Tuesday, May 6, 2025
முகப்புஅரசியல்ஊடகம்பத்திரிக்கையாளர் ஞாநி அவர்களுக்கு எமது அஞ்சலி !

பத்திரிக்கையாளர் ஞாநி அவர்களுக்கு எமது அஞ்சலி !

-

பத்திரிக்கையாளர் ஞாநி அவர்களுக்கு எமது அஞ்சலி !

டக உலகில் மூத்த பத்திரிக்கையாளரான, ஞாநி (சங்கரன்) மறைந்துவிட்டார். உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு, அவருடைய மரணம் வாயிலில் நின்ற நிலையிலும் வாழ்க்கையை அர்த்தமுள்ள வகையில் வாழ்ந்தவர். இறுதிநாட்கள் வரை தனது அரசியல் விமர்சனங்களைப் பேசியும் எழுதியும் வந்தவர்.

பத்திரிக்கையாளர் ஞாநி

தமிழ் ஊடகச் சூழலில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும், ஜனநாயகப் பண்புடன் உரையாடக் கூடியவர்களும், ஊடக முதலாளித்துவத்தை எதிர்த்து நிற்கக் கூடியவர்களும் மிகக் குறைவு. அந்த வகையில் ஞாநியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு, சங்கராச்சாரியை அம்பலப்படுத்தியது, அரசின் அதிகார முறைகேடுகளுக்கு எதிராக குரல் கொடுத்தது ஆகியவற்றில் ஒரு தொடர்ச்சியும், நேர்மையும் அவரிடம் இருந்தது. பெரியாரின் பாத்திரத்தை உயர்த்திப்பிடித்த அதே நேரத்தில் பாரதியையும் தனது ஆதர்சமாகக் கொண்டிருந்தார். அரசியல், திரையுலகம் தொடர்பான கருத்துக்களில் அவருடன், பல சந்தர்ப்பங்களில் வேறுபட்டு விவாதித்திருக்கிறோம் என்ற போதிலும், நட்புக்கோ, உரையாடலுக்கோ அது ஒரு தடையாக இருந்ததில்லை. அநேகமாக ஞாநியுடன் பழகி இருக்கக் கூடிய அனைவரது அனுபவமும் இத்தகையதாகவே இருக்கும் என்று கருதுகிறோம்.

தற்போது நடைபெற்றுவரும் புத்தகக் காட்சியில் “வழக்கம் போல எனது கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு உண்டு” என ஞாநி குறிப்பிட்டிருந்தார், இந்தப் புத்தகக் காட்சியில் ஞாநி இல்லை. அவரது குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.

இவண்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு