வசதி வாய்ந்த நடுத்தர வர்க்கத்தின் மாணவர்கள் உயர்கல்வி கல்லூரிகளில் பொறியியல் படிக்கின்றனர். வசதியற்ற தமிழ் மாணவர்கள் அரசு கல்லூரிகளில் கலைப் பாடங்களை படிக்கின்றனர். இம்மாணவர்களைத்தான் பொறுக்கிகளாக ஊடகங்கள் கட்டியமைக்கின்றன. மக்களும் நம்புகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் கடையை உடைத்து சிறை சென்றனர். முள்ளிவாய்க்கால் போரின் போது இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்காக களமிறங்கி தீவிரமாக போராடியவர்களும் இவர்களே!
தமிழக மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் நூல்கள் இலவசமாய் வழங்க உதவுங்கள் !
அரசியல் ஆர்வமும், சமூக அக்கறையும் இம்மாணவர்களிடம் இயல்பாக இருக்கிறது. அதை அறிந்து வளர்த்து அழகான குடிமக்களாக மாற்றுவது நமது கடமை! வினவு சார்பில் மாதம் ஒரு புதிய கலாச்சாரம் நூல் வெளியிடப்படுகிறது. குறிப்பிட்ட தலைப்பில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 80 பக்கங்களில் அழகிய கட்டமைப்பில் வெறும் 30 ரூபாய்க்கு வெளியிடுகிறோம். இலாப நோக்கமின்றி அடக்கவிலையில்தான் இந்த நூல்கள் வெளியிடப்படுகின்றன.
தமிழ் பதிப்பகச் சூழலில் இந்த விலை மலிவான ஒன்று என்பது மிகையல்ல. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வெளியிடப்படும் இந்நூல்களில் அரசியல், சமூகம், பண்பாடு குறித்த தலைப்புகள் நிறைய இருக்கின்றன. குறிப்பாக மாணவர்களுக்கு பொருத்தமான நுகர்வு பண்பாடு, சாதி மதம், கல்வி, சினிமா, காவி அரசியல் போன்ற தலைப்புகளும் உள்ளன.
அரசு கலைக்கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்நூல்களை இலவசமாக விநியோகிக்க உங்கள் உதவி தேவை! பட்டியலில் உள்ள கல்லூரிகளை தெரிவு செய்து, எவ்வளவு நூல்கள் விநியோகிக்கப்பட வேண்டுமென்ற எண்ணிக்கையை தெரிவு செய்து நீங்கள் பணம் கட்டலாம்.
பட்டியலில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் மூலம் நூல்களை விநியோகிப்போம். அது குறித்த புகைப்படம், செய்தி வினவு தளத்தில் வெளியாகும். மாதந்தோறும் குறிப்பிட்ட கல்லூரி மாணவர்களுக்கு நீங்கள் நிரந்தரமாகவும் புத்தகம் அளிக்க முடியும்.
உதவுங்கள்!