறம் வைசியர்களை பேராசிரியர் இழிவு படுத்தி விட்டார் என்று மடை மாற்றுகிறது. உண்மையில் பனியாக்கள் எனப்படுவோர் பெரு முதலாளிகளாகவும் உழைப்பே இல்லாத நிதி நடவடிக்கைகளால் வாழ்பவராக மட்டுமே அறியப்படுகிறார்கள். சிறு வணிகர்கள் தமது வைசிய அடையாளத்தை துறந்து விட்டு தமது தொழில் அடையாளத்தை வரித்துக் கொண்டால் எதிர்த்து போராடவேண்டிய குற்றவாளி மோடி அரசு என்பதை உணர்வார்கள்.

மேலும் படிக்க:
Writer Kancha Ilaiah says his car was attacked with stones in Telangana
Won’t allow Ilaiah book in AP: Naidu
BJP, TDP Back Arya Vysya Community’s Battle Against Kancha Ilaiah’s Book

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க