22.06.2025
மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது
இந்து முன்னணி பாசிஸ்டுகள் கொலைவெறியாட்டம்!
கண்டன அறிக்கை
கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் பரப்புரையை மேற்கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கட்சியினரை வேண்டும் என்று வம்புக்கிழுத்து தாக்கியுள்ளனர் இந்து முன்னணி பாசிஸ்டுகள்.
மார்க்சிஸ்டு தோழர்களைத் தாக்கி விட்டு தாங்கள் நடத்தும் முருகன் மாநாட்டை தடுப்பதற்காகவே மார்க்சிஸ்ட் கட்சியினர் செயல்படுவதாகவும் பொய்ப் பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டனர்.
பரப்புரையில் ஈடுபட்டிருந்த தோழர்களை வேண்டுமென்று வம்புக்கு இழுத்து தாக்கிய இந்து முன்னணி கும்பலை கைது செய்யாமல், இருவர் மீதும் வழக்கு போடுகிறோம் என்று கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளது திண்டுக்கல் போலீசு. இதில் பரப்புரையில் ஈடுபட்ட தோழர்களை இரவு வரை அடைத்து வைத்திருந்திருக்கிறது போலீசு. இந்து முன்னணி தாக்குதலில் மாற்றுத்திறனாளியான பெண் தோழர் ஒருவரின் கையும் உடைக்கப்பட்டுள்ளது.
மக்கள் அதிகாரக் கழகமானது, முருக பக்தர்கள் மாநாடு என்ற பெயரில் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி பாசிசக் கும்பல் நடத்தக்கூடிய கலவரத்துக்கான மாநாட்டை தடை செய்ய வேண்டும் என்று முழங்கி வருகிறது.
முருகன் மாநாடு என்ற பெயரில் மதுரை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் கலவரம் செய்வதற்கு இந்த பாசிச கும்பல் தொடங்கி விட்டது. இந்து முன்னணி பாசிச கும்பலை மார்க்சிஸ்ட் கட்சியினர் வீரத்துடன் எதிர்கொண்ட போதிலும் போலீசு ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க – இந்து முன்னணி கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டு இருக்கிறது. கலவரம் நடத்த மாநாட்டுக்கு அனுமதி கொடுத்துள்ள போலீஸ், ஜனநாயக சக்திகள் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுப்பதும் அனுமதி வாங்கி செய்யப்படும் பிரச்சாரத்தில் தாக்குதலை மேற்கொள்ளும் இந்து முன்னணியினரைப் பாதுகாப்பதும் கேவலமானதாகும். இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மேலும் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, பா.ஜ.க – சங்கப் பரிவாரங்களை தடை செய் என்ற முழக்கத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்வோம் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram