privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைஃபேஸ்புக் பார்வைதடயமில்லாமல் எரிப்பது எப்படி ? போலீசுக்கு சில ஆலோசனைகள் !

தடயமில்லாமல் எரிப்பது எப்படி ? போலீசுக்கு சில ஆலோசனைகள் !

-

போலீசுக்கு சில ‘உருப்படியான’  ஆலோசனைகள் !

மூக விரோதிகளை போலீஸ் மீனவர் குப்பங்களில் பிடித்திருக்கிறார்கள். வாழ்த்துகள். பல உத்திகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். அவற்றை பார்த்து உலகமே சிலாகித்து கொண்டிருக்கிறது. இன்னும் சிறப்பான சில யோசனைகள் காவல்துறை நண்பர்களுக்காக:

  1. marinaபெயர் பேட்ஜ், தோள் பட்டை நட்சத்திரங்களை ஒளித்து வைத்த சம்யோசிதத்துக்கு பாராட்டுகள். இருந்தும் முகங்கள் தெரிந்து விடுகிறது. ஆதலால், சமூகவிரோதிகளை பிடிக்க செல்லுகையில் முகமூடிகள் அணிந்து கொள்ளலாம். நிறைய பாணி முகமூடிகள் இருக்கின்றன. ‘மூடர் கூடம்’ பட குரங்கு குல்லாய் பாணி, மிஷ்கினின் ‘முகமூடி’ பட பாணி, ஆங்கில படம் Dark Knight-ல் வரும் ஜோக்கர் முகமூடி பாணி என! ஆனால், பெயர் பேட்ஜ்கள் ஒளித்து வைப்பவர்கள், காக்கி சட்டை இல்லாமல், வேறு சட்டையில் வந்திருந்தால் எந்த சந்தேகமும் வந்திருக்கிறாதே ! ஏதேனும் சட்ட சிக்கல் இருக்கிறதா என தெரியவில்லை.
  1. சமூக விரோதிகள் வாழும் வீட்டு பெண்களிடம் பேண்ட் ஜிப்பை திறந்து காட்டி இருக்கிறார்கள். அற்புதம். அதற்கு அஞ்சாதவர்கள் எவருமே இருக்க முடியாது. இருப்பினும், தெளிவாக அச்சத்தை உருவாக்க முனையலாம். Pulp Fiction படம் போல் வசனத்திலேயே, அனைத்தையும் பேசி, கூச வைத்து, அதற்கு பிற்பாடு காட்டி ஆண்மையை நிரூபித்தால் இன்னும் dramatic‍‍‍‍‍‍ ஆக இருக்கலாம். முக்கியமாக, erectile dysfunction கோளாறு இருக்கிறதா என பரிசோதித்து கொள்ளுங்கள். இல்லையெனில் American Pie பட காமெடி ஆகிவிடும்.
  1. வெள்ளை பாஸ்பரஸ் உத்தி, கனா கண்டேன் படத்தில் வில்லன் காரை எரிக்க ஸ்ரீகாந்த் பயன்படுத்தும் உத்தி ! சிறப்பு. இந்த மாதிரி out of box thinking-தான் ஸ்காட்லேண்ட் யார்டுக்கு நிகரானோர் என்ற பெருமையை பெற்று தந்திருக்கிறது. க்ளோரின் ட்ரைஃப்ளோரைடு, க்ளோரின் வாயு போன்று இன்னும் பல ரசாயன உத்திகளை கண்டுபிடிக்க பயன்படுத்த முடியும். இப்படியான ஆராய்ச்சிகளுக்கு அரசு தனி இலாகா உருவாக்கலாம். ஹிட்லரே உருவாக்கி இருந்தார். நாம் எந்த வகையில் குறைந்து போய்விட்டோம் ?
  1. பேப்பரில் தீயை பற்ற வைத்து ஆட்டோவில் போடுவதும் குடிசையில் போடுவதும் ஓகேதான் எனினும் இன்னும் கொஞ்சம் நவீனம் இருக்கலாம். மலை பிளக்க பயன்படுத்தும் டைனமைட் போன்றவற்றை ஒயர் வழியே பொருத்தி கொளுத்தலாம். குப்பம் வரை சென்று நேரத்தை வீணடிக்க கூட தேவை இல்லை. ஸ்டேஷனில் லேடி கான்ஸ்டபிளிடம் கடலை போட்டபடியே லிவரை அழுத்தினால், குப்பத்தில் மீன் மார்க்கெட்டை துவம்சம் செய்து விடலாம்.
  1. மதுரை போலீஸ், பைப் குண்டு கண்டெடுத்து இருக்கிறார்களாம். கண்டெடுப்பது என முடிவான பிறகு, ஏன் பைப் குண்டு? பிளாஸ்டிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் போன்ற நவீன ரகங்களை வைத்து, கண்டெடுக்கலாமே ! ஒரு பசூக்கா, ஷாட் கன், ஸ்னைப்பர் என போர் ஆயுத ரகங்களை கூட கண்டெடுக்கலாம். நம் மக்களை நாமே குறைத்து சொல்லக்கூடாது அல்லவா ?
  1. jallikattu-protestமுக்கியமான விஷயம், பகலில் சமூக விரோதிகளை பிடித்தல் கூடாது. வெளிச்சம், மொபைல் போன் கேமரா என சீக்ரெட் ஆப்பரேஷன் வெளிவந்து விடும். மற்ற சமூக விரோதிகள் உஷாராகி உண்ணாவிரத போராட்டத்துக்கு தயாராகி விடுவர். பதிலாக, சூது கவ்வும் பட என்கவுண்ட்டர் ஸ்பேஷலிஸ்ட், நைட் விஷனை மாட்டி, இருட்டு அறையில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா கூட்டத்தை முரட்டு குத்து குத்துவாரே, அதுபோல் இரவில் சென்று சமூக விரோதிகளை குத்தி கும்மியடிக்கலாம்.
  1. கற்களை எரியும்போது இன்னும் கொஞ்சம் நுணுக்கம் தேவைப்படுகிறது. தூர இருந்து எறிவதால் பேஸ் பவுலிங் வேலைக்கு ஆகாது. ஸ்பின் முயற்சி பண்ணலாம். அதுவும் லெக் ஸ்பின் போடுவது போல், லெக் பக்கத்து க்ரீஸ்ஸில் நுழைந்து, ஆஃப் ஸ்பின் இறக்கினால், பேட்ஸ்மேன் குழம்பிவிடுவார். தலையும் க்ளீன் போல்ட் ஆகும். ஒருவேளை மூளை தெரியும் அளவுக்கு பிளந்து விட்டால் தெர்ட் அம்பையர் டிஸிஷனுக்கு விட்டுவிடலாம். ஜார்ஜும் அமல்ராஜும் பார்த்து கொள்வார்கள்.
  1. கர்ப்பிணிகளை அடிப்பதற்கு முன் ஸ்கேன் ரிசல்ட்ஸ் பார்த்துவிடுவது நல்லது. அப்போதுதான் கர்ப்பத்தின் காலம் தெரிந்து, உயிர் போக வைக்கும் இடத்தை கண்டு சரியாக மிதிக்கலாம். குழந்தையின் உயிர் மட்டும் போவது வீண். தாயின் உயிரையும் சேர்த்து ஒரே மிதியில் போக்குவதுதான் நல்ல போலீஸுக்கு அழகு. ப்ரொமோஷன் சாத்தியங்களை கூட்டும்.
  1. நாம் எதிர்பாராத வகையில் நம் மீதும் கற்கள் எறியப்படலாம். ஆகவே, டாஸ் போடும்போதே பேட்டிங்கா ஃபீல்டிங்கா என சரியாக முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில் நம் தலைகள் க்ளீன் போல்ட்டாகும் வாய்ப்புகள் அதிகம் என்பதையும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்.
  1. வாயில் ரத்தம் வந்தால் பற்கள் உடைந்திருக்கலாம். தவடை பெயர்ந்திருக்கலாம். அந்த மாதிரி காயத்தை வைத்து கொண்டு வசன காட்சி ஒளிப்பதிவு செய்ய கூடாது. நம்பகத்தன்மை கெட்டுவிடும். தலை, நெற்றி, கை என வேறு பகுதிகளில் ரத்தம் தடவ வேண்டும். வசனமில்லாமல் வெறும் பெர்ஃபார்மன்ஸ் காட்சி என்றால் வாயில் ரத்தம் வரலாம். வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் போல் கையில் கட்டு போட்டுக்கொண்டு ஹார்ட் அட்டாக் என சொல்லக்கூடாது. ‘அவார்டா கொடுக்குறாங்கோ… இப்படி ஆக்ட் பண்றியே’ என கமலை போல் மக்கள் கேட்டுவிடுவார்கள்.

உபரி யோசனை:

சம்பவத்தின்போது ஒரு உளவுத்துறை ‘பி.சி.ஸ்ரீராம்’ அதிகாரி ஹேண்டி கேமுடனேயே ஓடி வந்து கொண்டிருந்தாரே, அவரிடம் உங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை வாங்கி, எடிட் செய்து ஒரு போர்ட்ஃபோலியோ போட்டு கொள்ளலாம். ஆட்சி மாறும்போதோ அல்லது பதவி மாற்றப்படும்போதோ அதை போட்டு நம் பெருமைகளை காட்டி பதவியை தக்க வைத்து கொள்ளலாம்.

இசை தேவைப்பட்டால் ஆதி உதவுவார். ஓண்ணா மண்ணா பழகிட்டு இதை கூட செய்யலேன்னா எப்படி ?

நன்றி : Rajasangeethan John, ஃபேஸ்புக்கில் இருந்து.

***

டற்கரையில் பல பேர் குழு குழுவாக படுத்து தூங்கி கொண்டிருந்தனர். குழுவுக்கு நடுவே மண் பறித்து, பள்ளம் தோண்டி கொள்கிறார்கள். அட்டை பெட்டி, கட்டை, சுள்ளி போன்றவற்றை போட்டு தீ மூட்டுகிறார்கள். இரவு நேர பனியை விரட்டி கொள்கிறார்கள். பல கிலோ மீட்டர்கள் நீண்ட கரையில் பல நூறு பேர் தூங்கி கிடப்பார்கள்.

Marina_night-postசேவைசாலைக்கு வந்தால், ஒவ்வொரு குழுவிலும் ஒருவர் மைக் பிடித்து பேசி கொண்டிருப்பார். தூக்கம் அப்பினாலும் கூட்டத்தில் இருப்பவர்கள் கரகோஷம் எழுப்பி கொண்டிருப்பார்கள். ஆண், பெண், தலைவர், அவர், இவர் என்றெல்லாம் பேதம் இருக்கவில்லை. எவர் வேண்டுமானாலும் மைக் பிடிக்கலாம். பேசியவர்களும் ஜல்லிக்கட்டோடு தங்கள் ஆதங்கத்தை குறுக்கி கொள்ளவில்லை.

காவிரி, கூடங்குளம், நீட் என சமூக ஊடகம்தான் அங்கே மைக்கில் பேசி கொண்டிருந்தது. இந்திய அரசுகளின் தொடர் வஞ்சனை சுட்டி காட்டப்பட்ட போதுதான் கரகோஷம் கொப்பளித்தது. பேசிய எவரும் மேடை பேச்சாளர் இல்லை. அப்படியான பேச்சுகளை பட்டிமன்றங்களிலும் நம் வீட்டு அம்மாக்களிடமும் நீங்கள் கேட்டிருக்கலாம். வார்த்தை அலங்காரங்கள் இருக்கவில்லை. உண்மையும் வஞ்சிக்கப்பட்ட கோபமும் மாத்திரம் இருந்தன.

மொத்த நிகழ்வையும் வரலாற்றுடன் பொருத்தி பார்த்து, அரசியல் சாத்தியங்களை அலசும் intellectual brainstorming session-களும் நடந்தன. ஆனால் அவர்களை intellectualகளாக நீங்கள் முன்பு யோசித்திருக்க மாட்டீர்கள்.

நீள முடி வளர்த்து திரியும் ஓர் இளைஞனாகவோ நாடக பட்டறைகளில் நடிக்கும் சமூகத்திலிருந்து துண்டான வேறு தள நபராகவோ பார்த்திருப்பீர்கள். அவர்களும் அங்கேதான் கிடந்தார்கள். நிறைய விவாதித்தார்கள். பேக்குகளை தலைக்கு வைத்து, பெஞ்சுகளில் படுத்து கொண்டார்கள். அங்கு நடக்கும் எல்லாவற்றையும் அமைதியாக பார்த்து உள்வாங்குவார்கள். சந்தேகமோ முரணோ ஏற்படின் கேள்வி கேட்பார்கள். பல தனி நபர் விவாதங்களை நடந்தன. கருத்துகள் உருவாகின.

கடற்கரைக்கு செல்லும் வழி நெடுக மாணவர்கள், இளைஞர்கள், திருநங்கையர் என பலர் நின்று நெரிசலை கட்டுப்படுத்துவார்கள். அத்தனை நெரிசலிலும் உங்கள் கேள்விகளை செவிமெடுத்து பதிலுரைப்பார்கள். கேள்வி கேட்பவர்களும் எந்தவித கல்மிஷ குறும்பும் இல்லாமல் மதிப்போடுதான் கேள்வி கேட்பார்கள். சம்பந்தமே இல்லாமல் ஒரு குடும்பம் சாலையோரத்தில் நின்றுகொண்டு, வாகனதாரிகளுக்கு குடிநீர் பாட்டில்களை இலவசமாக வழங்கி கொண்டிருப்பார்கள். வாகனத்தில் போகிறவரும் தான் குடித்து மிச்ச பாட்டிலை தூக்கி எரியாமல், தண்ணீர் கேட்கும் பக்கத்து வாகன குழந்தைக்கு கொடுப்பார்.

jallikattu-modi-protestநான்கு முக்கிய குழுக்கள் மைக் பிடித்தன என்றால், இன்னும் பலவை சிறுகூட்டங்களோடு மைக்கில் பேசிக்கொண்டிருந்தன. இன்னும் சிறிய குழுக்கள் பல தங்கள் அளவில் பத்து, பதினைந்து பேராக உட்கார்ந்து கோஷங்கள் எழுப்பி கொண்டிருந்தனர். மாட்டின் மணல் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன. மனுநீதி சோழனின் ஆராய்ச்சி மணி கட்டப்பட்டிருந்தது. அரசுகளுக்கு கோரிக்கைகளை கட்டி தொங்கவிடும் மரம் இருந்தது. மைம் ஷோக்கள் நடத்தப்பட்டன. சிலம்பம் ஆடப்பட்டது. ஆண், பெண் என்ற வேறுபாடு இன்றி கூட்டங்களில் நடனம் நிகழ்ந்தது.

கரையில் எங்கேனும் சென்று புகைபிடிப்போம் என்று நினைத்தவர் கூட அங்கிருந்த கூட்டத்தை கண்டு தயங்கினர். நெரிசலில் நடந்து செல்லும் பல பெண்கள் தெரியாமல் உரசி விட்டாலும் தன்னிச்சையாக ஒதுங்கி வழி விட்டோம். உண்பண்டங்கள் தொடர்ந்து வாகனங்களில் வந்து இறங்கி கொண்டே இருந்தன. சிறுநீர் கழிக்க பொறுமையாய் வரிசைகளில் காத்து நின்றனர். ஒரு குழந்தை தன் தலையில் கொம்புகளை மாட்டி, ‘வேணும் வேணும்.. ஜல்லிக்கட்டு வேணும்’ என முழங்கி கொண்டிருந்தது.

மாவோவின் நெடும்பயணம் படித்திருக்கிறேன். Occupy Wallstreet-ம் கேள்விப்பட்டிருக்கிறோம். அங்கெல்லாம் இவை சாத்தியப்பட்டதா என தெரியவில்லை. ஆனால் மெரினாவில் சாத்தியப்பட்டிருக்கிறது. இருபத்து நான்கு மணி நேரங்களும் அரசியல் வரலாற்று வகுப்புகள். பண்பாட்டு நிகழ்வு கொண்டாட்டங்கள். விவாதங்கள். அதிலும் நிலவொளியில் அரசியல் விவாதங்கள் எல்லாம் அத்தனை அழகானவை.

இரவில் திருவிழாக்களுக்கு சென்று, தங்கி, விடிகாலை வேளைகளில் வீட்டுக்கு திரும்பும் ஞாபக மிச்சத்தை மெரினாவில் பிரதியெடுத்து கொண்டிருந்தனர். தங்கள் பணம் தேடும் நுகர்வு வாழ்வுகள், அரசியலிலிருந்தும் சமூகத்திலிருந்தும் என்னதான் அப்புறப்படுத்தியிருந்தாலும், அவற்றை நோக்கி மீண்டும் ஓடிவரும் விழைவு கரையெங்கும் நிரம்பியிருந்தது. நற்சிந்தனையும் ஒழுக்க பண்புகளும் தூக்கி பிடிக்கப்பட்ட இடத்தில் நம் அழுக்கு சிந்தனைகளை ஒதுக்கி நல்லவற்றையே எடுத்து பாவித்தோம். பல தனி விவாதங்களில் நம்மிலிருந்து வேறொரு நம்மை கண்டெடுத்து அடைந்தோம்.

இந்த போராட்டத்துக்கு நமக்கு ஜல்லிக்கட்டு தேவை என்ற கோரிக்கை இருக்க வேண்டியதில்லை. இது ஒரு இயங்குதளம். நீங்களும் நானும் கற்பனையில் விரும்பி யாசிக்கும் ஒரு சமூக தளம். பூம்புகாரின் இந்திரவிழாவை ஒட்டி போராட்டம் நடந்திருந்தால் இப்படித்தான் இருந்திருக்கும். தவறுகள் நடப்பின் அங்கேயே தட்டி கேட்கப்பட்டன. உணர்த்தப்பட்டன. திட்டம் போட்டு நம்மை வீழ்த்தி, நம் மனங்களுக்குள் இருந்த அறச்சிந்தனையை மழுங்கடித்து, வெற்று மனிதர்களாக மாற்றி போட்ட சமூக போக்குக்கு எதிரான கேவல்தான் இப்போராட்டம்.

jallikattuதொடங்கப்பட்டபோது கூட இந்த வடிவம் எவருக்கு தோன்றி திட்டமிடப்பட்டிருக்காது. ஆனால், மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கிய பின், அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறுசிறு வழிகாட்டுதல்களை கொண்டு மட்டுமே இத்தனை நேர்த்தியை, யதேச்சையாக உருவாக்க முடிகிறதெனில், அந்த யதேச்சையை நமக்குள் எங்கோ ஓர் ஓரமாக நாம் பாதுகாத்து வைத்து வந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை.

அரசை இந்த போராட்டங்கள் அச்சுறுத்தவே செய்யும். வரலாற்றில் இடம்பெறுகிறதோ இல்லையோ ஜல்லிக்கட்டு நடைபெறுகிறதோ இல்லையோ நம் அகங்கள் தாங்கி இருக்கும் இனக்குழு வாழ்க்கையின் நினைவை இந்த போராட்டம் மீட்டெடுத்தது. அந்த நினைவை அறிவுதளத்தில் இருந்து விவாதித்து உரிமை பேசினோம். ஒரு போராட்டத்தை அழகிய நினைவாக இப்போது உருவாக்கி கொண்டுவிட்டோம். நினைவு என்பது பல நினைவுகளை தொடர்ந்து உருவாக்க வல்லது.

பேதங்கள் ஏதும் இல்லாத, அறிவு சார்ந்த அழகு சமூகத்தின் ஆறு நாட்கள் அவை!

நன்றி : Rajasangeethan John, ஃபேஸ்புக்கில் இருந்து.

***

காவல்துறை பற்றி சொல்லப்படுவது உண்மை தானா?

ஏதோ ஒன்று உந்தித் தள்ள, இன்று அலுவல் முடிந்ததும் நேராக நடுக்குப்பம் சென்றுவிட்டேன். வெந்து தணிந்த மீன் மார்க்கெட்டை மாநகராட்சியினர் துப்புரவு செய்து கொண்டிருந்தனர். காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்திற்கு சிறு குழந்தை கூட சாட்சி கூறுகிறது. போலீசார் தீ வைத்ததை கண்கூடாக பார்த்திருக்கிறார்கள் ரோட்டை ஒட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாழும் பெண்கள். வீட்டுக்கு ஒருவர் தையல் போடுமளவு ரத்த காயத்துடன்.

அன்று நடந்ததை கதை கதையாக சொல்கிறார்கள், அவர்கள். “மெரீனாவில் கூடியிருந்த இளைஞர்களை போலீசார் விரட்டவும், வேறு வழியின்றி நடுக்குப்பம் குடியிருப்பில் தஞ்சம் புகுந்தனர். புரட்சி நடந்த ஒரு வாரமும் எங்களுக்கு எந்த இடையூறும் வராமல், அன்பு காட்டிய அந்த பிள்ளைகள் தலையில் காயத்துடன் ரத்தம் சொட்ட சொட்ட அடைக்கலம் கேட்கும் அவர்களை எங்களால் எப்படி வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்க முடியும்? அவர்கள் சமூக விரோதிகள் என்றால் திருப்பித் தாக்கியிருக்க மாட்டார்களா? எங்களை நாடி வந்தவர்கள் அனைவரும் ஆறு நாட்களாக அமைதி காத்த இளைஞர்கள். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக எங்களை இழுத்து போட்டு அடித்தார்கள். ஆண், பெண் என்ற பேதம் எல்லாம் இல்லை. அதைக்கூட தாங்கிக் கொண்டோம், கேட்கவே கூசும் வார்த்தைகளால் எங்களை திட்டினார்கள், அது போதாதென்று எங்கள் வாழ்வாதாரத்தையே தீ வைத்து கொளுத்திவிட்டார்களே, இது நியாயமா? ”

nadukkuppam
எரிக்கப்பட்ட நடுக்குப்பம் மீன் மார்க்கெட்

” நாங்கள் அன்றாடம் காய்ச்சிகள். ஊரே கூடி போராட்டம் நடத்தும்போது நாம் எப்படி கடலுக்கு செல்வது என்று போராட்டம் நடந்த ஒரு வாரமும் கடலுக்கு செல்லவில்லை, அதன் பிறகு இன்று வரை எங்கே வெளியில் வந்தால் போலீஸ் பிடித்துவிடுமோ என்று பயந்து வெளியிலேயே வருவதில்லை. யார் வீட்டுக்குள் எப்போது போலீஸ் வருமோ என்று இரவில் கூட பயந்து பயந்து தான் தூங்குகிறோம். எங்கள் பெண்கள் ஒழுங்காக தூங்கி ஒருவாரம் ஆகிறது. ஆண்கள் தூங்காமல் காவல் இருக்கிறார்கள். இப்படியே போனால் எப்படி கடலுக்கு போவது? அடிபட்டு தையல் போடுவதற்கு கையில் இருந்த இரண்டாயிரமும் போய் விட்டது.  இனி நாங்கள் எப்படி வாழ்க்கை நடத்துவது? ”

” எங்களை விடுங்கள், எங்கள் வீடுகளில் புகுந்து இழுத்துக் கொண்டு போனார்களே, அந்த பிள்ளைகளின் கதி என்ன? இங்கேயே நாயைப் போல அடித்து பாதி உயிராகத் தான் அழைத்துச் சென்றனர். அவர்கள் உயிரோடு இருப்பார்களா என்பது சந்தேகமே. இந்த அடிக்கு பயந்து நிறைய பேர் கடலுக்குள் வேறு இறங்கி விட்டார்கள். தினமும் ஒரு பிணம் கரை ஒதுக்குகிறது. எத்தனை பிள்ளைகள் நீச்சல் தெரியாமல் இறந்து போனார்களோ? ”

” ஒரு பெண் அடைக்கலம் தேடி வீட்டுக் கதவை தட்டினார், அவரது கைகள் நடுங்கிக் கொண்டு இருந்தன. அவர் வெளிநாட்டு நிருபராம். அவருடன் இரண்டு பையன்கள். அம்மா எனக்கு ஒரு கப் காபி கிடைக்குமா என்று கேட்ட அந்த பெண்ணை எப்படி திருப்பி அனுப்ப முடியும்? அது நம் தமிழர் பண்பாடா? சாப்பாடு கொடுத்ததால் நாங்கள் சமூக விரோதியா? போராடும் பிள்ளைகளை அரவணைத்து பிடித்ததால் நாங்கள் சமூக விரோதியா?”

விடைசொல்ல முடியாத கேள்விகளாக எழுப்பிய அந்த பெண்களுக்கு ஆறுதல் சொல்லக் கூட சக்தியற்று விடைபெற்றபோது, ஒரு பெண் சொன்னதைக் கேட்டு அவரைக் கட்டியணைத்துக் கொண்டேன்.

“ஆனால் ஒன்று சொல்கிறோம் கண்ணு, இவ்வளவு நடந்த பிறகும் நாங்கள் சோர்ந்து விட மாட்டோம். அன்று அந்த பிள்ளைகளுக்கு உதவியதற்காக நாங்கள் வருத்தப்படவில்லை. நம் பண்பாட்டை காப்பாற்ற குரல் கொடுத்த மாணவர்களுக்கு உதவியதை பெருமையாகவே நினைக்கிறோம். இப்போதும் எங்களுக்கு உதவி செய்ய மாணவர்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றனர். நாங்கள் தான் பிரச்சனை ஏற்படும் என்று அவர்களை திரும்பி போகச் சொல்கிறோம். எங்கள் கையில் உழைப்பு இருக்கும் வரை எந்த குறையும் இல்லை. நாங்கள் சோர்ந்து விட மாட்டோம் ”

அணைப்பிலிருந்து விடுபடும் போது குலுங்கி அழுது கொண்டிருந்தேன் நான், “இந்த கள்ளம் கபடமற்ற மக்களையா சமூக விரோதிகள் என்று தாக்கிக்கொண்டிருக்கிறீர்கள், பாவிகளா…. ”

நன்றி : Themozhi Chelvi, ஃபேஸ்புக்கில் இருந்து.