Saturday, May 3, 2025
முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்

தமிழகத்தைத் தாண்டி உலகெங்குமுள்ள ஜனநாயக சக்திகள் இது அரச பயங்கரவாதம் என்று கண்டனங்களை தெரிவித்து வரும் இந்தச் சூழலிலும், அதே அதிகாரத்திமிரோடு தமக்கு எதிரானப் போராட்டங்களை ஒடுக்கி வருகிறது, எடப்பாடி அரசு.

-

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தி, அப்பட்டமான படுகொலையை அரங்கேற்றியப் பின்னரும்; தமிழகத்தைத் தாண்டி உலகெங்குமுள்ள ஜனநாயக சக்திகள் இது அரச பயங்கரவாதம் என்று கண்டனங்களை தெரிவித்து வரும் இந்தச் சூழலிலும், அதே அதிகாரத்திமிரோடு தமக்கு எதிரானப் போராட்டங்களை ஒடுக்கி வருகிறது, எடப்பாடி அரசு.

ஸ்டெர்லைட் அரசு பயங்கரவாதத்தைக் கண்டித்து மக்கள் அதிகாரத்தின் சார்பாக தமிழகமெங்கும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து ரிமாண்ட் செய்தது, எடப்பாடி அரசு.

அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தார்கள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தார்கள் என்று வழக்கமாக பிணையில் விடக்கூடிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் போட்டாலும், இவர்களை வெளியே விட்டால் மக்களை அரசுக்கு எதிராகத் தூண்டிவிடுவார்கள், தமிழகத்தைக் கலவர பூமியாக்கிவிடுவார்கள் என்று நீதிமன்றத்தில் வாதிட்டு பிணை வழங்க மறுத்து வருகிறது, போலீசு.

வழக்குரைஞர்களின் கடுமையான சட்டப்போராட்டத்தையடுத்து, சென்னையில் கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த 30 தோழர்களை நிபந்தனை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டிருக்கிறது.

மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ராஜு, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் உட்பட கைது செய்யப்பட்டவர்கள் 30 பேரும் இன்று காலை 8.00 மணியளவில் புழல் சிறையிலிருந்து காட்டுமிராண்டி தமிழக அரசு மற்றும் போலீசைக் கண்டித்து முழக்கமிட்டவாறே வெளியே வந்தனர்.

தகவல்: மக்கள் அதிகாரம், சென்னை.

******
உடுமலை

தூத்துக்குடி துப்பாக்கிசூட்டைக் கண்டித்து 24.05.18 அன்று உடுமலை மக்கள் அதிகாரம் சார்பாக அனைத்துக் கட்சிகளை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி ஆர்ப்பாட்டம் தொடங்கியது,

கோவை, மக்கள் அதிகார ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி மற்றும் சூர்யா ஆகியோர் உரையாற்றினர். மேலும், வழக்குரைஞர் சாதிக்பாட்ஷா, தோழர் மூர்த்திஐக்கிய கம்யூனிஸ்ட், பால்.நாராயணன், தோழர் மோகன்திராவிடர் விடுதலை கழகம், வழக்கறிஞர் பெரியார்தாசன்அதி தமிழர் பேரவை, ஐயா விவசாய பாரதி உள்ளிட்ட மாற்று அரசியல் கட்சியினர் மற்றும் ஜனநாயக சக்திகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றினர்.

This slideshow requires JavaScript.

அவர்கள் தங்களது உரையில், ‘’அரசு திட்டமிட்டு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. போராடினால் இது தான் நடக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் , புற்றுநோயினால் சாவதைவிட போராடி சாகலாம் என அதனால்தான் மறு நாளும் நெஞ்சை நிமிர்த்தி போராடிவருகிறார்கள் , இந்த துப்பாக்கிச்சூடு இதோடு நின்று விட போவதில்லை, நாளை .என்.ஜி.சி., மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, என அனைத்து எதிர்ப்பு போராட்டங்களிலும் தொடரும், அதற்கான ஒத்திகைதான் இது. திட்டமிட்டு இன்று தமிழகம் இராணுவ மயமாகி வருகிறது. சட்டிஸ்கர், ஜார்கண்ட், காஷ்மீர் போல் இங்கும் தொடங்கிவிட்டது. ஆனால் இதை முறியடிக்க தன் உயிரையும் கொடுத்தாவது அடுத்த சந்ததியை வாழ வைப்பது என மக்கள் போராட துவங்கி விட்டார்கள், அவர்களது போராட்டத்தை கட்சி, வேறுபாடின்றி ஆதரித்து அவர்களுக்கு துணை நிற்கவேண்டுமென்று அறைகூவினர்.

தகவல்: மக்கள் அதிகாரம், உடுமலை.

******
குடந்தை

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய அப்பாவி மக்களை கொடூரமாக கொலை செய்த பாசிச அரசை கண்டித்து 24-05-2018 அன்று குடந்தை மக்கள் அதிகாரம் தோழர்கள் போராட்டம் நடத்தினார்கள். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகுதி மக்கள் கண்டு ஆதரவளித்தனர்.

தகவல்: மக்கள் அதிகாரம், குடந்தை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க