privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்நன்னிலம் : காவல் துறை ONGC கூட்டு சதியை முறியடித்த மக்கள் அதிகாரம் !

நன்னிலம் : காவல் துறை ONGC கூட்டு சதியை முறியடித்த மக்கள் அதிகாரம் !

-

ஞ்சை டெல்டாவின் மையப்பகுதியான திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டம் உள்ளது. மத்திய அரசின் வஞ்சகத்தால் காவிரி பொய்த்துப் போன பின்பு தஞ்சை டெல்டாவில் விவசாயம் கேள்விக் குறியாகிவிட்டது. இப்படிப்பட்ட நிலையிலும் ஒருசில இடங்களில் மட்டும் விவசாயிகள் பம்புசெட்டுகள், குளங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர்.

அப்படிப்பட்ட பகுதிகளில் நன்னிலமும் ஒன்று. இப்பகுதியில் பம்பு செட்டுகளை வைத்து விவசாயிகள் விவசாயம் செய்துவருகின்றனர். பகுதியே பசும்போர்வை போர்த்தியதுப் போல் தற்போதும் காட்சியளிக்கிறது, நன்னிலம் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் விவசாயிகளுக்கு வாழ்வளித்து வருகிறது.

நாகை மாவட்டத்தை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்த மோடி அரசுக்கும், ONGC என்ற நாசகார கும்பலுக்கும் இது கண்ணை உறுத்திக் கொண்டிருந்திருக்கலாம். ஆகவே மக்களுக்கு தெரியாமல் மெதுமெதுவாக இடத்தை ஆக்கிரமித்து தன்வேலையை தொடங்கினர். இன்றைய சூழலிலும் “பட்டிக் காடாக” இருக்கும் இந்த ஊருக்கு தீடீர் தீடீர் என்று புதிய பாலங்கள் முளைக்கின்றன, கப்பியும், செம்மண்ணுமாக இருந்த பேருந்து வழித்தடம் கனரக வாகனங்கள் வருவதற்கு ஏற்ப விரிவாக்கப்படுகின்றன.

டவர் அமைக்கப்பட்டவுடன் ONGC என தெரிந்துக்கொண்ட படித்த இளைஞர்கள், விவசாயிகள் அதை விரட்டியடிக்க ஆயத்தமானார்கள். நெடுவாசல், கதிராமங்கலத்தில் கிடைத்த அனுபவத்தில் இருந்து போலீசும், ONGC நிர்வாகமும் மக்கள் போராட்டங்களை முளையிலே கிள்ளியெறிய ஆயுத்தமாக இருந்தது. சில உள்ளூர் இளைஞர்கள் ONGC யை எதிர்த்து சுவரொட்டியை ஒட்டினர். இரவோடு இரவாக காவல்துறை பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 நபர்கள் மீது பொய்வழக்கு போட்டு 4 இளைஞர்களை சிறையில் அடைத்தது. மக்களை அச்சுறுத்தியது.

அதைப் பொருட்படுத்தாமல் மீண்டும் போராடி 150 -க்கும் மேற்பட்ட மக்கள் கைதாகினர். ONGC க்கு எதிராக யாரும் மூச்சைக்கூட விடமுடியாதப்படி நன்னிலம் முழுக்க போலீசு அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தது.

இந்த சூழலில் மக்கள் அதிகாரம் அமைப்பை சார்ந்த தோழர்கள் 28.12.2017 அன்று “ONGC யை எதிர்த்து” பொதுக்கூட்டம் என்ற அறிவிப்பை வெளியிட்டு பல்வேறு கிராமங்களில் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அச்சமடைந்திருந்த மக்கள் நம்பிக்கையுற்றனர்.

மக்களை அச்சுறுத்த 10 மக்கள் அதிகார தோழர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பொய் வழக்கு போட்டது. பொதுக்கூட்டம் நடத்த மறுப்பு தெரிவித்தது. அத்துமீறும் போலீசின் அடாவடிதனத்தை உடைக்கவும், மக்களுக்கு போலீசு மீதுள்ள அச்சத்தை போக்கவும் 28.12.2017 அன்று காவல் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் முடிவு செய்யப்பட்டு, விரிவாக சுவரொட்டி மூலம் தகவல் அறிவிக்கப்பட்டது. சுவரொட்டிகளை கண்டு மிரண்ட போலீசு தமது நாக்கால் துடைத்து சுத்தம் செய்தது. உள்ளுர் இளைஞர்கள் உத்தமன், திலக், அன்பு ஆகியோரை இரவோடு இரவாக கைது செய்தது. நன்னிலம் முழுக்க போலீசை குவித்து கலவர பூமியாக்கியது.

அத்தனை தடையையும் மீறி அறிவித்தபடி 28.11.2017 காலை 11 மணிக்கு நன்னிலம் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 150 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மக்கள் அதிகார அமைப்பினர் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். போலீசுக்கு தண்ணி காட்டிய மக்கள் அதிகார அமைப்பின் தொடர் போராட்டம் நன்னிலம் மக்களிடையே புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.

பல ஆயிரம் செலவு செய்து பொதுக்கூட்டம் நடத்தி புரியவைக்க வேண்டிய விசயத்தை, போலீசை குவித்து நன்னிலம் முழுக்க பேசு பொருளாக்கி, ONGC -க்கு எதிரான கோபத்தை மக்களிடம் கிளப்பி, மண்டபம் ஏற்பாடு செய்து கொடுத்து, உணவையும் வழங்கி, தக்க பாதுகாப்பு கொடுத்து, மழை பெய்யும் சூழலில் அரங்கு கூட்டமாக நடத்தி வைத்து சாதாரணப் பொதுக்கூட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றிய திருவாரூர் காவல் துறையினருக்கு நன்றி.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தஞ்சை மண்டலம்.

***

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பாரதிதாசன் உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், “விவசாயியை வாழவிடு! நன்னிலத்தை  நாசமகாதே! ஓ.என் .ஜி.சி- யே வெளியேறு!” என்கிற முழக்கத்தின் அடிப்படையில், 29.12.2017 அன்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் ஒருங்கினைப்பில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது .

பு.மா.இ.மு திருவாரூர் மாவட்டம் அமைப்பாளர் தோழர் பாண்டி ,தஞ்சாவூர் மாவட்ட  அமைப்பாளர் தோழர் குஸ்தீனா, தஞ்சாவூர் மண்டல ஒருகிணைப்பாளர் தோழர் சங்கத்தமிழன் ஆகியோர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள், மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அவர்களும் இதில் பங்கேற்றனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி