privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்காவிரியை தடுக்கும் டெல்லியை முடக்கு ! போராட்டச் செய்தி - படங்கள்

காவிரியை தடுக்கும் டெல்லியை முடக்கு ! போராட்டச் செய்தி – படங்கள்

-

04.04.2018

பத்திரிக்கை செய்தி
மத்திய அரசின் செயல்பாடுகளை முடக்கும்
மக்கள் எழுச்சி
யை தமிழகத்தில் உருவாக்குவோம்!

காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் உச்ச நீதி மன்றம் கொடுத்த இறுதித் தீர்ப்பு, தமிழர்கள் மீது தில்லி தொடுத்துள்ள போர்தான். எந்த சட்ட நியதிகளுக்கும், மரபுகளுக்கும் மதிப்பளிக்காமல் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கிறது மோடியின் அரசு. காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக, டம்மியான ஓர் அமைப்பை அமைக்கப் பார்க்கிறது. அதையும் இப்போது அமைத்தால் கர்நாடகத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வரும் என்று முடக்குகிறது. ”சட்டம் ஒழுங்கைக் காக்க முடியா விட்டால் பதவி விலகு” என்று நீதிபதிகள் சொல்லவில்லை. அதை ஆமோதிப்பது போல் நடந்து கொள்கிறார்கள். ஆக, தமிழக உரிமைகளை நசுக்குவதில் நீதித்துறையும், மோடி அரசும் கூட்டாளிகளாகவே செயல்படுகின்றன. தமிழகத்தின் மீது டெல்லி கொண்டுள்ள இந்த வஞ்சத்திற்கு எதிராக தமிழகத்தில் மாணவர்கள், கட்சிகள் அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

தில்லிக்கு எதிராக தமிழகத்தில் எழுந்திருக்கும் எல்லா போராட்டங்களும் தில்லியின் அதிகாரத்தை முடக்கும் வகையில் இருக்க வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களை செயல்படாமல் முடக்குவது, ரயிலில் டிக்கெட் எடுக்காமல் இருப்பது, சுங்க சாவடிகளில் வரி கொடுக்க மறுப்பது உள்ளிட்ட மத்திய அரசின் செயல்பாடுகளை முடக்கும் மக்கள் எழுச்சி தமிழகத்தில் உருவாக வேண்டும்.

காவிரி நீரில் தமிழகத்திற்குள்ள உரிமையை மறுக்கும் கர்நாடக மாநிலக் கட்சிகள்,  இயக்கங்கள் அனைத்தும் ஒரே குரலில் பேசுகின்றன. காவிரியில் எல்லா நியாயங்களையும் உரிமைகளையும் வைத்துள்ள நாம் ஏன் தனித்தனியே போராடிக் கொண்டிருக்க வேண்டும்? ஒரே அணியில் திரண்டு, தமிழகத்தின் மீது தில்லி தொடுத்திருக்கும் இந்தத் தாக்குதலை முறியடிக்க முன்வருமாறு கட்சிகளையும், தமிழ் மக்களையும் கேட்டுக் கொள்கிறோம். காவிரி உரிமை போராட்டங்கள் அனைத்தையும் மக்கள் அதிகாரம் ஆதரிக்கிறது. தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் நடக்கும் தில்லிக்கு எதிரான போராட்டங்களையும் மக்கள் அதிகாரம் ஆதரிக்கின்றது. ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று காவிரிக்கான போராட்டங்கள் அனைத்திலும் மக்கள் சாதி, மதம், கட்சி வேறுபாடுகளைக் கடந்து பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தங்கள்
வழக்கறிஞர்.சி.ராஜூ
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்

***

திருச்சியில் மக்கள் அதிகாரம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்துக்கு துரோகமிழைத்த மத்திய மாநில அரசுகளை கண்டித்து தோழர் செழியன் தலைமையில் ம.க.இ.க தோழர் கோவன் மற்றும் செயலர் ஜீவா மற்றும் தோழர்கள், பெண்கள் குழந்தைகளுடன்  மறியலில் ஈடுபட்டனர். பு.ஜ.தொ.மு-வின் கிளைச் சங்கமான  ‘அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம்’ காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய பாஜக அரசு, எடுபிடி இ.பி.எஸ், ஓ.பி.எஸ் அரசைக் கண்டித்து, தரைக்கடைகளில் கருப்புக் கொடி கட்டி தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கக்கினர்  பந்தில் முழுமையாக பங்கேற்றுள்ளனர். மேலும் தி.மு.க மற்றும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தலைமைத் தபால் நிலையம் அருகே நடத்திய மறியல் போராட்டத்தில் தி.மு.க முன்னாள் அமைச்சர் நேரு உட்பட பலரும் கைதாகியுள்ளனர். மக்கள் அதிகாரம் மற்றும் தோழமை அமைப்பு தோழர்களும் மறியல் செய்து கைதாகியுள்ளனர்.
வேடிக்கை பார்க்கும் தமிழினமே வீதிக்கு வந்து போராடு !
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்
மக்கள் அதிகாரம்
திருச்சி
***

காவிரி பிரச்சனையை ஒட்டி ”காவிரியை தடுக்கும் டெல்லியை முடக்கு” என்ற தலைப்பில் குடந்தை வழக்கறிஞர் சங்கம் சார்பாக கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முற்றுகை போராட்டம் இன்று (05/04/18) நடைப்பெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்
மக்கள் அதிகாரம்
குடந்தை – 97892 61624

***

”காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும்” என்ற முழக்கத்தை முன்வைத்து அனைத்து கட்சியினர் சார்பாக கோத்தகிரியில் சாலை மறியல் இன்று (05.04.2018) நடத்தப்பட்டது. இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். சாலை மறியலில்  மக்கள் அதிகாரம் கோத்தகிரி ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆனந்தராஜ் உரையாற்றினார். இதில் சுமார் 300 பேருக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்
மக்கள் அதிகாரம்
கோத்தகிரி

***

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்துக்கு துரோகமிழைத்த மத்திய மோடி அரசையும், மாநில ஒபிஎஸ், ஈபிஎஸ் அரசையும் கண்டித்து  சென்னையில் மெரினா கடற்கரையில் மக்கள் அதிகார தோழர்கள் மறியலில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் இதில் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்
மக்கள் அதிகாரம்
சென்னை

***

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து  கோவையில் மக்கள் அதிகார தோழர்கள் 50க்கும் மேற்ப்பட்டோர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்
மக்கள் அதிகாரம்
கோவை.

***

காவிரி மேலண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தருமபுரியில் அனைத்து கட்சிகளுடன் மக்கள் அதிகாரம் இணைந்து இன்று (05-04-2018) தருமபுரி பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக சென்று  இரயில் மறியல்  போராட்டம் நடத்தப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்
மக்கள் அதிகாரம்
தருமபுரி.

  1. வேல்முருகனும், திருமுருகன் காந்தியும் சரியான திசைவழியில் போராட்டத்தை எடுத்துச் செல்லுகிறார்கள். ஏப்ரல் 10ம் தேதி நெய்வேலியை முடக்கும் போராட்டத்தில் மக்கள் அதிகாரத்தின் கோரிக்கையை ஏற்று திமுகவும் தோழமை கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஓரணியில் சேர்த்து எதிரியை தாக்குவோம்.

  2. In tamilnadu there are 3 most important problem is going on : 1) Cauvery issue, 2) Sterlite company & 3) Mithean issue. We have to identify who has given permission for Sterlite company and Mithean issue permit. The culprit must be put in jail first. Without seeing the consequences, the politician are giving permission for such misbehave things. This should be avert and higher level consultant is a must for any govt. agreement.

Leave a Reply to Nazeer Ahmed பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க