Monday, March 27, 2023
Home ebooks Puthiya Kalacharam கோக்-பெப்சி : கொலைகார கோலாக்கள் ! மின்னிதழ்

கோக்-பெப்சி : கொலைகார கோலாக்கள் ! மின்னிதழ்

20.00

புதிய கலாச்சாரம் ஏப்ரல் 2017 வெளியீடு

பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.

Out of stock

Description

ஐ.நா. மதிப்பீட்டின்படி, 2025-ஆம் ஆண்டுக்குள் உலகில் 48 நாடுகள் குடிநீர் பற்றாக்குறையால் தவிக்க நேரிடும். ஆப்பிரிக்க – ஆசிய நாடுகளில் குடிநீரின்றி வெளியேறும் மக்களை “தண்ணீர் அகதிகள்”என்கின்றனர். இவர்கள் வானம் பொய்த்ததனால் அகதிகளானவர்கள் அல்ல. பணமில்லாத காரணத்தினால் அகதிகளானவர்கள். பட்டினிச் சாவை உலகுக்கு வழங்கிய முதலாளித்துவம், அடுத்தபடியாக தாகச்சாவை வழங்குகிறது. குளிர்பானங்கள் எனப்படுபவை தாகத்தை தணிப்பவை அல்ல, தாகத்தால் மக்களை தவிக்க வைப்பவை.

தண்ணீரைப் பண்டமாக்கி விற்பவர்கள் மனித குலத்தின் எதிரிகள், கொடிய பயங்கரவாதிகள். இந்த பயங்கரவாதிகளுக்குத் துணை நிற்பவைதான் மத்திய மாநில அரசுகளும் நீதிமன்றமும் என்ற உண்மையை, காலிக் குடங்களுடன் சாலைகளை மறிக்கும் பெண்களுக்குச் சொல்லுங்கள்.

பன்னிரெண்டு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்