privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ஈழம்: முத்துக்குமாரை கொன்ற தீ சுரணையற்ற மனங்களை சுடட்டும்!

ஈழம்: முத்துக்குமாரை கொன்ற தீ சுரணையற்ற மனங்களை சுடட்டும்!

-

fire1

image003

fire5

fire4

ஈழத்திற்காகத் தீக்குளித்து தியாகியானான் ஒரு தமிழன் !

ஈழத்திற்காக தமிழக ஓட்டுக்கட்சிகள் குறிப்பாக தி.மு.கவின் நாடக உணர்ச்சியைத் திருப்தி படுத்துவதற்காக பிரணாப் முகர்ஜி இலங்கை சென்று ஈழத்தமிழர்களைக் கொல்லும் ராஜபக்க்ஷேவுக்கு ஆதரவை அளித்து விட்டு உடன் திரும்பி விட்டார். காங்கிரசுக் கூட்டணி அரசின் தமிழகப் பங்காளிகள் ஏதோ பெரிய கோரிக்கையைச் சாதித்து விட்டதாக பீற்றி வருகின்றனர். இந்த பசப்பலுக்கு மத்தியில்தான் முல்லைத் தீவில் நூற்றுக்கணக்காண மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

தமிழக ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகளின் இந்த வேடதாரி அரசியலுக்கு மத்தியில் தமிழக மக்களின் தன்னெழுச்சியான

போராட்டங்கள் தமிழகமெங்கும் காட்டுத்தீயைப் போல பரவி வருகின்றன. மக்களின் இந்தப் போராட்டம் உணர்ச்சிப்பூர்வமானது. கொல்லப்படும் ஈழத்தமிழனைக் காப்பாற்றுவதற்காக எதாவது செய்யவேண்டும் என்ற ஆதங்கத்திலிருந்து இது கம்பீரமாக எழுந்து வந்திருக்கிறது. முக்கியமாக எல்லாப் போராட்டங்களும் தற்போது இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்து முதுகில் குத்தும் இந்திய அரசின் துரோகத்தை தோலுரிக்கும் வண்ணம் நடந்து வருகிறது. இதற்கு முன் நடந்த போராட்டங்கள் வெறும் மனிதாபிமான கோரிக்கைக்காக நடந்திருக்கும் வேளையில் தற்போது இந்திய அரசின் துரோகத்தனத்தை எதிர்த்து முறியடிப்போம் என்று ஒரு சரியான அரசியல் முழக்கத்துடன் நடந்து வருவது முக்கியமானது.

இன்று காலை அகில இந்திய பெண்கள் முன்னணி எனும் பெண்கள் அமைப்பு இந்தியாவின் துரோகத்தை எதிர்த்து சென்னையில் இருக்கும் தலைமைச் செயலகத்தை முற்றுகை செய்து போராட்டம் நடத்தினர்.பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றதற்காக கையொலி எழுப்பிய தமிழக சட்டசபை வீடணர்களில் காதுகளுக்கு கேட்குமாறு இந்தப் போராட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான

பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர். சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் துவங்கியிருக்கின்றனர்.

செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்களின் சாகும் வரை உண்ணாவிரதம் ஏழு நாட்களுக்குப் பிறகு முடிந்தாலும் தமிழகம் முழுவதும் அநேகமாக எல்லாக் கல்லூரி மாணவர்களும் வகுப்புக்களைப் புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். எமது மாணவர் அமைப்பான பு.மா.இ.மு எல்லாக் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கான அறைக்கூட்டங்களை நடத்தி இந்தப் போராட்டங்களை தொடருவதற்கு முயற்சி செய்கிறது. குறிப்பாக சென்னை, கடலூர், விருத்தாசலம், தஞ்சாவூர் முதலிய இடங்களில் பு.மா.இ.மு சார்பில் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. தஞ்சையில் மட்டும் எல்லாக்க கல்லூரிகளையும் சேர்த்து 3000 மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.மேலும் பல அரசியல் கட்சிகளின் மாணவர் அமைப்புக்களும் தமது தலைமை வழிகாட்டுதல் இல்லாமல் தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர். அரசியல் கட்சிகளின் பின்புலம் இல்லாத மாணவர்களும் அதிக அளவில் போராடி வருகின்றனர். இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோபிசெட்டிபாளையத்தில் வணிகர்கள் ஈழத்திற்காக இன்று கடையடைப்பு போராட்டத்தை நடத்தினர்.

இந்தப் போராட்டங்களின் உச்சமாக ஒரு தமிழன் தீக்குளித்து உயிரிழந்த போராட்டம் இன்று நடந்திருக்கிறது. தூத்துக்குடியைச்

சேர்ந்த 26 வயது முத்துக்குமார் ஒரு மாதப்பத்திரிக்கையின் தட்டச்சு வேலை செய்பவர்.  இன்று காலை மத்திய அரசு நிறுவனங்கள் பலவற்றின் தென்மண்டலத் தலைமையகங்கள் இருக்கும் சாஸ்திரி பவனுக்கு வந்த முத்துக்குமார் கையில் கொண்டுவந்திருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். அவர் கையிலிருந்த ஈழத்தமிழரின் போராட்டத்திற்கன பிரசுரங்கள் காற்றில் பறந்தன. இதை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர்.ஆயினும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முத்துக்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்புக்கான போரில் சுடுவதற்கென்றே இந்திய பீரங்கிகள் தமிழகம் வழியே அனுப்பப்பட்ட மண்ணில் எந்த ஆயுதமின்றி தனது உயிரை அழித்து ஒரு மாபெரும் ஆயுதத்தை தமிழக மக்களுக்கு வழங்கியிருக்கிறான் ஒரு வீரன். தமிழக அட்டைக்கத்தி அரசியல் தலைவர்கள் வெறுமனே அறிக்கைகள் விட்டு ஈழத்திற்காக நாடகமாடிக் கொண்டிருக்கும் சூழலில் தனது உயிரை அழித்து தமிழக மக்களின் உணர்ச்சியைத் தட்டி எழுப்பியிருக்கிறான் ஒரு போராளி. இறுதி வேண்டுகோள், இறுதி எச்சரிக்கை, பதவியைத் துறப்போம் என தமிழக ஆளும்கட்சி நடித்துக் கொண்டிருக்கும் காலத்தில் தனது உடலை தீக்கிரைக்காக்கி இந்தியாவின் துரோகத்தை எதிர்த்திருக்கிறான் ஒரு தமிழன். ஈழத்தில் புலிகளுக்கெதிரான போரில் ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்படுவதை பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தமென அகமகிழும் பார்ப்பனப் பத்திரிகையுலகின் கொழப்பைத் தனது இன்னுயிரைத் தந்து அம்பலமாக்கியிருக்கிறான் ஒரு பத்திரிகையின் தொழிலாளி.

முத்துக்குமார் எனும் போராளியின் உடலைக் கருக்கிய தீயின் நாக்குகள் சுரணையற்றிருக்கும் மனங்களை சுட்டுப்பொசுக்கி திருத்தட்டும். முத்துக்குமார் எனும் வீரனின் உயிரைத் துறக்கத் துணிந்த தியாகம் கொழும்பில் இந்திய- இலங்கை கிரிக்கெட் ஆட்டத்தை ரசிக்கும் அற்பங்களின் இழிவை எள்ளி நகையாடட்டும். முத்துக்குமார் எனும் இளைஞனின் தியாகம் ஈழத்தில் கொத்துக் கொத்தாய் செத்து விழும் ஈழத்தமிழனின் பிணங்களைக் கண்டு உவகை கொள்ளும் சுப்பிரமணிய சுவாமி, ஜெயலலிதா, இந்து ராம், தமிழக காங்கிரசு நரிகள் முதலான ஒநாய்களின் வெறியை தமிழக மக்கள் அறுப்பதற்கு உதவட்டும். முத்துக்குமார் எனும் அந்தத் தொழிலாளியின் மரணம் புலம்பெயர்ந்த நாடுகளில் வில்லு படத்தை ரசித்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழனின் மரத்துப் போன சுரணையை மீட்டுக் கொண்டு வரட்டும். முத்துக்குமாரின் தீக்குளிப்பு பதிவுலகில் அக்கப்போரையும், அரட்டையையும், வாடிக்கையாகக் கொண்டிருக்கும் சில பதிவர்களுக்கு சமூக அக்கறை என்றால் என்ன என்பதைக் கற்றுக் கொடுக்கட்டும். முத்துக்குமார் எனும்  அந்த வார்த்தை இதுவரை ஈழத்திற்காக இது வரை ஒரு துரும்பையும் எடுத்துப் போடாதவர்களின் மனச்சாட்சியை கிளறி எழுப்பட்டும்.

ஆம் மரத்துப்போயிருக்கும் தமிழுலகில் ஒரு இளைஞன் ஈழத்திற்காக தன்னுயிரைப் பலிதானம் செய்திருக்கிறான். அவனுக்கு அஞ்சலி செலுத்த விரும்புகிறவர்கள் என்ன செய்யப் போகிறீர்கள் ?

  1. தொப்புள் கொடி உறவு என்பதன் அர்த்தம் இதுதானா ?

    உணர்வற்ற தமிழகமே என்று ஒருமுறை தெரியாமல் திட்டிவிட்டேன்.

    ஐயனே, என்னை மன்னித்துவிடு.

  2. Nothing will compensate ur sacrifice!
    Political bastards must step down:otherwise,people will through (used)chappals on u!
    Thuglak cho, r u having any sisters?both married &un married?
    send them to Mahindha for Joy!.

  3. முத்துக் குமாரின் உணர்வை மதிக்கிறேன். அதே வெளை இது போன்ற குறிப்பாக தீக்குளிப்பு போன்ற போராடங்கள் தேவையில்லாதது. அருள்கூர்ந்து யோசித்து மாற்றுப் போரட்ட வடிவத்தை கையிலெடுங்கள்.

    இது குறித்து தி.க.தலைவர். கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள செய்தி இதோ:

    “அந்தோ! கொடுமை! கொடுமை!! ஈழத் தமிழர் பிரச்சினை:
    சென்னையில் இளைஞர் தீக்குளித்து மரணம்

    தற்கொலைப் போராட்டத்தைக் கைவிட்டு
    அறப்போர்பற்றி சிந்தியுங்கள்!
    தமிழர் தலைவர் கி. வீரமணி அன்பு வேண்டுகோள்

    ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்க வேண்டி மாணவர்கள் உண்ணாவிரதம் போன்ற அறப்போர்களில் ஈடுபட்டதைத் தாண்டி, இன்று சென்னை சாஸ்திரி பவன் முன்பு தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் தனக்குத்தானே தீக்குளித்து இறந்து விட்டார் என்ற செய்தி மிகுந்த வேதனைக்குரியது; ஆழ்ந்த துன்பத்தைத் தருவது.
    இந்தியப் பேரரசு இதுபோன்ற கொடுமைகள் நடக்காவண்ணம் மேலும் போர் நிறுத்தத்திற்கு வற்புறுத்த முன்வாருங்கள்.

    ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்க இங்குள்ள நாம் உயிர்த் தியாகம் செய்வது என்பதனால் முழுப் பயன் அடைந்து விட முடியாது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு போராடிட உயிருடன் இருப்பது அவசியமாகும்.

    எனவே, மாணவத் தோழர்களே, இளைஞர்களே அருள்கூர்ந்து இம்மாதிரி தற்கொலைப் போராட்ட முயற்சியைக் கைவிட்டு, வேறு ஆக்க ரீதியான அறப்போர்கள் பற்றி சிந்தியுங்கள் என்று அன்புடனும், உரிமையுடன் மாணவத் தோழர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
    ———நன்றி “விடுதலை” 29-1-2009

  4. “ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்க வேண்டி மாணவர்கள் உண்ணாவிரதம் போன்ற அறப்போர்களில் ஈடுபட்டதைத் தாண்டி, இன்று சென்னை சாஸ்திரி பவன் முன்பு தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் தனக்குத்தானே தீக்குளித்து இறந்து விட்டார் என்ற செய்தி மிகுந்த வேதனைக்குரியது; ஆழ்ந்த துன்பத்தைத் தருவது.
    இந்தியப் பேரரசு இதுபோன்ற கொடுமைகள் நடக்காவண்ணம் மேலும் போர் நிறுத்தத்திற்கு வற்புறுத்த முன்வாருங்கள்.”

    இது தான் உண்மை .தீ குளிப்பது செல்லாது .குமரேசன் ஒரு கனம் யோசித்து இருபறேயானால் இன்று உயிருடன் இருந்திருப்பார்

  5. Elath Tamilanitku ellatha unarvu ithu thalai vanankukirom evan unarvitku. evan elappitku edu illai. eniyum eppady illappukalai thankamudiyathu.entha veeran entrum engal satithitathil eruppan.Muthukumarukku enathu kanneerudan koodiya veera vanakkangal!!.

  6. சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்புக்கான போரில் சுடுவதற்கென்றே இந்திய பீரங்கிகள் தமிழகம் வழியே அனுப்பப்பட்ட மண்ணில் எந்த ஆயுதமின்றி தனது உயிரை அழித்து ஒரு மாபெரும் ஆயுதத்தை தமிழக மக்களுக்கு வழங்கியிருக்கிறான் ஒரு வீரன்.

  7. “உயிரையும் கொடுப்பான் தோழன் ” ஈழமக்களுக்காக உயிரை கொடுத்த முத்துக்குமாரின் ஆன்மசாந்திக்காக பிராத்திக்கிறேன். ஆனால் இதுவல்ல ……..வழி , உங்கள் தலைவர்களுக்கு இடித்துரையுங்கள் கல் மனம் மகிந்தாவின் , இனவெறி , உயிர் குடிக்கும் தீவிரம் தணிய வேனும் முடிந்த வரை விமான தாக்குதலை நிறுத்த சொல்லுங்கள். இல்லாவிட்டால் களமிறங்குங்கள். நன்றி தமிழக உறவுகளே .

  8. it is painful..it exposes the shameful sham of our politics. but this life should not be lost trying to make adamant and irresponsible politicians to start thinking. they will not care. this will be just another source for writing whatever they think is poetry. i hope other young women and men do not waste their lives like this, instead start getting into sterner and louder action

  9. தியாகி முத்துகுமாருக்கு என்னது கண்ணீர் அஞ்சலிகளை சமர்பிக்கின்றேன். அவருடைய அன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்

  10. ஈழத்தமிழ் இனத்துக்காக தீக்குளித்து மரணத்தை தழுவிய மானத்தமிழன் முத்துக்குமரனுக்கு தலைவணங்குவோம்!!

  11. tamil iname ,inimelum thoongathey poruththathu pothum
    pongi elu,naadagam aadum maththiya congress, maanila
    dmk, and jayalalitha ivargalai varum therthalil thooki erinthu ,tamil inaththukku urimai kodukkum oruvanai thernthu edu,

    en tamil ename unnai patri ulagam kandu kollamal yelana paduthuvathai inimelum poruthu kondu irathey.

  12. Very sad that tamil youth are driven by emotional lies.

    If he is so determined to loose his life for the sake of terrorrist LTTE, he could have risked his life by visiting and witnessing how “HOLY” the LTTE is. It could have been a productive benefit.

    If he is so concerned on tamil people, he should have fought the anti people attitude and activities of terrorist LTTE.

    I ask the same to him – If it is your 7 year brother who was forced by LTTE brother to die fighting with army, would have still do this foolish thing.

    His text suggest as if it is just the tamilnadu political parties who are cheating the people. In fact why cant he apply the same logic to pollutes outfits like tamizhar desiya iyakkam, commies, Dalit panthers, who are supporting anti-national criminals and use this issues for their political gains. How many of so called tamil leaders committed suicide to demonstrate their resistance. Such folks are not even able control their apetite during their hunger ‘drama’

    I strongly urge the tamil youth to condemn such foolishness and be united under the national banner.

    While it is essential to show our solidarity for tamil people in srilanka, we should not resort to such ridiculous acts. it is like cheating ourselves. it will further give support to terrorist pro-LTTE guys.

    I condemn this heinous act of causing the panic in a public location and spreading terror among peaceful people here. Did he think about faint hearted children and women that witnessed this foolish behaviour?

    This must be condemned by all intellectuals

    PARAMS

  13. my deepest condolence to muthukumar’s family;it’s a shameful incident to tamil nadu govrning politicians and the people who spend their time in cinema,but other tamil supporters please don’t follow this;i know it’s a highest sacrifice;pls raise ur voice louder to get compensate of muthukumar’s life;god bless u my brother muthukumar; we the eelam tamils thoughts are with u

  14. “தாயின் மடியில் தமிழ்ப் பாலுண்ட
    கோடி நெருப்பொன்றாய் தகிக்கக் கண்டோம்.
    வீசும் தமிழ் காற்றும், உணர்வின் அலையும்
    தீய்ந்து கருகும் எங்கள் வாழ்வை ஆற்றும்.

    உக்கித் தனிமரமாய் துயர் சுமந்த எங்களுக்கு
    உயிர்ப்பின் கொடி பிடித்து அரவணைக்கும் உறவுகளே!
    தெக்கும் உணர்விடையே உயிர்ப்பூ கசிகிறது.”

    தீய்ந்து கருகும் எங்கள் வாழ்வெண்ணி நின்னைத் தீய்த்தனையோ தம்பி முத்துக்குமாரா?
    எங்கள் மாவீரர் ஆலயத்துள் குடிபுகுந்த உடன்பிறப்பே! விழி கசிய உணர்வுக்கி நிற்கிறோம்.

  15. சகோதரனே
    வாயடைக்க வைத்து விட்டாயே?

    உன் தகுதிக்கு
    தமிழகத்தை திசை மாற்றியிருக்கலாம்

    தமிழ் உள்ளங்களை
    வதைக்க வைத்துவிட்டாயே

    எம் கண்ணீர் அஞ்சலிகள் சகோதரனே

    கதற அழுகிறோம்
    எம் இனியவனே

  16. தமிழினி மெல்லச் சாகும்

    தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:

    விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…

    அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே…

    வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

    ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

    ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

    கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் – இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ”தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா”னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே…

    பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே… உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

    ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது – இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய – இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

    இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்’ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

    தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

    தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே…

    உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

    தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே…

    உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் – அதுதான், இந்திய உளவுத்துறை – ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா… இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
    இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

    களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே…

    அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே… ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

    அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

    உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று… நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

    புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா – என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

    இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

    இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்… வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல… இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்… எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

    காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

    1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

    2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

    3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

    4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

    5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

    6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

    7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

    8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

    9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

    10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

    11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

    12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

    13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

    14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

    என்றும் அன்புடன்,

    அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
    கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

    அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.

    இவ்வாறு அந்த துண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது…

  17. Veeravanakkam Muththukumarukku..

    this kind of thing will not work anymore, pick up weapons and save our tamil race.. no more waiting..enough is enough… Tamilnaadu youth must train themselves with weapons, stop the northerners ruling the tamils and destroy the sinhalese whom are active destroying the tamils in srilanka..

    more and more waiting will be disasterous for our race.

  18. கொதிக்கிறதையா நெஞ்சு, ஏன் முத்துக்குமாரா? எதற்கு நீ இவ்வாயுதத்தை எடுத்தாய்? நம் அண்ணன் பிரபாகரன் கூட கரும்புலி வேங்கைகளுக்கு பயிற்சி ஆயிரமளித்து, அவர்களை வளர்த்தெடுத்து அரவணைத்து, அவர்களுடன் விவாதித்து, பலர் கோரிக்கை முன்வைக்கும்போதும் ஒருசிலரைத்தேர்ந்தெடுத்தே கரும்புலியாக்கி, அவன்மூலம் பெரும் இழப்பு ஒன்றினை கொடுக்கின்றார். முத்தான நீ ஏன் எம்முடனிருக்காது சென்றாய்? ஏன் இவ்வழியைத்தேர்ந்தெடுத்தாய்? கொதிக்கிறதையா நெஞ்சு. பதைக்கிறதையா மனது. வேகும் மனமது சோகமாய் போனதடா…. நாம் உன்னிடம் இதையா கேட்டோம்? நீ இருந்திருந்தால் இன்னமும் எத்தனையோ சாதித்திருக்கலாம் ஆனால் நீ இன்றோ ஈழவர் மனங்களை வென்று நம் உள்ளங்களில் என்றும் ஓர் அழியா விடுதலைத்தீயை இட்டுவைத்தாய். நாமும் தொடர்வோம் உன்வழி போராடி தமிழருக்கு விடிவு கிடைக்காதபோது. சந்திப்போம் பூவுலகில்

  19. Veera Vanakam, I salute this Courageous man. It is very sad that the country that boasts itself as the leading example of non-violence lends hands to the state terrorist of sri lanka.

    Madam……Sonia…for your revenge action, you are killing 1000s of innocent Tamils…can you imagine whether what happens when sinhala terror forces turn their MBRL on your residence. Tamil people are undergoing untold hardship. Don’t you have a heart to stop this bloodshed.

  20. Indra congress does not have the guts to stop the pakistan terror, china terror. Can they wage a war and get the lost land from China or Cargil? No…..guts to these bastard politicians.

    We can’t allow bitches like Sonia (a call girl) and Jayalalitha to rule Hindu’s Holy Country.

    BJP is the best party for India.

  21. Arumai sakotharane muthukumaranuklku emathu kanneer anjalikalum veera vanakkangalum uriththaguka. Sakotharane unkal irappal pala unmaikalai thamizh naaddu makkalukku eduththu koori irukkireerkal . Naalai vidiyum enkal thamizh eelaththil unkalukku enrume oru idam irukkum . Enkal thalaivan Pirapakaran thamizh thalaivan ovvoru thamizhanukkum avane thalaivan. Kaalaththai vellvom kalamirankungal thmizhare.

  22. மேலதிக தகவல்
    உயிருக்கு போராடிய அவரை சிகிக்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மருத்துவர்களிடம் பேசிய முத்துக்குமரன், தீக்குளித்த தன்னை யாரும் காப்பாற்றி விடக்கூடாது என்பதற்காக, பெட்ரோல் கேனில் பெரிய அளிவில் ஓட்டை போட்டு, மண்ணென்ணெய்யை தன் மீது ஊற்றிக்கொண்டதாக தெரிவித்தார்.

    இப்படி புத்திசாலித்தனமாக இருக்கும் ஏன் தீக்குளித்தாய் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு, என்னைவிட புத்திசாலியான குழந்தைகள், சிறுவர்கள், வாலிபர்கள், பெண்கள் அனைவரும் இலங்கையில் கொல்லப்படுகிறார்கள். போர் முனையில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திதான் நான் தீக்குளித்தேன் என முத்துக்குமரன் தெரிவித்தார்.

    மேலும் பேசிய முத்துக்குமரன், எங்கள் ஊரில் போருக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் அதிகம். உலக அமைதிக்காக போராடுபவர்கள் அதிகப் பேர் இருக்கிறார்கள். ‘கொள்கை நல்லூர்’ என்றே எங்கள் ஊரை சொல்லுவார்கள் என்றார். அந்த ஊரில் பிறந்த நான் ஈழத்தமிழர்களுக்காக உயிர் விடுவதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன் என்றார்.

    இன்று காலை முத்துக்குமரன் தூத்துக்குடியில் இருக்கும், தனது தந்தை குமரேசனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது குடும்பத்தாரின் நலம் பற்றி விசாரித்த முத்துக்குமரன், தீக்குளிக்கும் சம்பவம் பற்றி தனது தந்தையிடம் எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார்.

    26 வயதான முத்துக்குமரன், இலங்கை தமிழர்களுக்காக சென்னையில் எங்கு கூட்டம் நடந்தாலும், தவறாமல் கலந்து கொள்வார். பத்திரிக்கையில் தட்டச்சு பணியில் இருந்தாலும், தமிழ் உணர்வுள்ளவர் என்றும், ஈழத்தமிழர்களைப் பற்றி அன்றாடம் வேதனையுடன் பேசி வந்தவர் என்றும் முத்துக்குமரனுடைய நண்பர்கள் தெரிவித்தனர்.

    செய்தி: நக்கீரன்

  23. தீக்குளிப்பு தொடரக் கூடாது, மிகவும் வருந்தத்தக்க செயல் இது.

    //முத்துக்குமார் எனும் அந்த வார்த்தை இதுவரை ஈழத்திற்காக இது வரை ஒரு துரும்பையும் எடுத்துப் போடாதவர்களின் மனச்சாட்சியை கிளறி எழுப்பட்டும்//
    தமிழக அரசியல்வாதிகளின் பொய்முகங்களை முத்துக்குமாரின் தீக்குளிப்பு பொசுக்கியிருந்தாலும், முத்துக்குமாரின் முடிவு தவறானதே.

    அவரின் குடும்பத்தினருக்கு வருத்தங்களைத் தெரிவிப்பதோடு நில்லாமல் தமிழக மக்களும் அரசும் அரசியல்வாதிகளும் இலங்கைத் தமிழர்களின் அவல நிலையைப் போக்க ஒன்றாய் முன்வர வேண்டும். அது ஒன்றே அவதிப்படும் இலங்கைத் தமிழர்களுக்கு காப்பாக அமையும்.

  24. ஒன்று எனக்கு புரிய வில்லை, இப்படி உயிரை போக்கி கொல்ல்வதல் எல்லாம் நடக்கும் என்றால் உலகில் தற்கொலைகள் தான் எப்போதும் நடந்து கொண்டு இருக்கும். தமிழா எப்போது திருந்துவையோ, மூட பழக்கங்கள் இருந்து வெளிய வரவ மாட்டிய, உணர்ச்சி வசபடவதை விடுத்து அக்கபுர்வமாக யோசிபயாக …….

  25. Muthu Kumar unakku anjali alla,
    Veera Vanakkam seikiren
    Nee theeyittu marithu kidakkum thamizhinathkku
    Oli yettri irukirai.
    Nee ulaka Thamizharin managalil piranthullai
    Iniyum …
    Unakku Maranam Ellai.

    Malarapokum Thamizh Eahathil un Maranam marakka mutiyatha Varalaru

    Veera vanakkathudan

    Thamizh thiru. John Suresh

  26. விடுதலை அடைய வேண்டியது தமிழனா?

    ஏற்கெனவே ஈழப்பிரச்சினையில் பிரதமர் ‘கவலை தெரிவிக்க’ ஒரு போராட்டம்…. அவர் தம் சக்திக்குட்பட்ட அளவில் முயல்வதாகக் கூறவைக்க ஒரு போராட்டம்…. இப்போது பிரணாப் முகர்ஜியைக் கிளப்பி அனுப்ப ஒரு போராட்டம்…..
    மழை வெள்ளத்தில் ஒரு போராட்டம்..
    சாகும் வரை மாணவர்கள் பட்டினி போராட்டம்..

    இப்படி இங்கே தமிழன் போராடிக் கொண்டே இருக்க வேண்டியதும், ஈழத்தமிழன் அங்கே அன்றாடம் கொல்லப்பட்டுச் சாவதும்தாம் தமிழனுக்கு விதிக்கப்பட்ட வாழ்வா…? இந்தக் கொடுமையைப்பற்றி அக்கறைப்படாது, நமக்கு பசப்பு வார்த்தைகள் கூறி இழுத்தடிப்பு உத்தியில் ஈடுபடத்தான், நம்மை ஏமாற்றத்தான் நமக்கு தமிழக, தில்லி அரசுகளா….? முதலில் தேசியம் என்றால் என்ன? தன்னுடைய நாட்டு பிரஜைகளை தன்னுடைய அந்தஸ்தாக கருதி அவர்களது கோரிக்கைக்கு செவிமெடுத்து அதன் படி செயல்படுவதே தேசியம் என்பதாகும்..அன்று சிங்கபூரில் ஒரு அமெரிக்கனுக்கு 5 கசையடி தண்டனை என்றதும் அமெரிக்க அரசு தன் முயற்சியால் தடுத்து நிறுத்தியது..அது தேசம் ஆனால் இந்தி தேசம் எவ்வாறானது?
    உண்மையை சொல்லவேண்டுமென்றால் இந்த தேசியம் ஆரியர்களுக்கும் வங்காளிகளுக்கும் சிங்குகளுக்கும் உரித்தானவை.. சிறிது கூர்ந்து நோக்கினால் மேற்கூறிய யாருக்காவது துன்பம் என்றால் இந்தி அரசு தாம் தூம் என்று துள்ளி குதிக்கும்..

    ஒரே இந்தியா என்று பேச்சில் இருக்கிறதே தவிர செயலில் எங்காவது இருக்கிறதா? கர்நாடகம், கேரளா, ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் தமிழகத்தை வேறு நாடாகத் தானே பார்க்கின்றன? தமிழகத்துக்குரிய உரிமைகளை மறுக்கின்றன. அண்டை தேசிய இனங்கள் நம்மிடம் சண்டையிட்டு வந்தபோது அதனைத் தடுக்க வேண்டிய இந்திய அரசு வேடிக்கை பார்ப்பது தானே வாடிக்கை. இந்நிலையில் இந்தியா என்பது வேறு எங்கு இருக்கிறது? நிஜத்தில் செய்லபடுவது ‘இந்தி’யா தானே..?

    1)காவேரி பிரச்சனை
    2)முல்லை பெரியாறு பிரச்சனை
    3)ஒ..னக்கல் அல்ல அது தவறு அது கிருஷ்ணகிரி சேலம் என நீளும் போல தெரிகிறது
    4)கண்ணகி கோயில் பிரச்சனை
    5)பாலாற்று பிரச்சனை
    6)தமிழக மீனவர் பிரச்சனை

    இதில் ஒன்றிலாவது தமிழர்கள் சார்பாக நடுநிலைமையோடு இந்தி அரசு நடந்து கொண்டதா?வங்காளிகளுக்காக வங்கதேசம் உருவாக்கிய இந்திய அரசு பண்டிட்ஜிக்களூக்காக இன்றும் காசுமீர் விவகாரத்தில் பாக்கிஸ்தானோடு அக்க போர் செய்கிறது..எனவே உங்களுக்கு புரியவில்லையா?தமிழனுடைய உயிரும் இவர்களுடைய மயி ம் ஒன்று என?

    உண்மையை சொல்லவேண்டுமென்றால் இந்த தேசியம் ஆரியர்களுக்கும் வங்காளிகளுக்கும் சிங்குகளுக்கும் உரித்தானவை.. மேற்கூறிய யாருக்காவது துன்பம் என்றால் இந்தி அரசு தாம் தூம் என்று துள்ளி குதிக்கும்

    ஈழப்பிரச்சனைக்கு தற்பொழுது இருக்கும் ஒரே தீர்வு தனி ஈழமே. இதனை விடுதலைப்புலிகள் என்றோ உணர்ந்து விட்டனர். உலக நாடுகளும் மெல்ல மெல்ல உணர்ந்து வருகின்றனர். ஆனால் இந்தி அரசின் தீர்வு என்ன? ஒன்று பட்ட இலங்கைக்குள் தமிழர்க்கு உரிமையாம். இந்தி அரசு சொல்கிறது. இப்படிப்பட்ட மாய வாதங்களை சொல்லி தமிழரின் தாயகமான தமிழ்நாட்டை ‘இந்தி’யனிடம் அடகு வைத்ததை போல, சிங்களவனிடம் ஈழத்தை அடகு வைக்க சொல்கிறார்கள். தன் மானமுள்ள தமிழர்கள் ஏற்காமாட்டார்கள் என்பதனை வரலாறு மெய்ப்பித்து வருகின்றது.

    காவிரி பிரச்சனைக்கு ‘கரு’நாகத்திடம் கெஞ்சல்
    முல்லை பெரியாருக்கு கொலையாளியிடம் கெஞ்சல்
    ஒ..னக்கல் ‘கருநாகத்திடம் கெஞ்சல்
    கண்ணகி வழிபாட்டு உரிமைக்கு கொலையாளியிடம் கெஞ்சல்
    பாலாற்று பிரச்சனைக்கு கொல்டிகளிடம் கெஞ்சல்
    தமிழக மீனவர் பிரச்சனைக்கு இந்தி காரனிடம் கெஞ்சல்
    தமிழீழ இனபடுகொலையை நிறுத்த இந்திகாரனிடம் கெஞ்சல்

    இப்படி மானம் கெட்டு பிச்சை எடுத்தும் கோரிக்கை வைத்தும் ஒரு தேசிய இனம் வாழுகிறது என்றால் அது தமிழினமே ஆகும்..ஒரு சிறிய மண்புழு கூட அதனை அழிக்கமுற்படும் போது
    சிறிய எதிர்பையாவது காட்டும்..அகிம் இம்சை உண்ணாவிரதம் என்ற பெயரில் வீரத்தில் சிற்ந்த
    தமிழர்களை முட்டா கூ ஆக்கியது யார் என்ன சிந்திக்க வேண்டும்..இவர்களுக்கு கார்கில் முதல் வங்கதேச பிரிவினை முதல் Fறோண்T ளீணே லிருந்து சண்டை போட்டு சாக தமிழர்கள் வேண்டும்..பிற விவகாரத்தில் தேவையில்லை

    தமிழர்கள் போலி இந்தி தேசியத்தில் இருந்து வெளிவர வேண்டும் இதற்கு மாற்றாக தமிழக மக்களின் அரசியல் நிலை எதுவாக இருக்க வேண்டும்..? தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுரிமையைப் பாதுகாப்பதாகவும், தமிழ் இனத்தை புதுடில்லி ஏகாதிபத்திற்திற்கு விற்கும் இந்தியனுக்கு எதிரானதாக புரட்சிகரத் தமிழ்த் தேசிய அரசியல் நிலையைத் தான் நாம் முன்னெடுக்க வேண்டும்

    தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும். இவ்வரசுகளின் ஆதிக்கப் பிடியிலிருந்து விடுபடவேண்டும்.

  27. ஒ மரணித்த வீரனே உன்னுடல் மடிந்தாலும்
    உன் புகழ் மடியவில்லையடா நீவிர் எம் தமிழீழம் மலர
    உம்முயிர் தந்து உரம் தந்தீர் ஒ மாவீரனே உமக்கு எம் வீர வணக்கங்கள்

  28. […] ஈழம்: முத்துக்குமாரை கொன்ற தீ à®šà¯à®°à®£à¯ˆà®¯à… à®ˆà®´à®¤à¯à®¤à®¿à®±à¯à®•à®¾à®•à®¤à¯ தீக்குளித்து தியாகியானான் […] […]

  29. // த‌ற்கொலைகள் செய்துகொள்வது கோழைத்தனமான முடிவா ?
    தற்போது சிலர் இதைப் போன்று முனகிக்கொண்டிருக்கிறார்கள். பொதுவாகவே தற்கொலைகள் அனைத்தும் கோழைத்தனமானவை அல்ல.அவை அனைத்தும் சமூகத்திற்கெதிரான விமர்சன‌ங்கள்.
    ஒருவ‌ன் உயிரை இழக்க முன் வருவது அவ்வளவு சாதாரன காரியமா என்ன? அதிலும் ஒரு அர‌சியல் பிரச்சனைக்காக உயிரை இழக்க முன் வருவது சாதாரண செயல் அல்ல‌ அது ஒரு வீரச்செயலாகும்.முத்துக்குமார் தீக்குளித்து இறந்து போயிருப்பது என்பது கோழைப்பயல் சோதாராமன் காலத்திலிருந்தே நம்பியவரை முதுகில் குத்தி,குத்தியே பழக்கப்பட்ட‌ இந்திய பயங்கரவாத கும்பலுக்கு எதிரான ஒரு கலகமாகும்.//

    தோழர் மருதையனின் இந்த உரையை ஏற்று களத்தில் இறங்குவோம்.

    வீரவணக்கம் முத்துக்குமார்

  30. எதற்காக இந்த முடிவு என்று எனக்கு தெரியவில்லை. இந்திய தமிழர்களை ஏமாற்றி, உணர்ச்சிவசப்படுத்தி தமது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு துணை போக வைக்கும் இந்த புலிகளின் சதிகாரத் திட்டத்துக்கு இவர் பலியாகிவிட்டார். இந்தியர்கள் மீது புலிகளுக்கு எந்தவிதமான ஒரு மதிப்பும் கிடையாது. நாலு பக்கமும் சுற்றி வளைக்கப்பட்டு, இப்போது போக இடமில்லாமல் மாட்டி விட்டபின், மக்கள் மத்தியில் இருந்துகொண்டு, எறிகணை வீசி எதிரியை தாக்கும் ஒரு இரக்கமற்ற அரக்கர் கூட்டம் இது. என் அருமை இந்திய மக்களே, இவர்களுக்கு துணை போகாதீர்கள். எதிரி கொன்ற தமிழனை விடவும் இவர்கள் கொன்ற தமிழர்களின் எண்ணிக்கை பல மடங்கு. இவர்களின் இரத்த தாகம் இன்னும் தணியவில்லை. பொதுமக்களை கேடயமாகப் பாவித்து, எதிரியை தூண்டி, மக்களை அழித்து அரசியல் ஆதாயம் தேடி, தப்பப் பார்க்கும் இந்த கொலைகாரப் பாவிகளை கூண்டோடு அழிய விடுங்கள். இலங்கை தமிழன் எதிர்காலம் இவர்களுக்குப் பின்னே பொற்காலம்.

  31. IT IS SHOCKING.

    DEAR TAMIL NADU TAMILS, WE KINDLY REQUEST YOU, “PLEASE DO NOT BURN YOUR SELVES FOR ANYBODY OR ANYTHING”.

    I HAVE NEVER HEARD OF A POLITICIAN BURNING HIM OR HERSELF FOR THEIR PEOPLE. WE CAN SHOW OUR RESISTANCE TO THE POLITICIANS IN MANY WAYS. HEARING ABOUT SOMEONE BURNING THEMSELF IS VERY HEART-BREAKING.

    THE TYRANT CONGRESS GOVT. SHOULD STOP THE PROXY WAR ON EZHAM TAMILS. THEN TAMILS IN NADU AND EZHAM WILL LIVE IN PEACE.

    MUTHUKUMAR, I RESPECT YOUR MARTYRDOM.

  32. எதற்காக இந்த முடிவு என்று எனக்கு தெரியவில்லை. இந்திய தமிழர்களை ஏமாற்றி, உணர்ச்சிவசப்படுத்தி தமது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு துணை போக வைக்கும் இந்த புலிகளின் சதிகாரத் திட்டத்துக்கு இவர் பலியாகிவிட்டார். இந்தியர்கள் மீது புலிகளுக்கு எந்தவிதமான ஒரு மதிப்பும் கிடையாது. நாலு பக்கமும் சுற்றி வளைக்கப்பட்டு, இப்போது போக இடமில்லாமல் மாட்டி விட்டபின், மக்கள் மத்தியில் இருந்துகொண்டு, எறிகணை வீசி எதிரியை தாக்கும் ஒரு இரக்கமற்ற அரக்கர் கூட்டம் இது. என் அருமை இந்திய மக்களே, இவர்களுக்கு துணை போகாதீர்கள். எதிரி கொன்ற தமிழனை விடவும் இவர்கள் கொன்ற தமிழர்களின் எண்ணிக்கை பல மடங்கு. இவர்களின் இரத்த தாகம் இன்னும் தணியவில்லை. பொதுமக்களை கேடயமாகப் பாவித்து, எதிரியை தூண்டி, மக்களை அழித்து அரசியல் ஆதாயம் தேடி, தப்பப் பார்க்கும் இந்த கொலைகாரப் பாவிகளை கூண்டோடு அழிய விடுங்கள். இலங்கை தமிழன் எதிர்காலம் இவர்களுக்குப் பின்னே பொற்காலம்.

  33. திரு முத்துக்குமார் அவர்களின் தியாகத்திற்கு கண்ணீருடன் தலைவணங்குகிறேன்,

    தமிழன் இனியாவது திருந்த வேண்டும் நம்முடைய நண்பன் யார் எதிரி யார் என்பதை புரிந்து கொள்ளவேண்டும், பார்பனர்களை அடியோடு விலக்க வேண்டும்,
    வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை ஒட்டுமொத்த தமிழகமும் புறக்கணிக்க வேண்டும், ஒட்டு பொறுக்க வரும் பொருக்கி அரசியல்வாதிகளை பிய்ந்த செருப்பால் அடித்து விரட்ட வேண்டும், குறிப்பாக காங்கிரஸ்கார பொறுக்கிகள் மீது மலத்தை கரைத்து ஊற்றவேண்டும், ஈழத்தில் சிங்களனுடைய துப்பாய்கிக்கும் அவனுடைய ஆண்குரிக்கும் நல்ல பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன அதை விளக்கு பிடித்தும் கூட்டிக்கொடுத்தும் இந்தியா தனது சிறப்பான பங்களிப்பை செய்துகொன்ன்டிருக்கிறது முதலில் தமிழர்கள் இந்துயாவைப் புறக்கணிக்க வேண்டும், பலஸ்தீன மக்கள் மீதும் ஆப்கன் மக்கள் மீதும் இந்தியாவுக்கு உள்ள கரிசனம் தமிழர்கள் மீது மட்டும் ஏன் இல்லை என்று ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டும், பிரான்சில் தலைக்கவசம் கட்டயமாக்கப்ட்டவுடன் தன் இனத்திற்கு வக்காலத்து வாங்க இங்கிருந்து தலைதெறிக்க ஓடிய சொறிநாய் மன்மோகன் தமிழக மீனவர்கள் சிங்கள சிப்பாய்களால் கொல்லப்படும்போது மட்டும் மவுனம் சாதிப்பது ஏன் அதற்க்கு உறுதுணையாய் இருக்கும் தமிழக அரசியல் தருதலைகளைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள் தமிழர்களே, தமிழர்களே இனியாவது திருந்துங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    இப்படிக்கு
    கோகுலகிருட்டிணன்

  34. மும்பை தாக்குதலை காரணம் காட்டி பாகிஸ்தானுக்கு செல்லாத இந்திய கிரிகெட் அணி இலங்கைக்கு மட்டும் எப்படி சென்றது, எதற்காக இந்த பாரபட்சம் இங்கு கொல்லப்பட்டது மனித உயிர்கள் என்றால் அங்கு கொல்லபடுவதும் மனித உயிர்கள் தான், இப்போதாவது திருந்துங்கள் தமிழர்களே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  35. இந்த முத்துக்குமரனை நான் 5 ஆண்டுகளுக்கு முன்பு நேரில் சந்தித்திருக்கிறேன். அவர் எழுத்தார்வம் மிக்கவர். நிறைய கவிதைகள் எழுதுவதாக சொன்னார். நான் தூத்துக்குடியில் பிரபல பத்திரிகையில் துணையாசியரியாராக இருந்த போது, இவர் அப்பத்திரிகையின் பகுதிநேர நிருபராக இருந்த ஆறுமுகநேரியை சேர்ந்த நண்பர் ஒருவர் அங்குள்ள ஒரு பிரபலத்தை மிரட்டி பணம் பறிக்கிறார். அவர் நல்லவர் இல்லை. அவருக்கு பதிலாக இன்னொருவரை தேர்ந்தெடுங்கள் என்று தொலைபேசியில் சொன்னார். பின்பு, அவரே அலுவலகத்திற்கு நேரில் வந்து பேசினார். தான் நிறைய கவிதைகள் எழுதியுள்ளதாக காட்டினார். அவற்றை வாசித்து ஒரே வர்க்கம் என்ற முறையில் பேசியுள்ளேன். இப்போது தான் இந்த புகைப்படத்தை பார்த்த பின்பு அந்த மனிதருக்குள் இத்தனை வேகம் இருந்திருக்கிறது என்று தெரிந்து கொண்டேன். அவர் வைத்துச்சென்ற நெருப்பு இளைஞர்களின் மனதில் பற்றி எரியுமானால் தமிழீழம் விடியும்.

    பார்ப்பன பத்திரிகைகளை படிப்பதை தவிர்ப்போம்.

    என்றும் அன்புடன் மோகன்.

  36. இதனைப் பதிவாக்கிய வினவிற்கு நன்றி சொல்வதா, முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்துவதா…. தெரியவில்லை.

    உன்னை மறக்க மாட்டோம் முத்துக்குமார்.
    உயிருள்ள வரை உன்னை மறக்க மாட்டோம்.

    உனது துண்டறிக்கையில் தெறிக்கின்ற உணர்ச்சி, நீ நம்பும் புலிகளோடு எமக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும், அதில் கொதிக்கும் அரசியல், உயிரை இழக்கத் துணிந்த உனது வீரம், உணர்ச்சி வேகம்…

    உன்னை மறக்க மாட்டோம் முத்துக்குமார்.
    உயிருள்ள வரை உன்னை மறக்க மாட்டோம்.

    உனது குரல் எங்கள் குரல்களில் ஒலிக்கும்.
    ஒலித்தே தீரும்.

  37. Hi,

    What ever we do.. Our politicians do.. Only the officers in the upper castle is taking decision and they are guiding the political leaders.

    They are not even ready to listen what people think and need them to do…

    Even if 1000 Muthukumar burn themselves, political leaders will write a poem and publish in their own newspaper and TV channels. Other than that they do not have any guts to do …

    Lawyers strike can start… Students can start fasting…. Social leaders may go on road show….

    But the ultimate response from the fraud government top heads will be silence and indirect killing signal to enemy and supporting arms and ammunition.

    Aiyoooooooooooo… Tamils we are now under the feet of these fit for nothing leaders, just postponding actions.

    I am in a dilemmaa what can tamils do.. other than raising slogans and conducting meetings…???

    In my opinion we should handle things in an organized way

    I salute the sacrifice done by Muthu to create an awarness to the world

  38. முத்து குமரன் மரணம் மத்திய அரசின் கபட நாடகத்தை எதிர்க்கும் தமிழனின் கையறு நிலையின் வெளிப்பாடு.

    பெற்ற ஒரே மகனை இழந்த முத்து குமரனின் தந்தையின் மனோ திடம் பாராட்ட தக்கது.

    தமிழ் தேசியனின் கருத்துக்கள் இன்னும் ஆழமாக விவாதிக்கபட வேண்டும்.

  39. 4 Indian military experts wounded in Vanni
    [TamilNet, Friday, 30 January 2009, 07:01 GMT]
    Four Indian military experts, assisting the Sri Lankan military, were wounded this week in Vanni and are undergoing treatment in Colombo, reliable sources told TamilNet Friday. The story, first broke by the Australia based Global Tamil Vision (GTV) on Thursday, had said the wounded were Indian soldiers who were undergoing treatment at a military hospital in Colombo. Although TamilNet was able to confirm through reliable sources on Friday that there are at least 4 Indian military experts undergoing treatment, specific details were not obtainable due to the prevailing threat on the right to know information in the island.

    The wounded Indians were ‘expert military personnel’ who have been providing ‘special field assistance’ to the Sri Lankan military, the sources told TamilNet.

    The report comes amid protests in TamilNadu over unconfirmed reports that alleged shipment of tanks were on they way to Sri Lanka as military aid from India.

    In September 2008, two Indian radar operators working for Sri Lankan Air Force (SLAF) had sustained injuries in an attack carried out by the Liberation Tigers of Tamileelam (LTTE) on Sri Lankan forces Vanni Headquarters (Vanni SF-HQ) located in Vavuniyaa.

  40. அனைத்து உண்ர்வுள்ள பதிவர்களும் இந்த அறிக்ககையை தங்களது தளத்தில் பதிந்து இணைய உலகில் அனைவரும் அறியச்செய்யவும்…

    தீக்குளிக்கும் முன்னர் முத்துகுமாரின் இறுதி அறிக்கை!

  41. Muthu Kumaran is the real hero of our times. In an age of self-indulgence where quality of life is largely estimated on the power of making money Muthu stands great all of us and taught a fitting lesson by breaking the conspiratory silence. He refused to give his religious and caste identities and asked us to spread the message to the world community. Whatever tribute we pay it would be just ritualistic unless we fathom the cause of his death.

  42. வினவு தோழர்களுக்கு,,

    தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி..

    என்றாலும் பின்னூட்டத்தில் சுட்டிக் காட்டிய வார்த்தைகளை இப்போதும் வழிமொழிகிறேன்.

    தோழர் மருதையனின் பெயரை தவறுதலாக பயன்படுத்தியதற்காகவும்,

    தோழர் சூப்பர்லிங்ஸ் எழுதியதற்கு அவரது பெயரை குறிப்பிடாமல் விட்டதற்காகவும்

    மன்னிப்பு கேட்கிறேன்.

  43. We are very saddened by the sacrifice of a genuine life for all Tamils Killed by the racists regime and because of the irresponsible attitude of the so called leaders of Thail nadu and their Masters in central government of India. The Two failed policy making men namely Shive Sankar Menon and the other N k Narayanan. India is going in a wrong direction with these petty policy pandits.

  44. Veera Vanakaththukutiya MUTHTHUKUMAAR ANNAA , un thiyaahathuku naam eththanai kodi vanakagkal sonnaalum athu mihayaahaathu. unnai alavillaa thamil pattrudan, thaai paaludan thamil pattraiyum uuddi valarththa un annai theivathuku en siram thaalntha vanakagkal. Nee indru em eelathamilarhal manathinil theivamaahividdaai. un vaalkai em ovvoruvarin ninaivilum thodarhindrathu. en veeddil ulla anaivarum unnai thaan saami arayil vaithirukiraarhal, enn ammaa ennai koopiddu neatru sonnavagka poi saami kumpuddu vaa endru, agke unnai vaithirunthaagka, naan ean endru keddathatku en ammaa sonnaar, naagka saamiya ithuvaraikum nerila paarthathillai, innaiku ivar moolamaa paarkirom , nee kumpudu endu sonnaagka. Nee seitha thiyaahathuku marupadiyum siram thaalntha vanakagkal!!!! Pulikalin Thaaham Thamileela Thaayaham….

  45. […] மனச்சாட்சியை கிளறி எழுப்பட்டும். – ஈழம்: முத்துக்குமாரை கொன்ற தீ சுரணையஅ வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் […]

Leave a Reply to Vaakeesh பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க