28.05.2025
பத்திரிகை செய்தி
இராமநாதபுரம் மாவட்டம் இளமனூரில் அகமுடையார் சாதி வெறியர்கள் தலித் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து தாக்குதல்!
தாக்குதல் நடத்திய ஆதிக்க சாதி வெறியர்களை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
போதையில் இருந்த அகமுடையார் சாதி வெறியர்கள் 20 பேர், வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த தலித் இளைஞர் முனிராஜை (மே 27 அன்று) வழிமறித்து நிறுத்தியுள்ளனர். அவர்களை மீறி கடந்து சென்றதால் குடியிருப்புகள் புகுந்து தாக்கியுள்ளனர்; பெண்கள், குழந்தைகள் என பாராமல் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட அகமுடையார் சாதி வெறியர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான நிவாரணம் வழங்க வேண்டும்.
சாதி வெறியைக் கிளப்பி விடும் ஆதிக்கச் சாதி சங்கங்களைத் தடை செய்ய வேண்டும்.
ஆதிக்கச் சாதி சங்கங்களின் அடிக் கொள்ளியாக செயல்படும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பியையும் தடை செய்ய வேண்டும்.
மக்கள் அதிகாரக் கழகம்,
மதுரை – இராமநாதபுரம் மாவட்டங்கள்.
8122460969
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram