புதிய ஜனநாயகம்
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2024 | மின்னிதழ்
புதிய ஜனநாயகம் அக்டோபர் 2024 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 30 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.
டாடா குழுமத்தின் கோர முகம் – பகுதி 2 | மீள்பதிவு
1850-களில் இருந்து அந்நூற்றாண்டின் இறுதிவரை சீனாவிற்கு "ஓபியம்" என்ற கஞ்சா போதை மருந்து ஏற்றுமதி செய்வதில் டாடா குடும்பம் ஈடுபட்டிருந்தது; இதை ஜாம்சேத்ஜி நுஸ்ஸர்வான்ஜி டாடாவின் புகழ்பாடும் ஆவணங்கள் பதிவு செய்யாமல் போய்விட்டன.
டாடா குழுமத்தின் கோர முகம் – பகுதி 1 | மீள்பதிவு
ஜார்கண்டிலும் ஒரிசாவிலும் பெரும் அளவிலான பழங்குடி மக்களின் நிலங்களை அபகரித்துக் கொண்டதன் மூலமும், ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமும் கிழக்கிந்தியக் கம்பெனியுடனும் சந்தர்ப்பவாத - சமரசத் தொழில் கூட்டுக்கள் போட்டுக் கொண்டதன் மூலமும் டாடா குழுமத்தின் தலைமைக் கம்பெனியான டாடா எஃகு நிறுவனம் செல்வங்களைக் குவித்தது.
ரத்தன் டாடா: உலக முதலாளியா? பிளேடு பக்கிரியா? | மீள்பதிவு
மாட்டிக் கொள்ளாதவரை எல்லா முதலாளிகளும் யோக்கிய சிகாமணிகள்தானே!
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2024 | அச்சு இதழ்
புதிய ஜனநாயகம் - அக்டோபர் 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 30 தபால் செலவு: ரூ. 5 = மொத்தம் ரூ. 35
மக்கள் போராட்டங்கள் மூலம் இஸ்ரேலின் இனஅழிப்பு போரை முடிவுக்கு கொண்டுவருவோம்!
சரிந்துவரும் தனது ஒற்றைத் துருவ மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக உலகம் முழுவதும் போர் முனைகளை தீவிரப்படுத்திவரும் அமெரிக்கா, இஸ்ரேலின் இனஅழிப்பு போரை மூன்றாம் உலகப்போராக உருவாக்குவதற்கான வேலைகளை திட்டமிட்டு செய்து வருகிறது.
உள் இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத் தீர்ப்பின் விளைவும் தீர்வும் என்ன?
வர்க்கப்போராட்டத்திற்கு மாற்று இட ஒதுக்கீடு என்று பேசிய காலங்கள் மலையேறி விட்டன; இட ஒதுக்கீட்டைக் காக்கவும் கூட வர்க்கங்களாக இணைந்து போராடிய வேண்டிய காலமே இது...
“வினேஷ் போகத்” பாசிச கும்பலை நடுங்க வைத்த நெஞ்சுரம்
வினேஷ் போகத்திற்கு கிடைத்த ஆதரவு என்பது, அவர் ஓர் பெண் வீராங்கனை; இந்தியாவிற்கு பதக்கம் வாங்கித்தர போட்டியிடுகிறார் என்பதற்கானது மட்டுமல்ல, பா.ஜ.க. கும்பலுக்கு எதிராக நெஞ்சுரத்துடன் போராடுகிறார் என்பதற்கானது. மொத்தத்தில் இந்திய மக்களிடம் உள்ள பா.ஜ.க. எதிர்ப்பிற்கு ஓர் உரைக்கல்லாக மாறியுள்ளார் வினேஷ்.
அமெரிக்காவில் போயிங் விமானத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!
போயிங் நிறுவனத்துக்காக தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு உழைத்து பில்லியன்களாக கொடுப்பதை அதிகார வர்க்கமோ தங்களுக்குள் மில்லியன்களில் பகிர்ந்து கொள்கின்றனர். தொழிலாளிக்கு கொடுக்க வேண்டும் எனும்போது மட்டும் கணக்கு வழக்குகளை முன்வைத்து கடன் என்று புலம்புகின்றனர் என்று அதிகார வர்க்கத்தைச் சாடுகின்றனர் தொழிலாளர்கள்.
இலங்கை அதிபர் தேர்தல் முடிவு: வளர்ச்சி முகமூடியில் மற்றுமொரு பாசிச சக்தி!
இந்தத் தேர்தல் முடிவுகள் இலங்கை மக்களுக்கு எந்தவித பொருளாதார மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கப் போவதில்லை. இலங்கை மக்கள் தமது விடுதலையை தமது சொந்தப் போராட்ட முயற்சியின் மூலமாகத்தான் வென்றெடுக்க முடியும். அதற்கான பணிகள் எதுவும் இன்னும் தொடங்கப்படவில்லை என்பதுதான் கவலைக்குரிய உண்மையாகும்.
அமெரிக்க – இந்திய சதுரங்க ஆட்டத்தின் கீழ் இலங்கை! | மீள்பதிவு
பாசிசக் கூறுகளைக் கொண்ட இனவெறிக் கட்சியான ஜே.வி.பி. , இலங்கை அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றப் போவது இலங்கை உழைக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ள முதன்மையான பிரச்சினையாகும்.
ஜே.வி.பி. இடதுசாரி இயக்கமா? இனவெறி இயக்கமா? | பாகம் 2
ஸ்டாலின், மாவோ உட்பட மார்க்சிய - லெனினிய ஆசான்களின் சித்தாந்தங்களை ஏற்பதாகக் கூறிய போதும் உண்மையில் டிராட்ஸ்கிய சித்தாந்தப் பாதையையும், சேகுவாராவின் இராணுவப் பாதையையுமே ஜே.வி.பி. ஏற்று அமுலாக்கியது. கூடவே சிங்கள தேசிய இனவாதத்தையும் இணைத்துக் கொண்டது.
ஜே.வி.பி. இடதுசாரி இயக்கமா? இனவெறி இயக்கமா? | பாகம் 1
"கலாச்சார ரீதியிலான ஊடுருவல் மற்றும் இந்தியத் தமிழர்களின் 'தாயக' விசுவாசம் ஆகியவற்றைக் கொண்டு இனப்பிரச்சினையைத் தூண்டி இந்தியா தனது விரிவாக்க ஆதிக்க நோக்கங்களுக்குப் பயன்படுத்துகிறது" - ஜே.வி.பி.
காவி-கார்ப்பரேட் கும்பலுக்கு படையலிட அபகரிக்கப்படும் வக்ஃப் சொத்துகள்!
அபகரிக்கப்படும் வக்ஃப் சொத்துகளும் கடந்த காலங்களில் பொதுத்துறை சொத்துகள் கார்ப்பரேட் கும்பலுக்கு தாரைவார்க்கப்பட்டது போலவே அம்பானி-அதானி கும்பல்களுக்கே விற்கப்படும்.
சாதிவெறிக் கொட்டமும் தியாகி இமானுவேல் சேகரனின் அவசியமும்
"பள்ளர்", "ஒடுக்கப்பட்ட மக்கள்", "தலித்" என்று சொல்லக்கூடாது என்பது; சாதிப் பெருமிதம் ஊட்டுவது; "இந்துக்களாக இணைய வேண்டும்" என தேவேந்திர குல வேளாளர் மக்களை இந்துத்துவ பாசிசத்தின் காலாட்படைகளாக மாற்றுவதற்கான சதிச்செயலைத்தான் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் மேற்கொண்டு வருகின்றனர்.